In

மலரினும் மெல்லிய காமம்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

புணர்ச்சிமகிழ்தல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்


சட்டென்று விழுந்துவிடும் வார்த்தை வெளிப்பட்டுவிடக்கூடாதென்பதற்கா கட்டப்பட்டிருக்கும் அதற்கான கயிற்றிலிருந்து எப்படி அறுபட்டுக்கொண்டு வந்துவிடுகிறது என்று ஆச்சர்யமாகயிருந்தது. வார்த்தைகளுக்கு உயிர் இருந்துவிட்டால் சாதாரணமாய் நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும் தவறிவிழுந்துவிட்டதாய் பிரயாசைப்பட்டு நிரூபிக்கத்துடிக்கும் மனதிற்கு வார்த்தையின் கட்டை லேசாய் அவிழ்த்துவிட்டிருந்தது தெரிந்தே இருக்கிறது. ஆனால் அது ஒரு அபூர்வமான காரியம்எல்லா சமயங்களிலும் மனதிற்கு சுயத்தை இழக்கும் சக்தி வந்துவிடுவதில்லை அதிலும் விழப்போகும் வார்த்தை தோல்வியை மட்டுமே கொடுக்கும் என்று நிச்சயமாய்த் தெரிந்த பின்னரும் கட்டவிழுத்துவிடமனதிற்கு முடிவதில்லை. எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வெளிப்படுவதால் தான் விழுந்துவிட்ட அந்த வார்த்தை எதிராளியை சீண்டி துன்புறுத்துகிறது என்று நினைத்தேன். விழுவதற்குத்தான் நேரம் காலம் அமைய வேண்டியிருக்கிறதே தவிர உருவாவதற்கு இல்லைசட்டென்று உருவாகும் எண்ணம் வெகு சுலபமாய் தனக்கான வார்த்தைகளை சேகரித்துக் கொண்டு மனதில் கருக்கொள்கிறது பின்னர் காலம்வார்த்தைகளின் வெவ்வேறான சேர்க்கைகளில் கூடி உச்சமடைந்து தனக்கான சொற்றொடரைஉருவாக்கிவிட்டு அமைதியாகிவிடுகிறதுமனம் வார்த்தைகளைக் கட்டியிருக்கும் கயிற்றை மெல்லியதாய் அவிழ்க்க ஒற்றை வார்த்தையிலோவார்த்தைச் சேர்க்கையிலோ உருவான எண்ணத்தை கொட்டிக் கவிழ்த்துவிட்டு அடங்கிப் போய்விடுகிறது.

"
உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?"உரையாடல்கள்காதலின் உன்னதமான போதை. காதலிக்கத் தொடங்கிய பின் மனம் உரையாடல்களாகத் தான் சிந்திக்கத் தொடங்குகிறது. நடந்து முடிந்ததாய்கொண்டிருப்பதாய்,போவதாய் உரையாடல்களின் நிஜம்நிகழ்கனவிலேயே காதல் தன்னை வளர்த்துக் கொள்கிறது. நேற்றைய உரையாடல்களின் மீது படுத்துக் கொண்டு நாளைய உரையாடல்களைக் கற்பனை செய்கிறது மனம்தொடர்ச்சியாய் கற்பனையில் உருப்போட்டுக் கொண்டேயிருப்பதால் உரையாடல்களில் புதிதான விஷயம் உண்மையில் நடப்பதில்லை. நேரடியான கருத்தாய் இல்லாமல் தான் உருவாக்க நினைக்கும்விவாதிக்க நினைக்கும் விஷயத்தை உரையாடலில் செம்புலப்பெயல்நீராய் கலக்கிறது மனம். அகிலாவுடனான உரையாடலில் அந்தக் கேள்வி வரவேண்டும் வரும் என்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளுடனும் சென்றாலும்கேள்விஉண்மையின் வீரியத்தில்நடிப்பின் சாகத்தை நகர்த்திப் பார்க்கிறது.

"
ஆமாம்"



March 1, 2008

2:34 PM me: 
இன்னிக்கு பீச்சிற்குப் போலாமா?
aeswari: 
ம்ஹூம் வேண்டாம்
me: 
ஏன்?
2:36 PM 
ஏன்னு கேட்டேன்?
2:45 PM 
உனக்கு என்னையெல்லாம் காதலிக்கிறதே பெரிசின்னு நினைப்பு
இல்லையா?
aeswari: 
உன்னைக் காதலிக்கிறேன்னு எப்ப சொன்னேன்!
நீதான் அப்படி சொல்லிக்கிட்டிருக்கிற
2:50 PM r u thr?
2:52 PM ???
2:56 PM Okay I am leaving bye
காதல் உயிரை அலைக்கழிக்கும் ரகசியம் தெரிந்தும் திரும்பவும் விழுவதும் எழுவதுமாய் எத்தனையோ முறை பெண்களின் மீதான மையலில் நிலை தடுமாறியிருந்தால் பித்தம் கொள்ள வைத்தது நீ மட்டும் தான். ஒற்றை ரோஜாப்பூவை கைகளில் ஏந்திக் கொள்வதில் வரும் பெருமையாய் நினைத்து காதல் விளையாடிருக்கிறேன்பெருமைக்கான தகுதியை பெற்றுத்தருவது காதலின் வேலையில்லை என்று உணரவைத்தவள் நீ. கைகோர்த்து கடற்கரையில் நடப்பதோமுதுகோடு மார் உரசும் பயணங்களோ காதல் இல்லை என்ற உன் தத்துவங்கள் கேட்கும் பொழுதும்நீ அருகில் இல்லாமல் இருக்கும் பொழுதும் நன்றாகத்தான் இருக்கின்றன. உள்ளத்தின் மேல் மட்டும் காதல் என்பது கட்டமைக்கப்பட்ட பொய்யாகத்தான் இருக்கமுடியும் என்று ஒப்புக்கொள்ளும் உன்னால்உன் உடல் மேல் எனக்கிருப்பது காமம் அல்ல அதுவும் காதலே என்று ஏன் புரியவில்லை.

March 3, 2008

4.11 PM raja: hi
me: hi dude :)
raja: 
நான் அகிலம்
4:13 PM me: 
சொல்லு
raja: call me
me: 
சரி
 
 “சொல்லு என்ன விஷயம்
எங்களுக்கிடையில் அப்படியொரு உரையாடல் நடக்கவேயில்லாதது போல் அவளால் பேசமுடிந்திருந்தது, “என் தங்கச்சிக்கு புனேல ஒரு இன்டர்வியூ இருக்கு! யாராவதுகூட்டிக்கிட்டுப்போகணும்
ஏன் சுத்தி வளைக்குற நேரா என்னைக் கூட்டிக்கிட்டு போகச்சொல்லேன்கனத்த மௌனம் ஒற்றை வார்த்தையில் முடிந்தது சரி” தொலைபேசியை அணைத்தேன்.

March 12, 2008

10:15 AM aeswari: thanks
me: 
சரி
11:36 AM aeswari: un status message kEvalamaa irukku!
me: 
அப்படியா?
aeswari: illaiyaa
me: 
மாத்தணுங்கிறியா?
aeswari: athu un ishtam
11.40 AM me: //
நெஞ்சமெல்லாம் காதல் - தேகம் எல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை - நேசிப்பாயா//
இது எப்படியிருக்கு?
11.45 AM me: 
இருக்கியா?
aeswari: hmm
innikku freeya irukkiyaa?
me: 
இருக்கேன் என்ன விஷயம்
aeswari: oru vishayam pesanum
me: 
வரவா?
aeswari: hmm
4.30 PM me: 
கிளம்பிக்கிட்டிருக்கேன்
4.32 PM aeswari: hmm

உன்னைவிட்டு இரண்டடி விலகியிருக்கும் சமயங்களில் ஏன் நடிக்கிற இயல்பாய் இரேன்!’ என்றாய் இயல்பை இயல்பாய் இருக்கமுடியாமல் தான் விலகியிருந்தேன் என்பது உனக்குத் தெரியாததா! வேண்டுமென்றே சாலையோர சுடிதாரை கவனிக்கும் உச்சுக்கொட்டும் ஜொள்ளுவடிக்கும் என் சீண்டல்களைப் பொருட்படுத்தாமல் விலகியிருக்க முடிந்திருக்கிறது உன்னால்கவனிக்காதது போலவே கண்டுகொள்ளாதது போலவோ இருந்துவிடும் உனக்கு நான் முந்தைய இரவு ஒத்திகை பார்த்தஉரையாடல்கள் கனவோடு கரைந்து போவது தெரிந்திருக்கப் போவதில்லை.

முத தடவை நான் உன்கிட்ட காதல் சொன்னப்ப எப்படியிருந்தது


எங்களுக்கிடையில் அமர்ந்திருந்த மௌனத்தை விரட்டும் ஆயுதமாய் கேள்வியொன்றைப் பொறுத்தி எய்த அம்பு அவளை அவ்வளவு சீண்டியதாகத் தெரியவில்லை. என் கேள்விக்கான அவள் பதிலைப் பற்றிய கற்பனைகளைச் சிதைத்து இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கவே கூடாது என்று நினைக்க வைக்கும் அளவிற்கு பதில் இருந்தது.

கோபமா வந்ததுச்சுகால்ல போட்டிருக்கிறதைக் கழட்டி ஒன்னு வைக்கணும்னு நினைச்சேன்இதைச் சொல்லத்தான் அத்தனை யோசித்தாயாஇல்லை இப்படி நீ போடும் நாடகங்களை நான் நம்பிவிடுவதாய் நினைக்கிறாயா?

அப்ப நீ என்னைக் காதலிக்கவே இல்லேங்கிறியா?”எனக்காக இல்லாவிட்டாலும் அவள் தங்கையை பத்திரமாய் புனே அழைத்துச் சென்று வந்ததால்நன்றிக்கடனாய் கடற்கரையில் என் அருகில் அமர்ந்திருந்தாள். அருகில் என்றால் நானாய் உருவாக்கிய இரண்டடி தாண்டி சுண்டல்காரன் இடைபுகுந்து கூவிச் செல்லும் தொலைவில்.

இல்லை

அப்ப நமக்குள்ள இப்ப நடக்கிறதுஇதற்கு அவளுடன் சாட்டிங்கில் உரையாடிவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு மௌனம் அவள் மேல் பரவியிருந்தது. வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கலாம்கொட்டுவதற்கான அமிலத்தை அவளது உதடுகள் உருவாக்கிக் கொண்டிருக்கலாம்அங்கிருந்து விலகினால் வீட்டிற்குச் செல்ல எந்த பேருந்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்...

நீ கன்ஸிடரேஷனில் இருக்கேங்கிறது தான் அதுக்கு அர்த்தம்.” அவள் அன்று வேதாளத்தை மட்டுமல்லதன்னுடைய தேவதையையும் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். நான் வேதாளத்தை கழட்டிவிடவில்லையே?

இன்னும் எத்தனை பேர் இருக்காங்க உன் கன்ஸிடரேஷனில்...?” தேவையில்லாததுதான்தவிர்த்திருக்கக் கூடியது தான்ஆனால் எங்கள் உறவில் முகமூடி ஒன்று என் முகத்தில் மாட்டப்பட்டு விடக்கூடாதென்பதில் நான் மிகவும் தெளிவாகயிருந்தேன். அவளை அத்தனை பாதிக்கவில்லை என் கேள்வி,

நீ டைரி எழுதுவதானே?”

பேச்சை மாற்ற விரும்பினாளா தெரியாதுஎன் கேள்வி அவளுக்கு அயர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.

சாரி!

அது பரவாயில்லை சொல்லு...?”

ஏன் கேக்குற?” என் பதில் கேள்விக்கு அவள் பதில் சொல்லப்போவதில்லை என்பதாய் அவள்நான் அவளிடம் கேள்வியொன்றையே கேட்காதது போல் உட்கார்ந்திருந்தாள். “எழுதுவேன்

எனக்கு உன் டைரி வேணும். எல்லா வருஷ டைரியும் இருந்தா கொடு இல்லாட்டி கடைசி மூணு வருஷ டைரி வேணும்.என்ன தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாய்என்னிடம் நேரடியாய் கிடைக்காமல் அப்படியென்ன உனக்கு என் டைரியில் கிடைத்துவிடப் போகிறது.

எதுக்கு?”

உன்னைக் காதலிக்க” அத்தனை இனிப்பான ஒன்றை இத்தனை கசப்புணர்ச்சியுடன் சொல்ல எங்கேபடித்தாய், I love you இந்த மூன்று வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று எத்தனையோ நாள் நினைத்திருக்கிறேன் ஆனால் இன்று உன்னைவிடவும் உன் வாய் உச்சரிக்கப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்கும் உன் கை தட்டப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகமாய் இருக்கிறது என்பது எனக்கே கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்.

10.10.2007

அன்புள்ள டைரி

அகிலாவை வழியில் வைத்துப் பார்த்தேன்நல்லவேளை திருப்பிக்கொண்டு போகாமல் நின்று பேசினாள் ஹாஹா.

அவளும் அவளோட ட்ரெஸ்ஸிங் சென்ஸும் லூஸா ஒரு சுடிதார் போட்டுக்கொண்டால் அவள் உடலைப்பற்றிய உணர்வில்லாமல் போய்விடுமா?சுடிதாரைத்தாண்டியும் அவள் உடலை உணர்ந்து கொண்டிருந்தேன்டைட் ஜீன்ஸும் டீஷர்ட்டும் அவளுக்கு எவ்வளவு பொறுத்தமாக இருக்கும் என்ற கற்பனையுடன். ஹாஹா.

March 15, 2008 

மாலை என் அலுவலக கஃப்டேரியாவில்

என்ன இது” முகத்தில் வீசியெறிந்த டைரி பக்கத்தை இன்னொருமுறை படித்துப் பார்த்துவிட்டு.

ஒட்டுமொத்த டைரியில் உனக்கு இதுதான் தெரிஞ்சிதா?” மெல்லக் கேட்டேன்.
மௌனம்பேரர் கொண்டு வந்து வைத்த ஜூஸ் முழுவதையும் நான் குடித்து முடிக்கும் வரை மௌனம். அவளுடைய வார்த்தைகளை விட மௌனம் என்னை அலைக்கழிக்கக்கூடியது அவளுக்கும் அது தெரிந்து தானிருக்கும்.

எனக்கு பயமாய் இருக்குஎன் உடம்பு மேல இருக்கிற க்ரேஸ் போனதுக்கு அப்புறம் நீ என்ன செய்வேன்னு நினைச்சா... இன்னிக்கு என் மேல் இருக்கிற க்ரேஸ் எல்லாம் நான் மறைச்சுவைச்சிருக்கிறதால - அப்படி நீ நினைக்கிறதால - நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஹாய் பாய்னு பழகியிருந்தா என்கிட்டயும் மையல்’ தான் இருந்துச்சு ‘பித்தம்’ இல்லன்னு நீ போய்டுவ வேற ஒருத்திய பார்த்துக்கிட்டு இல்லையா?”ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இத்தனை பாடுபடுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை அவளுடைய மௌனத்தை நான் எடுத்துக் கொண்டேன்,

என் உடம்பு மேல உனக்கு இப்ப இருக்கிற க்ரேஸை என்னால் வாழ்நாள் முழுக்க காப்பாத்திக்க முடியாது. அது யாராலையும் முடியும்னு நினைக்கலை.” எத்தனை நாட்களாய் இந்த விஷயத்தை மனதில் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை.

என் தங்கச்சி கூடயிருந்தப்பையும் நீ இப்படித்தானே நினைச்சிருப்ப?” சாந்தமாய் கேட்டாள்.

அகிலா இது ஓவர்நீ பேசுறது அநாகரிகமாயிருக்கு.

ஆமாவா இல்லையா சொல்லு?”

இல்லைஇப்ப என்ன தான்டி உன் பிரச்சனைடைரியிலேர்ந்து ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு வந்து ஏன் என்னை டார்ச்சர் பண்ணுற. மீதி பக்கமெல்லாம் உன் மனசைப் பத்திகவலைப்பட்டிருக்கேங்கிறதாலையாஇல்லை இந்த ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு என்னால் டைரியை உன்கிட்ட கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” நாங்கள் இருப்பது காஃபிடேரியா என்ற உணர்வில் மெதுவாய்க் கத்தினேன்.

உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?” வைரமுத்துவின் வரிகளை உணரும்பொழுது இருந்த துள்ளல் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது இல்லை.

ஆமாம்” நான் சொல்லி முடித்திருக்கவில்லை அதுவரை குடிக்கப்படாமல் இருந்த அவள் பக்கத்து ஜூஸ் முழுவதும் என்மேல் ஊற்றிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.

இந்தப்
 பதிலை நான் சொல்லியிருப்பதற்கான காரணங்கள் உண்மையில் கண்டுபிடிக்கப்படமுடியாததாய் இருந்தது. ஆயிரம் முறை அரங்கேற்றிப் பார்த்த வார்த்தைகள் காணாமல் போயிருந்த சமயம் எங்கிருந்தோ இந்த வார்த்தை அதன் உண்மைக்கான உறுதியில் கட்டவிழ்க்கப்பட்ட குதிரையாய் தடைகளைத்தாண்டி கடைசியில் வென்று நின்ற பொழுது விழுந்த அந்தச் சொல் தரும் அர்த்தம் விளங்கிக் கொள்ள முடிந்தது. வெறும் உண்மை ஒப்பனையில்லாத நடிகையைப் போல நம்பமுடியாததாயும் ஒப்புக்கொள்ள முடியாததாயும் இருக்கும். மேலே இரண்டு வார்த்தைகள் கீழேஇரண்டு வார்த்தைகள் நடுவில் கொஞ்சம் பொய் கலந்து வந்திருந்தால் அந்த 'ஆமாம்எனக்கு நல்லதொரு பொழுதை பரிசளித்திருக்களாம். ஆனால் மொட்டையாக வந்து குதித்த உண்மை,அதற்கான வீர்யத்துடன் வெளிப்பட்டு அகிலாவை சட்டென்று சீண்டியிருந்தது. வார்த்தையின் அர்த்தத்தை விடவும் அது சொல்லப்பட்டுவிட்டது தான் அகிலாவிற்கு கோபத்தை வரவழைத்திருக்கவேண்டும் என்று நினைத்தேன். மூன்று வருட பழக்கத்தில் முகமூடிகளுக்கான தேவை அருகியிருந்தாலும்வார்த்தைகளுக்கான முகமூடி நிராகரிக்க முடியாததாய் இருந்தது. அவளுக்கும் அதுஆச்சர்யமானதாகத்தான் இருந்திருக்க முடியும் எல்லைகளுக்குள்ளான வார்த்தைச் சீண்டல்களை நான் புறக்கணித்ததுகணித் திரையில் காண்பதற்கும் நேரில் கேட்பதற்குமான வித்தியாசம் தான் என் மீது ஜூஸாகக் கவிழ்ந்திருந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவள் கரம் பிடித்து காற்றாடியதில்லை
போட்டியொன்றின் பூரணமாய் முத்தம் பரிமாறியதில்லை
உருவாக்கிக் கலைக்கும் பிம்பம் கடந்து வேறு பேசியதில்லை
ஆனாலும் நாங்கள் காதலித்தோம்
முகமூடிகள் இளகின நாளொன்றில்
காமம் சொல்லியதால் மீண்டும் காதல் யாசிக்கிறேன்
காமம் மறந்த / மறைத்த காதல்
தரமுடியாத சோகம் அவள்
கொட்டிக்கவிழ்த்து வைத்த 'ஜூஸ் டம்ளரில்'
பிரதிபலிக்கிறது
யாசித்தலின் குரூரம் இல்லாமையை
உரத்துச் சொல்ல மூக்கின் வழி
ஒழுகும் 'ஜூஸின்துளியை
இருத்தலியத்தை ருசித்தபடி
சுவைத்துப் பார்க்கிறேன்.


கணிணி உரையாடலின் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தை நேரில் பார்த்துக் கொண்டிருக்காத பொழுதுகிடைக்கும் தருணம் அவகாசம் மற்றதில் இல்லையாகையால் அவளால் முடிந்த எதிர்ப்பு.
அவள் நகர்ந்து சென்ற நிமிடத்தில் என்னைச் சுற்றி நின்றவர்கள் பார்த்தப் பார்வையில் நான் மிதக்கத் தொடங்கினேன்காதல் எப்பொழுதும் தரையிறங்க அனுமதிப்பதில்லை என்றாலும் எங்களுடையது இன்னமும் காதலாக பரிணாமம் அடையாமல் குரங்கிலேயே நின்று கொண்டிருந்தது. பொது இடங்களில் தனக்காய் கட்டமைத்துக் கொண்ட எல்லைகளுடன் அவள்தனி இடங்களில் எங்கள் சந்திப்பு நடந்ததேயில்லைஅவளுக்காய் இல்லாவிட்டாலும் என் கொள்கைகளுக்காய் அவள் கட்டமைத்துக் கொண்டிருந்த எல்லைக்கு வெளியில் இருந்தே சண்டை செய்து வந்த நான். என் சீண்டல்கள் இணையத்தில் எல்லை மீறத் தொடங்கியிருந்ததும் அப்பொழுது தான்சுவருடன் பேசவும் உரையாடவும் கிண்டல் செய்யவும் எல்லை மீறவும் நான் இன்னமும் கற்றுக் கொள்ளாததால் ஒரு பக்கம் மட்டும் வேகமாக வீசி வீசி சோர்வடைந்த பொழுதுகளில் இது நிச்சயமாய் வேறானது. சுவரொன்று ஆப்பிள் ஜூஸை தலையில் கவிழ்ப்பதுஉணர்ச்சிகளற்ற சுவரு என்பது கூட தவறான உவமை தான்,உணர்ச்சிகளை கட்டுப்படுத்தத் தெரிந்த சுவர். தன் சுவற்றில் இருந்து வெளிப்பட்டு அவள் சுயம் எட்டிப்பார்த்த பொழுது அதுஎன் வெற்றியைக் கொண்டாட இன்னொரு ஆப்பிள் ஜூஸ் கேட்க தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தான் ஹோட்டல் சிப்பந்திக்கு என் சந்தோஷம் புரிந்திருக்க நியாயமில்லைதான்.
நாங்கள் ஒரே அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து ஏற்பட்ட பழக்கம் காதலாகி நான் காதல் சொல்ல ஏற்கவும் மறுக்கவும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த முதல் வருடத்திலேயே அவளைப் பற்றிய என் புரிதல்களுக்கு கை கால் முளைக்கத் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கான அவள் பதில் அறிவு சம்மந்தப்பட்டதாக இல்லாமல் மனது சம்மந்தப்பட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும் அவள் என்னை ஏமாற்றவில்லை. தான் செய்யப்போவது என்னவென்று அவள் அறிந்திருந்தாள் நிச்சயம் அதைச் செய்திருக்க மாட்டாள் தான்கோபத்தை வெளிப்படுத்துவது தோல்விக்குச் சமானம் தான் எப்பொழுதுமே! அவளுக்கும் அது தெரிந்துதானிருந்தது. அந்தச் சீண்டலை அவள் கண்டு கொள்ளாமல் போயிருந்தால் நான் தோற்றுத்தான் போயிருப்பேன்பெரும்பாலும் அது அப்படித்தான் நடக்கும். அன்று அவளை வென்று விட்டதாக நான் நினைத்ததற்கும் அதுதான் காரணம். இன்னமுமே கூட அவள் என் மீது ஆப்பிள் ஜூஸ் ஊற்றியது எனக்கு உதவும் என்றே நினைத்தேன்.


அன்றிரவு அவளிடம் இருந்து செல்லிடைபேசியில் அழைப்பு வந்ததுநான் காலையில் இருந்து அதை அணைத்து வைத்திருந்தது அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது.

"
ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்."


நான் பதில் சொல்லவில்லை.

"என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க மோகன்காலையில் அப்படி நடந்துக்கிட்டது என் தப்பு தான், Sorry. என்கிட்டேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியலைமனசு விட்டுப் பேசணும்னா?மனசுக்குள்ளே இருக்கிறதை எல்லாம் வெளிய கொட்டிடணும்னா என்னால அது முடியும்னு தோணலை. உங்களை காதலிக்கலைன்னு சொல்லலை அதே மாதிரி காதலிக்கிறேன்னும் சொல்ல முடியலை சொல்லப்போனா காதல்னா என்னான்னே ஒரே குழப்பமாயிருக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளைப்பத்தி நினைக்கிறப்ப.

நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நான் பயப்படலைன்னு சொல்ல முடியாதுஅந்த பயம் எனக்கு இருக்கத்தான் செய்யுது. போனா இத்தோட போகட்டுமேன்னு தான் நான் இப்படியிருக்கிறதா கூட சிலசமயம் நினைச்சிருக்கேன்போய்ட்டீங்கன்னா அப்படியே துடைச்செறிஞ்சிட்டு போய்ட முடியும்னு இப்ப தோணலைன்னாலும் இது தேவலைன்னு நினைக்கத்தோணுது. இந்த பயம் போகாம என்னால காதலிக்க முடியாதுன்னே நினைக்கிறேன்ஆனால் விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நினைக்கிறதுக்கு என்கிட்ட எந்த ரீஸனும் கிடையாது. நான் ரொம்ப குழப்பமாயிருக்கேன்.


சில சமயம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறதா நினைச்சி பேசாம எதையாவது சொல்லி உங்களை என்ன வெறுக்குற மாதிரி செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். மூணு வருஷம் கழிச்சி இதெல்லாம் ரொம்ப ட்ரமேட்டிக்கா இருக்கும்னும் நீங்க நம்பமாட்டீங்கன்னும் தெரியிறதால என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்க கேக்குற மாதிரி என் கேர்ள் ப்ரண்ட்ங்க கிட்ட பழகிற மாதிரி என்னால் உங்கக்கிட்ட பழக முடியலைஎங்கையோ ஒரு இடத்தில் என்னத்தையோ நான் மிஸ் பண்ணுறேன். என்னான்னு தான் தெரியலை.


சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம்என்ன உங்களுக்கு என் உடம்பப் பார்க்கணும் ஆசை தீர அனுபவிக்கணும் அவ்வளவுதானே போய்த் தொலையுதுன்னு அதைச் செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனால் கடைசியில் நீங்களும் இவ்வளவு தானான்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதே சமயத்தில் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் இதில் விருப்பம் இருக்கு எனக்கு இல்லவேயில்லை சாமியார் நானுன்னு ஃப்ரூப் பண்ண நினைக்கிறனான்னு சந்தேகமாவும் இருக்கு.எனக்கு செக்ஸ் ஃபீலிங் இல்லாம இல்லஎனக்கும் அதைப் பற்றி கனவு கற்பனை கவிதை எல்லாம் இருக்கு சொல்லப்போனா பாட்டுக் கூட இருக்கு உங்கள மாதிரி..."
சிரித்தாள் நான் எதுவும் சொல்லவில்லை.

"...
ஆனா சீக்கிரமே ஒரு முடிவு எடுக்கணும்னு இன்னிக்கு காலைல தான் நினைச்சேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்கஒன்னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி தொறந்து காண்பிச்சிட்டு போய்ட்றதுன்னு இருக்கேன். ஆறுமாசம் ஒரு வருஷம் காதலிக்கிறவங்க எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன்மூணு வருஷமா உங்களைக் காதலிச்சும் காயப்போட்டேங்கிறப்ப எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. மூணு வருஷம் பொறுத்தியே இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ பொறுத்திட்டா நான் முழுசா உனக்குத்தானேன்னு தான் சொல்லத் தோணுது. ஆனா அது என்ன ஃபார்மாலிட்டி தாலி கட்டுறது கூட படுத்துக்கிறதுக்கு லைசன்ஸான்னும் தோணுது. மூணு வருஷம் காதலிச்ச உங்களை விட தாலி பெரிய விஷயமா படலை எனக்கு.
என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியலைஇப்படி என்னைத் தடுமாற வைச்சு என்னை உபயோகிச்சிக்கப் பார்க்கிறீங்களான்னும் சில சமயம் தோணுது. என்ன எழவோ நான் எதுக்கும் தயாராய்ட்டேன்,உங்களுக்கு விருப்பம்னா நாளைக்கே கூட நீங்க என்னை எடுத்துக்கலாம். இப்ப எதுவும் பேசாதீங்க எதார்ந்திருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க. நான் எதுக்கும் தயார். நான் போனை வைக்கிறேன்."


சிரிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் முயன்றாலும் முடியாமல் சிரித்துவிட எதிர்ப்பக்கத்தில் அவள் போனைத் துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.


எல்லாம் ஒரு கடிதத்தில் முடிந்து போயிருந்தது அவள் தொலைபேசிய மறுநாள் இந்தக் கடிதத்தைஅவளுக்கு அனுப்பியிருந்தேன். எங்கள் ஊடல் பின்னர் உணரப்பட்டு புணர்தலால் காமமான அந்நிகழ்ச்சிக்கு அடையாளமாய் இந்தக் கடிதம் மீந்து நின்றது.


அன்புள்ள அகிலாவிற்கு,


நேற்றைக்கு நீ பேசிய பொழுது என்னன்னமோ பேசிய பொழுது பதில் சொல்ல என்னிடம் எதுவுமில்லை,நீ பதில் பேசாதே என்பதால் மட்டும் நான் பேசாமலிருக்கவில்லை.


காமக் கொடூரனாய் நான் உன்னிடம் நடந்து கொண்டேனா தெரியாதுகாதலாயும் யாசித்தலாயும் வந்திருந்தாலும் கேட்டதென்னமோ காமம் என்ற வகையில் உன்னைக் காயப்படுத்தி விட்டதாயே நினைக்கிறேன். அதற்காகவே வருத்தமும் படுகிறேன். உன்னிடம் இந்த மூன்று வருடங்களில் நான்உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற எண்ணத்தைக் கூட வரவழைக்கவில்லை என்பதிலும் வருத்தமே!


அந்த அளவிற்கு கூட நம்பிக்கை வராத பொழுது நீ என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு முற்றிலும் சம்மதமே. இந்த அளவிற்கு கூட நான் நம்பிக்கை வைக்காத ஆட்களிடம் பழகுவதில்லை என்பதும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.


கடைசியாய் என்னன்னமோ சொன்னாய் 'வேணும்னா நாளைக்கே எடுத்துக்கோஅப்படின்னெல்லாம். கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.
வருகிறேன்

காதலுடன்
அன்புடன்
மோகன்தாஸ்
அகிலாவும் ஜெயஸ்ரீயும் வந்ததில் இருந்தே சிரித்துக் கொண்டு குசு குசு என்று ரகசியம் என்னமோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தாலும் நேற்று ஜெயஸ்ரீயிடம் அடித்த கூத்தால் என்னால் அவளிடம் முகம் கொடுத்தே பார்க்க முடியவில்லை. ஜெயஸ்ரீஅகிலாவிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுதும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துக் கொண்டிருந்தாள். அகிலாவிற்கு ஆப்பிள் ஜூஸும் எனக்கும் ஜெயஸ்ரீக்கும் கோல்ட் காப்பியும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம்.
நான் நேரடியாய் அவளிடம் "ஜெயா சாரிநான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது! மன்னிச்சிக்கோ." சொன்னதும் தான் தாமதம்.

"
அது பரவாயில்லை இன்னிக்குப் பொழச்சிப்போங்கஇன்னொரு நாள் வைச்சிக்கிறேன் அதுக்கு. எப்ப ட்ரீட்?". அந்தப் பிரச்சனையை அதற்கு மேல் அவள் இழுக்க விரும்பவில்லை என்பது எனக்கு தெரிந்துதான் இருந்தது.

"
எதுக்கு ட்ரீட்." எதற்கென்று தெரிந்தாலும் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்கக் கேட்டேன்.

"
உங்களுக்குத் தெரியாதா?" இந்த முறை அகிலா குறுக்கே வந்து அவளைக் கிள்ளினாள்.

"
ஏன் நீ தான் சொல்லேன்" அகிலா இந்தப் பிரச்சனையில் வருவதும் வெட்கப்பட்டு நிற்பதும் என்னை இன்னும் குஷியாக்க நான் அவளையும் சேர்த்து வம்பிழுக்க ஜெயஸ்ரீயிடம் கேட்டேன்.

"defloration" 
பெரிய ஆள் தான் அழகான வார்த்தையைக்க் கொண்டுவந்து திணித்தாள். அகிலா ஜெயஸ்ரீயை முறைக்க நான் மெதுவாய் அகிலாவிடம், "அப்படியா?" என்று கேட்க அப்பொழுது தான் வந்துசேர்ந்திருந்த ஆப்பிள் ஜூஸை என் தலையில் கவிழ்த்துவிட்டு போயேவிட்டாள். இருள் கவிழத் தொடங்கியிருந்த நேரம் ஜீஸ் கடையில் பெரிய கூட்டமில்லைநான் வழியும் ஜூஸுடன் சிரித்துக் கொண்டிருந்தேன்.

ஜெயஸ்ரீ, "ஆனாலும் இப்படியா கேப்பாங்க. லூஸுங்கிறது சரியாத்தான் இருக்கு!"


நகர்ந்துவிடுவதற்கான எல்லைகள்
இல்லாமல் போன பொழுதொன்றில்
அவளுடனனான முயக்கம்
வற்புறுத்தலுக்கு வெளியே நான்
ஒப்புக்கொள்ளவே முடியாததாயிருக்கிறது
சாத்தியங்களற்றுப்போய் இசைந்தாளென்பதை
சொல்கேளா ஆச்சர்யமளித்த
நினைத்ததும் துளிர்க்கும் ஆண்மை
காமம் தீண்ட மறுத்த
நிர்வாணத்தில் உறங்கும் பெண்மை
அள்ளித் தெளிக்கும் பதிலளிக்க விரும்பாத கேள்விகள்

"
கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்." என்று நான் அகிலாவிற்கு அவள் காதலின் நீட்சியாய் பார்க்காத காமத்தையும் வலிந்து மறுப்பது போன்றிருக்கும் செயற்கைத்தன்மையையும் விவரித்து கடிதம் எழுதி அனுப்பிய நான்காவது நாள் அவள் அதைப்பற்றி நிறைய யோசித்ததாகவும் தனக்கும் சம்மதம் என்று சொல்லி எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தாள்.


நாங்கள் ஊட்டி செல்லத் தீர்மானித்தோம்என் பள்ளி இறுதி வரை அங்கே தான் படித்தேன் என்பதாலும் பெங்களூரில் இருந்து இரண்டு நாள் ஊர் சுற்ற சென்று வருவதற்கான இடங்களில் முக்கியமான ஒன்று என்பதாலும். புதிதாய் வாங்கியிருந்த ஹுண்டாய் கெட்ஸிலேயே சென்று வரலாம் என்ற என் திட்டதற்கு மறுப்பொன்றும் சொல்லவில்லைஅவள் முகத்தில் என் ஓட்டுநர் திறமையைப் பற்றிய சந்தேகம் இருந்தது மட்டும் பிரகாசமாய் தெரிந்தது. அவள் என்னுடன் வெளியில் இதுவரை வந்ததேயில்லை என்ற எண்ணம் என் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டது. திட்டமிட்டது போலவே ஆறுமணிக்கு அல்சூர் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தாள்பேருந்து நிலையத்தில் இருந்து அவள் வீடு கூப்பிடு தூரம் தான். ஷோல்டர் பேக் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்நான் பயந்தது எங்கே சென்று பின்சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று தான்நான் எதிர்பார்த்தது போலவே காரை நெருங்கியவள் பின் சீட்டைத் திறந்ததும் நான் கொஞ்சம் போல் அதிர்ந்து தான் போனேன். ஆனால் அவள் தன் பையை மட்டும் அங்கே வைத்துவிட்டு முன் சீட்டில் வந்தமர்ந்தாள்அவள் உதட்டில் புன்னகை அரும்பியிருந்தது.

"
ஒரு நிமிஷத்தில் உன் மூஞ்சி என்ன கோணத்துக்கெல்லாம் போகுதுஇப்பல்லாம் நீ என்னநினைக்கிறேன்னு என்னால் சுலபமா கண்டுபிடிக்க முடியுது! தெரியுமா?"எனக்கு அவள் குஷி மூடில் இருந்ததே மகிழ்ச்சியளித்தது. என்ன தான் அவள் என் ஏற்பாட்டிற்கும் ஆசைக்கும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவள் சந்தோஷமாய் இல்லாமல் என்னவோ போல் இருந்தால் மற்ற ப்ளானைத் தள்ளிப் போட்டு விட்டு சும்மா ஊர் மட்டும் சுற்றிவிட்டு வரலாம் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை அதற்கான அவசியம் இருக்காது போலிருந்தது.

"
இப்ப என்ன தெரிஞ்சிக்கிட்ட?"


பெரும்பாலும் இது போன்ற கேள்விகளுக்கு அகிலா பதில் சொல்ல மாட்டாள். நான் அவள் பின்சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று பயந்தது அவளுக்குத் தெரிந்திருக்கும்.

"
ம்ம்ம் உன் மொகரைக்கட்டை!"


என் மனம் துள்ளிக் குதிக்கத் தொடங்கியதுஅவளுக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். சட்டென்று தலையில் தட்டி,

"
ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டு! என்னா?" என்றாள்.


அவள் என்னைத் தொட்டுப் பேச மாட்டாள்மூன்றாண்டுகளில் நான் சில முறை தொட்டுப்பேசியிருப்பேன்வெகுசில சமயம் கைகளை பிடித்துக் கொண்டு விளையாடியிருப்பேன். ஆனால் சுவரிலிருந்து நீண்ட இன்னொரு குட்டிச் சுவர் போல் உணர்ச்சியற்றதாய் அவள் கைகள் இருக்கும் அப்பொழுதுகளில். அவள் தலையில் தட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்ததும் என் கண்கள் தானாய் அவள் மார்பு பக்கம் திரும்பியது. நான் பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லைஅதுவும் அகிலாவிடத்தில் கொஞ்சம் இதைப்பற்றிய ஜாக்கிரதை உணர்வுடனேயே இருப்பேன். பெரும்பாலும் அட்டிட்டியூட் காண்பிக்கும் பெண்களிடம் கொஞ்சம் சீரியஸாய் வம்பிழுக்க அவர்களுக்குத் தெரியும்படி மார்புகளை வெறிப்பேன் சிறிது நேரம். ஆனால் அகிலாவிடம் அதுவரை செய்ததில்லைஅதாவது அவளுக்கு தெரியும் வகையிலோ அல்லது அவள் உணர்ந்து கொள்ளும் வகையிலோ அவள் மார் பகுதியை நோட்டம்விட்டதில்லைஆனால் அவளுக்குத் தெரியாமல் செய்திருக்கிறேன். இப்பொழுது அவளாய்ச் சீண்ட செய்திருந்தேன்.
அகிலா கைகள் நீட்டி நான் லாவகமாக இருக்கட்டும் என்று அணிந்து வந்திருந்த பெர்முடாஸால் மறைக்கப்படாத என் தொடைப் பகுதியில் கிள்ளினாள். அவளுடைய வலது கை விரல்களில் பராமரிக்கப்பட்ட நகங்கள் இருந்ததால்உண்மையிலேயே வலித்தது. நான் "அம்மா" என்று கத்தினேன்தொடர்ச்சியாய்.

"
நீ செஞ்சது தப்புஅப்படிப் பார்ப்பது அநாகரீகமாயிருக்கு! எந்தப் பொண்ணு கிட்டையும் அப்படி நடந்துக்கக்கூடாது" கொஞ்சம் சீரியஸாகவே சொன்னாள்.

"
நான் சரிங்க மேடம்" என்று சொன்னதும் சகஜ நிலைக்கு வந்தவள். நான் அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்களிலிருந்து என் பார்வை மார்பகத்திற்கு நீளத் தொடங்குவதும் பின்னர் நான் பெரு முயற்சி செய்து கட்டுப் படுத்துவதையும் பார்த்துசப்தமாய் சிரித்தாள்.

"
எத்தனை நாளுக்கு இதைச் செய்யப்போற நீஇன்னும் இரண்டு நாளைக்குஅப்புறம் 'சீ'ன்னு சொல்லி விடப்போற! எனக்கென்ன?" என்றவாறு மறுபக்கம் பார்க்கத் தொடங்கினாள். எனக்கென்னமோ பார்த்துத் தொலை என்று சொல்லிவிட்டது போலிருந்தது. அவள் எப்பொழுதும் அணியும் கொஞ்சம் தொல தொலா சுகிதார் அல்ல அன்று அவள் அணிந்திருந்ததுப்ரேசியர் அதன் மேல் டாப்ஸ் ஒன்று அணிந்து மேல் அவள் சுகிதார் அணிவது தான் வழக்கம் இன்றும் அப்படித்தான் என்றாலும் இறுக்கமான சுகிதார் அவள் மார்பகங்களை இன்னும் எடுப்பாய்க் காட்டியது. கல்லூரிக் காலத்தில் இருந்தே பெண்களின் மார்புகளை நோட்டம் விடுவது தான் வேலை என்றாகியிருந்ததால்அகிலாவினுடையவை சராசரிக்கும் குறைவானவை என்று என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். சுகிதார் அவள் அளவில் இல்லையென்பதால் தோள்பட்டையில் அவள் பிராவினுடையதும் டாப்ஸினுடையதுமாய் இரண்டு வெவ்வேறு வகையான உப்பல்களுடன் கண்களைத் துருத்துக் கொண்டிருந்தது.

"
இந்த சுடி நீ போட்டு நான் பார்த்ததில்லையே! புதுசா?' சட்டென்று கேட்ட கேள்வியால் திரும்பியவள்,

"
என்னைய நீ அவ்வளவு நோட் பண்ணுவியாஆமாம் இது என் தங்கச்சியோடது! அவள் தான் கொடுத்தாள் போட்டுக்கோன்னு. ஏன் நல்லாயில்லையா?" இன்பத்தேன் வந்து காதில் பாய்ந்தது போலிருந்துஅவள் உடுத்தும் உடையைப் பற்றிக் கேட்டால் சொல்ல ஆயிரமாயிரம் உரையாடல்களைத் தயார் செய்து வைத்திருந்தேன்ஒன்றும் உதவவில்லை.

"
ச்சசூப்பராயிருக்கு. நீதான் என் டைரி படிச்சியே! எனக்கு நீ பண்ணுற ட்ரெஸ்ஸிங்க் சுத்தமா பிடிக்காது. இந்த ட்ரெஸ்ஸில் நீ ரொம்ப அழகாயிருக்க!" என் கண்கள் தானாய் அவள் கண்களில் இருந்து டைவ் அடித்தது. இந்த முறை அவள் ஒன்றும் சொல்லவில்லைமுகத்தை திருப்பிக் கொள்ளவில்லை. ரசித்தாள். அவள் அழகை நான் ரசிப்பதை ரசித்தாள்.
நாங்கள் பெங்களூரை விட்டு வெளியில் வந்திருந்தோம்இனி மைசூர் போய் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டால் போதும் என்று நினைத்தேன். என்றைக்கும் இல்லா அதிசயமாய் ரோடு கொஞ்சம் ட்ராஃபிக்கா இருந்தது அதிகாலையிலேயே. நான் அகிலாவிடம்,

"
அகிம்மா உனக்கு தூக்கம் வந்தா தூங்கு என்ன!" என்றேன்

"
சரி" என்றவள் தூங்கப்போவதில்லை போலத்தான் இருந்ததுரொம்ப தீவிரமாய் இரண்டுபக்கங்களையும் வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள். நான் எனக்குத் தெரிந்த கடக்கும் ஊரைப்பற்றிய விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவளும் எதுவும் தெரியவேண்டுமென்றால் கேட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் மைசூர் வந்து காலை உணவு முடித்த பிறகு குண்டல்பேட் வழியாக ஊட்டி செல்லும் பாதையை எடுத்தேன். கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய சாலையாகையால்விளையாட்டுத்தனங்களை விடுத்து பக்கத்தில் அமர்ந்திருக்கும் தேவதையை மறந்து கவனமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன் அகிலா தூங்கவேயில்லைஅவள் கண் அசந்து கூட நான் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு கொஞ்சம் டயர்டாக தோன்றத் தொடங்கியதுபெரும்பாலும் நண்பர்களுடன் செல்லும் பொழுது சிறிது நேரம் கழித்து யாரிடமாவது ஸ்டேரிங்கைக் கொடுத்துவிட்டு தூங்கப் போய்விடுவதுண்டு. பெங்களூரில் இருந்து ஊட்டி வரை இதுதான் முதல் முறை தனி ஆளாய் ஓட்டிக்கொண்டிருந்தேன்.


சிறிது நேரத்திற்குப் பிறகு அகிலா என்னைத் தொந்தரவு செய்யவில்லைநான் சீரியஸாய் ஓட்டிக் கொண்டிருப்பது தெரிந்து அமைதியாகிவிட்டிருந்தாள். நான் கொஞ்சம் போல் டயர்டாகியது தெரியத்தொடங்கியது டீ குடிக்கலாம் என்றாள்அவள் அத்தனை டீ குடிப்பவள் இல்லை என்பதால் எனக்காகத் தான் கேட்கிறாளென்று புரிந்தது. நாங்கள் ஒரு வழியாய் கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி ஊட்டி வந்த பொழுது மதியம் இரண்டாகியிருந்ததுபெங்களூரில் இருந்து கொண்டை ஊசி வளைவு வரை என் டிரைவிங் பற்றி எதுவும் சொல்லாதவள்வளைவொன்றில் ஓரங்கட்டி நிறுத்தி வியூ பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது கேட்டாள், "நல்லா வண்டி ஓட்டுறீங்க! இங்க நிறைய தடவவந்திருக்கீங்களோ?!"


அவள் கண்களில் சில்மிஷம் இல்லைஆனால் நான்,

"
வந்திருக்கேன் இதான் முத தடவையா ஒரு பெண்ணோட!" இதற்கு நான் அகிலாவிடம் இருந்து லேசான கோபப்பார்வையை எதிர்பார்க்க அவளோ,

"
ம்ம்ம் நம்பிட்டேன்" என்று சிரித்தபடி சொல்லி கலவரப்படுத்தினாள். நான் பரிதாபமாய் "அகிலம் நான் பொய் சொல்லலைஉண்மையிலேயே இதான் மொத தடவை ஒருபொண்ணு கூட ஊட்டி வர்றேன். ஊட்டி மட்டுமில்லை எங்கையுமே என்னை நம்பு". அவள் கொஞ்சம் இறங்கிவந்து, "ச்ச சும்மா சொன்னேன் தாஸ்உன்னைத் தெரியாதா?" என்று சொல்லி குடலுக்கு பியர் வார்த்தாள்.

"
ஹாங் வண்டி ஓட்டுறதைப் பத்தி கேட்டள்லநான் இங்கத்தான் வண்டி ஓட்டவே கத்துக்கிட்டேன் அதனால எனக்கு ஹில் ஸ்டேஷன் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது!" கொஞ்சம் படம் காட்டியிருந்தேன்.


ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த ஹோட்டல் பிருந்தாவனில் ஒரு டபுள் ரூம் கன்ப்ஃர்ம் செய்துவிட்டுஹோட்டல் அறைக்குள் நுழையும் முன் ஒரு பரீட்சை அறைக்குள் நுழையப் போகும் மாணவனைப் போன்ற பயம் வந்ததுவயிற்றுத் தசைப் பகுதி இறுக்கிப் பிடிக்கப்பட்டது போல் இருந்தது. அதுவரை இருந்த டயர்ட்னஸ் காணாமல் போயிருந்ததுதிரும்பி அகிலாவைப் பார்த்தேன் வேறெதையோ பார்ப்பதைப் போல் அவள் முகத்தில் அந்தப் பதற்றம் இல்லை. அறைக்குள் வந்து தாழிட்ட பொழுது ஏனோ மனசுக்குள் தவறு செய்வது போன்ற ஒரு உணர்வுகதவுக்குப்பின்னிருந்த குப்பைத் தொட்டியில் அந்த எண்ணத்தைப் போட்டுவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தேன். அகிலா பாத்ரூம் சென்றுவிட்டு அப்பொழுது தான் வந்தாள்வந்ததும் வராததுமாய் மொத்த அறையையும் நோட்டம் விட ஆரம்பித்தாள். நான் அவளாய் செட்டில் ஆகட்டும் என்று பெட்டில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை துவக்கினேன். சேனல்கள் மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது இடைப்பட்ட  ஈஎஸ்பிஎன் டிவியில் ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் மாட்ச் போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு நான் அகிலாவை மறந்து மேட்சில் ஆழ்ந்துவிட்டேன்.

"
உனக்குப் பிடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யார் தாஸ்?" கவனம் கலைந்து பார்க்க அகிலா கட்டிலில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்என்னால் அந்தப் பொழுதை நம்பமுடியவில்லை.

"
அகிம்மாஎனக்கு மார்க் வாஹ் தான் பிடிக்கும்நான் ஒரு தீவிர ஆஸ்திரேலிய சப்போர்ட்டர்!"
அவள் அப்படியா என்பதைப் போல் பார்த்தாள்பின்னர் மேட்சில் ஆழ்ந்துவிட்டாள்ஆனால் என்னால் தான் மீண்டும் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்ப முடியவில்லை. எனக்கும் அவளுக்கும் இடையில் ஒன்றரை அடிதான் வித்தியாசம் இருந்தது. மூன்றாண்டுகளில் இந்த நொடியைப் பற்றி நிறைய கற்பனையை வளர்த்திருந்தேன்திருமணத்திற்கு முன் / பின் என்ற எல்லைகளில் வைத்து விரிந்திருந்த கற்பனை ஒரு முடிவை நோக்கி நகர்த்தவே முடியாததாய் இருந்தது. இந்தப் பொழுதில் அவள் நிராகரித்தாள்அடுத்தக் கணத்தில் அவள் நிராகரித்தாள் என்று மனம் பல்வேறு கணக்குகளை போட்டபடிதான் முடிந்திருக்கிறது. அவளுடைய நிராகரிப்பு என்பது எங்கள் கம்ப்யூட்டர் சைன்ஸ் ப்ளோ சாட்டில் வரும் Endஐப் போல. அவளை வற்புறுத்தும் எண்ணம் துளியும் கிடையாது, இப்பொழுதைக்கு மட்டுமல்ல திருமணத்திற்குப் பிறகும் கூட அப்படியே தொடர வேண்டுமென்றே நினைத்திருந்தேன்.


நான் மெல்ல அவளருகில் நகர்ந்து உட்கார்ந்தேன். அவள் ஒரு நொடி திரும்பி என்னைப் பார்த்தாள்,அப்பொழுது அவள் கண்களை என்னால் படிக்க முடியவில்லை. ஒரு வெறுமை மட்டுமே இருந்தது அதிலிருந்து என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் டிவி பக்கம் திரும்பிவிட்டாள். நான் அவள் கைகளை அவளிடமிருந்து விடுவித்து என்னிடம் வைத்துக் கொண்டேன். இதற்கு முன் இப்படிச் செய்தது வெகு சில முறைதான் என்றாலும் என்னால் வித்தியாசத்தை உணர முடிந்தது. அவள் கைகள் காய்ச்சல் வந்தவளின் கரங்கள் போல் சூடேறியிருந்தனஎன் கைகளின் தொடுதலால் அவள் கையில் இருந்த மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டு நின்றன. அவளுக்கு பின்புறம் முதுகை நோக்கிஅமர்ந்தவாறு இருந்தாலும் அவள் கண்களை மூடிக் கொண்டதை உணர முடிந்தது. மெதுவாய் அவள் முதுகில் விரல்களை ஓட்டினேன். அவள் கைகள் மரக்கத் தொடங்கியதுஅது நான் எதிர்பாராதது அவள் தன்னை கூட்டுக்குள் கொண்டு செல்கிறாள் என்று உணரமுடிந்தது. நானாய் கைகளை எடுத்துவிடவே நினைத்தேன் ஆனால் மறுப்பு அவள் பக்கத்தில் இருந்து வரட்டும் என்று விட்டது என் தவறு தான்.

"
தாஸ் இப்பவே இதைச் செய்தாகணுமா?" முடிந்ததுஇதற்கு மேல் ஒரு வார்த்தை கூட என்னால் இதைப்பற்றி பேச முடியாது. என் கைகள் தானாய் அவள் முதுகிலலிருந்து அகன்றனஅவள் கைகளை விடுவித்தேன்அந்த மாற்றம் அவளுக்குத் தெரிந்திருக்கவேண்டும்இயலாமையால் என்னைத் திரும்பிப் பார்த்தாள். என்னால் அவளைப் புரிந்து கொள்ள முடிந்ததுஅவள் மேல் கொஞ்சம் கோபம் வந்தாலும் அது நான் வண்டி ஓட்டிக் கொண்டு வந்த களைப்பால் வந்ததாகத்தான் இருக்க முடியும்என்னால் அகிலாவை கோபிக்க முடிந்தது கூட ஆச்சர்யமாக இருந்தது. அவள் கண்கள் என்னைக் கெஞ்சின, 'ப்ளீஸ் கல்யாணத்துக்குப் பிறகு இதைச் செய்து கொள்ளேன்என்று. உண்மையில் எனக்கு அதில் பிரச்சனை இல்லைநானே கூட என்னைக் காதலிக்கிறாய் என்றால் நாம் வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்ல நினைத்த பொழுது தான் அவள் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். ஆண் மனம் கலவிக்கு அலைந்தது. என்னால் அகிலாவை அப்படிப் பார்க்க முடியவில்லைநான் மெதுவாய் படுக்கையில் சாய்ந்த படி கண்களை மூடினேன் அவ்வளவுதான் தெரியும்.


கண்களைத் திறந்த பொழுது நினைத்துக் கொண்டேன்மன்மதன் தான் எழுப்பியிருக்க வேண்டுமென்று. அகிலா ஒரு டர்க்கி டவல் மட்டும் உடுத்தி என் முன்னால் நின்று கொண்டிருந்தாள்ஹமாம் சோப்பின்மணம் நாசிகளைத் துழைத்தது. அவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று தலை கோதிக் கொண்டிருந்தாள். நான் எழுந்ததைப் பார்த்ததும் என் பக்கம் திரும்பிச் சிரித்தவள் அசப்பில் பாலு மகேந்திரா படத்து ஹீரோயின்களைப் போலிருந்தாள் அவள் மாநிறம் இல்லை என்றாலும் கூடஅவளுக்குப் பின்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பமும் அவள் அசலும் சேர்ந்து என்னை நிலை கொள்ள முடியாதபடிஆக்கின. எனக்கு இவை நிஜத்தில் தான் நடக்கிறது என்று தெரிந்தாலும் வேடிக்கைக்காக கைகளைக் கிள்ளிக் கொண்டேன்அவள் கைகளில் வைத்திருந்த சீப்பை என் மேல் வீசினாள்.
"மணி என்னாகுது தெரியுமா?" எனக்கு அப்பொழுது தான் நான் அதிக நேரம் தூங்கிவிட்டிருந்தது தெரிந்ததுஎன்னால் இது சனிக்கிழமை இரவா இல்லை ஞாயிற்றுக் கிழமை விடியலா என்ற குழப்பம் இருந்தது. கைகளில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்க்க ஒன்பதரை காட்டியது. ஜன்னல்களுக்கு வெளியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் சனி இரவுதான் என்பது உறுதியாக. கிட்டத்தட்ட ஏழுமணிநேரம் தூங்கியிருக்கிறேன் என்பது தெரிந்ததுதேவதை போல் ஒரு பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு. அவள் முகத்திலும் அது தெரிந்தது.

"
சாரி! நல்லா தூங்கிட்டேன்."

"
இப்புடியா தூங்குவாங்க! நான் எப்படா 'இப்ப வாண்டாம்'னு சொல்லுவேன்னு காத்திக்கிட்டிருந்த மாதிரி தூங்கிட்ட நீ! ஏற்கனவே மூணு வருஷம் செய்தது போதாதுன்னு இங்க ஹோட்டலில் வந்து வேற ஏண்டி உயிரை வாங்குறன்னு சொல்ற என் மனசாட்சி கூட தனியா சண்டை போட்டிக்கிட்டிருக்கேன் ஏழு மணி நேரமா! தெரியுமா?"


நான் படுத்திருந்த கட்டில் நிச்சயம் தரையில் இல்லை.

"
லஞ்ச் வாங்கிக் கொடுத்தியா நீஎன்ன ஆளுய்யா. இப்படித் தூங்குறவங்களை நான் எழுப்பவே மாட்டேன். நீயாதான் எழுந்துட்ட. எனக்கு பசி தாங்காதுப்பா நான் நல்லா லஞ்ச் ஆர்டர் செய்து சாப்டேன்." கைகளை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள்காதுக்குள் அவள் சொல்வது எல்லாம் மாற்றம் செய்யப்பட்டு இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்று சுசீலாவின் குரலில் சென்றுகொண்டிருந்தது. கட்டிலில் குனிந்து அவள் தூக்கி வீசிய சீப்பை எடுக்க முயலஅவள் தலை முடி இரு பக்கங்களில் இருந்தும் முன்பக்கம் சரிந்தது. சரியாய் டவலில் முடிப்பை வலது கைகளில் பிடித்தபடி,இடது கையால் சீப்பை எடுத்து விட்டு அவள் நகர ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருந்த நான் தொப்பென்றுமல்லாக்க மறுபுறம் விழுந்தேன்.
மீண்டும் கண்ணாடி பக்கம் திரும்பியவள் வெள்ளை நிற டவலில் அன்றலர்ந்த மலர் போல் இருந்தாள்,மார்பிலிருந்து முழங்கால் வரை வந்திருந்த அந்த டவல்அவளுடைய நிர்வாணத்தை விடவும் அதிக கிளர்ச்சியைத் தந்ததுஅவளுடைய பரிமாணங்களை அந்தத் டவல் வேற எதாலும் வெளிப்படுத்தியிருக்க முடியாது என்று நான் நினைத்தேன். அவள் பக்கமிருந்து மெதுவாய் ஒரு வசனம். சாதாரண நாட்களாகயிருந்திருந்தால் நான் அதைக் கேட்டிருப்பதற்கான வாய்ப்பு கூட குறைவு தான்.

"
இப்படியேவா! குளிச்சிட்டு வர்றியா?"அவள் லேசாய் தலையைத் திருப்பி என்னை மோகக் கண்களுடன் பார்த்தாள்நான் நினைத்தேன்,இங்கே முடிந்தது என்று. அவளிடம் இருந்து தப்பிக்க நினைத்து எழுந்தவன் அவளைப் பார்த்து புன்னகையொன்றை செய்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தேன். இதற்கு மேல் அவளால் மறுக்க முடியாது என்று தெரிந்ததும் மனம் குதியாட்டம் போட்டதுபந்தையத்திற்காக காத்திருக்கும் குதிரையைப்போலிருந்தது மனம். இதயத் துடிப்பு முறுக்கேற்றப்பட்ட ஒரு வலுவான எந்திரத்தின் வேகத்தில் இருந்தது,என் வசத்தில் இல்லை. அவள் உபயோகப்படுத்திவிட்டு வைத்திருந்த சோப்பில் அவள் மனம் வந்தது. எனக்கு இன்னொரு விஷயம் சட்டென்று மனதிற்குள் வந்ததுஇந்தத் துடிப்பில் போனால் அவளுடைய நிர்வாணம் என்னை கீழே அழுத்தித் தள்ளிவிடும் என்று நான் எப்பொழுதும் செய்யும், 'அபிராமி அந்தாதி'பாடல்களை மனதிற்குள் வேகமாக நினைக்கத் தொடங்கினேன். சிறுவயதில் மனனம் செய்திருந்ததால்,பாடல்கள் நினைவுக்கு வருவதற்கு மனதை அதன் பக்கம் திருப்ப வேண்டும்அந்தாதி என்பதால் ஒரு பாட்டின் முடிவில் இருந்து தொடங்கும் மற்ற பாடல் சாதாரணமாய் நினைவில் இல்லாமல் முடிவில் தான் நினைவில் வரும் என்பதால் மனம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும். வந்தது.
நான் பாத்ரூமை விட்டு துவட்டிக் கொண்டு வெளியில் வந்த பொழுது அறையில் நைட் லேம்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்ததால் அறையில் அத்தனை வெளிச்சமில்லைஎன்னை நோக்கி வரவேற்பது போல் காத்திருந்தவள் உடம்பில் துணி எதுவும் இல்லை. என் எதிர்பார்ப்பை அவள் மார்பகங்கள் ஏமாற்றவில்லை.

"Doss I don't want to get pregnant" 
சொல்லத் தேவையில்லாத விஷயம் என்றாலும் தவறாகி விடக்கூடாதென்ற கவனம் அதைச் சொல்ல வைத்தது. அவள் சட்டென்று ஆங்கிலத்திற்கு மாறியிருந்தாள் நான்நினைத்தேன் அவள் சொல்ல வருவதை அவள் காதுகள் கேட்கபதைக் கூட அவள் விரும்பவில்லை என்று. அந்நிய மொழி அவளுக்கு அந்த விஷயத்தில் உதவுவதாக இருந்தது.

"Don't worry I have condoms" 
சிரித்தபடியே சொன்னேன். அவளுக்குத் தெரிந்து தான் இருக்க வேண்டும்இந்த அளவிற்காவது நான் தயாராய் இருப்பேன் என்று. படுத்த படியே இரு கைகளையும் நீட்டி என்னை அழைத்தாள்கனவு போல் இருந்தது.
அரை மணிநேரத்தில் இன்னொரு முறை அவளும் குளித்து என்னையும் வற்புறுத்தி குளிக்க வைத்து குளியலறையில் நான் இன்னொரு முறை தொடங்க பொய்க்கோபம் காட்டி தடுத்தவள், 'பசிக்குது தாஸ்'என்று சொல்ல பாவமாய் இருந்தது. சட்டென்று காலையில் இருந்து சாப்பிடாதது எனக்கும்பசியெடுத்தது. சின்னச் சின்ன சிணுங்கல்கள்சீண்டல்களுடன் அவள் உடைமாற்ற அகங்காரமாய் நேரெதிரில் அவளை மட்டும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அதான் எல்லாம் முடிந்துவிட்டதே என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள் என்று நினைத்தாளாயிருக்கும்நான் இருப்பதை அவள் பொருட்படுத்தவேயில்லை.
அவளிடம் ஆரம்ப விளையாட்டுகளின் பின்உணர்ந்து "you already came is it?" கேட்ட கேள்வி அதன் மொக்கைத்தனத்தைத் தாண்டியும் என் அனுபவமின்மையைக் காட்டியதாக நினைத்தேன். அவள் சட்டென்று அதைக் கேட்க விரும்பாதவளைப் போல இரண்டு கைகாளாலும் அவள் காதுகளை மூடிக்கொள்ள முயற்சித்தது நினைவில் வந்தது. அவளை வெட்கம் தின்று கொண்டிருந்த நேரத்தில் கேட்பதற்கு இதைவிடவும் மோசமான கேள்வியொன்று இருந்திருக்காது என்று நினைத்தேன். சட்டென்று தாவி எழுந்து என்னை இழுத்து அவளோட அணைத்து அதைச் சமாளித்திருந்தாள்.

"
என்ன அதுக்குள்ளையே கனவா?" என் தலையைக் கோதியபடி கேட்டவளிடம்,

"
இன்னும் ஒரு வாரத்திற்கு உன்னை நேரில் பார்க்கலைன்னா கூட பரவாயில்லைஇந்த நினைவுகளோடு சமாளிச்சிறுவேன்."
ஒரு அடி பின்னகர்ந்தவள்கைகளை இடுப்பில் வைத்தபடி, "அப்ப நான் வேணாமா?" கேட்கஇதற்கு என்ன பதில் சொன்னாலும் ஆபத்து என்று பதில் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு,

"
என்ன விட்டுடு தாயி!" என்றேன்.
நாங்கள் மூடப்பட்டுக் கொண்டிருந்த ரெஸ்டாரெண்டிற்கு வந்து உட்கார்ந்ததும் தான் தாமதம்,அகிலாவின் மொபைல் சிணிங்கியது. நம்பரைப் பார்த்தவள்வெட்கப்பட்டு சிரித்து,

"
தாஸ் அவதான் போன் பண்ணுறாஅவளுக்கு எல்லாம் தெரியும் நான் இப்ப அவகிட்ட பேசினா அவ்வளவுதான். நீங்க வெளியில் போயிருக்கான்னு சொல்லி வைச்சிடுங்க." சொல்லி என்னிடம் திணித்தாள்.
நான் "ஹலோ!" என்று சொல்ல,மறுபுறம் ஜெயஸ்ரீ, "நான் நினைச்சேன் நீங்கதான் போனை எடுப்பீங்கன்னு குடுங்க அந்த கழுதைகிட்ட."
நான் தீவிரமாய், "அவள் இங்க இல்லை ஜெயா" என்று மழுப்ப ஏண்டா அப்படிச் செய்தோம் என்று ஆகியது.

"
சின்னப் பொண்ணு ஒன்னை ஊட்டிக்கு தனியா கூட்டிக்கிட்டு போய்ட்டு இப்ப அங்க இல்லைன்னு வேற சொல்றீங்களாஅவளை ஏமாத்தி எல்லாம் முடிச்சாச்சா?" எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலுடன் இல்லை.
வேதனையுடன் அகிலாவிடம் போனைத் தந்தேன். அவள் நேரடியாய் "ஏண்டி பாவம் அவனை வம்பிழுக்கிறபச்சை புள்ள மூஞ்சி எப்படிச் சுண்டிப் போச்சு பாரு" என்று ஆரம்பித்தாள்.

"
ஆமாம்!" "ஒரு தடவை தான்" "ம்ம்ம்" "ம்ம்ம்னு சொல்றேன்ல" "தாஸ்கிட்டையே கேளேன்" என்று சொல்லிமீண்டும் என் கையில் திணித்தாள். நான் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தேன்.

"
இங்கப் பாருங்க, அவளை சரி செஞ்சி இதெல்லாம் உலகமகா தப்பில்லைன்னு சொல்லி உங்கக்கூட ஊட்டிக்கு அனுப்பி வைச்சதே நான் தான். கழட்டி விடணும்னு நினைச்சீங்க அவ்வளவுதான். பார்த்துக்கோங்க. பூனை இனிமேல் சும்மாயிருக்காது பண்டத்தை கண்காணிக்க என்னால் முடியாது,மரியாதையா பெங்களூர் வந்ததும் உங்க வீட்டில் பேசுறீங்க. என்ன?"நான் வெறுமனே "ம்ம்ம்." என்றேன்.

"
இந்தக் குரங்கு மூஞ்சியைப் பார்க்க நான் அங்க இல்லாமப் போய்ட்டேனே!" அவள் சொன்னதும் தாமதம்.

"
நான் தான் உங்க அக்காகிட்ட உன்னையும் கூட்டிக் கிட்டு வான்னு சொன்னேனே! அவதான் என்னமோ உங்க ரெண்டு பேத்தையும் வைச்சிக்கிட்டு நான் த்ரீஸம் பண்ணப்போறேன்னு பயந்து கூட்டிக்கிட்டு வரலை!" உளறிக்கொட்டியிருந்தேன்.
அகிலா நான் இந்த முனையில் சொன்னதைக் கேட்டு என்னை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்நான்சொன்னது எனக்கு விளங்கியதும் எனக்கு நானே தலையில் அடித்துக் கொண்டேன்.
ஜெயஸ்ரீ, "அக்காகிட்ட போனைக் கொடுங்க..." நான் அகிலாவிடம் கொடுத்தேன்.
இவள் போனை வாங்கியதில் இருந்து கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்தாள்எனக்குப்புரியவேயில்லை. நான் மௌன மொழியில் தோப்புக் கரணம் போட்டுக் காட்டினேன். அகிலா கண்டுகொள்ளவில்லைசிறிது நேரத்தில் போனை அணைத்தவள். நான் அப்படி ஒன்று சொன்னதாய்க் காட்டிக் கொள்ளவேயில்லை.

"
சாரி ஏதோ உளறிட்டேன்!" மன்னிப்பு கேட்கும் தொணியில் சொன்னேன்.
அவள் சப்தமாய் சிரித்தபடி, "இதோட ஜெயஸ்ரீ மேல இருக்கிற ஆசையை விட்டுடுங்க" என்று சொல்ல நான் உண்மையிலேயே வேதனையில் நொந்து போயிருந்தேன்.

"
அகிம்மா சாரி I didn't mean it. மன்னிச்சிக்கோம்மா" சொல்ல அவள்,

"
ச்ச தாஸ்என்னைய விட ஜெயஸ்ரீக்குத்தான் உங்க மேல மதிப்பு அதிகம். நான் இன்னிக்கு உங்கக்கூட இருக்கேன்னா அதுக்கு 90% காரணம் அவதான். என்னை விட அவதான் உங்களை நம்புறா! இதைவிட நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைக்க மாட்டான்னு கூட சொன்னா. உங்களை அவ தப்பா நினைக்க மாட்டா! நானும் நினைக்கலை கவலைப்படாதீங்க."
போன உயிர் திரும்ப வந்தது.

அகிலாவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்த பொழுது மணி மூன்றரை இருக்கும். வீட்டிற்கு வந்ததில் இருந்து அகிலா கேமராக் கண்கள் கொண்டு வீட்டை ஸ்கேன் செய்வதாய் உணர்ந்தேன் நான்.

"
என்னடி பார்க்கிற!"

"
இல்லை பாச்சுலர் வீடு மாதிரி தெரியலையே! யாரோ ஒரு பொண்ணு இருந்து கவனிச்சிக்கிற வீடு மாதிரியில்ல இருக்கு. அதான் பார்த்தேன்."
அகிலாவிற்கு பொறாமையாகாலையில் இருந்து எவ்வளவோ பார்த்தாகிவிட்டது இதுவும் இருந்துவிட்டு போகட்டும். "வேற எதாவது கேர்ள் ப்ரண்டு இருக்கான்னு சந்தேகப்பட்டுடாத தாயே! வாழ்க்கையில் அந்தத் தப்பை நான் ஒரேயொரு தரம் தான் செய்திருக்கேன்."
அவள் சிரித்தாள்.

"
சரி இரு நான் ஒரு காப்பி போட்டுட்டு வர்றேன்." நான் சிறிய அளவில் சமைப்பேன் என்பதுவரை அகிலாவிற்குத் தெரியும் அவளும் நான் போடுறேன் என்று வரவில்லைவரமாட்டாள் என்றுதான் நானும் நினைத்தேன் தெரியும்.
நான் சமையற்கட்டில் பாலில் காபிப் பொடி கலந்து கொண்டிருந்த பொழுது அகிலா,

"
தாஸ் நான் வாலிபால்கொக்கொ எல்லாம் விளையாடுவேன் தெரியுமா?"எதற்காக அகிலா இதைச் சொல்கிறாள் என்று உண்மையில் புரியவில்லை. நான் சமையல்கட்டில் இருந்து வெளியில் வந்து,

"
அதக்கு என்ன?" அவள் என் புத்தக ஷெல்பின் பக்கத்தில் சுவற்றில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தாள். கேட்டுவிட்டு மீண்டும் உள்ளே நகர்ந்து சர்க்கரை கலக்கத் தொடங்கினேன்.

"
அதனால என் ஹைமன்..." அவள் முடிக்கவில்லை நான் கைகளில் இரண்டு காப்பி கோப்பைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தபடி.

"
இன்னிக்கு நீ உதைபடாம போகமாட்டேன்னு நினைக்கிறேன். வாழ்க்கையில் பொண்டாட்டிகிட்ட கையை நீட்டுறது பெரிய அயோக்கியத்தனம்னு நினைத்துக் கொண்டிருக்கிறேன் இன்று வரை. என்னை நீ அது தப்புன்னு நினைக்க வைச்சிருவேன்னு நினைக்கிறேன்."
அவள் கைகளில் ஒரு கோப்பையை திணித்தபடி சொன்னேன். அவள் என்னை நிமிர்ந்துபார்க்கவேயில்லைகாலையில் இருந்து போய்க்கொண்டிருந்த இந்த விஷயத்தைப் பற்றி அகிலா கடைசியாக சொல்ல நினைத்தது இதுவாகத்தான் இருக்கும் இதற்கு மேல் பேசமாட்டாள் என்று தெரிந்ததால் நானும் அதற்கு மேல் வளர்க்காமல் விட்டுவிட்டேன். காபி குடிக்கும் வரை சும்மாயிருந்தவள்,

"
நான் உன் பெட்ரூமைப் பார்க்கலாமா?"அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்ததும் நான் சிரித்தேன்அவளும் சிரித்தாள். என் பதிலுக்காய் காத்திராமல் என் பெட்ரூமிற்குள் நுழைந்தாள்.

"
ம்ம்ம் பரவயில்லையே சுத்தமா வைச்சிருக்க!" மெத்தைக்கு பக்கத்திலிருந்த அபூர்வமாய் நானும் அவளும் சேர்ந்து இருக்கும் படி ஒரு புகைப்பட்டதை பெரிதாக்கி வைத்திருந்த புகைப்படத்தை கையில் எடுத்தவள்சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் என்னிடம்,

"
எனக்கும் இதை ஒரு காப்பி போட்டுக்கொடுக்கிறியா தாஸ்!"

"
செய்துட்டா போச்சு."
நகர்ந்து அறையில் நான் வரைந்து மாட்டிவிட்டிருந்த வண்ண ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"
இதெல்லாம் நீ வரைஞ்சதா!" நான் பதில் சொல்லவில்லைஅவளும் எதிர்பார்க்கவில்லை, "பிரமாதமாயிருக்கு! நீ இவ்வளவு நல்லா வரையுவன்னு சொல்லவேயில்லையே!" நான் வெறுமையாய் சிரித்து வைத்தேன்.
அதுவரை என்பக்கம் திரும்பாதவள் என்னை நோக்கித் திரும்பி காதலுடன் பார்த்து, "என்னையும் ஒரு படம் வரைஞ்சு கொடேன்!" என்று கேட்டாள். எனக்கு அந்தக் கண்களின் மொழி புரிந்தது. நான் நேரடியாகவே,

"
தாயே உன்னை இனிமே தொடறதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம்னு வைச்சிருக்கேன். தயவு செய்து வம்பு செய்யாமல் போய்டு தாயே!" என்றேன்.
அவள் மழுப்பவில்லைநான் உன்னிடம் அதைக் கேட்கலையே என்று நடிக்கவில்லை.

"
அதுக்குள்ள அலுத்துவிட்டதா?" என்றாள். காலையில் என்னிடம் அவள் உரையாடத்தொடங்கியதிலிருந்து அன்றைய பொழுது முழுவதும் ஒரு முறை கண்முன்னே வந்து மறைந்தது. நான் அகிலாவை முதலில் பார்த்து பின்னர் அவளைப் பிடித்துப் போனதிலிருந்து மனதில் உருவாக்கி வைத்திருந்த தருணம். எத்தனை முறை கற்பனை செய்து வைத்திருந்த உரையாடல்கள்ஆனால் எல்லாம் சுருண்டு கொண்டு கல்யாணத்திற்கு முன் இனிமேல் எனக்கு எதுவுமே வேண்டாம் என்பது போலிருந்தது.

"
என்கிட்ட காண்டம் இல்ல!" நான் நடித்தேன்.

"
பயமுறுத்திப் பார்க்கிறியா! ஊட்டியில் படுக்கைக்கு வரும் முன்ன உன்கிட்ட இருந்ததான்னு கேட்டுக்கிட்டா வந்தேன். இருந்தது உபயோகிச்சிக்கிட்ட இல்லாமல் இருந்திருந்தால் என்னால் என்ன சொல்லியிருக்க முடியும்..." அவள் உரையாடலில் இருந்த அறிவுஜீவித்தனம்அவளிடம் சற்று முன் நான் பார்த்த காமம் இல்லாமல் போயிருந்ததை காட்டிக் கொடுத்தது. "...பிடிக்கலைன்னா விடுநான்பிடிக்காதவங்களை கம்பெல் செய்வதில்லை." நக்கலாய்ச் சிரித்தாள்.
அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று தெரிந்ததுஎன்னை உரையாடலுக்குள் இழுக்க நினைக்கும் அவள் மனம் புரிந்தது. நான் விலகிக் கொண்டிருந்தேன்.

"
அகிலாஇது ஒரு கனவெனக்கு. எவ்வளவு சாதாரணமா கேட்டுவிட்ட ஒரு கண் பார்வையால் சம்மதமான்னு. எத்தனை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து எது சரியா வரும் என்று நான் கணக்கு போடாத நாட்களே இல்லை. இந்த ரூமுக்கு மட்டும் காதிருந்து கைகள் இருந்திருந்தால் நான் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு விட்டு உன்னை இந்நேரம் தன் கைகளால் நிர்வாணப்படுத்தியிருக்கும்.அத்தனை கற்பனைகள் அத்தனை கள்ளச்சிரிப்புக்களைப் பார்த்திருக்கும் இந்த ரூம். என்ன செய்ய இன்னிக்கு காலையில் இருந்து நீ செஞ்சதுக்கு நான் உனக்கு கொடுக்கிற தண்டனை உன்னைத் தொடாம இங்கேர்ந்து அனுப்புறதுதான். இனி நான் உன்னை தொடறதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம் தான். நீ கிளம்பு."
நான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது உன் முகம் வெளிப்படுத்தின உணர்ச்சிகள் அத்தனையையும் தனித்தனி ஓவியமா தீட்டணும் என்கிற ஆர்வம் வந்ததெனக்கு. முடித்ததும் சட்டென்று நெருங்கி வந்து காலையில் இருந்து நோகடித்த இதயத்திற்கான மருந்தை உதட்டு வழியாக வழங்கிவிட்டு நீயாய் பிரிந்துநின்றாய். நான் உன்னை தடுத்திருக்கவில்லை. கல்லாய் இருக்க உனக்கு மட்டும் தான் தெரியுமாயென்ன.

"
இதிலேர்ந்து ஒரு ட்ராயிங்கை நான் எடுத்துக்கலாமா?" தேவையில்லாத கேள்வி உனக்கு என்று இல்லாத ஒன்று அந்த அறையில் எதுவுமே இருக்க முடியாது. நிர்வாண நிலையடையாத ஓவியம் ஒன்றை எடுத்துக் கொண்டாய்.

"
ஞாபகம் வைச்சிக்கோ நீ ஒரு நாள் ஆசையா கேட்கிறப்போ நான் நிச்சயம் மறுத்து உன்னை அழவைப்பேன்." சிரித்தப்படி சொன்ன உன்னை வழியனுப்பிவிட்டு வந்து உட்கார்ந்ததும் அசைபோட நிறைய மீதியிருந்தது அன்றைய பொழுதுகள்.

March 05, 2009

10:11 AM aeswari: defloration - the act of having sexual intercourse with a virgin; devirgination.
me: 
எனக்கு அதுக்கு அர்த்தம் முன்னமே தெரியும்
aeswari: 
அப்ப ஜெயா முன்னாடி அப்படியான்னு கேட்டதுக்கு என்ன அர்த்தம்.
me: 
சும்மா ஜோக் பண்ணினேன் அகிலா :(
aeswari: 
இல்லை உனக்கு என் மேல டவுட்.
உன் கூட படுத்தவ தான வேற யார் கூடவும் படித்திருப்பான்னு
me: akila, this is idiotic
rubbish
உனக்கே நல்லா தெரியும்நீ வெர்ஜினா இல்லையா என்பது கூட எனக்கு ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்று
aeswari: 
அப்ப நீ என்ன நம்பலை அதான
அடுத்த வரி அடிப்பதற்குள் அவள் அங்கே இல்லைஎல்லாம் என் முட்டாள்த்தனம். ட்ரீட் கேட்ட ஜெயஸ்ரீ காரணமாய்ச் சொன்ன defloration வார்த்தையும் அதை உபயோகித்து அகிலாவை வம்பிழுக்க நான் அவளிடம் கேட்ட 'அப்படியா'வும் இத்தனை தூரம் பெரிதாகும் என்று நான் நினைக்கவில்லை. அன்றைக்கு தலையில் ஜூஸைக் கொட்டிவிட்டுப் போனவள் தான்மொபைல் போனை அணைத்து வைத்திருந்ததால் என்னால் அவளைப் பிடிக்கவே முடியவில்லை. அடுத்த நாள் காலை அலுவலகம் வந்த உடனேயே அவளிடம் இருந்து வந்த இந்தத் தாக்குதல் என்னைக் கொஞ்சம் நகர்த்தித் தான் பார்த்தது. என்னால் அகிலா அப்படிப் பேசுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என் யோசனைத் திறன் மீதே எனக்குச் சந்தேகம் வந்த பொழுது ஜெயஸ்ரீயின் அழைப்பு வந்தது.

"
சொல்லு ஜெயா"

"
என்னப் பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்?" அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை.

"
என்னப் பிரச்சனையோ அவ அழறா! மூணு வருஷத்தில் அகிலாவை நீங்க புரிஞ்சிக்கிட்டது இவ்வளவுதானா. அவ தன்னோட ஷெல்லுக்குள் போய்க்கிட்டிருக்காசாட்டிங்கில் எதுவும் பேசாதீங்க போனிலையும் கூட எதுன்னாலும் நேரில் பேசுங்க. காலையில் என்னையுமே காரணமில்லாமல்திட்டிக்கொண்டிருந்தாள்அவ எது சொன்னாலும் மனசில் வைச்சிக்காதீங்க ப்ளீஸ்!" சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
ஒரே அலுவலகம் தான் என்றாலும் வேறு வேறு கட்டடங்களில் இருந்ததால்என் இடத்திலிருந்து அவளிடத்திற்கு வந்திருந்தேன். நான் வருவதைப் பார்த்ததும் அவளாய் போய் ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். ராஜா எனக்கும் அவளுக்கும் ஒரு நல்ல நண்பன்ஆனால் அவளை விடவும் சீனியர் சொல்லப்போனால் அவளுக்கு வேலை பகிர்ந்தளிப்பவன். பெரும்பாலும் அது போன்ற சமயங்களில் நான் நகர்ந்துவிடுவேன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்றுஅவள் அதை அன்றும் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும்.
நான் ராஜாவிடம் நேரடியாய், "dude excuse me.," என்று அவள் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அவள் ஒன்றும் செய்யவில்லை சொல்லவில்லை என்னுடன் வந்தாள். சிறிது தூரம் வந்ததும்அவளாய்,

"
அதான் வர்றேன்ல கையை விடு!" மெதுவாய்த்தான் சொன்னாள். அவள் என்னிடம் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் அமில மழை கொட்டிய அகிலாவாக அல்லாமல் பழைய சிடுமூஞ்சி அகிலாவாகத்தான் இருந்தாள்நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவளிடம் கோபமில்லைகண்களில் ஆத்திரமில்லை அவள் அழுதிருப்பதற்கான சாயல் எதுவும் இல்லை ஜெயஸ்ரீ பொய் சொல்லியிருக்கஞாயமில்லை. அவள் 'என்னஎன்பதைப் போல் தோளைக் குலுக்கிக் காட்டநான் அவள் கையை விடுவித்தேன். அலுவலகத்தை விட்டு வெளியில் பார்க்கிங்கிற்கு வந்து வண்டியை வெளியில் எடுத்தேன்,அருகில் வந்து உட்கார்ந்து கொண்டவள் எதையும் பேசவில்லை.
டிஃபென்ஸ் காலனி அண்ணாச்சி ரெஸ்டாரண்டில் மூலையொன்றைக் கண்டுபிடித்து உட்கார்ந்ததும்.

"
சொல்லு என்ன தான் உன் பிரச்சனை."
அவள் பதில் பேசவில்லைடேபிளில் இருந்த பெப்பர் சால்ட் குடுவைகளைப் பார்த்தவண்ணம் இருந்தாள்.

"
என் தப்பு தான் மன்னிச்சிக்கோ அப்படி கேட்டிருக்கக்கூடாது தான். நான் சத்தியமா விளையாட்டுக்குத்தான் கேட்டேன்நீ இவ்வளவு சீரியஸா எடுத்துப்பேன்னு நான் நினைக்கவேயில்லை!" அகிலா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்அவள் அழுதுவிடுவாள் என்று நினைத்தேன். சர்வர்இடைபுகுந்தார்அவள் சமாளித்துக் கொண்டாள்.

"
நீ என்னயிருந்தாலும் ஜெயா முன்னாடி அப்படிக் கேட்டிருக்கக் கூடாது."
நான் அவள் முடிக்கட்டும் என்றிருந்தேன். அவளால் வார்த்தைகளைத் தேர்ச்சி செய்து அமைத்து பேச முடியவில்லை தடுமாறிக் கொண்டிருந்தாள்.

"
மனசில இல்லாமையா வார்த்தையா வரும்உன்னால என்னை அப்படி எப்படி நினைக்க முடிஞ்சது. இதெல்லாம் நான் சரின்னு சொன்னதால தான இல்லாட்டி அப்படி ஒரு வார்த்தையை நான் கேட்டிருக்க வந்திருக்குமாஇந்த மூணு வருஷத்துல இப்படி ஒரு வார்த்தை நீ சொல்லியிருப்பியாஉன்னால என்னை அப்படி எப்படி நினைக்க முடிஞ்சது. அன்னிக்கு நான் உனக்காக எதையெல்லாமோ செஞ்சப்ப நீ என்னைஅப்படித்தான பார்த்திருப்பநினைச்சிறுப்பஅலையறா பாருன்னு..." அவள் தொடர்ந்து கொண்டிருந்தாள். எனக்கு அன்றைக்கு பொழுது நினைவிற்கு வந்ததுநான் எதிர்பார்க்காத விஷயங்களை எல்லாம் அவள் செய்தாள் தான் ஆனால் அவளை என்னால் ஒரு நிமிடம் கூட அவள் சொல்லிக் கொண்டிருப்பது போல நினைக்க முடியாதுஅது அவளுக்கும் தெரியும். மூன்று வருட பழக்கம் எங்களிடையே அன்றைக்கு சுமூகமான உறவை சுலபமாகவே ஏற்படுத்தியதுசாட்டிங்கில் நாங்கள்பேசாத விஷயங்களே இருந்திருக்காது. என்னுடைய எல்லைகள் மூன்றாண்டுகளில் அவளுடைய நீள அகலங்களுக்கு நீண்டிருக்கிறதுநேரில் பேசிக்கொள்ளாத குறையே இல்லாமல் இருந்தது. அது அன்றைக்கு புரியவும் செய்ததுஎன்னைப் பற்றி அவளுக்கு அவளைப் பற்றி எனக்கு நாங்கள் தெரிந்து கொண்டதாக நினைத்ததை விடவும் அதிகம் தெரிந்திருந்தது.
நண்பர்கள் எச்சரித்திருந்ததால் நான் முதலில் எதையும் அவளிடம் வித்தியாசமாக முயற்சி செய்யவில்லை. ஆனால் அவளுக்கு அதெல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை. தாலி கட்டுவது என்பது அவள் உடலைப் பெறுவதற்கான லைசென்ஸ் கிடையாது என்று அவள் எனக்கு எழுதியிருந்தது நினைவில் இருந்தது. அவள் எழுதுவற்கென்று எழுதாமல் முழு மனதுடன் எழுதியிருந்தது புரிந்ததால்நண்பனே கணவனே அமைந்த விட்ட சந்தோஷத்தை அவள் கொண்டாடிக் கொண்டிருந்தாள் என்று நான் உணர்ந்துகொண்டேன். நான் அவளை இன்னும் மனைவியாகப் பார்க்காமல் காதலியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்ஏனென்றால் காதலியுடனான திருமணத்திற்கு முன்பான உறவானது சொர்கத்திற்கு ஒப்பானது என்ற கற்பனை என்னிடம் இருந்தது. அவளுடைய கம்பீரம் கலந்த காமத்தில் நான் எப்பொழுதையும் போல் ஆச்சர்யத்துடன் பங்கு கொண்டேன்அந்த ஆச்சர்யத்தை சாமர்த்தியமாக நான் மறைத்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் நான் அவளிடம் காண்பித்திருக்கக்கூடிய ஆச்சர்யம் தான் என் முன்னால் அவள் பெய்யென பெய்யும் கண்ணீருடன் உட்கார வைத்திருந்தது என்றுபுரியத் தொடங்கியது. ஆனாலும் கூட என்னால் இந்தப் பிரச்சனையை தள்ளி நின்று பார்க்க முடியவில்லைநான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தேன்ஜெயஸ்ரீஅகிலா அழுதாள் என்று சொன்னது என்னை நிலைகொள்ள விடாமல் செய்து கொண்டிருந்தது. என் எதிரில் அகிலா எப்பொழுது அழலாம் எனக் காத்திருப்பது போல் இருந்தது இன்னும் தடுமாறச் செய்ததுநிர்வாணத்தில் கூட குறைந்திடாத அவளது கம்பீரம் இங்கே இல்லாமல் போயிருந்தது. ஒரு அபூர்வமான பொழுதாகத்தான்அது இருந்திருக்க வேண்டும் என் கண்கள் கசியத் தொடங்கியிருந்தன.
அவள் பேச்சை நிறுத்தியிருந்தாள், "நீ உண்மையிலேயே நினைக்கிறியா என்னால் உன்னைப் பத்தி அப்படி நினைக்க முடியும்னு." சாதாரணமான வார்த்தைகள் தான் ஆனால் அந்தச் சமயத்தில் அவளை உலுக்கிப் பார்த்திருக்க வேண்டும். அவள் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"
எத்தனை தடவை நீ என்கிட்ட கேட்டஎன்னால அப்படி எப்படி நினைக்க முடிஞ்சதுன்னு. நீதான் என்னை தப்பா நினைச்சிக் கிட்டிருக்க. உன்னைய நான் எங்க வைச்சிருக்கேன் தெரியுமா?" கடகடவென்று கண்களில் வெகுவாகவே வரத் தொடங்கியிருந்தது. நான் பெரும்பாலும் அழுததில்லை என்றாலும் நான் அழுத பொழுதுகள் எல்லாம் நம்பிக்கை துரோகங்களை முன்வைத்தாகத்தான் இருந்திருக்கும். நான் நம்பிய ஒருவர் என்னை நம்பாமல் போன பொழுதுகள் என்னை வெகுவான சுயபச்சாதாபத்திற்கு உள்ளாக்கி அழுகையாக நீண்டிருக்கிறது. ஆனால் முகம் கோணி என்னை மறைத்த தனிமையில் பொங்கியிருக்கிறேன்பொதுவில் இரண்டாம் நபர் முன் அழுதது சின்ன வயதிலாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே நம்பிக்கை துரோகம் இல்லை முகக் கோணலாகி விகாரமான மனமொருமித்த அழுகை இல்லை. ஆனால் கண்ணீர் இருந்ததுஅகிலா என்னை தவறாகப் புரிந்து கொண்டாள் என்ற வருத்தம்இருந்தது. மனம் சட்டென்று தன் கட்டுக்குள் இருந்து விடுவித்துக் கொண்ட ஒரு அபூர்வமான பொழுது,சினிமா மெலோட்டிராமக்களின் பொழுது எதேட்சையாக வெளியாகும் கண்ணீரை ஒத்தது என்னுடைய இந்தக் கண்ணீர்.
அவள் சிறிது நேரம் எதுவும் பேசவில்லைசோற்றுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். நான் டிஷ்யூ ஒன்றை எடுத்து துடைத்துக் கொண்டேன்எனக்கும் கொஞ்சம் வெட்கமாக இருந்தது ஒரு பெண்ணின் முன்னால் கண்ணீர்விட்டது. நான் நிலைமையை சரியாக்க நினைத்தேன்ஆனால் என்ன சொல்லி அகிலாவை சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை. அவளே உதவினாள்,

"
தாஸ் என்னை நம்பு தாஸ்நான் ஒரு வெர்ஜினாத்தான் இருந்தேன்..." அவள் முடிக்கவில்லைநான் தலையில் அடித்துக் கொள்ளாதது தான் குறை. வேதாளம் இப்பொழுது இன்னொரு வழியாக முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தது. எனக்கு உண்மையில் சிரிப்புத்தான் வந்தது அடக்கிக் கொண்டேன். இதற்கு நான் நேரடியாய் என்ன பதில் சொன்னாலும் அவள் நம்ப மாட்டாள் அவள் இப்பொழுதுசரியாகிவிட்டிருந்தாள் அவள் கூண்டுக்குள் இருந்து முற்றிலும் வெளியில் வராவிட்டாலும் நேரடியாய்ஒரு வழிக்குவிஷயத்திற்கு வந்திருந்தாள். நான் என் பழைய முறையை உபயோகிக்க தீர்மானித்தேன். ஏனென்றால் அவள் மனதிற்குள் எனக்கு அவளுடைய கற்பைப் பற்றிய கேள்விகள் இருக்காது என்றுதெரிந்திருக்கும்இதுகூட அவள் என்னுடன் வைத்துக் கொண்ட உறவை மய்யப்படுத்தி தன்னைத் தானே பழிவாங்கிக் கொள்ளும் தன்னைத் தானே சிலுவையில் ஏற்றிக் கொள்ளும் ஒரு வழியாகத்தான் அவள் முன்வைத்திருக்க வேண்டும். என்னைத் திட்டுவதன் மூலம் ஜெயாவை திட்டுவதன் மூலம் அவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டுதவறாக அவள் உணர்ந்ததற்கு ப்ராயச்சித்தம் செய்து கொண்டிருந்தாள்.
இதுவும் கூட ஒரு நாடகமாக அந்த உறவைஇயற்கையாக அவளிடம் பொழிந்த ஆர்வத்தைஅதன் வழியே அவள் பெற்ற சந்தோஷத்தை மறைத்து கேள்விக்குள்ளாக்கி அவள் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் அந்த முதல் முகத்தை திருப்தி செய்வதற்காகச் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய ஸ்ப்லிட் பர்ஸனாலிட்டியை நான் ஊட்டி இரவில் பார்த்தேன்இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த விளையாட்டெல்லாம்நான் மட்டுமல்லாமல் அவளும் முதல் முறையாய்ப் பார்த்த அந்த மற்ற முகம் அவளுடையது அல்ல என்று நம்ப வைக்கும் முயற்சி என்று நான் நினைத்தேன்.

"
சரி அகிலாநம்புறேன். நீ இதுக்கு முன்ன ஒரு தடவை கூட மாஸ்டர்பேஷன் செய்யலைன்னு சொல்லு அதையும் நம்புறேன்."
அது ஒரு ஆயுதம் ஒரு நேரடித் தாக்குதல் அவள் தாக்க நான் பதுங்க நான் தாக்க அவள் மறைந்து கொள்ள என்று சென்று கொண்டிருந்த ஒரு அழகான யுத்தத்தில் என் தரப்பு பிரம்மாஸ்திரம். நாங்கள் இதைப் பற்றி உரையாடியிருக்கிறோம்ஆரம்பித்த முதல் கணத்தில் சாட்டிங்கில் இருந்து மறைந்து போய்,வாரக்கணக்கில் முகம் காட்டாமல் இருந்துபின்னர் சாட்டில் மௌன மொழி பகர்ந்து கடைசியில், "நம்பினால் நம்பு நம்பாட்டின்னா போ! நான் செய்ததில்லை!" என்பது வரையில் வந்து நின்றிருந்தது. அவள் பேரில் எனக்கு ஊட்டி செல்வது வரை இருந்த ஒரு சிறிய பயம் அதற்கு மேல் அந்த விஷயத்தில்என்னை நகர விடாமல் செய்திருந்தது.
கிசுகிசுப்பாய் தலையில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு நான் சொன்ன அந்த வார்த்தைகள் முதலில் அவளிடம் பெரிய ஆச்சர்யத்தை கொண்டு வந்தன. என்னால் பொதுவிடத்தில் அவளிடம் அப்படி பேச முடியும் என்று அவள் நினைத்திருக்க மாட்டாள்ஏனென்றால் நான் அதுவரை அப்படிச் செய்ததில்லை. ஊட்டியில் கூட நான் அவளிடம் பொதுவில் அத்துமீறுதல் எதையும் செய்யவில்லை. இந்தப் பிரச்சனையை நான் இழுத்துச் செல்லும் இடம் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் அவள்சப்தமாய்ச் சிரித்தாள்நான் அவள் என் தலையில் சாப்பாட்டைக் கொட்டிவிடக்கூடாதென்று பயந்து கொண்டிருந்தேன். எனக்கு நன்றாய்த் தெரியும் அந்த விஷயம் அவளை கூண்டுக்குள் இருந்து வெளியில் கொண்டு வருமென்பதையும் அதைவிட அவளுடைய கம்பீரத்தை அவளுக்கு திரும்பக் கொடுக்குமென்பதையும்.
அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை, "உன்னை மாதிரின்னு நினைச்சியா!" இடைவெளி விட்டவள்,நான் சிரித்துக் கொண்டிருந்ததால், "உன் கிட்டப்போய் இதையெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கேன் பார்! என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்."
அவள் கட்டிக்கொண்டிருந்த கூண்டு இப்பொழுது அவளில்லாமல் அநாதையாக இருந்திருக்க வேண்டும். இருவரும் சாப்பிடுவதை மறந்து சிரித்துக் கொண்டிருந்தோம்கடைசி மூன்று நாட்கள் எங்களிடம் கொண்டு வந்த மாற்றத்தை நினைத்து.

"
சரி ஆபீஸ் போறியா. பிரச்சனை எதுவும் பண்ண மாட்டியே திரும்ப?" அவள் இல்லை என்று தலையாட்டியபடி.

"
உன் வீடு இங்க பக்கத்தில் தான கூட்டிக்கிட்டு போயேன்." எத்தனையோ முறை அழைத்திருப்பேன் அவளைஅவள் வந்ததில்லை. இப்பொழுது வருகிறேன் என்கிறாள் நான் அதை மீறியும் அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று படிக்க முயன்றேன்.

--------

Akilandeswari - Google chat status - Public
I lost my virginity to Mohandoss
எனது Buzzல் வந்து விழுந்த அகிலாவின் இந்த அப்டேட் என்னை கொஞ்சம் நகர்த்திப் பார்த்தது. அவள் அப்படிப் பொதுவெளியில் சொல்வதில் எனக்குப் பிரச்சனையில்லை தான், அவள் இந்த முடிவை முட்டாள்த்தனமாக எதையோ யாருக்கோ நிரூபிப்பதற்காக மட்டும் எடுத்திருக்கக்கூடாது என்று வருந்தினேன். அதன் பின்னர் தான் இனி யாருக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்ற யோசனை எழுந்தது, என்னையும் அவளையும் தெரிந்த - அவள் ஸ்டேட்டஸ் மெஸேஜ் ரீச் ஆகயிருக்கக்கூடிய - நபர்கள் என் அலுவலகம் முழுதும் இருந்தார்கள். என் ஜூனியரிலிருந்து, என் ப்ராஜக்ட் மேனேஜர், இந்தியா சீஃப் இப்படி. கொஞ்சம் பேருக்கு எங்களைப் பற்றித் தெரியுமென்றாலும் சமுதாயம் கல்யாணத்திற்கு முன்னான உறவைப் பற்றி வைத்திருக்கும் சித்திரம் எனக்கு கவலையளித்தது. என்னை விட அகிலாவை அது பாதிக்கும் என்றே நினைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் அவள் இதைச் செய்திருக்க வேண்டாம் என்ற எண்ணமும் எழுந்தது. 

10:30 AM aeswari: how is it???
me: ஏன்டீ இப்படி செஞ்ச
aeswari: நேத்தி நம்பினேன்னு சொன்ன
அதாவது நான் வெர்ஜினா இருந்தேன்னு
me: நீ உதைபடப்போற
aeswari: ஏன் உண்மையைத்தான சொன்னேன் :(
10:32 AM me: Im not talking abt tht.
10:35 AM aeswari: சரி என் டெஸ்க்குக்கு வாயேன்.

வெண்பட்டு சேலையணிந்து, கண்ணுக்கு மை எழுதி மஸ்காரா போட்டு, புருவங்களுக்கு மத்தியில் இல்லாமல் கொஞ்சம் மேலே கொஞ்சம் பெரிதாய் கறுப்புப் பொட்டு வைத்து என்னை வரவேற்ற தேவதை தான் கொஞ்சம் முன்னர் என்னுடன் கன்னித்தன்மைப் பற்றிக் கதைத்தது என்று நம்பு முடியவில்லை தான்.

“சொல்லவேயில்லை அகிலா, ஹேப்பி பர்த்டே!” எனக்கு இன்றைக்கு அவள் பிறந்தநாள் இல்லையென்று தெரியும்.

அவள் நான் எதிர்பார்த்தது போலவே கண்டுகொள்ளவில்லை. “நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால தான் சேலையில் வந்தேன்.” என்று சொல்லி என்னை அழைத்து அவளுடைய gmail பக்கம் காட்டினாள், என்னையும் ஜெயஸ்ரீயையும் தவிர்த்து மற்ற எல்லோரையும் ப்ளாக் செய்துவைத்திருந்தாள்.

“நான் கூட நினைச்சேன் ரொம்ப தைரியம்தானுட்டு, போடி இவளே, அஞ்சு நிமிஷத்தில் எவ்ளோ பயந்திட்டேன் தெரியுமா?!”

“நீ மட்டும் என்னைப் பத்தி எப்படியெல்லாம் எழுதியிருப்ப, அதான் சும்மா விளையாடலாமேன்னு...” என்று சொல்லிக்கொண்டே, அவளுடைய லாக்கரைத் திறந்து ஒரு டைரியை எடுத்தாள், முதலில் என்னுடையதோ என்று நினைத்தேன். 

“ஒரு விஷயத்தை இன்னிக்கே நான் உன்கிட்ட சொல்லணும், அதை மறைக்கக்கூடாது. ஆனால் இவ்வளவு நாளா உன்னப்பத்தி வராத ஒரு நம்பிக்கை இப்பத்தான் வந்திருக்குன்னு வைச்சிக்கோயேன். ஆனால் இந்த டைரியைப் படிச்சிட்டு என்னைப் பிடிக்கலைன்னாலோ இல்லை என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னாலோ சொல்லிடு நான் தப்பா நினைக்க மாட்டேன். இதைப்படிச்சா தெரியும் எவ்வளவு பர்ஸனலான விஷயம் சொல்றேன்னு அதனால் சீக்ரஸி முக்கியம். புரிஞ்சிக்க”

கைகளில் இருந்த டைரி ஒரு மாயப்புத்தகம் போல் தோற்றமளித்தது, இத்தனைக்கும் பிறகு அவளை நான் வெறுக்கக்கூடிய அப்படியென்ன விஷயம் இந்த டைரிக்குள் இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அகிலா இத்தனை தூரம் சொன்னதால் என்னதான் இருக்கும் என்று படிக்கநினைத்தேன்.

"There are lots of personal information not only about mine, but about my entire family, I know I can trust you, but you should know that too." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

 நான் சட்டென்று, “அகிலா உன்னை வெறுக்கிறதைப் போல் உன்னிடம் எதுவும் இருக்க முடியாதுன்னு தெரியும். நீ என்கிட்ட இதைக் கொடுக்க நினைத்ததையே நான் பாஸிடிவ்வா எடுத்துக்கிறேன். நான் இதைப் படிக்கலையே!” 

உளறினேன். 

“இல்லை பரவாயில்லை நீ படிச்சித்தான் ஆகணும், after reading this if you cant keep it with you, I am fine." மேலும் சீண்டினாள். நான் பதிலெதுவும் சொல்லாமல் டைரியுடன் நகர்ந்தேன், என்னை அகிலாவை வெறுக்கும் படி செய்ய அப்படி என்ன இருக்க முடியும் என்ற கேள்வியுடன்.

தாஸ்,
நான் இதுவரைக்கும் உன்கிட்ட என் ஃபேமிலி பத்தி பெரிசாச் சொன்னதில்லை, நீயும் கேட்டதில்லை. ஜெயஸ்ரீயை பத்தி மட்டும் உனக்கு கொஞ்சம் தெரிஞ்சிருக்கலாம், அதுவும் எத்தனை தூரம் அவளுடன் ஒத்துப் போகக்கூடியதுன்னு எனக்குத் தெரியாது.
காதலிக்கிறப்ப இதப்பத்தில்லாம் தெரிஞ்சிக்கணும்னு அவசியம் இல்லைதான், நானும் உன்னை இப்ப நம்புறது போல நம்புறதுக்கு முன்னாடி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் என்னை கல்யாணம் பண்ணிக்கப்போறவன் கிட்ட எதையும் மறைக்கணும்னு நான் நினைக்கலை. இப்ப நான் சொல்ற விஷயத்தை எல்லாம் நாம சாட் பண்றப்பவே ஏன் சொல்லலைன்னு நீ கேட்கலாம். அதுக்கு என்கிட்ட பதில் கிடையாது, அதே மாதிரி நீ இதைப் படிச்சிட்டு இதைப்பத்தி கேக்கப்போற எந்தக் கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லை. 
எங்க அப்பா ஒரு குடிகாரன், சாரி உனக்கு சட்டுன்னு ’ன்’ போட்டுப் பேசுறதால படிக்கிறதுக்கு கஷ்டமாயிருக்கலாம், ஆனா என்னால வார்த்தைக்காக கூட அவனை ‘ர்’ போட்டுச் சொல்ல முடியாது. எங்கம்மாவைப் பிடிக்காம எங்க தாத்தா வற்புறுத்தினாருங்கிறதுக்காக கல்யாணம் கட்டிக்கிட்டானாம், பாவம் எங்கம்மாவுக்கும் தாத்தாவை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாம கட்டிக்கிட்டிருக்காங்க. கல்யாண நாளிலிருந்து எங்கப்பன் சாகற வரைக்கும் எங்கம்மா பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. பாதி நாளு வேலைக்கே போனதில்லை, எங்கம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டு எங்கள வளத்தாங்க. அவங்க சம்பளத்தையும் அடிச்சி பிடிங்கி குடிச்சிருக்கான் படுபாவி. அதுகூட பரவாயில்லை குடிச்சிட்டு வந்து தினம் தினம் எங்கம்மாவை எங்க கண்ணு முன்னாலையே அடிப்பான், தலையை சுவத்தில் கொண்டு மோதுறது, முகத்தில் கையை மடக்கி குத்துறதுன்னு தினம் தினம் எங்கம்மா முகம் கிழிஞ்சி தான் படுக்க வருவாங்க. நானும் ஜெவும் இதைப் பாக்காத நாளே இல்லை.

இதில எங்கம்மா மேல சந்தேகம் வேற, எவன் கூடவோ போய்ப் படுக்குறாங்கன்னு. உனக்கு எப்ப தாஸ் கெட்ட வார்த்தையெல்லாம் தெரிஞ்சிருக்கும், சுன்னி, புண்ட, கூதி, கண்டார ஓழி, தேவுடியா முண்ட இதெல்லாம். விவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து இதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கேன் நான். எவன் கூடடி போய்ப் படுத்துட்டு வந்த, எந்த சுன்னிய ஊம்பிட்டு வந்தன்னு என் சின்ன வயசில கேக்காத நாளே இல்லை. நானும் சின்னப்பிள்ளைல சினிமா எல்லாம் பாத்துட்டு ஒரு நாள் அவன் திருந்திருவான்னு நினைச்சிருக்கேன். ம்ஹூம் அவன் திருந்தவும் இல்லை, எங்கம்மா படுற கஷ்டம் போகவும் இல்லை. என்ன இழவு காரணமோ தெரியாது என்னையும் ஜெவையும் ஒன்னுமே சொன்னது கிடையாது, திட்டினது கிடையாது. அவனுக்கு எங்கம்மா அடிக்கிறதுக்குத் தான் டைம் இருந்துச்சு. 

நான் சொல்ல வந்தது இதையில்லை, ஆனா இதை இப்படித்தான் சொல்ல முடியுமாயிருக்கும். அதனால சொல்றேன்.

அப்புறம் எனக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சது, தினமும் நைட் எப்ப செக்ஸ் வைச்சிக்கலாம்னு கேட்டு எங்கம்மாவை டார்ச்சர் செய்யறதை தினமும் கேட்டிருக்கேன். அவ்வளவு ப்ளைனா இல்லைன்னாலும் விஷயம் அதுதாங்கிற லெவலுக்குத் தெரிந்திருந்துச்சு. எவனோ ஒருத்தன் அவனோட அம்பது வயசுல குழந்தை பெத்திக்கிட்டதும், நானும் இப்பவும் ஆம்பளைன்னு நிரூபிக்கணும் குழந்தை பெத்துக்கொடுன்னு கொடுமைப் படுத்தினது கூட நினைவிருக்கு. அம்மா கருத்தடை ஆப்பரேஷன் செய்துக்கிட்டவங்க. அம்மா பாவம் வெளியில் போய் வேலையும் செய்திட்டு வந்து, சாப்பாடும் செஞ்சிக் கொடுத்துட்டு, நைட் அடியும் வாங்கிட்டு இவன் கூட காலங்காத்தால எங்களுக்குத் தெரியாமல் போய் படுத்துக்கணும். நான் அப்ப வயசுக்குக் கூட வரலை, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, ஆனா அவங்க செக்ஸ் வைச்சிகப் போறாங்கன்னு தெரியும். அந்தாள் கேக்கம் போதும் எங்கம்மா வேணாம் வேணாம் கெஞ்சிறது கூட கேட்கும். ஆனா ஒரு நாள் கூட என்னால் முழிச்சிருக்கவோ, அவங்க என்ன செய்வாங்கன்னு கேக்கவோ பாக்கவோ முடிஞ்சதில்லை. நான் இதில் போய் பொய் என்ன சொல்லப்போறேன். ஆனா சில நாள் போதை அதிகமாகி அம்மாவை பொட்டுத் துணி கூட போடாம நிக்க வுட்டுப் பார்த்திருக்கேன். எதுக்குமே கலங்காத அம்மா அப்ப மட்டும் அழுதுக்கிட்டே கதவை சாத்திவிடச் சொல்லும், எங்களைத் திட்டி போய்ப் படுக்கச் சொல்லும், அழ வேண்டாம்னு சொல்லும். ஆனால் அந்த வயசுல முடியாத ஒரு விஷயம் அழாம இருக்கிறது, இன்னிக்கு நான் அழறதே கிடையாது, என்னால அழவே முடியாது, என் அம்மாவை நினைச்சிப்பேன் அந்தக் கஷ்டத்துக்கு முன்னாடி நான் படுறது என்ன கஷ்டம்னு நான் அழுததே இல்லை. 

சரி விஷயத்துக்கு வர்றேன், உனக்கு டாக்டர்ஸ் ப்ளேன்னா என்னான்னு தெரியுமா தெரியாது. அது ஒரு குளிர்காலம்னு மட்டும் ஞாபகம் இருக்கும் இன்னும் கூட மழை பெஞ்சிக்கிட்டிருந்திருக்கலாம், நானும் ஜெவும் ஒரு பெட்ஷீட்டிற்குள் படுத்திருந்த ஞாபகம். நான் அப்ப வயசுக்கு வரலை, அவ உடம்பு என் மேல படுற சூடு என்னைத் தவிக்க வச்சது. நான் அவளோட வஜைனாவையும் அவ என்னோட வஜைனாவையும் பார்த்துப்போம், ஊசி போட்டுப்போம். ஊசின்னா ஊசி கிடையாது வெளக்கமாத்து குச்சி ஒன்னை எடுத்துக் குத்துறது. இப்படியெல்லாம் விளையாடியிருக்கோம். ரொம்பக் காலம் என்னை உறுத்தின விஷயம் இது, என் தங்கைய இப்படிச் செய்திட்டனேன்னு, உனக்குத் தெரியுமா தாஸ் இன்னைக்கு நினைச்சா அது கனவா இல்லை நிஜமா நடந்ததான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. ஆனா இதைப்பத்தி நான் அந்த வயசில நிறைய நினைச்சிருக்கேன். அதனால என்னால நிச்சயமா சொல்ல முடியும் கனவில்லைன்னு சொல்ல முடியும். ஆனா இதையெல்லாம் நான் வற்புறுத்தித்தான் ஜெவை செய்ய வச்சேன். இன்னிக்கு நானும் ஜெவும் அல்மோஸ்ட் லெஸ்பியனா இருக்கோம்னா அதுக்கு நான் தான் காரணம்னு எனக்கு மனசு உறுத்திக்கிட்டேயிருக்கு. ஆமாம் தாஸ், நான் உன்கூட ஊட்டிக்கு வர்றதுக்கு முன்னாடி என்னையை ஒரு லெஸ்பியனாத்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.

தமிழ்நாட்டில் கொஞ்சம் அழகா பொறக்கறதில் இருக்கற பிரச்சனை தெரியுமா தாஸ்? அது அத்தனையையும் நான் ஃபேஸ் பண்ணியிருக்கேன், வயசுக்கு வந்த ஒரு மாசத்துல ஒரு பையன் ‘உன் முலை ரொம்ப அருமையா இருக்கு, என் சுன்னியப் பார்க்கறியான்னு’ சொல்லி யாருமில்லாத ரோடொன்றில் ஜட்டியைக் கழட்டி காண்பிச்சான். நான் என்ன செய்திருக்க முடியும்னு நினைக்கிற, உதவாத அப்பன் ஒருத்தனை வைச்சிக்கிட்டு அம்மாகிட்ட சொன்னேன் அம்மாவாலையும் தான் என்ன பண்ணியிருக்க முடியும், மக்கள் நடமாட்டம் இருக்கற வரைக்கும் தான் என் நடமாட்டம்னு முடிவு செய்யறதைத் தவிர. என் கூடப்படிச்ச எனக்கு லவ்லெட்டர் கொடுக்காத பையனுங்களே கிடையாது, என் பின்னாடியே சுத்தறது, ஒரு பையன் பேரைச் சொல்லிக் கூப்பிடுறது இப்படின்னு வீட்டை விட்டு ரோட்டுக்கு வர்றதுன்னாலே பயந்த காலம் இருந்தது. வீட்டை விட்டு வெளியில் வந்தா எந்தப் பையன் என்னைப் பின் தொடர்ந்து வருவான் எவன் லவ்லெட்டர் கொடுப்பான்னு தினம் தினம் பயந்து செத்திருக்கேன். வீட்டுல மட்டும் என்ன வாழ்க்கை அப்பல்லாம் எனக்கு துணையா இருந்தது ஜெ மட்டும் தான், அம்மாவுக்கு அப்பாகிட்ட அடிவாங்கவே நேரம் பத்தாது. எனக்கும் ஜெவுக்கும் ஒரு வருஷம் தான் வயசு வித்தியாசம். நான் அவகிட்ட எல்லாத்தையும் சொல்லுவேன், என்னோட ஆறுதலே அவ மட்டும் தான். சொல்லப்போனா அவளும் எங்கப்பனும் தான் ஒரு வைராக்கியமா என்னை ஜெயிக்க வைத்தது, இந்தப் பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு நாங்க நல்லா படிக்கிறதுதான்னு எங்களுக்கு சின்ன வயசிலேயே தெரிஞ்சிருந்தது. எங்கப்பன் எங்கம்மாவுக்குக் கொடுத்த டார்ச்சரால் நொந்து இருந்த என்னை எப்பவும் ஜெதான் தேத்துவா.

டாக்டர்ஸ் ப்ளேன்னு சின்னவயசில செக்ஸ் பத்திய மனப்பான்மை இல்லாம செய்வதைச் சொல்வாங்க, அதாவது விளையாட்டா ஆண் பெண் உறுப்புக்களைத் தொட்டுப் பார்க்குறது, ஆனால் எங்களுக்கு எது சரி எது தப்புன்னு சொல்லித்தர்ற நிலையில எங்கம்மா இல்லேங்கிறதால, நாங்க அதில் செக்ஸுவல் இன்டன்ஷன்ஸ் கொண்டு வந்துட்டோம் வயசுக்கு வந்ததுக்கு அப்புறம். எனக்கென்னமோ ஆண்களையே பிடிக்காமப் போயிருந்ததால் எனக்கு இதில் சம்மதம் இருந்தது, வயசுக்கு வந்ததுக்கு அப்புறம் ஜெ தான் இதை ஆரம்பிச்சான்னாலும் அதற்கும் நான் தான் காரணம்னு இன்னமும் நினைக்கிறேன். எங்கப்பனோ இல்லை ஜட்டியைக் கழட்டி காண்பிச்சவனோ, எங்கப்பன் கடன் வாங்கிட்டு வரச்சொன்னப்போ மாரைக் கசக்கினவனோ இல்லாமல் நான் என்னையத்தான் இதற்கு காரணம்னு சொல்வேன். நான் சந்தோஷமாதான் இருந்தேன் இருக்கேன், அக்கா தங்கை லெஸ்பியனா இருக்கிறதைப் பத்திய கேள்விகள் எனக்குள்ள உண்டுன்னாலும் நானும் சரி ஜெவும் சரி ஒரு மாதிரி எங்களை இந்த அடலஸண்ட் காதல் கிட்டேர்ந்து இப்படித்தான் காப்பாத்திக்கிட்டோம், எங்களுக்கு நாங்களே ஒரு மாதிரி உதவி செய்திக்கிட்டோம்னு தான் நான் நினைக்கிறேன். ஊட்டி வர்றவரைக்கும் என் வஜைனாவிற்குள் எதையும் நுழைத்துக் கொண்ட நினைவில்லை. எனக்கு நான் லெஸ்பியனாங்கிற டவுட் இருந்துக்கிட்டேதான் இருந்தது, ஆனால் ஜெக்கு அப்படியில்லை. அவள் தான் ஒரு லெஸ்பியன்னு நம்பினாள். என் டவுட் என்னை என் கிளிட்டோரிஸை விட்டு கீழே நகர விடலை, ஜெவுக்கு அதிலும் விருப்பம் இருந்தது. அவள் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் எங்கிருந்தோ ஒரு டில்டோவைக் கூடப் பிடித்துக் கொண்டு வந்திருந்தாள், நான் மறுத்துவிட்டேன். என் உச்சத்தை கிளிட்டை நக்குவதால் மட்டுமே பெற்றுவந்தேன், ஜெவின் கைகளுக்குக் கூட அனுமதியில்லை. நான் என் முதல் உடற்சேர்க்கையின் பொழுது தான் ஹைமன் கிளியும் என்றே நினைத்தேன். அதனால் தான் அத்தனை பிரச்சனையும். சரி அதை விடுங்கள்.

நான் என்னை இப்படி ஒரு லெஸ்பியனாக நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது தான் நமது நட்பு உருவானது, எதனால் உன்னை எனக்கு இவ்வளவு பிடித்திருந்ததுன்னு தெரியாது. Love at first sight கிடையாது நம்முடையதுன்னு உனக்கும் தெரியும், நீ என்னைக் கன்வின்ஸ் செய்து கொண்டேயிருந்தாய் ஆனால் உன்னால் என் பாறைக்குள் நுழைய முடிந்திருந்தது. இஞ்ச் பை இஞ்சா உன்னால் என்னை நகர்த்த முடிந்தது. ஆரம்பத்தில் நான் நகர்ந்தேனான்னு தெரியாது ஆனால் உன்னுடனான சேட்டிங் என்னை நகர்த்தியது. மொத்தமாய் உன்னை நிராகரித்ததிலிருந்து, உன்னுடனான உரையாடல்களுக்கு ஒப்புகொண்டு, என் எல்லைகளுக்குள் நின்று கொண்டு செய்த பெற்ற விளக்கங்கள், எல்லைக்களைக் கடந்து இணையவெளியில் உலவியது, பின்னர் நேர்ப்பேச்சில் எல்லாம் பேச வைத்தது என நான் மாறிக்கொண்டேயிருந்தேன். ஆனால் எனக்கே தெரியாமல் இந்த மாற்றம் என்னிலிருந்த என் செக்ஸுவல் ஓரியன்டேஷனைப் பற்றிய கேள்வியை எழுப்பத் தொடங்கியது. உன்னுடனான பழக்கம் சென்று கொண்டிருந்த பொழுதுகளில் எல்லாம் நானும் ஜெவும் ஒன்றாகயிருந்ததில்லை என்று பொய் சொல்ல நான் விரும்பவில்லை, ஆனால் என் லெஸ்பியன் நம்பிக்கையை மீறியும் என்னால் ஒரு ஆணுடன் உறவு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உன்னால் தான் வந்தது. ஆனால் சாதாரணமாய் வரவில்லை, கடைசி வரை என்னிடம் ஒட்டிக் கொண்டிருந்த ஆண்களின் மீதான வெறுப்பு - என் அப்பனின் காரணமாய் - என்னை உன்னிடம் நெருங்க விடவில்லை. தோற்றுப் போவதன் வலி என்னை முயற்சி செய்ய விடவில்லை. ஆனால் செய்யச் சொன்னது ஜெதான்.



உன்னுடனான என் பழக்கம் ஜெவிற்கு தெரிந்துதானிருந்தது, பிடித்தும் தான். நான் ஜெவிடம் ரொம்பவும் டிபன்டன்ட் ஆக இருந்தேன், அதை அவள் வெறுத்தாள் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படியில்லாமல் இருந்தால் நன்றாகயிருக்குமென்று அவள் நினைத்திருக்கலாம். நான் லெஸ்பியனா என்பதைப் பற்றிய சந்தேகம் எனக்கு இருந்ததும் இருப்பதும் அவளுக்குத் தெரியும், ஒருவேளை நான் உன்னுடன் உறவு கொள்ள முடியாமல் போனால் ஒரு வகையில் என் செக்ஸுவல் ஓரியன்டேஷன் எனக்குத் தெரிய வாய்ப்பிருக்கும் என்று கூட நினைத்திருக்கலாம். நீ அவளுடன் புனே சென்ற பொழுது என்ன செய்தாயோ எனக்குத் தெரியாது, அவளுக்கு உன் மேல் நம்பிக்கை வந்ததும், என்னை உன்னிடம் டெஸ்ட் செய்து கொள்ளும் படியும் அவள், புனே சென்று வந்ததும் தான் சொன்னாள். அவள் சொன்னால் உன் உள்மன அளவிளாவது நீ ஒரு லெஸ்பியனா இல்லையா என்பது தெரிந்து தான் ஆகவேண்டும் என்றும், அதை உறுதி செய்யும் பல வழிகளில் இதுவும் ஒன்றென்றும், அவளுக்கு இது உதவியதுன்னும் சொன்னாள். எல்லாவற்றிற்கும் பிறகும் என்னால் தோல்வியடைவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. நான் காலம் கடத்தினேன் ஆனால் உன் டைரி நீ எவ்வளவு தூரம் என்னைக் காதலிக்கிறாய் என்பதைச் சொன்னது, அதன் ப்ராக்டிகல் தன்மை என்னை உன்னிடம் கொடுக்க இசைந்தது. ஆனாலுமே எனக்கு கடைசி வரை என்னால் ஒரு ஆணுடன் சந்தோஷமாய் இருக்க முடியுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் இருக்க முடிந்தது என்னில் பல மடங்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. எனக்கு நான் உன்னிடம் அன்று முதல் முறையே அப்படி நடந்து கொண்டது - இரண்டாவது ஆர்கஸம் வரவழைக்க நான் செய்த அத்தனையும், முதல் தடவை தான் நீ வாயை வெச்சதும் வந்துடுச்சே - உனக்கு தவறா தெரிஞ்சிடுமோன்னு பயந்தேன். ஆனால் நீ என்னைப் புரிந்துகொண்டதாய் இதுவரைக்கும் நினைக்கிறேன்.

நீ என்னிடம் என் மாஸ்டர்பேஷன் பற்றிக் கேட்டதற்கான பதிலும் இந்தக் கடிதத்தில் இருக்கு. ஆமாம் நான் செய்திருக்கேன், செய்துக்கிட்டிருக்கேன் - நீ நம்ப கல்யாணத்துக்குப் பிறகு என்னை சேட்டிஸ்ஃபை செய்யலைன்னா செய்துப்பேன். கலாச்சாரம் பண்பாடு லெஸ்பியன் ஹோமோசெக்ஸுவல் பத்தியெல்லாம் நீ என்னுடன் சாட்டிங்கில் பேசியதை வைத்து உன்னைப் பற்றிய ஒரு அபிப்ராயம் எனக்கு இருக்கு. ஆனால் அது தவறாகவும் நான் தவறா புரிந்துகொண்டதாகவும் கூட இருக்க முடியும். உன்னை எதற்காக இல்லாட்டாலும் இதை நீ ஊருக்கெல்லாம் சொல்லி என்னை அசிங்கப்படுத்த மாட்ட என்கிற அளவி உன்னை நம்புகிறேன். மற்றதை நீ சொல்லித் தான் தெரிஞ்சிக்கணும். FYI என் அப்பன் செத்துப்போய் ஐஞ்சு வருசம் ஆகுது, நான் காலேஜ் படிக்கிறப்பவே தண்ணியடிச்சி ரோட்டில் அடிபட்டு செத்துப்போய்ட்டான். அம்மா ஊரில் இருக்காங்க நானும் என் தங்கையும் மட்டும் தான் இங்க இருக்கோம். என்னை நீ கல்யாணம் செய்துக்க முடியும்னா என் பக்கத்தில் இருந்து நான் என்ன செய்யணும்னு சொல்லு, இன்னொரு முக்கியமான விஷயம் இந்த லெஸ்பியன் விஷயத்தைத் தவிர்த்து என் தங்கை ரொம்ப நல்லவ, என் உயிரை விட மேலாதான் அவளை நினைச்சிக்கிட்டிருக்கேன் அதனால அவகிட்ட உன்னால மரியாதையா நடந்துக்க முடியாதுன்னா - I mean எப்படி சொல்றதுன்னு தெரியலை உனக்கு எப்படிப் படுதோ அப்படி வைச்சிக்கோ - இப்பவே சொல்லிடு.

என்கிட்ட இதைப்பத்தி நேரிலோ, போனிலோ இல்லை சாட்டிங்கிலோ நீ பேசலாம் எல்லாவற்றுக்கும் தயாரா இருக்கேன். 

அகிலம்.

நான் படித்து முடித்து நிறைய நேரம் இதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

----------------------

"Its not fair" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம் வித்தியாசம். நான் எப்பொழுதும் அப்படியே தான் இருந்தேன், அகிலாவின் இடத்தை ஜெயஸ்ரீயும் ஜெயஸ்ரீயின் இடத்தை அகிலாவும் எடுத்துக் கொண்டார்கள், பெரும்பாலும் நான் வம்பிழுக்கும் சமயங்களில் அகிலா கோபப்படுவாள், ஜெயஸ்ரீ சிரித்துக் கொண்டிருப்பாள். இன்று வித்தியாசம். காரணம் இருந்தது. 

"You saw me naked, I want to see you..." நான் முடிக்காமல் இழுத்தேன். ஜெயஸ்ரீ கைகளில் இருந்த ஜூஸை என் தலையில் கொட்டிவிட்டு வேகமாக வெளியேறினாள். சிரித்தவிட்டு பின்னர் முறைத்தவாறு அகிலாவும் ஜெயஸ்ரீயைப் பின்தொடர்ந்தாள். இது வழமையாக நடப்பதுதான் என்பதைப் போல் சிப்பந்தி ஒன்றும் சொல்லாமல் என்னிடம் பில்லை நீட்டினான். நான் இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தேன். 


3:30 PM aeswari: ஏன்டா படுத்துற. 
me: ஜெயா என்ன சொன்னா? 
aeswari: she thought it was not funny. 
me: நானும் வேடிக்கைக்குச் சொல்லலை. 
அவ தெரிஞ்சே தான் உள்ளவந்தா!
aeswari: in the three of us, you enjoyed the most. :)
why killing the sprit, she got the guts to do whatever she did.
dont embarrass me in front of her. :)
whatever you saw is more than enough for your lifetime, I know. ;)
3:42 PM me: Dont treat me like an outsider, Aki.
3:50 PM me: are you there?
aeswari: yes
its between you and her. dont involve me. 
I dont like the way its going. 
you dont get me and her, thats dot point. 
are you there?
4:02 PM aeswari: are you there???
me: ம்ம்ம்.
நான் அப்படிச் சொல்லலை. அது என்னோட விருப்பமுமில்லை. 
why cant you guys see my point.
aeswar: whats your point, bullshit point. 
you saw me naked, just think of her head instead of mine. 
thats it. 
me: அது சரி.
aeswari: seriously, she looks exactly like me, naked.
4:14 PM aeswari: shit what am I explaining to you
you and your crappy logic. 
dont talk to me ever, if you want to see my sister naked :)

ஜெயா என்னை கூகுளில் இணைத்து உரையாட அழைத்த வேண்டுகோள் அப்பொழுதுதான் வந்தது. 

4:30 PM me: Hi
jayashree: dont get any ideas
but i sent you the photo
I shouldnt have entered the house, that day, I am so sorry
this is where it ends
dont tell Akila
good bye.

சாட்டிங்கில் இருந்து மறைந்து போனாள். மெயில் வந்திருந்தது, திறந்து பார்த்தேன், அவள் தான். அப்படித்தான். நான் வேகமாக டெலிட் செய்துவிட்டு அகிலாவை அழைத்தேன்.

are you there
4:35 PM aeswari: yes tell me
me: Jaya send me a picture of her, naked, I deleted it. 
I didnt think she would do it. 
I am feeling bad about me now. 
She asked me not to tell you. But I dont want to hide it. 
I am sorry, convey my sorry to her
I will behave.
aeswari: she told me too. we were testing you
whether you would say that or not. :)
dont worry Jaya is alright, we were kind of teasing you.
i know she is going to come to room :)
we thought you would advance on her too. 
but you are good. stayed with me. :)
good boy.
still, you would only get me. not her. got it.
I am serious about it.
me: I want that photo back. I deleted it.
aeswari: dream about it. :)

______________________________________________________

கனவு போலிருந்தது, அகிலா தனக்கும் ஜெயாவிற்கும் இடையில் இருக்கும் உறவை என்னிடம் அறியத்தந்த பொழுது, அதை எப்படி அணுகுவது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் தவறாக அணுகிவிடக்கூடாது என்று மட்டும் உறுதியாக நினைத்தேன். அகிலாவை நினைத்து பெருமையாக இருந்தது, ஜெயாவையும் தான். அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் வாழ்க்கையில், அவள் என்னைத் துன்புறுத்தியது எல்லாம் இப்பொழுது நினைத்தால் எவ்வளவு சரியென்று படுகிறது. அவள் என்னை முற்றிலும் நிராகரித்திருந்தால் கூட சரிதான், நல்லவேளை அவளை ஊடுறுவ என்னால் முடிந்திருந்தது. தொடர்ச்சியாய் கூகுள் சாட் மூலமாக அவளை நச்சரித்து அவள் கூட்டுக்குள் இருந்து வெளியில் கொண்டுவந்திருந்தேன். அவளைப் பார்க்கவேண்டும் போலிருந்தது அழைத்திருந்தேன், வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தாள்.

வந்திருந்தேன். முன்னமே வந்திருந்திருக்கிறேன், வீட்டு முனை வரை, வீட்டிற்குள் வந்திருக்கவில்லை. கதவைத் தட்டினேன், அவள் தான் திறந்தாள், மெல்லியதாய்க் கட்டி அணைத்து 'வா தாஸ்' சொல்லி விலக நினைத்தவளை இறுகக் கட்டி அணைத்தேன். அனுமதி மறுக்கவில்லை, பின்னர் விலகியவள் நேரடியாய் சமையற்கட்டில் நுழைந்தாள், அங்கிருந்து வெளியில் வந்த ஜெயா 'வாங்க' என்று சொல்லிவிட்டு இன்னொரு அறைக்குச் சென்றுவிட்டாள். அகிலா அவர்களைப் பற்றி என்னிடம் சொன்னது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்த வீட்டில் நிறைய பொருட்கள் இல்லை, ஆனால் இருந்த பொருட்கள் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தன. ஹாலில் இருந்த சைக்கிள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும், நானறிந்த வரை அகிலா சைக்கிள் உபயோகிப்பதைப் பற்றி பேசியதில்லை என்பதால் அது ஜெயஸ்ரீயினுடையதாகத் தான் இருக்க வேண்டும். நான் அந்த அறை முழுவதும் ஒட்டப்பட்டிருந்த பழைய புதிய புகைப்படங்களைப் பார்த்தபடியிருந்தேன். அவர்கள் குடும்ப புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, காபி தம்ளருடன் வந்தவள். 'எங்க அம்மா, அப்பா அப்புறம் நாங்க ரெண்டு பேரும், எனக்கு ரொம்ப பிடிச்ச ஃபோட்டோ' என்றாள். புகைப்படம் அருமையாக இருந்தது. முக்கால் பேண்ட்டும் டீஷர்ட்டும் போட்டிருந்தாள், அவளை பெரும்பாலும் கேஷுவல் உடையில் பார்த்ததில்லை. தம்ளரை வாங்கி பக்கத்தில் வைத்து மீண்டும் அவளைக் கட்டிப்பிடிக்க முயற்சித்தேன். மறுத்தவள் கண்களால் மிரட்டி உள்ளறையைக் காட்டினாள். நான் பயந்தவன் போல் சைகை செய்து அவளைப் பிடித்திழுத்து முன்பக்கமாய் டீஷர்டிற்குள் கைவிட்டேன், தட்டுப்பட்டிருக்காது, அதற்குள் தட்டிவிட்டவள், ஜெயஸ்ரீ இருந்த அறைக்குள் நுழைந்துகொண்டாள். 

நான் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து தொலைக்காட்சிக்கு உயிரூட்டினேன். உள்ளிருந்து அகிலா வெளியில் தள்ளப்பட்டதை உணர்ந்தேன், வந்து என்னருகில் உட்கார்ந்தாள். இனி அவள் உள்ரூம் செல்லமுடியாது என்று புரிந்து கொண்டேன். 'அது என்ன அகிலா' என் இடப்பக்கம் உட்கார்ந்த அகிலாவிடம், இடது மூலையைக் காட்டிக் கேட்டேன், அவள் தீவிரமாய் திரும்பி நான் எதைக் காட்டுகிறேன் என்று பார்க்க நினைத்த தருணத்தில், பின்பக்கமாய் அவள் டீஷர்டிற்குள் கைவிட்டு பிரா ஹூக்கைக் கழட்டிவிட்டேன். தோள்களை பின்னகர்த்தி நான் செய்ததை உணர்ந்தவள் முகம் சிவந்து போனது. டீஷர்ட்டில் கழண்டிருந்த பிரா முன்பக்கம் தெளிவாய்த் தெரிந்தது. சமாளித்துக் கொண்டவள் 'ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் தான்' என்றவாறு அவளாய் ஹூக்கைப் போட முயன்றவள், 'தொல்லைப் பண்ணாதடா, போட்டுவிடு' முதுகைக் காட்டினாள் 'அவ எதாவது நினைக்கப்போறா, ஏற்கனவே வீட்டுக்குக் கூப்பிட்டதில் சந்தோஷம் இல்லை போலிருக்கு' காதில் கிசுகிசுத்தாள். நான் மேலும் வம்பு செய்யாமல் நல்ல பிள்ளையாய் போட்டுவிடத்தான் நினைத்தேன், பிராவின் முனைகளைத் தேடிய என் கைகள் தானாய் அவள் மார்களை நோக்கி நகர்ந்து அவள் முலைகளை எடை போட முயன்று பின் காம்புகளைத் தொட்டது, அவளிடம் ரியாக்‌ஷன் இருந்திருந்தால் இன்னும் சீண்டியிருக்கும். அவள் மௌனம் முனைகளைப் பற்றி ஹூக்கை மாட்டிவிடச் செய்தது. திரும்பியவள் மெல்லியதாய் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள், நான் மறு கன்னத்தைக் காட்டினேன், முத்தியவள் அவளாய் உதட்டுக்கு நீண்டாள். என் கைகளை கட்டுப்படுத்த முயன்றேன் முடியாமல் வலது கை அதுவாய் அவள் இடது முலையை நோக்கி நகர்ந்தது, அவளைக் கஷ்டப்படுத்துவதில்லை என் நோக்கம், நொடிக்கொரு தினுசாய் அழுத்தம் அதுவாய் அதிகரித்திருக்கவேண்டும், உதட்டைப் பிரித்தவள், கைகளைத் தட்டிவிட்டு, 'ச்சப்பா அதென்ன பந்தா, இப்படிப் பிசைஞ்சா வலிக்காதா' என்று கிசுகிசுத்தபடி, சோபாவின் இன்னொரு பக்கம் சென்று உட்கார்ந்தாள். 

ஜெயா வெளியில் வந்து அங்கும் இங்கும் அலைந்துவிட்டு திரும்பவும் அவள் அறைக்குள் நுழைந்துகொண்டாள், நாங்கள் நல்ல பிள்ளைகள் போல் உட்கார்ந்திருந்தோம், சோபாவின் இரு ஓரங்களில். அவள் அறைக்குள் நுழைந்ததும் நான் அகிலாவைச் சீண்டுவேன் என்று அவள் உணர்ந்திருக்கவேண்டும், நான் சீண்டும் முன்னமே எழுந்து நகர்ந்தாள், நாங்கள் மௌனமாய் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம், சத்தம் வராமல் இருக்க பெரிதும் முயன்றோம். ஆனால் ஜெயாவிற்கு கேட்டிருக்கும் தான், அகிலா சமையற்கட்டில் நுழைந்தாள், நான் பின் தொடர்ந்தேன். எனக்கு முதுகைக் காட்டியபடி ஸ்டவ்வின் முன் நின்றிருந்தாள், அவளை ஒட்டி நின்று அவள் கழுத்தில் வாசம் பிடித்தேன். அவள் இடுப்பில் படர்ந்த கைகள், தொப்புளைத் தொட்டு, வலது கை மட்டும் அவள் பேண்ட்டிற்குள் நுழைய முயற்சிக்க. அவள் கைகள் என்னை முழுவதும் தடுக்கவில்லை, நான் பேன்ட்டிக்குள் நுழைக்காமல் பேண்ட்டிற்கும் பேன்ட்டிக்கும் இடையில் நின்றேன். சிறிது நேரம் போகட்டும் என்று விட்டவள் கையை எடுத்து வெளியில் விட்டாள். பின்னால் மெல்லிய ஹம்மிங் கேட்டது, நானும் அவளும் சட்டென்று விலகி நின்றோம். ஜெயா தான். 

'பசிக்குது ரெண்டு தோசை சுட்டுக் கொடேன்.' அகிலாவிடம் கேட்டாள், நான் அங்கிருந்து நகர்ந்து திரும்பவும் ஹாலுக்கே வந்துசேர்ந்தேன். மனம் படுக்கையறைக்குள் நுழைய நினைத்தது, கொலையா செய்துவிடப்போகிறார்கள், என்று நினைத்தவனாய் அதுவரை ஜெயா இருந்த அறைக்குள் நுழைந்தேன். ஹாலைப் போலில்லாமல் அங்கே கழற்றிய துணிகள் கொஞ்சம் அங்குமிங்கும் கிடந்தன, நல்ல விசாலமான அறை இரண்டு ஜன்னல்கள், படுக்கைக்கு இடது வலதாக இரண்டு மர பீரோக்கள், அதில் ஒன்று அகிலாவுடையதாகயிருக்கவேண்டும். நான் மிகச்சரியாய் தவறான பீரோவை திறந்திருந்தேன், அது அகிலாவுடையது இல்லை என்று தெரிந்ததும் மூடிவிட்டு, மற்றதைத் திறந்தேன். வரிசையாய் அடிக்கியிருந்த உடைகள், உள்ளாடைகள் எல்லாவற்றையும் கடந்து நிறைய டைரிகள், அவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால் புதையல் தேடி வந்தவந்தவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன? கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவர்கள் கட்டிலில் உட்கார்ந்து டைரியைப் புரட்டினேன். இரண்டு தோசைக்குள் இரண்டு பக்கமாவது படித்துவிட. சந்தேகப்பட்டிருக்க வேண்டும், வேகமாக அறைக்குள் வந்த அகிலா, தாவி என் கையில் இருந்த டைரியைப் பிடிங்கினாள். திரும்பி டைரியை பீரோவுக்குள் வைத்தவள் பின்புறத்தை தட்டினேன். 'கொஞ்சங்கூட வெட்கமே கிடையாதா? அடுத்தவங்க டைரிய அனுமதியில்லாம படிக்கக்கூடாது' விரலை ஆட்டிக் காட்டினாள். நான் 'போடீ' என்று செல்லமாகச் சொல்லி அவள் காம்பை பிய்த்தெடுக்க நினைப்பவனைப்போல் கையை அவளை நோக்கி நீட்டினேன். சாதாரணமான நாட்களில் நிச்சயமாய் என் கைகள் அவள் முலைக்காம்பைக் கிள்ளியிருக்கும், ஆனா அன்று அவள் ஊகித்திருக்கவேண்டும், மிக எளிதாய்த் தட்டிவிட்டு நகர்ந்தாள். 'நான் பூட்டி வைக்கலை ஆனா படிக்கக்கூடாது அவ்வளவு தான்.' தோசைக்குத் திரும்பினாள். அவளை மீறி படிக்க நினைக்காததால் அங்கிருந்து நகர்ந்தேன். 

தோசை முடிந்து காலம் எங்கள் இடையில் சோபாவில் உட்கார்ந்திருந்தது. அகிலா என்னை ஒட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள், அந்தப்பக்கம் ஜெயஸ்ரீ. கை கால்களை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்க மிகவும் தொல்லையாகத்தான் இருந்தது, ஆனால் அகிலா என்னைத் தொட அனுமதித்தே நாட்கள் அதிகமிருக்காது. ஆனால் நான் அன்று அவர்கள் வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளைச் சீண்டிய பொழுதுகள் நினைவில் வந்து தொல்லை செய்தது. கைகள் பரபரவென்றது, அவளைத் தீண்ட, சீண்டி விளையாட, அவள் முலைகள் நினைவில் இருந்து விலகி விட்டிருந்தது, நினைவு படுத்திக் கொள்ள, மீண்டும் அவளை நிர்வாணப்படுத்த மனம் அலைபாய்ந்தது. அங்கே அப்பொழுது ஜெயஸ்ரீ இல்லையென்றால் என்ற எண்ணமே அட்ரியலின் எழுச்சியை அள்ளித் தெளித்தது. அவ்வளவு நெருக்கத்தில் இருந்தும், அவள் என் மீதான காதலில் தளும்பிக் கொண்டிருந்தும், என்ன செய்தாலும் ஒன்றும் சொல்லமாட்டால் என்று அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது, ஒரு விதமான தொல்லையாக இருந்தது. காலம் அப்படியே இருந்தது, ஜெயா 'எனக்கு கொஞ்சம் வெளியில் வேலையிருக்கு. நான் போகணும்.' சொல்லும் வரையில். அவள் வெளியில் சென்று கதவைச் சாத்தியிருக்கமாட்டாள், நான் வேகமாக அகிலாவின் டிஷர்ட்டைக் கழற்றினேன். அவள் என் சட்டையைக் கழற்றியெறிந்தாள். அந்த நாள் அப்படி நீண்டிருக்காமல் வேறு மாதிரி முடிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் தான் ஆனால் அவள் என் முன்னால் பிராவுடன் நின்றுகொண்டிருந்தாள்.

'நான் சொன்னேனே நீ ஒரு நாள் ஆசையா கேட்கிறப்போ நான் நிச்சயம் மறுத்து உன்னை அழவைப்பேன்னு அது இன்னைக்குத்தான். இன்னிக்கு உனக்கு இது கிடையாது.' என்று அவள் இடுப்பைத் தொட்டுச் சொன்னாள். நான் அவளை என்பக்கம் இழுத்து உதட்டைக் கவ்வினேன். முதலில் என் இழுப்புக்கு மட்டும் இசைந்தவள், பின்னர் முத்தத்தில் பங்கேற்றாள். எங்களுக்குள் மேலுதடு கீழுதடு மாற்றுவதில் பரிமாறுவதில் தடுமாற்றம் இருந்தது நாங்கள் முயன்றோம். இன்னொரு முறை அவள் ஹூக்கை கழற்றி முலைகளை பற்றினேன். வந்ததிலிருந்து என்னை அலையவிட்டு வேடிக்கை பார்த்ததற்கான தண்டனையை அங்கே கொடுத்தேன். 'வலிக்குதுடா' என்று சொல்லி மீண்டும் உதடுகளில் தொடர்ந்தாள், நான் கை மாற்றி மற்றதைப் பிடித்தேன். 'லூசு அது வலிக்காதா' அவள் விரல்களால் என் நெஞ்சில் கிள்ளினாள். நான் இன்னமும் பிசைந்தேன். உதட்டிலிருந்து வாயெடுத்தவள், நேராய் நெஞ்சில் கடித்து வைத்தாள். நான் துடித்தேன். பின்னர் அங்கே முத்தமிட்டவள், மாற்றி மீதமிறுந்தததைக் கடித்தாள், இந்த முறை இன்னமும் ஆழமாய். நான் அவளை மேலிழுத்து மீண்டும் உதடுகளில் தொடங்கினேன், இம்முறை அவள் காம்புகளைத் தீண்டத் தொடங்கினேன், மிகவும் மெல்லியதாய் பூனையைத் தடவிக் கொடுப்பதைப் போல அவளால் கசக்குவதைக் கூட தாங்க முடியுமாயிருக்கும் வருடியது தாளாமல் தட்டிவிட்டபடியிருந்தாள். அவளைத் தூக்கிக் கொண்டு படுக்கையறைக்குள் வந்தேன். அவள் கண்களை மூடியபடியிருந்தாள், கண்களுக்கருகில் குலுங்கிக் கொண்டிருந்த முலைகளை மனதில் பதிவு படுத்திக் கொள்ள மனம் அலைந்தது. கைகளில் தவழ்ந்த அவள் முலைகளில் முகம் புதைத்து சிலுப்பினேன். படுக்கையில் கிடத்தி அவள் மேல் படர்ந்தேன், முலைகளில் முகம் அலைந்த பொழுது. 'ப்ளீஸ் கடிச்சிராத' என்றாள். நான் காம்புகளில் தொடங்கி அவள் முழு முலையையும் வாயில் திணித்தேன். சிறிய வாய்க்கடக்கமான முலை. அவள் கைகள் என் பிடறியைப் பற்றியது, என் வாய்க்குள் தடுமாறிய முலையின் பதற்றம் அவள் கைகளில் இறுக்கத்தில் தெரித்தது. இன்னொரு முலைக்காம்பை சுற்றி வட்டமிட்ட விரல்களுக்கு பரிசாக விறைத்தது காம்பு. இப்பொழுது மாற்றி விரல் தொட்ட முலையை வாய்க்கும், வாய் விட்டதை விரலுக்கும் மாற்றினேன். அவள் உடல் பதறியது. தொல்லை தாளாமல் என் தலையை இடுப்பை நோக்கித் தள்ளினாள், என்ன செய்கிறாள் என்பதறியாமல். நான் உற்சவரிலிருந்து மூலவருக்கு வந்தேன். நான் அவள் பேண்டை கழற்றிய வேகத்தில் அது கிழியாமல் வந்தது பெரிய விஷயம். வெள்ளைக் கலர் பேன்ட்டியும் இருந்த இடம் தெரியாமல் தூரப்போனது. இரண்டு கைகளும் முலைகளில் பயிற்சி பெற நாக்கை கிளிட்டோரிஸை கண்டறிய அனுப்பினேன், அவளே சொன்னது போல் அவளுக்குப் புதிய அனுபவம் அல்ல, ஆனால் என் போதாமை கண்டு அவள் இடுப்பசைத்து நாக்கில் பொறுத்தினாள். தன்னிச்சையானது ஆனால் அவள் மனம் மறுத்திருக்கவேண்டும். என்னை தொடரவிடாமல், மேல் நோக்கி இழுத்தாள், நான் அன்று விடுவதாய் இல்லை. ஆனால் மீண்டும் இடுப்பசைத்து இடம் மாற்றினாள், நான் பதிலுக்கு கைகளில் விசை கூட்டினேன், இன்னமும் விளையாடினாள் வாய்க்கெட்டாமல் கிளிட்டோரிஸை மறைத்தபடி. மார் வலித்திருக்க வேண்டும், க்ளிட் வாய்க்கு வந்தது. சில பல வட்டம் கோடுகளுக்குப் பிறகு, 'போதும்' என்று சொல்லி மேலிழுத்தவள் கை என் இடுப்பில் மேய்ந்தது. எடுத்து அவள் இடுப்பில் பொறுத்த நினைத்து தடுமாறிய பொழுது சிரித்தாள், 'மத்ததெல்லாம் நல்லா தெரியும்.' சொன்னவள் இழுத்து விட்டுக்கொண்டாள். 'up suck' என்று அறிவியலாளர்கள் கூறும் ஒன்று எங்கள் குறிகளில் நிகழ்ந்தது. அவள் குறி கவ்விப் பிடிப்பதை உணர்ந்தபடி அப்படியே அசையாமல் இருக்க நினைத்தேன், ஆனால் அவள் இடுப்பசைவில் தொடங்கிய இயக்கம் எப்பொழுது என்னில் மாறியது என்று உணறும் முன் முறுக்கேற்றப்பட்ட விசைகூட்டப்பட்ட ஒரு இயந்திரத்தின் வேகத்தில் என் இடுப்பசைவு, அவள் ஒத்திசைவுடன் கூடி முயங்கத்தொடங்கியது. என் வாய் சீண்டிய பொழுது இருந்த குறுநகையில்லை இப்பொழுது, அப்பொழுது அவள் மூச்சுக்காற்று மட்டும் வெளிப்பட்டது சீற்றத்துடன். அவள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மௌனமாகவே நீண்டிருந்தாள், ஆனால் அவளையுமறியாமல் என் தொடர்ச்சியான மாற்றமில்லாத நேர்த்தியான முயக்கம், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவளை முனக வைத்திருந்தது. அப்பொழுது தான் அவள் ஒருவேளை கஷ்டப்படுகிறாளோ என்று நினைத்திருப்பேன். எங்கிருந்தோ வந்த ஜெயஸ்ரீ என்னை நிலை கொள்ளாமல் தடுமாற வைத்தாள். என்னை அவள் கவனிக்கவேயில்லை நேராய் அகிலா நோக்கி வந்தவள் படுக்கைக்கு அருகில் இருந்தபடியே குனிந்து அவள் உதடுகளில் முத்தமிடத் தொடங்கினாள். சொல்லப்போனால் அவள் கண்கள் திறக்கவேயில்லை. அவள் உடலில் பாதிதான் படுக்கையில் இருந்தது, இன்னமும் கால்கள் தரையில் இருந்தன. அவள் அகிலாவின் உதடுகளை மட்டும் விடவில்லை. நான் இதை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். என் அசைவு நின்றிருந்த சமயம், மீண்டும் அகிலா இயக்கத்தைத் தொடங்கினாள், ஜெயஸ்ரீயின் கைகள் இப்பொழுது அகிலாவின் மார்பில். ஒரு எதிரியைப் போல் அவைகளிடம் நடந்து கொண்டிருந்த எனக்கு அவள் உபயோகப்படுத்திய விதம் பிடித்திருந்தது. அகிலாவின் கை ஜெயஸ்ரீ பேண்ட்டுக்குள் நுழைவதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அது தந்த உற்சாகம் பெருகி உச்சமடைந்தேன். அகிலா உணர்ந்திருக்கவேண்டும். 'ப்ளீஸ் தாஸ் கொஞ்சம் வெளியில் இருங்களேன்.' அவள் கெஞ்சினாள். நான் உருவிக் கொண்டு வெளியேறினேன். அகிலா மட்டும் சிறிது நேரத்தில் வெளியே வந்தாள். சிவந்து கன்னிப் போயிருந்த முலைகளை டீஷர்ட் தூக்கிக் காட்டியவள், 'இப்புடியா செய்வாங்க. பாரு என்ன பண்ணி வைச்சிருக்கேன்னு.' எனக்கும் வருத்தமாக இருந்தது. 'இனிமே நீ எவ்வளவு கெஞ்சி கேட்டாலும் உன்னைத் தொடவிடமாட்டேன். நான் சொன்னா நீ கேப்பேன்னு தெரியும்.' உண்மைதான். 'சரி போனாப்போகுது இப்ப இரண்டு முத்தம் கொடு' என்று முலை நீட்டினாள். என் முத்தம் அவளுக்கு வலித்தது. 'இனிமேல் இப்படி செய்யமாட்டேன்' என்று வருடிக்கொடுத்தேன் அவைகளை. நான் ஜெயஸ்ரீயை அடுத்த நாள் ஹோட்டலில் வைத்துத்தான் பார்த்தேன்.  

0 comments:

Post a Comment

Popular Posts