சிறு வயதிலேயே தோன்றிய ஆசை இப்பொழுது தான் நிறைவேறியிருக்கிறது. அது தமிழில் ஒரு வளைத்தலம் அமைக்க வேண்டுமென்பது. பல முறைகளiல் முயன்று இப்பொழுது யூனிகோடு முறையில் என் ஆசை நிறைவேறுகிறது.
பாரதியின் பாடல் வரிகளுடன் தொடங்குகிறேன்,
தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
பாரதியை நினைக்கும் பொழுதே மனதில் வீரம் பொங்கும், அதிலும் மிகக் குறிப்பாக இந்த பாடல் வரிகள். எழுதும் பொழுது அவருக்கு என்ன நிலைமையோ தெரியாது. சமயங்கள் பலவற்றில் நான் எனக்கே சொல்லிக்கொள்ளும் வரிகள் இவைகள். மனதிற்குள் ஒரு நம்பிக்கை வரும். பாரதியின் பல பாடல்கள் என் நிலைமையை உணர்த்தியிருக்கின்றன. அதில் ஒன்று இந்த பாடல் மற்றொன்று, இந்த வரிகள்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை
பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
மோகன்தாஸ் என்ற நான்
பூனைக்குட்டி
Sunday, August 14, 2005
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
ஆரம்பக்காலத்தில் நான் மரத்தடியில் சேர்ந்த சமயங்களில் இந்த ராயர் காப்பி கிளப் குழுமத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். நல்லவேளை சேராமல் ப...
-
"இதற்குத்தானே", "இதற்குத்தானே" என்று இரண்டு நாட்களாக மனம் அலைபாய்கிறது, காரணம் உண்டு. பாலகுமாரன் "இதற்குத்தானே ஆசைப...
-
இரண்டாவது அமர்வில் முகுந்த் பேசியவற்றில் சிலவற்றை வீடியோ எடுத்திருந்தேன். மதிய நேரம், அறையில் அவ்வளவாக வெளிச்சம் இல்லாததாலும் முகுந்த் பேசிய...
0 comments:
Post a Comment