In புகைப்படம்

என்ன ட்ரெஸ் போடாம ஃபோட்டோ எடுக்கப்போறேனா?

புகைப்படம் எடுக்கும் அன்பர்களுக்கு அவர்களுடைய ஒரு கனவுத் திட்டமாய் "மேற்படி" புகைப்படம் எடுக்கும் எண்ணம் இருக்குமாயிருக்கும். சமீபத்தில் கொல்லிமலை சென்றிருந்த பொழுது கூட இதைப்பற்றிய பேச்சு வந்தது நினைவில் இருக்கிறது. :)

சமீபத்தில் மைசூர் போகலாம் என்ற திட்டம் தீட்டியதும் நண்பர்களாய் ரங்கன்திட்டு என்றொரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது அங்கே நீ ஏன் அங்கே சென்று புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கேட்டனர். நான் வேடந்தாங்கலையே பார்த்தவன் என்கிற மமதையில் ம்ம்ம் சரிசரி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன்.

மைசூர் சென்ற பொழுது ரங்கன் திட்டுவிற்கும் சென்றிருந்தேன், வேடந்தாங்கலை ஒப்பிட பறவைகள் குறைவு தான் என்றாலும் வகைகளுக்கும் பறவைகளுக்கு நிச்சயமாய்க் குறைவில்லை ரங்கன் திட்டுவில். அதைவிடவும் முக்கியமான விஷயம் போட்டிங் உண்டு, போட் ஒன்றை எடுத்துக் கொண்டு நீங்கள் பறவைகளுக்கு அருகில் சென்று பார்த்துவிட்டு வரலாம். 300 ரூபாய் கொடுத்தால் இன்னும் நிறைய தூரம் அழைத்துச் சென்று அமைதியாக புகைப்படம் எடுத்துவிட்டு வரமுடியும் என்றும் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அதையும் ஒரு முறை செய்து பார்க்க உத்தேசம் கைவசம் இருக்கிறது.

இப்போதைக்கு அங்கே எடுத்த படங்கள் சில.

Bird

Bird

Bird

Bird

Bird

m1__IMG_7375

Bird

PS1:பறவைகள் மேல் க்ளிக்கினால் பறந்து போய்டாது பெரிதாகத் தெரியும்

PS2:பறவைகள் எதுவும் ட்ரெஸ் போட்டிருப்பதாகத் தெரியவில்லை

PS3:கொல்லிமலையில் பேசியது விலங்குகளைப்(மனிதன் தவிர்த்த :)) பற்றி

Read More

Share Tweet Pin It +1

16 Comments

In தமிழ் இணைய அரசியல்

ரவிசங்கரின் அரசியல்

ரவிசங்கர் அண்ணாச்சி தன்னை 'விக்கிபீடியாவின் கொபசெ'வாக நினைத்துக் கொள்வதில் பெரிய பிரச்சனையில்லை. சொல்லப்போனால் இணைய உலகில் தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகளைப் பரப்புவதற்கான செயலாளர் ஒரு அமைந்தது கூட நல்லதற்கே. இப்படி கொள்கைகளை பரப்பும் நோக்கில் அவர் எழுதி வருவதும் எல்லோருக்கும்(!?) தெரிந்தேயிருக்கும். அவருடைய கடைசி பதிவில், தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்? அவர் எழுதியிருப்பது அப்படித்தான்.

சொல்லப்போனால் பாராட்டப்படவேண்டியது தான் அவருடைய பதிவில் இருக்கும் 90% பகுதிகள். ஆனால் சைக்கிள் கேப்பில் அவர் செய்யும் அரசியல் தான் இந்தப் பதிவை எழுத வைத்தது. அது 'தன்னார்வத் தமிழ் இணையத் திட்டம்' என்று சொல்லிவிட்டு அதில் "மாற்று"வையும் "சற்றுமுன்"னையும் இணைத்துப் போட்டிருக்கிறார்.

எனக்கு உண்மையிலேயே தமிழ்விக்கிபீடியா, தமிழ் விக்கிசினரி, நூலகம் போன்ற திட்டங்களுக்கும் மாற்று, சற்றுமுன்னிற்கும் இருக்கும் ஒற்றுமை தெரியவில்லை. ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து செய்யும் எதையுமே "தன்னார்வத் தமிழ் இணையத் திட்டம்" என்று சொல்லிவிட முடியுமா? பிறகு வவாச, பபாச எல்லாம் தங்களை "தன்னார்வத் தமிழ் இணையத் திட்ட"த்தில் சேர்க்கவில்லை என்று பிரச்சனை செய்ய மாட்டார்களா?(வவாச, பபாச பற்றி எழுதியது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே!)

மாற்றுவிலும், சற்றுமுன்னிலும் ரவிசங்கரின் பங்களிப்பு எப்படி தமிழ் விக்கியிலும், இன்னபிற திட்டங்களிலும் இருக்கிறதோ அப்படி இருக்கிறது. அதனையே ஒரேயொரு காரணமாகக் கொண்டு தன்னார்வத் தமிழ் இணையத் திட்டம் வகையறாவில் மாற்றுவையும் சற்றுமுன்னையும் கொண்டுவந்துவிடமுடியுமா? இல்லை ரவிசங்கருக்கு உண்மையிலேயே "தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு" ஆன அர்த்தம் புரியலையா?

அவர் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். அன்பு அண்ணை 'கட்டற்ற சுதந்திர'த்திற்கு பெருமதிப்பு அளிப்பவர் என்று இரண்டு மூன்று முறை பட்டுத் தெரிந்து கொண்டதால் இங்கேயும் இருக்கட்டும் என்று அதை பதிந்து வைக்கிறேன்.

--------------------//தமிழ் இணையத் தன்னார்வலக் கூட்டு முயற்சித் திட்டங்களில் //

இதில் மாற்றுவையும், சற்றுமுன்னையும் இணைப்பது சரியா?

தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்கிசனரி, விக்கி நூல்கள், மதுரைத் திட்டத்துடன் மாற்றுவையும் சற்றுமுன்னையும் இணைக்க முடியுமா?

//மதுரைத் திட்டம் < 10
தமிழ் விக்கிப்பீடியா = 20
தமிழ் விக்சனரி = 6
தமிழ் விக்கி நூல்கள், தமிழ் விக்கி செய்தி = 0
தமிழ் விக்கி மூலம் = 1
நூலகம் திட்டம் < 10 ?
மாற்று! = 6
சற்றுமுன்… = 5
தமிழா!< 10// ----------------------

PS: ரவிசங்கர் தன் பதிவில் பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை என்பதற்காக இந்தப் பதிவு கிடையாது.

Read More

Share Tweet Pin It +1

14 Comments

In Only ஜல்லிஸ் சினிமா புகைப்படம் பெங்களூர்

பெங்களூர் தேர்தல் சீதோஷணநிலை மரங்கள் IPL Chennai Super Kings திரைப்படங்கள் புகைப்படம் கொல்லிமலை

தேர்தலுக்கான அறிகுறியே இல்லாமல் பெங்களூரில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது, No Poster, No பொதுக்கூட்டம்(பெங்களூருக்குள்?!), No Sound, No disturbance. கூட வேலை செய்யும் மக்கள் பொதுவாக அரசியல் பேசுவதில்லை, நானாய்ப் போயும் பேசுவதில்லை. கௌடா குடும்பத்தின் மீது கோபமாகயிருக்கிறார்கள் அது மட்டும் தெரிகிறது. என் கம்பெனியில் என் ப்ரொஜக்டில் 10 ல் 8 பேர் ஓட்டுப் போட்டிருந்தார்கள். சும்மானாச்சுக்கும் "IT Professional's" ஓட்டு போடமாட்டாங்கன்னு சொல்றது வெறும் புரளி.

10, 15 வருடங்களுக்கு முன்பிருந்த பெங்களூர் என்பது இப்பொழுது இல்லை என்ற சொல்லாடல் இப்பொழுது பெரும் க்ளிஷே ஆகிவிட்டது. வெயிலின் தாக்கத்தில் எல்லோரும் இதைப் புலம்புவதைப் பார்த்திருக்கிறேன். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஒருமுறை வந்திருக்கிறேன், நிச்சயம் பெங்களூரின் சீதோஷணநிலை மாறிவிட்டதுதான். சின்னம்மை இங்கே கொஞ்சம் போட ஆரம்பித்திருக்கிறது, இளநீர் சாப்பிடவேண்டிய கட்டாயம் இங்கேயும் இருக்கிறது.

முன்னமே எழுதணும் என்று நினைத்திருந்தேன், பெங்களூரில் சாலையோரத்தில், சாலை நடுவில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டியாகிவிட்டது. மடிவாலாவில் இருந்து ஆலமரம் அடியோடு களையப்பட்டது. அதைப் போலவே இந்திராநகர் CMH சாலையில் இருந்த மரங்களும். மொட்டையாக ரோடுகள் பெங்களூரின் தனித்தன்மை இல்லாமல் போனது போல் இருக்கிறது. மடிவாலாவை நான் அத்தனை உபயோகிப்பதில்லை என்பதால் அதுபற்றி தெரியாவிட்டாலும், இந்திராநகர் CMH சாலை தன் தனித்தன்மையை இழந்துவிட்டதை நிச்சயம் உணர்கிறேன்.

IPL பார்ப்பதில்லை என்ற முடிவில் இருந்தேன் இப்பொழுது சற்று மாற்றிக் கொண்டிருக்கிறேன், ஷேன் வார்னேவை ஆஸ்திரேலிய காப்டனாக ஆக்காதது என்னை வருத்தப்படுத்தியதுண்டு. ஆனால் பான்டிங் சில மாதத்தில் எல்லாம் காப்டனுக்கான முழுத்தகுதியும் உண்டென்று நிரூபித்துக் கொண்டவர். இப்பொழுது ராஜஸ்தான் ராயல் அணிக்காக தலைமைப் பொறுப்பில் ஷேன் வார்ன் பிரம்மாதப்படுத்தும் பொழுது சந்தோஷமாகயிருக்கிறது.

ஹைடனுக்காகவும் ஹஸ்ஸிக்காவும் சப்போர்ட் செய்யத் தொடங்கி இப்பொழுது அவர்கள் இருவரும் இல்லாத பொழுதும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை சப்போர்ட் செய்யத் தொடங்கியிருக்கிறேன். IPLல் மட்டமான பௌலிங் அட்டாக் சென்னை சூப்பர் கிங்க்ஸ் உடையது தான் என்று நினைக்கிறேன். ஸ்பெஷலிஸ்ட் பாஸ்ட் பௌலர் இல்லாத அணியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் இருக்கிறது. (மகாய'ன்' கடைசி மாட்சில் ஹார்ட்ரிக் எடுப்பதற்கு முன் எழுதியது.)

"Then she found me" என்றொரு நகைச்சுவை - சென்ட்டி படம் பார்த்தேன். Adoption பற்றிய சீரியஸ் கதைக்கருவைக் கொண்டிருந்தாலும் மெல்லிய நகைச்சுவையுணர்வோடு, புன்னகையுடனே படம் முழுவதும் பார்க்க வைத்திருக்கிறார்கள். Adoption எடுப்பதற்கு எத்தனை பெரிய மனது வேண்டும் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்ற காரணத்தால், படத்தில் அந்தப் பெண் Adoption எடுப்பதை மறுக்கும் ஒவ்வொரு முறையும் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

"Scent of a Woman" படம் பார்த்தேன், Al Pacino பற்றி என்ன சொல்ல, தேர்ந்த நடிகன் என்பதை இன்னொரு முறை மெய்ப்பித்திருக்கிறார். இந்தப் படத்தில் Charlesற்கு வரும் பிரச்சனை போலவே எனக்கும் ஒரு பிரச்சனை கல்லூரிக் காலத்தில் வந்தது, கடைசியில் நானும் அவரை(Charles) மாதிரியே சொல்லாமல் விட்டதால்(நம்புக்கப்பா!) கடைசியில் பிரச்சனை செய்த மாணவர்கள் நான் தான் செய்ததாக ஒரு 'கதை' சொல்ல, ஏற்கனவே இருந்த என் Image நான் செய்திருக்க முடியும் என்று அவர்களை நம்பவைக்க, Apology லெட்டர் கொடுத்திருந்தேன். அது சட்டென்று நினைவில் வந்தது. இந்தப் படம் பார்த்ததும். கொடுமை என்னன்னா அந்தப் பிரச்சனையைச் செய்தது ஒரு Pasterன் மகன் என்பதால் மறுபேச்சே இல்லாமல் அவன் சொன்னதை நம்பினார்கள் :(. Personality does matters என்பது அந்தப் பிரச்சனையில் பொழுது தெரிய வந்தது. அதன் காரணமாக என் உருவத்தை/செயல்களை/எழுத்தை வைத்து என்னை தவறாக மதிப்பிடுபவர்களை நான் பிற்காலங்களில் எதிரியாக பார்க்காமல் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் இயல்பில் எங்க பிரின்ஸி ரொம்ப நல்லவர். :)

இம்சை அரசியின் கல்யாணத்தை ஒட்டி, திட்டமிட்டு கொல்லிமலைக்குச் சென்றிருந்தோம். வழமையான நண்பர்களுடன் புதிதாகச் சில நண்பர்களையும் சந்தித்திருந்தேன், மகிழ்ச்சியான பயண அனுபவம். 'இருள்வ மௌத்திகம்' புத்தகம் எப்படியோ(!?) என் பையில் வந்திருக்க அதைப் பார்த்த நண்பர்களிடம் ஒரு 'பெட்' கட்டியிருந்தேன். அதில் இருக்கும் ஒரு பக்கத்தை படித்து பின்னர் விளக்கம் சொன்னால் 1000 ரூபாய் தருவதாக, ஒரு லட்ச ரூபாய் தருவதாகக் கூட பெட் கட்டியிருக்கலாம். ஆனால் ஒரு இயல்புணர்ச்சியை வரவைப்பதற்காக 1000 ரூபாய்க்கான பெட் கட்டினேன். :) படித்துவிட்டு தலைசுற்றி கீழே விழாதது ஒன்று தான் குறை. கொல்லிமலையில் முக்கிய அருவிக்கு செல்வதற்கான நேரம் கழித்துச் சென்றதால் பக்கத்தில் இருந்த குட்டி அருவிக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அப்படியே சின்னதாய் ஒரு குளியல் போட்டுவிட்டு வந்தோம்.

கொல்லி மலை அருவியில் நான் எடுத்த ஒரு புகைப்படம்.

Falls

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Only ஜல்லிஸ் நட்சத்திரம்

Legends : Fidel Castro

வாழ்க்கையில் நமக்கு சிலரை பிடித்துவிடும் ஏன்னெல்லாம் தெரியாது. அவரைப்பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளச் சொல்லும். அதுபோல் சில ஆட்கள் எனக்கும் உண்டு. அதில் மிகக்குறிப்பிட்ட ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சந்தோஷப்படுகிறேன். இவரை உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். சிலருக்கு என்னை விட மேலாய், எனக்கு இந்தாளால மட்டும் இந்த வயசிலேயும் இவ்வளவு எதிர்ப்புக்களைத்தாண்டி இருக்க முடியுதுன்னு ஆச்சரியமா இருக்கும்.

அவர், அக்குனியோண்டு குட்டி நாடான கியூபாவில் உட்கார்ந்துக்கிட்டு உலக போலீஸ்காரனுக்கு அல்வா கொடுத்துக்கொண்டிருக்கும் பிடல் காஸ்ட்ரோ. தலைவர் கருணாநிதி கூட தான் மிகவும் ஆசைப்பட்டு பார்க்கமுடியாமல் இருக்கும் நபர் என்று சொல்லியிருந்தார். எனக்கு கம்யூனிசம் தெரியாது. கொஞ்சமே கொஞ்சம் படித்தது கூட கதைகளின் வழியாகத்தான்.(இவரும் கம்யூனிஸ்ட் கிடையாது அது வேற விஷயம் பின்னாடி சொல்றேன்.)ரெவல்யூஷன், சுதந்திரப்போராட்டம் இதிலெல்லாம் பூந்து பொறப்படுற ஆளும் கிடையாது நான் ஆனாலும் இவரை பிடித்திருந்தது, இருக்கிறது, இருக்குமென்று நினைக்கிறேன்.

ஆனாளப்பட்ட அமேரிக்காவால வியட்நாமில் சாதிக்க முடியாததை. 1990 களுக்கும் முன்னர் இருந்த பலமான சோவியத் யூனியனால் ஆப்கானிஸ்தானில் சாதிக்க முடியாதை சாதித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவரைக் கொல்வதற்கு நடந்த முயற்சிகளின் எண்ணிக்கையை சொன்னால் யாராலும் நம்பவேமுடியாதது. இதைப்பற்றியே சில கதைகளைத்தனியாக கொண்டவர். அதாவது இவரைக் கொல்வதற்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் இவரையே காதலிக்கும் அளவிற்கு கொண்டுவரப்பட்டார் என்பது போன்ற அதிசயமான கட்டுக்கதைகள் இவரைப்பற்றி அதிகம்.



காஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் பிடல் அலக்ஸாண்ட்ரோ காஸ்ட்ரோ ருஸ், பிறந்தது, ஆகஸ்ட் 13, 1926. அதுவரை க்யூபாவை ஆண்டுவந்த பட்டீஸ்டா வின் ஆட்சியை தூக்கியெறிய, 1959ல் இவர் நடத்திய புகழ்பெற்ற 26th of July Movement, உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றாலும்.

1947களில் இவர் பார்ட்டி ஆப் கியூபன் பீப்பிளில் சேர்ந்ததில் இருந்து பல இடங்களில் பொதுவாக அறியப்பட்ட மனிதராகத்தான் இருந்து வந்தார். ஜூலை 26, 1953ல் ஒரு சந்தர்ப்பத்தில், பாட்டிஸ்டாவின் ஆர்மியிடம் சிக்கிக்கொண்ட காஸ்ட்ரோ, அந்த ஆர்மியில் இருந்த இவருடைய கல்லூரி நண்பரால் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டார். இது நடந்த அதே ஆண்டு தான் காஸ்ட்ரோ தன்னுடைய மிகப்பிரபலமான சொற்பொழிவான La historia me absolveráவை நிகழ்த்தியிருந்தார். இதில் தன்னுடைய செயல்களை நியாயப்படுத்தி தொடரப்போகும் தன்னுடைய அரசியல் வியூகத்தை தெரிவிக்க, பாட்டிஸ்டா அரசால் 15 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டார். ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டாண்டுகளில் அதாவது 1953ல் சிறையில் இருந்து வெளிவந்தவர் மெக்ஸிகோவில் அடைக்கலம் புகுந்தார்.

இந்த இரண்டாண்டு சிறை வாழ்க்கையில் தான் நான் மேலே "நம்பமுடியாதது" என்று சொல்லியிருந்த இவரைக் கொல்வதற்கான 600 முயற்சிகள் நடத்தப்பட்டன(அப்படியாக நம்பப்படுகிறது.) இது கொஞ்சம் புகழ்ச்சிக்காக மிகப்படுத்தப்பட்ட நம்பராக இருந்தாலும் முயற்சிகளின் எண்ணிக்கை நிச்சயம் குறைவானது கிடையாது. அத்துனையிலும் இருந்து தப்பித்து தான் காஸ்ட்ரோ சிறையில் இருந்து வெளியானது.



மெக்ஸிகோவில் தான் சொல்லப்போனால் கியூபாவின் சுதந்திரப்போராட்டத்தின் முக்கியப்பகுதி நிகழ்ந்தது. அதில் மிகவும் முக்கியமானது எர்நெஸ்டோ 'செ' குவாரா என்னும் மருத்துவம் படித்த போராளியை காஸ்ட்ரோ சந்திக்கும் நிகழ்வு. அது மட்டுமல்லாமல், காஸ்ட்ரோவின் ஆட்களுக்கு போர்ப்பயிற்ச்சியும் இங்கே தான் தரப்பட்டது. ஸ்பானிய சிவில் போரின் போராளிகளில் முக்கியமானவரான அல்பெர்ட்டோ பாயோ, தான் அந்த பயிற்சியை முன்னிருந்து அளித்தவர் இவர் பிறப்பால் ஒரு கியூபன் என்பது முக்கியமானது.

இதன் பிறகு நடந்த உள்நாட்டுப்போரின் பொழுது, தன்னுடைய தளபதியே காஸ்ட்ரோவின் பக்கம் சென்றுவிட்ட காரணத்தினால் பாட்டிஸ்டா கியூபாவில் இருந்து வெளியேறினார். அப்பொழுத்து தொடங்கப்பட்டது கியூபாவில் காஸ்ட்ரோவின் ஆட்சி இன்று வரை நீடித்து வருகிறது. இது அவரைப்பற்றிய சிறிய அறிமுகம்.

நான் சொல்ல வந்து இரண்டு விஷயங்கள், உலக வரலாற்றில் மிகப்பிரபலமான, Cuban Missile Crisis, Bay of Pigs பற்றி கொஞ்சம்.

முதலாவது ஆண்டுக்கணக்கின் படி, பே ஆப் பிக்ஸ் இன்வேஷன். ஒன்றுமில்லை அத்தாம் பெரிய அமேரிக்கா, கியூபாவை ஆக்கிரமிக்க நடந்திய ஒரு முயற்சிதான் இது. ஒன்றுமில்லை, காஸ்ட்ரோ உண்மையில் சொல்லவேண்டுமானல் ஒரு கம்யூனிஸ்ட் கிடையாது. ஆனால் அவர் சோவியத் யூனியனின் தயவை பெற வேண்டி அப்படியொரு உருவகத்தை எடுக்கவேண்டிய நிலை வந்தது. இதன் காரணத்தினால் ஏற்பட்ட சிந்தாந்தப்பிரச்சனையில் செகுவாரா காஸ்ட்ரோவை விட்டு பிரியும் நிலை வந்தது. பிரிந்த பொழுது அவர் காஸ்ட்ரோவிற்கு எழுதிய ஒரு கடிதம் மிகவும் பிரபலமானது. 'செ' வைப்பற்றி ஒரு தனி பதிவு போடவிருப்பம் அப்பொழுது அதுபற்றி எழுதுகிறேன்.

இப்படியாக அமேரிக்கா உலகமெங்கிலும் எந்த நாடும் கம்யூனிச நாடாக இருக்கக்கூடாது என்று ஒற்றை காலில் நின்ற பொழுது அமைப்பின் படி அமேரிக்காவின் காலின் கீழ் இருக்கும் ஒரு நாடு கம்யூனிச முகம் கொண்டது பெரும் பிரச்சனையை கிளப்பியது. அதனால் காஸ்ட்ரோவை நிர்மூலமாக்கும் எண்ணத்தில் ஏப்ரல் 15, 1961ல் ஒரு பக்கம் A-26 குண்டுமழை பொழிய அமேரிக்க சிஐஏவால் பணமும் பயிற்சியும் கொடுக்கப்பட்ட, கியூபாவின் ஏறக்குறைய 1500 மக்கள் பே ஆப் பிக்ஸ்ஸில் இறங்கினர். அதாவது காஸ்ட்ரோவிற்கு எதிரான இந்த மக்களைக்கொண்டு ஒரு உள்நாட்டுக்குழப்பத்தை விழைவித்து அதற்கு ஆதரவு தரும்(என்று அமேரிக்கா நினைத்த) கியூபாவின் மக்களைக்கொண்டு காஸ்ட்ரோவை நீக்கிவிடலாம் என அமேரிக்கா கனவு கண்டது. ஆனால் கடைசி நிமிடம் கென்னடி இந்த இன்வேஷனுக்கான தன்னுடைய ஆதரவை ஏதோ ஒரு காரணத்துக்காக நீக்கிக்கொள்ள இந்த உள்நாட்டுக்குழப்பம் பிசுபிசுத்துப்போனது.

இந்த சமயத்தில் கியூபாவின் இராணுவத்தால் பிடிக்கப்பட்ட அமேரிக்க இராணுவவீரர்களை, கியூபா மருத்து உதவி வாங்கிக்கொண்டு விடுவித்ததாக எங்கேயோ படித்த நினைவு இதை படிக்கும் யாராவது சரிசெய்தால் சந்தோஷம். இப்படியாக தோல்வியில் முடிந்துபோன இந்த குழப்பத்தால், காஸ்ட்ரோ தான் ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்றும் அன்று முதல் கியூபா ஒரு கம்யூனிச நாடென்றும் வெளிப்படையாக அறிவித்தார்.

இதன் பிறகு நடந்தது இன்னும் ஆச்சர்யமான நிகழ்வு, அது மூன்றாம் உலகப்போரில் முடியாமல் போனதில் பலருக்கும் ஆச்சர்யமே. அக்டோபர் 22, 1962ல் அமேரிக்க பிரஸிடெண்ட் கென்னடி வெளிப்படையாக, ரஷ்யா கியூபாவில் தன்னுடைய குறைந்த தொலைவு செல்லும் நியூக்ளியர் மிஸைல்களை குவித்திருக்கிறது என்று சொன்னார். அமேரிக்காவின் ப்ளோரிடாவிற்கு கிட்டத்தட்ட 145 கிமீ, நிறுத்தப்பட்டிருந்த இந்த ரஷ்யாவின் நியூக்ளியர் ஏவுகணைகள் அன்று உலகத்தின் மிகப்பெரிய பேச்சாக இருந்தது. அமேரிக்காவிற்கும், ரஷ்யாவிற்குமான கோல்ட் வார் உச்சத்தில் இருந்த சமயம் அது.

கென்னடி, அமேரிக்காவின் மீதோ இல்லை இலத்தீன் அமேரிக்கா நாடுகளின் மீதோ ஏவுகணை வீசப்பட்டால் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சொன்னதிலிருந்து இன்னும் சூடுபிடித்தது. அமேரிக்கா கியூபாவை சோதனை செய்வதற்காக அனுப்பப்பட்ட ஸ்பை விமானம், கியூபாவில் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானியும் கொல்லப்பட, அதன் உச்சத்தை அடைந்தது.

கியூபாவை ஒழித்துக்கட்டிவிடும் ஆத்திரத்துடன் வந்த அமேரிக்க அமேரிக்க கப்பல்களை எதிர்கொள்ள ரஷ்யா தன்னுடைய நீர்மூழ்கி கப்பல்களை அங்கே அனுப்பியது. சொல்லப்போனால் இதுதான் இந்த சூழ்நிலையின் உச்சக்கட்டம். உலகமே அடுத்த உலகப்போர் தொடங்கப்படுமோ என்ற பயத்தில் இருந்த சமயம்.

ஆனால் என்ன காரணத்தினாலோ ரஷ்யா அந்த சமயத்தில் பின்வாங்கியது, கியூபாவின் மீது படையெடுக்காமல் இருக்கும்பட்சத்தில் நியூக்ளியர் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து நீக்கிக்கொள்வதாக ரஷ்யா அறிவிக்க இந்த பிரச்சனை உலகப்போராக மாறாமல் காப்பாற்றப்பட்டது. இதில் காஸ்ட்ரோவிற்கு ரஷ்யாவின் மீது கோபம் இருந்தாலும் மறுக்கமுடியவில்லை. இப்படியாக உலகப்போலீஸ்காரனுக்கு ஒரு காலத்தில் பெரும் தலைவலியாக இருந்த கியூபா இன்று வரை அப்படித்தான் இருக்கிறது.

ரஷ்யாவின் பண உதவி கிடைத்துக்கொண்டிருந்ததால் ஒருவாறு சமாளித்துவந்த, கியூபா கடைசியில் 1990களில் ரஷ்யாவும் பிளவுபட்டுப்போக, கஷ்டம்தான் படுகிறது தற்பொழுது. இந்த நிலையில் காஸ்ட்ரோவின் அரசியலை விமர்சிக்கும் நிறைய பேர் இன்றளவும் அதிகமாகவே இருக்கிறார்கள். அதே போல அவருடைய ஆளுமையை விரும்புகின்ற என்னைப்போன்றவர்களும் நிறைய பேர்.

அதேபோல் அங்கோலா, எத்தியோப்பியா, நிக்காராகுவே போன்ற நாடுகளுக்கு கியூபாவின் படைகளை அனுப்பி அங்கே விடுதலைபோரில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உதவி செய்து, அமேரிக்காவால் வியட்நாமில் செய்ய முடியாததை, 1990களுக்கு முன்பிருந்த ரஷ்யாவால் ஆப்கானிஸ்தானில் செய்ய முடியாததை காஸ்ட்ரோ செய்தார்.

இதன் காரணமாகத்தான் நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் சுதந்திரம், விடுதலைப்போருக்கு கியூபாவின் பங்கு மிக அதிகமானது என்று குறிப்பிட்டிருந்தார். என்ன இருந்தாலும் தனியொரு மனித ஆளுமையாக இன்று வரை அமேரிக்காவின் அருகிலேயே இருந்து கொண்டும் அமெரிக்காவிற்கு அல்வா கொடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர் பிடல் அலெக்ஸாண்ட்ரோ காஸ்ட்ரோ.

ஒரிஜினல் தலைப்பு - நட்சத்திரம் - இந்த ஆளைப்பற்றி கொஞ்சம் ஜல்லி
மீள்பதிவிற்காக மாற்றியிருக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

23 Comments

In ஜான் லெனன்

Legends: John Lennon (The Beatles)

“இசை எங்கேர்ந்து பிறக்குது தெரியுமா?” கேட்டதும் ஒரு கையை தூக்கி “எனக்கு தெரியும் சார்...” சொல்லிட்டு ஒரு மாதிரியா அசடு வழிஞ்சிக்கிட்டே, “ஆர்மோனியப் பெட்டியிலேர்ந்து சார்...” வடிவேலு சொல்வது போல் ஒரு காமடிக் காட்சி இருக்கும் கிங் திரைப்படத்தில்.

நான் இதிலிருந்து அதிகம் வேறுபட்டவன் கிடையாது. வடிவேலு ஆர்மோனியம்னு சொன்னதை வேண்டுமானால் நான் கீபோர்ட்ன்னோ இல்லை பியானோன்னோ சொல்வேன் அவ்வளவுதான் எனக்கு இசைக்குமான தொடர்பு இவ்வளவுதான். பாடல்களை ரசிக்கப் பிடிக்கும் அதற்கு மேல் ஆராய்ச்சியில் குதிக்கும் அளவிற்கெல்லாம் ஒன்றும் கிடையாது மேல் பக்கத்தில். எங்கள் குடும்பத்தில் ஆண்கள் தபேலாவோ இல்லை வயலினோ கற்றுக்கொள்ளும் பழக்கம் இருந்தாலும். நான் அந்தப்பக்கம் கூட போனதில்லை.

ஆரம்ப காலத்தில் இன்னும் மோசம் பாடல்களே பிடிக்காத ஒரு நிலையிருந்ததது. பின்னர் வந்த முதல் காதல் என்னில் ஏற்படுத்திய பிரளயத்தில் பாடல்களில் மேல் விருப்பம் வந்தது. அதற்கு பின் அது கொஞ்சம் கொஞ்சமாக காதலாகத் தொடங்கியிருக்கிறது.



யார் இந்த ஜான் லெனன். ஒரு அமேரிக்க ஜனாதிபதி இவரை கொல்லச் சொன்னார் என்று ஒரு கன்ஸ்பியரஸி தியரி இன்றும் உள்ளது.(யார் அவர் எனக்கேட்பவர்கள் கடைசி வரை பதிவைப் படிக்கும் தண்டனை.)

இந்த ஜான் லெனனைப் பற்றி உங்களில் பலருக்கு என்னை விட அதிகம் தெரிந்திருக்கும். பீட்டில்ஸ் குழுவின் இறந்தகாலத்தில் பிறந்த எனக்கு தெரிந்ததை விட அதிகமாக தமிழ்மணத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கும்.

சமீபத்தில் திருமதி. சுஜாதாவின் பேட்டியை சிநேகிதியில் படிக்க நேர்ந்தது. அதில் அவர் ஜான் லெனன் என்று கூறிப்பிடாவிட்டாலும். பீட்டில்ஸ் பற்றி கூறியிருந்தார். மேலும் சுஜாதாவின் கிதார் ஆசையைப் பற்றியும். என்னிடம் ஒரு அக்வெஸ்டிக் கிதார் உண்டு(மாமாவினுடையது) அதில் சி, டி கார்ட்களைக்கூட சரியாகக் பிடிக்கத் தெரியாது. நானும் கிதாரை பின்னால் கட்டிக்கொண்டு கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று, ‘ஓ நெஞ்சே நீ தான்...' பாடலை மட்டும் தப்பு தப்பா வாசிப்பேன். சரி விஷயத்திற்கு வருவோம்.

அமேரிக்க அரசாங்கம் இவரை கவனிப்பதற்காக ஒரு தனி FBI குழுவை அமைத்திருந்தது, இவர் மேடைகளில் சொல்லும் பாடும் ஒவ்வொரு வார்த்தைகளும் குறிப்பெடுக்கப் பட்டிருந்தது. ஒரு பெரிய அரசாங்கமே இவரை எப்படி அமேரிக்காவிலிருந்து வெளியேற்றுவது என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவர் ஒரு பயங்கரவாதியா, தீவிரவாதியா யார் இவர் எதற்காக இவரை அமேரிக்க அரசாங்கம் தனியாக குழு அமைத்து கவனிக்க வேண்டும்.

அது ஒரு பெரிய கதை, எவ்வளவு பெரியதென்றால், அமேரிக்காவின் வியட்நாம் போர் பற்றி தனியாக பதிவெழுதும் அளவிற்கு பெரிதானது. அதே போல் பீட்டில்ஸ் உடைய கதையும் மிகவும் பெரிதானது. ஆனால் அதையெல்லாம் குறிப்பிட்டு பதிவை திசைதிருப்ப விரும்பாததால், சில வரிகளில் ஜான் வின்சென்ட் ஓனோ லெனான் பிறந்தது 9 அக்டோபர் 1940 இங்கிலாந்தில், எல்விஸ் பிரஸ்லி, சொக் பெர்ரி போன்றவர்களில் ராக் அண்ட் ரோல் பாணி இசையில் கவரப்பட்டு ஜானும் ராக் அண்ட் ரோல் இசைப் பயிற்சியாளராக ஆனார்.

இவரும் இவருடைய நண்பர்கள், ஜார்ஜ் ஹாரிஸன், பவுல் மக்கார்டினி, ரிங்கோ ஸ்டர் இணைந்து உருவாக்கிய த பீட்டில்ஸ் இசை வரலாற்றில் ஏகப்பட்ட சாதனைகளை செய்திருக்கிறது. ஏகப்பட்ட சாதனைகளை. ஜானை தங்கள் தலைவனாக பார்த்த மக்களின் எண்ணிக்கை பல மில்லியன்களைத் தாண்டும். பலருக்கு அவருடைய இமேஜின் ஆல்பம் தேசியகீதத்தை விட விருப்பமுடையதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இமேஜின் பாடல் தான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறப்பான பாடல்களில் ஒன்றாக கருதப்படுவது. இந்த த பீட்டில்ஸ் வெளியிட்ட பல ஆல்பங்கள் இன்றும் பல சாதனைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இனி முக்கியpபகுதிக்கு, ஜான் லெனன், அமேரிக்காவின் வியட்நாம் போரை எதிர்த்து தன்னுடைய கான்சர்ட்களில் பாடியும் பேசியும் வந்தார். சாதாரணமாக ‘அல்லாஹு அக்பர்’ என்று ஆரம்பிக்கப்பட்டோ, இல்லை இடையில் சொல்லப்பட்ட தனிநபர் தொலைபேசி உரையாடல்களை முழுவதுமாக பதிவு செய்து வைத்து விசாரிக்க, சுமார் ஏக்கர் கணக்கில் மெயின்ப்ரேம் வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்த அமேரிக்க அரசாங்கத்திற்கு,

ஒரு நாட்டின் முதுகெலும்பான இளைஞர்கள், அதுவும் எண்ணிக்கையில் அடங்காத இளைஞர்களை தன்வசப்படுத்தி, தன்னுடைய மயக்கும் பாடல்வரிகளால், குரலால் கவர்ந்து கொண்டிருந்த ஜான் லெனன் வியட்நாம் போருக்கு எதிராக குரல் கொடுத்ததும் எங்கேயோ பிடுங்கிக்கொண்டுவிட்டது. ஜான் லெனனை எப்படியாவது அமேரிக்காவிலிருந்து வெளியேற்றிவிட்டால் போதும் என நினைத்ததும் இதனால் தான். இடையில் ஜான் தனக்கு இங்கிலாந்து அரசகுடும்பத்தால் கொடுக்கப்பட்ட கவுரவ மரியாதையையும் திரும்ப அனுப்ப பற்றிக் கொண்டு எரியத்தொடங்கியது லெனன்னின் அமைதிக்கான வேள்வி.



தீயிலே நெய்விடுவதாய், ஜான் மற்றும் அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட யோகோ ஓனோ இருவரும் ‘பெட் இன்’ என்ற அறப்போராட்டத்தை(?) ஆரம்பிக்க, ஏற்கனவே இவர்கள் திருமணம் செய்து கொண்டது உலகப்பிரசித்தமாக இருக்க இருவரும் அதை உபயோகித்து அமைதிக்கான முயற்சியில் இறங்க. அமேரிக்க அரசாங்கம் திணறியது. ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் குழுவையே ஜானை கண்காணிக்கப் பணித்தது.

மார்டின் லு\தர் கிங்கையே, தேசப்பாதுகாப்பின் விரோதியென்று சொன்ன அமேரிக்காவிற்கு, இங்கிலாந்தின் குடிமகனான, அமேரிக்காவில் கீரின் கார்ட் அப்ளை செய்திருக்கும், ஜானை தேசப்பாதுகாப்பின் விரோதியென்று முத்திரை குத்த நாளாகவில்லை. ஜானை அமேரிக்க அரசாங்கம் ‘அண்டர் ஸ்டாராங் ஸர்வைலன்ஸ்ஸில்’ வைத்திருந்தது. இந்த வார்த்தையை அப்படியே தர ஒரு விஷயம் இருக்கிறது. அது இப்படிப்பட்ட ஒரு வார்த்தையைத் தான் மார்டின் லூதர் கிங்கிற்கும் அமேரிக்க அரசாங்கம் சொல்லியிருந்தது. கடைசியில் என்ன நடந்தது?

மார்டின் லூதர் கிங், நான்கு புறமும் எப்பிஐ சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கும் பொழுதும் சுட்டுக்கொல்லப்பட்டார். இஸ்ரேலின் மொஸாட் மட்டுமல்ல அமேரிக்காவின் எப்பிஐ மற்றும் சிஐஏ வும் அரசியல் கொலைகளை சர்வசாதரணமாக செய்யவல்லதுதான். ஆனால் என்ன இஸ்ரேல் செய்தால் அவர்கள் தான் செய்தார்கள் என்று தெரிந்துவிடும். ஆனால் பெரியண்ணன் அதிலெல்லாம் கில்லாடி, ஜேஎப்கே, ஆர்எப்கே, மார்டின் லூதர்கிங், இப்படி கோலி மாறிய ஆட்கள் நிறைய பேர். ஜேஎப்கே தெரிந்திருக்கும் அது யார் ஆர்எப்கே, அது ராபர்ட் கென்னடி, கென்னடி குடும்பத்தின் அடுத்த வாரிசு, இவரையும் போட்டுத்தள்ள சொல்லியது அந்த ஜனாதிபதிதான் என்று ஒரு கான்ட்ரவர்ஸி இன்றும் அமேரிக்காவில் உண்டு. யார் அவர் அது கடைசியில்.

இப்படியாக அண்டர் ஸ்டார்ங் ஸர்வைலன்ஸ்ஸில்(Under strong surveillance) வைக்கப்பட்டிருந்த மார்டின் லூதர்கிங் போட்டுத்தள்ளப்பட்டார் என்றால் ஜானின் கதி, அதே கதிதான் அவரும் போட்டுத்தள்ளப்பட்டார், இவருக்கும் ஒரு மனோதத்துவ முறையில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒருவனே கொலைகாரன். உலகத்தின் அமைதிக்காக சிந்தித்த பாடிய, ஒருவனை சுட்டுக்கொன்றனர். அந்த சமயத்தில் உலகமே இசை இறந்துவிட்டதாக எண்ணி வருத்தப்பட்டனர்.

இந்த ஆள் ஒரு பெரிய ஜீனியஸ், முன்னால் ‘Bed-in’ என்று ஒரு அய்ட்டம் சொல்லியிருந்தேன் அல்லவா, அது வேறுஒன்றுமில்லை. அப்பொழுதுதான் கல்யாணம் செய்துகொண்டிருந்த யோகோ ஒனோவும் ஜானும் தாங்கள் தேனிலவு கொண்டாடும் ஓட்டல் அறைக்குள் காலை ஒன்பதில் இருந்து மாலை ஒன்பது மணிவரை() பத்திரிக்கையாளர்களை விட்டு புரட்சி செய்தார்கள் எப்படி அமைதியைப் பேசி, அமைதிக்கான வாசகங்களை சுவற்றில் எழுதி வைத்திருந்து.



அப்பொழுது ஜான் இதையெல்லாம் பணத்திற்காக, புகழுக்காக செய்கிறார் என்று கூட ஒரு பரப்பப்பட்டது. ஆனால் ஜான் நினைத்தால் அந்த ஏழுநாட்கள் அவருக்கு கிடைத்த பப்ளிஸிட்டியை ஒரு பாடல் எழுதியும் அதை விட அதிக பணத்தையும் பப்ளிஸிட்டியையும் பெற்றிருக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

இது ஒரு பக்கம் தான் நான் சொன்னது, ஜானின் இன்னொரு பக்கமும் இருக்கிறது ஆனால் அது இங்கே தேவையில்லாதது. என்னைப்பொறுத்தவரை.

ஜானின் புகழ்பெற்ற இமேஜின் பாடலை தமிழ்ப்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் எவ்வளவு முயன்றாலும் என்னால் அந்த ஆங்கில வரிகளில் உள்ளவற்றை அதே மாதிரியான தமிழில் சொல்ல முடியவில்லை. அதை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். இது அமைதிக்கான முயற்சிகளில் தேசியகீதமாக இன்றும் நிழைத்திருக்கிறது.



Imagine

Imagine there's no heaven, it's easy if you try,
No hell below us, above us only sky,
Imagine all the people, living for today.
Imagine there's no countries, it isn't hard to do,
Nothing to kill or die for, and no religion too,
Imagine all the people, living life in peace.
You may say I'm a dreamer, but I'm not the only one,
I hope someday you'll join us, and the world will be as one.

Imagine no possessions, I wonder if you can,
No need for greed or hunger, a brotherhood of man,
Imagine all the people, sharing all the world.
You may say I'm a dreamer, but I'm not the only one,
I hope someday you'll join us, and the world will live as one.

கடைசி விஷயம், அவரை கொல்லச்சொன்னதாக் சொல்லப்படும் அதிபர், இப்பொழுது இருப்பவரின் மூத்தவர். அவரே தான்...

Imagine Song (Real player)
en.wikipedia.com/john_lennon
en.wikipedia.com/the_beatles

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா விமர்சனம்

Searching for Bobby Fischer



என்னைக்கவர்ந்த மற்றொரு அற்புதமான திரைப்படம், பாபி பிஷ்ஷருக்கான தேடல். (Searching for Bobby Fischer) பெரும்பாலானவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும், சில மாதங்களுக்கு முன்னர் கூட அமேரிக்காவின் வலியுறுத்தலின் பெயரால் ஜப்பானில் கைது செய்யப்பட்டு பின்னர் தற்சமயம் ஐஸ்லாந்தின் வாழும் பாபி பிஷ்ஷர், இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சதுரங்க வீரர்.(Former world chess champion & One and only American to win the FIDE World Chess Championship.) ஆனால் படம் இவரது பெயரை கொண்டிருந்தாலும் கதை இவரைப்பற்றியது இல்லை. பிஷ்ஷரைப்போலவே சிறுவயதிலேயே சதுரங்கத்தின் அத்துனை திறமைகளும் கைவரப்பெற்ற ஒரு சிறுவனைப்பற்றிய(Josh Waitzkin - Max Pomeranc) திரைப்படம் தான் இது.


பாபி பிஷ்ஷர்

ஒரு சிறுவன், அவனுடைய இணையில்லாத சதுரங்கத்திறமையை புரிந்து கொண்ட அவன் தந்தை(Fred Waitzkin - Joe Mantegna ), தன் மகனின் திறமையை புரிந்துகொண்டாலும் அது அவனுடைய வாழ்க்கையை பாதிக்குமோ என பயப்படும் அவன் அம்மா(Bonnie Waitzkin - Joan Allen), சிறுவனுடைய திறமையை சரியான வழியில் கொண்டுசெல்ல நினைக்கும் தந்தை, ஏற்பாடு செய்யும் பயிற்சியாளர்(Bruce Pandolfini - Ben Kingsley), அமேரிக்க வீதிகளில் சதுரங்கத்தின் இன்னொரு வகையான உத்தியை பயன்படுத்தி வேகமாக விளையாடும் சிறுவனின் ஆதரவாளர்(Vinnie - Laurence Fishburne). இவர்களைச் சுற்றி சூழழும் இந்தக் கதையை மிக நேர்த்தியாக வடிவமைத்திருப்பார் இயக்குநர்(written and directed by Steven Zaillian).

ஆரம்பத்தில் அந்த சிறுவனுடைய திறமையை, அவன் தந்தை நிறைய யோசித்து நகர்த்தும் ஒரு நகர்வின் பதில் நகர்வை இவன் பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டோ இல்லை அந்த அடுக்கு மாடிகுடியிருப்பின் எல்லா இடங்களிலிருந்தும் கணக்கிட்டோ சொல்லும் வடிவத்தில் வெளிக்காட்டுவதிலாகட்டும், ஒரு போட்டியின் மிக ஆரம்பக்கட்டத்தின் பொழுது அவனது போட்டியாளரின் ஒரு நகர்த்தலை வைத்து அவனிடம் "நீ தோத்துட்ட" என்று மெதுவாய் சொல்லிவிட்டு பின்னர் அந்த போட்டியாளர் முழிக்க "ஆனால் உனக்கது தெரியாது" என சொல்லவதில் ஆகட்டும், ஒரு கட்டத்தில் பயிற்சியின் பொழுது தான் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் பயிற்சியாளரின் நகர்விற்கு மெதுவாய் சதுரங்கக் கட்டங்களையும் காய்களையும் பார்த்து குழம்பி மெதுவாய் நகர்த்த அதைப் பார்த்த பயிற்சியாளர், அவனுக்கு உதவுவதாய் சொல்லிவிட்டு அத்தனை காய்களையும் கீழே தள்ளிவிட்டு இப்பொழுது சுலபமாய் இருக்குமே எனக் கேட்பதில் இருக்கும் உண்மையிலும் மிக அழகாய் படத்தைச் செதுக்கியிருப்பார் இயக்குநர்.

படத்தின் முக்கிய கட்டமே அவன் தான் தோற்றுவிடுவோமா என்ற பயத்திலேயே ஒரு பையனிடம்(Jonathan Poe - Michael Nirenberg) தோற்பதிலிருந்து சூடுபிடிக்கும். அவனுடைய அந்த காம்ப்ளக்சை மிக அழகாக படமாக்கியிருப்பார் இயக்குநர். அதே போல் அவனுக்கு பாரம்பரிய சதுரங்க முறை மட்டுமில்லாமல், பிலிட்ஸ்(Blitz) என அழைக்கப்படும் அதிவிரைவான சதுரங்க போட்டியில் இருக்கும் ஆர்வத்தால், அமேரிக்க தெருக்களில் விளையாடும் இது போன்ற நபர்களிடம் விளையாட ஆசைப்பட்டு பிறகு அவர்களிடம் கற்றுக்கொள்ளும் சில நெளிவு சுழிவுகளையும் ஆழமாக படமாக்கியிருப்பார் இயக்குநர். இடையிடையில் பாபி பிஷ்ஷரையும் குறிப்பிடுவார்கள். அதாவது அந்த சிறுவனின் பயிற்சியாளருக்கு பாபி பிஷ்ஷர் விளையாண்ட அத்துனை போட்டிகளின் நகர்த்தலும் அத்துப்பிடி என சொல்வதிலிருந்து, அடிக்கடி அந்தச் சிறுவனை பயிற்சியாளர் பாபி பிஷ்ஷருடம் ஒப்பு நோக்குவிலும் குறிப்பிடுவார்கள்.

இந்தப் படத்தின் முடிவும் ஒரு அழகான மாலை நேரத்தின் தூறல் விடும் காலத்தில் சூடாய் தேநீர் சாப்பிடுவதைப் போல அற்புதமாக இருக்கும். அந்தப் பையனைப் பார்த்தாலே தோற்றுவிடுவோமோ என்ற பயம் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு அந்த ஆண்டின் தலைசிறந்த வீரருக்கான போட்டியில் இறுதிப்போட்டியில் இருவரும் விளையாட நேரும், அந்தச் சமயத்தில் அவனுடைய இரண்டு பயிற்சியாளர்களிடமும் கற்றது எப்படி பயன்படுகிறது என தெளிவாக சொல்லியிருப்பார் இயக்குநர்.

அதாவது முதலில் அவனுடைய ஒரு தவறான நகர்த்தலால் தன் ராணியை தவற விடுவான் சிறுவன், ஆனால் கொஞ்சம் சோர்ந்த அவன், அதிவிரைவான பிலிட்ஸ் போட்டி அவன் விளையாடியிருந்த காரணத்தால் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து விளையாடுவதை காட்டுவதிலிருந்தும், இடையில் எதிராளியின் ராணியை வெட்டிவிட்டு இருவரும் சமநிலையில் இருக்கும் பொழுது அந்தப் பெண் நகர்த்தும் ஒரு நகர்த்தலால் அவன் தோற்றுவிடுவான் என இவனுக்கு முன்பே தெரிந்து கொள்வதில் இவனுடைய பயிற்சியாளரின் உதாரணத்தை பயன்படுத்துவதிலாகட்டும் மிக அற்புதமாக காட்டியிருப்பார் இயக்குநர். கடைசியில் அவன் தோற்றுவிடுவாள் எனத்தெரிந்ததும், இந்தப்போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள அவன் கேட்கும் அழகே அழகு. ஆனால் அந்தப்பெண் அதை ஒப்பாமல் விளையாடி தோற்பாள். முடிவில் அவனுடைய ஒரு நண்பனிடம் இருக்கும், தன்னிடமிருந்த அதே தோற்றுவிடுவோமென்ற காம்ப்ளெக்ஸை விரட்ட அவன் பேசுவதில் முடிப்பார் இயக்குநர்.

ஒரு அற்புதமான படம், கொஞ்சம் சென்டிமெண்ட், ஹாலிவுட் மசாலா தடவி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இதுபோன்ற ஒரு படம் தமிழில் வருமா என இந்தப்படம் பார்த்ததிலிருந்தே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

இனி இப்படியே சினிமாவை மட்டும் பேசிவிட்டு போகாமல் கொஞ்சம் ஆழமாக சதுரங்கத்தைப் பற்றி பார்ப்போம். இது அனைவருக்கும் தெரிந்த விளையாடிய ஒரு விளையாட்டு என்பதால் தற்சமயம் கணிணியில் இருக்கும் அதி நவீனமான சதுரங்க இயந்திரங்களைப்பற்றி பார்ப்போம். சின்ன சுய விளம்பரத்துடன்,

நான் லினக்ஸைப் பற்றி தெரிந்து கொண்டதும் உபயோகப்படுத்த தொடங்கியதும் சில தில்லுமுள்ளுகளை பண்ணத்தொடங்கினேன் அது, யாகூவிலோ இல்லை மற்ற இணையத்தில் கிடைக்கும் இடங்களிலோ சதுரங்கம் விளையாட நண்பர்களை அழைத்து இன்னொரு பக்கம் என் மடிக்கணிணியில் லினக்ஸில் நான், பிராஸஸரோடு விளையாடி, அடுத்த மூவை தெரிந்து பல நல்ல சதுரங்கம் விளையாடும் நண்பர்களை ஏமாற்றி வீழ்த்தியிருக்கிறேன். உங்களுக்கும் விருப்பமானால் முயற்சி செய்து பாருங்கள்.

இனி கணிணியில் சதுரங்கத்தைப்பற்றி,

முதன் முதலில் கம்ப்யூட்டர் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுமே, பிரபல பிரிட்டிஷ் கணித வல்லுநர், ஆலன் டியுரிங்(Alan Turing), அதைப் பயன்படுத்தி மனிதனை வெல்லவும் உலகவல்லுநரை வெல்லவும் சில சூத்திரங்களை கண்டுபிடித்தார். அதாவது முதன் முதலில் 1950-ல், கம்ப்யூட்டர் லாஸ் அலமோஸில் ஸயின்டிபிக் லெபாராட்டரியில்(Los Alamos Scientific Laboratory) வெளியிடப்பட்ட பொழுதிலிருந்து அதைப்பயன்படுத்தி ஆய்வாளர்கள் சதுரங்கம் விளையாட ப்ரோக்கிராம் எழுத தொடங்கிவிட்டனர்.

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக நாளொரு மேனியும் பொழுதொறு வண்ணமுமாக வளர்ந்து வந்த இந்த ஆர்ட்பிஷியல் இன்டெலிஜன்ஸின்(Artificial Intelligence) முக்கிய நோக்கமே உலக வல்லுநரை(World Champion) வீழ்த்துவதாகத்தான் இருந்தது. இந்த சதுரங்கக்கணிணியை கண்டுபிடிப்பதில் ஒரு பெரிய சமுதாயமே இறங்கியிருந்தது, பல ஆயிரம் மாணவர்களின் ஒரு குறிக்கோளாக இருந்தது இந்தத் தொழில்நுட்பமே. அந்த நாளும் வந்தது,

மே மாதம் 11ம் நாள் 1997 3.30 மணிக்கு, ஐபிஎம்மின்
டீப் புளு IBM's Deep Blue என அழைக்கப்பட்ட மல்டி மில்லியன் டாலர் இயந்திரம், அப்போதய உலக வல்லுநரான கேரி காஸ்பரோவை(Garry Kasparov)(ஒரு வழியாக) ஆறு ஆட்டங்கள் கொண்ட போட்டியில் முறியடித்து, ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் தொழில் நுட்பத்தின் பல ஆண்டு கனவை நிறைவேற்றியது. ஆனால் ஐபிஎம் அந்த முயற்சியை தொடர்ந்து செய்யாமல் அதாவது அந்த டீப் புளுவின் ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் அத்துடன் எங்கள் வேலை முடிந்தது எனக்கூறி அந்த டீப்புளுவையும் செயலிழக்க செய்துவிட்டது அதாவது தான் நிலவுக்கு சென்று திரும்பி வந்ததை வெளிப்படுத்தியைப்போல நிலவில் இருந்த பொழுது புகைப்படம் எடுத்துக்கொண்டதாக அந்த ஒரு வெற்றி.



ஆனால் இந்த முயற்சி இன்னமும் பிறரால் நடத்தப்படுகிறது, டீப்புளுவைப்போல டீப்ஜனியர், டீப் பிரிட்ஸ்(Deep Junior, Deep Fritz) வந்தாலும் கேரி காஸ்பரோவ் சொன்னது தான் நினைவில் வருகிறது, டீப்புளுவிடம் இருந்த ஒரு ஜீனியஸ்னஸ் இவற்றிடம் இல்லையென்பது, இதற்கு டீப்புளு மற்றவையைவிட 100 மடங்கு வேகமானது என்பது காரணமில்லையென்றும் கூறுகிறார் அவர். அதாவது வேகம் சதுரங்கத்தில் செய்யக்கூடியது எதுவும் இல்லை, கணித முறைகளில் எண்ணிக்கையில் அடக்கமுடியாத நகர்வுகளை தீர்மானிக்க வேண்டும் அந்த சதுரங்கக்கணிணி.

தற்சமயம் ஒரு கட்டுரையில் படித்தேன், கைவசம் இல்லாததால் சரியான தகவல் தரஇயலவில்லை, டீப்புளுவை விட வேகமாகவும், எண்ணிக்கையில் ஒப்பிடவே முடியாத எண்ணிக்கையில் அடுத்த நகர்வைப்பற்றி சிந்திக்கும் சதுரங்கக் கணிணிகள் தற்பொழுது புழக்கத்தில் உள்ளன. இந்தக் கட்டுரையை கேரி காஸ்பரோவ் சொல்லும் ஒரு கருத்துடன் முடிக்கிறேன் அதாவது, சதுரங்கமானது ஒரு அற்புதமான விளையாட்டு இதில் மனித மூளையையும் கணிணியின் திறமையையும் ஒப்பிட்டு நோக்கும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் அது.

"What makes this new era so exciting is that there are many programs using different techniques that produce distinct styles. Deep Junior is as different from Deep Fritz as Kasparov is from Karpov. Chess offers the unique opportunity to match human brains and machines. We cannot do this with mathematics or literature; chess is a fascinating cognitive crossroads."

Mr. Kasparov, the world's top-ranked chess player, in The Wall Street Journal.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In புகைப்படம்

கொஞ்சம் வயநாட் படங்கள்

Phantom Rocks

Portrait

Bird

Muthanga Wild Life Santury

Karapuzha Dam

Praveen, Vishal, Shankar and Karthik

PS: இந்தப் பதிவு டெஸ்டிங்கிற்காக.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In குலோத்துங்க சோழன் சாளுக்கிய சோழர்கள் சோழர்

இரண்டாம் குலோத்துங்க சோழன் - சாளுக்கிய சோழர்கள் - கிருமி கண்ட சோழன் - தசாவதாரம் - கல்கி - பொன்னியின் செல்வன் - ரங்கராஜ நம்பி - சைவம் - வைணவம் - ஜல்லி

முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லிடுறேன் கிருமி கண்ட சோழன் என்று ஒரு சோழன் குறிப்பிடப்படுவது வரலாற்று ஆதாரம் கிடையாது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் 'கதை'களிலும் சொல்லப்படுவது, சொல்லப்போனால் எப்படி 'கடவுளுக்கும்' அறிவியலுக்கும் எப்படி ஆகாதோ அப்படியே இந்த வகையறா 'கதைகளுக்கும்' வரலாற்றிற்கும் ஆகாது.

கல்கி பொன்னியின் செல்வனில், நந்தினி, ஆழ்வார்க்கடியான் என்ற கற்பனைக் கதாப்பாத்திரங்களைத் தவிர்த்தும், ஆதித்த கரிகாலன் விஷயத்தில் ஏகப்பட்ட கற்பனைகளைக் கலந்துகட்டி சோழர் வரலாற்றைக் கவிழ்த்திருந்தார் என்பதைச் சொல்லி அலுத்துவிட்டது. ஒவ்வொரு முறையும் கல்கியின் தீவிர ஆதரவாளர்கள் வந்து அவர்களுக்கு கல்கியை மதிக்கிறேன் அதற்காக அவர் எழுதிய வரலாற்றுத் தவறுகளை சுட்டாமல் விடமுடியாது என்று டிஸ்க்ளெய்ம்பர் போட்டும் கை வலிக்கிறது.

சரி மேட்டருக்கு, கிருமி கண்ட சோழன் என்று 'மேற்சொன்ன கதைகள்' உள்ளிட்டு எதுவும் எந்தச் சோழனையும் குறிப்பிட்டுச் சொல்வதில்லை. ஒட்டக்கூத்தரின் 'குலோத்துங்கச் சோழன் உலா' வரி 76 - 78, இன்னும் தெளிவாக உள்ள 'இராஜராஜ சோழன்(இது முதலாம் இராஜராஜ சோழன் இல்லை) உலா' வரி 64 - 66, தக்கையாகப் பரணி செய்யுள் 777 என்று வந்தாலும் இவைகள் அனைத்தும் மிகவும் குறிப்பிட்டு இரண்டாம் குலோத்துங்க சோழன் என்று கூறுவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் இந்த 'கிருமி கொண்ட சோழன்' முதலாம் குலோத்துங்க சோழன் தான் என்றே நிறைய பிற்காலக் கதைகள்(கோயிலொழுகு முதலியன) சொல்கின்றன. Life of Ramanuja என்ற எஸ்.கே. அய்யங்காரின் புத்தகம் குறிப்பிடுவதும் முதலாம் குலோத்துங்க சோழனையே. "சோழர் குடும்பம் அரசர்களாக இருந்து ஆட்சி செய்வது ஒழியட்டும்" என்று திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் பிரகடனம் செய்ததாக "திவ்யசூரி சரிதத்தில்" உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த "திவ்யசூரி சரிதமும்" "யதிராஜவைபவம்" உம் ராமானுஜர் வாழ்க்கையக் கூறும் பழைய நூல்கள்.

சாளுக்கிய சோழர்களை சோழர்களாக ஒப்புக்கொள்ளாமல் வைக்கும் பொழுது வரும் கடைசி சோழ மன்னர்களான வீர ராஜேந்திர சோழனையோ(இந்த மன்னன் இராஜகேசரி என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டவன்) இல்லை அவனுக்குப் பின் வெகு சில காலம்(சொல்லப்போனால் சில வாரங்கள்) ஆண்ட ஆதி இராஜேந்திர சோழன் தான் இந்த 'கிருமி கண்ட சோழன்' என்றும் conspiracy theoryகள் உண்டு. ஆனால் என் வழி K.A. நீலகண்ட சாஸ்திரி வழி(தனியா வழியில் போக நானென்ன ரஜினிகாந்தா!) "எந்த ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு புராணக் கதைகள் சொல்லும் விஷயங்களை நிலைநாட்டுவதற்கில்லை"(சோழர்கள் முதல் பாகம் - நீலகண்ட சாஸ்திரி - பக்கம் 404)

வரலாறோ மன்னருடைய கல்வெட்டுக்களோ இந்தக் காலத்தில் (985 - 1170) வாழ்ந்த மன்னன் கிருமி கடிச்சி(ஹிஹி) இறந்ததாகச் சொல்லவில்லை. சரி அப்படியே சைவ - வைணவர் பிரச்சனையில் 'வைரஸ்' தாக்கம் ஏற்பட்டு 'முதலாம் குலோத்துங்கனுக்கு பிற்பட்ட' காலத்தில் நடைபெற்ற பிரச்சனையில் சைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வைணவர்களை எதிர்த்து அதனால் சிவபெருமானே(!) சாபம் கொடுத்து கிருமி பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாகச் சொல்லவில்லை. ரொம்பவும் லாஜிக்கலா யோசிச்சா அந்த குறிப்பிட்ட மன்னன் 'முதலாம் இராஜராஜ சோழன்' போலவோ 'முதலாம் இராஜேந்திர சோழன்' போலவோ சைவ மன்னனாக இருந்து எல்லா சமயங்களையும்(சைவம் வைணவம் சமணம் பௌத்தம் முதலியன...) ஆதரிக்காமல், வைணவர்களை 'ஒரு காட்டு காட்டியதால்' கோபப்பட்டு புலம்பியதாகவே கொள்ள முடியும் 'கிருமி கண்ட சோழன்' என்ற பதத்தை.இதற்கும் வரலாற்றிற்கும் சம்மந்தம் இல்லை

கமலஹாசன், வைணவர்களை ஆதரித்து சைவர்களை எதிர்ப்பதற்காக 'இராமானுஜ நம்பி' என்ற பெயரில் பாவம் அவர் நாத்தீகரா இருந்தும் முயல்வதாக நிருவ முயல்வதெல்லாம் ஒன்னும் சொல்றதுக்கில்லை. அதே போல் அந்தக் காலத்தில் இருந்ததைப் போல் வைணவ-சைவ பிரச்சனை இப்பொழுது இல்லை என்று நம்ப வைக்க முயல்வதும். ஈஸ்வரோ ரக்ஷத் 'ஆண்டவன்' தான் உங்களை எல்லாம் காப்பாற்றணும். படம் 'ஹே ராமை'ப் போல கமர்ஷியல் பக்வாஸாக இல்லாமல் இருக்க எப்படி கே.எஸ்.ஆரின் உதவியை நம்பியிருக்கேனோ அதைப் போல் கமலஹாசன் படமாம 'ஹே ராம்' ஆக கமர்ஷியல் பக்வாஸாகி தேர்ந்த படமாக இருக்க வேண்டும் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.(இரண்டும் சரியா அமைஞ்சா என்னை விட சந்தோஷப்படப் போறது கமலஹாசனாத்தான் இருக்கும்!)

சைவ - வைணவ சண்டையை வலை உலகிற்கு எடுத்துட்டு வராதீங்க என்றெல்லாம் அறிவுரை வழங்கவில்லை விருப்பமுமில்லை சொல்லப்போனால் இப்படிச் சண்டைப் போட்டா கூத்தாடியா நான் தான் முதலில் நிற்பேன்.

இன்னும் விஷயம் தேவைப்பட்டால் - கிடைத்தால் வருகிறேன்.

அன்பு தோழர் ஃபெடரிக் நியீட்ஷேவைக் கொண்டு இதை முடித்து வைக்கிறேன்.

God is dead. God remains dead. And we have killed him. How shall we comfort ourselves, the murderers of all murderers? What was holiest and mightiest of all that the world has yet owned has bled to death under our knives: who will wipe this blood off us? What water is there for us to clean ourselves? What festivals of atonement, what sacred games shall we have to invent? Is not the greatness of this deed too great for us? Must we ourselves not become gods simply to appear worthy of it?

– Nietzsche, The Gay Science, Section 125, tr. Walter Kaufmann

(நியூட்டனைப்போல நியீட்ஷேவையும் கடவுள் நம்பிக்கையுள்ளவர் என்று சொல்லிவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் :))

ஆதித்த கரிகாலன்
இராஜராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
வீரராஜேந்திர சோழன்
ஆதி ராஜேந்திர சோழன்
முதலாம் குலோத்துங்க சோழன்
இரண்டாம் குலோத்துங்க சோழன்
மூன்றாம் குலோத்துங்க சோழன்
சோழர்கள்

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

Twitter, தமிழ் விக்கிபீடியா இன்ன பிற

பதிவெழுதுவதை விடவும் twitter உபயோகிப்பது சுலபமாக இருக்கிறது என்றாலும் twitter, தினப்பதிவுகளின் நீட்சியாகப் பார்க்கலாம். உலகைப் புரட்டிப்போடப்போகும் வலை உலகின் நீட்சியாக எல்லாம் இதைக் கருத முடியாது, அதனால் கடப்பாரையாக பதிவைக் கருதாத எவரும் சுலபமாக twitterராக மாறமுடியும். Javaவிற்கும் சேர்த்து API கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் விளையாடிக் கொண்டிருந்தேன். நல்லா வருது, ஆனால் கைவசம் dynamic application ஒன்று இல்லாத குறையை உணர்கிறேன். முன்பொருமுறை ப்ளாக்கர் API வைத்து பின்னூட்ட விளையாட்டு விளையாண்டது நினைவில் வருகிறது.

தீவிரமாக பதிவெழுதாமல் இருக்கும் பொழுதெல்லாம் எனக்கு தமிழ் விக்கிபீடியா நினைவிற்கு வரும், அதுபோல் தான் தற்சமயமும். ஜூலை 2006ல் தொடங்கியது என்றாலும் என்னுடைய தமிழ் விக்கி பங்களிப்பு அங்கையோடு நின்றது ஒரு சோகம் என்று தான் சொல்வேன். ஆதித்த கரிகாலன் பற்றி எழுதியது தான் முதல் கட்டுரை, விக்கிநடை பற்றி தெரியாத கணம், இன்னும் சொல்லப்போனால் என் நடையில் காதல் வர ஆரம்பித்த தருணம், வேகவேகமாகத் தட்டிப்போட்ட கட்டுரை என் நடையிலும், சிறிது எழுத்துப் பிழையுடனும் இருந்தது போலும் அதற்கு தமிழ் விக்கி மக்களிடம் இருந்து வந்த ரெஸ்பான்ஸ் என்னை ஒரு வருடம் அந்தப் பக்கம் அண்ட விடாமல் செய்தது. அது அவர்கள் தவறும் இல்லை சொல்லப்போனால் என் தவறும் இல்லை. விக்கிக்கு செய்வது/எழுதுவது என்பது 'வறட்சியான' ஒன்று.

சொல்லப்போனால் என்னைப் போன்ற ஒரு ஆள் அதனை செய்திருக்கவே முடியாது. Gone in 60 seconds படத்தில் நிக்கோலஸ் கேஜ் கடைசியில், 49 கார்களை கடத்திவிட்டு கடைசி ஒன்றையும் கொண்டு வந்து நிறுத்து, I need some appreciation என்பார் அதைப் போல் எனக்கு அந்தக் காலத்தில் தேவைப்பட்டது appreciation என்று சொல்ல முடியாது ஒரு கட்டுரைக்கு என்ன அப்ரிஷேஷன் வேண்டிக்கிடக்கு. இன்னும் சாதாரணமான மொழியில் எப்படி எழுதுவது என்று புரியும் படி சொல்லியிருக்கலாம்(ஈகோ உச்சக்கட்டத்தில் இருந்த சமயம் என்ன சொல்லியிருந்தாலும் விளங்கியிருக்காது! :)), சோழர்கள் பற்றி எழுதும் ஆவல், ஆதித்த கரிகாலன் பற்றி எழுதும் ஆவல் என்று வெறியுடன் வந்தால் அப்படி ஒரு பதில். இப்பொழுது சிரிப்பாக இருந்தாலும் அன்றைக்கு நினைத்தது அப்படித்தான். மற்றவர்களைப் பற்றித் தெரியாது எனக்கும் விக்கிநடை என்று புழக்கத்தில் இருக்கும் ஒரு விஷயத்திற்கும் பெரும் தொலைவு உண்டு.

பின்னர் எனக்கு நானே தமிழ் விக்கிபீடியா படும் அவஸ்தைகளைப் புரிந்து கொண்டு என் ஈகோவைக் கடாசிவிட்டு திரும்பவும் இறங்கிய பொழுது ஒரு வருடம் ஓடியிருந்தது. முதல் கட்டுரை 28 ஜூலை 2006, இரண்டாவது கட்டுரை 17 மே 2007. நான் மட்டுமல்ல விக்கிபீடியாவும் மாறியிருந்ததாகத் தெரிந்தது. ஏற்கனவே எழுதி இருந்த சோழர் வரலாறு பத்திகளை, கொஞ்சம் போல் விக்கிநடைக்கு மாற்றி போட ஆரம்பித்தேன். பின்னர் தொடர்ச்சியாக என்று சொல்லாவிட்டாலும் ஏதோ என்னால் ஆன, நேரம் செலவு செய்ய முடிந்த அளவிற்கு தமிழ் விக்கிக்கு எழுதினேன். சொல்லப்போனால் நானெல்லாம் இன்னும் ஒன்றும் செய்யவே ஆரம்பிக்கலை. இப்போதைக்கு சோழர்கள் பற்றி ஆங்கில விக்கிபீடியா அளவிற்கு இல்லை அதற்கும் மேல் விவரம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது.

ஆழ உழுவது என்றும் அகல உழுவது என்றும் பதிவுகளிலேயே பேச்சு உண்டு, பதிவுலகில் அகல உழுவதையே நான் தேர்ந்தெடுத்தாலும் தமிழ் விக்கியில் ஆழ உழுவதைத் தேர்ந்தெடுத்தேன். ஆங்கில விக்கிபீடியாவை நாளொன்றுக்கு இருபது இருபத்தைந்து முறைக்கு மேல் உபயோகிப்பவன் என்ற முறையில் இதை நான் செய்ய வேண்டியது என் கடமை என்றே நினைக்கிறேன். இப்போதைக்கு கொஞ்சம் "நீலகண்ட சாஸ்திரி" நடையில் வருகிறது சோழர் கட்டுரைகள் என்றாலும் ஓரளவிற்கு முடித்துவிட்டு எழுதிய எல்லாக்கட்டுரையையும் இன்னும் பொது நடைக்கு கொண்டு வரவேண்டும். ஆச்சர்யமாகயிருக்கிறது, விரும்பி ஏற்றுக் கொண்ட என் நடையை விட்டு விலகி இதைச் செய்கிறேன் எனும் பொழுது ஆனால் முன்னர் சொன்ன காரணம் தான் மீண்டும் மீண்டும் நினைவில் வருகிறது. என்னைக் கேட்டால் தமிழ் விக்கிபீடியாவிற்கு பதிவர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றே சொல்வேன்.

எடுத்துக் கொள்ள விஷயமா இல்லை, உங்களுக்கு பிடித்த புத்தகங்களைப் பற்றி எழுதலாம்(தனித்தனி புத்தகங்களாக), எழுத்தாளர்களைப் பற்றி, சினிமாக்களைப் பற்றி ஆனால் ஒரேயொரு பிரச்சனை தான் நடை பொதுவாக இருக்க வேண்டும் appreciation பதிவுலகத்தில் கிடைக்கும் அளவிற்குக் கிடைக்காது அதனால் பின்வரும் ஒரு சந்ததிக்கு விஷயம் கொடுத்தவர்களாயிருப்பீர்கள்.

சமீபத்தில் மாற்றங்கள் செய்த மூன்று கட்டுரைகள்.

இராஜராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
புதுக்கோட்டை(பாதியில் நிற்கிறது)

ஏற்கனவே mohandoss.in என்ற இணையதளம் என்னிடம் தான் இருந்தது/இருக்கிறது, அதற்கு இணைப்பு கொடுத்திருந்த ஜாவா, டேட்டாபேஸ் சப்போர்ட் வாய்ந்த என் மற்றொரு இணையதளம் மறதியில் கைவிட்டுப் போனதால் mohandoss.in ன்னும் அப்படியே நின்றது. இப்பொழுது mohandoss.com வாங்கி, blog.mohandoss.comல் செப்புப்பட்டயம் ஏற்றப்பட்டுவிட்டது. எனக்கு ப்ளாக்கர் விட்டுச் செல்ல அத்தனை ஆசையில்லை, சொல்லப்போனால் kundavai.wordpress.com நான் கொஞ்ச காலமாகவே உபயோகித்துவரும் ஒரு இணையதளம் தான் என்றாலும். ப்ளாக்கர் ஃபீவர் இன்னும் போகலை. முழுசும் சொந்தமா code எழுதி Java, J2EE, structs, springs என்று கையில் கிடைச்சதையெல்லாம் போட்டு ஒரு சொந்த இணையதளம் வைச்சிக்கணும்னு ரொம்ப ஆசை. சொல்லப்போனால் இது திரும்பவும் சக்கரம் கண்டுபிடிக்கிற கதைதான்னாலும் அப்படி ஒரு வெறி இருந்தது, இப்ப ரொம்ப கொஞ்சமா இருக்கு. :)

Adventure tourism என்று சொல்லி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் வயநாட்(கேரளா) போகலாமா என்று கேட்டிருந்தார் என் பெயர் எல்லாம் டீபால்ட்டாகவே உண்டென்றாலும் வேறு எதுவும் ப்ளான் இருக்கக்கூடாதென்பதற்கான ஒரு அப்படி ஒரு கேள்வி. யார் யார் வருவார்கள் என்று தெரிந்தாலும் டீம் முழுவதற்கும் மெயில் அனுப்பப்பட்டது. பதில் எப்பொழுதும் போலத்தான் bachelor எல்லாம் in, married எல்லாம் out. :))))) கல்யாணம் செய்துக்கிறதைப் பத்தி தீவிரமா யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

PS: தமிழ்மணத்தில் இன்னமும் புதிய பதிவின் உரல் சேர்க்கப்படாததால் பூனைக்குட்டியை எழுப்பி விட்டிருக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts