In கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியும் நானூறு ரன்களும் பச்சா பசங்களும்

சரி வேணாம் வேணாம்னு தான் நானும் இருந்தேன். ஆனா உள்ளுக்குள்ள பொறி ஒன்னு தட்டியாச்சு(Mohandoss sparked by etc., etc.,) பத்தாயிரம்(x 2 = இருபதாயிரம்) செலவானாலும் மேட்சை கிரவுண்டில் பார்க்கணும் என்று திட்டமிட்டிருந்தேன். கிர்ர்ர்ர்ர் டிக்கெட் கிடைக்கலை போனால் போகுது; அந்தப் பழம் புளிக்கும் டிவியில் அதைவிட பிரம்மாதமா காட்டுவாங்க. சின்னசாமி ஸ்டேடியத்தில் flood lights போட்டு டெஸ்டிங் எல்லாம் பிரம்மாதமா செய்துக்கிட்டுருக்காங்க.

சரி மேட்டருக்கு வருவோம் இன்று சைமண்ட்ஸ் சொல்லியிருக்கும் விஷயத்தை நான் ஆஸ்திரேலியாவை இந்திய அணி ஜெயிச்சப்பவே சொன்னேன். ரொம்ப பிலிம் காட்டுறாங்க என்று;(எப்பப்பாரு ஜெயிக்கிறவங்க அப்படித்தான் அமைதியா இருப்பாங்க - எப்பவாவது ஒரு தடவை ஜெயிக்கிறவங்க தான் சலம்புவாங்க). அதை அப்படியே ஒத்துக்கொண்டிருக்கிறார் சைமண்ட்ஸ். இந்த விஷயம் இன்னும் பலருக்கும் புரிஞ்சிருக்கும் ஆனால் சொல்லலை ஏன்னா சொன்னா தப்பா எடுத்துப்பாங்கன்னு தான். ஏன் ரவி சாஸ்திரியைக் கேட்டுப் பாருங்களேன் ;) சொல்வாரு. (தோனி ரவி சாஸ்திரிக்கிட்ட கேட்ட சின்னப்புள்ளத்தனம். ஒரே வார்த்தை அவ்வளவு தான்.)



"We spoke about it back in Australia a couple of years ago; that if we can score 200 in a Twenty20 game why can't we score 400 in a 50-over game? It's really just a mental adjustment more than anything. Certainly, batsmen's skills over the last six or seven years in the one-day game have improved dramatically and I think the more Twenty20 cricket is played, the bowlers will start adjusting really well. We saw that at different times during the last event [the inaugural ICC World Twenty20]. But I think if we get some really good conditions here we'll see some good scores."

இப்படி சொன்னது ஆஸ்திரேலிய தல பான்டிங் அண்ணாச்சி; எனக்கு எப்பவுமே ஆஸ்திரேலியாவோட ஓப்பனிங் பேட்ஸ்மேனை யாரும் வம்பிழுக்க மாட்டாங்களான்னு இருக்கும் ஏன்னா கோபத்தில் நல்லா விளையாடுவாங்கன்னு தான். ஆனா யாரும் செய்திருக்க மாட்டாங்க ஏன்னா அது அப்படித்தான் நடக்கும்னு அவங்களுக்கும் தெரியும். ஆஸ்திரேலிய அணி சக்க கோபத்தில் இருக்கிறார்கள்; அதனால் மேற்கண்ட விஷயம் நடந்தாலும் நடக்கும்(ஆஸ்திரேலியா ஏற்கனவே 400 எல்லாம் அடிச்ச அணி தான் என்றாலும் - அதை ஸ்டான்டர்ட் ஆ ஆக்குவதைப் பற்றிய பேச்சு இது.)

ஸ்ரீசாந்த் செய்வதெல்லாம் ஓவர் அலும்பென்பது அவரைத் தவிர மற்றவர் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சொல்லித் தெரியவேண்டியது ஒன்றுமில்லை இதில். பான்டிங் சொல்லியிருப்பதைப் போல் இப்பொழுது ஒட்டுமொத்த pressure இந்தியன் டீமின் மீது தான். மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன் இந்த ஆட்டத்திற்காக.

Go Aussie Go!!!

PS: இதில் பச்சாப் பசங்களுக்கு விளக்கம் நான் கொடுக்கலை - 7 ஆட்டங்கள் முடிந்ததும் அது யாருன்னு ஆட்டோமேட்டிக்கா தெரிஞ்சிரும். வர்ட்டா!

Read More

Share Tweet Pin It +1

16 Comments

In சுய சொறிதல்

Go Aussie Go!!!

யார் எந்த விஷயத்தைப் பேசுகிறார்கள் எனப் பார்க்கும் பொழுது அவர்களுடைய பின்புலம் பார்ப்பது என்பது 'முன்முடிவு'; அது தவறு என நான் நினைக்கும் ஒவ்வொரு சமயமும் இல்லை அது அப்படியில்லை ஒருவரது ஒரு கருத்தை/விஷயத்தைப் பற்றிய முடிவானது அவரது பின்புலங்களின் பாதிப்புகளால் ஏற்படுவது தான் என்று மீண்டும் மீண்டும் முகத்தில் அறைந்து சொல்கிறது. பாபர் மசூதியை இடித்தவர்கள் என்ற இமேஜும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பேச்சுக்களும் இவர்கள் இராமர் பாலத்தையும் கருணாநிதியின் பேச்சுக்களையும் பற்றி சொல்லும் பொழுது தன்னாக நினைவில் வருகிறது. தமிழகம் இதன் காரணமாக இந்தியாவில் இருந்து பிரிந்துவிடும் என்று இன்னொரு ஈழமாக தமிழகம் இந்தியாவில் தோன்றிவிடும் என்பது வேடிக்கையாயிருக்கிறது.

ரஜினிகாந்த் படங்களை நோக்கி ஈர்க்கப்பட்டதை விட தள்ளப்பட்டதே அதிகம் என்று எழுதியிருக்கிறேன் முன்பே; இப்பொழுதும் அப்படியே இந்த விஷயத்தில் நான் தள்ளப்படுகிறேன். கருணாநிதி இராமன் என்பவன் இருந்தவனா? கல்லூரியில் என்ஜினியரிங் படித்தவனா என்று கேட்டதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

--------------------------------------------------------------

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பார்கள், நான் தலைப்பாகையுடனேயே தப்பித்து விட்டேன் ;) அந்தச் சந்தோஷத்தை கொண்டாட நான் திரும்ப எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் Australia கிரிக்கெட் அணியின் தோல்வி என்னை இன்னும் ஒரு மாதத்திற்கு கட்டிப்போட்டுவிட்டது.

மார்க் டைலர், ஸ்டீவ் வாஹ் பிறகான ஆஸ்திரேலியா அணி போலில்லாமல் பான்டிங்கிற்கு பிறகான ஆஸ்திரேலியா அணி கொஞ்சம் கஷ்டப்படும் என்று தெரிகிறது. அணித்தலைவர் என்பதை விடவும் First down பாட்ஸ்மேன் என்ற முறையில் ஆஸ்திரேலியாவின் மிகமுக்கியமான தூண்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால் இன்னும் வருடங்கள் இருக்கிறது பான்டிங் சாதிக்க நிறைய இருக்கிறது. ஆனால் இடைப்பட்ட காலங்களில் பான்டிங் இல்லாமல் ஆடும் ஆட்டங்களில் பான்டிங் என்ற தனிமனிதரின் ஆளுமை மொத்தமும் இல்லாமல் இருப்பதை உணரமுடிகிறது அணியில்.

சுலபமாக ஜெயித்திருக்க வேண்டிய ஒரு ஆட்டம், ஆஸ்திரேலியாவின் இன்னொரு பலவீனமான மிடில் ஆர்டருக்கு பேட்டிங் கிடைக்காதது இந்தத் தொடரிலும் தொடர்ந்தது. இதன் காரணமாகவும், முட்டாள்தனமாக மீண்டும் ஷான் வாட்ஸனை கொண்டுவந்ததன் காரணமாகவும் அவர்கள் தோற்க நேர்ந்தது. அவர் தன்னுடைய பிட்னஸை இன்னும் ஒரு வருடம் ஆஸ்திரேலிய அணிக்கு வெளியில் நிறுவிய பின்னர் அழைத்துவரலாம். அவருடைய திறமையில் நம்பிக்கை குறைவில்லை அவர் பிட்னஸ் இல்லாமல் போனதால் தான் இந்தப் போட்டி இப்படி ஆனது என்பதில் சந்தேகம் ஒன்றும் கிடையாது.

--------------------------------------------------------------

கிரிக்கெட்டின் மற்ற எல்லா போட்டிகளுக்கும் ஸ்டான்டர்ட்ஸை நிர்ணயிக்கும் ஆஸ்திரேலிய அணி இந்த 20-20 ஆட்டத்திற்கும் விரைவில் புதுவிதமான பரிமாணத்தை அளிப்பார்கள் என்று முழுமனதாக நம்புகிறேன். உதாரணம் இங்கிலாந்து அணி, அவர்கள் அதிகமாக 20-20 ஆட்டம் விளையாடுபவர்கள் ஆனால் அந்தப் போட்டிகளைப் போலில்லாமல் உலகக்கோப்பை 20-20 ஆட்டம் வித்தியாசமாகயிருந்ததை அவர்கள் உணர்ந்தார்களை அதைப் போலவே ஆஸ்திரேலியா அணியின் கேம் ப்ளான் இந்த முறை பயன் தரவில்லை அவ்வளவே.

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஒரு நாள் போட்டி இந்தவாரம் தொடங்குகிறது முதல் போட்டிக்கான டிக்கெட் கிடைக்கலை. ஆனால் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெளுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

--------------------------------------------------------------

பெரும்பாலும் கோபம் ஏற்படும் பொழுது அந்த கோபத்தை உங்களால் கவனிக்க முடிந்திருக்கிறதா - பாலகுமாரன் சொல்வதைப் போல் என்னால் முடிந்தது இந்தச் சனிக்கிழமை - ஆஸ்திரேலியா இந்தியா போட்டியின் பொழுது பொங்கி வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்(கோபத்தை - லூசு மாதிரி பேசுறேனோ!) ஆச்சர்யமாகயிருக்கிறது. நான் வளர்ந்துட்டேனே மம்மி!

உண்மையில் இந்தப் போட்டியால் disappoint ஆகவில்லையா என்று கேட்டால் நிச்சயம் ஆகியிருக்கிறேன் - இல்லாவிட்டால் ஏக சந்தோஷம் கிடைத்த ஒரு விஷயத்தை விடவும் துக்கம் அதிகமாகயிருக்காது. ஆனால் உண்மையில் முன்நாட்களைப் போலில்லை நிச்சயமாய் இப்பொழுது.

-------------------------------------------------------------

உண்மையில் பதிவெழுதாமல் இருந்த சமயத்தில் கொஞ்சம் உருப்படியான வேலைகள் பார்த்துவந்தேன். அதைத் தொடர்வதற்காகவாவது எழுதாமல் இருக்க வேண்டும் இன்னமும் கூட கொஞ்சம் நாட்கள்...


நான் உருப்புடியா எழுதினது

Read More

Share Tweet Pin It +1

1 Comments

Popular Posts