In அரசியல் ஏழாம் அறிவு பதிவுலகம்

பதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்


இப்படி ஒரு பதிவை எழுதிவிட வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு வருடமாகவே உண்டு. நானும் எனக்கு அரசியல் சம்மந்தம் இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் இணைய அரசியலில் என்னையும் எப்பொழுது சம்மந்தப்படுத்தும் ஒரு குரூப் உண்டு. இப்பொழுது எனக்குத் தெரிந்த இணைய அரசியலைப் பற்றி எழுதுகிறேன்.



இதுதான் அந்தப் பதுவு கொஞ்சம் வித்தியாசமாகயிருக்கிறதா - பின்ன தமிழ்ல எழுதிப்போட்டா ஆட்டோ அனுப்பிட மாட்டாங்க, அதுமட்டுமில்லாம எனக்குத் தெரியும் தெரிந்த அரசியல் அவ்வளவு ஈசியா உங்களுக்கு சொல்லிடுவேனா. Encode பண்ணியிருக்கேன்.

இதை Decode செய்து படிச்சிக்கலாம். தமிழ் பதிவுலகில் முதன் முதல் Encode பதிவு போட்ட பெருமையும் இப்ப என்னையே சேரும் ;).

077EovggtNUg0vK+uPUgv8HszCCx9MDK7CC4oqi87LiiyNA7ILH9ySCryKLTuPLQvP0guKKovOy4
osjQILH9uKLIIMWihML1ILH9qMn0IKbAodryvsWowyDNxaHDuqLCwaHJ0C4g/sOhINPVuMmi/SD+
8770INLyvrj1INy8IKv0wMryvqH9LiC/of0g/qi9wiCvxLii+CDAw8XEobggv7zBobzyIKa+obzt
zMW+/Mwg0/2nwCD+8770INLyvrjyqL70IMD8yKLCIKbAwsPHxaLEockgq8ii07j1ILiiqLzyvqLV
877QLiCr0CC01SDNxaHDuqLCwaHJ7CC4qL4gsf3AvqH4IKuoviDT/afJIKa6ofjEosWizriip8j9
Lg0KDQqxyezMIKa4oe+69SDgw/LQIKa6ofO+waH2ILTVIL6h8r6hLCC4oajD7LihqMTuIKe69/O+
xfcgq8XDorz1IP79ydP1IP7V7Mz1INLyvrj1IMDK7Mz1IKz3xfUgsf2oySDFosL0wKL4IKz68tD1
LiBEaWN0aW9uYXJ5IG9mIENvbnRlbXBvcmFyeSBFbmdsaXNoILH9yCDS8r648qi+8iCnvsogq8X3
IKa8+MSiwqL9INLyvrgguvPQuKjH8iDQqMfypr7O8r7QIP79ydP1IL+iqMnFovgg/tXsuKLI0C4g
q6e+p8Ch+CC6waPA8r6i+CCmxceiwqHJILqixCDQ9MCh7LiiuKjH9CDA/MiiwiDS8r648qi+1PUg
q8X3IKe+yiDFoe24ouwgprih8c4gp8ChyaH3LiCr9MDKIKvF1ezMILHtp7inwqEgscXDoafEoSCm
uqH4xPTA8Lwg0vK+uPUgvqH9IKvD3fcgxfW69S4NCg0Kv6H9IP6ovvQgwPzIoiD+w6Eu09W42+zM
ILTVIKbB9vggq9v0wKLCvqG4IL+iqMnXLijTvsSi+CC+xdq+xKG4IKvzviDFooTC8qi+IP7DocEu
uKIu7MwgwKL96/C8waG4IKvb9MCip8n9IDspKSCxyezM8iCmvsOi89AgvqLV7LiovOT3LCC+ovio
xMKhyiDA7LjyvqL4ILTVIKvD3fcgr/HOLiCmuKHvuvUgp8Ch+CC4oajD7Lih+CDA7Lj1IMXV9Swg
077EovggvqHyvqEgq/O+ILCow/QgwPzIovK+of0guKi+ILHYvvTA8MrV7Lggp8XxzvUgsf3aIKa6
ofjEovK+of0gq8X3IP7zvvQg0vK+uPKovvIgp77KyaH3LiCypsn9yKH4IKvzviCrw92ow/QgwPzI
oiCx2L6iwqLV876h+CC+/ajJ9CDA/MiiKKv4xNAgq8X3uNmovMIgzM71wPKovvQgwPzIoikgv6Lu
usLBofYgsdi+9MDwytXszPUgsf3aIKa6ofjEovK+of0gp77KyaH3Lg0KDQqrxdWovMIgp77Ovtbs
zCC4oqi87LihviCrx8Wi/MzyvqH9IKvzvu4gusHC8r6i+CCrw933IMX1uvUg/tXzvtAuIL+h2/Ug
JiMxMzQ7ouy4ov0gwKHyvvWFovggp77KwqLV7Liip8j9ILqixCC6wcL1OyCsyaH4IKu49MC8xaL4
qMQuIP70wMrCobjsILiiqLzyviCryKLTuPUguqLIotAgv6HHovggwcjz0CCnwKG4LCDAosO4oYkg
sqe+oSC01SD+vPK+ovggr8S4IKvHxaL4ILHYvvTA8LwgwaK47rqiyPO+IL+hxfggsf2nyKEg/vio
xCCrqL70IKfAof3IILT9qMinwqEgprqh+MQgq+24otXz0L6h/SC4osf1wKLC0CCrw933IMX1uvUg
/sPxvKHF0CCnvrz4LiCsyaH4IMGiuO66w6LCobgg3Mz7IOPEwaG4IL+h/SC+ovGovSCnv6HsuKIg
xfPQIKe69/Onvv0uIL6i8ai9wqL4IMGi/cmivsahuCC4qL7Cov0gwKG+oiDFqMMg08ryvqLV86e+
/SwgrMmh1vUgsf3Jp8WhILT92iDMqMjF0CCnwKHEp8XCotXzvr6h+CDS8r64waG4p8UgxaHtuKLC
qL70IMD8yKIg0/2nwCCmuqH4xKLCotXzp779Lg0KDQq/ocWoxPQgwPzIoiCx/duovMIgxaLB97rJ
8qi+ILHtuKLV89AgrMP1wKL0wNAgsf3AqL70IMD8yKIgp8KhuqLy0Owgprih8crV86e+/S4g/sPx
ziDj/dog06jIIL6i1fXA8r6i1fXAINLD8Mog/qi+ILHY0Liip8j9Lg0KDQoiv6MgrMmh1vUg0vK+
orqhxKLyINDV7LjxvKEguNXyvqEuDQoNCqv0wCwguqHQIL+hwuy4yaH0IMCh8tAgrPsgq8H38r6i
7LjwvKE/Ig0KDQr+874gxbrJ9SC/ocXEov0gsqe+oSC01SDA7LjyvqL4IMXVxdAoMjgwIMDsuPUg
p8XxzsGhyaH4KS4gscnszPIgpr7DosLFovioxCD+vv0gwKL9yaH4IP7V7Mz1ICKrw7qiwvgiILHy
vqjJIKfA1ezMIM3EwMGhuPQg0sOi1PUgsf3aLiCrw7qiwvggsf3aIMzIovTAovC80CCrvv0gwKL9
yfcg/tXszPUgxaKEwvKovvQgwPzIoiDMyKL0wKK8p8UuDQoNCrHtuPsgxaPwyqbE+MSh9SC01SDA
xqbBocaiIKvK7LjKIKa6ofjEouwgprih8crV9MCh97j7LiCx/cmmxf3IofggItPwvKHyINDW7Ljb
9SDTw/DOIL+hwuy42/Ugp7r3876hIKfFqMTsuKG4odAiILH9wNC+of0uIMWj8Mr4IKvK7LjKILrx
qLwgv7zszPUgq9Ag0/C8oSDQ1uy4yaEsINPwvKEgv6HC7LjJoSCx/cCovvQgwPzIoi4gq8X3IKa6
ofjEosKi1ezM9SCr874gp8H83MOiwiDFusnyvqLW9SDcvCD+874gwMamwaHGoqjCIKvK9MCovMKh
uCCoxfKnviCx2L6iwqLV7LiiyKH3LiCx7bj7IMDsuPKovu4gp7r3874gwMamwaHGoiCx/cC+odb1
IKvK7LjKLCAise24IMWj8Lyh2bgorPXAqMcpIMqFooT9IKfB7Lii7bii+CC+xdogprr21PUgpsCh
2Ka++MSh9SIsILH0wMqmwv3IofggwMamwaHGoiDBofzI9MDwzjsg0/C8oSC/ocLsuMmhuNf1LCDT
w/DOINDW7LjJobjX9S4NCg0Kv6H9ILL9IP6oviCmuqH4xCDF1biip8j9ILH9yKH4IP7zviDAxqbB
ocaiqML0IMD8yKLyIKa+w6LCob4gtNXF9yC/ocWoxPQgwMrszPUgpsCh2NAg/vO+IP7D8c4gxcOi
uKjHILi889Agp8Ch9sWizsXQILHHotA7IKu+ocXQIMWihML1INLDosKhwfguIP70wMogv6KoyMIg
xaKEwu24qMcg0fG9ovTAobgguMXJovLQIP7zviC/ocWoxCCx2L6iwqLV7LiiyKH3IP7DoS7T1bj9
LiD+874gv6HFqMT0IMDK8r7XvKfJp8Igw6L55CCnwKH9yCC0/ajIILHYvqLForynxfHO9SCx/dog
v6KoyfK+otXzp779LiCsyaH4IKv0wMr0wPC8ILT9qMggsdjQxb78zCDT/dIgq6i+IP792/Ug/v3b
9SDBo/vFobqi9NIgprr2wvTAvKfF8crCILjwvKHC8r6i/MwgrMehp8n9Lg0KDQq/ocXEov0gr6jD
wqG8+CCmwaHGoiD+vPK+ovzMIP689SDBodrAzsXQ9SCr874gpsGhxqLCovggwKHxyvK+osL1IKbA
/MggtNXF9yCx2NDF0CCnwKH9yCC/qLzCovggq/O+9CDAobj1IP7V9MDQ9SDAyuy49KfAofYg/vO+
IKzHofggsfTAyiDj/dogxaLyvqLCobrBockgr6jDwqG8+CCmwaHGorjHovggp7737rqiIKbA/Nog
/tXzvqLV7Lgg08rU9SCx/cggxaLC9KfAILHYuKLI0C4gvsGi+r+h8M4gwKLDocG99yDAoaiELCCn
uMPHoajFIKjBwsGhuOwgprih8bwgwKLDocG997jHov0gwKGohDsgwKLIzCCr877sILihxCCDwaP9
uMei/SDAoaiEIKi4xfO+otXsuKLI0CDEocW4waH2LiDj/dogxaLyvqLCobrBof3JILiovriox9T1
ILiovuy4x/24qMfU9SDAofK+osPtuKjH1PUgq8X3IL7JovK+yaKnwiCx2L6iwqLV9MC+/LihySDF
ofb00iD+1fO+odanwSDFosL0p8AgwaLvuqLCotXsuKLI0C4NCg0KwKLIzCC/ocXEov0gq8r0wKi8
IL+hvsGhuCD+1ezM9SCnwYOi7Lj4IMOiwsSihfU7IMOhg6HXvP0og8Gj/b6h9ykgq8XVqLzCIP7I
89Agp8ChySDT/afJofe4+yCnwM3F0Cwg4/3aIL6oxNOoyOzMINP9yfcg/sjz0CCnwKHJILTVIKbA
8c+8/SC/orj6uKHE8r6i+CD+1ezM9SC01cX9INzOxdAg/vTAyiCvvqHDvfK+ovy4obgg/sPxziCm
uqH4uKKnyP0uIL+hxfggwKL9yfTA8MrV7Mz1ILiovsKi+CDBofO+w6O4IMK+offyvvUgvqH9IMGi
uNPsuKLCwaHJIMWihML1Lg0KDQqx7bj7IMWj8Mr4ILH9qMkgxcf38r4gsf0gq/TAocWi/SCr9cGh
IP7V876h97j7LiC/oe24+yCx7bj7IMChqITCovggIsCh7rr1waEiILH92r6h/SCrqMb0p8Ch9S4g
scnszCCrvvy4ockgq/fyvvUgq/nFx9cgseyFoezwvKEgpr7DosKhxaLwvKHW9SC01SDFqLjCovgg
wKHwyiCx/dogvqH9IMXV9S4gq/XBoSC6ov3JIMXCvqL4ILH9qMkgwKHwysKivPUgxaLwzsWi8M4g
y+669yDKqMPJou0gwMrsuPQgp8Ch9sWi8Ly+ofggsf2oySDFx/fyvtAgsfjEoafBIMCh8MogvqH9
ILH92iC/of0gp7j7xaL0wPDK1ey4oqfI/S4gq8X3ILHJ7Ka4+MSh9SCmw6H1wNf1INPzqL7CIKaD
yafDhP0gsf3AvqH4IKvzvuwguKHEIMXG7Lj0wMogrPEgwKL7qMfszPIgvqH9IKu+orgguvSnwKH3
8CC4oqi87Mz1OyCrxdWovMIgprr4xPUgv6H9LiCxyezM8iCmvsOi86e+IMWj8Mr4IL+87Mz1IMCi
w+66qMm42ezMILH9ILr0p8Ch9/C8obggxdX1IKz7KLSnwykgq8X3vqH9LiCr877sILihxPK+osSi
1fPQIKv1waEgq/TAoSD+1cXV9SCr7LihILr0p8Ch9/AuDQoNCqvF1ezMILiovLqiILihxO24x6L4
IMHJv6KoxCCmuKHvuvUgvs7BociiwqLV877QLiCrxdWovMIguKi8uqIg/sPxziDj/dogrPHOuPsg
q8XVvP0g/tXzvsX9ILH9yCDTqMjCovggv6KoyMIgxaKEwu24qMcgp7/DovggwKH38r6i1ey4oqfI
/S4gq76hxdAgq8X3IL7926i8wiC4ocTy0CDB7LjHorz1KKuoycXV9SD+yPO+xfe4+ykgp8C6ouym
uKHxytX0wNA7ILH0wMogsf3Jorz1IKv0wKEgq/XBocWivPUgp8DNxaGnw6Egq/TAyi4gr/3JovTA
objsILjFyaLyvqH4IKvFqMMgzfzIotb1IKzwuPsgr/C4offz0CCmuKHxp7yhIP74qMQgv6L92iCm
uKHxp7yhLCDNxfzIovgguqH289Agprih8ae8oSCnwM3FqL70IKfAocQgtPmmxaHVIMDsuNP1IL6i
1fXAoiCr877zviC/wPe4x6L9IKbAwve4qMfuIKa6ofjEovQgp8C6ouymuKHxytX0wKH3Lg0KDQqx
/cmh+CC4qL7UvP0gtP3IoiDAyuy4INPK876+/Mwg/tDX9SC01SC4ocO9waG4wqLV7Lgg08rU9S4g
p8XxzsGhyaH4ILHtuPsgzM71wCDAov3JvaIgsckgtNXFodoguKi+ILH9ILjx0/2nySC/vPTAqL70
IKfAof3IIMCi9cD1IK/VxaHJ0CCx/afIIKa6ofjExKH1LiDB876iw/UgqMX0wNAsIKuoviCxvqL3
7LggvrjOIKjF9MDQLCC6ofTAofDK+CDB1fPQIKfAoc7F0CwgzM71wPK+ovynuCDdyaLC9SCoxfTA
0CCnwKH9yCAiprz39SK4+yCx7bj7IMWj8Mr4ILr3xSC6ob6hw73Bobgg0sTtzPUgxaKEwu24+yC+
of0uIP6+/SC4ocO9waG4ILH9yaH4IP7zvuwguKi+qML0IMD8yKLCIKe4+8WiuKjHIMWivNf1ILT9
yPK+of0gzcTAwaG4INPK877QLg0KDQr+9KbAodimvvjEofUgtNUg0vK+uPUgwMryvqH4IKuovvQg
wPzIosIgxaLB97rJ8qi+ILH0wMogxaLyvqLCobrBobgosf3JIKa4oe+69SAiQSLyvsnBobgsIM3y
vqLuIM3yvqIsIKa4oe+69SDNwvKovu4gprqhyKLz0CCmuKHxzikgsdi+INPK1PUgsf3aIL6h/SCn
wqG6ouy4oqfI/Sg7LSkpLiCsyaH4IP7zvuwguKi+wqL4IKv0wMogsdi+INPKwqG+IKvHxaL8zCDF
ooTC9Tsgsf3JpsX9yKH4IP7zviC/ocX4INPYxdCnwSC4qL7UvP0gwKL9yaL0wKKovfPQIP7V9MDQ
IKu8+IogtP3EoiC48aa88fAgvqH9LiC4qL6owtT1IP7zviDFooTC8qi+1PUgvsmi8r7JoqfCIMCi
w6Lyvsiixaa+/cDQIKbDofXA7CC4ysnBockgxaKEwvUuKP7Q1/Ugv6H9IP7zviC/ocWoxCDAyuy4
ILTVILihw731ILH92iC/of0gprqh+MTFovioxCA6KSkuDQoNCriovqbC/cggtP3aIKbAw6K+objs
ILiiqLzCoaa+/cih1vUgv6HFqMQgv7j38r6i7CCmuKHxziCnwKHFvvy4ockguKi+IL+i7rrCwaH2
IL+hxcSi+CCv8c4uIL+hxcSi+CD+1fPQIMCiyvK+IMXDorioxyDAosry0PQgp8Ch8M4gq9Agprqh
+Nb1IMWihMLtuKjHIMWix+y4ILHJ7Mz1IMWi1fTA9SC+of0uIKzJofgg/vO+IL+hxcSi+CDF1fUg
scnszPQgwKLK8r4gxcOiuKjHp8KhIMWh7Liiwu24qMenwqEgsc7y0PQgp8ChvCC/of0gv6KoyfK+
ofggq9AgxfXAobiixaLO9SCx9MDKpsL9yKH4IKv00sj1IL6i8ai9IKzwuNn1IP7DoS7T1bjb9SCv
qL7suMXVxaH3uPsgsf3AvqH4IKv0wMqnwiDFovDOxaLOuKKnyP0uIKzJofggseyFofXS+7ihuCD+
w/HOIMWihMLtuPsuDQoNCiLMx6LszPUgpsCh8c64qMf0IMCh9+y4xKGnwaENCszJovPQIMCh9+y4
xKGnwaENCsChvqIgwajI874gir7J0/UNCsCh7bih9iD+zvTAovggtPDKwqG90/UNCsWhqMbyIKa+
oai81PUNCsXKxaHJIKe+odnBofbsDQrMx6LszPUgpsCh8c64qMf0IMCh9+y4xKGnwaENCszJovPQ
IMCh9+y4xKGnwaEiDQoNCiLTyaLFycX9IKbA8byh8MoNCtPK780gxe66INzzvsSip8QNCqa6+MTB
ofIgvqjE9KfAyaENCrj7x/Qg0tW6qMnU9Q0KtMei7qa6zvLQIMXz0A0KtcPBofIgvqjExaLDou66
oQ0KuO7NIKu4/Mii9CDAxvUgp8ChxA0KuMmi780gpr6h7cz1IL7JwaLD8c71Ig0KDQr+qMWmwvjE
ofUgv6HFxKL9IP6ovMKi+CDF1fUguqLEIMChvPggxcOiuPsuILqixCDAvO24qMf0IMCh9/LQxaLw
ziD+8770IMC88qi+ILH0wMogsc7yvqLV7Lgg08rU9SCx/cggxaLC9NIgsvzAzvUuIKuovvQgp8Ch
xCD+877sILiovqjCILH0wMogsdi+osKi1ey4INPK1PUgsf3IIMWiwvTS8r6h/SCnwabE2cWoviC+
xaL37Lgg08rCxaL4qMQuILH4xKH1ILj8wKjJwqG4IP74xKHB+CwgsfjEofUgv6KDwaG41/Ug/vjE
ocH4ILTVILH0wMogsdi+osKi1ey4INPK1PUgsf3aIL+hxcSi/SD+w/HOIMDsuO24qMcgwMrszPUg
psCh2NAgxaLC9MDHovTAvqG4IP7V7LiiyNAuDQoNCiK4ocT1LCD+w6HB26i8wiCr9dIgq/jELiC+
otX1wKIgxfPQIKv1wKHIofLgvaLCovgg4O3M9SDAxuy49SCrvvzM7CC4oqi8wqHQLiC1wqHQINP9
p8kgprr92iCmuKHxytXszPUgq6i+8iC+zuy4p8WhIKv4xNAgp8W48r6ovCCmuvbCp8WhIMHJor7J
ofgg/v3b9SDTysLFovioxC4NCg0K/sTsuKLC8r6ixKHF0CC4ocTyqL4gv6La8r6iLCC+8MosILTO
7LiiINP92/UgwKL92/Ugtbzuprr2wiwguKHE9SC4ocTBobj0IMCovMChx6K4+yDTwv3aIMXzvqLV
7LiiyKH3uPsgJ6vD3fcgxfW69Scgv6HF1vUgq/TAyiC01SDTwvy6oqfCIiCx/cggwKIusiC4otWJ
vcmi/SDT/duowyDFw6K4+yC+of0gwcm+ovggtc64osjQILiovuy4ockgxaLB97rJ9SCx2L6nxfHO
9SCx/dogr/C4odX1IKbAodjQLiC4ocTyqL4gv6La8r6iLCC+8M4sILTO7LiiINP92/UgwKL928Gh
uCCx2L6iwqLV7Mz1IP7DoS7T1bjJov0gsdjy0Oy4p8ehziCnuvfz0CC/odP1IMDCvaLsuKKnyKH1
Lg0KDQqDwaPzvqH3IK/0qMAgvv0gwcrCovgguPDK7Ka4ofvZ9SCmwKHY0CC/ofUgwOy48r6i+CD+
1fPQIMCh9+y4oqfIofUuIM30wPXBoSC4osbFoiAiq7z4iiC0/cSiIiDAofDOIMChzvUgpsCh2NAg
rMP1wPK+ovggp7jwuPIgpr6hvO24oiDAov3J9yC4oai+IKbAofK+ouwgprih+7iip8ih9S4guqHB
or+hvtv1IMXNwb6i1PUgq6jI7Mz7p8cgIqfB8Lz3IiCmuvbU9SCmwKHY0CC4vsXVuKL4IL+i/dog
wKH37Liip8ih9SDAov3J9yC6ocGiv6G+p8mhziDFo84gscOi5PC89MDwvND1IKbF7Ki4wqL4IL+i
/LjTysKhwfggIrOnwqEgwKHF9SIgsf3aIKvEyKLCyvLQIKbFx6Knwtq4oqfIofUuICKv/SDAw/XA
qMOnwiC4osiiir6iwqHJosKhuPQgp8ChyNAiILH92iC4ovC8ocX2wqjJ9CDAoffy0CCowMOhuKIg
prqh+Nb1IKbAodjQIMHJ9SDAvtq4osjQLg0KDQoirMGhIKv00iwgsf3J8tDszCDF9dIuIMWh9u66
vvQgwPK+oiDF7LiovcKh8iCmvsOi1PUuIP70wPQgwKH38r6nvqG8IMXuzSCrx/O+oSwgzfHOIMWi
w/ggvvHKILrBoe66ocP1ILH4xKH1IKvQ+MQgp7ryvqLCoSwgq7zuIKe6/dsgpsXa8tD0IKfAocKi
zvUg/vjELiIgsf3aILTVILiixsWiLCDSir6iwaOouuwguKLGxajJ9CDA/MiiIL/suPggq8rsuCC/
odP1ILqiw6Ly0Owgprih+7iip8ih9SD+9MDKILiovsKi66e8IL/1qMHU9SCrqMby0O4gprr41vUg
sdjy0CC/qLwg/sOhLtPVuNvszO4guqHyvqLCwaG4osKi1ey4osjQLiCmwKH9yaLCov0gprr4xdvs
zPUsILH9IKbAwvcgw6HBp7qE2+zM9SDAosjMINLyvrjyqL4gg4rwIKjE7CC+8CDAosOi8tAgwMrs
zPUgwfymyKHVINLyvrjBobggscnszCCrw933IMX1uvUguKKovPK+otXsuKLI0C4NCg0Kv6LuusLB
obggsdjy0PIg0KjIwqL4ILih+CDAvqLsuKfFoSD++KjEIKuoviCnv6HsuKKnwqEgv7jDp8XxzvUg
sf3IIKzF+CD+1ey4osjF97j7IL+i7rrCwaH2IMDE06jIIMDK7Lggp8XxysIgtNUg0vK+uPUgq8Pd
9yDF9br1ILH9yKH4IKvQIMGiqLjCobih0C4NCg0KICAg

