In காஜல் அகர்வால் க்ளவேஜ்

க்ளவேஜ் பற்றி சிறுகுறிப்பு

Desperately Seeking Cleavage வோக் ஆர்ட்டிகிள் வெளியான பொழுது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை எழுதிய கேத்லீன் “The tits will not be out for the lads. Or for anyone else, for that matter,” என்று சொல்லியிருந்ததைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் நிறைய கட்டுரைகள் வரையப்பட்டன. அவர் அதற்கு சில காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார். அலிசியா விக்கந்தர் 2017 கோல்டன் க்ளோப்ஸ்ற்கு அணிந்து வந்திருந்த உடையையும், ப்ராடாவின் கோர்செட்கள், க்ளவேஜ் உயர்த்திக் காட்டும் அம்சத்தில் இருந்து விலகி உருவாக்கப்பட்டதையும், மேலும் விஷயங்களையும் சொல்லி. 




அலிசியா விக்கந்தர் - கோல்டன் க்ளோப் - இதில் க்ளவேஜ் காண்பிக்காததைத் தான் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.


Pradaவின் கோர்செட் ஒன்றும் தோழி மிரன்டா கெர்ரின் கோர்செட் ஒன்றும்


க்ளெவேஜ் பேஷன் குறையுமான்னு என்னைப் பர்ஸனலா கேட்டா குறையாதுன்னு தான் சொல்லுவேன். சமீபத்தில் ரசித்த ஒரு க்ளவேஜ்.


முன்னர் 2016ல் இதே தலைப்பில் எழுதியது

நண்பர் ஒருவர் எதையோ ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஜீ காஜல் அகர்வால் ப்லிம்பேர் ஃபோட்டோ பாத்தீங்களா என்று கேட்டார். நான் என்னவோ ஏதோ என்று பதறிப்போய் தேடினால் கிடைத்தது இது.

இதிலென்ன இருக்கு பாஸ். கேட்டி பெர்ரி க்ளோப்ஸ் வந்தது க்ளாசிக். என் உடன் வேலை செய்யும் அமெரிக்க பெண்களாயிருந்தால், இவளுக்கு இல்லாத Rackற்கு அளும்பு செய்கிறாள் என்று தான் சொல்வார்கள். இந்த மாதிரி ட்ரெஸ் போடுவதற்கான Rack இவளுக்கு இல்லை. அப்படியே போட்டுட்டாலும்.

இதெல்லாம் NSFW ரேஞ்சில் கூட இல்லை. :)

அவருக்கு சொன்ன பதிலில் குறிப்பிட்ட கேட்டி பெர்ரி படம்.

Pride and Prejudice நாவலில் ஜேன் ஆஸ்டின் சொல்லும் ஒரு புள்ளி பற்றி சொல்லியே ஆகவேண்டும். இங்கே அமெரிக்காவில் பெண்கள் நடக்கும் விதத்தில் ஒரு வித்தியாசம் தெரியும், அவர்கள் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி நடப்பது கொஞ்சம் கவனித்தாலே புரியும். ஆனால் மிஸ். பென்னட்டைப் பார்க்க சார்ல்ஸ் பிங்க்லி வரும் பொழுது.

Mrs. Bennet: Oh, sit up straight, Jane! Pull your shoulders back! A man could go a long way without seeing a figure like yours, if you could only make the most of it!”

ஒரு தாய் அவள் பெண்ணுக்குச் சொல்வது, அவள் சொல்வது நெஞ்சை நிமிர்த்து என்பதல்ல, தோளை பின்னால் தள்ளு என்பது, ஏறக்குறைய இரண்டும் ஒன்று என்றாலும் இதிலிருக்கும் வித்தியாசம் பெண்களின் தன்னம்பிக்கை சம்மந்தப்பட்டது.

பாராட்டுக்கள் காஜல் அகர்வால், இன்னும் காஜலுக்கு கல்யாணம் ஆகவில்லை என்பதால் இப்படி க்ளவேஜ் தெரிய வலம் வந்ததை, ஆண்களைக் கவர என்று வைத்துக் கொள்ளலாம். 

Evolutionary psychologists theorize that humans' permanently enlarged breasts, in contrast to other primates' breasts, which only enlarge during ovulation, allowed females to "solicit male attention and investment even when they are not really fertile"

க்ளவேஜ் பற்றி சில Quote's. மர்லின் மன்றோ சொன்னது முதலில்.

The trouble with censors is that they worry if a girl has cleavage. They ought to worry if she hasn't any.





சிங்கம் படப் பாடலொன்றை சன் டீவியில் போடும் பொழுதெல்லாம், அனுஷ்காவின் க்ளவேஜ்ஜிற்கு இன்றும் மாஸ்க் உண்டு.

முதல் பிரா


Women have strapped down their breasts with fabric bands or boosted their cleavage with body-shaping corsets for centuries, depending on current fashions. But the precursors to modern bras began to appear in the late 1800s and early 1900s. The magazine “Vogue” first used the term brassiere in 1907. In 1914, American Mary Phelps-Jacobs patented the first bra design, which consisted of two handkerchiefs sewn together with baby ribbon used as straps.
The first push-up bra came on the scene in 1948, introduced by Frederick Mellinger of Frederick's of Hollywood fame. According to Redbook magazine, the average woman today owns nine bras.


ஸோலிகே பீச்சே க்யா ஹை?


The breasts contain between 15 and 20 lobules filled with hollow cavities called alveoli, where milk is produced. These lobules are connected by ducts that carry the milk to the nipple. Fat, ligaments and connective tissue hold all of this milk-producing machinery in place.

சைஸ் மேட்டர்ஸ்?


Whether you wear a double-A or double-D cup is likely partly due to your genes, with researchers pinpointing seven genetic markers (called SNPs) responsible for breast size. The study, detailed in the June 30, 2012, issue of the journal BMC Medical Genetics, also found that two of these markers are also linked with breast cancer; that suggests some of the same biological pathways may underlie normal breasth growth and breast cancer. However, that is not to say breast size is linked to breast cancer, the researchers cautioned.
Speaking of size, the average size for American women is now a 36C. 

க்ளவேஜ் போராட்ட உத்தி




Australian Prime Minister Julia Gillard has unwittingly sparked a rush of cleavage photos on social media after a commentator said it was wrong for her to show too much of her breasts in Parliament.

Outraged women have sent images of their own cleavage to a Facebook page, the organiser telling the commentator that it was time 'everyone accepted that women have breasts and got over it, to the best of their ability.'

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In அக்கா பெண் சிறுகதை

அக்கா பெண்ணே அழகே!!!

“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.”

கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்படியொன்றும் நான் மூன்றாம் ஆள் கிடையாது அவளுக்கு. இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகவில்லையே தவிர, பிறந்ததிலிருந்தே எனக்கு அவள் அவளுக்கு நான் என்பது தீர்மானமாகிவிட்டிருந்த ஒன்று. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறுமாதத்திலேயோ இல்லை ஒரு வருடத்திலேயே எங்கள் இருவருக்கும் கல்யாணம் முடிந்துவிடப்போகிறது.

அதுமட்டுமில்லாமல், கௌசியினுடைய அம்மா அதாவது எனது அக்கா, புருஷன் வீட்டில் இல்லாமல், சண்டைபோட்டுக் கொண்டு தாய்வீட்டில் இருந்ததுதான் மிகவும் அதிகம். இவளை எனக்கு தக்குணோண்டு இருந்ததில் இருந்து தெரியும். இன்றைக்கு இப்படி பேசியது வேடிக்கையாகயிருந்தது.

பாவா, பாவான்னு ஆசையா சுத்தி சுத்தி வரும் பொண்ணுக்கு இன்றைக்கு என்னவாயிற்று என்று யோசித்துக் கொண்டிருந்தேன்; ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக ஐஸ்கிரீம் பார்லரில் வைத்து கையைப் பிடித்தது கோபமேற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை தான். சொந்த அக்கா பொண்ணு, கல்யாணம் பண்ணிக்கப்போகிறவன் ஊர் உலகத்திற்கே தெரிஞ்சது தான் இது. திருச்சியில் நாங்க சுற்றாத இடங்களையும் பேசாத விசஷயங்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். நாங்கள் கொடுத்த வாங்காத முத்தங்களா முத்தங்களா?

அவள் வயதுக்கு வந்திருந்த சமயம், நான் தான் வேலி கட்டணும் எங்கம்மா ட்ரெஸ் எடுத்துக் கொடுக்கணும், என்று ஏதேதோ விஷயம் ஓடிக்கொண்டிருந்த சமயம் நான் உன்னை மொத்தமா பார்த்தே ஆகணும் எப்படி வயசுக்கு வந்தன்னு சொல்லிப் பார்த்ததும் கை வைத்ததும்; இன்று என்னவாயிற்று.

யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவள் கோபமாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது மீண்டும் வம்பிழுக்கும் நோக்கத்தில் அவள் கையைப்பற்றி இழுக்க,

“டேய்.”

“என்னது டேய்யா?”

“ஆமாண்டா...”

“என்னாடி இன்னிக்கு ரொம்ப ஓவராத்தான் போகுது. நானும் போனாப்போகுது போனாப்போகுது, நாம பார்த்து வளர்த்தப் பொண்ணுன்னு பார்த்தா ரொம்பத்தான் ஆய்டுச்சு இன்னிக்கி. டா போட்டு பேசுற அளவுக்கு வந்துட்டியா? என்னாடி ஆச்சு உனக்கு.”

நான் கேட்டதும் அந்தப் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டவளின் கண்களில் இருந்து முன்னிரவு பெய்த பனியினால் கருவாகி, காலைப் பொழுதின் இளம் சூட்டில் உருகி ரோஜாவில் வழிந்தோடும் ஒற்றைத் துளியாய் கண்ணீர் கன்னத்தில் வழிய நான் பயந்தே போனேன். அப்படியொன்றும் மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடையில் எங்களைத் தெரியாதவர் யாருமே கிடையாது என்றாலும் அழும் பெண்ணின் அருகில் நிற்பது கனன்று கொண்டிருக்கும் எரிமலையில் அருகில் குடிசை போட்டு தங்குவதை விடவும் பாதுகாப்பற்றது என்பதால் வந்த பயம். அழைத்து வந்திருக்கும் பெண் எப்படா அழுவாள் என்று காத்திருப்பதைப் போல் பார்த்துக்கொண்டிருக்கும் சமூகக் காவலர்களின் தர்ம அடியில் இருந்து தப்பிக்க நினைத்தவனாய் அவளை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.

வந்ததும், என்னை ஒன்றுமே கேட்காமல் நேராய் மலைக்கோட்டையை நோக்கி நடக்கத்தொடங்கினாள். அவளின் நகர்வு உச்சிப் பிள்ளையார்க்கோவிலை நோக்கியிருந்தது புரிந்ததும் இன்றைக்கு மாட்டினேன் என்றே நினைத்தேன். மொட்டை வெய்யலில் உச்சிப்பிள்ளையார் கோவில் படிக்கட்டொன்றில் அவள் உட்கார பக்கத்தில் இருந்த கடையில் இருந்து பூஜைக்கு என்று சொல்லி தேங்காய் பழம் வாங்கிவந்து அவள் அருகில் உட்கார்ந்தேன். பெண்களுக்கு எங்கிருந்து தான் வருமே, சலசலவென்று கண்கள் சிவக்க அடுத்த நொடி நீர்வீழ்ச்சி புறப்பட்டுவிடும் அபாயம் தெரிந்தது.

“நேத்திக்கு நைனாக்கிட்ட என்ன சொன்னீங்க?”

அவள் கேட்டதும் எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. ஓஹோ இதுதான் விஷயமா? அதான் பொண்ணு பிலிம் காட்டுது என்று நினைத்தவனாய். ஒன்றுமே புரியாததைப்போல,

“நான் பாவாக்கிட்ட என்ன சொன்னேன்.”சிறிது யோசிப்பதுபோல் இருந்துவிட்டு, ”உண்மையிலேயே மறந்து போச்சு, நீங்கதான் உங்க காலேஜிலேயே மனப்பாடம் பண்ணுறதுல கெட்டிக்காரியாமே நீயே சொல்லு?” நான் அவளைச் சீண்ட.

“நைனாக்கிட்ட நேத்திக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னீங்களாம். நேத்தெல்லாம் தண்ணியடிச்சிட்டு ஒரே ரப்சரு. இனிமே உங்களைப் பார்க்கக்கூடாதுன்னு வேற நைனா சொன்னிச்சு. ஏன் வேற யாராவது வெள்ளத் தோலுக்காரியை சிக்கிக்கிட்டாளாக்கும்.”

என்னிடம் எதையும் சொல்ல பயந்து மாமா அக்காவையும், இவளையும் தான் திட்டும் என்று எனக்கு தெரிந்துதான் இருந்தது. அக்கா இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்; இந்த மூடத்திற்கு தெரியவில்லை என்னைப் பற்றி என்று நினைத்தேன். அவள் என்னிடம் காலையிலிருந்து நடந்துகொண்ட முறையை நினைத்ததும் சிரிப்பாய் வந்தது. ஆனால் வெளியில் கோபப்பட்டவனாய்,

“உதைபடப்போற பார்த்துக்கோ, யார் கிட்ட என்ன பேசுறதுன்னே தெரியலை உனக்கு. உங்கம்மா என்ன வளர்த்துருக்கா உன்னை. வெள்ளத்தோலுக்காரியாமுல்ல, அமேரிக்காவுல உண்மையான வெள்ளக்காரியே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கியூவில் நின்னாளுங்க. நான்தான் அக்கா பொண்ணுக்கூட ஊரெல்லாம் சுத்தியிருக்கோமே, நாளைக்கு நாம கைவிட்டுட்டா யாரு கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு நினைச்சு அதையெல்லாம் விட்டுட்டு, இந்த வேப்பெண்ணை பின்னாடி கைகட்டிக்கிட்டு, லோலோன்னு 12 மணி வெய்யலில் அலைஞ்சு, இந்த சூட்டுல மலைக்கோட்டை பாறையில் உக்காந்திருக்கேன்.” சொல்லிவிட்டு சிரிக்க.

“வேப்பெண்ணைதான் நாங்கல்லாம், வேப்பெண்ணைதான். ஏன் அமேரிக்காவில் வெள்ளக்காரியையே கட்டிக்கிறது யாரு வரச்சொன்ன தமிழ்நாட்டுக்கு. பொய்யப்பாரு, வெள்ளக்காரி கிடைச்சாளாம், உங்க மூஞ்சிக்கு கருப்பிங்க கூட திரும்பிப் பார்த்திருக்க மாட்டாளுங்க. ஏதோ மாமனாச்சே நாமளே கல்யாணம் பண்ணிக்கிலைன்னா வேற யாரு கல்யாணம் பண்ணிப்பான்னு நினைச்சா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. உங்களுக்கு ஒரு வெள்ளக்காரி கிடைச்சா எனக்கொரு வெள்ளக்காரன் கிடைக்கமாட்டானா என்ன?”

ஒருவழியாய் சமாதானம் ஆகிவருவதைப் போலிருந்ததால் நானும் இந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டு, அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் விட்டவள்,

“இங்கப்பாருங்க, இந்த ஏமாத்துற வேலையெல்லாம் ஆவாது. மரியாதையாய்ச் சொல்லுங்க, நேத்தி நைனாக்கிட்ட அப்படி சொன்னீங்களா? இல்லையா?” அவள் தலைமுடியை இழுத்தபடி கேட்க. நான்,

“ஆமாம் இருக்குறது நாலு முடி, அதையும் பிச்சுறு. அப்புறம் கல்யாணத்தன்னிக்கு டோப்பா வைச்சிட்டுத்தான் உக்காரணும்.” நான் சிரித்துக் கொண்டே சொன்னதும். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சிரித்தவள். இரண்டு படி இறங்கிவந்து என்னருகில் உட்கார்ந்து தலையை தோளில் சாய்த்தவாறே,

“பின்ன அப்படி ஏன் சொன்னீங்க. அதைச் சொல்லுங்க.”

“இங்கப்பாரு கௌசி, பெரியவங்க விவகாரத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கக்கூடாது. உனக்குத் தெரியுமுல்ல உன்னையில்லாம இன்னொருத்தியை நான் நெனச்சுக்கூட பார்க்க மாட்டேன்னு அப்புறமென்ன. இந்த விஷயத்தை நாங்க பார்த்துக்குறோம் நீ பேசாம இரு.”

நான் சொன்னதும் தோளிலிருந்து சற்றே முகத்தை விலக்கி என்னைப்பார்த்தவள்,

“நைனாக்கிட்ட வரதட்சணைப்பத்தி பேசப்போய் ஏதாச்சும் பிரச்சனையா?” அவள் கேட்க ஓங்கி பளிரென்று கன்னத்தில் ஒன்னு கொடுக்கணும் நினைச்சேன். பின்னால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டவனாய்.

“எனக்கு இந்த வேப்பெண்ணைக்காரி மட்டும் போதும். என்னைப் போய் வரதட்சணை வாங்குறவங்க லிஸ்டில் சேர்த்துட்டியே. உருப்புடுவியா நீ?” நான் கொஞ்சம் உற்சாகம் குறைந்தவனாய் சொல்லத்தொடங்க, இடை மறித்தவள்.

“என்னையும் பிடிச்சிறுக்கு, பணமும் வேணாம் வேறென்னத்தான் அப்படியொரு பிரச்சனை என்கிட்ட சொல்ல முடியாத அளவிற்கு.” கேட்டதும் என் நினைவெல்லாம் பின்னோக்கி சென்றது. இதே கௌசியோட அப்பா, எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அடிச்ச கூத்து சின்னவயசாயிருந்தாலும் நல்லா ஞாபகம் இருக்கு.

அப்ப எனக்கு ஏழோ எட்டோ வயசிருக்கும், எங்க அப்பா அம்மாவிற்கு கடைசி பிள்ளை நான், கௌசியோட அம்மா முதல் பொண்ணு, அவங்களுக்கு அப்புறம் நாலு புள்ளைங்க பிறந்து இறந்து போக, அதுக்கப்புறம் எங்க சின்னக்கா, அதற்குப்பிறது சங்கரண்ணன். அப்புறமா நான். சொல்லப்போனால் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடிவரைக்கும் கௌசியோட அம்மாத்தான் என்னை வளர்த்தது.

இத்தனைக்கும் கௌசியோட அப்பா அதான் எங்க மாமாவொன்னும் தூரத்து சொந்தமெல்லாம் இல்லை, எங்க அம்மாவோட அண்ணன் பையன் தான். அதாவது கௌசியோட அம்மாவும் அப்பாவும் அத்தைப்பொண்ணு மாமாப்பையன் உறவுமுறைதான் வேணும். அந்தக்காலத்திலேயே எங்க பாவா, பெரிய வேலை பார்த்து வந்தாரு, எங்கப்பாவோ ரிட்டைர் ஆகியிருந்த சமயம். அதுமட்டுமில்லா, பாவா கொஞ்சம் கலரு, எங்கம்மா மாதிரி, எங்கக்கா கொஞ்சம் கருப்பு எங்கப்பா மாதிரி.

அவ்வளவுதான், மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து, மூன்றாம் நாள் மறுவீடு அழைப்பு வரைக்கும் எங்க பாவா பண்ணின அளும்பு, மூவாயிராம் கையில் கொடுத்தாத்தான் தாலி கட்டுவேன்னு ஒத்தைக்காலில் நிற்க, அந்த சமயம் அப்பாபோய் மோதிரத்தை அடகு வைச்சு மூவாயிரம் எடுத்துட்டு வந்தது இன்னமும் கண்ணிலேயே நிற்கிறது. அது அப்படியே இன்னிக்கு வரைக்கும் தொடர்கிறது. இப்படித்தான் வீட்டிற்கு வந்தால் மாப்பிள்ளை முருக்குன்னு கேள்விப்பட்டிருப்பீங்க, அப்படியொரு முருக்கு. அதான் கொஞ்சம் போல் பழிவாங்கணும் அப்படி சொல்லியிருந்தேன். இதை இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பேன். என்னயிருந்தாலும் அப்பா. இவங்கம்மாவே இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகும் புருஷனை விட்டுக்கொடுக்க மறுக்கும் பொழுது. அப்பாவா அவரோட கடமையை முழுமையா செஞ்ச அந்த மனுஷனை கௌசி எப்படித்தான் தப்பா புரிஞ்சிப்பா.


நானும் அன்றைக்கு காரணம் எதையும் சொல்லாமல் கௌசியை பேசி அனுப்பிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவள் பிடிவாதமாய் இருந்தாள்,

“இங்கப்பாருங்க பாவா, உங்களுக்கு உண்மையிலேயே புரிலையா இல்லை புரியாதமாதிரி நடிக்கிறீங்களான்னு தெரியலை. நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்கன்ற தைரியத்தில் உங்கக்கூட சுத்தாத இடம் கிடையாது. இதெல்லாம் ஒரு நம்பிக்கையில் தான். இன்னிக்கு வந்து பட்டுன்னு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்கன்னு கேள்விப்பட்டதும் அப்புடியே யாரோ மனசுல ஆணியடிக்கிற மாதிரி இருந்துச்சு. அம்மாதான் தைரியம் சொன்னிச்சு, படவா ராஸ்கல், உங்க நைனா மட்டும் தனியா இருக்கிற நேரமாப் பார்த்து சொல்லிட்டு போயிருக்கான். என் முகத்தைப் பார்த்து சொல்லச் சொல்லு பார்ப்போம்னு சொன்னிச்சு. அதுமட்டுமில்லாம அவன் கட்டிக்க மாட்டேன்னு சொல்லட்டும் நான் அவனை கடத்திட்டு வந்து உங்க கல்யாணம் நடத்திவைக்கிறேன்னு சொன்னதும் தான் கொஞ்சமா தேறினேன்.

ஆனால் திரும்பவும் உங்களை ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்ததும் வந்துச்சே கோபம். அதான் கண்டபடிக்கு திட்டிட்டேன். பாவா நான் டேய் வாடா போடான்னு சொன்னதாலல்லாம் கோச்சுக்கலையே. எப்படியோ போங்க நீங்களாச்சு உங்க பாவாவாச்சு. என்னக் காரணம்னு என்கிட்டயாவது சொல்லிடுங்க.”

அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்த அன்று மாலை காரணத்தைச் சொல்லி வீட்டிற்கு அனுப்பினேன். நான் இதைச் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தவளிடம்.

“இங்கப்பாரு சிரிக்கிறது முதல்ல நிறுத்து, ஏற்கனவே கட்டிக்கப்போறவனை வாடா போடான்னு பேசுற பொண்ணு தேவையான்னு யோசிச்சிட்டு இருக்கேன். வாணாம் விட்டுறு. காலையில் பேசினதுக்கும் இப்பவே சரி செஞ்சிட்டு போகலைன்னா அப்புறமா நான் வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சிறுவேன். எங்க கணக்க தீர்த்துக்கோ பார்க்கலாம்.”

“ம்ம்ம், ஆசை தோசை அப்பளம் வடை. இரு இரு நான் உன்னை அம்மாச்சி, தாத்தாகிட்ட போட்டு கொடுக்குறேன். அசிங்கம் அசிங்கமா பேசுறேன்னு.” அவள் முடித்ததும்.

அவளை அவள் வீடு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு, கன்னம் சிவக்க எங்கள் வீட்டைநோக்கி நகர்ந்தேன். அடுத்த மாதம் எங்களிருவருக்கும் கல்யாணம் நடந்து முடிந்த முதலிரவில்,

“ஆமாம் உன் பழிவாங்குற நடவடிக்கையெல்லாம் என்னாச்சு.” அவள் ஒய்யாரமாய்க் கேட்க, பெண்ணழகில் மயங்கி லட்சியங்களைக் கோட்டைவிட்ட இன்னுமொருவனாக,

“இல்லடி அடுத்தநாள் உங்கப்பாவை நேரில் பார்க்கிறப்ப. உங்கப்பா பாவமா ஒரு லுக்கு கொடுத்தாரே பார்க்கணும். சில பேரு சில மாதிரி இருந்தா தான் நல்லா இருக்கும். எங்க பாவா முருக்கிக்கிட்டிருந்தாதான் நல்லாயிருக்கும்னு உன்னைக்கட்டிக்க சரின்னு சொல்லிட்டேன்.”

முன்னயே எழுதினது தான் - இப்ப சும்மா மறு ஒளிபரப்பு

Read More

Share Tweet Pin It +1

21 Comments

In முதலிரவு கதைகள்

முற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்

“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?”

அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவருக்குமான தொடர்பும் அவள் திருமணத்திற்குப் பிறகு சில வருடங்களாக குறைந்திருந்தது. அவளுடைய கணவன் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பும் நான் வெளிநாட்டில் வேலை செய்துவந்ததும் அதற்கு முக்கியமான காரணங்கள். நானும் அக்காவும் சத்தமாய் பேசிக்கொண்டிருந்த நாட்களில் பக்கத்து வீட்டினர் கண் போடுவார்கள் என்று அதட்டிய அப்பா கூட இப்பொழுது வரும் சப்தத்தைப் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை. அக்கா கல்யாணம் செய்துகொண்டு போய்விட நான் வேலைக்காக வெளிநாட்டில் வாழ வீடே வெறிச்சோடிப்போய்விட்டதாக புலம்பிய அம்மாவின் கண்களில் சந்தோஷம் தெரிந்தது.

என் கல்யாணம் மீண்டும் எங்கள் வீட்டில் மூன்று நான்காண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு மனநிலையைக் கொண்டுவந்திருந்தது. அக்கா அவள் பையனை நாத்தனாரிடம் விட்டுவிட்டு என் கல்யாண வேலைகளைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள். வந்ததில் இருந்தே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா என்னமோ உன் பையன் கலரையெல்லாம் பாத்து கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு சொன்னே, இப்பப்பாரு பொண்ணோட கலரில் கவுந்து விழுந்துட்டு அந்தப் பொண்ணுக்கிட்ட ஒரு கேள்விக் கூட கேக்கலை?”

ஆரம்பக்காலத்தில் இருந்ததற்கு கொஞ்சம் மாறியிருந்தேன் தான், ஆனால் நான் அந்தப் பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொன்னதற்கு அந்தப் பெண்ணின் நிறம் மட்டும் காரணம் கிடையாது. என்னவோ பெண் பார்க்கப் போயிருந்த சமயத்தில் காபி கொண்டு வந்து கொடுத்த அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது, அமேரிக்காவில் கல்யாணம் செய்து கொள் என்று சொல்லி பின்னால் துரத்திக் கொண்டிருந்த ஒரு என்ஆர்ஐ பெண்ணும் அவள் குடும்பமும் அன்று நினைவில் வந்துபோக, கல்லூரிக்காலத்தில் மனதில் வைத்திருந்த ஒரு பெண்ணிற்கு மேல் பார்க்கக்கூடாது என்று கொள்கை உறுதி கொண்டு சரியென்று சொல்லியிருந்தேன்.

