In வகைப்படுத்தப்படாதவை

[no title]

கொஞ்ச நாளுக்கு விடுமுறையில் போகிறேன். இந்த முறை கொஞ்சம் போல் பெரிய அளவிலேயே(இடைவெளி) இருக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறேன். இந்த வருஷக் கடைசி வரைக்குமாவது அது நீள் வேண்டுமென்று ஏகவல்லோன் எல்லோர்க்கும் பொதுவான இறைவனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

பூனைக்குட்டிக்கும் அலைதலுக்கும்(பயணங்கள் எழுதுவதற்கு) விடுமுறையே.

இந்தத் தொடர்புகளையும் கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்பதால். mohandoss.i@gmail.com ம் பதிவுலகச் சொந்தக்களுக்கு பூட்டி வைக்கப்படுகிறது ;).\\

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்ற கான்செப்டில் முழு நம்பிக்கை உள்ளவன் என்பதால் தொடரப்போகும் தமிழிணைய வலைத்தளங்களுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லி எஸ்கேப் ஆகிறேன்.

PS: வழமை போல் பின்னூட்டங்கள் வெளியிடப்படாது இந்தப் பதிவிற்கு.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In

மாமல்லபுரம் பயணம்

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In பதிவர் சந்திப்பு

பதிவர் பட்டறை என் பக்கத்துக் குறிப்புகள் - 1

வெளியில் சென்று வந்ததும் என்று நினைக்கிறேன் உள்ளே மாலன் வலை நன்னடத்தை தலைப்பில் பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு முன் ஒரு வார்த்தை, முன்னால் நடந்த ஒரு விவாதத்தில் இராம.கி அய்யா ஈழத்தமிழர் இல்லையென்றால் தமிழ் இணைய உலகில் இத்தனை தூரம் வளர்ந்திருக்குமா தெரியாது என்று சொல்லியிருந்தார். கான்டெக்ஸ்ட் - மா.சிவக்குமார் தான் வெளிநாட்டில் இருக்கும் பொழுது தான் தமிழ் பற்றிய உணர்வு வந்ததாகச் சொல்ல இன்னும் சிலரும் அந்தக் கருத்தில் பதில் சொல்ல, இராம.கி அய்யா ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையில் உறவினர்கள் பலரும் பல இடங்களில் இருக்க வேண்டியிருக்கும் நிலையைச் சொல்லி அதன் காரணமாக அவர்களின் தமிழ் மீதான ஈடுபாடு அதிகாகயிருக்கும் என்று சொன்னார்.

முன்பே மாலன் அவர்கள் தன் பதிவுகளில் பேசியிருந்த விஷயங்களான, தனிப்பதிவுகளில் இருக்கும் பொழுது கூட ஒருவர் என்ன விஷயம் பேசுகிறார்(கருத்து சுதந்திரத்தை) என்பது பெரிய விஷயமாயிருக்காது என்றும் அவரே ஒரு திரட்டியில் இணைந்து மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் பொழுது கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார் என்று சொன்னார். எவர் ஒருவருக்கு பொறுப்புணர்ச்சி அதிகமாக இருக்கிறதோ அவருக்கு சுதந்திரமும் அதிகம் இருக்கலாம் என்றும். பொறுப்புணர்ச்சி இல்லாத சுதந்திரம் சரியான ஒன்றாய் இருக்காதென்று சொன்னார். உதாரணமாய் தனியாய் வீட்டில் அலையும் பொழுது நிர்வாணமாக இருக்க நினைக்கும் ஒருவருக்கு தன்னுடைய மனைவி முன்னால் கூட அப்படி நிற்க மனது வராதென்றும் இந்த விதமான உணர்வு எழுத்திலும் இருக்கவேண்டும் என்று சொன்னார்.

நாளிதழ்களில் இருக்கும் பிரச்சனைகளைக் கூறிய மாலன் அதை ஒப்பிட்டு வலைபதிவுகளால் என்ன விதத்தில் நன்மைகள் அதிகம் என்று சொன்னார். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டது வாசகர் கடிதம். பொதுவாகவே எல்லா இடங்களிலும் கட்டற்ற சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் செல்லா அவருடைய இருக்கையில் இருந்தே துடித்துக் கொண்டிருந்தார் கட்டுப்பாடுடைய சுதந்திரத்தை வம்பிழுக்க. அந்தச் சமயத்தில் வளர்மதி இந்தக் கருத்தை(மாலனுடையதை) சரியென்பது போல்(ஆள் பின்நவீனத்துவவாதி - கொஞ்சம் போல் சுத்திச் சுத்தி புல்ஸ்டாப் இல்லாமல் பேசினார் என்னால் ஃபாராகிராப்களைத் தாண்டி கவனம் செலுத்த முடியவில்லை) செல்லா உடனே எழுந்து, "நான் வலை உலகில் எழுதுவதை யாரால் கட்டுப்படுத்த முடியும் உங்களால் முடியுமா?" என்று வளர்மதியைக் கேட்டார். பின்னர் மாலனிடம் "நாம் முன்பே வலைப்பதிவுகளில் பேசிய இந்த விஷயத்தை இங்கேயும் தொடர விரும்பவில்லை" என்றார்(கான்டெக்ஸ்டாக நான் நினைப்பது மாலன் எழுதிய பொழுதே செல்லா - கட்டுப்பாடுடைய திரட்டியைப் பற்றி மாலன் எழுதியது - அதை மறுத்து எழுதியிருந்தார். மாலன் திரும்பவும் மேடையில் கட்டுப்பாடுடைய திரட்டி பற்றி இடையில் கோடிட்டார் அதனால் சொன்னார்) கட்டுப்பாடுடைய சுதந்திரம் சரிவராது என்று சொன்னார்.

இப்படி போய்க் கொண்டிருந்த விவாதம் அப்படியே முற்றுப் பெற்றிருந்தால் சந்தோஷம் ஆனால் பத்ரி கடைசி கேள்வி என்று சொல்லி வளர்மதியிடம் நகர்ந்த பிறகு மாலன், "கருத்துச் சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுறோம் அதனால இதையும் சொல்லலாம் தப்பில்லை, பெயரிலி ஒரு பதிவில் இராமைப் பற்றி பேசும் பொழுது அவருடைய மகளைப் பற்றிக் கேள்வி எழுப்பினார்," (அது தப்புன்னோ என்னவோ சொன்னார் எனக்கு நினைவில் இல்லை.)
என்று சொல்லி இராமின் மகளின் படிப்பை கொஞ்சம் டிபண்ட் செய்தார். இதில் தான் கடைசியில் சொன்னது, ஈழத்தமிழர்கள் இலங்கைப் பாஸ்போர்ட்டுடன் இருக்கும் முரணையும் இராமின் மகள் கொலம்பிய யுனிவர்சிட்டியில் படிப்பதையும். அவர் அதைச் சொல்லிவிட்டு சட்டென்று அடுத்த டாபிக்கான வலை உலகில் இருந்து எழுத்தாளர்கள் மாயமான காரணத்தை விளக்கத்தொடங்கினார். இதனால் உடனே இதைப் பற்றிய கேள்வி கேட்கும் வாய்ப்பை இதனால் நான் தவறவிட்டேன் ஏனென்றால் சுஜாதா கூட ராகாகியில் எழுதியது எனக்குத் தெரியும் அதனால். அதுவும் இல்லாமல் பத்ரி மைக் உடன் வளர்மதியிடம் நின்றார்.

திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவே சற்று நேரமானதால் மாலனின் எழுத்தாளர்கள் வெளியேறியதைப் பற்றிய பேச்சு பற்றி கான்டெக்ஸ்டிற்கு அப்பால் கூட சரிவர நினைவில் வரமறுக்கிறது. வளர்மதி இன்னொரு கேள்வியைக் கேட்டு முடிக்க, நான் தொடங்கினேன். முதலில் மைக் இல்லாமலும் பின்னர் மைக்குடனான சுய அறிமுகத்தோடும்

"எப்படி ஜார்ஜ் புஷ் ஒரு விஷயத்தைப் பற்றி பேச முடியாதோ; ஜார்ஜ் புஷ் இன்னொரு நாட்டிடம் சென்று சண்டை போடாதே என்று சொல்வது எப்படி தவறாக இருக்கும் இல்லையா? அது போல் யார் எந்தக் கருத்தைச் சொல்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது அவருடைய பின்புலம் பார்க்கப்படுவது ஒன்றும் பெரிய பிரச்சனை கிடையாது..." என்று சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே மா. சிவக்குமார் அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய இடம் இது இல்லை என்று சொல்லிவிட்டார். நானும் விட்டுவிட்டேன்.

பின்னர் எழுந்த இன்னொரு நபர், மாலன் சொன்ன எழுத்தாளர்கள் விலகியதைச் சொல்லி; நீங்க ஒரு செட் ஆப் மக்களுக்காகத்தான் எழுதுவதாக இருந்தால் பிரச்சனை இல்லை என்றோ இன்னும் சிலவற்றைச் சொன்னார். உடனே மா.சி மாலன் வலைபதிவுலகத்தை விட்டு வெளியேறியதற்கு காரணம் வேறு என்று சொல்லி அவரையும் நிறுத்திவிட்டார். பின்னர் அந்த விவாதம் அங்கோடு முற்றுப்பெற்றது.

பின்னர் லக்கிலுக்கின் - வலைபாதுகாப்பு பற்றிய அறிமுகம் தொடர்ந்தது. நான் வெளியில் கதவின் அருகில் நின்று கொண்டிருந்த பிரகாஷிடமும் மா.சியிடமும் இது சரியில்லை ஆளில்லாதப்ப அவரைப் பத்தி பேசக்கூடாது என்று மட்டும் சிரித்தபடி சொல்லிவிட்டு நகர்ந்தேன். பக்கத்தில் இருந்த என்னுடைய நண்பர்கள்(பெயரைச் சொல்ல விரும்பவில்லை) என்னை மட்டுறுத்தியதைச் சொல்லிக் காட்ட; நான் இங்கே உறுத்திவீர்கள் நாளை பதிவில் எழுதுவேன் என்று சொன்னேன் இரண்டு நாளானாலும் எழுதிவிட்டேன்.

நாகூர் இஸ்மாயில் பின்னர் வலைபாதுகாப்பைத் தொடர்ந்து முடிக்க மதிய உணவிற்காக பட்டறை உணவு இடைவேளை விடப்பட்டது. சாப்பாடு பட்டறை நடத்தியவர்களாலேயே வழங்கப்பட்டது, நான் கேட்க நினைத்து கேட்காமல் போன கேள்வியான கூப்பன் வாங்காதவங்களுக்கெல்லாம் சாப்பாடிற்கு, மா.சி பதில் சொல்லியிருந்தார் சாப்பாடு கூப்பன் இல்லாவிட்டாலும் சாப்பாடு தரப்படும் என்று.

ஆரம்பத்தில் இருந்தே முதல் முறையாக பட்டறை நடத்துகிறார்கள் என்ற எண்ணம் துளி கூட வராத அளவிற்கு பட்டறை நடத்தியவர்களின் செயல்பாடுகள் இருந்தன. நிறைய இடங்களில் "ச்ச எப்படி யோசிச்சு செஞ்சிருக்காங்க" என்று புருவம் தூக்கிக் கொள்ளும் கேள்விகள் வரும் அளவிற்கு நிறைய விஷயங்களைச் சின்ன சின்ன விஷயங்களானாலும் சரி பெரிய விஷயமானாலும் சரி செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள், பட்டறைக்கு கீறிக் கூட ஒன்றும் செய்யவில்லை என்றாலும், சிறு சிறு நாடகங்கள் நடத்தி கல்லூரிகளில் விழாக்கள் நடத்தி - பங்குபெற்றவன் ஆதலால் நிச்சயமாய் அவர்கள் செய்திருந்த முன்னேற்ப்பாடுகள் பற்றி ரொம்பவும் பெருமையாகவே சொல்லமுடியும். நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும்...

ஏனென்றால் பதிவுலகத்தில் ஒருவருடைய கருத்தை தவறேன்று சொல்லும் பெரும்பான்மையான சமயங்களில் அது தனிநபர்த் தாக்குதல் போல் தோற்றமளித்து அந்த நபர் நமக்கு எதிரியாகும் சூழ்நிலைகள் அதிகம் உண்டு. எனக்கு டிஸ்க்ளெய்ம்பர் போடுவது என்னவோ ரொம்பவே உறுத்தினாலும் வேறுவழியேயில்லை என்பதால்; இங்கே நான் வைத்திருந்த கேள்விகள் முதற்கொண்டு கருத்து சார்ந்தவைதானே தவிர தனிநபர் சார்ந்தவை அல்ல. மா.சிவக்குமாரின் மட்டுறுத்தலை பலசமயம் நானே ரசித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பரிடம் சுட்டிக் காட்டிக் கொண்டும் இருந்தேன் என்பது உண்மை.

அம்மா என் வீட்டில் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்கள் ஏண்டா உங்களுக்கெல்லாம் பாராட்டுறதுங்குறே தெரியாது வெறும் குற்றம் கண்டுபிடிக்கிறது மட்டும் தான் தெரியுமா என்று, அதென்னமோ டீச்சர் வீட்டுப் பிள்ளையானதாலோ என்னவோ பாராட்டுதல்களை விடவும் குற்றம் கண்டுபிடிப்பது அதிகம் இருக்கும். அதனால் இத்தனை அருமையான ஏற்பாடுகளைச் செய்திருந்த பட்டறை நடத்துபவர்களை பாராட்டாமல் குற்றம் மட்டும் சொல்வது அயோக்கியத்தனம் என்று உள்மனம் சொல்வதால் பாராட்டுகிறேன். அந்தப் பாராட்டுதல்களுக்கு முற்றிலும் தகுதியானவர்களே பட்டறையை நடத்தியவர்கள்.

PS: சொல்லப்போனால் இந்த டிஸ்க்ளெய்ம்பரும் பாராட்டும் கடைசி பதிவில் போட்டிருந்தால் தான் நன்றாகயிருந்திருக்கும். ஆனால் இந்தப் பதிவில் பேசப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு தேவைப்படும் என்றே மனம் சொல்கிறது.

PS1: எழுதியவைகள் என் நினைவில் இருந்து எழுதியவையே தவறிருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

தொடர்வேன்...

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In பதிவர் சந்திப்பு

பதிவர் பட்டறை என் பக்கத்துக் குறிப்புகள்

ஞாயிற்றுக்கிழமை காலை நானும் நண்பரும் பட்டறை நடக்கும் இடத்திற்குள் நுழைந்த பொழுது 9.45 இருக்கும். நண்பர் முன்பே பதிவு செய்யாதவர்கள் வரிசையில் பதிவுசெய்து கொள்ள, நான் பதிவு செய்தவர்கள் வரிசையில் கையெழுத்துப் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன். முதலிலேயே கண்டுக்கிட்டது உண்மைத் தமிழன், பிரகாஷரு, பின்னாடி மா.சி. அவர் என்னை விரட்டி பாட்ச் அணிந்து கொள்ளுமாரும் சாப்பாடு கூப்பன் வாங்கிக்கொள்ளுமாறு சொன்னார். அப்புறமா பொன்ஸ்; பார்த்த இரண்டு மூணு தடவ "வாங்க தல"ன்னு சொல்ல நான் என் மண்டையைத் தடவிப் பார்த்ததை அவர் கவனிக்காமல் பிஸியா நகர்ந்துட்டார் :(. அப்புறம் பாலராஜன் கீதா.



உள்ளே விக்கி unconference பற்றி பேசிக் கொண்டிருந்தார், மாப்பிள்ளை பெஞ்சில் இரண்டு இடங்கள் காலியாயிருக்க உட்கார்ந்தோம். என்னைப் பற்றிய கவலையில்லை, நண்பருக்கு அதுதான் முதல் முறையாயிருந்திருக்க வேண்டும்(ஹிஹி).

விக்கி அவர்கள் வைத்திருந்த அஜண்டாவை சொல்லிவிட்டு, இதற்கு மேல் தேவைப்பட்டால் அதற்கான முயற்சியையும் செய்வதாகவும். வந்திருந்தவர்கள் பட்டறைக்கு எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி சுருக்கமாகச் சொல்லச் சொல்லவும். சூடுபிடித்தது. இந்தச் சமயத்தில் அரங்கிற்குள் நுழைந்த செந்தழல் ரவி உட்கார, அவரிடம் காஜி போடுவதற்காக பக்கத்தில் உட்கார்ந்தேன். கொஞ்சம் வழமைபோல் பேசிக்கொண்டிருந்தோம் இந்தச் சத்தத்தை எங்கேயே கேட்டதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு திரும்பிய லிவிங்ஸ்மைல் வித்யாவை ரவி அக்கா என்று அழைக்க அவர் கோபமானார்.



பின்னர் ஆசிப் அண்ணாச்சி எழுந்து அவர் "துபாயில் இதே போன்ற பட்டறை நடத்துவற்கான சாத்தியக்கூறுகளை பார்க்க வந்திருப்பதாகச்" சொல்ல அண்ணாச்சியைப் பார்த்த சந்தோஷத்தில் ரவியிடம் இருந்து தெறித்து அவரை நோக்கி நகர்ந்தேன். வணக்கம் சொல்லி ஃபார்மலாகத் தொடங்கினோம் பின்னர் ஆசிப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆசாத் அண்ணனிடம் அறிமுகம் செய்து வைக்க, அவரிடமும் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் எல்லாம் பத்ரி தன்னுடைய "தமிழிணைய அறிமுகத்"தைத் தொடங்கினார்.



பின்னால் உட்கார்ந்திருந்த பிரகாஷரிடம் ஏன்யா ரொம்பவும் ஃபார்மலாயிருக்கிற மாதிரியில்லை என்றேன், அவர் நீயே மைக்கில் சொல்லு என்று கழண்டு கொள்ள நான் மைக்கிற்காக காத்திருந்தேன். ஆனால் பத்ரியிடமிருந்த அந்த ஃபார்மலான பேச்சு முதல் சில நிமிடங்களிலேயே கழண்டு கொண்டது. நல்லதொரு தொடக்கத்தை அண்ணாத்தை கொடுத்தார் அரசாங்கம் செய்ய வேண்டியவை இருப்பதாகவும் MLA அளவில் சென்று பேசவேண்டும் என்றும் சொன்னார். மாலன் உடனேயே கணிணிகளை தமிழ்நாட்டில் விற்கும் பொழுதே தமிழ் எழுதப் படிக்கக் கூடிய அளவிற்கு இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தை அமல்படுத்தலாம் என்று சொன்னார்.(அவர்தான்னு நினைக்கிறேன் :()

விவாதம் சில சமயங்களில் நம்முடைய கணிணிகளில் இருந்தாலுமே பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகளையும்; அந்த மக்களை எப்படி சென்று சேர்ப்பது என்பதைப் பற்றியும் நகர்ந்தது. பத்ரி தமிழ் டிக்ஷனரிகளைப் பற்றி(அகரமுதலிகளாமா!) சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இராம.கி அய்யா தமிழிணைய இணையத்தளத்தில் TAMல் ஒன்று இருப்பதாகவும் அது உபயோகப்படும் யுனிக்கோடில் மாற்றினால் என்று சொன்னார். இதற்கு சற்று பின்னால் என்று நினைக்கிறேன் செல்லா "விக்கிஷனரி" பற்றிச் சொல்லி தமிழிணைய பல்கலைக்கழக டிக்ஷனரியா இல்லை விக்கிஷனரியா என்று வரும் பொழுது அவர் விக்கிஷனரியைத் தான் சப்போர்ட் செய்வார் என்று சொன்னார்.



சில காரணங்களால் வேகவேகமாய் கேமராவை வாங்கி சுடத் தொடங்க நினைத்தேன் அதற்கான வேலைகளைச் செய்து எடுக்க நினைத்த பொழுது ஆசிப் கூப்பிட்டு நான் செய்ய இருந்த தவறைச் சுட்டிக் காட்டினார். அதை உணர்ந்து நானும் விட்டுவிட்டேன் ஆசிப்பின் சமூக அக்கறையைப் பற்றிய கேள்விகள் எனக்கு எப்பொழுதுமே கிடையாதென்றாலும் இன்னொரு பக்கம் எழுதி நிரப்பப்பட்டது. பின்னர் அரங்குகளை பேசிக் கொண்டிருந்தவர்களைச் சுடத் தொடங்கினேன்; அங்கிருந்து பாட்டரி காலியாகும் வரை காமெரா கண்சிமிட்டிக் கொண்டேயிருந்தது.

முகுந்த் தன்னுடைய "தமிழிணைய மைல்கற்கள்" தொடங்க ஸ்னாப் மட்டும் எடுத்துவிட்டு வெளியில் வந்தேன். ஆசிப் எல்லாம் வெளியில் வந்த காரணம் தான். அங்கே தான் பாலபாரதியைப் பார்த்தது அவர் ஆசிப்புடன் ஒரு போட்டோ எடுக்கச் சொல்ல எடுத்துக் காண்பித்தேன் ரொம்பவும் நன்றாய் வந்திருந்ததாய்ப் பட்டது. காசியிடம் என்னை இவருதான் அவரு என்று ஒரு மார்கமாக அறிமுகப்படுத்தினார் ஆசிப். ஆனால் காசி நான் அத்தனை கெட்டவன் இல்லை என்று சப்போர்ட் செய்தது ஆறுதலாய் இருந்தது. அப்பத்தான் உள்ள நுழைஞ்சாங்க ஒரு அக்கா, லேட்டா வந்துட்டு சீக்கிரமா எஸ்கேப்பும் ஆய்ட்டாங்க; நான் காரணம் கிடையாதென்று நினைக்கிறேன்.



இங்கத்தான் செல்லா என்னைப் படம் எடுத்து மொபைல் ப்ளாக்கிங் செய்தது :(. தருமி பக்கத்தில் வந்து யோவ் முடிவெட்டினா சொல்லிட்டு வெட்டுங்கய்யா என்று சொன்னார்; அடையாளம் காண்பதில் இருந்த பிரச்சனைக்காகத்தான் சொன்னார் என்றாலும் நான் சொல்லிட்டுத்தான் வெட்டுனேன் இல்லாட்டி வெட்டிட்டு பெரிய பதிவு போட்டேன். டெல்ஃபைன் மேடம் வந்த பேசிக் கொண்டிருந்தார் நான் "மோகன்தாஸ்" என்று அறிமுகப் படுத்துக் கொண்டேன். அவருக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை :(.



ஒரு முறை மேலே சென்று என்ன நடக்குது என்று ஜஸ்ட் பார்த்துவிட்டு கீழிறிங்கேனேன் இறங்கும் வழியில் பிரகாஷ் புகை பிடித்துக் கொண்டிருக்க அதையும் கண்சிமிட்டி சேகரித்துக் கொண்டு உள்ளே வந்து நிற்க பக்கத்தில் நின்ற ஆளை நல்லாத் தெரிஞ்சது மாதிரியிருந்தது. அவரைத் தட்டி நான் மோகன்தாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். அது ரஜினி ராம்கி பின்னர் அவருடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்து அப்படியே வெளியில் வர ரவியும் லக்கியும் வாய்யா புகைப்போட்டுட்டு வரலாம் என்று சொல்ல அவர்களுடன் பீச்சிற்கு வந்தேன்.

குறிப்பு கொஞ்சம் நீளமாய்டுச்சு நாளைக்கு மீதியைப் போடுறன்...

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In பதிவர் சந்திப்பு

சென்னை பதிவர் பட்டறை























































Read More

Share Tweet Pin It +1

29 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை

இரண்டு வருஷம் தான் ஆச்சுதா

நான் வலைப்பூ உலகில் காலடி எடுத்து வைத்தது ஆகஸ்ட் 2005; ஆக இரண்டு வருஷம் ஆச்சுது. என்ன எழவ சாதிச்சேன்னு என்ற கேள்வி எழும் பொழுது "நான் ஏன் பிறந்தேன்" அப்படிங்கிற கேள்வி எழுற மாதிரி எழுதினேன் அப்படின்னு பெருமையா சொல்லலாம். ;-) நிறைய நட்பைச் சம்பாதித்திருக்கிறேன் அப்படியே விரோதத்தையும் எப்படி நட்பு நாம் கேட்காமலே கிடைக்கிறதோ அதைப் போன்றே விரோதமும்.

இரண்டு மூணு பேர் உங்களாலத்தான் பதிவுலகத்திற்கு வந்தேன் என்று சொல்லும் பொழுது திகிலாயிருக்கிறது. பின்னாடி பதிவுலகம் சரிவரலைன்னதும் அடிக்க வந்திடுவாங்க்யலோன்னு :). மற்றபடிக்கு இரண்டறை வருஷத்துக்கு முன்னாடி எழுதின "ஒரு காதல் கதை" யை அப்பப்ப யாராவது படிச்சிட்டு சூப்பராயிருக்கு - ஆனா அப்படி ஒரு முடிவை வைத்திருக்கக்கூடாதுன்னு சொல்றப்ப மட்டும் அப்படியே காற்றில் பறக்குறது மாதிரியிருக்கும். ஹிஹி.

2005 மற்றும் 2006ல் வெறும் 75 & 76 பதிவுகள் போட்டதாக கணக்கு சொல்லுது; இந்த வருஷம் இப்பவே 150 ஐ தாண்டிடுச்சு. இது இல்லாமல் பூனை வேற; அப்பப்ப, அதை ஏன் தொடங்க வேண்டி வந்ததுன்னு சமீபத்தில் நடந்த ஒரு பெங்களூர் இரகசிய சந்திப்பில் கலந்துகொண்ட ரகசிய பதிவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவ்வளவு சுவாரசியமாக அதை அவர்கள் கேட்டதாக நினைவில் இல்லை. ஆனால் அந்தப் பதிவை தொடங்கியதன் காரணம் போய் இப்ப என்னவோவாக வந்து நிற்கிறது. ஆனால் மாற்றம் என்பது மாறாத்தத்துவம் இல்லையா சல்தா ஹை.

ஒரு விஷயம் தான் மலைப்பாயிருக்கு - நான் இங்க வந்து இரண்டு வருஷம் தான் ஆகுதா??? என்பதுதான் அது.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

Popular Posts