In அகிலா கதைகள் அறுபத்தைந்து காதல் காமம்

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.

புணர்ச்சிவிதும்பல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்


அகிலாவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்த பொழுது மணி மூன்றரை இருக்கும். வீட்டிற்கு வந்ததில் இருந்து அகிலா கேமராக் கண்கள் கொண்டு வீட்டை ஸ்கேன் செய்வதாய் உணர்ந்தேன் நான்.

"என்னடி பார்க்கிற!"

"இல்லை பாச்சுலர் வீடு மாதிரி தெரியலையே! யாரோ ஒரு பொண்ணு இருந்து கவனிச்சிக்கிற வீடு மாதிரியில்ல இருக்கு. அதான் பார்த்தேன்."

அகிலாவிற்கு பொறாமையா? காலையில் இருந்து எவ்வளவோ பார்த்தாகிவிட்டது இதுவும் இருந்துவிட்டு போகட்டும். "வேற எதாவது கேர்ள் ப்ரண்டு இருக்கான்னு சந்தேகப்பட்டுடாத தாயே! வாழ்க்கையில் அந்தத் தப்பை நான் ஒரேயொரு தரம் தான் செய்திருக்கேன்."

அவள் சிரித்தாள்.

"சரி இரு நான் ஒரு காப்பி போட்டுட்டு வர்றேன்." நான் சிறிய அளவில் சமைப்பேன் என்பதுவரை அகிலாவிற்குத் தெரியும் அவளும் நான் போடுறேன் என்று வரவில்லை, வரமாட்டாள் என்றுதான் நானும் நினைத்தேன் தெரியும்.

நான் சமையற்கட்டில் பாலில் காபிப் பொடி கலந்து கொண்டிருந்த பொழுது அகிலா,

"தாஸ் நான் வாலிபால், கொக்கொ எல்லாம் விளையாடுவேன் தெரியுமா?"

எதற்காக அகிலா இதைச் சொல்கிறாள் என்று உண்மையில் புரியவில்லை. நான் சமையல்கட்டில் இருந்து வெளியில் வந்து,

"அதக்கு என்ன?" அவள் என் புத்தக ஷெல்பின் பக்கத்தில் சுவற்றில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தாள். கேட்டுவிட்டு மீண்டும் உள்ளே நகர்ந்து சர்க்கரை கலக்கத் தொடங்கினேன்.

"அதனால என் ஹைமன்..." அவள் முடிக்கவில்லை நான் கைகளில் இரண்டு காப்பி கோப்பைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தபடி.

"இன்னிக்கு நீ உதைபடாம போகமாட்டேன்னு நினைக்கிறேன். வாழ்க்கையில் பொண்டாட்டிகிட்ட கையை நீட்டுறது பெரிய அயோக்கியத்தனம்னு நினைத்துக் கொண்டிருக்கிறேன் இன்று வரை. என்னை நீ அது தப்புன்னு நினைக்க வைச்சிருவேன்னு நினைக்கிறேன்."

அவள் கைகளில் ஒரு கோப்பையை திணித்தபடி சொன்னேன். அவள் என்னை நிமிர்ந்து பார்க்கவேயில்லை, காலையில் இருந்து போய்க்கொண்டிருந்த இந்த விஷயத்தைப் பற்றி அகிலா கடைசியாக சொல்ல நினைத்தது இதுவாகத்தான் இருக்கும் இதற்கு மேல் பேசமாட்டாள் என்று தெரிந்ததால் நானும் அதற்கு மேல் வளர்க்காமல் விட்டுவிட்டேன். காபி குடிக்கும் வரை சும்மாயிருந்தவள்,

"நான் உன் பெட்ரூமைப் பார்க்கலாமா?"

அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்ததும் நான் சிரித்தேன், அவளும் சிரித்தாள். என் பதிலுக்காய் காத்திராமல் என் பெட்ரூமிற்குள் நுழைந்தாள்.

"ம்ம்ம் பரவயில்லையே சுத்தமா வைச்சிருக்க!" மெத்தைக்கு பக்கத்திலிருந்த அபூர்வமாய் நானும் அவளும் சேர்ந்து இருக்கும் படி ஒரு புகைப்பட்டதை பெரிதாக்கி வைத்திருந்த புகைப்படத்தை கையில் எடுத்தவள், சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் என்னிடம்,

"எனக்கும் இதை ஒரு காப்பி போட்டுக்கொடுக்கிறியா தாஸ்!"

"செய்துட்டா போச்சு."

நகர்ந்து அறையில் நான் வரைந்து மாட்டிவிட்டிருந்த வண்ண ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இதெல்லாம் நீ வரைஞ்சதா!" நான் பதில் சொல்லவில்லை, அவளும் எதிர்பார்க்கவில்லை, "பிரமாதமாயிருக்கு! நீ இவ்வளவு நல்லா வரையுவன்னு சொல்லவேயில்லையே!" நான் வெறுமையாய் சிரித்து வைத்தேன்.



அதுவரை என்பக்கம் திரும்பாதவள் என்னை நோக்கித் திரும்பி காதலுடன் பார்த்து, "என்னையும் ஒரு படம் வரைஞ்சு கொடேன்!" என்று கேட்டாள். எனக்கு அந்தக் கண்களின் மொழி புரிந்தது. நான் நேரடியாகவே,

"தாயே உன்னை இனிமே தொடறதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம்னு வைச்சிருக்கேன். தயவு செய்து வம்பு செய்யாமல் போய்டு தாயே!" என்றேன்.

அவள் மழுப்பவில்லை, நான் உன்னிடம் அதைக் கேட்கலையே என்று நடிக்கவில்லை.

"அதுக்குள்ள அலுத்துவிட்டதா?" என்றாள். காலையில் என்னிடம் அவள் உரையாடத் தொடங்கியதிலிருந்து அன்றைய பொழுது முழுவதும் ஒரு முறை கண்முன்னே வந்து மறைந்தது. நான் அகிலாவை முதலில் பார்த்து பின்னர் அவளைப் பிடித்துப் போனதிலிருந்து மனதில் உருவாக்கி வைத்திருந்த தருணம். எத்தனை முறை கற்பனை செய்து வைத்திருந்த உரையாடல்கள், ஆனால் எல்லாம் சுருண்டு கொண்டு கல்யாணத்திற்கு முன் இனிமேல் எனக்கு எதுவுமே வேண்டாம் என்பது போலிருந்தது.

"என்கிட்ட காண்டம் இல்ல!" நான் நடித்தேன்.

"பயமுறுத்திப் பார்க்கிறியா! ஊட்டியில் படுக்கைக்கு வரும் முன்ன உன்கிட்ட இருந்ததான்னு கேட்டுக்கிட்டா வந்தேன். இருந்தது உபயோகிச்சிக்கிட்ட இல்லாமல் இருந்திருந்தால் என்னால் என்ன சொல்லியிருக்க முடியும்..." அவள் உரையாடலில் இருந்த அறிவுஜீவித்தனம், அவளிடம் சற்று முன் நான் பார்த்த காமம் இல்லாமல் போயிருந்ததை காட்டிக் கொடுத்தது. "...பிடிக்கலைன்னா விடு, நான் பிடிக்காதவங்களை கம்பெல் செய்வதில்லை." நக்கலாய்ச் சிரித்தாள்.

அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று தெரிந்தது, என்னை உரையாடலுக்குள் இழுக்க நினைக்கும் அவள் மனம் புரிந்தது. நான் விலகிக் கொண்டிருந்தேன்.

"அகிலா, இது ஒரு கனவெனக்கு. எவ்வளவு சாதாரணமா கேட்டுவிட்ட ஒரு கண் பார்வையால் சம்மதமான்னு. எத்தனை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து எது சரியா வரும் என்று நான் கணக்கு போடாத நாட்களே இல்லை. இந்த ரூமுக்கு மட்டும் காதிருந்து கைகள் இருந்திருந்தால் நான் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு விட்டு உன்னை இந்நேரம் தன் கைகளால் நிர்வாணப்படுத்தியிருக்கும். அத்தனை கற்பனைகள் அத்தனை கள்ளச்சிரிப்புக்களைப் பார்த்திருக்கும் இந்த ரூம். என்ன செய்ய இன்னிக்கு காலையில் இருந்து நீ செஞ்சதுக்கு நான் உனக்கு கொடுக்கிற தண்டனை உன்னைத் தொடாம இங்கேர்ந்து அனுப்புறதுதான். இனி நான் உன்னை தொடறதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம் தான். நீ கிளம்பு."

நான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது உன் முகம் வெளிப்படுத்தின உணர்ச்சிகள் அத்தனையையும் தனித்தனி ஓவியமா தீட்டணும் என்கிற ஆர்வம் வந்ததெனக்கு. முடித்ததும் சட்டென்று நெருங்கி வந்து காலையில் இருந்து நோகடித்த இதயத்திற்கான மருந்தை உதட்டு வழியாக வழங்கிவிட்டு நீயாய் பிரிந்து நின்றாய். நான் உன்னை தடுத்திருக்கவில்லை. கல்லாய் இருக்க உனக்கு மட்டும் தான் தெரியுமாயென்ன.

"இதிலேர்ந்து ஒரு ட்ராயிங்கை நான் எடுத்துக்கலாமா?" தேவையில்லாத கேள்வி உனக்கு என்று இல்லாத ஒன்று அந்த அறையில் எதுவுமே இருக்க முடியாது. நிர்வாண நிலையடையாத ஓவியம் ஒன்றை எடுத்துக் கொண்டாய்.

"ஞாபகம் வைச்சிக்கோ நீ ஒரு நாள் ஆசையா கேட்கிறப்போ நான் நிச்சயம் மறுத்து உன்னை அழவைப்பேன்." சிரித்தப்படி சொன்ன உன்னை வழியனுப்பிவிட்டு வந்து உட்கார்ந்ததும் அசைபோட நிறைய மீதியிருந்தது அன்றைய பொழுதுகள்.

March 05, 2009

10:11 AM aeswari: defloration - the act of having sexual intercourse with a virgin; devirgination.
me: எனக்கு அதுக்கு அர்த்தம் முன்னமே தெரியும்
aeswari: அப்ப ஜெயா முன்னாடி அப்படியான்னு கேட்டதுக்கு என்ன அர்த்தம்.
me: சும்மா ஜோக் பண்ணினேன் அகிலா :(
aeswari: இல்லை உனக்கு என் மேல டவுட்.
உன் கூட படுத்தவ தான வேற யார் கூடவும் படித்திருப்பான்னு
me: akila, this is idiotic
rubbish
உனக்கே நல்லா தெரியும், நீ வெர்ஜினா இல்லையா என்பது கூட எனக்கு ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்று
aeswari: அப்ப நீ என்ன நம்பலை அதான

அடுத்த வரி அடிப்பதற்குள் அவள் அங்கே இல்லை, எல்லாம் என் முட்டாள்த்தனம். ட்ரீட் கேட்ட ஜெயஸ்ரீ காரணமாய்ச் சொன்ன defloration வார்த்தையும் அதை உபயோகித்து அகிலாவை வம்பிழுக்க நான் அவளிடம் கேட்ட 'அப்படியா'வும் இத்தனை தூரம் பெரிதாகும் என்று நான் நினைக்கவில்லை. அன்றைக்கு தலையில் ஜூஸைக் கொட்டிவிட்டுப் போனவள் தான், மொபைல் போனை அணைத்து வைத்திருந்ததால் என்னால் அவளைப் பிடிக்கவே முடியவில்லை. அடுத்த நாள் காலை அலுவலகம் வந்த உடனேயே அவளிடம் இருந்து வந்த இந்தத் தாக்குதல் என்னைக் கொஞ்சம் நகர்த்தித் தான் பார்த்தது. என்னால் அகிலா அப்படிப் பேசுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என் யோசனைத் திறன் மீதே எனக்குச் சந்தேகம் வந்த பொழுது ஜெயஸ்ரீயின் அழைப்பு வந்தது.

"சொல்லு ஜெயா"

"என்னப் பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்?" அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை.

"என்னப் பிரச்சனையோ அவ அழறா! மூணு வருஷத்தில் அகிலாவை நீங்க புரிஞ்சிக்கிட்டது இவ்வளவுதானா. அவ தன்னோட ஷெல்லுக்குள் போய்க்கிட்டிருக்கா, சாட்டிங்கில் எதுவும் பேசாதீங்க போனிலையும் கூட எதுன்னாலும் நேரில் பேசுங்க. காலையில் என்னையுமே காரணமில்லாமல் திட்டிக்கொண்டிருந்தாள், அவ எது சொன்னாலும் மனசில் வைச்சிக்காதீங்க ப்ளீஸ்!" சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

ஒரே அலுவலகம் தான் என்றாலும் வேறு வேறு கட்டடங்களில் இருந்ததால், என் இடத்திலிருந்து அவளிடத்திற்கு வந்திருந்தேன். நான் வருவதைப் பார்த்ததும் அவளாய் போய் ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். ராஜா எனக்கும் அவளுக்கும் ஒரு நல்ல நண்பன், ஆனால் அவளை விடவும் சீனியர் சொல்லப்போனால் அவளுக்கு வேலை பகிர்ந்தளிப்பவன். பெரும்பாலும் அது போன்ற சமயங்களில் நான் நகர்ந்துவிடுவேன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று, அவள் அதை அன்றும் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும்.

நான் ராஜாவிடம் நேரடியாய், "dude excuse me.," என்று அவள் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அவள் ஒன்றும் செய்யவில்லை சொல்லவில்லை என்னுடன் வந்தாள். சிறிது தூரம் வந்ததும், அவளாய்,

"அதான் வர்றேன்ல கையை விடு!" மெதுவாய்த்தான் சொன்னாள். அவள் என்னிடம் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் அமில மழை கொட்டிய அகிலாவாக அல்லாமல் பழைய சிடுமூஞ்சி அகிலாவாகத்தான் இருந்தாள், நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவளிடம் கோபமில்லை, கண்களில் ஆத்திரமில்லை அவள் அழுதிருப்பதற்கான சாயல் எதுவும் இல்லை ஜெயஸ்ரீ பொய் சொல்லியிருக்க ஞாயமில்லை. அவள் 'என்ன' என்பதைப் போல் தோளைக் குலுக்கிக் காட்ட, நான் அவள் கையை விடுவித்தேன். அலுவலகத்தை விட்டு வெளியில் பார்க்கிங்கிற்கு வந்து வண்டியை வெளியில் எடுத்தேன், அருகில் வந்து உட்கார்ந்து கொண்டவள் எதையும் பேசவில்லை.

டிஃபென்ஸ் காலனி அண்ணாச்சி ரெஸ்டாரண்டில் மூலையொன்றைக் கண்டுபிடித்து உட்கார்ந்ததும்.

"சொல்லு என்ன தான் உன் பிரச்சனை."

அவள் பதில் பேசவில்லை, டேபிளில் இருந்த பெப்பர் சால்ட் குடுவைகளைப் பார்த்தவண்ணம் இருந்தாள்.

"என் தப்பு தான் மன்னிச்சிக்கோ அப்படி கேட்டிருக்கக்கூடாது தான். நான் சத்தியமா விளையாட்டுக்குத்தான் கேட்டேன், நீ இவ்வளவு சீரியஸா எடுத்துப்பேன்னு நான் நினைக்கவேயில்லை!" அகிலா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள், அவள் அழுதுவிடுவாள் என்று நினைத்தேன். சர்வர் இடைபுகுந்தார், அவள் சமாளித்துக் கொண்டாள்.

"நீ என்னயிருந்தாலும் ஜெயா முன்னாடி அப்படிக் கேட்டிருக்கக் கூடாது."

நான் அவள் முடிக்கட்டும் என்றிருந்தேன். அவளால் வார்த்தைகளைத் தேர்ச்சி செய்து அமைத்து பேச முடியவில்லை தடுமாறிக் கொண்டிருந்தாள்.

"மனசில இல்லாமையா வார்த்தையா வரும், உன்னால என்னை அப்படி எப்படி நினைக்க முடிஞ்சது. இதெல்லாம் நான் சரின்னு சொன்னதால தான இல்லாட்டி அப்படி ஒரு வார்த்தையை நான் கேட்டிருக்க வந்திருக்குமா? இந்த மூணு வருஷத்துல இப்படி ஒரு வார்த்தை நீ சொல்லியிருப்பியா? உன்னால என்னை அப்படி எப்படி நினைக்க முடிஞ்சது. அன்னிக்கு நான் உனக்காக எதையெல்லாமோ செஞ்சப்ப நீ என்னை அப்படித்தான பார்த்திருப்ப, நினைச்சிறுப்ப, அலையறா பாருன்னு..." அவள் தொடர்ந்து கொண்டிருந்தாள். எனக்கு அன்றைக்கு பொழுது நினைவிற்கு வந்தது, நான் எதிர்பார்க்காத விஷயங்களை எல்லாம் அவள் செய்தாள் தான் ஆனால் அவளை என்னால் ஒரு நிமிடம் கூட அவள் சொல்லிக் கொண்டிருப்பது போல நினைக்க முடியாது, அது அவளுக்கும் தெரியும். மூன்று வருட பழக்கம் எங்களிடையே அன்றைக்கு சுமூகமான உறவை சுலபமாகவே ஏற்படுத்தியது, சாட்டிங்கில் நாங்கள் பேசாத விஷயங்களே இருந்திருக்காது. என்னுடைய எல்லைகள் மூன்றாண்டுகளில் அவளுடைய நீள அகலங்களுக்கு நீண்டிருக்கிறது, நேரில் பேசிக்கொள்ளாத குறையே இல்லாமல் இருந்தது. அது அன்றைக்கு புரியவும் செய்தது, என்னைப் பற்றி அவளுக்கு அவளைப் பற்றி எனக்கு நாங்கள் தெரிந்து கொண்டதாக நினைத்ததை விடவும் அதிகம் தெரிந்திருந்தது.

நண்பர்கள் எச்சரித்திருந்ததால் நான் முதலில் எதையும் அவளிடம் வித்தியாசமாக முயற்சி செய்யவில்லை. ஆனால் அவளுக்கு அதெல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை. தாலி கட்டுவது என்பது அவள் உடலைப் பெறுவதற்கான லைசென்ஸ் கிடையாது என்று அவள் எனக்கு எழுதியிருந்தது நினைவில் இருந்தது. அவள் எழுதுவற்கென்று எழுதாமல் முழு மனதுடன் எழுதியிருந்தது புரிந்ததால், நண்பனே கணவனே அமைந்த விட்ட சந்தோஷத்தை அவள் கொண்டாடிக் கொண்டிருந்தாள் என்று நான் உணர்ந்து கொண்டேன். நான் அவளை இன்னும் மனைவியாகப் பார்க்காமல் காதலியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் காதலியுடனான திருமணத்திற்கு முன்பான உறவானது சொர்கத்திற்கு ஒப்பானது என்ற கற்பனை என்னிடம் இருந்தது. அவளுடைய கம்பீரம் கலந்த காமத்தில் நான் எப்பொழுதையும் போல் ஆச்சர்யத்துடன் பங்கு கொண்டேன், அந்த ஆச்சர்யத்தை சாமர்த்தியமாக நான் மறைத்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் நான் அவளிடம் காண்பித்திருக்கக்கூடிய ஆச்சர்யம் தான் என் முன்னால் அவள் பெய்யென பெய்யும் கண்ணீருடன் உட்கார வைத்திருந்தது என்று புரியத் தொடங்கியது. ஆனாலும் கூட என்னால் இந்தப் பிரச்சனையை தள்ளி நின்று பார்க்க முடியவில்லை, நான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தேன், ஜெயஸ்ரீ, அகிலா அழுதாள் என்று சொன்னது என்னை நிலைகொள்ள விடாமல் செய்து கொண்டிருந்தது. என் எதிரில் அகிலா எப்பொழுது அழலாம் எனக் காத்திருப்பது போல் இருந்தது இன்னும் தடுமாறச் செய்தது, நிர்வாணத்தில் கூட குறைந்திடாத அவளது கம்பீரம் இங்கே இல்லாமல் போயிருந்தது. ஒரு அபூர்வமான பொழுதாகத்தான் அது இருந்திருக்க வேண்டும் என் கண்கள் கசியத் தொடங்கியிருந்தன.

அவள் பேச்சை நிறுத்தியிருந்தாள், "நீ உண்மையிலேயே நினைக்கிறியா என்னால் உன்னைப் பத்தி அப்படி நினைக்க முடியும்னு." சாதாரணமான வார்த்தைகள் தான் ஆனால் அந்தச் சமயத்தில் அவளை உலுக்கிப் பார்த்திருக்க வேண்டும். அவள் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எத்தனை தடவை நீ என்கிட்ட கேட்ட, என்னால அப்படி எப்படி நினைக்க முடிஞ்சதுன்னு. நீதான் என்னை தப்பா நினைச்சிக் கிட்டிருக்க. உன்னைய நான் எங்க வைச்சிருக்கேன் தெரியுமா?" கடகடவென்று கண்களில் வெகுவாகவே வரத் தொடங்கியிருந்தது. நான் பெரும்பாலும் அழுததில்லை என்றாலும் நான் அழுத பொழுதுகள் எல்லாம் நம்பிக்கை துரோகங்களை முன்வைத்தாகத்தான் இருந்திருக்கும். நான் நம்பிய ஒருவர் என்னை நம்பாமல் போன பொழுதுகள் என்னை வெகுவான சுயபச்சாதாபத்திற்கு உள்ளாக்கி அழுகையாக நீண்டிருக்கிறது. ஆனால் முகம் கோணி என்னை மறைத்த தனிமையில் பொங்கியிருக்கிறேன், பொதுவில் இரண்டாம் நபர் முன் அழுதது சின்ன வயதிலாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே நம்பிக்கை துரோகம் இல்லை முகக் கோணலாகி விகாரமான மனமொருமித்த அழுகை இல்லை. ஆனால் கண்ணீர் இருந்தது, அகிலா என்னை தவறாகப் புரிந்து கொண்டாள் என்ற வருத்தம் இருந்தது. மனம் சட்டென்று தன் கட்டுக்குள் இருந்து விடுவித்துக் கொண்ட ஒரு அபூர்வமான பொழுது, சினிமா மெலோட்டிராமக்களின் பொழுது எதேட்சையாக வெளியாகும் கண்ணீரை ஒத்தது என்னுடைய இந்தக் கண்ணீர்.

அவள் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை, சோற்றுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். நான் டிஷ்யூ ஒன்றை எடுத்து துடைத்துக் கொண்டேன், எனக்கும் கொஞ்சம் வெட்கமாக இருந்தது ஒரு பெண்ணின் முன்னால் கண்ணீர்விட்டது. நான் நிலைமையை சரியாக்க நினைத்தேன், ஆனால் என்ன சொல்லி அகிலாவை சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை. அவளே உதவினாள்,

"தாஸ் என்னை நம்பு தாஸ், நான் ஒரு வெர்ஜினாத்தான் இருந்தேன்..." அவள் முடிக்கவில்லை, நான் தலையில் அடித்துக் கொள்ளாதது தான் குறை. வேதாளம் இப்பொழுது இன்னொரு வழியாக முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தது. எனக்கு உண்மையில் சிரிப்புத்தான் வந்தது அடக்கிக் கொண்டேன். இதற்கு நான் நேரடியாய் என்ன பதில் சொன்னாலும் அவள் நம்ப மாட்டாள் அவள் இப்பொழுது சரியாகிவிட்டிருந்தாள் அவள் கூண்டுக்குள் இருந்து முற்றிலும் வெளியில் வராவிட்டாலும் நேரடியாய், ஒரு வழிக்கு, விஷயத்திற்கு வந்திருந்தாள். நான் என் பழைய முறையை உபயோகிக்க தீர்மானித்தேன். ஏனென்றால் அவள் மனதிற்குள் எனக்கு அவளுடைய கற்பைப் பற்றிய கேள்விகள் இருக்காது என்று தெரிந்திருக்கும், இதுகூட அவள் என்னுடன் வைத்துக் கொண்ட உறவை மய்யப்படுத்தி தன்னைத் தானே பழிவாங்கிக் கொள்ளும் தன்னைத் தானே சிலுவையில் ஏற்றிக் கொள்ளும் ஒரு வழியாகத்தான் அவள் முன்வைத்திருக்க வேண்டும். என்னைத் திட்டுவதன் மூலம் ஜெயாவை திட்டுவதன் மூலம் அவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டு, தவறாக அவள் உணர்ந்ததற்கு ப்ராயச்சித்தம் செய்து கொண்டிருந்தாள்.

இதுவும் கூட ஒரு நாடகமாக அந்த உறவை, இயற்கையாக அவளிடம் பொழிந்த ஆர்வத்தை, அதன் வழியே அவள் பெற்ற சந்தோஷத்தை மறைத்து கேள்விக்குள்ளாக்கி அவள் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் அந்த முதல் முகத்தை திருப்தி செய்வதற்காகச் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய ஸ்ப்லிட் பர்ஸனாலிட்டியை நான் ஊட்டி இரவில் பார்த்தேன், இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த விளையாட்டெல்லாம், நான் மட்டுமல்லாமல் அவளும் முதல் முறையாய்ப் பார்த்த அந்த மற்ற முகம் அவளுடையது அல்ல என்று நம்ப வைக்கும் முயற்சி என்று நான் நினைத்தேன்.

"சரி அகிலா, நம்புறேன். நீ இதுக்கு முன்ன ஒரு தடவை கூட மாஸ்டர்பேஷன் செய்யலைன்னு சொல்லு அதையும் நம்புறேன்."

அது ஒரு ஆயுதம் ஒரு நேரடித் தாக்குதல் அவள் தாக்க நான் பதுங்க நான் தாக்க அவள் மறைந்து கொள்ள என்று சென்று கொண்டிருந்த ஒரு அழகான யுத்தத்தில் என் தரப்பு பிரம்மாஸ்திரம். நாங்கள் இதைப் பற்றி உரையாடியிருக்கிறோம், ஆரம்பித்த முதல் கணத்தில் சாட்டிங்கில் இருந்து மறைந்து போய், வாரக்கணக்கில் முகம் காட்டாமல் இருந்து, பின்னர் சாட்டில் மௌன மொழி பகர்ந்து கடைசியில், "நம்பினால் நம்பு நம்பாட்டின்னா போ! நான் செய்ததில்லை!" என்பது வரையில் வந்து நின்றிருந்தது. அவள் பேரில் எனக்கு ஊட்டி செல்வது வரை இருந்த ஒரு சிறிய பயம் அதற்கு மேல் அந்த விஷயத்தில் என்னை நகர விடாமல் செய்திருந்தது.

கிசுகிசுப்பாய் தலையில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு நான் சொன்ன அந்த வார்த்தைகள் முதலில் அவளிடம் பெரிய ஆச்சர்யத்தை கொண்டு வந்தன. என்னால் பொதுவிடத்தில் அவளிடம் அப்படி பேச முடியும் என்று அவள் நினைத்திருக்க மாட்டாள், ஏனென்றால் நான் அதுவரை அப்படிச் செய்ததில்லை. ஊட்டியில் கூட நான் அவளிடம் பொதுவில் அத்துமீறுதல் எதையும் செய்யவில்லை. இந்தப் பிரச்சனையை நான் இழுத்துச் செல்லும் இடம் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் அவள் சப்தமாய்ச் சிரித்தாள், நான் அவள் என் தலையில் சாப்பாட்டைக் கொட்டிவிடக்கூடாதென்று பயந்து கொண்டிருந்தேன். எனக்கு நன்றாய்த் தெரியும் அந்த விஷயம் அவளை கூண்டுக்குள் இருந்து வெளியில் கொண்டு வருமென்பதையும் அதைவிட அவளுடைய கம்பீரத்தை அவளுக்கு திரும்பக் கொடுக்குமென்பதையும்.

அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை, "உன்னை மாதிரின்னு நினைச்சியா!" இடைவெளி விட்டவள், நான் சிரித்துக் கொண்டிருந்ததால், "உன் கிட்டப்போய் இதையெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கேன் பார்! என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்."

அவள் கட்டிக்கொண்டிருந்த கூண்டு இப்பொழுது அவளில்லாமல் அநாதையாக இருந்திருக்க வேண்டும். இருவரும் சாப்பிடுவதை மறந்து சிரித்துக் கொண்டிருந்தோம், கடைசி மூன்று நாட்கள் எங்களிடம் கொண்டு வந்த மாற்றத்தை நினைத்து.

"சரி ஆபீஸ் போறியா. பிரச்சனை எதுவும் பண்ண மாட்டியே திரும்ப?" அவள் இல்லை என்று தலையாட்டியபடி.

"உன் வீடு இங்க பக்கத்தில் தான கூட்டிக்கிட்டு போயேன்." எத்தனையோ முறை அழைத்திருப்பேன் அவளை, அவள் வந்ததில்லை. இப்பொழுது வருகிறேன் என்கிறாள் நான் அதை மீறியும் அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று படிக்க முயன்றேன்.

Related Articles

11 comments:

  1. மோஹதாஸ்,
    காமம் விந்தாக வழிந்தோடியபின்னால், கழிப்பாறி ஒரு பதிவு போடுங்கள்.
    அவனவனுக்கு அவவனன் பிரச்சனை :-)

    ReplyDelete
  2. படித்த நேரம் வீணாகவில்லை.. நல்ல களம்!

    ReplyDelete
  3. மனித வாழ்வியலின் மறுபக்கங்கள். ஒரு சிலரே இம்மாதிரியான கதைகளை எழுத துணிச்சல் கொள்கிறார்கள். கதை சிறப்பாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  4. நன்றி அனானிமஸ்,

    ஞாயிற்றுக்கிழமை இரவு தான்(என் வழியில்) என்றாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது, அவனவனுக்கு அவனவன் பிரச்சனை :(

    ReplyDelete
  5. தமிழ் பிரியன், விக்னேஷ்வரன்,

    நன்றிகள்.

    ReplyDelete
  6. இந்தமுறை சட்டென்று கதையை தொடரும் போட்டுட்டீங்களோ?

    உங்கள் எழுத்துக்களின் நடனம் என்னை ரொம்பவும் லயிக்க வைப்பதென்னவோ உண்மைதான். அது யதார்த்தத்திற்கு ஒத்து வருவதாலா அல்லது காமம் சார்ந்து இருப்பதாலா என்று தெரியவில்லை.

    அந்த ஓவியம் நீங்கள் வரைந்ததா? ரொம்பவும் அருமையாக இருக்கிறது.

    அடுத்த பாகத்திற்கு காத்திருக்கும் வாசகர்களில் மிக முக்கியமாக முதல் ஆளாக இருக்கும் வாசகன்
    ஆதவா!!

    ReplyDelete
  7. ஆதவா,

    சட்டென்று முடித்ததாக உணரவில்லை. இந்த இரண்டு கதைகளும் முன்னமே எழுதி வைத்திருந்தது தான்.

    இதன் தொடர்ச்சிக்கு நான் உத்தரவாதமல்ல ;) அல்லது நாளைக்கே கூட இதன் தொடர்ச்சி வரலாம்.

    ReplyDelete
  8. மறந்து போனது, அந்த ஓவியம் நான் வரைந்ததல்ல.

    ReplyDelete
  9. super mohandoss... oru periya writer rukana style irukuthu unga writing la.. all the best...

    ReplyDelete
  10. நன்றிகள் அனானி.

    ReplyDelete
  11. very nice story telling method.

    I find it interesting.

    ReplyDelete

Popular Posts