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In Only ஜல்லிஸ் அயோனி சீதா சுஜாதா புத்தர் பைத்தியக்காரன் மையம் வளர்மதி

அயோனி

திடீரென்று ஒருநாள் நண்பன் ஒருத்தன் சீதையை அயோனின்னு சொல்வாங்களாமே அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டு என்னிடம் வந்து நின்றான். எனக்கு முதலில் ஆச்சர்யம் எப்படி இவனுக்கு இந்தக் கதை தெரிந்தது என்று, அடுத்து அவன் ஏன் இதைப்பற்றி கேட்கிறான் என்ற சந்தேகம். ஏற்கனவே நண்பன் ஒரு மாதிரியானவன் என்பதால் சும்மா வாயைக் கிண்டினேன், ஏன் இதைப் பத்தி கேட்கிறாய் என்று.



யோனின்னா என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியும், உன் ப்ளாக்கையெல்லாம் படிச்சிட்டு தமிழ்ல ஒரு வார்த்தைக்கு முன்னாடி அ- போட்டா அது அந்த வார்த்தையோட எதிர்ப்பதம்னும் தெரியும்.(புனைவு - அபுனைவு உதாரணம் சொன்னான்). அப்படின்னா சீதை யோனியில்லாதவள்னு அர்த்தமான்னு கேட்க, எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

நான் சொன்னேன், ஒரு விஷயத்தை எக்ஸாக்ட்டா எப்படி தப்பா சொல்றதுன்னு உன்கிட்டத்தான் கேட்கணும் போலிருக்கு. அயோனின்னு சீதையைச் சொல்வாங்கங்கிறது சரிதான். ஆனால் அதற்கு அர்த்தம் சீதை யோனியில்லாதவள் என்பதல்ல, சீதை யோனியின் வழியாய் பிறக்காதவள் என்பதுதான். ஏன் என்றால் சீதை அம்மா - அப்பா மூலமாய் கருவுற்று பிறந்தவள் இல்லை என்று சொன்னேன். என்னத்தையோ நினைத்து வந்து என்னமோ கிடைத்த விரக்தியில் நகர்ந்தான்.

நான் சிறு வயதில் இருந்தே ஏகப்பட்ட கேள்விகள் கேட்பவனாகவே இருந்து வந்திருக்கிறேன், பள்ளிக்கூடங்களிலும் சரி கல்லூரிகளிலும் சரி எனக்கு பாடம் நடத்துவது அத்தனை சுலபமானது கிடையாது. தற்சமயங்களில் வேலை செய்யும் நிறுவனத்தில் கூட ‘செஷன்’ என்று கூட்டிச்சென்றாலோ ‘டிரைய்னிங்’ கொடுத்தாலோ அதிகம் கேள்விகள் கேட்பவனாகயிருந்திருக்கிறேன். கேள்விகள் ஒரு வியாதி போல் என்னைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்திருக்கிறது. சில சமயங்களில் வெறுமனே கேட்கவேண்டுமென்பதற்காகவே கேட்கப்பட்ட கேள்விகளை கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு மோசமான அனுபவங்கள் நான் கேள்விகள் கேட்டதால் நடந்திருக்கிறது.

புத்தர் நான்கு வகைகளாகக் கேள்விகளைப் பிரிக்கலாம் என்கிறார், நேரடியாக பதில் சொல்வது போல் கேட்கப்படும் கேள்விகள், விளக்கத்துடன் பதில் சொல்வது போல் கேட்கப்படும் கேள்விகள், எதிர்கேள்வி கேட்பதன் மூலம் பதில் சொல்ல கேள்விகள், பதில் சொல்லக் கூடாத கேள்விகள் என்று. உண்மைதான் கேள்விகளுக்கும் நான்கு என்ற எண்ணுக்கும் தொடர்பு உண்டு போலிருக்கிறது, எது சரி எது தவறு என்பதைப் பற்றிய உணர்வின் மேல் நியீட்ஷே எழுப்பும் கேள்விகள் கூட நான்கு தான்.

You run ahead? Are you doing it as a shepherd? Or as an exception? A third case would be the fugitive.

Are you genuine? Or merely an actor? A representative? Or that which is represented? In the end, perhaps, you are merely a copy of an actor.

Are you one who looks on? Or one who lends a hand? Or one who looks away and walks off.

Do you want to walk along? Or walk ahead? Or walk by yourself? One must know what one wants and that one wants.


Questions of Conscienceவில் நியீட்ஷே கொடுக்கும் நான்கு கேள்விகளுக்குமான பதில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு விடையளிக்க வேண்டிய அளவிற்கு முக்கியமானவை. நியீட்ஷேவைப் பற்றி நினைத்தால் சட்டென்று நினைவுக்கு வருவது ’வளர்மதி’ தான்.

 ஒருமுறை பைத்தியக்காரன், வளர்மதி ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்ததையும் அதற்கு காரணம் நியீட்ஷே தான் என்று சொன்னதையும் நான் நிச்சயம் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளவில்லை தான். ‘ஒரு கேள்வி’ என்னை ஆட்டிப் படைத்திருக்கிறது, அது எந்தக் கேள்வி என்பது அல்ல இங்கே பிரச்சனை கேள்வியால் மனிதனை ஆட்டிப் படைக்க முடியாமா என்பது, அப்படியென்றால் முடியுமென்பது தான் பதிலாய் இருக்க முடியும்.

