In

சமீபத்தில் வரைந்த ஓவியங்கள் கொஞ்சம்

படங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும். 18+








Read More

Share Tweet Pin It +1

1 Comments

In வாகை சூட வா

உண்மைத்தமிழனுக்கு மன்னிப்பே கிடையாது

உண்மைத் தமிழனை எப்பொழுதிலிருந்து தெரியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். கோவை பதிவர் சந்திப்பில் பார்த்தது, அப்பொழுது பேசவில்லை ஆனால் பிற்பாடு சென்னையில் சந்தித்தபொழுது பேசிய ஞாபகம்.

அப்பொழுதெல்லாம் வெளியாகும் எல்லாப் படங்களுக்கும் சென்று ஒரு மொக்கை விமர்சனம் எழுதுவார், பெரும்பாலும் விமர்சனமாக இல்லாமல் கதையை எழுதித் தொலைப்பதால் எப்பொழுதும் படித்துத் தொலைத்ததேயில்லை. பின்னர் நானே பதிவுகளில் இல்லாமல் போன காலங்களில் அவர் பிரபல பதிவர் வேறு ஆகித் தொலைத்திருந்தார்.

இப்ப அவர் பிரபல பதிவர் என்பதல்ல விஷயம். அவர் வாகை சூட வாவிற்கு ஒரு விமர்சனம் எழுதியிருந்தார், என் மனம் சொல்வது சரியென்றால், மக்களுக்கு வெளியாகும் முன்பே வெளியிடப்பட்ட காட்சியொன்றிற்கு சென்று அன்றைய பொழுதே இரண்டு வரி எழுதி படம் நல்லாயில்லை என்று சொல்லியிருந்தார்.

பொதுவாய் அவர் பதிவிட்டிருந்தால் படிக்காமல் நான் விட்டுப்போயிருக்கும் வாய்ப்பு அதிகம், பஸ்ஸில் எழுதிய இரண்டு வரி கண்ணில் பட்டுத் தொலைந்தது. பெங்களூரில் வாகை சூட வா! போன்ற பட்ஜெட்களில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வெளியாவதில்லை(மல்டிப்ளக்ஸ்களில், நான் மல்ட்டிப்ளக்ஸ் தவிர்த்து படம் பார்ப்பதில்லை, மைனா ஒரே விதிவிலக்கு). நான் இப்பொழுதெல்லாம் அடிக்கடி கிருஷ்ணகிரி செல்வதால் இப்படிப்பட்ட ஆஃப் பீட்(ஹிஹி பட்ஜெட் அடிப்படையில்) படங்களை அங்கே பார்ப்பது வழக்கம்.

இந்த உண்மைத்தமிழன் எழுதிய இரண்டு வரி மொக்கை விமர்சனம் பார்த்து இந்தப் படத்தை பார்க்க விருப்பமில்லாமலே இருந்தேன். கிருஷ்ணகிரியில் கூட ஓடவில்லை என்றே நினைவு. நல்ல வேளைக்கு மனைவியின் மாமன் வாங்கி வந்த விசிடியில் பார்த்து, மனம் நொந்து போனேன், இத்தனை நல்ல படத்தை நல்லாயில்லைன்னு சொல்லிவிட்டாரே என்று. மனம் வேறு திருட்டு விசிடியில் பார்த்ததால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் என் வருமானத்தில் ஒரு பகுதி தமிழ், இந்தி, ஆங்கிலம் படங்களை பெரும்பாலும் மல்ட்டிப்ளக்ஸ்களில் பார்த்து தொலைந்து போவதால், எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

இந்த உண்மைத்தமிழனுக்கு மன்னிப்பே கிடையாது, சினிமாவைப் பொறுத்தவரை, நான் சில ஆட்களில் விமர்சனங்களை நம்புவதுண்டு, A. O. Scoot, Rajeev Masand, சன்னாசி, அய்யனார், சித்தார்த் என்று வெகு குறைவான ஆட்களுடைய விமர்சனங்களே, ஆனால் சன்னாசி அய்யனார் சித்தார்த் உடனுக்குடன் சினிமா விமர்சனம் எழுதும் அதுவரை நான் பார்க்காமல் இருக்கும் படங்கள் குறைவு. பின்னால் நம் அடிப்படைகளை வளர்த்துக் கொள்ள ஒப்பிட்டுக் கொள்ள உதவுபவர்கள் இவர்கள். பொதுவாய் லக்கிலுக்கின் விமர்சனங்கள் எனக்குப் பிடிக்கும் ஆனால் அவர் இன்ன பிற அரசியல் காரணங்களுக்காய் பட விமர்சனம் செய்யும் பொழுது மட்டுமே கொஞ்சம் உதைக்கும் ஆனால் அதையும் நான் ஊகித்துவிடலாம். சொல்லப்போனால் லக்கி பிடித்திருக்கிறது என்று சொன்ன எல்லா படங்களும் எனக்குப் பிடித்திருக்கிறது, ஆனால் என்ன எனக்குப் பிடித்த சில படங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை.

படம் பார்த்து முடித்ததும் வந்த கோபத்திற்கு உண்மைத்தமிழனை என் இணையத்தில் இருந்து Ban செய்துவிடலாமா என்று கூட தோன்றியது. பெரும்பாலும் நான் இணையத்தில் பார்க்க விரும்பாதவர்களை இப்படித் தவிர்த்துவிடுவதுண்டு. ஆனால் அண்ணனின் நேர்மை எனக்கு உண்மையிலேயே பிடிக்கும், அவர் எழுதுவதற்கு பின்னுள்ள அண்ணனின் இதயம் எனக்குப் பிடித்திருப்பதால் இன்னமும் அவரைப் பின்தொடர்கிறேன். ஆனால் இனி சினிமா விமர்சனம் எதுவும் உத அண்ணன் எழுதினால் அதை நான் படித்துத் தொலைத்தாலும் இனி அதை மதிக்கப் போவதில்லை. வாகை சூட வாவை என்னை இத்தனை காலம் கழித்து பார்க்க வைத்ததற்காக மன்னிக்கவும் போவதில்லை.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In Taboo Subject ஈழம் தமிழ்

ஈழத் தமிழர்கள் - Taboo Subject; 7-ம் அறிவு

ஏன் 7-ம் அறிவைப் பற்றி இத்தனை எதிர்ப்பு தெரியவில்லை. ஈழத் தமிழர்களைப் பற்றியும் தமிழர்களைப் பற்றியும் பேசியதாலா தெரியவில்லை. ஈழத்தமிழர்களை Taboo சப்ஜெக்டாக வைத்திருப்பதில் எனக்கு சம்மதம் இல்லை.

முக்கியமான படம், பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இணையத்தில் எழுதப்படும் மொக்கை விமர்சனங்களை வைத்து இந்தப் படத்தை நிராகரிக்காதீர்கள். நிச்சயமாகப் பார்க்க வேண்டிய ஒன்று. தமிழர்கள், ஈழத்தமிழர்கள், இலங்கைப் பிரச்சனை எல்லாவற்றையும் காசாக்கப் பார்க்கிறார்கள் அது இதென்று புலம்புகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் விமர்சனம் எதையும் படிக்காமல் படம் பார்க்க நினைத்ததால் இதுவரைப் படிக்கவில்லை.


படம் ஆரம்பித்த ஐந்துநிமிடங்களுக்குத் தான் சென்றிருப்போம். போதி தர்மர் சீன குழந்தை ஒன்றிற்கு மருத்துவம் தருவதில் ஆரம்பித்தது 7-ம் அறிவு எங்களுக்கு, ஒன்றும் விட்டுவிட்டதாக நினைக்கவில்லை. ஹாலிவுட் படம் ஒன்றை பார்பது போன்றே இருந்தது ஆரம்பக் காட்சிகள். போதி தர்மனைப் பற்றிய பேச்சு தொடங்கிய பொழுதுகளிலேயே அவரைப் பற்றிப் படிக்கத் தொடங்கியிருந்தேன். ரமேஷ் - பிரேம் படித்துவிட்டு புத்தரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள நினைத்துப் புத்தமதம் பற்றிப் படித்திருக்கிறேன். கட்டுரையும் - கட்டுக்கரையும் புத்தகத்தில் போதி தர்மனைப் பற்றி இருப்பதை இங்கே குறிப்பிடத்தான் வேண்டும். முடிந்தால் இன்னொரு தருணத்தில் எழுதிப் போடுகிறேன்.

மருத்துவத்தை வைத்துத்தான் மதங்கள் பரவின என்றே நினைக்கிறேன். மன்னனின் நோயைத் தீர்த்ததால் மன்னன் மதம் மாறி அப்படியே மக்களும் மதம் மாறும் காட்சிகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன - பழைய காலங்களில். சமண மதமும் பௌத்த மதமும் தமிழகத்தில் வேறூன்றி இருந்ததற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில், போதி தர்மன் பற்றி வந்திருக்கும் இந்தப் படம் முக்கியமானதாக இருக்கிறது.

பௌத்தர், சமணர் படுகொலை செய்யப்படுதல், பௌத்த, சமணப் பள்ளிகள் விஹாரைகள் இடிக்கப்பட்டு கோயில்கள் எழுப்பப்படுதல், பௌத்த சமணம் மற்றும் பிற சமய நூல்கள் எரித்தழிக்கப்படுதல், பௌத்த சமண சமயங்களைப் பின்பற்றிய மக்கள் வாளின் முனையில் சமய மாற்றம் செய்யப்படுதல், சமயம் மாற மறுத்தோர் தீண்டாமைக்குட்படுத்தல், சமண, பௌத்த சான்றோர் தமிழக எல்லைக்கு வெளியே ஓடித் தப்பிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தல், மீண்டும் பேரரசுகளை உருவாக்குதல் போன்றவை இக்காலக்கட்டத்தின் செயல்கள். இவற்றிற்கு ஆதாரம் ஆயிரம் இருந்தும் இன்றுவரை தமிழறிவின் மறைக்கப்பட்ட பகுதியாக இவை இருந்து வருகின்றன. சைவமும், வைணவமும் மக்கள் மேல் முதலில் திணிக்கப்பட்ட, பிறகு ஏற்கப்பட்ட சமயங்கள் என்பதை இன்று கூறுவது ஏதோ பயங்கரவாதச் செயல் என்பது போல மனித வெறுப்பும் ஆதிக்க வெறியும் கொண்ட சாதி ஒடுக்குதலை ஏற்ற அறிவு மரபு ஒன்று இங்கே கூச்சல் இடலாம். ஆனால் உண்மை கூச்சல்கள் மறைக்கப்படுவதில்லை.

நான் கொஞ்சம் நான் - லீனியராகப் படம் போகத் தொடங்கியதுமே நினைத்தேன் தமிழ்நாட்டில் படம் விளங்கிறும் என்று. அது போலவே விமர்சனங்கள் வந்திருப்பது என் நம்பிக்கை பொய்க்கவில்லை என்கிற எண்ணத்தை வளர்க்கிறது. எல்லோருக்கும் A.R. Murugadossயிடன் என்ன எதிர்பார்த்துச் சென்றார்கள் என்று தெரியாது நான் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே வந்திருக்கிறது.

சூர்யாவின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது, ரொம்பவும் அறிவுஜீவி போலக் காட்டியிருப்பதை தவறென்று கூறவில்லை, எதற்கு சர்க்கஸ் என்று புரியவில்லை, ஒருவேளை போதிதர்மர் இன்றிருந்தால் சர்க்கஸ் வேலைக்குத் தான் சரியென்று சொல்லவருவதாக விமர்சனம் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை.

சுருதி நன்றாக நடனம் ஆடுகிறார், இவர்கள் செய்யும் ஜெனிடிக் ஆராய்ச்சியை வைத்து இவரது தகப்பனாரிலிருந்து கொஞ்சம் நடிப்புக் கலையை இவருக்குக் கொண்டுவரலாம், ஆனால் பெரிய வசனம் இருக்கும் காட்சிகளில் கம்ஃபொர்ட்டபிளாக இவர் நடித்திருப்பது தெரிகிறது. சண்டைக் காட்சிகள் தான் பிரம்மாதம், நிறைய உழைத்திருக்கிறார்கள் தெரிகிறது. இன்னமும் இரண்டு அல்லது மூன்று பாடல்களை செதுக்கியிருந்தால் இன்னமும் கிரிப்பாக வந்திருக்கக்கூடும்.

தமிழர்களைப் பற்றியும், ஈழத்தமிழர்கள் பற்றியும், ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியும் வரும் வரிகளில் எனக்குத் தவறொன்றும் தெரியவில்லை. சொல்லப்போனால் இன்னமும் யாழ் நூலகம் எரிந்தது கூட தெரியாத எத்தனையோ தமிழர்களுக்கு அந்த விஷயம் சென்று சேரலாம். இதைச் சொல்லிப் பணம் பறிக்கிறார்கள் என்று புலம்புவதைக் கேள்விப் படுகிறேன். இவர்கள் அனைவருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது, ஈழத்தமிழர்கள் பற்றிய பிரச்சனைகளை, ஈழப்போராட்டத்தை ஒரு Tabooவாக வைத்திருப்பதற்கு ஆனால் அதைப் பற்றிப் பேசப்பட்டே ஆகவேண்டும். இந்த அளவில் அதற்கான ஒரு ஓப்பனிங் கிடைத்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. இப்பொழுது எடுத்ததற்கு நன்றிகள். படம் பார்த்து வந்ததும் இதை எழுதுகிறேன் உடனடியாக எழுத நினைத்து. பின்னால் தேவையான படம் பற்றிய என் கருத்துக்களையும் எழுதுகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In BHEL REC மாணவிகள் நினைவுகள்

இருட்டு க்ரௌண்டில் ஒரு முரட்டுக் குத்து

இன்னும் ஆறு ரன்கள் அடித்தால் வெற்றி, இரண்டு பந்துகள் மீதமிருந்தது. எப்பொழுதும் இருக்கும் ஆட்டத்தின், வெற்றியின் மீதான தீவிரம் அன்று என்னிடம் இல்லை என்னிடம் மட்டும் இல்லை, எதிரணியில் மீதமிருந்த இரண்டு பந்துகளை வீசப்போகும் கிஷோருக்கும் வெற்றியின் மீதான ஆர்வம் குறைவாகவே இருந்திருக்கும். மனம் ஆனாலும் கணக்குப் போட்டது, கிஷோரின் ஃபேவரைட்டான ஸ்லோ பால் நிச்சயம் இரண்டு பந்துகளில் ஒன்றிருக்கும் நான் எதிர்பார்த்தது சரியாக இருந்தால் கடைசி பந்தாக இல்லாமல் இந்தப் பந்தாகத்தான் இருக்க வேண்டும். ஃப்ரண்ட் ஃபுட் போட்டு லாங்க் ஆஃபில் தூக்கினால் ஆறாக வாய்ப்பு அதிகம். மனம் குதிக்கவில்லை நிதானமாக யோசிக்க முடிந்தது ஆனால் யோசனை ஆட்டத்தில் இல்லாமல் வேறெங்கோ இருந்தது. திருச்சி BHEL வளாகத்தில் இருந்த நேரு ஸ்டேடியத்தில் பெரும்பாலும் செண்டர் பிட்சில் நாங்கள் விளையாட மாட்டோம் அதற்கு இரண்டு காரணம், ஒன்று அந்தப் பிட்ச் பௌலிங் பிட்ச் எத்தனை முயன்றாலும் 10 ஓவரில் 45 அல்லது 50 அடிப்பது கடினம், அப்படி அடிக்கும் ஆட்டம் விறுவிறுப்பாகவும் இருக்காது. மற்றது 11 பேர் இரண்டு அணியிலும் இல்லாமல் மேட்ச் விளையாடுவது செண்டர் பிட்சில் நன்றாகயிருக்காது, அதனால் க்ரவுண்டின் இடது ஓரத்தில் பவுண்ட்ரி கொஞ்சம் பெரிதாய் இருக்கக்கூடிய அளவிற்கு ஒரு பிட்ச், நாங்கள் ஏற்பாடு செய்தது நாங்கள் மட்டும் தான் அங்கே விளையாடுவோம். ஸ்டேடியத்திற்கு இன்னொரு பக்கம் தான் பாய்ஸ் ஹைஸ் ஸ்கூல் என்பதால் பள்ளி நேரத்திலும் சரி அதற்கு முன் பின்னான நேரத்திலும் சனி ஞாயிறுகளிலும் கிரிக்கெட் தான். அந்த பிட்ச் அக்குவேறு ஆணிவேறாக எங்களுக்குத் தெரியும், பெரும்பாலும் பெட் மேட்ச், செண்டர் பிட்சில் விளையாடுவோம் என்றாலும் பெட் மேட்ச் தவிர்த்த வேறு டீமுடனான மேட்கள் எங்கள் பிட்சில் நடக்கும், எங்க ஹோம் கிரவுண்ட் மாதிரி எங்களை அந்தப் பிட்சில் ஜெயிப்பது ஏறக்குறைய முடியாத விஷயம். எங்க பிட்ச் செய்தா உருளும் எங்க பிட்ச் செய்தா பௌன்ஸ் ஆகும் அத்தனையும் அத்துப்பிடி.

ஸ்டேடியத்தின் இடது பக்கம் பாய்ஸ் ஹைஸ் ஸ்கூல் என்றால், வலது பக்கம் கேர்ள்ஸ் ஹைஸ் ஸ்கூல் கேட்கணுமா, பெவிலியனில் கேர்ள்ஸ் ஹைஸ் ஸ்கூல் பக்கம் பார்க்க உட்கார்ந்து கொண்டு அங்கே வரும் சிட்டுக்களை சைட் அடிப்பது என்பது கிரிக்கெட் அளவிற்கு இல்லாவிட்டாலும் இன்னுமொரு முக்கியப் பொழுது போக்கு. யாரெல்லாம் அங்கே உட்கார்ந்து சைட் அடிக்கலாம் என்பதற்கு கூட விதிமுறைகள் உண்டு, காலேஜ் முடித்தும் சும்மா இருக்கும் செட்டுகள் பெரும்பாலும் ஸ்கூல் பிகர்கள் பக்கம் வரமாட்டார்கள் என்பதால், பாய்ஸ் ஹைஸ் ஸ்கூலில் பதினொன்று, பன்னிரெண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை. அதுமட்டுமில்லாமல் அந்தப் பக்கத்தில் இருந்து செக்கியூரிட்டிக்கள் துரத்திக் கொண்டு வந்தால் ஓடித் தப்பிக்கவும் அசிங்கப்படாமல் இருக்கவும் ஸ்கூல் பிள்ளைகளால் மட்டும் முடியும். காலேஜ் முடித்தவர்கள் பெரும்பாலும் செக்கியூரிட்டிகளிடம் பேசி சமாளிக்கப் பார்ப்பார்கள் பின்னர் முடியாமல் அந்த இடத்தை காலி செய்வார்கள். பைனாகுலர் வைத்துப் பார்த்தால் தான் முகம் தெரியும் தொலைவில் இருந்தாலும் சும்மா பேருக்கு சைட் அடிக்க என்று அந்த இடம், அது ஏற்படுத்தும் குறுகுறுப்பிற்காகச் செய்யலாம்.

ஆனால் அன்றைக்கு மனதில் ஓடிக்கொண்டிருந்த பிரச்சனை வேறு, அந்த லெவலே தனி, சொல்லப்போனால் அதனால் தான் மனம் படீர் படீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. எனக்கும் சரி கிஷோருக்கும் சரி இந்த மேட்சை முடித்துவிட்டு பொறுமையாக உட்கார வேண்டும் போலிருந்தது. நான் எதிர்பார்த்தது தான் கிஷோர் ஸ்லோ பால் தான் போட்டான், ஆனால் ரீச்சில் விழாமல், ஷார்ட்டாக விழுந்து ஆஃப் சைடில், ஆஃப் ஸ்டெம்புக்கு நாலு இன்ச் தள்ளி வந்து விழுந்தது. சாதாரண சமயமாக இருந்தால் அதை லாங்க் ஆஃப் தூக்குறேன் பேர்வழியென்று மிட் ஆஃபில் கேட்ச் விழுந்து அவுட் ஆகியிருப்பேன். இப்பொழுது மனம் ஆட்டத்தில் இல்லாததால் அந்தத் தடுமாற்றம் இல்லாமல் பேக் ஃபுட் போட்டு எக்ஸ்ட்ரா கவரில் தூக்க அழகாய் பந்து போய் பெவிலியனில் விழுந்தது. எனக்கு வெற்றி பெற்ற குஷியில்லை, கிஷோருக்கும் அப்படியே தோற்றுப்போய்விட்ட வருத்தம் இல்லை. ஆனால் எங்கள் கீழ் விளையாடும் சின்னப் பையன்கள் மற்ற டீம் பையன்களை சீண்டுக் கொண்டிருந்தார்கள். எப்பொழுதும் நாங்கள் ஆட்டம் முடிந்ததும் அதைப்பற்றி பேசுவது வழமையான ஒன்று, அன்று எங்கள் வாய் பார்த்து உட்கார்ந்திருந்த பையன்கள் நாங்கள் வாய் திறக்காததால் கொஞ்ச நேரத்தில் நகர்ந்து விட, அத்தனை நேரம் விளையாடிக் கொண்டிருந்ததால் பழகிப் போயிருந்த இருட்டு சட்டென்று எங்களாலும் உணரப்பட்டது. நான் அப்படியே பெவிலியனின் முதல் படியில் படுத்துக் கொள்ள, கிஷோர் தலைபக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

"மச்சி இதைச் செஞ்சே ஆகணுமா?"

என் மனதிற்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விதான் என்பதால் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தேன்.

என்னமோ நினைத்தவனாய் பிறகு அவனே,

"சரி இன்னிக்குத் தான் கடைசி - இன்னிக்கு மிஸ் ஆச்சுன்னா இனிமேல் ட்ரை பண்ணுறது கிடையாது சரியா?"

நான் மனதிற்குள் நினைப்பதை அப்படியே பேசிக் கொண்டிருந்தான், எல்லாம் ஆரம்பித்தது ஹரனால் தான். அவன் தான் எங்கேயோ கேள்விப்பட்டதாய் ஒரு நாள், என்னிடமும் கிஷோரிடமும்,


"மாம்ஸ் REC புள்ளையாண்டானுங்க நம்ம ஸ்டேடியத்தில் ராத்திரி மேட்டர் செய்யறானுங்களாம்டா! கொய்யால ஒரு நாள் நாயைப் பிடிக்கிற மாதிரி பிடிக்கணும்டா" சொன்னது தான் எல்லாவற்றிற்கும் தொடக்கம்.

நாங்கள் அப்பொழுது பத்தாவது தான் படித்துக் கொண்டிருந்தோம், மேட்டர் செய்வது என்றால் என்ன என்பது கூட அத்தனை சரியாய்த் தெரியாது தான், ஆனாலும் இந்த விஷயத்தில் விருப்பம் தானாய் வந்தது. பள்ளிக்கூடத்திற்கு எவனாவது எடுத்து வரும் செக்ஸ் புக் படித்தது, மாரிமுத்து ஒரு முறை அவங்க அண்ணன் துபாயில் இருந்து எடுத்து வந்தாகச் சொல்லிக் காட்டிய ஆயில் பிரிண்டிங்க் நிர்வாணப் படங்கள் என பதின்மம் அரும்பத் தொடங்கியிருந்த காலம், நேரில் பார்ப்பதற்கான காரணமாக குறுகுறுப்பை மட்டுமே கூட சொல்லக்கூடிய வயது அது.

மண்டலப் பொறியியல் கல்லூரி என்பது எங்களுக்கு ஒரு கனவுப் பிரதேசம், திருச்சியில் அதுவும் BHELல் படிப்பவர்களுக்கு எப்படியாவது RECல் படித்துவிட மாட்டோமா என்ற ஒரு துளி எண்ணம் இல்லாமல் இருந்திருக்காது. ஆனால் கல்லூரியைப் பற்றிக் கேள்விப்பட்டவரையில், எங்கள் வீட்டில் RECல் கிடைத்தால் கூட சேர்த்துவிடமாட்டார்கள் என்ற அளவில் இருந்தது செய்திகள். போதை மருந்துப் பழக்கத்தின் உச்சியில் இருந்தது கல்லூரி. ஒரு முறை டோப்படித்துவிட்டு 'B' செக்டர் ஷாப்பிங் செண்டரில் சந்தோஷ் பேக்கரி பின்னால் ஒரு பையன் இறந்து கிடக்க கொஞ்சம் பேருக்கு தெரிந்திருந்த இந்த விஷயம் பொதுவானது. நான் காலையில் தூக்கக்கலக்கத்தில் பால் வாங்க ஆவின் பூத் வந்த பொழுது தான் செக்யூரிட்டி முதலில் பாடியைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் பெரும்பாலும் தண்ணியடித்துவிட்டு உருண்டுகிடக்கும் ஒருவனாக நினைத்து நகர்ந்திருந்தேன்.

பாய்ஸ் ஹைஸ் ஸ்கூல் திரவியம் சார், இந்த REC மக்கள் இரவில் ஸ்கூலில் அழிச்சாட்டியம் செய்கிறார்கள் இதைத் தடுக்கவேண்டும் பள்ளி நிர்வாகம் தலையிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த விஷயத்தின் காரணமாய் அவர் தற்காலிகமாக பணியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார் என்பதும் அதே மேனேஜ்மெண்டில் வேலைசெய்யும் அப்பாவின் மூலமாய் நான் தெரிந்து கொண்டது. ஆனால் இதைத் தெரிந்து கொண்ட பொழுது என் வயது ரொம்பவும் குறைவு, ஹரன் சொன்ன பொழுது நான் இந்த விஷயத்தைச் சொல்லி கிஷோரை நம்பச் செய்திருந்தேன். பொதுவாகவே BHEL டவுன்ஷிப் மக்களுக்கு ஆர்ஈசி மக்கள் ஜோடி ஜோடியாக சுற்றுவது தெரியும். பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கே வந்து சுற்றுவார்கள் என்று ஒரு முறை நானும் வெளி ஊரில் இருந்து வந்த மாமாவும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது இது போன்ற ஜோடியாய் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு மாமா சொல்லியிருந்தார்.

அதுவும் B செக்டர் வாசியான எனக்கு இந்த ஜோடிகள் புதிது இல்லை தான், ஒட்டு மொத்த டவுன்ஷிப்பிலேயே அழகாய் அமைந்திருந்த 'Sea Kings' ஐஸ்கிரீம் பார்லரில் தினம் தினம் பார்ப்பது தான். என்ன உள்ளே போய் சாப்பிடத்தான் முடியாது, பெட்டிக் கடையில் கிடைக்கும் 75 காசு சமோசா இங்கே ஐந்து ரூபாய், என்ன கொஞ்சம் மொத்தியாய் இருக்கும். அதே போல் தான் ஐஸ்கிரீமும் மைக்கேல்ஸில் ஒன்னரை ரூபாய்க்கு கிடைக்கும் ஐஸ்கிரீம் இங்கே பத்து ரூபாய். அப்பொழுதெல்லாம் ஐந்து பத்து ரூபாய்கள் பெரிய விஷயம். யாராவது தூரத்து சொந்தக் காரர்கள் வீட்டிற்கு வந்திருந்தால் கிடைக்கும், அப்பொழுதெல்லாம் ஸீ கிங்ஸ் தான். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் REC பெண்களுக்காய் இல்லாமல் RSK பெண்களுக்காய் மனம் ஏங்கும், என் வயதை விட அதிகமான வயதுடைய பெண்களின் மேல் விருப்பம் வந்திருக்க வாய்ப்பில்லை என்பதால். 

- தொடரும்

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சாமுராய் சினிமா த லாஸ்ட் சாமுராய்

Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds

சாமுராய்கள் பற்றி நான் முதன்முதலில் அறிந்தது பள்ளிப்பருவத்தில் இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமேரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டு போட்டதற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டது எனக்கு மிகுந்த ஆச்சர்யமளித்தது. அதாவது ஜெர்மானியர்களையோ இத்தாலியர்களையோ போலில்லாமல், ஜப்பானியர்கள் இறக்கும் வரை போரிடுபவர்கள் என்றும் 1945ன் இறுதிகளில் ஜெர்மனி, மற்றும் இத்தாலி சரணடைந்துவிட ஜப்பானியர்கள் மட்டும் சரணடையாமல் இறக்கும் வரை சண்டையிட முடிவுசெய்ததாகவும். அமேரிக்கா ஜப்பானிற்குச் சென்று தரைவழியாகவோ, கடல்வழியாகவோ ஜப்பானை வீழ்த்துவதன் பொருட்செலவும் நேரத்தையும் கருத்தில் கொண்டு ஜப்பானை சரணடையச்செய்யவே அணுகுண்டு போட்டது என்பதான ஒன்றை என் வரலாற்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.



அந்தக்காலத்தில் ஆசிரியர் சொல்வதே வேதவாக்கு, எதிர்த்து கேள்வி கேட்கவோ, இல்லை அதற்கு எதிரான ஒன்று இருக்குமென்றோக்கூட அறியாத வயது அது. அப்படி ஜப்பானியர்கள் சண்டை செய்ததற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் சொன்னது, ஜப்பானியர்கள் அனைவரும் சாமுராய்கள் என்று அதாவது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவர்கள், சாகும்வரை போராடுபவர்கள். அதே போல் சரணடைந்தபிறகு ஜப்பானிய மன்னர், மக்களிடம் அவர்களை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டதாகவும் சொல்ல மனதில் ஜப்பானியர்கள் பற்றிய மதிப்பு அதிகமானது. உண்மையில் ஜப்பானியர்களைப்பற்றியோ, சாமுராய்களைப்பற்றியோ எதுவுமே தெரியாத நிலையில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் அது.

சாமுராய்

சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழிற்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய ராணுவத்தில் இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இந்த வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகளை எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.


சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செபுக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதுவே பெண்கள் இந்த செபுக்குவை செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, சுயக்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, புராதனக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர்.



ஹியான் காலம் (794 – 1185)

சாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர்.

கமாகுரா காலம்(1192 – 1333)

கி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இராணுவ ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். ஷோகுன் எனப்படும் இராணுவத்தின் உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால் அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார்.

முரோமச்சி காலம்(1333 – 1573)

இந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் ஆதிக்கம், அல்லது தேவை அதிகமாகயிருந்தது. போர்காலத்தைத்தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் விவசாயமும் செய்துவந்தனர்.

அகிரா குரோசோவா எடுத்தப்படங்கள் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான்.

அழுசி-மோமோயாமா காலம்(1573 – 1603)

டோயோடோமி ஹிடேயோஷி ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இதுபின்னர் டோகுகவா லேயாசு என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது விவசாயம் செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.

இடோ காலம்(1603 – 1868)

இந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் விவசாயிகள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது.

அவர்களின் நிரந்தர குடியிறுப்பு பிரதேசத்தை உருவாக்கிக் கொள்ள கட்டுப்படுத்தப்பட்டார்கள் சாமுராய்கள். பின்னர் அவர்களுக்கான கூலி தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அவர்களின் நிரந்தரக்குடியிறுப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் டோகுகவாவின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் போனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவர்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது.

சாமுராய்களின் கொள்கை

ஆரம்பக்காலத்தில் இருந்து புத்த மதக்கொள்கை மற்றும் ஜென் கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர் சாமுராய்கள் அதேசமயம், மிகக்குறைவாக கன்பூஷியஸின் மற்றும் ஷின்டோவின் கோட்பாடுகளும் இவர்கள் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

ஆயுதங்கள்

சாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். ஆரம்பத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளது.



இந்த கடானா என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் சாமுராய்கள். அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் ஆரம்பக்காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது.


இந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர்.

த லாஸ்ட் சாமுராய்

இந்தப்படம் 2003ல் வெளிவந்தது, பெரும்பாலான டாம் படங்களைப்போலவே இந்தப்படத்தையும் நான் வெளியான சில வாரங்களில் பார்த்திருந்தேன். சில படங்கள் நமக்குள் தீவிரமான ஒரு அதிர்வை உருவாக்கும் என்னைப்பொறுத்தவரை என்னில் கொஞ்சம் அதிர்வை உண்டாக்கிய படம் இந்த த லாஸ்ட் சாமுராய்.

இந்தப்படம் நான் பார்த்த டாம் படங்களில் மிகச்சிறந்ததொன்றும் கிடையாது, போர்க்காட்சிகள் சம்மந்தபட்ட காட்சிகளின் படியும் நான் பார்த்த மிகச்சிறந்த படமாக இதைச்சொல்லமுடியாது. ஆனால் இதையெல்லாம் மீறிய ஒன்று இந்தப்படத்தில் எனக்குப்பிடித்திருந்தது.

நாதன் அல்கெரன், ஜார்ஜ் ஆர்ம்ஸ்டிராங் கஸ்டர்(உண்மை கதாப்பாத்திரம்) என்னும் கமெண்டரின் கீழுள்ள இராணுவத்தின் ஒரு தளபதி, படத்தில் அவருடைய மிகப்பிரபலமான ‘பாட்டில் ஆப் லிட்டில் பிக்ஹார்ன்’ ல் பங்குபெற்றதாக அறியப்படுபவர். இவர்களுடைய ராணுவம் அமேரிக்க சிவில் யுத்தம் மற்றும் இந்தயப்போர்களில் பங்குபெற்றது. குறிப்பிட்ட அந்தப்போரில் மிகக்குறைவான தன்னுடைய படையை அமேரிக்கப்பழங்குடியினரின் பெரும் படையை எதிர்த்து போரிடவைக்க அவரின் படை நிர்மூலமாக்கப்பட்டது. தோல்வி முன்பே தெரிந்திருந்தும் இந்தப்போரில் கலந்துகொண்ட கஸ்டரின் ஒரு படைப்பிரிவு தளபதி தான் நாதன் அல்கெரன். நன்றாகத்தெரிந்தும் இப்படி சக போர்வீரர்களை இழந்ததால் தன்னுடைய ஏதோவொன்றை தொலைத்ததைப்போல் இருக்கும் அல்கெரன் தன்னுடைய தளபதி பதவியில் இருந்து விலகி, துப்பாக்கிகள் பற்றிய காட்சிகளை நடத்துபவராக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஜப்பானின் மன்னர், தன்னுடைய படைகளுக்கு துப்பாக்கி பயிற்சியளிக்க விரும்ப அதற்காகச் செல்லும் அல்கெரனின் மற்றுமொறு முன்னால் கமெண்டர் அவரையும் தன்னுடன் வருமாறு அழைக்க சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அல்கெரன் ஜப்பான் வருகிறார். இங்கே தொடங்கும் கதை.

இங்கே ஜப்பான் வந்ததும் மன்னரின் படைகளுக்கு அல்கெரன் பயிற்சியளித்துக் கொண்டிருப்பார். பயிற்சியின் ஆரம்ப நிலையிலேயே மன்னர் தன்னுடைய படைகளை தன்னுடைய எதிரியான சாமுராய் கட்ஸுமோட்டோவிற்கு எதிராக போர்புரிய அனுப்புவார். அல்கெரன் எவ்வளவோ தடுத்தும் அனுப்பும் படைகள், துப்பாக்கிகள் கைவசம் இருந்தும் சண்டையில் சாமுராய்களின் வாள், அம்பு, மற்றும் வேல்களுக்கு பலியாகி பாதிபேர் சண்டையிலிருந்த உயிர்பிழைக்க ஓடிவிடுவார்கள். கடைசிவரை சண்டை செய்யும் அல்கெரனை கொல்ல வரும் சாமுராயின் மருமகன் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அல்கெரனால் கொல்லப்படுவார்.

பின்னர் அல்கெரனை பழிக்குப்பழி வாங்காமல், சாமுராய் கட்ஸுமோட்டோ தன்னுடன் பிணைக்கைதியாக அழைத்து சென்றுவிடுவார். பின்னர் சாமுராய்களின் இடத்திற்கு வந்ததும் அவருக்கு சண்டையில் கிடைத்த காயங்களை குணப்படுத்தப்பட்டு, சிறிது சிறிதாக அவர் சாமுராய்களின் நல்லெண்ணத்தைப்பெறுவார். பின்னர் கடைசியில் சாமுராய்களுக்கும் மன்னரின் படைகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் சாமுராய்களின் சார்பாய் பங்கேற்பார். சண்டையில் அல்கெரன் தவிர மற்ற அனைவருமே கொல்லப்படுவார்கள் சாமுராய் உட்பட. இதுதான் கதை.

எனக்கு இந்தப்படத்தில் டாமின் நடிப்பைவிட, கட்ஸுமோட்டோவாக நடித்த கென் வாட்டனபேவின் நடிப்பு பிடித்திருந்தது. தன்னுடைய இருப்பை மிகப்பிரமாதமாக படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் வாட்டனபே, அதுவும் குறிப்பாக அல்கெரனுக்கும் கட்ஸJமோட்டோவிற்கும் இடையில் நடக்கும் அந்த உரையாடல்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். சாமுராய்களின் வாழ்க்கை முறைகளை இயக்குநர் மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தப்படம் படமாக்கப்பட்ட விதத்திலும் அழகாகயிருக்கும்.

டாம் வாள்பயிற்சியில் ஈடுபட்டிக்கும் பொழுது செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கட்ஸJமோட்டோவின் மகன், சொல்லும் விஷயங்கள் நன்றாக இருக்கும்."Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds." அதேபோல் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு உதவி செய்துவருவது. சண்டையில் தான் கொன்ற சாமுராயின் மனைவிதான் எனத்தெரிந்து கொண்டவுடன் டாம் படும் அவஸ்தைகள் நன்றாகயிருக்கும்.

கட்ஸுமோட்டோவை அவருடைய இருப்பிடத்தில் வந்து கொல்ல முயலும் காட்சியின் பொழுது நடக்கும் சண்டையும், பின்னர் ஜப்பானிய மன்னரிடம் சென்று தன்னுடைய சேவையைப் பெற்றுக்கொள்ளக்கேட்கும் கட்ஸுமோட்டோவைக் கைது செய்து வைத்திருக்க அவரைக்காப்பாற்ற நடக்கும் சண்டையும் இந்தப்படத்தில் எனக்குப்பிடித்த சண்டைக்காட்சிகள். இந்தப்படம் பெரும்பான்மையான இடங்களில் அல்கெரன் கதைசொல்வதாக நகரும். கடைசியில் அவருடன் ஜப்பானுக்கு வரும் டிமோத்தி ஸ்பெல் சொல்வதாக முடியும், டிமோத்தியின் கதாப்பாத்திரமும் மிகஅழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். படத்தின் இயல்பிற்கு மிகஅழகாக இவர் செய்யும் சில நகைச்சுவைக்காட்சிகள் இருக்கும்.

சாமுராய்களைப்பற்றிய என்னுடைய ஆர்வமும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்ததற்கான ஒரு முக்கிய காரணமம். முன்பே சொன்னதுபோல் படமாக்கப்பட்ட முறைதான் இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை நிச்சயமாக பார்க்கவேண்டிய படம்தான் த லாஸ்ட் சாமுராய்.


இயக்கம் எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன், மார்ஷல் எர்க்ஸ்கோவிட்ஸ், எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன் எழுதிய ஒரு கதையின் தழுவலில் எடுக்கப்பட்டது. டாம் குரூயிஸ், டிமோத்தி ஸ்பெல், கென் வாடனபே, கொயுகி ஆகியோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In கவிதைகள்

கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதில்லை வானம்


நின்றவாக்கில் வானைத்தொடும்
என்னுடைய முயற்சிகள்
தோல்வியைத் தழுவுகின்றன
எகிறிக் குதிக்காததால் மட்டுமல்ல
வானமே இல்லையென்றான பிறகு
தொட்டுவிட முடியுமென்றோ
அது ஒரு நம்பிக்கையென்றோ
கற்பனைக்கதைகளை மனம் விரும்பாததால்

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கொடைக்கானல் புகைப்படம்

கொஞ்ச(சு)ம் கொடைக்கானல் படங்கள்

பூ

kodai view

Bulbul

Kodai View

Love this flower

IMG_0099

Kodaikanal Sunset View

Kodai View

Red-Whiskered BulBul

படங்களில் கிளிக்கி பெரிதாக்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In ma. se maniam selvan maniyam selvan mase செல்வம் மணியம் மணியம் செல்வன் மா செ மா. செ

மணியன் செல்வம் ஓவியங்கள்

எனக்கு ஒரு ஆணின் மீது காதல் உண்டென்றால் அது மணியம் செல்வனின் மீது தான். அவரது ஓவியங்களின் அழகில் மயங்கிப் போயிருக்கிறேன். ஏதோ கொஞ்சம் வரைந்த என் ஓவியங்கள் - அதில் ஏதாவது ஓவியத்திற்கான விஷயம் இருந்தால் - அத்தனையும் மணியம் செல்வனுக்கே.

இந்த ஓவியங்கள் என் சேமிப்பில் வெகுகாலத்திற்கு முன் இருந்தது, சமீபத்தில் நான் இவற்றை இழந்திருந்தேன், தற்சமயம் மீண்டும் கைவரப்பெற்றேன். என் கதைக்கான ஓவியம் ஒன்றை மணியம் செல்வனிடம் வாங்கிடவேண்டும் என்கிற ஆசை இன்னும் நிறைவேறவில்லை, எங்கே கதையைப் படித்துவிட்டு இதற்கெல்லாம் வரைந்து தரமாட்டேன் என்று சொல்லிவிடுவாரோ என்கிற பயம் தான்.





















Tags : ma. se, maniam selvan, maniyam selvan, mase, செல்வம், மணியம், மணியம் செல்வன், மா செ, மா. செ

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In White Water Rafting பயணம் புகைப்படம் வாட்டர் ராஃப்டிங்

கங்கை கொண்ட சோழபுரம், குதிரைமுக் - கொஞ்சம் புகைப்படங்கள்

பிரியமான கங்கை கொண்ட சோழபுரம்

முன்னம் ஒரு முறை கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்த பொழுது எழுதிய பதிவு, இராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் பற்றியது.

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

மொட்டை கோபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

அர்த்தநாரீஸ்வரர்

Shiva

Shiva

குதிரை முகம்(Kudremukh) நண்பர்களுடன் சென்ற பொழுது

Bikers

ப்ரான்சிஸ்

Swimming pool

குதிரை முகம் செல்லும் வழி

ப்ரான்சிஸ்

குதிரை முகம் செல்லும் வழி

My bike

படங்கள் அனைத்தும் பதிவிற்காக குறுக்கப்பட்டவை, படத்தில் க்ளிக்கினால் பெரிய படம் கிடைக்கும்.

துங்கபத்திரா ஆற்றில்









Read More

Share Tweet Pin It +1

11 Comments

Popular Posts