In பயணம் புகைப்படம் லதாக் பயணம்

லதாக் இயற்கை வளம்

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

IMG_8824

IMG_8812

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சிறுகதை தேன்கூடு

தேர்தல் - 2060 கணிணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்

“என்னது கருணாநிதி பிரச்சாரம் செய்கிறாரா?”

ஐம்பது ஆண்டுகள் கோமாவில் இருந்து மீண்டும் நினைவு திரும்பியுள்ள தாத்தா கேட்டது, மோகனுக்கு பெரிதும் ஆச்சர்யமளிக்கவில்லை,

“அட நீங்க வேற தாத்தா ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு சாதகமா பிரச்சாரம் பண்ணிக்கிட்டிருக்காங்க...” சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அறைக்குள் நுழைந்த பவானி, மோகனின் முதுகில் செல்லமாகத் தட்டியபடி,

“டேய் உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தாத்தாவை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு.” சொல்லிவிட்டு, பின்னர் தன் தந்தையிடம்,

“என்ன நைனா இப்ப எப்படியிருக்கு?”

“பவானி என்னடா சொல்றான் உன் பையன். கருணாநிதி, ஜெயலலிதாவெல்லாம் இன்னும் உயிரோட இருக்காங்களா?”

ஆம், சுயநினைவை இழந்தவராய் ஐம்பது வருடம் கோமாவில் இருந்தவருக்கு நடந்தவையெல்லாம் தெரிந்திருக்க நியாமில்லைதான். அவனால் கூட கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. பத்து வயது சிறுவனாக இருந்த பொழுது ஒருநாள் அவன் தந்தைக்கு ஏற்பட்ட விபத்தில் அவர்f இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு, அலறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து பார்த்தால் உயிர்மட்டும் தான் போகாமல் இருந்தது.

இன்று நினைவிற்கு வந்துவிடுவார், நாளைக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கை மாறாததைப்போல் அவருடைய நிலைமையும் சுத்தமாக மாறவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக மாறிவந்த மருத்துவ வசதிகள், மருத்துவ உலகின் சாதனைகள் அவர்களின் நம்பிக்கையை இழக்காமல் வைத்திருந்தது. அவனால் கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை நடந்தவைகளையெல்லாம் கனவு போல்தான் இருந்தது.

மத்திய ஆசியாவில் இஸ்ரேல் தொடங்கிவைத்த யுத்தம் உலகப்போராக மாறுமென்று யாருமே உத்தேசித்திருக்கவில்லைதான். இல்லவேயில்லை என்று சொன்ன நாடுகள் எல்லாம் தூக்கி ஒரேயடியாக குண்டைப் போட்டுக்கொள்ள, இந்த நாட்டுக்கு சாதகமா அவன்வர அந்த நாட்டுக்குச் சமமா இவன்வர, இன்னுமொரு உலகப்போர் உருவாகியது தான் மிச்சம். ஆனால் அனைவருக்குமே இதன் முடிவு எப்படியிருக்கும் என்று தெரிந்திருந்ததாலும் ஒன்றுமே செய்யமுடியவில்லை.

எப்படியிருந்தாலும் மொத்தமாக உலகம் அழியாமல் இருப்பதற்கு, போர் தொடங்கிய சில காலங்களில் உருவாகிய மக்கள் எழுச்சியே காரணம், மக்களுக்கு அணுஆயுதப்போரின் தீவிரம் நன்றாகத் தெரியத்தொடங்கியது. தொலை தொடர்புத்துறையின் பிரம்மாண்டமான வளர்ச்சி காரணமாக பாதிப்போரின் பொழுதே, சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்பதைப் போன்ற இயக்கங்கள் உலகம் முழுவதும் தொடங்கப்பட்டிருந்தன.

அந்தந்த நாட்டு மக்களின் பெரும் புரட்சியினை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசுகளும், அணுஆயுத நாடுகளும் போரிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருந்தன. ஆனால் அதுவரை நடந்து முடிந்திருந்த போரின் தாக்கம் பெருமளவில் இருந்தது. இதெல்லாம் நடந்தது இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டில்.

எல்லாம் முடிந்திருந்தது, ஆனால் அந்தப் போர் ஏற்படுத்தியிருந்த பாதிப்பு மாற மற்றுமொரு இருபத்தைந்தாண்டுகள் ஆனது. உலகமெங்கும், சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்ற இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. மக்களுக்கு ஆயுதம், போர் மீதிருந்த பயம் கடைசிவரை போகவேயில்லை. அறிவியல் அதன் அதிகபட்ச உச்சத்தை எட்டியிருந்தது, அதுவரை யுத்தம் தளவாடம் ஆகியவற்றில் செலவிடப்பட்டுவந்த மொத்த பணமும், அறிவியலுக்கு செலவிடப்பட, அறிவியில் உலகம் பல விந்தைகளை செயல்படுத்திக் காட்டியிருந்தது அதில் ஒன்று, தானாகவே சிந்திக்கும் கணிணிகள்.

முதலில் ஆராய்ச்சி வடிவத்தில் வரத்தொடங்கிய இந்தக் கணிணிகள் பின் பெரிய அளவில் எழுச்சி பெற்றது. அந்தச் சமயத்தில் கொண்டுவரப்பட்ட ஒன்று தான் இந்த கணிணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என்ற கோஷமும். அதுவரை அரசியல்வாதிகளைத் தெர்ந்தெடுக்க நடத்தப்பெற்ற தேர்தல்களில் முதல் முறையாக சுயமாகச் சிந்திக்கும் கணிணிகளும் போட்டியிட்டன, ஒரே ஒரு கோஷத்துடன், கணிணிக்கு ஒரு வாய்ப்பைத்தாருங்கள் என்பதுதான் அது. அந்த கணிணியை வடிவமைத்தவர்கள் சொல்லியிருந்தது மக்களை ஆச்சயர்யத்தில் ஆழ்த்தியது. மக்களுக்கான திட்டங்கள், அடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்கள் இவை அனைத்தையும் தீர்மானிக்கும் கணிணிகள் என்று பிரசாரப்படுத்தப்பட்டது.

முதல் தேர்தலில் ஒரு சில நாடுகளில் முழுவதுமாக தோல்வியடைந்த இந்த திட்டம், மிகச்சில நாடுகளில் மிகச்சில இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. பின்னர் அந்த நாடுகளின் அந்தந்த பகுதிகள் அடைந்த வெற்றிகள் மேலும் மேலும் அந்த வகையான கணிணிகளுக்கு பெயர் பெற்றுத்தர அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக பரவத்தொடங்கியது. இதற்கு முன்பே அந்த தலைமைக் கணிணியின் ஒட்டுமொத்தமான இயங்குதிறன் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டு நன்மை ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளவை என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.

ஒரு சமயத்தில் உலகத்தில் எங்கும் கணிணிகளின் கீழ் செயல்படும் அரசாங்கமே இருந்தது, ஆனால் மக்களுக்கான அத்துனை சுதந்திரங்களும் இருந்தது, தேர்தலில் ஓட்டளித்து கணிணிகளை தோல்வியடையச் செய்யவும் முடிந்திருந்தது. ஆனால் அவைகள் சுயமாக மட்டுமல்லாமல், நன்மையாக மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருந்ததால் பெரும்பாலும் அவைகள் தோல்வியடையவில்லை.

இப்படியே ஒரு பத்தாண்டுகள் கடந்தது, மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்து வந்தாலும் எதையோ ஒன்றை இழந்துவிட்டதைப்போன்ற ஒரு உணர்வு இருந்தது. ஆனால் நிச்சயமாக இதைத்தான் இழந்துவிட்டார்கள் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தலிலும் கணிணிகளை எதிர்த்து நிற்கவே ஆட்கள் இல்லாதிருந்த நிலை இப்பொழுது கொஞ்சம் மாறியிருந்தது. அந்த கணிணிகளால் சிந்திக்க முடியாத விஷயங்களை நாங்கள் செய்கிறோம் என்று கூறி இப்பொழுதெல்லாம் மக்கள் இயக்கங்கள் சிறிதளவில் ஆரம்பித்திருந்தன. ஆனால் ஆண்டாண்டுகளாக மக்கள் இதுமாதிரியான பிம்பங்களில் இருந்து பட்டிருந்ததால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்தார்கள்.

இப்படி கணிணியை எதிர்த்து எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்று நினைத்த அந்த குழுவினர் செய்த ஏற்பாடு தான் மக்களைக் கவர்ந்த வரலாற்று அரசியல்வாதிகள். நேனோ டெக்னாலஜி அதன் உச்சத்தை அடைந்திருந்தது, மாலிக்கியூளர் ரிப்பேர் முறையின் மூலமாக ஏற்கனவே இறந்து போனவர்களை அணுஅணுவாக உருவாக்கிவிடும் வல்லமையை அறிவியல் உலகம் செய்திருந்தது. அதனை பயன்படுத்தியே அந்த நவீன அரசியல்வாதிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். கணிணிக்கு எதிரான தேர்தலில் மக்கள் கழகத்தை ஆதரித்து, வழமையான தமிழில் கருணாநிதி பேச, நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஜெயலலிதா பிளந்து கட்ட, ஜெயிக்கமாட்டார்கள் என்பது நிச்சயமாகத் தெரிந்தாலும், மக்களுக்கு இது ஒரு அற்புதமான பொழுதுபோக்காக இருந்தது.

“நைனா உங்களுக்கு ஒரு டெஸ்ட் பண்ணனும் இப்ப பண்ணலாமா?” பவானி கேட்க, லேசாக முகத்தைச் சுழித்தவர்.

“இப்ப நல்லாத்தானே இருக்கேன். என்னாத்துக்கு டெஸ்ட்” அவருடைய வருத்தம் தெரிந்துதான் இருக்கிறது பவானிக்கு என்றாலும், செய்யவிருக்கும் டெஸ்டின் அருமை தெரிந்தவன் என்பதால் அதன் நன்மையை விளக்கத் தொடங்கினான்.

“அதாவது நைனா, கொஞ்சம் மேலோட்டமா சொல்றதுன்னா, நம்ம மூளையில் எல்லா விஷயமும் பதிவாகியிருக்கும், ஆனால் பதிவான அந்த விஷயங்களை நினைவு கூர்ந்து திரும்பவும் எடுப்பதென்பது கொஞ்சம் கஷ்டமான வேலை. அந்த திறமைதான் ஒவ்வொருவரிடமும் கல்விக்கான வேறுபாடுகளை உண்டாக்கியிருந்தது இல்லையா.

இப்ப அந்த பிரச்சனையில்லை, ஒரு சின்ன சிப்பை உங்கள் முளையில் வைத்துவிடுவார்கள். எல்லா உணர்ச்சிகளும், மூளைக்கு செல்லவேண்டிய எல்லாவிஷயமும் முதலில் இந்த சிப்பிற்கு செல்லும். பின்னர் அந்த சிப் உங்கள் மூளையில் நீங்கள் விரும்பிய தகவலைத் தேடித்தரும். இந்த விஷயம் வந்ததில் இருந்து, அறிவாளி முட்டாள் அப்படிங்கிற விஷயம் இல்லாமல் போய்விட்டது,

அதுமட்டுமில்லாமல் இந்த சிப் வெளியில் இருந்தும் கட்டுப்படுத்தக் கூடியதாய் இருக்கும், பப்ளிக் மெம்மரி, பிரைவேட் மெம்மரி என்று இரண்டு பாகங்கள் இருக்கும் இதில் பப்ளிக் மெம்மரியை யார் வேண்டுமானால் உபயோகப்படுத்தக் கூடியதாக இருக்கும், இதையே கூட உங்களின் விருப்பதிற்கு ஏற்றது போல் மாற்றிக் கொள்ளலாம். புதிதாய் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்பதும் கூட மிகச்சுலபமே, உங்கள் மூளையின் மெம்மரியைக் கூட உபயோகப்படுத்த வேண்டுமென்பது கிடையாது. இப்பொழுது மூளையை வாடகைக்கு விடுவதென்பது பிரபலமாக இருக்கிறது. இதற்கான சிப்களும் கிடைக்கின்றன அதாவது நீங்கள் மற்றவரின் மூளையில் உள்ள பிரைவேட் மெம்மரியை வாடகைக்கு எடுத்து விஷயத்தை போட்டு வைத்துக்கொள்ளலாம். அந்த மூளையின் சொந்தக்காரரால் கூட அந்த விஷயத்தை உபயோகப்படுத்த முடியாது ஆனால் உங்களால் முடியும்.”

ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வமில்லாமல் கேட்கத்தொடங்கிய, சீனியர் மோகன் பின்னர் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் எப்படி செயல்படுத்தப்பட்டிருக்கும் என யோசித்தவராக அந்த டெஸ்டிற்கு ஒப்புக்கொண்டார். ஏற்கனவே அவரது மூளையிலும் பொறுத்தப்பட்டிருந்தாலும் கோமாவில் இருந்ததால் அதனை உயிர்ப்பிக்க முடியாமல் இருந்து வந்ததை இப்பொழுது உயிர்ப்பித்து சோதனை நடத்த வேண்டும்.

உயிர்ப்பித்ததும், தந்தையிடம் பவானி,

“நைனா இப்ப உங்களோட பழைய மெம்மரியை எல்லாம் சிப் ரீட் பண்ணி கீ வேல்யு பேர்களா மாத்தியிருக்கும், இதுதான் இந்த சிப்பின் பியூட்டியே. இப்ப நீங்க பழைய சம்பவம் எதையாவது யோசித்துப்பாருங்கள், சீக்கிரமே நினைவில் வரும். தேதியை மட்டும் நினைத்தால் போதும்...”

ஒரு நிமிடம் கூட அவர் யோசிக்காமல் தன்னுடைய முதல் இரவைப்பற்றி யோசித்தார். அப்படியே பளிச் பளிச் என்று நினைவுகள் பிரகாசமாய்த் தெரியத்தொடங்கின,

அகிலா வந்து கட்டிலில் உட்கார்ந்ததுமே,

“ஒரு கவிதை மட்டுமே எழுதி கல்யாணம் பண்ணிக்கிட்டவர் நீங்களாத்தான் இருக்கும்” சொல்லிச்சிரிக்க அவர் எழுதிய அந்தக் கவிதை நினைவில் வந்தது, வரிகள், மடிப்புகள் எல்லாமே,

“இன்னும் படித்துக்கொண்டிருக்கும்
என் அக்காவிற்கு
நேற்றிரவு
நாய்கள் என்னைப்பார்த்தது
நக்கலடிப்பதாய்ப்பட்டது
தெரியப்போவதில்லை

உள்ளிருப்பது தெரிய
வலையவரும் பெண்கள்
என்னிரவுகள் நினைவுப்படுத்தும்
மனக்கணக்குகள்
அறிவதில்லை

கழுதையோ எருமைமாடோ
ஏதாவதொன்றை
நானாய்க்கேட்டாலொழிய
தலையில் கட்டமறுக்கும் பெற்றோர்
உணர்வதில்லை
ஜோடிகளின் நெறுக்கத்தில் புழுங்கும்
மனதின் வெம்மையை

மற்றவற்றைப் போலில்லாமல்
கட்டுடைக்கத்தூண்டும்
பனிக்காலத்தின் கிளர்ச்சிகளை
புறந்தள்ளி காத்திருக்கிறேன்
இன்னுமொறுமுறை.”

அவருக்கும் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது, சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கவிதை வரிக்குவரி அப்படியே நினைவில் வந்ததை நினைத்தவருக்கு,

அதில் வரும் கழுதையோ எருமைமாடோ என்ற பதத்தை உபயோகப்படுத்த வேண்டி வந்த சூழ்நிலையும் அதைக்காட்டி, அகிலா அவரை சீண்டியதும் நினைவில் வர, அவரையறியாமலேயே புன்னகை அவர் முகத்தில் பரவியது. அவருடையக் காலத்தில் எல்லாம் ஐம்பதாண்டு அறுபதாண்டு பழமையான கவிதைகளை நினைத்ததும் நினைவில் வருவது பெரியவிஷயம். கலைஞர் கருணாநிதியின் தனித்துவமே அதுதானே என நினைத்தவருக்கு, கலைஞர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று பேரன் சொன்னது நினைவில் வந்தது.

“பவானி, கலைஞர் இன்னும் உயிரோட இருக்காரா?”

மருத்துவரும், பவானியும் தந்தையின் முகத்தில் நொடிக்கொரு விதமாய் மாறும் பாவங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கவனத்தை கேள்வி சற்று திசை திருப்ப,

“அது ஒரு பெரிய கதை நைனா பின்னாடி சொல்றேன். இன்னிக்கு ஒரு முக்கியமான நாள், அவசர அவசரமா உங்கள் மூளையில் சிப் பொறுத்தியதற்கு காரணம் கூட அதுதான். இன்னிக்கு தேர்தல் நாள்.”

சீனியருடைய முகத்தில் தெரிந்தை வியப்பை குறித்துக் கொண்டவனாக,

“ஆனால் பழைய காலம் போல் பூத் சென்று ஓட்டு போடவேண்டுமென்பதெல்லாம் கிடையாது, உங்கள் பப்ளிக் மெம்மரியில் சரியாக பத்துமணிக்கு தேர்தல் நினைவு வரும். உங்கள் பகுதியில் நிற்பவர்களின் விவரங்கள் கூட நினைவில் வரும். பின்னர் நீங்கள் அந்த நொடி நீங்கள் மனதில் இவருக்கு ஓட்டு போடலாம் என நினைத்தால் உங்கள் ஓட்டு அவருக்கு சென்றுவிடும். இதனை சேகரிக்க மிகப்பெரிய அளவில் கணிணிகள் இருக்கிறது.” சற்று நிறுத்திய பவானி,

“இதனால் 100 சதவீத ஓட்டுகள் ஏதாவது ஒரு சாய்ஸில் வந்துவிடும், நீங்கள் அந்த நொடியில் என்ன நினைக்கிறீர்களோ அது பதிவாகிவிடும். பின்னர் அதற்கேற்றார் போல், சில நிமிடங்களில் ஒட்டுமொத்த மக்களிடம் பெற்ற வாக்குகளை கணக்கிட்டு வென்றவரை தலைமைக் கணிணி வெளிவிடும். பத்து நிமிடங்கள் அவ்வளவுதான் தேர்தல்.”

அடுத்த பத்து நிமிடங்களில் நினைவில் தேர்தல் நடந்து முடிந்துவிட, கணிணிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் அமைப்பு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, பவானியும் ஜூனியர் மோகனும் சிரித்தனர்.

“கருணாநிதி...”

பெரியவர் விடாப்பிடியாக, கேட்டுக்கொண்டேயிருந்ததால், சுருக்கமாக நானோ டெக்னாலஜியின் வெற்றியை விவரித்த பவானி, கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாலிக்யூலர் ரிப்பேர் செய்வதற்கான சொத்துக்களை விட்டுவிட்டு போனதால் இறந்த சிறிது காலத்தில் அவர்களை உயிருடன் கொண்டுவரப்பட்டதை விளக்க, பெரியவருக்கு எங்கேயோ பொறிதட்டியது,

“டேய் தம்பி, இதுவந்து நான் எழுதிய ஒரு கதை மாதிரியில்லை இருக்கு.”

சொன்னதும் தான் தாமதம், மருத்துவரும் பவானியும் கைகுலுக்கிக் கொள்ள, ஜூனியரும் சிரித்தான்,

“நைனா உங்கள் மூளையில் பொறுத்தப்பட்ட சிப் நன்றாக வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது, ஆமாம் இது உங்களுக்கு விபத்து நடப்பதற்கு முன்னர் நீங்கள் எழுதிய கதையின் சாராம்சம்தான். இதன் காரணமாகத்தான் நீங்கள் இன்றைய நவீன உலகத்தின் மிகவும் ஆச்சர்யப்படும் மனிதர்களில் ஒருவராக இருக்கிறீர்கள்.

எப்படி உங்களால் அறுபது ஆண்டுகளுக்கு பின்னால் நடக்கப்போவதை இத்தனை தூரம் சரியாய் ஊகிக்க முடிந்ததென்பதை அறிய பல விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள். ஆனால் தனிநபரின் ஒத்துழைப்பில்லாமல் அவரிடம் இருந்து இன்பர்மேஷன் வாங்குவது நவீன உலகத்தில் தவறான காரியம் ஆதலால், உங்களின் ஒத்துழைப்பிற்காக காத்திருக்கிறார்கள்.”

என்று சொன்னதும் தான் தாமதம், அவருடைய நினைவில் சில பல டாக்டர்களின் பயோடேட்டாகள் வந்து போய்க்கொண்டிருந்தன.

Read More

Share Tweet Pin It +1

21 Comments

In பயணம் புகைப்படம் லதாக் பயணம்

இன்னும் கொஞ்சம் லதாக் படங்கள்

Girl @ Leh Road

Girl @ Pang

Hiding

Proud Mother

Lovely smile

Smile

IMG_9119

Smile

Girl in Leh Market Area

Road to Leh

Road to Hanle

Hanle - Leh

Road to Leh

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

மௌனத்தில் உறைந்திருக்கும் சுயம் - Children of a lesser god



வெகு சில படங்கள் பார்த்து முடித்ததும் மனம் ஜில்லென்று ஆகிவிடுவதுண்டு, பெரும்பாலும் சந்தோஷமான முடிவுகளைக் கொண்டிருக்கும் படங்களில் தான் இந்த உணர்வு வரும். சோகமான முடிவுகளைக் கொண்டிருக்கும் அட்டகாசமான படங்கள் வெகு காலத்திற்கு மனதில் தங்கினாலும் படம் பார்த்து முடித்ததும் காற்றில் பறக்கும் உணர்வைக் கொண்டுவருவதில்லை. சமீபத்தில் பார்த்த Children of a lesser god படமும் அப்படித்தான், காற்றில் பறக்கும் அனுபவத்தைத் தந்தது. மெலோடிராமா தான் என்றாலும் இன்னும் அதன் முடிச்சுகளில் இருந்து விலகிவிடவில்லை என்பதால் ரசிக்க பறக்க முடிந்தது. பொன்னியின் செல்வனின் மணிமேகலைக்கும் வந்தியத்தேவனுக்குமான உரையாடல், பயணிகள் கவனிக்கவும்-ல் ஜார்ஜினாவிற்கும் சத்தியநாராயணாவிற்குமான உரையாடல், என் பெயர் ராமசேஷனில் வரும் ராமசேஷன் - பிரேமா, ராமசேஷன் - மாலா உரையாடல்கள் என்று உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் புத்தகத்தில் இருந்து கூட அந்த உணர்வு சில சமயங்களில் வருவதுண்டு, இதை வேண்டுமானால் pleasure of text என்று சொல்லலாம்.

Children of a lesser god திரைப்படத்தின் கதை சுலபமானது, கவிதை போன்றது. மனதைப் பற்றியதாயும் உள்ளுணர்வுகளைப் பற்றியதாயும் சுயத்தைப் பற்றியதாயும் திரைக்கதை விரிகிறது. சுயத்தை இழக்க விரும்பாத ஒரு காது கேட்க இயலாத பெண்ணைப் பற்றியதும், அந்தப் பெண் இழக்கப்போவதாய் நினைப்பது சுயமே இல்லை; அவள் இழக்கப்போவதாய் நினைக்கும் சுயத்தின் விளைவாய் அவள் வாழ்க்கைக்கான இன்னொரு சாளரம் திறக்கப்போகிறது என்றும் தீவிரமாய் நம்பும் ஒரு ஆணைப் பற்றியதுமானது இக்கதை. மொழி படத்தில் நான் இல்லாததாய் உணர்ந்தது என்னவென்று இந்தப் படம் பார்த்ததும் புரிந்து கொண்டேன். ராதாமோகனின் 'மொழி' படத்திற்கான உந்துதல் இந்தப் படத்திலிருந்து கிடைத்திருக்கும் என்றே நினைக்க வைக்கிறது இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், இல்லாமலும் இருக்கலாம். ஏகப்பட்ட ஒற்றுமைகள் இரண்டு படத்திற்கும் இடையில், அது இங்கே தேவையில்லாதது நிறுத்திக் கொள்கிறேன்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நினைத்துக் கொண்டேன், don't tell me she(heroine) can actually hear and speak என்று, கடைசியில் அது உண்மையாகி அந்தப் பெண்ணால் உண்மையிலேயே கேட்க முடியாதென்று தெரிந்த பொழுது வருத்தமாகயிருந்தது. அற்புதமான டேலண்ட், இந்தப் படத்திற்காக Marlee Matlinக்கு சிறந்த நடிகைக்கான அக்காதமி அவார்ட் கிடைத்திருக்கிறது. William Hurtற்கு சிறந்த நடிகருக்கான அக்காதமி ஏன் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் உண்டு என்றாலும் சந்தோஷமாகயிருந்தது.

ஹீரோ காதுகேளாதோர் பள்ளிக்கு, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பேசக் கற்றுத் தருவதற்காக வருகிறார். அந்தப் பள்ளியில் படித்து அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஹீரோயினை அவர் முதன் முதலில் சந்திக்கும் இடத்திலேயே அவளுடைய கோபத்தின் காரணமாய் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் ஒரு விருப்பம் வந்து விடுகிறது. ஆனால் பின்னர் ஹீரோயின் "she is one of the brightest students we ever had" என்ற அறிமுகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அந்தப் பள்ளியில் சுத்தம் செய்யும் பெண்ணாய் வேலை செய்யும் விஷயம் தெரிந்ததும் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முயலும் ஹீரோவுக்கு அவளுடைய பிரச்சனை புரியவருகிறது. அதன் பின்னர் அந்தப் பிரச்சனையை ஹீரோ எப்படித் தீர்த்து வைக்க முயல்கிறார், முடிந்ததா என்பது தான் கதை.

அந்தப் பிரச்சனை மிக முக்கியமானதாக இருப்பதுவும், ஏனோ தானோவென்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அந்தப் பிரச்சனையை அணுகாமல் இருப்பதுவும் தான் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்திருப்பதற்கான காரணங்கள். ஹீரோயினின் பிரச்சனை எல்லோரும் அவளையே 'லிப் ரீடிங்' கற்றுக் கொள்ளச் சொல்வதும், பேச முயற்சி செய்யச் சொல்வதும் தான். ஏன் மற்றவர்கள் 'Sign language' கற்றுக் கொள்ளக் கூடாது என்பது அவள் கோபம். இதில் முக்கியமான இன்னொரு பிரச்சனை ஹீரோவின் வேலையே காது கேளாத மக்களுக்குப் பேசக் கற்றுக் கொடுப்பது தான். ஹீரோவுக்கு 'Sign language' தெரியுமென்றாலும் அத்தனை வேகம் கிடையாது, ஆனால் அதை விட பெரிய பிரச்சனை ஹீரோயினை தொடர்ந்து பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது தான்.

இப்படி ஹீரோயினை பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதில் தொடங்கும் ஒன்று, பின்னர் காதலாக மாறி அவர்களை சேர்ந்து வாழும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. ஆனாலும் தொடர்ச்சியாக ஹீரோ, ஹீரோயினை பேசச் சொல்வது அவளுக்கு அவள் சுயத்தை இழப்பதைப் போன்று தோன்றுவதால் இருவரும் பிரிந்து செல்லும் நிலைக்கு ஆளாகிறார்கள். ஹீரோயினின் இளமைப் பருவத்தில் அவளுடன் பழக நினைத்த ஆண்கள் எல்லோரும் ஒரு உரையாடலை/தொடக்கத்தைக் கூட அவளிடம் செய்யாமல் நேரடியாய் உடலுறவையே நினைத்தது அவளை இன்னும் கோபத்தில் கொண்டு போய் மேலும் அவளைத் தனிமைப் படுத்தியிருப்பது ஹீரோவிற்கு புரியவருகிறது. அவளை 'அவள் எப்படி இருக்கிறாளோ' அப்படி ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதாடுவதில் இருக்கும் உண்மை ஹீரோவிற்குப் புரிந்தாலும் பேச முடியாததும், 'உதடுகளைப் படிக்க' முடியாததும் அவளைத் தனிமைப் படுத்துகிறது என்று நினைப்பதால் ஹீரோ தொடர்ச்சியாக அவளை அவள் விரும்பாததை செய்யச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான்.

கடைசியில் ஹீரோவும் சரி ஹீரோயினும் சரி தங்கள் பக்கமும் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்ததும் இருவரும் இணைய படம் சுபம்.

ஹீரோயின் மார்லி மாட்லின் இயற்கையிலேயே காது கேட்க முடியாதவர் என்பதால் அந்தக் கதாப்பாத்திரத்தோடு அருமையாக ஒன்றிப் போய்விடுகிறார், படத்தின் ஆரம்பப் பகுதி முழுவதும் கோபக்காரராக வந்துவிட்டு முகத்தை தூக்கிக் கொண்டே வந்துவிட்டு இடையில் ஒரு முறை சிரிக்கும் பொழுதுதான் தெரிகிறது எத்தனை அழகாய் இருக்கிறது அவருடைய புன்னகை என்று. எனக்கென்னமோ கையில் பூனைக் குட்டியுடன் ஹீரோவிற்காக அவர் வீட்டின் முன் காத்திருக்கும் பொழுது அவர் சிரிப்பது விகல்ப்பமில்லாமல் வந்திருப்பதாகப் படுகிறது. அழகான பெண், கோபப்படும் பொழுதும், சிரிக்கும் பொழுதும், ஒவ்வொரு முறையும் 'Sign' செய்யாமல் ஹீரோ பேச முயலும் பொழுதும் தன் தலையைத் திருப்பி அவர் உதட்டை படிக்காமல் இருக்கும் பொழுதும், உணர்ந்து செய்திருக்கிறார். காட்சிகள் மனதில் அப்படியே பதிந்து போய் விட்டது எனக்கு.

ஹீரோவாக வில்லியம் ஹர்ட், மாட்லின் போலில்லாமல் படத்திற்காக 'Sign language' கற்றுக் கொண்டிருப்பாராயிருக்கும். அவர் எப்படி இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்று ஆச்சர்யமே வருகிறது ஒவ்வொரு முறையும் அவருடைய கதாப்பாத்திரத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது. அவருக்கு எதிரில் நடிப்பவர்கள் செய்யும் 'Sign'ஐ தனக்குத் தானே சொல்லிக் கொண்டும் தன்னுடைய வசனங்களை 'Sign'உடன் பேசிக் கொண்டும் நடிப்பது பெரிய விஷயம். இது எல்லாவற்றையும் விட முக்கியமானது இப்படிச் செய்யும் பொழுது அவர் கஷ்டப்படுகிறார் என்பது போன்றோ, அவர் நடிக்கிறார் என்பது போன்றோ தெரியாமல் இருப்பது. அவருடைய நடிப்பு நிச்சயம் பாராட்டிற்குரியது. மாட்லின் உடைய கோபத்தைப் பார்த்து சிரிப்பது, அவள் சுயத்தின் மீது காரணத்தைச் சொல்லி தனிமைப் படுத்திக் கொள்ளும் பொழுது வருத்தப் படுவது, துரத்தி துரத்தி அவளைப் பேசச் சொல்வது, பின்னர் இருவரும் பிரிந்து வாழும் சமயத்தில் ஏதோ ஒன்றை இழந்ததைப் போலவே இருப்பது என தன் பங்கிற்கு படம் காண்பித்திருக்கிறார் மனிதர்.

இதைத்தவிர்த்தும் மற்ற காது கேளாத மக்களை நம்மிடையே பள்ளி மாணவர்களின் வழியாய் காண்பித்திருக்கிறார் இயக்குநர் Randa Haines, எனக்கு இந்தப் படம் பார்த்ததில் இருந்து Sing language கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகயிருக்கிறது அதை ஆசையாய் முடித்துக் கொள்ளாமல் எதுவும் சீரியஸாய் செய்யவேண்டி இந்தப் பேச்சை இங்கே முடித்துக் கொள்கிறேன்.

வசனங்கள் அத்தனையும் அருமை என்று சொல்லலாம், எல்லா வசனங்களுமே ரொம்ப 'ஷார்ப்'. Broadwayயில் நாடகமாக வந்து கொண்டிருந்ததை படமாக எடுத்ததால் அவர்களுக்கு இந்த வரம் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். நான் கதை எழுதும் பொழுதெல்லாம் மெல்லிய நகைச்சுவை இருப்பது போலவே கதை எழுதி வந்திருக்கிறேன், எனக்கு இந்த மெல்லிய நகைச்சுவையின் மீது காதல் உண்டு. ஆனால் முழுநீள நகைச்சுவையின் மீதல்ல, நான் இதுவரை முழுநீள நகைச்சுவையாய் எதுவும் எழுதிய நினைவு இல்லை. எனக்கு இந்தப் படம் பிடித்திருந்ததற்கான இன்னொரு முக்கியக் காரணம் இதன் வசனங்கள்.

கடற்கரையில் ஹீரோ, ஹீரோயினியிடம் முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு, "Hey you want to play stand up sit down again" விற்கு பதில் சொல்லாமல் ஆனால் அந்தக் கேள்வி எழுப்பிய உணர்வால் மனதால் சிரித்து அதன் எதிரொளிப்பு சிறியதாய் முகத்தில் தெரிய, ஹீரோ சொல்லும் "Ohh careful, you almost smiled"ல் கடுப்பாகி முறைக்க ஹீரோ மீண்டும் சொல்லும், "Ahh Thats the girl, Thats Sarah Norman we all know and love" வசனம் காட்சியை கேரக்ட்டரைசேஷனை சிறிய வசனங்கள் மூலம் நகைச்சுவையாகச் சொன்ன தந்திரம் பிடித்திருந்தது.

ஹோட்டலில் ஒன்றில் ஆர்டர் எடுக்க வரும் சர்வர், ஹீரோயின் ஹீரோவிடம் Sign languageல் பேசுவதைப் பார்த்து அதிசமயாகப் பார்க்க அதற்கு ஹீரோயின் சர்வர் தன்னை முட்டாளாகப் பார்க்கிறான் என்று சொல்ல, ஹீரோ "He doesnt think you stupid, he thinks you a deaf." என்று சொல்லும் பதிலில் திருப்தியடையாமல் ஹீரோயின் மீண்டும், காதுகேட்கும் மக்கள் தங்களை(காது கேளாதவர்களை) முட்டாளாகப் பார்க்கிறார்கள் என்று சொல்ல, ஹீரோ சொல்லும், "Only stupid hearing people thinks that deaf people are stupid" என்ற பதிலில் ஹீரோயின் கண்களில் தெரியும் நன்றியுணர்ச்சி ஒரு கவிதை. எனக்குத் தெரிந்து அவளுக்கான காதல் இங்கே தொடங்குவதாகத்தான் நான் நினைக்கிறேன்.

ஹீரோயின் தான் டான்ஸ் ஆட விரும்புவதாகச் சொல்லும் காட்சியில், ஹீரோ கேட்கும், "Can you feel it?"ற்கான பதிலாய் ஹீரோயின் முகத்தை அசைத்து ஆமென்று சொல்லிவிட்டு சைகையில் "vibrations..." "...through my nose" என்று சொல்லி ஹீரோவை நக்கல் செய்வது.

ஹீரோவை டான்ஸ் ஆட அழைத்துச் சென்றுவிட்டு அவள் மற்றும் கண்ணை மூடிக்கொண்டு தனியாக ஆடிக் கொண்டிருக்க ஹீரோ அவள் நகர்தலில் மயங்கி நின்று கொண்டிருக்க, அவள் தனியாய் ஆடும் சூழ்நிலையை ஒப்பு/ஏற்றுக் கொள்ளும் அந்தப் பாடல் முடிந்து ஜோடியாய் ஆடும் பாடல் வந்ததும்; அதிர்வு இல்லாததால் கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு எல்லோரும் ஜோடியாய் ஆடத் தொடங்கியதை அறிந்து கொண்டு ஹீரோவைப் பார்க்கும் பொழுது ஹீரோ முகத்தில் 'இப்ப என்ன செய்வ' என்பதைப் போன்ற உணர்ச்சி ஒரு ஹைக்கூ கவிதை.

தொடர்ச்சியாய் அறை ஒன்றில் ஹீரோயின் ஹீரோவிடம் தான் ஏன் பேசவிரும்பவில்லை என்பதற்கு தன்னுடன் படுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன் பின்னால் அலைந்த பையன்கள் பற்றியும் அவர்கள் ஒரு கோக் வாங்கிக் கொடுத்து தன்னுடன் பேசவிரும்பாமல் தன்னுடன் படுப்பதையே குறியாக வைத்திருந்ததைச் சொல்லிவிட்டு தன்னைப் பற்றி ஹீரோவும் அப்படித்தான் நினைப்பதாகச் சொல்லி அவனைக் கோபப்படுத்தும் காட்சி ரொம்பவும் இறுக்கமானது அதன் வசனங்களும் அப்படியே.

ஹீரோயினை தன் வீட்டிற்கு அழைக்கும் காட்சியில் ஹீரோ கேட்கும் உனக்கு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, நீ என்றும் குழந்தைகள் என்றும் சொல்லிவிட்டு பின்னர் காது கேளாத குழந்தைகள் என்று சொல்ல ஹீரோ, நான் எனக்கு காதுகேளாத குழந்தை வேண்டும் என்று சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்துவிட்டு ஆனால் அப்படி இருந்தால் அதில் எனக்கு வருத்தமில்லை என்று சொல்லும் வசனம்.

தனக்காய் ஹீரோ பேசுவது பிடிக்காமல் சண்டை போட ஆரம்பிக்கும் ஹீரோயின், தன்னை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்ற நினைப்பதும் தனக்காய் பேச ஆரம்பிப்பதும் பிரச்சனையாய் மாறுவதைச் சொல்லிவிட்டு.

"Until you let me being an I where you are, you can never come inside my silence and know me and I wont let myself know you. Until that time we cant be like joined."

என்ற வசனத்தோடு இந்த வசனக் கதையை விட்டுவிடுகிறேன். இந்தப் படத்தை நான் இஞ்ச் பை இஞ்ச் ஆக ரசித்துப் பார்த்ததன் விளைவு என்னால் எதையுமே விடமுடியவில்லை. கடைசியில் அந்த மௌனத்தை உடைத்துக் கொண்டு அதில் உறைந்திருந்த சுயத்தை ஹீரோ எப்படி உணர்ந்தான் என்பது தான் Children of a lesser god படத்தின் கதை. அற்புதமான படம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்று கூட சொல்லலாம்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

Popular Posts