In தொடர்கதை

தேவதையின் காதலன் - 2

நான் டிபன்பாக்ஸை திரும்பக் கொடுக்கும் சாக்கில், கழுவிவிட்டு உள்ளே லவ்லெட்டர் வைத்துக் கொடுத்தேன். பெரும்பாலும் இது மாதிரியான லெட்டர்கள் கிழித்துப் போடப்படும், இல்லை கூப்பிட்டு திட்டுவிழும், ஆனால் இந்த முறை லெட்டர் பிரின்ஸியிடம் சென்றது. விஷயம் சொல்லிமுடித்ததும் அவளை வெளியே அனுப்பிவிட்டார். நாங்கள் மூன்று பேரும் தலையைக் குனிந்தபடியே உள்ளே நின்றோம். பிரின்ஸிபால் ஜூலியன் ஒரு தமிழ்ப் பேராசிரியர்.

"யார் எழுதினா இந்த லெட்டர்?" சத்தமாய்க் கேட்டார்.

நான், "சார், எழுதினது நான்தான்; அந்தப்பொண்ணு தப்பா இவங்களையும் இழுத்துவிட்டுருச்சு." சொல்லி விட்டு தலைகுனிந்து நின்றேன். பிரின்ஸிபால் அவர்கள் இருவரையும் பார்த்தார். இருவரும் ஒன்றும் தெரியாத பிள்ளைகளைப் போல் பாவனை காட்டிக்கொண்டிருந்தார்கள்.

"ஏண்டா உங்களுக்கெல்லாம் எவ்வளவு திமிரிருந்தா, முதல் நாளே லவ்லெட்டர் கொடுப்பீங்க, உங்களுக்கெல்லாம் யார்றா சீட் கொடுத்தா காலேஜில. சரி நீங்க இரண்டு பேரும் வெளியே நில்லுங்க" சொல்லி அவர்களை வெளியே அனுப்பினார்.

என்னை மேலும் கீழும் பார்த்தவர், "சொல்லுங்க சார்? உங்கப்பா அம்மா என்ன பண்ணுறாங்க?"

"சார், ரெண்டு பேரும் டீச்சர்."

அவர் முகத்தில் சட்டென்று ஒரு வித்தியாசம் தொடங்கி மறைந்தது, "டீச்சர் பையனா நீ, உன்னையெல்லாம் என்ன பண்ணினா தகும்?" என்ன இருந்தாலும் ஆசிரியர் பையன் தன் பையன் போலத்தான் என்ற எண்ணம் வந்திருக்குமாயிருக்கும்.

"இல்லை சார், தெரியாமல் எழுதிட்டேன் சார். இனிமேல் இப்படி பண்ணமாட்டேன் சார்." தடவி தடவி சொன்னேன்.

ஒரு மணிநேரம் பாட்டுவிழுந்தது, ஆசிரியர் புள்ளைகள் முன்மாதிரியா நிக்கணும் இந்த மாதிரி தலைகுனிந்து நிற்கக்கூடாது என்றெல்லாம் சொல்லி.

"இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங், இதுக்கு மேல உன்பேர்ல யாராவது தப்பு சொன்னாங்கன்னா அவ்வளவுதான் நீ மேடத்தைப் பார்க்க வேண்டிவரும். அப்புறமென்னா டிசிதான். சரி அவனுங்களையும் கூப்பிட்டு ஒரு அப்பாலஜி லெட்டர் கொடுத்துட்டு ஒழுங்கா வகுப்புக்குப் போங்க."

"சார் அவங்க வேணாம் சார். நான் வேணா எழுதித்தரேன் சார். நான்தான் சார் பண்ணினது. அவங்க பாவம் சார்."

நான் சொன்னவுடன் சிறிது நேரம் உற்றுப் பார்த்தவர், "சரி எழுதிக் கொடுத்துட்டு போ."

நான் எழுதிகொடுத்துவிட்டு வெளியே வந்து அவர்களைப் பார்த்து பாவமாய்ச் சிரித்தேன். அவர்களும் நானும் சிறிது தூரம் அங்கிருந்து நகர்ந்ததும்...

"மாமு, அப்ப கௌசல்யா எங்களுக்கு தங்கச்சி, அதானே?" சொல்லிவிட்டு ராஜேஷ் சிரித்தான்.

"மாப்ள, முத நாளே அப்பாலஜி லெட்டர்டா, அரசியல்ல இதெல்லாம் சகஜம்னாலும் இது கொஞ்சம் ஓவர் மச்சி, தமிழ் மீடியம்னதுமே நினைச்சேன். சரியாப் போச்சு. இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு கவிதை தோணுது சொல்லவா?" இருவரும் தலையிலடித்துக் கொண்டனர்.

"கேட்காட்டி விடவா போற சொல்லித்தொலை" பிரபு.

===
"காதல் கடிதம்
எழுதிய என்னை
மன்னிப்பு கடிதம்
எழுதவைத்ததேன்
பெண்ணே?

ஒருவேளை
தேவதைகளுக்கு
மனிதர்களின் மொழி
புரியாதோ?

நான்
உன்னைக்
காதலிக்கிறேன் இந்த
மூன்று வரியை விளக்க
உனக்கு முனைவர்
பட்டம் பெற்றவர் தேவையோ?

உனக்கும் எனக்குமான
காதலை
ஊருக்குத் தெரியவைத்தாயே
சரிசரி ஒருநாள்
தெரியவேண்டியதுதானே!"
===

"மாம்ஸ் உண்மையைச் சொல்லு, நீ அவள உண்மையிலேயே காதலிக்கிறியா, நம்ம ஸ்கூல்ல பார்க்காத ஃபிகரா, இவள்லாம் என்னடா பம்மாத்து. இதெல்லாம் சரியாத் தெரியலை மவனே, டாடி போட்டு வாங்கிடுவாரு ஞாபகம் இருக்கில்லை." அவன் சொன்னதும் எங்க அப்பா வேறு மனதில் வந்து போனார், நான் ஒரு முறை தலையை வழுக்க ஆட்டி அந்த நினைவை நீக்கினேன்.

"அப்படியெல்லாம் இல்லடா, ஏதோ சுமாரா இருக்காளேன்னு லெட்டர் கொடுத்தா. இப்பிடிச் செய்வான்னா நினைச்சேன். சரி சரி, பார்த்துப்போம். இன்னும் மூணுவருஷம் இருக்குள்ள, நம்ம பழக்கவழக்கத்தை மாத்திக்க வேண்டாம். அப்பிடியே இருப்போம். ஸ்கூல் மாதிரியில்லாம இங்க அடிக்க மாட்டாங்ய, அதனால் ப்ராப்ளம் கிடையாது. ஆனா மாப்ள என்னமோ மனசுல இதுவரைக்கும் இல்லாத ஒரு லேசா உறுத்தல் வருதுடா, தப்பு பண்ணிட்டமோன்னு"

"மாம்ஸ், ரொம்ப ஃபீல் பண்ணுற. இதெல்லாம் நமக்கு சரிவராதுடா. அவளுக்கு ஒருநாள் நிச்சயம் தெரியவரும் நாம யாருன்னு. அதுவரைக்கும் வெயிட் அண்ட் சீ தான்." இந்த மாதிரி விஷயங்களில் ராஜேஷ் நன்றாக பேசுவான், ஆனால் பிரபு வாயை மூடிக்கிட்டு இருப்பான். ஆனா உதவின்னு வந்துட்டா முதல் ஆளா பிரபுதான் இருப்பான்.

நாங்கள் படித்த ஆங்கில மீடியம் பள்ளிகளில் லெட்டர் கொடுப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை, பெண்கள்தான் எங்களைக் கலாய்ப்பார்கள், 'தோடா, லெட்டர் கொடுக்கிறான் மொத நாளே!'ன்னு. நான் அதைத்தான் அவளிடம் இருந்து எதிர்பார்த்தேன். ஆனால் நிச்சயமாய் பிரின்ஸிபால் ரூம் விசிட் நாங்கள் எதிர்பாராதது. சொல்லப்போனால் நாங்கள் மூன்று பேரும் சிறிது பயந்துதானிருந்தோம்.

o

நாங்கள் கல்லூரி நேரம் முடிந்து எல்லோரும் வீட்டிற்குச் சென்ற பிறகு, வகுப்பிற்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம், அப்பொழுது அங்கே எதையோ மறந்துவிட்டுப் போனதை எடுக்க வந்த கூடப்படிக்கும் ஒரு பெண், நாங்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து நேராய் எங்களிடம் வந்தாள்.

"வணக்கம், என் பேரு சிவசங்கரி, ம்ம்ம் வந்த முதல் நாளே லவ் லெட்டரா, ஜமாய்ங்க, என்ன சொன்னாரு பிரின்ஸி?" சிரித்தபடியே கேட்டாள்.

"என்னங்க ஜமாய்க்கிறது, முதல் நாளே அப்பாலஜி லெட்டர் கொடுத்தாச்சு. ஆனாலும் உங்க ஃபிரெண்ட் ரொம்ப மோசங்க, இதுக்கு கூப்பிட்டுவச்சு கன்னத்தில அறைஞ்சிருக்கலாம்." நான் புலம்பினேன்.

"அவ என் ப்ரெண்டெல்லாம் கிடையாது, இருந்தாலும் நீங்க செஞ்சது மட்டும் சரியா, முதல்நாளே லவ்லெட்டர் எல்லாம் ரொம்ப ஓவர்." அவளிடம் கோபமிருந்தது.

"நான் உண்மையிலே இவ்வளவு சீரியஸா ஆகும்னு நினைக்கலை, பார்த்துட்டு கூப்பிட்டு திட்டுவாங்கன்னு நினைச்சேன். சரி போகுது விடுங்க. காலையிலே நீங்க சொன்னதைக் கேட்கலை, நீங்க எந்த ஊரு?" றகு நாங்கள் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்; கிளம்பும் தருவாயில், "நான் உங்களையெல்லாம் அண்ணான்னு கூப்பிடலாமா?"

அதற்கு நான் "என்னை நிச்சயமா கூப்பிடலாம், ராஜேஷையும் கூப்பிடலாம், ஏன்னா அவன் ஸ்கூல் டிக்கெட் ஒன்னை சைட் அடிக்கிறான்; அவளும்தான். ஆனா பிரபுவைப்பத்தி என்னால சொல்லமுடியாது. நீங்க அவனை வேணும்னா பிரபுன்னே கூப்பிடுங்களேன்." சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

அவளும் சிரித்துவிட்டு, "சரி அப்பிடியே கூப்பிட்டுருவோம். நான் வரேன்." சொல்லிவிட்டு நகர்ந்ததும். நாங்கள் சிரித்துக்கொண்டோம்.

அடுத்த நாள் நாங்கள் சீக்கிரமே வந்து சிவசங்கரியின் சீட்டின் மீது உட்கார்ந்து கொண்டு அவளுடன் பேசிக் கொண்டிருந்தோம். பொதுவாய் காலேஜ் பஸ்ஸில் வராதவர்கள் முன்னமே வந்துவிடுவார்கள். காலேஜ் பஸ்ஸில் வந்த கௌசல்யா, எங்களைக் கண்டுகொள்ளாமல் சிவசங்கரியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். நாங்களும் எதற்கு பிரச்சனையென்று சங்கரியிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து எங்கள் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டோம்.

நாங்கள் இங்கே வந்ததும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, ஆனால் சிறிது நேரத்தில் சரியாகி விட்டது.

வகுப்பு தொடங்கியது, லெக்சரர்ஸ் வந்து சிலபஸ் கொடுத்துவிட்டு, முன்னுரையைத் தொடங்கினர். நாங்கள் ஏதோ வேற்று கிரகத்து மனிதர்கள் போல் உட்கார்ந்திருந்தோம். டீ பிரேக்கின் போது நாங்கள் வெளியே செல்லவில்லை; உட்கார்ந்திருப்பதைப் பார்த்த சிவசங்கரி எங்களிடம் வந்தாள்.

"அண்ணே வெளியே போகலை?"

"இல்லைம்மா போகலை, சரி என்ன சொல்றா உன் ஃபிரண்ட்?" அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள இப்பொழுது எனக்கிருந்த ஒரே வாய்ப்பு சங்கரி தான்.

"நான் உங்ககூட பேசறது பிடிக்கலைன்னு சொன்னாள்."

நான் எதிர்பார்த்தது தான், "அதுக்கு நீயென்ன சொன்ன?" ஆர்வமாய்க் கேட்டேன்.

"மைண்ட் யுவர் ஓன் பிஸினெஸ்னு சொன்னேன், அவளுக்கு கோபம் வந்திருச்சு, ஆனா சிறிது நேரத்தில் அந்த விஷயத்தை விட்டுட்டா மற்ற விஷயங்களை பேசத் தொடங்கிட்டா." சொல்லிவிட்டு சிரித்தாள்.

நான் "ரொம்ப பசிக்குது, டிபன்பாக்ஸ் இருக்கா" கேட்டேன்.

அவள் அதற்கு பயந்ததைப் போல் நடித்து, "அய்யோ, உங்களுக்கு டிபன்பாக்ஸ் கொடுத்தால் திரும்பி சும்மா வராதே, உள்ளே பெரிய பாமோடல்ல வரும்." சொன்னவள் நேராய் போய் டிபன்பாக்ஸ் எடுத்துவந்து கொடுத்தாள்.

"அண்ணே எதுவும் சொல்றதுன்னா நேர்லயே சொல்லுங்க லெட்டர் எல்லாம் வேண்டாம்" சொல்லிவிட்டுச் சிரித்தாள். நாங்கள் அவசரமாய் அவளுடைய டிபன் பாக்ஸ் தோசைகளை சாப்பிட்டு முடித்து, "சிவா நாங்க கழுவி கொடுத்துருறோம்!" சொல்லி ராஜேஷிடம் டிபன்பாக்ஸை கொடுத்தேன். இதையெல்லாம் அவள் கவனித்துக் கொண்டிருந்தாள்.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பரவாயில்லை, தோசை எப்படி இருந்தது."

"பரவாயில்லை, சாப்பிடுறமாதிரிதான் இருந்தது. ஆனால் காரம் பத்தலை." நான் சொன்னதும்.

"ஆனால் இந்த மூஞ்சு மட்டும் ஏன் குரங்காட்டம் முளிக்குது." அவள் பிரபுவைத்தான் சொன்னாள்.

"அவன் மூஞ்சே அப்படித்தான், அதுசரி ஏன் நீ அவனை மட்டும் தனியா கவனிக்குற, இது சரியாத் தெரியலையே?" நான் சிரித்தேன்.

பக்கத்தில் வந்து என் தலையில் கொட்டிவிட்டு, "ஆரம்பிச்சிட்டீங்களா, இந்த வம்புக்கு நான் வரலை. என்னை விட்டுருங்க." சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

பிரபு என்னிடம், "மாம்ஸ் என் மூஞ்சு குரங்காட்டமா இருக்கு?" வருத்தமாய்க் கேட்டான்.

நான் ராஜேஷிடம் திரும்பி, "புதுசா ஒரு கதை ஆரம்பிக்குதுடா மாப்ள." சொல்லிச் சிரித்தேன். ஆனால் நான் இங்கே பேசி, சிரித்துக் கொண்டிருந்தாலும் என் மனம் முழக்க கௌசியிடம் தான் இருந்தது. அவள் இங்கு நடந்த அத்துனை நிகழ்ச்சிகளையும் கவனிக்காதது போல் இருந்தாள். நான் என் நோட்டையெடுத்து கவிதையெழுதத் தொடங்கினேன்.

===
"பார்த்தும் பார்க்காதது போல்
நடிக்கிறாய் தோழி,
நான் இருந்தும் இல்லாமல்
ஆய்விட்டேன் போடீ."
===

o

மதியம் சிவசங்கரியின் சாப்பாட்டுக்கு, ஒரு குஸ்காவும் வடையும் வாங்கிக் கொடுத்தோம். இப்படியே ஒரு வாரம் ஓடியது. நாங்கள் வகுப்பில் எல்லா லெக்சரர்ஸையும் ஓட்டிக்கொண்டிருந்தோம். இங்கே கல்லூரியில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது பிடித்திருந்தது. இப்படித்தான் ஒருநாள், பழனிவேல் C எடுத்துக்கொண்டிருந்தார். எடுத்துக்கொண்டிருந்தார் என்றால் மனப்பாடம் செய்ததை ஒப்பித்துக்கொண்டிருந்தார்.

நாங்கள் வேண்டுமென்றே சிரித்துக்கொண்டிருந்ததால், என்னையும் ராஜேஷையும் எழுந்து நிற்க வைத்தார். அவர் ஒரு ஃபார் லூப்பை விவரித்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் தடுமாறிக்கொண்டிருந்தார். அரைமணிநேரம் ஆகிவிட்ட பின்னர் கூட அவரால் முடியவில்லை. இதையெல்லாம் மிகவும் பொறுமையாய் பார்த்துக்கொண்டிருந்த பிரபுவால் அதற்கு மேல் தாங்கமுடியவில்லை. அவன் முகம் இன்னும் விகாரமானது. நாங்கள் தடுத்துப் பார்த்தோம் முடியவில்லை.

"சார் வருமா வராதா?" எழுந்து கேட்டேவிட்டான்.

வகுப்பே திரும்பி எங்களைப் பார்த்தது, அவளைத்தவிர. நானும் ராஜேஷும் குனிந்து சிரித்துக் கொண்டிருந்தோம். பழனிவேல் கோபமாகிவிட்டார். ஆனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை, அவர் முகமெல்லாம் சிவந்துவிட்டது.

"இன்னிக்கு கொஞ்சம் சரியாவரலை, எங்கையோ தப்பாகுது வேறயாராவது வந்து கிளியர் பண்ணறதுன்னா பண்ணுங்க." சொல்லிவிட்டு சேரில் உட்கார்ந்துவிட்டார்; கையை அசைத்து எங்களையும் உட்கார சொன்னார். பிரபுவால் அவனை கன்ட்ரோல் பண்ணவே முடியவில்லை, எழுந்துபோய் சொல்வதற்குத் தயாரானான். நானும் ராஜேஷும் அவன் தோளைப் பிடித்து அமுக்கி உட்காரவைத்தோம்.

அடுத்த அரைமணிநேரம் யாரும் பேசாமல் அமைதியாகவே கழிந்தது, அவர் போனதும் கௌசல்யா நேராக எங்களிடம் வந்தாள்.

"ஹலோ நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியாது, நானெல்லாம் படிக்க வந்திருக்கேன். நீங்க பண்ணறதால நாங்களும்தான் பாதிக்கப்படுறோம். இதையெல்லாம் நிறுத்திடுங்க..." அவளை முடிக்ககூடவிடாமல் ராஜேஷ் தொடர்ந்தான்.

"ஹலோ நீங்க நிறுத்துறீங்களா, எங்களைப் பார்த்தா பொறுக்கீங்க மாதிரியா தெரியுது? நாங்களும் படிக்கத்தான் வந்திருக்கோம். அந்தாளு மனப்பாடம் செய்துட்டு வந்து ஒப்பிக்கிறான். அதைக்கேட்டா என்னவோ பருப்பு மாதிரி பேசுறீங்களே, போங்கம்மா போய் கடம் தட்டுற வேலையைப் பாருங்க. இந்த அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வேற யார்க்கிட்டயாவது வைச்சுக்கோங்க!!" பிரபுவும் மிகவும் கோபமாக இருந்தான்.

"கடம் தட்டறதுன்னு சொல்றதெல்லாம் சரியில்லை, என்னவோ பண்ணி மார்க் வாங்க்குறோம் இல்லை, உங்களை மாதிரியா? படிக்கிற பிள்ளைங்களா நீங்கள்லாம், முதல் நாளே லவ் லெட்டர் கொடுத்துக்கிட்டு, லெக்சரர்ஸ் பாடம் நடத்த விடாம பண்ணிக்கிட்டு, நீங்கள்லாம் நிச்சயமா படிக்க வரலை, இதுல தப்பு சொன்னா கோபம் வருதாக்கும் கோபம்."

அவள் இப்படிச் சொன்னதும் பிரபு எங்களைப்பற்றிய ஒரு விஷயத்தை உளறிவிட்டான், நாங்கள் எதை மறைக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதைச் சொல்லிவிட்டான்.

"லவ் லெட்டர் கொடுத்ததுக்கு பிரின்ஸிபால் கிட்ட போட்டுக்குடுத்துட்டல்ல, அதுக்கப்புறம் அதப்பத்தி நீ பேசக்கூடாது, என்னாடி பெரிய மார்க் வாங்கியிருக்க, உன்னைவிட நாங்க மூணுபேருமே +2 ல மார்க் கூட, போதுமா, போய் உட்கார்ந்துக்க. வந்துட்டாளுங்க, அங்கேயிருந்து கடம் அடிக்கிறதுக்கு." இது பிரபு.

அவளால் நம்ப முடியவில்லை, எங்களாலும்தான்; எங்கள் வழக்கமே அப்படித்தான். நாங்கள் எங்கள் உண்மையான மார்க்கை சொல்லி தனியே பிரிந்து போகவிரும்பவில்லை, அதுமட்டுமில்லாமல் நிறைய மதிப்பெண் வாங்கிவிட்டும் இந்தக் காலேஜில் சேர்ந்ததால், உண்மையான மதிப்பெண் சொன்னால் நிறைய கேள்விகளை சந்திக்க வேண்டியிருக்கும், அதனால் நாங்கள் வாங்கிய மார்க்கில் பாதியைச் சொன்னோம். ஆனால் இந்த ஓட்டவாய் சொல்லுவான்னு நாங்க நினைக்கவேயி ல்லை, அவள் அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் போய் அவள் சீட்டில் உட்கார்ந்துவிட்டாள். சிவசங்கரி எங்களிடம் வந்தாள்.

"அண்ணே பிரபு சொல்றது உண்மையா?"

"ஆமாம்."

"இதையேன் நீங்க எங்ககிட்ட மறைச்சீங்க?"

"எங்களுக்கு மார்க்கை சொல்லிக்காட்ட விரும்பலை அதான் வேணாம்னு மறைச்சோம். மற்றபடிக்கு ஒன்னுமில்லை."

"ஆனாலும் இப்பத்தான் நீங்க பண்ணினது சரியில்லை, அப்ப உங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரியுமில்ல, அதான் நீங்க பாடம் நடத்தவிடாம பண்றீங்க. இனிமே இப்பிடி பண்ணாதீங்க. சரியா? ஆமாம் ஏன் நீங்க இன்ஜினேரிங் படிக்கலை?"

"இந்தக் கேள்விக்காகத்தான் நாங்க மார்க்கைச் சொல்லாம மறைச்சது, குடும்ப பிரச்சனைன்னு வச்சுக்கோயேன்." நான் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன்.

"ஆனா உங்களையெல்லாம் பார்த்தா படிக்கிற பசங்க மாதிரியே தெரியலை, ரௌடிங்க மாதிரி தான் இருக்கீங்க, அதுவும் இந்த மூஞ்சியைப் பார்த்தா சொல்ல வேண்டியதேயில்லை." அவள் பிரபுவைத்தான் சொன்னாள்.

நான் சொல்லத்தொடங்கும் முன், "வேணாம் ஒன்னும் சொல்லவேணாம், நான் இதைப்பத்தி பேசவேணாம்னு நினைச்சாலும் முடியலை. சரி இனிமே பிரபுவைப்பத்தி பேசலை, நீங்க வேற எதையும் நினைச்சுக்காதீங்க." சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

அடுத்த வாரங்களில் கௌசல்யா நடந்துகொள்ளும் முறையில் சிறிது வித்தியாசம் தெரிந்தது. வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது நாங்கள் ஜோக் அடித்தாள் திரும்பி பார்த்து சிரித்தாள். லேப்பில் ஒருநாள் ஒரு ப்ரோக்கிராம் வொர்க் ஆகவில்லையென சொல்லி சிவசங்கரி மூலம் பிரபுவை கூப்பிட்டனுப்பினாள். அவன் வேண்டுமென்றே அங்கேபோய் தெரியாதது போல் நடித்து, என்னைக் கூப்பிட்டான் அவள் சிறிது தூரம் நகர்ந்து செல்ல, நான் எரர்ரை சரிசெய்துகொடுத்துத் திரும்பினேன். ராஜேஷும் பிரபுவும் நக்கலடிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

"என்ன மாம்ஸ், காத்து உன் பக்கம் வீசுது போலிருக்கு!"

"தம்பி தெரியுமில்ல, அடுத்தது செகரட்டரி ரூமும் டிசியும் தான். அதனால பெட்டர் இதப்பத்தி பேசாம இருக்குறதுதான்."

தொடரும்...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In தொடர்கதை

தேவதையின் காதலன் - 1

பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்க வேண்டிய தருணம் அன்று  நான் சேர இருந்த கல்லூரி சிறியது எனக்கேள்விப்பட்டிருந்தேன் மொத்தமே நானூறு பேர்தான் படிப்பதாகதச் சொல்லிக் கேள்விப்பட்டேன். அன்று முதல் நாள் கல்லூரி என் பெற்றோர் உடன் வருவதாகச் சொன்னதை மறுத்து நான் மட்டும் வந்திருந்தேன் கல்லூரி தொடக்க விழாவுவிற்கு.


சின்ன கல்லூரி ஒரேயொரு கட்டிடம் மட்டும் தான் நின்றிருந்தது மருந்துக்குக் கூட கல்லூரியைச் சுற்றிலும் மரங்களைக் காணோம். என்னடா இது அடுத்த மூன்று ஆண்டுகளை இங்கேதான் கழிக்க வேண்டுமாயென்று நான் நினைத்துக்கொண்டே காலேஜுக்குள் நுழைகிறேன். அங்கே நின்று கொண்டிருந்த ராஜேஷையும் பிரபுவையும் பார்த்து எனக்கு ஆச்சர்யம்.

"மாப்ளே, நீங்க எங்கடா இங்க?" ஆச்சர்யமாய்க் கேட்டேன் நான்.

அவர்கள் முகத்திலும் அதே ஆச்சர்யம் இருந்தது, "அய்யோ தாஸு நீயுமா! எனக்குக் குருவி அப்பயே சொன்னிச்சு, என்னடா இது உள்ள வர்றவன் மூஞ்சையெல்லாம் பார்த்தா, எல்லாருமே பப்பு மாதிரி இருக்கானுங்களே, என்னடா இது ஒன்னுமே தேறாது போலிருக்கே, நம்மளுக்கு கூட்டே கிடைக்காதோன்னு நினைச்சேன். மாம்ஸ் நீ வந்திட்டேல்ல, தாராளம் மாமே தாராளம்." என்றான் ராஜேஷ்.

"டேய் என்னடா இது, இரண்டு பேருமே நல்ல மார்க் தானே, இங்க ஏண்டா இந்தக் காலேஜுக்கு வந்தீங்க, சரி சரி, எங்க வீட்டு வில்லன் மாதிரிதான் உங்க வீட்டிலையுமா?" ஆதங்கத்துடன் கேட்டேன்.

"பின்ன என்னடா, நீயே வந்திருக்க நாங்க வர்றதுக்கு என்ன? மாமே காலேஜ் முழுக்க சூப்பர் ஃபிகருங்கடா, எங்கப்பன் என்னடா இப்படியொரு பிசுனாரி காலேஜில் சேர்த்துட்டானேன்னு நினைச்சு கவலைப்பட்டேன்; சும்மா எங்கப்பார்த்தாலும் கேரளத்து ஃபிகருங்களாயிருக்குது. எங்க மனசு இப்ப எங்ககிட்ட இல்லப்பா!!" இருவரும் சேர்ந்து பெருமூச்சு விட்டார்கள்.

"கொம்மாஞ்சக்க, அப்பிடியா சொல்ற, உனக்குச் சொன்ன குருவி எனக்கும் சொன்னிச்சின்னு வைச்சுக்கோயேன்; அதான் காலையிலே வர்றப்பவே அட்ரஸ் இல்லாம லவ் லெட்டர் எழுதி எடுத்துட்டு வந்திருக்கேன். காலையிலே பஸ்ஸில் வர்றப்ப அப்பிடியே ஒரு கவிதை மின்னலா தோன்றி மறஞ்சுச்சு பாரு; அப்பவே நினைச்சேன் நம்ம லெட்டருக்கு இன்னிக்கு வேலை வந்திருச்சுன்னு. அந்தக் கவிதையை சொல்றேன் கேக்குறியா?" விளையாட்டாய்க் கேட்டேன் நான்.

"பங்காளி! ஆரம்பிச்சிட்டான்டா இவன், வந்த முத நாளே ஆரம்பிச்சிட்டான். அங்க ஸ்கூல்ல இவன்கூட சேர்ந்து, முட்டிக்கால் போட்டதுதான் மிச்சம். இங்கயாவது திருந்தலாம்னு பார்த்தா தேடிப்பிடிச்சு சேர்ந்திருக்காண்டா!," பிரபு.

"ஆனாலும் பரவாயில்லை மாமூ, நீ சொல்லு." இது ராஜேஷ்.

===
"கால் நடந்து வரும்
அஜந்தா குகை ஓவியமோ
நீதான்
தேன் கொண்டு தரும்
கண்ணதாசன் காவியமோ

சித்தன்னவாசல் சிற்பமோ
நீதான்
முத்திரை பதிக்கும்
சித்திரை மழையோ

கம்பனாய் இருந்தால்
பாடியிருப்பேன் உன்னை
வர்மனாய்(ரவி) இருந்தால்
வரைந்திருப்பேன்,
நானாய் இருப்பதால்
வாடியிருக்கிறேன்

என் இதயமிருந்தமிடமின்று
வெற்றாய்,
பறந்து விட்டது உன்னிடம்
சிட்டாய்.

வைத்துக்கொள்ளடி பெண்ணே
உன்னை மட்டுமே நினைத்து,
உன் பெயரைச் சொல்லித் துடித்து
உனக்காகவே இருக்கும் அதை
நான் வைத்து
என்ன செய்வது,
நீயே வைத்துக்கொள்! "
===

"எப்பிடிடா மாப்ள இருக்கு?" முகம் முழுவதும் பொழிவுடன் கேட்டேன் நான்.

"மாம்ஸ் இதெல்லாம் இருக்கட்டும், நீ காலேஜ் வந்தாவது திருந்தாலாம்னு இருக்கியா, இல்லை பழையபடியேதானா?" கேட்டுவிட்டு முறைத்தான் பிரபு.

"மாம்ஸு இவனுக்குப் பொறாமைடா; நீ கலக்குடா மச்சி. ஆனா ஸ்கூல் மாதிரிதான் நடந்துக்கணும். மற்றவங்க ஆளுங்களை தங்கச்சியாத்தான் பார்க்கணும். என்ன?" ராஜேஷ்.

எங்களுக்குள் வந்த முதல் நாளே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இது அணிசேரா ஒப்பந்தம் இல்லை, அணிமாற்றா ஒப்பந்தம். நாங்கள் எல்லாம் வீட்டில் இருந்து வந்திருந்தோம். ஹாஸ்டலில் இருந்து மாணவர்கள் வரவேண்டிய பாக்கி இருந்தது. வந்தவுடன் ஏதோ நிகழ்ச்சியாம் அதன் பிறகு கிளாஸுக்குப் போகவேண்டியதுதான். காலேஜ் பஸ் வந்தது. முதலில் ஒரு தேவதைக் கூட்டம் இறங்கியது. நாங்கள் அழகான பெண்கள் எல்லாரும் எங்கள் பிரிவெடுத்திருக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினோம்.

அந்த தேவதைக் கூட்டத்தின் இடையில்தான் என் தேவதையும் நடந்துவந்தாள். வெள்ளைக் கலர் சுடிதாரில் அவள், சராசரிக்கும் குறைவான உயரமாய், மாம்பழ நிறத்தில் இருந்தாள்; கையில் நோட்டொன்றை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்; சிரித்துக் கொண்டே நடந்து வந்த அவள் ரஜினிகாந்தைப்போல் தலைமுடியைக் கோதிய போது, என் கவிதையைப் போல் என்னிடம் இருந்த ஏதோவொன்று இடம் மாறத் தொடங்கியிருந்தது.

அவளைப் பார்த்தவுடன் மனம் கவிதை எழுத தொடங்கியது,



===
தேவதைகள்
வானிலிருந்து
வருவதுண்டோ

உண்டென்றால்
அது நீயென்றால்,
தேவதையே உந்தன்
சிறகெங்கே?

இறக்கையில்லா
தேவதையாயினும்
இரக்கமுமாயில்லை

வரமளிக்குமாமே தேவதைகள்
வரம்வேண்டாம், ஒருமுறை
திரும்பித்தான் பாரேன்

உன் கண்பார்வைக்காக
காத்திருக்கும்
அகலிகன் நான்

அய்யோ, இதென்ன
என் கால்கள்
தரையில் பரவ
மறுக்கிறதே,
நான் பறக்கத் தொடங்கிவிட்டேனோ?
நான் தேவதையின் தேவனாகிவிட்டேனோ?
===

மனம் முழுக்க அவள்தான் இருந்தாள், ராஜேஷும் பிரபுவும் என்னன்னவோ பேசினார்கள் எதுவுமே என் காதில் விழவில்லை. விழா முடிந்தது நாங்கள் கிளாசிற்கு வந்தோம் நாங்கள் புண்ணியம் செய்தவர்கள். அந்தக் தேவதைக் கூட்டம் அப்படியே என் வகுப்பில் வந்து உட்கார்ந்தது. எங்கள் வகுப்பில் முதல் இரண்டு பெஞ்சில் அவர்கள் உட்கார்ந்ததும், மற்ற சொம்புப் பசங்கள் எல்லாம் மீதமிருந்த முதல் பெஞ்சுகளில் உட்கார, பெயருக்கு ஏற்றமாதிரி நாங்கள் மாப்பிள்ளை பெஞ்சில் உட்கார்ந்தோம்.

முதல் வகுப்பு ஆரம்பித்தது, பாடம் நடத்த வந்த லெக்சரர் அனைவரையும் அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். இடையில் அவர் பேசுவது கேட்காமல், அடிக்கடி பேசிக்கொண்டிருந்த பிரபுவின் மண்டையில் தட்டிப் பேசாமல் இருக்கச் சொன்னேன். ஒவ்வொருவராக சொல்லத் தொடங்கினார்கள். அவள் முறையும் வந்தது.

"பெயர் கௌசல்யா, தமிழ் மீடியம், ஊர் திருவானைக்கோவில், படித்தது அறிவியல் பிரிவு, மதிப்பெண் 1030, அப்பாக்கு ஃபாக்டரியில் வேலை."

சொல்லி முடித்ததில் இருந்து அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். யாரோ உலுக்குவது போலிருந்ததால் உலகத்திற்கு வந்த நான், என் முறை வந்தவுடன், பெயர் தாஸ், ஆங்கில மீடியம், படித்தது கம்ப்யூட்டர் சைன்ஸ், மதிப்பெண் 526, அப்பா டீச்சர்னு சொன்னவுடன் வகுப்பில் ஒரு சிரிப்பு எழுந்தது.

ஆசிரியர் அதை அடக்கியதும், பிரபு எழுந்தான்; அவன் சொல்லத்தொடங்கினான், நான் அவன் சொல்லப்போகும் மதிப்பெண்ணுக்காக காத்திருந்தேன், நினைத்தது போலவே, 560 என்று சொன்னான். பிறகு எழுந்த ராஜேஷ் 520 என்று சொன்னான்.

உடனே அந்த லெக்சரர், "ம்ம்ம், ஒன்னாத்தேன் சேர்ந்திருக்கிறீங்க போலிருக்கு? மாப்பிள பெஞ்சா, சரிதான் உங்களுக்கு ஏத்த இடம்தான். ம்ம்ம் கல்லூரி பேரைக் கெடுக்காம இருந்தாப்போதும்." சொல்லிவிட்டுச் சிரித்தார். நாங்களும் எங்களுக்குள் சிரித்துக்கொண்டோம்.

இப்படியே அந்த நாள் முழுவதும் தொடர்ந்தது, ஒவ்வொருமுறையும் நாங்கள் சொல்லி முடிக்கும்பொழுது சிரிப்பொலி எழுந்து அடங்கியது, பெரும்பாலும் பெண்கள் பகுதியில் இருந்துதான் அது தொடங்கியது.

லஞ்ச் பிரேக் நான் நேராக அவளிடம் சென்று, "என்னங்க, ரொம்ப பசிக்குது, டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வரலை. காசும் கொஞ்சம் கம்மியா இருக்கு. உங்க சாப்பாடு கொடுக்க முடியுமா நாங்க மூணுபேரும் ஷேர் பண்ணிப்போம்."

இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத அவள் யோசிக்க முடியாமல் கையில் இருந்த டிபன்பாக்சை என்கையில் கொடுத்தாள். நாங்கள் எதிர்பார்த்தது தான் அது; ஆனால் டிபன்பாக்சை திரும்பக் கொடுக்கும் பொழுது நாங்கள் நினைக்காதது நடந்தது.

தொடரும்...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In இருத்தலியநவீனம் காமம் தொடர்கதை மோகனீயம்

மோகனீயம் - உமையாள் நாச்சி


அது ஒரு அசாதரணமான பொழுது, உடலுறவை ஓவியம் வரைவதைப் போல் சிற்பம் செதுக்குவதைப் போல் கலையுணர்ச்சியுடன் இரவெல்லாம் செய்ததால் வந்த ஒரு எழுச்சி அடங்கி ரம்மியமான முன்னிரவில் அமைந்த முழுமையான தூக்கம் விடியற்காலை என் படுக்கைக்கு மிக அருகில் சிரிப்புச்சத்தத்தால் கலைந்து எழ முயற்சித்த பொழுது நான் உடை எதுவும் அணிந்திருக்கவில்லை. அதுவல்ல விஷயம் உமையாள் நாச்சி சுந்தருடன் பேசிக்கொண்டிருந்தாள். ஏறக்குறைய அவளும் என் நிலை தான், இடுப்பிற்குக் கீழ் பெட்ஷீட்டிற்குள் இருந்தாலுமே கூட. சுந்தருக்கு உமையாள் நாச்சி ஒன்றும் புதிதில்லை, சுந்தர் திருமணம் செய்துகொள்ளப்போகிறான் அவனை விட்டுவிடு என்று உமையாள் நாச்சியிடம் நான் சொல்லப்போய்தான் எனது குடியிருந்த வீட்டின் உரிமையாளரான அவளின் பழக்கமே எனக்கு வந்தது. நான் அதன் பிறகு சுந்தரை இந்த மூன்றாண்டுகளில் பார்த்ததில்லை, ஆனால் உமையாள் நாச்சி அவனிடம் சொல்லியிருந்தது போல் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப்பட்டிருந்தாள், அந்த விஷயத்தை அவனிடம் தொலைபேசியில் சொல்லியிது மட்டும் நினைவிருக்கிறது. அவள் கணவனுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரிந்தாலும் கண்டுகொள்ளாததற்கு காரணம் அவன் ஒரு ஹோமோ என்பது முதலில் சுந்தரும் பின்னர் உமையாளுமே சொல்லித் தெரியும். நேற்றைய இரவெல்லாம் கசங்கின அவளது முலைகள் அதற்கான தடயங்களுடன் இருந்தது அதைக் கொஞ்சம் உறுத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமலே அவை நேற்றிரவு உணர்ந்ததைப் பார்க்க முடியும். கொஞ்சம் ஆச்சர்யமான அசாதாரணமான பொழுது, உமையாள் சுந்தரிடம் எந்தவித வித்தியாசமும் இன்றிப் பேசிக்கொண்டிருந்தாள், நீண்ட நாள் நண்பனொருவனிடம் பேசும் லாவகமும் தெளிவும் உற்சாகமும் இருந்தது அந்தப் பேச்சில். அந்த நெருக்கம் நான் எதிர்பாராதது நானும் உமையாளும் சுந்தரைப் பற்றிப் பெரிதாய் பேசியிராததால் அப்படியொன்று நான் எதிர்பாராதது.

நான் எழுந்து உட்கார்ந்ததும் அவர்களிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை, உமையாள் என்னிடம், “சுந்தர் இப்பத்தான் வந்தான். பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு ஏதோ டூருக்கு வந்திருக்கான். பாக்கணும் போல தோணித்தாம் வந்திருக்கான்” அவள் என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டு சுந்தரைப் பார்த்தாள், சுந்தர் என்னைப் பார்த்த பார்வையில் ஒன்றுமேயில்லை ஏதோ ரோட்டில் நண்பன் ஒருவனைப் பார்த்த உணர்ச்சியை மட்டுமே அவன் முகம் வெளிக்காட்டியது. நானும் சிரித்துபடி கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன் அதுதான் முதல் முறை நானும் ஒரு பெண்ணும் ஆடைகளில்லாமல் இன்னொரு மூன்றாம் ஆண் நபர் முன் உட்கார்ந்திருப்பது, முன்னர் இதே போல் சில பெண்கள் முன்னும் உடனும் உட்கார்ந்திருக்கிறோம். அந்த அனுபவம் என்னைக் கொஞ்சம் இயல்பாய் இருக்க வைத்தது, அவர்கள் இருவரும் பெரும்பாலும் பேசிக் கொண்டிருந்தனர் நான் கேட்டுக்கொண்டு மட்டும்.

”உம் பொண்டாட்டி எங்கயிருக்கா சுந்தர்.”

“அவளை ஹோட்டலில் விட்டுட்டு ஆபீஸ் வேலையா போய்ட்டு வர்றதா சொல்லிட்டு வந்திருக்கேன்.”

“குழந்தை இருக்கா சுந்தர்”

“ம்ம்ம் வயசு இரண்டாகுது.” என்றான் இருவருக்கே அந்தக் கேள்விகள் போரடித்தது என்று நினைத்தேன்.

”பொண்டாட்டிக்கிட்ட எப்படி சுந்தர் என்கிட்ட செய்தது மாதிரி தானா, ஒரு நாளைக்கு ஐஞ்சு ஆறு தரம்னு எப்பப்பாரு சுன்னிய கையில பிடிச்சிக்கிட்டே நிப்பியே” அவள் கேட்டுவிட்டு சிரித்தாள்.

அவனும் சிரித்தான், “இல்ல நாச்சியா வாரத்துக்கு ஒன்னு ரெண்டு வாட்டி செய்யறதே இப்பல்லாம் பெரிசாயிருக்கு. அதெல்லாம் அந்தக் காலம். இங்க எப்படி...” கேட்டான். நான் அதற்கு தயாராகியிருக்கவில்லை அவள் அவனிடம் எங்களைப் பற்றிய பர்சனல் விஷயங்களை எந்த அளவிற்குச் சொல்வாள் என்று தெரியாது சுந்தருக்கும் அவளுக்கும் இருந்த நெருக்கம் அவள் முயற்சிசெய்த தற்கொலை மூலமாய்த் தெரியுமென்றாலும் கூட. நான் அவள் சொல்லப்போவதைக் கேட்பதற்கு ஆவலாய் இருந்தேன் என்பது மட்டும் உண்மை.

”விசு...” என்று சொல்லி என்னைப்பார்த்து பெருமூச்சு விட்டாள் “நீ எத்தனை தடவை எனக்கு வாயால செஞ்சி விட்டிருபேன்னு நினைவிருக்கா? யோசிச்சு பார்த்தா சொல்லிடலாம் எத்தனை தடவன்னு கூட அதுவும் ஈரமாக்குறதுக்கு. ஆனா விசு அப்படிக் கிடையாது. நாங்க செக்ஸ் வைச்சிக்கிட்ட எல்லா நாளும் அவன் வாயால செஞ்சி நான் ஒரு தரம் வந்திருப்பேன் சொல்லப்போனா அன்னிக்கு செக்ஸ் அதுலேர்ந்து தான் ஆரம்பிக்கும். நீ நல்லாவே செய்வ நான் இல்லேங்கல ஆனா நாம இரண்டு பேரும் செஞ்சப்ப உன்கிட்ட என்னைப் பத்தி தேவிடியா தானங்கிற புத்தியை இதுவரைக்கும் விசுகிட்ட பாத்ததில்ல. அவனுக்கு நானொரு தேவதை பதினாறு பதினெட்டு வயசு புள்ளையை உன்கிட்ட ஓக்க விட்டிருந்தா நீ எப்படி செஞ்சிருப்பேன்னு நான் நினைக்கிறேனோ அதைவிட 100% பெர்பெக்டா என்னை செய்வான். புருஷங்காரன் ஹோமா இருந்து கல்யாணம் ஆனபின்னாடி என்னவோ செய்துக்க எனக்கு கெட்டபேர் வராம ஆனால் என்னை விட்டுடுன்னு சொன்னவளுக்கு நீ ஒரு கருவின்னா விசு ஒரு வரம்...” சொல்லிவிட்டு இன்னொரு பெருமூச்சு விட்டாள். ”உனக்காக தற்கொலை பண்ணிக்கப்போனேன்னு நினைச்சா, விசுவுக்காக என்ன பண்ணனும்.” சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள், நான் முகத்தைக் கல் போல் வைத்திருந்தேன். “ஆனா இன்னிக்கு விசு என்னை விட்டுட்டு வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா, அவன் கூடவே நின்னு நல்ல பொண்ணு ஒன்னைப் பார்த்து முடிச்சி வைச்சிட்டுத்தான் ஓய்வேன்.” கொஞ்சம் நிறுத்தினாள் “என் பொண்ணையே கூட அவனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் அவன் தப்பா நினைக்காட்டி” என்று முடித்தாள்.

காலம் தன் எல்லையில்லா ஆச்சர்யங்களை அள்ளித் தெளித்து விளையாடத் தொடங்கிய நாளொன்றில் நான் உமையாளை மருத்துவமனையில் சென்று பார்த்திருந்தேன். மருத்துவ வாடையையும் அதன் அசாத்தியமான சூழ்நிலையையும் தவிர்த்தும் என்னுள் ஏகாந்தங்களை ஏற்படுத்த அவளால் முடிந்திருந்தது. முடிந்ததைக் கடந்து வருவதில் தன்னை நுழைக்க முடியாமல் அவள் கடத்திய ஆறு மாதங்கள் அவளுடன் எனக்கு முழுத்தொடர்பு இருந்தது, அவளை அறிந்த ஒருவனாய் பொதுவில் அவளுக்கு உதவுபவனாய் அவளுக்கு காலத்தை அறிமுகப்படுத்துபவனாய் மட்டும். என்னில் அவள் கண்டுகொண்ட அறிவார்ந்த முகமூடியொன்று என்னில் அவளை காலத்தை மறக்கச் செய்தது, அவளுள் அடங்காமல் குடி கொண்டிருந்த காமம், நான் என் தேவதைக்காய் கட்டிவத்திருந்த மனப்பக்கத்தில் ஒன்றைக்காட்டியதில் அவிழ்ந்தது. நாற்பதுகளின் தொடக்கத்தில் இருந்தவள் அப்படி அவிழ்ந்ததும் தொடர்ச்சியாய் என்னில் கொட்டிய அள்ளிய காமமும் நான் அணிந்திருந்த முகமூடிக்கும் அதற்காய் நான் படித்த புத்தகங்களுக்கும் வாயால் செய்தாலே ஒழிய எனக்கு வருவதில்லை என்று நட்பை மட்டும் முழுவதும் திறந்து காட்டிய நண்பியொருத்திக்கும் நன்றி சொல்ல நினைத்தேன். அவளுக்கு வந்ததும் எனக்கும் எனக்கு வந்ததும் இருவருக்கும் என்று நாங்கள் கொளுத்திய இரவுகள் வெகு நீளம், இதில் புகுத்திய புதுமைகள் உயிர்ப்புடன் நீள உதவியது. உமையாளுக்கு சிந்துவை என்னிடம் ஒப்படைக்க ஆசை, தேவதை ஒன்றிற்குச் செய்ததை இன்னொரு தேவதைக்கு நான் மறுக்காமல் செய்வேன் என்று நினைத்தாள் மற்றைய பாகத்தின் பொங்கும் உற்சாகத்தில் மட்டுமே நான் நிம்மதியடைவது அவளுக்குத் தீவிரமாய்த் தெரிந்ததுமே அவள் சிந்துவை என் ஆளுமைக்குள் திணிக்கப்பார்த்தாள். சிந்துவின் தகப்பனைப் போன்ற தொல்லைகள் என் வயதின் காரணமாய் இல்லாவிட்டாலும் சிந்துவின் தனிப்பட்ட எல்லைக்குள் நானாய் திணிக்கப்படக்கூடாதென்றே நினைத்திருந்தேன். ஆனால் உமையாள் நடத்திய நாடகமொன்றில் நானும் சிந்துவும் பாவைகளாகி நடத்துனருமே புகுந்து களித்த இரவொன்றும் வந்தது, சிந்துவின் வயது அளித்திருந்த அறிவிற்குள் நின்றுகொண்டு அவள் நடத்திய இந்த நாடகம் அவள் நானுமாய் நகர்த்தத் தொடங்கியிருந்த எல்லையின் விளம்புப் புள்ளி.

”உனக்குச் செய்யறதில் எனக்கு கூச்சம் இருந்ததில்லை, ஆனா அப்படி பழக்கப்படுத்தி விடாதன்னு அப்ப ஃப்ரெண்ட் ஒருத்தன் சொன்னான்” என்று சொன்ன சுந்தரின் முகத்தில் தெரிந்த கவலை அவள் என்னை உயர்த்திக் காட்டியதில் இருந்து தொடங்கியிருக்கலாம் என்று நினைத்தேன்.

“சரியாப்போச்சு நீ செஞ்சதுக்கப்புறம் நானா எதையும் விட்டு வேற செய்துக்கணும்.” அவள் முகம் சிரித்தபடியே இருந்தது, “என்னடா எழவு இதுன்னு நினைச்சுப்பேன். போ எதோ உன்னால் முடிந்தது ஆனால் உன்னால க்ளைமாக்ஸே வரலைன்னு சொல்ல மாட்டேன். ஆனா கொஞ்சம் தான் அதுவும் சின்னதா. உன் பொண்டாட்டிக்கிட்ட எப்படி” கேட்டாள்.

சுந்தர் கொஞ்சம் தெளிவாகயிருந்தான், “எனக்கு அவ ஐந்து தடவ வாயால செஞ்சிவிட்டா நான் ஒரு தடவை அவளுக்குச் செய்வேன்னு சொல்லியிருக்கேன்.”

இருவரும் சேர்ந்து சிரித்தார்கள், “அதென்னாடா வாய்ப்பாடு மாதிரி” என்று அவள் கேட்டதும். அவன் பதில் சொல்லவில்லை, தொடர்ந்து கேட்டான், “எனக்கேதாவது பொண்டாட்டியைக் கட்டிப்போடுற டிப்ஸ் கொடேன்” எனக்கேட்டான் அவளிடம். எனக்கும் அவளுக்கு எது அப்படிப் பிடிக்கும் என்று கேட்க ஆசை நானாய்க் கேட்டதில்லை. அவள் சொன்னாள்,

”நாங்க நிறைய செஞ்சி பார்த்திருக்கோம். எப்பவும் புதுசா எதையாவது யோசிச்சிட்டு வருவான் எனக்கு கேக்கணுமா அவன் ஒரு ஆராய்ச்சியாளன் மாதிரி நானொரு ஆராய்ச்சிப் பொருள் மாதிரி நான் அவன்கிட்ட தடை சொன்னதேயில்லை, ஒரு நாள் இப்படித்தான் ஒரு வாழைக்காயுடன் வந்தான்.” என்று சொல்லி அவள் என்னைப் பார்த்தாள் என் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது. முகமது ரஃபியின் பாடலுடன் காற்றில் பரவத் தொடங்கும் சந்தன வாசத்துடனும் ஸ்டூடியோவின் ஒழுங்குடன் வெளிச்சத்தைப் பொங்கும் விளக்குகளுடன் தொடங்கிய அந்த நாள் நினைவில் இருந்தது, வழமையாய் அவள் அவள் உச்சமடைந்ததும் நான் செருகிய மென்மையான கதகதப்புடன் கூடிய வாழைக்காயை அவள் கட்டப்பட்ட கண்கள் வழியல்லாமல் அவள் கதறலுடனேயே யோனிவழி உணர்ந்திருந்தாள். அவளை இழுத்து கட்டிலின் நுனியில் போட்டு வெண்ணெய் தடவிய தாக்குதலொன்றை நான் நடத்திய கணம் அவள் என்னிடம் அதுவரை நான் கேட்டிராத ”போதும்” என்கிற வார்த்தையைச் சொல்லியிருந்தாள். அன்றைக்கு அவளை விடுவித்த பொழுது அவள் என் காதில் சொன்னது நினைவில் இருக்கிறது ”நான் எத்தனை முறை வந்தேன் என்று நினைவில் இல்லை”. இதைக்கேட்டதும் சுந்தர் “City of God" என்றான் நான் மறுக்கலை அவனுக்கு தியரி தெரிந்திருந்தது நான் அதை முயற்சி செய்து பார்த்திருந்தேன் உமையாள் விழித்தாள்.

இது மோகனீயம் கதையுடன் தொடர்புடையது.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

Popular Posts