ரஜினி போல் கமல் போல் சல்மான் எனக்கு ஆகிப்போனது எப்பொழுது என்று தெரியாது. அதன் அர்த்தம் படம் நல்லாயிருக்குமா இருக்காதா என்பதைப் பற்றிய கேள்விகள் இல்லாமல் படத்திற்குச் செல்வது, ரஜினி கமல் என்றால் ஒருவித எதிர்பார்ப்பும் இயல்பாகவே வந்துவிடும். ஆனால் சல்மான் விஷயத்தில் அதுவும் கிடையாது, இடையில் இணையத்தில் பார்த்த என் ‘One of the favorite’ கரீனா கபூரின் பாடல் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது, சொல்லப்போனால் எதிர்மறையான விஷயங்கள் தான் இந்தப் படத்தை பற்றி மனதில் இருந்தது. இந்தப் படத்தை அபினவ் இயக்கவில்லை அர்பாஸ் இயக்குகிறார் என்பது ஒரு மிகப்பெரிய தடையாய் இருந்தது இந்தப் படத்தை நான் அணுக.
ஆனால் சல்மான் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் முடிந்தவரை சல்மான் படங்களைப் பார்த்துவந்தேன், இன்று கூட என் உடன் உட்கார்ந்திருக்கும் வட இந்திய நண்பரிடம் தமிழர் ஒருவர்(நானில்லை) படத்துக்கு ரிவ்யூ நல்லா வரலை போலிருக்கே என்று சொல்ல(எவண்டா இதையெல்லாம் சொல்றான்) அட படம் எப்படியிருக்குங்கிறது இரண்டாவது விஷயம் படம் சல்மானோடது என்றார் நண்பர், நான் அப்படி அதுவரை உணரவில்லை என்றாலும், அப்படித்தான் என்று அதற்குப் பிறகு பட்டதெனக்கு.
ரஜினி படம் பார்ப்பதைப் போன்ற கொண்டாட்டம் சல்மான் படம் பார்ப்பது(ஏறக்குறைய தான் - ஒட்டுமொத்தமாய் இல்லை), தியேட்டர் ஃபுல், அதிலும் பெரும்பான்மை அல்லது 99% வட இந்தியர்கள் என்பதால் - ஆடியன்ஸ் எப்பொழுதுமே முக்கியம் - படத்திற்கான வரவேற்பு படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தெரிந்தது. சல்மான் அடித்து நொறுக்குவது போன்ற விஷயங்கள் - சிறிது சலசலப்பை உண்டாக்கினாலும் - ரஜினியை நாம் ரசிப்பதைப் போல இருந்தது. படத்தை ப்ரேம் பை ப்ரேம் தபாங் முதல் பாகம் போல எடுக்க முயன்றிருக்கிறார்கள்.
படம் மொத்தமே சல்மான் தான், நன்றாக இருக்கிறார் - சண்டைப்பயிற்சி அனல் அரசாமா(ANL Arasu :)) நல்லாயிருக்கு. கேரக்டரைசேஷன் முன்னமே செய்தது என்பதால் அதில் பெரிய மாற்றம் செய்யவில்லை, படம் முழுவதும் தியேட்டர் அதிர்ந்து கொண்டேயிருந்தது - படம் மக்களுக்குப் பிடித்திருந்தது என்பதற்கு நல்ல உதாரணம். உடம்பை இன்னும் நன்றாகத் தேற்றியிருக்கிறார், இன்ஸ்பெக்டர் உடுப்புக்குள் அவர் உடம்பு அடங்க மறுக்கிறது.
சோனாக்ஷி கும்மென்று இருக்கிறார், உடன்படம் பார்த்த நண்பரிடம் இதைப்பற்றி சொன்ன பொழுது, அவர் பின்பக்கம் சப்பையாக இருக்கென்று சொல்லி மூடைக்கெடுத்தார். நல்லவேளை இவருடைய கேரக்டர் ஸ்கெட்சையும் மாற்ற முயற்சிக்கவில்லை. அப்படியே சல்மான் தந்தை மற்றும் தம்பியின் கேரக்டரையும். சோனாக்ஷி முந்தையப் படத்தைப் போலவே இதிலும் நேரம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் தன்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருடைய ஜாக்கெட் மேல் எனக்கு படம் ஆரம்பித்து முடியும் வரை ஒரு கண் இருந்தது. பைக் ஒன்றில் சோனாக்ஷி உட்கார்ந்திருக்கும் காட்சி இன்னனும் கண்ணில் நிற்கிறது. :)
கதையெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது. தபாங் 1 மாதிரியே தான் தபாங் 2ம் ஏற்கனவே உருவாக்கிய கதாப்பாத்திரங்களை வைத்து இன்னும் கொஞ்சம் பணம் பார்க்க உத்தேசித்திருக்கிறார்கள் - எடுப்பார்களாயிருக்கும் தான். படம் 2 மணிநேரம் ஐந்து நிமிடம், இடைவேளை இல்லை என்பதால் அலுக்கவில்லை - பாடல்கள் கொஞ்சம் போல் போரடித்தாலும், கதையென்று ஒன்னும் செய்யவில்லை என்பதால் வேற வழியில்லை.
மாஹி ஜில் மற்றும் கரீனா கபூர் தற்சமயம் இந்தியில் நான் கவனிக்கும் ஹீரோயின்கள். மாஹிக்கு கதாப்பாத்திரம் எல்லாம் ஒன்றும் இல்லை சும்மா ரெண்டு சீன், கரீனாவிற்கு ஒரு குத்துப்பாட்டு - அதற்காகவே கூட இந்தப் படத்தைப் பார்க்கலாம். கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள் - அதுவும் நன்றாகவேயிருக்கிறது. இப்ப கொஞ்சம் மாடல் ஃபோட்டோகிராஃபியில் இறங்கியிருப்பதால் கூட இருக்கலாம் இவருடைய சோலி(காக்ராவினுடைய) ரொம்பப் பிரமாதம். ஆகமொத்தம் சிறப்பாக எல்லாம் நான் ஒன்றும் எதிர்பார்த்துச் செல்லவில்லை, அர்பாஸ் என்றதும் ஆஃப் ஆன என் எதிர்பார்ப்பு படம் முடிவடைந்ததும் அப்படியில்லை. இதில் அர்பாஸ் எதுவும் புதிதாகச் செய்யவில்லை என்றாலு கலர், ஸ்டைல் முதற்கொண்டு எல்லாவற்றையும் முதல் படத்தில் இருந்து நன்றாக காப்பியடித்திருக்கிறார்.
மறந்துட்டனே இடையில் பிரகாஷ் ராஜ் வேறு - டப்பிங் பேச ஆள் வரலை போல யாரையோ வைச்சு பேசியிருக்கிறார்கள், கொஞ்சம் ஒட்டலை. விடுமுறையில் இரண்டு மணிநேரத்தை இந்தப் படத்திற்காக செலவு செய்யலாம் தான்.
Saturday, December 22, 2012
Friday, December 21, 2012
Jack Reacher - தொடக்கம்
தொடர்ச்சியாக இந்தப் படத்தின் ட்ரைலரை இந்த மாதம் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தேன். டாம் க்ரூஸிற்காக இந்தப் படத்தை நிச்சயம் பார்த்திருப்பேனாயிருக்கும் என்றாலும் கொஞ்சம் சுவாரசியத்தையும் ட்ரைலர் கொடுத்தது. பன்னிரெண்டு மணி ராவுக்கு இந்தப் படத்திற்குச் சென்றிருந்தேன்.
இடையில் பத்திரிக்கைகளில், லெட்டர்மேனின் லேட் நைட் ஷோவில் என இந்தப் படத்தின் கதையை எடுத்திருக்கும் புத்தகம் மொத்தம் 17 பாகம் என்று கேள்விப்பட்டேன், லெட்டர்மேனிடமும் டாம் இந்தப் படத்திற்கு கிடைக்கும் சக்ஸஸ் வைத்து இதைத் தொடர்வதாகச் சொல்லியிருந்தார். அப்படிப் பார்த்தால் நல்ல தொடக்கம் என்றே சொல்லவேண்டும்.
படத்தின் கதை ஆரம்பத்தில் இருந்தே ஊகிக்க முடிந்ததாய் இருந்தது, சில சீன்களைக் கூட - ஜெயிலில் டாம் ‘Cop’-ஐ நிறுத்தும் பொழுதே எனக்குத் தெரிந்தது துப்பாக்கியின் சீரியல் தான் சொல்லப்போகிறார் என்று, படத்தின் ஆரம்பக் கொலைகளின் பொழுதே ஊகிக்க முடிந்தது, ரான்டம் கொலைகளின் மத்தியில் பழிவாங்கும் உத்தியென்று, கறுப்பு காப், வெள்ளை அட்டர்னி என்பதில் நாம் ஸ்ட்ரீயோடைப்பாக(கறுப்பரை தவறாக காண்பிக்க மாட்டார்கள்) நினைப்போம் என்றும் அதற்கு மாறாக இருக்குமென்றும். இத்தனைக்கும் பிறகும் எனக்கு இந்தப் படம் பிடித்தேயிருந்தது. இரண்டு மணிநேர என்டர்டெய்னர் சின்னச்சின்ன ஜோக்ஸ் என கோர்த்திருந்தனர்.
17 புத்தகம் என்பதில் இருக்கும் விஷயம் ட்ரை லாஜியாக மூன்று பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று புரிகிறது, அப்படியே விட்டுச் செல்லும் புள்ளிகளும். ரொம்பவும் அதிகமாய் விஷயத்தைக் கொடுத்து கஷ்டப்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள், CSI போன்ற சீரியல்களில் இருக்கும் சுவாரசியத்தை விட கொஞ்சம் அதிகம் தான் இருக்கிறது என்றாலும், ஸ்டைலிஷான படமாய் எடுத்த விதத்தில் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும் இன்னும் இரண்டு பாகமாவது எடுக்காமல் விடமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல படமாய் கிரிப்பாய் எடுக்கலாம்.
கார் சேஸ் நன்றாக வந்துள்ளது, இப்பொழுது நான் ஓட்டிக்கொண்டிருக்கும் BMW சட்டென்று தரும் பவர், ஏற்கனவே கார்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கார்களின் மீதும் குறிப்பாய் muscle கார்கள் மீதும் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது Fast and Furious லிருந்து தொடங்கியது. படத்தில் டாம் ஓட்டும் ‘70 Chevelle SS’ கார் பார்த்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருந்தேன். இது போன்ற படங்களில் கார் இருக்கும் என்பதைப் போல இன்னொன்றும் நிச்சயம் இருக்கும், அது cleavage காண்பிக்கும் ஹீரோயின் :) இந்தப் படத்திலும் உண்டு. பாண்ட் கேர்ள் - சொன்னால் கோவித்துக் கொள்வாரா கூடயிருக்கும் - ரொஸமொன்ட் பய்க். இப்பக் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார், வெறும் செஸ்க் சிம்பலாக மட்டும் இல்லாமல். சட்டென்று டாம் முத்தம் கொடுக்க வருவதாக நினைத்து பின்னர் வழியும் காட்சி ச்ச அக்மார்க் ரமணி சந்திரன். :)
என்னைக் கேட்டால் வெள்ளிக்கிழமை மாலை இரண்டு மணிநேரம் கழிக்க Jack Reacherஐ நிச்சயம் பார்ப்பேனாய்த்தான் இருக்கும். மிஸ் செய்துடாதீங்க என்றெல்லாம் சொல்லமாட்டேன், நேரம் இருந்து பணமும் இருந்தால் பாருங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்.
Saturday, December 15, 2012
என் பெயர் ராமசேஷன்
ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை நானாய்த் தேடிப்படிக்காமல், யாராவது நன்றாய் இருக்கிறது என்று சொன்னால் படிக்கத்தொடங்கும் வழக்கம் உண்டு ஆனால் அந்த அறிமுகம் எனக்கு முதல் புத்தகத்திற்குத்தான் வேண்டும். அதற்குப்பிறகு தேடித்தேடி படிக்கவேண்டியது என் பொறுப்பு. பொன்னியின் செல்வன் அறிமுகம் கிடைத்த பிறகு நான் அலை ஓசை படித்திருக்கிறேன். இதே போல் தான் பாலகுமாரன், எண்டமூரி வீரேந்திரநாத், சாண்டில்யன் என்று யாராவது ஒருவர் ஆத்மியின் பெயரையோ இல்லை நாவலின் பெயரையோ சொல்லவேண்டிய தேவையிருந்திருக்கிறது.ஆனால் இந்தச் சமயத்தில் அப்படிப்பட்ட ஒன்று தேவைப்படாமல் நானாய்த் தேடிப்படிக்கத் தொடங்கியிருந்தேன். தமிழ்சிஃபியில் காலச்சுவட்டில் சாணக்கியாவின் ஆண்களின் படித்துறை படிக்கத்தொடங்கி அப்படியே, என் வீட்டின் வரைபடம், கனவுப்புத்தகம் என்று நீளத்தொடங்கியது அப்படி ஆரம்பித்தது தான் ரமேஷ் – பிரேம் புத்தகங்களும் ஆனால் டிசேவின் பதிவில் தான் ரமேஷ் பிரேமின் அறிமுகம் கிடைத்தது.
இப்படிப்பட்ட அறிமுகமாய் இல்லாமல், எங்கோ மனதில் ஒட்டிக்கொண்டதைப் போல் என் பெயர் ராமசேஷன் நல்ல புத்தகம் என்ற எண்ணம் இருந்தது. புத்தகம் வாங்கி அது ஒரு மூளையில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு பதினெட்டு மணிநேர வேளைநாளுக்குப் பின் தூக்கம் வராமல், கிளாஸ் நேம்களும் மெத்தேட் நேம்களும் லாஜிக்கல் அனலடிக்கள் லூப்களும் பிஸினஸ் லாஜிக்கும் தூக்கத்திற்குப் பிறகும் துரத்திய நாளொன்றில் இரவு இரண்டு மணிக்கு மேல் படிக்கத் தொடங்கினேன் என் பெயர் ராமசேஷனை.
கங்கையாற்றின் வேகத்தை நேரில் பார்த்திருக்கிறேன் ஹரித்துவார் ரிஷிகேஸில், அலட்சியமாக நின்றவர்களை அப்படியே இழுத்துச் செல்லும் வேகமும், லாவகமும் கங்கைக்கு உண்டு, அப்படிப்பட்ட கங்கை தான் நினைவில் வந்தது என் பெயர் ராமசேஷனை படிக்கத் தொடங்கிய பொழுது. உபபாண்டவம், நெடுங்குருதி என என்னை நாவலுக்குள் இழுத்துப்போகாமல், நாவலுக்குள் என்னைத் திணித்து படித்து வந்த பொழுதில் ராமசேஷன் தந்த அனுபவம் வித்தியாசமானது. வேகமாய் நாவலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டேன். ஆனால் காலில் கட்டியிருந்த சங்கலியாய் சாப்ட்வேர் துறை தந்த நாளொன்றின் அலுப்பு நான்கைந்து பக்கங்களுக்குள் இழுத்து நிறுத்தி தூங்கப்பண்ணியது.
பின்னர் அடுத்த நாள் இந்த அனுபவத்தை நண்பரொருவரிடம் சாட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அசாதாரணமாய் ‘எனக்குத் தெரியும் ஓய் உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பிடிக்கும் அந்தப் புத்தகம்’ னு சொல்ல, இன்னும் அதிக ஆர்வக்கோளாராகி அடுத்த நாள் படித்து முடித்திருந்தேன். புது அனுபவம், பொன்னியின் செல்வன் படித்து முடித்து பத்து வருடங்கள் ஆகியிருக்கும் அதே போன்றதொரு உணர்வு.
நாவலில் ராமசேஷன் அறிமுகப்படுத்துவதாய், பங்கஜம் மாமி, மூர்த்தி, ராவ் அவன் சகோதரி மாலா, அவங்க அம்மா மிஸஸ் ராவ், ராமசேஷனின் அப்பா, அம்மா, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, பிரேமா என ஒவ்வொருவரும் நமக்கே தெரியாமல் நாவலுக்குள் நுழைந்துவிடுகிறார்கள்.
உயிர்மை கொடுத்த பின்பக்க அறிமுகம் போல, ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞன், ராமசேஷன் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்திரக்கப்படுகிறது. சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணமும் உங்கள் மீதும் பூசப்படுகிறது.
“ஆமாம், ராமசேஷன். கர்நாடகமான ஒரு பெயர். எனக்கு என் அப்பா மீது கோபமேற்படுத்திய பல காரணங்களில் இந்தப் பெயரும் ஒன்று.”
இப்படி ஆரம்பிக்கும் இந்த நாவலில் அறிமுகப்படுத்தும் நபர்களை, சூழ்நிலைகளை நீங்கள் பெரும்பாலும் நேரில் பார்த்திருப்பீர்கள், அவர்களை நீங்கள் ஆதவனின் கண்கொண்டு இந்த நாவலில் பார்க்கலாம். எல்லா விஷயங்களையும் பற்றியும் ஆதவனின் வார்த்தைக் கோர்வைகள் ஆச்சர்யமூட்டுபவையாகவும் ஒரு பிரச்சனையை ராமசேஷன் மூலமாய் ஆதவன் அணுகும் முஅற யோசிக்கவைப்பதாயும் இருக்கிறது. பாட்டியும் அத்தையும் அப்பாவின் மீதான தங்கள் ஆதிக்கத்தை அம்மாவை விடவும் அதிகப்படுத்தியது அதில் பாட்டியின் செயல்கள். பாட்டியின் இறப்பிற்குப் பிறகு ஆதிக்கப்போட்டியில் அத்தையை அம்மா வென்றது என்பன போன்றவற்றிலும் அதற்குப்பிறகு அத்தை எப்படி தன் நிலையை காப்பாற்றிக்கொண்டால் போன்றவற்றை நாவலில் முதல் மூன்று பக்கங்களிலிலேயே விளக்கிவிடுகிறார்.
அவருடைய பாத்திர அறிமுகங்கள் கூட அப்படித்தான். அவர் ராமசேஷனை அறிமுகப்படுத்தியதை படித்தீர்கள்.
“அப்பா ஒரு சம்பிரதாயப் பிச்சு. கோழை...” சொல்லவும் வேண்டுமா இது அப்பாவைப் பற்றியது
“டே டு டே குடும்பச் சிக்கல்களிலே, மத சம்மந்தமான(பண்டிகை புனஸ்காரங்கள் இத்தியாதி, சகுனம், நாள், நட்சத்திரம்) கடவுள் சம்மந்தமான(என்னிக்குக் கோவிலுக்குப் போகணும், எந்தக் கோவிலுக்குப் போகணும்?) என்பதிலெல்லாம் அவளுடையதுதான் கடைசி வார்த்தை. இது டிபிகள் பொம்மனாட்டித் தந்திரம். கடவுளின் பிரதநிதியாகத் தன்னை ப்ரொஜக்ட் பண்ணிப் பண்ணி...” இது பாட்டியைப் பற்றிய அறிமுகம்.
“அப்பா அத்தையுடன் ஷோடௌனுக்குத் தயாராக இல்லாததால், ஸெக்ஸ் தேவை காரணமாக அம்மாவின் முன்பு தான் மண்டியிட வேண்டி வந்தது அப்பாவுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை அளித்தது. இந்த குற்ற உணர்ச்சியை அத்தை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணினாள்...” இது அத்தையைப் பற்றியது.
“அம்மாவுக்குத் தான் ஒரு இஞ்சினியரின் அம்மாவாக இருக்க வேண்டுமென்ற ஆசை பிறந்தது. அவளுடைய பெரியக்காள் பிள்ளை ஏற்கனவே இஞ்சினியராக இருந்தான்... அவள் பார்த்த திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டு, அவளுடன் கோவில்கள், அபிராமி அந்தாதி வகுப்புக்கள், பொன்விழாக் கொண்டாடும் வெற்றி நாடகங்கள் முதலியவற்றைப் பகிரந்து கொண்ட மாமிகள் பலரின் பிள்ளைகள் இஞ்சினியரிங் படித்தார்கள்...” இது அம்மாவைப் பற்றி
“மூர்த்தி ஒரு நாய், அல்லது விசுவாசமுள்ள (பழங்காலத்து) பண்ணையாளைத்தான் எனக்கு நினைவூட்டினான்...” இது மூர்த்திக்கானது.
“...நான் மிகச் சிரமப்பட்டு அவளுடைய முகத்துக்குக் கீழே பார்வையை இறக்காமலிருக்க முயன்று, தோல்வியுற்று, பார்வையால் கீழே மினி டைவ் அடித்தவாறு இருந்தேன்.
அவளுடைய மார்பகங்கள் மாக்ஸியில் ஏற்படுத்தியிருந்த மேடு... ஊப்ஸ்.
அதுவரை கதைகளில் ‘என்னவோ செய்தது, என்னவோ செய்தது’ என்று அர்த்தம் தெரியாமலேயே - இளமையின் அறியாமையில் – படித்திருந்த எனக்கு. அப்போதுதான் திடீரென்று அந்தப் பதச் சேர்க்கையின் அர்த்தம் புரிந்தது...”
இது மாலாவைப் பற்றிய ஒன்று.
“...ராவின் அம்மா, ஒரு குழந்தையின் அபிநயத்தை அனுதாபத்துடன் பார்த்து ஷொட்டு கொடுப்பது போன்ற பாவாத்துடன் என் மீது ஒரு புன்னகைத் துணுக்கை கிள்ளி எறிந்தாள் ...எனக்கு அந்தப் புடவை இன்னும் நினைவிருக்கிறது. ராவின் அம்மா என்னுடைய விசாரணையின் போது கட்டிக் கொண்டிருந்த புடவை... அவள் ஒரு முட்டாளில்லை என் போன்றவர்களை உள்ளும் புறமுமாக அவள் அறிவாள். சாலையில் போகும் பொழுது வழியில் கிடக்கிற தகர டப்பாவை வெறுமனே ஒரு உதைவிட்டுக் கொண்டு போகிறவர்கள் நாங்கள்...”
“பிரேமா மாலாவைப் போல வெளுப்பு இல்லை, கறுப்புதான். ஆனால் அட்டைக் கறுப்பில்லை. மாலாவை விட இவளுக்கு உயரம் குறைச்சல், முன்புற பின்புற மேடுகள் குறைச்சல், தலைமயிர் குறைச்சல், குரலும் மென்மையாக இல்லாமல் கரகரப்பாக இருக்கும்...” இது பிரேமாவைப் பற்றியது.
இப்படி ஆரம்பமாகும் நாவலில் கதையென்ற ஒன்றை பிரமாதமாக சொல்லமுடியாது, ஆனால் அதற்கான அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவைப்பட்ட இடங்களில் சம்பவங்களைக் கோர்த்து நாவலை நகர்த்திவிடுகிறார் ஆசிரியர். ஆனால் எல்லா இடங்களிலும் நவீன வாழ்க்கையின் பாசாங்குகளை பளிரென்று வெளிப்படுத்துகிறார்.
மாலாவுடன் நீளும் ராமசேஷனின் பழக்கம் அவர்களுக்குள் உடல் சம்மந்தமான பழக்கத்தை ஏற்படுத்துவிடுவதையும் அந்தப் பழக்கத்தில் இருக்கும் சமயத்தில் அவர்கள் மட்டும்தான் நிஜமென்றும் மற்றதெல்லாம் கற்பனையாகவும் பொய்களாகவும் தோன்றுவதையும், ராமசேஷன் தான் ஒரு அல்சேஷனாக மாறிவிட்டதாக நினைப்பது பின்னர் தங்கள் உறவு ஒரு பாதுகாப்பான உறவாயில்லாமலிருப்பதைப் பற்றி கவலைப்படுபவது, ஆனால் நிரோத் வாங்க பயப்படுபது, தன் தந்தை உறை உபயோகித்திருப்பாரா என்று யோசிப்பது என்று பாசாங்குகள் தோலுரிக்கப்படுகின்றன.
மிஸஸ் ராவ், மற்றும் இயக்குநருக்கிடையேயான உறவு, இராமசேஷன் பிரேமாவிற்கிடையேயான உறவு, ராமசேஷனினன் பெரியப்பா பெரியாம்மாவின் உறவு, ராமசேஷன் பங்கஜம் மாமிக்கிடையேயான உறவு, பங்கஜம் மாமி மற்றும் அவருடைய கணவருக்கிடையேயான உறவு என அனைத்து பத்தாம் பசலித்தனங்களும் உடைக்கப்பட்டிருக்கின்றன, ஆதவனின் எழுத்துக்களின் வழியாக. புத்திசாலித்தனமான அவருடைய எழுதும் திறன், இரண்டு வரிகளுக்கிடையில் தொனிக்கும் நகைச்சுவையுடன் வெளிப்படுகிறது. இந்த நகைச்சுவை உணர்வுதான் நாவலை நாம் படிக்கும் பொழுது சட்டென்று உணர்வது ஆனால் சப்டைலாக பாசாங்குகள், முகமூடிகள் உடைக்கப்படுகின்றன, சில சாம்பிள்கள்.
“...ஸீட்டின் கைப்பிடி மேலிருந்த அவள் கைமீது படுகிறாற் போல என் கையை வைத்துக் கொண்டேன்.
அவள் எதுவும் நடக்காதது போலத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
(அ) அவளுக்கு ஆட்சேபணையில்லாமல் இருக்கலாம். (ஆ) அவளுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் உடனே கையை விலக்கி என்னைப் புண்படுத்த வேண்டாமென்று கையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறாள். (இ) ஒருவேளை தற்செயலாக என் கை அந்த நிலையில் இருப்பதாக நினைத்து என் அடுத்த இயக்கத்திற்காகக் காத்திருக்கிறாள். (ஈ) கை தொடப்படுவது அவளுக்குப் பெரிய விஷயமேயில்லை. நான் வேறு எதையாவது தொடவேண்டும், அல்லது பேசமாலிருக்க வேண்டும்...”
“...அவள் தைலத்தை என் மார்பில் தடவ, நான் அந்த ஸ்பரிச இன்பத்தில் லயித்துப்போகத் தொடங்கினேன். அவசரமாக ஒரு கணக்குப் போட்டேன். இரண்டும் இரண்டும் நாலு என்ற கணக்கு.
சட்டென்று அவள் மார்பின் மீது சாய்ந்தேன். அவள் முதுகைச் சுற்றிக் கைகளைக் கோர்த்து அணைத்துக் கொண்டேன். அவள் என்னை ஊக்குவிப்பதுபோல, என் முதுகில் தடவிக் கொடுத்தாள்.
நான் அவள் முதுகின் மேல் தடவியவாறு இருந்தேன். ரவிக்கைப் பித்தான்கள் மீது தடவினேன். சட்டென்று ஒரு பித்தானை அவிழ்த்து, அவள் முகபாவத்தைப் பார்ப்பதற்காக நிமிர்ந்தேன்.
ஆனால் அந்த நிமிரல் பூர்த்தியாவதற்குள் நான் படுக்கையில் தொப்பென்று, முகம் கீழாயிருக்க விழுந்தேன்.
இரண்டும் இரண்டும் எப்போதும் நாலாகி விடுவதில்லை.
‘யூ டெர்ட்டி ராஸ்கல்’...”
வெயிட் அ மினிட், வெயிட் அ மினிட், இந்த இரண்டு இடங்களை எடுத்து எழுதியதற்கு வெறுமனே என் அரிப்பு மட்டும் காரணம் கிடையாது.
ஒரு பெண், தான் பார்த்தே நான்கைந்து மணிநேரங்கள் தான் ஆகியிருக்கும் ஒருத்தியின் மீது லேசாக கைப்பட, அதற்கான ரியாக்ஷன்கள் எதுவும் வராததால் ராமசேஷனின் மனதில் ஓடும் வரிகள் நிச்சயமாய் ஒரு சராசரி ஆண் மகனை மிக அழகாக விவரிக்கிறது. சட்டென்று அந்தப் பெண்ணின் மீது எழும் தப்பெண்ணம் என அப்படியே ஒரு இளைஞனின் எண்ணத்தை எழுத்தில் பார்க்கிறேன். இந்த மாதிரி என்று சொல்ல முடியாவிட்டாலும் இதே போல பலமுறை சிந்தித்திருக்கிறேன். அதுவும் ஒரு செயலுக்கு காரணங்களை யோசித்திருக்கிறேன்.
அதைப் போலவே அடுத்த பத்தியும், ஒரு பணக்காரி, அவள் பணக்காரியாயிருப்பதாலேயே அவள் தப்பானவளாக இருப்பாள் என இரண்டும் இரண்டும் நான்கென்று கணக்குப்போடும் ராமசேஷன் கடைசியில் சொல்லும் எப்பொழுதும் இரண்டும் இரண்டும் நான்காகிவிடுவதில்லை. என்ற வரிகள் பிரமாதம் என்று சொல்வேன். கேட்கலாம் எப்படி இரண்டையும் இரண்டையும் எப்பொழுது கூட்டினாலும் நான்கு தானே என்று. அப்படிக் கேட்டால் அதற்குரிய விளக்கத்தை பிரகாஷிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
என் வாழ்க்கையில் இதைப் போலவே(அந்த மேட்டரில் இல்லை) பல தடவைகள் இரண்டும் இரண்டும் நான்கென்று ரிஸ்க் எடுத்திருக்கிறேன். ஆனால் பட்டுத் தெரிந்து கொண்டேன், இரண்டும் இரண்டும் பெரும்பாலும் நாலாகயிருப்பதில்லை என்று, அதை அப்படியே எழுதிய ஆதவனின் எழுத்தின் மீது காதலே வந்துவிட்டது.
“...உன்னுடன் தனியே இருக்கும்போது உன்னுடனாவது ஏதாவது பேசுவானா?’ என்று நான் பிரேமாவைக் கேட்டேன். ‘ஷ்யூர், வை நாட்?’ என்றாள் அவள். ‘நீ இருக்கும் போது அவனுக்கு கூச்சமாய்ப் போய்விடுகிறது. உன்னுடைய காஸனோவா பெர்ஸனாலிடி அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது... என்னிடம் நிறையப் பேசுவான், தனியே இருக்கும்போது.’
‘எதைப்பற்றி?’
‘சிலருடைய மூக்கு ஏன் மிக நீளமாக இருக்கிறது என்பது பற்றி...’”
இந்த உரையாடலில் மூக்கு எங்கிருந்து வருகிறது தெரிகிறதா? இதைப் போன்ற விஷயங்களை அவருடைய உரையாடல்களிலோ இல்லை விவரணைகளிலோ மிக அதிகமாய்ப் பார்க்கலாம்.
ஆனால் நான் ஆதவனின் இந்த நாவலில் விழுந்தது இதற்காகயில்லை. நிச்சயமாக.
“...அவளுடைய கறுப்பு நிறமும் உயரக் குறைவாகவும் அவளுக்கு ஒரு இன்ஸெக்யூரிட்டியைக் கொடுத்தது. மரபுக்கெதிரான அவளுடைய பாய்ச்சலகளுக்கு இந்த இன்ஸெக்யூரிட்டிதான் காரணமென்பதைப் பின்னால் நான் புரிந்துகொண்டு அவள் மீது அனுதாபப்படக் கற்றுக் கொண்டேன். ஆனால் அந்த ஆரம்ப நாட்களில், ஏற்கனவே சொன்னது போல, சராசரித் தமிழ் பிராமணர்களின் மீது அவள் காட்டிய தீவிர வெறுப்பையும், பொழிந்த கனமான வசைமாரியையும் நான் புரிந்துகொள்ள முடியாமல் திணறினேன். பௌதிக ஆகிருதியையும் தோற்றத்தையுமே செலவாணியாகக் கொண்ட சராசரி பெண்வர்க்கம், சராசரி ஆண் வர்க்கம், இரண்டிடையேயும் தான் மிகக்குறைந்த மதிப்பெண்களே பெறுவோமென்பதை உணரந்து, தான் இவர்களால் ஒதுக்கப்படுமுன் இவர்களைத் தான் ஒதுக்கும் உபாயமாகவே (அதாவது ஒரு பழிப்புக் காட்டலாக) அவள் தன் இன்டலெக்சுவல் திறன்களை ஆவேசமாக வலியுறுத்தவும்...”
இது அவரால் நாவலுக்காகப் படைக்கப்பட்ட பெண், கறுப்பு நிறமாயும் உயரக் குறைவாயும் படைத்து, அதன் மூலம் நிச்சயமாக அந்த வகையாக உண்மையிலேயே இருக்கும் பெண்களின் மனநிலையை படம்பிடித்திருக்கிறார்.(என்னைப் பொறுத்தவரை) வேண்டுமானால் பாலினம் வராதென்றால் என்னைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கும் அதே விமர்சனங்கள். எல்லா விஷயங்களைப் பற்றியும் தீவிரமான மறுபரீசீலனைக்கு உட்படுத்துவதைப் பற்றி நான் இந்தச் சமயத்தில் பயப்படுவதில்லை, ஜாதி, மதம், இட ஒதுக்கீடு, காதல், கல்யாணம், மனைவி, பெண்ணீயம், ஆணீயம்,கடவுள் மறுப்பு ஆதரிப்பு என என் மறு பரிசீலனைகள் எதற்கும் தயங்குவதில்லை. உண்மை என மனம் நம்புவதை மனதோடே வைத்துக் கொண்டிருக்கிறேன். வெளியில் சொல்வதில்லை அவ்வளவே. முன்பே சொன்னது போல், மிகச் சின்ன வயதில் ஆஸ்திரேலியா டீம் பிடித்துப் போனதிற்கான சாத்தியங்களைக் கூட பொய்கள் கலப்பில்லாமல் யோசித்து உண்மையை கண்டறிய முடிந்திருக்கிறது என்னால். ஆனால் வெளிப்படுத்துவது தேவையில்லையென்றே இன்னும் நினைக்கிறேன்.
ஆதவன் அவர் அப்படி மறுபரிசீலனை செய்ததை நாவலாக எழுதியிருக்கிறார். இந்த நாவலைப் பற்றி எழுதச் சொன்னால் இதைப் போல இன்னொரு நாவல் தான் என்னால் எழுத முடியும். ரிவ்யூ எழுவதற்காக குறிப்பெடுத்த விஷயங்களில் 10% கூட தாண்டவில்லை. பக்கம் 5 யைத் தாண்டிவிட்டது(மைக்ரோசாப்ட் வேர்டில்). இந்த நாவல் படித்து முடித்ததும் நான் ஆதவனின் விசிறி ஆகவிட்டது உண்மை, தொடர்ந்து காகித மலர்கள், இரவிற்கு முன்னால் வருவது மாலை(குறுநாவல்கள்), ஆதவனின் சிறுகதைகள் என கண்ணில் பட்ட ஆதவனுடையவை அனைத்தையும் வாங்கி படித்து முடித்தாகிவிட்டதில் இருந்து நான் புரிந்து கொண்டேன். சிறுகதை, நாவல்கள், குறுநாவல்கள் என ஆதவன் எழுதியது இவ்வளவே என நினைக்கிறேன். இந்த வகையறாக்களில் ஆதவன் எழுதிய எதையாவது மிஸ் பண்ணியிருந்தால் சொல்லவும்.
Friday, December 14, 2012
நீதானே எந்தன் பொன் வசந்தம்
ராலே - நார்த் கரோலினாவில் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் இன்று வெளியாகயிருந்தது. 8.00 மணி ஷோ, 8.40 வரைக்கும் காத்திருந்து பார்த்துவிட்டு ‘தமிழ்’ படம் டெக்னிக்கல் காரணங்களுக்காய் திரையிடப்படாததால் மற்ற நண்பர்கள் நகர்ந்துவிட நான் மட்டும் தெலுங்குப் பதிப்பில் சென்று உட்கார்ந்தேன். ஈரானிய ஸ்பானிய படமெல்லாம் பார்க்கிறோம். திராவிடப் படம் தானே பார்த்தால் என்ன என்று வந்து உட்கார்ந்தேன்.
ஷார்ப்பான நகைச்சுவை புரியவில்லை ஒப்புக்கொள்கிறேன். முதல் பாதியில் தியேட்டர் அதிர்ந்து சிரித்தது பொழுது உணர்ந்து கொள்ள சிரமப்பட்டேன், ஆனால் மீதி படம் புரிவதில் எனக்கு குழப்பம் இருக்கவில்லை - தெலுங்கு - நெருங்கிய உறவினார்கள் தெலுங்கு பேசுவார்கள் என்றாலும் நமக்கும் தெலுங்குக்கும் காத தூரம். இருந்தாலும் படம் புரிந்தது. இடையில் மனைவியிடம் தொலைபேசும் பொழுது அவர் கேட்டதும் தான் நினைவில் வந்தது - நான் கௌதம் படமெல்லாம் அல்மோஸ்ட் ஆங்கிலத்தான இருக்கும் என்று ஊகித்து சென்றது என் தவறு தான் தெலுங்குப் பதிப்பில் ஆங்கிலம் சுத்தமாகயில்லை. ஜாய்னிங் வேர்ட்ஸாகக்கூட. என்ன ஆச்சு கௌதம், தமிழிலும் இப்படியே இருந்தால் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
மனம் ஜீவாவையே கற்பனை செய்து கொண்டிருந்தது நானீயைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதும் - நானி நன்றாகச் செய்திருக்கிறார் என்றாலும். இதை ஜீவாவிற்காக நிச்சயம் இன்னொருதரம் பார்ப்பேன். சமந்தாவிற்காகவும் தான். நான் ஈயில் இருந்தே கவனிக்கிறேன், நல்லா முயற்சி செய்யறார். இந்தக் கதாப்பாத்திரம் பிடித்திருந்தாலும் எங்கேயோ எனக்கு ஒட்டவில்லை நானி - தெலுங்கு மட்டும் இதற்குக் காரணம் என்று நினைக்கவில்லை.
கௌதமின் கதாநாயகிகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் எப்பொழுதுமே - கம்பீரமான கதாநாயகிகளை உருவாக்குவார். இதில் சமந்தாவின் கதாப்பாத்திரம் மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது. மெச்சூரிட்டியில் கூட வித்தியாசம் காண்பிக்கிறார், இதற்கு முன்னால் சமந்தா நடிச்சி எந்தப் படம் பார்த்தேன் நினைவில் இல்லை. ஆனால் இந்தக் கதாப்பாத்திரம் எனக்குப் பிடித்திருக்கிறது. சமீரா ரெட்டியை வாரணம் ஆயிரத்தில் பார்த்தப் பிறகு சொன்னது நினைவில் இருக்கிறது - சமந்தாவையும் இனிமேல் வேறுபடத்தில் வைத்து கற்பனை செய்ய முடியவில்லை, மொக்கைப் படங்களி. ஆனால் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றே மனதிற்குப் படுகிறது. நித்யா என்று நானி சொல்லும் பொழுதுகளில் எல்லாம் தனித்து ஒலிக்கிறது அந்தப் பெயர், அகிலாவைக் கொஞ்சம் ஓரம்கட்டி நித்யாவை உபயோகிக்கணும் இதே கேரக்டர்ஸிடிக்ஸுடன்.
இத்தனை காம்ப்ளக்ஸான கதாப்பாத்திரங்களை/காதலர்களை தமிழ்ச் சினிமாவில்(தமிழ் தெலுங்கில் ஒரே கதை என்று நினைக்கிறேன்) பார்த்து காலமாகிறது. அதற்காக ஒரு நன்றி. இதை மட்டுமே தனிப்பட எடுக்க நினைத்ததற்கும். ஆங்கிலத்தில் இது போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். தமிழில் நன்றாகவே வந்திருக்கிறது கௌதம். க்ளைமாக்ஸ் சற்றே உறுத்தினாலும் ரியாலிட்டி வந்திருப்பதைப் போல் பட்டது, நல்ல நேரம் எடுத்து கதாப்பாத்திரங்களை உருவகப்படுத்தியிருக்கிறார்.
படம் பார்க்கும் வரை நான் இந்தப் படத்தின் இசையைக் கேட்டதில்லை என்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் நம்பத்தான் வேண்டும். இசையைப் பற்றி பெரிதும் மக்கள் பேசுவார்களாயிருக்கும், என்வரையில் இது ரஹ்மான் படம், கௌதம் சொதப்பிட்டார். ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பரவாயில்லை என்றாலும் கூட. கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு படத்தொகுப்பு. இளையராஜா இசை உறுத்துகிறது என் வரையில் சொல்ல முடியவில்லை இதுதான் இந்தப் படத்திற்கான பெஸ்ட் இசையா என்று. படத்தைப் பற்றிச் சொல்ல நிறைய இருந்தாலும் கதை வந்திடுமோ என்கிற பயத்தில் நழுவுகிறேன்.
இந்தப் படம் எத்தனைப் பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை, எனக்குப் பிடித்திருக்கிறது. நான் விரும்பிய க்ளைமாக்ஸ் இல்லை என்றாலும் கூட க்ளைமாக்ஸ் பிடித்திருந்தது, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பாதிப்பாக இருக்கும். நல்ல படம் நிச்சயம் பாருங்க.
தமிழ்ப்படம் பார்த்த பிறகு எழுதியது
1) ஜீவாவை விட நானி நன்றாகச் செய்திருப்பதாகப்பட்டது.
2) தெலுங்கு எத்தனை எனக்குப் புரிந்ததுன்னு தெரியாவிட்டாலும், தெலுங்கு வசனம் நன்றாக இருப்பதாகப் பட்டது.
3) சமந்தாவின் வாய்ஸ் தெலுங்கில் நன்றாக இருந்ததாவும் தமிழில் இல்லாததைப் போலவும் இருந்தது, உடன்பார்த்த நபர் அவளே(சமந்தா) தான் பேசியிருக்காள் என்று சொன்னதை நான் நம்பலை - டப்பிங்காகயிருந்தால் தெலுங்கு நல்லாயிருந்தது.
4) தெலுங்கில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்த, நானி சொல்லும், நித்யா நித்யா நித்யா தமிழில் இல்லை. நானியின் உச்சரிப்புப் பிடித்திருந்தது பித்து கொள்ளச் செய்திருந்தது. நானி சமந்தாவிற்கு நல்ல கெமிஸ்ட்ரி படத்தில் இருந்தது. சத்தியமா அது ஜீவா சமந்தாவிற்கு இல்லை.
5) தெலுங்குப் படம் பார்க்கும் பொழுது எம்பிஏவிற்குப் பிறகு நானியின் கண்ணாடி கொஞ்சம் உறுத்தினாலும் தமிழ்ப் படம் பார்த்த பிறகு நிச்சயமா அதை ஜீவாவிற்கு சஜஸ்ட் செய்திருப்பேன்.
6) ஜீவா மஸ்குலரா இருப்பது படத்தில் உறுத்துது.
7) யுவன் சங்கர் ராஜா பாடும் பாடலைத் தவிர்த்து தமிழில் பாடல்கள் நல்லாவேயில்லை - இதைப் பத்தித் தானா இணையத்தில் இத்தனை உரையாடல்கள் நடந்தது.
8) சந்தானம் காமெடி அருமையாக இருந்தாலும் - இளையராஜாவின் இசையைப் போல் படத்தில் ஒட்டாமல் தனித்திருக்கிறது. இதற்கே கத்தும் தமிழ் சினிமா ரசிகர்கள் - சந்தானம் இல்லாமல் இருந்திருந்தால் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
9) சுத்திச் சுத்தி நான் பார்த்த படம் பார்த்த பெண்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.
10) யாரோ சொல்லியிருந்தது போல முத்தக் காட்சிகள் தெலுங்கில் நல்லாயிருந்தது - நானிக்கும் சமந்தாவுக்கும் ரியல் லைஃபில் லவ்ஸா - சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன்ஸ்களில் நானி அருமையாக கையாள்கிறார்.
ஷார்ப்பான நகைச்சுவை புரியவில்லை ஒப்புக்கொள்கிறேன். முதல் பாதியில் தியேட்டர் அதிர்ந்து சிரித்தது பொழுது உணர்ந்து கொள்ள சிரமப்பட்டேன், ஆனால் மீதி படம் புரிவதில் எனக்கு குழப்பம் இருக்கவில்லை - தெலுங்கு - நெருங்கிய உறவினார்கள் தெலுங்கு பேசுவார்கள் என்றாலும் நமக்கும் தெலுங்குக்கும் காத தூரம். இருந்தாலும் படம் புரிந்தது. இடையில் மனைவியிடம் தொலைபேசும் பொழுது அவர் கேட்டதும் தான் நினைவில் வந்தது - நான் கௌதம் படமெல்லாம் அல்மோஸ்ட் ஆங்கிலத்தான இருக்கும் என்று ஊகித்து சென்றது என் தவறு தான் தெலுங்குப் பதிப்பில் ஆங்கிலம் சுத்தமாகயில்லை. ஜாய்னிங் வேர்ட்ஸாகக்கூட. என்ன ஆச்சு கௌதம், தமிழிலும் இப்படியே இருந்தால் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
மனம் ஜீவாவையே கற்பனை செய்து கொண்டிருந்தது நானீயைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதும் - நானி நன்றாகச் செய்திருக்கிறார் என்றாலும். இதை ஜீவாவிற்காக நிச்சயம் இன்னொருதரம் பார்ப்பேன். சமந்தாவிற்காகவும் தான். நான் ஈயில் இருந்தே கவனிக்கிறேன், நல்லா முயற்சி செய்யறார். இந்தக் கதாப்பாத்திரம் பிடித்திருந்தாலும் எங்கேயோ எனக்கு ஒட்டவில்லை நானி - தெலுங்கு மட்டும் இதற்குக் காரணம் என்று நினைக்கவில்லை.
கௌதமின் கதாநாயகிகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் எப்பொழுதுமே - கம்பீரமான கதாநாயகிகளை உருவாக்குவார். இதில் சமந்தாவின் கதாப்பாத்திரம் மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது. மெச்சூரிட்டியில் கூட வித்தியாசம் காண்பிக்கிறார், இதற்கு முன்னால் சமந்தா நடிச்சி எந்தப் படம் பார்த்தேன் நினைவில் இல்லை. ஆனால் இந்தக் கதாப்பாத்திரம் எனக்குப் பிடித்திருக்கிறது. சமீரா ரெட்டியை வாரணம் ஆயிரத்தில் பார்த்தப் பிறகு சொன்னது நினைவில் இருக்கிறது - சமந்தாவையும் இனிமேல் வேறுபடத்தில் வைத்து கற்பனை செய்ய முடியவில்லை, மொக்கைப் படங்களி. ஆனால் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றே மனதிற்குப் படுகிறது. நித்யா என்று நானி சொல்லும் பொழுதுகளில் எல்லாம் தனித்து ஒலிக்கிறது அந்தப் பெயர், அகிலாவைக் கொஞ்சம் ஓரம்கட்டி நித்யாவை உபயோகிக்கணும் இதே கேரக்டர்ஸிடிக்ஸுடன்.
இத்தனை காம்ப்ளக்ஸான கதாப்பாத்திரங்களை/காதலர்களை தமிழ்ச் சினிமாவில்(தமிழ் தெலுங்கில் ஒரே கதை என்று நினைக்கிறேன்) பார்த்து காலமாகிறது. அதற்காக ஒரு நன்றி. இதை மட்டுமே தனிப்பட எடுக்க நினைத்ததற்கும். ஆங்கிலத்தில் இது போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். தமிழில் நன்றாகவே வந்திருக்கிறது கௌதம். க்ளைமாக்ஸ் சற்றே உறுத்தினாலும் ரியாலிட்டி வந்திருப்பதைப் போல் பட்டது, நல்ல நேரம் எடுத்து கதாப்பாத்திரங்களை உருவகப்படுத்தியிருக்கிறார்.
படம் பார்க்கும் வரை நான் இந்தப் படத்தின் இசையைக் கேட்டதில்லை என்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் நம்பத்தான் வேண்டும். இசையைப் பற்றி பெரிதும் மக்கள் பேசுவார்களாயிருக்கும், என்வரையில் இது ரஹ்மான் படம், கௌதம் சொதப்பிட்டார். ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பரவாயில்லை என்றாலும் கூட. கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு படத்தொகுப்பு. இளையராஜா இசை உறுத்துகிறது என் வரையில் சொல்ல முடியவில்லை இதுதான் இந்தப் படத்திற்கான பெஸ்ட் இசையா என்று. படத்தைப் பற்றிச் சொல்ல நிறைய இருந்தாலும் கதை வந்திடுமோ என்கிற பயத்தில் நழுவுகிறேன்.
இந்தப் படம் எத்தனைப் பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை, எனக்குப் பிடித்திருக்கிறது. நான் விரும்பிய க்ளைமாக்ஸ் இல்லை என்றாலும் கூட க்ளைமாக்ஸ் பிடித்திருந்தது, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பாதிப்பாக இருக்கும். நல்ல படம் நிச்சயம் பாருங்க.
தமிழ்ப்படம் பார்த்த பிறகு எழுதியது
1) ஜீவாவை விட நானி நன்றாகச் செய்திருப்பதாகப்பட்டது.
2) தெலுங்கு எத்தனை எனக்குப் புரிந்ததுன்னு தெரியாவிட்டாலும், தெலுங்கு வசனம் நன்றாக இருப்பதாகப் பட்டது.
3) சமந்தாவின் வாய்ஸ் தெலுங்கில் நன்றாக இருந்ததாவும் தமிழில் இல்லாததைப் போலவும் இருந்தது, உடன்பார்த்த நபர் அவளே(சமந்தா) தான் பேசியிருக்காள் என்று சொன்னதை நான் நம்பலை - டப்பிங்காகயிருந்தால் தெலுங்கு நல்லாயிருந்தது.
4) தெலுங்கில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்த, நானி சொல்லும், நித்யா நித்யா நித்யா தமிழில் இல்லை. நானியின் உச்சரிப்புப் பிடித்திருந்தது பித்து கொள்ளச் செய்திருந்தது. நானி சமந்தாவிற்கு நல்ல கெமிஸ்ட்ரி படத்தில் இருந்தது. சத்தியமா அது ஜீவா சமந்தாவிற்கு இல்லை.
5) தெலுங்குப் படம் பார்க்கும் பொழுது எம்பிஏவிற்குப் பிறகு நானியின் கண்ணாடி கொஞ்சம் உறுத்தினாலும் தமிழ்ப் படம் பார்த்த பிறகு நிச்சயமா அதை ஜீவாவிற்கு சஜஸ்ட் செய்திருப்பேன்.
6) ஜீவா மஸ்குலரா இருப்பது படத்தில் உறுத்துது.
7) யுவன் சங்கர் ராஜா பாடும் பாடலைத் தவிர்த்து தமிழில் பாடல்கள் நல்லாவேயில்லை - இதைப் பத்தித் தானா இணையத்தில் இத்தனை உரையாடல்கள் நடந்தது.
8) சந்தானம் காமெடி அருமையாக இருந்தாலும் - இளையராஜாவின் இசையைப் போல் படத்தில் ஒட்டாமல் தனித்திருக்கிறது. இதற்கே கத்தும் தமிழ் சினிமா ரசிகர்கள் - சந்தானம் இல்லாமல் இருந்திருந்தால் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
9) சுத்திச் சுத்தி நான் பார்த்த படம் பார்த்த பெண்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.
10) யாரோ சொல்லியிருந்தது போல முத்தக் காட்சிகள் தெலுங்கில் நல்லாயிருந்தது - நானிக்கும் சமந்தாவுக்கும் ரியல் லைஃபில் லவ்ஸா - சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன்ஸ்களில் நானி அருமையாக கையாள்கிறார்.
Thursday, December 13, 2012
இராணுவத்தினருக்கான பாலியல் சேவை
நிறைய படங்களைப் பார்க்கிறோம், சில தமிழ்ப் படங்கள் முதற்கொண்டு பல படங்களைப் பற்றி ஒரு இரண்டு வார்த்தையாவது எழுதிடுவோம் என்று நினைக்கிற படங்கள் நிறைய. ஆனால் கொஞ்சமே கொஞ்சமாவது எழுதுறதுக்கு பிரயோஜனமா விஷயத்தைச் சொல்லணும்னு நினைச்சதும் நான் எழுத நினைக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாய்ட்டே போகுது. சரி இந்தப் படத்திற்கு வருவோம், Pantaleón y las visitadoras.
எப்பொழுது முதல் முறை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று நினைவில் இல்லை, சோமிதரன் உடைய பதிவொன்றில்(நிர்வாண ராணுவம் என்று நினைக்கிறேன்), கடைசியில் குறிப்பாகச் சொல்லும் பொழுது மகிந்தாவிற்கு, ராணுவத்தினரை குறை சொல்ல முடியாது. நீங்க அவர்களுடைய இந்த செக்ஸ் வெறியை தீர்ப்பதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்பதான ஒரு தீர்வை சொல்லியிருப்பார். அதே போல் பொடிச்சியின் சமீபகால பதிவொன்றும் கொஞ்ச நாள்களுக்கு முன்னர் வந்த இந்தப் படத்தை மீண்டும் தேடிப் பார்க்க வைத்தது.
படத்தின் கரு என்னவென்றால், இதுமாதிரி ஆண்குறிகளை கையில் பிடித்துக் கொண்டு அலையும் பெரு(Peru) நாட்டு ராணுவத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, அல்லது முடிந்த மட்டும் குறைக்க சிகரெட், தண்ணி, பொண்ணு இப்படி எந்த வித கெட்டப்பழக்கமும்(இது பட இயக்குநரின் கருத்து, இதில் என்னுடைய கருத்து வித்தியாசமாகக் கூட இருக்கக்கூடும் ;-)) இல்லாமல் இராணுவப் பயிற்சியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் ஒருவரிடம் ஒரு சீக்ரெட் மிஷன் ஒப்படைக்கப்படுகிறது.
சீக்ரெட் மிஷன் என்னவென்றால், பாலியல் தொழிலாளிகளை தேர்ந்தெடுத்து, இராணுவ வீரர்களுக்கு அவர்களுடைய பாலியல் தேவைகளை நிவர்த்தி செய்வது. இது தான் அவருடைய சீக்ரெட் மிஷன், சொல்லப்போனால் படத்தை டைரக்டர் செக்ஸுவல் காமெடியாகச் செய்திருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தின் தீவிரம் எனக்கு புரிந்துதான் இருந்தது. உலகம் முழுவதும் வரலாறு முழுக்கவும் இராணுவங்கள் செய்து வந்த விஷயம் தான் இந்தப் பெண்களை பாலியல் கொடுமைக்கும் உள்ளாக்கும் நிகழ்வு. இதற்கான தீர்வென்றில்லாமல், அப்படியாக இருக்க முடியுமோ என்று யோசிக்க வைத்தப் படம்.
ஆரம்பத்தில் ஒரு பழைய பாலியல் தொழிலாளி, தற்சமயம் பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுத்தி வருபவரிடம் வந்து இதுபோல் ஒரு விசிட்டர் சர்வீஸ் நடத்த வேண்டும் என்று பேச்சு கொடுக்கத் தொடங்குதில் சூடுபிடிக்கிறது படம். இந்த விஷயத்தை, ஒரு கார்ப்ரேட் கம்பெனியின் ஒழுங்குடன் அவர் நடத்த நினைப்பது, அதற்கான அச்சாரங்களைச் செய்வது, பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை டேட்டாக்களுடன் சீனியர் அபிஷியல்களுக்கு அனுப்புவது என டைரக்டர் தான் எடுக்க நினைத்த் விஷயத்தை மிகச் சரியாகச் செய்ததாகவே படுகிறது எனக்கு.
பின்னர் இத்தனை நல்லவராக இருக்கும் ஹீரோ, அந்த விசிட்டர் சர்வீஸில்(இராணுவ வீரர்களுக்கான ப்ராத்தல் சர்வீஸை அப்படித்தான் சொல்கிறார் ஹீரோ.) வரும் பெண்ணொருத்தியிடம் மயங்கி பின்னர் அவருடைய காதல், இதன் காரணமாக மனைவியுடன் பிணக்கு, இதை(இந்த விசிட்டர் சர்வீஸ், மற்றும் அவருடைய சீக்ரெட் லைப்) இரண்டையும் சொல்லி ப்ளாக்மெயில் செய்யும் லோக்கல் ரேடியோ அறிவிப்பாளர், என்று மசாலாத் தன்மை கொண்ட படம் தான் இதுவும்.
கடைசியில் ஹீரோவுடைய காதலி, ஒரு விபத்தில் - இராணுவத்திற்கு மட்டும் செய்யக்கூடாது நாங்களும் காடுகளில் வசிக்கிறேம் எங்களுக்கும் இந்த விசிட்டர் சர்வீஸ் வேண்டும் என விரும்பும் அதற்காக இராணுவ மேஜர் வரை பேசும் ஒரு லோக்கல் குருப், இந்த விசிட்டர் சர்வீஸ் மக்களை அவர்களுடைய தேவைகளுக்காக கட்டாயப்படுத்தும் ஒரு சூழ்நிலையில் நடக்கும் விபத்தில் - இறந்துவிடுகிறார்.
இந்தச் சமயத்தில் தான் ஹீரோ அந்த பாலியல் பெண்ணிற்கு இராணுவ மரியாதையுடனாக இறுதிமரியாதை தரப்போக அது இராணுவத்தில் பிரச்சனையைக் கிளப்பிவிடுகிறது. பின்னர் இதற்காக அவரை வேலையிலிருந்து தூக்கிவிட நினைக்கும் இராணுவத்திடம் ஹீரோ இல்லை தான் இராணுவத்தில் தான் இருக்க விரும்புவதாக உறுதியாகச் சொல்ல, குளிர்ப்பிரதேசத்திற்கு தூக்கியடிக்கப் படுகிறார். கடைசியில் அவர் இந்த முன்னால் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்த பெண்களுக்கும் அவர்களுடைய தலைவிக்கும் கடிதம் எழுதுவதாய் படம் முடிவடைகிறது.
படத்தில் விசிட்டிங், ரெண்டரிங், ஆபீஸ் என்று கொஞ்சம் போல் ஹீரோ ஆரம்பிக்கும் பொது தொடங்கும் காமெடி, தலைவர் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் அனுப்பும் பொழுதும் அதனுடன் அவர் தான் எதற்காக இந்த முடிவிற்கு வந்தார் என்றும் சொல்லும் பொழுதும் அளவாய் இருக்கிறது. இராணுவ வீரர்களின் மெண்ட்டாலிட்டியைக் கூட சொல்லியிருப்பார் இயக்குநர், கடைசியில் பிரச்சனை ஆன பிறகு அந்த பாலியல் தொழிலாளர்களின் தலைவி, ஹீரோவை, இராணுவ சேவையில் இருந்து பதவி விலகுமாறும், பின்னர் இப்பொழுது இராணுவத்தினருக்கு செய்ததைப் போலவே பாலியல் தொழிலை - கார்ப்பரேட் தொழில் போல செய்யலாம் என்றும், ஹீரோ தங்களுக்கு பாஸாகயிருக்க வேண்டும் என்றும் கேட்கும் பொழுது, ஹீரோ சொல்கிறார்.
எனக்கு நிச்சயம் பாஸ்கள் வேண்டும், அவர்கள் போடும் கட்டளையை நிறைவேற்றுபவனாகவே நான் பழகிவிட்டேன், என்னால் பாஸாகயிருக்க முடியாது என்று சொல்லும் பொழுது சிந்திக்க வைக்கிறார் இயக்குநர். இது அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொருந்தும். இத்தனைக்கும் ஹீரோவிற்கு அற்புதமான மேனேஜ்மெண்ட் ஸ்கில்கள் இருக்கும். என்ன சொல்வது அருமையான படம், எத்தனை பேருக்கு இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. பெரு நாட்டின் படம், ஸ்பானிஷ் மொழி, சப்டைட்டில் உண்டு, கொஞ்சம் செக்ஸ் சீன்கள் உண்டு.(Obvious இல்லையா???)
ஹீரோயின் பற்றி
படம் பற்றி
எப்பொழுது முதல் முறை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று நினைவில் இல்லை, சோமிதரன் உடைய பதிவொன்றில்(நிர்வாண ராணுவம் என்று நினைக்கிறேன்), கடைசியில் குறிப்பாகச் சொல்லும் பொழுது மகிந்தாவிற்கு, ராணுவத்தினரை குறை சொல்ல முடியாது. நீங்க அவர்களுடைய இந்த செக்ஸ் வெறியை தீர்ப்பதற்கு ஒரு வழி செய்யுங்கள் என்பதான ஒரு தீர்வை சொல்லியிருப்பார். அதே போல் பொடிச்சியின் சமீபகால பதிவொன்றும் கொஞ்ச நாள்களுக்கு முன்னர் வந்த இந்தப் படத்தை மீண்டும் தேடிப் பார்க்க வைத்தது.
படத்தின் கரு என்னவென்றால், இதுமாதிரி ஆண்குறிகளை கையில் பிடித்துக் கொண்டு அலையும் பெரு(Peru) நாட்டு ராணுவத்தினரால் ஏற்படும் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, அல்லது முடிந்த மட்டும் குறைக்க சிகரெட், தண்ணி, பொண்ணு இப்படி எந்த வித கெட்டப்பழக்கமும்(இது பட இயக்குநரின் கருத்து, இதில் என்னுடைய கருத்து வித்தியாசமாகக் கூட இருக்கக்கூடும் ;-)) இல்லாமல் இராணுவப் பயிற்சியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் ஒருவரிடம் ஒரு சீக்ரெட் மிஷன் ஒப்படைக்கப்படுகிறது.
சீக்ரெட் மிஷன் என்னவென்றால், பாலியல் தொழிலாளிகளை தேர்ந்தெடுத்து, இராணுவ வீரர்களுக்கு அவர்களுடைய பாலியல் தேவைகளை நிவர்த்தி செய்வது. இது தான் அவருடைய சீக்ரெட் மிஷன், சொல்லப்போனால் படத்தை டைரக்டர் செக்ஸுவல் காமெடியாகச் செய்திருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தின் தீவிரம் எனக்கு புரிந்துதான் இருந்தது. உலகம் முழுவதும் வரலாறு முழுக்கவும் இராணுவங்கள் செய்து வந்த விஷயம் தான் இந்தப் பெண்களை பாலியல் கொடுமைக்கும் உள்ளாக்கும் நிகழ்வு. இதற்கான தீர்வென்றில்லாமல், அப்படியாக இருக்க முடியுமோ என்று யோசிக்க வைத்தப் படம்.
ஆரம்பத்தில் ஒரு பழைய பாலியல் தொழிலாளி, தற்சமயம் பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுத்தி வருபவரிடம் வந்து இதுபோல் ஒரு விசிட்டர் சர்வீஸ் நடத்த வேண்டும் என்று பேச்சு கொடுக்கத் தொடங்குதில் சூடுபிடிக்கிறது படம். இந்த விஷயத்தை, ஒரு கார்ப்ரேட் கம்பெனியின் ஒழுங்குடன் அவர் நடத்த நினைப்பது, அதற்கான அச்சாரங்களைச் செய்வது, பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை டேட்டாக்களுடன் சீனியர் அபிஷியல்களுக்கு அனுப்புவது என டைரக்டர் தான் எடுக்க நினைத்த் விஷயத்தை மிகச் சரியாகச் செய்ததாகவே படுகிறது எனக்கு.
பின்னர் இத்தனை நல்லவராக இருக்கும் ஹீரோ, அந்த விசிட்டர் சர்வீஸில்(இராணுவ வீரர்களுக்கான ப்ராத்தல் சர்வீஸை அப்படித்தான் சொல்கிறார் ஹீரோ.) வரும் பெண்ணொருத்தியிடம் மயங்கி பின்னர் அவருடைய காதல், இதன் காரணமாக மனைவியுடன் பிணக்கு, இதை(இந்த விசிட்டர் சர்வீஸ், மற்றும் அவருடைய சீக்ரெட் லைப்) இரண்டையும் சொல்லி ப்ளாக்மெயில் செய்யும் லோக்கல் ரேடியோ அறிவிப்பாளர், என்று மசாலாத் தன்மை கொண்ட படம் தான் இதுவும்.
கடைசியில் ஹீரோவுடைய காதலி, ஒரு விபத்தில் - இராணுவத்திற்கு மட்டும் செய்யக்கூடாது நாங்களும் காடுகளில் வசிக்கிறேம் எங்களுக்கும் இந்த விசிட்டர் சர்வீஸ் வேண்டும் என விரும்பும் அதற்காக இராணுவ மேஜர் வரை பேசும் ஒரு லோக்கல் குருப், இந்த விசிட்டர் சர்வீஸ் மக்களை அவர்களுடைய தேவைகளுக்காக கட்டாயப்படுத்தும் ஒரு சூழ்நிலையில் நடக்கும் விபத்தில் - இறந்துவிடுகிறார்.
இந்தச் சமயத்தில் தான் ஹீரோ அந்த பாலியல் பெண்ணிற்கு இராணுவ மரியாதையுடனாக இறுதிமரியாதை தரப்போக அது இராணுவத்தில் பிரச்சனையைக் கிளப்பிவிடுகிறது. பின்னர் இதற்காக அவரை வேலையிலிருந்து தூக்கிவிட நினைக்கும் இராணுவத்திடம் ஹீரோ இல்லை தான் இராணுவத்தில் தான் இருக்க விரும்புவதாக உறுதியாகச் சொல்ல, குளிர்ப்பிரதேசத்திற்கு தூக்கியடிக்கப் படுகிறார். கடைசியில் அவர் இந்த முன்னால் இராணுவத்தினரின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்த பெண்களுக்கும் அவர்களுடைய தலைவிக்கும் கடிதம் எழுதுவதாய் படம் முடிவடைகிறது.
படத்தில் விசிட்டிங், ரெண்டரிங், ஆபீஸ் என்று கொஞ்சம் போல் ஹீரோ ஆரம்பிக்கும் பொது தொடங்கும் காமெடி, தலைவர் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் அனுப்பும் பொழுதும் அதனுடன் அவர் தான் எதற்காக இந்த முடிவிற்கு வந்தார் என்றும் சொல்லும் பொழுதும் அளவாய் இருக்கிறது. இராணுவ வீரர்களின் மெண்ட்டாலிட்டியைக் கூட சொல்லியிருப்பார் இயக்குநர், கடைசியில் பிரச்சனை ஆன பிறகு அந்த பாலியல் தொழிலாளர்களின் தலைவி, ஹீரோவை, இராணுவ சேவையில் இருந்து பதவி விலகுமாறும், பின்னர் இப்பொழுது இராணுவத்தினருக்கு செய்ததைப் போலவே பாலியல் தொழிலை - கார்ப்பரேட் தொழில் போல செய்யலாம் என்றும், ஹீரோ தங்களுக்கு பாஸாகயிருக்க வேண்டும் என்றும் கேட்கும் பொழுது, ஹீரோ சொல்கிறார்.
எனக்கு நிச்சயம் பாஸ்கள் வேண்டும், அவர்கள் போடும் கட்டளையை நிறைவேற்றுபவனாகவே நான் பழகிவிட்டேன், என்னால் பாஸாகயிருக்க முடியாது என்று சொல்லும் பொழுது சிந்திக்க வைக்கிறார் இயக்குநர். இது அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொருந்தும். இத்தனைக்கும் ஹீரோவிற்கு அற்புதமான மேனேஜ்மெண்ட் ஸ்கில்கள் இருக்கும். என்ன சொல்வது அருமையான படம், எத்தனை பேருக்கு இந்தப் படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. பெரு நாட்டின் படம், ஸ்பானிஷ் மொழி, சப்டைட்டில் உண்டு, கொஞ்சம் செக்ஸ் சீன்கள் உண்டு.(Obvious இல்லையா???)
ஹீரோயின் பற்றி
படம் பற்றி
Wednesday, December 12, 2012
விஸ்வரூபம் - கமல் பிரச்சனை
விஸ்வரூபம் படத்தை கமல் டிடிஎச் முறையில் வெளிவிட முடிவெடுத்துவிட்ட நிலையில் எல்லோருக்கும் இதைப்பற்றிச் சொல்ல என்னவோ இருக்கத்தான் செய்கிறது. கேபிள் சங்கர் எழுதிய பதிவு நன்றாக வந்திருந்தது, உத அண்ணன் எப்பொழுதையும் போல குழப்பம் ஆதரிப்பதா இல்லையா என்பதில், பதிவு முடியும் பொழுது ஒரு முடிவு சொல்வது அவருக்கு எப்பவும் குழப்பம் தான். ஜாக்கியின் பதிவுகளும் கூட பிரச்சனையின் கோணத்தைப் பற்றிப் பேசியது, அப்படியே லக்கியுடையதும். இடையில் ப்ருனோ ப்ளஸில் சொன்ன விஷயமும் கூட முக்கியமானதாகப் படுகிறது.“here are two groups of movie watchers
1. Those who see in Theater only
2. Those who see in Home only - pirated CD / Torrent
3. Those who see in both
-
Now, producer gets money only for the movies watched in Theater
Producer gets no money for those who watch through Torrents and Pirated CDs
DTH is aimed at monetizing this group”
ப்ருனோ சொல்வதைப் போல் நான் முதல் வகைக்காரன். பெரும்பாலும் நானறிந்து வெளியாகும் எனக்குப் பிடித்தப் படங்களையெல்லாம் திரையில் சென்று மட்டும் பார்ப்பேன், ஆனால் வழியில்லாமல் அமெரிக்காவில் உட்கார்ந்திருக்கும் பொழுது தியேட்டரில் வெளியாகாமல் போனால் இணையத்தில் பார்க்கும் கோஷ்டி.
சுயநலத்திற்காய் என்னால் தியேட்டரில் படங்கள் வெளியாகாமல் போகும் காலமொன்று பயமுறுத்துவதாய் இருந்தாலும், DTH ஒரு முக்கியமான மாற்றமாகவும் வரவேற்கவேண்டியதாகவும் எனக்குப் படுகிறது. ஆனால் ஏற்கனவே குறைந்தும் அழிந்தும் வரும் தியேட்டர்கள் இதன் காரணமாய் பாதிக்கப்படும் என்பது மட்டுமல்ல குறையவும் செய்யும் என்று தான் நான் ஊகிக்கிறேன். இங்கே அமெரிக்காவிலே மிகப்பிரபலமான படங்கள் தவிர்த்து மூன்றாம் நான்காம் நாளே தியேட்டர்களில் ஆட்கள் இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறேன். எத்தனை முதல் வார படம் பார்த்த பொழுதுகளில் தனியாக நான் மட்டும் தியேட்டரில் இருந்தேன் என்று நினைவில் இல்லை, ஆனால் பத்து படங்களாவது இருக்கும்.ஆனால் இது சிறுபடங்களுக்கும், பரீட்சார்த்தமான படங்களுக்கும் மிகவும் உதவியாகயிருக்கும். பாலா போல் ப்ரிவ்யூவையே 100 நாள் ஓட்ட வேண்டிய நிலை வராமல் இருக்க உதவலாம். இதை நம்பி படமெடுப்பவர்கள் வரலாம், அதன் காரணமாய் நல்ல உலகத் தரமான படங்கள் மேலெழ வாய்ப்பிருக்கிறது. இந்தப் படமும் ஆளவந்தான் போலத்தான் இருக்குமென்று பட்டாலும் அப்படித்தான் நான் தசாவதாரம் வந்த பொழுதும் நினைத்தேன், ஆனாலும் கூட இந்தப் படம் இன்னமும் ஆளவந்தான் போல இருக்குமென்றே மனம் சொல்கிறது. இந்த ஆளவந்தான் போல என்று சொல்வதில் எங்கும் படம் நல்ல படமா அல்லாத படமா என்ற கேள்வியில்லை பொதுமக்கள் பிடிக்குமா காதா என்கிற கருத்தை வைத்து மட்டுமே சொல்கிறேன்.
சினிமாவில் எடுத்தப் பணத்தை திரும்பவும் சினிமாவிலேயே போடும் முட்டாள் கமல் தோற்றுவிடக்கூடாதென்று மனம் பரபரக்கிறது, அந்த குறைந்தபட்ச மனசாட்சிக்காக. நல்ல திரைப்படங்கள் கொடுக்க வேண்டும் என்கிற கமலுடைய மனம் புரிந்தாலும் மஜித் மஜீதி சொல்லியிருந்தது போல் நல்ல படமெடுக்க இத்தனை பணம் தேவையில்லை, கமல் இதில் ஹாலிவுட்டைப் பின்பற்றுகிறார். பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார், ஆனால் ஹாலிவுட்டில் கூட ஹீரோக்கள் இந்தப் பிரமாண்ட பட இடைவெளியில் நல்ல ஹாப் பீட் படங்களை கொடுத்துவிடுகிறார்கள். கமல் போன்ற கலைஞன் அது போன்ற இடைவெளில் மொக்கை நகைச்சுவைப் படம் தான் செய்ய முடிகிறது. இந்த விதத்தில் கமல் மோகன்லாலை பின்பற்றியிருக்கலாம், ஆனால் கமல் பிறந்த இடப் பிரச்சனை இது. கமல் கேரளாவிலோ இல்லை ஈரானிலோ பிறந்திருந்தால் வேறு மாதிரி முயன்றிருக்கலாம்; இன்னொன்று ஈகோ. எத்தனையோ நல்ல கலைஞனாக இருந்தால் ஒரு நல்ல இயக்குநர் அவருக்குக் கிடைக்காமல் போக அது காரணமாகயிருந்துவிடக் கூடாது. ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து ஹாலிவுட்டைப் பின்பற்றும் கமலால் முடிந்தது இத்தனையே! அதை அவர் சுயநினைவோடு செய்கிறார், இங்கிருக்கும் கிணற்றில் இருந்து எப்பொழுதும் தப்பித்துவிடவேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருக்கிறது உழைப்பும் இருக்கிறது, காலம் இல்லை.லைஃப் ஆஃப் பை பார்த்த பொழுது அந்தத் தமிழன் கேரக்டரை ஏன் ஒரு தமிழன் செய்திருக்க முடியாது என்று மனம் அரித்தது, ஏன் கமல் அந்தப் படத்தில் நடித்திருந்திருக்கக்கூடாது, இர்ஃபான் கான் நடிப்புப் பிடித்திருந்தாலுமே கூட. சொந்தமாக தியேட்டர் வாடகைக்கு எடுத்து வெளிவிடுகிறார் என்று கேள்விப்படுகிறேன். நடுநிலையிலிருந்து இதுபோன்ற சூழ்நிலையில் மனம் நகர்ந்துவிடுகிறது, இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்று மனம் வேண்டுகிறது. பணம் வெல்வது தோற்பது பற்றிய கவலையில்லாமல் கமல் படமெடுக்கும் காலம் வரவேண்டும். கமலின் உச்சம் இன்னும் நிகழ்ந்துவிடவில்லை என்றே நினைக்கிறேன், சீக்கிரம் அதை அவர் அடையவேண்டும் என்றும் நினைக்கிறேன்.
Tuesday, December 11, 2012
Rain Man
ஆட்டிஸம்(Autism) ஒரு மனநிலை பாதிப்பது சம்மந்தப்பட்ட ஒரு நோய். இதன் பாதிப்பு உள்ளவர்களின் பழக்கவழக்கங்கள், பேச்சுமுறைகள், செயல்பாடுகள், விருப்புவெறுப்புகள் சாதாரணமானவர்களைப் போலில்லாமல் வித்தியாசப்படும்.(Autism is classified as a neurodevelopmental disorder). நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து சில சமயங்களில் இந்த வேறுபாடு அதிகமாகயிருக்கும். இந்தக் குறைபாட்டுக்கான மிகச்சரியான விளக்கம் தெரியாவிட்டாலும், ஜீன்களின் கோளாறுகள்தான் இதன் காரணம் என்று உணரப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த குறைபாடு உள்ளவர்களிடம், சாதாரணமாக உள்ளவர்களின் ஜீன்களில் ஏறக்குறைய ஏழு வித்தியாசமான நிலைப்பாடுகளை இதுவரை கண்டறிந்துள்ளனர்.
பலசமயங்களில் இந்த குறைபாடு உள்ளவர்களை உருவத்தோற்றத்தின் படி வேறுபடுத்த முடியாவிட்டாலும், அவர்கள் மூளைவளர்ச்சி குறைவாக இருக்கும். தற்சமயத்தில் இதன் பல்வேறுபட்ட பரிமாணங்களுக்கு ஏற்றபடியான சிகிச்சைமுறைகள் கொடுக்கும் அளவிற்கு மருத்துவத்துறை முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக குழந்தைகளின் வயது மூன்றிற்கு குறைவாக இருக்கும் பொழுது, அந்தக் குழந்தைகளின் செயல்பாடுகளை வைத்தே இந்த நோய் அந்தக் குழந்தைக்கு இருக்கிறதா எனக் கண்டறியலாம்.
இந்தக் குறைபாடு உடைய குழந்தைகள் சாதாரணமாக சமூகத்தில் பங்குபெறமுடியும். கல்வி நிறுவனங்களில் படிக்க, வேலை பார்க்கும் அலுவலகங்களில். ஆனால் இந்த நோய்க்கான முழுமையான தீர்வு என்பது இதுவரை சாத்தியப்படாமலே இருக்கிறது.
எனக்கும் இதைப்பற்றி நேரடியாகவே தெரியும், எப்படியென்றால் நான் பிறந்து வளர்ந்த இடத்தில், அறிவாலயம் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ஒரு பள்ளி இருக்கிறது. அந்தப் பள்ளியின் பேருந்து எங்கள் வீட்டை கடந்து செல்லும் பொழுதெல்லாம் அந்த குழந்தைகளுக்கு நான் டாட்டா காட்டுவேன். அதைப்போலவே அவர்களும். கோயிலுக்கு செல்லும் பொழுதும் அவர்கள் பள்ளியில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அப்பொழுதும் டாட்டா காண்பிப்பதுண்டு. அதில் அவர்கள் அடையும் சந்தோஷம் சொல்லிப்புரியாது. இதே போல் எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் பெண்ணுக்கும் இந்த நோய் இருந்தது. அந்தப்பெண்ணை பார்க்க பாவமாக இருக்கும் எனக்கு. ஆனால் அந்தக் குடும்பத்தின் மனநிலை சற்று வித்தியாசமாக இருக்கும்.
அதாவது உலக அளவிலேயே இந்த மாதிரியான ஆட்டிஸம் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தலாம், குணப்படுத்த வேண்டாம் என்பதற்கான இரண்டு வகையான மனநிலைகள் இது சம்மந்தப்பட்ட குடும்பங்களிடம் நிலவுகின்றன. இதில் குணப்படுத்த வேண்டாம் என்பவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சிகிச்கையளிக்கவில்லை என கட்டுரைகள் சொல்கின்றன. இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் சொன்ன அந்த வீட்டினரிடம் இந்த மனநிலையை பார்த்துள்ளேன். அவர்களைப் பொறுத்தவரை இந்த நோயுடன் இருந்தாலும் அவர்களுடைய பிள்ளையே அந்தப் பெண் என்றும் அதற்கான சிகிச்சை தேவையில்லையென்றும் அவர்கள் என் பெற்றோரிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இதில் சாவன்ட்(The autistic savant phenomenon is sometimes seen in autistic people. The term is used to describe a person who is autistic and has extreme talent in a certain area of study) என்றொரு வகையுண்டு அவர்களுக்கு, இந்த நோய் இருந்தாலும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட துறையில் மேதைகளாக, சிலசமயம் நாம் நினைக்க முடியாத அளவில் மேதைகளாக இருப்பார்கள். சாவன்ட் என்பதற்கு அறிவாளிகள் அல்லது தெரிந்துகொள்பவர்கள் என்ற பொருள்வரும்(The word comes from the French word savant, meaning scientist (literally, knowing)). டானியல் டெம்மெட் என்ற ஒரு இந்த நோய் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அற்புதமான திறமையுண்டு அது, அவன் மனனம் செய்யும் திறமை. அவன் பை என்றழைக்கப்படும் கணித மாறிலியின் 25514ம் இலக்கம் வரை கணக்கிட்டு அதற்கான ஐரோப்பிய சாதனை விருதைப் பெற்றவன். பையின் மதிப்பு 3.14 இது 14க்கு பிறகு முடிவில்லாதது, இந்த தொடர்ச்சியையே அந்த சிறுவன் கணக்கிட்டு சொல்லியது. இது போன்ற திறமையிருக்கும் பலருக்கு அவர்கள் அதை எவ்வாறு கணக்கிட்டார்கள் எனச் சொல்லத் தெரியாது ஆனால் இந்த சிறுவனுக்கு அவன் கணக்கிட்ட உத்தியையும் சொல்லத்தெரிந்தது ஒரு அற்புதமான விஷயம்.
ஆனால் மற்ற சில பாதிக்கப்பட்டவர்களைப்போல இந்த சிறுவனால், மற்றவர்களிடம் பழகும் வாய்ப்பு இல்லாமல் போனது துரதிஷ்டமே.
இந்த வகையான பாதிப்புள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு இருக்கிறது, இது ரெய்ன் மேன்(Rain Man) என்ற திரைப்படத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த திரைப்படத்தைப்பற்றியும் கொஞ்சம்.
தமிழ் மசாலாப்படத்துக்கான அத்துனை விஷயமும் உள்ள ஒரு படம் தான் ரெய்ன்மேன், ரொனால்ட் பாஸ்(Ronald Bass), மற்றும் பாரி மோரோவ்(Barry Morrow) எழுதி, பாரி லெவின்ஸன்(Barry Levinson) இயக்க கிம் பீக்(Kim Peek) என்ற ஒரு மூளைவளர்ச்சி தவறிய(மேக்ரோசெப்பாலி) ஆட்டிஸ்டிக் சேவன்ட் கிடையாது, வேறுவகையானது, ஒரு உண்மையான கதாப்பாத்திரத்தைப்பற்றிய படம் இது.
அந்த வருடத்திற்கான, சிறந்த கதாநாயகன், சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதைக்கான நான்கு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற படம் இது. (முழுவிவரம் கடைசியில்). நான் முதலில் இந்தப்படத்தைப் பார்த்தது அதில் நடித்து ஆஸ்கார் பெற்ற டஸ்டின் ஹாப்மென்னுக்காக(Dustion Hoffman) இல்லை. ஒரு இடத்தில் டாம் குருயிஸ்(Tom Cruise மிகவும் பிடித்த நடிகர்) உடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் என்ற காரணத்தால் சொந்தமாக வாங்கி பார்த்து வியந்துபோன படம் இந்த ரெய்ன் மேன்.
பணக்கார அப்பாவின் மகன் சார்லி பப்பிட்(Charlie Babbitt), ஒரு முறை அப்பாவிற்கு தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு போக, அப்பா கோபமாகி தன் கார் திருட்டுபோய்விட்டதாக போலிஸில் சொல்லிவிட. இரண்டுநாள் ஜெயிலில் இருந்த சார்லி கோபமாகி அப்பாவிடம் திரும்பாமல் வேறு இடத்திற்கு போய்விடுகிறார். பின்னர் வாகனங்களை விற்பவராக மாறிவிட்ட சார்லிக்கு அவன் தந்தை இறந்து போன விஷயம் தெரியவர இறுதிமரியாதை செலுத்த வருகிறான். அப்பொழுதுதான் தன் தந்தை மூன்று மில்லியன் சொத்துக்களையும் ஒரு ட்ரெஸ்டி பெயரில் எழுதுவைத்துவிட்டு, அதன் பெனிபிஷியரியாக(உபயோகப்படுத்துபவராக) யாரையோ வைத்துவிட்டு போய்விட்டதாகவும் இவனுக்கு தன் தந்தையின் ரோஜாப்பூத்தோட்டம் மட்டுமே கொடுத்ததும் தெரியவரும்.
பின்னர் யார் அந்த உபயோகப்படுத்தும் ஆள் எனத்தேடி சார்லி நகரும் பொழுது சூடுபிடிக்கத்தொடங்கும் எக்ஸ்ப்ரஸ், இங்கேதான் வருவார் ரெய்மண்ட் பப்பிட்(Raymond Babbitt - Dustion Hoffman) என்ற சார்லியின் சகோதரர். இவர் ஒரு ஆட்டிஸ்டிக் சாவன்ட். இவர் பெயரில் தான் சார்லியின் தந்தை மொத்த சொத்தையும் ட்ரெஸ்டி வழியாக எழுதுவைத்திருப்பார். அதற்கு காரணம் ரெய்மண்டிற்கு பணம் என்ற ஒரு விஷயமே தெரியாது. பின்னர் சார்லி தன் சகோதரனை கடத்திக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து அந்த ட்ரெஸ்டியை மிரட்டுவது என பக்காவான மசாலாப்படம். ரெய்மண்ட் விமானத்தில் ஏறமாட்டேன் எனபயந்து பயணச்சீட்டு எடுத்த விமானத்தை மறுக்க. சகோதரர்களின் சாலைவழிப்பயணம் தொடங்கும்.
ரெய்மண்ட் பற்றி, ரெய்மண்டின் பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை, யாரையும் அவர்கள் கண்களை நோக்கிப்பார்க்காமல், தனக்கென்ற வாழ்க்கையை வாழும் ஒரு திறமையான, மனனம் செய்வதில் மிகத்திறமையான ஒரு ஆட்டிஸ்டிக் சாவன்ட். அதாவது முட்டாள் விஞ்ஞானி. தான் படிக்கும் பார்க்கும் அத்துனை விஷயங்களையும் மனனம் செய்யும் திறமையுள்ள ரெய்மண்டை அவருடைய பழக்கவழக்கங்களிலில் இருந்து மாற்றினாலோ இல்லை, வேறுஒன்றை செய்ய கட்டாயப்படுத்தினாலோ தனக்குத்தானே தலையில் அடித்துக்கொண்டு கத்துவார்.
இப்படியாக செல்லும் இந்தப்பயணத்தில் முதலில் தன் சகோதரனின் பணத்தை மட்டுமே குறிவைக்கும் சார்லி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையான பாசத்தை கண்டுகொள்ளும் படி சொல்லியிருப்பார் இயக்குநர். முன்பே சொன்னதுபோல் ஒரு அச்சுஅசல் மசாலாப்படம். ஆனால் நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார்கள் அனைவரும்.
தன்னுடைய கடன் செலுத்தமுடியவில்லையே, இப்படிப்பட்ட ஒரு சகோதரனுக்கு மொத்த பணத்தை எழுதிவைத்துவிட்டாரே எனக்கோபப்படும் இடங்களிலும் விமானத்தில் பயணம் செய்ய பயந்து ரெய்மண்ட் கத்தும் இடத்தில் இயலாமையையும் பின்னர் தன் சகோதரனால் சீட்டுக்கட்டில் அதிக பணம் கிடைத்ததும் சந்தோஷப்படும் இடத்திலும் வெகு அழகாக நடித்திருப்பார் டாம் குருஸ்.
படத்தில் பின்னி பெடலெடுத்திருப்பாரென்றால் அது டஸ்டின் ஹாப்மென்தான். தான் முதலில் தோன்றும் இடத்திலிருந்து முடிவு வரை அந்த கதாப்பாத்திரத்தின் ஆளுமையை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். நடை உடை பாவனைகளில் பிரமாதப்படுத்தியிருப்பார். தன் சகோதரனும் அவன் காதலியும் இணைந்திருக்கும் ஒரு தர்மசங்கடமான நேரத்தில் அங்கு வந்து அவர் உட்கார்ந்திருக்கும் பொழுது அவர் வெளிப்படுத்தும் ஒரு மௌனம் அற்புதமோ அற்புதம், காட்சி அமைப்பும் பிரமாதமாகயிருக்கும்.
தன் புத்தகத்தை எடுத்த சார்லி படிப்பதை பிடிக்காமல் காட்டும் முகபாவத்தில் ஆகட்டும், ஒவ்வொரு விஷயமாக தன் ஞாபகத்திலிருந்து அவர் சொல்லும்பொழுது அவருடை சலனமற்ற கர்வமற்ற முகத்திலாகட்டும், ஒரே இரவில் டெலிபோன் டிக்ஷ்னரியிலிருந்து ஏ முதல் ஜி பாதி வரை மனப்பாடம் செய்துவிட்டு பின்னர் அடுத்தநாள் பார்க்கும் அட்டன்டர் பெண்ணின் தொலைபேசி நம்பரை சொல்லவதிலாகட்டும், பின்னர் கொட்டப்பட்ட டூத்பிக்கின் எண்ணிக்கையை சில வினாடிகளில் சொல்வதிலாகட்டும் படம் காண்பித்திருப்பார் மனுஷன்.
Kim Peek
கடைசியில் தமிழ்ப்படம் போல் முடிக்காமல் ரெய்மண்ட் பப்பிட் தான் இருக்கும் பழைய இடத்திற்கே சென்றுவிடுவதாக முடித்திருப்பார் இயக்குநர். அந்த ரெய்மண்ட் பப்பிட் என்ற கதாப்பாத்திரம் முன்பே சொன்னதைப்போல் ஒரு உண்மைக் கதாப்பாத்திரம். கிம் பீக், சுமார் 9600 புத்தகங்களை மொத்தமாக மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு என்ன கேட்டாலும் பதில் சொல்லுவார். அந்த நபரின் வாழ்க்கையை கொஞ்சம் மாற்றி சொல்லியிருப்பார்கள் படத்தில். நிச்சயமாக படத்தில் கலந்திருக்கும் நகைச்சுவை உணர்வுக்கும், டஸ்டின் ஹாப்மென், மற்றும் டாம் குருஸ்ஸின் நடிப்பிற்கும் சேர்த்து ஒருமுறை பார்க்கலாம்.
Academy - 1988
Best Actor Dustin Hoffman - Win
Best Director Barry Levinson - Win
Best Original Screenplay Ronald Bass, Barry Morrow - Win
Best Picture - Win
மறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி
"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளூம் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாக சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒரு புறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொரு புறமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றன. நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான அளவில் தொகுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை" என்று பின் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் வாசகம் கவர்ந்ததால் தான் நான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இணையத்திலும் சரி புத்தகங்களாகவும் சிடி, டிவிடிக்களாகவும் பாலியல் கதைகள் படங்கள் நிறைய கேட்டுப் பார்த்து படித்ததால் புத்தக வடிவில் அதைப் படிக்கும் தேவையில்லை என்னிடம்.
ஆனால் இந்த பின் அட்டை வசனம், இந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் மீதான ஒரு ஆர்வத்தை இயல்பாகவே கொண்டு வந்தது. படித்து முடித்ததும், புத்தகம் பற்றி தே.லூர்து சொல்லியிருக்கும் வாசகமான,
"ஏதோவொரு பயன் கருதியே இக்கதைகள் சொல்லப்படுகின்றன. இக்கதைகள் ஒழுக்கக்கேட்டை வளர்ப்பவை என்று சொல்ல இயலாது. இவை நகைப்பூட்டுபவை என்பதில் ஐயமில்லை. வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்பவை என்பதும் தெளிவு." என்ற வரிகளுடன் உடன்படுகிறேன்.
'நான் ஏன் இதை எழுதுகிறேன்?' பத்தியில் கி.ரா சொல்வதை கவனிக்க வேண்டும். அவர் 'பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதைத் திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது, பேதமை. மானுடவியலில் இதெல்லாம் இருக்கு...' '...பாலியல் கதைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தால் அதன் காலக்கட்டம் கி.மு - கி.பி என்பது போல் - நம் சமூகத்தில் திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னால் - திருமணத்திற்குப் பின்னால் என்று கொள்ள வேண்டும். மானுட வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் தான் திருமணம் வருகிறது..." என்று சொல்கிறார். அப்படியே முன்னுரையில் '...பெண்களை அடக்கி ஒடுக்கு வைத்துக் கொடுமைப்படுத்தும் ஆண்களுக்கு எப்படித் தண்ணி காட்டியிருந்தார்கள் அவர்கள் என்று பல கதைகள் நகைச்சுவையோடு சொல்லும்...' சொல்வதை வைத்து, கல்வெட்டுகள் போல், செப்புப்பட்டயங்கள் போல் இந்தக் கதைகளும் வரலாற்றை மக்களின் வாழ்க்கை முறையை சமுதாய அமைப்பை புரிந்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன். அவர் சொல்வது போல் பாலியல் மனக் கோணல்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்றூ தெரிந்து கொள்ள முடிகிறது.
ஏதோ இந்தக் கதைகளைத் தொகுத்துவிட்டார்கள் நாமும் படிக்கிறோம், பரவாயில்லை கெட்ட வார்த்தைகளில்லை 'சூசகமா'த்தான் எல்லாத்தையும் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். சில கதைகள் நகைச்சுவையாகவும் சில கதைகள் பெருஞ்சிரிப்பை வரவைப்பவையாகவும். சில இப்படியும் இருக்க முடியுமா என்ற கேள்வியைக் கொண்டு வருவதாகவும் இருக்கின்றன. ஆனால் இந்தக் கதைகளைச் சேகரிக்க கி.ராவும் சரி கழனியூரானும் சரி ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் இந்தப் புத்தகத்தின் பின்னால் பின்னிணைப்பாகக் கொடுக்கப்படும் 'கதைகள் கறந்த கதை' இவை எத்தனை கடின முயற்சியில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது இப்படிப்பட்ட தொகுக்கப்பட்ட பாலியல் கதைகளை பதிப்பில் கொண்டு வருவது எத்தனை கஷ்டமான விஷயம் எனபதும் தெரியவருகிறது.
உயிர்மை ஸ்டாலில் இந்தப் புத்தகம் இருந்த பொழுது இரண்டு மூன்று தடவை சுற்றி வந்து எடுக்காமல் நகர்ந்துவிட்டேன் முதலில் பின்னர், 'எனி இந்தியன்' மூலமாய் வாங்கிக்கலாம் யாருக்கும் தெரியாது என்றே நினைத்தேன் :). ஆனால் இது அப்படியொன்றும் மறைக்கக் கூடிய விஷயம் இல்லை என்று தீர்மானித்து நேரடியாய் உயிர்மை ஸ்டாலிலேயே வாங்கினேன். இதை ஏன் சொல்கிறேனென்றால் நாளை பெங்களூரிலோ, சென்னையிலோ புத்தக்கக் கண்காட்சியின் பொழுது இந்தப் புத்தகம் உங்கள் கண்ணுக்குத் தட்டுப்படலாம். அப்பொழுது என்னைப் போல் தடுமாறாமல் மனித வாழ்வியலில் இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொண்டு வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்பொழுது கொஞ்சம் 'கதைகள் கறந்த கதை' பற்றி, கல்யாண வீடுகளில் இரவு வேலை செய்ய் நேரும் பொழுது வய்ற்காட்டில் களை எடுக்கும் நேரத்தில் பின்னர் வெயிலின் வெம்மையை மறக்க வைக்கவும் இம்மாதிரி கதைகள் சொல்லிக் கொள்கிறார்கள் என்று சொல்லும் கழனியூரன், பெண்கள் பெரும்பாலும் பெண்களிடமே இது போன்ற பாலியல் கதைகளை பரிமாறிக் கொள்வதாகவும், ஒரு ஆடவன் முன் அதுவும் அந்நிய ஆடவன் முன் சொல்லத் தயங்குவதாகவும். வயது வித்தியாசம் இன்றி பால் வேற்றுமையில் பாதிக்கப்பட்டு நாணம் கொண்டு சொல்வதில்லை என்கிறார். அதே போல் சில கதைகளை ஆண்கள், ஆண்களுக்கு மட்டும் சொல்வதாகவும் அதிலும் கொஞ்சம் பக்குவப்பட்டவர்களுக்கு மட்டும் சொல்வார்கள் என்பவர் ஆண்களிடம் இருக்கும் வேறு விதமான பிரச்சனையைக் கூறுகிறார், அவர்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் படித்தவர்களிடம் தாங்கள் என்ன கதை சொல்ல என்று பெரும்பான்மையான ஆண்கள் இருப்பார்கள் என்றும் முன்பு பதிவு செய்த கேசட்டைப் போட்டுக் காட்டியதும் சொல்லத் தொடங்குவார்கள் என்று கூறினார். இதற்கு முற்றிலும் மாறுபட்டு 'நீ என்ன படிச்ச?' என்று கேட்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறார்.
ஒருமுறை நான் போடும் 'அழிப்பாங்கதை'யை அழித்தால் கதை சொல்வதாகச் சொன்ன ஒருவரின் கதையை அழிக்க முடியாததைச் சொல்கிறவர், பின்னர் 'நாங்க என்ன படிச்சோம் ஏட்டுச் சுரக்காய்.' என்று லாவகமாய்ப் பேசி கதை கறந்ததைக் கூறுகிறார். இவர்கள் சேகரித்த கதைகளைப் போலவே கதை சேகரித்த கதையும் அருமையாக இருக்கிறது.
இந்தப் பின்னணியில் 'மறைவாய் சொன்ன க்தைகள் தொகுப்பில் இருந்து இன்னும் ஒரு கதை.
ஒரு அம்மாள் ரொம்ம நல்ல குணம். மொழு மொழு என்று, சதைப் பிடிப்போடு நன்றாக இருந்தாள். பாவம், விதவை. அதனால் பக்தி மார்க்கத்திலே திரும்பிவிட்டாள். பக்தர்களுக்கு - சாமியார்கள், பண்டாரம் பரதேசிகள், இப்படி எவ்வளவோ பேர் இல்லையா! அவர்களுக்கு - ரொம்பவும் உபகாரம் பண்ணலானாள். பொருளாலும் உழைப்பு பணிவிடைகளாலும், இஷ்டப்பட்ட பேருக்கு உடலாலும் திருப்திகரமாகத் தொண்டாற்றினாள்.ஒரு சமயம் ஒரு சாமியார் வந்தார் பக்திக் காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த அந்த அம்மாள் வீட்டில் தான் தங்கினார். அவள் வழக்கம் போல் பொருள், உணவு, உழைப்பு, உடல் அனைத்தும் ஈந்து அவர் மனம் குளிர சேவை செய்தாள். அதில் அவளுக்கும் ரொம்ப திருப்தி.
ஒரு வாரம் சென்றது. சாமியார் புறப்பட்டுவிட்டார். அங்கேயே இருக்க முடியுமா பின்னே? அந்த அம்மாளை வெகுவாய்ப் புகழ்ந்தார் மறக்கவே முடியாது என்றார்.
அவள் கண்ணைக் கசக்கினாள். இனிமேல் இராத்திரிப் பொழுதுகள் சிரமப்படுத்தும்; தனிமையில் கஷ்டமாகத்தானிருக்கும் என்று சிணிங்கினாள்.
சாமியார் யோசித்தார். 'கவலைப்படாதே. நாராயணன் கிருபை செய்வான்' என்று சொல்லி, பைக்குள் கையைவிட்டு ஒரு சாமானை எடுத்தார்.
கழுத்து மாதிரி - உலக்கையின் நுனிப்பகுதி மாதிரி - அது இருந்தது. அரை அடிக்கும் அதிகமான நீளம். மினுமினுப்பாக, கடைசல் பிடித்தது மாதிரி, பருமனாக இருந்தது.
அதை அவர் அந்த அம்மாளிடம் தந்து, 'இது ரொம்பவும் புண்ணிய விஷயம். ஒரு சித்து புருஷரின் அருள் பெற்றது. உனக்கு எப்போ ஆசை ஏற்பட்டாலும் சரி. இதை அடிவயிற்றில் வைச்சு, நாராயணா நாராயணா என்று சொல்லு இது உள்ளே புகுந்து திவ்யமா விளையாடும். உனக்கு திருப்தி ஏற்பட்டதும் சிவசிவான்னு சொல்லு. இது மறுபடியும் பழைய நிலைமை அடைந்துவிடும்' என்றூ சொன்னார் 'இதைப் பத்திரமாப் பார்த்துக்கோ' என்றும் எச்சரித்துவிட்டுப் போனார்.
அந்த அம்மாள் சாயங்காலம் குளித்து, இரவானதும் பிள்ளையார் பூஜை செய்துவிட்டு, சிறிது உணவு உண்டு, உரிய நேரத்தில் படுத்தாள். முறைப்படி அந்தக் கழுத்தை எடுத்து தொடைகளுக்கிடையே கொண்டு போய், 'நாராயணா நாராயணா' என்று மந்திரம் போல் உச்சரித்தாள்.
ஆச்சர்யம்தான், அது உயிர் பெற்றது. அவளுக்கே 'போதும்' என்று பட்டதும், சிவசிவா என்று பெருமூச்சுடன் முனகினாள்.
அது வெளிவந்து அவள் வயிற்றின் மீது ஜீவனின்றிப் படுத்து விட்டது.
அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். பிறகு கண்விழித்ததும் அதை எடுத்து முத்தமிட்டாள், ஆசையாய் தடவிக் கொடுத்தாள். அதை கழுவி பவுடர் பூசி விளக்குமாடத்தில் வைத்தாள்.
தினம் அதைக் குளிப்பாட்டி பூ போட்டு பக்தியோடு கும்பிட்டாள் ராத்திரி பொழுதுகளில் உள்ளே புகுந்து விளையாட விட்டாள். ஆகவே அவளுக்கு சந்தோஷத்துக்குக் குறைவே இல்லை.
ஒரு நாள் வேறொரு பரதேசி வந்தார். நாமம் போட்டுக் கொண்டு விஷ்ணு பக்தராகக் காட்சி அளித்தார். அந்த அம்மாளின் தர்ம சிந்தயைக் கேள்விப்பட்டு, அவள் வீட்டுக்கே வந்தார். அவளும் வழக்கப் பிரகாரம் உபசரித்தாள். இரவு அங்கேயே தங்கினார். புண்ணிய ஸ்தலங்கள், தீர்த்த யாத்திரை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.
நேரம் ஆகிவிட்டது அவருக்கு கொட்டாவி கொட்டாவியாய் வந்தது, அவர் நாராயணா நாராயணா என்று உச்சரித்துக் கொண்டே வாயை பிளந்தார்.
விளக்குமாடத்திலிருந்த 'வரப்பிரசாதம்' பாய்ந்து வந்து அவர் வாயுள் புகுந்துவிட்டது. அவர் பதறிப்போனார்.
அந்த அம்மாள் திடுக்கிட்டுத் திகைத்து, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்துவிட்டாள். பிறகு சமாளித்துக் கொண்டு 'சிவசிவா சொல்லுங்க, சீக்கிரம் சிவசிவா சொல்லுங்க' என்று கத்தினாள்.
அவர் வீரவைஷ்ணவர், சிவன் நாமத்தைச் சொல்லவே மாட்டார் அதைச் சொல்லாமல் கஷ்டப்பட்டார்.
'சிவசிவான்னு சொன்னால் தான் அது நிற்கும். தயவு செய்து சொல்லுங்க என்று அவள் கெஞ்சினாள்.
அவரும் இம்சை தாங்க மாட்டாமல், சிவசிவா என்றார் அது தானாக ஓய்ந்து விலகிக் கீழே விழுந்தது.
அந்த அம்மாள் அதை எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டு அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டினாள்.
*இந்தக் கதை சைவ, வைணவ எதிர்ப்பு அதிகரித்து இருந்த கால கட்டத்தில் எத்தனையோ நாட்டுப்புறக் கதைகள் 'அதை' மையமாகக் கொண்டு கிராமத்து மக்களால் படைக்கப்பட்டுள்ளது. அதில் இது ஒருவிதக் கதை. மூத்த எழுத்தாளர் ஒருவர் சேகரம் செய்து கொடுத்த நாட்டுப் புறப் பாலியல் கதை இது.
Monday, December 10, 2012
மறைவாய் சொன்ன கதைகள்
எனக்கு அடல்ஸ் ஒன்லி வகை கதைகள் அறிமுகம் ஆன பொழுது நான் ஒன்பதாவது பத்தாவது படித்துக் கொண்டிருந்த சமயமாக இருக்கும். ஏனென்றால் எனக்கு நினைவில் இருக்கிறது அப்பொழுது நான் அரைக்கால் ட்ரௌசர் போட்ட பையன் என்று. அது தர்ம சங்கடமான சமயம், மதிய சாப்பாடு முடிந்து சற்று தூக்க கலக்கமாக இருக்கும் சமயங்களில் பையன்கள் ஆரம்பித்து விடுவார்கள்.
பின்னர் கல்லூரிக் காலங்களில் பெரும்பாலும் கடைசி பெஞ்சில் இதைப் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கும். சாஃப்ட்வேர் கம்பெனிகளும் இதற்கு கொஞ்சம் குறைந்தது கிடையாது, politically correctஓ இல்லையோ கூட வேலை செய்யும் பெண்களைப் பற்றி ஏக காலத்தில் கமென்ட்டுகள் வந்த வண்ணம் இருக்கும் XXX ஆக இல்லாமல் பெரும்பாலும் XX ஆகவோ இல்லை வெறும் X ஆகவோ தான் இருக்கும். தண்ணியடித்தால் 'பஞ்சாபி A ஜோக்குகள்' சொல்லும் PM ஒருத்தர், தண்ணியடிக்க ஆரம்பித்ததில் இருந்தே பெண்கள் பற்றி பேசும் 'சாஃப்ட்வேர்' நண்பர்கள் வரை இன்னமும் நிறைய பேர் நிறைய கதைகள் உண்டு.
பெரும்பாலும் யாரோ ஒருவர் ஆரம்பித்து பின்னர் மற்றொருவர் தொடர்வது என எல்லோரும் ஒரு கதையாவது சொல்லியிருப்பார்கள். நிறைய கதைகள் நினைவில் நிற்பது இல்லை பெரும்பாலும் இது போன்ற கதைகளை வெறுமனே கேட்டு அந்த நேரத்தில் சிரிக்கத்தகுந்தவையாகத்தான் இருக்கும்.
இதே போல் கிராமத்தில் நடமாடும் 'மறைவாய் சொன்ன கதைகளைத்' தொகுத்து கி.ராஜநாராயணனும் கழனியூரானும். மறைவாய் சொன்ன கதைகள் என்ற தொகுப்பாய் விட்டிருக்கிறார்கள் அதிலிருந்து ஒரு கதை சாம்பிளுக்கு. இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்ததற்கு கதை சிறியதாய் இருப்பதைத் தவிர்த்து வேறு ஒரு காரணமும் கிடையாது :).
ஒரு ஊர்ல ஒரு புருஷனும் பொண்டாட்டியும் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருந்தான். அவனுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். அவன் ஒரு பைத்தியக்காரனா வளர்ந்தான்.
ஒரு நாள் பட்டப்பகலில் கதவை ஒருச்சாத்தி(சிறிது திறந்தபடி) வைத்துக் கொண்டு புருஷனும் பொண்டாட்டியும் 'பேசிப் பெறக்கிக் கிட்டு' இருந்தாங்க. அவங்களோட பையன் கதவின் இடைவெளி வழியா உள்ளே எட்டி அந்தக் கங்காட்சியைப் பார்த்துட்டான்.
தன் பாட்டியிடன் வந்து வீட்டுக்குள் தான் பார்த்த கங்காட்சியை பற்றிச் சொல்லி 'அம்மாவும் அப்பாவும் என்ன செய்றாங்க பாட்டி' என்று விபரம் கேட்டான்.
பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டுட்டு, 'கதவைத் திறந்து போட்டுக்கிட்டு அவங்க சந்தோஷம் கொண்டாடியிருக்காங்க' என்பதைப் புரிந்து கொண்ட பாட்டி பேரன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து வழக்கம் போல் ஒரு பொய்யைச் சொன்னாள்.
அந்தப் பேரன் அடிக்கை எசக்குப்பிசக்கா பாட்டியிடம் அப்படிக் கேள்விகள் கேட்பதுண்டு.
ஒருநாள் 'பாட்டி நான் எப்பைப் பிறந்தேன்?' என்றூ கேட்டான்.
பேரனின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல விரும்பாத பாட்டி, 'நீ சின்ன பிள்ளையா இருக்கும்போது ஒரு கன்னப் பருந்து உன்னைக் கொண்டுவந்து உன் அம்மாவின் மடியில் போட்டுட்டுப் போய்ட்டு' என்று ஒரு பொய்யைச் சொல்லி வைத்தாள்.
இப்பமும் அதே மாதிரி 'பேரப்புள்ள, உங்கம்மா திடீரென்று செத்துட்டா, உங்கப்பா அவளைக் கட்டிப் பிடிச்சி உசிரு கொடுத்துக்கிட்டு இருந்திருக்கு. அதைத்தான் நீ பார்த்திருக்கிறெ.' என்று பொய்யைச் சொல்லி வைத்தாள்.
பைத்தியக்காரனான பேரப்பிள்ளையும் பாட்டி சொன்னதை நம்பிட்டான்.
ஒரு வாரம் கழித்து பக்கத்து வீட்டில் ஒரு வயசுக்கு வந்த பொம்பளைப் பிள்ளை ஒருத்தி இறந்துவிட்டாள். எல்லோரும் போய் செத்துப்போன பிள்ளையைப் பார்த்துட்டு வந்தாங்க.
பாட்டியோட பேரனும் போய் செத்துப் போன அந்தப் பிள்ளையப் பார்த்துவிட்டு அங்கே நின்றவர்களிடம் 'எங்கப்பா செத்தவங்களுக்குக் கெல்லாம் உயிர் கொடுக்கத் தெரிஞ்சவங்க. இப்ப எங்கப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்து செத்துப் போன இந்தப் பிள்ளையக் கட்டி பிடிக்கச் சொல்லுங்க. இந்தப் பிள்ளைக்கும் உயிர் வந்திரும்' என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.
பையன் சொல்வதைக் கேட்ட நிறைய பேருக்கு 'விபரம்' புரியவில்லை. கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் மட்டும் விசயத்தை யூகித்துக் கொண்டு சிரித்தார்.
அதற்குள் பையன் வாய் திறந்ததைக் கேள்விப்பட்டு அவனோட பாட்டி ஓடோடி வந்து அவன் வாயைப் பொத்துக் கொண்டு. 'வாடா வா பைத்தியக்காரப் பெயல் மகனே!' என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டுக்கு பேரனைக் கூட்டிக் கொண்டு போனாள்.
பாட்டி போன பிறகு, பையன் சொன்னதைக் கேட்டு சிரித்த பெரியவரிடம் சுற்றி நின்று 'என்னன்னு விபரம் புரியலியே. நீங்களாவது சொல்லுங்களேன்' என்றூ கேட்க பெரியவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் யூகித்த விஷயத்தை அனைவருக்கும் விளக்கினார். துக்க வீட்டிலும் சிரிப்பலைகள் பரவியது.
அறியாத பிள்ளைகள் கேட்கிற சில எசக்குப்பிசக்கான கேள்விகளுக்கு சம்மந்தா சம்மந்தமில்லாமல் நாம் பொய்யான பதிலைச் சொன்னால் அதன் பின்விளைவுகள் இப்படித்தான் இருக்கும்' என்று சொல்லி முடித்தார் கதை சொன்ன தாத்தா.
என் பள்ளிப் பருவத்தில் சொன்ன கதை ஒன்றும் அப்படியே.(எனக்கு இந்த வகைக் கதைகளை கூறுவதற்கான மொழி அமையணும் என்று வேண்டிக் கொள்கிறேன்.)
பெரும்பாலும் எனக்கு அறிமுகமாகியிருந்த கதைகள் பெண்ணொருத்தியுடையதோ இல்லை ஆணினுடையதோ இந்த விஷயத்திலான சாமர்த்தியத்தை சூட்சமத்தை விளக்குவதாக இருக்கும். அப்படித்தான் இந்தக் கதையும், முன்பு நண்பர்களாயிருந்து பின்னர் எதிரிகளான இருவரும் அவர்களில் ஒருத்தரின் காதலியும் ஒரு இரவு ஒரு மண்டபத்தில் தங்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டது. இதில் காதலியுடன் வந்திருப்பவரின் பெயர் சந்திரன் என்று வைத்துக் கொள்வோம், மற்றவர் பெயர் செல்வம். இது சுலபமாக கதை சொல்வதற்காக மட்டும். :) பின்நவீனத்துவ கதைக்காரர்கள் ஒருவனை அதீதன் என்றும் மற்றவனை நன்மொழித்தேவன் என்றும் அவளை ஆத்மார்த்தி என்றும் வைத்துக் கொண்டாலும் தவறில்லை. அதீதனும் நன்மொழித்தேவனும் வேறல்ல இருவரும் ஒருவரே என்று 'சொல் என்றொரு சொல்' சொல்பவர்கள் ஒதுங்கி நின்று செல்வம், சந்திரனாக கதைக்கலாம்.
சந்திரனுக்கு அவர்களுடைய நண்பர்கள் செல்வத்தைப் பற்றி நிறைய சொல்லி காதலியை பதுவிசாக பார்த்துக் கொள்ளும் படியும் ஒரு நிமிடம் விட்டாலும் செல்வம் தவறு செய்துவிட வாய்ப்புள்ளது என்று சொல்லி அனுப்ப சந்திரனுக்கோ தர்மசங்கடமான நிலை, இதில் செல்வத்தின் 'காமப் புகழ்' வேறு உலகம் அறிந்தது என்பது சந்திரனுக்கும் தெரிந்து தான் இருந்தது. சரி எப்படித்தான் அவனும் 'தில்லுமுள்ளு' செய்யறான்னு பார்ப்போம் என்று ஒரு வித மமதையில் ஒரு திட்டம் போட்டான். தன் காதலியின் யோனியின் மீது கையை வைத்துக் கொண்டே தூங்குவது என்றும் எப்படியும் அவன் 'தவறு' செய்ய நினைத்தால் கண்டுபிடித்து விடலாம் என்றும் திட்டம் போட்டான். இது போல் கை வைத்துக் கொண்டு வெகுநேரம் தூங்காமலும் வேறு இருந்தான் செல்வம் பற்றிய பயத்தினாலே, பின்னர் ஒருவாறு தூங்கிப்போனான் அவனுக்கே தெரியாமல் ஆனால் கைமட்டும் விழிப்பா அங்கேயே இருந்தது. இருட்டில் எங்கிருந்தோ வந்த ஒரு கொசு அவன் தொடையில் கடிக்க அதை அடிக்க சந்திரன், அவன் காதலி மேல் வைத்திருந்த கையை எடுத்துவிட்டு நொடியில் மீண்டும் வைக்கும் பொழுது பிசுபிசுவென்று இருந்தது என்றும் இதிலிருந்து செல்வம் எந்த அளவுக்கு சூச்சமக்காரன்னு புரியும் என்று சொல்லி கதை முடியும்.
பின்னர் கல்லூரிக் காலங்களில் பெரும்பாலும் கடைசி பெஞ்சில் இதைப் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கும். சாஃப்ட்வேர் கம்பெனிகளும் இதற்கு கொஞ்சம் குறைந்தது கிடையாது, politically correctஓ இல்லையோ கூட வேலை செய்யும் பெண்களைப் பற்றி ஏக காலத்தில் கமென்ட்டுகள் வந்த வண்ணம் இருக்கும் XXX ஆக இல்லாமல் பெரும்பாலும் XX ஆகவோ இல்லை வெறும் X ஆகவோ தான் இருக்கும். தண்ணியடித்தால் 'பஞ்சாபி A ஜோக்குகள்' சொல்லும் PM ஒருத்தர், தண்ணியடிக்க ஆரம்பித்ததில் இருந்தே பெண்கள் பற்றி பேசும் 'சாஃப்ட்வேர்' நண்பர்கள் வரை இன்னமும் நிறைய பேர் நிறைய கதைகள் உண்டு.
பெரும்பாலும் யாரோ ஒருவர் ஆரம்பித்து பின்னர் மற்றொருவர் தொடர்வது என எல்லோரும் ஒரு கதையாவது சொல்லியிருப்பார்கள். நிறைய கதைகள் நினைவில் நிற்பது இல்லை பெரும்பாலும் இது போன்ற கதைகளை வெறுமனே கேட்டு அந்த நேரத்தில் சிரிக்கத்தகுந்தவையாகத்தான் இருக்கும்.
இதே போல் கிராமத்தில் நடமாடும் 'மறைவாய் சொன்ன கதைகளைத்' தொகுத்து கி.ராஜநாராயணனும் கழனியூரானும். மறைவாய் சொன்ன கதைகள் என்ற தொகுப்பாய் விட்டிருக்கிறார்கள் அதிலிருந்து ஒரு கதை சாம்பிளுக்கு. இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்ததற்கு கதை சிறியதாய் இருப்பதைத் தவிர்த்து வேறு ஒரு காரணமும் கிடையாது :).
ஒரு ஊர்ல ஒரு புருஷனும் பொண்டாட்டியும் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருந்தான். அவனுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். அவன் ஒரு பைத்தியக்காரனா வளர்ந்தான்.
ஒரு நாள் பட்டப்பகலில் கதவை ஒருச்சாத்தி(சிறிது திறந்தபடி) வைத்துக் கொண்டு புருஷனும் பொண்டாட்டியும் 'பேசிப் பெறக்கிக் கிட்டு' இருந்தாங்க. அவங்களோட பையன் கதவின் இடைவெளி வழியா உள்ளே எட்டி அந்தக் கங்காட்சியைப் பார்த்துட்டான்.
தன் பாட்டியிடன் வந்து வீட்டுக்குள் தான் பார்த்த கங்காட்சியை பற்றிச் சொல்லி 'அம்மாவும் அப்பாவும் என்ன செய்றாங்க பாட்டி' என்று விபரம் கேட்டான்.
பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டுட்டு, 'கதவைத் திறந்து போட்டுக்கிட்டு அவங்க சந்தோஷம் கொண்டாடியிருக்காங்க' என்பதைப் புரிந்து கொண்ட பாட்டி பேரன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து வழக்கம் போல் ஒரு பொய்யைச் சொன்னாள்.
அந்தப் பேரன் அடிக்கை எசக்குப்பிசக்கா பாட்டியிடம் அப்படிக் கேள்விகள் கேட்பதுண்டு.
ஒருநாள் 'பாட்டி நான் எப்பைப் பிறந்தேன்?' என்றூ கேட்டான்.
பேரனின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல விரும்பாத பாட்டி, 'நீ சின்ன பிள்ளையா இருக்கும்போது ஒரு கன்னப் பருந்து உன்னைக் கொண்டுவந்து உன் அம்மாவின் மடியில் போட்டுட்டுப் போய்ட்டு' என்று ஒரு பொய்யைச் சொல்லி வைத்தாள்.
இப்பமும் அதே மாதிரி 'பேரப்புள்ள, உங்கம்மா திடீரென்று செத்துட்டா, உங்கப்பா அவளைக் கட்டிப் பிடிச்சி உசிரு கொடுத்துக்கிட்டு இருந்திருக்கு. அதைத்தான் நீ பார்த்திருக்கிறெ.' என்று பொய்யைச் சொல்லி வைத்தாள்.
பைத்தியக்காரனான பேரப்பிள்ளையும் பாட்டி சொன்னதை நம்பிட்டான்.
ஒரு வாரம் கழித்து பக்கத்து வீட்டில் ஒரு வயசுக்கு வந்த பொம்பளைப் பிள்ளை ஒருத்தி இறந்துவிட்டாள். எல்லோரும் போய் செத்துப்போன பிள்ளையைப் பார்த்துட்டு வந்தாங்க.
பாட்டியோட பேரனும் போய் செத்துப் போன அந்தப் பிள்ளையப் பார்த்துவிட்டு அங்கே நின்றவர்களிடம் 'எங்கப்பா செத்தவங்களுக்குக் கெல்லாம் உயிர் கொடுக்கத் தெரிஞ்சவங்க. இப்ப எங்கப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்து செத்துப் போன இந்தப் பிள்ளையக் கட்டி பிடிக்கச் சொல்லுங்க. இந்தப் பிள்ளைக்கும் உயிர் வந்திரும்' என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.
பையன் சொல்வதைக் கேட்ட நிறைய பேருக்கு 'விபரம்' புரியவில்லை. கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் மட்டும் விசயத்தை யூகித்துக் கொண்டு சிரித்தார்.
அதற்குள் பையன் வாய் திறந்ததைக் கேள்விப்பட்டு அவனோட பாட்டி ஓடோடி வந்து அவன் வாயைப் பொத்துக் கொண்டு. 'வாடா வா பைத்தியக்காரப் பெயல் மகனே!' என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டுக்கு பேரனைக் கூட்டிக் கொண்டு போனாள்.
பாட்டி போன பிறகு, பையன் சொன்னதைக் கேட்டு சிரித்த பெரியவரிடம் சுற்றி நின்று 'என்னன்னு விபரம் புரியலியே. நீங்களாவது சொல்லுங்களேன்' என்றூ கேட்க பெரியவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் யூகித்த விஷயத்தை அனைவருக்கும் விளக்கினார். துக்க வீட்டிலும் சிரிப்பலைகள் பரவியது.
அறியாத பிள்ளைகள் கேட்கிற சில எசக்குப்பிசக்கான கேள்விகளுக்கு சம்மந்தா சம்மந்தமில்லாமல் நாம் பொய்யான பதிலைச் சொன்னால் அதன் பின்விளைவுகள் இப்படித்தான் இருக்கும்' என்று சொல்லி முடித்தார் கதை சொன்ன தாத்தா.
என் பள்ளிப் பருவத்தில் சொன்ன கதை ஒன்றும் அப்படியே.(எனக்கு இந்த வகைக் கதைகளை கூறுவதற்கான மொழி அமையணும் என்று வேண்டிக் கொள்கிறேன்.)
பெரும்பாலும் எனக்கு அறிமுகமாகியிருந்த கதைகள் பெண்ணொருத்தியுடையதோ இல்லை ஆணினுடையதோ இந்த விஷயத்திலான சாமர்த்தியத்தை சூட்சமத்தை விளக்குவதாக இருக்கும். அப்படித்தான் இந்தக் கதையும், முன்பு நண்பர்களாயிருந்து பின்னர் எதிரிகளான இருவரும் அவர்களில் ஒருத்தரின் காதலியும் ஒரு இரவு ஒரு மண்டபத்தில் தங்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டது. இதில் காதலியுடன் வந்திருப்பவரின் பெயர் சந்திரன் என்று வைத்துக் கொள்வோம், மற்றவர் பெயர் செல்வம். இது சுலபமாக கதை சொல்வதற்காக மட்டும். :) பின்நவீனத்துவ கதைக்காரர்கள் ஒருவனை அதீதன் என்றும் மற்றவனை நன்மொழித்தேவன் என்றும் அவளை ஆத்மார்த்தி என்றும் வைத்துக் கொண்டாலும் தவறில்லை. அதீதனும் நன்மொழித்தேவனும் வேறல்ல இருவரும் ஒருவரே என்று 'சொல் என்றொரு சொல்' சொல்பவர்கள் ஒதுங்கி நின்று செல்வம், சந்திரனாக கதைக்கலாம்.
சந்திரனுக்கு அவர்களுடைய நண்பர்கள் செல்வத்தைப் பற்றி நிறைய சொல்லி காதலியை பதுவிசாக பார்த்துக் கொள்ளும் படியும் ஒரு நிமிடம் விட்டாலும் செல்வம் தவறு செய்துவிட வாய்ப்புள்ளது என்று சொல்லி அனுப்ப சந்திரனுக்கோ தர்மசங்கடமான நிலை, இதில் செல்வத்தின் 'காமப் புகழ்' வேறு உலகம் அறிந்தது என்பது சந்திரனுக்கும் தெரிந்து தான் இருந்தது. சரி எப்படித்தான் அவனும் 'தில்லுமுள்ளு' செய்யறான்னு பார்ப்போம் என்று ஒரு வித மமதையில் ஒரு திட்டம் போட்டான். தன் காதலியின் யோனியின் மீது கையை வைத்துக் கொண்டே தூங்குவது என்றும் எப்படியும் அவன் 'தவறு' செய்ய நினைத்தால் கண்டுபிடித்து விடலாம் என்றும் திட்டம் போட்டான். இது போல் கை வைத்துக் கொண்டு வெகுநேரம் தூங்காமலும் வேறு இருந்தான் செல்வம் பற்றிய பயத்தினாலே, பின்னர் ஒருவாறு தூங்கிப்போனான் அவனுக்கே தெரியாமல் ஆனால் கைமட்டும் விழிப்பா அங்கேயே இருந்தது. இருட்டில் எங்கிருந்தோ வந்த ஒரு கொசு அவன் தொடையில் கடிக்க அதை அடிக்க சந்திரன், அவன் காதலி மேல் வைத்திருந்த கையை எடுத்துவிட்டு நொடியில் மீண்டும் வைக்கும் பொழுது பிசுபிசுவென்று இருந்தது என்றும் இதிலிருந்து செல்வம் எந்த அளவுக்கு சூச்சமக்காரன்னு புரியும் என்று சொல்லி கதை முடியும்.
Saturday, December 08, 2012
Men Rules
Men Rules
We always hear "the rules" from the female side. Now here are the rules from the male side.Shopping is NOT a sport. And no, we are never going to think of it that way.
--
Crying is blackmail.
--
Ask for what you want. Let us be clear on this one:
Subtle hints do not work!
Strong hints do not work!
Obvious hints do not work!
JUST SAY IT!
--
‘Yes’ and ‘No’ are perfectly acceptable answers to almost every question.
--
Come to us with a problem only if you want help solving it. That's what we do. Sympathy is what your girlfriends are for.
--
A headache that lasts for 17 months is a problem. See a doctor.
--
Anything we said 6 months ago is inadmissible in an argument. In fact, all comments become null and void after 7 days.
--
If you think you're fat, you probably are. Don't ask us.
--
If something we said can be interpreted two ways, and one of the ways makes you sad or angry, we meant the other one.
--
You can either ask us to do something or tell us how you want it done.
Not both
--
If you already know best how to do it, just do it yourself
--
Whenever possible, please say whatever you have to say during commercials.
--
Christopher Columbus did not need directions and neither do we.
--
ALL men see in only 16 colours, like Windows default settings.
--
Peach, for example, is a fruit, not a colour. Pumpkin is also a fruit.
We have no idea what mauve is.
--
If it itches, it will be scratched. We do that.
--
If we ask what is wrong and you say "nothing," we will act like nothing's wrong. We know you are lying, but it is just not worth the hassle.
--
If you ask a question you don't want an answer to, expect an answer you don't want to hear.
--
When we have to go somewhere, absolutely anything you wear is fine, Really.
You have enough clothes.
You have too many shoes.
--
I am in shape. Round is a shape.
--
காலம் தான் எவ்வளவு வேகமா ஓடுது. இதை முதலில் ‘பூனையாகக் கூட இல்லாமல் போன சோகங்களில்’ எழுதிய காலம் நினைவில் வருகிறது. ஜஸ்ட் ஃபார் ஃபன்.
Wednesday, December 05, 2012
நித்ய கன்னி
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவந்திருந்த எம்.வி. வெங்கட்ராமின் நித்ய கன்னி நாவலைப் புரட்டிப் பார்த்த பொழுது ஜே.பி சாணக்யாவும் தி.ஜாவும் எழுதியிருந்த முன்னுரை பிடித்திருந்ததால் வாங்கிவந்திருந்தேன். பெரும்பாலும் இதைச் செய்ய மாட்டேன், புத்தகத்தின் முன்னுரையானாலும் காசு கொடுத்து வாங்கிவிட்டுத்தான் படிப்பது முறை என்று நினைப்பேன். ஆனால் அப்படியும் வாங்கிவிட்டதால் பெரிய அரிப்பு இல்லை. நாவல் மகாபாரதத்தின் ஒரு கதாப்பாத்திரமான மாதவியை அச்சாகக் கொண்டு சுழல்கிறது. மகாபாரதத்தில் ஐந்து ஆறு பக்கங்கள் நீளும் மாதவியின் கதையை விரித்து நாவலாய் எழுதியதாக எம்.வி.வி தன் 'தம்மைப் பற்றி'யில் சொல்கிறார்.
மாதவியின் கதை அழுத்தமாய் பதிந்து விடுகிறது, நித்ய கன்னி படித்து முடித்தது. சட்டென்று முடியும் கதை மனவழுத்தத்தை ஏற்படுத்துகிறது, புனைவைப் பற்றிய புனைவு எழுப்பும், கட்டமைக்கும் சட்டங்களுக்கு வெளியில் நின்று நாம் நித்ய கன்னியாகிய மாதவியை நினைத்துப் பார்த்தால் வெறுமையே மிஞ்சுகிறது. அதை நித்ய கன்னி நாவலும் அழகாகப் படம்பிடித்திருக்கிறது.
மிகச் சுருக்கமாக மாதவியின் கதை,

மாதவி நித்ய கன்னி, அதாவது மாதவி அந்தணர்கள் கொடுத்த வரத்தால் ஒரு குழந்தை பிறந்ததும் கன்னியாக மாறிவிடுவாள். (இந்நாவலில் குறிப்பிடாவிட்டாலும் நானறிந்த வரை பாஞ்சாலியின் கதாப்பாதிரமும் மகாபாரதத்தில் இந்தத் தன்மை உடையது. பாஞ்சாலி ஆண்டொன்றுக்கு ஒரு பாண்டவர் என்ற முறையில் ஐந்து ஆண்டுகள் மாறி மாறி ஒவ்வொருவருடனும் இருப்பாள் என்றும் அந்த ஆண்டு முடிந்ததும் மீண்டும் கன்னியாகி(?) விடுவாள் என்று கதை வரும் என்று நினைக்கிறேன்.) இங்கேயும் அதே தாத்பரியம் தான்.
காலவன் ஒரு துறவி, விஷ்வாமித்திரரின் சிஷ்யன், குருவை வற்புறுத்தி குருதட்சணை வாங்கிக் கொள்ளுமாறு வேண்டி, பின்னர் ஒரு காதுமட்டும் கருப்பாய் இருக்கும் வெள்ளைக் குதிரைக்கள் எண்ணூறை குருதட்சணையாய் கொடுக்கும் படி ஆளாகிறான்.
மாதவியின் தந்தை யயாதி தவப்புருஷர், கருட பகவான் குதிரைகளுக்காக யாசிக்கும் படி காலவரிடம் சொல்லி யயாதியிடம் அனுப்புகிறார். யயாதியிடம் அப்படிப்பட்ட குதிரைகள் எதுவும் இல்லை, பிக்ஷை கேட்டு வந்த அந்தணனை இல்லையென்று சொல்வது தருமமன்று என்பதால் தன் மகள் மாதவியை காலவருக்கு எண்ணூறு குதிரைகளை சம்பாதித்துக் கொள்ள உபயோகித்துக் கொள்ளுமாறு கூறி கொடுத்துவிடுகிறார்.
மாதவியை வைத்து குதிரைகளை சம்பாதிப்பது எப்படி அதற்கான வழியைத்தான் அந்தணர்கள் மாதவிக்கு நித்ய கன்னி என்ற வரம் மூலம் கொடுத்திருந்தார்கள். அதனால் இந்த வரத்தை உபயோகித்து எப்படி குதிரைகளைப் பெறுவது? இடையில் காலவரைப் பார்க்கும் மாதவி அவர் மேல் காதல் கொள்கிறாள், உஷையாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு காலவரைச் சந்திக்கும் மாதவியிடம் காலவரும் காதல் கொள்கிறார். கதையின் மிக முக்கியமான இடம் இதுதான், இந்தக் காதல் தான் நித்ய கன்னியை அலைபாய வைக்கிறது.
காலவர் ரிஷியாக இருந்தாலும் ரிஷிபத்னியாக மாதவியை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இல்லாத பொழுதும் விசுவாமித்திரரின் குருதட்சணை இடையில் புகுகிறது. குருதட்சணை கொடுக்காவிட்டால் குரு சபித்துவிடுவார் எதிர்காலம் இருட்டாகிவிடும். இவ்வாறு யோசனை செய்யும் காலவர் விசுவாமித்திரரை ஏமாற்றும் எண்ணம் மனதில் வேறு எண்ணத்தில் தோன்றியதுமே விசுவாமித்திரரால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்படுகிறார் அப்படியே குருதட்சணை கொடுப்பதற்கான வழியையும் சொல்கிறார்.
அதாவது ரூபசுந்தரியான மாதவியை அயோத்தி, காசி மற்றும் போஜ மன்னர்களின் மனைவியாக்கி ஒரு குழந்தை பிறந்ததும் அவர்களிடம் இருக்கும் 200 அவ்வகைக் குதிரைகளைப் பெற்றுக்கொண்டு வருமாறும் மீதி இருநூறுக்குத் தான் வழி சொல்வதாகவும் சொல்கிறார்.
அயோத்தி அரசன் காமுகனாக மாதவியின் அழகில் மயங்கி அவளை மணந்துகொள்ள சம்மதிக்கிறான், காசி அரசன் குழந்தை இல்லாத குறையை நிவர்த்தி செய்ய மாதவியை மணக்கிறான். போஜ ராஜன் கலைஞன், அவன் இருநூறு புரவியை தான் கொடுத்த பிறகு காலவர் அதை விசுவாமித்திரரிடம் கொடுத்த பிறகு சென்று யயாதியிடம் கேட்டு மாதவியை மணந்து கொள்ளும் மனநிலையில் உள்ளவன் இவனும் அதன் பொருட்டு மணந்து கொள்கிறேன். ஆனால் காலவர் மீது மாதவிக்கு இருக்கும் காதல் தெரியவந்ததும் வருந்தும் அவன் பேசும் வசனங்களில் தான் எம்.வி.வி சாட்டையை சொடுக்குகிறார். ஒட்டுமொத்த இந்த அபத்தத்தின் மீது மிக அற்புதமான வார்த்தைகளின் சேர்க்கையுடன். போஜ மன்னன் மாதவியுடனான புணர்வில் விருப்பம் இல்லாதவனாகயிருந்தாலும் அவள் குழந்தை பெற்றால் மட்டுமே கன்னியாக முடியும் என்பதால் அவனும் அப்படியே செய்கிறான்.
கடைசியில் மீதி இருநூறு குதிரைகளுக்காக விசுவாமித்திரரே மாதவியை மணந்து கொள்கிறார். பின்னர் அவருக்கும் குழந்தை பிறந்த பிறகு கன்னியான மாதவியை காலவர் ஏற்பதில் வரும் பிரச்சனை மாதவி குருபத்னியாக அம்மாவாக இருந்தவள். ஆனால் கடைசியில் காலவரே மாதவியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்தாலும் மாதவி காட்டிற்குள் சென்று மறைந்துவிட நாவல் முடிவடைகிறது.
மிகப் பழமையான முற்போக்குத்தனமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு எம்.வி.வி புகுந்து விளையாடியிருக்கிறார். பெண்ணை வைத்து இப்படி விளையாடும் போக்கை கண்டிக்கிறார், போஜ ராஜாவின் வார்த்தைகளால். காலவரின் மாதவியின் காதல் விசித்திரமானது புதிரானது என்று சொன்னால் அதில் தவறே இல்லை, இத்தனைக்கும் பிறகும் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மற்றவர் தனக்கு கிடைத்துவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
"தமிழ் இலக்கியத்தில் சத்தமில்லாமல் நடந்த முக்கிய நாவல் பணிகளில் எம்.வி.வெங்கட்ராமின் 'நித்ய கன்னி' ஒன்று. ஒரு பெண்ணின் உடல், மனம் இரண்டும் அறத்தின் பெயரால் தர்மத்தின் பெயராலும் மிகக் கொடூரமான சாத்வீக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை புராணகால வாழ்வினூடாகப் பேசும் ஒரே தமிழ் நாவல் இதுதான். பெண்ணை மட்டுமெ மையப்படுத்தித் தமிழில் இதற்குப் பின்னும் இப்படி ஒரு நாவல் எழுதப்படவில்லை." என்ற ஜே.பி சாணக்யாவின் வார்த்தைகள் உண்மை சொல்கின்றன. கடைசியில் மாதவி காட்டுக்குள் புகும் காட்சி வருத்தத்தை அளித்தாலும் 'கொய்யால' வேணும்டா அவனுக்கு என்று காலவர் மீது கோபம் கொண்டுவருகிறது.
மாதவியின் வார்த்தைகள் மூலமாகவும் போஜ மன்னனின் ஆலோசனைகள் மூலமாகவும் காலவரின் சுய பச்சாதாபத்தின் மூலமாகவும் பெண்கள் மீதான புராணகால வாழ்க்கைமுறையில் இருக்கும் வன்முறையை ஆசிரியர் அழகாக சுட்டிக் காட்டுகிறார்.
"அறியாமை அல்ல; மோகனதகாரத்திற்கு நீ இரையானாய். பெண்ணை விஷம் போல் ஒதுக்க வேண்டும்; அவளைக் கண் கொண்டு பார்ப்பதும் பிசகு என்று உனக்கு உபதேசம் புரிந்தது எல்லாம் வீணாகிவிட்டது. என்னுடைய அனுபவத்தைக் கொண்டு கூறுகிறேன்; எவன் பெண்ணைக் கண்டு சபலம் அடைகிறானோ, அவன் கர்ம சக்கரத்தில் அகப்பட்டுத் தவிக்க வேண்டியதுதான்; அவனுக்கு இகமும் இல்லை, பரமும் இல்லை."
என்று வரும் விஸ்வாமித்திரரின் வார்த்தைகளின் வழியே ஆசிரியர் பெண்களைப் பற்றி புராண காலம் கொண்டிருந்த மதிப்பீடுகளை வைக்கிறார்.
"உனக்கு விருப்பமா?" என்று நகைத்தான் ஹர்யசுவன் "பெண்ணுக்கு தனிப்பட்ட விருப்பம் ஏது? மணத்திற்கு முன் ஆள் தந்தைக்கு உட்பட்டவள்; மணமானபின் கணவனுக்கு; கைம்பெண் ஆனால் அல்லது வயதானால் புத்திரர்களுக்கு அடங்கியவள். அவளுக்கு ஏது தனிப்பட்ட உரிமை?"
மாதவி அயோத்தி மன்னனிடம் "எனக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை..." என்று ஆரம்பிக்கும் பொழுது அவன் திரும்பச் சொல்வதாக வரும் பத்தி இது. இதுவும் மேற்சொன்ன உதாரணம் போல் தான்.
மாதவிக்குத் தலை சுற்றியது "என் கன்னி கழியாது. உண்மை தான். ஆனால் தன் மனையாளை வேறு புருஷன் தீண்டினான் என்பதை ஒரு புருஷனால் சகிக்க முடியுமா?" இந்த மாதவியின் கேள்வியானது இன்றைக்கு வரை தொடர்கிறது இல்லையா? இதையும் மாதவியின் கேள்வியின் வாயிலாக சமூகத்தை நோக்கி நீட்டுவதாகவே கருதுகிறேன்.
"பெண்ணை அபலை ஆக்கினார்கள்; அவளை ஆடவனே ரட்சிக்க வேண்டும் என்னும் விதியையும் ஏற்படுத்தினார்கள். ஆனால் அவள் அபலை என்கிற அதே காரணத்தினால் புருஷன் அவளுக்கு எவ்வளவு அக்கிரமங்களைச் செய்யத் துணிகிறான்! அவனே வகுத்த ஸ்திரீ தருமத்தை அவன் தன் நலத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப எவ்வளவு முறை முடுக்குகிறான். எவ்வளவு முறை தளர்த்துகிறான்! தர்ம ஸ்தம்பங்கள் என்று கருதப்பெறும் முனிவர் பெருமான்களும் கூட இத்தகைய அநியாயங்களுக்குப் பங்காளிகள் என்றாள்...? அவர்களை மறுத்து யாரால் பேச முடியும்? மறுத்து வாய் திறப்பதே அதர்மம் ஆகிவிடுமோ?" மாதவி மனதிற்குள் நினைப்பதாய் வரும் வாசகமும் மேற்சொன்ன உத்தி தான்.
அவளோ சஞ்சல புத்தி படைத்தவள்; அவளுடைய நெஞ்சம் கடலைவிட ஆழ்ந்தது; சிருஷ்டியிலிருந்தே வஞ்சனையின் உரு. மகாப் பெரிய மகரிஷிகளின் பத்தினிமார்களுடைய சரிதம் பெண்ணின் சபலத்துக்குச் சான்றாக நிற்கிறது. மாதவியும் ஒரு பெண்தானே? நதிகளினால் கடல் திருப்தியுறுவதில்லை, மரணங்களினால் காலன் ஓய்வதில்லை; புருஷர்களினால் பெண்ணுக்குப் போதும் என்று ஆவதில்லை; மேலும் மேலும்...! மாதவியும்...?
மாதவியை அயோத்தி மன்னனிடம் விட்டுவிட்டு காலவன் யோசிப்பதாய் வரும் வரிகளில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் விடப்பட்ட புராணக்கால ஆண் மனநிலை பிரகாசமாக காண்பிக்கப்படுகிறது.
மனைவி பதிவிரதைதான் என்று திருப்திகொள்ள விரும்பிகிறது ஆண்மை; கண்களையும் காதுகளையும் பொய்த்து மனத்தைத் தேற்ற முயலும் இத்தன்மை ஆடவருடன் பிறந்தது போலும்!
காசி மன்னன் செயலால் சட்டென்று கதை சொல்லி நினைப்பதாய் வரும் வார்த்தைகள் இவை.
"உங்களுடைய பெரும் தர்மத்துக்காக சிறு தர்மத்தை நீங்கள் துறப்பதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை; ஆனால் உங்கள் அறத்தை காத்துக் கொள்வதற்காகப் பிறருடைய அறம் கொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பெண்ணுக்குப் பெரும் தர்மம் கற்பு என்று கூறும் நீங்கள் பெண்மையையே சூறையாடுகிறீர்களே?"
இது மாதவி மனதிற்குள் நினைத்துக் கொள்வதாய் வரும் வரிகள். போஜ ராஜனின் வரிகளின் வழியாகவே கதைசொல்லி பேசுவதால் அதை வெட்டி ஒட்டவில்லை. எல்லாரும் படிக்கக்கூடிய இந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் தான் இந்த நாவல் உள்ளது, குறைந்த பட்சம் பெண்ணியவாதிகள் படிக்கலாம்.
PS: படம் சென்னை அருங்காட்சியகத்தில் எடுத்தது.
மாதவியின் கதை அழுத்தமாய் பதிந்து விடுகிறது, நித்ய கன்னி படித்து முடித்தது. சட்டென்று முடியும் கதை மனவழுத்தத்தை ஏற்படுத்துகிறது, புனைவைப் பற்றிய புனைவு எழுப்பும், கட்டமைக்கும் சட்டங்களுக்கு வெளியில் நின்று நாம் நித்ய கன்னியாகிய மாதவியை நினைத்துப் பார்த்தால் வெறுமையே மிஞ்சுகிறது. அதை நித்ய கன்னி நாவலும் அழகாகப் படம்பிடித்திருக்கிறது.
மிகச் சுருக்கமாக மாதவியின் கதை,
மாதவி நித்ய கன்னி, அதாவது மாதவி அந்தணர்கள் கொடுத்த வரத்தால் ஒரு குழந்தை பிறந்ததும் கன்னியாக மாறிவிடுவாள். (இந்நாவலில் குறிப்பிடாவிட்டாலும் நானறிந்த வரை பாஞ்சாலியின் கதாப்பாதிரமும் மகாபாரதத்தில் இந்தத் தன்மை உடையது. பாஞ்சாலி ஆண்டொன்றுக்கு ஒரு பாண்டவர் என்ற முறையில் ஐந்து ஆண்டுகள் மாறி மாறி ஒவ்வொருவருடனும் இருப்பாள் என்றும் அந்த ஆண்டு முடிந்ததும் மீண்டும் கன்னியாகி(?) விடுவாள் என்று கதை வரும் என்று நினைக்கிறேன்.) இங்கேயும் அதே தாத்பரியம் தான்.
காலவன் ஒரு துறவி, விஷ்வாமித்திரரின் சிஷ்யன், குருவை வற்புறுத்தி குருதட்சணை வாங்கிக் கொள்ளுமாறு வேண்டி, பின்னர் ஒரு காதுமட்டும் கருப்பாய் இருக்கும் வெள்ளைக் குதிரைக்கள் எண்ணூறை குருதட்சணையாய் கொடுக்கும் படி ஆளாகிறான்.
மாதவியின் தந்தை யயாதி தவப்புருஷர், கருட பகவான் குதிரைகளுக்காக யாசிக்கும் படி காலவரிடம் சொல்லி யயாதியிடம் அனுப்புகிறார். யயாதியிடம் அப்படிப்பட்ட குதிரைகள் எதுவும் இல்லை, பிக்ஷை கேட்டு வந்த அந்தணனை இல்லையென்று சொல்வது தருமமன்று என்பதால் தன் மகள் மாதவியை காலவருக்கு எண்ணூறு குதிரைகளை சம்பாதித்துக் கொள்ள உபயோகித்துக் கொள்ளுமாறு கூறி கொடுத்துவிடுகிறார்.
மாதவியை வைத்து குதிரைகளை சம்பாதிப்பது எப்படி அதற்கான வழியைத்தான் அந்தணர்கள் மாதவிக்கு நித்ய கன்னி என்ற வரம் மூலம் கொடுத்திருந்தார்கள். அதனால் இந்த வரத்தை உபயோகித்து எப்படி குதிரைகளைப் பெறுவது? இடையில் காலவரைப் பார்க்கும் மாதவி அவர் மேல் காதல் கொள்கிறாள், உஷையாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு காலவரைச் சந்திக்கும் மாதவியிடம் காலவரும் காதல் கொள்கிறார். கதையின் மிக முக்கியமான இடம் இதுதான், இந்தக் காதல் தான் நித்ய கன்னியை அலைபாய வைக்கிறது.
காலவர் ரிஷியாக இருந்தாலும் ரிஷிபத்னியாக மாதவியை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இல்லாத பொழுதும் விசுவாமித்திரரின் குருதட்சணை இடையில் புகுகிறது. குருதட்சணை கொடுக்காவிட்டால் குரு சபித்துவிடுவார் எதிர்காலம் இருட்டாகிவிடும். இவ்வாறு யோசனை செய்யும் காலவர் விசுவாமித்திரரை ஏமாற்றும் எண்ணம் மனதில் வேறு எண்ணத்தில் தோன்றியதுமே விசுவாமித்திரரால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்படுகிறார் அப்படியே குருதட்சணை கொடுப்பதற்கான வழியையும் சொல்கிறார்.
அதாவது ரூபசுந்தரியான மாதவியை அயோத்தி, காசி மற்றும் போஜ மன்னர்களின் மனைவியாக்கி ஒரு குழந்தை பிறந்ததும் அவர்களிடம் இருக்கும் 200 அவ்வகைக் குதிரைகளைப் பெற்றுக்கொண்டு வருமாறும் மீதி இருநூறுக்குத் தான் வழி சொல்வதாகவும் சொல்கிறார்.
அயோத்தி அரசன் காமுகனாக மாதவியின் அழகில் மயங்கி அவளை மணந்துகொள்ள சம்மதிக்கிறான், காசி அரசன் குழந்தை இல்லாத குறையை நிவர்த்தி செய்ய மாதவியை மணக்கிறான். போஜ ராஜன் கலைஞன், அவன் இருநூறு புரவியை தான் கொடுத்த பிறகு காலவர் அதை விசுவாமித்திரரிடம் கொடுத்த பிறகு சென்று யயாதியிடம் கேட்டு மாதவியை மணந்து கொள்ளும் மனநிலையில் உள்ளவன் இவனும் அதன் பொருட்டு மணந்து கொள்கிறேன். ஆனால் காலவர் மீது மாதவிக்கு இருக்கும் காதல் தெரியவந்ததும் வருந்தும் அவன் பேசும் வசனங்களில் தான் எம்.வி.வி சாட்டையை சொடுக்குகிறார். ஒட்டுமொத்த இந்த அபத்தத்தின் மீது மிக அற்புதமான வார்த்தைகளின் சேர்க்கையுடன். போஜ மன்னன் மாதவியுடனான புணர்வில் விருப்பம் இல்லாதவனாகயிருந்தாலும் அவள் குழந்தை பெற்றால் மட்டுமே கன்னியாக முடியும் என்பதால் அவனும் அப்படியே செய்கிறான்.
கடைசியில் மீதி இருநூறு குதிரைகளுக்காக விசுவாமித்திரரே மாதவியை மணந்து கொள்கிறார். பின்னர் அவருக்கும் குழந்தை பிறந்த பிறகு கன்னியான மாதவியை காலவர் ஏற்பதில் வரும் பிரச்சனை மாதவி குருபத்னியாக அம்மாவாக இருந்தவள். ஆனால் கடைசியில் காலவரே மாதவியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்தாலும் மாதவி காட்டிற்குள் சென்று மறைந்துவிட நாவல் முடிவடைகிறது.
மிகப் பழமையான முற்போக்குத்தனமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு எம்.வி.வி புகுந்து விளையாடியிருக்கிறார். பெண்ணை வைத்து இப்படி விளையாடும் போக்கை கண்டிக்கிறார், போஜ ராஜாவின் வார்த்தைகளால். காலவரின் மாதவியின் காதல் விசித்திரமானது புதிரானது என்று சொன்னால் அதில் தவறே இல்லை, இத்தனைக்கும் பிறகும் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மற்றவர் தனக்கு கிடைத்துவிடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
"தமிழ் இலக்கியத்தில் சத்தமில்லாமல் நடந்த முக்கிய நாவல் பணிகளில் எம்.வி.வெங்கட்ராமின் 'நித்ய கன்னி' ஒன்று. ஒரு பெண்ணின் உடல், மனம் இரண்டும் அறத்தின் பெயரால் தர்மத்தின் பெயராலும் மிகக் கொடூரமான சாத்வீக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதை புராணகால வாழ்வினூடாகப் பேசும் ஒரே தமிழ் நாவல் இதுதான். பெண்ணை மட்டுமெ மையப்படுத்தித் தமிழில் இதற்குப் பின்னும் இப்படி ஒரு நாவல் எழுதப்படவில்லை." என்ற ஜே.பி சாணக்யாவின் வார்த்தைகள் உண்மை சொல்கின்றன. கடைசியில் மாதவி காட்டுக்குள் புகும் காட்சி வருத்தத்தை அளித்தாலும் 'கொய்யால' வேணும்டா அவனுக்கு என்று காலவர் மீது கோபம் கொண்டுவருகிறது.
மாதவியின் வார்த்தைகள் மூலமாகவும் போஜ மன்னனின் ஆலோசனைகள் மூலமாகவும் காலவரின் சுய பச்சாதாபத்தின் மூலமாகவும் பெண்கள் மீதான புராணகால வாழ்க்கைமுறையில் இருக்கும் வன்முறையை ஆசிரியர் அழகாக சுட்டிக் காட்டுகிறார்.
"அறியாமை அல்ல; மோகனதகாரத்திற்கு நீ இரையானாய். பெண்ணை விஷம் போல் ஒதுக்க வேண்டும்; அவளைக் கண் கொண்டு பார்ப்பதும் பிசகு என்று உனக்கு உபதேசம் புரிந்தது எல்லாம் வீணாகிவிட்டது. என்னுடைய அனுபவத்தைக் கொண்டு கூறுகிறேன்; எவன் பெண்ணைக் கண்டு சபலம் அடைகிறானோ, அவன் கர்ம சக்கரத்தில் அகப்பட்டுத் தவிக்க வேண்டியதுதான்; அவனுக்கு இகமும் இல்லை, பரமும் இல்லை."
என்று வரும் விஸ்வாமித்திரரின் வார்த்தைகளின் வழியே ஆசிரியர் பெண்களைப் பற்றி புராண காலம் கொண்டிருந்த மதிப்பீடுகளை வைக்கிறார்.
"உனக்கு விருப்பமா?" என்று நகைத்தான் ஹர்யசுவன் "பெண்ணுக்கு தனிப்பட்ட விருப்பம் ஏது? மணத்திற்கு முன் ஆள் தந்தைக்கு உட்பட்டவள்; மணமானபின் கணவனுக்கு; கைம்பெண் ஆனால் அல்லது வயதானால் புத்திரர்களுக்கு அடங்கியவள். அவளுக்கு ஏது தனிப்பட்ட உரிமை?"
மாதவி அயோத்தி மன்னனிடம் "எனக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை..." என்று ஆரம்பிக்கும் பொழுது அவன் திரும்பச் சொல்வதாக வரும் பத்தி இது. இதுவும் மேற்சொன்ன உதாரணம் போல் தான்.
மாதவிக்குத் தலை சுற்றியது "என் கன்னி கழியாது. உண்மை தான். ஆனால் தன் மனையாளை வேறு புருஷன் தீண்டினான் என்பதை ஒரு புருஷனால் சகிக்க முடியுமா?" இந்த மாதவியின் கேள்வியானது இன்றைக்கு வரை தொடர்கிறது இல்லையா? இதையும் மாதவியின் கேள்வியின் வாயிலாக சமூகத்தை நோக்கி நீட்டுவதாகவே கருதுகிறேன்.
"பெண்ணை அபலை ஆக்கினார்கள்; அவளை ஆடவனே ரட்சிக்க வேண்டும் என்னும் விதியையும் ஏற்படுத்தினார்கள். ஆனால் அவள் அபலை என்கிற அதே காரணத்தினால் புருஷன் அவளுக்கு எவ்வளவு அக்கிரமங்களைச் செய்யத் துணிகிறான்! அவனே வகுத்த ஸ்திரீ தருமத்தை அவன் தன் நலத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப எவ்வளவு முறை முடுக்குகிறான். எவ்வளவு முறை தளர்த்துகிறான்! தர்ம ஸ்தம்பங்கள் என்று கருதப்பெறும் முனிவர் பெருமான்களும் கூட இத்தகைய அநியாயங்களுக்குப் பங்காளிகள் என்றாள்...? அவர்களை மறுத்து யாரால் பேச முடியும்? மறுத்து வாய் திறப்பதே அதர்மம் ஆகிவிடுமோ?" மாதவி மனதிற்குள் நினைப்பதாய் வரும் வாசகமும் மேற்சொன்ன உத்தி தான்.
அவளோ சஞ்சல புத்தி படைத்தவள்; அவளுடைய நெஞ்சம் கடலைவிட ஆழ்ந்தது; சிருஷ்டியிலிருந்தே வஞ்சனையின் உரு. மகாப் பெரிய மகரிஷிகளின் பத்தினிமார்களுடைய சரிதம் பெண்ணின் சபலத்துக்குச் சான்றாக நிற்கிறது. மாதவியும் ஒரு பெண்தானே? நதிகளினால் கடல் திருப்தியுறுவதில்லை, மரணங்களினால் காலன் ஓய்வதில்லை; புருஷர்களினால் பெண்ணுக்குப் போதும் என்று ஆவதில்லை; மேலும் மேலும்...! மாதவியும்...?
மாதவியை அயோத்தி மன்னனிடம் விட்டுவிட்டு காலவன் யோசிப்பதாய் வரும் வரிகளில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் விடப்பட்ட புராணக்கால ஆண் மனநிலை பிரகாசமாக காண்பிக்கப்படுகிறது.
மனைவி பதிவிரதைதான் என்று திருப்திகொள்ள விரும்பிகிறது ஆண்மை; கண்களையும் காதுகளையும் பொய்த்து மனத்தைத் தேற்ற முயலும் இத்தன்மை ஆடவருடன் பிறந்தது போலும்!
காசி மன்னன் செயலால் சட்டென்று கதை சொல்லி நினைப்பதாய் வரும் வார்த்தைகள் இவை.
"உங்களுடைய பெரும் தர்மத்துக்காக சிறு தர்மத்தை நீங்கள் துறப்பதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை; ஆனால் உங்கள் அறத்தை காத்துக் கொள்வதற்காகப் பிறருடைய அறம் கொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பெண்ணுக்குப் பெரும் தர்மம் கற்பு என்று கூறும் நீங்கள் பெண்மையையே சூறையாடுகிறீர்களே?"
இது மாதவி மனதிற்குள் நினைத்துக் கொள்வதாய் வரும் வரிகள். போஜ ராஜனின் வரிகளின் வழியாகவே கதைசொல்லி பேசுவதால் அதை வெட்டி ஒட்டவில்லை. எல்லாரும் படிக்கக்கூடிய இந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் தான் இந்த நாவல் உள்ளது, குறைந்த பட்சம் பெண்ணியவாதிகள் படிக்கலாம்.
PS: படம் சென்னை அருங்காட்சியகத்தில் எடுத்தது.
ஒரு ஜொள்ளு பதிவு
உன்கையில் இருப்பதென்ன "Trash"ஆ
ஆகிப்போனனே "Nash"ஆ
குப்பைக்கும்
அளித்தாயே முக்கியத்துவம்
இதைவிடவா
பெரிது
பின்நவீனத்துவம்
இருத்தலியத்தை
இல்லாமல் ஆக்குகிறாயே பெண்ணே
மூக்குக்கு மேல
உனக்கு இருக்குறது தான் "கண்ணே"
"பிங்க்" நிற ஆடையணியும் நிலா
நீ! முட்களே இல்லாமல் பழுத்த பலா
அடிச்சு ஆட நடந்து வர்ற அம்சமா
அப்படி இப்படி நீ கிளியோபாட்ரா வம்சமா?
"கோஹினூர்" கீரிடம் வச்ச ராணி
உன் பக்கத்துல நிக்கவச்சா ஆவாளா போணி
உனக்கு நிகர் யாருமில்லை போ நீ
அட போம்மா நீ
ஜொள்ளுவிட்டா யாருபுடுங்குவா ஆணி
அட நம்ம ஆணி
கவுஜை கலைஞன், கவிமடத் தலைவன், கவிதைப் பகைவன் அண்ணன் "தென்னகத்தின் தெரிதா" ஆசீப் அண்ணாச்சிக்கு சமர்ப்பணம்.(ஓய்! நீங்க தான் என் கவிதைத் தொகுப்புக்கு உரையெழுதணும். தயாராய்க்கோங்க.)
Sunday, December 02, 2012
I lost my virginity to Mohandoss
Akilandeswari - Google chat status - Public
I lost my virginity to Mohandoss
எனது Buzzல் வந்து விழுந்த அகிலாவின் இந்த அப்டேட் என்னை கொஞ்சம் நகர்த்திப் பார்த்தது. அவள் அப்படிப் பொதுவெளியில் சொல்வதில் எனக்குப் பிரச்சனையில்லை தான், அவள் இந்த முடிவை முட்டாள்த்தனமாக எதையோ யாருக்கோ நிரூபிப்பதற்காக மட்டும் எடுத்திருக்கக்கூடாது என்று வருந்தினேன். அதன் பின்னர் தான் இனி யாருக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்ற யோசனை எழுந்தது, என்னையும் அவளையும் தெரிந்த - அவள் ஸ்டேட்டஸ் மெஸேஜ் ரீச் ஆகயிருக்கக்கூடிய - நபர்கள் என் அலுவலகம் முழுதும் இருந்தார்கள். என் ஜூனியரிலிருந்து, என் ப்ராஜக்ட் மேனேஜர், இந்தியா சீஃப் இப்படி. கொஞ்சம் பேருக்கு எங்களைப் பற்றித் தெரியுமென்றாலும் சமுதாயம் கல்யாணத்திற்கு முன்னான உறவைப் பற்றி வைத்திருக்கும் சித்திரம் எனக்கு கவலையளித்தது. என்னை விட அகிலாவை அது பாதிக்கும் என்றே நினைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் அவள் இதைச் செய்திருக்க வேண்டாம் என்ற எண்ணமும் எழுந்தது.
10:30 AM aeswari: how is it???
me: ஏன்டீ இப்படி செஞ்ச
aeswari: நேத்தி நம்பினேன்னு சொன்ன
அதாவது நான் வெர்ஜினா இருந்தேன்னு
me: நீ உதைபடப்போற
aeswari: ஏன் உண்மையைத்தான சொன்னேன் :(
10:32 AM me: Im not talking abt tht.
10:35 AM aeswari: சரி என் டெஸ்க்குக்கு வாயேன்.
வெண்பட்டு சேலையணிந்து, கண்ணுக்கு மை எழுதி மஸ்காரா போட்டு, புருவங்களுக்கு மத்தியில் இல்லாமல் கொஞ்சம் மேலே கொஞ்சம் பெரிதாய் கறுப்புப் பொட்டு வைத்து என்னை வரவேற்ற தேவதை தான் கொஞ்சம் முன்னர் என்னுடன் கன்னித்தன்மைப் பற்றிக் கதைத்தது என்று நம்பு முடியவில்லை தான்.
“சொல்லவேயில்லை அகிலா, ஹேப்பி பர்த்டே!” எனக்கு இன்றைக்கு அவள் பிறந்தநாள் இல்லையென்று தெரியும்.
அவள் நான் எதிர்பார்த்தது போலவே கண்டுகொள்ளவில்லை. “நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால தான் சேலையில் வந்தேன்.” என்று சொல்லி என்னை அழைத்து அவளுடைய gmail பக்கம் காட்டினாள், என்னையும் ஜெயஸ்ரீயையும் தவிர்த்து மற்ற எல்லோரையும் ப்ளாக் செய்துவைத்திருந்தாள்.
“நான் கூட நினைச்சேன் ரொம்ப தைரியம்தானுட்டு, போடி இவளே, அஞ்சு நிமிஷத்தில் எவ்ளோ பயந்திட்டேன் தெரியுமா?!”
“நீ மட்டும் என்னைப் பத்தி எப்படியெல்லாம் எழுதியிருப்ப, அதான் சும்மா விளையாடலாமேன்னு...” என்று சொல்லிக்கொண்டே, அவளுடைய லாக்கரைத் திறந்து ஒரு டைரியை எடுத்தாள், முதலில் என்னுடையதோ என்று நினைத்தேன்.
“ஒரு விஷயத்தை இன்னிக்கே நான் உன்கிட்ட சொல்லணும், அதை மறைக்கக்கூடாது. ஆனால் இவ்வளவு நாளா உன்னப்பத்தி வராத ஒரு நம்பிக்கை இப்பத்தான் வந்திருக்குன்னு வைச்சிக்கோயேன். ஆனால் இந்த டைரியைப் படிச்சிட்டு என்னைப் பிடிக்கலைன்னாலோ இல்லை என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னாலோ சொல்லிடு நான் தப்பா நினைக்க மாட்டேன். இதைப்படிச்சா தெரியும் எவ்வளவு பர்ஸனலான விஷயம் சொல்றேன்னு அதனால் சீக்ரஸி முக்கியம். புரிஞ்சிக்க”
கைகளில் இருந்த டைரி ஒரு மாயப்புத்தகம் போல் தோற்றமளித்தது, இத்தனைக்கும் பிறகு அவளை நான் வெறுக்கக்கூடிய அப்படியென்ன விஷயம் இந்த டைரிக்குள் இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அகிலா இத்தனை தூரம் சொன்னதால் என்னதான் இருக்கும் என்று படிக்கநினைத்தேன்.
"There are lots of personal information not only about mine, but about my entire family, I know I can trust you, but you should know that too." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
நான் சட்டென்று, “அகிலா உன்னை வெறுக்கிறதைப் போல் உன்னிடம் எதுவும் இருக்க முடியாதுன்னு தெரியும். நீ என்கிட்ட இதைக் கொடுக்க நினைத்ததையே நான் பாஸிடிவ்வா எடுத்துக்கிறேன். நான் இதைப் படிக்கலையே!”
உளறினேன்.
“இல்லை பரவாயில்லை நீ படிச்சித்தான் ஆகணும், after reading this if you cant keep it with you, I am fine." மேலும் சீண்டினாள். நான் பதிலெதுவும் சொல்லாமல் டைரியுடன் நகர்ந்தேன், என்னை அகிலாவை வெறுக்கும் படி செய்ய அப்படி என்ன இருக்க முடியும் என்ற கேள்வியுடன்.
தாஸ்,
நான் இதுவரைக்கும் உன்கிட்ட என் ஃபேமிலி பத்தி பெரிசாச் சொன்னதில்லை, நீயும் கேட்டதில்லை. ஜெயஸ்ரீயை பத்தி மட்டும் உனக்கு கொஞ்சம் தெரிஞ்சிருக்கலாம், அதுவும் எத்தனை தூரம் அவளுடன் ஒத்துப் போகக்கூடியதுன்னு எனக்குத் தெரியாது.
காதலிக்கிறப்ப இதப்பத்தில்லாம் தெரிஞ்சிக்கணும்னு அவசியம் இல்லைதான், நானும் உன்னை இப்ப நம்புறது போல நம்புறதுக்கு முன்னாடி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் என்னை கல்யாணம் பண்ணிக்கப்போறவன் கிட்ட எதையும் மறைக்கணும்னு நான் நினைக்கலை. இப்ப நான் சொல்ற விஷயத்தை எல்லாம் நாம சாட் பண்றப்பவே ஏன் சொல்லலைன்னு நீ கேட்கலாம். அதுக்கு என்கிட்ட பதில் கிடையாது, அதே மாதிரி நீ இதைப் படிச்சிட்டு இதைப்பத்தி கேக்கப்போற எந்தக் கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லை.
எங்க அப்பா ஒரு குடிகாரன், சாரி உனக்கு சட்டுன்னு ’ன்’ போட்டுப் பேசுறதால படிக்கிறதுக்கு கஷ்டமாயிருக்கலாம், ஆனா என்னால வார்த்தைக்காக கூட அவனை ‘ர்’ போட்டுச் சொல்ல முடியாது. எங்கம்மாவைப் பிடிக்காம எங்க தாத்தா வற்புறுத்தினாருங்கிறதுக்காக கல்யாணம் கட்டிக்கிட்டானாம், பாவம் எங்கம்மாவுக்கும் தாத்தாவை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாம கட்டிக்கிட்டிருக்காங்க. கல்யாண நாளிலிருந்து எங்கப்பன் சாகற வரைக்கும் எங்கம்மா பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. பாதி நாளு வேலைக்கே போனதில்லை, எங்கம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டு எங்கள வளத்தாங்க. அவங்க சம்பளத்தையும் அடிச்சி பிடிங்கி குடிச்சிருக்கான் படுபாவி. அதுகூட பரவாயில்லை குடிச்சிட்டு வந்து தினம் தினம் எங்கம்மாவை எங்க கண்ணு முன்னாலையே அடிப்பான், தலையை சுவத்தில் கொண்டு மோதுறது, முகத்தில் கையை மடக்கி குத்துறதுன்னு தினம் தினம் எங்கம்மா முகம் கிழிஞ்சி தான் படுக்க வருவாங்க. நானும் ஜெவும் இதைப் பாக்காத நாளே இல்லை.
இதில எங்கம்மா மேல சந்தேகம் வேற, எவன் கூடவோ போய்ப் படுக்குறாங்கன்னு. உனக்கு எப்ப தாஸ் கெட்ட வார்த்தையெல்லாம் தெரிஞ்சிருக்கும், சுன்னி, புண்ட, கூதி, கண்டார ஓழி, தேவுடியா முண்ட இதெல்லாம். விவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து இதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கேன் நான். எவன் கூடடி போய்ப் படுத்துட்டு வந்த, எந்த சுன்னிய ஊம்பிட்டு வந்தன்னு என் சின்ன வயசில கேக்காத நாளே இல்லை. நானும் சின்னப்பிள்ளைல சினிமா எல்லாம் பாத்துட்டு ஒரு நாள் அவன் திருந்திருவான்னு நினைச்சிருக்கேன். ம்ஹூம் அவன் திருந்தவும் இல்லை, எங்கம்மா படுற கஷ்டம் போகவும் இல்லை. என்ன இழவு காரணமோ தெரியாது என்னையும் ஜெவையும் ஒன்னுமே சொன்னது கிடையாது, திட்டினது கிடையாது. அவனுக்கு எங்கம்மா அடிக்கிறதுக்குத் தான் டைம் இருந்துச்சு.
நான் சொல்ல வந்தது இதையில்லை, ஆனா இதை இப்படித்தான் சொல்ல முடியுமாயிருக்கும். அதனால சொல்றேன்.
அப்புறம் எனக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சது, தினமும் நைட் எப்ப செக்ஸ் வைச்சிக்கலாம்னு கேட்டு எங்கம்மாவை டார்ச்சர் செய்யறதை தினமும் கேட்டிருக்கேன். அவ்வளவு ப்ளைனா இல்லைன்னாலும் விஷயம் அதுதாங்கிற லெவலுக்குத் தெரிந்திருந்துச்சு. எவனோ ஒருத்தன் அவனோட அம்பது வயசுல குழந்தை பெத்திக்கிட்டதும், நானும் இப்பவும் ஆம்பளைன்னு நிரூபிக்கணும் குழந்தை பெத்துக்கொடுன்னு கொடுமைப் படுத்தினது கூட நினைவிருக்கு. அம்மா கருத்தடை ஆப்பரேஷன் செய்துக்கிட்டவங்க. அம்மா பாவம் வெளியில் போய் வேலையும் செய்திட்டு வந்து, சாப்பாடும் செஞ்சிக் கொடுத்துட்டு, நைட் அடியும் வாங்கிட்டு இவன் கூட காலங்காத்தால எங்களுக்குத் தெரியாமல் போய் படுத்துக்கணும். நான் அப்ப வயசுக்குக் கூட வரலை, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, ஆனா அவங்க செக்ஸ் வைச்சிகப் போறாங்கன்னு தெரியும். அந்தாள் கேக்கம் போதும் எங்கம்மா வேணாம் வேணாம் கெஞ்சிறது கூட கேட்கும். ஆனா ஒரு நாள் கூட என்னால் முழிச்சிருக்கவோ, அவங்க என்ன செய்வாங்கன்னு கேக்கவோ பாக்கவோ முடிஞ்சதில்லை. நான் இதில் போய் பொய் என்ன சொல்லப்போறேன். ஆனா சில நாள் போதை அதிகமாகி அம்மாவை பொட்டுத் துணி கூட போடாம நிக்க வுட்டுப் பார்த்திருக்கேன். எதுக்குமே கலங்காத அம்மா அப்ப மட்டும் அழுதுக்கிட்டே கதவை சாத்திவிடச் சொல்லும், எங்களைத் திட்டி போய்ப் படுக்கச் சொல்லும், அழ வேண்டாம்னு சொல்லும். ஆனால் அந்த வயசுல முடியாத ஒரு விஷயம் அழாம இருக்கிறது, இன்னிக்கு நான் அழறதே கிடையாது, என்னால அழவே முடியாது, என் அம்மாவை நினைச்சிப்பேன் அந்தக் கஷ்டத்துக்கு முன்னாடி நான் படுறது என்ன கஷ்டம்னு நான் அழுததே இல்லை.
சரி விஷயத்துக்கு வர்றேன், உனக்கு டாக்டர்ஸ் ப்ளேன்னா என்னான்னு தெரியுமா தெரியாது. அது ஒரு குளிர்காலம்னு மட்டும் ஞாபகம் இருக்கும் இன்னும் கூட மழை பெஞ்சிக்கிட்டிருந்திருக்கலாம், நானும் ஜெவும் ஒரு பெட்ஷீட்டிற்குள் படுத்திருந்த ஞாபகம். நான் அப்ப வயசுக்கு வரலை, அவ உடம்பு என் மேல படுற சூடு என்னைத் தவிக்க வச்சது. நான் அவளோட வஜைனாவையும் அவ என்னோட வஜைனாவையும் பார்த்துப்போம், ஊசி போட்டுப்போம். ஊசின்னா ஊசி கிடையாது வெளக்கமாத்து குச்சி ஒன்னை எடுத்துக் குத்துறது. இப்படியெல்லாம் விளையாடியிருக்கோம். ரொம்பக் காலம் என்னை உறுத்தின விஷயம் இது, என் தங்கைய இப்படிச் செய்திட்டனேன்னு, உனக்குத் தெரியுமா தாஸ் இன்னைக்கு நினைச்சா அது கனவா இல்லை நிஜமா நடந்ததான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. ஆனா இதைப்பத்தி நான் அந்த வயசில நிறைய நினைச்சிருக்கேன். அதனால என்னால நிச்சயமா சொல்ல முடியும் கனவில்லைன்னு சொல்ல முடியும். ஆனா இதையெல்லாம் நான் வற்புறுத்தித்தான் ஜெவை செய்ய வச்சேன். இன்னிக்கு நானும் ஜெவும் அல்மோஸ்ட் லெஸ்பியனா இருக்கோம்னா அதுக்கு நான் தான் காரணம்னு எனக்கு மனசு உறுத்திக்கிட்டேயிருக்கு. ஆமாம் தாஸ், நான் உன்கூட ஊட்டிக்கு வர்றதுக்கு முன்னாடி என்னையை ஒரு லெஸ்பியனாத்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.
தமிழ்நாட்டில் கொஞ்சம் அழகா பொறக்கறதில் இருக்கற பிரச்சனை தெரியுமா தாஸ்? அது அத்தனையையும் நான் ஃபேஸ் பண்ணியிருக்கேன், வயசுக்கு வந்த ஒரு மாசத்துல ஒரு பையன் ‘உன் முலை ரொம்ப அருமையா இருக்கு, என் சுன்னியப் பார்க்கறியான்னு’ சொல்லி யாருமில்லாத ரோடொன்றில் ஜட்டியைக் கழட்டி காண்பிச்சான். நான் என்ன செய்திருக்க முடியும்னு நினைக்கிற, உதவாத அப்பன் ஒருத்தனை வைச்சிக்கிட்டு அம்மாகிட்ட சொன்னேன் அம்மாவாலையும் தான் என்ன பண்ணியிருக்க முடியும், மக்கள் நடமாட்டம் இருக்கற வரைக்கும் தான் என் நடமாட்டம்னு முடிவு செய்யறதைத் தவிர. என் கூடப்படிச்ச எனக்கு லவ்லெட்டர் கொடுக்காத பையனுங்களே கிடையாது, என் பின்னாடியே சுத்தறது, ஒரு பையன் பேரைச் சொல்லிக் கூப்பிடுறது இப்படின்னு வீட்டை விட்டு ரோட்டுக்கு வர்றதுன்னாலே பயந்த காலம் இருந்தது. வீட்டை விட்டு வெளியில் வந்தா எந்தப் பையன் என்னைப் பின் தொடர்ந்து வருவான் எவன் லவ்லெட்டர் கொடுப்பான்னு தினம் தினம் பயந்து செத்திருக்கேன். வீட்டுல மட்டும் என்ன வாழ்க்கை அப்பல்லாம் எனக்கு துணையா இருந்தது ஜெ மட்டும் தான், அம்மாவுக்கு அப்பாகிட்ட அடிவாங்கவே நேரம் பத்தாது. எனக்கும் ஜெவுக்கும் ஒரு வருஷம் தான் வயசு வித்தியாசம். நான் அவகிட்ட எல்லாத்தையும் சொல்லுவேன், என்னோட ஆறுதலே அவ மட்டும் தான். சொல்லப்போனா அவளும் எங்கப்பனும் தான் ஒரு வைராக்கியமா என்னை ஜெயிக்க வைத்தது, இந்தப் பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு நாங்க நல்லா படிக்கிறதுதான்னு எங்களுக்கு சின்ன வயசிலேயே தெரிஞ்சிருந்தது. எங்கப்பன் எங்கம்மாவுக்குக் கொடுத்த டார்ச்சரால் நொந்து இருந்த என்னை எப்பவும் ஜெதான் தேத்துவா.
டாக்டர்ஸ் ப்ளேன்னு சின்னவயசில செக்ஸ் பத்திய மனப்பான்மை இல்லாம செய்வதைச் சொல்வாங்க, அதாவது விளையாட்டா ஆண் பெண் உறுப்புக்களைத் தொட்டுப் பார்க்குறது, ஆனால் எங்களுக்கு எது சரி எது தப்புன்னு சொல்லித்தர்ற நிலையில எங்கம்மா இல்லேங்கிறதால, நாங்க அதில் செக்ஸுவல் இன்டன்ஷன்ஸ் கொண்டு வந்துட்டோம் வயசுக்கு வந்ததுக்கு அப்புறம். எனக்கென்னமோ ஆண்களையே பிடிக்காமப் போயிருந்ததால் எனக்கு இதில் சம்மதம் இருந்தது, வயசுக்கு வந்ததுக்கு அப்புறம் ஜெ தான் இதை ஆரம்பிச்சான்னாலும் அதற்கும் நான் தான் காரணம்னு இன்னமும் நினைக்கிறேன். எங்கப்பனோ இல்லை ஜட்டியைக் கழட்டி காண்பிச்சவனோ, எங்கப்பன் கடன் வாங்கிட்டு வரச்சொன்னப்போ மாரைக் கசக்கினவனோ இல்லாமல் நான் என்னையத்தான் இதற்கு காரணம்னு சொல்வேன். நான் சந்தோஷமாதான் இருந்தேன் இருக்கேன், அக்கா தங்கை லெஸ்பியனா இருக்கிறதைப் பத்திய கேள்விகள் எனக்குள்ள உண்டுன்னாலும் நானும் சரி ஜெவும் சரி ஒரு மாதிரி எங்களை இந்த அடலஸண்ட் காதல் கிட்டேர்ந்து இப்படித்தான் காப்பாத்திக்கிட்டோம், எங்களுக்கு நாங்களே ஒரு மாதிரி உதவி செய்திக்கிட்டோம்னு தான் நான் நினைக்கிறேன். ஊட்டி வர்றவரைக்கும் என் வஜைனாவிற்குள் எதையும் நுழைத்துக் கொண்ட நினைவில்லை. எனக்கு நான் லெஸ்பியனாங்கிற டவுட் இருந்துக்கிட்டேதான் இருந்தது, ஆனால் ஜெக்கு அப்படியில்லை. அவள் தான் ஒரு லெஸ்பியன்னு நம்பினாள். என் டவுட் என்னை என் கிளிட்டோரிஸை விட்டு கீழே நகர விடலை, ஜெவுக்கு அதிலும் விருப்பம் இருந்தது. அவள் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் எங்கிருந்தோ ஒரு டில்டோவைக் கூடப் பிடித்துக் கொண்டு வந்திருந்தாள், நான் மறுத்துவிட்டேன். என் உச்சத்தை கிளிட்டை நக்குவதால் மட்டுமே பெற்றுவந்தேன், ஜெவின் கைகளுக்குக் கூட அனுமதியில்லை. நான் என் முதல் உடற்சேர்க்கையின் பொழுது தான் ஹைமன் கிளியும் என்றே நினைத்தேன். அதனால் தான் அத்தனை பிரச்சனையும். சரி அதை விடுங்கள்.
நான் என்னை இப்படி ஒரு லெஸ்பியனாக நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது தான் நமது நட்பு உருவானது, எதனால் உன்னை எனக்கு இவ்வளவு பிடித்திருந்ததுன்னு தெரியாது. Love at first sight கிடையாது நம்முடையதுன்னு உனக்கும் தெரியும், நீ என்னைக் கன்வின்ஸ் செய்து கொண்டேயிருந்தாய் ஆனால் உன்னால் என் பாறைக்குள் நுழைய முடிந்திருந்தது. இஞ்ச் பை இஞ்சா உன்னால் என்னை நகர்த்த முடிந்தது. ஆரம்பத்தில் நான் நகர்ந்தேனான்னு தெரியாது ஆனால் உன்னுடனான சேட்டிங் என்னை நகர்த்தியது. மொத்தமாய் உன்னை நிராகரித்ததிலிருந்து, உன்னுடனான உரையாடல்களுக்கு ஒப்புகொண்டு, என் எல்லைகளுக்குள் நின்று கொண்டு செய்த பெற்ற விளக்கங்கள், எல்லைக்களைக் கடந்து இணையவெளியில் உலவியது, பின்னர் நேர்ப்பேச்சில் எல்லாம் பேச வைத்தது என நான் மாறிக்கொண்டேயிருந்தேன். ஆனால் எனக்கே தெரியாமல் இந்த மாற்றம் என்னிலிருந்த என் செக்ஸுவல் ஓரியன்டேஷனைப் பற்றிய கேள்வியை எழுப்பத் தொடங்கியது. உன்னுடனான பழக்கம் சென்று கொண்டிருந்த பொழுதுகளில் எல்லாம் நானும் ஜெவும் ஒன்றாகயிருந்ததில்லை என்று பொய் சொல்ல நான் விரும்பவில்லை, ஆனால் என் லெஸ்பியன் நம்பிக்கையை மீறியும் என்னால் ஒரு ஆணுடன் உறவு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உன்னால் தான் வந்தது. ஆனால் சாதாரணமாய் வரவில்லை, கடைசி வரை என்னிடம் ஒட்டிக் கொண்டிருந்த ஆண்களின் மீதான வெறுப்பு - என் அப்பனின் காரணமாய் - என்னை உன்னிடம் நெருங்க விடவில்லை. தோற்றுப் போவதன் வலி என்னை முயற்சி செய்ய விடவில்லை. ஆனால் செய்யச் சொன்னது ஜெதான்.
உன்னுடனான என் பழக்கம் ஜெவிற்கு தெரிந்துதானிருந்தது, பிடித்தும் தான். நான் ஜெவிடம் ரொம்பவும் டிபன்டன்ட் ஆக இருந்தேன், அதை அவள் வெறுத்தாள் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படியில்லாமல் இருந்தால் நன்றாகயிருக்குமென்று அவள் நினைத்திருக்கலாம். நான் லெஸ்பியனா என்பதைப் பற்றிய சந்தேகம் எனக்கு இருந்ததும் இருப்பதும் அவளுக்குத் தெரியும், ஒருவேளை நான் உன்னுடன் உறவு கொள்ள முடியாமல் போனால் ஒரு வகையில் என் செக்ஸுவல் ஓரியன்டேஷன் எனக்குத் தெரிய வாய்ப்பிருக்கும் என்று கூட நினைத்திருக்கலாம். நீ அவளுடன் புனே சென்ற பொழுது என்ன செய்தாயோ எனக்குத் தெரியாது, அவளுக்கு உன் மேல் நம்பிக்கை வந்ததும், என்னை உன்னிடம் டெஸ்ட் செய்து கொள்ளும் படியும் அவள், புனே சென்று வந்ததும் தான் சொன்னாள். அவள் சொன்னால் உன் உள்மன அளவிளாவது நீ ஒரு லெஸ்பியனா இல்லையா என்பது தெரிந்து தான் ஆகவேண்டும் என்றும், அதை உறுதி செய்யும் பல வழிகளில் இதுவும் ஒன்றென்றும், அவளுக்கு இது உதவியதுன்னும் சொன்னாள். எல்லாவற்றிற்கும் பிறகும் என்னால் தோல்வியடைவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. நான் காலம் கடத்தினேன் ஆனால் உன் டைரி நீ எவ்வளவு தூரம் என்னைக் காதலிக்கிறாய் என்பதைச் சொன்னது, அதன் ப்ராக்டிகல் தன்மை என்னை உன்னிடம் கொடுக்க இசைந்தது. ஆனாலுமே எனக்கு கடைசி வரை என்னால் ஒரு ஆணுடன் சந்தோஷமாய் இருக்க முடியுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் இருக்க முடிந்தது என்னில் பல மடங்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. எனக்கு நான் உன்னிடம் அன்று முதல் முறையே அப்படி நடந்து கொண்டது - இரண்டாவது ஆர்கஸம் வரவழைக்க நான் செய்த அத்தனையும், முதல் தடவை தான் நீ வாயை வெச்சதும் வந்துடுச்சே - உனக்கு தவறா தெரிஞ்சிடுமோன்னு பயந்தேன். ஆனால் நீ என்னைப் புரிந்துகொண்டதாய் இதுவரைக்கும் நினைக்கிறேன்.
நீ என்னிடம் என் மாஸ்டர்பேஷன் பற்றிக் கேட்டதற்கான பதிலும் இந்தக் கடிதத்தில் இருக்கு. ஆமாம் நான் செய்திருக்கேன், செய்துக்கிட்டிருக்கேன் - நீ நம்ப கல்யாணத்துக்குப் பிறகு என்னை சேட்டிஸ்ஃபை செய்யலைன்னா செய்துப்பேன். கலாச்சாரம் பண்பாடு லெஸ்பியன் ஹோமோசெக்ஸுவல் பத்தியெல்லாம் நீ என்னுடன் சாட்டிங்கில் பேசியதை வைத்து உன்னைப் பற்றிய ஒரு அபிப்ராயம் எனக்கு இருக்கு. ஆனால் அது தவறாகவும் நான் தவறா புரிந்துகொண்டதாகவும் கூட இருக்க முடியும். உன்னை எதற்காக இல்லாட்டாலும் இதை நீ ஊருக்கெல்லாம் சொல்லி என்னை அசிங்கப்படுத்த மாட்ட என்கிற அளவி உன்னை நம்புகிறேன். மற்றதை நீ சொல்லித் தான் தெரிஞ்சிக்கணும். FYI என் அப்பன் செத்துப்போய் ஐஞ்சு வருசம் ஆகுது, நான் காலேஜ் படிக்கிறப்பவே தண்ணியடிச்சி ரோட்டில் அடிபட்டு செத்துப்போய்ட்டான். அம்மா ஊரில் இருக்காங்க நானும் என் தங்கையும் மட்டும் தான் இங்க இருக்கோம். என்னை நீ கல்யாணம் செய்துக்க முடியும்னா என் பக்கத்தில் இருந்து நான் என்ன செய்யணும்னு சொல்லு, இன்னொரு முக்கியமான விஷயம் இந்த லெஸ்பியன் விஷயத்தைத் தவிர்த்து என் தங்கை ரொம்ப நல்லவ, என் உயிரை விட மேலாதான் அவளை நினைச்சிக்கிட்டிருக்கேன் அதனால அவகிட்ட உன்னால மரியாதையா நடந்துக்க முடியாதுன்னா - I mean எப்படி சொல்றதுன்னு தெரியலை உனக்கு எப்படிப் படுதோ அப்படி வைச்சிக்கோ - இப்பவே சொல்லிடு.
என்கிட்ட இதைப்பத்தி நேரிலோ, போனிலோ இல்லை சாட்டிங்கிலோ நீ பேசலாம் எல்லாவற்றுக்கும் தயாரா இருக்கேன்.
அகிலம்.
நான் படித்து முடித்து நிறைய நேரம் இதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.
___________________________________________________________________
இன்னமும் எழுதிக் கொண்டிருக்கும் என் கதையொன்றின் இன்னொரு பக்கம்.
தொடர்புடையது - மலரினும் மெல்லிய காமம்
I lost my virginity to Mohandoss
எனது Buzzல் வந்து விழுந்த அகிலாவின் இந்த அப்டேட் என்னை கொஞ்சம் நகர்த்திப் பார்த்தது. அவள் அப்படிப் பொதுவெளியில் சொல்வதில் எனக்குப் பிரச்சனையில்லை தான், அவள் இந்த முடிவை முட்டாள்த்தனமாக எதையோ யாருக்கோ நிரூபிப்பதற்காக மட்டும் எடுத்திருக்கக்கூடாது என்று வருந்தினேன். அதன் பின்னர் தான் இனி யாருக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்ற யோசனை எழுந்தது, என்னையும் அவளையும் தெரிந்த - அவள் ஸ்டேட்டஸ் மெஸேஜ் ரீச் ஆகயிருக்கக்கூடிய - நபர்கள் என் அலுவலகம் முழுதும் இருந்தார்கள். என் ஜூனியரிலிருந்து, என் ப்ராஜக்ட் மேனேஜர், இந்தியா சீஃப் இப்படி. கொஞ்சம் பேருக்கு எங்களைப் பற்றித் தெரியுமென்றாலும் சமுதாயம் கல்யாணத்திற்கு முன்னான உறவைப் பற்றி வைத்திருக்கும் சித்திரம் எனக்கு கவலையளித்தது. என்னை விட அகிலாவை அது பாதிக்கும் என்றே நினைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் அவள் இதைச் செய்திருக்க வேண்டாம் என்ற எண்ணமும் எழுந்தது.
10:30 AM aeswari: how is it???
me: ஏன்டீ இப்படி செஞ்ச
aeswari: நேத்தி நம்பினேன்னு சொன்ன
அதாவது நான் வெர்ஜினா இருந்தேன்னு
me: நீ உதைபடப்போற
aeswari: ஏன் உண்மையைத்தான சொன்னேன் :(
10:32 AM me: Im not talking abt tht.
10:35 AM aeswari: சரி என் டெஸ்க்குக்கு வாயேன்.
வெண்பட்டு சேலையணிந்து, கண்ணுக்கு மை எழுதி மஸ்காரா போட்டு, புருவங்களுக்கு மத்தியில் இல்லாமல் கொஞ்சம் மேலே கொஞ்சம் பெரிதாய் கறுப்புப் பொட்டு வைத்து என்னை வரவேற்ற தேவதை தான் கொஞ்சம் முன்னர் என்னுடன் கன்னித்தன்மைப் பற்றிக் கதைத்தது என்று நம்பு முடியவில்லை தான்.
“சொல்லவேயில்லை அகிலா, ஹேப்பி பர்த்டே!” எனக்கு இன்றைக்கு அவள் பிறந்தநாள் இல்லையென்று தெரியும்.
அவள் நான் எதிர்பார்த்தது போலவே கண்டுகொள்ளவில்லை. “நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால தான் சேலையில் வந்தேன்.” என்று சொல்லி என்னை அழைத்து அவளுடைய gmail பக்கம் காட்டினாள், என்னையும் ஜெயஸ்ரீயையும் தவிர்த்து மற்ற எல்லோரையும் ப்ளாக் செய்துவைத்திருந்தாள்.
“நான் கூட நினைச்சேன் ரொம்ப தைரியம்தானுட்டு, போடி இவளே, அஞ்சு நிமிஷத்தில் எவ்ளோ பயந்திட்டேன் தெரியுமா?!”
“நீ மட்டும் என்னைப் பத்தி எப்படியெல்லாம் எழுதியிருப்ப, அதான் சும்மா விளையாடலாமேன்னு...” என்று சொல்லிக்கொண்டே, அவளுடைய லாக்கரைத் திறந்து ஒரு டைரியை எடுத்தாள், முதலில் என்னுடையதோ என்று நினைத்தேன்.
“ஒரு விஷயத்தை இன்னிக்கே நான் உன்கிட்ட சொல்லணும், அதை மறைக்கக்கூடாது. ஆனால் இவ்வளவு நாளா உன்னப்பத்தி வராத ஒரு நம்பிக்கை இப்பத்தான் வந்திருக்குன்னு வைச்சிக்கோயேன். ஆனால் இந்த டைரியைப் படிச்சிட்டு என்னைப் பிடிக்கலைன்னாலோ இல்லை என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னாலோ சொல்லிடு நான் தப்பா நினைக்க மாட்டேன். இதைப்படிச்சா தெரியும் எவ்வளவு பர்ஸனலான விஷயம் சொல்றேன்னு அதனால் சீக்ரஸி முக்கியம். புரிஞ்சிக்க”
கைகளில் இருந்த டைரி ஒரு மாயப்புத்தகம் போல் தோற்றமளித்தது, இத்தனைக்கும் பிறகு அவளை நான் வெறுக்கக்கூடிய அப்படியென்ன விஷயம் இந்த டைரிக்குள் இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அகிலா இத்தனை தூரம் சொன்னதால் என்னதான் இருக்கும் என்று படிக்கநினைத்தேன்.
"There are lots of personal information not only about mine, but about my entire family, I know I can trust you, but you should know that too." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
நான் சட்டென்று, “அகிலா உன்னை வெறுக்கிறதைப் போல் உன்னிடம் எதுவும் இருக்க முடியாதுன்னு தெரியும். நீ என்கிட்ட இதைக் கொடுக்க நினைத்ததையே நான் பாஸிடிவ்வா எடுத்துக்கிறேன். நான் இதைப் படிக்கலையே!”
உளறினேன்.
“இல்லை பரவாயில்லை நீ படிச்சித்தான் ஆகணும், after reading this if you cant keep it with you, I am fine." மேலும் சீண்டினாள். நான் பதிலெதுவும் சொல்லாமல் டைரியுடன் நகர்ந்தேன், என்னை அகிலாவை வெறுக்கும் படி செய்ய அப்படி என்ன இருக்க முடியும் என்ற கேள்வியுடன்.
தாஸ்,
நான் இதுவரைக்கும் உன்கிட்ட என் ஃபேமிலி பத்தி பெரிசாச் சொன்னதில்லை, நீயும் கேட்டதில்லை. ஜெயஸ்ரீயை பத்தி மட்டும் உனக்கு கொஞ்சம் தெரிஞ்சிருக்கலாம், அதுவும் எத்தனை தூரம் அவளுடன் ஒத்துப் போகக்கூடியதுன்னு எனக்குத் தெரியாது.காதலிக்கிறப்ப இதப்பத்தில்லாம் தெரிஞ்சிக்கணும்னு அவசியம் இல்லைதான், நானும் உன்னை இப்ப நம்புறது போல நம்புறதுக்கு முன்னாடி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் என்னை கல்யாணம் பண்ணிக்கப்போறவன் கிட்ட எதையும் மறைக்கணும்னு நான் நினைக்கலை. இப்ப நான் சொல்ற விஷயத்தை எல்லாம் நாம சாட் பண்றப்பவே ஏன் சொல்லலைன்னு நீ கேட்கலாம். அதுக்கு என்கிட்ட பதில் கிடையாது, அதே மாதிரி நீ இதைப் படிச்சிட்டு இதைப்பத்தி கேக்கப்போற எந்தக் கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லை.
எங்க அப்பா ஒரு குடிகாரன், சாரி உனக்கு சட்டுன்னு ’ன்’ போட்டுப் பேசுறதால படிக்கிறதுக்கு கஷ்டமாயிருக்கலாம், ஆனா என்னால வார்த்தைக்காக கூட அவனை ‘ர்’ போட்டுச் சொல்ல முடியாது. எங்கம்மாவைப் பிடிக்காம எங்க தாத்தா வற்புறுத்தினாருங்கிறதுக்காக கல்யாணம் கட்டிக்கிட்டானாம், பாவம் எங்கம்மாவுக்கும் தாத்தாவை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாம கட்டிக்கிட்டிருக்காங்க. கல்யாண நாளிலிருந்து எங்கப்பன் சாகற வரைக்கும் எங்கம்மா பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. பாதி நாளு வேலைக்கே போனதில்லை, எங்கம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டு எங்கள வளத்தாங்க. அவங்க சம்பளத்தையும் அடிச்சி பிடிங்கி குடிச்சிருக்கான் படுபாவி. அதுகூட பரவாயில்லை குடிச்சிட்டு வந்து தினம் தினம் எங்கம்மாவை எங்க கண்ணு முன்னாலையே அடிப்பான், தலையை சுவத்தில் கொண்டு மோதுறது, முகத்தில் கையை மடக்கி குத்துறதுன்னு தினம் தினம் எங்கம்மா முகம் கிழிஞ்சி தான் படுக்க வருவாங்க. நானும் ஜெவும் இதைப் பாக்காத நாளே இல்லை.
இதில எங்கம்மா மேல சந்தேகம் வேற, எவன் கூடவோ போய்ப் படுக்குறாங்கன்னு. உனக்கு எப்ப தாஸ் கெட்ட வார்த்தையெல்லாம் தெரிஞ்சிருக்கும், சுன்னி, புண்ட, கூதி, கண்டார ஓழி, தேவுடியா முண்ட இதெல்லாம். விவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து இதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கேன் நான். எவன் கூடடி போய்ப் படுத்துட்டு வந்த, எந்த சுன்னிய ஊம்பிட்டு வந்தன்னு என் சின்ன வயசில கேக்காத நாளே இல்லை. நானும் சின்னப்பிள்ளைல சினிமா எல்லாம் பாத்துட்டு ஒரு நாள் அவன் திருந்திருவான்னு நினைச்சிருக்கேன். ம்ஹூம் அவன் திருந்தவும் இல்லை, எங்கம்மா படுற கஷ்டம் போகவும் இல்லை. என்ன இழவு காரணமோ தெரியாது என்னையும் ஜெவையும் ஒன்னுமே சொன்னது கிடையாது, திட்டினது கிடையாது. அவனுக்கு எங்கம்மா அடிக்கிறதுக்குத் தான் டைம் இருந்துச்சு.
நான் சொல்ல வந்தது இதையில்லை, ஆனா இதை இப்படித்தான் சொல்ல முடியுமாயிருக்கும். அதனால சொல்றேன்.
அப்புறம் எனக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சது, தினமும் நைட் எப்ப செக்ஸ் வைச்சிக்கலாம்னு கேட்டு எங்கம்மாவை டார்ச்சர் செய்யறதை தினமும் கேட்டிருக்கேன். அவ்வளவு ப்ளைனா இல்லைன்னாலும் விஷயம் அதுதாங்கிற லெவலுக்குத் தெரிந்திருந்துச்சு. எவனோ ஒருத்தன் அவனோட அம்பது வயசுல குழந்தை பெத்திக்கிட்டதும், நானும் இப்பவும் ஆம்பளைன்னு நிரூபிக்கணும் குழந்தை பெத்துக்கொடுன்னு கொடுமைப் படுத்தினது கூட நினைவிருக்கு. அம்மா கருத்தடை ஆப்பரேஷன் செய்துக்கிட்டவங்க. அம்மா பாவம் வெளியில் போய் வேலையும் செய்திட்டு வந்து, சாப்பாடும் செஞ்சிக் கொடுத்துட்டு, நைட் அடியும் வாங்கிட்டு இவன் கூட காலங்காத்தால எங்களுக்குத் தெரியாமல் போய் படுத்துக்கணும். நான் அப்ப வயசுக்குக் கூட வரலை, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, ஆனா அவங்க செக்ஸ் வைச்சிகப் போறாங்கன்னு தெரியும். அந்தாள் கேக்கம் போதும் எங்கம்மா வேணாம் வேணாம் கெஞ்சிறது கூட கேட்கும். ஆனா ஒரு நாள் கூட என்னால் முழிச்சிருக்கவோ, அவங்க என்ன செய்வாங்கன்னு கேக்கவோ பாக்கவோ முடிஞ்சதில்லை. நான் இதில் போய் பொய் என்ன சொல்லப்போறேன். ஆனா சில நாள் போதை அதிகமாகி அம்மாவை பொட்டுத் துணி கூட போடாம நிக்க வுட்டுப் பார்த்திருக்கேன். எதுக்குமே கலங்காத அம்மா அப்ப மட்டும் அழுதுக்கிட்டே கதவை சாத்திவிடச் சொல்லும், எங்களைத் திட்டி போய்ப் படுக்கச் சொல்லும், அழ வேண்டாம்னு சொல்லும். ஆனால் அந்த வயசுல முடியாத ஒரு விஷயம் அழாம இருக்கிறது, இன்னிக்கு நான் அழறதே கிடையாது, என்னால அழவே முடியாது, என் அம்மாவை நினைச்சிப்பேன் அந்தக் கஷ்டத்துக்கு முன்னாடி நான் படுறது என்ன கஷ்டம்னு நான் அழுததே இல்லை.
சரி விஷயத்துக்கு வர்றேன், உனக்கு டாக்டர்ஸ் ப்ளேன்னா என்னான்னு தெரியுமா தெரியாது. அது ஒரு குளிர்காலம்னு மட்டும் ஞாபகம் இருக்கும் இன்னும் கூட மழை பெஞ்சிக்கிட்டிருந்திருக்கலாம், நானும் ஜெவும் ஒரு பெட்ஷீட்டிற்குள் படுத்திருந்த ஞாபகம். நான் அப்ப வயசுக்கு வரலை, அவ உடம்பு என் மேல படுற சூடு என்னைத் தவிக்க வச்சது. நான் அவளோட வஜைனாவையும் அவ என்னோட வஜைனாவையும் பார்த்துப்போம், ஊசி போட்டுப்போம். ஊசின்னா ஊசி கிடையாது வெளக்கமாத்து குச்சி ஒன்னை எடுத்துக் குத்துறது. இப்படியெல்லாம் விளையாடியிருக்கோம். ரொம்பக் காலம் என்னை உறுத்தின விஷயம் இது, என் தங்கைய இப்படிச் செய்திட்டனேன்னு, உனக்குத் தெரியுமா தாஸ் இன்னைக்கு நினைச்சா அது கனவா இல்லை நிஜமா நடந்ததான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. ஆனா இதைப்பத்தி நான் அந்த வயசில நிறைய நினைச்சிருக்கேன். அதனால என்னால நிச்சயமா சொல்ல முடியும் கனவில்லைன்னு சொல்ல முடியும். ஆனா இதையெல்லாம் நான் வற்புறுத்தித்தான் ஜெவை செய்ய வச்சேன். இன்னிக்கு நானும் ஜெவும் அல்மோஸ்ட் லெஸ்பியனா இருக்கோம்னா அதுக்கு நான் தான் காரணம்னு எனக்கு மனசு உறுத்திக்கிட்டேயிருக்கு. ஆமாம் தாஸ், நான் உன்கூட ஊட்டிக்கு வர்றதுக்கு முன்னாடி என்னையை ஒரு லெஸ்பியனாத்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.
தமிழ்நாட்டில் கொஞ்சம் அழகா பொறக்கறதில் இருக்கற பிரச்சனை தெரியுமா தாஸ்? அது அத்தனையையும் நான் ஃபேஸ் பண்ணியிருக்கேன், வயசுக்கு வந்த ஒரு மாசத்துல ஒரு பையன் ‘உன் முலை ரொம்ப அருமையா இருக்கு, என் சுன்னியப் பார்க்கறியான்னு’ சொல்லி யாருமில்லாத ரோடொன்றில் ஜட்டியைக் கழட்டி காண்பிச்சான். நான் என்ன செய்திருக்க முடியும்னு நினைக்கிற, உதவாத அப்பன் ஒருத்தனை வைச்சிக்கிட்டு அம்மாகிட்ட சொன்னேன் அம்மாவாலையும் தான் என்ன பண்ணியிருக்க முடியும், மக்கள் நடமாட்டம் இருக்கற வரைக்கும் தான் என் நடமாட்டம்னு முடிவு செய்யறதைத் தவிர. என் கூடப்படிச்ச எனக்கு லவ்லெட்டர் கொடுக்காத பையனுங்களே கிடையாது, என் பின்னாடியே சுத்தறது, ஒரு பையன் பேரைச் சொல்லிக் கூப்பிடுறது இப்படின்னு வீட்டை விட்டு ரோட்டுக்கு வர்றதுன்னாலே பயந்த காலம் இருந்தது. வீட்டை விட்டு வெளியில் வந்தா எந்தப் பையன் என்னைப் பின் தொடர்ந்து வருவான் எவன் லவ்லெட்டர் கொடுப்பான்னு தினம் தினம் பயந்து செத்திருக்கேன். வீட்டுல மட்டும் என்ன வாழ்க்கை அப்பல்லாம் எனக்கு துணையா இருந்தது ஜெ மட்டும் தான், அம்மாவுக்கு அப்பாகிட்ட அடிவாங்கவே நேரம் பத்தாது. எனக்கும் ஜெவுக்கும் ஒரு வருஷம் தான் வயசு வித்தியாசம். நான் அவகிட்ட எல்லாத்தையும் சொல்லுவேன், என்னோட ஆறுதலே அவ மட்டும் தான். சொல்லப்போனா அவளும் எங்கப்பனும் தான் ஒரு வைராக்கியமா என்னை ஜெயிக்க வைத்தது, இந்தப் பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு நாங்க நல்லா படிக்கிறதுதான்னு எங்களுக்கு சின்ன வயசிலேயே தெரிஞ்சிருந்தது. எங்கப்பன் எங்கம்மாவுக்குக் கொடுத்த டார்ச்சரால் நொந்து இருந்த என்னை எப்பவும் ஜெதான் தேத்துவா.
டாக்டர்ஸ் ப்ளேன்னு சின்னவயசில செக்ஸ் பத்திய மனப்பான்மை இல்லாம செய்வதைச் சொல்வாங்க, அதாவது விளையாட்டா ஆண் பெண் உறுப்புக்களைத் தொட்டுப் பார்க்குறது, ஆனால் எங்களுக்கு எது சரி எது தப்புன்னு சொல்லித்தர்ற நிலையில எங்கம்மா இல்லேங்கிறதால, நாங்க அதில் செக்ஸுவல் இன்டன்ஷன்ஸ் கொண்டு வந்துட்டோம் வயசுக்கு வந்ததுக்கு அப்புறம். எனக்கென்னமோ ஆண்களையே பிடிக்காமப் போயிருந்ததால் எனக்கு இதில் சம்மதம் இருந்தது, வயசுக்கு வந்ததுக்கு அப்புறம் ஜெ தான் இதை ஆரம்பிச்சான்னாலும் அதற்கும் நான் தான் காரணம்னு இன்னமும் நினைக்கிறேன். எங்கப்பனோ இல்லை ஜட்டியைக் கழட்டி காண்பிச்சவனோ, எங்கப்பன் கடன் வாங்கிட்டு வரச்சொன்னப்போ மாரைக் கசக்கினவனோ இல்லாமல் நான் என்னையத்தான் இதற்கு காரணம்னு சொல்வேன். நான் சந்தோஷமாதான் இருந்தேன் இருக்கேன், அக்கா தங்கை லெஸ்பியனா இருக்கிறதைப் பத்திய கேள்விகள் எனக்குள்ள உண்டுன்னாலும் நானும் சரி ஜெவும் சரி ஒரு மாதிரி எங்களை இந்த அடலஸண்ட் காதல் கிட்டேர்ந்து இப்படித்தான் காப்பாத்திக்கிட்டோம், எங்களுக்கு நாங்களே ஒரு மாதிரி உதவி செய்திக்கிட்டோம்னு தான் நான் நினைக்கிறேன். ஊட்டி வர்றவரைக்கும் என் வஜைனாவிற்குள் எதையும் நுழைத்துக் கொண்ட நினைவில்லை. எனக்கு நான் லெஸ்பியனாங்கிற டவுட் இருந்துக்கிட்டேதான் இருந்தது, ஆனால் ஜெக்கு அப்படியில்லை. அவள் தான் ஒரு லெஸ்பியன்னு நம்பினாள். என் டவுட் என்னை என் கிளிட்டோரிஸை விட்டு கீழே நகர விடலை, ஜெவுக்கு அதிலும் விருப்பம் இருந்தது. அவள் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் எங்கிருந்தோ ஒரு டில்டோவைக் கூடப் பிடித்துக் கொண்டு வந்திருந்தாள், நான் மறுத்துவிட்டேன். என் உச்சத்தை கிளிட்டை நக்குவதால் மட்டுமே பெற்றுவந்தேன், ஜெவின் கைகளுக்குக் கூட அனுமதியில்லை. நான் என் முதல் உடற்சேர்க்கையின் பொழுது தான் ஹைமன் கிளியும் என்றே நினைத்தேன். அதனால் தான் அத்தனை பிரச்சனையும். சரி அதை விடுங்கள்.
நான் என்னை இப்படி ஒரு லெஸ்பியனாக நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது தான் நமது நட்பு உருவானது, எதனால் உன்னை எனக்கு இவ்வளவு பிடித்திருந்ததுன்னு தெரியாது. Love at first sight கிடையாது நம்முடையதுன்னு உனக்கும் தெரியும், நீ என்னைக் கன்வின்ஸ் செய்து கொண்டேயிருந்தாய் ஆனால் உன்னால் என் பாறைக்குள் நுழைய முடிந்திருந்தது. இஞ்ச் பை இஞ்சா உன்னால் என்னை நகர்த்த முடிந்தது. ஆரம்பத்தில் நான் நகர்ந்தேனான்னு தெரியாது ஆனால் உன்னுடனான சேட்டிங் என்னை நகர்த்தியது. மொத்தமாய் உன்னை நிராகரித்ததிலிருந்து, உன்னுடனான உரையாடல்களுக்கு ஒப்புகொண்டு, என் எல்லைகளுக்குள் நின்று கொண்டு செய்த பெற்ற விளக்கங்கள், எல்லைக்களைக் கடந்து இணையவெளியில் உலவியது, பின்னர் நேர்ப்பேச்சில் எல்லாம் பேச வைத்தது என நான் மாறிக்கொண்டேயிருந்தேன். ஆனால் எனக்கே தெரியாமல் இந்த மாற்றம் என்னிலிருந்த என் செக்ஸுவல் ஓரியன்டேஷனைப் பற்றிய கேள்வியை எழுப்பத் தொடங்கியது. உன்னுடனான பழக்கம் சென்று கொண்டிருந்த பொழுதுகளில் எல்லாம் நானும் ஜெவும் ஒன்றாகயிருந்ததில்லை என்று பொய் சொல்ல நான் விரும்பவில்லை, ஆனால் என் லெஸ்பியன் நம்பிக்கையை மீறியும் என்னால் ஒரு ஆணுடன் உறவு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உன்னால் தான் வந்தது. ஆனால் சாதாரணமாய் வரவில்லை, கடைசி வரை என்னிடம் ஒட்டிக் கொண்டிருந்த ஆண்களின் மீதான வெறுப்பு - என் அப்பனின் காரணமாய் - என்னை உன்னிடம் நெருங்க விடவில்லை. தோற்றுப் போவதன் வலி என்னை முயற்சி செய்ய விடவில்லை. ஆனால் செய்யச் சொன்னது ஜெதான்.
உன்னுடனான என் பழக்கம் ஜெவிற்கு தெரிந்துதானிருந்தது, பிடித்தும் தான். நான் ஜெவிடம் ரொம்பவும் டிபன்டன்ட் ஆக இருந்தேன், அதை அவள் வெறுத்தாள் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படியில்லாமல் இருந்தால் நன்றாகயிருக்குமென்று அவள் நினைத்திருக்கலாம். நான் லெஸ்பியனா என்பதைப் பற்றிய சந்தேகம் எனக்கு இருந்ததும் இருப்பதும் அவளுக்குத் தெரியும், ஒருவேளை நான் உன்னுடன் உறவு கொள்ள முடியாமல் போனால் ஒரு வகையில் என் செக்ஸுவல் ஓரியன்டேஷன் எனக்குத் தெரிய வாய்ப்பிருக்கும் என்று கூட நினைத்திருக்கலாம். நீ அவளுடன் புனே சென்ற பொழுது என்ன செய்தாயோ எனக்குத் தெரியாது, அவளுக்கு உன் மேல் நம்பிக்கை வந்ததும், என்னை உன்னிடம் டெஸ்ட் செய்து கொள்ளும் படியும் அவள், புனே சென்று வந்ததும் தான் சொன்னாள். அவள் சொன்னால் உன் உள்மன அளவிளாவது நீ ஒரு லெஸ்பியனா இல்லையா என்பது தெரிந்து தான் ஆகவேண்டும் என்றும், அதை உறுதி செய்யும் பல வழிகளில் இதுவும் ஒன்றென்றும், அவளுக்கு இது உதவியதுன்னும் சொன்னாள். எல்லாவற்றிற்கும் பிறகும் என்னால் தோல்வியடைவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. நான் காலம் கடத்தினேன் ஆனால் உன் டைரி நீ எவ்வளவு தூரம் என்னைக் காதலிக்கிறாய் என்பதைச் சொன்னது, அதன் ப்ராக்டிகல் தன்மை என்னை உன்னிடம் கொடுக்க இசைந்தது. ஆனாலுமே எனக்கு கடைசி வரை என்னால் ஒரு ஆணுடன் சந்தோஷமாய் இருக்க முடியுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் இருக்க முடிந்தது என்னில் பல மடங்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. எனக்கு நான் உன்னிடம் அன்று முதல் முறையே அப்படி நடந்து கொண்டது - இரண்டாவது ஆர்கஸம் வரவழைக்க நான் செய்த அத்தனையும், முதல் தடவை தான் நீ வாயை வெச்சதும் வந்துடுச்சே - உனக்கு தவறா தெரிஞ்சிடுமோன்னு பயந்தேன். ஆனால் நீ என்னைப் புரிந்துகொண்டதாய் இதுவரைக்கும் நினைக்கிறேன்.
நீ என்னிடம் என் மாஸ்டர்பேஷன் பற்றிக் கேட்டதற்கான பதிலும் இந்தக் கடிதத்தில் இருக்கு. ஆமாம் நான் செய்திருக்கேன், செய்துக்கிட்டிருக்கேன் - நீ நம்ப கல்யாணத்துக்குப் பிறகு என்னை சேட்டிஸ்ஃபை செய்யலைன்னா செய்துப்பேன். கலாச்சாரம் பண்பாடு லெஸ்பியன் ஹோமோசெக்ஸுவல் பத்தியெல்லாம் நீ என்னுடன் சாட்டிங்கில் பேசியதை வைத்து உன்னைப் பற்றிய ஒரு அபிப்ராயம் எனக்கு இருக்கு. ஆனால் அது தவறாகவும் நான் தவறா புரிந்துகொண்டதாகவும் கூட இருக்க முடியும். உன்னை எதற்காக இல்லாட்டாலும் இதை நீ ஊருக்கெல்லாம் சொல்லி என்னை அசிங்கப்படுத்த மாட்ட என்கிற அளவி உன்னை நம்புகிறேன். மற்றதை நீ சொல்லித் தான் தெரிஞ்சிக்கணும். FYI என் அப்பன் செத்துப்போய் ஐஞ்சு வருசம் ஆகுது, நான் காலேஜ் படிக்கிறப்பவே தண்ணியடிச்சி ரோட்டில் அடிபட்டு செத்துப்போய்ட்டான். அம்மா ஊரில் இருக்காங்க நானும் என் தங்கையும் மட்டும் தான் இங்க இருக்கோம். என்னை நீ கல்யாணம் செய்துக்க முடியும்னா என் பக்கத்தில் இருந்து நான் என்ன செய்யணும்னு சொல்லு, இன்னொரு முக்கியமான விஷயம் இந்த லெஸ்பியன் விஷயத்தைத் தவிர்த்து என் தங்கை ரொம்ப நல்லவ, என் உயிரை விட மேலாதான் அவளை நினைச்சிக்கிட்டிருக்கேன் அதனால அவகிட்ட உன்னால மரியாதையா நடந்துக்க முடியாதுன்னா - I mean எப்படி சொல்றதுன்னு தெரியலை உனக்கு எப்படிப் படுதோ அப்படி வைச்சிக்கோ - இப்பவே சொல்லிடு.
என்கிட்ட இதைப்பத்தி நேரிலோ, போனிலோ இல்லை சாட்டிங்கிலோ நீ பேசலாம் எல்லாவற்றுக்கும் தயாரா இருக்கேன்.
அகிலம்.
நான் படித்து முடித்து நிறைய நேரம் இதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.
___________________________________________________________________
இன்னமும் எழுதிக் கொண்டிருக்கும் என் கதையொன்றின் இன்னொரு பக்கம்.
தொடர்புடையது - மலரினும் மெல்லிய காமம்



.jpg)