வளர்மதி, நியீட்ஷேவைப் படித்துவிட்டு நியீட்ஷே கேட்ட ஒரு கேள்வியால் அப்படி பாதிக்கப்பட்டதால் சாப்பிடாமல் கொள்ளாமல் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததாக சொன்ன நினைவு உண்டு. எந்தக் கேள்வியென்று அத்தனை சுலபத்தில் நினைவிற்கு வரவில்லை என்றாலும் ‘மையமாக’ இப்படி இருந்தது. இதே உடல், இதே அறிவு, இதே நண்பர்கள், இதே பகைவர்கள், இதே வாழ்க்கை உங்களுக்கு இன்னொரு முறை வாய்க்கும் என்றால் வாழத் தயாரா என்பது தான் அந்தக் கேள்வி. வெண்ணைவெட்டியாய் இதற்கான பதிலை எதையும் யோசிக்காமல் ஆம் என்று சொல்ல வேண்டாம். இந்தக் கேள்வி எழுப்பும் அதிர்வு நிச்சயம் இல்லை என்று சொல்லவைக்கும். யாருக்கும் பதில் சொல்லவேண்டும் என்று இல்லாமல் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள முயலுங்கள். என் பதில் இல்லை என்பதை நான் அப்பொழுதே வளர்மதியிடம் சொன்னேன்.

அப்படியென்றால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது என்ன?

‘மையம்’ என்றதும் சுஜாதா மையமாக வந்து என் கியூப்பிக்கில் மேல் கால் மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு வளைந்த முதுகுடன் சிரிக்கிறார். நான் விரும்பிப் படித்த கேள்வி பதில்கள் சுஜாதாவினுடையவை, அந்துமணியில் இருந்து தான் இது தொடங்கியது. பின்னர் மதன், அரசு என்று பலவாறு தொடர்ந்து இன்றும் இணையப்பக்கங்களில் எழுதும் லக்கிலுக் வரை தொடர்ச்சியாய் கேள்வி பதில் படிக்கிறேன். ஜெயகாந்தன் பதில்கள் மட்டும் சட்டென்று ஒரு எரிச்சலை உண்டாக்கும் இவரிடம் போய் கேள்வி கேட்கிறாங்க பாருங்க என்று, ஒரு வேளை அவர் எதிர்பார்ப்பது கூட அதுவாகத்தான் இருக்கும்.

கேள்வி என்றதும் நினைவிற்கு வரும் இன்னொரு நபர் ’தெரிதா’. அவர் எழுப்பும் ‘must not structure have a genesis, and must not the origin, the point of genesis, be already structured, in order to be the genesis of something?’ இந்தக் கேள்வி உள்ளிட்டு அவருடைய எழுத்து கேள்விகளால் நிரம்பியதாக இருக்கிறது.

Interviewக்களால் நிரப்பப்பட்ட சாஃப்ட்வேர் வாழ்க்கையில் நான் கேள்விக்கான பதில் சொல்வதை ஒரு விளையாட்டாக விளையாடத் தொடங்கியிருந்தேன் ஒரு சமயத்தில், interviewer உடன் சதுரங்கம் விளையாடும் தந்திரத்துடனும் லாவகத்துடனும் கேள்வி பதில்கள் தங்கள் அடுத்த நகர்வை முந்தைய நகர்வை வைத்தே ஆடும் விளையாட்டு போல், என் பதிலின் மூலம் எனக்கான கேள்விகளை அவர்கள் வாயில் புகுத்தி ஆடும் இந்த விளையாட்டு எனக்கு தொடர்ச்சியாக வெற்றியையே பெற்றுத்தந்தது.

கேள்விகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கின்றன, எதைப் பற்றியாவதும். தொடர்ச்சியாக கேள்வியாகவே இருந்த கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் தருணம் விளக்கிவிடமுடியாததாய் இருக்கிறது. பதிவுலகில் முகமூடியில் உலாவரும் இன்னொரு ‘க்ரூப்’ இட்லிவடை தன் முகமூடியை கழட்டி எறிய திட்டமிட்டிருப்பதாகத் தெரிந்ததும் அந்த உணர்வுதான் வந்தது. முகமூடிகளை அலட்சியப்படுத்திவிட்டு நகர்ந்துவிடுவதுதான் இணையத்தில் மனநிம்மதியுடன் வாழ வழி என்று தெரிந்தாலும், எலி எப்பொழுதும் புலியாவதில்லை என்று தீர்ப்பு வைத்த திருமுகத்தைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. என்னவென்றாலும் இட்லிவடை கேள்வி பதில் இல்லாமல் தான் ‘சுழற்றிக்’ கொண்டு நிற்கும் என்று தெரிவதால், Ignorance is a bliss.

Read More

Share Tweet Pin It +1

15 Comments

In

எவன்டா அது ரங்கராஜ் பாண்டே

அமெரிக்கா வந்ததும் இழந்ததில் முக்கியமானது தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகள். தட்ஸ்தமிழும் கூகுள் ப்ளஸுமே எனக்கு தமிழ்நாட்டு அரசியலுக்கான சோர்ஸ்கள்.

அங்குமிங்கும் எப்பொழுதாவது இந்தப்பெயர் அடிபட்டு வந்தது தான் என்றாலும், பாண்டே என்று சர்நேம் இருப்பவன் என்ன பெரிதாய் தமிழகத்தைப் பற்றித் தெரிந்துவைத்திருக்கப்போகிறான். தந்தி டிவியெல்லாம் ஒரு டிவியா என்ற கருத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. வீட்டில் யப்டீவி வழியாய் தந்திடிவியும் உண்டும்.

எவன்டா அது ரங்கராஜ் பாண்டே என்று கேட்க வைத்தது, திக தலைவர் கி. வீரமணி சார்ந்த பேட்டியின் பொழுதுதான். இப்பொழுதுகளில் இது அத்தனை சரியா என்று நினைவில் இல்லை, அண்ணன் சீமான் பேட்டியாகக்கூட இருக்கமுடியும். நான் முதன் முதலில் பான்டேவைப் பார்த்தது.


 


 
இன்னமும் கூட அவருடைய எல்லா பேட்டிகளையும் பார்க்கவில்லை என்றாலும், சுபவீ உடனான அவருடைய பேட்டி எனக்குப் பிடித்திருந்தது, அதே போல் சீமானுடனான பேட்டியும். பொதுவாய் நெஞ்சை நக்கும் பேட்டிகளுக்கு மத்தியில் இப்படியான கேள்விகளைக் கேட்கக்கூடிய நபராய் இவர் உருவாகியிருக்கிறார் என்பதும் கூட பெரிய விஷயமே. இதில் அவருடைய வரலாறு சொன்னார், தினமலர்னு அப்ப சொன்னாரா நினைவில் இல்லை, ஆனால் நான் இவர் தினமலரில் தான் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தார் என்று படித்த ஞாபகம். சுகாவின் அப்பா நெல்லை கண்ணன் சொல்லியிருந்த நினைவு, தன்னிடம் பேசி எப்படியும் ஒரு பத்தி வாங்கிவிடுவார் என.


ஸ்டாலின் உடன் ஒரு பேட்டி பார்த்தேன். மிகவும் மொக்கையாக உரையாடுபவராக இருக்கிறார் ஸ்டாலின், அண்ணன் சீமானுடைய பேட்டிகளைப் பார்த்தால் தெரியும் தன் கருத்துக்களைத் தெளிவாக நல்ல தமிழில் வைக்கும் ஆளுமை படைத்தவராகயிருக்கிறார் சீமான். ஸ்டாலினுக்கு இன்னும் இது கைகூடவில்லை, கைகூடுமென்ற நம்பிக்கையுமில்லை. பான்டேவிற்கு அழகு தமிழ் கைகூடியிருக்கிறது. ஸ்டாலினிடம் தமிழ் இல்லையே தவிர நேர்மை இருப்பதாகவே இன்னமும் படுகிறது :) விட்ட குறை தொட்ட குறை என்று நினைக்கிறேன்.

இந்துத்வ சாயல் கொண்ட கேள்விகளையே கேட்கிறார் என்றாலும், கேட்கவேண்டிய கேள்விகளை தவறாமல் கேட்கிறார் என்றே நினைக்கிறேன்(நான் பார்த்த இன்டர்வியூக்கள் குறைவு).  இன்றைய தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் நான் கண்டறிந்த(ஆமாம் காந்தி செத்தே போய்விட்டார்) ஒரு நல்ல ஆளுமை பான்டேவினுடையது, கஷ்டம் என்றாலும் அவர் இந்துத்வ கனெக்‌ஷன்களை விட்டொழித்தால் இன்னமும் உயரிய இடத்திற்குச் சென்றடவைவார். சன்டிவி கால ரஃபி பெர்னார்ட் பார்த்தது போல் இருந்தது, தன் குரு இவர்கள் அல்ல என்று பான்டே தெளிவாகவே சொன்னாலும் நம்பமுடியவில்லை தான்.

உங்களுப்பிடித்த பான்டேவின் சிறந்த பேட்டிகளை எனக்கு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். அப்படியே பான்டே தவறிழைத்ததாக கருதும் பேட்டிகளையும்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In பயணம்

குடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம்



சித்தன்னவாசலைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததற்கும் காதலர் தின 'என்ன விலை அழகே' பாடலுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன், காதல் அதுவும் முதற்காதல் தந்த மிகச்சில நினைவுப்பொருட்களின் ஒன்று காதலர் தினம் படப்பாடல்களின் பொழுது இளகும் நினைவுகள்.
அப்பாவிடம் சித்தன்னவாசலுக்குப் போகவேண்டும் காருக்கு சொல்லிவிடுங்கள் என்றதும் காருக்குச் சொன்னாரா இல்லையோ அங்க வர்ற பொண்ணுங்களை ஃபோட்டோ எடுக்கக்கூடாது என்று சொன்னதுதான் முதலில். அப்பா சொல்லித்தான் தெரியவந்தது கல்லணை, முக்கொம்பு மலைக்கோட்டை எல்லாம் விடுத்து இப்ப சித்தன்னவாசல் தான் காதலர் ஸ்பாட் ஆகயிருக்கிறது, அதைப்பற்றிய வரிகள் தேவையில்லாதவை. சித்தன்னவாசலுக்குச் சென்றிருந்த பொழுது அங்கிருந்த தொல்பொருள்துறை ஊழியர் சொல்லித்தான் குடுமியான்மலை பற்றித் தெரிந்துகொண்டோம். நானும் ஓட்டுநர் நண்பரும் குடுமியான்மலைக்குச் சென்று பார்த்த பின் பார்க்காமல் வந்திருந்தால் மிகச்சிறந்த கோயில் ஒன்றை பார்க்காமல் விட்டிருப்போம் என்றுதான் நினைத்தேன்.(சித்தன்னவாசல் பற்றி இன்னொரு தரம் எழுதுறேன்.) 
அங்கிருந்த அர்ச்சகர்களுக்கு சரியான விளக்கங்கள் தெரியாததால் தவறுதலாய் நிறைய விவரங்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்படியிருக்க முடியாது என்று குறைந்த விவரம் கொண்டவர்களாலேயே உணர முடியும். அந்தக் கோவில் இரண்டாயிரம் வருடம் புராதனம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் மிக அற்புதமான கலைத்தன்மை உடைய "finishing" கொண்ட சிலைகளைப் பற்றியும் சரியான விவரங்களை அவர்கள் சொல்லவில்லை. அதைப்போலவே அங்கேயே இருந்த தொல்பொருள்துறை ஊழியரை அறிமுகம் செய்துவைக்காதது மட்டுமல்லாமல் அவர் அங்கேயில்லை என்றும் சொன்னார்கள். நாங்கள் பிறகு வெளியில் சிலரிடம் கேட்டு அவரை அறிமுகம் செய்து கொண்டு பழங்கால 'சங்கீத கல்வெட்டு' 'குடைவரைக் கோயில்' போன்றவற்றைப் பார்த்தோம்.
அர்ச்சகர்களின் வேலை அது இல்லை தான் மறுக்கவில்லை. ஆனால் சாதாரண விவரங்களைக் கூட அவர்கள் சொல்லவில்லை, ஆனாலும் அதனாலுமே கூட இந்தக் கோவிலைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள அதிகம் விரும்பினேன். அதற்காகவாவது அவர்களுக்கு என் நன்றிகள், இன்னொருமுறை விவரங்களுடன் சென்று பார்க்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன். அதற்கு காரணம் அங்கேயிருக்கும் சிற்பங்கள், கங்கை கொண்ட சோழபுரம், பெரிய கோவில் ஒருமுறைக்கு மேல் பார்த்தவன் என்ற முறையில் குடுமியான் மலைச் சிற்பங்கள் அற்புதமான "Finishing" கொண்டவை. ஆனால் காலத்தால் பின் தங்கியவை இவை என்ற விஷயம் இருக்கிறது.
ஆனால் குடுமியான்மலை எத்தனை தூரம் மக்களைச் சென்றடைந்தது என்பது தெரியவில்லை, ஆனால் இங்கிருக்கும் கோவில் திருச்சியில் நல்ல ஃபேமஸ் என்று அப்பா சொல்லி தெரிந்துகொண்டேன். கோவிலைப் பற்றி தேடிய பொழுது "புதுக்கோட்டை மாவட்ட வரலாறு - டாக்டர் ஜெ. ராஜாமுகமது"வில் கொஞ்சம் விவரம் கிடைத்தது கொடுத்திருக்கிறேன். புகைப்படங்கள் என்னுடையவை.

குடுமியான்மலை புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயில் மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு குடுமியான் மலை என்று அழைக்கப்படுகிறது. சிகா என்பது குடுமி என்னும் பொருளில் குடுமியுள்ள இறைவன் என்று வரும். இங்குள்ள இறைவனுக்கு குடுமி வந்தது பற்றி இக்கோயில் ஸ்தலபுராணம் கூறும் கதை சுவையானதாகும் முன்னொரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது ஆசைநாயகிக்கு கொடுத்துவிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் மன்னர் கோயிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் செய்வதறியாது தவித்த அர்ச்சகர் தனது ஆசைநாயகியின் தலையிலிருந்த பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு அளிக்க அதில் தலைமுடி ஒட்டியிருந்ததைக் கண்ட மன்னர் அதன் காரணத்தை அர்ச்சகரிடம் வினவினார். அர்ச்சகர் சமயோதிதமாக கோயிலில் குடி கொண்டிருக்கும் மூலவருக்கு குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார். வியப்பு மேலிட்ட மன்னர் இறைவனின் குடுமியைக் காட்டும்படி கேட்க, தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சியளித்தார். ஆகவேதான் மூலவருக்கு சிகாநாதசாமி என்று பெயர் வந்ததாக இக்கதையின் மூலம் அறிகிறோம். இக்கோயிலில் குடுகொண்டுள்ள லிங்கத்திற்கு குடுமியிருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் குடுமி - முடிச்சு போன்ற பகுதி இருப்பதை பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.

கி.பி 10ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இவ்வூர் திருநலக்குன்றம் என்றும் 14ம் நூற்றாண்டு கல்வெட்டில் சிகாநல்லூர் என்றும் கடவுளின் பெயர் குடுமியார் என்றும் 17 - 18ம் நூற்றாண்டு கல்வெட்டில் குடுமியான்மலை என்றும் குறிப்பிடப்படுகிறது. திருநலக்குன்றம் என்றால் புனிதமான மங்களமான மலை என்றும் பொருள். நல என்னும் தமிழ்ச் சொல்லுக்கு 'நள' என சமஸ்கிருத வடிவம் கொடுக்கப்பட்டு இக்கோயிலை புராண கதாநாயகன் நளனுடன் தொடர்புபடித்திக் கூறும் ஒரு கர்ண பரம்பரைக் கதையும் உண்டு. 14ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள், கோயில் மூலவரை "தென்கோநாட்டு சிகாநல்லூர் குடுமியார்" எனக் குறிப்பிடுகின்றன. சில கல்வெட்டுக்களில் குடுமிநாதர் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சிகாநல்லூர் என்பது "சிகரநல்லூர்" என்றே இருந்திருக்க வேண்டும். சிகரம் என்பது சிகரமுயர்ந்த மலை எனவாகும். நெடிதுயர்ந்த குன்று - மலை - ஒன்று இங்குள்ளதை நாம் இன்றும் காணமுடியும். ஆகவே குடுமியார் என்பதற்கு சிகரமுயர்ந்த நெடிய எனப் பொருள் கொள்ளலாம். குடுமி என்றால் தலைமுடிக் கற்றை என்று மட்டும் பொருளல்ல மலையுச்சி, உயர்ந்தவர் என்றெல்லாம் பொருள்படும். உதாரணத்திற்கு பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி கண்ணப்ப நாயனார் காளஹஸ்தியில் வழிபட்ட இறைவனின் பெயர் குடுமித்தேவர்.

குடுமியார் என்னும் தமிழ்ச்சொல் காலப்போக்கில் சிகாநாதசாமி என சமஸ்கிருத சொல்லாக மருவிவிட்டது. அதற்கேற்ப கி.பி. 17 - 18ம் நூற்றாண்டில் மேலே சொன்ன புராணக்கதையும் எழுந்திருக்க வேண்டும். தற்போது இவ்வூர் பெயர் குடுமியான் மலை என்றே நின்று நிலவ இறைவன் பெயர் மட்டும் சிகாநாதா என வழங்கப்படுகிறது. இதே போன்றே மயிலாடுதுறை, மாயூரம் எனவும், குரங்காடுதுறை கபிஸ்தலம் எனவும், திருமறைக்காடு வேதாரண்யம் எனவும், சிற்றம்பலம் சிதம்பரம் எனவும் சமஸ்கிருத வடிவம் பெற்று மருவி வழங்குதல் காண்க.

அக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந்திருந்தன. குன்றின் மீது ஏறிச் செல்லும் போது ஒரு இயற்கைக் குகையினைக் காண்கிறோம். இது கற்கால மனிதர்களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குன்றுதோரோடும் குமரன்கோயில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோயில் உள்ளது.

புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலையிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இங்குள்ள மேலக்கோயில் என்னும் குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள கர்நாடக சங்கீதம் பற்றிய கல்வெட்டும் பல்லவ மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தது எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபகால ஆய்வுகளின்படி இவை மகேந்திரவர்ம பல்லவனுடன் தொடர்புடையவை அல்ல என்று தெரியவந்துள்ளது. சிகாநாதசாமியின் கருவறை கி.பி. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கொள்ளலாம். அதன்பின் இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்கள் இக்கோயிலின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பல்லவராயர்களைத் தொடர்ந்து தொண்டைமான்களின் ஆட்சியில் இக்கோயில் சிறப்புடன் விளங்கியது. காலத்தால் முற்பட்ட தொண்டைமான் மன்னர்கள் இந்தக் கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார்கள். ரகுநாதராயத் தொண்டைமான்(1686 - 1730) குகைக் கோயிலின் முன் உள்ள மண்டபத்தைக் கட்டியிருக்கிறார். 1730ல் ராஜா விஜயரகுநாத ராயத் தொண்டைமான் இக்கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார். அம்மன் கோயிலிலுள்ள 1872ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் இக்கோயிலின் திருக்குடமுழுக்குத் திருவிழா நடைபெற்ற செய்தியைத் தெரிவிக்கிறது.

குன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோயில் என்னும் குகைக்கோயில் குடைவிக்கப்பட்டுள்ளது. குன்றில் குடையப்பட்ட கருவறையும் அதற்கு முன்பு உள்ள தாழ்வாரப் பகுதியும் மலையிலேயே குடையப்பட்டதாகும் இதைத் தொடர்ந்துள்ள மண்டபம் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும் குகையில் வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் - வாயிற்காப்போர் - சிற்பங்கள் உள்ளன.





கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்தச் சிற்பங்கள் கலையழகு மிக்கவை. கருவறையில் லிங்கம் ஒன்று காணப்படுகிறது. குகையின் தென்பகுதியில் மலையிலேயே செதுக்கப்பட்ட வலம்புரி விநாயகர் ஒன்று உள்ளது.





குகைக்கோயிலின் தென்பகுதியில் குன்றின் கிழக்குச் சரிவில் 13'x14' அளவில் கர்நாடக சங்கீத விதிகள் குறித்த புகழ் வாய்த்த கல்வெட்டு உள்ளது. இதுபோன்ற கல்வெட்டு இந்தியாவில் இது ஒன்றேயாகும். மேலும் கி.பி. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரதரின் நாட்டிய சாஸ்திரம் என்ற நூலுக்கும் சாரங்கதேவரின் சங்கீதரத்னகாரா என்னும் நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சங்கீதம் பற்றிய குறிப்பு இதுவேயாகும். ருத்ராச்சார்யா என்பவரது சீடனாக விளங்கிய மன்னன் ஒருவனால் இக்கல்வெட்டு எடுக்கப்பட்டது என இக்கல்வெட்டே தெரிவிக்கிறது. ஆனால் இவர்கள் யாரென்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை இருப்பினும் எழுத்தமைதியைக் கொண்டு இது மகேந்திர பல்லவனது காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என டாக்டர் சி.மீனாட்சி போன்ற ஆய்வாளர்கள் கருதினர். ஆனால் இக்கருத்து சரியானதல்ல என்று தற்போது நிறுவப்பட்டுள்ளது.

'சித்தம் நமஹ சிவாய' என்று தொடங்கும் சங்கீதம் பற்றிய இந்தக் கல்வெட்டு ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சங்கீர்த்தனஜதி என்னும் ராகம் பற்றிய விதிகளை இக்கல்வெட்டு விளக்குகிறது. இறுதியில் ருத்ராச்சார்யாரின் சீடனான பரம மகேஸ்வரன் என்னும் மன்னன் இந்த ராகங்களை பாடி வைத்தானென்றும் கண்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டிற்குப் பக்கத்திலேயே 'பரிவாதினி' என்று ஒரு கல்வெட்டு வாசகம் உள்ளது. இது ஒரு யாழ் வகையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது கல்வெட்டில் காணப்படும் ராகங்கள் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரப் பண்களிலும் காணப்படுகிறது தற்காலத்தில் வழங்கிவரும் ராகங்களிலும் இதன் கூறுகளைக் காணமுடிகிறது. முதல் பகுதியில் - மத்யம் - சொல்லப்படும் ராகம் ஹரிகாம்போஜிக்கும், இரண்டாவது - சட்ஜக்ரம - கரஹரப்பிரியாவுக்கும், மூன்றாவது - ஷடப - நடனமாக்ரிய ராகத்திற்கும், நான்காவது - சதாரி - பந்துவாரளி ராகத்திற்கும், ஐந்தாவது - பஞ்சமம் - அஹிரி ராகத்திற்கும் ஆறாவது சங்கராபரண ராகத்திற்கும், ஏழாவது மெச்ச கல்யாணி ராகத்திற்கும் உரிய விதிகளைத் தெரிவிக்கின்றன. இதில் சொல்லப்பட்டிருக்கும் ராகங்கள் 'பரிவாதினி' என்னும் யாழில் வாசிக்க ஏற்றதாகும் எனவும் கருதப்படுகிறது. ஆகவே தான் பரிவாதினி என்னும் பெயர் இந்தக் கல்வெட்டிற்கு அருகில் காணப்படுவதாகவும் கருதப்படுகிறது.

மேலும் பரிவாதினி என்னும் வாசகம் திருமயம், திருக்கோகர்ணம், மலையக்கோயில் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. திருமயம் விஷ்ணு குகைக் கோயிலின் பின்புறத்தில் உள்ள சிற்பத் தொகுதியிலும் கிள்ளுக்கோட்டை மகிஷாசுரமர்த்தினி கோயிலிலும் காணப்படும் வகை பரிவாதினியாக இருக்கலாம். "சுருதியும், சுவரங்களும் இணைந்த புதிய ராகங்கள் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதற்கும், யாழ் மறைந்து வீணை கண்டுபிடிக்கப்பட்டு, புதிய ராகங்கள் அதில் வாசிக்கலானதும் இந்தக் கல்வெட்டு, சங்கீத உலகத்திற்கு அளித்த பரிசுகளாகும். (டாக்டர் வி.பிரேமலதா - குடுமியான் மலை, சங்கீதக் கல்வெட்டு - கல்வெட்டுக் கருத்தரங்கு சென்னை 1966).

குகைக்கோயிலுக்கு மேலே உள்ள பாறையின் உச்சிப் பகுதியில் கிழக்கு நோக்கி அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும்.







சிகாநாதர் - அகிலாண்டேஸ்வரி கோயில், சமஸ்தான காலத்தில் சீரும் சிறப்புடன் விளங்கியது. கிழக்கு நோக்கியிருக்கும் கோயிலில் கோபுரவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் இருமருங்கிலும் ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்.




இம்மண்டபத்தின் முகப்புத் தூண்களில் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன.







இதன் இருமருங்கிலும் பெரிய மண்டபங்கள் உள்ளன. இதையடுத்த ஆனைவெட்டு மண்டபத்தில் நுழைந்ததும் தமிழகத்து சிற்பக்கூடம் ஒன்றினுள் நுழைந்துவிட்ட உணர்வு நமக்கு ஏற்படும். இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்கப்பல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.





இச்சிற்பங்கள் காலத்தால் பிற்பட்டவை என்றாலும் (கி.பி. 16 - 17ம் நூற்றாண்டு) இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாத் திகழ்பவையாகும். தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற ஹிரண்யகசிபு, ஆணவம் தலைக்கேறி, சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே, என்று பிரகலாதனை துன்புறுத்த, நாராயணன் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் விடை பகர, அருகிலிருந்த தூணை எட்டி உதைத்தான் ஹிரண்யகசிபு. தூண் கொண்ட பயங்கர உருவம் தோன்றியது. ஹிரண்யனைப் பற்றிப் பிடித்து தனது கால்களுக்குக் குறுக்கே கிடத்தி ஆவனது உடலை இரு கூறாக  பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. ஆணவம் வீழ்ந்தது! இதுவே நரசிம்ம அவதாரம். இக்கதையைச் சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதாரக் காட்சியினை நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காண்கிறோம்.



காதலுக்குக் கரும்பைத் தூதுவிட்டு விளையாடும் மன்மதன், அதற்கு மறுமொழியாக தனது வேல் விழியினை கனவுலகிற்கு அழைத்துச் செல்கின்றன. உலகத்து அழகையெல்லாம் தன்வயப்படுத்திக் கொண்டு காட்சியளிக்கும் மோகினி(மோகினி உருவில் விஷ்ணு).



வினை தீர்க்கும் விநாயகர், பக்தர்களைக் காக்க அண்டத்தையும் ஆட்டிப்படைக்கும் பலம் பெற்ற பத்துத் தலையுடன் கூடிய இராவணன்.

















தீய சக்திகளை தூளாக்குவேன் என உணர்த்திக் கொண்டிருக்கும் அகோர வீரபத்திரர் - இன்னும் இதுபோன்ற பல சிற்பங்கள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. குதிரைப்படை வீரர்களும் காலாட்படை வீரர்களும் உபயோகீத்த ஆயுதங்களையும் குதிரைப்படை தாக்குதல்களைக் காலாட்படையினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் இங்குள்ளச் சித்திரங்களில் காணலாம்.

இந்த மண்டபத்திலிருந்து கோயிலினுள் செல்லும் வாயில் பகுதிக்கு கங்கையரையன் குறடு(கங்கையரைய குறுநில மன்னர்களால் எடுக்கப்பட்டது) என்று பெயர். இதையடுத்து பாண்டியர் கால கலைப்பாணியில் எடுப்பிக்கப்பட்ட மண்டபம் உள்ளது. அடுத்துள்ளது மகா மண்டபம் கோயிலின் கருவறையும் விமானமும் முகமண்டபமும் முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்பு பாண்டியர் காலத்திலும் விஜயநகர மன்னர்களின் காலத்திலும் புதுப்பிக்கப்பட்டு, தனது பழமையை இழந்துவிட்டது. குகைக்கோயிலில் காணப்படும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு திருமூலத்தானம் திருமேற்றளி என இரண்டு கோயில்களைக் குறிப்பிடுகின்றது. திருமூலத்தானம் என்பது இந்தச் சிவன் கோயிலையே குறிப்பதாக இருக்க வேண்டும். ஆகவே இக்கோயில் 8ம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்டு பிற்காலத்தில் பலமுறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிய வருகிறது. தற்போது நாம் காண்பது பிற்காலப் பாண்டியர் காலத்து கட்டுமானமாகும். கி.பி. 1215லிருந்து 1265 வரை பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டன. புதிய மண்டபங்கள் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. கோனாட்டில் இருந்த நாடு, நகரம், படைப்பற்று தனி நபர்கள் அனைவரும் இதற்காகக் கொடையளித்துள்ளனர். விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மண்டபங்களில் சப்த கன்னியர், லிங்கோத்பவர், ஜேஷ்டாதேவி, சுப்ரமணியர் போன்ற சிற்பங்கள் பலவற்றைக் காணலாம். நாயக்கர் மண்டபத்தில் காணப்படும் வியாகரபாதர்(மனித உருவம் புலியின் கால்கள்) பதஞ்சலி(மனித உடலும் பாம்பு கால்கள் போன்றும்) சிற்பங்கள் காணத்தக்கவையாகும்.

அம்மன் அகிலாண்டேஸ்வரி ஆகும், அம்மன் கோயில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தின் தரையில் 12'x18' அளவுள்ள(அறுபட்டை வடிவாக அமைந்த) கருங்கல் பலகை ஒன்று உள்ளது. இக் கற்பலகையில் அமர்ந்தே இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் முடிசூட்டிக் கொண்டனர். உமையாள்நாச்சி என்னும் தேவதாசி குகைக்கோயிலுக்கு அருகிலுள்ள அம்மன் கோயிலைக் கட்டுவித்து அங்கு மலையமங்கை அல்ல சௌந்திரநாயகி அம்மனை பிரதிஷ்டை செய்தாள். இப்பெண்மணி குடுமியான்மலைக் கோயிலுக்கு மேலும் பல கொடைகள் அளித்துள்ளாள்.

குடுமியான்மலை, குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள சங்கீத கல்வெட்டும் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் வரலாற்றுச் சான்றுகளின்படி இது சரியல்ல என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1. பல்லவ மகேந்திரனின் ஆட்சிப் பகுதி காவிரிக்குத் தெற்கே பரவி இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

2. குடுமியான்மலைக்குக் கோயிலில் இப்பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரையின் 120க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.



இவற்றுள் ஒன்றுகூட பல்லவர் பரம்பரையைச் சேர்ந்தது அல்ல. திருமேற்றளி, மேலக்கோயில் என்னும் குடவரைக்கோயிலில் காணப்படும் காலத்தால் முந்தியக் கல்வெட்டு பாண்டிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்ததாகும். இவை முறையே மாறவர்மன் ராஜசிம்மன் என்னும் முதலாம் சடையன் மாறன் கிபி 730 - 765 காலத்தையும் இரண்டாவது ஜடிலபராந்தக வரகுணன் மாறன் சடையன் கி.பி 765 - 815 காலத்தையும் சேர்ந்ததாகும்.

3. குகையின் தூண்களும் மகேந்திரவர்மன் கால தூண்களின் அமைப்பிலிருந்து வேறுபடுகின்றன.

4. நரசிம்ம பல்லவன் கி.பி 630 - 668 மற்றும் இரண்டாம் நரசிம்மவர்மன் ராஜசிம்மன் கி.பி 680 - 720 ஆகியோரது காலத்து குகை கோயில்களில் காணப்படுவதுபோல கருவறையின் பின் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதி இல்லை.

5. குகையினுள் உள்ள லிங்கம், பல்லவ ராஜசிம்மன் காலத்து லிங்க அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. குகையில் காணப்படும் கி.பி 8ம் நூற்றாண்டு கல்வெட்டைக் கொண்டு மேற்றளி என்னும் மேலைக்கோயில் இக்காலத்தில் எடுப்பிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டியுள்ளது.

6. குகைக் கோயிலின் காலம் கி.பி 8ம் நூற்றாண்டு என வரையறுக்கும் போது, அருகிலுள்ள சங்கீத கல்வெட்டின் காலமும் இதே காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு மகேந்திரவர்ம பல்லவன் காலத்தது எனச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இங்கு காணப்படும் கிரந்த எழுத்துக்களைப் போன்ற எழுத்துகள் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி மற்றும் சென்னை அருங்காட்சியக செப்பேடுகளிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

7. குணசேனா என்கிற புனைப்பெயரைக் கொண்டும் இக்கல்வெட்டு மகேந்திரபல்லவன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று அறிஞர் சிலர் கூறுகின்றனர். குணசேனா என்பது குணபாரா என்னும் மகேந்திரபல்லவனின் புனைப் பெயரின் திரிபே என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் குணசேனா என்னும் பெயர் குடுமியான்மலைக் கல்வெட்டில் காணப்படவில்லை. திருமயம் மற்றும் மலையடிப்பட்டி கல்வெட்டுகளிலேயே காணப்படுகிறது.

8. சங்கீத கல்வெட்டின் இறுதியில் காணப்படும் பரம மகேஸ்வரா என்னும் சொல் மகேந்திரவர்மனை குறிப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் மகேந்திரவர்ம பல்லவனுக்கு இருந்த அனேக புனைப் பெயர்களில் மகேஸ்வரன் என்னும் பெயர் இல்லை. மேலும் மகேஸ்வரர் என்று தங்களை அழைத்துக் கொண்ட காளமுக, பசுபத சைவர்களை மகேந்திரவர்மன் தனது மத்தவிலாச பிரஹசனம் என்னும் நூலில் கேலி செய்கிறான். ஆகவே கேலிக்குரிய பெயராக அவன் கருதியதையே அவன் தன் புனைப் பெயராகக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

கொடும்பாளூர் ஒரு காலத்தில் கோனாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூரில் காளமுக சைவப்பிரிவினர் வாழ்ந்து வந்த செய்தியையும் அவர்களுக்கு கொடும்பாளூர் வேளிர் மன்னன் மடங்கள் கட்டி நிவந்தங்கள் அளித்த செய்தியின் படி குடுமியான்மலையும் இக்காலத்தில் கொடும்பாளூரின் ஆட்சிக்குட்பட்டதாக இருந்தது. கொடும்பாளூர் வேளிர் மன்னன் ஒருவன் தன்னை மகேஸ்வரன் என்று அழைத்துக் கொண்டிருப்பானோ எனக் கொள்ளலாம்.

ஆகவே குடுமியான்மலை குகைகோயிலும் அதன் அருகிலுள்ள சங்கீதக் கல்வெட்டும் மகேந்திர பல்லவன் காலத்தைச் சேர்ந்தது அல்ல என்னும் முடிவுக்கு வரலாம்.

இங்கு மொத்தம் 120 கல்வெட்டுகள் உள்ளன, இவை இப்பகுதியின் அரசியல் பொருளாதார வரலாற்றினையும் இக்கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட விபரங்களையும் தெரிவிக்கின்றன. இக்கோயிலுக்கு உரிய நிலங்கள் கோனாட்டில் பல இடங்களில் இருந்தன. பிற்கால பாண்டியர் காலத்தில் இப்பகுதியை கங்கையரையர், வாணாதரையர் ஆகியோர் ஆண்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் வீரகம்பண்ண உடையார், கோப திம்மா ஆகியோரது பெயர்கள் இக்கால கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. மதுரை நாயக்கர்கள் காலத்தில் இப்பகுதி மருங்காபுரி சிற்றரசர்களின் கீழ் இருந்தது. பின்பு வைத்தூர் பல்லவராயர்கள் இப்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர் சிவத்தெழுந்த பல்லவராயர் இக்கோயிலுக்கு சில மண்டபங்களும் கட்டியுள்ளார். மேலும் நந்தவனம் தோட்டங்கள் தேர் ஆகியவற்றின் பராமரிப்பிற்கும் கொடையளித்துள்ளனர். ரகுநாதராயத் தொண்டைமான் குகைக்கோயிலுக்கு முன்னால் ஒரு மண்டபத்தைக் கட்ட உயரமான இந்த மண்டபத்திற்கு விஜரகுநாதராய தொண்டைமான் 1730 - 1769 படிக்கட்டுகள் அமைத்தார் இக்கோயிலுக்கான கொடைகள் பற்றிய செய்திகள் இன்னும் ஏராளமாக உள்ளன.

Read More

Share Tweet Pin It +1

15 Comments

In சிறுகதை

தமிழீழக்காதல்

"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?"

"கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்."

சில காலமாகவே எனக்கு இது வழக்கமாகயிருக்கிறது, இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் எங்கள் வீட்டிற்கு புதிதாய் குடிவந்திருந்த அந்த தமிழீழ பையனை வம்பிழுத்துக் கொண்டிருப்பேன். அவனுடைய பேச்சும் செயல்களும் பெரும்பாலும் எனக்கு சிரிப்பையே வரவழைக்கும். முன்பே பலசமயங்களில் நான் ஈழத்தமிழை உரைநடையில் படித்திருந்தாலும் பேசிக் கேட்டதில்லை, சொரூபனை முதலில் பார்த்தபொழுது அவன் பேசிய தமிழ் விநோதமாயிருந்தது. வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க, முரளீதரனையோ, கருணாவையோ பற்றி பேச நான் ஆரம்பித்தால் நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருப்பான் நான் கேட்டுக்கொண்டேயிருப்பேன்.

அவன் தங்கை வந்து அவனை ஏதாவது சொல்லி அழைத்து சென்றுவிடுவாள். அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது நான் அவள் அண்ணனை பேசவிட்டு வம்பிழுத்துக்கொண்டிருப்பது. இல்லாவிட்டால் எங்கக்கா வந்து தலையில் கொட்டி இழுத்துச்சென்றுவிடுவாள்.

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்த என்னுடைய பெரிய மாமாவைப் பார்த்துவிட்டு சொரூபன்,

"அண்ணா நீங்கள் அப்படியே பொட்டு அம்மானைப் போலவே இருக்கிறியள்." என்று சொல்லிவைக்க ஏற்கனவே ஈழ ஆட்களுக்கு மாடிவீட்டை வாடகைக்குவிட்ட கோபத்தில் இருந்த மாமா அதன்பிறகு வீட்டிற்கு வருவதே நின்றுவிட்டது.

சொரூபனிடம் ஒருசில கெட்டபழக்கங்கள் இருந்தது, யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ஏகவசனத்தில் பேசுவது, ஒருமுறை என்னிடம் என் அக்காவை குறிக்க 'பெட்டை'ன்னு சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆகயிருந்தது. பெண்களைப்பற்றி அவன் கொண்டிருந்த சில எண்ணங்கள் இப்படி, அதேபோல் மாதக்கடைசியில் வந்து என்னிடம் காசு கேட்பதும்.

"அண்ணா உண்டியல் பணம் வரவேண்டியுள்ளது, வந்ததும் தருகிறேன்."

முதலில் புரியவில்லையென்றாலும் பின்னர் அவனே சொல்லத்தான் தெரிந்தது அது ஹவாலாப் பணம் என்று. அந்த அளவிற்கு விவரம் தெரியாவிட்டாலும் பையன் ஏதோ தப்பு செய்றான்னு மட்டும் தெரியும். அவன் சொந்தக்காரர்கள் ஜெர்மனியில் இருந்தார்கள் அவர்கள் அங்கிருக்கும் ஒரு ஏஜண்ட் இடம் காசு கொடுத்துவிட இவன் அந்தப் பணத்தை இங்கே ஒரு இடத்தில் வாங்கிக்கொள்வானாம். பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் கற்று வைத்திருந்தான். ஒருநாள் என்கிட்டயே உங்கள் பேங்க் டீடெய்லை கொடுங்கள் உங்கள் அக்கௌன்டிற்கு மாற்றிவிடச் சொல்கிறேன்னு சொன்னானே பார்க்கணும். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.

இப்பொழுதெல்லாம் நேரம் போகலைன்னா அவனை கூப்பிட்டு பேச ஆரம்பித்துவிடுவேன். அதுவும் பிரபாகரனைப்பற்றியோ, புலிகளைப்பற்றியோ பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான் நிறுத்தாமல் பேசுவான். இடையில் நிறைய கெட்டவார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவான் என்றாலும் பெரும்பாலும் கள்ளப்பயதான், கருணாவைப்பற்றி கேட்டால் கள்ளன், முரளீதரனைப்பற்றி கேட்டால் கள்ளன் அப்பிடின்னு பெரிய கதையே ஆரம்பிச்சிடுவான். அந்தச் சமயங்களில் எல்லாம் அவன் கண்கள் பிரகாசமாவதைப் பார்த்திருக்கிறேன்.

"அண்ணே, பாருங்கண்ணே இன்னொரு வார் வந்தா ஆமியை அடிச்சு நொறுக்கிடுவாங்க, இப்போ நம்மக்கிட்ட கெலியெல்லாம் இருக்கு." அவன் ஒவ்வொரு விவரமாய்ச் சொல்ல எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். வேலைவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் நான் சொரூபனிடம் பேச்சுக்கொடுக்க மாடிக்கு போய்விடுவேன் அதற்கு சொரூபன் மட்டும் காரணம் கிடையாது. அவன் தங்கிச்சியை வந்ததிலிருந்து நான் சைட் அடித்துக் கொண்டிருந்தேன் அதுவும் ஒரு காரணம். அவள் பெயர் சந்திரா, நம்ம பக்கத்து பெண்களைவிட கொஞ்சம் அடிக்கிற நிறத்தில் தான் இருப்பாள் என்றாலும் இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்பது போன்ற நல்ல களையான முகம்.

சொரூபனிடம் மட்டும் தான் விளையாட்டாய் பேசுவது, சந்திராவிடம் சீரியஸான மேட்டர் மட்டுமே பேசுவேன். பெரும்பாலும் விளையாட்டாய் பேச ஆரம்பித்தால் விலகிச்சென்றுவிடுவாள் என்பதால்தான் சீரியஸான மேட்டர். அவர்கள் இருவரும் சில லட்சங்கள் செலவழித்து பெங்களூரில், நான் சில ஆயிரங்கள் மட்டும் செலவழித்து படித்த டிகிரியை படித்துக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி, படித்துமுடித்ததும் அவர்கள் நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்புக்களைப்பற்றி, வெளிநாட்டில் பல சங்கடங்களுடன் வாழும் அவர்களுடைய உறவினர்களைப்பற்றி இப்படி நிறைய. கொஞ்சமும் விகல்பமில்லாமல் பேசிக்கொண்டிருப்பாள். அண்ணனைப்போல் வாயைத்திறந்தால் மூடாமல் பேசிக்கொண்டிருக்கமாட்டாள், ரொம்பவே அளவாய்த்தான் பேசுவாள். ஆனால் சொரூபனாகட்டும், சந்திராவாகட்டும் ராஜீவ்காந்தியைப்பற்றியோ, ஐபிகேஎப் பற்றியோ என்னிடம் பேசவேமாட்டார்கள். நானும் அவ்வளவாக சென்ஸிடிவ் விஷயங்களில் தலையிடமாட்டேன்.

என் அக்கா பெரும்பாலும் வீட்டில் இருக்கமாட்டாள் என்பதால் பெரும்பாலும் சந்திரா தான் அம்மாவிற்கு உதவி செய்து வந்தாள், அம்மா மற்றவர்களை சமையல் அறைக்குள் விடமாட்டார்கள். என் அத்தையை கூட விடமறுத்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால் சந்திரா சமையல் கட்டிற்குள் போய் வேலைசெய்வாள். அம்மாவிற்கும் ஒருவாறு என் விஷயம் தெரிந்துதான் இருந்தது நேரில் காண்பிக்கவில்லை, ஆனால் அக்கா நேரிலேயே சொல்லிவிட்டாள்,

"மகனே சயனைட் குப்பிதான் உனக்கு ஜாக்கிரதை. வேணும்னா சொல்லு நைனாக்கிட்ட பேசி எனக்கு முன்னாடி உனக்கு வேறவொரு பொண்ணுகூட கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்றேன். இந்த விளையாட்டையெல்லாம் விட்டுறு. சொல்லிட்டேன்"

விளையாட்டாய் பேசுவதைப்போல் இருந்தாலும் ரொம்ப தீவிரமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சொரூபனுக்கும் சந்திராவிற்கும் மற்ற பாடங்களில் பிரச்சனைகள் கிடையாது, ஆனால் ஆங்கிலம் உதைக்கும். அதுவும் சொரூபன் பிரச்சனை, பெரிய பிரச்சனை. ஆங்கில பாடலாசிரியர்களையெல்லாம் ஏகவசனத்தில் பேசுவான், இவனெல்லாம் என்ன புஸ்தகம் எழுதுறான்னு. அதாவது அவனுக்கு கணிணியின் 'C' மொழியைத் தமிழில் சொல்லித்தரணும், யாராவது இதுபோன்ற தமிழ் புத்தகங்கள் இந்தக் கடையில் கிடைக்குது என்று சொன்னால் அவ்வளவுதான் போய் வாங்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இதனால் பலசமயங்களில் சந்திராவை தனியாய் விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வண்டியேறிவிடுவான்.

சொரூபனோ இல்லை சந்திராவோக்கூட தனியேயிருக்க பயப்படமாட்டாள், ஆனால் அம்மாவும் அக்காவும் நான் சந்திராவை என்னவோ செய்துவிடுவேன்னு அவளை அழைத்து எங்கள் வீட்டில் அவர்களுடன் படுக்கவைத்துக் கொள்வார்கள். சந்திராவிற்கு புரியுமோ புரியாதோ தெரியாது, சிரித்துக்கொண்டேயிருந்து விடுவாள். சொரூபன் புத்தகம் வாங்கிவந்தவுடன் பிரச்சனை இன்னும் அதிகமாகும். தமிழ் விளக்கத்தையும் ஆங்கில விளக்கத்தையும் வைத்து என்னை பாடம் சொல்லித்தரச்சொல்லி உயிரை வாங்குவான். இந்த விஷயத்தில் எனக்கு சந்திராவின் மீதுகூட கோபம் உண்டு. அவளும் இப்படித்தான் ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரை முதற்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து படிப்பாள்.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையில் தான் டிவியில் நந்தா படம் போட்டான், ஈழ மக்களைப்பற்றிய படமென்பதால் சந்திராவும் பார்க்க வந்திருந்தாள். அதில் வந்திருந்த லைலா கதாப்பாத்திரத்தை சந்திராவாகவும் சூர்யா கதாப்பாத்திரத்தை நானாகவும் கற்பனை செய்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன், சந்திரா லைலா போல் லூஸாக நிஜத்தில் இல்லாவிட்டாலும் கூட. இடையில் அவளை வேறு திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்க்கும் சமயத்தில் எல்லாம் அவளும் என்னையே பார்ப்பதைப் போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது.

படம் முடிந்த அன்றிரவு மெதுவாக அவளிடம் என் காதலைச் சொன்னேன். அதற்கு அவள் நேரடியாக பதிளலிக்காமல்,

"இங்கப்பாருங்க, நாங்களெல்லாம் படிக்க வந்திருக்கிறம். அதுவுமில்லாம என்னை கல்யாணம் கட்டிக்க உங்கட அரசு சம்மதிக்காது. உங்கட வீட்டிலும் கூட நான் வளையவர சம்மதிச்சாலும் கல்யாணம் கட்டிக்க சம்மதிக்க மாட்டாங்க. எனக்கு ஸ்டுடண்ட் விசாதான் இருக்கு அதுவும் முடியப்போகுது. அதனால கற்பனையெல்லாம காணாம போய் வேலையைப் பாருங்க." சொல்லிவிட்டு நகர்ந்தவளின் கையைப்பிடித்து நிறுத்தினேன்.

"அப்ப உனக்கு என்னை பிடிக்கலையா?"

"இங்கப்பாருங்கள் பிடிக்கிறதும் பிடிக்காததும் பிரச்சனை கிடையாது. இது நடக்காதது நடக்கமுடியாதது அதைத்தான் சொல்லுவினம். போய் உங்கட வேலையைப் பாருங்க. உங்கட ஊரில் என்னைவிட வடிவான பெண்களெல்லாம் கிடைக்கலாம் அவையைக் கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க" இதைச் சொல்லும் பொழுது அவள் சிரித்துவிட்டாள், எனக்கும் சிரிப்புத்தான் வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கும் எனக்கும் இருந்த இடைவெளி குறைந்தது. எங்கள் வீட்டிற்கும் இந்த விஷயம் ஒருமாதிரியாக தெரிந்துபோனாலும் அவர்களாக பிரச்சனையை வளர்க்க வேண்டாமென்று கேள்வியெதுவும் கேட்கவில்லை. ஈழ விடுதலைப்பாடல்களை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு பாடிக்காட்டுவாள் எல்லாவற்றையும் விளையாட்டாகவே பார்க்கும் எனக்கு இது மிகவும் வித்தியாசமாகயிருக்கும். அவளிடம் ஒரு முறை வைரமுத்து எழுதி தேசியவிருது வாங்கிய 'விடைகொடு எங்கள் நாடே' பாட்டைப்பற்றி பெருமையாக சொல்ல அவள் அதைப்பற்றி பெருமைப்பட எதுவுமில்லையென்றும்,

"எங்கட வலிகளை உங்களிண்ட கவிஞரின் வரிகளால் நிரப்பிவிட முயல்வது முட்டாள்தனம், அது அத்துனை இயல்பாய் வராது."

என்றும் கூறியது ஆச்சர்யமளித்தது. அதுமட்டுமில்லாமல் அவளுக்கு ஈழப்பிரச்சனையை வைத்து தமிழர்கள் படமெடுத்தும் பாட்டெழுதியும் சம்பாதிப்பதைப்பற்றிய அபிப்ராயமும் வேறு விதமாய் இருந்தது. அவர்களுடைய பிரச்சனையைப் பற்றிய தமிழர்களின் அறிவு குறைவாய் இருப்பதாகவும் அதன் பாதிப்பே இவையெல்லாம் என்றும் கூறினாள். பின்நாட்களில் அவள் ராஜீவைப்பற்றியும் ஐபிகேஎப் பற்றிய அவளுடைய மனப்பக்கங்களையும் எனக்குக்காட்டினாள், அது இதுவரை நான் படித்து கேட்டு தெரிந்துகொண்ட விஷயங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டதாய் இருந்ததென்னவோ உண்மை.

அதன் பிறகு அவள் எங்கள் வீட்டில் இருந்த ஒருவருடம் சொர்க்கமாய்க் கழிந்தது, இடைவெளிகள் முற்றிலுமாய் இல்லாமல் போயிருந்தாலும் கடைசிவரை அவள் காதலை சொல்லவில்லை, என் காதலை ஏற்றுக்கொள்ளவுமில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம், இருக்கிறோம். இன்னமும் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தப்படும் ஒரு நாளில் அவள் பெயரை நிச்சயமாய்ப் பரிந்துரைப்பேன். இப்பொழுது படிப்பு முடிந்து அவள் இலங்கையில் இருக்கிறாள், இப்பொழுதும் தொலைபேசுவதுண்டு. பார்க்கலாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும் என் காதலுக்கான பதிலை.

-------------------

சினேகிதி அவர்களுக்கு நன்றி, தமிழீழ உரையாடல்களை சரிபார்த்து தந்தமைக்கு. :-)

Read More

Share Tweet Pin It +1

37 Comments

In சுய சொறிதல் சோழர்கள்

பாலகுமாரனும் பஞ்சவன்மாதேவியும்

பாலகுமாரன் அவர்கள் சில காலமாக ஆராய்ச்சியெல்லாம் செய்து உடையார் என்றொரு கதையெழுதி வருகிறார். அதைப்பற்றிய சில கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லை.

இங்கே நான் குறிப்பிடுவதற்கு முக்கியமான காரணம், பாலா தன் முதல் பாகத்தில் கல்கியை பற்றியும், அவருடைய நாவலில் வரும் நந்தினியை பற்றியும் கூறியதை வைத்தே, புத்தகம் கையில் இல்லாத காரணத்தால், சில வருடங்களுக்கு முன் படித்ததை நினைவு கூர்ந்து சொல்கிறேன். அதாவது நந்தினியை போன்ற ஒரு கற்பனை கதாப்பாத்திரம் கதையின் போக்கை தீர்மானிப்பதை பற்றி கருத்து கூறிய பாலா தன் கதையில் அதுபோன்று நிகழாது என்று கூறினார். இந்த விஷயத்துக்கு பின்னால் வருகிறேன்.

பாலாவின் இந்த கதையில் கரூவூர்த்தேவர் போன்ற சில மந்திர தந்திரங்கள் செய்யும், பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார். கோவில் கட்டியதன் பங்கில் பெரும்பாலானவற்றை அவர்களிடமே கொடுக்கிறார். அவ்வளவு பெரிய கோவில் கட்டிய மன்னன்(கடவுளுக்கு) கடவுள் நம்பிக்கையில்லாதவனாக இருப்பான் என்று சொல்லவில்லை. ஆனால் பாலகுமாரன் கொஞ்சம் அதிகம் சொல்கிறாரோ என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட மன்னர்கள்(ராசராசன், ராசேந்திரன்) கொஞ்சம் முரடர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம். இல்லாவிட்டால் போர்க்களத்தில் சண்டை செய்ய இயலாது. இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர்கள் என்பதால் கட்டாயம் முரடர்களாக இல்லாதிருக்க முடியாது.

அவ்வளவு பெரிய மகத்தான கோவில் கட்டிய பெருமையை மன்னனுக்கு கொடுங்கள், இல்லை உதவிய மக்களுக்கு கொடுங்கள். அவர்களை பாராட்டுங்கள். இவையெல்லாம் இல்லாமல் கடவுளையும், மந்திரம் தந்திரம் செய்பவர்களையும் சிறிது உயர்வாக பாராட்டுவதாக எனக்குப்படுகிறது.

கல்கி குந்தவையையும் வந்தியத்தேவனையும் எழுதிவிட்டதால் இவர் குறிப்பிட வேண்டிய அவசியம் கூட கதையில் இல்லை, பாவம் அவரும் தான் என்ன செய்வார். பஞ்சவன்மாதேவியின் வரலாற்றை எழுதாமல், கோவிலின் உட்புற சுவற்றில் மன்னன் பதித்தவற்றை கொடுத்தவர்கள் பற்றியும், வடக்குபாடியை சாமந்தர்களின் தலைவனாக இருந்து சோழகுலத்தின் வெற்றிக்காக போராடியவர்களையும் எழுத முடியுமா என்ன?

அதுமட்டுமில்லாமல் பாலகுமாரன் சில தனிப்பட்ட காரணங்களுக்காக, தேவரடியார்களுக்கு கொஞ்சம் அதிகம் இடம் கொடுப்பதாக தெரிகிறது. பெண்கள் அந்தக் காலத்தில் இத்தனை மதிப்பு பெற்றிருந்தார்கள் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ராசராசனைப் போன்ற ஒரு மன்னன் ஒரு தேவரடியாரை இவ்வளவு நம்பியிருந்தான் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. சிறிதுவிட்டால் கோவில் கட்டியதே பஞ்சவன்மாதேவிதான் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இருந்திருக்கலாம் ராசராசனின் அன்னியோன்மையாகவே இருந்திருக்கலாம். ராசேந்திரனுக்கும் அவர்களை பிடித்திருக்கலாம் பள்ளிப்படை அமைத்திருக்கலாம். அதை ஒன்றை வைத்துக் கொண்டு அந்த தேவரடியார் அவர்களை உடையாரில் கதாநாயகி போல் அமைத்திருப்பதை படிக்க மனம் வரவில்லை.

கல்கி எழுதியதை எழுதமாட்டேன் என்று சொன்னால் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கு அதையெல்லாம் விட்டுவிட்டு, நாடி ஜோதிடம் பார்த்தார், அதனால் தான் கோவில்கட்டினார்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

கருவூர்த்தேவரை பற்றி எழுதும் போது, அவரையும் எழுத ஒரு பைத்தியக்காரன் வருவான்னு, தன்னைப்பற்றி, வஞ்சகப்புகழ்ச்சி செய்துக்குறார். அறிந்தவரையில் கருவூர்த்தேவர் கவிதை எழுதுபவர். அவர் அந்தக் காலத்தில் கவிதையில்லாம் எழுதியதாக தெரிகிறது.

ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொல்ல சென்ற பொழுது, அவனுக்கு வழிகாட்டியவனின், நினைவை மறக்கடித்த கருவூர்த்தேவரை பற்றி எங்கு படித்தார்னு சொன்னால் நாங்களும் படிப்போமில்ல.

-----------------------------------------

முன்னம் எழுதிய பதிவு தான் இப்பொழுது மீண்டும் பதிவுலகில், பொன்னியின் செல்வன், பாலகுமாரன், உடையார் பற்றியெல்லாம் பேச்சு எழுவதால் ஒரு மீள்பதிவு.

தொடர்புடையதாய் நான் கருதும் பிற இடுகைகள்.

இரண்டாம் குலோத்துங்க சோழன் - சாளுக்கிய சோழர்கள் - கிருமி கண்ட சோழன் - தசாவதாரம் - கல்கி - பொன்னியின் செல்வன் - ரங்கராஜ நம்பி - சைவம் - வைணவம் - ஜல்லி
பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In Only ஜல்லிஸ் புறநானூறு

அழகான பெண்கள் ஆபத்தானவர்கள்

வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே-விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.

336. பண்பில் தாயே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி

இதுதான் நான் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் - இதற்கு சுஜாதா கொடுத்த நவீன கவிதை கீழே(சுஜாதா யாரு புறநானூற்றுக்கு உரை எழுத - அவர் எழுதியதில் அங்கே தப்பு இங்கே தப்பு - என்கிற புலவர்களுக்கு பதில் சொல்ல நான் கிடையாது ஆள் நான் வரலை அந்த விளையாட்டுக்கு.)

பெண் கேட்ட அரசன் கோபக்காரன்
பெண்ணின் தந்தையோ பொறுப்பற்றவன்
யானைகள் கடிமரத்தில் அமையாமல் சீறுகின்றன
வீரர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்
ஊரே கலக்கத்தில் இருக்கிறது
வேங்கைமலைக் கோங்கின் அரும்பு போன்ற
சிறிய முலைகளைக் கொண்ட
இந்தப் பெண்ணால்
பகை வளர்கிறது
தாய்க்குத் தெரியவில்லையே!

அகநானூறுக்கான அறிமுகம் போல் இல்லாமல் புறநானூற்றுக்கான அறிமுகம் இப்படி செய்யப்படுவதில் எனக்கும் மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எந்த விஷயத்திலும் நம்ம டச் இருக்கணும் இல்லையா? இளையராஜா தேவாரத்துக்கு இசையமைச்சப்ப, மெட்டுக்கு தகுந்த பாட்டை தேர்ந்தெடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நான் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாளைக்கு ஒரு நாள் - "அக்கா! அக்கா! என்றாய் அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம்" என்று சொன்ன ஆணாதிக்கவாதி பாரதிதாசன் புகழளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் கொஞ்சம் ஈயம் அடித்தேன் என்று தமிழ்கூறும் நல்லுலகம் சொல்லவேண்டுமல்லவா?

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In 18+ மொழிபெயர்ப்பு

தேஜஸ்வினி


அவளுக்கு இன்னமுமே கூட தெரியாது.

தேஜஸ்வினி என் அறையில் உட்கார்ந்திருந்தாள், அணைந்தது போக மீதமிருந்து ஒளிர்ந்து கொண்டிருந்த ஒற்றை பல்பு, அவள் கால் மேல் காலைப் போட்டு என் நீல நிற சோபாவில் சாய்ந்தது போல் உட்கார்ந்து கைகளால் இறுக்கி அணைத்துக் கொண்டிருந்த சிங்க பொம்மையின் தங்க நிற பிடறியும் அவள் தேன் வண்ண நிறமும் ஒன்றுடன் ஒன்று கலப்பதைக் காட்டியது. அந்த நிறம் அவளுடைய தோற்றுப்போன மாடல் அம்மாவிடம் இருந்து பெற்றது. அவள் ஒன்றும் அத்தனை தூரம் அவள் அம்மாவைப் போல் ஆச்சர்யமூட்டும் அழகில்லை தான், அதுவும் தற்சமயம் அவள் தொல தொலா என்று இரண்டு நாட்களாய் கழட்டாமல் அணிந்திருந்த ஆடையும் கன்னத்தில் தொடர்ச்சியாய் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீருமாய் அவள் கொஞ்சம் மோசமாகவே இருந்தாள். வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை அத்தனைக்கு அப்பாலும் அவள் அழகுதான்.

அவள் ராமை எவ்வளவு காதலித்தாள் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்த புலம்பல்களைக் கேட்க நான் முயற்சி செய்துகொண்டிருந்தேன், ஆனால் இடையில் நாங்கள் சாப்பிட்டு அழித்துக் கொண்டிருந்த சாக்லேட் ஐஸ்கிரீம்களின் மீதான விருப்பம் கூட குறையத் தொடங்கியது அவள் நூறாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்த அதே காதல் கதைகளால், என்ன கொஞ்சம் மாற்றத்தோடு கூடிய இன்னொரு வடிவம். அது ராமைப் பற்றியதே கூட இல்லை, அவளுக்கு இதே வழக்கம் தான். காதலில் விழுவது, அதுதரும் களவி அனுபவத்தில் திளைப்பது பின்னர் காதல் செய்தது ஒரு பொறுக்கியுடன் என்று தெளிந்து பிரிவது, இருவரில் யாராவது ஒருவர் கழட்டிவிட என்று அத்தனை முறையும் தவறான தேர்வு. ஒருவேளை அவள் லெஸ்பியனாக இருப்பாளோ என்று சமீப காலமாய் யோசித்தேன்.

நான் அவளிடம் அதைப்பற்றியும் கூட பேசியிருக்கிறேன், ஆனால் உடனே அதை மறுத்து பேச்சையும் சட்டென்று மாற்றிவிடுவாள். தொடர்ச்சியான பொழுதுகளில் அவள் என் தொடுதல்களை மறுத்தலிக்கத் தொடங்கியிருந்தாள், பொதுவாய்ச் சந்திக்கும் பொழுதான அணைத்தல்களும் உணர்வுப்பூர்வமாய் நெருக்கமானதாக இல்லாமல் வெறும் சம்பிரதாயமான ஒன்றாக சுருங்கியது. என்னுடன் இருக்கும் பொழுதுகளில் அவள் பிரிந்து விலகி உட்கார்வதையும் கூட என்னால் உணர முடிந்தது. இன்று அவள் அருகில் உட்கார முடியாமல் போனதால், என் அறையின் சோபா ஒரு ஆள் கச்சிதமாய்ப் படுக்கும் அளவிற்கு இருந்ததை நினைத்து வருந்தினேன். நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து நன்றாய் குனிந்து உட்கார்ந்தால் தான் அவளுடைய நம்ப முடியாத அளவிற்கு நீளமான தேன் வண்ண கால்களை என் விரல்களால் வருட முடியும். நான் வளைந்து அவள் கால்களை வருடினேன் அவள் விசும்பத் தொடங்கினாள் நான் இன்னொரு டிஷ்யூ பேப்பரை அவள் கைகளில் கொடுத்து சமாதனப்படுத்தினேன்.

என் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது, அவளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை, ஆனால் என் பொறாமையுடன் கூடிய அவளுக்கான ஏக்கப்பார்வையை அவள் உணரமாட்டாள் என்பதை நினைத்து தொடர்ந்தது. காலம் தன் கால்களை மெதுவாக நகர்த்தியபடியிருந்தது, நான் கடிகாரம் பார்ப்பதைத் தவிர்த்தேன். எங்கே நான் அவள் எப்பொழுது கிளம்புவாள் என்று நினைத்துவிடுவேனோ என்பதற்காக அல்ல, நிச்சயமாய். அவள் முடிவு என் கையில் இருந்திருக்குமானால், அவள் என் வீட்டில் என் படுக்கையில் என் அணைப்பிலேயே வைத்துக் கொண்டிருப்பேன் காலம் முழுதும்.

காலிங்பெல் அடித்தது, அவள் என்னை என்ன செய்யப்போகிறாய் என்பது போல் சோர்வாய்ப் பார்த்தாள்.

“கவலைப்படாத தேஜஸ், யாராயிருந்தாலும் நிமிஷத்தில் அனுப்பிடுறேன். சரியா?”

எனக்கான அனுமதியை தலையசைத்துத்தந்தாள், அதுவும் கொஞ்சமாய் மௌனமாய், நான் பால்கனியை நோக்கி நகர்ந்தேன். மேலிருந்து,

“யாரது?”

“டொமினோஸ் பிஸ்ஸா மேம்!”

“நாங்க பிஸ்ஸா ஆர்டர் செய்யலையே!?”

நான் அவளிடம் “கீழே போய் அவனிடம் சொல்லிவிட்டு வருகிறேன்” என்றேன். அவள் குழரலாய், “சரி” என்றாள். அவளுடைய அந்த குழரல் ஒலி செய்யும் மாயம் என்னை அந்த அறையை விட்டு போகவிடாமல் செய்தது. பச்சை நிறத்தில் அவள் தொல தொலவென அணிந்திருந்த மென்மையான சட்டையுடன் அவள் அந்த சோபாவில் சரணாகதி அடைந்திருந்தாள் ஒரு ஒரு குழந்தையைப் போல். தலைமுடி முகம் முழுதும் ஒழுங்கில்லாமல் பரவியிருந்தது. நான் அந்த மாய உலகில் இருந்து விடுபட்டு கீழே வந்தேன். அங்கே அவன் உடம்பிற்கு பத்தாமல் குட்டையான வெள்ளை சட்டை அணிந்த ஒருவன் பிஸ்ஸா பாக்ஸுடன் நின்று கொண்டிருந்தான், வெளிப்பக்கத்து கதவை திறந்து அவனாய் உள்ளே வந்திருக்க வேண்டும். நான் வரவும் என்னை நோக்கி பிஸ்ஸா பாக்ஸை நீட்டினான், அவனருகில் நான் வர பிஸ்ஸா பாக்ஸை கீழே போட்டுவிட்டு என்னை சுவற்றை நோக்கித் தள்ளினான் அந்தத் தள்ளலில் தடுமாறி நான் அவன் மீது விழ இருந்தேன். பின்னர் நான் அவனை தள்ளிவிட முயன்றேன் அப்பொழுது அவன் என் முதுகில் ஒரு கத்தியை வைத்திருப்பதை என் மெல்லிய கருப்பு டாப்ஸின் வழியே உணர முடிந்தது.

“கடவுளே!” நான் சட்டென்று கதறலாய் என் குரலை உயர்த்தினேன், “நீ என்ன நினைச்சிக்கிட்டிருக்க...”

“மூடுறீ முண்ட” அவன் சொன்னான், தவறான மென்மையுடன், குரல் அவன் செய்கையை மறுத்தது. அவனும் பதற்றத்தில் இருப்பதாய் நான் நினைத்தேன். அவன் என்னை மாடி ஏறச் சொன்னான் அந்தக் கத்தி என்னில் நடுங்கியது. சட்டென்று அங்கே என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தேன், நாங்கள் என் அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்ததும் கால்களால் சாத்தி கதவை மூடினான் தாழ்ப்பாள் போடுவதைப் பற்றி யோசிக்கவில்லை.

தேஜஸ்வினி உட்கார்ந்திருந்த சோபாவில் எழுந்து அசையாமல் நின்ற சமயம், எரிந்து கொண்டிருந்த ஒற்றை பல்பும் சிணுங்கத் தொடங்கியிருந்தது. அந்த பல்பை எப்பொழுதும் நம்ப முடியாது, இன்றும் இந்த அசாதாரண நிலையில் அப்படியே நாங்கள் அந்த அறைக்குள் வரத்தொடங்க ஒளிருந்தும் மறைந்தும் படுத்தியது.

“உனக்குந்தான்டீ முண்ட, சத்தம் போட்ட...” அவன் தேஜஸ்வினியை மிரட்டத் தொடங்கினான், குரல் மூலமாய் மட்டும் அவளிடமிருந்து வெளிப்படப்போகும் எதிர்ப்பையும் தவிர்த்தவனாய், “உன் கேர்ள் ப்ரண்டைப் போட்டுடுவேன். ஜாக்ரதை!”

தேஜஸ்வினி அப்படியே கீழே நீல நிற தரைவிரிப்பில் விழுந்தாள், அவளிடமிருந்து வந்த மிருதுவான வண்ணத்துப்பூச்சியின் கதறலுடன் கூடிய வெறித்த பார்வை என் கரிய சில்க சட்டைக்கெதிராய் ஒளிர்ந்து கொண்டிந்த கத்தியை நோக்கியபடி இருந்தது. கத்தி என் முதுகை உறுத்தியபடி இருந்தது ஆனால் ரத்தக்காயமா பட்டிருக்குமா என்று உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.

“அவுறுடி” அவன் தேஜஸ்வினிக்கு கட்டளையிட்டான் அதுவரை பரீட்சயம் இல்லாத அந்தச் செயலால் விழைந்த உற்சாகத்தின் இழை அவனுடைய நடுங்கும் குரலில் தெளிவாய்த் தெரிந்தது.

அவள் மறுக்கும் முகமாய் தலையை மட்டும் மௌனமாய் ஆட்டினாள், கைகள் அதுவாய் அவளுடைய தங்க நிற உடலை நெருக்கமாய் இறுக்கியது, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள நினைத்தவளாய். அந்தச் செயலால் அவள் அணிந்திருந்த உடை இன்னும் இறுக்கப்பட்டு அவளுடைய மார்புகளை டாப்ஸுக்கு அடியில் முழுமையாக வெளிப்படுத்தியதை அவள் உணர்ந்திருக்க முடியாது, அவள் தொடை வரை நீண்டிருந்த ஆடையும் சற்று மேலேறி மேலும் கொஞ்சம் தொடையைக் காட்டியது. அந்தச் செயல் அளித்த மகிழ்ச்சி வெட்கமில்லாமல் என் மூச்சுக் காற்றில் வெளிப்பட்டது. முதுகுப்புறத்தில் இருந்து உயர்ந்த கத்தி என்னை கனவுலகில் இருந்து நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

நான் அவனிடமிருந்து விடுபட முயல, வலுவான அவனது கையை என் கழுத்தைச் சுற்றி வைத்து என்னை அவன் முன்னால் இழுத்துவந்தான். அவன் கத்தியை உயர்த்தியது என் கழுத்தில் வைக்கத்தான். நான் உறைந்து போனேன். அவன் மெதுவாய், மிகவும் மெதுவாய் என் சில்க் டாப்ஸைக் மேலிருந்து ஆச்சர்யப்படுத்தும் கூர்மையுடன் இருந்த கத்தியால் வெட்டத் தொடங்கி பாதியில் விட்டான், கிழிந்த டாப்ஸின் பாகம் இப்படியும் அப்படியுமாய் ஃபேன் காற்றில் ஆடியது. நான் ப்ரா எதுவும் அணிந்திருக்கவில்லை மதியம் மூன்று மணிக்கு. சிறிய வெளிறிய மார்புகள் இறுக்கத்திலிருந்து விலகி சுதந்திரமாய்த் தொங்கியது, பிங்க் நிற காம்புகள் பயத்தில் தடித்துப் போயிருந்தன, குளிர்ந்த காற்று வீசியது அப்படியே உற்சாகமும். இப்பொழுது நான் வெறும் சில்க் ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருந்தேன், என்னால் நானும் அவனும் இப்பொழுது ஜோடியாய் எப்படியிருப்போம் என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. கறுப்பு சில்கிற்கு எதிராய் அவனுடைய வெள்ளை சட்டை பேண்ட். அவன் என் அண்ணனைப் போலிருந்தான், நான் அதிரடியாய் சிரித்துத் தொலைக்காமல் இருக்க ரொம்பவும் கஷ்டப்படவேண்டியிருந்தது, நான் என்னை மறந்து கொண்டிருப்பதாய் பட்டதெனக்கு.

அவன் கத்தியை என் மார்புக்கு அருகில் கொண்டு வந்தான், அவன் கத்தி முனையை என் இளமுலைகளுக்கு அருகில் கொண்டு வந்ததால் இப்பொழுது சுத்தமாய் உறைந்து போயிருந்தேன். அவன் தேஜஸ்வினியைப் பார்த்தான்,

“அவறுடி” முன்னர் அவன் குரலில் இருந்த உற்சாகம் இப்பொழுது தென்படவில்லை, அவன் குரல் வன்மையுடன் வெளிப்பட்டது. அந்தக் குரலுக்குக் கட்டுப்படாமல் இருக்க மென்மையான தேஜஸ்வினியால் முடியும் என்று நான் நம்பவில்லை. அவள் மெதுவாய் அவளுடைய பொருந்தாத சட்டையின் பட்டன்களை நீக்கத் தொடங்கினாள். அவனுக்கு அவள் சட்டை அத்தனை மெதுவாய் கழன்று தோள் வழியாகப் போவதில் விருப்பமில்லைதான்.

“எழுந்திருச்சி நின்னு கழட்டுடீ!” அவன் சொன்னான், அவள் அவன் சொன்னதற்கு கீழ்ப்படிந்தாள் மௌனமாய் தொண்டைக்குள் மட்டும் அழுதபடி. முடிவில்லாமல் நீண்ட காலம் கழித்து அவளது கடைசி பட்டனும் அவிழ்க்கப்பட்டு அவளது சட்டை உபயோகப்படுத்திக்கொள்ள ஆளில்லாமல் தரையில் விழுந்தது. என் பார்வை அவளில் விழுந்து நகர்ந்து கொண்டிருந்தது தொடர்ச்சியாய், இத்தனை அழகாய் அவள் இருந்ததில்லை எப்பொழுதும் என்பதைப் போல். நேர்மையில்லாத பொறாமையுடன் அவன் தேஜஸ்வினியைப் பார்ப்பது தெரிந்தது. “இங்க வா” அவன் அவளை அழைத்தான். அது என்னை வன்மையாக்கியது, அந்தப் பார்வையை நோக்கி அறைய வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

அவள் கைகளை மேலும் கீழுமாய் அசைத்தபடியே எங்களை நோக்கி நடந்துவந்தாள் அதன் மூலமாய் தொலைந்துவிட்டதாய் அவள் நினைக்கும் மானத்தை காப்பாற்ற அர்த்தமின்று முயன்றாள். அவளுடைய மிருதுவான மலர்ப்போன்றத் தன்மை அவளை அவனிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே முடியாதது. அவள் கண்கள் கரைந்தபடியே இருந்தது என்னுள் ஆக்ரோஷத்தை உண்டு பண்ணியது, அவள் எனக்கு மிக அருகில் வந்து நின்றாள், ஃபேன் காற்றில் அவள் உடல் நடுங்குவது தெரிந்தது.

அவனுடைய கத்தியைப் பிடித்துக்கொண்டிருந்த கை என் மார்பிலிருந்து நகர்ந்தது, ஆனாலும் அவனது இடது கை இன்னமும் என்னை கழுத்தைச் சுற்றி வளைத்தபடியே இருந்தது. தடுமாறியபடி அவன் தன் ஜிப்பை அவிழ்த்து பேண்டைக் கழற்றிவிட்டான், அது அவனது காலடியில் விழுந்தது. அவனது கால்கள் முற்றிலும் வெளிறிக் காணப்பட்டது, அவனுடைய வெள்ளை நிற பேண்டை ஒத்தே அவனது கால்களும் இருந்தது. அவனும் உள்ளாடை எதுவும் அணிந்திருக்கவில்லை, அவனுடைய விரைத்த குறி தொடலி வரை நீண்டிருந்த அவன் ஷர்டிலிருந்து வெளிப்பட்டு பசியுடன் காணப்பட்டது.

“முட்டிப் போடுறி முண்டை” அவன் தேஜஸ்வினியிடம் சொன்னான், அவன் பசி அந்தக் குரலில் தெரிந்தது, “ஊம்புடி”

நான் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்ற முடிவிற்கு வந்திருந்தேன், அந்த நிலையை அப்பொழுதைய சூழ்நிலை தாண்டிவிட்டாதாக நினைத்தேன். அவன் கைகளிலிருந்து என்னை விடுவித்து நகரப் பார்த்தேன், அவன் கத்தியைப் பிடித்திருந்த கை வேகமாக மீண்டும் என்னருகில் வந்தது. அவன் இன்னொரு கையால் தேஜஸ்வினியைப் பிடிக்க முயல நான் அதைத் தடுத்து அவளுக்கும் அவனுக்கும் இடையில் நின்றேன்.

“வேண்டாம்” நான் சொன்னேன், வார்த்தைகள் என் தொண்டையில் ஒட்டிக்கொண்டிருந்தது அதை மென்மையாகவும் அவனை மயக்குவது போலவும் சொல்ல நினைத்து தடுமாறினேன். “ப்ளீஸ்” மெதுவாய் “நான் செய்யறனே” என்றேன். அவன் கண்களில் என் கண்களை நிறுத்தியிருந்தேன். தேஜஸ்வினி என்னருகில் விடும் மூச்சு சப்தம் கேட்டது, அப்பொழுது அவள் வெளிவிட முடிந்த ஒரே சப்தம் அதுவாகத்தான் இருந்திருக்கும். அவள் தோல் எனக்கு மிக அருகில் இருப்பதை உணர முடிந்தது. நான் அவனுடைய ஒப்புதலுக்காக காத்திருந்தேன், அவன் கண்களின் வழி அவன் என்ன நினைக்கிறான் என்பதை உணர முடியவில்லை.

அவன் ஒரு நிமிடம் ஆழ்ந்து யோசனை செய்தான், வலது கையில் கத்தியைப் பிடித்தபடி. என்னை அழுத்தமாய்ப் பார்த்தான், அவன் பார்வை கொஞ்சம் கொடூரமாய் இருந்தது, அந்தப் பார்வை என்னை சங்கடப்படுத்தாமல் மனதை வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கடைசியில் அவன் ஒப்புக்கொண்டான். நான் குனிந்து என் நாக்கை அவன் துடிப்பான விரைப்பில் ஓட்டினேன், அவனுடைய குறியில் சின்ன சின்னதாய் நாக்கால் வட்டமிட்டேன். குறி நுனியை நாக்கால் செல்லமாய் அடித்து அவனை மென்மையாய் துன்புறுத்தத் தொடங்கினேன், ஆனால் அவன் கண்களிலிருந்து என் கண்களை எடுக்கவில்லை. செல்லமாய்ச் செய்தாலும் துன்புறுத்தல் நீண்டு அதனால் பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்கிற எண்ணம் இருந்தது. அந்த ஏதோ ஒரு நிமிடத்தில் நான் அவனை அழகனாய் உணர்ந்தேன், அவனிடம் கத்தியிருந்திராவிட்டாலும் இப்பொழுது செய்து கொண்டிருப்பதை செய்திருப்பேன் என்று நினைத்தேன். அந்த எண்ணம் என்னை தடுமாறச் செய்தது.

அது சட்டென்று முடிந்துவிட்டது, அவன் உச்சமடைந்து வெளியேற்றினான் நான் கவனமாக மொத்தமாய் விழுங்கினேன். அவனுடைய கோபம் அதனால் பெரிதாகிவிடக்கூடாது என்றே நினைத்தேன். அவன் முன்னால் முட்டிப்போட்டபடி காத்திருந்தேன். அவன் கண்களில் இருந்து என் கண்களை எடுக்காமல் இருந்தேன், எங்கே என் கண்களில் இருந்து அவன் கண்களை எடுத்து தேஜஸ்வினியின் பக்கம் திருப்பிவிடுவானே என்கிற பயம் எனக்கிருந்தது. அவனுக்கும் என் பயம் புரிந்திருந்தது, அடுத்தக் கட்டளை நேரடியாகவே எனக்கு வந்தது “கழட்டிப் போட்டு வந்து படுடீ!” அவன் தேஜஸ்வினியை கண்டுகொள்ளாமல் தவிர்த்தான். அவன் உடம்பு இன்னமும் தயாராய் இருந்தது, இன்னமும் கவனமாக இருந்தான். என்னால் அவனிடமிருந்து கத்தியை பிடிங்கிவிடமுடியும் என்று நினைக்கமுடியவில்லை. நான் அவனுக்கு கீழ்ப்படியும் ஒருத்தியாய் என் சில்க் ஷார்ஸைக் கழட்டினேன், அதுவும் கிழிந்துபோகாமல் இருக்கணுமே. என் மனதில் எங்கோ ஒரு மூலையில் இதிலிருந்து நாங்கள் சீக்கிரமே மீண்டுவிடுவோம் என்கிற நம்பிக்கை இருந்தது.

நான் சோபாவின் மீது படுத்தேன், அங்கிருந்த நீல நிற பெட்ஷீட்களை நகர்த்தி நடுவில் கொஞ்சம் இடம் இருக்குமாறு செய்தேன். மெதுவாய் என்னை விரித்தேன், என் உடலை அவனுக்குக் கொடுக்கும் விதமாய். என் கண்கள் அவன் முகத்தில் நிலைத்திருந்தது, சொல்லமுடியாத எண்ணத்திற்கு எதிராய் போராடும் நோக்கத்துடன். எனக்குத் தெரியவில்லை நான் நினைத்தாலும் என்னால அவன் முகத்திலிருந்து கண்களை விலக்கிவிடமுடியுமா என்று. என்னிலிருந்து விலகிய ஒரு சிறிய எண்ணத்துளி அவனை புகைப்படம் எடுத்துவைக்க நினைத்தது, என்னை ரேப் செய்யப்போகிறவனின் புகைப்படம். நான் உடைந்து போய்விட்ட ஆயிரம் துண்டுகள் ஒட்ட வைக்கப்பட்டதைப் போலவும் அப்படி உடையாமல் இருப்பதற்கான காரணம் எதையோ பாதுக்காக்கத்தான் என்பதைப் போலவும் இருந்தது.

கத்தியில்லாமல் இருந்த அவனுடைய மற்ற கை, இப்பொழுது தேஜஸ்வினியின் தோள்களைப் பற்றி, வெறிகொண்டு திருப்பியது. அவன் கத்தியை அவள் முதுகில் வைத்து என் எதிரில் தள்ளினான், நான் சப்தமில்லாமல் அந்தச் செயலை எதிர்க்கப் பார்த்தேன், அவள் மௌனமாய் என் மீது சாய்ந்தாள். அவள் கொஞ்சம் வளைந்து கொடுத்து என் மேல் பலமாய்ச் சாயாமல் சமாளித்தாள், அவள் இப்பொழுது விழும்பொழுதும் அழகாகவே இருந்தாள். அவன் சொன்னான்,

“போ போய் அவளை மேட்டர் பண்ணு, நான் நீங்க ரெண்டு தேவிடியாளுங்களும் சுத்தமான இந்த சோபாவில் செய்யறதை இப்ப பார்க்கணும். அவளை சாப்புடுறி முண்ட!” அவன் குரல் கொஞ்சம் கொஞ்சம் அதிகரித்தது. தேஜஸ்வினி அதை மறுத்து அந்த தீவிரத்தன்மை தாங்கமுடியாமல் தலையாட்டினாள். நான் சட்டென்று அவள் முகத்தை என் கைகளில் பிடித்தேன், கண்களால் இதெல்லாம் சரியாகிவிடுமென்று அவளிடம் சொல்லிவிடத் துடித்தேன். மிகப்பெரிய பொய் தான், இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவளுடைய கைகளில் ஒன்று என் கைகளைப் பற்றிக் கொண்டது அவள் தன் முகத்தை என் தோள்களில் புதைத்தாள். அந்தக் கணம் அவன் என் கனவுகளில் கற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பொழுதை எனக்களித்தான் நிஜத்தில். அவனிடம் அதை மறுக்க நான் நினைக்கவில்லை.

நான் அவளை என் அருகில் பச்சை நிற தரைவிரிப்பில் கிடத்தினேன், அவளிடம் மென்மையாய் நடந்துகொள்வேன் என்கிற சத்தியத்தை என் மனதில் எடுத்தேன், அதன் மூலம் அவளுக்கும் கொஞ்சம் இதில் சந்தோஷம் கிடைக்கட்டுமே என்று நினைத்தபடி. அவள் மரத்துப்போயிருந்ததாய்ப் பட்டதெனக்கு, கண்கள் மூடியிருந்தது, அவள் யாராலும் தற்சமயம் காப்பாற்றப்பட முடியாதவளாய் தோன்றினாள். நான் குனிந்து பட்டாம்பூச்சி மலர்களைத் தொட்டு நகர்வதைப் போன்ற முத்தங்களை அவள் கழுத்தில் தோள்களில் கொடுத்தேன், அவளுடைய உதடுகளை மட்டும் தவிர்த்தபடி, ஆனால் அவள் உதட்டில் முத்தவிட வேண்டும் என்கிற ஆசை இல்லாமலில்லை. ஏனோ அது கொஞ்சம் அதிகமாகிவிடும் என்று தோன்றியது எனக்கு. அவளுக்கும் எனக்கும். அவளுடைய காம்புகள் மென்மையான கருத்த குளங்களை ஒத்திருந்தது அவளுடைய தங்க நிற மார்புகளில். மேலிருந்து அவற்றை நக்கத் தொடங்கினேன், அவைகள் விரைப்படவதை என் நாக்கில் உணரமுடியும் வரை. அவள் கொஞ்சமாய் அசையத் தொடங்கினாள், ஆனால் அவளுடைய அசைவு என்னை மேலும் அந்த புதிரான இரவில் குழப்பத்திலேயே ஆழ்த்தியது. அவள் என் செயல்களுக்கு எதிராய் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. என்னுடைய அவள் மீதான மென்மையான காதலுக்கு அந்த இரவு புரிபடவேயில்லை, அவள் அந்த இரவில் என்னை மட்டும் நம்பி அவளை நான் காப்பாற்றுவேன் என்று நினைத்திருக்க வேண்டும்.

அவன் விடும் மூச்சுக்காற்று அந்த அறையில் பலமாய்க் கேட்டது, நான் அவளுடைய இனிப்பான உடலில் கொஞ்சம் கொஞ்சமாய் கீழிறங்கி முத்தம் கொடுக்கும் பொழுது முதல் முனகல் அவனிடமிருந்து வந்தது. அது விரக்தியின் காரணமாய் வந்த குரல், எனக்கு ஒரு நிமிடம் ஆச்சர்யமாக இருந்தது அவனால் அவனைக் கட்டுப் படுத்தி விடமுடியுமா என்று. ஆனால் எனக்குக் கீழிருந்து வரும் அவளுடைய வாசனையில் நான் மயங்கிப் போயிருந்தேன், என் மார்புகள் அவளுடைய நீண்ட கால்களில் உரசியது பொழுதில். அவளுடைய சுருளான முடி என் கன்னத்தில் உரசியது. இதில் மிகப்பெரிய சந்தோஷமே அவள் உடல் எனக்கு பதிலளித்துக் கொண்டிருந்தது, என் தொடதல்களுக்கு, என் நாக்கிற்கு, என் முத்தத்திற்கு. அவள் எனக்குக்கீழே நெளிந்து கொண்டிருந்தாள், அவளது விரல்களை காற்றில் பின்னிக்கொண்டிருந்தாள், அவளது நகம் என் கழுத்தில் கீறிக்கொண்டிருந்தது. விளக்கு அப்பொழுது காட்டுத்தனமாய் ஒளிர்ந்து மறைந்து கொண்டிருந்தது, அவள் உச்சமடைந்து என் வாயில் வந்தாள், நாங்கள் இருவரும் ஒன்றாய் சிணுங்கி அடங்கினோம்.

தேஜஸ்வினி ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தாள் என் உடலடியில், அவள் பெருமூச்சு சப்தம் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. என்னால் அவனைக் காணமுடியவில்லை, பாதி எழுந்து தலையைத் திருப்பிப் பார்த்தேன். அங்கே இருந்த வெளிச்சத்தில் அவன் அங்கே இல்லை என்பது தெளிவானது, அவன் விட்டுச் சென்ற கத்தி மட்டும் அங்கே அநாதையாக இருந்தது. அவன் கதவை சாத்திவிட்டுச் சென்றிருந்தான். சட்டென்று அந்தக் கத்தியை எடுத்து அவள் உடலில் வைத்து, அந்த இரவை முழுமையாக எனதாக்கிக் கொள்ள நினைத்தேன், அவளை நான் நினைக்கும் அத்தனையையும் செய்ய வற்புறுத்தி.

அப்படிச் செய்தால் காலம் முழுக்க அவள் என்னை வெறுப்பாள் என்ற நினைப்பு வந்ததும், என் தலையை ஆட்டி எனக்கே மறுப்பைச் சொல்லி, அந்த முட்டாள்த்தனமான சிந்தனையை வெளியேற்றினேன். அதுவரை நடந்ததே போதும் என்கிற எண்ணம் வந்தது, அவளுடைய நம்பிக்கை தான் முக்கியம். அவள் உடல் என்னுடன் ஒன்றானதை, அவள் என்னுடன் பின்னிப் பிணைந்தது, மற்றும் அந்த நாள் அவளுக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றிய கருத்தில் மாற்றம் ஏற்படுத்தியிருக்கும் என்று நினைத்தேன். இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் தான் அவளுக்கு அதில் நம்பிக்கை வர என்றாலுமே கூட. நான் திரும்பி மீண்டும் அவளுடன் படுத்துக் கொண்டேன், அவள் எப்படியோ அதிசயமாய் தூங்கிக் கொண்டிருந்தாள், நானும் அவளுடன் சேர்ந்து கொள்ள நினைத்தேன்.

போன் அலறியது, நான் எடுத்தேன் பேசப்போவது யாருடன் என்று தெரிந்து.

“என்னை மன்னித்துவிடு” அவன் சொன்னான் “நான் அந்த அளவிற்குப் போகும்னு நினைக்கலை. கத்தியுமே கூட தேவையில்லை தான், நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருந்தீங்க அதனால் தான் என்னால கட்டுப்படுத்த முடியலை” பின்னர் வருந்தியபடி “நான் உனக்கு ஒரு ஷர்ட் வாங்கித் தந்துடுறேன்” என்றான்.

“மன்னிச்சிட்டேன்” என்றேன்.

எப்படி அவனை நான் தப்பு சொல்ல முடியும், அவனை அழைத்ததே நான் தானே. நான் மீண்டும் படுக்கைக்குச் சென்று அவளை என் அணைப்பில் வைத்துக் கொண்டேன். அவள் கனவில் முணுமுணுத்தபடியே என்னைக் கட்டிப் பிடித்தாள். நான் அவளை பாதுகாக்கும் எண்ணத்துடன் கட்டிப்பிடித்தேன், வேறு யாரும் அவளை வருத்தப்படும் படி செய்ய முடியாதவாறு.

------------------------------------------------------------

சும்மா ஒரு அடல்ஸ் ஒன்லி கதை, அப்படியே ஆங்கிலத்தில் பார்த்து தமிழில் மொழி பெயர்த்தது. ட்ரான்ஸ்லேஷன் வாசனை வரலாம். ஆனால் ஆங்கிலத்தில் இந்தக் கதை படித்ததிலிருந்து இதை மாத்தணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts