Wednesday, January 31, 2007

தமிழ்மண விவாதக்களமும், பெண்ணியமும்

நான் இந்தப் பெண்ணியம் பத்தி பேச ஆரம்பிச்சாலே பிரச்சனையாயிடுதுன்னு நினைக்கிறேன். அப்படிக்கும் ஒன்றும் கேவலமான, அசிங்கமான, தனிநபர் விரோதமான பின்னூட்டங்கள் போடவில்லையென்றாலும் என்னுடைய பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன இல்லை முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன.

அப்படித்தான் தற்சமயம் தமிழ்மணம் விவாதக்களத்திலும் நடந்தது. என் பின்னூட்டன் வெளியிடப்பட்டு, ஒன்றிரண்டு நாட்களுக்கு பிறகு முற்றிலுமாக தூக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது. அவையிரண்டும் நான் எழுதியபடியே இங்கே. (இதையெல்லாம் ஆளைவைச்சா எழுதுறோம், எழுதின நேரத்திற்காவது மதிப்புக் கொடுங்கப்பா.)

--------------------------

இது முதல் பின்னூட்டம்.

உங்களுடைய கேள்விகளுக்கு என்னளவில் தோன்றும் பதில்களைத் தருகிறேன். இந்த பதில்கள் எந்த சந்தர்ப்பத்திலும் என் மனதில் தோன்றும் ஒன்றை மறைத்து வந்தவையாக இருக்ககூடாதென்றே நினைக்கிறேன்.

//பெண்ணடிமை/ஆணாதிக்கம் என்பதன் நிகழ்வு வீதம் என்ன?//

1. நிச்சயமாகக் கிடையாது. இது என் கண்ணால் நான் பார்த்த உண்மை.
2. ஆமாம் எதிர்நிலைகள் உண்டு.(பர்சண்டேஜ் பற்றி பேசுபவர்களுக்காக, எல்லா சமயங்களிலும் பர்சண்டேஜ்கள் உண்மையைச் சொல்லுவதில்லை.)
3. நிச்சயமாக.
4. எனக்குத் தெரிந்த வரலாற்றின் படி கிரேக்கர்கள் பெண்களை வெறும் பிள்ளை பெறும் எந்திரங்களாகப் பயன்படுத்தினார்கள் - உண்மை. உடலுறவுக்குக் கூட ஆண்கள் தான் ஒன்லி புள்ளப் பெத்துக்கிறதுக்கு மட்டும் தான் பெண்(உடலுறவு இல்லாமலா என்றெல்லாம் கேட்கக்கூடாது) - ஏனென்றால் அந்தக் காலத்தில் உடல்வலு மட்டுமே உரிமையைத் தீர்மானித்தது.

இந்த மாற்றம் வரவர இந்த நிலையில் மாற்றம் இருந்திருக்கும்.

//எந்த ஒரு குழந்தையின் முதன்மை வழிகாட்டி, ஆசிரியர், கருத்து உருவாக்கி யார்?//

1. நிச்சயமாக, (அம்மா பிரசவத்தில் இறந்துபோயோ இல்லை வேறு சில காரணங்களால் அம்மா இல்லாமல் போகும் போதோ மட்டுமே இதில் மாற்றம் இருக்கும்.

2. ஆனால் இதில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு, ஒரு பிள்ளைக்கு தன் தகப்பன் வாழும் எடுத்துக்காட்டாக இருக்கிறான் பெரும்பாலான சமயங்களில், அப்படி தன் தந்தையை அவன் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத சமயங்களில் வெளி உலகத்தில்(Note this point.) உலவும் ஆண்களைத் தேடுகிறான். ஒரு ஆணால் தன்னுடைய தாயை வாழும் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த அம்மா பாதிப்பு தனக்கு உற்றாளைத் தேடும் போது வருகிறது. தன் மனைவி தன் அம்மாவைப் போலவே இருக்கவேண்டும் என்று நினைக்கிறான்(அம்மா அவனுக்கு நல்லவளாகத் தோற்றமளிக்கும் பட்சத்தில் இல்லாவிட்டால், உலக அளவில் தேடாமல் தன்னுடைய உறவினர்களில் தேடுகிறான். அக்கா, தங்கை அத்தை சித்தி என்று.)

நடத்தையில் தாயின் பங்கு அதிகம் தான், மறுக்கவில்லை, ஏனென்றால் தான் வேலை(இல்லை அது சம்மந்தமான விஷயங்களில்) தந்தையையோ இல்லை அவனுக்குப் பட்ட இன்னொரு ஆணையோ வழிகாட்டியாக கருதும் அதே வேளையில் தாயிடம் இருந்து குடும்பத்தை எடுத்து நடத்தும் விஷயங்களைக் கற்றுக் கொள்கிறான்.

//எப்படி பெண்ணடிமை/ஆணாதிக்கம் தோன்றியது?//

1. முன்பே சொன்னது போல் பெண்ணடிமை தோன்றியது அவர்களுடைய உடலில் பளுஇல்லாத காலங்களிலேயே, அவனுக்கு நாடு பிடிக்கும் ஆசைதான் அதிகமாயிருந்தது. அப்படிப் பிடித்த நாட்டை தன்னிலிருந்து தன் அடுத்த சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் கருவியாக அவளைப் பயன்படுத்தினான்.

அப்படி தன்னிலிருந்து அடுத்த சமுதாயத்திற்கு அவனுடைய வெற்றிகளை, பணத்தை, வீரத்தை கொண்டு செல்லும் பொழுது அதில் தவறு(சார்லஸ் அவருடைய இரண்டு பிள்ளைகள் தனக்குப் பிறந்தது தானா என்று வெரிபிகேஷன் செய்தது தான் நினைவில் வருகிறது - உண்மையில்லையா?) நடந்துவிடக்கூடாது என நினைத்ததன் விளைவுதான் பெண்ணடிமை. எப்பொழுது பெண்ணடிமை தோன்றியதோ அப்பொழுதே ஆணாதிக்கமும் தோன்றிவிட்டது.

2. ஆரம்பக்காலத்தில் அவன் தன்னுடைய சகோதரியையும், பெண் பிள்ளைகளையும், மனைவியையும் ஒன்றாக பார்த்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் பிற்காலத்தில் அவன் அந்த வலிமை குறைந்த பெண்ணிடம் இருந்து வெளிப்பட்ட(?) அறிவுசார்ந்த விஷயங்களினால் ஆட்பட்டு வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஒன்று அந்த வித்தியாசம் தெரிந்த பிறகு அவன் தன் மகளையும் தன் மனைவியையும் ஒன்றாகத் தான் பார்த்திருப்பான் என்று என் மனம் சொல்கிறது.சும்மா ஜல்லியடிப்பதற்காக மகளை வேறு ஜன்மமாகவும் மனைவியை வேறு ஜென்மமாகவும் பார்த்தான் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

வேண்டுமானால் அவனுக்கு இப்படித் தோன்றியிருந்தால் அந்தப் பெண்ணை பெற்றவர்களுக்காக அவள்(மனைவி) இதை(ஏதாவது ஒரு முடிவை எடுக்க) தன்னைச் செய்யச் சொல்கிறாளோ என்ற பயம் கடேசி காலம் வரை வந்திருக்கலாம், ஏனென்றால் தான் பெற்ற பெண் தன்னை அப்படி மோசம் செய்ய மாட்டாள் என்று நினைத்திருக்கலாம்.

//குழந்தை வளர்ப்பு://

1. இதில் ஆணாதிக்கம் கொண்ட பெண்களை திணிப்பது சுத்த ஜல்லி, அப்படி அவன் மீது திணிக்கப்பட்டிருந்தாலும் அது நிச்சயமாக ஒரு பெண்ணால் இருந்திருக்க சாத்தியக்கூறு குறைவுதான். தன் மகன் தன்னிடம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கும் எந்தப் பெண்ணும் இது போன்ற விஷயங்களைச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பெண்டாட்டியை குறைவுள்ளவள் என்று சொல்வது தன்னையே சொல்வது தான் என்பதை அவள் உணர்ந்திருக்க வேண்டும். அவன் வாழ்ந்து வந்த ஒட்டுமொத்த சமூகமும் இதற்கு பொறுப்பு, அவன் கற்ற கல்வி, அவனுடைய அனுபவங்கள் இப்படி நிறைய விஷயங்களால் அவன் அப்படிப்பட்ட ஒரு கருத்திற்கு வந்திருக்கலாம்.

2. எங்கள் வீட்டில் உண்டு, எங்க வீட்டுப் பெண்பிள்ளைகளுக்கு அதிக அதிகாரம் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது ஆண்களைவிட. சும்மா ஜல்லியடிக்கச் சொல்லவில்லை, அக்காவை மாஸ்டர்ஸ் படிக்க வைத்தார்கள் என்னை படிக்கவைக்கவில்லை. இதற்கு நான் பேச்சுலர்ஸில் வாங்கிய மார்க் காரணம் இல்லை. பொருளாதாரம் என்று வருவோமென்றால் அப்பாவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும் தன் பெண்ணை படிக்க வைத்தால் என்னை மாஸ்டர்ஸ் படிக்க வைப்பதற்கான வாய்ப்புக்கள் குறையும் என்று. இருந்தாலும் அப்படி நிறைவேற்றப்பட்டது. இது ஒரு சிறு உதாரணம். இது போன்ற ஆயிரம் உதாரணங்களை அடுக்கலாம் நான் வாழ்ந்த பகுதியில் கூட. என்னைப் பொறுத்தவரை அம்மாக்களுக்கு ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளைத்தான் பிடித்திருக்கிறது. தன் ஆண்பிள்ளையிடம் பேசமுடியாத பல விஷயங்களை அவளால் தன் பெண் பிள்ளையிடம் தான் பேச முடிந்திருக்கிறது.

3. சொல்லமுடியாது சரியாய். இது சமூகத்தால் போற்றப்பட்ட ஒன்று, பெண்குழந்தை வளுஇல்லாதது. அதனால் சம்பாதிக்க முடியாது இந்த ஆண்களின் சமுதாயத்தில் பெண்களால் வெளியில் நடமாட முடியாது என்பது கட்டமைக்கப்பட்டது தான்.

ஆனால் வேலை என்ற விஷயம் மாறி வரும் நிலையில். இது நிச்சயமாக மாறிவிட்டது. கத்தியெடுத்து சண்டை போட்டுத்தான் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற ஒரு நிலை போய்விட்ட நாளைக் கணக்கெடுத்தால் அந்த நாட்களில் இருந்தே இந்த விஷயம் மாறியிருக்க வேண்டும். வேண்டுமானால் பர்சண்டேஜ்கள் குறைவாக இருக்கலாம்.

//சொத்து/ஆதிக்கம்://

இது பெண்களுக்கு மட்டுமே உரியது என்று சொல்ல முடியாது. ஆனால் பர்சண்டேஜ்கள் அவர்களைத்தான் அதிகமாகக் காட்டும். பெண்ணை வாயைப் பொத்தி வீட்டில் வைத்திருக்க ஆண்கள் கண்டுபிடித்த ஒரு ஆயுதம் தான் இந்த விஷயம். வீடுகட்டிக்கொடுத்து, வேண்டுமென்ற நகைகள் செய்துகொடுத்து பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்து. அவர்களை அப்படிப்பட்ட உயர்ந்த(?) விஷயங்கள் இல்லாமல் வாழும் பெண்ணை பார்க்கவைத்து பயமுறுத்தும் ஒரு விஷயம் தான் இது.

சமுதாயத்தில் தங்கள் பெயர் கெட்டுவிடும் என்று பயந்துதான் பல பெண்கள் தங்கள் கணவனுடன் வாழ்கிறார்கள் என்பது நிச்சயமாக மறுக்கமுடியாத உண்மை. இதுவும் நிச்சயமாக மாறும். ஆனால் கொஞ்சம் டைம் எடுக்கும். அதற்குள் ஒரு உலக்ப்போர் வந்துவிட்டால் ஒன்றும் சொல்லமுடியாது. உலகம் அழிவை நோக்கி நகர்த்தப்படும்.

2. ஒரு ஆளும் கிடையாது. எல்லோருக்கும் இது வேண்டும். அவன் அணிகிற சட்டைத் துணியிலிருந்து வாங்கும் கார் கலர் வரைக்கும். ;)

3. பெண்ணியவாதிகள் இதைத் தான் மறுக்கிறார்கள். நிலைத்து வாழவேண்டும் என்ற ஒரு விஷயம் மனதில் வந்துவிட்டால் நாம் சில விஷயங்களுக்கு ட்பண்ட் ஆகிவிடுகிறோம். அது தேவையில்லை, உனக்கும் எனக்கும் எல்லாம் சரியா ஒத்துவருதா வாழலாம் இல்லையா மூட்டைக்கட்டிவிடலாம் என்ற ஒரு நிலைக்கு வருவது தான் என்னைப் பொறுத்தவரை. குடும்பங்களில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது. அதற்கு அந்தப் பெண் ஆண் அவன் குடும்பம் மட்டும் போதாது சமுதாயமும் திருந்த(?) வேண்டும்.

இவைகள் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டவை. உங்களுடைய கடவுள்களின் பெயர்களால், நீங்கள் படிக்கும் புத்தகங்களில் பெயர்களா, மற்றும் உங்களை எந்தெந்த விதங்களில் எல்லாம் கட்டிப்போட முடியுமோ அந்தந்த விதங்களால். இதில் ஒன்று மாறாமல் இன்னொன்று மாறமுடியாது.

ஆனால் அப்படிப்பட்ட சமுதாயம் அமைக்கப்படும் பொழுது இந்தியா அமேரிக்காவாகத்தான் இருக்கும். இந்த விஷயத்தில்.


----------------------------------

இது நம்ம நண்பர் ஒருத்தர் அடிச்ச ஜல்லிக்கு பதில் சொன்னது.

//நாங்களும் காதல், பரிவு, இரக்கம், நேசம், பாசம் எல்லாம்கொண்ட சகமனுஷிகளே. ஒரு ஆணின் நேசத்தில் பூ விரிவதுமாதிரி இதயம்
மலரவும், அன்னியோன்யமான, ஒருவருக்கொருவர் ஆழமாக நேசிக்கிற, அந்த நேசத்தைக்கொட்டி வாழ்கிற தம்பதிகள் காண்கிறபோது
வெயிலுக்குப் பனி கரைவது மாதிரி மனம் கரையவும் முடிந்தவர்களே நாங்கள். //

ஒவ்வொரு முறையும் நண்பர் இந்தக் கருத்தை வைப்பதை தன் வாடிக்கையாக வைத்துள்ளார். நான் அவருடைய இந்தக் கருத்தைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை.

அப்படியில்லாமல் போய்விட்டவர்களை, இவர் பெண்கள் இல்லையென்று கருதுகிறாரா? அதுதான் எனக்குப் புரியவில்லை.

காந்தியின் கடேசிக் காலங்களில் அவருடைய தோள்களைத் தாங்கிப்பிடித்து நடந்துவந்த சகோதரிகளைப் பற்றித் தெரிந்திருக்கும் பலருக்கு. இதனை மட்டுமே காரணமாகக் காட்டி, காந்தியை ஆணியவாதி என்றும் Male Chavanist என்றும் சொன்ன அம்மையார்(பெண்ணியவாதி) ஒருவரை நண்பருக்கு நன்றாகத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

என்னைப் பொறுத்தவரை, அவரும் பெண்தான், பெண்ணியவாதிதான். அவருக்கு காதல், பரிவு, பாசம் இதெல்லாம் கிடையாது என்று சொல்லவில்லை தேவையில்லை என்று நினைக்கிறார். தவறில்லை; நண்பர் சொல்வதை ஒருவகையான சமரசம் என்று தான் நான் எடுத்துக்கொள்வேன். இன்னும் சொல்லப்போனால் தேவையில்லாத சமரசம், நாத்தீகம் எப்படி திராவிடக் கழகங்களில் இருந்து மறைந்து போனது என்ற கேள்விக்கு, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தைக் தூக்கிப்பிடித்த பொழுதுதான் என்று எங்கேயோ படித்த நிகழ்வு.

நீங்கள்(அவருக்கு கிடையாது) உங்களுக்கு உண்மையாகயிருங்கள் அதுபோதும், மற்றபடிக்கு சொல்றதையெல்லாம் சொல்லிட்டு வார்த்தைக்கு "முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" அப்படியென்றெல்லாம் ஜல்லியடிக்க வேண்டாம். நாங்கள் முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்களையும் விரும்பவில்லை, 725 ரெசிப்பிக்களையும் விரும்பவில்லை.

நீங்கள் இப்படி சொல்லிச்சொல்லி தான், வரும் மனைவி முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரலாளாக வரவேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கத் தொடங்குகிறார்கள், அப்படியே 725 ரெசிப்பிக்கள் தெரிந்து வைத்திருப்பதையும். ஆரம்பத்திலேயே அதெல்லாம் முடியாது நான் நானாகத்தான் வருவேன், காந்தள் மெல்விரலாளாகல்லாம் வரமுடியாதுன்னு சொல்லீட்டிங்கன்னா, அப்படி மெல்விரலாளாக இருக்கும் பட்சத்திலும் பிரச்சனையில்லை இல்லாதபட்சத்திலும் பிரச்சனையில்லை.

//விமானம் ஓட்டுவதில் ஆண்களை விட பெண்கள் ஒழுங்குதன்மையோடு//

பர்சண்டேஜே உதைக்குமேம்மா, என்ன சொல்றீங்க நீங்க, வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லக்கூடாது.


--------------------------------------

Blood Diamond

ஆங்கிலப் படங்களை பெரும்பாலும் விமர்சனம் தெரிந்துகொண்டு பார்ப்பதில்லை, ஏனென்றால் அது நான் ஏன் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத் தொடங்கினேனோ அந்த விஷயத்தில் இருந்து என்னை நகர்த்திவிடும். ஆனால் படம் பார்த்தபின் அதைப் பற்றிய விமர்சனங்கள், நல்லது கெட்டதுகள், என்று ஒரு பயங்கரமான தேடுதலே அந்தப்படத்தைப் பற்றி செய்திருப்பேன். இதற்கும் நான் ஆங்கிலப்படங்களை ஏன் பார்க்க ஆரம்பித்தேன் என்பது தான் காரணம். ஏனென்றால் நான் பள்ளிப்பருவம் முழுவதும் தமிழ்மீடியத்தில் படித்தவன், கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுதினேன் என்றாலும் பாடம் முழுவதும் ஆங்கிலத்தில் சொல்லப்படாது. அதற்காக For, While Loop எல்லாம் தமிழில் கன்வெர்ட் செய்யப்பட்டு கொலைசெய்யப்படாது என்றாலும் உரையாடல் மொழி தமிழ்தான். இதனால் எனக்கு ஏற்பட்ட டிஸ் அட்வாண்ட்டேஜ்களை போக்கிக்கொள்ளவே ஆரம்பத்தில் ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அதனால் கதையைத் தெரிந்துகொண்டு பார்ப்பது என்னுடைய நோக்கத்திற்கு பாதகமாகவேயிருக்கும். ஏன் இப்ப இந்த சுய சொறிதல்-னா நான் ப்ளட் டையமண்ட் பார்க்கப்போவதற்கு முன்பே மதியின் விமர்சனத்தைப் படித்திருந்தேன்.

சரியான ஸ்பாய்லர், அதை அக்காவும் சொல்லியிருந்தனம். இருந்தும்தான் படித்திருந்தேன். ஆனால் அதனால் கூட ஒரு அட்வாண்ட்டேஜ் படத்தின் கதையும் நடக்கப்போகும் சம்பவங்களும் முன்பே தெரிந்தவையாக இருந்ததால் படத்தை இன்னொரு பார்வையில் என்னால் பார்க்கமுடிந்தது.(வேண்டுமானால் பொதுபுத்தியில் இருந்து மாறியது என்று சொல்லிக் கொள்ளலாம் :-)) படத்துடைய trailers பார்த்துட்டு ரிலீஸ் ஆனவுடனேயே பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் ரிலீஸ் ஆனது ஜனவரி 13. நான் தமிழ்நாட்டில் திருச்சியில் இருந்தேன். Fame Cinemas, PVR Cinemas ல் படம் பார்த்துவிட்டு (ரீலீஸ் ஆகியிருந்தாலும்?) சிப்பியில் பார்க்க மனம் வரவில்லை. அதனால் தான் அடுத்தவாரம் பார்த்தது. ஏற்கனவே இந்தப் படத்தின் டைரக்டருடைய மற்றய படம் The Last Samurai எனக்கு மிகவும் பிடித்தப் படம் அதற்கான விமர்சனமும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்படி நிறைய விஷயங்கள் என்னை இந்தப் படத்தைப் பார்க்க வரும்படி அழைத்தன.

படம் எனக்கென்னவோ ரொம்ப பரீட்ச்சையான ஒரு விஷயத்தைப் பற்றியதாகத் தோன்றியது பின்னர் யோசித்துப்பார்த்ததன் விளைவு, ஏற்கன்வே சிட்னி ஷெல்டனின் "மாஸ்டர் ஆப் த கேம்" படித்திருந்தேன். சொல்லப்போனால் இதே கதைதான். அதனால் உபயோகப்படுத்தப்பட்ட டெர்ம்ஸ், மற்றும் இன்னபிற விஷயங்கள் புரிவதில் கொஞ்சம் சிக்கலில்ல்லை. (அந்தப் புத்தகம் படித்திருந்தால் இந்தப்படத்தை நிச்சயம் பாருங்கள்.

ஒரு ஆக்ஷன் பாக்ட் மூவிக்குள் சமூகத்திற்கான மெஸேஜ் சொல்ல இயக்குநர் முயன்றிருக்கிறார். டைட்டானிக்கில் பார்த்த டி காப்ரியோவா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் மனிதர். இப்பல்லாம் டி காப்ரியோ சாவறதுதான் டிரண்ட் என்று நினைக்கிறேன். டைட்டானி, த டிபார்ட்டட், இப்ப பிளட் டயமண்ட்.

"நாங்கள் ஒருவருக்கொருவர் செய்து கொண்டதற்கு கடவுள் எங்களை மன்னிப்பாரா என்று வருந்தியிருக்கிறேன். ஆனால் கடவுள் இந்த இடத்தைவிட்டுச் சென்று ரொம்ப நாட்களாகிவிட்டது" என்று ஆஸ்கர் வின்னர் ஜெனிபர் கன்னோலியிடம், வெள்ளை ஆப்பிரிக்காக்காரரான டி காப்ரியோ தங்களையும், கருப்பு ஆப்பிரிக்காரர்களையும் பற்றி புலம்பும் இடத்தில் பிரமாதப்படுத்துகிறார்.

ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும், "huh..." போட்டு சௌத் ஆப்பிரிக்கன் ஸ்லாங்கில் பல சமயங்களில் ரொம்பவும் தொடர்ச்சியாகப் பேசும் பொழுது புரியாத நிலையிலும் மனிதர் உழைத்திருப்பது தெரிகிறது.

ஸ்ஸாலமன் வாண்டி-யாக நடித்திருக்கும் Djimon Hounsou யை நீங்கள் கிளாடியேட்டரில் பார்த்திருக்க முடியும். இந்த மனிதரின் நடிப்புப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. வரிசையாக அவார்ட்களை இந்தப் படத்திற்காக பெற்றுவருகிறார். ஆஸ்கர் கிடைக்குமா பிப்ரவரி 23ல் விடைகிடைக்கும். என்னுடைய கருத்தின் படி இவருக்கு Best supporting actor-ம், Babel-ல் நடித்த Rinko Kikuchi க்கு Best supporting actress-ம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அப்புறம் பத்திரிக்கையாளராக வரும் ஜெனிபர் கன்னோலி. முதலில் தன்னைப் பார்த்து ஜொள்ளுவிட்டு வரும் டி காப்ரியோவிடம் எப்படியாவது விஷயத்தைக் கறந்துவிட முயலும் காட்சிகள் ஆஆவ். இருவரும் பேசிக்கொள்ளும் பத்திரிக்கை தர்மம் பற்றிய காட்சிகளும் அதே வகையறாவைச் சேர்ந்தவை தான்.

எனக்கு டைமண்ட் பற்றி, அதை மக்கள் எடுக்க உபயோகப்படுத்தும் முறைகள் பற்றி, அதன் ரிஷிமூலம் நதிமூலம் ஒன்றும் அறியாமல் பயன்படுத்தும் மக்கள் பற்றி நன்றாகவேத் தெரிந்திருந்தது இந்தப் படம் பார்ப்பதற்கு முன்னர். சில நாவல்களாலும் படித்த சில ஆர்ட்டிக்கிள்களாலும். இந்தப் படம் எடுத்ததன் மூலமாய் நிச்சயமாய் டைரக்டரால் மக்களை Conflict டைமண்ட் வாங்குவதிலிருந்து தடுக்க முடியாவிட்டாலும். Conflict Diamond பற்றித் தெரியாத மக்களிடம் அதைக் கொண்டு சென்ற விதம் பாராட்டுதற்குரியது. ஏதாவது ஒரு தொடக்கம் தான் தேவையாயிருந்திருக்கிறது எனக்கு பெரும்பாலான சமயங்களில்.

அந்தத் தொடக்கம் சுஜாதாவால், மதனால் இருந்தால் கூட எனக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை, அதேபோன்ற மனநிலை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல படம். மூன்று மணிநேரங்கள்(அல்லது இரண்டரை மணிநேரங்கள்) போவதே தெரியாமல் பார்க்கலாம், மசாலாக்கள் எல்லாம் தூவித்தான் எட்வெர்ட் ஸ்விக் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

"ஆப்பிரிக்காவில் பெட்ரோல் கிடைக்காமல் இருக்கும் வரை பிரச்சனையில்லை." என்று ஆப்பிரிக்க வயதானவர் ஸ்ஸாலமனிடம் சொல்லும் பொழுது தியேட்டர் முழுவதும் சிரிப்பு அலை பரவியது. இதுபோல நிறைய விஷயங்கள் ஜெனிபர் கன்னோலிக்கும், லியனார்டோ டி காப்ரியோவிற்கும் இடையில் உண்டு. படத்தில் மெஸேஜ் சொல்வது, அதுவும் ஒன்றிரண்டு பிரேம் அழகாக(கொடூரமாக) எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளுக்கிடையில் உட்கார்ந்து நல்லது கெட்டது(பகுத்தறிவு?) பற்றி பேசுவது பிடிக்காத ஆட்கள் நிச்சயமாய் தப்பித்துக்கொள்ளலாம்.

மற்றபடிக்கு நிச்சயமாக ஒரு நல்ல படம். பார்க்கலாம்.

PS: அப்புறம் இது போன்ற மெஸேஜ்கள் எல்லாம் உபயோகப்படுமா என்று கேட்பவர்களுக்கு. எங்கள் வீட்டில் பட்டுப்பூச்சியின் உடலில் இருந்து தான் எடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் பட்டுப்புடவையே கட்டமாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்ற பெண்ணியவாதிகள் சிலரை நேரில் பார்த்திருக்கிறேன்.

அதே போல் சத்தியசோதனை படித்துவிட்டு இனிமேல் மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த பிடிக்கிற ஆட்கள் இன்னும் எங்கள் வீட்டிலேயே உண்டு. மெஸேஜ்கள் நிச்சயமாக உதவுகின்றன. ஆனால் அப்படி உதவும் பர்ஸண்டேஜ்கள்??????

Tuesday, January 30, 2007

ராயர் காப்பி கிளப்

ஆரம்பக்காலத்தில் நான் மரத்தடியில் சேர்ந்த சமயங்களில் இந்த ராயர் காப்பி கிளப் குழுமத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். நல்லவேளை சேராமல் போனேன், இல்லையென்றால் ஓரளவிற்கு நடமாட்டம் இருந்துகொண்டிருந்த மரத்தடி, இன்று நடமாட்டம் இல்லாமல் போனதற்கு நானும் என் கதைகளும் ஒரு காரணம் என்று பாஸ்டன் பாலா ஒருமுறை ஜல்லியடித்ததைப் போல் ராயர் காப்பி கிளப்பிலும் ஏதாவது நடந்திருக்கும். உண்மையில் எனக்கு நான் ஏன் அங்கே உறுப்பினர் ஆகவில்லை என்ற கேள்வி உண்டு. அதற்கு நான் ராயர்களைப் பார்த்து பயந்தது ஒரு காரணமாகயிருக்கலாம். நான் கண்ட இரண்டொரு பெயர்களே கூட பயமுறுத்துவதாகயிருந்தது. உங்களுக்காக ஒன்றிரண்டு எக்ஸாம்புள்கள். பிரகாஷ்ராயன், ஆஸாத்ராயன், மத்தளராயன்.

இதெல்லாம் ஜல்லிக்காக, இரா. முருகன், பா. ராகவன், ஹரியண்ணா சிலசமயங்களில் பெரிய ராயர் சுஜாதா போன்றவர்கள் எல்லாம் அங்கே எழுதவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையில், மரத்தடியில் பட்டுக்கொண்ட பிறகு, கொஞ்ச நாளைக்கு வாயையும் மற்றதையும் பொத்திக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். சரி மேட்டருக்கு.

இந்தத் தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம் ராயர் காப்பி கிளப் By இரா. முருகன். யானை படம் போட்டிருப்பதற்காகயெல்லாம் புத்தகம் வாங்கி ஒன்றிரண்டு வரி விமர்சனம் எழுத நினைத்ததில்லை. ஆனால் “அரசூர் வம்சம்” புத்தகம் கொஞ்சம் படித்ததும், சரி ஆளு என்னவாவது சொல்ல டிரை பண்ணியிருப்பாரு. படித்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் வாங்கியதுதான் இந்தப் புத்தகம். 65 ரூபாய் விலைக்குத் தேவலைதான் புத்தகம்.

சொல்லப்போனால், கற்றதும் பெற்றதுமின் ஷார்ட் வெர்ஷன் மாதிரி இருந்தது. (அது அப்படியில்லைன்னு யாராவது சொன்னால் இந்த வரியைத் தூக்கிவிடுகிறேன்.) ரொம்ப சுய புகழ்ச்சியில்லாமல், ரொம்ப ஜல்லியும் அடிக்காமல் விஷயத்தை ரொம்ப சுருக்கமாச் சொல்லியிருக்கிறார். சுஜாதா அளவிற்கு பொதுபுத்தி மக்களை கவரணும் என்ற எண்ணம் கிளப்பில் எழுதும் பொழுது இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ராயர்களை திருப்தி பண்ண மட்டும் எழுதப்பட்டதா என்று கண்ணில் விளக்கெண்ணை ஊற்றித் தேடினேன். ஆனால் அப்படிக்கிடையாது என்றுதான் தெரிகிறது.

மாந்திரீக யதாரத்தத்தில் கான்செப்டில் தன்னுடைய போட்டியாளராகக் கருதும் கார்சியா மார்க்வெஸ்ஸின் புகழ்பெற்ற நாவலை தமிழில் நக்கலாக “பெரியாத்தா கருமாதி” என்று சொல்லும் பொழுதாகட்டும். ஒரு ஓவியர் தன்னை வரைந்து தந்து சொத்தையே அபகரித்துவிடுவார் என்று சந்தேகப்படும் பொழுதாகட்டும், இந்துவை சைக்கிள் கேப்பில் நக்கல் விடும் பொழுதாகட்டும், இலக்கியச் சந்தில் சிந்து பாடும் பொழுதாகட்டும் பின்நவீனத்துவத்தின் பிளஷர் ஆப் த டெக்ஸ்ட்(Pleasure of the text) தெரிகிறது எனக்கு. ஆமாவா இல்லையா என்று சாருவிடமோ இல்லை ரமேஷ் பிரேமிடமோ கேட்கலாம்.

செப்டம்பர் பதினொன்று அமேரிக்காவில் அழித்தது உயிர்களையும் உலக வர்த்தக மையக் கட்டடங்களையும் மட்டும் இல்லை. அமேரிக்கர்கள் இதுவரை உயர்த்திப் பிடித்த தனி மனித சுதந்திரத்தையும்தான் என்று தோன்றுகிறது. இந்தப் பேச்சில் சமூகத்தின் மீதான அவருடைய பார்வை தெரிகிறது. இப்படியேத்தான் லெனி ரைபென்ஸ்தாலைப் பற்றிச் சொல்லும் பொழுது கல்யாணச்சாவாக விழுந்திருக்க வேண்டிய ஒன்று ஈசானிய மூலைச்செய்தியாக உதிர்ந்துபோனதை பற்றி எழுதியிருப்பதிலும் அவருடைய அக்கறை தெரிகிறது.

புலம்பெயராத ஈழ எழுத்தாளர், குந்தவை, இம்ப்ரஷனிஸ ஓவியர் எட்வர்ட் மனே, “குழந்தை ஏசுவின் சுன்னத் என்ற மார்க்கக் கல்யாணம்” என்ற புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த ரெம்ப்ராண்ட் என்று தொட்டுச்செல்லும் விஷயங்கள் அதிகம். பெரிய ராயர் சுஜாதாவைப் போட்டுத்தாக்குவதில் ராயர்களுக்கே உரிய நக்கல், எஸ்ரா ரொம்பச் சீரியஸாக, இதுவரை மூன்று நான்கு நாவல்கள் தான் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருக்கும். இவருக்கு ரஜினி சார் ஞாபகம் வருவது, அப்படியே கிருஷ்ணனுடைய “புளிநகக்கொன்றையை” கிழித்துத் தொங்கவிட்டு, ஜெர்மன் ஐயங்காரைப் பற்றி கேள்வி கேட்கப்படும் பொழுதும் தெரிகிறது.

நிறைய விஷயங்களை அவருடைய தெளிந்த நடையில் தந்திருக்கிறார்.

கோயில் மணியின் குரலும் ஒடுங்கிட
வாயில் அழுகை உயர்ந்திடும் சாவில்
அசைவு மறந்த சடலம் சிரிக்க
வசவு மொழியும் கிளி.

இது போல நடைமுறை வெண்பாக்கள் அங்கங்கே சொருகப்பட்டு படிப்பதற்கு நன்றாயத்தான் இருக்கிறது. இந்த இரா. முருகனின் ராயர் காப்பி கிளப்.

PS: அங்கங்கே ஸ்மைலி போட வேண்டும் என்று நினைத்தவாறே தான் எழுதினேன் எழுதிய பிறகு தான் தெரிந்தது. அப்படிப்போட்டால் பதிவில் ஸ்மைலி இல்லாமல் ஸ்மைலியில் பதிவு இட்டதாக ஆகிவிடும் ஆதலாம் ஒன்றைக்கூட போடவில்லை.

நான் போட நினைத்திருப்பேன் என்று நினைக்கும் இடங்களில் நீங்களே போட்டுப் படித்துக்கொள்ளுங்கள்.

போக்கிரி - பார்க்கலாம் போங்க

போக்கிரி - பார்க்கலாம்

இந்த வாரம் தொடர்ச்சியாக திரை விமரிசனங்கள் தரலாம் என்று உத்தேசம். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்தப் படத்தின் விமர்சனம். உண்மையில் திருவிளையாடல் ஆரம்பம் படத்தைப் பார்த்துவிட்டும் அதற்கான விமர்சனத்தை எழுதிவிட்ட பிறகும் சரி. நான் ரொம்ப நாட்களுக்கு அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு பொதுபுத்தி கிடையாது என்று மெய்ப்பிப்பதற்காக எழுதப்பட்ட விமர்சனம் மட்டும் தானா அது என்று.

ஏனென்றால் அப்படிப்பட்ட விமர்சனங்களை நான் வலையுலகில் பார்த்ததுண்டு. மேலும் நான் அப்படிப்பட்ட ஒருவனாய் மாறி வருகிறோனோ என்ற சந்தேகம் எனக்கு அந்த விமர்சனம் எழுதத் தொடங்குவதற்கு முன்பே வந்தது. ஏனென்றால் இந்த வித்தியாசம் எனக்கு புத்தகம் படிப்பதில் வந்துவிட்டிருந்தது. அல்லது வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். அதனாலும் சினிமாவில் எனக்காக ஏற்படாத பொதுபுத்தியிலிருந்து விலகிவிட்டதான ஒரு மனநிலையை நானாக என் மீது திணித்துக் கொள்கிறேனோ என்று என்னை நானே சந்தேகிக்கத் தொடங்கினேன்.

ஆனால் ஒவ்வொரு முறையும் இல்லை நான் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் விமர்சனத்தை அந்த ஒரு காரணத்தை மனதில் கொண்டு எழுதவில்லை என்று நிரூபணமாகிவருகிறது. அதற்கு இன்னுமொறு உதாரணம் இந்தப் போக்கிரி படம்.

படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு குறையைத் தவிர, ஒரு தமிழ் படத்திற்குத் தேவையான அத்தனை விஷயங்களும் கச்சிதமாக பொறுந்தி இருக்கிறது இந்தப்படம். விமர்சனத்தைப் படித்த பிறகும் அதற்கும் முன்பும் ஒரு மட்டமான விஜய் படத்தைப் பார்க்கப்போகிறேன் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. ஆனால் அப்படியில்லை மூன்று மணிநேரம் உட்கார்ந்து பார்க்கக் கூடிய அளவில் தான் இருக்கிறது இந்தப் படம்.

தேர்ந்த நடிகர்கள், பிரகாஷ்ராஜ், நாசர், நெப்போலியன் மற்றும் கொஞ்சமாக ஜொள்ளுவிட அசினும் இருக்கிறார்கள் படத்தில். வடிவேலுவின் காமேடி சில இடங்களில் அசிங்கமாக இருந்தாலும் மக்கள் வடிவேலு வந்ததுமே சிரிக்கிறார்கள். பாடல்கள் அனைத்துமே கேட்கக்கூடிய அளவில் இருக்கின்றன. இரண்டு பாடல்களின் நடனமும் நன்றாக இருந்தது.

பிரபுதேவா, விஜய் காம்பினேஷன் என்பதால் இன்னமும் எதிர்பார்த்தேன் நடனத்தில். லாஜிக் ஓட்டைகளே இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், பளீரென்று தெரியுமளவிற்கு ஒன்றும் இல்லை. (விஜய் போலீஸ் என்று விமர்சனம் படித்திருந்ததால் ஒருவேளை அந்த லாஜிக் உதைக்கலையோ என்னவோ.) நிறைய விஷயங்கள் யோசித்துச் செய்திருக்கிறார் பிரபுதேவா. தமிழ்ப்படங்களில் நடன இயக்குநராக பணி செய்திருந்து நன்றாக உதவியிருக்கிறது.

ஓவர் சென்டிமெண்ட் பில்டப்புகள் கிடையாது, ஒன்றுக்கும் உதவாத பஞ்ச் டயலாக்குகள் அதிகம் கிடையாது. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவரா, ரத்தம் துப்பாக்கி சினிமாவில் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரிந்தவரா(அதாவது எல்லாம் நடிப்பென்று - அவ்வளவே) அப்படியென்றால் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

நான் த டிபார்ட்டட் பார்த்ததனால் வந்த பாதிப்பா என்று தெரியாது, காட்சிகளை அந்தப் படங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டே வந்தேன். விஜய்யின் படங்களில் கில்லிக்கு அடுத்தது இன்னொருமுறை சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம் என்று உத்தேசித்திருக்கும் படம் போக்கிரி.

விஜய்யின் ரியாக்ஷன்கள் தெரிந்திருந்ததால் அப்படியொன்றும் அவரிடம் இருந்து பெரிதாக எதிர்பார்த்துப் போகவில்லை. விஜய்க்கு பிரமாதமாக வருகிறது என்று சொல்லமுடியாவிட்டாலும் நகைச்சுவை நன்றாக வருகிறது. ஸ்டண்ட் காட்சிகளில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. என்ன த டிபார்டட்டில் சைலன்சர் பொறுத்தப் பட்ட துப்பாக்கி விஜய்யிடம் அது இல்லை, அங்கே பல்க் பல்க் என்று சுட்டதும் ஆட்கள் விழுவார்கள் இங்கே டமார் டமார் என சுட ஆட்கள் விழுகிறார்கள். பிரகாஷ்ராஜ் அந்தச் செல்லத்தை கொஞ்சம் விட்டுவிடலாம். மற்றபடிக்கு ஒரு சிறு கேள்வி, விஜய்யும் அசினும் சந்திக்கும் சமயங்களில் எல்லாம் பின்னணியில் ஓடவிடப்படும் அந்த மியூசிக் டிராக் எங்கேயோ ஒரு ஆங்கிலப் படத்தில் முன்பே கேட்டது போன்ற உணர்வு. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Saturday, January 27, 2007

பகுத்தறிவு என்றால் என்ன?

பகுத்தறிவு என்றால் என்ன?

நல்ல கேள்வி ;),

//எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு.//

இந்த நல்லது எது கெட்டது எது என்று தீர்மானிப்பது எப்படி. உங்களுக்கு நல்லாதாகப் படும் விஷயம் எனக்கு தவறானதாகப் படும் இல்லையா? சதாம் தலையில் தட்டியதை நான் உட்பட பலர் அவரவர்களுக்கு தெரிந்த விஷயங்களைக் கணக்கிட்டு கெட்டது எனத் தீர்மானிக்கிறோம் என்று வையுங்கள். அமேரிக்காவிலோ, இல்லை ஈராக்கிலோ அவரவர்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கணக்கிட்டு நல்லது என்று நினைக்கிறார்கள் என்றால் நீங்கள் சொன்ன தத்துவப்படி இருவருமே பகுத்தறிவு வாதிகள் ஆகிறீர்கள் இல்லையா?

அப்ப இந்தப் பிரச்சனையில் யார் உண்மையான பகுத்தறிவுவாதி எனத்தீர்மானிக்க, யாரை அதிகம் பேர் ஆதரிக்கிறார்களோ அது உண்மை என்று வைத்துக்கொள்ளலாமா என்றால் சிறுபான்மை மக்கள் உதைப்பார்கள், தாங்கள் தான் அறிவாளி என்று அதிகம் பேர் நம்புகிறார்கள் என்பதற்காக உண்மையல்லாத ஒன்று உண்மையாகிவிட முடியாது என்பார்கள்.

ஏனென்றால் உண்மை என்பது ஏதாவது ஒன்று தான் இருக்க முடியும் இல்லையா? வேண்டுமானால் ஜான் நேஷின் கேம் தியரிப்படி, ஒரு பிரச்சனைக்கு பல தீர்வுகள் இருக்கமுடியும் என்ற நம்பிக்கைக்கு வருவோமேயானால். ஆத்தீகவாதிகளும் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளலாமேத் தவிர, நாத்தீகர்கள், இனிமேல் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாதுதானே.

ஏன்னா பகுத்து நீங்க அறிஞ்சி கடவுள் தான் எல்லாத்தையும் படைத்தார், காக்கிறதையும் அழிக்கிறதையும் கூட அவர்தான் செய்கிறார். கூடவே அரிசியையும் படைத்து அதில் பேரையும் எழுதி வைக்கிறார் போன்ற விஷயங்களைச் சொன்னால் கடவுளை நம்பும் மக்களுக்கு அது பகுத்தறிந்த வாதமாக இருக்கும், இருக்கலாம் தவறில்லை.

இந்த பிரபஞ்சமே ஒரு புள்ளியில் இருந்து வெடித்துக் விரிவானது, ஒரு எலாஸ்டிக்கைப் போல, அந்த எலாஸ்டிக் எப்படி விரிவடைந்தோ அப்படி சுருங்கவும் செய்யலாம். அப்படின்னு அறிவியல் சொன்ன கருத்துக்களை மட்டுமே நம்பும் ஆக்கள்(நாத்தீகவாதின்னு சொல்லலை) அது தான் பகுத்தறிந்த வாதமாக இருக்கும் இல்லையா.

அதனால் என்னுடைய ஒரே தீர்வு. இதுதான் ஆன்மீகவாதிகள் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளலாம் தவறில்லை, (இது கூட்டமாக சிந்திக்கும் மக்களுக்கும் பொருந்தும் தனியாக சிந்திக்கும் மக்களுக்கும் பொருந்தும்.)

கடேசியாக - வெட்டிப்பயலின் பதிவிலேயே பின்னூட்டம் போட்டிருந்தால் 48ல் ஒன்றாக போயிருக்கும், மேலும் வலைபதிவிற்கு ரேட்டிங் தரும் இன்னபிற விஷயங்களில் என்னுடைய பின்னூட்டத்தால்(நான் கிளிக்கியது, நான் கிளிக்கியத்தற்காக, அவர் கிளிக்கியது இப்படி) அவருக்கு நிறைய நன்மை ஏற்படும்.

இதே நாம ஒரு பதிவு போட்டா, நமக்கு கிளிக்கு ஏறின மாதிரியும் இருக்கும். சொல்ல நினைத்த விஷயத்தை சொன்னமாதிரியும் இருக்கும் நான் நினைத்து இப்படிப் பண்ணுவதால் நானும் கூட ஒரு பகுத்தறிவாளனே.

Thursday, January 25, 2007

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்ஸும் ஜல்லியடித்தலும்

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence A.I.)

இது ஒரு கடலைப்போன்ற விஷயம், அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் வந்து குவியும். நான் கணிணியியல் படிக்கத்தொடங்கியதும் என்னைக் கவர்ந்த ஒரு மிக அற்புதமான பிரிவு இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். இதைப் பற்றியும் கொஞ்சம் ஜல்லியடித்துவிட்டு போகலாமென்றுதான் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

இயந்திரங்களையும் சுயமாக அறிவுப் பூர்வமாக சிந்திக்க வைக்க நடக்கும் ஒரு அறிவியல் சார்ந்த முயற்சியே இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். மிக முக்கியமாக கணிணியை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்க முயற்சி என்றே கூறலாம். கணிணி கண்டுபிடித்த தொடக்கத்திலேயே இது சம்மந்தமான ஆராய்சிக்களும் தொடங்கிவிட்டது. மனிதனைப்போலவே, இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கவே இந்த முயற்சிகள் பெரிதும் செய்யப்பட்டன.

80 களில், இது சம்மந்தமான முயற்சிகளுக்கு அமேரிக்க அரசாங்கம் அதிக அளவில் பொருள் செலவழித்தது. அதைப்போலவே ஜப்பானும் ஐந்தாம் தலைமுறை கணிணி (Fifth Generation Computer) என்ற பெயரில் இது சம்மந்தமான முயற்சிகளை அதிக பொருள்செலவில் ஊக்குவித்தது. ஆனால் இவை அந்த அளவிற்கு வெற்றிகளை குவிக்காததால், இதற்கான ஃபண்ட்ஸ்(Funds) விரைவில் குறைத்துக்கொள்ளப்பட்டது.

கணிணிகள் தற்சமயம் வரை நாம் செய்யச் சொன்னது போலச் செய்யுமே ஒழிய தானாக சிந்திக்கவோ இல்லை முடிவுகளை எடுக்கவோ செய்யாது. வேண்டுமானால் ஒரு பிரச்சனை சார்ந்த விஷயத்திற்கு மனிதனைப்போல சிந்திக்க கணிணிகளை பழக்கப்படுத்த முடியும். இதற்கு தற்சமயத்தில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பயன்படும் சில துறைகளையும் அது எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் புரிந்துவிடும்.

தற்பொழுது இருக்கும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் முறைகளில் கணிணி தானே சிந்தப்பது என்பதற்கு அது பிரச்சனை சார்ந்து, அதிகம் தனக்குத்தானே கணக்கிட்டுக்கொண்டு முடிவு எடுக்கிறது எனக் கூறலாம். உதாரணமாக செஸ் ஆட்டத்தை எடுத்துக்கொள்வோம் இதில் கணிணி எப்படி விளையாடுகிறது, எப்படி கணக்கிடுகிறது என்பதைப் பார்த்தோமானால் கணிணி எப்படி தானாய் சிந்திக்கிறது அல்லது தானாய் எப்படி சிந்திக்க வைத்தார்கள் என்பதை அறியலாம். முதலில் நாம் 8 குயின் பிராப்ளம் (8 queen problem or n queen problem) என்ற ஒரு முறை உண்டு அதைப்பார்ப்போம்.

செஸ் ஆட்டத்தில் இராணியின் நகர்வுதிறன் உங்களுக்கு தெரிந்திருக்கும், தான் இருக்கும் இடத்திலிருந்து நேராகவும் குறுக்காகவும் நகர முடியும் ராணியால். மொத்தம் 64 கட்டங்கள் கொண்ட செஸ் அட்டையில், ஒரு இராணியின் ஆளுமையை(நேராகவோ, குறுக்காகவோ) மற்றொரு ராணி மறிக்காமல் மொத்தம் எட்டு ராணிகளை வைக்க வேண்டும். இன்னும் சுலபமாக சொல்லவேண்டுமானால் ஒரு செஸ் போர்டில் எட்டி ராணிகளை ஒன்றையொன்று வெட்டாமல் வைக்க வேண்டும்.

இப்படி வைப்பதற்கு கணிணி முறையில் ஒரு கொள்கையை பயன்படுத்துகிறார்கள், அது பேக் டிராக்கிங்(Back Tracking), அதாவது முதலில் ஒரு ராணியை போர்டில் வைத்துவிடுகிறோம் பின்னர், அடுத்த ராணியை வைப்பதற்கான முயற்சியில் கணிணியானது முதலில் தான் எங்கே அந்த ராணியை வைக்க முடியும் என சிந்திக்காமல் எங்கெல்லாம் வைக்க முடியாது என சிந்தப்பதை தான் பேக் டிராக்கிங் என அழைக்கிறார்கள். இதன் காரணமாக அடுத்த ராணியை எங்கு வைப்பது என கண்டுபிடிப்பதில் நமக்கு ஆகும் கணக்கிடுதலின் பணி குறையும். (The backtracking method is based on the systematically inquisition of the possible solutions where through the procedure, set of possible solutions are rejected before even examined so their number is getting a lot smaller. )

கீழே உள்ளதும் இது போன்ற ஒன்றுதான் இது தானாகவே ஒன்றிலிருந்து அடுத்தது என எட்டு ராணிகளை வைக்கும் ஒரு ப்ரோக்கிராமே. நெக்ஸ்ட் ஸொல்யூஸனைக்(Next Solution) கிளிக்கும் பொழுது புதிது புதிதாக எத்தனை முறைகளை (எட்டு ராணிகளை வெட்டாமல் வைக்கும் முறை) பாருங்கள். இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுதப்பட்டது கிடையாது.



இதை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸின் முதல் படி எனலாம். இப்படி அடுத்த ராணியை வைப்பதற்கு முன் முறைப்படி நிராகரிக்கவும் பின்னர் அடுத்த வைத்தலைப்பற்றிய கணக்கையிடவும் கணிணிக்கு சொல்லிவிட்டால் கணிணியால், ஒன்றன் பின் ஒன்றாக எட்டு ராணிகளை வைக்க முடியும் இதுதான் முதல் பரிமாணம் கணிணியில் செஸ் ஆட்டத்திற்கு.

இதைப்போலவே உண்மையான செஸ் ஆட்டத்திற்கான கணக்கு முறையும் இப்படித்தான் தொடங்கும் முதலில் எங்கெல்லாம் வைக்க முடியாது எனப்பார்ப்பது. பின்னர். ஏற்கனவே தன் நினைவில் இருக்கும் நகர்த்துதளின் படி அடுத்த நகர்ததலை தேர்ந்தெடுப்பது போன்றவைதான் ஒரு தேர்ந்த சதுரங்கக்கணிணியை உருவாக்குகிறது. அதாவது இந்த வகை ஆர்டிபிஷியல் இன்டெலிஜனஸ் கணிணிகள் முன்னால் நடந்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும், அதாவது முன்னர் விளையாடிய ஆட்டத்தின் நகர்தலை.


கீழே உள்ளதும் ஒரு சதுரங்கக் கணிணியே இதில் நீங்கள் முதலில் நகர்த்த வேண்டும் பின்னர் கணிணி எவ்வளவு கணக்கிடுகிறது எனப்பார்க்கலாம். தன்னுடையதையும்(பிராஸஸர்) நம்முடையதையும். அது போடும் பச்சை மற்றும் மஞ்சள் கோடுகள் அது சிந்திக்கும் அடுத்த நகர்த்தல்கள்.இது ஒரு முழுமையான சதுரங்கக்கணிணி கொஞ்சம் சிந்தித்து விளையாடினால் இதை வெல்லலாம். ஆனால் போன பதிவில் சொன்னதைப்போல டீப்புளு போன்ற உலக வல்லுநர்களையே தோற்கடிக்கும் சதுரங்கக்கணிணிகள் புழக்கத்தில் உள்ளன.



கையெழுத்தை உணர்ந்து கொள்வது(handwriting recognition), பேசுவதை உணர்ந்து கொள்வது(speech recognition), முகங்களை உணர்ந்து கொள்வது(speech recognition), இமேஜ் பிராஸஸிங்(Image Processing), பிறகு நம் அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு சம்மந்தமான ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(Game AI).

இந்த ஒவ்வொரு துறையுமே ஒவ்வொரு பெரிய கடலைப்போன்ற ஆராய்ச்சிகளை தன்னுள் அடக்கயது. கையெழுத்தை உணர்வது என்று வைத்துக்கொண்டால், நீங்கள் எழுதும் எழுத்தையோ இல்லை வார்த்தையையோ, தன்னிடம் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் வார்த்தைகளஇடம் ஒப்பிட்டு கண்டறிவது. இதைப் போலவே முகங்களை அறிவதும், பேசுவதை அறிவதும் பாட்டர்ன் ரெககனைசிங்(Pattern Recoginition) சொல்லப்படும் இந்த ஒப்பிடுதல் முறைகளால் நடைபெறுகிறது.

இதைப் போலத்தான் இமேஜ் பிராஸஸிங் அதாவது ஒரு இமேஜை இன்புட்டாக கொண்டு செய்யப்படும் எல்லா வேலைகளுமே இதில் அடங்கும், இமேஜ்கள் சிக்னல்களாகவோ, புகைப்படங்களாகவோ, இல்லை இரண்டு பரிமான திரைப்படங்களாகவோ இருக்கும். அந்த இமேஜ்களை இருப்பதை விட பெரிதாக்குதல், சிறிதாக்குதல், சுழற்றுதல், காணப்படும் வண்ணங்களை மேம்படுத்துதல், ஒப்பிடுதல், ஒலியில் இருக்கும் இரைச்சலை குறைத்தல் போன்றவைகள் தான் முக்கியமானது.

இதனால் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது சில அல்லது பல அரிய சூத்திரங்களை கணிதமுறைகளை பயன்படுத்தி கணிணியை ஓரளவு சிந்திக்க வைப்பது. ஆனால் மனித அளவுக்கு சிந்திக்க முடியாததற்கு காரணம் இதுவரை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸில் இருக்கும் முறைகளின் அடிப்படைகளிலேயே பிரச்சனையிருப்பது தான்.

Computability and computational complexity theories are relevant to AI but don't address the fundamental problems of AI. Intelligence is the computational part of the ability to achieve goals in the world. The problem is that we cannot yet characterize in general what kinds of computational procedures we want to call intelligent.

The ultimate effort is to make computer programs that can solve problems and achieve goals in the world as well as humans. However, many people involved in particular research areas are much less ambitious. A few people think that human-level intelligence can be achieved by writing large numbers of programs of the kind people are now writing and assembling vast knowledge bases of facts in the languages now used for expressing knowledge. However, most AI researchers believe that new fundamental ideas are required, and therefore it cannot be predicted when human level intelligence will be achieved.

கற்றதனால் ஆய பயனென்ன?

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.

"தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை." வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு விக்கி மக்கள் கொடுத்திருக்கும் விளக்கம்.

உண்மையில் கல்வி கற்பது என்பதை நாம் ஒரு விஷயமாக பெரும்பாலான இடத்தில் எடுத்துக்கொள்ளவே முடியாது. அதனால் தான் இன்றுவரை இந்தியாவில் அரசியல்வாதியாவற்கு கல்வி ஒரு கட்டாயமாக்கப்படவில்லை. என்னதான் நீங்கள் ஐஏஎஸ் படித்திருந்தாலும் புத்தக அறிவு என்பது ஒரு மட்டிற்கு மேல் உதவாது. இதை பல சமயங்களில் நான் நேரிடையாகவேப் பார்த்திருக்கிறேன்.

வேண்டுமானால்(அதுவும் கூட சொல்லமுடியாது தான் என்றாலும்) அமேரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இது உதவலாம். நிச்சயமாக ஆசிய நாடுகளில் இதை நீங்கள் எதிர்பார்க்கமுடியாது. இதனால் தான் நாம் பெரும்பான்மையான சமயங்களில் அமேரிக்க மக்களை மனதில் கொண்டு நாம் சொல்லும் விஷயங்கள் இந்திய மக்களிடம் எடுபடுவதில்லை.

நான் நிச்சயமாக இது சரியா தவறா என்பதைப் பற்றி பேசவில்லை, உண்மையில் அமேரிக்க மக்கள் செய்வது சரியாகவும், இந்தியர்கள் செய்வது தவறாகவும் இருக்கலாம். ஒரு இந்தியப் பிரச்சனையை அமேரிக்கக் கண் கொண்டு பார்ப்பதற்கும், இந்தியக் கண் கொண்டு பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இல்லையா? அதுவும் மதம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணியம் போன்ற பிரச்சனைகளை அமேரிக்கக் கண் கொண்டு பார்ப்பதில் நிறையப் பிரச்சனை உண்டு.

இதைப் பற்றி யோசிக்கும் பொழுது முன்பொரு காலத்தில் கவனத்தை ஈர்த்த விஷயம் நினைவில் வருகிறது. எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு மூன்று முறைகள் உண்டென்று அமேர்க்கர்கள் சொல்வார்களாம், சரியான வழி, தவறான வழி, இந்த இரண்டு வழிகள் நமக்கும் தெரிந்திருக்கும் மூன்றாவது வழி அமேரிக்கன் வழி. அதாவது In three ways you can solve a problem, right way, wrong way and the american way.

இது சும்மா(எனக்குத் தெரிந்த மொழியென்றும் வைத்துக்கொள்ளலாம்.)

நீ எம்பிபிஎஸ் படித்திருக்கிறாய் வரதட்சணை வாங்குகிறாயே என்று கேட்பது அமேரிக்கன் கண் கொண்டு பார்க்கும் பொழுது சரியானதாகவே இருக்கலாம். இதனாலெல்லாம் இந்தியக் கண் கொண்டு பார்க்கும் பொழுது எனக்குத் இது தவறாகத் தெரிவதாகவும் நான் பழமைவாதியென்று பைத்தியக் காரனென்றும் சொல்வீர்களானால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

என் பதில் வரதட்சணை வாங்குவது தவறு, அவன் படித்தவனாக இருந்தாலும் படிக்காதவனாக இருந்தாலும், அதைப்போலவே பெண்ணியம் சார்ந்த கருத்துக்களும். என் பெண்ணியக் கருத்துத்கள் என்னுடனேயே இருக்கட்டும். ஆனால் ஒருவர் பெண்ணியக் கருத்துக்களைப் பேசுவதாலேயே அறிவுள்ளவர் என்றும், கற்றதனால் ஆய பயனை அடைந்தவர் என்றும் சொல்ல முடியாதல்லவா.

அதே போல் ஸ்டிரிங் தியரிப்படி, நாம் பார்க்கும் பரிமாணங்களை விடுவும் அதிகப் பரிமாணங்கள் இருக்க வாய்ப்பிருப்பதாக நம்பும் இந்த அறிவியல் காலத்தில் பெண்ணியத்திற்கு மட்டும் இரண்டு பரிமாணங்கள் தான் இருக்க முடியுமா? அதாவது பெண்ணியத்தை ஆதரிப்பவர்கள், பெண்ணியத்தை எதிர்ப்பவர்கள்.

பெண்ணியம் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது கருப்பா சிவப்பா, நீளமா குட்டையா என்று அறியாத என்னைப் போன்ற மேல்மாடி காலியானவர்களை என்ன செய்வது. நீங்கள் உங்கள் மனதிற்குள் நினைத்துக்கொள்ளும், அல்லது கோர்வையான வார்த்தைகளால் படிமமிட்டு சொல்லும் ஒன்றை விடவும் விலகியதாக ஏன் பெண்ணியம் இருக்கக்கூடாது. அதாவது உங்களுக்கும் பிடிபடாதா ஒரு பரிமாணமாய்.

பெண்ணியம் பற்றி கட்டுரை கட்டுரையாக எழுதுவதாலேயோ, உங்களுக்கு ஒத்துவராத கருத்துக்களைக் கொண்டவர்களை(இந்த விஷயத்தில்) மூடன் என்று சொல்வதாலேயோ மட்டும் ஒருவர் பெண்ணியவாதி ஆகிவிட முடியாது. அதே போல் பெண்ணியம் பற்றி எழுதும் பொழுதெல்லாம் நக்கல் தரும் பதிலை ஒருவர் தருவதனாலேயே ஒருவரை பெண்ணியம் பற்றிய சிந்தனை இல்லாவர் என்றும் சொல்லமுடியாதில்லையா. ரொலான் பார்த் சொல்வதைப் போல Text ஐ ரீடர்லி டெக்ஸ்ட் ரைட்டர்லி டெக்ஸ்ட் என்று இருவகைப் படுத்தலாம் என்றால். சிலருடைய எழுத்துக்கள் sub-text பொருந்திய ரைட்டர்லி டெக்ஸ்ட் ஆகவும், சிலருடையவை மேம்போக்காக எழுதப்படும் ரீடர்லி டெக்ஸ்ட் ஆகவும் ஆகிவிடுவது அவரவர்களுடைய குற்றம் இல்லை தானே.

நாம் அனைவரும் அவரவர்களுக்குப் பொறுந்தும், கண்ணாடியின் முன் நிற்கும் பொழுது அழகாகக் தெரியும் முகமூடியை அணிந்திருக்கிறோம், அப்படி அணிந்திருக்கிறோம் என்ற உணர்வேயில்லாமல். முகமூடி பெரும்பாலும் கழட்டப்படுவதில்லை, ஏனென்றால் உண்மை நிச்சயமாய் தாங்கக்கூடியதாக இருப்பதில்லை பெரும்பான்மையான சமயங்களில். ஏனென்றால் நமக்கு முகமூடியில்லாத உண்மை முகங்களை பிடிப்பதில்லை, பொய் என்று தெரிந்திருந்தும் அப்படியான ஒன்று உண்மையாகவே இருக்க முடியாதென்று தெரிந்திருந்தும் நாம் முகமூடிகளைத் தான் விரும்புகிறோம் இல்லையா.

முகமூடி இல்லாமல் போய்விட்ட சமுதாயம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் ஒரு காலத்தில் முகமூடி இல்லாமல் இருப்பது தவறுதான். எப்படி குருடர்களை மட்டும் கொண்ட ஒரு நாட்டில் ஒற்றைக் கண் உடையவன் அரசனாக முடியுமோ அப்படி. கடேசியாகச் சொல்லிக் கொள்வது ஒன்றைத்தான் கல்வியை அடிப்படையாக மட்டும் வைத்து எதையும் மதிப்பிடாதீர்கள். அவ்வளவே.

-----------------

இது எழுதப்பட்டதன் நோக்கம் வெளிப்படையாய், கற்றதனால் ஆய பயனென்ன? என்று நண்பரொருவர் எழுதிய தொடர் கட்டுரைக்கு, எழுதிய பின்னூட்டம் பதிவிடப்படாமல் அதற்கான காரணமும் அவரது மொழியில் அதாவது எனக்கு பி(Spelling mistake இல்லை)ரியாத மொழியில் இருப்பதால். அந்தப் பின்னூட்டத்தை இங்கே வெளியிடும் உத்தேசம் அவ்வளவே. உண்மையானப் பின்னூட்டம் என்னிடம் இல்லாத காரணத்தால், நான் சொல்ல விரும்பிய செய்தி மட்டும் இங்கே.

"உங்கள் கட்டுரையை புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு எனக்கு மேல்மாடி காலியென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களின் இந்தக் கட்டுரைக்கு கற்றதனால் ஆய பயனென்ன என்று தலைப்பிட்டுருப்பதற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் உண்டா? சொல்வீர்களானால் புரிந்து கொள்ள முயற்சி செய்வேன் என்பது."

Wednesday, January 24, 2007

déjà vu

மோகனுடைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்திருந்தது. இன்றோடு அவன் காத்திருக்கத் தொடங்கி சரியாய் ஏழாண்டு நிறைவடைகிறது. இன்று அவனுக்கு விடுதலை நாள், தான் செய்த கொலைக்கான தண்டணைக்காலம் இன்றோடு முடிவடைகிறது என்பதற்காக மட்டும் அவன் இந்த நாளுக்காக காத்திருக்கவில்லை. அவன் செய்த கொலையையே இல்லாமல் செய்துவிடும் வல்லமை பெற்ற நாள்தான் என்பதற்காகவும்தான்.

இன்னும் அந்த நாள் பசுமையாக அவன் மனதில் இருக்கிறது. அவனுடைய நண்பனுக்கும் அவனுக்குமிடையில் ஏற்பட்ட தொழில்முறை பிரச்சனைகளின் காரணமாக, ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் மோகன் அவன் நண்பனை கொன்றுவிட்டான். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு நிமிட குழப்பத்தில் அவன் அந்தக்கொலையை செய்துவிட்டான். அணுஆயுதப்போரால் உலகமே பேரழிவுக்கு உட்பட்டிருந்த காலமது. உயிரின் மதிப்பு மிக அதிகமாகயிருந்தது. அவனுடைய நண்பன் அவனை ஏமாற்றியிருந்த பொழுதும் அது சரிவர நிரூபிக்கப்பட்ட பொழுதும் அவனுக்கு ஏழாண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. மனித குலமே அழிவின் பிடியில் இருந்ததால், உலகின் எல்லா நாடுகளிலுமே மரணதண்டனை இல்லாமல் இருந்தது.


முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்று மோகன் படித்திருந்த உலகப்போர்கள் நடந்துமுடிந்த மூன்றாவது நூற்றாண்டில் பூமியை பெரும் ஆபத்திற்குள்ளாக்கிய அணுஆயுதயுத்தம் நடைபெற்றது. ஒரு நூற்றாண்டாகவே எதிர்பார்க்கப்பட்ட யுத்தம் நடந்தது பலருக்கு வியப்பை அளித்திருக்கவில்லை. ஆனால் அதன் பிறகு கணிணித்துறை மிக அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருந்தது. ஐன்ஸ்டினின் புவியீர்ப்பு விசையையும், க்வாண்டம் சக்திகளையும் ஒரே சமன்பாட்டில் ஒருமித்து அறியும் ஆசை நிறைவேறியிருந்தது. க்வாண்டம் கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டிற்கு வந்திருந்தன.


ஸ்டிரிங் தியரி என அறியப்படும் பல பரிமாணக் கொள்கை அதன் எல்லைகளைத் தொட்டிருந்த காரணத்தினால், வார்ம்ஹோல் எனப்படும் மனிதன் கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்யும் உதவும் இயந்திரங்கள் உருவாக்கபட்டிருந்தன. இதன் காரணமாக ஐன்ஸ்டனின் சில கோட்பாடுகள் தவறானவை என்றும் நிரூபிக்கப்பட்டிருந்தன. அதாவது விண்வெளி வளைந்திருக்கிறது என்று சொன்ன ஐன்ஸ்டின் விண்வெளியை நீட்டவோ மடக்கவோ முடியுமென்றார். ஆனால் விண்வெளியை சிறிய அளவில் வெட்டுவதென்பது முடியாதென்று நம்பியிருந்தார். ஆனால் ஸ்டிரிங் தியரி விண்வெளியை சிறிய அளவில் வெட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை நிரூபித்திருந்தது. நாம் சாதாரணமாய் அறிந்திருந்த முப்பரிமாணங்களை விடவும் அதிகமான பரிமாணங்களாலும் நாம் இதுவரை அறிந்திராத இடங்களாலும் நாம் சூழப்பட்டிருக்கிறோம் என்பதான ஒன்றை ஸ்டிரிங் தியரி விளக்கியது.


கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்யும் ஊர்திகள் கண்டறியப்பட்டிருந்தாலும், அதன் துணை கொண்டு வரலாற்றை மாற்ற நினைக்கும் முயற்சிகளை அடியோடு நிறுத்திவிடும் எண்ணத்தால் இதன் அத்தனை செயல்பாடுகளும் கணிணிமனிதர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அதாவது ஆரம்பக்காலத்தில் நடைபெற்ற பரீட்சிதார்த்த முயற்சிகள் உட்பட்ட, மனிதனால் நடைபெறக்கூடிய சிறு தவறுகளும் நடைபெற்று விடாமல் இருப்பதற்காக கணிணிமனிதர்களால் கட்டுப்படுத்தப்பட்டு, வரலாறு மாற்றப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டிருந்தது.


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, சோதனை முயற்சியாக கொலைகள் நடந்து அதற்கான தண்டனையை கொலைசெய்த நபர் அனுபவித்துவிட்ட நிலையில் கடந்த காலத்திற்கு செல்லும் ஊர்திகளைப் பயன்படுத்தி அந்த கொலை நடந்ததற்கு சில விநாடிகளுக்கு முன்னர் சென்று அந்தக் கொலைகளை நிறுத்திவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுவந்தன. ஆனால் இதிலும் சில விதிமுறைகள் இருந்தது, அதாவது கொலை செய்த மனிதனின் மனதிலிருந்து, அவன் கடந்த காலத்தில் கொலை செய்த அந்த நொடியிலிருந்து சோதனை முயற்சிக்கான காலம் வரையிலான நினைவுகள் அகற்றப்படும். அவன் அந்தக்கொலை செய்த குறிப்பிட்ட நிமிடத்தில் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தானோ அதே மாதிரியான ஒருமனநிலையை அவர்கள் உருவாக்குவார்கள்.


வரலாற்றை தாங்களாகவே மாற்றாமல் அந்த மனிதனின் மனம் அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் தானாகவே மாறி கொலை செய்வது தடுக்கப்படுகிறதா? இரண்டாவதாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கொலை செய்யாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் எப்படிப்பட்டவை என்பதற்கான ஆராய்ச்சி நடந்துவந்தது. அப்படி அந்த சூழ்நிலையில் கொலை செய்யாமல் இருந்தால் அவர் அந்த நொடியிலிருந்தே தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் வாழலாம். அப்படியில்லாமல் மீண்டும் கொன்றுவிட்டால், அவர் தண்டனைக்காலம் முடிந்த நொடியிலிருந்து தன் வாழ்க்கையை தொடரலாம். இதனுடைய ஒரே பயனாக அந்த கொலை செய்த நபரின் சமுதாய மதிப்பு மாற்றப்படும். அதாவது அவர் கொலை செய்யாதவராக சமூகத்தில் மீண்டும் வாழ்வதற்கான ஒரு சூழ்நிலை அமையும்.


ஆனால் இதுவரை ஏறத்தாழ ஆயிரம் மனிதர்களிடம் நடைபெற்ற இந்த சோதனையில் இதுவரை எவருமே மீண்டும் அந்தக்கொலையை செய்யாமல் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு கொலையாளியும் அந்த முயற்சியை செய்யவே விரும்பினர், மோகனைப்போல.


"நீங்கள் சோதனை முயற்சிக்குத் தயாரா?" கணிணிக்காவலர்கள் கேட்டதும், ஒருவழியாய் மீண்டும் சுயநினைவிற்கு வந்தான் மோகன்.


அவன் தயார் என்று சொல்ல அந்த கணிணிக்காவலர்கள் மோகனை வார்ம்«?£ல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். மோகன் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். அந்த முயற்சி இதுவரை வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் கூட அவன் முழுமனதாக தான் அந்த கொலையை மீண்டும் செய்துவிடமாட்டோம் என்று நம்பினான்.


அதற்காக அவன் தீவிரமான மனப்பயிற்சி எடுத்துவந்தான். தன்னுடைய நினைவை அவர்கள் அழித்துவிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் மனதை ஒருவிதமாகப் பக்குவப்படுத்திவிட்டால் அந்த கொலைசெய்யும் நேரத்தில் மனமானது அன்னிச்சையாக கட்டுப்பட்டுவிடும் என்று நினைத்திருந்தான். இதற்காக அவன் இது போன்ற ஒரு சோதனை முயற்சி செய்கிறார்கள் எனத்தெரிந்த நாளிலிருந்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறான். மோகனை பொறுத்தவரை அவன் கொலை செய்தது சற்றும் எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. சூழ்நிலைக்கைதியாக அவன் அன்று கொலை செய்துவிட்டான் ஆனால் இன்னொறு சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த கொலை நிச்சயமாக நடக்காது என்று அவன் மனம் கணக்குப்போட்டது.


மோகன் இவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது சிறை நிர்வாகத்திற்கே தெரிந்திருந்தது. அவர்களுக்கும் ஒருவாறு இந்தமுறை அவன் நிச்சயமாய் சூழ்நிலையை வென்றுவிடுவான் என்றே தோன்றியது. அப்படி அவன் வென்றுவிட்டால் வரலாற்றை மாற்றிய முதல் மனிதன் என்ற பெயர் அவனுக்குக் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக அரசாங்கம், சிறை நிர்வாகம், கடந்த காலத்திற்கு செல்வது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அனைவருமே ஒருவாறு இந்த நாளுக்காக காத்திருந்தனர். அவன் அப்படி சூழ்நிலையை வென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றி கடந்த சில மாதங்களாகவே விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். கேயாஸ் தியரியின் படி ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்புக்கூட பெரும்மாற்றத்தை உருவாக்கிவிடும் சூழ்நிலையில் அந்த கொலை இல்லாமல் போனால் என்னாகும் என்பதற்கான ஆராய்சிகள் தீவிரமாக நடந்துவந்தது.


அந்த சோதனை முயற்சியின் பொழுது இரண்டு கணிணிமனிதர்கள் அவனுடன் கடந்த காலத்திற்கு வருவார்கள். அவன் அந்த கொலையை மீண்டும் செய்துவிட்டால் மீண்டும் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டுவரும் பொறுப்பு அவர்களுடையது. இதுவரை நடந்த முயற்சிகள் அனைத்திலும் இது சற்றும் தவறில்லாமல் நடந்துள்ளது. கணிணி மனிதர்கள் மோகனை அழைத்துக்கொண்டு வார்ம்«?£லிற்கு வந்திருந்தார்கள். அந்த வார்ம்«?£லின் ஒரு பகுதியை அதிநுட்பம் வாய்ந்த விண்வெளி ஊர்தியின் மூலமாக ஒளியின் வேகத்திற்கு முடுக்கிவிடப்பட்டு பின்னர் சாதாரணமான நிலைக்கு வரும், இப்பொழுது கிடைக்கும் நேரயிடைவெளியின் பயனாய் மற்றொரு பக்கம் இருக்கும் மோகன் பழங்காலத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.


இவ்வாறாக மோகனும் அந்த இரண்டு கணிணி மனிதர்களும் கடந்த காலத்திற்கு வந்திருந்தனர். மோகனின் நினைவுகள் அந்த நிமிடம் வரை மட்டும் விட்டுவிட்டு மற்றவை முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது. மோகனைப்பொறுத்த வரை நிகழ்காலத்திற்கு வந்திருந்தான், அவனுக்கு மற்ற சம்பவங்கள் முற்றிலுமாக நினைவில் இல்லை. கோபமாக தன்னை ஏமாற்றிவிட்ட நண்பனை பழிதீர்ப்பதற்காக, அவனுடைய அடுக்கு மாடி குடியிறுப்பை நெருங்கிக் கொண்டிருந்தான். மோகன் நிச்சயமாய் அவனுடைய நண்பன் இப்படிச் செய்வான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இதன் காரணமாக ஏற்பட்டிருந்த நஷ்டத்தை அவனால் பலகாலம் கடுமையாக உழைத்தாலும் அடைக்க முடியாதென்பது நன்றாகத் தெரிந்துவிட்டது.


நண்பனுடைய அறைக்குள் நுழைந்தவன் நேராய் அவன் கொண்டு வந்திருந்த ஆதாரங்களைக் காட்டினான்.


"ஏன் என்னை ஏமாத்தின, உன்னை எவ்வளவு நம்பியிருந்தேன் தெரியுமா?" அவன் கேட்க நண்பனால் பதிலெதுவும் சொல்லமுடியவில்லை.


"என்னை மன்னிச்சிறு மோகன், தெரிஞ்சு நான் இதை செய்யலை. நான் போட்டிருந்த கணக்குகள் தப்பாயிடுச்சி. இன்னும் ஒரு வருடம் டைம் கொடு எல்லாவற்றையும் சரிசெய்து தர்றேன்." அவன் சொல்லிக் கொண்டிருக்க மோகனுடைய கோபம் அளவுக்கதிகமாகியது. தன்னை தெரிந்தே ஏமாற்றியது மட்டுமில்லாமல் இவ்வளவு நடந்தபிறகும் தன்னிடம் நடிக்கிறானே என்று நினைத்தவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்தான்.


"உன்னையெல்லாம் மன்னிக்கவே கூடாது, நீ பண்ணினது நம்பிக்கைத் துரோகம் அதற்கு ஒரே ஒரு தண்டனை தான். அது நீ சாகறது மட்டும்தான்." சொல்லியவன் அவனை நோக்கி துப்பாக்கியில் குறிவைத்தான். அந்த நிமிடம் அவன் மனது இந்த கொலை அவசியமா என் ஒருமுறை யோசித்துப்பார்க்க வைத்தது. ஆனால் அந்த நினைவுகளை ஓரங்கட்டியவனாய் துப்பாக்கியின் குதிரையை அழுத்தினான். மூன்று குண்டுகள் வலது தோல்பட்டையில் ஒன்றும், கன்னத்தில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய்ப் பாய, அவனுடைய நண்பன் ரத்தச்சேற்றில் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.

மீண்டும் ஒருமுறை மனிதனால் வரலாறு மாற்றப்படாமல் நிகழ்காலத்திற்கு மோகனுடன் திரும்பினர் கணிணிமனிதர்கள். மோகன் அவனுடைய தண்டனைக்காலம் முடிவடைந்ததால் விடுவிக்கப்பட்டான். முன்பு மோகனால் அவனுடைய நண்பன் கொல்லப்பட்டதற்கும் தற்சமயம் சோதனை முயற்சியில் கொல்லப்பட்டதற்குமான நிமிடக்கணக்கில் மைக்ரோ செகண்டுகளில் வித்தியாசம் இருந்தது. அதாவது மோகனுடைய பயிற்சியால் முன்பில்லாதது போல் தற்சமயம் ஒரு மைக்ரோ நிமிடம் அவனுடைய மனம் யோசித்தது. ஆனால் அதற்கான பலன் கிடைக்காவிட்டாலும் அந்த ஒரு மைக்ரோ நிமிட வேறுபாட்டை ஆராய்ச்சியாளர்கள் déjà vu குறித்துக்கொண்டனர். பிற்காலத்தில் வேறுவொரு மனிதனால் வரலாறு மாற்றப்படுமா என்ற கேள்வியுடன் அவர்கள் தங்கள் ஆராய்ச்சியை இன்னும் தீவிரமாகத் தொடர்ந்தனர்.

கிரிப்டோகிராபியும் ஜல்லியடித்தலும் 1

நான் இப்படியே ஜல்லியடித்துவிட்டு போய்விடலாம்னு நினைத்தேன் ஆனால் அது முடியாது போலிருக்கிறது. பரவாயில்லை ரொம்ப விளக்காமாகவும் போகாமல் ரொம்ப மேலோட்டமாகவும் போகாமல் விவரிக்க முயல்கிறேன்.

இரண்டாம் உலகப்போரின் முக்கயத்துவத்தை கருத்தில் கொண்டு, எல்லா முக்கயமான நாடுகளும் தங்கள் தகவல்களை பாதுகாப்பாக பரிமாற, பலமுறைகளில் இந்த கிரப்டோகிராபியை பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியினர், உடைப்பதற்கு மிகவும் கடினமான ஒரு சிப்பரை தாங்கள் வைத்திருக்கும் எனிக்மாவை(Enigma) உருவாக்கி உபயோகித்து வந்திருந்தார்கள்.

இந்த இயந்திரத்தின் பழைய சிப்பர்களை போலந்து நாட்டைச்சேர்ந்த மரியன் ரெஜெவ்ஸ்கி(Marian Rejewski) என்பவர் அவரது குழுக்களை பயன்படுத்தி 1932ல் உடைத்தார். ஆனால் அடுத்தடுத்த மாறுதல்களை செய்துகொண்டே இருந்த ஜெர்மானியர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், தான் வைத்திருந்த அந்த இயந்திரத்தின் சிப்பரை உடைக்கும் சூத்திரத்தை(Algorithm!!!), இங்கிலாந்தினரிடமும், பிரெஞ்சுக்காரர்களிடமும் தந்துவிட்டார். அதாவது போலந்து நாட்டுக்காக வேலைசெய்யாமல் இங்கிலாந்துக்காக வேலை செய்ததாக கூறப்படுகிறது.

இப்படியாக அந்த சூத்திரம்(Algorithm) கைமாறி கைமாறி அமேரிக்காவினரிடம் வந்தடைந்தது. அவர்கள் தான் அப்பொழுது ஜெர்மானியர்கள் பயன்படுத்தி வந்த ஒன்டைம் பேட்(One time pad) எனப்படும், ஒருமுறையை பயன்படுத்தினர், இந்த முறை தியர விதிமுறைகளின் படி உடைக்கவேமுடியாத ஒரு விஷயம். அதாவது உங்கள் உண்மையான தகவல்களுடன், தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில வார்த்தைகளும் அதே அளவில் கலந்து உருவாக்கப்படும் ஒரு விஷயம். இந்த முறையை அதன் முறைகளின் மூலம் சரியாக உபயோகித்தால் உடைக்கவேமுடியாது.

ஆனால் அமேரிக்கர்கள் இந்த முறையைத்தான் சுமார் 30,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்களைக்கொண்டு உடைத்தார்கள்.



அமெரிக்கர்கள் Enigma வை உடைக்க பயன்படுத்திய இயந்திரம். SIGABA, 2001 ஆம் ஆண்டு அமெரிக்கர்களால் வெளியிடப்பட்டது.


இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து உதவிய போலந்து நாட்டுக்காரர்கள் மற்றும் இங்கிலாந்து, பிரெஞ்ச் ஆகிய நாடுகளஇல் வாழ்ந்த கணிதமேதைகளும் உதவினார்கள். இப்படி உடைக்கப்பட்ட சிப்பர்களை வைத்துத்தான் Battle of Britan, மற்றும் Battle of Atlantica வை நேசப்படைகள் வென்றன.

அப்பொழுது ஜெர்மனியர்களிடம் இருந்த நீர்முழ்கி கப்பல்கள் மிகவும் பிரபலம். எப்பொழுது வருவார்கள், எப்பொழுது தாக்குவார்கள் என்பதே தெரியாது, தாக்குதல் முடிந்துவிடும், துறைமுகம் சின்னாபின்னமாகும். அதுவும் கடல்பலத்தையே பெரிதும் நம்பியிருந்த இங்கிலாந்திற்கு இது மிகவும் கடினமான ஒரு சூழ்நிலை.

ஆரம்பத்தில் போலந்து நாட்டினர் எனிக்மாவை எப்படி உடைப்பது என்று இங்கிலாந்தினரிடம் காண்பித்த பொழுது, இவ்வளவு கடினமானதா என்றும் இதை உடைக்கத்தான் வேண்டுமா என நினைத்ததாகவும் சொல்கிறார்கள். இதுமட்டும் நிகழ்ந்திருக்காவிட்டால் நினைத்துக்கூடபார்க்கமுடியவில்லை. பதுங்குக்குழிக்குள் இரண்டு தரப்பு பதுங்கிய இருந்த காலம் அது, இரண்டு பக்கமுமே போர் நடக்கவில்லை, ஹிட்லர் அணுகுண்டு தயாரிக்கும் அத்துனை வேலைகளையும் முடக்கிவிட்டிருந்தார். அவர்களுடைய மிகப்பிரபலமான வி2 வை இன்னும் அதிக திறனுள்ளதாக்கி, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளாக தயாரிக்கவும் சொல்லியிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் இப்படி விட்டிருந்தால், அவர்கள் தயாரித்திருப்பார்கள், உலகம் நினைத்திருக்காத ஒன்று நிகழ்ந்திருக்கும், எப்படியோ அமேரிக்கா அந்தச் சிப்பர்களை உடைத்து அவர்கள் நீர்மூழ்கி கப்பல்களின் வருகையை முன்பே அறிந்து தாக்குதல்களை சமாளித்தது. இதில் இன்னொரு பிரச்சனை அதாவது, இப்படி தாங்கள் எனிக்மாவை உடைத்துவிட்ட விவரமும் தெரியக்கூடாது என்பதுதான் அது. இல்லையென்றால் அந்த சிப்பரை மாற்றி புதிதான ஒன்றை உபயோகிக்கி தொடங்கிவிடுவார்கள்.

நீர்மூழ்கிக் கப்பல்களுடனேயே செல்லும் விமானங்கள், அந்த இலக்கை சென்றடைந்ததும் திட்டம் சரியாக நிறைவேற்றப்பட்டதா, அல்லது தங்கள் தகவல் இடையில் மறிக்கப்பட்டு உடைக்கப்பட்டதா என்று கவனித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு அது தெரியாமலும் அதே சமயம் நீர்மூழ்கிக்கப்பல்களை விதிவசத்தாலே முறியடித்ததைப்போல் காட்டினர் நேசப்படையினர்.

இப்படியாக இரண்டாம் உலகப்போரின் முடிவையே மாற்றிய பெருமை அமேரிக்க கோட் பிரேக்கர்ஸ்க்கு உண்டு. இதன் மூலம் சொல்லப்போனால் ஜெர்மானியர்களுடைய அத்துனை விஷயங்களும் நேசப்படைகளுக்கு தெரிந்திருந்தது.

இப்படியே இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு, அமேரிக்காவின் எஸ்ஐஎஸ்(SIS) எனப்படும் இந்த கிரிப்டோகிராபிக்கான பிரிவின் ஊழியர்களின் எண்ணிக்கை குறைத்துக்கொள்ளப்பட்டது, ஆனால் சிப்பர்களை உடைப்பதில் இவர்கள் பின்தங்கிவிடவில்லை, சூழ்நிலையும் இவர்களை விடவில்லை. இந்தச் சமயத்தில் தான் கோல்ட் வார்(Cold War) எனப்படும் குளிர்போர் என்று தமிழாக்கத்தில் நக்கலாக அழைக்கப்படும் ஒரு மறைமுக யுத்தம் அமேரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடந்து வந்தது. இதன் முக்கிய காரணங்களில் ஒன்று, ஜெர்மனி. அதாவது இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர், ஜெர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி அமேரிக்க சார்பு நேசப்படைகளிடமும், ஒரு பகுதி இரஷ்யர்களிடமும் இருந்தது.

இதனால் உளவறிய அவர்கள் இரஷ்யர்களின் சிப்பர்களையும் உடைக்கவேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை. இதில் ஒரு விஷயத்தை கூறிப்பிடவேண்டும் அது இந்த எஸ்ஐஎஸ் எனப்படும் அமேரிக்க கிரிப்டோபிரிவு அமேரிக்க காங்கிரஸின் இரண்டே பேருக்கு மட்டும் தான் தன் விவரங்களை சொல்லிக்கொண்டு வந்திருந்தது. அதாவது முழு சுதந்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இது போன்ற இரண்டாம் உலகப்போரைப்பற்றி விவகாரங்கள் எப்படி வெளியே தெரிந்ததென்றால் அமேரிக்கர்கள் இரண்டாம் உலகப்போரைப்பற்றிய சில கோப்புக்களை, வெளியிட்ட காரணத்தால் மட்டும் சாத்தியமானது. அதைப்போல் இரஷ்யர்களின் சிப்பர்களையும் உடைத்த விவரங்கள் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து விவரமாகக் கிடைக்கலாம். ஆனால் இரஷ்யர்களின் சிப்பர்களை அமேரிக்கர்கள் உடைத்துவிட்டனர் என்பது உறுதி.

இதை வைத்துத்தான் இரஷ்ய அணுஆயுத ஏவுகணைகளை கியூபாவில் நிறுத்திவைத்த விவகாரத்தை அமேரிக்க அரசாங்கம் சாதுர்யமாக முறியடித்தது. அதுமட்டுமில்லாமல், இரண்டு ஜெர்மனிகளையும் இணைத்தது, பெர்லின் சுவரை உடைத்தது போன்ற இன்னபிற விவகாரங்களிலும் இதன் ஆளுமை பின்னால் இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமானால் இரஷ்யாவின் இரும்புத்திரைக்குள் அமேரிக்காவின் கை மிக நீண்டு இருந்திருக்கிறது.

ஆனால் 1970 களுக்குப்பிறகு, அமேரிக்க அரசு இந்த கிரிப்டோ விவகாரத்தை கொஞ்சம் நெருக்கிப்பிடித்தது, அதாவது அமேரிக்க கிரிப்டோ ஆட்கள் தங்கள் நாட்டினரின் செய்திகளையே உளவரிகிறார்கள் என்பது போன்ற விவரங்கள் வர அவர்களின் சுதந்திரம் குறைக்கப்பட்டது என சொல்லிக்கொள்கிறார்கள். (உண்மையில் சொல்லமுடியாது.) இப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்ட என்எஸ்ஏ(NSA) என அழைக்கப்பட்டு வரும் அமேரிக்காவின் கிரிப்டோ அலுவலகம் உலகத்தின் மிக உயர்ந்த பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கியது.

அதேப்போல் அவர்களது நடவடிக்கைகள் மட்டும் கிடையாது, உள்ளிருக்கும் அமைப்பு பற்றிய எந்த ஒரு புகைப்படமோ இல்லை, அவர்கள் உபயோகிக்கும் இயந்திரங்கள் போன்றவற்றின் விவரங்களோ வெளியிடப்படவில்லை. உலகத்தையே அமேரிக்கா ஒற்றரிந்து வருகிறது என்பதுமட்டும் உண்மை. இடையில் சில சமயங்களில் அமேரிக்காவிற்கும் அடி சறுக்கியிருக்கிறது. அது இந்தியா போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்போகும் விவரமே தெரியாதது, மற்றும் செப். 11 தாக்குதல் போன்றவை ஆகும்.

செப். 11 தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஒரு அமேரிக்க அதிகாரி கூறுகையில், இந்த வகையான முறைகளால், இப்பொழுது 40 பிட்களுக்கு(40 bits) மேற்பட்ட கிரிப்டோகிராபியின் கீக்கள் இப்பொழுது வெளிநாட்டுக்கு தருவது/செல்வது கிடையாது. இதுபற்றி விவரமாக பிறகு பார்க்கலாம். தற்பொழுது கோல்டு வாரும் முடிந்துவிட்ட நிலையில் அமேரிக்க அரசாங்கம், இன்டர்நெட்டில் நடக்கும் தகவல் பரிமாற்ற பிரச்சனைகளில் முக்கியத்துவம் அளித்துவருகிறது.

ஒன்றுமட்டும் உறுதியாக நம்பப்படுகிறது அது அமேரிக்காவிடம் தான் உலகத்தின் மிக வேகமான கணணியிருக்கிறது என்றும், அவர்கள் நினைத்தால் எல்லா தகவல் பரிமாற்ற விவகாரங்களிலும் தலையிடுவார்கள் என்பதும்தான் அது. இதைப்பற்றி அமேரிக்க மக்களிடம், கிரிப்டோ அதிகாரிகள் சொன்னபொழுது. அமேரிக்காவிற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று கூறுவதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

ஒருவழியாக இதன் முக்கியத்துவத்தை விவரித்தாகிவிட்டது, அடுத்து கொஞ்சம் விலாவரியாக, கொஞ்சம் டெக்னிக்கலாக பார்க்கலாம்.


-----------------------------


இன்னும் விவரமாக படிக்க,

எனிக்மாவை(Enigma) உடைத்தமுறை

U போட் களை முறியடித்த விதம்.

முத்துத்துறைமுக தாக்குதலைப் பற்றி

கிரிப்டோகிராபியும் ஜல்லியடித்தலும்

நான் வழக்கமான பதிவுகளாக இல்லாமல், ஆழமான பதிவுகள் மட்டுமே போடவேண்டும்(தலைப்பில் கூட உம்மைத்தொகையிருக்கிறது.) என நினைத்ததும் நினைவுக்கு வந்த முதல் எண்ணம் சோழர்களைப்பற்றி, அடுத்து நினைவிற்கு வந்தது தான் இந்த கிரிப்டோகிராபி.

கிரிப்டோகிராபி என்பது ஒன்றும் பெரிய விளங்காத விஷயமில்லை, சுலபமானதுதான். சில கணித முறைகளைப்பயன்படுத்தி தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் கிரிப்டோகிராபி. முக்கியமாக தகவல்தொடர்பின் பொழுது. அதாவது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவலை பரிமாறும் பொழுது இடையில் இருப்பவர்களிடம் இருந்து அந்தத் தகவலை பாதுகாப்பது.

ஆரம்ப காலங்களில் தகவல்களை எழுதியனுப்பும் பொழுது மற்றவர்களுக்கு புரியாதவகையில் எழுது அனுப்புவதில் இருந்து தொடங்கியது இந்த கிரிப்டோகிராபி. இது கிட்டத்தட்ட ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது என்று கருதப்படுகிறது. முன்காலங்களில் ஒற்றர்கள், ராணுவத்தளபதிகள், அரசர்கள் இவர்களுக்கிடையில் கருத்துப்பரிமாற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வந்த இந்த கிரிப்டோகிராபி இப்போது பலபடிகள் உயர்ந்து உலகின் மிகமுக்கியமான ஒரு விஷயமாக பரிமாணம் பெற்றிருக்கிறது.

இதன் வரலாறு சுமார் கி.மு. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்குகிறது, அப்பொழுது எகிப்தில் வாழ்ந்த மன்னர்கள் முதற்கொண்டு, ரோம சாம்ராஜியம், கிரேக்க சாம்ராஜியம் என ஆளுக்காள் உபயோகித்து, நாளொருமேனியும் பொழுதொறு வண்ணமாய் வளர்ந்து வந்திருக்கிறது இந்த கிரிப்டோகிராபி.





பண்டையகாலத்தில் எகிப்தியர்கள் பயன்படுத்தியவிதம்

ஒரு சமயம் எங்கள் தமிழய்யா சொன்னது ஞாபகம் வருகிறது, தமிழில் இதுபோன்ற விஷயங்கள் உண்டென்றும் பாடல்களிலிலேயே இம்மாதிரி எழுதுவதுண்டு என்றும் சொன்னார். அதாவது ஒரு பதினாறு அடி கொண்ட பாடல் இருந்தால் அதில் இருந்து சில சில வார்த்தைகளை மட்டும் எடுத்து தனியாகப் படித்தால் வேறு ஒரு பொருள் தரும் என்றும், தான் இளங்கலை முதுகலை தமிழ் படித்தபொழுது படித்ததாக நினைவு உண்டென்றும் சொல்லியிருந்தார். நம்மவர்கள் கணக்கில் வல்லவர்கள், பாடல்களுக்கே கணக்கு வைத்து, பாடிக்கொண்டிருக்கும் பொழுது இலக்கணம்(கணக்கு?) தவறுகிறதா என கண்டுபிடித்த புத்திசாலிகள் அல்லவா அவர்கள்.

புரியும்படி ஒரு சிறு உதாரணம் தருகிறேன்,

இப்போ நீங்க மோகன்னு எழுத வேண்டுமென்றால், mohan அப்படின்னு எழுதாம என்கிரிப்ட் பண்ணி இப்படி prkdq ன்னு எழுதலாம், அதாவது நீங்கள் ஆங்கில் எழுத்தின் முதல் எழுத்தான a க்கு பதில் முதல் எழுத்தாக d யை வைத்துக்கொண்டு, mohan என்பதை, prkdq என எழுதலாம் இதை நீங்கள் ஒரு தகவலாக உங்களிடமிருந்து மற்றவருக்கு அனுப்பினால் அவரிடம் இந்த prkdq வந்து சேர்ந்ததும், அவர் இதில் இருந்து mohan ஐ வரவழைக்க முடியும், நீங்கள் எப்படி இந்த பார்மேட்டை உருவாக்கினீர்கள் என்று சொல்லியிருந்தால் அதாவது a க்குபதில் d என்பதை. இதைத்தான் சிப்பர்(cipher) என்று சொல்வார்கள். முன்பு சொன்னதைப்போல் இந்த கிரிப்டோகிராபி, சீசரின் காலத்திலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக(?) சீசர் சிப்பர் என்ற ஒரு முறை வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. (நான் கூட உபயோகப்படுத்தியிருக்கிறேன்.!!!)

இதைப்போல் தகவல்களை உருவாக்குவதற்கும், பிறகு மாற்றப்பட்ட(என்கிரிப்ட் செய்யப்பட்ட) தகவல்களை சாதாரண தகவல்களாக மாற்றுவதற்கும் ஆரம்பகாலத்தில் மனதாலேயே கணக்குப்போட்டுத்தான் செய்தனர். ஆனால் பிற்காலத்தில் இது புதுவடிவம் பெற்று இதற்கென இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதாவது நீங்கள் mohan என்று தட்டச்சினலே அந்த இயந்திரம் prkdq என்று தட்டச்சும்.

இது போன்ற இயந்திரங்கள் தட்டச்சுவதற்கு மட்டும் பயன்படாமல், தொலைபேசி கண்டறியப்பட்ட பிறகு, இராணுவ விஷயங்களை தொலைபேசுவற்கும் கண்டறியப்பட்டது, அதாவது தகவலை சாதாரணமாக நீங்கள் தொலைபேச அது பாதுகாக்கப்பட்ட (என்கிரிப்டட்) தகவல்களாக மற்றவர்களை சென்றடையும், அதாவது தகவல் பரிமாறப்படும் பொழுது அது பாதுகாக்கப்பட்ட தகவலாகவே இருக்கும், அந்தப்பக்கம் போய்ச்சேர்ந்த பிறகு அந்தத் தகவல்களை மீண்டும் சாதாரண தகவல்களாக மாற்றவும் இயந்திரங்கள் இருந்தன.

இங்கேத்தான் கோட்பிரேக்கர்ஸ்(code brakers) வராங்க, அதாவது நீங்கள் அனுப்பும் தகவல் உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்கள் எதிரிகளையும் சென்றடையும்(ஒலிஅலைகளை கடத்தியாக பயன்படுத்துவதால்). அதனால் அவர்களிடம் உங்கள் பாதுகாக்கப்பட்ட தகவலானது, சிப்பர் இருந்தால் சுலபமாக படிக்க முடிந்துவிடும். அதற்குத்தான் கோட்பிரேக்கர்ஸ் என்பவர்கள் தேவைப்பட்டார்கள். அதாவது நம் உதாரணத்தின் படி பார்க்கவேண்டுமானால் prkdq என்பதை வைத்து அவர்கள் mohan என்பதை உருவாக்க முயற்சிப்பார்கள், அதாவது நாம் பயன்படுத்திய a என்றால் d என்பதை கண்டறிய முயல்வார்கள். இவர்கள் தான் கோட்பிரேக்கர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். இதைப்போன்றே கோட்மேக்கர்ஸ் என்பவர்கள் a என்றால் d என உருவாக்குபவர்கள்.

நான் உங்களுக்கு உதாரணமாக சொன்னதைப்போன்று சுலபமாக இருக்காது அந்த பாதுக்கப்பட்ட தகவல், நான் உபயோகித்தது a உடன் மூன்றைக்கூட்டி d என்ற ஒரு சுலபமான சமாசாரத்தை. இரண்டாம் உலகப்போரின் பொழுது ஜெர்மனியினர் உபயோகித்த சிப்பர்கள் மிகப்பெரிய அடுக்குகளைக்(permutations) கொண்டது அதாவது இரண்டின் அடுக்கு 238 (2 pow 238) என வைத்துக்கொள்ளலாம். அவர்கள் நினைத்தார்கள் இந்த சிப்பர்களை யாராலும் உடைக்க முடியாது என்று. ஆனால் அமேரிக்கா இதற்காகவே சுமார் 30,000 நபர்களை வேலைக்குவைத்து அவர்களுடைய சிப்பர்களை சாமர்த்தியமாக உடைத்துவிட்டார்கள்.



ஜெர்மானியர்களின் உபயோகப்படுத்திய Enigma இயந்திரம்

அதைப்போலவே ஜப்பானியர்களினுடையதையும், அவர்களுடைய பிரபலமான கடல்படையின் JN - 25, என்ற சிப்பரை (crypto systems) உடைத்தார்கள், இதை வைத்துக்கொண்டு அவர்களுக்கு முத்துத்துறைமுகம்(perl harbour) ஜப்பானியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகப்போகிறது என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர்களின் தயார்படுத்தும் அல்லது உஷார்படுத்தும் அல்லது எச்சரிக்கும், அரசு இயந்திரம் சரியாக செயல்படாததால் தான் அவர்களால் அந்த தாக்குதலை தடுக்கமுடியவில்லை. இதை நினைக்கும் பொழுது எனக்கு இந்தியாவை தாக்கிய சுனாமிதான் நினைவில் வருகிறது. அப்பொழுது பலர் கேட்டது, அம்மேரிக்கா எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வியை, அதைப்பற்றி எழுதும் பொழுது சுஜாதா சொன்னது,

நம்முடைய அரசாங்கத்தின் தொடர்பு கொள்ளும் தன்மை மோசமானது, அமெரிக்க அரசு, இந்திய அரசை தொடர்புகொண்டு, இந்திய அரசு, தமிழக அரசை தொடர்பு கொண்டு இப்படியாக ஒரு பெரும் சுழற்சி முடிந்து மக்களை சென்றடையும் பொழுது சுனாமி தாக்கியிருக்குமென்று சொன்னதாக நினைவு. அதேபோல் நீங்கள் நம் மக்களிடம் சுனாமி என்று சொன்னால் அதன் விபரீதத்தை உணராமல் போய்ப்பார்க்கத்தான் பலர் விரும்புவார்கள் என்றும் சொல்லியிருந்தார் அதைப்போலத்தான் இதுவும் அந்தக்காலத்தில் அமேரிக்காவின் அரசாங்கத்தின் நிலையும் இப்படித்தான் இருந்தது அதனால் தான் அவர்களால் அந்த தாக்குதலை முறியடிக்க முடியவில்லை.

ஆனால் பிற்காலத்தில் பல ஜப்பானிய தாக்குதல்களை முறியடித்தனர். இன்னும் நன்றாக சொல்லவேண்டுமானால் அமெரிக்காவும் நேச நாடுகளும் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற இந்த கிரிப்டோகிராபி மிகவும் பயன்பட்டிருக்கிறது.

இதைப்பற்றியும் இன்றைய காலத்தில் வழக்கத்தில் உள்ள சில கிரிப்டோ முறைகளைப்பற்றியும் அடுத்த முறை பார்ப்போம்.

ஏனிந்த கொலைவெறி "செந்தழல்" ரவி

சமீபத்தில் வெட்டிப்பயலின் ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. நிச்சயமாய் அந்தப் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கலாம் தான். ஆகக்கூடி ஒரு ஜல்லிப்பதிவு போடுவதுன்னு ஆச்சுது. சரி அதேநேரத்தில் பதிவிடும் நேரத்தை ஒரு நல்ல மனிதனுக்காக செலவிடும் நல்ல எண்ணத்தில் இந்தப் பதிவு.

உண்மையில் எனக்கு ஆரம்பத்தில் தெரிந்த செந்தழல் ரவி, ஒரு சாதாரண பதிவர் பின்னூட்டங்களில் ஜல்லியடிப்பவர் அவ்வளவே. சொல்லப்போனால் ஒரு 'வடை' பிரச்சனையில் எனக்கும் அவருக்கும் பிரச்சனை கூட இருந்தது.

ஆனால் அவர் இந்த வேலைவாய்ப்பு விஷயத்தை தொடங்கியதும், (நான் படித்ததும்) செய்த முதல் வேலை எனக்குத் தெரிந்த வேலை வாய்ப்புக்களை அவருக்கு அறிமுகப்படுத்தியது. அவருக்கு அந்தச் சமயம் தொலைபேசியிருந்தேன். வெட்டிப்பயல் சொன்ன அத்தனையும் உண்மை, கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகாத என்னைப் போன்ற மேல்மாடி காலியாயிருந்த(நான் மட்டும் - இது கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகாத மற்றவர்கலை குறிக்கவில்லை) மக்களுக்கு எவ்வளவு உதவியாகயிருக்கும் என்பது.

என்னுடைய ஓட்டை( ;-) ) இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் டெல்லியில் வேலை தேடிய அனுபவத்தில் எனக்கு நன்றாகவேத் தெரியும். எனக்கு வெட்டிப்பயலைப் பற்றித் தெரியாது ஆனால் இந்தப் பதிவை யார் கேட்டுக்கொண்டும் நான் எழுதவில்லை.

வாழ்க நீ எம்மான், வளர்க உன் தொண்டு.

----------------------------------------------------

என்னை நேரில் பார்த்த அதாவது நான் தான் என்று தெரிந்து பார்த்த இரண்டு பதிவர்களில் செந்தழலாரும் ஒருவர். ஒரு அபாக்கியமான சமயத்தில் நாங்கள் பார்த்துக் கொள்ள நேர்ந்தது. என்னுடைய டெபிட் கார்ட் தொலைந்து போய், அதை இன்னொரு நபர் ஸ்வைப் பண்ணிக்கொண்டிருந்த வேளையில் நடந்த சந்திப்பு அது.

சொல்லிக்கொள்ளும் படியாக அவர் நிறையப் பேசினார். நான் வழக்கம் போல் ஜல்லிதான். ஆனால் நான் நினைத்ததுதான் நடந்தது, என்னுடைய வயசை அவர் சுத்தமாக நம்பவேயில்லை. அடுத்த முறை பார்க்கும் பொழுது பாஸ்போர்ட் சகிதம் பார்த்து உண்மையை நம்பவைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

அவரிடம் ப்ராமிஸ் செய்த ஒரு விஷயத்தை செய்யவில்லை, விஷயம் அவருக்குத் தெரியும். வேறென்ன கேட்கப்போகிறேன்.

மாப்பு, மாப்பு மற்றும் இன்னொரு முறை மாப்பு.

-----------------------------

தலைப்பு வழக்கம் போல ஜல்லி தான், அர்த்தம் கேட்டால் ஐகாரஸிடம் அனுப்பிவிடலாம் என்று தான் நினைத்தேன் பின்னர் ஒருவழி எழுதுவதில் தவறில்லையென்று. "வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு வாங்கித்தந்தே தீருவேன் என்று ஏனிந்த கொலைவெறி "செந்தழல்" ரவி உங்களுக்கு?". இதுதான் நான் நினைத்த தலைப்பு. தமிழ்மணம் தாங்காது ஆதலால் எனக்கு வேண்டிய பாகத்தை வெட்டி ஒட்டி இந்த தலைப்பு.

Tuesday, January 23, 2007

பெங்களூரில் இன்று

சொல்லப்போனால் நேற்று, உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இங்கே இந்து முஸ்லீம் பிரச்சனை நடந்தது. பெங்களூரின் சிவாஜி நகர் பகுதி முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதி. அவர்களில் ஒரு பகுதியினர், சதாம் உசேனைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். கண்டித்தது இந்திய அரசாங்கத்தைக் கண்டித்தில்லை அமேரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து.

வழியில் ஒரு கோவிலில் பிரச்சனை செய்ததாகக் கேள்வி.

இது நடந்த பிறகு, நேற்று விஷ்வ இந்து பரிஷத்தின் ஒரு மாநாடு எங்கள் வீட்டுப்பக்கத்தில் நடப்பதாகயிருந்தது. அது மட்டும்தான் தெரியும் எனக்கு. நானும் ரொம்ப நல்ல பிள்ளையாய் ஞாயிற்றுக்கிழமை பொட்டி தட்ட கம்பெனிக்கு வந்துவிட, ஏதேதோ பிரச்சனைகளால் நிம்மதியாகப் பொட்டி தட்ட முடியாமல் மனம் அலைபாய வேண்டாம் வீட்டிற்கே சென்றுவிடுவோம் என்று நினைத்து வெளியே வந்த பொழுதுதான் தெரிந்தது. வெளியே பிரச்சனை நடந்து கொண்டிருந்தது.

எங்கள் கம்பெனியிருக்கும் கட்டிடத்தை பாதுகாக்கும் காவலாளிகள், வெளியே பிரச்சனை நடக்கிறது அதனால் உங்களை வெளியே விடமுடியாது என கட்டிடத்திற்குள் சிறை வைக்க, காபி டேவிற்கு நூறு ரூபாய் அழுதது தான் மிச்சம். பின்னர் ஒன்றிரண்டு மணிநேரத்திற்குப் பிறகு பிரச்சனை ஒரளவிற்கு சரியானதுபோல் தெரிந்ததால் வெளியிட வீட்டிற்கு வந்தேன். நேற்று நான் இருக்கு அல்சூர் ஏரியா முழுவதும் கடையடைப்பு நடந்ததுபோல் ஒரு கடையும் ஓப்பனாகயில்லை. பால் வாங்கவே சிரமப்பட்டேன். அப்படியே காப் சிரப்பும்.

காலையில் டீவியில் தான் சொன்னார்கள், சிவாஜிநகரிலும் அதைச் சுற்றியுள்ள் இடங்களிலும் கர்ப்யூ என்று. வேகவேகமாக கம்பெனிக்குப் போன்செய்து வரணூமா என்றால் இன்னும் வீட்டில் தான் இருக்கிறாயா என்று மறுகேள்வி வந்தது. காலையில் இருந்து தலைக்குமேல் choppers பறக்கிறது. பல கம்பெனிகள் லீவுவிட்டதாக அறிகிறேன்.

--------------------------------

கங்குலி அவ்வளவுதான் என்று எழுதிய பதிவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. என்னைப் பொறுத்தவரை இந்திய அணியின் அட்டிட்யூட் மாற மீண்டும் கங்குலியை கேப்டனாக்க வேண்டும்.

அன்று அவ்வளவுதான் கங்குலி காலி, அவுட் ஆப் பார்ம் அப்படி இப்படி என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் தெரியவில்லை.

---------------------------------

புளிநகக் கொன்றை படித்து முடித்துவிட்டேன், இரண்டு நாட்களில் ஆரம்பம் கொடுத்த எதிர்பார்ப்பை நிச்சயமாக அவரால் கடேசிவரை கொண்டு செல்ல முடியவில்லை. இன்னொருநாள் நேரமிருந்தால் என் முதல் புத்தகவிமர்சனமாக புளிநகக் கொன்றை வரலாம்.

இப்பொழுது எடுத்துவைத்திருப்பது, மூன்று விரல் மற்றும் ரமேஷ் பிரேமின் பேச்சும் மறுபேச்சும். பின்நவீனத்துவம் நோக்கிய என் பயணத்தின்(?) ஒரு நல்ல வழிகாட்டியாக இந்த(?) புத்தகம் அமையும் என்று நினைக்கிறேன். மற்றபடிக்கு மூன்று விரல் என்னைப் போன்ற ஒரு கம்ப்யூட்டர் ஆசாமியின் உண்மையை உண்மையாகச் சொல்லுவதால் ஆர்வம் அதிகமில்லையோ என்னவோ இரண்டு பக்கம் தொடர்ச்சியாகப் படிப்பதே கடினமாக இருக்கிறது. ஆனால் அரசூர் வம்சம் இப்படிக் கிடையாது நல்ல ஒரு மாந்திரீக யதார்த்தக் கதை.

-----------------------------------

Monday, January 22, 2007

ஆண் என்னும் தலையாட்டிபொம்மைகள்

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று ஒருவாறு ஊகிக்க முடிந்தும் அந்தச் செயலை செய்வது எனக்கு ஆச்சர்யத்தை அளிப்பது. அன்றும் அப்படித்தான் நடந்தது. நான் இந்த விஷயத்தை எப்படி அகிலாவிடம் சொல்வது என்று முன்னூறு முறை ஒத்திகை பார்த்து அலுத்துப்போய் சொல்லியேவிட்டேன், அவள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும், என்று நினைத்து.

“அகிலா, உன் தங்கச்சியை நான் பார்க்கணும்னு சொன்னேன்னு சொல்லு. ப்ரீயா இருந்தா மொபைலுக்கு கால் பண்ணச் சொல்லு.”

திருமணமாகி இந்த நான்கு வருடங்களில் பல முறை ஜெயஸ்ரீ எங்கள் வீட்டிலேயே கூட தங்கியிருந்த பொழுதும் பெரும்பாலும் நான் அவளிடம் அதிகம் பேசியதில்லை. எங்களுக்கு திருமணம் நடந்த பொழுது ஜெயஸ்ரீ பதினொன்று படித்துக் கொண்டிருந்ததாய் ஞாபகம். பின்னர் +2 வில் நிறைய மதிப்பெண் எடுத்தும், விரும்பி ஆங்கில இலக்கியம் எடுத்து படித்து முடித்துவிட்டு, ஏதோ ஒரு கல்லூரியில் வேலை பார்த்துவருகிறாள்.

அகிலாவைப் போலில்லாமல் ஜெயா வித்தியாசமானவள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆங்கில இலக்கியத்தில் இருந்த அதீத ஈடுபாட்டால், கல்லூரியின் ஆங்கில இலக்கியப்பிரிவின் தலைவராக இருந்ததாகவும், கவிதை எழுதுவது மேடையில் பேசுவது இதிலெல்லாம் ஆர்வம் அதிகம் என்றும் அகிலா பெருமையாக சொல்வாள். அகிலாவிற்கு இதெல்லாம் தெரியாது, பாலமுரளி கிருஷ்ணா, பி. சுசீலா இவர்கள் தான், மியூசிக் பற்றி பேசச்சொன்னால் இன்றைக்கு முழுவதும் பேசிக் கொண்டிருப்பாள். அதைப் போலவே பாடவும். ஒன்று பாட்டு கேட்டுக்கொண்டிருப்பாள் அல்லது சன்னமான குரலில் பாடிக்கொண்டிருப்பாள்.

சிலசமயம் நேரடியாய் அவளிடம் கேட்டிருக்கிறேன்,

“உனக்கு நான் சரியில்லையோ, நீ பாடுறது ரொம்ப நல்லாயிருக்கு ஆனால் எனக்கு அவ்வளவுதான் தெரியும் அதைக் கொண்டாட தெரியாது, புரிஞ்சிக்கத் தெரியாது. நம்ம பிரண்ட்ஸ்களோட கெட்டுகெதரில் பாடும் மத்தவங்களை விட உன்னோட வாய்ஸ் அருமையா இருக்கு.

அந்தந்த புருஷன்மார்கள் அவங்களோட பெண்டாட்டி குரல்வளத்தைப் பற்றி பெருமையா பேசுறப்போ எனக்குத் தோணும், நானும் இதையெல்லாம் சொல்லணும்னு, என் பொண்டாட்டி இதைவிடல்லாம் அருமையா பாடுவான்னு. ஆனா இதுவரைக்கும் சொன்னதில்லை. ஏனோ என்னால முடிஞ்சதில்லை, ஆனா ஒன்னு மட்டும் உறுதி அதில் எந்த ஒரு இடத்திலும் ஈகோயில்லை.

என்னைவிட உன் பாடலை நேசிக்கிறவனை நீ கட்டிக்கிட்டிருந்தா இன்னும் நல்லாயிருந்துருப்பியோன்னு பலதடவை நான் நினைக்கிறதுண்டு தெரியுமா?” என்று, பளிச்சென்று பதில் சொல்வாள்,

“என்ன ஐயா வேற பொண்ணை பார்த்து வைச்சிட்டீங்க போலிருக்கு, என்னை கலட்டிவிடுறதா உத்தேசமா? அதுக்குத்தான் இப்படி ஒரு பில்டப் எல்லாம் கொடுக்குறீங்கன்னு நினைக்கிறேன்.”

ஆரம்பத்தில் எனக்கு அவள் என்னை எத்துனை தூரம் நுணுக்கமாய் கவனிக்கிறாள் என்று தெரிந்திருக்கவில்லை, நான் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அவள் முணுமுணுக்கும் பாடல்கள் எத்தனை நேர கவனிப்பில் வந்தது எனத்தெரியாது, கோபமாயிருக்கும் பொழுது, சந்தோஷமாய் இருக்கும் பொழுது முணுமுணுப்பவற்றில் கூட அவள் யோசித்து செய்வது. அவள் சினிமாப் பாடல்களை பாடுவாள் என்றால் அது எனக்காக மட்டும்தான் இருக்கும். சில அமைதியான நேரங்களில் நான் இதை உணர்ந்திருக்கிறேன். எனக்கு எந்தெந்த பாடல்கள் பிடிக்கும் என்று தெரிந்து வைத்திருந்து நேரத்திற்கேற்ப அது போன்ற பாடல்களை அவள் பாடுவது எனக்கு சிறிதுகாலமாக தெரிந்துதான் இருக்கிறது.

அவளைப் போலவே அழகான ஒரு பையன், அவனை என் வயதான அம்மா கவனித்துக் கொள்ள இருவரும் வேலைபார்க்க கைநிறைய சம்பளத்துடன் அற்புதமான குடும்பம். ஏற்கனவே எங்க அப்பா சேர்த்து வைத்தது எல்லாம் இருந்ததால் மொத்தமாய் வாழ்க்கை நல்லபடியாக ஓடிக்கொண்டிருந்தது, ஒருநாள் அத்தையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததிலிருந்துதான் இந்தப் புதுப் பிரச்சனை.

“மாப்ளே கொஞ்சம் வீட்டுக்கு வர்றீங்களா உங்கக்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்...” கொஞ்சம் இடைவெளிவிட்டவர் “அகிலாவிற்கு தெரியவேணாம்.” என்று சொன்னதும் முதலில் முடியாதென்று சொல்லிவிட நினைத்தவன் பிறகு என்ன பிரச்சனையோ ஏதோ என்று நினைத்தவனாய், அன்று மாலை பூ பழம் எல்லாம் வாங்கிக்கொண்டு சென்றிருந்தேன்.

அந்த வீட்டிற்கு முதல் முறையாய் அகிலா உடன் இல்லாமல் செல்கிறேன், முதல் முறை பெண் பார்க்க சென்றிருந்த பொழுதும் அவள் உடன் வரவில்லையென்றாலும் அவள் அங்கேதான் இருந்தாள். வீட்டிற்குள் செல்ல கால்வராமல் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ஜெயஸ்ரீ,

“வாங்க அத்திம்பேர்.” என்று கூப்பிட்டுவிட்டு, கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள், நான் எப்பொழுதையும் போல் போய் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டேன். எனக்கு நன்றாகத் தெரியும் ஜெயா என்னை வம்பிழுப்பதற்காகவே அத்திம்பேர் என்று கூப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தாள் என்று. ஆனால் அகிலாவை நான் வற்புறுத்தவில்லை பாவா என்று என்னை கூப்பிடுமாறு, ஒருவேளை அம்மா செய்தார்களா எனக்குத் தெரியாது. பெரும்பாலும் தனியே இருக்கும் பொழுது பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாள், அம்மாவோ இல்லை மற்ற சொந்தக்காரர்களோ இருக்கும் பொழுது மட்டும் பாவா என்று கூப்பிடுவாள்.

ஒருசமயம் அகிலாவும் ஜெயாவும் இதைப்பற்றி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கும் விஷயம் காதில் விழுந்தாலும் எப்பொழுதுதையும் போல் இதையும் கண்டுகொள்ளவில்லை, ஆனால் அகிலாவாக வந்து, “அவ சின்ன பொண்ணு விளையாட்டுக்காக எதையாவது சொல்லுவா நீங்க கோச்சுக்கக்கூடாது.” என்று சொல்ல நான், “அவளுக்கு அப்படி கூப்பிடுவதுதான் பிடிச்சிருக்குன்னா அப்படியே கூப்பிடச்சொல்லு.” நானும் சொல்லிவிட்டிருந்தேன்.

இங்கேயும் வீட்டிற்குள் ஏதோ சண்டை நடந்து கொண்டிருந்தது, எனக்கு என்னவென்று தெரியாது. சிறிது நேரத்தில் கையில் காபித்தம்ளருடன் வந்த அத்தை, என்னிடம் கொடுத்துவிட்டு ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருக்க, நானும் எப்படி ஆரம்பிப்பது என்று முழித்துக் கொண்டிருந்தேன். நான் காபி குடித்து முடிக்கப்போகும் சமயத்தில் வெளியில் வந்த ஜெயா,

“அத்திம்பேர், உக்காந்திருங்கோ, நான் இப்ப வந்திர்றேன்.” சொல்லிவிட்டு வெளியில் போக, அவள் முகத்தில் எதற்கென்றே தெரியாமல் அப்படியொரு சிரிப்பு. நான் இதைக் கண்டு கொள்ளாமல் விட,

“மாப்ள, விளையாட்டுப் பொண்ணு நீங்க தப்பா நினைக்கக்கூடாது.” என்று அத்தை ஆரம்பிக்க. நான்,

“அத்தை நீங்க ஏதோ முக்கியமா பேசணும்னு சொல்லி வரச்சொன்னீங்க.” நான் நேராய் விஷயத்திற்கு வர, சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தவர்கள்,

“மாப்ள, உங்களுக்குத் தெரியாதது ஒன்னுமில்லை, ஜெயாவுக்கு வயசாகிக்கிட்டே போகுது. இப்ப வரன் தேட ஆரம்பிச்சாத்தான் இன்னும் ஒன்னோ இரண்டு வருஷத்திலே அமையும். அதுமட்டுமில்லாம, அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு வசதி என்கிட்ட கிடையாதுன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும்...” அவர் இழுத்துக் கொண்டிருக்கா, இடையில் புகுந்த நான்,

“அத்தே இதில் யோசிக்கிறதுக்கு என்னயிருக்குன்னு தெரியலை, நீங்க பையனை பார்த்து முடிவு பண்ணுங்க, கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நாம பண்ணிடலாம். கல்யாண செலவை நான் பாத்துக்குறேன். இதைக் கேட்குறதுக்குத்தானா என்னை வரச்சொன்னீங்க?” கொஞ்சம் கோபமாய்க் கேட்க,

“மாப்ள கோவிச்சுக்கக்கூடாது, ஏற்கனவே அகிலா சம்பாதிக்கிறது எல்லாத்தையும் இங்க வீட்டுக்கு கொடுக்குறா. ஜெயாவோட சம்பளம் அவள் பஸ் செலவுக்கே போதறதில்லை. இந்நேரத்தில் நான் அவளோட கல்யாண செலவையும் உங்கத் தலையில் கட்டுறேன்னு நினைத்தால் கஷ்டமா இருக்கு. அதுவும் இல்லாம சம்மந்தி வேற என்ன நினைப்பாங்கன்னு தெரியலை? அகிலாவேக் கூட இதுக்கு ஒப்புத்துக்குவாளான்னு தெரியலை. அதனாலத்தான் அவக்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன். இந்த வீடு என்பேர்ல தான் இருக்கு. இதை யார்கிட்டயாவது வித்துட்டு ஜெயாவை கட்டிக்கொடுத்துடலாம்னு நினைக்கிறேன்.

இதை அகிலாகிட்டையோ இல்லை ஜெயாகிட்டையோ சொல்றதை விட உங்கக்கிட்டத்தான் சொல்றதுதான் உத்தமம், அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதிலேர்ந்து இந்த வீட்டை நீங்கத்தான் கவனிச்சிக்கிறீங்க, அதுமட்டுமில்லாம நான் யார்கிட்டையாவது விக்கிறேன்னு, என்னை ஏமாத்திருவாங்களோன்னு பயமாயிருக்கு...”

“அத்தை நீங்க பையனை மட்டும் பாருங்க, வீட்டை விக்கிறது அதை விக்கிறது இதையெல்லாம் யோசிக்காதீங்க.” முகத்தில் கொஞ்சம் கோபத்தைக் காட்ட, சிறிது நேரம் எதையும் பேசாமல் இருந்தவர்.

“சரி மாப்ள, அப்படியே ஆகட்டும், உங்களுக்கேத் தெரியும் நம்ம வீட்டில் ஜாதியெல்லாம் பாக்கிறதில்லைன்னு, உங்கப் பக்கத்திலேயும் ஜெயாவுக்கு வரன் இருந்தா பாருங்களேன். நல்ல பையனா இருக்கணும் அதுதான் முக்கியம். உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல பசங்க யாராவது இருந்தாலும் சொல்லுங்க. உங்க மொதப் பொண்ணா நினைச்சு கட்டி வைச்சிருங்கோ. ஒரு விஷயம் அகிலாவுக்கு இந்த விஷயம் தெரியவேணாம் நானே சொல்லிக்கிறேன். உங்க மூலமா அவளுக்கு தெரியவேணாம்.”

பின்னர் கொஞ்சம் வீட்டு சங்கதிகள் பேசிவிட்டு நான் திரும்ப வீட்டிற்கு வந்ததில் இருந்து தலை மீது ஏதோ ஒரு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டதாகப் பட்டது. இதைப் போன்ற ஒரு உணர்வு முதன்முதலில் அகிலாவை திருமணம் செய்வதற்கு முந்தைய நாள் வந்தது நினைவில் இருக்கிறது. உடலும் உயிருமாய் ஒருத்தியை முழுவதும் என் பொறுப்பில் விடப்போகிறார்கள் என்ற பொழுது வந்த அந்த உணர்ச்சி பின்னர் ஒரு முழு ப்ரோஜக்ட்டிற்கும் என்னைப் பொறுப்பாய்ப் போட்டு, கீழே வேலை செய்ய ஐம்பது பேர் கொடுத்தபொழுதும் வந்தது. ஆனால் வேலை சம்மந்தப்பட்ட விஷயம் கொஞ்சம் கொஞ்சம் என் திறமையைப் பார்த்து என்னால் முடியும் என்று நினைத்து வந்தது.

ஆனால் இந்த விஷயம் அப்படிக்கிடையாது. வாழ்க்கையில் என்னுடைய நடத்தை ஏற்படுத்திய நல்ல எண்ணத்தால் ஏற்பட்டது. அதுவும் மகளுக்கே தெரியாமல் என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்ததன் வித்தியாசம் புரிந்துதான் இருந்தது. பத்து லட்சம் ரூபாய் கல்யாணத்திற்கு வேண்டும் என்று கேட்டிருந்தால் லோன் போட்டு எடுத்து தருவதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னை வித்தியாசமான மனிதனாக மாற்றத்தொடங்கியது. இன்று வரைக்குமே, என் அம்மாவிற்கு நான் சிறுவன் தான். சில பல சமயங்களில் அகிலாவும் இப்படியே என்னை நடத்துவதுண்டு. நல்லவிதமாக நடக்கவேண்டுமே என்ற பயம் அப்பொழுதே தொடங்கியது. பெண்கள் சம்மந்தப்பட்ட எல்லாப்பொறுப்புகளுமே இப்படித்தான்.

இதுவரை எந்த ஒரு விஷயத்தையுமே அகிலாவிடம் இருந்து மறைத்தவன் இல்லையாததால் அது மட்டும் தான் உறுத்தியது. ஆனால் எல்லாம் நன்மைக்கே என நினைத்தவனாய் இதைப் பற்றி கொஞ்சம் தீவிரமாய் யோசித்த எனக்கு ஒரு விஷயம் உதித்தது. அதனால் வந்த முடிவுதான் ஜெயாவை நேரில் சந்தித்து இதைப்பற்றி கேட்பது என்று. ஆனால் அவளாய் வந்து பேசியதை விடுத்து நானாய் அவளிடம் இதுவரை பேசியதில்லையாகையால் அகிலாவிடம் சொல்லி ஜெயாவை தொலைபேச சொல்லியிருந்தேன்.

நான் நினைத்தது போலவே விஷயம் திசை திரும்பாமல் நேர்வழியில் சென்றிருந்தது, அன்று நான் அவளை, அலுவலக வாசலில் இறக்கிவிடும் பொழுது,

“மோகன், ஜெயாக்கிட்ட சொல்லியிருக்கேன். இன்னிக்கு கால் பண்ணினாலும் பண்ணுவா.” சொல்லிவிட்டு இறங்கிச் சென்றாள். சொன்னது போலவே ஒரு மணிபோல் ஜெயா தொலைபேசியில் கூப்பிட்டாள்.

“அத்திம்பேர் நான் ஜெயா.” முன்பாவது அவள் சொல்லும் பொழுது ஒரு சிறு உணர்வு இருக்கும் அவள் நக்கலடிக்கிறாள் என்று அது இன்று சுத்தமாய் இல்லாமல் இருந்தது.

“ஜெயா நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.” நான் சொல்ல மறுமுனையில் சிறிது மௌனம் பின்னர்.

“காலேஜக்கு பக்கத்தில் ஒரு காபிஷாப் இருக்கு, ஆனா அந்த இடம் சரிவராது, நாம பக்கத்தில் இருக்கிற விநாயகர் கோயிலில் பேசலாம். சாயந்திரம் ஐந்து மணிக்கு நான் வர்றேன்.”

நான் கொஞ்சம் முன்னதாய்ப் போயிருந்தேன், சரியாக ஐந்து மணிக்கு வந்தாள், கல்லலூரியிலிருந்து நேராய் வருகிறாள் என்று பார்த்தாளே தெரிந்தது, அகிலா அவளைப் பற்றி சொல்லியிருக்கிறாள், ஜெயா அதிகம் அலங்காரம் செய்து கொள்ளமாட்டாள் நன்றாகத் தெரிந்தது. வந்தவள் நேராய்,

“ஒரு ஐந்து நிமிஷம் இருங்கோ பிரகாரத்தை சுத்திட்டு வந்திர்றேன்.” சொல்லிவிட்டு சென்றவள் சரியாய் ஐந்து நிமிடத்தில் திரும்பவும் வந்தாள்.

“இப்ப சொல்லுங்கோ அத்திம்பேர் என்ன விஷயம்?”

“ஜெயா வேற ஒன்னும் இல்லை, உங்கல்யாண விஷயமா கொஞ்சம் பேசணும்.”

“என்ன அத்திம்பேர் எப்ப கம்ப்யுட்டர் வேலையை விட்டுட்டு இந்த வேலையை தொடங்கினீங்க?” அவள் கேட்டு நான் பதில் எதுவும் சொல்லாததலால்,

“சரி சொல்லுங்க என் கல்யாண விஷயமா என்ன பேசணும்.”

“அத்தை என்கிட்ட உனக்கு வரன் பார்க்கச் சொல்லி சொல்லியிருந்தாங்க, அதான் உன் விருப்பம் என்னான்னு கேக்கலாம்னு...’

“என் விருப்பம்னா?” எதிர்க் கேள்வி கேட்டவளை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்துவிட்டு,

“உன் விருப்பம்னா? நீ யாரையாவது காதலிக்கிறியா? இல்லை உனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளைதான் வேணும்னு யோசிச்சு வைச்சிருக்கிறியா? இங்கிலீஷ் லிட்டரேச்சர் தெரிஞ்சிருக்கணும், இல்லை உங்க சைடில் இருக்கணும் இப்படி...”

நான் கேட்கவந்ததை உணர்ந்திருக்க வேண்டும், கொஞ்சம் நேரம் எதையும் பேசாமல் அமைதியாக இருந்தவள்.

“எனக்கு ரொம்ப பசிக்குது, மத்யானமும் சாப்பிடலை. பக்கத்தில இருக்கிற ஹோட்டல் எங்கையாவது போகலாமா?”

என்ன சொல்ல, சிறிது நேரத்தில் அருகில் இருந்த வசந்த பவனுக்கு வந்திருந்தோம், எனக்கு ஒரு காப்பியும் அவளுக்கு சோலா பூரியும் சொல்லிவிட்டபின்,

“ஜெயா நான் கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்லலை?”

“இந்த விஷயம் அக்காவுக்கு தெரியுமா?”

அவள் நான் கேட்டதற்கு பதில் மட்டும் சொல்லாமல் வேறு வேறு கேள்விகளைக் கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

“தெரியாது, அத்தை சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க.” நான் சொன்னதும் நிமிரந்து பார்த்தவள், சிறிது நேரத்தில் மீண்டும் சாப்பிடத் தொடங்கினாள்.

“இங்கப் பாருங்க அத்திம்பேர், அத்தே சொன்னாங்க அவங்க சொன்னாங்கன்னு பொண்டாட்டிக்கிட்ட சொல்லாம இருக்காதீங்க, உங்க விருப்பத்துக்கு பையனைப் பாருங்க பிடிக்குதா இல்லையாங்கிறது அடுத்த விஷயம். முதலில் அக்காக்கிட்ட சொல்லிடுங்க. அப்புறம் ஒரு விஷயம், ஜாதியோ இல்லை மதமோக் கூட பிரச்சனை கிடையாது, நல்லவரா இருக்கணும் அதுதான் முக்கியம். நாளைக்கு பிரச்சனைன்னா மூட்டை முடிச்செல்லாம் தூக்கிக்கிட்டு வந்து உங்க வீட்டில் தான் உக்காந்திருவேன் ஜாக்கிரதை.

அப்புறம் காதலிச்சேனான்னு தானே கேட்டீங்க, நீங்க முதலில் இந்த விஷயத்தை அகிலாக்கிட்ட சொல்லுங்க பின்னாடி நான் என்னோட கச்சேரியை வைச்சிக்கிறேன். ஏங்க வீட்டில் இருந்தது மறந்துட்டது போல...” சொல்லிவிட்டுச் சிரித்தவள் “அப்படி ஒருத்தனையும் நான் பார்க்கலை, உங்களுக்கு ஒரு தம்பி இருந்தா கல்யாணம் செய்திருக்கலாம். நீங்க ஒத்தப்புள்ளையா போய்ட்டீங்க. அதனால அம்மா மட்டும் கிடையாது நானும் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் உரிமையை முழுமனசா தர்றேன். நல்லப் பையனா பாருங்க.”

வீட்டிற்கு வந்ததும் முதல் வேளையாய் இந்த விஷயத்தை அகிலாவிடம் போட்டு உடைத்தேன். கோபம் வந்தவளாய் தொலைபேசி அத்தையை திட்டினாள். நான் இல்லாம என் புருஷனை எப்படி நீ இதுபோல் வேலையெல்லாம் செய்யச் சொல்லலாம், என்னைத்தான் ஏமாத்தி ஒன்னுமே செய்யாம இவர் தலையில் கட்டீட்டிங்க இப்ப ஜெயாவையும் அப்படியே கட்டி வைக்க பார்க்கிறீங்க போலிருக்கே. அப்படி இப்படியென்று பெரும் சண்டைக்கு பிறகு ஒருவழியாய் சமாதானம் ஆனவள் பின்னர் என்னைப் பிடித்துக்கொண்டாள். அவங்களுக்குத்தான் அறிவில்லைன்னா உங்களுக்குமா, அகிலாக்கிட்ட ஒருவார்த்தை சொல்லீற்றேன்னாவது சொல்லணுமா இல்லையா. நாளைக்கு என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க.

இதையெல்லாம் சொல்றதுக்கு உங்களுக்கு ஜெயா தேவைப்பட்டிருக்கு, இல்லைன்னா இப்பக்கூட சொல்லியிருக்க மாட்டீங்க அப்படித்தானே. ஆயிரந்தான் அவங்க உங்களுக்கு அத்தை, ஜெயா உங்களுக்கு மச்சினின்னாலும் அவங்கெல்லாம் எனக்குப்பிறகுதானே. அது எப்படி எனக்குத் தெரியாமல் இந்த விஷயத்தில் நீங்கள் செயல்படலாம்.

எனக்காத்தெரியாது அம்மா தன்னோட சாமர்த்தியத்தை காட்டுறாங்க, என்னைப்பத்தி நல்லாத் தெரியும் அவங்களுக்கு உங்களைப்பத்தியும் அதான் இப்படி ஒரு தந்திரம். பொறுப்பை ஒப்படைத்தால் ஒழுங்கா அழகா முடிச்சிக் கொடுத்துறுவீங்கன்னு நல்லாத் தெரியும் அதனாலத்தான் இப்படி செய்கிறார்கள். இவங்களோட சாமர்த்தியத்தை வேற விஷயத்தில் எல்லாம் காண்பிக்காம இதில காண்பிக்கிறது எனக்கென்னவோ சரியாப்படலை. நீங்க என்னான்னா அவங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு வந்திருக்கிறீங்க."

இப்படியெல்லாம் பொரிந்து தள்ளியவள் தான், நான் காட்டிய நான்கைந்து மாப்பிள்ளைகளைப் பத்தி நல்லா விசாரித்து அதில் ஒருவனை ஜெயாவிற்கு மணம் செய்து வைத்தாள். அக்கா தங்கையில்லாமல் ஒற்றையாக பிறந்ததாலும் என்னுடைய திருமணத்தை ஒத்தை ஆளாக நின்று என் தந்தையே நின்று முடித்துவிட்டதாலும், ஒட்டுமொத்தமாக ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பு வந்ததால் தடுமாறிப் போயிருந்த எனக்கு கடைசியில் திருமணத்திற்கு முன்னர், காலில் விழுந்து என்றைக்கிருந்தாலும் நான் தான் இந்த வீட்டின் முதல் பெண் என்று கண்ணீர் மல்கிய விழிகளுடன் ஜெயா சொன்ன வார்த்தை நான் அவள் திருமணத்தை நடத்த பட்ட அத்தனை கஷ்டத்தையும் போக்கியது.

எல்லாம் முடிந்து ஜெயாவை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்ட இரவு அகிலா வந்து,

“என்னங்க என்னங்க இந்த வருஷம் லீவுக்கு மணாலிக்கு போவோங்க...” அவள் சொல்லவருவதன் அர்த்தம் என்னதான் மாங்காவாய் இருந்தாலும் எனக்கு புரிந்தது.

“அப்ப நம்ம பவானிக்கு ஒரு தம்பி பொறக்கபோகுதுன்னு சொல்லு.” நான் ஆரம்பிக்க, அவள் “இல்லைங்க எனக்கு பெண் குழந்தைதான் வேணும். அவளுக்கும் நம்ம ஜெயாவிற்கு செய்தது போல் பிரமாதமாக கல்யாணம் செய்யணும்.”

ஆகா இன்னும் ஒரு முறையா என்று மனதுக்குள் நினைக்க, பொறுப்பு இன்னும் கூடியதாய் ஒரு உணர்வு திருமணம் முடிந்த ஆறு ஆண்டுகளில் ஒரு இருபத்தியொரு வயது குழந்தைக்கு தகப்பனாகிவிட்டாகியது. அடுத்து ஒரு குட்டிக்குழந்தைக்கு தகப்பனா? மீண்டும் ஒரு பெரும் சுமையை என் தோளில் தூக்கிவைக்க அவள் நினைப்பது தெரிந்தாலும் அந்த சுகமான சுமையை பொறுப்பாக சுமக்க முடிவுவெடுத்திருந்தேன். தஞ்சாவூர் பொம்மையொன்று வீட்டில் இல்லாத குறையை நான் என் தலையை ஆட்டி நிவர்த்தி செய்தேன்.

Saturday, January 20, 2007

கம்பனுக்கு ஒரு கேள்வி

டிசேவின் பதிவில் இருந்து ஆரம்பமானது தான் இந்தத் தேடல். முன்பு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய வரிகளை இன் டர்நெட்டில் தேடப்போக ஆச்சர்யமாக இருந்தது நான் வழமையாக எழுதிய பல போரம்களை காணவேயில்லை. இருந்த போரங்களும் முழுமையாக மாற்றப்பட்டு ஆச்சர்யமாகயிருந்தது.

நான் அந்தப் பின்னூட்டத்தில் சொன்னது போல் இந்தக் கவிதையை, வைரமுத்துவின் கவிதைத்தொகுப்பு புத்தகம் வாங்கிய மறுநாள் மனனம் செய்தது. இன்னமும் நினைவில் உள்ளது சில மாற்றப்பட்ட வரிகளுடன். (என்னை நேரில் பார்க்கும் வாய்ப்புள்ள பதிவர்கள் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள். மூடிருந்தால் சொல்கிறேன் அன்று.)

மற்றபடிக்கு இன்றைக்கு கடேசி பதிவு இதுதான் என்று வாக்களிக்கிறேன். இதுவரை ஒருவழியாக நாளொன்றைக்கு ஒரு பதிவு போடாவிட்டாலும் கொஞ்சம் மீள்பதிவு கொஞ்சம் சுயபதிவு என்று ப்ளாக் உலகத்தில் மீண்டும் எழுதத்தொடங்கியிருக்கிறேன். பார்க்கலாம் எவ்வளவு நாட்கள் நீடிக்கிறது என்று. இனி கவிதை.

ராப்பகலாய் பாட்டெழுதி
ராசகவி ஆனவனே
தமிழென்னும் கடலுக்குள்
தரைவரைக்கும் போனவனே

சூத்திரம்போல பாட்டெழுதும்
சுகக்கவியே நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

இந்திர லோகத்து
இளசுளை தேவரெல்லாம்
மோகக் கிறுக்கெடுத்து
முந்நூறு முத்தமிட
முத்தமிடுங் கூத்துகளை
மூத்தநிலா பார்த்துவிட

இட்ட முத்தத்து
எச்சில் கரையழிக்க
வட்டில் அமுதெடுத்து
வாய்கழுவ வாய்கழுவ

வாய்கழுவும் அமுதமெல்லாம்
வாய்கால் வழியோடி
கற்பக மரங்களுக்கு
கால்கழுவக் கால் கழுவ

கால்கழுவும் சுகவெறியில்
கற்பக மரமபூக்க
அந்த பூவையெல்லாம்
அரும்போடு கிள்ளிவந்து
வானவில்லில் நார்கிழித்து
வகையாக மாலைகட்டி
சொல்லரசே நான் உனக்குச்
சூட்டிவிட வேணுமல்லோ

நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

சொல்லுக்குள் வாக்கியத்தை
சுருக்கிவச்ச கவிப்புலவா

உன்னை இதுவரைக்கும்
ஒருகேள்வி கேட்கலையா

தினம்வடிச்ச கண்ணீரால்
தீவுக்குள் கடல்வளர்த்து

அசோகவனத்திருந்து சீதை
அழுதாளே அவளை நீ
கண்ணால் பார்க்கலையே
கவிமட்டும் சொன்னாயே
அம்பிகா பதியிழந்து
அமரா வதியுனது
காதுக்குள் அழுதாளே

ஊமை வெயிலுக்கே
உருகிவிட்ட வெண்ணெய் நீ
அக்கினி மழையிலே
அடடாவோ உருகலையே

கடவுள் காதலைநீ
கதைகதையாய் பாடினையே
மனுஷக் காதலைநீ
மரியாதை செய்யலையே

இந்தக்கேள்வியை, ஓ
எங்குபோய் நான்கேட்க
பாடிவச்ச கவிஇல்லே
படிச்சவுக சொல்லுங்க.

- எழுதினது வைரமுத்து, வைரமுத்து இன்னுமொறு முறை வைரமுத்து.(வேணும்னா இப்படியும் எழுதினது நானில்லை...)

பெயரில் என்ன இருக்குதுங்க சுஜாதா படங்காட்டல்

எப்பவுமே விகடன்.காம் ஓப்பன் பண்ணினா கற்றதும் பெற்றதும் முதலில் படிக்கிறது வழக்கம். இன்னைக்கு சுஜாதா சொல்லியிருந்த ஒரு விஷயம் சிறிது உறுத்தியது.

ராமானுஜன் என்றால், ராமனின் உடன்பிறப்பு. எனக்குப் பிடித்த பெயர்களில் அது ஒன்று. நான் மிகவும் வியப்பது மூன்று ராமானுஜர்களை! 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த, விசிஷ்டாத் வைதக் கருத்துக்களை நிறுவி, ஸ்ரீபாஷ் யம் தந்த ராமானுஜர் அதில் முதல்வர். கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் இரண்டாமவர். கவிஞரும், தேர்ந்த மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே. ராமானுஜன் மூன்றாமவர்....

சொல்லிவிட்டு அவரவர்களைப்பற்றி இரண்டிரண்டு வரிகள் சொன்னவர் கடேசியில் சொன்ன, "ராமானுஜன் என்ற பெயரில் ஏதோ இருக்கிறது!" சொன்னது தான் பெருங்கொடுமை. எனக்குக் கூடத்தான் ராமானுஜன் என்ற பெயரில் கணக்கில் முட்டை மார்க் வாங்கிய சிலரைத் தெரியும். அப்பக்கூட சொல்லுவீங்களோ ராமானுஜன் பெயரில் சில விஷயம் இருக்குன்னு.

என்னவோப் போங்க நல்லாயிருந்தா சரிதான்.

இது பெயரில் என்ன இருக்குதுங்க சுஜாதா, அடுத்தது படங்காட்டல்

ஒரே ரப்சர் பண்ணி இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு சென்று கிளப்பிக்கொண்டுவந்த புத்தகங்கள் ஒரு புகைப்படம்.( நன்றி இளவஞ்சி, டிசே - கான்செப்டிற்கு)



அடுத்து வருவது எங்கள் கம்பெனியின் வெளிப்புற அழகு இரவு வேளையில்.


Thursday, January 18, 2007

நான் காதலுக்காக வழக்காடுகின்றேன்

வானவில்லை
நீங்கள்
தண்ணீர்த் தூறலில்
தரிசித்திருப்பீர்கள்

நீங்கள்
கலையாத வானவில்லை
கண்டதுண்டா?

கண்ணீர்த் தூறலில்
முளைப்பதால் தானோ
அது கலையாமல் இருக்கிறது

அது தான்
காதல்

காதல்
மனிதனைத் தேவனாக்கும்
இரண்டாம் பரிணாமம் இது

இந்த
காதல் மேகம் தான்
மனமென்னும் எரிமலையில்
மழைசிந்தி, மழைசிந்தி
அதில்
உல்லாச வனங்களை
உற்பத்தி செய்யும்

இதய ரோஜாச் செடியில்
இந்த
ஒற்றைப்பூப் பூத்துவிட்டால்
அத்துனை முட்களும்
உதிர்ந்து போகின்றன

வாலிபம் ஏந்திப்பார்க்கும்?
திருவோடும் இதுதான்

வாலிபம் சூடிப்பார்க்கும்
கீரிடமும் இதுதான்

முதலில் சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை

இப்போதோ
மௌனத்திற்கும் கூட
உரையெழுத முடிகிறது

காதல்
காதுகுடைந்து போட்ட
கோழி இறகுங்கூட
மயிலிறகுக்கான
மரியாதைக்குரியது
காதல் கடிதங்கள்
பருவம் எழுதும் பரீட்சைகளில்
எழுத்துப்பிழைகள் மன்னிக்கப்படுவது
இந்தப் பரீட்சையில்தான்

அக இலக்கணம்
அதைக்
காதல் வழுவமைதி என்று
கணக்கில் வைத்துக் கொள்கிறது.

காதல் கடிதங்களுக்கு
அஞ்சல் நிலையங்கள்
இடும் முத்திரை
இரண்டாம் முத்திரைதான்
அதற்கு முன்பே
உதடுகள் இடும்
முத்த முத்திரைதானே முதல் முத்திரை?

இலக்கிய வாசல்களில்
கனவுகளாலும்
கண்ணீராலும் இடப்படும்
காதல் கோலம்

சமூக வாசல்களவீல்
எச்சிலால் அல்லாவா
அர்ச்சிக்கப்படுகிறது.

அமராவதிகளும்
அனார்கலிகளும்
லைலாக்களும்
தேவதாஸ்களும்

காதல் பிச்சை
கேட்டுக்கேட்டு

மரணத்தின் பாத்திரத்தில்
பிச்சையாய் விழுந்தார்கள்

அனார்கலியின் ஞாபகம்
ஆறுமா
சலீமின்
ராஜ மாடங்களில்
கூடுகட்ட வேண்டிய குயிலுக்கு
கல்லறைக் கூடல்லவா
கட்டிக் கொடுத்தார்கள்.

தேவதாஸ் என்னானான்
காதல் நினைவுகளைக்
கழுவ
தண்ணீரில் மிதந்து தண்ணீரில் மிதந்து
சாவுத் தீவில்
கரை ஒதுங்கினான்

அவராவதி என்னும்
ராஜகவிதை
ஓர் ஏழைப்புலவனின்
மனப்பாடத்திற்கு ஏன்
மறுக்கப்பட்டது

நிஜத்தில்
எழுதுகோலுக்கும்
செங்கோலுக்கும்
வரலாற்றில் நிகழ்ந்த
வர்க்கப் போட்டியிது

இதுவரை
எழுத்தாணிகளும்
பேனாக்களும்
காதலின் கண்ணீணீரத்
தொட்டு எழுதத் தோன்றினவன்றி
துடைக்கும் விரலாய் நீளவில்லையே

விதியாம்
விதியை எழுதும் பேனாவில்
ஆயிரங் காதலரின்
ரத்தந்தான் மையாகுமென்றால்

அந்தப் போனாவை
ஒரு
குஷ்டரோகியிடம் கொடுத்துவிடுங்கள்

சமூகம்
தனது
பரிசோதனக் குழாயில்
இறந்தகாலத்தின் கண்ணீரை
எடுத்துக் கொண்டு
நிகழ்காலக் கண்ணீரை ஏன்
நிராகரிக்கிறது?

போதும்
காதலின்
சௌகர்ய உலாவுக்கு
நாம்
இன்னொரு வீதிசெய்வோம்

அது
கண்ணீர்ச்சேறு படாத
காதல் வீதி

அந்த வீதி
அமையும் வரைக்கும்
காதலுக்கு
இரங்கற்பா எழுதுவோரே
உங்கள் பேனாவைப்
பால்கணக்கு எழதமட்டுமே
பயன் படுத்துங்கள்

நான் இண்டெர்நெட் உலகத்தில் காலடி எடுத்துவைத்து தமிழில் எழுத ஆரம்பித்ததும் தொடங்கியது. இந்த தமிழில் டைப் அடிக்கும் பழக்கம் வேகமாக வருவதற்காக, அப்பொழுதெல்லாம் எதையாவது டைப் அடித்துப்பார்க்கும் பழக்கம் உண்டு. அப்படியே நான் பங்கேற்ற சில Forumகளில் போடுவதுண்டு.

அப்படி பலகாலங்களுக்கு முன்னர் நான் டைப்பி போட்ட வைரமுத்துவின் இந்தக் காதல் கவிதை இப்ப சும்மா பொழுது போகணும்கிறதுக்காக.

Friday, January 12, 2007

அம்மாவின் பிறந்தநாள்

அம்மாவின் பிறந்தநாள்

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!

எங்கேயோ, எப்படியோ, யாரா சொல்லக் கேள்விப்பட்ட இந்தவரிகளால் மூச்சடைத்துப் போய்
உட்கார்ந்திருந்தேன். திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறியிருந்தது. மனதிற்கு தெரிந்துதான் இருந்தது, இன்றைக்கு வேலை கோவிந்தாவென்று. பக்கத்து கியூபிற்கு வந்து உட்கார்ந்த அந்த காஷ்மீரத்து பெண் என் முகத்தை பார்த்ததுமே புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஒன்றுமே பேசாமலிருந்தாள், முன்பு சிலசமயம் பேசி வதைப்பட்ட காரணமாகயிருக்கலாம். நான் வேலைசெய்யாமல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மேலாளர்,

"என்ன இந்தவாரமும் சனிக்கிழமையா?"

கேட்டுவிட்டு போய்விட்டார், அவருக்கு அதற்குமேல் கேட்க உரிமையளிக்கவில்லை, நான் வேலைசெய்யும் பன்னாட்டு கம்பெனி. ஏதோ ஞாபகமாய் இணைய அஞ்சல் பெட்டியை திறக்க,

தம்பி ஜூலை 22, அம்மாவுக்கு பிறந்தநாள், மறக்காமல் வாழ்த்து சொல்லவும்.

அன்புடன்
அக்கா

இந்த மின்னஞ்சலை படித்ததும் எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை, இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகிறது, என் குடிகார தகப்பனிடம் வாழ்க்கைப்பட்டும், தன்னை பற்றிய நினைவில்லாமல், எங்களை வளர்த்த அம்மாவிற்கு நான் இதுவரை பிறந்தநாள் வாழ்த்து சொல்லியதில்லை.

நான் நினைத்துப்பார்க்கிறேன், இதற்கு முழுக்காரணமும் நான்தானாவென்று. நிச்சயமாக சொல்லிவிடமுடியாது. எங்கள் வழக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதென்பது இல்லாதவொன்று. அடுத்தநாள் வாழ்க்கையையே யோசிக்கமுடியாத எங்களுக்கு பிறந்தநாள்களை பற்றிய நினைவு மிக அரிது. சிரிப்பாகத்தான் இருக்கிறது, என் தாயின் பிறந்ததினமே எனக்கு பதினாறு பதினேழு வயது வந்தபின்தான் தெரிந்தது என நினைக்கும் போது.

அம்மாகூட சொல்லியிருக்கலாம் இன்று என் பிறந்தநாள், நாளை என் பிறந்தநாள் என்று, ஆனால் சொல்லவில்லை இன்றுவரை. முடிந்த அடுத்தநாளோ இல்லை, அதற்கு அடுத்த நாட்களோ தெரியவந்திருக்கிறது. போட்டோஜெனிக் மெம்மரி இல்லாத காரணத்தாலோ என்னவோ நான் மறந்துவிட்டிருக்கிறேன் அடுத்த வருடமும்.

சிறுவயதில் கேட்கத்தெரிந்திருக்கவில்லை, ஏன் நேற்றே சொல்லவில்லையென்று, வயது வந்தபின்தன்னால் தெரியவந்தது, தெரியவந்ததற்கும் ஒரு பெரிய காரணம் இருந்தது.

அம்மாவை போலவே எங்களுக்கு தெரிந்த இன்னொருவர் வீட்டிலும் இதே போல் கணவனால் பிரச்சனை. கொஞ்சம் பிரச்சனை விவகாரமாக ஆகவிட்ட சூழ்நிலையில், அவருடைய பிள்ளைகள் அப்பாவிற்கு சாதகமாக பேசிவிட பயந்துபோன அம்மா, நாங்களும் அம்மாவிற்கு நடக்கும் கஷ்டங்களும், வேதனைகளும் தெரியாமல் அப்பாவிற்கு சாதகமாக பேசிவிடுவோமோ என நினைத்து, வயது வந்த பின் மிகவும் சாதுர்யமாக, சொற்களின் பின்னல்களால் சொல்லியிருக்கிறாள்.

அம்மாவின் பிறந்தநாட்களைப் போலவே எங்கள் வீட்டு தீபாவளியிலும் ஒரு சோகம் இருக்கும். கஷ்டம் பல இருந்தாலும் மனதிற்கு மகிழ்ச்சி தருவது தீபாவளி. அதுவும் எங்கள் வீட்டில் நாங்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை. புத்தாடை முதல்நாள் வாங்கி வந்தபோதும், 100 ரூபாய்களுக்கு மேல் பட்டாசே வாங்கியராத போதும். நானும் அக்காவும்(?) சந்தோஷமாகத்தான் இருந்திருக்கிறோம்.

அம்மா சுடும் முருக்கைப்போலவும் அதிரசத்தைப்போலவும், ரவாலாடைப்போலவும் நான் இதுவரை சாப்பிட்டதேயில்லை, இந்த விஷயத்தில் வேண்டுமானால் என்னை பாரதியுடன் ஒப்பிட்டுக்கொள்ளலாம்(?). `உண்மை வெறும் புகழ்ச்சியல்ல'. ஆனாலும் அம்மா சந்தோஷமாக இருந்ததில்லை. அன்றைக்கு காலையில் இருந்தே ஏதோ அணுகுண்டு வெடிக்கப்போவதற்கான அறிகுறிபோல் வீடு அமைதியாக இருக்கும். அம்மா மதியம்போல் நோன்பு எடுக்கபோகவேண்டுமென்று சொன்னவுடன் வெடிக்கும். இத்தனைக்கும் அப்பா கடவுள்மேல் நம்பிக்கை அதிகம் கொண்டவர்.

இதற்கான காரணமும் பிற்பாடு சொல்லப்பட்டிருக்கிறது. நான் எப்பொழுதும் திருவள்ளுவரை
கொண்டாடுபவன். வார்த்தைகளையோ, சொற்றொடர்களையோ ஆராய்ந்து பார்க்கும் ஆர்வம் அதிகமிருந்திருக்கிறது. ஆனால் அம்மா அந்த காரணத்தை ஒரு நாள் சொன்னதும் வருந்தியிருக்கிறேன், இனிமேல் ஆராயக்கூடாதென. அந்தச் சொற்றொடர். `தேவிடியாள் தெவசம் கொண்டினது போல்.'

அம்மா சின்னவயதில் சொல்லநினைத்திருந்தால் இதற்கான அர்த்தத்தையும் கூடவே சொல்லவேண்டியிருக்க வேண்டியிருக்கும். எனக்கென்னவோ தவிர்த்தது நல்லதாகப்பட்டது. நானும் அந்த சொற்றொடரின் விளக்கத்தை அளிக்க முன்வரவில்லை, புரிந்திருக்கும், கேஸ் இல்லாமல் மண் அடுப்பில், விரகுகளை வைத்து அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டு, சுவையாக எல்லாம் செய்து முடிக்க. அம்மாவின் வேதனை புரியாத மூடனில்லை நான்.

அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய பிராவிடண்ட் பண்ட்களையெல்லாம் எடுத்து எங்களைப் படிக்கவைக்ககேட்டிருக்கிறார்கள். 'சார் நீங்க சொத்தே சேர்த்து வைக்காமல் இப்படி செலவளஇக்கிறீர்களே'யென்று, அதற்கு அப்பா சொன்னதாக அம்மா எங்களிடம் சொல்லிய, `எங்கள் புள்ளைங்கள் தான் எங்கள் சொத்தென்பது' இன்று உண்மையாகி இருக்கிறது.

ஜூலை 22, போன் செய்தேன்,

"ம்ம்ம், நான்தான்."

"இரு, அம்மாகிட்ட கொடுக்கிறேன்."

"ம்ம்ம், சொல்லும்மா. என்ன விஷயம்."

"இல்லை சும்மாத்தான், உனக்கு இன்னிக்கு பிறந்தநாள்தானே? Happy Birthday."

என்னால் இந்தப் பக்கத்திலிருந்தே அம்மாவின் முகத்தில் இருக்கும் ஆச்சர்யத்தை புரிந்து கொள்ளமுடிந்தது.

Friday, January 05, 2007

Babel, நான் மற்றும் பின்நவீனத்துவம்

நான் பார்த்த முதல் பின்நவீனத்துவப் படம்.

உண்மையில் திருவிளையாடல் படம் பார்த்துவிட்டு வெறுத்துப் போய்தான் இருந்தேன். என் நினைவில் இருப்பது வரை நான் தமிழ்ப்பட விமர்சனம் என்று இறங்கியதில்லை, நிச்சயமாக அதை திருவிளையாடலில் இருந்து தொடங்க விரும்பவேயில்லை தான். ஆனால் அந்தப் படம் என்னை எழுத வைத்தது. என்னுடைய எட்டு நாள் விடுமுறையை பாதிக்கும் அளவிற்கு அந்தப்படம் என்னுள் விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது உண்மை. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பதைப் போல் நான் ஒரு நல்ல படத்தைப் பார்த்துத் தான் நான் திருவிளையாடல் படத்தைப் பார்த்து என் மனதிற்கு செய்த பாவத்தைக் கழுவ முடியும் என்று நினைத்தேன்.

அப்படி ஒரு படமாய் அமைந்தது தான் பாபெல்(Babel), நியூஇயர் தொடக்கமாய். சரியாய்ச் சொல்லவேண்டுமானால். முப்பத்தொன்றாம் நாள் 10 மணிக்குத் தொடங்கிய இரண்டரை மணிநேர படம். நான் இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்கிறேன், கலைப்படங்களைப் பற்றிய என்னுடைய அபிப்பிராயத்தைப் மாற்றிக்கொள்ள. அப்படி ஒன்றும் தீர்மானித்துச் செல்லவில்லை, நிச்சயமாய் திருவிளையாடல் அளவிற்கு மோசமாய் இருக்காது என்ற நம்பிக்கை மட்டும்தான் இருந்தது.(திருவிளையாடல் படத்துடன் இந்தப் படத்தை ஒப்பிட நேர்ந்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.) பிராட் பிட்(Brad Pitt) படத்திற்குச் செல்வதற்கு ஒரு காரணம் என்ற உண்மையை ஒப்புக்கொள்வதுடன், அந்த உண்மை எனக்களித்த நன்மையை நினைத்துப் பார்க்கிறேன்.

என்னுடைய ஆரம்பக்கால விமர்சனங்களில் இருந்தே படத்தின் கதையை சொல்வதில்லை என்ற முடிவில் பிடிவாதமாக இன்றுவரை இருந்து வருகிறேன். ஆனால் இந்தப் படத்திற்கான விமர்சனமாக இல்லாமல் இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த அம்சங்களை பேச நினைக்கும் பொழுது அந்த என் உறுதி பின்வாங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க நினைக்கிறேன். படத்தின் கதையை சுஜாதா சொல்வது போல் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பஸ் டிக்கெட் பின்னால் எழுதிவிட முடியும்தான். ஆனால் அந்தக் கதையை டைரக்டர் எடுத்தவிதமும். அவர் முயற்சி செய்திருக்கும் விஷயங்களும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தையளிக்கின்றன. ஒருவேளை என்னுடைய முதல் தரமான ஆங்கிலப்படம் என்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

மொராக்கோவின் ஒரு குக்கிராமத்தில் ஆடுமேய்க்கும் சிறுவனுக்கு, அவனுடைய ஆடுகளை நரிகள் கொன்றுவிடாமல் காப்பதற்காக வழங்கப்படும் துப்பாக்கியை அவன் உபயோகப்படுத்த கற்றுக்கொள்ளும் நேரத்தில் எந்த வித நோக்கமும் இல்லாமல், மொராக்கோவை சுற்றிப் பார்க்க வரும் அமேரிக்க தம்பதியில் ஒருவரை சுட்டுவிட நடக்கும் விஷயங்களே இந்தப் படம். எந்தவிதமான நோக்கமும் இல்லாமல் நடைபெறும் ஒரு செயலால் ஏற்படும் தொடர் நிகழ்வுகளால் கட்டப்பட்டது இந்தப் படம். உண்மையில் பாபெல் என்பதற்கான நேரடிப் பொருளும் கூட இதுவேதான். பட்டர்பிளை எபெக்ட் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அப்படியும் கூட சொல்லலாம்.

நான்கு தனித்தனிக் கதைகளாக, நான்கு வெவ்வேறு இடங்களில் அந்தந்த இடத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரம், சூழ்நிலையில் கதை சொல்லப்படுகிறது. நான்கு தனித்தனிக் கதைகளுக்குமிடையே ஒரு தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புதான் கதையின் முக்கிய ஒருவரி விஷயமாக நான் மேலே சொன்ன அந்த துப்பாக்கிச் சுடும் நிகழ்வு. ஜெனநாதன்(இயற்கையின் டைரக்டர்) சொன்னது போல் கோலிவுட்டில், சினிமா எடுப்பது என்பது ஒரு வீட்டைச் சுற்றி, ஒரு கல்லூரியைச் சுற்றி ஒட்டுமொத்தமாக ஒரு கட்டடத்தைச் சுற்றியே கதைகள் பெரும்பாலும் தற்சமயம் உருவாக்கப்படுகின்றன.

தான் இயற்கை பட முதல்காட்சியை விளக்கும் பொழுதே இது நமக்கு சரிவராதுன்னு சொல்லிவிட்டு நகர்ந்த தயாரிப்பாளர்கள் தான் அதிகம் என்று சொல்கிறார் அவர். இந்தப் படத்தில் ஒரு கட்டடிடத்திற்குள் நடக்கும் காட்சிகள் மிகக்குறைவு அப்படிப்பட்ட காட்சிகளில் கூட என்னவோ ஒரு பெரிய விஷயத்தைக் காண்பிப்பதான ஒரு உணர்வுதான் உண்டாகிறது.

இந்தப் படத்தின் கதையைச் சொல்வதால் தவறொன்றும் நிகழ்ந்துவிடாது என்றே முழுமனதாக நம்புகிறேன். ஏனென்றால் இந்தப் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் இந்தக் கதையை டைரக்டர் எப்படி எடுத்திருக்கிறார் என்பதைக் கவனிக்கவே நேரம் சரியாய் இருக்கும். அதனால் கொஞ்சமாக கதை.

அதாவது பிராட்பிட்டும், அவரது மனைவியும் தங்களின் அவர்களுக்குப் பிறந்த மகன் இறந்துவிட, அதற்குக் காரணம் என்று இருவரும் மற்றவரை மாற்றிச் சொல்லும் நிலையில். தங்கள் திருமணம் இதனாலெல்லாம் முறிந்துவிடக்கூடாதென்பதற்காக, மொராக்கோவிற்கு சுற்றுலாவிற்கு வருகிறார்கள். அவர்களுடைய மற்ற இரண்டு பிள்ளைகளையும் எமிலியா என்ற தங்கள் வீட்டு வேலைக்கார பெண்ணிடம் விட்டுவிட்டுச் செல்கிறார்கள். இந்தப் பெண் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவள்.

இதே நேரத்தில் தான், மொரோக்கோவில் தன்னுடைய ஆடுகளைக் காப்பாற்றுவதற்காக அப்துல்லா(மொரோக்கோ வாசி) ஒரு துப்பாக்கியை வாங்கி, அதை பயன்படுத்துவற்காக தன்னுடைய பையன்கள் இருவரிடமும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்(பயிற்சி எடுப்பதற்காக). அவர்கள் தான் அஹமது மற்றும் யூசுப். படத்தில் அண்ணன் அஹமதுவை விட யூசுப் எல்லா விஷயங்களிலும் திறமையானவனாக இருக்கிறான்(;)). அதைப்போலவே துப்பாக்கிச் சுடுவதிலும். துப்பாக்கியை விற்றவர் துப்பாக்கி மூன்று கிலோமீட்டர் தூரம் சுடக்கூடியது என்ற சொன்னதை பரிசோதிக்கும் விதமாக அண்ணன் தம்பி போட்டி போட்டுக்கொண்டு சுடப்போக, (அதாவது அவர்கள் வைத்த குறி மலையின் கீழ் பயணம் செய்து வரும் ஒரு பஸ் - கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் இருக்கலாம்) அது அந்தப் பஸ்ஸில் பயணம் செய்யும் பிராட்பிட்டின் மனைவியைத் தாக்குகிறது.

உண்மைக்கதை(சினிமாவில் காட்டப்பட்ட வரிசை கிடையாது.) இங்கிருந்து நான்கு பாதைகளில் பயணம் ஆகிறது. ஒன்று பிராட்பிட் மற்றும் அவருடைய மனைவி இருவரைப்பற்றியது. இரண்டாவது சுட்டுவிட்ட அப்துல்லா குடும்பத்தைப் பற்றியது, மூன்றாவது பிராட்பிட்டின் குழந்தைகளைப் பாதுகாக்கும் எமிலியாவினுடையது. நான்காவது மொரோக்கோ அரசு துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைப்பற்றி விசாரிக்கும் பொழுது, மொரோக்கோவாசிக்கு துப்பாக்கியை விற்றதாக அறிமுகம் ஆகும் முன்னால் ஜப்பானிய வேட்டைக்காரர் மற்றும் அவருடைய செவிட்டு ஊமையான மகளைப்பற்றியது. இப்படியாக முதல் இரண்டு பாதைகளும் மொரோக்கோவின் இண்டு இடுக்குகளைக் காண்பிப்பது போல, மூன்றாவது பாகமும் நான்காவது பாகமும், முறையே மெக்ஸிகோ மற்றும் ஜப்பானைக் காட்டுகிறது.

ஒவ்வொரு இடத்திலும் மொழிப்பிரச்சனை, அமேரிக்காவிலிருந்து வந்த பிராட்பிட் மற்றும் அவரது மனைவி ஏனைய அமேரிக்கர்களுக்கு பெர்பெர் என்ற மொரோக்கோ மொழி தெரியாது. அமேரிக்காவிலிருந்து, மெக்ஸிகோவிற்கு வேறு வழியில்லாமல், எமிலியின் மகனது திருமணத்தைப் பார்க்கவரும் பிராட்பிட் குழந்தைகளுக்கு ஸ்பானிஷ் தெரியாது. அதே போல் தன் அத்தையை திரும்பவும் மெக்ஸிகோவிலிருந்து அமேரிக்கா கொண்டுவந்து விடும் கேய்ல் கார்சியா பெர்னலுக்கு ஆங்கிலம் அவ்வளவாக பேசவராது. எல்லாவற்றிற்கும் சிகரம் போல் அந்த ஜப்பானியப் பெண்ணிற்கு பேசவேவராது அதைப் போலவே கேட்கவும்.

இதை மொழிப்பிரச்சனை என்று சொல்ல முடியாது. தகவல் பரிமாற்றப் பிரச்சனை. நாமெல்லாம் உலகம் ஒரு குடைக்குள் வந்துவிட்டதாகச் சொன்னாலும் நம்மிடையே இருக்கும் தகவல் பரிமாற்றப்பிரச்சனையை இயக்குநர் அழகாக வெளிப்படுத்துகிறார்.

ஒவ்வொரு தனிப்பட்ட பாகத்தையும் இயக்குநர் படமாக்கியுள்ள விதம் பாராட்டிற்குரியது, ஒரே தியேட்டரில் ஒரே திரைப்படத்தில் நான் வெவ்வேறான கிளைமேட்களில் நடக்கும் அந்த நிகழ்வுகளைப் போலவே நாமும் அலைக்கழிக்கப் படுகிறோம், மொரோக்கோவின் அகன்ற வெப்பமான மலைகளுடன் சேர்ந்த பாலைவனமாகட்டும், கலர்புல்லான ஜப்பானாகட்டும், பிரச்சனை பூமியாய் இருக்கின்ற மெக்ஸிகோ ஆகட்டும் அந்த இடத்திற்கு நாமே செல்வதைப் போன்ற ஒரு பிரமிப்பு.

தேர்ந்த நடிகர்கள், தன் பெண்டாட்டியின் மீது குண்டு பட்டுவிட வேதனையால் துடிக்கும் பொழுதும் சரி, உயிர் பயத்தால் மற்ற அமேரிக்கர்கள் உடனே பஸ்ஸை எடுக்க வேண்டும் என்கிற பொழுது தன் கையாலாகாத்தனத்தை காட்டும் பொழுதும் சரி பிராட்பிட் பிராகசிக்கிறார். அதே போல் அந்த ஜப்பானியப் பெண், விரகதாபத்தில் துடிக்கும் போதாகட்டும். தன் தாயாரைப்போல் தன்னை கவனித்துக் கொள்வதில்லை என்று அப்பாவிடம் கோபப்படுப் பொழுதும் சரி படம் காண்பிக்கிறார். கேய்ல் கார்சியா பெர்னலுக்கு சின்ன வேடம் தான் என்றாலும் அந்த வேடத்தில் வெளுத்துக் கட்டுகிறார், அதே போல் வேலைக்காரியாக நடித்த எமிலியாவும் சரி, தன் பிள்ளைக்களைப் போலவே வளர்த்த பிராட்பிட்டின் பிள்ளைகள் மரணத்தருவாயில் நிற்பதை அமேரிக்கப் போலீஸ்காரர்களிடம் விளக்கப்படாதபாடுபட்டு கண்ணீர் வடிக்கும் பொழுதும் மின்னுகிறார்.

ஒவ்வொரு பேக்ரவுண்டிற்கும் ஏற்றது போல் இசை, மொரோக்கோவில் பெரும்பாலும் ஒற்றை வயலினின் பின்னணியிசையுடன் நிற்கும் பொழுதும் சரி, ஜப்பானில் இரவுநேரப் பார்டிக்கொண்டாட்டத்தில் அலறும் பொழுதும் சரி தனியே ரசிக்க முடிகிறது. அப்படியே கேமிராவும்.

இந்தப் படத்தை நான் ஒரு கதைபோல ஆரம்பம் கடைசி என்று பகுதிபிரித்துத் தந்திருப்பதைப் போல நேரே பார்க்கும் பொழுதிருக்காது, உபபாண்டவத்தையோ, இல்லை ஸீரோ டிகிரியையோ படமாகப் பார்ப்பதைப் போல் தான் இருக்கும். (உபபாண்டவம் ஸிக்ஸாக்காக அடிக்கடி மாறும் காட்சிக் கதையமைப்பிற்கென்றால், ஸீரோ டிகிரி; ஜப்பான் மற்றும் மொரோக்கோவில் நடைபெறும் நிகழ்வுகளுக்காக)

இந்தப் படத்தின் டைரக்டருக்கு பெஸ்ட் டைரக்டர் அவார்ட் கென்னாஸ் பிலிம் பெஸ்டிவலில் கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2007லிற்கான அதிகபட்ச கோல்டன் குளொப் அவார்டுக்காக பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.

முறையே Best Picture - Drama, Best Director (Alejandro González Iñárritu), Best Supporting Actor (Brad Pitt), Best Supporting Actress (Adriana Barraza), Best Supporting Actress (Rinko Kikuchi), Best Screenplay (Guillermo Arriaga), and Best Score (Gustavo Santaolalla).

கடைசியாக ஒரு வார்னிங், பின்நவீனத்துவ நாவல்களை ஒரு முறையாவது தொட்டுப்பார்த்திருக்கிறீர்களா, எடுத்துக்காட்டாக ரமேஷ்பிரேமின் சொல் என்றொரு சொல் இல்லை, ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசுவாமி, அட்லீஸ்ட் எஸ் ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் (புரிஞ்சிருச்சான்னு நான் கேட்கலை – பாத்து ஒன்றிரண்டு பக்கங்களாவது படிச்சிருக்கீங்களா?) அப்படின்னா மட்டும் போங்க இந்தப் படத்திற்கு, இன்னொரு முக்கியமான விஷயம் நீங்கள் கோணல் பக்கங்கள்(சாரு நிவேதிதாவினுடையது) இல்லை அதைப் போன்றதோ(உடலுறைவையோ இல்லை அதைப்பற்றிய விஷயங்களையோ நேரடியாக எழுதப்பட்டவை) படித்திருக்கிறீர்களா என்றால் இந்தப் படத்திற்குப் போகலாம். இல்லை என்றால் திருவிளையாடல் ஆரம்பம் படம் தமிழ்நாடு மட்டுமல்லாது தமிழ் பேசும் நல்லுலகம் அனைத்திலும் சக்கைப் போடு போடுவதாக அறிகிறேன். அதற்குப் போய்வாருங்கள்.

Directed by Alejandro González Iñárritu; written (in English, Spanish, Japanese, Berber, Arabic and sign language, with English subtitles) by Guillermo Arriaga, based on an idea by Mr. González Iñárritu and Mr. Arriaga;

Cast - Brad Pitt, Cate Blanchett, Gael García Bernal, Koji Yakusho, Adriana Barraza, Rinko Kikuchi, Said Tarchani, Boubker Ait El Caid, Mustapha Rachidi, Elle Fanning, Nathan Gamble and Mohamed Akhzam.