என் வேதனையின்
நரம்புகளை மீட்டி இசையாக்கும்
வலிமை பெற்றவளாய்
ராகக் கோர்வைகள் இசைத்தபடி நீ
உன் உற்சாகத்தின்
நீள அகலங்களுக்குள் அடங்கிப் போய்
வேதனையிலேயே சுகம் காண்பவனாய் நான்
தோல்விக்கான பேச்சுவார்த்தைகளில்
விருப்பமில்லாமல் ஒதுங்கியேயிருக்கிறேன்
என் வெற்றி நம்மை பிரித்துவிடும் சாகசம் புரிந்தவனாய்
ஒவ்வொருமுறையும்
தானாய் விழுந்து கொள்ளும் முடிச்சை
கவனமாய் பார்த்தபடி
வேதனையும் வலியும் நிரம்பியதாய் முடிச்சுகள்
இறுகிக்கொள்ளும் உறுதியில்
தெரித்து விழ ஏதுவாய் வார்த்தைகள்
கட்டுப்படுத்தி அடக்கியாளும் ஒவ்வொருமுறையும்
வார்த்தைகள் மேலும் மேலும் முடிச்சுகளாய்
இறுகி வெடிக்கப்போகும் நாளை எதிர்நோக்கியபடி நான்
முடிச்சவிழ்க்க தெரியாத மூடனாய்
முடிச்சவிழ்க்க தெரியாத மூடன்
பூனைக்குட்டி
Wednesday, June 27, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
ஆக்டோபஸ் ஒன்று என்னை இறுக்கமாகக் கட்டிப்பிடித்திருந்தது என் குறியை தன்வாயால் முழுவதுமாக கவ்வியபடி. அதன் கைகள் ஒவ்வொன்றாய் மாறி மாறி என் குதத...
-
கேள்வி கேட்பவர் - சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே! ஏ...
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
மிக அற்புதம்
ReplyDeleteஎன்னது மோகன் தாஸ் குல்ல இப்படி ஒரு கவிஞனா நம்பவேமுடியலை
ReplyDeleteகவிதை நன்றாக இருக்கிறது.
ReplyDelete//ஒவ்வொருமுறையும்
வார்த்தைகள் மேலும் மேலும் முடிச்சுகளாய்
இறுகி வெடிக்கப்போகும் நாளை எதிர்நோக்கியபடி நான்//
இப்படி காத்திருக்க நேர்வது ரொம்ப கொடுமைதான்.