“ஆமாம் அவன் கேக்கலைன்னா என்ன நீதான் கேட்டுக்கிட்டேயிருந்தியே ஒரு மணிநேரத்துக்கு, எங்கடா தம்பி சரின்னு சொல்லி நீ வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு பயந்துக்கிட்டே உக்காந்திருந்தேன் தெரியுமா?” அம்மா, நான் லேப்டாப்பில் என் அமெரிக்க வீடு மற்றும் நண்பர்களை அக்காவிற்கு காட்டிக்கொண்டிருக்க இருவருக்கும் காபி கலக்கிக்கொண்டு வந்து கொடுத்தவராய், அக்காவிற்கும் பதிலளித்தார்.

“பின்ன, சும்மா கட்டி வைச்சிட முடியுமா? உன் பையனோ அரைக்கிறுக்கு வர்றவ கொஞ்சமாவது இவனை அனுசரிச்சு போறவளா இல்லாம வேற மாதிரியா இருந்திட்டா, கஷ்டமாயிடாது, அதுக்கா இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது.” அவளிடம் உண்மையான கரிசனம் இருந்தது.

“என்னடா ஹனிமூனுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா? ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற, நாங்கெல்லாம் நீ கூப்பிட்டாக் கூட வரமாட்டோம் எங்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்னாவது சொல்லேன்.” அக்கா மீண்டும் சீண்ட, நான் வழியும் முகத்தை துடைக்கும் வழிதெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அம்மாதான் உதவினார்கள்,

“ஏண்டி இவ்வளவு பேசுற, எங்கடி உன் வீட்டுக்காரன், தம்பிக்கு கல்யாணம் இருக்கு அவன் வர்றாம இவ மட்டும் வந்திருக்கா, இதில நக்கல் வேற இவளைக் கூப்பிடலைன்னு, நீயும் ஒரு மாசம் சுத்திட்டு சுமந்துக்கிட்டுத்தானே வந்த அப்புறமென்ன?”

அம்மாவின் சொந்தத்தம்பியைத் தான் அக்காவிற்கு கல்யாணம் செய்து வைத்திருந்ததால் அந்த மரியாதை, அத்தானுக்கு வேலை அதிகம் என்னிடம் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டு சொல்லியிருந்தார் “டேய் எனக்கும் வருத்தம் தான், என் கல்யாணத்தை முன்னயிருந்து நீதான் நடத்தின. இப்ப ஆனால் நிறைய வேலை கல்யாணத்திற்கு மூன்று நாளைக்கு முன்னால் நிச்சயம் வந்து விடுகிறேன்” என்று.

ஆனால் அம்மாவிற்குத்தான் எவ்வளவு சொன்னாலும் அடங்கவேயில்லை, சொல்லி சொல்லி காட்டிக் கொண்டிருந்தாள். அக்காவை அடக்கி வைக்கும் வழிதெரிந்த அம்மா இதைச் சொன்னவுடன் அக்கா மெதுவாக வேறுபக்கம் பேச்சைத் திருப்பியிருந்தாள்.

கல்யாண நாள் நெருங்க நெருங்க கொஞ்சம் படபடப்பாய் இருந்தது, மிகவும் ஆவலாய்க் காத்திருந்தேன் முதலிரவுக்கு, வயதிற்கு வந்ததில் இருந்தே எல்லாருக்கும் வருவதைப்போன்ற கனவுகளும் ஆசைகளும் முண்டியடிக்க பல இரவுகள் முதலிரவு இப்படியிருக்க வேண்டும் அப்படியிருக்க வேண்டும் என்ற ஆவலும் சேர்ந்துகொண்டே வந்தது, இதில் வயது அதிகம் ஆக ஆக வேறு பிரச்சனைகள் வேறு, சொப்பன ஸ்கலிதம், நரம்பத்தளர்ச்சி, மூட்டுவலி, ஒற்றைத்தலைவலி, செயல்பாட்டில் ஊக்கமின்மை, நடுமுதுகில் வலி, கண் எரிச்சல் போன்றவற்றிற்கு நிவாரணம் தரும் விளம்பரங்களைப் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு மாதிரியான பயம் மனதை அடிக்கும் காலங்களைத் தாண்டி வந்துவிட்டாலும் கூட மனதின் ஓரத்தில் இருக்கும் பயம் எங்கே மையத்திற்கு வந்துவிடுமோ என்ற பயம் இருந்தது,

அலுவலக நண்பர்கள் வேறு என்னடா இது ஒருமணிநேரம் நின்னு டென்னிஸ் விளையாட முடியவில்லை, ரொம்பக் கஷ்டம் என்று ஏத்திவிட சம்பளத்தில் பாதி டாலர், பாதாம் பிஸ்தாவில் கழிந்து கொண்டிருந்தது, அறிவியல் பூர்வமாய் இதைப்பற்றி நிறையப்படித்திருந்தாலும், படித்துக்கொண்டிருந்தாலும் அது நம்பிக்கையை வளர்க்காமல் சங்கடத்திலேயே ஆழ்த்திக்கொண்டிருந்தது.

ப்ரண்ட் ஒருத்தன் ஒழுங்கா குளிக்காமப்பாரு உடம்பு முழுக்க அழுக்கேறிப்போயிருக்கு இப்படியிருந்த வர்ற பொண்டாட்டி பயந்திடமாட்டா, நான் கேரளாவில் இருக்கிற ஒரு ஆஸ்ரமத்தோட அட்ரஸ் சொல்றேன், அங்கப்போய் ஒரு மாசம் தங்கினேன்னு வைச்சிக்கோ இந்த தேஜஸ் தேஜஸ்னு சொல்லுவாங்களே அந்த மாதிரியான தேஜஸ் வந்திரும் முகத்தில் உடம்பை அப்படி பளபளன்னு ஆக்கிருவாங்க, அப்புறம் ம்ம்ம்... ம்ம்ம்..., என்று ஏற்றிவிட, ஒரு வாரம் கேரள ஆஸ்ரமத்தில் தங்கியிருந்ததன் பயனாய் என் கால்களைப் பார்த்தால் அவை என்னுடைய கால்களா என்று சந்தேகம் வருமளவிற்கு மாறியிருந்தது.

ஒரு வழியாக அப்படி இப்படியென்று கல்யாணம் முடிந்திருந்தது, ஒரே வகையறாதான்னாலும் சில பல விஷயங்களில் வித்தியாசம் வந்தது, மாலையை குறுக்காகத்தான் போடவேண்டும் என்று எங்கள் வீட்டில் ஒற்றைக்காலில் நிற்க அவர்களும் மறுக்க முடியாமல் மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் கழுத்தில் மாலை குறுக்காக அதுவும் மல்லிகையால் ஆன மாலைகள் போடப்பட்டன, பின்னால் விளக்கு பிடித்திருந்த அக்காவிற்கு ஐந்நூறு ரூபாய் பணம் தான் வைக்க வேண்டுமென்று அங்கே அவள் வம்பிழுக்க, பின்னர் மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளைத் தோழனின் இலைக்கு கீழும் பணம் வைக்காமல் இருப்பதை பார்த்து அங்கேயும் ஒரு பிரச்சனை. அதுமட்டுமில்லாமல் மேடையில் உட்கார்ந்துகொண்டு நான் பூனத்திடம் பேச்சுக் கொடுக்கத்தொடங்க, பின்னாலிருந்த அக்கா இதையெல்லாம் வேற எங்கேயாவது வைச்சிக்கோ நம்ம வீட்டுப் புள்ளைங்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கு என்று பாரதம் பாட அதுவும் அங்கேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்படியாக ஏகப்பட்ட சிறுசிறு பிரச்சனைகளுக்கு இடையில் நிறைவேறியிருந்த கல்யாணத்தில் ஒருவாறு அனைவருக்கும் சந்தோஷமே,

கடைசியில் பெண் வீட்டுக்காரர்கள் அழுதபடியே, பெண்ணு குழந்தை மாதிரி விவரமெல்லாம் ஒன்னும் தெரியாது, பார்த்துக்கோங்கன்னு சொல்ல, பூனம் அழ அப்படியே அவள் அம்மா அழ என்று ஒரே அழுகை. எனக்கு எங்கக்காவின் கல்யாணம் நினைவில் வந்தது, அதில் இந்த மாதிரியான அழுகையெல்லாம் இல்லை, சாதாரணமாகவே அக்கா ரொம்பவும் தைரியமானவள் அதுவும் இல்லாமல் சொந்த மாமனையே கல்யாணம் கட்டிக்கொண்டிருந்ததால் அவ்வளவு அழுகையில்லை. ஆனால் இவர்கள் கொஞ்சம் தூரத்துச் சொந்தகாரர்கள் என்பதால் கொஞ்சம் அழுகை.

முதலிரவு அறையில் கொண்டுவந்து பூனத்தை விட்ட அக்கா, “டேய் நாளைக்கு காலையில அவக்கிட்ட கேட்பேன், அவளை மிரட்டின உருட்டினன்னு ஏதாவது சொன்னா அவ்வளவுதான் பார்த்துக்கோ.” சொல்லி காதைக் கிள்ளிவிட்டுச் சென்றாள். சொல்லப்போனால், நிச்சயத்திற்குப் பிறகு பூனத்தை இப்பொழுது தான் கொஞ்சம் ஆற அமரப் பார்க்கிறேன், அதற்கு முன் அப்படிப் பார்ப்பதற்கு கொஞ்சம் பயம்தான், எங்கே அக்கா ரொம்ப வழிகிறேன்னு சொல்லிடுவாளோன்னு. அழகாய்த்தான் இருந்தாள் அவள், தேவையான உயரம், வரையப்பட்டதைப் போன்ற கண்கள், அளவான உதடுகள், கண்களை உறுத்தாத மார், எனக்கு மிகவும் பிடித்தமான நீண்ட கூந்தல் இப்படி. நான் என்ன பேசுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க. பூனம்,

“என்னங்க நான் உங்கக்கிட்ட ஒரு விஷயம் பேசணும்...”

“சொல்லு பூனம்...” நான் சொல்ல,

“இல்லை இந்த விஷயத்தை கல்யாணத்துக்கு முந்தியே உங்கக்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். ஆனால் அம்மா அப்பா தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்னாதால சொல்லலை, இதை மறைச்சி உங்கக்கூட வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை.”

அவள் என்னவோ பில்டப் கொடுக்கத் தொடங்க, எனக்கு அந்த அறையே சுற்றுவதைப் போல் தோன்றியது. நான் எதுவும் சொல்ல நினைத்தாலும் சொல்லக்கூடிய நிலையில் இல்லாததால் அவளே தொடர்ந்தாள்.

“நான் காலேஜ் படிச்சப்ப கூடப்படிச்ச ஒரு பையனைக் காதலிச்சேன், அவனும் நானும் காதலிச்சது அந்தக் காலேஜில் இருக்கிற எல்லாருக்குமே தெரியும். எங்க வீட்டில் காதல் கல்யாணத்தை ஒத்துக்குவாங்கன்னு தான் நான் நினைச்சேன். அவங்க சம்மதத்தைக் கேட்டதும் அவங்க ஒத்துக்காதது எனக்கு ஆச்சர்யமா இருந்தது, அந்தப் பையனைப் பொறுத்த வரையில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. சொல்லப்போனால் நம்ம ஜாதி வேற, ஆனாலும் ஏனோ எங்க வீட்டில் ஒத்துக்கலை.

எனக்கும் அம்மா அப்பா இல்லாத ஒரு கல்யாணத்தை நினைத்துக்கூட பார்க்கமுடியலை. எனக்கு அப்பா வேணும் அம்மா வேணும் அண்ணா வேணும், இவங்களையெல்லாம் விட்டுட்டு நடக்கிற ஒரு கல்யாணத்தை என்னால் நிச்சயமாய் நினைத்துக்கூட பார்க்கமுடியலை,

அதுவும் அம்மாவும் அப்பாவும் தற்கொலை பண்ணிப்போம்னு சொன்னதும் என்னால ஒன்னுமே சொல்ல முடியலை, என்னை ரொம்பச் செல்லமா வளர்த்தாங்க அவங்க அப்படி சொன்னதையே என்னால தாங்க முடியலை...” சொன்னவள் அழத்தொடங்கினாள், எனக்கென்னவோ தலைக்கு மேலிருந்த சுவர் கீழிறங்கி மேலே விழுந்ததைப் போலிருந்தது.

“எல்லாரும் என்னை இதைப்பத்தி உங்கக்கிட்ட பேச வேண்டாமுன்னு தான் சொன்னாங்க, ஆனால் என்னை கடைசி வரைக்கும் வைச்சிக் காப்பாத்துவேன்னு நம்பிக்கை கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்கக்கிட்ட பொய் சொல்ல மனசுவரலை.”

சொல்லிவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தவளுக்கு நான் பேயறைந்ததைப் போல் விழித்தது பயமாகக்கூட இருந்திருக்கும்.

“..., நான் அவன் கூட சேர்ந்து பைக்கில் எல்லாம் போயிருக்கேன், முத்தமெல்லாம் கூட கொடுத்து வாங்கியிருக்கேன், ஆனால் தப்பு பண்ணதில்லை...” சொல்லிவிட்டு முடிக்காமல் தொடர்ந்து அழுதாள் பூனம். சுமூகமான ஒரு முதலிரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த என்னை இடிபோல் தாக்கிய அவள் பேச்சை சுதாகரிக்கவே எனக்கு நேரம் ஆனது, இந்நிலையில் என்னைத் தேற்றவே இரண்டு ஆட்கள் வேண்டும் இதில் அவளைத் தேற்றும் அளவிற்கு மனம் ஒத்துழைக்காததால் வெறுமனே அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“வீட்டில் சம்மதம் சொல்லலைன்னதுமே எனக்கு அந்த காதல் மீதான விருப்பு குறைஞ்சிட்டது, ஒருவிஷயம் இதெல்லாம் நடந்து ஒரு வருஷத்துக்கு மேலயிருக்கும் அந்தப் பையன்கிட்ட சொன்னதும் கொஞ்சம் முரண்டுபிடித்தவன் பிறகு அம்மா அப்பாவோட சாவில் இருந்து தொடங்கிற ஒரு கல்யாணம் நமக்கு வேண்டாம்னு அவனோட அப்பா அம்மா சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அமேரிக்கா போய் செட்டில் ஆய்ட்டான்.”

கொஞ்ச நேரம் பேசாமலிருந்தவள் கடைசியாக,

“நான் உங்களை விருப்பப்பட்டுத்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன், உங்கக்கூட காலம் பூரா நல்ல மனைவியா வாழணும்னுதான் விரும்புறேன். அதனால் தான் எல்லாரும் வேண்டாம்னு சொல்லியும் உங்கக்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்றேன். இனிமேல் உங்கவிருப்பம்.”

சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள், என் விருப்பமாம் என் விருப்பம் எதைச் சொல்கிறாள் என்று தெரியவில்லை, அவளுடன் சந்தோஷமாய் வாழ்வதையும் டிவோர்ஸ் செய்வதைப் பற்றியும் தேர்ந்தெடுப்பதைச் சொல்கிறாளா புரியவில்லை, முதலிரவின் போது டிவோர்ஸ் பற்றி நினைத்துப்பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

இப்பொழுது அவளைப் பார்க்கும் பொழுது அந்த உதடுகளும் மார்புகளும் இன்னபிறவும் இன்னொருவனால் உபயோகப்படுத்தப்பட்டவை, எச்சில் பண்டம் என்ற உணர்வு தோன்றுவதை கட்டுப்படுத்த நினைத்தும் முடியாமல், நண்பர்களுக்கு வாங்கி வந்த சிகரெட் பாக்கெட்டை நோக்கி நடந்தேன். நானா இப்படியெல்லாம் யோசிப்பது என நினைத்தால் கொஞ்சம் சங்கடமாய் இருந்தாலும், அதைப் போன்ற உணர்வுகள் எழுவதை தடுக்க முடியவில்லை.

எல்லாவிதமான வாய்ப்புக்களும் இருந்தும், எந்த தப்பான விஷயத்தையும் செய்யாமல் எல்லாவற்றையும் வருங்கால மனைவிக்காக சேர்த்து வைத்திருந்த எனக்கு அவள் சொன்ன விஷயங்கள் கோபத்தையே அதிகப்படுத்தியிருந்தன. இதற்கு என்ன செய்யலாம், அவளிடம் என்ன பதில் சொல்லவது, என நினைக்க ஒன்றுமே புரியவில்லை. இப்பொழுது கதவை திறந்து கொண்டு வெளியில் போனால் பூனத்தின் அப்பா அம்மாவிற்கு நிச்சயமாய்ச் சந்தேகம் வரும். என நினைத்தவனாய் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் சிகரெட் பிடித்தது பிறகு இப்பொழுதுதான் பிடிக்கிறேன். அதுவும் செய்து கொண்ட கல்யாணத்தால் பிடிக்கிறேன் என நினைக்கும் பொழுது மீண்டும் கோபம் தான் வந்தது.

ஒரு பாக்கெட் காலியாகியிருக்கும் என நினைக்கிறேன், ஒன்றும் பிடிபடாமல் எனக்காக அங்கே படுக்கையில் காத்திருக்கும் பூனத்திற்கு பதிலொன்றும் சொல்லாமல் போய் படுத்துக்கொண்டேன், கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவளாய் போய் பாத்ரூமில் உடை மாற்றிக் கொண்டு வந்து படுத்துக்கொண்டாள், இந்தக் கட்டிலில் படுத்துக் கொண்டு எத்தனை நாள் முதலிரவைப் பற்றி கனாக் கண்டிருப்பேன் அத்தனையும் பாழாய்ப்போனதை நினைத்துப்பார்க்க வேகம் வேகமாய் வந்தது. எதாயிருந்தாலும் அம்மாவிடம் கேட்டு ஒரு முடிவிற்கு வரலாம் என நினைத்தவன் எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கியிருந்தேன். கல்யாணத்தன்று காலை ஐந்தரை மணிக்கு எழுந்தது ஒரே அசதி, காலையில் பூனம் எழுப்ப எழுந்தவன் அவளுடைய “குட் மார்னிங்” க்கு கூட பதில் சொல்லாமல் வேகமாய் குளிக்கக் கிளம்பினேன்.

குளிக்கும் பொழுது எல்லாம் கனவாய்த் தோன்றினாலும், குட்மார்னிங் சொன்ன உடலும் உயிரும் நினைவென்றுச் சொல்ல, என்ன செய்வதென்று யோசித்தவனுக்கு ஒன்றுமே தோன்றாவில்லை, குளித்தவுடன் அம்மாவிடமும் சொல்ல மனம் வராமல் அப்படியே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளியில் கிளம்பிச் சென்றேன்.

திரும்பி வந்ததும் வராததுமாய். அக்கா,

“என்னடா மாப்ள அவ்வளவு சீக்கிரமாய் எங்க கிளம்பிட்ட, நாங்கல்லாம் ஓட்டுவோம்னு பயமா?” என்ற சொல்ல நான் என் முகம் காட்டவிருக்கும் உணர்ச்சிகளை மறைப்பதே பெரும் காரியமாய் இருந்தது, என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் வந்த அம்மா,

“தம்பி என்ன பிரச்சனையென்றாலும் பேசித்தீர்த்துக் கொள்ளலாம், பூனத்தோட அம்மா அப்பாயெல்லாம் இருக்காங்க காலையில நீ வேகமா வெளியில் போனதால ரொம்ப சோகமா இருக்காங்க. அவங்க போகட்டும் பார்த்துக்கலாம்.” ஒரு வழியாக அன்றைக்கு சாயங்காலம் கொஞ்சம் அழுகையுடன் அவங்க வீட்டில் எல்லோரும் சென்றதும்,

“பூனம் எல்லாத்தையும் என்கிட்ட சொன்னா, தம்பி பொறுத்ததும் பொறுத்துட்ட இன்னும் ஒரு நாளு, உங்கக்கா இருக்கா இங்க. அவ போகட்டும் நாம பேசிக்கலாம். இன்னிக்கு ஒரு பிரச்சனையும் கிளப்பாம போய்ப் படுத்துக்க.” சொன்ன அம்மாவைப் பார்த்தால் ஆச்சர்யமாய் இருந்தது, அதைவிட பூனத்தை நினைத்தால் இன்னும் ஆச்சர்யமாய் இருந்தது எந்த நம்பிக்கையில் இவள் இந்த விஷயத்தை அம்மாவிடம் சொன்னாள் என்று தெரியவில்லை.

ஆனால் பிரச்சனை வேறுவிதமாய் ஆனது, அதுவரை சும்மாயிருந்த அப்பா, எங்கள் இரண்டுபேரையும் ஹனிமூனுக்கு அனுப்பியே தீர்வது என்று ஒற்றைக்காலில் நின்றார், அம்மாவும் அப்பாவுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார் அதனால் போய்ட்டு வந்திரு என்று சொல்ல, என் மனநிலையை யாரும் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்களே என்று இருந்தது எனக்கு. இந்த நிலையில் நான் அக்காவை துணைக்கழைக்க, அவள் அத்தானை அழைக்க, பூனம் அவள் தங்கையை அழைக்க என மொத்தமாய் ஐந்து பெரிசுகளும் என் அக்கா பையனும் சேர்ந்து ஹனிமூனுக்கு கிளம்பினோம். எவ்வளவு சந்தோஷமாய் இருக்க வேண்டிய இந்த பயணத்தை சோகமாய் அமைந்ததில் நான் முகத்தை தூக்கிக் கொண்டிருக்க. அம்மா,

“டேய் இங்கப்பாரு, எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் உன் மாமனுக்கு தெரிஞ்சிடக்கூடாது.” இதுவேறு,

மணாலி வந்திறங்கியதும், எனக்கும் பூனத்திற்கும் ஒரு அறை, அக்கா மாமாவிற்கு ஒரு அறையும், பூனத்தின் தங்கைக்கும் அக்கா பையனுக்கும் சேர்த்து ஒரு சிங்கிள் அறையும் புக் செய்யப்பட்டது, எங்கள் அறையில் பெரும்பாலும் மௌனமே நிலவும் அவளாய் பெரும்பாலும் பேசமாட்டாள், பேசினாலும் நான் பதில் தராமல் இருந்ததால் பெரும்பாலும் தன்னைப் பார்த்துக்கொண்டு பிரச்சனை வராமல் இருந்து வந்தாள். அங்கிருந்த குளிருக்கும், அவளுக்கு வெகுவாய் பொறுந்தியிருந்த கருப்புக்கலர் ஸ்வெட்டருக்கும் சேர்த்து ஒருமாதிரியாக இருந்தாலும், அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் எச்சல் என்ற எண்ணம் மட்டும் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தது. அன்றிரவைக் கடத்துவது பெரும்பாடாகவே இருந்தது.

கொஞ்சம் அதிகமாய்த் தூங்கியிருந்ததால், அடுத்தநாள் காலை எழுந்ததுமே எல்லோரும் எனக்கு முன்னரே எழுந்து தயாராகியிருந்தது தெரிந்தது. பக்கத்தில் சோலாங் வேலிக்கு எல்லோரும் புறப்படத் தயாராகியிருந்தனர், நான் மட்டும் குளிக்காமல் கிளம்பினேன் அது ஒன்று தான் குறைச்சல் என்று அவள் காதுக்கு மட்டும் படும்படியாய் முணுமுணுத்துவிட்டு,

ஹோட்டலில் இருந்த கிளம்பியதில் இருந்தே கவனித்தேன், பூனம் ஒரு மாதிரியாக நடந்து வந்தாள், நானும் ஏதோ அவள் கால்களில் பட்டுவிட்டது என நினைத்திருந்தேன் ஆனால் புரியவில்லை ஆனால் அவள் நடையில் வித்தியாசம் தெரிந்தது, அதற்கான மர்மம் அன்றிரவுதான் விளங்கியது. நான் சாதாரணமாய்க் கேட்க அவள், “இல்லை அக்காவிற்கு நம்ம இரண்டு பேருக்கு இடையிலும் ஏதோ பிரச்சனைன்னு தெரிஞ்சிருச்சு. கேட்டாங்க நான் புலம்பிட்டேன், அவங்களும் இதை மாதிரி எதாவது நடந்திருக்கும்னு நினைச்சதாகவும், உங்க மாமா அதை கண்டுபிடிக்கிற மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்டார்னு அக்காதான் அப்படி நடக்கச்சொன்னாங்க.” அக்கா ஏன் அப்படிச் சொன்னாள் என்று புரிந்ததும் முதலில் அவளை உதைக்கவேண்டும் என்று நினைத்தேன்.

அன்றிரவு என்னைப் பார்க்க வந்த அக்கா, “யேய், அம்மா உன்னை கால் பண்ணச் சொல்லிச்சு.” என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

நான் இரவு ஒன்பது மணிக்கு மேல் தொலைபேச, அந்த முனையில் இருந்து அம்மா,

"இதை எப்படி உன்கிட்ட நேர்ல பேசுறதன்னு தெரியலை அதான் போன்ல சொல்றேன். அந்த பொண்ணு அவ்வளவு சொல்லுதுடா தம்பி, இதே அவள் சொல்லலைன்னா நமக்கு தெரிஞ்சிருக்குமா, நல்லவளா இருக்கிறதால சொல்லியிருக்கா,

அப்புறம் இன்னொரு விஷயம், இப்படி நடக்குறது கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் இது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாண்டா, அந்த வயசில நடக்கலைன்னா தான் தப்பு இதே நீ காதலிச்சிறுந்தாலோ இல்லை உங்கக்கா காதலிச்சிறுந்தாலோ நாங்க சரின்னு தான் சொல்லியிருப்போம். ஏனோ நீங்க இரண்டு பேருமே அப்படி பண்ணலை. அதனால காதலிச்சவங்க பண்ணதெல்லாம் தப்புன்னு கிடையாது. கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன்.

நானும் என்னோட காலேஜ் பருவத்தில் ஒருத்ததை காதலிச்சேன், உங்கப்பா மாதிரியே அவரும் எனக்கு அத்தை மகன் உறவுதான் வரும். நாங்க இரண்டு பேரும் விரும்புனது எல்லாருக்குமே தெரியும். ஒரு விபத்தில் அந்தப் பையன் இறந்திட்டான். எல்லாம் தெரிஞ்சும் உங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். இது இன்னிக்கு வரைக்கும் உனக்குத் தெரியுமா நான் இதை உங்கக்கிட்டேர்ந்தெல்லாம் மறைச்சிட்டேன் ஆனா அந்தப் பொண்ணு வெளிப்படையா சொல்லியிருக்கா அதனால தப்பில்லை, இன்னிக்கு வரைக்கும் உங்கப்பாவிற்கு ஏற்றவளாய்த்தான் வாழ்ந்திட்டு வந்திருக்கேன். நம்ம வீட்டில் இது சம்மந்தமா ஒரு பிரச்சனை இதுவரைக்கும் வந்திருக்கா.

இதுக்கு அப்புறமும் நீ அந்தப் பொண்ணுக்கூட சேர்ந்து வாழமாட்டேன்னு சொன்னா, எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை."

அம்மா போனை வைத்துவிட, அந்தப் பொண்ணை கற்பனை செய்ததைப்போல் அம்மாவை கற்பனை செய்யமுடியவில்லை. அந்தப்பெண்ணை அப்படிக் கற்பனை செய்தது கூட தவறென்ற எண்ணம் எழத்தொடங்கியது.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

In கதை காதல்

நீராக நீளும் காதல்


தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்.

திருக்குறள் - காமத்துப்பால், நாணுத்துறவுரைத்தல், 1135.

“நேத்து அவங்க நம்ம இரண்டு பேரையும் பாத்துட்டாங்க” 

ஸஸ்மிதா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வாசல் கதவின் அழைப்பு மணி தன் ரீங்காரத்தைத் தொடங்கியது. இளமாறனின் சோம்பலின் தீவிரம் தெரிந்தவள் என்பதால் சற்றும் யோசிக்காமல் போர்வையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு எழுந்து நின்றாள். இரவு படுக்கையில் விழுந்தபின் இப்பொழுதுதான் எழுந்திருக்கிறாள் என்பதால் நெட்டிமுறித்தவாறு அவள் சுற்றும் முற்றும் பார்த்ததில் இருந்து நேற்றிரவு கழற்றி வீசிய இரவு உடையைத்தான் அவள் தேடுகிறாள் என்று தெரிந்தது. அவர்களுக்கிடையில் உடையின் அவசியம் பெரும்பாலும் இருந்ததில்லை. கட்டிலின் கீழிருந்த ஆடையை கால் விரல்களின் சாமர்த்தியத்தால் பின்பக்கமாக எடுத்து ஒருமுறை உதறிவிட்டு, தலையின் மேல்வழியாக உள்நுழைத்துக் கொண்டவள், அதன் காரணமாக உள்ளே சென்றுவிட்ட தன்னுடைய கூந்தலை, புறங்கையை கழுத்திற்கும் கூந்தலுக்கும் இடையில் விட்டு இழுத்து வெளியில் விட்டுக் கொண்டு, அவனைத் திரும்பிப் பார்த்தாள்; ஒன்றும் பிரச்சனையில்லையே என்பதைப் போல். அவன் பதில் எதுவும் சொல்லாமல் தோள்களைக் குலுக்கிக்காட்ட, அதற்குள் இன்னொருமுறை தன்னுடைய வசீகரமான இசையை வழங்கத்தொடங்கிய அழைப்பு மணியின் சப்தம் தேய்ந்து அடங்குவதற்குள்.

“ம்ம்ம், மீ யெத் ஆஹே.” 

சொல்லிக்கொண்டே கதவைத்திறந்தாள். இளமாறனுக்கு இதுவும் ஒரு பிரச்சனை மராத்தி மட்டுமே தெரிந்த அந்த ஹோட்டல் சிப்பந்தியிடம் பேசுவதற்கு அவனுடைய உடைந்த இந்தி கூட உதவாது.

“நமஸ்தே ஸாப்.” இது அவனுக்கு, அவன் முகத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட புன்சிரிப்பை அலட்சியப்படுத்தியவனாய்க் காலியாய்க் கிடந்த பியர் பாட்டில்களையும் சிகரெட் ஆஸ்ரேவையும் எடுத்துக்கொண்டு, ஐந்து நிமிடத்தில் அவ்வளவாக குப்பைகள் இல்லாத அந்த அறையை சுத்தம் செய்வதான முயற்சியில் கீழே விழுந்துகிடந்த சில பட்ஸ்களைப் பொறுக்கிக்கொண்டு அவனைப் பார்த்து தலையைச் சொறிந்தான். அவன் ஸஸ்மிதாவைப் பார்க்க, அவள் நகர்ந்து வந்து தலைமாட்டில் இருந்து பர்ஸை எடுத்து ஒரு பத்து ரூபாய்த்தாளை சிப்பந்தியிடம் நீட்டினாள், அவன் சந்தோஷமாய் இன்னுமொறு தரம் “நமஸ்தே ஸாப்” சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.

ஸஸ்மிதா திறந்திருந்த வாசற்கதவை அடித்துச் சாத்திவிட்டு, கட்டில் போடப்பட்டிருந்த அந்த அறையின் மையப் பகுதியில் இருந்து விலகி, வலதுபக்கமாய் ஜன்னலின் பக்கம் நகர்ந்தாள். மெதுவாக கர்ட்டனை விலக்கியவள் ஜன்னல்கதவையும் திறக்க, அதுவரை செயற்கையான காற்றைச் சுவாசித்தவளின் முகத்தில் சிலீரென்று பட்ட, நேற்றிரவு மழையினால் இன்றும் ஈரப்பதத்துடன் இருந்த காற்று ஏகப்பட்ட உணர்ச்சிகளை மாறிமாறி வழங்கியது. வெளியில் மழை பெய்கிறதா என பார்க்கும் பாவத்தில் அவள் கைகளை வெளியில் நீட்டிக் கொண்டிருந்தாள். பின்னர் ஒரு பக்கமாய்த் திரும்பி என்னைப் பார்த்தவள்,

“தாஸ் மழை விட்டிருச்சி.”

ஜன்னலுக்கு வெளிப்பக்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்த சூரியனின் கதிரொளிகள், உள்ளாடை எதுவும் அணிந்திராத அவளின் உடலில் நேராய்ப் பட்டு இன்னொரு பரிமாணத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் கட்டிலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு பக்கம் இயற்கையாய் அவள் முகத்தின் வலது பக்கத்தில் விழுந்து கதிரொளியும் இந்தப் பக்கம் அறையில் விளக்குகள் எரியாததால் முகத்தின் இன்னொரு பக்கத்தில் படர்ந்த இருளும். அவளை அப்படியே நிற்கவைத்து அந்த இடத்திலேயே ஒரு ஓவியம் வரையவேண்டும் என்ற மனநிலையை உண்டாக்கியது. அதை உடைத்தே தீருவேன் என்பதைப் போல், கர்ட்டனை மட்டும் மீண்டும் இழுத்துவிட்டுடவள், கண்மூடி கண் திறப்பதற்குள் ஆடைகளற்றவளாய் மாறிவிட்டிருந்தாள். அவனுக்கென்னமோ இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் உடலைவிடவும் முன்பு பார்த்ததுதான் இச்சையை அதிகப்படுத்தியது.

ஒரு வார்த்தை அவளிடம் சொன்னால் போதும், இப்படி உன்னை அந்த இடத்தில் வைத்து அந்த பொஸிஷனில் வரைய யோசித்தான் என்று, மிகவும் சந்தோஷப்படுவாள். பாரம்பரிய குஜராத்தி நடனத்தை ஆடிக்காட்டினாலும் காட்டுவாள். ஒருமுறை அவள் தாண்டியா ஆடப் பார்த்திருக்கிறேன் அத்தனை லாவகமாக இடுப்பை வளைத்து அவள் ஆடும் அந்த ஆட்டத்தின் அழகில் மெய்மறந்திருக்கிறேன். அதில் மிக முக்கியமான விஷயம் அந்த நடனத்தின் பொழுது உடுத்தும் ஆடை தான். அவன் கேட்காமலேயே அது இல்லாமல் அவள் ஆடுவாள்தான் என்றாலும், அப்படி செய்வது அந்த நடனத்தைப் பாழ்படுத்துவதற்குச் சமானம் என்பதால் ஒரு முறை அவளை அந்தச் செய்கையிலிருந்து தடுத்திருக்கிறான். இல்லையென்றால் ஒரு நிமிடத்தில் விதவிதமான முகமாற்றங்களைக் காட்டி மனதை கொள்ளை கொள்ளும் உடல் அசைவுகளைச் செய்து, இப்படி நிற்கவா அப்படி நிற்கவா என்று கேட்டிருப்பாள். இதுவெல்லாம் இல்லையென்றாலும் நிச்சயமாய்,

“உங்களுக்கு என்னை வரையணும்னு தோணிச்சா? ஆச்சர்யம் தான், ப்ளிஸ் பளிஸ் வரைஞ்சுக் கொடுங்களேன்.” ஒன்றிரண்டு முறை கெஞ்சியிருப்பாள், அவள் முகத்தில் படரும் குழந்தைத் தனத்திற்காகவாவது அதைச் செய்துவிடலாம் என நினைத்தாலும் ஏதோ ஒன்று தடுத்துவிடும். அப்படி இரண்டு முறை கேட்டும் அவன் மறுத்துவிடும் நிலையில் அவள் அடையும் மனவேதனையை அனுபவித்தவன் என்பதால் என் மனதில் அந்த சில விநாடிகள் அனுபவித்த சந்தோஷத்தை அப்படியே மூடிமறைத்துவிட்டான்.

நகர்ந்து வந்து போர்வைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டவள், பக்கத்தில் இருந்த ஸிட்னி ஷெல்டனின் “மாஸ்டர் ஆப் த கேம்” நாவலை எடுத்து படிக்கத் தொடங்கினாள். இரவு அவள் தூங்கியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான், என்பதால் தூக்கம் வருவதற்காகத்தான் அந்த நாவலை எடுத்தாள் என்பது புரிந்தது. கடைசி ஆண்டு கல்லூரித் தேர்வுகள் நெருங்கி வரும் வேலையில் அவளை வரவேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தான். உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது வருகிறேன் சொல்லிவிட்டு வந்திருந்தாள்.

அவனுக்கு ஸஸ்மிதாவை மூன்று ஆண்டுகளாகத் தெரியும். முதன் முறை கோவாவில் புத்தாண்டு அன்று பார்த்த நினைவு அவன் மனதில் இன்னமும் பசுமையாக இருக்கிறது. அயோக்கியத்தனத்திற்கு பெயர் பெற்ற அந்த ஹோட்டலில் மழுங்கமழுங்க விழித்தவாறு இவள் நின்று கொண்டிருக்க. அவனும் தனக்கேற்றமாதிரியான பார்ட்டி கிடைக்காமல் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில் இவளையும் ஒரு கண்ணால் அளந்து கொண்டுதான் இருந்தான். அவளின் சாந்தமான முகத்திற்கு கொஞ்சமும் பொருந்தாமல், டைட் டிஷர்டும், அதைவிட இறுக்கமான ஜீன்ஸூம் போட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்த அவளைப் பார்த்த உடனே நினைத்தான். பதினெட்டு வயசுதான் இருக்கும் என்று. புத்தாண்டுக்கு முந்தய இரவு பதினொரு மணி ஆகிவிட்டிருந்த வேளையில், கையில் சிகரெட்டுடன் பாரில் பியர் அடித்துக்கொண்டிருந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்த இந்தப் பெண்ணைப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

அவளுக்கு அருகில் இவளைப் போலவே நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண், அவளுக்கு கிடைத்துவிட்ட ஜோடியுடன் கிளம்பும் முன்னர், இவளிடம் ஏதோ சொல்லிவிட்டுச் செல்ல, கேட்டுவிட்டு அவன்பக்கம் திரும்பிப் பார்த்த அவள் முகம் மிகவும் வாடிப்போயிருந்தது. கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவாள் போலிருந்தது. எல்லோரும் டான்ஸ் ப்ளோர் சென்றுவிட அங்கிருந்து ஹோட்டல் ஊழியர்கள் தவிர்த்து அவனும் ஒன்றிரண்டு வெளிநாட்டுக்காரர்களும்தான் மீதி. அந்த அறையின் பரவியிருந்த மங்கிய இருளும், அதிர்வை ஏற்படுத்தும் இசையும் அவனுக்கு எந்த அளவிற்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதோ அதே அளவிற்கு அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தது என பின்நாட்களில் அவள் சொல்லக் கேட்டிருக்கிறான். அரைமணிநேரத்தில் மற்ற எல்லோரும் கிளம்பிவிட மெதுவாக அவன் அருகில் வந்தவள். உடைந்த ஆங்கிலத்தில்,

“பிஃப்டீன் தௌசண்ட் சார்.” என்று தயங்கித்தயங்கி அவள் சொல்ல, முதலில் அவன் பயந்தது, இது இவளுக்கு முதல் முறையாய் இருந்துவிடப் போகிறது என்பதை நினைத்துத்தான். பின்னிரவில் இப்பொழுதைப் போல், போர்வையையே ஆடையாயிருந்த மற்றுமொரு தருணத்தில், சிறிது நேரத்திற்கு முன்னர் அவள் உடலில் இருந்த பதட்டம் அவன் நினைத்ததை உறுதிப்படுத்த, கேள்விக் கேட்ட அவனுக்கு பதிலாய் அவள் சொன்னது ஒரு சோகக்கதை. அவளுடைய தூரத்து சொந்தமான அக்காள் சொல்லியிருந்தது போல வன்புணர்ச்சி செய்து அவள் குதத்தை கிழித்துவிடாமல் ஆராதனை செய்து கொண்டிருந்த அவனிடம் அன்று அவள் சொல்லியிருந்திராவிட்டால் தான் ஆச்சர்யமே.

அவளுடைய தாயை குஜராத்திலிருந்து ஒருவன் காதலித்துக் கலியாணம் செய்து கொள்வதாய்ச் சொல்லி, மும்பைக்கு அழைத்து வந்திருக்கிறான். முதல் ஒருவருடம் பிரச்சனை எதுவும் செய்யாமலிருந்தவன். ஸஸ்மிதா பிறந்த இரண்டாவது மாதத்திலேயே அவள் அம்மாவை விபச்சாரம் செய்யுமாறு வற்புறுத்த அவள் அம்மா முடியவேமுடியாது எனச் சொல்லியும் தொடர்ந்து படுத்தியவனை ஒருநாள் இரவில் இடுப்பில் கத்தியால் குத்திவிட்டு, அவள் அம்மா புனேவிற்கு வந்துவிட்டதாகவும். பிச்சையெடுத்து, பத்துப்பாத்திரம் தேய்த்து, ஆரம்பத்தில் ஸஸ்மிதாவை வளர்த்ததாகவும் பின்னர் கையில் சேர்ந்த பணத்தில் ரோட்டில் தள்ளுவண்டி ஒன்றில் சாமான்களை வாங்கி விற்றும் வளர்த்திருக்கிறாள்.

படிக்காமல் இருந்ததால் தான் தன்னை ஒருவன் ஏமாற்றிவிட்டதால் ஸஸ்மிதாவின் படிப்பு எக்காரணம் கொண்டும் பாதிப்படையக் கூடாதென்பதில் அவளுடைய அம்மா கருத்தாக இருந்ததால் அவளும் கஷ்டப்பட்டு படித்து அம்மாவின் நம்பிக்கையை காப்பாற்றிவந்திருக்கிறாள். ஒருவாறு அவனுக்கு இது தெரிந்திருந்தது, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது புனேவின் மிகப் பிரபலமான ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர்ஸ் படிப்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள் ஸஸ்மிதா. பின்னர் ஒருவாறு சுமூகமாச் சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில், மீண்டும் புயலாய் ஸஸ்மிதாவின் தகப்பன் நுழைந்தததாகவும். கத்திக் குத்தில் இறந்துபோகாத அவன் பின்னர் தன் தாயைத் தேடிவந்து அவள் படிப்பிற்காக வைத்திருந்த பணத்தை மிரட்டிக் கொண்டுபோய் விட்டதாகவும் பின்னர் அவன் தொல்லை இரண்டாண்களுக்குத் தொடர்ந்து என்றும் ஒரு ரயில்விபத்தில் அவன் இறந்து போனதையும் கூறினாள். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்த பொழுதும் மேல்படிப்பு படிக்க பணமில்லாத நிலையில் அவளுடைய தூரத்துச் சொந்தக்காரியான ஒரு அக்கா, தான் அவளை படிக்க வைப்பதாகச் சொல்லி புனே சிட்டிக்கு அழைத்து வந்ததாகவும் முதல் வருடப்பணம் முழுவதையும் அவள் செலவிட்டதையும் பின்னர் தான் அந்த அக்கா பணம் சம்பாதிப்பதற்கான வழியாக இதை அறிமுகம் செய்துவைத்தாள் என்று கூற, அவன் அவளிடம் இதுதான் உன் முதல் அனுபவமா என்று கேட்டேன்.

அதற்கு அவள், இல்லை கல்லூரி முதல் ஆண்டு படித்த பொழுது இடையில் வேலைசெய்யலாம் என்று ஒரு சேட்டிடம் வேலை கேட்க, சேட் வீட்டிற்கு இவளை வரவழைத்து முடித்துவிட்டதாகவும். பின்னர் அவன் கொடுத்த பணக்கத்தையை அவன் முகத்திலேயே வீசிவிட்டு வந்ததையும் சொன்னாள். அப்ப இரண்டாவது அனுபவமா என்றதற்கு அதையும் மறுத்தவளாய், அவள் கல்லூரியில் படிக்கும் ஒரு பையனை அவள் காதலித்ததாகவும், ஒருநாள் அவன் வீட்டு கார்ஷெட்டில் உறவு கொண்டதைச் சொன்னவள், எதையோ நினைத்து சிரிக்கத் தொடங்கினாள், நான் என்ன விஷயம் என்று கேட்டதற்கு அதை ஒருமுறை என்று கணக்கு சொல்லமுடியாதென்றும் அந்தப்பையன் இன்னும் அந்த அளவிற்கு விஷயம் தெரியாதவன் என்றும் சொல்லிச் சிரித்தாள், இளமாறன் அந்தப் பையனைப் பார்த்திருக்கிறான் சில நாட்கள் நான் தீபிகாவுடன் ஐநாக்ஸ் தியேட்டருக்கு வரும் பொழுது ஸஸ்மிதாவுடன் அந்தப் பையனைப் பார்த்திருக்கிறேன். அவனும் ஒரு குஜராத்தி, அதற்குப் பிறகு அவன் அவளை மிகவும் நெக்குருகி காதலிப்பதாகவும் தன்னை மற்றொருமுறைத் தொடக்கூட முயற்சிசெய்யவில்லையென்றும் கூறினாள். தீபிகா பற்றிய நினைவு வந்ததால் மீண்டும் நிலைக்கு வந்தவனாய்.

“ஸஸ் தீபியையா பார்த்ததா சொன்ன?” அவள் பக்கமாய்த் திரும்பி ஒருக்கழித்துப் படுத்து அவள் வயிற்றில் கைவைத்தவனாய்க் கேட்க, அதற்குரிய பதிலைச் சொல்லாமல்,

“நீங்க அவங்களைக் காதலிக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

“நீ நினைக்கிறியா யாரையும் என்னால் காதலிக்க முடியும்னு.”

“ஆரம்பத்தில் எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்ததுதான், பெண்களின் மீதான உணர்வுகள் செத்துப் போய்விட்ட காதலின்றி பெண்ணின் உடலை அணுகும் ஒருவனாய்த்தான் உங்களைப் பார்த்தேன்.

ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உங்களைப் பற்றிய என் எல்லாவிதமான எண்ணங்களையும் மாற்றிக்கொண்டேன்.” சொல்லிவிட்டு அவளும் அவன் பக்கமாய்த் திரும்பி ஒருக்கழித்துப் படுத்தாள்.

“நீங்க தீபிகாவைக் காதலிக்கிறீங்க அப்படின்னா அவங்க ரொம்பக் கொடுத்து வைச்சவங்க.”

என்னவோ அன்று இந்த வார்த்தைக்களுக்காகத்தான் காத்துக் கிடந்தவனைப் போல சட்டென்று எழுந்து வெற்றுடம்புடன் குளிக்கக் கிளம்ப, பின்னாலேயே ஸஸ்மிதாவும் வர யத்தனித்தாள். மறுத்தவனாய்,

“ஸஸ் நான் தமிழ்நாடு போறேன்.” அவள் முகத்தைப் பார்த்துச் சொல்ல,

“என்னாச்சு?” முன்பெல்லாம் இதைப் போன்ற தகவல்களை நான் சொல்வதும் இல்லை அவள் இப்பொழுது கேட்டது போல் கேள்விகளைக் கேட்பதுமில்லை, மூன்று மாதத்திற்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவம் எங்களை எங்கள் உறவை அசைத்துப் பார்த்ததென்னவோ உண்மை.

“அம்மா சூஸைட் அட்டம்ட் பண்ணிக்கிட்டாங்களாம். அப்பா உடனே வரச்சொல்லி போன் பண்ணியிருந்தார்.” அவன் சொல்ல அம்மாவின் தற்கொலை முயற்சிக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்காமல் அவளுடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்ததைப் பற்றி நினைத்திருப்பாள்.

குளித்துவிட்டு வந்தவன்,

“ஸஸ் வர்றதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆனாலும் ஆகும். வேணுங்கிற பணத்தை எடுத்துக்க. காரை விட்டுட்டு போறேன் பார்த்துக்கோ.” சொல்லிவிட்டு புனே பெங்களூர் விமானத்தைப் பிடிக்கப் பறந்தான்.

விமானப்பயணம் அவனுக்கு அவ்வளவாக பிடித்ததில்லை, ஆனாலும் புனேவிலிருந்து விமானத்தில் பெங்களூர்க்குப் பறந்து வந்ததற்கான காரணங்கள் இரண்டு, ஒன்று ஏற்கனவே தகவல் சொல்லிய பிறகும் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை என்பதால் தொலைபேசிக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு ஹோட்டலில் காத்திருக்கும் ஸஸ்மிதாவைப் பார்க்கச் சென்றதால் நேர்ந்த நேரத்தட்டுப்பாடு, மற்றது முந்தையதை விட அவனுக்கு விருப்பமானது, பெங்களூரில் இருந்து அவன் ஊருக்கு செய்யப் போகும் பஸ் பயணம். அந்தப் பயணத்தை நினைத்தவாரே முகத்தை தூக்கிவைத்துக் கொண்டிருக்க, இடையில் வந்து சாக்லேட் கொடுத்த விமானப் பணிப்பெண்ணை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

விமானநிலையத்தில் இருந்து கெம்பகௌடா பஸ்நிலையத்திற்கு வந்தவன், அங்கே நின்றிருந்த பெங்களூர் டு ஓசூர் பேருந்தில் உட்கார்ந்து கொண்டான். ஆரம்பக்காலங்களில் இந்தப் பயணத்தைப் பற்றி அவன் அம்மாவிடம் விவரிக்க, என்னவோ பைத்தியம் பிடித்துவிட்டதைப் போல ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தது நினைவில் வந்தது. அம்மாவிற்கு புரிவதில்லை, கேபிஎன் போன்ற பேருந்துகளில் பயணம் செய்வதில் அவனுக்கு இருக்கும் ஒவ்வாமை. அத்துணுண்டு பேருந்தில் தனித்தனித் துருவங்களாய் மக்கள், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சொந்தக்காரனிடம் கூட பேசுவதற்குக் காசு கேட்டும் ஆட்களுடன் பயணம் செய்வதில் அவனுக்கு சுத்தமாய் ஆர்வம் இல்லை.

இதே தற்சமயம் உட்கார்ந்திருக்கும் பேருந்தில் நடக்கும் களேபரங்களால், அப்படியென்பதற்குள் ஓசூர் வந்துவிட்டதைப் போன்று ஒரு உணர்வு ஏற்படும். எத்தனை விதமான மக்கள், எத்தனை விதமான பேச்சுவழக்கங்கள். வாயைப் பிளந்தபடி உட்கார்ந்திருப்பான். அவனைப் பார்த்தால் அந்த மனிதர்களுக்கெல்லாம் ஏன் தான் என்னிடம் பேசவேண்டும் என்று தோன்றுமோ தெரியவில்லை. எல்லாப் பயணங்களிலுமே ஏதாவது ஒரு கதை எனக்குச் சொல்லப்படுகிறது. சின்னவயதில் அவன் பாச்சம்மா - அப்பாவின் அம்மா - சொன்ன கதைகளைப் போல், மகாபாரதக் கதைகளை அவன் அவரிடம் இருந்துதான் தெரிந்து கொண்டான், மனப்பாடமாக திருஷ்ட்ராஷ்டிரனின் நூறு பையன் பெயர்களைச் அநாயாசமாகச் சொல்லுவார் அவர். கதை கேட்கும் ஆர்வம் அப்படி ஏற்பட்டதுதான்.

ஒருமுறை பக்கத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வயதான மனிதரின் உடலில் வரும் நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்ப, அதைப் புரிந்து கொண்டவர் போல் தன் சரித்திரத்தையே சொல்லி முடித்திருந்தார் அந்த பழங்கால சினிமா இயக்குநர், பிரபலமான சினிமா இயக்குநரிடம் உதவியாளராக இருந்தது, பின்னர் சினிமாவில் இயங்கும் அரசியல்களையெல்லாம் தாண்டித்தான் எடுத்த முதல் படம் நூறுநாட்கள் ஓட, அடுத்தடுத்து ஐந்து படங்களுக்கான பூஜைகளைப் போட்டது, தன் படத்தில் நடிப்பதற்காக தன் வீட்டில் வந்து போட்டிப்போட்டுக்கொண்டு படுத்துறங்கிய நடிகைகள் என. புதுக்கோட்டை வந்து சேர்வதற்குள் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பத்தாண்டுகளை அவர் அவனுக்குச் சொல்லியிருந்தார்.

----------------------------------------------------------------------------

நாமக்கல் டீக்கடையில் என் கையைப் பிடித்தவாறு தெரியுமா தம்பி இந்தக் கையை இதேபோல் பிடித்துக் கெஞ்சி நடித்த பல நடிகை, நடிகர்கள் இன்று தமிழ்சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். நான் போய் நின்றால் நிச்சயம் செய்வார்கள்தான், ஈகோ தம்பி ஈகோ, அந்தக் காலத்திலேயே ராஜா மாதிரி ப்ளெசர் காரில் போவேன் நான். இப்ப அவங்க காலில் போய் விழவிருப்பமில்லை. என்று சொல்லிக்கொண்டே போன அந்த நபரின் முகம் மறந்துபோய்விட்டாலும், அந்த டீக்கடையை பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் நாற்றத்தால் நான் முகம்திருப்பியதுதான் நினைவில் வரும்.

ஈகோவைப் பற்றி ஆரம்பக்காலத்தில் சினிமாக்கள் பார்த்தும் கதைகளைப் படித்தும் காதலர்களுக்கு இடையில் பெரும்பாலும் வருவது என்பதாக உணர்ந்திருந்தேன். ஆனால் அது அப்படியில்லை என்பதை வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. ஸஸ்மிதா நினைத்திருக்கலாம் அம்மாவின் தற்கொலை முயற்சிக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறேன் என்று. ஆனால் அது அப்படியில்லை என்று எனக்குத் தெரிந்துதான் இருக்கிறது. தற்கொலை, கொலை என்பதெல்லாம் சாதாரணமாகப் போய்விட்ட வீட்டில் பிறந்தவன் நான். இது அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையில் நடக்கும் ஈகோ போராட்டம். இது ஒரு பக்கப்போர். என் அப்பாவின் பக்கத்தில் இருந்து இதற்கு எதிர்வினை நிகழ்ந்ததேயில்லை, ஒரே ஒரு முறையைத் தவிர்த்து.

எங்கப்பாவிற்கு எங்கம்மா இரண்டாவது மனைவி, முதல் மனைவியை அப்பா சுட்டுவிட்டார் என்றும் இல்லை பெரியம்மா தற்கொலை செய்து கொண்டார் என்றும் வதந்திகள் எங்கள் ஊரில் உண்டு. ஒட்டுமொத்தமாக பண்ணையங்களை தமிழக அரசு ஒழித்துக் கட்டிய பொழுது பண்ணையார்களிடம் இருந்த துப்பாக்கிகளையும் பிடுங்கிவிட்டதாக அப்பா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை பாச்சம்மா தான் எங்கள் வீட்டைச் சுற்றியும் குழிபறித்து பாலிதீன் உறைபோட்டு நிறைய துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் முதலில் இதெல்லாம் மகாபாரதக் கதைபோல பாட்டியின் கற்பனைக் கதைகளெனத்தான் நினைத்திருந்தேன். பின்னர் எனக்கு வயது வந்துவிட்ட பிறகு, அந்தத் துப்பாக்கிகள் துருப்பிடித்துவிடாமல் இருக்க ஆறுமாதத்திற்கு ஒருமுறை எண்ணெய்ப் போட்டு சுத்தமாய்த் துடைத்து பின்னர் திரும்பவும் மண்ணுக்குள் மறைத்து வைக்கும் பழக்கத்தை அப்பா கற்றுக் கொடுத்த பொழுதுதான் உண்மையென புரிந்துகொண்டேன்.

நானும் அப்பாவுமாய் மொத்த துப்பாக்கிகளையும் எண்ணெய் போட்டு துடைத்து வைத்த ஒரு இரவில், ஒரு குறிப்பிட்ட துப்பாக்கியைப் பார்த்து அப்பா அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது. அதுதான் அப்பா என் பெரியம்மாவை சுட்டுக்கொன்றது என பெரியம்மாவின் பூஜைக்கான ஒரு நாளில் அம்மா சொன்னாள். அம்மா பெரியம்மாவின் சொந்த சகோதரிதானாம். இது பாட்டி சொல்லித்தான் எனக்கு ஆரம்பத்தில் தெரியும் பாட்டி பல இரவுகளில் மகாபாரதக் கதைகளோடு எங்கள் குடும்பக் கதைகளையும் சொல்வதுண்டு. அது உண்மையா கற்பனையா உண்மை கலந்த கற்பனையா என்பது வாழ்வில் நான் பட்டு தெரிந்து கொண்டபிறகுதான் புரிந்திருக்கிறது.

பெரியம்மாவிற்கு அப்பாவுடன் கலியாணம் ஆவதற்கு முன்பே, வேறு யாருடனோ தொடுப்பு இருந்ததாகவும். சாதாரணமாக பண்ணைக்கு மருமகளாக வரும் எவருக்கும் பலவிதமான சோதனைகளை அவர்களுக்கு தெரியாமல் செய்யும் வழக்கம் உண்டு. அப்படி செய்யப்பட்ட முதல் சோதனையிலேயே இது தெரிந்து பாட்டி அதிகமாய்ச் சப்தமிட, அப்பாதான் அடக்கி அப்படியிருக்காது என்று சொன்னதாகவும். பின்னர் உண்மை தெரிந்துபோய் நாட்டுத்துப்பாக்கியை எடுத்து பெரியம்மாவைச் சுட்டுவிட்டதாகவும் சொல்லி அழும் பாட்டியை நான் சமாதானப்படுத்த முயன்றதில்லை, இப்பொழுதெல்லாம் பெரியம்மாவை அப்பா சுட்டதற்கு பாட்டியும் ஒரு காரணமோ என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடிவதில்லை. இதற்கெல்லாம் கூட கூட அம்மாதான் காரணம்.

பின்னர் வயிற்றுவலி காரணமாய் பெரியம்மா சுட்டுக்கொண்டு செத்ததாய்ச் சொல்லி விஷயத்தை மூடிவிட்டார்கள் வீட்டில். இந்தக் கதையைத்தான் பெரியம்மாவைப் பெற்றவர்கள் அம்மாவிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பண்ணைக்கு மருமகளாய் அனுப்பியவள் இப்படி சோரம் போய்விட்டாளே என்ற வருத்தம். இதுதான் சாக்கென்று பன்னிரெண்டு வயதில் அம்மாவை அப்பாவிற்கு இரண்டாம் தாரமாய்க் கட்டிவைக்க, முதல் குழந்தையாய் நான் பிறந்தவரை அம்மாவிற்கு, தன் அக்கா இறந்தது கணவனால் தான் என்று தெரியாதாம்.

அப்பாவிற்கும் கொழுப்புத்தான், அம்மா வந்த ராசிதான் தலைவர் தொகுதியில் தன்னை எம்எல்ஏ சீட்டுக்கு நிறுத்தினார் என்றும், அம்மாவின் ராசியால் தான் எம்எல்ஏ ஆனோம் என்றும் இன்றுவரை முழுமனதாக நம்பிவருகிறார். இப்படித்தான் அவர் சிட்டிங் எம்எல்ஏ இருந்த ஒரு நாளில் அம்மா ரொம்பவும் கஷ்டப்பட்டு உடம்பில் கத்திரி வைச்சி நான் பிறந்த சந்தோஷத்தில் முதன் முறையாய் குடித்திருந்த போதையில் அம்மாவிடம் உண்மையை உளறிவிட்டிருந்தார். அங்கே ஆரம்பித்தது சனியன் எங்கள் வீட்டிற்கு.

என் குழந்தைப் பருவத்திலிருந்தே அம்மாவும் அப்பாவும் பேசிச் சிரித்து நான் பார்த்ததில்லை, இருந்தும் இப்பொழுது நினைத்தால் ஆச்சர்யமாய் இருக்கிறது, எனக்குப்பிறகு சரியாய் இரண்டாண்டு, இரண்டாண்டு இடைவெளியில் தங்கையும் தம்பியும் பிறந்தது. பாட்டி இருந்தவரை வீட்டின் உரிமை, கட்டுப்பாடு முழுவதும் பாட்டியிடம் தான் இருந்தது. நான் நினைத்திருக்கிறேன், கிழவி தான் தன் கணவனிடம் ஒழுங்காய் நடந்து கொள்ளாவிட்டால் இன்னொருத்தியை அவருக்கு கட்டிவைத்துவிடும் சாமர்த்தியம் படைத்தது என்பதால் அம்மா தான் விருப்பமில்லாமல் தம்பி தங்கைகளை பெற்றிருக்க வேண்டும் என்று. ஆனால் பாட்டி நினைத்திருந்தால் கூட என்னைப் பொறுத்தவரை அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை தான். இதை ஒருமுறை அம்மா வாயாலேயே கேட்டிருக்கிறேன்.

தன் தந்தையிடம் அம்மா, அப்பாவைப் பற்றி குறைக்கூறிக் கொண்டிருந்த ஒரு நாள், நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் என்று நினைக்கிறேன். நான் அம்மாவிடம் நேராய்ச் சென்று,

“அம்மா அப்பாவிற்கு கூத்தியா இருக்கிறதா நீ நினைக்கிறியா” என்று கேட்டிருக்கிறேன். சர்வசாதாரணமாய் கூத்தியா என்ற வார்த்தையை அம்மாவிடம் பிரயோகித்திருந்தாலும், அம்மா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சிரித்துவிட்டு,

“தம்பி, இருக்கவே முடியாதுன்னு எனக்குத் தெரியும், தங்கூட படுத்தெந்திரிக்கிற பொம்பளைக்கு இன்னொருத்தன் கூட தொடுப்பு இருந்துச்சுங்கிறதாலத்தான் உங்க பெரியம்மாவை சுட்டாரு உங்கப்பாரு. அவரு கூத்தியா வைச்சிக்கிறதுக்கு வாய்ப்பே கிடையாது. இவருக்கு ஒழுக்கமா அவளுக இருக்கமாட்டாளுங்கன்னு உங்கப்பாவுக்கு நல்லாவேத் தெரியும்.

இருந்தாலும் உங்கம்மா இந்தவீட்டில் சந்தோஷமா இல்லைன்னு உங்க பாட்டனுக்கெல்லாம் தெரியணும்னுதான் அப்படிச் சொன்னேன்.”

அம்மா என்னை தன் பக்கத்துக்கு இழுக்க செய்த இம்முயற்சியில் நான் அவரைவிட்டு விலகி வெகுதூரம் வந்திருந்தேன். அப்பா எனக்கு ஹீரோ ஆகியிருந்தார். ஆனால் அப்பாவுடனான பழக்கம் அவ்வளவு இல்லாத தம்பி, தங்கைகள் அம்மாவின் போதனைகளால் அப்பாவிற்கு எதிராக வளர்க்கப்பட்டிருந்தார்கள்.

எனக்குத் தெரியும், நான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செஞ்ச கார் ஒன்றை அப்பாவிற்கு அனுப்பும் பொழுதே இதனால் அம்மா நிச்சயமாய்ப் பிரச்சனையை எழுப்புவார் என்று. தம்பியை அப்பாவிற்கு எதிராக தூண்டிவிடும் முயற்சிதான் இந்த தற்கொலை நாடகம். அரசியலில் குப்பைக் கொட்டியிருந்தாலும் அப்பாவிற்கு இன்னும் அம்மா அளவிற்கு சாமர்த்தியம் போதாது. அதனால் விஷயம் என் காதுவரை வந்திருக்கிறது அதுவும் அவரின் வாய்வழியாய்.

கண்டக்டர் “நாமக்கல்லில் இறங்கிறவங்கல்லாம் இறங்குங்க” என்று சப்தம் கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு திரும்பியது போல் இருந்தது. மணி எத்தனை என்று மொபைலை உயிரூட்டிப் பார்க்க, பன்னிரெண்டரையக் காட்டியது. இன்னும் நான்கைந்து மணிநேரம் பிடிக்கலாம் திருச்சியை சென்றடைய, அங்கிருந்து ஒரு மணிநேர பயணம் புதுக்கோட்டைக்கு, சொல்லியிருந்தால் அப்பா வண்டி அனுப்பியிருப்பார் திருச்சிக்கு, ஏன் பெங்களூருக்கே கூட ஆனால் அப்பாதான் எனக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். மக்களிடம் பழகும் குணத்தை. நான் உட்கார்ந்திருந்த மூன்று நபர்களுக்கான சீட்டில் இரண்டு காலியாய் இருந்தது; வண்டி கிளம்பும் நேரத்தில் ஆக்கிரமிக்கப் பட்டது உட்கார்ந்தவர்களைப் பார்த்தால் இளம் காதலர்களைப் போலிருந்தது. அந்தப் பெண் விசும்பலாய் அழுது கொண்டிருந்தாள்.

இந்தப் பெண்களுக்கெல்லாம் தைரியம் ஜாஸ்தியென்று நினைத்தவனுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தது ஸஸ்மிதாவைப் பார்த்ததைப் போலிருந்தது. ஒரேயொரு முறை அவளுடன் பஸ் பயணம் செய்திருக்கிறேன். புனேவிலிருந்து குஜராத் வரை சென்ற அந்தப் பயணத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாதென்று நினைக்கிறேன். அந்தப் பயணம் மட்டுமல்ல, மூன்று மாதங்களுக்கு முன்னால் நடந்த ஒட்டுமொத்தமான நிகழ்ச்சிகளையும் சேர்த்துத்தான்.

ஒருநாள் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த பொழுது ஸஸ்மிதாவின் செல்லிடைபேசியில் அழைப்பு வந்திருந்தது. அது ஆச்சர்யமான ஒன்று எக்காரணம் கொண்டும் அவள் என்னுடன் போனில் பேசமாட்டாள் அதுவரை. நான் அவளை அழைக்கவேண்டுமென்றால் அந்தப் போன் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு வைத்துவிடுவேன் அவ்வளவுதான் அவள் நாங்கள் எப்பொழுதும் தங்கும் ஹோட்டலுக்கு வந்துவிடுவாள். அன்று அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. நான் அட்டெண்ட் செய்ய எதிர்ப்பக்கத்தில் இருந்து ஸஸ்மிதாவின் அழுகைக் குரல். அவளுடனான மூன்றரை வருட பழக்கத்தில் அவள் அழுது நான் பார்த்ததில்லை; கேட்டால் நான் வேண்டியமட்டும் சின்னவயதிலேயே அழுதுவிட்டேன் இனிமேல் அழுவதற்கு ஒன்றுமில்லையென்பதான பதிலை எனக்குத் தந்திருந்தாள்.

அவளை நாங்கள் எப்பொழுதும் சந்திக்கும் வழக்கமான ஹோட்டலுக்கு வரச்சொல்லியிருந்தேன். வந்தவளின் முகம் அழுது அழுது சிவந்திருந்தது. அப்படியொரு நிலையில் ஸஸ்மிதாவை பார்க்கவேண்டி வந்ததேயென நினைத்து நான் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். மாலைநேர சூரியனின் வண்ணக்குழப்பங்களை நான் அந்த அறையின் ஜன்னலின் வழியே தரிசித்துக் கொண்டிருந்தேன். அந்த இக்கட்டான சமயத்தில் கூட என்னால் இந்த விஷயத்தை கவனிக்க முடிந்திருந்தது, என்னயிருந்தாலும் அவள் என் மனைவியில்லையே என்ற நினைப்புவேறு வந்தது. வந்து அரைமணிநேரம் ஆகியிருந்தும் அவளிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை, அவள் நான் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். நான் ஆரம்பிக்காததால் அவளே ஆரம்பித்தாள்.

மோகன் அம்மாவிற்கு உடம்புக்கு சரியில்லையாம், டாக்டரிடம் காட்டியிருக்கிறார்கள். சீரியஸான பிரச்சனைன்னும் உடனே ஆப்பரேஷன் செய்யணும்னு டாக்டர் சொல்றாங்களாம். இரண்டு லட்சம் தேவைப்படும்னு அம்மாவை பார்த்துக்கிட்டவங்க சொல்றாங்க...” நிறுத்தியவள் உங்களுக்கே தெரியும் எங்க நிலைமை நான் எங்க போவேன் இரண்டு லட்சத்துக்கு...” சுயபச்சாதாபம் ஊறிய கண்கள் கலங்கத் தொடங்கின. “நான் என் வாழ்கையிலேயே கடைசியாய் ஆசைப்பட்டது நானா உழைச்சு சம்பாரிச்சு அம்மாவுக்கு சாப்பாடு போடணும்னு... இப்படி ஊரெல்லாம் படுத்து நான் படிச்சதெல்லாம் வீணாய்டும் போலிருக்கே!” என்று சொல்லியவள் முடிக்கக்கூட இல்லை, கண்களில் இருந்து நீர் பொலபொலவென கொட்டத் தொடங்கியது.

அவளுடனான என்னுடைய இந்த மூன்றாண்டு கால உறவில் அவளுக்கும் அவள் அம்மாவிற்கும் இடையேயான உறவு நன்றாய்த் தெரியும். சொல்லப்போனால் ஸஸ்மிதா உயிர் வாழ்வதே கூட அவள் அம்மாவிற்காகத்தான் என்று நான் முழுமனாதாக நம்பினேன். காசு பணம் இருந்தாலும், நல்ல உடை உடுத்தினாலும், ஆடம்பரமான ஹோட்டலில் சாப்பிட்டாலும் ஒரு மெல்லிய சோகம் அவள் மனதில் இழையோடுவதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் அந்த சோகம் அவள் கண்களிலோ இல்லை முகத்திலோ தென்படாத அளவிற்கு வாழ்க்கை அவளை அடித்துப் போட்டிருந்தது. இன்றும் அதே வாழ்க்கை அவளை ஒரேயடியாகத் தூக்கியடிக்க முயன்றிருக்கிறது. எனக்குப் புரிந்தது பிச்சையெடுத்து தன்னை படிக்க வைத்த அம்மாவைக் கூட காப்பாற்ற முடியாத நிலை யாருக்கும் வந்துவிடக்கூடாது.

நான் அவளைச் சமாதானப்படுத்த முயலவில்லை, எனக்கு அந்தத் திறமை கிடையாதென்று முழுமனதாய் நம்பினேன். என்னிடம் இருந்து அவள் அந்தச் சமயத்தில் எதிர்பார்த்ததும் அதுவாய் இருக்கமுடியாது. அவளை அழைத்து இரண்டு லட்சத்திற்கான செக் ஒன்றைக் கொடுத்தேன், இவள் இங்கே செய்து கொண்டிருக்கும் வேலை காரணமாய் அவள் அம்மாவை குஜராத்தில் குடிவைத்திருந்தாள் என்பதால் குஜராத்திற்குச் செல்ல அவளுக்கு விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து அனுப்பிவைத்தேன்.

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும்; என்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியில் நான் சந்தித்திராத சந்தோஷத்தை எனக்கு அள்ளித் தந்தவள் ஸஸ்மிதா. என் அப்பா அடிக்கடி சொல்வார் “தம்பி பணத்தை பேப்பரா மதிக்கணும் அவ்வளவுதான் அதுக்கு மேல அதுக்கு மதிப்பு கொடுத்தேன்னு வை. அது உன்னைத் தூக்கி சாப்டுடும். உன் மனசுக்கு சரின்னு பட்டுச்சா; எதுக்கு யோசிக்காத, அவன் என்ன சொல்வான் இவன் என்ன சொல்வான் அப்படின்னெல்லாம். செஞ்சுடு.” அன்று செய்தேன்.

அவள் இருந்த விரக்தியில் ஒரு நன்றியைக் கூட அவள் எனக்குச் சொல்லவில்லை உண்மையில் அதை நான் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் அவள் நான் செய்ததற்கான நன்றியை அற்புதமாகச் சொன்னாள். நாமக்கல்லில் இருந்து வேகமாய் திருச்சியை நோக்கி நகரத் தொடங்கியது பேருந்து. ஆரம்பத்தில் விசும்பலாய் இருந்த பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணின் அழுகை சிறிது தூரம் தாண்டியது வேகமெடுத்தது பேருந்தைப் போலவே. அந்தப் பெண்ணின் கிராமத்தை தாண்டியிருக்க வேண்டும் என்று நானாய் நினைத்துக் கொண்டேன். கூடவந்த பையன் அந்தப் பெண்ணின் கையை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். அவளும் அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

ஸஸ்மிதாவிற்கு நான் தீபிகாவுடன் பழகுவது எப்பொழுது ஆச்சர்யமான விஷயம் தான். ஆரம்ப காலத்தில் இதைப் பற்றிய பேச்சு எங்களுக்குள் இருந்ததில்லை. ஆனால் ஒருமுறை எங்கள் இருவரையும் ஐநாக்ஸ் தியேட்டரில் வைத்து ஸஸ்மிதா பார்த்துவிட அடுத்த வெள்ளிக்கிழமை என்னிடம் உரிமையாக யாரென்று கேட்டாள். நான் ஃப்ரெண்ட் என்று சொல்லி வைத்திருந்தேன் பின்னர் வந்த ஏதோ ஒரு நாளில் வெள்ளிக்கிழமை இரவு தீபிகா தொலைபேசப்போக நான் அவளுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டவள், அவளுக்குத் தமிழ் புரியாது ஆனால் நான் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தது, வழிந்தது எல்லாம் புரிந்திருக்கும். அதற்குப் பிறகு நச்சரிக்கக் தொடங்கினாள் தீபிகாவைப் பற்றி சொல்லுங்கள் என்று.

என்கிட்ட சொல்றதுக்கு என்ன மோகன், நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன். அதுமட்டுமில்லாம உங்களை தப்பா நினைச்சிக்கிறதுக்கு நான் யார்?

அவளுக்கு நன்றாய்த் தெரியும் அந்த வார்த்தையை சொன்னாள் என்றால் நான் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வேன் என்று. அதனால் அந்த கடைசி வரியை இணைத்துக் கொண்டாள். ஆனால் அந்த வார்த்தையை நான் எவ்வளவு சீரியஸாய் எடுத்துக்கொள்வேன் என்று தெரிந்ததால் பெரிய பிரச்சனை என்றால் மட்டுமே சொல்வாள். அவளைப் பொறுத்தவரை தீபிகா பெரிய விஷயம்.

சரி நான் தீபிகாவைப் பத்தி சொல்றேன் ஆனா அதுக்கு முன்னாடி நீ அந்த காலேஜ் பையனைப் பத்தி சொல்லணும்.” நான் கேட்க, அவள் என்ன நினைத்தால் என்று தெரியாது.

தாஸ் நான் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். என்னிக்கு நீங்க இல்லாத இன்னொருத்தன் கூட படுக்குறனோ அதற்கு அப்புறம் நீங்க என்னைப் பார்க்கவே முடியாது. உங்களுக்குச் சந்தேகம் இருக்கலாம் ஏன்னா நான் பணத்துக்கு படுக்குறவ தானே, யார் கூட வேணும்னாலும் படுத்திருப்பா படுப்பான்னு. நான் காசுக்காக படுக்கிறவ தான் ஆனா இந்த மூணு வருஷமா உங்களைத் தவிர யார் கூடவும் நான் படுக்கலை. ஏன்னா எனக்கு பணம் காலேஜ் பீஸ் கட்ட மட்டும் தான் தேவை. அதை நீங்க தந்துற்றீங்க; அதனால எனக்கு அந்த தேவை ஏற்படலை.

ஒரு நல்ல மாலைப் பொழுதை தீபிகாவைப் பற்றிய பேச்சை எடுத்து அன்று அப்படி ஸஸ்மிதா கலைத்துப் போட்டிருந்தாள். அவள் சாதாரணமாகவே நல்ல பெண் என்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளை அந்த நிலைக்கு தள்ளின என்றும் நன்றாகத் தெரியும். இந்த மூன்று வருடகாலத்தில் அவள் வேறு யாருடனும் சென்றிருக்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்தாலும் நானும் அதைக் கேட்டுக்கொண்டதில்லை அவளும் சொல்லியதில்லை. ஆனால் அன்று அவளாய் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு எப்படியோ வந்திருந்தாள்.

நான் அவளைப் பார்த்து முறைத்தேன்.

நான் உன்கிட்ட என்ன கேள்வி கேட்டேன் நீ என்ன பதில் சொல்ற. நீ வரவர லாஜிக்கலா யோசிக்கிறதையே மறந்துட்டு வர்ற. நான் அந்தப் பையன் பத்தி கேட்டது ரொம்ப சாதாரணமா!” தொடரும் முன் இடைமறித்தவள்.

தாஸ் உண்மையில் நான் உங்க பொண்டாட்டியோ காதலியோ கிடையாது, நீங்களும் அப்படி நினைக்கலாம். ஆனால் நான் என்னை உங்க காதலியா, பொண்டாட்டியாத்தான் நினைச்சிக்கிட்டிருக்கேன். சொல்லப்போனா உங்கக் கிட்ட ஒவ்வொரு தடவையும் காசு வாங்கிறப்பையும் என் மனசை கொன்னுட்டுதான் வாங்குறேன். நீங்க அப்படி நினைச்சிக்கிட்டு கொடுக்கிறதில்லைன்னாலும், அப்படி நான் நினைச்சிடக்கூடாதுன்னு நீங்க யோசிச்சு யோசிச்சு செய்தாலும் என்னால் அப்படி மறக்கமுடியலை.

அதனால தான் நீங்க அந்தப் பையனைப் பத்தி கேட்டதும் இத்தனையும் சொல்றேன். நீங்க இதுவரைக்கும் என்கிட்ட என் வாழ்க்கையை லைஃப் ஸ்டைலை, என்னுடைய நடவடிக்கையைப் பத்தி கேள்வி கேட்டதில்லை. நீங்க கேட்காததால நானும் சொன்னதில்லை ஆனால் இப்ப கேட்டீங்க பாருங்க, அதை நீங்க ஒரு கேள்வியா நினைச்சுக் கேட்கலைன்னாலும் எனக்கு நானே உங்க மூலமா சமாதானம் சொல்லிக்கிறேன். என்னமோ கேட்டீங்க நான் எங்கேயோ போய்ட்டேன்.

அந்தப் பையனைப் பத்தி உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன்ல, அவன் என்னை தீவிரமா காதலிக்கிறான். இந்த உலகத்திலேயே என் மேல இருக்கும் அன்பை வெளிப்படையாச் சொன்னவன் அவன் தான். நீங்களும் சரி, எங்க அம்மாவும் சரி என் மேல இருக்கிற அன்பை பாசத்தை வெளிப்படையா சொல்லமாட்டீங்க. நான் உங்களையோ எங்கம்மாவையோ அந்தப் பையன் கூட கம்பேர் செய்யக்கூட மாட்டேன்; ஆனா நானும் சின்னப் பொண்ணு தானே? என்பின்னாடியே வழிந்து கொண்டு வரும் அப்பாவி பையன் அவன். அவ்வளவுதான். உங்களுக்கும் அந்தப் பையன் கூட எனக்கு வேறமாதிரி தொடர்பிருக்காதுன்னு தெரியும். இல்லையா?

நான் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன். அவளும் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொள்ள லைட்டரை அவளிடம் நீட்டினேன்.

ஸஸ், நான் அந்தப் பையன் பத்தி உன்கிட்ட கேட்டதுக்கு ஒரே ஒரு காரணம். ஏறக்குறைய தீபிகாவிற்கும் அந்தப் பையனுக்கும் நிறைய ஸிமிலாரிட்டீஸ் இருக்குமென்று தான். நீ சொன்னத வச்சுப் பார்த்தா அது உண்மைன்னும் தெரியுது.

நான் கட்டிலில் இருந்து எழுந்து பால்கனிக்கு வந்து உட்கார்ந்தேன். கூடவே வந்தவள் எதிரில் உட்கார்ந்தாள். நான் அவள் ஆழமாய் சிகரெட் இழுத்து புகை விட்டதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தாஸ் நீங்க வேணாம்னு சொன்னா நான் தம் அடிக்கிறதை, பியர் அடிக்கிறதை எல்லாம் நிறுத்திருவேன். இப்பவே கூட ஒன்னும் பெரிசா விரும்பி செய்யலை கண்டதையும் யோசிச்சிக்கிட்டிருப்பேன். அதையெல்லாம் மறக்கறதுக்காகத்தான் இதெல்லாம்.

நீங்க ஒரு வார்த்தை பண்ணாதன்னு சொல்லுங்க நிறுத்திற்றேன்.

ஸஸ் உனக்கு என்னமோ ஆச்சு இன்னிக்கு.” நானும் ஆழமாய் இழுத்து புகைவிட்டபடி வேடிக்கையாச் சொல்ல, அவள் முகம் சட்டென்று வாடத் தொடங்கியது. முகத்தில் லேசாய் சோகப் புன்னகை பரவியது.

ச்ச நான் ஒரு லூசு உங்கக்கிட்ட என்னவெல்லாமோ புலம்பிக்கிட்டிருக்கேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts