In மோகனீயம்

மோகனீயம் - ஐவர்


சிந்துவும் விசுவுடன் வந்தாள், அவன் வெளிக்கிளம்ப தயாராகத் தொடங்கியதும் என்ன? எங்கே? எதற்கு? என்று கேட்டு அவளும் வந்தே தீருவாள் என்று ஏறக்குறைய ஒற்றைக் காலில் நின்றிருந்தாள். சென்னையின் முக்கியமான ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், முன்னமே கூட விசு அங்கே வந்திருக்கிறான் மிகவும் சுமாரன ரெஸ்டாரன்ட், ஆனாலும் அவனுக்கும் மோகனுக்கும் சுலபமாக வரமுடிந்த இடமென்பதால் அங்கே சந்திக்க முடிவெடுத்தார்கள். பெரிய மனது வைத்து விசுவின் அம்மாவின் பீரோவில் இருந்து அவளுக்குப் பிடித்ததாய் ஒரு புடவையைக் கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டு வந்திருந்தாள் சிந்து. விசு அவளின் மனம் மயக்கும் அழகை காலில் மிதித்து அவன் முகத்தில் குறிதேய்த்து உச்சமெய்தி சிறுநீராய்ப்பெய்த சிந்துவை மனதில் நிறுத்திக்கொண்டான். உபயோகமாயிருந்தது. 

நீயும் தவறிலை நின்னைப்புறங்கடைப் 

போதர விட்ட நுமரும் தவறிலர்:

நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்

பறையறைந் தல்லது செல்லற்க என்னா; 

இறையே தவறுடை யான் 

தமிழிலக்கியம் சொல்லும் கைக்கிளை இல்லைதான், அவள் கன்னிதான் காதலுக்கு கூடப் பொருளுள்ளவள் தான் என்றாலும், உமையாள் கலித்தொகை பாடல் கூறியபடி பறையறிவித்து ‘இது ஒரு பைத்தியம் அவளிடம் கவனமாகயிரு’ என்று சொல்லியிருக்க வேண்டும் என்று யோசித்தபடி இருந்த பொழுது மோகனும் அவன் காதலியும் வந்து சேர்ந்திருந்தார்கள்.


“அப்படியே இருக்கடா நீ.” என்று சொல்லி கட்டிக்கொண்டுவிட்டு, “இது அகிலா” என்று சொல்லி மோகன் அவன் காதலியை விசுவிடம் அறிமுகப்படுத்தினான். அவள் கைகளைக் குலுக்கிவிட்டு, “ரொம்ப தேங்க்ஸ்.” அவள் தங்கை புனே வந்திருந்த பொழுது விசுவின் வீட்டில் தான் மோகனும் ஜெயஸ்ரீயும் தங்கியிருந்தனர். அதற்குத்தான் நன்றி சொன்னாள். “மை ப்ளஷர்” என்றவன் அருகில் இருந்த சிந்துவை அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தான். “இது சிந்து, நான் இப்ப தங்கியிருக்கும் ஹவுஸ் ஓனர் வீட்டுப் பெண்” என்றான். சிந்து, அகிலாவை மெல்ல கட்டிப் பிரிந்தவள், “what he means is, we’re not in love and just have sex.” என்றாள் சிரித்தபடியே. நல்லவேளை அத்துடன் நிறுத்தினாளே என்று நினைத்தவனாய் விசுவும் சிரித்துவைத்தான்.  


என்ன நினைத்தாளோ அகிலாவைப் பார்த்து, “you look pretty” என்றாள் சிந்து, அன்று மஞ்சள் நிறத்தில் ஒரு சுடிதார் போட்டு வந்திருந்தாள். நூற்றாண்டுகளுக்கு முன்னர் சோழர் காலத்துச் சிற்பிகள் வடித்த சிலையொன்றைப் போலத்தான் அகிலா இருந்தாள் என்றாலும், சமூகம் ‘pretty’ என்று இயம்பும் விஷயத்தில் சிந்து அளவிற்கு அகிலா வரமாட்டாள், அவளும் அதை உணர்ந்திருக்க வேண்டும். அவள் மனதில் ஒருவேளை அதை அவள் சொல்லியிருக்க வேண்டுமோ? சொல்லாமல்விட்டதனால் சிந்து சொல்லிக்காட்டுகிறாளோ என்கிற சந்தேகம் தோன்றியது, ஆனாலும் அவள் அழகாய் வெட்கப்பட்டபடி, “thanks, you’re too naughty” என்றாள்.  


“Hope you don’t mind, Jsri might join us. She would like to personally thank you!” என்றாள் அகிலா. விசு, “sure, I would love to meet her too, I didn’t do anything special.” சொன்னவன் யோசித்துப் பார்த்ததிலும், அப்படித்தான் தோன்றியது. “I know, those days Mohan didn’t talk to J that much. Thanks for giving her good company.” என்றாள். விசு அப்படி எதையும் கவனித்திருக்கவில்லை என்றாலும், அவர்கள் சாதாரணமாக இருந்ததாகவே அவனுக்குப் பட்டது. 


“How long have you guys been in love?” சிந்து அகிலாவிடம் கேட்க, அவள் “இப்பத்தான் கொஞ்ச வருஷமா…” நிறுத்தியவள் “…நீதான் சொல்லேண்டா, நீ அவன்ட கேளேன் வருஷம் மாதம் நாளு வரைக்கும் சொல்லுவான்.” என்றாள். ஆண்டுக்கணக்கான பின்பும் இன்னமும் அவர்கள் காதலித்துக் கொண்டிருந்தார்கள் என்று சிந்துவிற்கு தோன்றியது. “You’re lucky!” என்றாள். மோகனும் அகிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர், மோகன் வந்ததில் இருந்தே பெரிதும் பேசாமல் இருந்தான். அவர்களின் அலைவரிசையில் இல்லாமல் சிந்து இருந்திருப்பாள் என்று விசு ஊகித்தான். 


“Are you still a virgin?” என்று கேட்டாள் சிந்து, அவளைத் தவிர்த்த அத்தனை பேரிடமும் பதற்றம் ஒரே சீராய்ப் பரவியது. அவளைக் கிள்ளிவிட்டு, “don’t mind her; she just got into her adulthood” என்றான் விசு அவளை முறைத்தபடி. “Sorry, I don't mean to intrude on any personal matters, but I'm not aware of the romantic scene here. Feel free not to answer if it's too personal.” என்றாள் அவளிடம் கொஞ்சம் மன்னிப்பு கேட்கும் தோரணை கூடயிருந்தது, விசுவிற்கு அவள் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் செய்ததாய் பட்டது. ஆனால் அவளுடைய இயல்பும், அவள் அவளுடைய நண்பர்களுடம் அப்படித்தான் இருப்பாள் என்று புரிந்ததால் சீக்கிரம் அவர்களை சிந்துவிடமிருந்து காப்பாற்றி அனுப்பிவிடவேண்டும் என்று தீர்மானித்தான். 


“I wouldn’t reveal this to anyone, dear, but as you said, I’m pretty, I want you to know that I’m not a virgin anymore? But may I ask, why do you want to know?” அகிலாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிந்து அமைதியாக இருந்தாள், மோகனும் விசுவும் இந்த உரையாடலை எப்படி முடித்து அங்கிருந்து சீக்கிரம் கிளம்புவது என்று யோசித்தபடி இருந்தார்கள். அகிலாவிடமும் கூட அவள் சிந்து சொல்லப்போகும் பதிலுக்குக் காத்திருந்ததாய் தோன்றவில்லை. “எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது. இங்க சென்னைல இதெல்லாம் எப்படியிருக்குன்னு கேக்க நினைச்சேன். I’m not anti-virgin, but thats not hip in Delhi” என்றாள். 


“I think you’re generalising a city here, that too as big as New Delhi. ஒரு சமூகமா நாம அங்கத்தான் போகணும்னு நானும் நினைக்கிறேன். ஆனா நீ சென்னையையும், என்னை வைச்சி ஜெனரலைஸ் பண்ணக்கூடாது சிந்து! நான் புலங்கும் சொசைட்டியில் கூட இன்னும் கற்புக்கு ஒரு வேல்யூ இருக்கத்தான் செய்யுது. பசங்க இன்னமும் வெர்ஜின் பொண்ணுங்களை கட்டிக்கத்தான் விரும்புறாங்க. If you dont mind me asking, when did you lose your virginity?” அகிலா கேட்க, அந்தக் கேள்வியால் விசு அடைந்திருக்க வேண்டிய பதட்டம் அடையாமல், அகிலா சிந்துவின் அலைவரிசைக்கு வந்ததையும் அவர்கள் அப்படி ஒரு உரையாடலை தொடர முடிந்ததையும் நினைத்து சமாதானம் அடைந்தான். முன்னர் விசுவிடம் இருந்த பதட்டம் அப்பொழுது மோகனிடம், ஏன் என்பதைப் போல் அகிலாவைப் பார்த்தான். அவர்கள் தான் அறிமுகப்படுத்தினார்கள் என்றாலும் சிந்துவும் அகிலாவும் இவர்கள் ஏன் தங்கள் உரையாடலால் பதட்டமடைகிறார்கள், தங்கள் பேச்சுக்கு இவர்களை குற்றம் சொல்லப்போவதில்லை என்கிற மனநிலைக்கு வந்திருந்தார்கள். 


“I think I was 15 or 14, we’re fooling around. It was not memorable, other than the fact, that I bled. Even I was surprised by it” சிந்து சொன்னதும், அகிலா “I didn’t” என்றாள். மோகன் சிரித்தான் எதையோ நினைத்தபடி, பதற்றத்துடன் தொடங்கிய அந்த மாலை, கொஞ்ச கொஞ்சமாய் உருமாறிக் கொண்டிருந்தது. “Before you ask, it was him.” சொல்லி மோகனைக் காட்டினாள், அவளும் அகிலாவும் மட்டும் உரையாடுவது அவளுக்கு அயற்சியாய் இருந்திருக்கவேண்டும். “Did you prefer virgin girls?” என்று சிந்து மோகனிடம் கேட்டாள். அகிலாவும் அதே கேள்வி இருப்பவளைப் போல் மோகனைத் திரும்பிப் பார்த்தாள். மோகன் “No I didn’t, but I found one and popped the cherry.” என்றான், சிந்துவிற்கு அந்த பதில் திருப்தியளித்ததோ இல்லை, அகிலா எதுவும் சொல்லவில்லை. விசுவிற்குத் தான் மோகன் இப்படிச் சொல்லி எதுவும் அகிலாவிடம் மாட்டிக்கொள்ளப் போகிறான் என்று இருந்தது. போதும் இந்த கற்பொழுக்கம் சார்ந்த கேள்வி என்று நினைத்திருக்கவேண்டும், சிறிது அமைதி. எங்களுக்கான காலத்தை அதுவரை கொடுத்த சிப்பந்தி, வந்து குடிக்க என்ன வேண்டுமென்று கேட்டு எழுதிக்கொண்டு சென்றான். அந்த அமைதியின் வழியில் ‘சிநேகிதனே…’ தூரத்தில் ஒலிப்பது கேட்டது, அப்பொழுதுதான் தொடங்கியிருக்க வேண்டும், அவளை அறியாமலே அகிலா முணுமுணுக்கத் தொடங்கினாள். 


சின்னச்சின்ன அத்துமீறல் புரிவாய்

என் செல்லெல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்

மலர்கையில் மலர்வாய்

பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்

நான் தூங்கும்போது விரல் நகம் களைவாய்

சத்தமின்றித் துயில்வாய்


அவளுக்கு சங்கீதமும் அந்தப் பாடலும் பரிட்சையம் ஆகியிருக்க வேண்டும் என்று விசு நினைத்தான். அவள் தொடரவில்லை நிறுத்தியிருந்தாள், சிந்து தொடங்கினாள்.


தின் பி நா டூபே

ராத் நா ஆயே

ஷாம் கபி நா தலே

ஷாமு தலே தோ

ஷுப் நா ஆயி

ராத் ஹி ராத் சலே…


அவளும் முணுமுணுத்தாள் தான் என்றாலும் அதுவே போதுமானதாக இருந்தது அகிலாவிற்கு சிந்துவின் சங்கீதம் அறிந்துகொள்ளவும், பரவசமடையவும். பாடல் பின்னால் தொடர்ந்தது. விசுவிற்கு அவள் வரலாறும், இசையறிவும் ஏன் அதைத்தாண்டிய பழக்கமும் இருந்ததால் வியப்பாகயில்லை, ஆனால் அகிலாவும் ஏன் மோகனும் கூட ஆச்சர்யப்பட்டார்கள், அவள் குரல்வளத்தில் மயங்கினார்கள்.


“ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் பாடேன், கொஞ்சம் சத்தமாவே கூட” அகிலா உரிமையாய்க் கேட்டாள். அவள் ஒப்புக்கொண்டு பாட முடிவெடுத்ததும், சிநேகிதனே முடிந்து வசீகரா பாடல் தொடங்கியது. “…தமிழ் வெர்ஷன் தெரிஞ்சா தமிழ்லயே பாடேன்” ஏங்கினாள்.


அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்

எங்கேயும் போகாமல்
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்


சிந்துவிற்கு தமிழ்வரிகள் எப்படியோ தெரிந்திருந்தது, அவள் அந்தப் பாடலின் பெரும்பான்மையை விசுவைப் பார்த்தே பாடினாள். அவளே எழுதிப் பாடியது போலிருந்தது. விசுவிற்கும் மெய் சிலிர்த்தது. அகிலாவும் மோகனும் கண்களை மூடிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். விசுவும் அவளைப் பார்த்தபடியே இருந்தான். பாடல் முடிந்தது, அடுத்து விசு என்ன நடக்கும் என்று நினைத்தானோ அதுவே நடந்தது. முன்னர் அதிகப்பிரசங்கியாய் நடந்து கொண்ட ஒரு பதின்மவயதுப் பெண்ணை இனி அவர்களால் பார்க்கவே முடியாது, அவள் சங்கீதம் செய்யும் மாயம் அது. அகிலா எழுந்து சிந்துவின் அருகில் வந்து கட்டிக்கொண்டாள். விசு சென்று மோகனின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான், ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ பாட்டு தொடங்கி ஒலிக்கத் தொடங்கியது, அவர்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை. சிப்பந்தி கேட்டிருந்த பானங்களை கொண்டுவந்து கிடத்தினான். 


“எப்படிம்மா இப்படிப் பாடுற, ஜெ கொஞ்சம் கத்துக்கிட்டா அவளுக்குப் பாடவரும். ஆனா இந்த அளவுக்கு வராது. நீ பாட்டு பாட ஆரம்பிச்சா அப்படியே சங்கீதமாய்டுற, எவ்வளவு வருஷமா கத்துக்குற? பாடுற…” அகிலாவால் அந்த வியப்பை அடக்கமுடிந்திருக்கவில்லை, அந்தப் பாட்டு முடிந்திருந்த வேளையில் ஜெயஸ்ரீயும் வந்து சேர்ந்தாள். அவர்கள் நால்வருக்கும் சங்கீதமாய் மாறிவிடும் சிந்துவா இல்லை விடலை சிந்துவா யார் ஜெயஸ்ரீ முன் தோன்றுவாள் என்பதைப் பற்றிய கேள்வியிருந்தது. 


“இது ஜெயஸ்ரீ, என் தங்கெ. நீங்க முன்னமே கூட பார்த்திருப்பீங்க…” என்று அகிலா அறிமுகப்படுத்தினாள். ஜெயஸ்ரீ வந்து விசுவின் கைகளைக் குலுக்கினாள். “தொல்லை பண்ணிட்டனா தெரியாது, நீங்களெல்லாம் ப்ரண்ட்ஸாய் மீட் செய்றீங்க. தேங்க்ஸ் சொல்றேன்னு சொல்லிப் படுத்துறேன்னு நினைக்கிறேன்” என்றாள். “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஜெ, உன்னைத் திரும்ப பார்க்க முடிஞ்சதுக்கு சந்தோஷம். அப்புறம் இது சிந்து. என் ஹவுஸ் ஓனர் வீட்டுப் பெண்.” சொல்லி முடித்திருக்க மாட்டான், சிந்து கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் கிளிப்பிள்ளை போல், “what he means is, we’re not in love and just have sex.” ஒப்பித்தாள். “Congrats, thats the best there is, isn’t it?” சிந்துவிடம் கேட்டாள். “True that, but the problem is I’m in love with him and he’s not…” தொடர்ந்தவள் “…leave it, our relationship is much more complicated than that.” ஏக்கத்துடன் முடித்தாள். விசு “போதும்” என்றான். அவன் சொல்லியிருக்காவிட்டாளும் அவள் தொடர்ந்திருக்கமாட்டாள் என்றே மற்றவர்கள் நினைத்தனர், ஆனால் இப்படிப்பட்ட தன்னை விரும்பும் பெண்ணொருத்தியை விசு ஏன் காதலிக்கவில்லை என்ற கேள்வி அவர்களுக்குள் இயல்பாகவே எழுந்தது.  


இருட்டு கொஞ்சமாய் அங்கே வெளிச்சத்தை வெல்லத் தொடங்கியிருந்தது. திட்டமிட்டு அந்த உணவகம் ஏற்படுத்தியிருந்த வெளிச்சத்திற்கான ஏற்பாடு அவர்களுக்கு அப்பொழுது தேவையாகயிருந்து. சிந்து சிறிதுநேரம் எதுவும் பேசாமல் அங்கே அலங்காரத்திற்காக மாட்டி வைத்திருந்த ஓவியத்தை பார்த்தவண்ணம் இருந்தாள். அகிலாவும் ஜெயஸ்ரீயும் ஒருவரையொருவர் பார்த்தபடியும் பின்னர் சிந்து ஏன் மௌனமானாள் என்று அவளும் பார்த்தபடியிருந்தார்கள், சிந்து அதை உணர்ந்திருக்கவேண்டும் ஆனாலும் ஓவியத்தில் இருந்து இன்னமும் கண் எடுக்காமல் இருந்தாள். அகிலாவிற்கு சிந்து இன்னும் கொஞ்சம் பாடலாமே என்றிருந்தது, ஜெயஸ்ரீக்காகவாவது கேட்கலாமா என்று கூட யோசித்தாள், ஆனால் அப்பொழுது அவளுக்கு சிந்து ஒரு செலிப்ரட்டியாய் உருமாறியிருந்ததால் வெட்கம் அவளை கேட்கவிடாமல் செய்திருந்தது. அவள் மனம் முழுவதும் ஜெயஸ்ரீயும் சிந்துவும் சேர்ந்து பாடினால், கேட்க எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று தோன்றியபடியிருந்தது. 


சிந்து ஜெயஸ்ரீயிடம், “ஆமாம் நீங்க யாரையும் லவ் பண்ணலையா” என்று கேட்டாள். 


“Not in a conventional sense, Sindhu. I don’t fit into your traditional boundaries.”  சொல்லி முடித்திருக்கமாட்டாள். 


“ஆஹ், நீங்க லெஸ்பியனா? லவ்லி” என்றவள் அவளருகில் வந்து கட்டியணைத்துக் கொண்டாள். தொடர்ந்து, “Even though I’m not, I have experimented it. And I’m pretty sure, my mom too had experimented it.” என்று சொல்லி விசுவைப் பார்த்தவள்,  “I think I consider myself a bisexual.” சொல்லிமுடித்தாள். இத்தனையையும் அவள் ஜெயஸ்ரீ இன்னமுமே கூட சொல்லியிராத அந்த வரிகளில் இருந்தே பிடித்திருந்தாள் என்பது ஜெயஸ்ரீக்கு மட்டுமல்ல மோகனுக்கும் அகிலாவிற்கும் வியப்பையளித்தது. விசு இவளை என்ன செய்வது என்பதைப் போல் தலையிலடித்துக் கொண்டான். எங்கிருந்தோ வந்திருந்த உற்சாகம் பீடித்தவளாய், “I’ve so many questions to ask you!” என்றவளுக்கு பதிலாய் சுவாரசியமற்றதாய் முகத்தை வைத்துக்கொண்டு ஜெயஸ்ரீ, “Please dont” மன்றாடினாள், அதில் ஒரு விளையாட்டுத்தனம் இருந்தது. பதிலுக்கு சிந்துவும் “ச்சச்ச, நீங்க நான் கேப்பேன்னு நினைக்கிற கேள்வியை கேக்க மாட்டேன்.” சொல்லிச் சிரித்தாள். இப்பொழுது அகிலா, “போதும்.” என்றாள். 


உணவு முடியும்வரை கொஞ்சம் மௌனம் தூரத்தில் கேட்ட இசையுடன் கூடிய மௌனம். வாயேன்டா என் வீட்டுக்கு...என்று மோகன் அழைக்க தவிர்க்கப் பல காரணம் சொல்லிப் பார்த்தான். சிந்துவாவது எப்படியாவது ஒத்துழைத்தால் அவளைக் காரணம் சொல்லி தப்பிக்க நினைத்தான். ஆனால் சிந்துவிற்கு சட்டென்று ஜெயஸ்ரீயைப் பிடித்துப் போனது, அவளுக்கு டெல்லியில் ஒரு சிநேகிதக்கூட்டம் இருந்தது, அவர்களின் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே விசு இருந்தான். ஜெயஸ்ரீ சிந்துவைவிடவும் முதிர்ச்சியானவளாகத்தான் இருந்தாள் என்றாலும், சிந்துவின் துள்ளிக்குதிக்கும் மனது எப்பொழுது நழுவி உமையாள் கதையை மோகன்-அகிலா-ஜெயஸ்ரீக்கு சொல்வாள் என்று தெரியாமல் தவித்தான். அவனைச் சீண்டுவது போல் நெருங்கினாலும் உமையாள் விஷயத்தை மட்டும் அவள் திறந்துகாட்டாதது மகிழ்ச்சியாகவே இருந்தது விசுவிற்கு. தவிர்க்கமுடியாமல் மோகன் இருக்கும் வீட்டிற்கு வந்தான், கூடவே சிந்துவும், அப்படியே ஜெயஸ்ரீயும். அகிலா அப்பொழுது மோகனுடன் தான் இருந்தாள்.

 

அவனுக்கு அப்பொழுதுதான் குரங்கிலிருந்து சிந்துவை மனுஷனாக்கும் ஒரு உத்தி தெரிந்துவிட்டிருந்தது - இசை. இசையில் ஒருமுகமாக இருக்கும் பொழுது அவள் வால் கொஞ்சம் கட்டுக்குள் இருந்தது. எதைச் சொல்லியாவது அவளை பாட்டுபாட வைத்துவிட்டால் அந்த இரவை ஓட்டிவிடலாம் என்று உத்தேசித்திருந்தான். கொஞ்சம் அலங்கரிக்கப்பட்ட வீடு, மோகன் வரைந்த ஓவியங்கள் வீடு முழுவதும் இருந்தது. வந்ததில் இருந்து சிந்து அந்த ஓவியங்களில் கவனத்தை செலுத்தி வந்தாள். மோகனும்-அகிலாவும் ‘சின்னதா ஒரு ஸ்வீட் செய்துவருகிறோம்’ என்று சொல்லி ரவாகேசரி செய்ய கிச்சனுக்குள் சென்றதில் இருந்து ஜெயஸ்ரீ மட்டும்தான் விசுவுடன் இருந்தாள். “இன்ட்ரஸ்டிங் கேரக்டர்.” என்றாள், அதற்கு ஆமோதிப்பதை போல் தலையை மட்டும் ஆட்டினான, சிந்து பற்றிய தலைப்பிலிருந்து எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்பது உத்தேசமாகயிருந்திருக்க வேண்டும். “Can I take her out tomorrow to show some Chennai?” கேட்டாள், “please be my guest!” என்றான். 

 

கொஞ்சம் அடல்ட் வகை ஓவியங்கள், அப்ஸ்ட்ராக்ட் நியூட். கேசரி வந்த பொழுதுதான் மீண்டு வந்தாள் சிந்து.

 

“இதெல்லாம் நீங்க வரைஞ்சதா?” என்றாள். அவள் அடுத்த கேள்வி எதையும் சேர்த்துக் கேட்டுவிடப்போகிறாள் என்று பதறிய மோகன், “ஆமாம் சிந்து, ஆனால் எனக்கு போலச் செய்யத்தான் தெரியும். இது அத்தனைக்கும் ஒரு சோர்ஸ் ஒரிஜினல் பெயின்டிங் இருக்கு!” என்றான். “அதுக்கும் ஒரு திறமை வேண்டும்தான, ரொம்ப அழகாயிருக்கு உங்களுக்கு ஓவியம் நல்லா வருது.” என்று பாராட்டினாள். அகிலாவும் ஜெயஸ்ரீயும் சிரித்துக்கொண்டார்கள் அவர்களுக்கான ஜோக்-காக இருக்கும் என்று விசு நினைத்தான். “கதை. கவிதை, ஓவியம் எல்லாமே பண்ணுவான் சிந்து.” என்றாள் அகிலா. “உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச சினிமா எதுன்னு சொல்லுங்க” சிந்து மோகனிடம் கேட்டாள், அவன் அமேரோஸ் பெர்ரோஸ்என்றான். இன்னாரித்துவின் படங்கள் விசுவிற்கும் பிடிக்கும், அப்பொழுதுதான் வெளிவந்திருந்த பாபெல் படம் கூட பார்த்திருந்தேன். வோங்கர்வாயின் ‘In the mood for Love’ படம்தான் தனக்கு ரொம்பப் பிடித்தப்படம் என்று சிந்து சொன்னாள். “காதல் படங்கள் கொஞ்சம் அலர்ஜி.” என்றவன்  ‘In the realm of senses’ படம் தான் தனக்கு மிகவும் பிடித்தப் படம் என்றான், அவர்கள் நால்வரில் ஒருவருக்கும் அப்படி ஒரு படம் வந்ததே கூட தெரிந்திருக்கவில்லை. அகிலாதான் “படம்னு இல்ல எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா Pride and Prejudice, BBC version தான்.” விசு அந்த சீரிஸைப் பார்த்திருந்தேன், எதுவும் சொந்தவாழ்க்கையோடு சம்மந்தப்பட்டதாக இருக்கும் என்று நினைத்து வேறு எதுவும் கமென்ட் செய்யவில்லை, கடைசியில் ஃபிட்ஸ்வில்லியம் டார்ஸி, அவன் வீட்டருகில் இருக்கும் ஒரு ஏரியில் குளித்துவிட்டுவரும் பொழுது அங்கு திட்டமிடாமல் அவன் பார்க்கும் எலிஸபெத் பென்னட் உடன் நடக்கும் உரையாடல் அவனுக்கும் பிடித்தமானதுதான். ஜெயஸ்ரீ ‘Baise Moi’ என்றாள். அந்தப்படம் பற்றி சிந்துவிற்குத் தெரிந்திருந்தது. அது கொஞ்சம் இன்டலக்சுவல் போட்டியாக மாறிக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது. அதுவரை பொறுமையாக இருந்தவள், சட்டென்று, “சீரிஸ் என்றால் எனக்கு டெக்ஸ்டர் தான்.” அவர்கள் எல்லோரும் அந்த சீரிஸ் பார்த்திருந்தோம், சிந்து சொன்னாள், “I think I could easily kill a person and successfully hide it.” என்று. விசுவிற்கு அவள் அடுத்து, எங்க நாமெல்லாம் சேர்ந்து ஒரு கொலை செய்வோமா என்று கேட்காமல் விட்டாளே என்றிருந்தது. மோகன், “எனக்கு எப்பவும் என்னால் ஒரு கொலையை துப்புத் துலக்கி கண்டுபிடிச்சிட முடியும்னு தோணும். எங்க தொழிலில் debugging என்று சொல்வோம், ஒரு பிரச்சனைய அதோட ஆழம் வரைக்கும் சென்று சரிசெய்வது. அதுக்கும் ஒரு கொலையை கண்டுபிடிக்கிறதுக்கும் வித்தியாசம் இல்லைன்னு தோணும். ஐடியில் வேலை பார்க்கலைன்னா போய் போலீஸில் சேர்ந்திருக்கலாம்னும் இல்ல டிடெக்டிவ்வா ஆய்டணும்னு எப்பவும் தோணிக்கிட்டே இருக்கும்.” என்றான். எல்லாருக்கும் அது கொஞ்சம் ஆசுவாசமாய்ப் பட்டது. சிந்துவும் அதை ஒரு எதிர்க்கருத்தாக இல்லாமல் அவனுடைய ஆசையை சொன்னதாக சரியாகவே எடுத்துக்கொண்டது கொஞ்சம் ஆச்சர்யமாகக்கூட இருந்தது. விச, “கேசரி ரொம்ப நல்லா இருக்குங்க அகிலா. எங்கம்மா செஞ்சது போலவேயிருந்தது.” என்று சொல்லி பேச்சை மாற்றவும், நன்றிகளைச் சொல்லவும் முயன்றான். சிந்துவும், “ஆமாம் அகிலா எங்க அம்மா செய்யற மாதிரியே இருக்கு, எப்படி இவ்வளவு சீக்கிரம், இவ்வளவு ருசியா செஞ்சிங்களோ தெரியலை.” என்றாள். கொஞ்சம் தயங்கித்தான் சிந்த உமையாளைத் தேவையில்லாமல் இழுக்கிறாளோ என்று பார்த்தான் விசு, அவள் விகல்ப்பமில்லாமல் தான் சொல்லியிருந்தாள்.

 

அகிலா, “உண்மையிலேயே சொல்றேன்னா, நீ எனக்கு நன்றியை வேறவிதமா கூட சொல்லலாம்...” என்று இழுத்தாள். சிந்து என்னவென்று ஜாடையிலேயே கேட்டாள். “எதாவது ஒரு பாட்டு பாடேன். நீ ரெஸ்டாரன்டில் பாடினது காதுலயே நிக்கிது.” என்றாள். “நீங்க இப்ப இல்ல எப்ப எனக்கு கேசரி செஞ்சிக்கொடுத்தாலும் பாடுறேன். சரி என்ன பாட்டு” என்று கேட்டாள்.


“பூங்காற்றிலே பாட்டு தெரிஞ்சா பாடேன்.” 


“பாடறேன், லிரிக்ஸ் தப்பா பாடினா எதுவும் நினைச்சிக்காதீங்க.” என்றாள். 


காற்றின் அலை வரிசை கேட்கின்றதா, கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும், கண்ணீர் வழிகின்றதா, நெஞ்சு நனைகின்றதா, இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா, காற்றில் கண்ணீரை ஏற்றி, கவிதைச் செந்தேனை ஊற்றி, கண்ணே உன் வாசல் சேர்த்தேன், ஓ என் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா!


எப்பொழுதையும் போல் அவள் விசுவைப் பார்த்தபடிதான் பாடினாள், அவன் கூச்சப்படுவது இயல்பாகவே தெரிந்தது. சிந்து ஒரு நாடகம் விசுவைப் பார்த்து நடத்திக் கொண்டிருந்தாள், அகிலா-மோகன்-ஜெயஸ்ரீ மத்தியிலும் ஒரு நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. அகிலாவையே பார்த்துக் கொண்டிருந்த ஜெயஸ்ரீ அறையின் சூழலை மனதில் கொண்டு சிந்து நோக்கி கவனத்தை திருப்பினாள். அதுவரை பதின்மத்தின் இறுதியில் இருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்த அவளுக்கு சங்கீதமாய் அங்கே அவர்களுக்கு மத்தியில் உட்கார்ந்து ‘என் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா!” என்று உருகிக்கொண்டிருந்த சிந்துவை குறிஞ்சிப் பூவைப் பார்ப்பதைப் போல் பார்த்தாள், பின்னர் அகிலா பக்கம் திரும்பி ‘சொல்லவேயில்லை’ என்பது போன்ற பாவனை செய்தாள்.  நீங்க லெஸ்பியனா என்று கேட்டப் பெண்ணிற்கும் அப்பொழுது இசைந்து கொண்டிருக்கும் பெண்ணிற்குமான வித்தியாசம் ஜெயஸ்ரீக்கு நம்பமுடியாததாய் இருந்தது. ‘உயிரை வேரோடு கிள்ளி, என்னைச் செந்தீயில் தள்ளி, எங்கே சென்றாயோ கள்ளி’ மோகனும்-அகிலாவும் கண்களில் நீர்கசிய கேட்டுக் கொண்டிருந்தனர். ஜெயஸ்ரீ சிந்துவின் கண்களும் விசுவின் கண்களும் உரசிச்சென்றபடி இருந்ததை கவனித்தாள், விசு சிந்துவின் கண்களைத் தவிர்ப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது அவளால். பாடல் முடிந்த பொழுது மோகன்-அகிலா-விசு அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருந்தார்கள், கொஞ்சம் நிலையில் இருந்தது ஜெயஸ்ரீ மட்டும்தான். அந்தப்பாடலை அகிலா தனக்காகத்தான் கேட்டிருப்பாள் என்று ஊகித்ததால் இசையில் முழுவதுமாய் அவளால் மூழ்கியிருக்கமுடியவில்லை. மௌனம். பொறுப்பு இப்பொழுது தனது தலையில் முழுவதுமாய் இருந்ததை உணர்ந்தவளாய், “சிந்து என்னயிது, இப்படிப் பண்ணிட்ட. என்னால நம்பவே முடியலை. சினிமாக்களில் தான் நான் இப்படியாரும் பாடிக் கேட்டிருக்கிறேன், பின்னணி இசையே இல்லாமல் உன்னால எப்படி இப்படிப் பாடமுடியுது.” வியந்தாள். “You had so many questions to ask me right? I will answer everyone of them. எனக்காக ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ பாடேன்” என்றாள். மற்ற மூவரும் இன்னும் தன்னிலைக்குத் திரும்பவில்லை, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை தவிர்த்தார்கள். 


…கண்களை வருடும் தேனிசையில், என் காலம் கவலை மறந்திருப்பேன், இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான், என்றோ என்றோ இறந்திருப்பேன்…

…எந்தன் சோகம் தீர்வதற்கு, இதுபோல் மருந்து பெரிதில்லையே, அந்தக் குழலைப்போல் அழுவதற்கு, அத்தனை கண்கள் எனக்கில்லையே…


சிந்து மறுக்காமல் பாடினாள், இப்பொழுது ஜெயஸ்ரீ கண் பனிக்க. அவர்கள் யாரும் எதுவும் பேசவில்லை, அங்கே பேசுவதற்கு எதுவும் இல்லாமல் சங்கீதம் மடைதிறந்து நதியலை போய் பாய்ந்து சென்றிருந்தது. அவர்கள் அமைதி சிந்துவிற்கு புதிதானது இல்லை, உமையாள் பாடச்சொல்லி அவள் இந்திப்பாடல் பாடி இதுபோன்ற சிநேகிதக்கூட்டங்களை மௌனத்தில் உறையச் செய்திருக்கிறாள். விசு அவள் பார்வையைத் தவிர்ப்பது பார்த்து கொஞ்சம் உற்சாகம் பீடித்தவளாய். ‘Churaliya hai’ ஆரம்பித்தாள். விசுவைத் தவிர்த்த மூவரும், தாங்கள் நால்வரும் அமைதியாக இருப்பதால் சிந்து அவளுக்குப் பிடித்தப் பாடலை பாடுகிறாளாயிருக்கும் என்று நினைத்தார்கள். அந்தப்பாடல் விசுவிற்கானது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, விசு அவளிடம் வேண்டாமே என்பது போல் கெஞ்சினான், அது அவனுக்குள் உமையாளையும் சிந்துவையும் குழப்பிப் போட்டு தொல்லை செய்யும் என்று நினைத்தவனாய். மோகன் ஏக்கமாய் சிந்துவைப் பார்த்தைப் புரிந்து கொண்டவளாய், ‘சொல்லுங்க மோகன் நான் பாடுறேன்’ என்றாள் அவன் ஒரு குழந்தை போல் குதூகளித்தவனாய். ‘நெஞ்சமெல்லாம் காதல்.’ பாடேன் என்று கேட்டான். சிந்து சிரித்தபடி, ‘காதல் அகிலா மேலன்னா பாடுறேன்.’ சொல்லி வம்பு செய்தவள். அகிலா மோகனைக் கிள்ளியதும் பாடினாள். பூங்காற்றிலேவைப் போலவோ எவனோ ஒருவனைப் போலவோ இல்லாமல் ஒரு சந்தோஷக்கீற்று பற்றிக்கொள்ளும் பாடல் என்பதால் எல்லோரும் பாடல் முடிந்த பொழுது தரையில் உட்கார்ந்தார்கள். 

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts