In அரசியல்

புலிக்குட்டியாய் ஒரு வாழ்க்கை

வெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின்
முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை
தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய்
வீரியம் பெறுகிறது என் இருப்பின் மீதான
மற்றவர்களின் கோபம்

அடர்கானகத்தின் வழியேயான
முடிவென்னும் பெருவெளியை நோக்கிய பயணத்தின்
இடையில் இயக்கத்தை நிறுத்த முயலும்
அத்தனைப் பொறிகளையும் சுட்டு வீழ்த்தியவனாய்
நகர்ந்து கொண்டேயிருக்கிறேன்
கடக்கவேண்டிய தொலைவை மட்டுமே கருத்தில் நிறுத்தி

சிறிதும் பெரிதுமாய்
வண்ணக்குழப்பங்களுடன் கூடியதாய்
பல சமயங்களில்
பொருந்தாததாயுமான முகமூடிகள்
பயணத்தின் நடுவே கழன்று விழுகின்றன
பெருஞ்சிரிப்புகளைப் புறக்கணித்தவனாய்
நான்

நண்பர்கள் பகைவர்களாய்
நீலமேகம் நொடியில் நெருப்பு மழை பொழியும்
இருண்மையாய் மாறி பயமுறுத்தும் மாற்றங்கள்
காலைவாறிவிடவே காத்திருப்பவை போல்
எகிறிக்குத்தோ அடியில் குனிந்தோ எப்படியோ
இருப்பை மட்டும் நிச்சயப்படுத்தி
நீளும் என்னுடைய பயணத்தின் முடிவான
பெருவெளியைப் பற்றிய பயமெப்போதும் இருந்ததில்லை
செய்துகொண்டிருக்கும் பயணமே
பெருங்கனவாய் அகலும் சாத்தியக்கூறுகள்
புரிவதால்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா

அப்பாஸ் கியாரோஸ்டாமி என்னும் திரைக்காதலன்

அபூர்வமான ஒரு சமயம் ஒன்றில் நான் தேர்ந்தெடுத்த தொடர்ச்சியான நான்கு அப்பாஸ் கியாரோஸ்டாமியின்(Abbas Kiarostami) படங்கள், திரைப்படங்கள் பற்றி எனக்கிருந்த எண்ணங்களை வெகுவாக மாற்றியது. எதையெல்லாம் திரைப்படமாக எடுக்கலாம் எப்படியெல்லாம் திரைப்படங்கள் எடுக்க முடியும் என்பதைப் பற்றிய என் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாக்கியது அவரின் படங்கள்.



Ten, Close-up, The wind will carry us மற்றும் Where is my friends home படங்கள் தான் நான் பார்த்தவை. ஏற்கனவே Mohsen Makhmalbaf, Majid Majidi, Samira Makhmalbaf, Bahman Ghobadi என்று பார்த்துவிட்டு, குர்திஸ்தானெல்லாம் பக்கத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். சினிமா படம் எடுப்பதின் சிற்பிகள் ஈரானிய இயக்குநர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இவர்கள் படங்களில் எது முக்கியம் என்று நான் கருதுகிறேன் என்றால் அந்தப் படங்கள் வெளிப்படுத்தும் சாத்தியக்கூறுகள் தான். Ten போல் ஒரு படம் பார்த்தால் தான் இப்படியும் படமெடுக்க முடியும் என்ற போல என்ற எண்ணம் வருகிறது. எதையும் வலிந்து சொல்லாமல் அதுவாகச் சொல்லச் செய்வது ஈரானியப் படங்களின் மேல் எனக்கு இன்னமும் ஆர்வம் எழச் செய்த ஒரு விஷயம். அகிரா குரோசொவா சொன்ன "Words cannot describe my feelings about them(அப்பாஸின் படங்கள்)" தான் எனக்கும் தோன்றுகிறது. இந்தப் படங்களைப் பற்றி நாலு வரிகள் எழுதுவோம் என்று நினைக்கும் பொழுது.

பிறகென்ன எழுது வந்துக்கிட்டு என்று கேட்கலாம், ஆசைதான். வெளிப்படுத்திவிடமுடியாது ஏக்கங்களை வார்த்தைப் படுத்த முயற்சியாவது செய்யலாமே என்று தான். இன்னும் நாலு பேர் என்னால் இந்தப் படங்களைப் பார்ப்பார்களோ இல்லை தெரிந்து கொள்வார்களோவானால் அதைவிட நான் எதிர்பார்த்துவிடமுடியும் நான் எழுதும் எழுத்திலிருந்து.

Ten

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வண்டி ஓட்டும் ஒரு பெண் சந்திக்கும் பத்து உரையாடல்களை உள்ளடக்கியது இந்தப் படம். நானறிந்த வரையில் பெண்ணியம் பேசும் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இதைப் பார்க்கிறேன். உரையாடல்களை மட்டும் வைத்து இயக்குநர் சொல்ல வரும் விஷயத்தை ரசிகர்கள் மனதில் ஆழமாய்ப் பதிய வைக்கிறார். விவாகரத்து செய்துவிட்ட தன் கணவரிடமிருந்து மகனை வீட்டிற்கு அழைத்து வரும் பொழுது திரும்ப கொண்டு விடப்போகும் பொழுதும் அவர்கள் இருவரிடம் நடக்கும் உரையாடல் நிச்சயமாய் நாம் சினிமா ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே வராத அளவிற்கு வைத்திருக்கும். அந்த குட்டிப் பையனாகட்டும் உரையாடலின் பொழுது வண்டி ஓட்டிக் கொண்டு வரும் அம்மா மீது கோபப்படுவது சில சமயங்களில் விரக்தியடைவது காட்டுக் கூச்சல் போடுவது என தேர்ச்சியான நடிப்பு. அதே போல் வண்டி ஓட்டும் பெண்ணாக நடித்த Mania Akbari ஆகட்டும் எங்கோ ஒரு வண்டியில் அவர்களுக்கு தெரியாமல் வைத்துவிட்ட காமராவின் வழியாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வரும் வகையில் அத்தனை இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் தன் தங்கையுடனும், ஒரு செக்ஸ் வொர்க்கர் உடனும் மசூதிக்கு சென்று வரும் ஒரு பெண்ணுடனும் கொள்ளும் உரையாடல் ஈரான் நாட்டின் தற்சமய நிலையை அழகாக வெளிப்படுத்துகிறது. ஒரு சமகால வரலாற்றை அப்பாஸின் காமரா அழகாக படமாக்கிச் செல்கிறது. மொத்த படமுமே அந்த வண்டிக்குள்ளேயே வைத்து படமாக்கப்பட்டிருக்கிறது, நமக்கு ஒரு அலுப்பு வருவதில்லை ஏனென்றால் வண்டிக்கு வெளியில் மாறும் ஈரானின் நகர்ப்புறம் இரவு நேரம் என காமெரா தன் இன்னொரு பரிமாணத்தையும் அழுத்தமாக பதிவு செய்தபடியே நகர்கிறது.



Close-up

ஒரு உண்மைக்கதையை மய்யமாக்கி எடுக்கப்பட்ட திரைப்படம் இது, வறுமையில் வாடும் ஒரு இளைஞன் ஈரானின் இன்னொரு புகழ்பெற்ற இயக்குநரான Mohsen Makhmalbaf நான் தான் என்று கூறு ஒரு குடும்பத்தில் நுழைகிறான் இதனால் நடந்த விஷயங்களை அப்பாஸ் படமாக்க்யிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் உண்மையாக இருந்தவர்களையே வைத்து படமாக்கியிருக்கிறார். அந்தப் பையன் கெட்ட எண்ணம் எதுவும் இல்லாதவனாக அதே சமயம் தான் மிகவும் விரும்பும் இயக்குநராக இருக்கும் Makhmalbaf ஆக மாறக் கிடைக்கும் வாய்ப்பை உபயோகித்து அந்த ஐடெண்டிடி மீதான தன் காதலை இப்படி வெளிப்படுத்திவிடுகிறான் என்பது தொடர்ச்சியாக நடக்கும் விசாரணையின் பொழுது தெரிகிறது. கடைசியில் Makhmalbaf அந்தப் பையனைச் சந்தித்து ஒரு பூத்தொட்டியை அந்த பையன் ஏமாற்றிய குடும்பத்தாரின் வீட்டில் சென்று வைப்பதில் முடிகிறது படம். மனிதனின் ஐடெண்டிடியைப் பற்றி நிறைய விஷயங்களைப் பேசுகிறது இந்தப் படம், அதே போல் ஈரானின் சமகால இருப்பையும் கூட.



தொடரும் ------

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In Only ஜல்லிஸ்

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் என் தலைமுடியும்

எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றி முதலில் தெரிந்து கொண்டது என்றால், நான் வலைப் பதிவில் வந்து சேர்ந்திருந்த சமயம் என்று நினைக்கிறேன். பெரிய ராயர் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றி க.பெ.வில் கொளுத்திப் போட அது வலையுலகில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. எப்பவுமே என்னமோ நோட்ஸ் எடுப்பது போல க.பெவில் வரும் பெயர்களை எடுத்துக் கொண்டு கூகுளில் தேடும் வழக்கம் உண்டு. அன்றும் அப்படித்தான் சார்த்ர்(Jean-Paul Charles Aymard Sartre) வையும் சிமோன் டி புவா(ர்) Simone de Beauvoir வையும் குறிப்பெடுத்துக்கொண்டவனாய்த் தேடத் தொடங்கினேன். அப்பொழுதெல்லாம் விக்கிபீடியாவில் தேடும் பழக்கம் கிடையாது. இப்படி தேடப்போய் அறிமுகம் ஆனதுதான் எக்ஸிஸ்டென்ஷியலிஸம்.

Existentialism is a philosophical movement which claims that individual human beings have full responsibility for creating the meanings of their own lives. என்பதைத்தான் எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தின் ஒருவார்த்தைக் குறிப்பாகச் சொல்கிறது விக்கிபீடியா. இந்த வரிகள் சொல்லும் மீனிங்கைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். இதைப் பற்றி யோசிக்கும் பொழுதெல்லாம் 'தேவர் மகன்' படத்தில் சிவாஜி கணேசன் சொல்லும்; மரம் பற்றிய வசனம் நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை.

நாம் வாழ்ந்து வரும் சமுதாயத்திற்கு நான் எதுவும் செய்யவேண்டுமா? செய்ய வேண்டுமானால் எப்படிப்பட்டதான ஒன்றை செய்யவேண்டும் என்ற கேள்விகள். சரி இதிலெல்லாம் என் தலைமுடி எங்கே வந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் இந்த சமுதாயத்தையும், எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தையும், ஒரு பட்டர்ப்ளை எஃபெக்ட்டால் என் தலைமுடியுடன் சம்மந்தப் படுத்திவிடமுடியும் என்றே நினைக்கிறேன்.

நாம் வாழும் சமுதாயத்தை சந்தோஷப்படுத்துமானால் அது நல்ல காரியமாகத்தானே இருக்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்வதால் Meanings of my own life அடைந்துவிட்டதாகச் சொல்லமுடியும்தானே. சர்ரியலிஸம், பின்நவீனத்துவம் போன்ற இன்னபிற விஷயங்களுடனும் என் தலைமுடியை சம்மந்தப்படுத்த முடியுமென்றாலும் இப்போதைக்கு இதை எக்ஸிஸ்டென்ஷியலிஸத்துடன் முடித்துக் கொண்டு பின்னர் தேவைகள் வரும் பொழுது மற்றவைகள் விளக்கப்படும்.

ஏன் இப்படி என்று நினைத்தீர்கள் என்றால் மேட்டர் இவ்வளவு தாங்க ஸிம்பிள், நான் நான்கைந்து மாதங்களாக வளர்த்துவந்து என்னுடைய தலைமுடியை ஒட்ட வெட்டிவிட்டேன். இம்புட்டுத்தான் விஷயம். இப்ப இது எப்படி எக்ஸிஸ்டென்ஷியலிஸத்துடன் சம்மந்தப் பட்டது எனச் சொல்கிறேன். முடிவளர்ப்பதென்பது என்னுடைய தனிப்பட்ட உரிமையில்லையா? அதை ஷார்ட்டா வைத்துக் கொள்வதா இல்லை வளர்த்துக் கொண்டை போடுவதா என்பது யாருடைய பிரச்சனை. தினமும் தலைக்குக் குளித்து, வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு ஷாம்பு, பின்னாடி கன் டிஷ்னர் போட்டு, ஆல்கிளியர் ஹேர் ஜெல்லும், தேங்காயெண்ணையும் தேய்த்து ஆசையாசையாய் வளர்த்துவருகிற என் பிரச்சனையா? இல்லை சந்தர்ப்பவசத்தாலோ இல்லை மற்றதாலோ என்னைச் சந்திக்க வேண்டி வந்தவர்களுடைய பிரச்சனையா?

இது ஒரு முக்கியமான பிரச்சனை; எப்படி "The main threat to existentialism is non-availability of good quality condoms" என்று சாருநிவேதிதா தன்னுடைய பிரச்சனையை எக்ஸிஸ்டென்ஷியலிஸ பிரச்சனையாகப் பார்க்கிறாரோ அப்படி. சரி இப்படி "பாமர" மக்கள் தான் தனிமனித உரிமையைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்கிறார்கள் என்றால் பதிவுலகிலகிலேயே வசிக்கும் பதிவர்களுக்கும் இதே பிரச்சனை தான். கூந்தல் அழகன்னு சொல்றது, என் அக்கா பாசத்துடன் என் தலைமுடியை சம்மந்தப் படுத்திப் பேசுவது, காதுவரைக்கும் முடியிருந்தா என்ன பிரச்சனைன்னு எடுத்துச் சொல்றது(அப்ப அப்துல் கலாமுக்கும் இதே பிரச்சனைன்னு சொல்றீங்க என்ன?), நான் எப்ப முடிவெட்டப்போறேங்கிறது தான் நாளை இந்தியா வல்லரசா மாறுவதற்கு முக்கியமான பிரச்சனை அப்படின்னு பேசுறது எல்லாம் சேர்ந்து தான் சரி, நமக்கான ஒரு தீர்வோ விருப்பமோ இல்லாமல் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் சொல்லும் Nothingness ஆவோ இல்லை புத்தர் சொல்லும் "ஆசையே அழிவுக்கு காரணம்" இருக்கலாம் அப்படிங்கிற நிறைய விஷயத்தை கன்ஸிடர் செய்து முடியை வெட்டி விடலாம் என்ற முடிவிற்கே வந்துவிட்டேன்.

ஆனாலும் ஒரு நல்ல சலூன் தேடி உட்கார்ந்து, சுத்தி பாதுகாப்பு வளையமெல்லாம் கட்டிவிட்ட பிறகு வெட்டி விழுந்த முதல் கற்றை முடியுடன் என் கண்ணீரும் சொட்டாய் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை என்றே நினைத்தேன் முதலில், "என்னா சார் கண்ணில பட்டுடுச்சா!" என்று கேட்ட அந்த கருப்பு மனிதரின் சிகப்பு அன்பு தான் இந்தப் பதிவை தட்டிக் கொண்டிருக்கும் பொழுது மனதெங்கும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. முடிவெட்டிவிட்டு வீட்டிற்கு வந்ததும் அக்கா சொன்ன "அய்யோ என் தம்பியோட டீஷர்ட் பேண்டை போட்டுக்கிட்டு யாரோ வீட்டுக்கு வந்திட்டாங்க" வார்த்தைகள் காதிலே இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கண்ணாடி முன்னால் நின்று பார்த்தால் எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை, இதற்கு ஏதாவது இஸம் சொல்லலாமா என்று தெரிந்தவர்களிடம் கேட்கயிருக்கிறேன்.

நீட்ஷே "இறைவன் இறந்துவிட்டான், இனிமேலும் இறந்தவனாகவேயிருப்பான். அவனை நாம் தான் கொன்றுவிட்டோம்" என்று தன்னுடைய நாவலில் எழுதிய பிரபலமான வரிகளில்; இறைவன் என்பது இறைவனைக் குறித்தால் இங்கே என் தலைமுடியென்பது தலைமுடியைக் குறிப்பதாக வைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு பதிவை படிக்க நேர்ந்ததற்காகவோ இல்லை, இந்தத் தலைப்பின் கவர்ச்சியில் உள்ளே நுழைந்தவர்களுக்கும் வருத்தப் படுவதாகயிருந்தால் அதற்கு காரணம் பிரகாஷ், பொன்ஸ், ஆசீப் மீரான் மற்றும் செந்தழல் ரவி தான் என்றும். இந்தப் பதிவின் பின்னாலுள்ள பின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்கிறீர்கள் என்றால் நீங்கள், பின்நவீனத்துவம் என்னும் மலையின் முதல் படிக்கட்டை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டீர்கள் என்று காலரைத் தூக்கிவிடலாம்.

Read More

Share Tweet Pin It +1

19 Comments

In உண்மைக்கதை மாதிரி

கல்யாணம்

கல்யாணம் பற்றிய கனவுகள் இல்லாத யாராவது இருக்க முடியுமா தெரியவில்லை, எனக்கு ஏகப்பட்ட கனவுகள். என்னுடைய பெரும்பான்மையான கனவுகளை நான் மொழிப்பெயர்த்திருக்கிறேன் எழுத்தாக. ஆனால் கனவுகள் தீர்வதாகத் தெரியவில்லை, இதற்கான ஒரே தீர்வு கல்யாணம் செய்து கொள்வதாகத்தான் இருக்க முடியும். கல்யாணத்தையும் பாத்ரூம் செல்வதையும் ஒப்பிட்டு சொல்லப்பட்ட விஷயம் கொஞ்சம் வேடிக்கையானது தான் என்றாலும் யோசிக்கப்பட வேண்டியது. ஏனென்றால் தண்ணியடித்துவிட்டு புலம்பும் எல்லா ஆண்களும் கல்யாணம் ஆனவர்களாகவே இருக்கிறார்கள். என்ன செய்ய?

பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் நிறைய யோசித்து வைத்திருந்தேன், எட்டாவது படிக்க ஆரம்பித்ததிலிருந்து. ஆனால் என்ன கொடுமை எல்லாமே மாறிவிட்டிருக்கிறது, அன்று நான் ஆசைப்பட்டது போன்ற பெண்ணை நான் இன்று நினைத்துக் கூட பார்க்கமுடியாது. எல்லாம் எறக்குறைய எல்லாமே மாறிவிட்டிருக்கிறது, நான் கடைசிவரை மாறவே மாறாது என்று நினைத்தது கூட. அதாவது வேலை செய்யும் பெண்ணை அதுவும் குறிப்பாக சாஃப்ட்வேரில் வேலை செய்யும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள மாட்டென் என்றே நினைத்து வந்திருக்கிறேன். ஆனால் அம்மாவிடம் கடைசியில் ஒரே ஒரு கண்டிஷன் போட்டுவிட்டு வேண்டுமென்றால் சாஃப்ட்வேர் பெண்ணாயிருந்தாலும் பரவாயில்லை என்று சொன்ன நினைவு. கடைசியாய் ஒரே ஒரு கண்டிஷன் தான் வைத்திருந்தேன். ஆனால் கொடுமையென்ன என்றால் அந்த ஒரேயொரு கண்டிஷன் போதும் எனக்கு கல்யாணமே ஆகாமல் போக. அம்மாவிற்கு ஒரு பக்கம் பெருமைதான் என்றாலும் ஒரு பக்கம் வருத்தம். எனக்கு என் கண்டிஷன் எஸ்.வி. சேகருடையதாய்ப் போய்விடக்கூடாதென இன்னமும் கூட எண்ணம் இருக்கிறது, ஆனால் எஸ்வி சேகருடையதைப் போல் மொக்கையானதில்லை என் கண்டிஷன் என்றே நினைக்கிறேன்.

காதலித்து மணமுடிக்க எனக்கு ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் இருந்ததில்லை, அம்மா அப்பா பார்த்து வைக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்று சின்ன வயதில் இருந்தே நினைத்து வந்திருக்கிறேன். இன்று வரை அது அப்படியே இருப்பதில் கொஞ்சம் பெருமையும் கூட, அதே போல் ஒரேயொரு பெண்ணைப் பார்ப்பது அந்தப் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்வது என்பதும் என்னுடைய ஒரு எண்ணமாக இருந்தது. அதுவும் கூட அப்படியே நிறைவேறிவிடும் என்று நான் நினைக்கவில்லை, இன்றைக்கு இருக்கும் நிலையில் அதுவும் நிறைவேறிவிட்டது என்றே சொல்லலாம்.

கல்யாணத்தின் மேல் நான் நிறைய டிபெண்ட் ஆகியிருந்தேன் சில விஷயங்களில், என் வாழ்நாளில் நான் ருசி பார்ப்பதற்காகக் கூட பியர் அருந்தியதில்லை. நான் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கத் தொடங்கியதில் இருந்து என் நண்பர்கள் பெரும்பாலும் மது அருந்துபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். என்னை இந்த விஷயத்தில் கட்டிப் போட பெரிய கயிறொன்றும் தேவையிருந்திருக்கவில்லை. நான் என்னையும் என் அம்மாவையும் இணைக்கும் ஒரு மாயக்கயிறொன்று இருப்பதாகவே இதுவரை நினைத்து வந்திருக்கிறேன். ஒரு பாண்டிங். அந்தக் கயிறு என்வரையில் நீளும் வரை என்னால் மது அருந்துவது என்பதை விளையாட்டுக்குக் கூட செய்ய முடியாது. இன்று வரையிலும் அப்படியே. என்னிடம் என் நண்பர்கள் வற்புறுத்தலாகவும் சாதாரணமாகவும் இன்னும் பல வகையிலும் மது அருந்தக் கேட்டுக் கொண்டிருந்த பொழுதெல்லாம், ஒரு பழக்கமாக இல்லாவிட்டாலும் ஒரு மூடியளவாவது அருந்திப் பார்க்க வற்புறுத்திய பொழுதெல்லாம் ஒரு புன்னகையில் மறுத்திருக்கிறேன்.

தற்சமயங்களில் மிகவும் நெருக்கமான நண்பர்கள் கேட்கும் பொழுது கல்யாணத்திற்குப் பிறகு மனைவியின் அனுமதியுடன் செய்வேன் அதனால் வெய்ட்டீஸ் என்று விளையாட்டாகச் சொல்லி வந்தாலும். அம்மாவுடைய என் மீதான அந்த லாஜிக்கல் பாண்டிங் கல்யாணத்திற்குப் பிறகு மனைவியுடன் நீளும் என்றே நினைக்கிறேன். ஆனாலும் கூட திருமணத்திற்குப் பிறகு சட்டென்று இது மாறிவிடும் என்று நான் நினைக்கவில்லை, என் அம்மா முன்னால், என்னால், ஒரு முறை மது அருந்திவிட்டு நிற்க முடியாது என்றே நினைத்து வந்திருக்கிறேன். அம்மா வருத்தப் படுவார்களா மாட்டார்களா என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை, என் வாழ்நாளில் ஒரு முறை கூட அம்மா நீ தண்ணியடிக்கக்கூடாதென்று சத்தியம் எதையும் வாங்கவில்லை ஆனால் அதுவும் கூட ஒரு கண்ணுக்குத் தெரியாத உணர்ச்சிகளால் ஆனது.

என்னைக் கல்யாணம் செய்து கொள்ளும் சின்னப் பெண்ணின் மீது நான் எத்தனை பெரிய ரெஸ்பான்ஸிபிலிட்டியை வைக்கப்போகிறேன் என்று எனக்குத் தெரிந்து தான் இருக்கிறது. என் மனதை நானே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை, அம்மாவிடமிருந்த அந்த மாயக்கயிறு மனைவியிடன் வந்ததாகவும் மனைவியை சம்மதிக்க வைத்து வேண்டியதை செய்து கொள்ளலாம் என்றும் நான் நினைப்பது கூட ஒரு வகையில் என்னை நானே ஏமாற்றிக் கொள்வது தான். ஆனால் தண்ணியடிப்பவர்களின் மீதான எண்ணம் இப்பொழுது அத்தனை மோசமில்லை, இதைப்பற்றி நிறைய பேசியாகிவிட்டது, நிறைய யோசித்தாகிவிட்டது. காலத்தின் மீது பாரத்தைப் போட்டு நகர்கிறேன் என்று சொல்வதில் கூட இன்றளவில் நான் என்னை நானே மாற்றிக் கொள்ள முயல்கிறேன் என்ற எண்ணமே அதிகமாகிறது.

நான் போட்ட கண்டிஷன் பற்றி பேச நினைத்து எங்கெங்கோ சென்றுவிட்டேன், முன்பே கூட கொஞ்சம் பர்ஸனலாய் பேசும் நண்பர்களிடம் இதைப்பற்றி பேசியிருப்பேன். இளவஞ்சி என்னிடம் இதைப்பற்றி சண்டை போட்டது நினைவில் இருக்கிறது. நான் போட்ட கண்டிஷன் “தாலி கட்டமாட்டேன்” “ரெஜிஸ்டர் கல்யாணம்” என்பது தான், அம்மா தேடிப்பிடித்து அவர்களின் சொந்தத்தில் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார். என் வருத்தமெல்லாம் அந்தப் பெண்ணின் திருமணம் பற்றிய எண்ணத்தைத் தெரிந்து கொள்ளாமல் என் எண்ணத்தை இந்தக் கல்யாணத்தின் மீது திணிப்பது தான். நான் இளவஞ்சியிடம் சொல்லியிருந்தேன் 95% இந்தக் கல்யாணம் நான் நினைப்பது போல் நடக்கத்தான் வாய்ப்பிருக்கிறது ஆனால் நான் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் மனநிலையைப் பொறுத்து 5% மாற வாய்ப்பிருக்கிறது.

Survival of the fittest என்பது தான் இதைப்பற்றி நினைத்ததும் நினைவுக்கு வருகிறது. நான் என்னுடைய சம்பளம், நல்ல பிள்ளைத்தனம், குடும்பம் இவற்றை வைத்து அந்தப் பெண்ணை அவர்கள் குடும்பத்தை என்பக்கம் இழுக்கப்பார்க்கிறேன் என்று நினைக்கத் தோன்றுகிறது. என் சொந்தத்தில் என் போன்ற மாப்பிள்ளைகள் கிடைப்பது கஷ்டமாகயிருந்தாலுமே கூட தாலி கட்டாத திருமணத்திற்கு ஒப்புக்கொள்வார்களா என்ற கேள்வி இருந்தது. இன்னமுமே கூட என் அப்பா இந்த விஷயத்தில் என் பெயரில் கோபமாகவும், என்னை காம்ரமைஸ் செய்துவிடும் எண்ணத்தோடும் இருந்தாலும். செய்தால் இப்படிச் செய்து கொள்வது இல்லை சும்மா இருப்பது என்ற முடிவில் இருக்கும் என்னை அத்தனை சீக்கிரம் அவரால் மாற்றிவிட முடியும் என்று நான் நினைக்கவில்லை.

எனக்கு அந்தப் பெண்ணை உட்காரவைத்து நான் ஏன் இப்படிச் சொல்கிறேன், இப்படி ஒரு கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று விளக்க ஆசை. என்னால் அந்தப் பெண்ணை என் காரணங்கள் சொல்லி கன்வின்ஸ் செய்துவிட முடியும் என்று நினைக்காவிட்டாலும். தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தெரிந்துகொள்ளவாவது வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அம்மாவிடம் பேசியதிலிருந்து அதற்கான தேவை கொஞ்சம் கம்மியாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் அம்மா அப்பாவிற்குப் பெண்ணைப் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள் நானும் பெண்ணைப் பார்த்தேன், விளையாட்டிற்காக என்று இல்லாவிட்டாலும் வரும் பெண் எப்படிப்பட்டவளாக இருந்தாலும் கவலையில்லை என்ற எண்ணம் தான் இருக்கிறது இப்பொழுது வரையில். நான் என்னுடைய அனுபவத்தை வைத்து தப்புக் கணக்கு போடுகிறேனாகக்கூட இருக்கலாம். ஆனால் இன்று நான் எதை நம்புகிறேனோ அதன் படி வாழவே விரும்புகிறேன், நாளை நான் மாறலாம் என்றாலும் அதற்காக என்னை இப்பொழுது மாற்றிக் கொள்ள விருப்பமில்லை.

நான் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து என்று நினைக்கிறேன் அம்மாவிடம் சொல்லி வந்திருக்கிறேன் என் கல்யாணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று. விடலைத்தனத்தில் தோன்றிய இந்தத் தேடல் நான் சம்பாதிக்கத் தொடங்கியதும், நண்பர்களுடைய விமரிசிகையான கல்யாணங்களைப் பார்த்ததும் கூட மாறிவிடவில்லை, சொல்லப்போனால் இன்னமும் கூட அதிகரித்தது. மூன்று விஷயங்கள் “நான் சில வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு கல்யாணம்” “என் அக்காவின் கல்யாணம்” “ஒரு quote" இவை தான் நான் இன்றளவும் நான் இவ்வளவு தீவிரமாய் இதைப் பற்றிக் கொள்ள என்று நினைக்கிறேன். என்னைத் தெரிந்தவர்களுக்கு நான் இந்த விஷயத்தில் இத்தனை தீவிரமாய் இருப்பது கூட ஆச்சர்யமாகயிருக்கும். நான் வாழ்க்கையை அதன் போக்கில் ரசிப்பவன், அதிகமாக அதை என் போக்கில் மாற்றிக் கொள்ள விரும்பாதவன். என் வரையில் செய்யப்படக்கூடிய சிறிய மாற்றங்களை மட்டும் செய்து அதன் போக்கில் ஆனால் மனதளவில் சந்தோஷமாக வாழ்பவன். நான் இந்த விஷயத்தை புஷ் செய்வதால் இந்த வகையில் கூட எனக்குப் பிரச்சனை தான் என்றாலும் அப்படியே தொடர்வதற்கு முக்கியக் காரணம் காந்தி.

ஜெயமோகன் தற்சமயம் எழுதிவரும் இடுகைகளை அதன் ஒரு பாரா படித்துப் பின்னர் பிடித்திருந்தால் தொடர்பவன் என்கிற வகையில் அவருடைய காந்தி பற்றி இடுகைகளை கவனமாகப் படித்து வருகிறேன். ஜெயமோகனின் இடுகைகளை நீங்கள் ஒரு மனநிலையில் இருந்தால் படிக்கலாம்; அதாவது அவர் எழுதுவதைத் தவிர்த்தும் உண்மை இருக்கும் என்றும் அவர் எழுதுவது ஒரு பக்கம் தான் என்றும் தெளிவிருப்பவர்கள் அப்படிச் செய்யலாம். நான் அப்படித்தான் ஜெயமோகனைப் படிப்பது, அவரைப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே காந்தி பற்றிய படித்த கேட்ட உணர்ந்த விஷயங்கள் எனக்காய் உண்டு அதனால் ஜெமோவின் மோடி மஸ்தான் வேலை என்னிடம் அத்தனை பலிக்காது. காந்தி தான் உண்மையென்று நம்பியதை எத்தனை பாடுபட்டாவது நிறைவேற்றுவதில் குறியாக இருந்தார் என்பது எனக்குத் தெரியும் அந்த மாதிரி ஆட்களால் தான் தான் இப்படிப்பட்ட quotationஐ சொல்லவோ இல்லை செயல்படுத்தியிருக்கவோ முடியும். believe in something, and not to live it, is dishonest. எவ்வளவு பெரிய உண்மை.

நான் என் வாழ்க்கையில் சுயமுன்னேற்ற புத்தகங்கள் படித்தது கிடையாது, எனக்கு அதில் நம்பிக்கையும் கிடையாது. ஆனால் இந்தக் கோட் என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்த சமயத்தில் நான் பார்க்க நடந்த நண்பர் ஒருவரின் திருமணமும் என் அக்காவின் திருமணமும் என்னை இதில் என் நம்பிக்கையில் இன்னமும் உறுதியாக இருக்க வைத்தது. அக்காவின் திருமணம் வீட்டில் சிறிய முறையில் தாலி கட்டப்பட்டு பின்னர் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து ரிஷப்ஷன் மட்டும் வைக்கப்பட்டது. வீட்டில் தாலி கட்டும் விஷயம் கூட கடைசியில் மாப்பிள்ளையை கட்டாயப்படுத்தி செய்தது. மாப்பிள்ளைக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்பது என்னை எவ்வளவு சந்தோஷப்படுத்தியிருக்கும் என்பது சொல்லி நம்ப முடியாதது. ஆனால் இதில் காதல் திருமணத்திற்கான ஒரு எட்ஜ் இருந்தது, அக்காவின் புரிதல்கள் என்னை ஒத்தவை என்பதால் இதில் சம்மதம் பெற வேண்டியிருந்தது என் அப்பா அம்மாவிடம் தான் என்பதால் சுலபமாக நடந்துவிட்டாலும் அதுவும் ஒரு முக்கியக் காரணம் நான் என் வழியில் இன்னமும் கூட விடாப்பிடியாக இருப்பதில்.

நான் பார்த்து நடந்த அந்த இன்னொரு திருமணம் நண்பர் ஒருவருக்கும் அவருடைய சொந்தக்காரப் பெண்ணுக்கும் நடந்தது. நண்பர் முழு அளவில் நாத்தீகர் என்று நினைக்கிறேன் அப்படியே நம்புகிறேன், ஆனால் சொந்தக்களுக்காக திருமணம் செய்து கொண்டார். என்னால் அந்தத் தர்மசங்கட நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் நான் நினைத்தேன் என்னளவில் அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுப்பதில்லை என்று. ஆயிரம் ஆனாலும் நான் இஷ்டப்படுவது போல் தான் திருமணம் இருக்க வேண்டும் என்று, நாம் என்ன தான் மறுத்துச் சொன்னாலும் தமிழகம் இன்னமுமே கூட ஒரு male dominated society தான். ஆனால் என் வரையில் நான் இதை தவறாக உபயோகப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். தாலி கட்டுவது என்பது பெண்ணை அடிமைப்படுத்துவது என்றே இன்னமும் நினைக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு இன்று புரியாதாயிருக்கும் அம்மா சொல்கிறார்கள் சித்தப்பா சித்தி சொல்கிறார்கள் என்று செய்து கொள்ளலாம், அப்படி செய்விப்பதில் எனக்கு வருத்தமே என்றாலும் இது நான் நம்புவது; முழு மனதாய் என் மன ஆழத்திற்கு நம்புவது என்னால் அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கவே முடியாது.

திருமணம் என்பது ஒரு கொண்டாட்டம் தான் நான் மறுக்கவில்லை, இரண்டு பக்கத்து குடும்பங்களும் கலந்து கொண்டு நடக்கும் கொண்டாட்டம் ஆனால் என் வரையில் என் குடும்பத்தில் நான் பார்த்து நடந்த எந்த திருமணமும் அப்படியில்லை, விதியே என்று வந்து விட்டு நகர்வதும் அதற்கான செலவுகளும் நிச்சயம் தேவையற்றதே என்று நினைக்கிறேன். வாழ்க்கையையே கொண்டாட்டமாக வாழ நினைக்கும் எனக்கு ஒரு நாள் கொண்டாட்டம் அவசியமில்லாதது எனக்கு நாட்களின் மீதிருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை, பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றை நான் கடந்துவிட்டதாக நினைத்தாலும் இன்னமும் ஒரு சின்னக் குறுகுறுப்பு இருக்கத்தான் செய்கிறது. நான் நினைத்துப் பார்க்கிறேன் எனக்கு நானே உருவாக்கிக் கொண்ட நாத்தீகவாத இமேஜோ இல்லை பார் நான் எப்படி என் இஷ்டம் போல் திருமணம் செய்து கொள்கிறேன் என்கிற ஈகோவோ இதன் பின்னால் இல்லை என்பதை. நான் இல்லை என்று சொன்னாலும் அது இருக்கத்தான் செய்கிறது. ஆயிரம் ஆனாலும் நாம் அனைவரும் முகமூடிகளுக்காகத்தான் வாழ்கிறோம் என்று நினைக்கிறேன். எனக்கு பிடித்தமானதாய் நாத்தீகவாதியாய், கடவுள் மறுப்பாளனாய், ஆணாத்திக்க வாதியாய் அழகான முகமூடியை நான் அணிந்து கொள்கிறேன். முகமூடிகளுக்கான தேவை எனக்கு இல்லை என்பது எத்தனை பெரிய பொய்யாக மட்டும் இருக்க முடியும் என்று நினைத்தபடி.

Read More

Share Tweet Pin It +1

21 Comments

In Only ஜல்லிஸ்

நட்சத்திரக் கேள்விகள்

நண்பர்கள் சிலர் மீள்நட்சத்திரமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு போட்டிருந்தார்கள் என்று சென்ஷி சொல்லிக் கேள்விப்பட்டேன். முன்பே சொன்னது போல் இது தொடர்வதில் எனக்கு இருக்கும் பிரச்சனையே. இசை போட்ட பதிவை நான் ரீடரில் பார்ப்பதற்கு முன்பே சென்ஷி சொன்ன காரணத்தால் போய்ப் பார்த்தேன்.

நட்சத்திரமாக என்னை மறுமுறை தேர்ந்தெடுத்தற்குக் காரணம் தமிழ்மணம் தான் சொல்ல வேண்டும். ஆனால் என்பக்கத்தில் கிளப்பப்பட்டிருந்த அவதூறை மட்டும் இங்கே சரி செய்து கொள்கிறேன். தமிழ்மணம் நீங்கள் முன்னமே நட்சத்திரமாகியிருந்தீர்களா என்று கேட்டிருந்தார்கள் தான். அதற்கு பதிலாக நான் அனுப்பியதை மட்டும் இங்கே பிரசுரித்துக் கொள்கிறேன். இதற்கு தமிழ்மணம் அளித்த பதிலை நான் வெளிவிட முடியாது. அவர்கள் வேண்டுமானால் வெளிவிடலாம்.

அன்புள்ள தமிழ்மண நட்சத்திர நிர்வாகிக்கு,

நான் முன்னமே நட்சத்திரமாக இருந்திருக்கிறேன். இரண்டாம் முறை இருப்பதில் எனக்கெதுவும் வருத்தமில்லை என்பதை நாசூக்காக சொல்லிவிடுகிறேன், நீங்கள் குறிப்பிட்ட தேதி கூட பிரச்சனையில்லை. இனி உங்கள் விருப்பம்.

மோகன்தாஸ்


இதுதான் நான் அனுப்பிய பதில், நான் ஏன் சம்மதம் தெரிவித்தேன் என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. இதை வைத்து பின்னூட்ட ஜல்லி அடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று மட்டும் "ரொம்ப நாள் கழிச்சு ரசித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்".

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In பயணம் லதாக் பயணம்

லாமாக்களின் தேசம்

பதினைந்து நாட்களுக்கான ஒரு பயணத்திட்டத்தை எத்தனை நேர்த்தியுடன் செய்ய முடியுமோ அத்தனை நேர்த்தியுடன் செய்யப்பட்ட பயணம் நான் லதாக் சென்று வந்த பயணம். மூன்று நபர்கள் சூப்பர் பைக்கில்(பிரபு, சுமித், சுனில்), ஒரு ஆள் பல்ஸரில்(சேத்தன்) மற்றும் நான் என மொத்தம் ஐந்து பேர். பைக்குகள் நான்கையும் நாங்கள் கிளம்புவதற்கு முன்பே சண்டிகர் அனுப்பிவிட்டு நாங்கள் அங்கே சென்று பிக்கப் செய்து கொள்வதாக ப்ளான். வண்டிக்குத் தேவையான சாமான்களையும் அந்தப் பார்சலிலேயே அனுப்பிவிட்டு, நாங்கள் மட்டும் வெள்ளிக்கிழமை காலை பெங்களூரில் இருந்து டெல்லிக்கு கிளம்பினோம். முன்பே இந்த மக்களுடன் xBhp வழியாய் பயணங்கள் சென்றிருந்தேன் அதுமட்டுமில்லாமல் ஒருவர் என்னுடன் தற்சமயம் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் மற்றவர் வேலை பார்த்தவர் என்பதால் மிகச்சுலபமாக எங்களால் உரையாட முடிந்திருந்தது. முன்னிரவே கிளம்பிப்போய் விமானநிலையத்தில் பௌர்னமி நிலவை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம்.

டெல்லியில் இறங்கிய பொழுது தான் அந்தச் செய்தி காதிற்கு வந்தது, பைக்குகள் இன்னும் சண்டிகர் சென்றடையவில்லை என்றும், டெல்லியில் இருந்து அனுப்பிவிட்டதாகவுமான ஒன்று. மற்றவர்களைப் பற்றித் தெரியாது, ஆனால் நான் ஆரம்பத்தில் இருந்தே இந்த பதினைந்து நாள் லதாக் பயணம் முழுக்க மொக்கையாக இருக்கப்போகிறது என்று பயந்து கொண்டே இருந்தேன், ஏனென்றால் சூப்பர் பைக்குகள் ஆகட்டும் சாதாரண பைக் ஆகட்டும் பிரச்சனை என்பது எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். ஏதாவது ஒரு பைக்கிற்கு பிரச்சனை வந்தால், அஷ்டே முடிந்தது; ஒரு நாள் பிளான் அவுட். பின்னர் லதாக் பயணத்தை எப்படித் திட்டமிட்டிருந்தோம் என்று சொல்லும் பொழுது ஒரு நாள் ஊற்றிக் கொண்டால் நடக்கும் பிரச்சனை புரியும். எனவே நான் அவர்கள் பைக்குகள் சண்டிகர் சென்றிருக்கும் என்று நினைக்கவேயில்லை பெங்களூரில் இருந்து கிளம்பும் பொழுது, அது அப்படியே நடந்தது. டெல்லியில் இருந்து ஒரு இண்டிகா பிடித்துக் கொண்டு சண்டிகர் கிளம்பினோம், வழியெல்லாம் சுனில் பைக்குகளைப் பற்றி பார்சல் அலுவலகத்தில் விசாரித்தபடி வந்தார்.

ஆனால் மற்றவர்கள் அப்படி இல்லையே, பைக் சென்று சேராவிட்டால் அன்றிரவு மணாலி சென்று சேரும் எண்ணம் பாழ் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். பைக்களை கொண்டு வந்த குட்டி 404 சின்ன ஆக்ஸிடெண்டில் சிக்கிக் கொண்டாதாகக் கேள்விப்பட்டதும் இவர்கள் தலைகீழாக நடக்கத் தொடங்கியிருந்தார்கள், சும்மா கிடையாது எல்லா வண்டிகளும், வண்டிக் காசுக்கு மட்டுமே லட்சங்களை அழுது வாங்கியவை. இருக்காதா பின்ன. சண்டிகரில் ஒரு ஹோட்டல் எடுத்துக் கொண்டு தங்கினோம், பார்சல் அனுப்பி வைத்த கம்பெனியின் தொலைபேசி அலைப்பிற்காகக் காத்திருந்த படி. டெல்லி - சண்டிகர் அதிக தொலைவு கிடையாது நாங்கள் மதிய சாப்பாடிற்கெல்லாம் சண்டிகர் வந்திருந்தோம். மதிய சாப்பாட்டை முடித்ததும், மேற்படி பைக் நண்பர்கள் தங்களுடைய பைக்குகளைத் தேடிச் சென்று வருவதாகச் சொல்லிக் கிளம்பினர். நான் ஹோட்டல் அறையில் சுகவாசியாக தூங்கிக் கொண்டிருந்தேன்.

திங்கட் கிழமை மாலை பைக்குகள் வந்து சேர்ந்திருந்தன, 404 கீழே விழுந்ததாலோ என்னவோ இவர்கள் வண்டியில் அத்தனை ஸ்க்ராட்ச், சுனிலின் லைட் ஒன்று உடைந்துவிட்டிருந்தது, இப்படி சின்னச் சின்ன பிரச்சனைகள். அந்த பார்சல் சர்வீஸ்காரனை நன்றாகத் திட்டித் தீர்த்துவிட்டு வண்டியை எடுத்து வந்திருந்தனர். யார் முகத்திலும் சந்தோஷமேயில்லை, பிரபு அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்பதால் அவன் மட்டும் சோகமாக இல்லாமல் இருக்க நாங்கள் இருவர் மட்டும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம், எனக்கு உள்ளூற ஆஹா மொத்த டிரிப்பும் இப்படி ஆப்பாவே ஆய்டப்போகுது என்ற கவலை அதிகமாயிருந்தது. அடுத்த நாள் காலை கிளம்பலாம் என்று முடிவானது அதாவது சனிக்கிழமை. இப்பொழுது லக்கேஜ்கள், பெட்ரோல், டெண்ட் வகையறாக்கள் மற்றும் எனக்காக ஒரு டாடா இண்டிகா புக் செய்து கொண்டோம் மணாலி வரைக்கும்.

இண்டிகா டிரைவர் குண்டா செகப்பா பழம் மாதிரி, அருமையா ஓட்டினார். எனக்கு எப்பொழுது டிரைவர்களுடன் ஒரு வேவ் லெந்த் அருமையாக செட் ஆகிவிடும் அந்து இந்த ட்ரிப் முழுவதுமே நடந்தது. சண்டிகரில் இருந்து பிலாஸ்பூர் செல்ல இரண்டு வழிகள் உண்டு, பஞ்சாப் வழியாக ஒன்று ஹரியானாவில் நுழைந்து பின்னர் வரும் வழி ஒன்று. நான் வந்த டாக்ஸிக்கு பஞ்சாப்பில் பர்மிட் இல்லாததால் பைக்காரர்களும் எங்கள் வண்டியும் இரண்டு வெவ்வேறு வழியாகச் செல்வதென்றும் பிலாஸ்பூரில் சேர்ந்து கொள்வதென்றும் முடிவெடுத்திருந்தோம். பைக் ஓட்டுபவர்களுக்கு காட்டு வழி பிடிக்கும் என்பதால் அவர்கள் அந்த வழியில் செல்லத் தீர்மானிக்க நாங்கள் தனியாகப் புறப்பட்டோம், சண்டிகரில் நாய்க்குட்டியொன்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த பிகர் ஒன்றை புகைப்படம் எடுத்ததைத் தவிர்த்து இதுவரை நான் படம் எதுவும் எடுத்திருக்கவில்லை. இந்த வழியில் கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்தாலும், நமக்காக காத்திருக்க வைக்க கூடாது என்று முன்னமே முடிவு செய்து வைத்திருந்ததால் அதிகம் நிறுத்தி புகைப்படம் எடுக்கவில்லை. டிரைவருடன் பேசியபடியே, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி நாங்கள் பிலாஸ்பூர் சென்று சேர்ந்த பொழுது இவர்கள் முன்னவே வந்து சேர்ந்திருந்தார்கள், இடையில் ஒரு இடத்தில் புதிதாய்க் கட்டிய பாலம் இடிந்து விழுந்திருந்ததால், வண்டியை தண்ணிக்குள் ஓட்டி வேறு வந்து சேர்ந்திருந்தோம்.

இங்கே டிரைவர் ஹிமாச்சலில் இருந்து எதிர் திசையில் கீழிறங்கும் வண்டியிடம் சைகையிலே என்னவோ கேட்டபடியும் பதில் சொன்ன படியும் வந்து கொண்டிருந்தார். பின்னர் தான் தெரிந்தது RTO யாரும் வழியில் நிற்கிறார்களா என்பதையே கேட்டுக் கொண்டு வந்ததாகச் சொன்னார், பின்னர் எப்படி எல்லாம் காசு புடுங்குவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். பிலாஸ்பூருக்கு பக்கத்தில், சாகர் வியூ என்ற பெயரைப் பார்த்ததும் தோசை கிடைக்கும் என்று நினைத்து சுனில் அங்கேயே டின்னர் முடித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் தோசை தவிர்த்து எல்லாம் கிடைத்தது. பிலாஸ்பூரில் தங்கிவிட்டு விடியற்காலை கிளம்பலாமா இல்லை இரவு பயணம் செய்யலாமா என்ற கேள்வி எழுந்தது, இந்தப் பயணத்திற்கு கிளம்பும் முன்னமே இரவு பயணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம் என்றாலும் வண்டி வராததால் தாமதமான ஒருநாளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இரவே கிளம்பி மணாலி போய்ச்சேருவது என்று முடிவெடுத்தோம்.

எட்டு இல்லை ஒன்பது மணியிருக்கும் நாங்கள் பிலாஸ்பூரில் இருந்து கிளம்பிய பொழுது டிரைவர் எங்களுடன் சாப்பிடவில்லை என்பதால் நாங்கள் அதுவரை பைக்குகளுக்கு பின்னாலேயே வந்ததால் அவர் தன்னுடைய இன்ஜினையும் ஓட்டுநர் திறமையையும் நிரூபிக்க நினைத்து அடித்துக் கொண்டு பறந்தார். பெரும்பாலும் நான் என்பக்கத்து கண்ணாடியை ஏற்றி வைத்திருக்க மாட்டேன் அதனால் அந்த இரவில் ஹிமாச்சல் காற்று உடம்பில் பட்டுப் பரவி அதுவரை எங்கோ அடைந்து போயிருந்த பயண உற்சாகம் நிரம்பி வழியத் தொடங்கியிருந்தது என்னிடம். அவருக்குத் தெரிந்த ஒரு ஹோட்டல் அருகில் நிறுத்திவிட்டு அவர் சாப்பிட நான் ஒரு சாயா அடிக்க நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள் அவர்கள் இடையில் ஒரு அணையில் நிறுத்திப் புகைப்படம் எடுத்துவிட்டு பின்னால் வந்தார்கள் தானென்றாலும் இண்டிகாவை இவர் ஓட்டி வந்தது வேகமாய், எப்பொழுது டிரைவர் வேகமாய் வண்டி ஓட்டினால் நான் மெதுவாய் ஓட்டுங்கள் என்று சொல்லவே மாட்டேன் அதை அவர் முழுவதுமாக அனுபவித்தார்.

சுந்தர் நகர், மாண்டி, பாண்டூ வழியாக குல்லு வரும் வரை பைக்களுக்கும் இண்டிகா டிரைவருக்கும் நல்ல காம்படிஷன் சென்று கொண்டிருந்தது. நானாய் எதுவும் சொல்லாமல் மௌனமாய் அதை ரசித்துக் கொண்டிருந்தேன். சில இடங்களில் வேறு வழி எடுக்க வேண்டிய இடங்களில் மாற்றிச் சென்றுவிடாமல் இருக்கும் பொருட்டு அவர்கள் முந்திக் கொண்டு செல்வது என்று அந்த மொத்த இரவும் இப்படியே சென்றது. குல்லுவில் தங்குவதா மணாலி சென்றுவிடலாமா என்ற கேள்வி வந்தது. சண்டிகரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஏறத்தொடங்கிய குளிர் நாங்கள் குல்லு வரும் பொழுதெல்லாம் கொஞ்சம் தாங்க முடியாததாய் ஆகியிருந்தது குல்லுவை அடைந்த பொழுது பதினொன்று மணியிருக்கும். பின்னர் மணாலியே போய்விடலாம் என்று நினைத்து அங்கிருந்து ஒரு புஷ். நாங்கள் இடம் கிடைக்கும் என்று நினைத்துச் சென்ற இடத்தில் அறைகள் கிடைக்காமல் பின்னல் Hotel Piccadillyல் தங்கினோம்.

ஒரேயடியாய் சண்டிகரில் இருந்து மணாலி வந்ததால் கொஞ்சம் போல் உடம்பில் எல்லாம் வலியிருந்தது என்றாலும் அதுவரை எடுத்தப் புகைப்படங்களை சுனிலின் லாப்டாபிற்கும் என்னுடைய எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கிற்கும் மாற்றிவிட்டு உறங்கச் சென்றோம்.

பயணத்தில் எடுத்த புகைப்படங்கள் கொஞ்சம்.

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

IMG_8824

IMG_8812

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes


தொடரும்...

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In நட்சத்திரம்

நட்சத்திர வாரம்

இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்து நான்கு-ஐந்து வருடங்கள் இருக்குமாயிருக்கும். அத்தனை எழுதுவதில்லை தற்சமயங்களில் என்பதைப் போல் அத்தனை வாசிப்பதுமில்லை, எப்பொழுதாவது தீவிரம் வந்தது போல் இரண்டு மூன்று வாரங்கள் எழுதமுடிவதுண்டு, தொடர முடிவதுண்டு அவ்வளவே. டிவிட்டரில் கொஞ்சக் காலமாய் எழுதுவதாலோ என்னவோ இப்பொழுதெல்லாம் வளவள என்று எழுதமுடிவதில்லை. சரி இந்த வாரம் கொஞ்சம் தொடர்ச்சியாக எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம். நட்சத்திரமாய் இருக்கச் சம்மதமா என்று கேட்டு வந்த மெயிலைப் பார்த்ததும் கொஞ்சம் சந்தேகமாய் இருந்தது தான் என்றாலும், சரி நம்மையும் இன்னமும் மதிக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது கண்களில் நீர் கட்டிக் கொண்டது.

எதெல்லாம் எழுதலாம் என்பதைப் பற்றி பெரிதாய் முடிவு செய்ய முடியவில்லை. இன்னமுமே கூட யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எத்தனை வித்தியாசமாய் எழுத முடியும் என்று தெரியைல்லை, வித்தியாசமாய் எழுதவேண்டும் என்பதில் கூட பெரிய விருப்பம் இல்லை இப்பொழுது. காலையில் புதிதாய் எழுதிய பதிவொன்றும் மாலையில் முன்பெழுதிய பதிவொன்றை மறுபதிவாகவும் தள்ளிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன். கீழிருப்பது முந்தைய முறை தமிழ்மண நட்சத்திரமாய் இருந்த பொழுது எழுதிய இடுகைகள்.

Read More

Share Tweet Pin It +1

29 Comments

Popular Posts