சுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில் அவருக்கான இடம் நிரப்பப்படமுடியாதென்றே நினைக்கிறேன், தற்சமயம் சுஜாதாவிற்கான இடம் sweet and short ஆக இருக்கிறது. அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.“நான் கடவுள்” படத்தைப் பற்றி எழுத ஆரம்பித்து பின்னர் விட்டுவிட்டேன், காரணம் தெரியாது அதைப் பற்றி எழுத மேலும் ஒன்றும் இல்லை என்பது மட்டுமே...