In ரமேஷ் - பிரேம்

கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும்

எழுத்து என்பது ஒரு வகையில் குற்றச்செயலாக உள்ளது. தான் எழுதும் பகுக்கும் பிரச்சனை நிகழ்வில் உள்ள பொழுது அதைச் சொல்லாடலாக அறிவதன் மூலமும் அதைப் பற்றிய சொல்லாடலை ஆய்வதன் மூலமும் அதற்கப்பாலான ஒரு வெளியை உற்பத்தி செய்து அதற்குள் அதன் சுதந்திரத்தையும் அதன் மூலம் ஒரு அதிகாரத்தையும் செயல்படுத்துகிறது. எழுதும் தன்னிலை இந்த இடத்தில் தப்பிக்கும் தன்னிலையாகவும் எழுதப்படும் தன்னிலைகளுக்கு எதிரான குற்றத்தை நிகழ்த்துவதாகவும் உள்ளது பிரதிநிதித்துவ சொல்லாடல்களைக் கொண்ட பிரதிகள் இந்த இடத்தில் மிகப்பெரும் வன்முறையாக உள்ளது.

குற்றவியல் என்பது சமூகக் கட்டமைப்பின் மிக மையமான கூறாக இருக்கும் நிலையில் எழுதுதல் என்பது தனது குற்றச்செயலைப்பற்றிய மறு சொல்லாடலை உற்பத்தி செய்வதன் மூலம் குற்றம் மற்றும் அதிகாரம் பற்றிய ஒரு விளக்க நிகழ்த்துதலைச் செய்து, மறு தளத்தில் வாசிப்பு என்பதை அதன் எதிர்வாக மாற்றும் சாத்தியங்களையும் உள்ளடக்கி உள்ளது.

எந்த பொருளும் ஏதோ ஒரு அர்த்தத்தை அடைவதற்காக உள்ளது என்பது கருத்தியலின் அதிகபட்ச வன்முறையாகும். வாழ்க்கை அர்த்தம் சாராம்சம் என்ற அனைத்தும் சூன்யத்தைப் போல் எல்லையற்றதும் எல்லையின்மை போல் சூன்யமுமாகவே உள்ளன.

மொழியின் மூலமாக மட்டுமே கட்டப்பட்ட, சமூகவெளிக்குள் செயல்படும் அனைத்தும் மொழிபுகளாக உள்ளன, இதில் உண்மை பொய்மை என்ற எதிர்மைகள் ஒரே பொருளின் இரண்டு பரிமாணங்கள். பரிமாணங்கள் பெருகிவிட்ட நம் காலத்தில் உண்மை என்பது இனி பொய்மையான ஒன்றே.

இவைகள் ரமேஷ் பிரேமின் இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள் என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள். எனக்கு பெரும்பாலும் இவர்களின் எழுத்துக்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கிடைக்கவில்லை. ஆனாலும் எனி இந்தியனால் புனேவில் இறக்கி படித்த பொழுது. எனக்காய் தோன்றியது ஒரு நல்ல அறிமுகம். பின்னர் கஷ்டப்பட்டு படித்து புரிந்துகொள்ளத் தொடங்கினேன், மனுஷ்ய புத்திரனால் காலச்சுவட்டின் பதிப்பகத்திற்கு பரிந்துரைக்கப் படமுடியாதவையாக இந்த நாவல்கள் இருந்தன என்னும் முன்னுரையும். தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமார் இந்த புத்தகத்துடன்(இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நாவல்களுடன்) தன்னால் உறவுகொள்ள முடியவில்லை என்று சொல்லி திருப்பியனுப்பப்பட்டவை என்பதையும் படித்தபின் அப்படியென்னத்தான் எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்க படிக்கத் தொடங்கினேன் முதலில்.

சாருவும், தி.கண்ணனும் கூட இந்த நாவல்களை புத்தகவடிவமாக்க நினைத்தார்கள் என்றும் படித்தேன். பின்னர் புரிந்தது சாரு ஏன் இதனை 'ஆய்வி'ற்கும், 'ங்' ற்கும் பரிந்துரைத்து தோல்வியடைந்தார் என்பது.

"பின்நவீனத்துவம், இன்று தமிழிலக்கியப் போக்கில் ஏற்பட்டிருக்கும் தவிர்க்கமுடியாத வளர்ச்சி, இவ்வித வளர்ச்சிக்கு முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர்கள் ரமேஷ்-பிரேம். இவர்கள் இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கை அலசி ஆராய்ந்து சரியான பாதையில் தமிழிலக்கியம் வளர தங்கள் பங்களிப்பை அளித்து வருபவர்கள். இன்று ஏற்பட்டிருக்கும் பின்நவீனத்துவ படைப்பிலக்கியத்தின் தேவையை இக்குறுநாவல்களின் தொகுதி மூலமாக பூர்த்தி செய்கிறார்கள்". என்ற புதுப்புனல் குறிப்புடன் வெளிவந்திருக்கும் இந்த "கனவில் பெய்த மழைக்குறிப்பைப் பற்றிய இசைக் குறிப்புகள்" புத்தகம் சொல்லப்போனால் என் படிப்புலக வரலாற்றில் ஒரு பகுதியாகப் பார்க்கிறேன்.

புரியாமல் எழுதுவது பின் நவீனத்துவம் என்றும் இல்லாவிட்டால் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் எழுதுவது தான் பின் நவீனத்துவம் என்று சொல்பவர்களுக்கான பதில் என்னிடம் கிடையாது.

பிரச்சனைகளைப் பற்றி ப்ளாக்குகளின் நடக்கும் பலவிவாதங்களை பார்த்திருக்கிறேன், அதைப் பற்றி நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்தவைகளை ரமேஷ்-பிரேமின் இந்த வார்த்தைகளின் பின்னால் நான் உணர்ந்தேன். என் சாப்ட்வேர் வாழ்வில் அடிக்கடி இந்த வார்த்தைப் பிரயோகங்கள் உபயோகப்படுத்தப்ப்டும். "Why you are trying to invend the wheel once again." அதே போல் என் எண்ணத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள் கிடைத்த பிறகும் அதை உற்பத்தி செய்ய மனம்வராததால் இப்படி.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா த்ரிஷா மாமி ஜொள்ளு

சர்வம்

சர்வம் படத்திற்குச் சென்றிருந்தேன், விஷ்ணுவர்த்தன் ஆர்யா என்பதற்காக மட்டுமல்ல த்ரிஷா மாமிக்காகவும் தான். மற்றவர்கள் ஏமாற்றினார்களா மாற்றவில்லையா என்பதைத் தவிர்த்து த்ரிஷா மாமி ஏமாற்றவில்லை என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்ள முடியும். அவர் அணிந்திருக்கும் ஆடைகள் அனைத்தும் அற்புதமாக இருக்கிறது, நல்ல செலக்ஷன். ஆனாலும் கூட வாரணம் ஆயிரம் ஷமீரா ரெட்டி தான் பர்ஸ்ட், அடுத்த இடத்திற்கு வேண்டுமானால் மாமியை வைத்துக் கொள்ளலாம். எனக்கு கல்யாணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி காதோரம் கசிந்தது, ஆனாலும் ஜொள்விடும் புத்தி போகவில்லை, கல்யாணத்திற்குப் பிறகும் போகாதென்றே நினைக்கிறேன். சரி ஜொள்ளு விடுவதைத் தவிர்த்துவிட்டு படத்திற்கு வருகிறேன்.



விஷ்ணுவர்த்தனிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவருடைய வெற்றியே இதில் தான் இருக்கிறதென்பேன். வித்தியாசமான கதை, பில்லாவிற்குப் பிறகு இப்படி ஒரு படம். எப்பொழுதும் சொல்வது தான் என்றாலும் இன்னொரு முறை, பாடல்களை வெட்டிவிட்டு இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் இன்னமும் நன்றாக வந்திருக்கக் கூடிய படம். இப்படி ஒரு படத்தை எடுக்கத் துணிந்ததற்காகவே விஷ்ணுவர்த்தனைப் பாராட்டலாம், இடைவேளைக்கு முன்னால் த்ரிஷா மாமி போன்ற ஹீரோயினைக் கொல்ல எத்தனை இயக்குநர்களுக்கு மனம் வரும். த்ரிஷா பெயர் போட்டதும் தியேட்டரில் ஏக விசில், கவனிக்க நான் பார்த்தது ஃபோரம் தியேட்டரில் ஆடிட்டோரியம் ஒன்றில். இன்றைக்கு ஹவுஸ்புல் தான். தைரியம் தான் இயக்குநருக்கு. இடைவேளைக்குப் பிறகு கற்பனை, பாடல் என்று கொஞ்சம் இடைச்செறுகளாக, த்ரிஷாவை நுழைத்தாலுமே கூட.

விபத்தென்பது எப்பொழுதும் கொஞ்சம் வருத்தம் வேதனையை அதிகம் கொடுக்கக்கூடியதுதான், படம் பார்த்ததும் சட்டென்று மனதிற்கு வரும் 21 க்ராம்ஸ் ஆகட்டும் அமோரஸ் பெர்ரோஸ் ஆகட்டும் விபத்தை மையமாக வைத்து ஆகக்கோர்த்த கதை தான், அமோரஸ் பெர்ரோஸில் தான் ஆசை ஆசையாய் வளர்த்த அத்தனை நாய்களையும் பாவம் என்று சொல்லி அழைத்து வந்த நாய் கடித்துவிட்டதை உணரும் இடம் அற்புதமான பொழுது. எத்தனையோ நாள் எத்தனையோ தடவைகள் நாய் ஒன்றைப் பார்க்கும் பொழுதோ இல்லை நாம் பெரிய சொத்தென்று நினைத்து வந்த ஒன்று இல்லாமல் போன பொழுது மனதைத் தேற்றிக் கொள்ள அந்தப் படத்தை நினைத்துப் பார்த்திருக்கிறேன். படத்தின் கதை புரிந்துவிட்டது என்று நான் நினைத்த நான்கு தடவைகளுமே தவறாகவே முடிந்தது. நல்ல திறமை இயக்குநருக்கு.

சக்கரவர்த்தியா அது என்னவோ போங்க, ப்ர்த்திவிராஜின் அண்ணன் என்று கொஞ்சமே கொஞ்சம் ஆட்கள். தங்கள் பார்ட்டை நன்றாகச் செய்திருக்கிறார்கள், சக்கரவர்த்தி ஒரு ரவுண்ட் வருவாராயிருக்கும் வில்லான நடிக்க விருப்பப்பட்டால் தமிழில். பார்க்கலாம்.

ஆர்யாவிற்கு நான் கடவுளிற்கு பிறகு வரும் படம், நிறைய ஸ்கோப் இருக்கிற படம். கொஞ்சமாய்ச் செய்திருக்கிறார். எத்தனைப் பேருக்கு இடைவேளைக்கு முன் அழகான காதலியை இழக்கும் வாய்ப்பு கிடைக்கும். ம்ம்ம் இன்னும் நன்றாய்ச் செய்திருக்கலாம். அலட்டலில்லாமல், நடிக்கிறேன் பார் என்கிற திமிரில்லாமல் நடிக்கக்கூடியவர் என்றே நினைத்து வந்திருக்கிறேன் ஆர்யாவைப் பற்றி. இந்தப் படமும் அதற்கு இன்னொரு உதாரணம்.

எக்ஸாக்டா நாம் விரும்பும் ஒரு அழகான டம்ப் ஹீரோயினாக த்ரிஷா, கேரக்டர் படி, என்ன தான் டாக்டராயிருந்தாலும் சட்டென்று காதலில் விழுகிறார். முன்பே சொன்னது போல் டாக்டர்களுக்கான காஷ்ட்யூம் போட்ட வலம் வர வைக்க நிறைய யோசித்திருக்கிறார்கள், ஆடைகளில் வித்தியாசம் தெரிகிறது. மேக்கப் முழுவதும் அப்பிக் கொண்டு ஆடும் 'ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா' வை விடவும் கொஞ்சம் மேக்கப்பில் அழகாகவே இருக்கிறார். மாமியைப் பார்க்கும் பொழுது ஆர்யாவிற்கு மட்டுமல்ல நமக்கும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன . என்ன செய்ய வயசும் காலமும் அப்படி, என்னமோ போங்க மனசை விட்டே போக மாட்டேங்குறாங்க. த்ரிஷாவைப் போல் பொண்ணு பாருன்னு சொன்னா செருப்படி விழும் முன்னமே கொஞ்சம் கலரா பாருங்கன்னு சொன்னா நீ என்னா கலரு உனக்கேத்த மாதிரி தான் பார்க்க முடியும்னு முகத்திலடித்த அனுபவம் வேறு.

படத்தின் உண்மையான ஹீரோ நீரவ் ஷா தான், செக்ஸி period. அவ்வளவுதான், மனுஷன் அனுபவித்து செய்கிறார். நல்லாயிருக்குது சார். இதில் படம் இடைவேளைக்குப் பின் மூணாறுக்கு போய்விடுகிறது. கேட்கணுமா தலைவர் படம் காண்பிக்கிறார், ஒவ்வொரு காட்சியும் செதுக்கியிருக்கிறார். எங்கடா சில்லவுடைக் காணோம் என்று தேடிக் கொண்டிருந்தேன் ஒரு பாட்டில் அழகாக உபயோகப்படுத்தியிருந்தார். ஆர்யாவும் அந்த குட்டீஸும் ரஹ்மான் இளையராஜாவைப் பற்றி சண்டை போட்டுக் கொள்ளும் பொழுது சட்டென்றூ புருனோ நினைவு வந்தது. இரண்டு முறை வழுவாய் தலையை ஆட்டி அந்த எண்ணத்திலிருந்து வெளியில் வந்தேன். பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. படத்தில் பறவைகளை உபயோகப்படுத்தியிருக்கும் விதம் வித்தியாசமாக நன்றாக இருந்தது, எனக்கு திரைப்படங்களில் பறவை என்று சொன்னால் சட்டென்று நினைவுக்கு வருவது மிஷன் இம்பாஸிபிள் இரண்டில் டாம் க்ரூஸ் க்ளைமாக்ஸில் வேகமாக வரும் பொழுது சட்டென்று பறக்கும் புறாக்கள் நினைவு தான் வரும். இனி ஆர்யா மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கும் பொழுது பறந்து வந்து உட்காரும் காட்சி நினைவுக்கு வரலாம்.

அந்த நாயைப் பார்த்தால் இயல்பாய் வரவேண்டிய பயம் எனக்கு வரவில்லை காரணம் நாய் ஒன்றை அருகில் இருந்து வளர்த்த காரணமாய் தான் இருக்கணும். எவ்வளவு குரைத்தாலும் ச்ச புள்ளைய இப்படி குரைக்க விடுறானுங்களே பாவின்னு தான் நினைக்கத் தோணுது. ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால் தர அளவில் மத்திய அளவுக்கான படம் தான், ஆனால் நீரவ் ஷாவிற்காகவோ இல்லை த்ரிஷா மாமிக்காகவோ நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சிறுகதை

மைதிலி

"டேய் மைதிலிக்கு கல்யாணமாம்டா. உனக்குத்தான் மொதப்பத்திரக்கை வச்சிரிக்கா ஒழுங்கு மரியாதையா வந்து சேரு... அவளைக் கல்யாணம் தான் பண்ணிக்க மாட்டேன்னுட்ட, கல்யாணத்தை பார்க்கிறதுக்காகவாவது வந்துசேரு."

அம்மாவிற்கு பச்சை, மஞ்சள், சிகப்பு என்ற மூன்று விஷயங்களில் அடங்கிவிடும், என்னுடைய வேலையின் தீவிரம் புரிந்ததில்லை, உங்கக்காவிற்கு மாப்பிள்ளை பாத்திருக்கோம் வந்து சேரு, சித்திக்கு உடம்புக்கு சரியில்லையாம் வந்து சேரு, அவ்வளவுதான் அமேரிக்காவிலிருந்து நான் கிளம்பிவிட வேண்டும், பணம் என்பது இரண்டாவது பிரச்சனைதான். நான் அங்கில்லாத இரண்டொரு நாட்களில், பச்சையிலிருந்து மஞ்சளுக்கு தாவி, சில நாட்களில் சிகப்பில் படுத்துக்கொள்ளும் ப்ரொஜக்ட் தான் முதல் பிரச்சனை. இந்த முறை எக்காரணமாக இருந்தாலும் வந்துவிடுவேன் என்று அம்மாவிற்கு தெரிந்திருக்கும், ஆனாலும் உறுதி செய்து கொள்வதற்காகத்தான் சொல்லியிருப்பார்கள்.

மைதிலி இந்தப் பெயரை நினைக்கும் பொழுதெல்லாம் மனதிற்கு இயல்பாய் ஒரு மரியாதை வந்துவிடும். சாமி, பூதம், ஹிப்னாட்டிஸம், மனசைப் படிக்கிறது இதிலெல்லாம் எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கையிருந்ததில்லை. ஆனால் மைதிலியுடன் பழக ஆரம்பித்ததில் இருந்து இப்படிக்கூட ஒருவரால் மற்றவருடைய மனதை புரிந்து கொள்ள முடியுமா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

"டேய் அதோ வர்றாளே அந்த பச்சக் கலர் சுகிதார் அவக்கிட்ட போய் ஐ லவ் யூன்னு சொல்லுடா." ரேகிங் செய்வதாக சொல்லிக்கொண்டு சீனியர் ஸ்டுடண்ட் இப்படி செய்யச் சொன்னதும் திரும்பிப்பார்த்தவனுக்கு அங்கே வந்து கொண்டிருந்த பச்சைக் கலர் சுகிதாரைப் பார்த்தால் பரிதாபமாகவும் வேதனையாகவும் இருந்தது. இன்னும் நான்காண்டுகள் இந்தக் கல்லூரியில் குப்பைக் கொட்ட வேண்டுமே என நினைத்தவனாய், பச்சையிடம் பச்சையாகச் சொல்லப் போக கொஞ்சமும் முகம் சுழிக்காதவளாய் என்னைச் சட்டை செய்யாமல் விலகிப்போனது முதலில் ஆச்சர்யப்படுத்தியது என்றாலும் பின்னர் அவளைப் பற்றி கொஞ்சம் தெரிந்ததுமே, அவளுடைய மனம் கணக்குப்போடும் வேகத்திற்கு அன்றைக்கு நான் என் சீனியர்களிடம் இருந்து அரக்க பறக்க வேகமாய் வந்தது, முகத்தில் மறைக்க நினைத்தாலும் முடியாமல் பெருகிவந்து கொண்டிருந்த வியர்வை, அதுவரை பார்த்திராத ஒரு பெண்ணிடம் ஐ லவ் யூ சொன்னது இதையெல்லாம் வைத்து பிண்ணனியை அவள் ஊகித்திருக்காவிட்டால் தான் தவறு.

ரோட்டில் டுவீலர் ஓட்டும் சமயங்களில் எப்பொழுதுமே லைட்டை High Beam போடாமலிருக்கும் நான் சில சமயத்தில் மட்டும் போட்டு, பார்க்கும் அளவிற்கு சாதாரணமானவன் தான். திரிஷாவின் பிட்டு படம் வெளியாகியிருந்த சமயத்தில் அது திரிஷாவா இல்லையா என்பதைப்பற்றி பிஎச்டி செய்யும் அளவிற்கு ஆராய்ந்து விஷயத்தை சேகரித்து வைத்திருந்தவன். இதிலெல்லாம் தவறில்லை தான், ஆனால் இதையெல்லாம் வைத்துக் கொண்டும் நான் அசாதாரணமானவன் என்று நினைத்துக் கொண்டிருந்ததைத் தான் போட்டு உடைத்தாள் மைதிலி.

நான் ஆங்கிலத்தில் ஜீரோவாக இருந்து வந்ததற்கு பெரும்பாலும் சொல்லும் காரணம் தமிழில் ஹீரோ என்பது, அதையும் போட்டுடைத்தாள் ஒருநாள், ரேகிங் தந்த உரிமையிலும் சாரி சொல்லும் சாக்கிலும் சென்ற என்னிடம் மிகச்சாதாரணமாக பேசத் தொடங்க, நான் என்னைப் பற்றி பெருமை பீற்றத் தொடங்கினேன், டிஸ்டிரிக்ட் பர்ஸ்ட், எல்லாவற்றிற்கும் வைரமுத்துவின் சிலவரிகளை எடுத்துவிடும் சாகஸம், ல, ள, ழ வில் காட்டும் வித்தியாசம், எல்லாவற்றையும் சிறிய புன்சிரிப்புடன் புறக்கணித்தவள். தமிழ் இலக்கியத்தைப் பற்றிக் கேட்க நான், சுஜாதாவையும் பாலாவையும் பொன்னியின் செல்வனையும் வைரமுத்துவையும் பற்றிச் சொல்ல, புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது.

"அப்போ சுஜாதா எழுதறதெல்லாம் இலக்கியமே கிடையாதுங்கிறீங்களா?" என்று கேட்டு வந்த என்னை "ஏன் மைதிலி சுஜாதா இப்படியெல்லாம் எழுத மாட்டேங்கிறார்." என்று கேட்க வைத்தில் இருந்த சாமர்த்தியம் அத்துனையும் மைதிலியுடையதே, இந்த விஷயத்தை சாதாரணமாக தமிழ் இலக்கியத்தின் தடம் அறிந்த யாருமே செய்திருக்க முடியும் ஆனால் மைதிலியின் சிறப்பே, இதுபோல் நான் தமிழிலும் தெரிந்து கொண்டது மிகச்சாதாரணமானதே எனத்தெரிந்ததும் எனக்குள் வந்த தாழ்வுமனப்பான்மையை வந்த இடம் தெரியாமல் ஆக்கமுடிந்ததுதான். இது ஒரு பக்கமாகவே இருந்துவிடாமல் அவளைப்பற்றிய என் கருத்துக்களை மறைக்காமல் சொல்லும் உரிமையும் இருந்தது.

"மைதிலி இனிமேல் நீ என் கூட டுவீலரில் வரவேண்டாம்."

நான் சொன்ன இந்த விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டே நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொண்டிருந்தாலும்,

"ஏன்?" என்று அவள் சிரித்துக்கொண்டே கேட்டது, நான் சொல்லவருவதை என் வாயால் கேட்கும்

"இல்லை எங்கே மேல பட்டுடுமோன்னு வண்டியின் பின்னாடி உட்கார்ந்திருக்கிறதும், சில நேரம் பட்டுவிடக்கூடிய சமயங்களில் முதுகில் கையை வைத்து தடுத்துற்றதும் கஷ்டமாயிருக்கு, நான் ஒன்னும் அவ்வளவு நல்ல பிள்ளைக் கிடையாதுதான் அதைப்பத்தி ஒன்னும் பேசவேண்டாம், இது சரியா படலை. நான் என்னமோ தப்பு செய்ற மாதிரி ஒரு ப்லீங் வருது தெரியுமா?"

பலமாகச் சிரித்தவள்,

"தெரியும் நீ இதைப் பத்தி பேசுவேன்னு நிச்சயமாத் தெரியும். என்னத்தைச் சொல்லச் சொல்ற, எனக்கென்னமோ உரசிக்கிட்டுப் போறது பிடிக்காதுன்னு வைச்சிக்கோயேன், நீ மட்டுமில்லை, கல்யாணம் ஆனதுக்குப்பிறகு என் புருஷன் கூட போனாலும் இப்படித்தான் போவேன். அதுமட்டும் நிச்சயம்."

சொல்லிவிட்டு நிறுத்தியவள்,

"அப்படியில்லாட்டி இப்படி வைச்சுக்கோயேன், வண்டியிலப் போறப்ப எங்கப் பட்டுற்ற மாதிரி இருந்தா, சின்னப் பையனாச்சே எதாவது கனாக் கண்டுக்கிட்டே வண்டியைக் குடை சாச்சிடுவான்னு பயப்படுறனோ என்னவோ?" கேட்டுவிட்டு பலமாகச் சிரித்தாள், நான் மெதுவாக,

"அப்படியே பட்டுட்டாலும்..." சொல்ல,

நான் எதைச் சொல்ல வர்றேன்னு தெரிந்ததால் அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டாள். இதே போன்றதொரு உரையாடல் இதற்கு முன்பொறுமுறை வந்திருக்கிறது,

"ஏய் உன் ப்ரண்ட்ஸ் எல்லாம் என்னைப் பத்தி தப்பா பேசுறாங்க."

"என்ன பேசுறாங்க."

"அயர்ன் பாக்ஸ் அப்படின்னு..."

நான் உண்மையில் மைதிலி என்னிடம் இதைப்பற்றிய பேச்சை எடுக்க மாட்டாள் என்றே நினைத்தேன், பல சமயங்களில் எங்கள் பேச்சு பல தளங்களில் பரவியிருக்கும் நேரங்களில் கூட தவறான திசையில் செல்ல ஆரம்பிக்கும் பொழுது சில நேரங்களில் முதலில் முற்றுப்புள்ளி வைப்பவள் மைதிலியாகத்தான் இருக்கும். அதெல்லாம் கொஞ்ச காலம் நாங்கள் பழக ஆரம்பித்த கொஞ்ச காலம் வரைதான் பின்னர் சிறிது பழக்கமான பிறகு, அதெல்லாம் போய் இருந்தது, நான் அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டு,

"என்னை என்ன பண்ணச் சொல்ற மைதிலி, பசங்கக் கிட்ட அப்படி பேசாதீங்கடான்னு சொல்லவா, இல்லை அவங்க ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணச் சொல்றியா இது இரண்டுமே என்னால முடியாதுன்னு உனக்குத் தெரியும். எல்லாரும் என்னை மாதிரி நல்லவங்களா இருப்பாங்கன்னு நீ எப்படி மைதிலி நினைக்கலாம். மற்றபடிக்கு நான் அதை எப்பவுமே ஒரு இஷ்யுவா பார்க்கலை..." என்று பிம்பத்தை உருவாக்க நினைத்து என்னென்னவோ பிதற்ற, கன்னத்தில் இடித்தவள்.

"ரொம்பத்தான், அப்ப அவங்க மேலெல்லாம் தப்பேயில்லேங்கிறியா?"

இதுபோல் பலசமயம் அவள் என்னிடம் கேட்ட விடையில்லா கேள்விகளுக்கு கஷ்டப்பட்டு விடைதர என்றுமே நினைத்ததில்லை, அப்படித்தான் கல்லூரியின் கடைசி வருடத்தில் ஒரு நாள் அவள் கேட்ட அந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தேன்.

"ஏண்டா உங்கம்மாக்கிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டியாமே, மோகனா அக்கா சொன்னாங்க." நான் பதிலே சொல்லவில்லை. ஆனால் எங்கம்மாவிடம் நான் சொன்ன விளக்கம் அவள் காதிற்கு வந்திருக்கும் என்று தெரியும் எனக்கு,

சாதாரணமாக பின்னால் சுற்றிக் கொண்டிருந்த பெண்களைப்பற்றியே அம்மாவிடம் சொல்லிய எனக்கு மைதிலியைப் பற்றி வீட்டில் சொல்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. அம்மாவிற்கும் மைதிலியை பிடித்திருந்தது, ஆரம்பத்திலிருந்தே என்னைப் பற்றிய பெரும்பாலான முடிவுகளை பெண்கள் தான் எடுத்துவந்தார்கள்.

"டேய், உன் ஹைட்டுக்கு உனக்கு பேஸ்கெட் பால் நல்லாயிருக்காது, வாலிபால் கோச்சிங்கில் சேர்ந்துக்கோயேன்." அம்மா சொல்ல, ஆசை ஆசையாய் பேஸ்கெட்பால் கோச்சிங்கில் சேர இருந்தவன், மைக்கேல் ஜோர்டன் மற்றும் இன்னபிற ஆட்களை புறந்தள்ளிவிட்டு வாலிபாலில் சேர்ந்தேன்.

"தம்பி மேக்ஸ் உனக்கு ரொம்ப பிடிச்சிருந்தாலும் அதில பெரிய ஆளா வர்றதுக்கு நிறைய உழைக்கணும் அதை நீ பண்ணவே மாட்ட, அதனால சும்மா பீலா உட்டுக்கிட்டு அலையாம, கம்ப்யூட்டர்ஸ்ல சேர்ந்துறு. நல்ல பேக்ரவுண்டும் இருக்கு சாப்ட்வேர்ல பெரிய ஆளா சீக்கிரமே வந்திருவே." கணக்கில் பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் வாங்கிய சென்டம் அதன் பேரில் ஆர்வத்தைத் தூண்ட ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கப்பட்டு கம்ப்யூட்டர்ஸில் சேர்ந்தேன்.

"தாஸ் ஜாவாவில் எல்லாம் ப்ரொக்கிராம் எழுத ஆயிரம் பேர் வருவான், விண்டோஸ், லினக்ஸில் டிவைஸ் டிரைவர்ஸ் எழுதுறதுக்கு ஆளுங்களே கம்மியாத்தான் இருப்பாங்க, உனக்கு இருக்குற அறிவுக்கு நீ பெரிய ஆளா வருவ அந்த பீல்டில், நான் நினைத்தால் இப்ப படிக்க முடியுமா சொல்லு." மைதிலி சொல்ல, ஆசை ஆசையாய் திட்டம் போட்டு வைத்திருந்த ஜாவா ஜேடுஈ ப்ரோஜெக்ட்டை கைகழுவினேன்.

இதில் அம்மா அக்காவிற்கு சிறிது அதிர்ச்சியிருந்தாலும் சந்தோஷம் தான், எங்கள் குடும்பமும் மைதிலி குடும்பமும் பேமிலி பிரண்ட்ஸ்களா ஆனதில் இருந்து வாரக்கடைசி நாட்கள் பார்ட்டிதான். ஆனாலும் மைதிலியின் அம்மா, எங்க அம்மாக்கிட்ட கேட்டு அம்மா என்னிடம் கேட்டதும் நான் முற்றிலுமாக மறுத்துவிட்டேன்.

"அம்மா மைதிலியை என் பொண்டாட்டியா நினைத்துக் கூட பார்க்கமுடியலை. அவ எனக்கு ஒரு நல்ல பிரண்ட் அவ்வளவுதான். இப்ப நம்ம கிரி மாமா பெண்ணையே எடுத்துக்கோயேன். என் கூடவேத்தான் படித்து வளர்ந்தாள் அவளையும் என்னால பொண்டாட்டியா நினைத்து பார்க்க முடியவில்லை. அது ஏன்னு தெரியலை."

என்னை ஓட்டுவதற்கு மைதிலிக்கு இது ஒரு சாதகமா போய்விட்டது.

"உனக்கெல்லாம் கடலை போடுவதற்கு என்னை மாதிரி பொண்ணு வேணும், கல்யாணத்துக்கு வேண்டாம் அப்படித்தானே. தலையில கொட்டி, தப்பு பண்ணா தப்பை சுட்டிக்காட்டி இதெல்லாம் வேண்டாம், உனக்கும், உனக்கும் நீ சொல்றத கேட்கிற மாதிரி பொண்ணுதான் வேணும் அதானே..."

பின்னர் டிஷர்ட்டை இழுத்து விட்டுக்கொண்டே,

"இல்லை வேற எதாவது காரணம் இருக்கா?" சிரித்துக் கொண்டே கேட்க,

"அசிங்கமா பேசின பல்லை உடைச்சிருவேன்."

உண்மையிலேயே கோபமாக பதில் சொன்னேன்.

"சரி, விஜய் படம் ஏதோ வந்திருக்காம் கலையரங்கத்தில் வர்றியா?"

அழகாக பேச்சை மாற்றினாள், இருந்தாலும் நான் தமிழ்ப்படங்கள் பார்ப்பதில்லை என்று தெரிந்திருந்தும் கேட்பவளைப்பார்த்தால் கோபமாக வந்தது,

"அந்தப் படத்தையெல்லாம் மனுஷன் பார்ப்பான்."

"ஆமாமாம், நீங்கல்லாம், கலைப்படம்னு சொல்லிக்கிட்டு பிட்டுப்படத்தைத் தானே பார்ப்பீங்க, அதுக்கு விஜய் படம் எவ்வளவோ தேவலாம்."

அவள், நான் நகிஸா ஒஷிமாவின், இன் த ரிஆல்ம் ஆப் சென்ஸஸ் படத்தின் டிவிடியை ஆயிரத்திற்கும் அதிகமான விலைகொடுத்து வரவழைத்துப் பார்த்ததைத்தான் அப்படிச் சொல்கிறாள் எனத் தெரிந்தாலும், அது போன்ற என்று சொல்ல முடியாவிட்டாலும் வெளிநாட்டு கலைப்படங்களை அறிமுகப்படுத்தியது மைதிலிதான். நான் சிரித்தபடியே,

"மைதிலி நீ அந்தப் படத்தை பாக்கலையே தரவா?" லேசாய் பயமாய் இருந்தாலும் கேட்க,

"உதைபடுவே படவா."

ஒருவழியாக நான் செய்திருந்த ப்ரொஜெக்டின் பயனாய் நல்ல அமேரிக்கக் கம்பெனியில் வேலை கிடைக்க, அமேரிக்கா வந்து இரண்டு வருடமாகிறது, மைதிலி ஏதோ ஒரு கல்லூரியில் லெக்சரரா இருக்கிறாள், இப்பக் கல்யாணமாம். சந்தோஷமாக இருந்தது என்றாலும் என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே மைதிலியை கல்யாணம் செய்து கொள்ளும் விருப்பம் இல்லையா என்று. எல்லா தடவையும் இல்லை என்ற பதில் தான் கிடைத்தது.

அமேரிக்காவிலிருந்து திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கிளம்பி வந்திருந்தேன். நேராய் மைதிலியைப் பார்ப்பதற்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். கொஞ்சம் பூசியதைப் போலிருந்தாள் மைதிலி, கல்யாணக் கலை முகத்தில் தெரிந்தது, என்னைப் பார்த்ததும் சிறிது வெட்கப்பட்டாள் எனக்கே கூட ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

"என்னா மைதிலி மாப்பிள்ளை எப்படி போட்டோ எதுவும் வைச்சிருக்கியா?"

"ம்க்கும் அது ஒன்னுதான் குறைச்சல் இப்ப யாரு நான் கல்யாணம் பண்ணிக்கிலைன்னு வருத்தப்பட்டா, இதுக்காக நீ கூட வந்திருக்க பாரு அமேரிக்காவில் இருந்து.

அப்புறம் அந்தப் பையனைப் பத்திக் கேட்டல்ல, எங்கப்பாவோட தூரத்துச் சொந்தம். அப்பாவும் நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னதும், என்கிட்ட இவனைக் கட்டிக்கிறியான்னு கேட்டாரு நான் மறுக்கலை ஆமாம்னும் சொல்லலை."

எனக்கு கொஞ்சம் ஆர்வமாய் இருந்தது மைதிலியின் மாப்பிள்ளையைப் பார்க்க, மனது இல்லை இல்லையென்று சொன்னாலும் அவனுடன் என்னை ஒப்பிட்டுக்கொண்டேயிருந்தது. கொஞ்சம் கல்யாண வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தேன். மாப்பிள்ளை வீட்டிலிருந்து கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு வரவேண்டியது தான் பாக்கி, வந்ததும் மாப்பிள்ளை அழைப்பு பின்னர், இரவு நிச்சயத்தார்த்தம் பின்னர் காலையில் ஆறு பத்துக்கு கல்யாணம்.

ஏழுமணியிருக்கும், மைதிலியின் அப்பா என்னைப் பார்ப்பதற்கு வந்திருந்தார்,

"மோகன், மாப்பிள்ளை கடைசி நேரத்தில் பிரச்சனை பண்றார், யாரோ நம்ம மைதிலியைப் பத்தி தப்பா லெட்டர் போட்டுட்டாங்களாம். இப்ப கல்யாணத்தை நிறுத்தணும்ங்கிறாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..."

நானும் என் பங்கிற்கு மாப்பிள்ளைக்கு போன் போட்டு பேச, அந்தப்பக்கம் மைதிலியைப் பற்றி ரொம்பவே கேவலமாப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். விஷயம் தெரிந்து மைதிலியின் அம்மா அழத்தொடங்க, மைதிலியின் கண்களில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லை. நான் மெதுவாக என் அம்மாவின் சம்மதத்தை வாங்கிவிட்டு பின்னர் மைதிலியின் தந்தையிடம்,

"மாமா உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லைன்னா நான் மைதிலியைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்." சொன்னதும் கையைப் பிடித்துக் கொண்டார்.

நான் ஒப்புக்கொண்ட பிறகு அந்தக் கல்யாண மண்டபத்திலும் சரி, மற்றவர்களுடைய முகத்திலும் சரி அப்படியொரு சந்தோஷம், சற்று நேரத்திற்கு முன்பு நடந்த விஷயங்களை அனைவரும் நொடிப்பொழுதில் மறந்துவிட்டது ஆச்சர்யமாகயிருந்தது. நான் நேராய் அம்மாவிடம்,

"அம்மா இங்க நடந்ததில் எதுவும் அரசியல் இல்லையே?"

நான் கேட்க வந்ததை புரிந்து கொண்ட அம்மா, வந்து கன்னத்தில் குத்திவிட்டு,

"ஆமாம் உன்னை கட்டிக்கிறதுக்காகத்தான் மைதிலி செஞ்ச நாடகம் இதுன்னு நினைச்சியா? ஆனாலும் உனக்கு மிதப்பு ஜாஸ்திடா. ஆளைப்பாரு ஆளை, மைதிலியை மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். அந்தப் பையன் கொடுத்து வைச்சது அவ்வளவுதான். உன்னோட இந்த லூசுத்தனமான கேள்வியை அவக்கிட்ட கேட்டு வைச்சிறாதே." சொல்லிவிட்டு காதைத்திருகினார்.

முதலிரவின் பொழுது,

"மைதிலி, இங்கப்பாரு இது எப்படி நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. இதில் எதுவும் உள்குத்திருந்து அதுக்கு நீயோ, இல்லை எங்கம்மா அக்காவோ, இல்லை உங்க வீட்டில் இருப்பவர்களுக்கோ சம்மந்தம் இருந்தால் அது என் பார்வைக்கு வருவதை மட்டும் தவிர்த்துவிடு..." நான் சொன்னதும் மைதிலி சிரித்தாள் எப்பொழுதையும் போல என்னால் இந்தமுறையும் அவளின் சிரிப்பில் இருந்து ஒன்றையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

Read More

Share Tweet Pin It +1

14 Comments

In Only ஜல்லிஸ்

தமிழிஷ் ஓட்டு நம்பகமானதா?

நண்பர் ஒருவர் தமிழிஷ் ஓட்டு காரணமாய் பெரிய சண்டை போகுதே பார்த்தீங்களா என்று கேட்டார், நான் அத்தனை தூரம் பதிவுகளில் தற்சமயம் இயங்காவிட்டாலும் கண்ணில் படத்தான் செய்தது. நான் தமிழ்மண ஓட்டுப்பட்டையைக் களவாடி மகுடும் சூட்டிக்கொண்ட சூத்திரம் தெரிந்தவர் என்பதால் தமிழிஷில் முடிந்தால் செய்து காட்டுங்கள் என்றார். ஆனாலப் பட்ட 32 digit key வைத்து செய்யும் என்கிரிப்ஷனையே உடைத்து களவாடிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் தமிழிஷ் எல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று சொல்லி விட்டு எப்படி ஓட்டிங் முறை செய்திருக்கிறார்கள் என்று பார்த்தேன். ம்ம்ம் ஓட்டை இருந்தது. அதற்கான டெஸ்டிங்கைத்தான் நேற்றைய பதிவில் செய்தேன்.

அந்தப் பதிவிற்கு ஓட்டுப் போட்டதாகச் சொல்லும் யாரும் எனக்கு ஓட்டுப் போட்டிருக்க நியாயம் இல்லை. sayanthan, sanjaigandhi, jaichan, nandhuu, senthazalravi, fedthemaster இதில் சயந்தன், சஞ்செய் காந்தியிடம் முன்னமே பேசியாகிவிட்டது ஆனால் நான் டெஸ்டிங்கை கொஞ்சம் சீக்கிரம் முடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் வந்ததால் செய்து வந்ததை நிறுத்திவிட்டேன். kks, chuttikurangu, hihi12, kilukku இவர்கள் எல்லாம் நான் டெஸ்டிங் நிறுத்திய பிறகு போட்டவர்கள். ஆனால் ஒரு விஷயம் சொல்ல முடியும், உங்கள் அனுமதியில்லாமலே ஒருவர் உங்கள் பெயரில் தனக்கு வேண்டிய பதிவிற்கு ஓட்டுப் போட முடியும் தமிழிஷில்.

எப்படி என்பதை சொல்ல விரும்பவில்லை.

PS: கள்ள வோட்டு போட உபயோகித்துக்கொண்ட அனைத்து நபர்களிடமும் ஒரு சைலண்ட் மாப்பு கேட்டுக்கிறேன் :(, nothing personal only testing.

Read More

Share Tweet Pin It +1

29 Comments

In Layoff ஈழம்

ஐயோ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை

சசி ஒரு பதிவெழுதியிருந்தார், அவரளவிற்கு தைரியம் கிடையாதென்பதால் அது போன்றதொரு பதிவை நான் போடவில்லை. அவ்வளவே. 'தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்' என்பதில் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது, அப்படியே ஸ்டாலினின் 'You cannot make a revolution with silk gloves.' என்பதும். ஆனாலும் மக்கள் இப்படிக் கொத்துக்கொத்தாய் உயிரிழக்கும் பொழுது, நாம் இது வரை மனதில் வைத்திருந்த நியாயங்கள் எல்லாம் அநியாயங்களாய் நீள்கின்றன. அடிப்படைகளையே மாற்றிக்கொள்ளக்கூட மனம் தடுமாறுவதில்லை, மரணம் அத்தனை வலிமையான ஆயுதம். ஆனால் இதைக் கொண்டு தான் இராஜபக்ஷே போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்து பயமுறுத்துகிறார்கள் எல்லாவற்றையும் துறந்து விட்டு இழந்து விட்டு ஓடிவிடு இல்லையென்றால் அழிக்கப்படுவாய் எனும் பொழுது எந்தப் பக்கம் பேசுவது என்ற குழப்பமே நீள்கிறது. இந்திய சுதந்திரம் அஹிம்சையால் பெறப்பட்டது என்பதில் எனக்கு இன்னமுமே கூட நம்பிக்கையில்லை, அதேபோல் ஆயுதம் தாங்கிய போராட்டாம் விடுதலை பெற்றுத்தராது என்பதிலும் கூட.

Capgemini ல் இருந்து 1600 நபர்களை வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள் என்ற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது, சென்னை, புனே, ஹைதராபாத் என்று Kanbay இருந்த இடங்களில் இருந்து வெளியேற்றம் நடந்திருக்கிறது. Kanbayவின் முக்கியமான க்ளையண்டான HSBC அதனுடைய ப்ராஜக்ட்களை திரும்ப வாங்கிக் கொண்டதால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம். என்னுடைய நண்பர்கள் சிலருக்கும் இப்படி நடந்திருப்பதாக செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது, உச்சிக் கொண்டையாகிய சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியின் ஈறும் பேனும் இது போன்ற லே ஆஃப்கள் ஆனால் தாழம்பூக்களை மனம் இயற்கையாகவே விரும்புகிறது என்ன செய்ய, தனக்கு வந்தால் தெரியும் ஈறும் பேனும் என்று இளக்காரம் பேசும் மக்களுக்கு புன்சிரிப்பை மட்டும் காட்டிவிட்டு நகரவேண்டியிருக்கிறது.



ஜெயமோகனின் அனல் காற்று படித்தேன், ஒரே காரணம் அய்யனார் அதைப்பற்றி எழுதியிருந்த சில வரிகள், முன்னர் யாரோ ஒருவர் பெயர் மறந்துவிட்டது கேட்ட 'படிச்சிட்டீங்களா'விற்கு இல்லை என்றும் படிக்கும் ஆவல் இல்லையென்றும் சொல்லியிருந்தது நினைவிற்கு வருகிறது. அய்யனார் சொல்லியிருந்த ஒன்றிரண்டு வார்த்தைகளுக்காக படிக்க நேர்ந்தது, ம்ஹூம் தூக்கம் வராதா ஒரு இரவில் இன்னும் கொஞ்சம் நேரம் தூக்கத்தை தள்ளிப் போட உதவியது. ஜெயமோகனின் வகையான எழுத்தில்லை இது, என்பதைத் தவிர்த்து, வேறு யாராவது எழுதியிருந்தால் இரண்டாம் பாக முடிவில் தூக்கியெறிந்திருப்பேன். எனக்கு ஆதவன் வாசனை அதிகம் தெரிந்தது, நான் ஆதவனை அதிகம் படித்தது காரணமாய் இருந்திருக்கலாம். ஆதவன் பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தைப் பற்றிய் எழுதியதும் காரணமாய் இருந்திருக்கலாம், கொஞ்சம் போல் சாரு வாசனை வந்தது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. எப்பொழுது ஜெமோ எழுத்து படித்தாலும் நான் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பேன் என்பதைப் போலவோ என்னுடைய கற்பனைகளைப் போலவே இருப்பதைப் போலவோ இருக்கும். அனல் காற்று இதற்கு விதிவிலக்கல்ல. இரண்டு மூன்று முறை Mother Fucker என்று வந்துவிட்ட காரணத்தாலேயே இதை இன்செஸ்ட் வகைக் கதை என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன், என் பெயர் ராமசேஷனில் Mother Fucker வார்த்தைகள் இல்லாமலே அதைப் பற்றிச் சொல்லியிருப்பார். ஒரு எல்லையைத் தாண்டாமல் ஜெமோ எழுதியிருப்பதைப் போலவே தோன்றியது அவராய் வகுத்துக் கொண்ட அந்த எல்லையெல்லாம் தாண்டி மக்கள் எழுதத் தொடங்கி எழுதி காலமாகுது என்று சொல்ல நினைத்தேன். சொல்லிட்டேன்.

இந்தப் பதிவை வைத்து ஒரு டெஸ்டிங் செய்யலாம் என்ற ஒரு ஆசை, செய்யப் போகிறேன். ரிசல்ட் நான் எதிர்பார்ப்பதைப் போல் வந்தால் சொல்கிறேன்.

பசங்க படம் இன்னும் பெங்களூரில் வெளியாகலை நல்லாயிருக்கு என்று மக்கள் சொல்லும் பொழுது பார்க்க ஆசையாகயிருக்கிறது. வெளியாகாமல் போகக்கூட வாய்ப்பிருக்கிறது, இப்படி மிஸ் ஆன படம் தான் சுப்பிரமணியபுரம்.

தலைப்பை பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. புரிஞ்சவங்க புரிஞ்சிக்கோங்க புரியாதவங்க புரிஞ்சவங்களைக் கேளுங்க

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

நியூட்டனின் 3ம் விதி படத்திற்குச் சென்றிருந்தேன் எல்லாம் தலைவிதி தான். 'இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே' என்ற புலம்பலைப் போல இன்னும் எத்தனை திருப்பங்கள் வைப்பாய் 'தாய்முத்துசெல்வா'('ச்'சன்னா கிடையாது இடையில்) என்று கேட்க நினைக்கும் அளவிற்கு திருப்பங்கள். மொக்கையான S.J. சூர்யா படமல்ல என்ற திருப்தி மட்டும் தான். ஹீரோயின் பயப்படும் பொழுது நமக்கு உண்மையிலேயே பயமாய் இருக்கிறது! தமிழ்நாட்டுக்காரர்களின் மூளையே மூளை என்று நினைக்க வைத்த கமெண்டுகள் சில காதில் விழுந்தன, பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவரிடம் இருந்து. பாடல் காட்சி ஒன்றில் ஹீரோயின் துண்டொன்றை மட்டும் கட்டிக் கொண்டு வந்து நிற்க, இவர், "பிடிமானமே இல்லாம எப்படி நிக்குது பார்? பெஃபிகால் எதுவும் போட்டு ஒட்டியிருப்பாங்க்யலோ!" என்று கேட்டார் நான் யோசித்துப் பார்த்தேன் 'ஆம்பிள்ளைகளுக்கெல்லாம் நிக்குமே நமக்கென்ன இருக்கு' என்று. அப்பத்தான் ஞாபகம் வந்தது நாமென்னைக்கு மாரோட டவல் கட்டியிருக்கோம் கட்டினா இடுப்பில் தான கட்டுவோம், அங்கத்தான் பிடிமானம் இருக்குமேன்னு. :lol: தேடிப்பிடிச்சிருப்பாங்க்யன்னு நினைக்கிறேன், ஒன்னையுமே காணோம். cleavage காண்பிப்பதற்கு தூக்கி நிறுத்த வேண்டியிருக்கிறது, பாவம் சின்னப்புள்ளைங்ய பார்த்து பயப்படுதுல்ல.



ஜெயலலிதாவின் இந்த மாற்றம் நம்ப முடியாததாக இருக்கிறது என்றாலும் ஜெயலலிதாவின் மூலமாய் ஈழத்திற்கு ஒரு தீர்வு வருமென்றால் அதை நிச்சயம் நான் ஆதரிக்கிறேன் இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஓட்டுப்பொறுக்கி அரசியலின் இன்னொரு முகம் தான் இந்த மாற்றம் என்றால் அதைப் பார்த்து வேதனைப்பட மட்டுமே முடிகிறது. ஈழ மக்களைத் தொடர்ச்சியாக இந்த மூன்றாண்டுகளில் அவதானித்து வந்திருக்கிறேன், பெரும்பான்மையானவர்களுக்கு தமிழக அரசியலில் அத்தனை பெரிய ஈடுபாடு கிடையாது, அதைப்போலவே தமிழக அரசியல் வரலாற்றைப் பற்றியும். நான் அது அவசியம் என்று நினைக்கவில்லை ஏனென்றால் அவர்கள் நிலை அப்படி, ஆனால் தமிழகத்தின் பின்புலத்திலிருந்து ஈழத்தின் நிலையைப் பார்ப்பவர்களுக்கு தற்பொழுது நடைப்பெற்று வரும் தமிழக அரசியல் விளையாட்டுக்களை கவனிப்பவர்களுக்கு ஈழத்தவர்களைப் போல் சடாறென்று ஜெயலலிதாவை நம்பிவிட இயல்வதில்லை. எல்லாவற்றையும் மறந்து ஞானியை ஏற்றுக்கொண்டதைப் போல் ஏற்றுக் கொள்வதற்கு ஜெயலலிதா அருகதை உள்ளவரும் அல்ல.

எதேட்சையாகப் பார்த்த சீமானின் நெல்லைப் பேச்சு சட்டென்று கவர்வதாக இருந்தது, நல்ல தமிழ் வளம் இருக்கிறது அவரிடம் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுபவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், கமல் அளவிற்கு தடுமாற்றம் இல்லாமல் எளிய தமிழில் அவரால் அழகாக பேச முடிந்திருக்கிறது. சீமான் அது இது கைது என்று கிளப்பிவிட்ட பிரச்சனையில் எப்பொழுதையும் போல் அந்தப் பக்கம் தலை வைத்துப் பார்க்கவில்லை. எத்தனை பெரிய மேடை திரண்டிருந்த மக்கள் என்று தெரியாது கேமரா ஒரு பக்கத்தில் இருந்து நகரவில்லை. ஆனால் அவர் மேடையை உபயோகித்துக் கொண்ட விதம் பிடித்திருந்தது.



இந்த விளம்பரங்கள் அனிமேஷன் இல்லை என்று சொன்ன பொழுது என்னால் நம்ப முடியவில்லை தான். இவை மனிதர்களை நடிக்க வைத்து எடுக்கப்பட்டவை என்பது கொஞ்சம் நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது.

IPL இந்த முறை கொஞ்சம் போல் சீரியஸாக போகிறது. எல்லோரும் ஒரே அளவில் இருக்கிறார்களாயிருக்கும் KKR தவிர்த்து. ஆஸ்திரேலியர்கள் விளையாடும் அத்தனை அணியையும் சப்போர்ட் செய்தாலும் ;) ராஜஸ்தான் ராயலும், சென்னையும் ஃபேவரைட்ஸ். போன முறை இருவரும் ஃபைனல் வந்து நெஞ்சில் பாலை வார்த்தார்கள், இந்த முறை எப்படி நடக்கும் தெரியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி வீரர்களே IPLல் சிறப்பாக ஆடுவது சந்தோஷமாக இருக்கிறது.

ட்விட்டரில் ப்ரூனோவுடன் சச்சின் டெண்டுல்கர் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு வருடமாக இதைப் போன்ற ஒரு விவாதத்தை அவர் நிறைய பேரிடம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அத்தனை பொறுமை கிடையாது, முதல் இரண்டாம் முறை எல்லாம் சரியாகப் பேசுவேன் மூன்றாவது முறை செய்த விவாதத்தையே திரும்பவும் இன்னொரு முறை செய்ய மாட்டேன் என் பக்கம் சரியாகவே இருந்தாலும் கூட. சச்சின் விஷயத்தின் என் பக்கம் சரி என்று 100% சொல்ல முடியாது ஆனால் நான் அதைப் பற்றி சொல்ல வந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள வித்தியாசமான ஒரு அட்டிட்டியூட் வேண்டும் என்று மட்டும் நினைக்கிறேன். சச்சினை அவருடைய ஆட்ட நேர்த்திக்காக பாராட்ட நினைத்தாலும் அவருடைய சுயநல விளையாட்டு அதை முற்றிலுமாக என்வரையில் மறைத்துவிடுகிறது. அவர் இந்திய அணிக்காகவென்று விளையாடி வெற்றி பெறவைத்த ஆட்டங்கள் அவர் தனக்காக விளையாடிக் கொண்ட ஆட்டங்களுடன் ஒப்பிட்டால் மிகக்குறைவாக இருக்கும்.

Read More

Share Tweet Pin It +1

76 Comments

Popular Posts