Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

In கதை காதல்

நீராக நீளும் காதல்


தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்.

திருக்குறள் - காமத்துப்பால், நாணுத்துறவுரைத்தல், 1135.

“நேத்து அவங்க நம்ம இரண்டு பேரையும் பாத்துட்டாங்க” 

ஸஸ்மிதா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வாசல் கதவின் அழைப்பு மணி தன் ரீங்காரத்தைத் தொடங்கியது. இளமாறனின் சோம்பலின் தீவிரம் தெரிந்தவள் என்பதால் சற்றும் யோசிக்காமல் போர்வையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு எழுந்து நின்றாள். இரவு படுக்கையில் விழுந்தபின் இப்பொழுதுதான் எழுந்திருக்கிறாள் என்பதால் நெட்டிமுறித்தவாறு அவள் சுற்றும் முற்றும் பார்த்ததில் இருந்து நேற்றிரவு கழற்றி வீசிய இரவு உடையைத்தான் அவள் தேடுகிறாள் என்று தெரிந்தது. அவர்களுக்கிடையில் உடையின் அவசியம் பெரும்பாலும் இருந்ததில்லை. கட்டிலின் கீழிருந்த ஆடையை கால் விரல்களின் சாமர்த்தியத்தால் பின்பக்கமாக எடுத்து ஒருமுறை உதறிவிட்டு, தலையின் மேல்வழியாக உள்நுழைத்துக் கொண்டவள், அதன் காரணமாக உள்ளே சென்றுவிட்ட தன்னுடைய கூந்தலை, புறங்கையை கழுத்திற்கும் கூந்தலுக்கும் இடையில் விட்டு இழுத்து வெளியில் விட்டுக் கொண்டு, அவனைத் திரும்பிப் பார்த்தாள்; ஒன்றும் பிரச்சனையில்லையே என்பதைப் போல். அவன் பதில் எதுவும் சொல்லாமல் தோள்களைக் குலுக்கிக்காட்ட, அதற்குள் இன்னொருமுறை தன்னுடைய வசீகரமான இசையை வழங்கத்தொடங்கிய அழைப்பு மணியின் சப்தம் தேய்ந்து அடங்குவதற்குள்.

“ம்ம்ம், மீ யெத் ஆஹே.” 

சொல்லிக்கொண்டே கதவைத்திறந்தாள். இளமாறனுக்கு இதுவும் ஒரு பிரச்சனை மராத்தி மட்டுமே தெரிந்த அந்த ஹோட்டல் சிப்பந்தியிடம் பேசுவதற்கு அவனுடைய உடைந்த இந்தி கூட உதவாது.

“நமஸ்தே ஸாப்.” இது அவனுக்கு, அவன் முகத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட புன்சிரிப்பை அலட்சியப்படுத்தியவனாய்க் காலியாய்க் கிடந்த பியர் பாட்டில்களையும் சிகரெட் ஆஸ்ரேவையும் எடுத்துக்கொண்டு, ஐந்து நிமிடத்தில் அவ்வளவாக குப்பைகள் இல்லாத அந்த அறையை சுத்தம் செய்வதான முயற்சியில் கீழே விழுந்துகிடந்த சில பட்ஸ்களைப் பொறுக்கிக்கொண்டு அவனைப் பார்த்து தலையைச் சொறிந்தான். அவன் ஸஸ்மிதாவைப் பார்க்க, அவள் நகர்ந்து வந்து தலைமாட்டில் இருந்து பர்ஸை எடுத்து ஒரு பத்து ரூபாய்த்தாளை சிப்பந்தியிடம் நீட்டினாள், அவன் சந்தோஷமாய் இன்னுமொறு தரம் “நமஸ்தே ஸாப்” சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.

ஸஸ்மிதா திறந்திருந்த வாசற்கதவை அடித்துச் சாத்திவிட்டு, கட்டில் போடப்பட்டிருந்த அந்த அறையின் மையப் பகுதியில் இருந்து விலகி, வலதுபக்கமாய் ஜன்னலின் பக்கம் நகர்ந்தாள். மெதுவாக கர்ட்டனை விலக்கியவள் ஜன்னல்கதவையும் திறக்க, அதுவரை செயற்கையான காற்றைச் சுவாசித்தவளின் முகத்தில் சிலீரென்று பட்ட, நேற்றிரவு மழையினால் இன்றும் ஈரப்பதத்துடன் இருந்த காற்று ஏகப்பட்ட உணர்ச்சிகளை மாறிமாறி வழங்கியது. வெளியில் மழை பெய்கிறதா என பார்க்கும் பாவத்தில் அவள் கைகளை வெளியில் நீட்டிக் கொண்டிருந்தாள். பின்னர் ஒரு பக்கமாய்த் திரும்பி என்னைப் பார்த்தவள்,

“தாஸ் மழை விட்டிருச்சி.”

ஜன்னலுக்கு வெளிப்பக்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்த சூரியனின் கதிரொளிகள், உள்ளாடை எதுவும் அணிந்திராத அவளின் உடலில் நேராய்ப் பட்டு இன்னொரு பரிமாணத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் கட்டிலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு பக்கம் இயற்கையாய் அவள் முகத்தின் வலது பக்கத்தில் விழுந்து கதிரொளியும் இந்தப் பக்கம் அறையில் விளக்குகள் எரியாததால் முகத்தின் இன்னொரு பக்கத்தில் படர்ந்த இருளும். அவளை அப்படியே நிற்கவைத்து அந்த இடத்திலேயே ஒரு ஓவியம் வரையவேண்டும் என்ற மனநிலையை உண்டாக்கியது. அதை உடைத்தே தீருவேன் என்பதைப் போல், கர்ட்டனை மட்டும் மீண்டும் இழுத்துவிட்டுடவள், கண்மூடி கண் திறப்பதற்குள் ஆடைகளற்றவளாய் மாறிவிட்டிருந்தாள். அவனுக்கென்னமோ இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் உடலைவிடவும் முன்பு பார்த்ததுதான் இச்சையை அதிகப்படுத்தியது.

ஒரு வார்த்தை அவளிடம் சொன்னால் போதும், இப்படி உன்னை அந்த இடத்தில் வைத்து அந்த பொஸிஷனில் வரைய யோசித்தான் என்று, மிகவும் சந்தோஷப்படுவாள். பாரம்பரிய குஜராத்தி நடனத்தை ஆடிக்காட்டினாலும் காட்டுவாள். ஒருமுறை அவள் தாண்டியா ஆடப் பார்த்திருக்கிறேன் அத்தனை லாவகமாக இடுப்பை வளைத்து அவள் ஆடும் அந்த ஆட்டத்தின் அழகில் மெய்மறந்திருக்கிறேன். அதில் மிக முக்கியமான விஷயம் அந்த நடனத்தின் பொழுது உடுத்தும் ஆடை தான். அவன் கேட்காமலேயே அது இல்லாமல் அவள் ஆடுவாள்தான் என்றாலும், அப்படி செய்வது அந்த நடனத்தைப் பாழ்படுத்துவதற்குச் சமானம் என்பதால் ஒரு முறை அவளை அந்தச் செய்கையிலிருந்து தடுத்திருக்கிறான். இல்லையென்றால் ஒரு நிமிடத்தில் விதவிதமான முகமாற்றங்களைக் காட்டி மனதை கொள்ளை கொள்ளும் உடல் அசைவுகளைச் செய்து, இப்படி நிற்கவா அப்படி நிற்கவா என்று கேட்டிருப்பாள். இதுவெல்லாம் இல்லையென்றாலும் நிச்சயமாய்,

“உங்களுக்கு என்னை வரையணும்னு தோணிச்சா? ஆச்சர்யம் தான், ப்ளிஸ் பளிஸ் வரைஞ்சுக் கொடுங்களேன்.” ஒன்றிரண்டு முறை கெஞ்சியிருப்பாள், அவள் முகத்தில் படரும் குழந்தைத் தனத்திற்காகவாவது அதைச் செய்துவிடலாம் என நினைத்தாலும் ஏதோ ஒன்று தடுத்துவிடும். அப்படி இரண்டு முறை கேட்டும் அவன் மறுத்துவிடும் நிலையில் அவள் அடையும் மனவேதனையை அனுபவித்தவன் என்பதால் என் மனதில் அந்த சில விநாடிகள் அனுபவித்த சந்தோஷத்தை அப்படியே மூடிமறைத்துவிட்டான்.

நகர்ந்து வந்து போர்வைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டவள், பக்கத்தில் இருந்த ஸிட்னி ஷெல்டனின் “மாஸ்டர் ஆப் த கேம்” நாவலை எடுத்து படிக்கத் தொடங்கினாள். இரவு அவள் தூங்கியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான், என்பதால் தூக்கம் வருவதற்காகத்தான் அந்த நாவலை எடுத்தாள் என்பது புரிந்தது. கடைசி ஆண்டு கல்லூரித் தேர்வுகள் நெருங்கி வரும் வேலையில் அவளை வரவேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தான். உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது வருகிறேன் சொல்லிவிட்டு வந்திருந்தாள்.

அவனுக்கு ஸஸ்மிதாவை மூன்று ஆண்டுகளாகத் தெரியும். முதன் முறை கோவாவில் புத்தாண்டு அன்று பார்த்த நினைவு அவன் மனதில் இன்னமும் பசுமையாக இருக்கிறது. அயோக்கியத்தனத்திற்கு பெயர் பெற்ற அந்த ஹோட்டலில் மழுங்கமழுங்க விழித்தவாறு இவள் நின்று கொண்டிருக்க. அவனும் தனக்கேற்றமாதிரியான பார்ட்டி கிடைக்காமல் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில் இவளையும் ஒரு கண்ணால் அளந்து கொண்டுதான் இருந்தான். அவளின் சாந்தமான முகத்திற்கு கொஞ்சமும் பொருந்தாமல், டைட் டிஷர்டும், அதைவிட இறுக்கமான ஜீன்ஸூம் போட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்த அவளைப் பார்த்த உடனே நினைத்தான். பதினெட்டு வயசுதான் இருக்கும் என்று. புத்தாண்டுக்கு முந்தய இரவு பதினொரு மணி ஆகிவிட்டிருந்த வேளையில், கையில் சிகரெட்டுடன் பாரில் பியர் அடித்துக்கொண்டிருந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்த இந்தப் பெண்ணைப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

அவளுக்கு அருகில் இவளைப் போலவே நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண், அவளுக்கு கிடைத்துவிட்ட ஜோடியுடன் கிளம்பும் முன்னர், இவளிடம் ஏதோ சொல்லிவிட்டுச் செல்ல, கேட்டுவிட்டு அவன்பக்கம் திரும்பிப் பார்த்த அவள் முகம் மிகவும் வாடிப்போயிருந்தது. கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவாள் போலிருந்தது. எல்லோரும் டான்ஸ் ப்ளோர் சென்றுவிட அங்கிருந்து ஹோட்டல் ஊழியர்கள் தவிர்த்து அவனும் ஒன்றிரண்டு வெளிநாட்டுக்காரர்களும்தான் மீதி. அந்த அறையின் பரவியிருந்த மங்கிய இருளும், அதிர்வை ஏற்படுத்தும் இசையும் அவனுக்கு எந்த அளவிற்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதோ அதே அளவிற்கு அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தது என பின்நாட்களில் அவள் சொல்லக் கேட்டிருக்கிறான். அரைமணிநேரத்தில் மற்ற எல்லோரும் கிளம்பிவிட மெதுவாக அவன் அருகில் வந்தவள். உடைந்த ஆங்கிலத்தில்,

“பிஃப்டீன் தௌசண்ட் சார்.” என்று தயங்கித்தயங்கி அவள் சொல்ல, முதலில் அவன் பயந்தது, இது இவளுக்கு முதல் முறையாய் இருந்துவிடப் போகிறது என்பதை நினைத்துத்தான். பின்னிரவில் இப்பொழுதைப் போல், போர்வையையே ஆடையாயிருந்த மற்றுமொரு தருணத்தில், சிறிது நேரத்திற்கு முன்னர் அவள் உடலில் இருந்த பதட்டம் அவன் நினைத்ததை உறுதிப்படுத்த, கேள்விக் கேட்ட அவனுக்கு பதிலாய் அவள் சொன்னது ஒரு சோகக்கதை. அவளுடைய தூரத்து சொந்தமான அக்காள் சொல்லியிருந்தது போல வன்புணர்ச்சி செய்து அவள் குதத்தை கிழித்துவிடாமல் ஆராதனை செய்து கொண்டிருந்த அவனிடம் அன்று அவள் சொல்லியிருந்திராவிட்டால் தான் ஆச்சர்யமே.

அவளுடைய தாயை குஜராத்திலிருந்து ஒருவன் காதலித்துக் கலியாணம் செய்து கொள்வதாய்ச் சொல்லி, மும்பைக்கு அழைத்து வந்திருக்கிறான். முதல் ஒருவருடம் பிரச்சனை எதுவும் செய்யாமலிருந்தவன். ஸஸ்மிதா பிறந்த இரண்டாவது மாதத்திலேயே அவள் அம்மாவை விபச்சாரம் செய்யுமாறு வற்புறுத்த அவள் அம்மா முடியவேமுடியாது எனச் சொல்லியும் தொடர்ந்து படுத்தியவனை ஒருநாள் இரவில் இடுப்பில் கத்தியால் குத்திவிட்டு, அவள் அம்மா புனேவிற்கு வந்துவிட்டதாகவும். பிச்சையெடுத்து, பத்துப்பாத்திரம் தேய்த்து, ஆரம்பத்தில் ஸஸ்மிதாவை வளர்த்ததாகவும் பின்னர் கையில் சேர்ந்த பணத்தில் ரோட்டில் தள்ளுவண்டி ஒன்றில் சாமான்களை வாங்கி விற்றும் வளர்த்திருக்கிறாள்.

படிக்காமல் இருந்ததால் தான் தன்னை ஒருவன் ஏமாற்றிவிட்டதால் ஸஸ்மிதாவின் படிப்பு எக்காரணம் கொண்டும் பாதிப்படையக் கூடாதென்பதில் அவளுடைய அம்மா கருத்தாக இருந்ததால் அவளும் கஷ்டப்பட்டு படித்து அம்மாவின் நம்பிக்கையை காப்பாற்றிவந்திருக்கிறாள். ஒருவாறு அவனுக்கு இது தெரிந்திருந்தது, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது புனேவின் மிகப் பிரபலமான ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர்ஸ் படிப்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள் ஸஸ்மிதா. பின்னர் ஒருவாறு சுமூகமாச் சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில், மீண்டும் புயலாய் ஸஸ்மிதாவின் தகப்பன் நுழைந்தததாகவும். கத்திக் குத்தில் இறந்துபோகாத அவன் பின்னர் தன் தாயைத் தேடிவந்து அவள் படிப்பிற்காக வைத்திருந்த பணத்தை மிரட்டிக் கொண்டுபோய் விட்டதாகவும் பின்னர் அவன் தொல்லை இரண்டாண்களுக்குத் தொடர்ந்து என்றும் ஒரு ரயில்விபத்தில் அவன் இறந்து போனதையும் கூறினாள். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்த பொழுதும் மேல்படிப்பு படிக்க பணமில்லாத நிலையில் அவளுடைய தூரத்துச் சொந்தக்காரியான ஒரு அக்கா, தான் அவளை படிக்க வைப்பதாகச் சொல்லி புனே சிட்டிக்கு அழைத்து வந்ததாகவும் முதல் வருடப்பணம் முழுவதையும் அவள் செலவிட்டதையும் பின்னர் தான் அந்த அக்கா பணம் சம்பாதிப்பதற்கான வழியாக இதை அறிமுகம் செய்துவைத்தாள் என்று கூற, அவன் அவளிடம் இதுதான் உன் முதல் அனுபவமா என்று கேட்டேன்.

அதற்கு அவள், இல்லை கல்லூரி முதல் ஆண்டு படித்த பொழுது இடையில் வேலைசெய்யலாம் என்று ஒரு சேட்டிடம் வேலை கேட்க, சேட் வீட்டிற்கு இவளை வரவழைத்து முடித்துவிட்டதாகவும். பின்னர் அவன் கொடுத்த பணக்கத்தையை அவன் முகத்திலேயே வீசிவிட்டு வந்ததையும் சொன்னாள். அப்ப இரண்டாவது அனுபவமா என்றதற்கு அதையும் மறுத்தவளாய், அவள் கல்லூரியில் படிக்கும் ஒரு பையனை அவள் காதலித்ததாகவும், ஒருநாள் அவன் வீட்டு கார்ஷெட்டில் உறவு கொண்டதைச் சொன்னவள், எதையோ நினைத்து சிரிக்கத் தொடங்கினாள், நான் என்ன விஷயம் என்று கேட்டதற்கு அதை ஒருமுறை என்று கணக்கு சொல்லமுடியாதென்றும் அந்தப்பையன் இன்னும் அந்த அளவிற்கு விஷயம் தெரியாதவன் என்றும் சொல்லிச் சிரித்தாள், இளமாறன் அந்தப் பையனைப் பார்த்திருக்கிறான் சில நாட்கள் நான் தீபிகாவுடன் ஐநாக்ஸ் தியேட்டருக்கு வரும் பொழுது ஸஸ்மிதாவுடன் அந்தப் பையனைப் பார்த்திருக்கிறேன். அவனும் ஒரு குஜராத்தி, அதற்குப் பிறகு அவன் அவளை மிகவும் நெக்குருகி காதலிப்பதாகவும் தன்னை மற்றொருமுறைத் தொடக்கூட முயற்சிசெய்யவில்லையென்றும் கூறினாள். தீபிகா பற்றிய நினைவு வந்ததால் மீண்டும் நிலைக்கு வந்தவனாய்.

“ஸஸ் தீபியையா பார்த்ததா சொன்ன?” அவள் பக்கமாய்த் திரும்பி ஒருக்கழித்துப் படுத்து அவள் வயிற்றில் கைவைத்தவனாய்க் கேட்க, அதற்குரிய பதிலைச் சொல்லாமல்,

“நீங்க அவங்களைக் காதலிக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

“நீ நினைக்கிறியா யாரையும் என்னால் காதலிக்க முடியும்னு.”

“ஆரம்பத்தில் எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்ததுதான், பெண்களின் மீதான உணர்வுகள் செத்துப் போய்விட்ட காதலின்றி பெண்ணின் உடலை அணுகும் ஒருவனாய்த்தான் உங்களைப் பார்த்தேன்.

ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உங்களைப் பற்றிய என் எல்லாவிதமான எண்ணங்களையும் மாற்றிக்கொண்டேன்.” சொல்லிவிட்டு அவளும் அவன் பக்கமாய்த் திரும்பி ஒருக்கழித்துப் படுத்தாள்.

“நீங்க தீபிகாவைக் காதலிக்கிறீங்க அப்படின்னா அவங்க ரொம்பக் கொடுத்து வைச்சவங்க.”

என்னவோ அன்று இந்த வார்த்தைக்களுக்காகத்தான் காத்துக் கிடந்தவனைப் போல சட்டென்று எழுந்து வெற்றுடம்புடன் குளிக்கக் கிளம்ப, பின்னாலேயே ஸஸ்மிதாவும் வர யத்தனித்தாள். மறுத்தவனாய்,

“ஸஸ் நான் தமிழ்நாடு போறேன்.” அவள் முகத்தைப் பார்த்துச் சொல்ல,

“என்னாச்சு?” முன்பெல்லாம் இதைப் போன்ற தகவல்களை நான் சொல்வதும் இல்லை அவள் இப்பொழுது கேட்டது போல் கேள்விகளைக் கேட்பதுமில்லை, மூன்று மாதத்திற்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவம் எங்களை எங்கள் உறவை அசைத்துப் பார்த்ததென்னவோ உண்மை.

“அம்மா சூஸைட் அட்டம்ட் பண்ணிக்கிட்டாங்களாம். அப்பா உடனே வரச்சொல்லி போன் பண்ணியிருந்தார்.” அவன் சொல்ல அம்மாவின் தற்கொலை முயற்சிக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்காமல் அவளுடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்ததைப் பற்றி நினைத்திருப்பாள்.

குளித்துவிட்டு வந்தவன்,

“ஸஸ் வர்றதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆனாலும் ஆகும். வேணுங்கிற பணத்தை எடுத்துக்க. காரை விட்டுட்டு போறேன் பார்த்துக்கோ.” சொல்லிவிட்டு புனே பெங்களூர் விமானத்தைப் பிடிக்கப் பறந்தான்.

விமானப்பயணம் அவனுக்கு அவ்வளவாக பிடித்ததில்லை, ஆனாலும் புனேவிலிருந்து விமானத்தில் பெங்களூர்க்குப் பறந்து வந்ததற்கான காரணங்கள் இரண்டு, ஒன்று ஏற்கனவே தகவல் சொல்லிய பிறகும் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை என்பதால் தொலைபேசிக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு ஹோட்டலில் காத்திருக்கும் ஸஸ்மிதாவைப் பார்க்கச் சென்றதால் நேர்ந்த நேரத்தட்டுப்பாடு, மற்றது முந்தையதை விட அவனுக்கு விருப்பமானது, பெங்களூரில் இருந்து அவன் ஊருக்கு செய்யப் போகும் பஸ் பயணம். அந்தப் பயணத்தை நினைத்தவாரே முகத்தை தூக்கிவைத்துக் கொண்டிருக்க, இடையில் வந்து சாக்லேட் கொடுத்த விமானப் பணிப்பெண்ணை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

விமானநிலையத்தில் இருந்து கெம்பகௌடா பஸ்நிலையத்திற்கு வந்தவன், அங்கே நின்றிருந்த பெங்களூர் டு ஓசூர் பேருந்தில் உட்கார்ந்து கொண்டான். ஆரம்பக்காலங்களில் இந்தப் பயணத்தைப் பற்றி அவன் அம்மாவிடம் விவரிக்க, என்னவோ பைத்தியம் பிடித்துவிட்டதைப் போல ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தது நினைவில் வந்தது. அம்மாவிற்கு புரிவதில்லை, கேபிஎன் போன்ற பேருந்துகளில் பயணம் செய்வதில் அவனுக்கு இருக்கும் ஒவ்வாமை. அத்துணுண்டு பேருந்தில் தனித்தனித் துருவங்களாய் மக்கள், பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சொந்தக்காரனிடம் கூட பேசுவதற்குக் காசு கேட்டும் ஆட்களுடன் பயணம் செய்வதில் அவனுக்கு சுத்தமாய் ஆர்வம் இல்லை.

இதே தற்சமயம் உட்கார்ந்திருக்கும் பேருந்தில் நடக்கும் களேபரங்களால், அப்படியென்பதற்குள் ஓசூர் வந்துவிட்டதைப் போன்று ஒரு உணர்வு ஏற்படும். எத்தனை விதமான மக்கள், எத்தனை விதமான பேச்சுவழக்கங்கள். வாயைப் பிளந்தபடி உட்கார்ந்திருப்பான். அவனைப் பார்த்தால் அந்த மனிதர்களுக்கெல்லாம் ஏன் தான் என்னிடம் பேசவேண்டும் என்று தோன்றுமோ தெரியவில்லை. எல்லாப் பயணங்களிலுமே ஏதாவது ஒரு கதை எனக்குச் சொல்லப்படுகிறது. சின்னவயதில் அவன் பாச்சம்மா - அப்பாவின் அம்மா - சொன்ன கதைகளைப் போல், மகாபாரதக் கதைகளை அவன் அவரிடம் இருந்துதான் தெரிந்து கொண்டான், மனப்பாடமாக திருஷ்ட்ராஷ்டிரனின் நூறு பையன் பெயர்களைச் அநாயாசமாகச் சொல்லுவார் அவர். கதை கேட்கும் ஆர்வம் அப்படி ஏற்பட்டதுதான்.

ஒருமுறை பக்கத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வயதான மனிதரின் உடலில் வரும் நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்ப, அதைப் புரிந்து கொண்டவர் போல் தன் சரித்திரத்தையே சொல்லி முடித்திருந்தார் அந்த பழங்கால சினிமா இயக்குநர், பிரபலமான சினிமா இயக்குநரிடம் உதவியாளராக இருந்தது, பின்னர் சினிமாவில் இயங்கும் அரசியல்களையெல்லாம் தாண்டித்தான் எடுத்த முதல் படம் நூறுநாட்கள் ஓட, அடுத்தடுத்து ஐந்து படங்களுக்கான பூஜைகளைப் போட்டது, தன் படத்தில் நடிப்பதற்காக தன் வீட்டில் வந்து போட்டிப்போட்டுக்கொண்டு படுத்துறங்கிய நடிகைகள் என. புதுக்கோட்டை வந்து சேர்வதற்குள் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பத்தாண்டுகளை அவர் அவனுக்குச் சொல்லியிருந்தார்.

----------------------------------------------------------------------------

நாமக்கல் டீக்கடையில் என் கையைப் பிடித்தவாறு தெரியுமா தம்பி இந்தக் கையை இதேபோல் பிடித்துக் கெஞ்சி நடித்த பல நடிகை, நடிகர்கள் இன்று தமிழ்சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். நான் போய் நின்றால் நிச்சயம் செய்வார்கள்தான், ஈகோ தம்பி ஈகோ, அந்தக் காலத்திலேயே ராஜா மாதிரி ப்ளெசர் காரில் போவேன் நான். இப்ப அவங்க காலில் போய் விழவிருப்பமில்லை. என்று சொல்லிக்கொண்டே போன அந்த நபரின் முகம் மறந்துபோய்விட்டாலும், அந்த டீக்கடையை பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் நாற்றத்தால் நான் முகம்திருப்பியதுதான் நினைவில் வரும்.

ஈகோவைப் பற்றி ஆரம்பக்காலத்தில் சினிமாக்கள் பார்த்தும் கதைகளைப் படித்தும் காதலர்களுக்கு இடையில் பெரும்பாலும் வருவது என்பதாக உணர்ந்திருந்தேன். ஆனால் அது அப்படியில்லை என்பதை வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. ஸஸ்மிதா நினைத்திருக்கலாம் அம்மாவின் தற்கொலை முயற்சிக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறேன் என்று. ஆனால் அது அப்படியில்லை என்று எனக்குத் தெரிந்துதான் இருக்கிறது. தற்கொலை, கொலை என்பதெல்லாம் சாதாரணமாகப் போய்விட்ட வீட்டில் பிறந்தவன் நான். இது அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையில் நடக்கும் ஈகோ போராட்டம். இது ஒரு பக்கப்போர். என் அப்பாவின் பக்கத்தில் இருந்து இதற்கு எதிர்வினை நிகழ்ந்ததேயில்லை, ஒரே ஒரு முறையைத் தவிர்த்து.

எங்கப்பாவிற்கு எங்கம்மா இரண்டாவது மனைவி, முதல் மனைவியை அப்பா சுட்டுவிட்டார் என்றும் இல்லை பெரியம்மா தற்கொலை செய்து கொண்டார் என்றும் வதந்திகள் எங்கள் ஊரில் உண்டு. ஒட்டுமொத்தமாக பண்ணையங்களை தமிழக அரசு ஒழித்துக் கட்டிய பொழுது பண்ணையார்களிடம் இருந்த துப்பாக்கிகளையும் பிடுங்கிவிட்டதாக அப்பா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை பாச்சம்மா தான் எங்கள் வீட்டைச் சுற்றியும் குழிபறித்து பாலிதீன் உறைபோட்டு நிறைய துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் முதலில் இதெல்லாம் மகாபாரதக் கதைபோல பாட்டியின் கற்பனைக் கதைகளெனத்தான் நினைத்திருந்தேன். பின்னர் எனக்கு வயது வந்துவிட்ட பிறகு, அந்தத் துப்பாக்கிகள் துருப்பிடித்துவிடாமல் இருக்க ஆறுமாதத்திற்கு ஒருமுறை எண்ணெய்ப் போட்டு சுத்தமாய்த் துடைத்து பின்னர் திரும்பவும் மண்ணுக்குள் மறைத்து வைக்கும் பழக்கத்தை அப்பா கற்றுக் கொடுத்த பொழுதுதான் உண்மையென புரிந்துகொண்டேன்.

நானும் அப்பாவுமாய் மொத்த துப்பாக்கிகளையும் எண்ணெய் போட்டு துடைத்து வைத்த ஒரு இரவில், ஒரு குறிப்பிட்ட துப்பாக்கியைப் பார்த்து அப்பா அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது. அதுதான் அப்பா என் பெரியம்மாவை சுட்டுக்கொன்றது என பெரியம்மாவின் பூஜைக்கான ஒரு நாளில் அம்மா சொன்னாள். அம்மா பெரியம்மாவின் சொந்த சகோதரிதானாம். இது பாட்டி சொல்லித்தான் எனக்கு ஆரம்பத்தில் தெரியும் பாட்டி பல இரவுகளில் மகாபாரதக் கதைகளோடு எங்கள் குடும்பக் கதைகளையும் சொல்வதுண்டு. அது உண்மையா கற்பனையா உண்மை கலந்த கற்பனையா என்பது வாழ்வில் நான் பட்டு தெரிந்து கொண்டபிறகுதான் புரிந்திருக்கிறது.

பெரியம்மாவிற்கு அப்பாவுடன் கலியாணம் ஆவதற்கு முன்பே, வேறு யாருடனோ தொடுப்பு இருந்ததாகவும். சாதாரணமாக பண்ணைக்கு மருமகளாக வரும் எவருக்கும் பலவிதமான சோதனைகளை அவர்களுக்கு தெரியாமல் செய்யும் வழக்கம் உண்டு. அப்படி செய்யப்பட்ட முதல் சோதனையிலேயே இது தெரிந்து பாட்டி அதிகமாய்ச் சப்தமிட, அப்பாதான் அடக்கி அப்படியிருக்காது என்று சொன்னதாகவும். பின்னர் உண்மை தெரிந்துபோய் நாட்டுத்துப்பாக்கியை எடுத்து பெரியம்மாவைச் சுட்டுவிட்டதாகவும் சொல்லி அழும் பாட்டியை நான் சமாதானப்படுத்த முயன்றதில்லை, இப்பொழுதெல்லாம் பெரியம்மாவை அப்பா சுட்டதற்கு பாட்டியும் ஒரு காரணமோ என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடிவதில்லை. இதற்கெல்லாம் கூட கூட அம்மாதான் காரணம்.

பின்னர் வயிற்றுவலி காரணமாய் பெரியம்மா சுட்டுக்கொண்டு செத்ததாய்ச் சொல்லி விஷயத்தை மூடிவிட்டார்கள் வீட்டில். இந்தக் கதையைத்தான் பெரியம்மாவைப் பெற்றவர்கள் அம்மாவிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பண்ணைக்கு மருமகளாய் அனுப்பியவள் இப்படி சோரம் போய்விட்டாளே என்ற வருத்தம். இதுதான் சாக்கென்று பன்னிரெண்டு வயதில் அம்மாவை அப்பாவிற்கு இரண்டாம் தாரமாய்க் கட்டிவைக்க, முதல் குழந்தையாய் நான் பிறந்தவரை அம்மாவிற்கு, தன் அக்கா இறந்தது கணவனால் தான் என்று தெரியாதாம்.

அப்பாவிற்கும் கொழுப்புத்தான், அம்மா வந்த ராசிதான் தலைவர் தொகுதியில் தன்னை எம்எல்ஏ சீட்டுக்கு நிறுத்தினார் என்றும், அம்மாவின் ராசியால் தான் எம்எல்ஏ ஆனோம் என்றும் இன்றுவரை முழுமனதாக நம்பிவருகிறார். இப்படித்தான் அவர் சிட்டிங் எம்எல்ஏ இருந்த ஒரு நாளில் அம்மா ரொம்பவும் கஷ்டப்பட்டு உடம்பில் கத்திரி வைச்சி நான் பிறந்த சந்தோஷத்தில் முதன் முறையாய் குடித்திருந்த போதையில் அம்மாவிடம் உண்மையை உளறிவிட்டிருந்தார். அங்கே ஆரம்பித்தது சனியன் எங்கள் வீட்டிற்கு.

என் குழந்தைப் பருவத்திலிருந்தே அம்மாவும் அப்பாவும் பேசிச் சிரித்து நான் பார்த்ததில்லை, இருந்தும் இப்பொழுது நினைத்தால் ஆச்சர்யமாய் இருக்கிறது, எனக்குப்பிறகு சரியாய் இரண்டாண்டு, இரண்டாண்டு இடைவெளியில் தங்கையும் தம்பியும் பிறந்தது. பாட்டி இருந்தவரை வீட்டின் உரிமை, கட்டுப்பாடு முழுவதும் பாட்டியிடம் தான் இருந்தது. நான் நினைத்திருக்கிறேன், கிழவி தான் தன் கணவனிடம் ஒழுங்காய் நடந்து கொள்ளாவிட்டால் இன்னொருத்தியை அவருக்கு கட்டிவைத்துவிடும் சாமர்த்தியம் படைத்தது என்பதால் அம்மா தான் விருப்பமில்லாமல் தம்பி தங்கைகளை பெற்றிருக்க வேண்டும் என்று. ஆனால் பாட்டி நினைத்திருந்தால் கூட என்னைப் பொறுத்தவரை அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை தான். இதை ஒருமுறை அம்மா வாயாலேயே கேட்டிருக்கிறேன்.

தன் தந்தையிடம் அம்மா, அப்பாவைப் பற்றி குறைக்கூறிக் கொண்டிருந்த ஒரு நாள், நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் என்று நினைக்கிறேன். நான் அம்மாவிடம் நேராய்ச் சென்று,

“அம்மா அப்பாவிற்கு கூத்தியா இருக்கிறதா நீ நினைக்கிறியா” என்று கேட்டிருக்கிறேன். சர்வசாதாரணமாய் கூத்தியா என்ற வார்த்தையை அம்மாவிடம் பிரயோகித்திருந்தாலும், அம்மா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சிரித்துவிட்டு,

“தம்பி, இருக்கவே முடியாதுன்னு எனக்குத் தெரியும், தங்கூட படுத்தெந்திரிக்கிற பொம்பளைக்கு இன்னொருத்தன் கூட தொடுப்பு இருந்துச்சுங்கிறதாலத்தான் உங்க பெரியம்மாவை சுட்டாரு உங்கப்பாரு. அவரு கூத்தியா வைச்சிக்கிறதுக்கு வாய்ப்பே கிடையாது. இவருக்கு ஒழுக்கமா அவளுக இருக்கமாட்டாளுங்கன்னு உங்கப்பாவுக்கு நல்லாவேத் தெரியும்.

இருந்தாலும் உங்கம்மா இந்தவீட்டில் சந்தோஷமா இல்லைன்னு உங்க பாட்டனுக்கெல்லாம் தெரியணும்னுதான் அப்படிச் சொன்னேன்.”

அம்மா என்னை தன் பக்கத்துக்கு இழுக்க செய்த இம்முயற்சியில் நான் அவரைவிட்டு விலகி வெகுதூரம் வந்திருந்தேன். அப்பா எனக்கு ஹீரோ ஆகியிருந்தார். ஆனால் அப்பாவுடனான பழக்கம் அவ்வளவு இல்லாத தம்பி, தங்கைகள் அம்மாவின் போதனைகளால் அப்பாவிற்கு எதிராக வளர்க்கப்பட்டிருந்தார்கள்.

எனக்குத் தெரியும், நான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செஞ்ச கார் ஒன்றை அப்பாவிற்கு அனுப்பும் பொழுதே இதனால் அம்மா நிச்சயமாய்ப் பிரச்சனையை எழுப்புவார் என்று. தம்பியை அப்பாவிற்கு எதிராக தூண்டிவிடும் முயற்சிதான் இந்த தற்கொலை நாடகம். அரசியலில் குப்பைக் கொட்டியிருந்தாலும் அப்பாவிற்கு இன்னும் அம்மா அளவிற்கு சாமர்த்தியம் போதாது. அதனால் விஷயம் என் காதுவரை வந்திருக்கிறது அதுவும் அவரின் வாய்வழியாய்.

கண்டக்டர் “நாமக்கல்லில் இறங்கிறவங்கல்லாம் இறங்குங்க” என்று சப்தம் கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு திரும்பியது போல் இருந்தது. மணி எத்தனை என்று மொபைலை உயிரூட்டிப் பார்க்க, பன்னிரெண்டரையக் காட்டியது. இன்னும் நான்கைந்து மணிநேரம் பிடிக்கலாம் திருச்சியை சென்றடைய, அங்கிருந்து ஒரு மணிநேர பயணம் புதுக்கோட்டைக்கு, சொல்லியிருந்தால் அப்பா வண்டி அனுப்பியிருப்பார் திருச்சிக்கு, ஏன் பெங்களூருக்கே கூட ஆனால் அப்பாதான் எனக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். மக்களிடம் பழகும் குணத்தை. நான் உட்கார்ந்திருந்த மூன்று நபர்களுக்கான சீட்டில் இரண்டு காலியாய் இருந்தது; வண்டி கிளம்பும் நேரத்தில் ஆக்கிரமிக்கப் பட்டது உட்கார்ந்தவர்களைப் பார்த்தால் இளம் காதலர்களைப் போலிருந்தது. அந்தப் பெண் விசும்பலாய் அழுது கொண்டிருந்தாள்.

இந்தப் பெண்களுக்கெல்லாம் தைரியம் ஜாஸ்தியென்று நினைத்தவனுக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தது ஸஸ்மிதாவைப் பார்த்ததைப் போலிருந்தது. ஒரேயொரு முறை அவளுடன் பஸ் பயணம் செய்திருக்கிறேன். புனேவிலிருந்து குஜராத் வரை சென்ற அந்தப் பயணத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாதென்று நினைக்கிறேன். அந்தப் பயணம் மட்டுமல்ல, மூன்று மாதங்களுக்கு முன்னால் நடந்த ஒட்டுமொத்தமான நிகழ்ச்சிகளையும் சேர்த்துத்தான்.

ஒருநாள் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த பொழுது ஸஸ்மிதாவின் செல்லிடைபேசியில் அழைப்பு வந்திருந்தது. அது ஆச்சர்யமான ஒன்று எக்காரணம் கொண்டும் அவள் என்னுடன் போனில் பேசமாட்டாள் அதுவரை. நான் அவளை அழைக்கவேண்டுமென்றால் அந்தப் போன் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு வைத்துவிடுவேன் அவ்வளவுதான் அவள் நாங்கள் எப்பொழுதும் தங்கும் ஹோட்டலுக்கு வந்துவிடுவாள். அன்று அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. நான் அட்டெண்ட் செய்ய எதிர்ப்பக்கத்தில் இருந்து ஸஸ்மிதாவின் அழுகைக் குரல். அவளுடனான மூன்றரை வருட பழக்கத்தில் அவள் அழுது நான் பார்த்ததில்லை; கேட்டால் நான் வேண்டியமட்டும் சின்னவயதிலேயே அழுதுவிட்டேன் இனிமேல் அழுவதற்கு ஒன்றுமில்லையென்பதான பதிலை எனக்குத் தந்திருந்தாள்.

அவளை நாங்கள் எப்பொழுதும் சந்திக்கும் வழக்கமான ஹோட்டலுக்கு வரச்சொல்லியிருந்தேன். வந்தவளின் முகம் அழுது அழுது சிவந்திருந்தது. அப்படியொரு நிலையில் ஸஸ்மிதாவை பார்க்கவேண்டி வந்ததேயென நினைத்து நான் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். மாலைநேர சூரியனின் வண்ணக்குழப்பங்களை நான் அந்த அறையின் ஜன்னலின் வழியே தரிசித்துக் கொண்டிருந்தேன். அந்த இக்கட்டான சமயத்தில் கூட என்னால் இந்த விஷயத்தை கவனிக்க முடிந்திருந்தது, என்னயிருந்தாலும் அவள் என் மனைவியில்லையே என்ற நினைப்புவேறு வந்தது. வந்து அரைமணிநேரம் ஆகியிருந்தும் அவளிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை, அவள் நான் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். நான் ஆரம்பிக்காததால் அவளே ஆரம்பித்தாள்.

மோகன் அம்மாவிற்கு உடம்புக்கு சரியில்லையாம், டாக்டரிடம் காட்டியிருக்கிறார்கள். சீரியஸான பிரச்சனைன்னும் உடனே ஆப்பரேஷன் செய்யணும்னு டாக்டர் சொல்றாங்களாம். இரண்டு லட்சம் தேவைப்படும்னு அம்மாவை பார்த்துக்கிட்டவங்க சொல்றாங்க...” நிறுத்தியவள் உங்களுக்கே தெரியும் எங்க நிலைமை நான் எங்க போவேன் இரண்டு லட்சத்துக்கு...” சுயபச்சாதாபம் ஊறிய கண்கள் கலங்கத் தொடங்கின. “நான் என் வாழ்கையிலேயே கடைசியாய் ஆசைப்பட்டது நானா உழைச்சு சம்பாரிச்சு அம்மாவுக்கு சாப்பாடு போடணும்னு... இப்படி ஊரெல்லாம் படுத்து நான் படிச்சதெல்லாம் வீணாய்டும் போலிருக்கே!” என்று சொல்லியவள் முடிக்கக்கூட இல்லை, கண்களில் இருந்து நீர் பொலபொலவென கொட்டத் தொடங்கியது.

அவளுடனான என்னுடைய இந்த மூன்றாண்டு கால உறவில் அவளுக்கும் அவள் அம்மாவிற்கும் இடையேயான உறவு நன்றாய்த் தெரியும். சொல்லப்போனால் ஸஸ்மிதா உயிர் வாழ்வதே கூட அவள் அம்மாவிற்காகத்தான் என்று நான் முழுமனாதாக நம்பினேன். காசு பணம் இருந்தாலும், நல்ல உடை உடுத்தினாலும், ஆடம்பரமான ஹோட்டலில் சாப்பிட்டாலும் ஒரு மெல்லிய சோகம் அவள் மனதில் இழையோடுவதைக் கவனித்திருக்கிறேன். ஆனால் அந்த சோகம் அவள் கண்களிலோ இல்லை முகத்திலோ தென்படாத அளவிற்கு வாழ்க்கை அவளை அடித்துப் போட்டிருந்தது. இன்றும் அதே வாழ்க்கை அவளை ஒரேயடியாகத் தூக்கியடிக்க முயன்றிருக்கிறது. எனக்குப் புரிந்தது பிச்சையெடுத்து தன்னை படிக்க வைத்த அம்மாவைக் கூட காப்பாற்ற முடியாத நிலை யாருக்கும் வந்துவிடக்கூடாது.

நான் அவளைச் சமாதானப்படுத்த முயலவில்லை, எனக்கு அந்தத் திறமை கிடையாதென்று முழுமனதாய் நம்பினேன். என்னிடம் இருந்து அவள் அந்தச் சமயத்தில் எதிர்பார்த்ததும் அதுவாய் இருக்கமுடியாது. அவளை அழைத்து இரண்டு லட்சத்திற்கான செக் ஒன்றைக் கொடுத்தேன், இவள் இங்கே செய்து கொண்டிருக்கும் வேலை காரணமாய் அவள் அம்மாவை குஜராத்தில் குடிவைத்திருந்தாள் என்பதால் குஜராத்திற்குச் செல்ல அவளுக்கு விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து அனுப்பிவைத்தேன்.

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும்; என்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியில் நான் சந்தித்திராத சந்தோஷத்தை எனக்கு அள்ளித் தந்தவள் ஸஸ்மிதா. என் அப்பா அடிக்கடி சொல்வார் “தம்பி பணத்தை பேப்பரா மதிக்கணும் அவ்வளவுதான் அதுக்கு மேல அதுக்கு மதிப்பு கொடுத்தேன்னு வை. அது உன்னைத் தூக்கி சாப்டுடும். உன் மனசுக்கு சரின்னு பட்டுச்சா; எதுக்கு யோசிக்காத, அவன் என்ன சொல்வான் இவன் என்ன சொல்வான் அப்படின்னெல்லாம். செஞ்சுடு.” அன்று செய்தேன்.

அவள் இருந்த விரக்தியில் ஒரு நன்றியைக் கூட அவள் எனக்குச் சொல்லவில்லை உண்மையில் அதை நான் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் அவள் நான் செய்ததற்கான நன்றியை அற்புதமாகச் சொன்னாள். நாமக்கல்லில் இருந்து வேகமாய் திருச்சியை நோக்கி நகரத் தொடங்கியது பேருந்து. ஆரம்பத்தில் விசும்பலாய் இருந்த பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணின் அழுகை சிறிது தூரம் தாண்டியது வேகமெடுத்தது பேருந்தைப் போலவே. அந்தப் பெண்ணின் கிராமத்தை தாண்டியிருக்க வேண்டும் என்று நானாய் நினைத்துக் கொண்டேன். கூடவந்த பையன் அந்தப் பெண்ணின் கையை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். அவளும் அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

ஸஸ்மிதாவிற்கு நான் தீபிகாவுடன் பழகுவது எப்பொழுது ஆச்சர்யமான விஷயம் தான். ஆரம்ப காலத்தில் இதைப் பற்றிய பேச்சு எங்களுக்குள் இருந்ததில்லை. ஆனால் ஒருமுறை எங்கள் இருவரையும் ஐநாக்ஸ் தியேட்டரில் வைத்து ஸஸ்மிதா பார்த்துவிட அடுத்த வெள்ளிக்கிழமை என்னிடம் உரிமையாக யாரென்று கேட்டாள். நான் ஃப்ரெண்ட் என்று சொல்லி வைத்திருந்தேன் பின்னர் வந்த ஏதோ ஒரு நாளில் வெள்ளிக்கிழமை இரவு தீபிகா தொலைபேசப்போக நான் அவளுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டவள், அவளுக்குத் தமிழ் புரியாது ஆனால் நான் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தது, வழிந்தது எல்லாம் புரிந்திருக்கும். அதற்குப் பிறகு நச்சரிக்கக் தொடங்கினாள் தீபிகாவைப் பற்றி சொல்லுங்கள் என்று.

என்கிட்ட சொல்றதுக்கு என்ன மோகன், நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன். அதுமட்டுமில்லாம உங்களை தப்பா நினைச்சிக்கிறதுக்கு நான் யார்?

அவளுக்கு நன்றாய்த் தெரியும் அந்த வார்த்தையை சொன்னாள் என்றால் நான் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வேன் என்று. அதனால் அந்த கடைசி வரியை இணைத்துக் கொண்டாள். ஆனால் அந்த வார்த்தையை நான் எவ்வளவு சீரியஸாய் எடுத்துக்கொள்வேன் என்று தெரிந்ததால் பெரிய பிரச்சனை என்றால் மட்டுமே சொல்வாள். அவளைப் பொறுத்தவரை தீபிகா பெரிய விஷயம்.

சரி நான் தீபிகாவைப் பத்தி சொல்றேன் ஆனா அதுக்கு முன்னாடி நீ அந்த காலேஜ் பையனைப் பத்தி சொல்லணும்.” நான் கேட்க, அவள் என்ன நினைத்தால் என்று தெரியாது.

தாஸ் நான் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். என்னிக்கு நீங்க இல்லாத இன்னொருத்தன் கூட படுக்குறனோ அதற்கு அப்புறம் நீங்க என்னைப் பார்க்கவே முடியாது. உங்களுக்குச் சந்தேகம் இருக்கலாம் ஏன்னா நான் பணத்துக்கு படுக்குறவ தானே, யார் கூட வேணும்னாலும் படுத்திருப்பா படுப்பான்னு. நான் காசுக்காக படுக்கிறவ தான் ஆனா இந்த மூணு வருஷமா உங்களைத் தவிர யார் கூடவும் நான் படுக்கலை. ஏன்னா எனக்கு பணம் காலேஜ் பீஸ் கட்ட மட்டும் தான் தேவை. அதை நீங்க தந்துற்றீங்க; அதனால எனக்கு அந்த தேவை ஏற்படலை.

ஒரு நல்ல மாலைப் பொழுதை தீபிகாவைப் பற்றிய பேச்சை எடுத்து அன்று அப்படி ஸஸ்மிதா கலைத்துப் போட்டிருந்தாள். அவள் சாதாரணமாகவே நல்ல பெண் என்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளை அந்த நிலைக்கு தள்ளின என்றும் நன்றாகத் தெரியும். இந்த மூன்று வருடகாலத்தில் அவள் வேறு யாருடனும் சென்றிருக்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்தாலும் நானும் அதைக் கேட்டுக்கொண்டதில்லை அவளும் சொல்லியதில்லை. ஆனால் அன்று அவளாய் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு எப்படியோ வந்திருந்தாள்.

நான் அவளைப் பார்த்து முறைத்தேன்.

நான் உன்கிட்ட என்ன கேள்வி கேட்டேன் நீ என்ன பதில் சொல்ற. நீ வரவர லாஜிக்கலா யோசிக்கிறதையே மறந்துட்டு வர்ற. நான் அந்தப் பையன் பத்தி கேட்டது ரொம்ப சாதாரணமா!” தொடரும் முன் இடைமறித்தவள்.

தாஸ் உண்மையில் நான் உங்க பொண்டாட்டியோ காதலியோ கிடையாது, நீங்களும் அப்படி நினைக்கலாம். ஆனால் நான் என்னை உங்க காதலியா, பொண்டாட்டியாத்தான் நினைச்சிக்கிட்டிருக்கேன். சொல்லப்போனா உங்கக் கிட்ட ஒவ்வொரு தடவையும் காசு வாங்கிறப்பையும் என் மனசை கொன்னுட்டுதான் வாங்குறேன். நீங்க அப்படி நினைச்சிக்கிட்டு கொடுக்கிறதில்லைன்னாலும், அப்படி நான் நினைச்சிடக்கூடாதுன்னு நீங்க யோசிச்சு யோசிச்சு செய்தாலும் என்னால் அப்படி மறக்கமுடியலை.

அதனால தான் நீங்க அந்தப் பையனைப் பத்தி கேட்டதும் இத்தனையும் சொல்றேன். நீங்க இதுவரைக்கும் என்கிட்ட என் வாழ்க்கையை லைஃப் ஸ்டைலை, என்னுடைய நடவடிக்கையைப் பத்தி கேள்வி கேட்டதில்லை. நீங்க கேட்காததால நானும் சொன்னதில்லை ஆனால் இப்ப கேட்டீங்க பாருங்க, அதை நீங்க ஒரு கேள்வியா நினைச்சுக் கேட்கலைன்னாலும் எனக்கு நானே உங்க மூலமா சமாதானம் சொல்லிக்கிறேன். என்னமோ கேட்டீங்க நான் எங்கேயோ போய்ட்டேன்.

அந்தப் பையனைப் பத்தி உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன்ல, அவன் என்னை தீவிரமா காதலிக்கிறான். இந்த உலகத்திலேயே என் மேல இருக்கும் அன்பை வெளிப்படையாச் சொன்னவன் அவன் தான். நீங்களும் சரி, எங்க அம்மாவும் சரி என் மேல இருக்கிற அன்பை பாசத்தை வெளிப்படையா சொல்லமாட்டீங்க. நான் உங்களையோ எங்கம்மாவையோ அந்தப் பையன் கூட கம்பேர் செய்யக்கூட மாட்டேன்; ஆனா நானும் சின்னப் பொண்ணு தானே? என்பின்னாடியே வழிந்து கொண்டு வரும் அப்பாவி பையன் அவன். அவ்வளவுதான். உங்களுக்கும் அந்தப் பையன் கூட எனக்கு வேறமாதிரி தொடர்பிருக்காதுன்னு தெரியும். இல்லையா?

நான் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன். அவளும் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொள்ள லைட்டரை அவளிடம் நீட்டினேன்.

ஸஸ், நான் அந்தப் பையன் பத்தி உன்கிட்ட கேட்டதுக்கு ஒரே ஒரு காரணம். ஏறக்குறைய தீபிகாவிற்கும் அந்தப் பையனுக்கும் நிறைய ஸிமிலாரிட்டீஸ் இருக்குமென்று தான். நீ சொன்னத வச்சுப் பார்த்தா அது உண்மைன்னும் தெரியுது.

நான் கட்டிலில் இருந்து எழுந்து பால்கனிக்கு வந்து உட்கார்ந்தேன். கூடவே வந்தவள் எதிரில் உட்கார்ந்தாள். நான் அவள் ஆழமாய் சிகரெட் இழுத்து புகை விட்டதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தாஸ் நீங்க வேணாம்னு சொன்னா நான் தம் அடிக்கிறதை, பியர் அடிக்கிறதை எல்லாம் நிறுத்திருவேன். இப்பவே கூட ஒன்னும் பெரிசா விரும்பி செய்யலை கண்டதையும் யோசிச்சிக்கிட்டிருப்பேன். அதையெல்லாம் மறக்கறதுக்காகத்தான் இதெல்லாம்.

நீங்க ஒரு வார்த்தை பண்ணாதன்னு சொல்லுங்க நிறுத்திற்றேன்.

ஸஸ் உனக்கு என்னமோ ஆச்சு இன்னிக்கு.” நானும் ஆழமாய் இழுத்து புகைவிட்டபடி வேடிக்கையாச் சொல்ல, அவள் முகம் சட்டென்று வாடத் தொடங்கியது. முகத்தில் லேசாய் சோகப் புன்னகை பரவியது.

ச்ச நான் ஒரு லூசு உங்கக்கிட்ட என்னவெல்லாமோ புலம்பிக்கிட்டிருக்கேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In ஆண்டாள் கவிதை காதல் திருமணம்

ஆண்டாள்

"அப்பா நீங்க பாத்த மாப்பிள்ளையை நான் கல்யாணம் செய்துக்க முடியாது," நான் சொல்லி முடிக்க, அப்பாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தொடங்கியது.

"என்னம்மா ஷைலு இது; இப்படி சொன்னா எப்படி; நான் பாத்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்; நல்லா சம்பாதிக்கிறாரு; அமேரிக்காவில வேலை பார்க்கிறாரு. எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. ஏம்மா வேணாங்கற; அவருக்கு மண்டை கொஞ்சம் வழுக்கையா இருக்கே அதனாலயா? இப்ப என்னைப்பாரு நானும் கூட வழுக்கைதான் அதுக்கா என்னை, உன்னோட அப்பா இல்லைன்னு சொல்லிருவியா?"

"என்னப்பா இது, தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டு. வழுக்கையா இருக்கிறதா பிரச்சனை? அதுயில்லை! அவரைப் பற்றி நான் ஒன்னு கேள்விப்பட்டேன். அதனாலத்தான்..." நான் முடிக்காமல் இழுத்தேன்.

"சொல்லும்மா என்ன கேள்விப்பட்ட?"

"இல்லை அவரு நாஸ்திகருன்னு யாரோ சொன்னாங்க, கடவுள்னு சொன்னாலே சண்டைக்கு வந்திருவாருன்னும் சொன்னாங்க. எப்பிடிப்பா என்னால அவரு கூட வாழமுடியும். நம்ம வீட்டிலையோ கடவுளை நினைச்சுக்காம எதையுமே செய்ய மாட்டோம். அதனாலத்தான் நான் அப்படி சொன்னேன்." மெதுவாக, ஒருவாரமாய் என்னுள் உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.

நான் சொன்னதைக் கேட்ட அப்பா முதலில் சிரித்தார். பின்னர் நெருங்கிவந்து என் தலையைத் தடவிக் கொடுத்தவர்.

"அய்யோ ஷைலும்மா, உங்கம்மாத்தான் அடிக்கடி சொல்லிக்கிட்டேயிருப்பா, நீ ஒரு குழந்தைன்னு அது சரியாத்தான் இருக்கு. இதெல்லாம் ஒரு பிரச்சனையா. அவரு கடவுள் இல்லைன்னு சொன்னா என்ன? உனக்கு தெரியுதுள்ள கடவுள் இருக்குறாருன்னு. அதுபோதும். அவங்கவங்க நம்பிக்கைம்மா இது. இதைப்போய் பிரச்சனையா பாத்துக்கிட்டு."

"இல்லைப்பா இப்பப் பாருங்க, நம்ப வீட்டில நல்லநேரம் கெட்டநேரம் பார்த்துட்டுத்தான் ஒரு விஷயத்தை ஆரம்பிப்போம். வாரத்தில் மூணு நாளாவது கோயிலுக்கு போவோம். செவ்வாய், வெள்ளிக் கிழமைன்னா நானும் அம்மாவும் விரதம் இருப்போம். தீபாவளி, பொங்கள், ஆடிப் பதினெட்டு கொண்டாடுவோம். இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை. அதனாலத்தான் நான் இவரை கல்யாணம் பண்ணிக்கலைன்னு சொன்னேன்."

நான் சொன்னதும் சிறிது யோசித்த அப்பா, "ஷைலும்மா, நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே. நான் ஒரு ஏற்பாடு பண்ணுறேன். நீயும் மாப்பிள்ளையும் தனியா சந்திச்சு இதைப்பத்தி பேசுங்க. உனக்கு என்னென்ன சந்தேகம் இருக்கோ அவருகிட்டையே கேட்டுக்கோ. பின்னாடி அவரை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ, இல்லைன்னா வேண்டாம். வேற மாப்பிள்ளை பார்ப்போம். என்ன சொல்ற?"

எனக்கும் ஒருவாறு இந்த யோசனை சரியாகப்பட்டது; அதனால் ஒப்புக்கொண்டேன். அடுத்தவாரம் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தாயார் சந்நதியில் நானும் அவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அமேரிக்காவில் வேலை செய்பவர் என்பதால், எச்சரிக்கை நடவடிக்கையாக சில விஷயங்களை தோழிகளும் அம்மாவும் சொல்லியிருந்தார்கள். நாங்கள் ஏற்கனவே புகைப்படத்தில் ஒருவரை ஒருவர் பார்த்திருந்ததால் யாரும் அறிமுகம் செய்து வைக்க வேண்டாமென்றும் நாங்களாகவே அறிமுகம் செய்து கொள்வதாகவும் ஒரு ஏற்பாடு. எனக்கு ஆச்சர்யமே நாஸ்திகவாதி கோயிலுக்கெல்லாம் வருவாரா என்பதுதான்.

நான் கோயிலுக்கு வந்து தாயாரை சேவித்துவிட்டு, பிரசாதத்தோடு பிரகாரத்துக்கு வர, அங்கே நின்று கொண்டிருந்த நபரை அடையாளம் தெரிந்தது. அவரேதான். என்னயிது வேட்டி சட்டை, திருநீறு என்று பக்திப் பழமா இருக்கிறாரே இவரா நாஸ்திகர்? புரியாமலேயே அவருக்கருகில் சென்றேன். பக்கத்தில் வரவரத்தான் அவர் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் சென்றதும்... "நீங்க ஷைலஜா தானே?"

"ஆமாம்." சொல்லிவிட்டு, அவரையே உற்றுப் பார்த்தேன். புகைப்படத்தில் பார்த்தது போல் வழுக்கையெல்லாம் ஒன்றும் கிடையாது. கொஞ்சம் பெரிய நெத்தி அவ்வளவுதான்.

"இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னீங்கன்னு உங்கப்பா சொன்னாரு." அவர் கேட்டதும் தான் நினைவே வந்தது. நான் பேச வாய் எடுக்கும் முன்பே, "நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். போட்டோல பாத்ததுக்கு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க." அவர் சொல்ல, என் முகம் சிவப்பதை உணர முடிந்தது. என்னடா இது வெட்கங்கெட்ட ஆளாய் இருப்பார் போலிருக்கிறது. முதன் முதலில் நேரில் பார்க்கும் பெண்ணிடம் இப்படித்தான் வழிவதா என்று நினைத்துக்கொண்டே, "இல்லை நீங்க கோவிலுக்கெல்லாம் வருவீங்களா?"

"என்னது வருவீங்களாவா? நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிடம் சேர்ந்தது இங்கதானே. அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி,

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங்களா, இதை படிச்சிட்டு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம்னு அலைஞ்சிருக்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங்களா?"

எனக்கு ஒன்றுமே புரியவில்லை, அப்பா இவரை பற்றி விசாரித்த வரையில் நாஸ்திகர்னு தானே சொன்னாங்க, ஆனா இவரென்னன்னா, ஆண்டாள்ங்றாரு, ஸ்ரீவில்லிப்புத்தூர்ங்றாரு, காதல்ங்றாரு. என்கிட்ட வேற காதல் பத்தியெல்லாம் பேசுறாரே, என்ன பண்ணுறதுன்னு நினைச்சிக்கிட்டே,

"இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமானது. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்கு காதல்லயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைங்க; அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்," சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"நீங்க நாஸ்திகர்னு அப்பா சொன்னாங்களே..." நான் முடிக்காமல் இழுத்துக் கொண்டிருக்க.

"ஆமாங்க நான் நாஸ்திகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்னு வைச்சுக்கோங்களேன். மற்றபடிக்கு கோவிலுக்கெல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது." சொல்லிவிட்டு சிரித்தார்.

பிறகு அவருடைய வேலையை பற்றியும் கல்யாணத்திற்கு பிறகு, என்னை அமேரிக்கா அழைத்துச் செல்ல விசா வாங்குவது பற்றியும் என் பாஸ்போர்ட் பற்றியும், எனக்கு கார்வோட்ட தெரியுமா என்பது பற்றியும் அவர் பேசிக்கொண்டிருக்க நான் பதிலளித்துக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். யாரோ தொடுவது போலிருந்ததால், நினைவு மீண்டு பார்க்கையில் என் கை அவரிடம் இருந்தது.

"இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக்கு." அவர் கையையே பார்த்துக் கொண்டிருக்க, நான் மெதுவாக என் கையை அவரிடம் இருந்து விலக்கிக் கொண்டு, "அம்மா சொல்லியிருக்காங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன்." சொல்லிவிட்டு எதிரில் இருக்கும் ராமாநுஜர் சந்நதியில் உட்கார்ந்திருந்த அப்பா அம்மாவிடம் வந்தேன்.

"என்னம்மா சொல்றாரு மாப்பிள்ளை. உனக்கு சம்மதம் தானே?"

"சம்மதம்தான்பா. எனக்கு நம்பிக்கையிருக்கு அவருக்கு கூடிய சீக்கிரமே கடவுள் நம்பிக்கை வந்திடும்," நான் சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

=====

"தம்பி, அந்தப்பொண்ணு உன்கிட்ட ஏதோ தனியா பேசணுமாம்."

நான் அவசரமாய் லேப்டாப்பில் ஒரு டாக்குமெண்டை படித்துக்கொண்டிருக்கும் பொழுது அம்மா இப்படிச் சொல்ல, "என்னம்மா இது, இப்படி மொட்டையா சொன்னா எப்படி. எந்தப் பொண்ணு, எதுக்கு என்கிட்ட பேசணுமாம்?"

"அதாண்டா உனக்கு பார்த்துருக்கோம்ல, அந்தப் பொண்ணு தான். அவங்க அப்பா ஃபோன் பண்ணியிருந்தாரு. அந்தப் பொண்ணுக்கு என்னவோ சந்தேகமாம். உன்கிட்ட பேசி கிளியர் பண்ணிக்கச் சொன்னாராம். அதான்."

எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

"பின்ன என்னடா? பொண்ணு பார்க்கவும் வரமாட்டேன்னுட்ட; நீங்க பார்த்து ஒரு பொண்ணை முடிவு பண்ணுங்க, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்ட; ஒரு பொண்ணுக்கு மேலயும் உன்கிட்ட காண்பிக்கக்கூடாதுன்னும் சொல்லிட்ட, என்னதான் உன் கொள்கையோ. புடலங்காய் கொள்கை. அவங்க வீட்டில் உன்னை பார்க்க வேண்டாம்? இப்பல்லாம் அமேரிக்கா மாப்பிள்ளைன்னாலே பயப்படுறாங்க," அம்மா சொல்லிவிட்டுச் சிரிக்க, அப்பா உடனே, "ஏண்டி பொய் சொல்ற, இங்கப்பாருடா, நீ நாஸ்திகம் பேசிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கேல்ல, அது அந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சிருச்சாம். அவங்க வீட்டில் கடவுள் நம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. அதனால அந்தப் பொண்ணு பயப்படுதாம்; அவங்க அப்பா சொன்னாரு. நீ நல்ல பையனா தெரியுரியாம், அதனால அந்தப் பொண்ணை பார்க்கப்போ மட்டும் நாஸ்திகம் பேசவேண்டாம்னு சொல்லச் சொன்னார்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், எனக்கும் உங்கம்மாவுக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லா விஷயத்திலும் உனக்கேத்த பொண்ணு அவ. அதனால உன் நாஸ்திகத்தையெல்லாம் தூக்கி குப்பைல போட்டுட்டு. அவக்கிட்ட ஒழுங்கா பேசி கல்யாணம் பண்ணுற வழியை பாரு." சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.

நான் அம்மாவிடம்,

"இங்கப்பாரு நான் உன் புருஷன் சொல்றமாதிரி பொய்யெல்லாம் சொல்லமாட்டேன். நான் அந்தப் பொண்ணுக்கிட்ட பேசுறப்போ எனக்கு உண்மைன்னு என்ன படுதோ அதை நிச்சயமா சொல்லிடுவேன். ஒரு பொண்ணை ஏமாத்துறதுல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதனால் தான் ஒரே ஒரு பொண்ணைத்தான் நீங்க காட்டணும் அது யாராயிருந்தாலும் எனக்கு ஓக்கேன்னு சொன்னேன். நீங்க பார்த்து முடிவு செய்து சொன்னவுடன் தான் போட்டோவே பார்த்தேன். ஞாபகமிருக்கில்லை."

நான் சின்ன வயசிலேயே சபதம் மாதிரி எடுத்துக்கொண்டது இது, பொண்ணு பார்க்கப்போறேன்னு போய் பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிடுட்டு, லெட்டர் போடுறேன், ஃபோன் பண்ணுறேன்னு எல்லாம் சொல்லி அந்த பொண்ணு மனசை கஷ்டப்படுத்தாம, அம்மா அப்பாவையே நல்ல பொண்ணா பார்த்து செலக்ட் பண்ண சொல்லி, என்னென்ன விசாரிக்கணுமோ விசாரிச்சு, புடிச்சிருந்தா மட்டும் பொண்ணு பார்க்கப்போய் சம்மதத்தை தெரிவிச்சுட்டு வரணும்னு யோசிச்சு வைச்சேன். இதுல எங்க அம்மா அப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷம். பையன் அமேரிக்கா போய்ட்டு வந்தாலும் மரியாதை தரானேன்னு, ரொம்ப ஆராய்ச்சி பண்ணி இந்தப் பொண்ணை செலக்ட் பண்ணியிருக்காங்க. இப்ப இப்படியொரு பிரச்சனை. ஆனால் இதில் கூட சந்தோஷம்தான்; பொண்ணோட அப்பாவே நல்ல மனசு வைச்சு, சந்தேகத்தை தீர்த்துக்கோம்மான்னு சொல்றது ரொம்ப நல்ல விஷயம். அந்தப் பொண்ணுக் நம்மைப் பிடிக்கலைன்னு சொன்னா தப்பில்லை. நாம அந்தப் பொண்ணோட மனசை நோகடிக்கலை அதுபோதும்.

நான் வழக்கம்போல் பெர்முடாஸ் டி-ஷர்ட் போட்டுக்கிட்டு ரெடியாகி நின்றேன்.

"சார் எங்க கிளம்பிட்டீங்க?"

"என்னப்பா மறந்திட்டீங்களா, இன்னிக்கு அந்தப் பொண்ணை நான் இன்னிக்கு பார்க்கணும்தானே."

"பார்க்கணும்தான்; ஆனா இப்படியா, போய் ஒழுங்கா வேட்டி சட்டை போட்டுட்டு வா."

எனக்கு இதைப்பத்தி அப்பாகிட்ட சண்டை போடணும்னு ஆசைதான். இருந்தாலும் பரவாயில்லைனு நினைத்துக்கொண்டே, வேஷ்டி சட்டை போட்டுக்கொண்டு ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு கிளம்பினேன். அந்தப்பொண்ணை நானும் ஃபோட்டோவில் பார்த்திருந்ததால் நாங்களே அறிமுகம் செய்து கொள்வதாக ஒரு முடிவு.

அம்மாவும் அப்பாவும் தாயார் சந்நதிக்கு எதிரில் உள்ள ராமாநுஜர் சந்நதிக்கு செல்ல நான் மட்டும் தாயார் சந்நதிக்குச் சென்றேன். அவள் அதற்குள் வந்திருப்பாளோன்னு நினைத்துக்கொண்டே பிரகாரத்துக்கு வர, அப்பொழுதுதான் தாயாரை சேவித்துவிட்டு வந்து கொண்டிருப்பவளைப் பார்த்தால், அந்தப் பெண்ணைப் போல்தான் இருந்தது.

அவள் கட்டியிருந்த புடவையும், கூந்தலில் வைத்திருந்த மல்லிகையும், கையில் வைத்திருந்த பிரசாதத்தட்டையும் பார்த்தால் எனக்கென்னமோ ஆண்டாள் ஞாபகம் வந்தது. அவள் எனக்கானவள் என்ற உணர்வுவேறு வந்து பாடாய்ப்படுத்த நான் அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும்தான். மெதுவாக என்னருகில் வந்தவளிடம். நான், "நீங்க ஷைலஜா தானே?" என்று கேட்க, "ஆமாம்." என்றாள். என்னையே மேலும் கீழும் பார்க்கத்தொடங்கினாள். எனக்கென்னவோ அவள் என் தலையையே பார்ப்பது போல் ஒரு உணர்வு.

எனக்கு மண்டை கொஞ்சம் பெரிதாக இருக்குமாதலால் யாரும் பக்கத்தில் பார்க்கும் பொழுது, மண்டையை கவனித்தால் கோபம் வரும். இந்தப் பெண் அப்படிப் பார்த்ததும், என்னடா இது கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாத பெண்ணாய் இருப்பாள் போலிருக்கிறதே. கொஞ்சம் வழுக்கயாய் இருந்தால் இப்படியா பார்ப்பது என்று தோன்றியது. எனவே, "இல்லை, நீங்க என்கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னீங்கன்னு உங்கப்பா சொன்னாரு," சொல்லிவி ட்டு அவளையே பார்த்தேன். பரவாயில்லை, வீட்டில் நல்லாத்தான் செலக்ட் பண்ணியிருக்கிறார்கள். பெண்ணு ஃபோட்டோவில் பார்த்ததைவிட அழகாய் இருக்கிறாளேன்னு நினைத்தவன், "நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். ஃபோட்டோல பாத்ததுக்கு, நேர்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!" அப்படின்னு சொல்லிட்டேன். என்னடா இது, இந்தப் பொண்ணை பார்த்ததில் இருந்து தப்பு தப்பா நடக்குதே. நம்ம வாய் நாம் சொல்றத கேட்க மாட்டேங்குது, நினைச்சதையெல்லாம் சொல்லுது, அய்யோ பாரு அந்தப் பொண்ணோட முகமெல்லாம் சிவந்து போய்விட்டது.

அந்தப் பொண்ணு என்ன நினைக்கும்; சரியான வழிசல் கேசாயிருக்கும்னு நினைக்க மாட்டாளா. கஷ்டகாலம்னு நான் நினைக்க, அந்தப்பெண், "இல்லை நீங்க கோவிலுக்கெல்லாம் வருவீங்களா?" கேட்டாள்.

இதுக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை, அப்பா சொன்னமாதிரி ஏதாவது பொய் சொல்லலாமா இல்லை, உண்மையை சொல்லலாமான்னு நான் யோசித்தேன். இல்லை பரவாயில்லை உண்மையையே சொல்லிடலாம்னு நினைத்து, "என்னது வருவீங்களாவா நல்லா கேட்டீங்க போங்க, இந்தியாவில நான் பார்க்காத கோயில்களே ரொம்ப கம்மியாத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம ஸ்ரீரங்கம் கோவில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா ஆண்டாள் கடைசியா ரங்கநாதரிடம் சேர்ந்தது இங்கத்தானே. அந்தப் பெண்ணிடம் தான் என்ன ஒரு காதல்.

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என தடமுலைகள்
மானிடர்க் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

இப்படி ஒரு கவிதையெழுத யாராலங்க முடியும். அதே மாதிரி,

உள்ளே உருகி நைவேனை
உள்ளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளஇக் குறும்பனை
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளஇப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தேன் அழலை நீர்வேனே

இந்தக் கவிதை புரியுதுங்களா, இதை படிச்சிட்டு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம்னு அலைஞ்சிருக்கேன் தெரியுமா. ஆமாங்க உங்களுக்கு காதல்னா புடிக்குங்களா?"

நான் என் கான்செப்டையும் இடிக்காமல் அதற்காக பொய்யும் சொல்லாமல் ஒருவாறு இப்படி சொல்லிவிட்டேன். அவளை பார்த்ததிலிருந்தே ஆண்டாள் ஞாபகமாக இருந்ததால். அதைப்பற்றி சொன்னேன், நான் காதல் புடிக்குங்களான்னா கேட்டதும் அந்தப்பொண்ணு, திருதிருன்னு முழித்தது. ரொம்ப நேரம் என்னத்தையோ யோசித்துவிட்டு, "இல்லைங்க, ஆண்டாளோட காதல் தெய்வீகமானது. அதுல எனக்கு உடன்பாடு உண்டு. மற்றபடிக்கு காதல்லயெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைங்க; அப்பா அம்மா பாக்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்!" அப்படின்னு சொல்ல, நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பிரகாசமான முகம்!!! கொஞ்சம் கொஞ்சமாய் அவள் என்னுடையவள் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாய் வேர்விடத் தொடங்கியிருந்தது.

"நீங்க நாஸ்திகர்னு அப்பா சொன்னாங்களே..." அந்தப் பொண்ணு எதைக் கேட்பதற்காக என்னை பார்க்க வந்தாளோ அதை நேரடியாகக் கேட்கநினைத்து, முடிக்காமல் இழுத்துக்கொண்டிருந்தாள்.

"ஆமாங்க நான் நாஸ்திகன் தான். எனக்கு கடவுள் பத்திய நம்பிக்கை கிடையாது. வேணும்னா கடவுளுடைய இருப்பு விளங்காம இருக்கேன்னு வைச்சுக்கோங்களேன். மற்றபடிக்கு கோவிலுக்கெல்லாம் போவேன், கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்கள கிண்டல் பண்ண மாட்டேன். அது அவங்களோட நம்பிக்கை. இது என்னோடது." நான் சொல்லிவிட்டு சிரித்தேன்.

நான் சொன்னதில் அவளுக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும், அவள் முகமே அதைச்சொன்னது. நான் அதன்பின் எங்களுக்கு கல்யாணம் ஆனபிறகு செய்யவேண்டியதைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். விசாவிற்கு அப்ளை செய்வதைப்பற்றியும் அவளது பாஸ்போர்ட் பற்றியும் நான் பேசிக்கொண்டிருக்க, அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் வேறு எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள் என்று அவள் முகஜாடை சொல்லியது.

அப்பொழுதுதான் நான் அவள் கைகளை கவனித்தேன். அழகாக மெகந்தி போட்டிருந்தாள். அவளுடைய வெளுத்த உடம்பில் நன்றாய் சிகப்பேறியிருந்த அந்தக் கைகள் என்னை கவர்ந்தன. நான் ஒரு கையை எடுத்து என் கையில் வைத்து பார்த்துக்கொண்டே, "இந்த மெகந்தி நீங்க போட்டதா, ரொம்ப அழகாயிருக்கு!" சொல்லிவிட்டு கைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் என் கைகளிலிருந்த அவள் கையை சாமர்த்தியமாய் எடுத்துக்கொண்டு, "அம்மா சொல்லியிருக்காங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். நான் கிளம்புறேன்," சொல்லி என்னைப் பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்தாள்.

நான் ஏதேதோ ஞாபகங்கள் மேலிட ராமாநுஜர் சந்நதிக்குச் சென்றேன். அங்கே பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அம்மா, "என்னடா கேட்டா என் மருமகள், ஒன்னும் குழப்பம் பண்ணிடலையே நீ?" பயந்துகொண்டே கேட்டார்.

"இல்லைம்மா அந்தப் பொண்ணுக்கும் சம்மதம்னு நினைக்கிறேன்."

"உன் நாஸ்திகத்தையெல்லாம் அவமேல நீ திணிக்கலையே."

"இல்லைப்பா, என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கையோ, கடவுள் மேல் நம்பிக்கையின்மையோ தன்னால வரணும், கட்டாயப்படுத்தி வரக்கூடாது. அதுமட்டுமில்லாம, எல்லா விஷயத்திலேயும் அந்தப் பொண்ணுக்கு என்று தனியா கருத்து இருக்கணும். என்கருத்தே அந்தப் பொண்ணுக்கிட்டையும் இருக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனம். அதனால ஒன்னும் பிரச்சனையில்லை. அந்தப் பொண்ணுக்கு சம்மதம்னா சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணீருங்கப்பா."

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In அகிலா கதைகள் அறுபத்தைந்து காதல் காமம்

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.

புணர்ச்சிவிதும்பல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்


அகிலாவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்த பொழுது மணி மூன்றரை இருக்கும். வீட்டிற்கு வந்ததில் இருந்து அகிலா கேமராக் கண்கள் கொண்டு வீட்டை ஸ்கேன் செய்வதாய் உணர்ந்தேன் நான்.

"என்னடி பார்க்கிற!"

"இல்லை பாச்சுலர் வீடு மாதிரி தெரியலையே! யாரோ ஒரு பொண்ணு இருந்து கவனிச்சிக்கிற வீடு மாதிரியில்ல இருக்கு. அதான் பார்த்தேன்."

அகிலாவிற்கு பொறாமையா? காலையில் இருந்து எவ்வளவோ பார்த்தாகிவிட்டது இதுவும் இருந்துவிட்டு போகட்டும். "வேற எதாவது கேர்ள் ப்ரண்டு இருக்கான்னு சந்தேகப்பட்டுடாத தாயே! வாழ்க்கையில் அந்தத் தப்பை நான் ஒரேயொரு தரம் தான் செய்திருக்கேன்."

அவள் சிரித்தாள்.

"சரி இரு நான் ஒரு காப்பி போட்டுட்டு வர்றேன்." நான் சிறிய அளவில் சமைப்பேன் என்பதுவரை அகிலாவிற்குத் தெரியும் அவளும் நான் போடுறேன் என்று வரவில்லை, வரமாட்டாள் என்றுதான் நானும் நினைத்தேன் தெரியும்.

நான் சமையற்கட்டில் பாலில் காபிப் பொடி கலந்து கொண்டிருந்த பொழுது அகிலா,

"தாஸ் நான் வாலிபால், கொக்கொ எல்லாம் விளையாடுவேன் தெரியுமா?"

எதற்காக அகிலா இதைச் சொல்கிறாள் என்று உண்மையில் புரியவில்லை. நான் சமையல்கட்டில் இருந்து வெளியில் வந்து,

"அதக்கு என்ன?" அவள் என் புத்தக ஷெல்பின் பக்கத்தில் சுவற்றில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தாள். கேட்டுவிட்டு மீண்டும் உள்ளே நகர்ந்து சர்க்கரை கலக்கத் தொடங்கினேன்.

"அதனால என் ஹைமன்..." அவள் முடிக்கவில்லை நான் கைகளில் இரண்டு காப்பி கோப்பைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தபடி.

"இன்னிக்கு நீ உதைபடாம போகமாட்டேன்னு நினைக்கிறேன். வாழ்க்கையில் பொண்டாட்டிகிட்ட கையை நீட்டுறது பெரிய அயோக்கியத்தனம்னு நினைத்துக் கொண்டிருக்கிறேன் இன்று வரை. என்னை நீ அது தப்புன்னு நினைக்க வைச்சிருவேன்னு நினைக்கிறேன்."

அவள் கைகளில் ஒரு கோப்பையை திணித்தபடி சொன்னேன். அவள் என்னை நிமிர்ந்து பார்க்கவேயில்லை, காலையில் இருந்து போய்க்கொண்டிருந்த இந்த விஷயத்தைப் பற்றி அகிலா கடைசியாக சொல்ல நினைத்தது இதுவாகத்தான் இருக்கும் இதற்கு மேல் பேசமாட்டாள் என்று தெரிந்ததால் நானும் அதற்கு மேல் வளர்க்காமல் விட்டுவிட்டேன். காபி குடிக்கும் வரை சும்மாயிருந்தவள்,

"நான் உன் பெட்ரூமைப் பார்க்கலாமா?"

அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்ததும் நான் சிரித்தேன், அவளும் சிரித்தாள். என் பதிலுக்காய் காத்திராமல் என் பெட்ரூமிற்குள் நுழைந்தாள்.

"ம்ம்ம் பரவயில்லையே சுத்தமா வைச்சிருக்க!" மெத்தைக்கு பக்கத்திலிருந்த அபூர்வமாய் நானும் அவளும் சேர்ந்து இருக்கும் படி ஒரு புகைப்பட்டதை பெரிதாக்கி வைத்திருந்த புகைப்படத்தை கையில் எடுத்தவள், சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் என்னிடம்,

"எனக்கும் இதை ஒரு காப்பி போட்டுக்கொடுக்கிறியா தாஸ்!"

"செய்துட்டா போச்சு."

நகர்ந்து அறையில் நான் வரைந்து மாட்டிவிட்டிருந்த வண்ண ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இதெல்லாம் நீ வரைஞ்சதா!" நான் பதில் சொல்லவில்லை, அவளும் எதிர்பார்க்கவில்லை, "பிரமாதமாயிருக்கு! நீ இவ்வளவு நல்லா வரையுவன்னு சொல்லவேயில்லையே!" நான் வெறுமையாய் சிரித்து வைத்தேன்.



அதுவரை என்பக்கம் திரும்பாதவள் என்னை நோக்கித் திரும்பி காதலுடன் பார்த்து, "என்னையும் ஒரு படம் வரைஞ்சு கொடேன்!" என்று கேட்டாள். எனக்கு அந்தக் கண்களின் மொழி புரிந்தது. நான் நேரடியாகவே,

"தாயே உன்னை இனிமே தொடறதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம்னு வைச்சிருக்கேன். தயவு செய்து வம்பு செய்யாமல் போய்டு தாயே!" என்றேன்.

அவள் மழுப்பவில்லை, நான் உன்னிடம் அதைக் கேட்கலையே என்று நடிக்கவில்லை.

"அதுக்குள்ள அலுத்துவிட்டதா?" என்றாள். காலையில் என்னிடம் அவள் உரையாடத் தொடங்கியதிலிருந்து அன்றைய பொழுது முழுவதும் ஒரு முறை கண்முன்னே வந்து மறைந்தது. நான் அகிலாவை முதலில் பார்த்து பின்னர் அவளைப் பிடித்துப் போனதிலிருந்து மனதில் உருவாக்கி வைத்திருந்த தருணம். எத்தனை முறை கற்பனை செய்து வைத்திருந்த உரையாடல்கள், ஆனால் எல்லாம் சுருண்டு கொண்டு கல்யாணத்திற்கு முன் இனிமேல் எனக்கு எதுவுமே வேண்டாம் என்பது போலிருந்தது.

"என்கிட்ட காண்டம் இல்ல!" நான் நடித்தேன்.

"பயமுறுத்திப் பார்க்கிறியா! ஊட்டியில் படுக்கைக்கு வரும் முன்ன உன்கிட்ட இருந்ததான்னு கேட்டுக்கிட்டா வந்தேன். இருந்தது உபயோகிச்சிக்கிட்ட இல்லாமல் இருந்திருந்தால் என்னால் என்ன சொல்லியிருக்க முடியும்..." அவள் உரையாடலில் இருந்த அறிவுஜீவித்தனம், அவளிடம் சற்று முன் நான் பார்த்த காமம் இல்லாமல் போயிருந்ததை காட்டிக் கொடுத்தது. "...பிடிக்கலைன்னா விடு, நான் பிடிக்காதவங்களை கம்பெல் செய்வதில்லை." நக்கலாய்ச் சிரித்தாள்.

அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று தெரிந்தது, என்னை உரையாடலுக்குள் இழுக்க நினைக்கும் அவள் மனம் புரிந்தது. நான் விலகிக் கொண்டிருந்தேன்.

"அகிலா, இது ஒரு கனவெனக்கு. எவ்வளவு சாதாரணமா கேட்டுவிட்ட ஒரு கண் பார்வையால் சம்மதமான்னு. எத்தனை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து எது சரியா வரும் என்று நான் கணக்கு போடாத நாட்களே இல்லை. இந்த ரூமுக்கு மட்டும் காதிருந்து கைகள் இருந்திருந்தால் நான் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு விட்டு உன்னை இந்நேரம் தன் கைகளால் நிர்வாணப்படுத்தியிருக்கும். அத்தனை கற்பனைகள் அத்தனை கள்ளச்சிரிப்புக்களைப் பார்த்திருக்கும் இந்த ரூம். என்ன செய்ய இன்னிக்கு காலையில் இருந்து நீ செஞ்சதுக்கு நான் உனக்கு கொடுக்கிற தண்டனை உன்னைத் தொடாம இங்கேர்ந்து அனுப்புறதுதான். இனி நான் உன்னை தொடறதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம் தான். நீ கிளம்பு."

நான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது உன் முகம் வெளிப்படுத்தின உணர்ச்சிகள் அத்தனையையும் தனித்தனி ஓவியமா தீட்டணும் என்கிற ஆர்வம் வந்ததெனக்கு. முடித்ததும் சட்டென்று நெருங்கி வந்து காலையில் இருந்து நோகடித்த இதயத்திற்கான மருந்தை உதட்டு வழியாக வழங்கிவிட்டு நீயாய் பிரிந்து நின்றாய். நான் உன்னை தடுத்திருக்கவில்லை. கல்லாய் இருக்க உனக்கு மட்டும் தான் தெரியுமாயென்ன.

"இதிலேர்ந்து ஒரு ட்ராயிங்கை நான் எடுத்துக்கலாமா?" தேவையில்லாத கேள்வி உனக்கு என்று இல்லாத ஒன்று அந்த அறையில் எதுவுமே இருக்க முடியாது. நிர்வாண நிலையடையாத ஓவியம் ஒன்றை எடுத்துக் கொண்டாய்.

"ஞாபகம் வைச்சிக்கோ நீ ஒரு நாள் ஆசையா கேட்கிறப்போ நான் நிச்சயம் மறுத்து உன்னை அழவைப்பேன்." சிரித்தப்படி சொன்ன உன்னை வழியனுப்பிவிட்டு வந்து உட்கார்ந்ததும் அசைபோட நிறைய மீதியிருந்தது அன்றைய பொழுதுகள்.

March 05, 2009

10:11 AM aeswari: defloration - the act of having sexual intercourse with a virgin; devirgination.
me: எனக்கு அதுக்கு அர்த்தம் முன்னமே தெரியும்
aeswari: அப்ப ஜெயா முன்னாடி அப்படியான்னு கேட்டதுக்கு என்ன அர்த்தம்.
me: சும்மா ஜோக் பண்ணினேன் அகிலா :(
aeswari: இல்லை உனக்கு என் மேல டவுட்.
உன் கூட படுத்தவ தான வேற யார் கூடவும் படித்திருப்பான்னு
me: akila, this is idiotic
rubbish
உனக்கே நல்லா தெரியும், நீ வெர்ஜினா இல்லையா என்பது கூட எனக்கு ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்று
aeswari: அப்ப நீ என்ன நம்பலை அதான

அடுத்த வரி அடிப்பதற்குள் அவள் அங்கே இல்லை, எல்லாம் என் முட்டாள்த்தனம். ட்ரீட் கேட்ட ஜெயஸ்ரீ காரணமாய்ச் சொன்ன defloration வார்த்தையும் அதை உபயோகித்து அகிலாவை வம்பிழுக்க நான் அவளிடம் கேட்ட 'அப்படியா'வும் இத்தனை தூரம் பெரிதாகும் என்று நான் நினைக்கவில்லை. அன்றைக்கு தலையில் ஜூஸைக் கொட்டிவிட்டுப் போனவள் தான், மொபைல் போனை அணைத்து வைத்திருந்ததால் என்னால் அவளைப் பிடிக்கவே முடியவில்லை. அடுத்த நாள் காலை அலுவலகம் வந்த உடனேயே அவளிடம் இருந்து வந்த இந்தத் தாக்குதல் என்னைக் கொஞ்சம் நகர்த்தித் தான் பார்த்தது. என்னால் அகிலா அப்படிப் பேசுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என் யோசனைத் திறன் மீதே எனக்குச் சந்தேகம் வந்த பொழுது ஜெயஸ்ரீயின் அழைப்பு வந்தது.

"சொல்லு ஜெயா"

"என்னப் பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்?" அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை.

"என்னப் பிரச்சனையோ அவ அழறா! மூணு வருஷத்தில் அகிலாவை நீங்க புரிஞ்சிக்கிட்டது இவ்வளவுதானா. அவ தன்னோட ஷெல்லுக்குள் போய்க்கிட்டிருக்கா, சாட்டிங்கில் எதுவும் பேசாதீங்க போனிலையும் கூட எதுன்னாலும் நேரில் பேசுங்க. காலையில் என்னையுமே காரணமில்லாமல் திட்டிக்கொண்டிருந்தாள், அவ எது சொன்னாலும் மனசில் வைச்சிக்காதீங்க ப்ளீஸ்!" சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

ஒரே அலுவலகம் தான் என்றாலும் வேறு வேறு கட்டடங்களில் இருந்ததால், என் இடத்திலிருந்து அவளிடத்திற்கு வந்திருந்தேன். நான் வருவதைப் பார்த்ததும் அவளாய் போய் ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். ராஜா எனக்கும் அவளுக்கும் ஒரு நல்ல நண்பன், ஆனால் அவளை விடவும் சீனியர் சொல்லப்போனால் அவளுக்கு வேலை பகிர்ந்தளிப்பவன். பெரும்பாலும் அது போன்ற சமயங்களில் நான் நகர்ந்துவிடுவேன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று, அவள் அதை அன்றும் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும்.

நான் ராஜாவிடம் நேரடியாய், "dude excuse me.," என்று அவள் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அவள் ஒன்றும் செய்யவில்லை சொல்லவில்லை என்னுடன் வந்தாள். சிறிது தூரம் வந்ததும், அவளாய்,

"அதான் வர்றேன்ல கையை விடு!" மெதுவாய்த்தான் சொன்னாள். அவள் என்னிடம் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் அமில மழை கொட்டிய அகிலாவாக அல்லாமல் பழைய சிடுமூஞ்சி அகிலாவாகத்தான் இருந்தாள், நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவளிடம் கோபமில்லை, கண்களில் ஆத்திரமில்லை அவள் அழுதிருப்பதற்கான சாயல் எதுவும் இல்லை ஜெயஸ்ரீ பொய் சொல்லியிருக்க ஞாயமில்லை. அவள் 'என்ன' என்பதைப் போல் தோளைக் குலுக்கிக் காட்ட, நான் அவள் கையை விடுவித்தேன். அலுவலகத்தை விட்டு வெளியில் பார்க்கிங்கிற்கு வந்து வண்டியை வெளியில் எடுத்தேன், அருகில் வந்து உட்கார்ந்து கொண்டவள் எதையும் பேசவில்லை.

டிஃபென்ஸ் காலனி அண்ணாச்சி ரெஸ்டாரண்டில் மூலையொன்றைக் கண்டுபிடித்து உட்கார்ந்ததும்.

"சொல்லு என்ன தான் உன் பிரச்சனை."

அவள் பதில் பேசவில்லை, டேபிளில் இருந்த பெப்பர் சால்ட் குடுவைகளைப் பார்த்தவண்ணம் இருந்தாள்.

"என் தப்பு தான் மன்னிச்சிக்கோ அப்படி கேட்டிருக்கக்கூடாது தான். நான் சத்தியமா விளையாட்டுக்குத்தான் கேட்டேன், நீ இவ்வளவு சீரியஸா எடுத்துப்பேன்னு நான் நினைக்கவேயில்லை!" அகிலா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள், அவள் அழுதுவிடுவாள் என்று நினைத்தேன். சர்வர் இடைபுகுந்தார், அவள் சமாளித்துக் கொண்டாள்.

"நீ என்னயிருந்தாலும் ஜெயா முன்னாடி அப்படிக் கேட்டிருக்கக் கூடாது."

நான் அவள் முடிக்கட்டும் என்றிருந்தேன். அவளால் வார்த்தைகளைத் தேர்ச்சி செய்து அமைத்து பேச முடியவில்லை தடுமாறிக் கொண்டிருந்தாள்.

"மனசில இல்லாமையா வார்த்தையா வரும், உன்னால என்னை அப்படி எப்படி நினைக்க முடிஞ்சது. இதெல்லாம் நான் சரின்னு சொன்னதால தான இல்லாட்டி அப்படி ஒரு வார்த்தையை நான் கேட்டிருக்க வந்திருக்குமா? இந்த மூணு வருஷத்துல இப்படி ஒரு வார்த்தை நீ சொல்லியிருப்பியா? உன்னால என்னை அப்படி எப்படி நினைக்க முடிஞ்சது. அன்னிக்கு நான் உனக்காக எதையெல்லாமோ செஞ்சப்ப நீ என்னை அப்படித்தான பார்த்திருப்ப, நினைச்சிறுப்ப, அலையறா பாருன்னு..." அவள் தொடர்ந்து கொண்டிருந்தாள். எனக்கு அன்றைக்கு பொழுது நினைவிற்கு வந்தது, நான் எதிர்பார்க்காத விஷயங்களை எல்லாம் அவள் செய்தாள் தான் ஆனால் அவளை என்னால் ஒரு நிமிடம் கூட அவள் சொல்லிக் கொண்டிருப்பது போல நினைக்க முடியாது, அது அவளுக்கும் தெரியும். மூன்று வருட பழக்கம் எங்களிடையே அன்றைக்கு சுமூகமான உறவை சுலபமாகவே ஏற்படுத்தியது, சாட்டிங்கில் நாங்கள் பேசாத விஷயங்களே இருந்திருக்காது. என்னுடைய எல்லைகள் மூன்றாண்டுகளில் அவளுடைய நீள அகலங்களுக்கு நீண்டிருக்கிறது, நேரில் பேசிக்கொள்ளாத குறையே இல்லாமல் இருந்தது. அது அன்றைக்கு புரியவும் செய்தது, என்னைப் பற்றி அவளுக்கு அவளைப் பற்றி எனக்கு நாங்கள் தெரிந்து கொண்டதாக நினைத்ததை விடவும் அதிகம் தெரிந்திருந்தது.

நண்பர்கள் எச்சரித்திருந்ததால் நான் முதலில் எதையும் அவளிடம் வித்தியாசமாக முயற்சி செய்யவில்லை. ஆனால் அவளுக்கு அதெல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை. தாலி கட்டுவது என்பது அவள் உடலைப் பெறுவதற்கான லைசென்ஸ் கிடையாது என்று அவள் எனக்கு எழுதியிருந்தது நினைவில் இருந்தது. அவள் எழுதுவற்கென்று எழுதாமல் முழு மனதுடன் எழுதியிருந்தது புரிந்ததால், நண்பனே கணவனே அமைந்த விட்ட சந்தோஷத்தை அவள் கொண்டாடிக் கொண்டிருந்தாள் என்று நான் உணர்ந்து கொண்டேன். நான் அவளை இன்னும் மனைவியாகப் பார்க்காமல் காதலியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் காதலியுடனான திருமணத்திற்கு முன்பான உறவானது சொர்கத்திற்கு ஒப்பானது என்ற கற்பனை என்னிடம் இருந்தது. அவளுடைய கம்பீரம் கலந்த காமத்தில் நான் எப்பொழுதையும் போல் ஆச்சர்யத்துடன் பங்கு கொண்டேன், அந்த ஆச்சர்யத்தை சாமர்த்தியமாக நான் மறைத்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் நான் அவளிடம் காண்பித்திருக்கக்கூடிய ஆச்சர்யம் தான் என் முன்னால் அவள் பெய்யென பெய்யும் கண்ணீருடன் உட்கார வைத்திருந்தது என்று புரியத் தொடங்கியது. ஆனாலும் கூட என்னால் இந்தப் பிரச்சனையை தள்ளி நின்று பார்க்க முடியவில்லை, நான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தேன், ஜெயஸ்ரீ, அகிலா அழுதாள் என்று சொன்னது என்னை நிலைகொள்ள விடாமல் செய்து கொண்டிருந்தது. என் எதிரில் அகிலா எப்பொழுது அழலாம் எனக் காத்திருப்பது போல் இருந்தது இன்னும் தடுமாறச் செய்தது, நிர்வாணத்தில் கூட குறைந்திடாத அவளது கம்பீரம் இங்கே இல்லாமல் போயிருந்தது. ஒரு அபூர்வமான பொழுதாகத்தான் அது இருந்திருக்க வேண்டும் என் கண்கள் கசியத் தொடங்கியிருந்தன.

அவள் பேச்சை நிறுத்தியிருந்தாள், "நீ உண்மையிலேயே நினைக்கிறியா என்னால் உன்னைப் பத்தி அப்படி நினைக்க முடியும்னு." சாதாரணமான வார்த்தைகள் தான் ஆனால் அந்தச் சமயத்தில் அவளை உலுக்கிப் பார்த்திருக்க வேண்டும். அவள் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எத்தனை தடவை நீ என்கிட்ட கேட்ட, என்னால அப்படி எப்படி நினைக்க முடிஞ்சதுன்னு. நீதான் என்னை தப்பா நினைச்சிக் கிட்டிருக்க. உன்னைய நான் எங்க வைச்சிருக்கேன் தெரியுமா?" கடகடவென்று கண்களில் வெகுவாகவே வரத் தொடங்கியிருந்தது. நான் பெரும்பாலும் அழுததில்லை என்றாலும் நான் அழுத பொழுதுகள் எல்லாம் நம்பிக்கை துரோகங்களை முன்வைத்தாகத்தான் இருந்திருக்கும். நான் நம்பிய ஒருவர் என்னை நம்பாமல் போன பொழுதுகள் என்னை வெகுவான சுயபச்சாதாபத்திற்கு உள்ளாக்கி அழுகையாக நீண்டிருக்கிறது. ஆனால் முகம் கோணி என்னை மறைத்த தனிமையில் பொங்கியிருக்கிறேன், பொதுவில் இரண்டாம் நபர் முன் அழுதது சின்ன வயதிலாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே நம்பிக்கை துரோகம் இல்லை முகக் கோணலாகி விகாரமான மனமொருமித்த அழுகை இல்லை. ஆனால் கண்ணீர் இருந்தது, அகிலா என்னை தவறாகப் புரிந்து கொண்டாள் என்ற வருத்தம் இருந்தது. மனம் சட்டென்று தன் கட்டுக்குள் இருந்து விடுவித்துக் கொண்ட ஒரு அபூர்வமான பொழுது, சினிமா மெலோட்டிராமக்களின் பொழுது எதேட்சையாக வெளியாகும் கண்ணீரை ஒத்தது என்னுடைய இந்தக் கண்ணீர்.

அவள் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை, சோற்றுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். நான் டிஷ்யூ ஒன்றை எடுத்து துடைத்துக் கொண்டேன், எனக்கும் கொஞ்சம் வெட்கமாக இருந்தது ஒரு பெண்ணின் முன்னால் கண்ணீர்விட்டது. நான் நிலைமையை சரியாக்க நினைத்தேன், ஆனால் என்ன சொல்லி அகிலாவை சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை. அவளே உதவினாள்,

"தாஸ் என்னை நம்பு தாஸ், நான் ஒரு வெர்ஜினாத்தான் இருந்தேன்..." அவள் முடிக்கவில்லை, நான் தலையில் அடித்துக் கொள்ளாதது தான் குறை. வேதாளம் இப்பொழுது இன்னொரு வழியாக முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தது. எனக்கு உண்மையில் சிரிப்புத்தான் வந்தது அடக்கிக் கொண்டேன். இதற்கு நான் நேரடியாய் என்ன பதில் சொன்னாலும் அவள் நம்ப மாட்டாள் அவள் இப்பொழுது சரியாகிவிட்டிருந்தாள் அவள் கூண்டுக்குள் இருந்து முற்றிலும் வெளியில் வராவிட்டாலும் நேரடியாய், ஒரு வழிக்கு, விஷயத்திற்கு வந்திருந்தாள். நான் என் பழைய முறையை உபயோகிக்க தீர்மானித்தேன். ஏனென்றால் அவள் மனதிற்குள் எனக்கு அவளுடைய கற்பைப் பற்றிய கேள்விகள் இருக்காது என்று தெரிந்திருக்கும், இதுகூட அவள் என்னுடன் வைத்துக் கொண்ட உறவை மய்யப்படுத்தி தன்னைத் தானே பழிவாங்கிக் கொள்ளும் தன்னைத் தானே சிலுவையில் ஏற்றிக் கொள்ளும் ஒரு வழியாகத்தான் அவள் முன்வைத்திருக்க வேண்டும். என்னைத் திட்டுவதன் மூலம் ஜெயாவை திட்டுவதன் மூலம் அவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டு, தவறாக அவள் உணர்ந்ததற்கு ப்ராயச்சித்தம் செய்து கொண்டிருந்தாள்.

இதுவும் கூட ஒரு நாடகமாக அந்த உறவை, இயற்கையாக அவளிடம் பொழிந்த ஆர்வத்தை, அதன் வழியே அவள் பெற்ற சந்தோஷத்தை மறைத்து கேள்விக்குள்ளாக்கி அவள் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் அந்த முதல் முகத்தை திருப்தி செய்வதற்காகச் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய ஸ்ப்லிட் பர்ஸனாலிட்டியை நான் ஊட்டி இரவில் பார்த்தேன், இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த விளையாட்டெல்லாம், நான் மட்டுமல்லாமல் அவளும் முதல் முறையாய்ப் பார்த்த அந்த மற்ற முகம் அவளுடையது அல்ல என்று நம்ப வைக்கும் முயற்சி என்று நான் நினைத்தேன்.

"சரி அகிலா, நம்புறேன். நீ இதுக்கு முன்ன ஒரு தடவை கூட மாஸ்டர்பேஷன் செய்யலைன்னு சொல்லு அதையும் நம்புறேன்."

அது ஒரு ஆயுதம் ஒரு நேரடித் தாக்குதல் அவள் தாக்க நான் பதுங்க நான் தாக்க அவள் மறைந்து கொள்ள என்று சென்று கொண்டிருந்த ஒரு அழகான யுத்தத்தில் என் தரப்பு பிரம்மாஸ்திரம். நாங்கள் இதைப் பற்றி உரையாடியிருக்கிறோம், ஆரம்பித்த முதல் கணத்தில் சாட்டிங்கில் இருந்து மறைந்து போய், வாரக்கணக்கில் முகம் காட்டாமல் இருந்து, பின்னர் சாட்டில் மௌன மொழி பகர்ந்து கடைசியில், "நம்பினால் நம்பு நம்பாட்டின்னா போ! நான் செய்ததில்லை!" என்பது வரையில் வந்து நின்றிருந்தது. அவள் பேரில் எனக்கு ஊட்டி செல்வது வரை இருந்த ஒரு சிறிய பயம் அதற்கு மேல் அந்த விஷயத்தில் என்னை நகர விடாமல் செய்திருந்தது.

கிசுகிசுப்பாய் தலையில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு நான் சொன்ன அந்த வார்த்தைகள் முதலில் அவளிடம் பெரிய ஆச்சர்யத்தை கொண்டு வந்தன. என்னால் பொதுவிடத்தில் அவளிடம் அப்படி பேச முடியும் என்று அவள் நினைத்திருக்க மாட்டாள், ஏனென்றால் நான் அதுவரை அப்படிச் செய்ததில்லை. ஊட்டியில் கூட நான் அவளிடம் பொதுவில் அத்துமீறுதல் எதையும் செய்யவில்லை. இந்தப் பிரச்சனையை நான் இழுத்துச் செல்லும் இடம் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் அவள் சப்தமாய்ச் சிரித்தாள், நான் அவள் என் தலையில் சாப்பாட்டைக் கொட்டிவிடக்கூடாதென்று பயந்து கொண்டிருந்தேன். எனக்கு நன்றாய்த் தெரியும் அந்த விஷயம் அவளை கூண்டுக்குள் இருந்து வெளியில் கொண்டு வருமென்பதையும் அதைவிட அவளுடைய கம்பீரத்தை அவளுக்கு திரும்பக் கொடுக்குமென்பதையும்.

அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை, "உன்னை மாதிரின்னு நினைச்சியா!" இடைவெளி விட்டவள், நான் சிரித்துக் கொண்டிருந்ததால், "உன் கிட்டப்போய் இதையெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கேன் பார்! என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்."

அவள் கட்டிக்கொண்டிருந்த கூண்டு இப்பொழுது அவளில்லாமல் அநாதையாக இருந்திருக்க வேண்டும். இருவரும் சாப்பிடுவதை மறந்து சிரித்துக் கொண்டிருந்தோம், கடைசி மூன்று நாட்கள் எங்களிடம் கொண்டு வந்த மாற்றத்தை நினைத்து.

"சரி ஆபீஸ் போறியா. பிரச்சனை எதுவும் பண்ண மாட்டியே திரும்ப?" அவள் இல்லை என்று தலையாட்டியபடி.

"உன் வீடு இங்க பக்கத்தில் தான கூட்டிக்கிட்டு போயேன்." எத்தனையோ முறை அழைத்திருப்பேன் அவளை, அவள் வந்ததில்லை. இப்பொழுது வருகிறேன் என்கிறாள் நான் அதை மீறியும் அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று படிக்க முயன்றேன்.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In காதல் காமம் சிறுகதை

மலரினும் மெல்லிய காமம்

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

புணர்ச்சிவிதும்பல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்

அகிலாவும் ஜெயஸ்ரீயும் வந்ததில் இருந்தே சிரித்துக் கொண்டு குசு குசு என்று ரகசியம் என்னமோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தாலும் நேற்று ஜெயஸ்ரீயிடம் அடித்த கூத்தால் என்னால் அவளிடம் முகம் கொடுத்தே பார்க்க முடியவில்லை. ஜெயஸ்ரீ, அகிலாவிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுதும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துக் கொண்டிருந்தாள். அகிலாவிற்கு ஆப்பிள் ஜூஸும் எனக்கும் ஜெயஸ்ரீக்கும் கோல்ட் காப்பியும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம்.

நான் நேரடியாய் அவளிடம் "ஜெயா சாரி, நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது! மன்னிச்சிக்கோ." சொன்னதும் தான் தாமதம்.

"அது பரவாயில்லை இன்னிக்குப் பொழச்சிப்போங்க, இன்னொரு நாள் வைச்சிக்கிறேன் அதுக்கு. எப்ப ட்ரீட்?". அந்தப் பிரச்சனையை அதற்கு மேல் அவள் இழுக்க விரும்பவில்லை என்பது எனக்கு தெரிந்துதான் இருந்தது.

"எதுக்கு ட்ரீட்." எதற்கென்று தெரிந்தாலும் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்கக் கேட்டேன்.

"உங்களுக்குத் தெரியாதா?" இந்த முறை அகிலா குறுக்கே வந்து அவளைக் கிள்ளினாள்.

"ஏன் நீ தான் சொல்லேன்" அகிலா இந்தப் பிரச்சனையில் வருவதும் வெட்கப்பட்டு நிற்பதும் என்னை இன்னும் குஷியாக்க நான் அவளையும் சேர்த்து வம்பிழுக்க ஜெயஸ்ரீயிடம் கேட்டேன்.

"defloration" பெரிய ஆள் தான் அழகான வார்த்தையைக்க் கொண்டுவந்து திணித்தாள். அகிலா ஜெயஸ்ரீயை முறைக்க நான் மெதுவாய் அகிலாவிடம், "அப்படியா?" என்று கேட்க அப்பொழுது தான் வந்து சேர்ந்திருந்த ஆப்பிள் ஜூஸை என் தலையில் கவிழ்த்துவிட்டு போயேவிட்டாள். இருள் கவிழத் தொடங்கியிருந்த நேரம் ஜீஸ் கடையில் பெரிய கூட்டமில்லை, நான் வழியும் ஜூஸுடன் சிரித்துக் கொண்டிருந்தேன்.

ஜெயஸ்ரீ, "ஆனாலும் இப்படியா கேப்பாங்க. லூஸுங்கிறது சரியாத்தான் இருக்கு!"

---------------------------

நகர்ந்துவிடுவதற்கான எல்லைகள்
இல்லாமல் போன பொழுதொன்றில்
அவளுடனனான முயக்கம்
வற்புறுத்தலுக்கு வெளியே நான்
ஒப்புக்கொள்ளவே முடியாததாயிருக்கிறது
சாத்தியங்களற்றுப்போய் இசைந்தாளென்பதை
சொல்கேளா ஆச்சர்யமளித்த
நினைத்ததும் துளிர்க்கும் ஆண்மை
காமம் தீண்ட மறுத்த
நிர்வாணத்தில் உறங்கும் பெண்மை
அள்ளித் தெளிக்கும் பதிலளிக்க விரும்பாத கேள்விகள்

---------------------------

"கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்." என்று நான் அகிலாவிற்கு அவள் காதலின் நீட்சியாய் பார்க்காத காமத்தையும் வலிந்து மறுப்பது போன்றிருக்கும் செயற்கைத்தன்மையையும் விவரித்து கடிதம் எழுதி அனுப்பிய நான்காவது நாள் அவள் அதைப்பற்றி நிறைய யோசித்ததாகவும் தனக்கும் சம்மதம் என்று சொல்லி எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தாள்.

நாங்கள் ஊட்டி செல்லத் தீர்மானித்தோம், என் பள்ளி இறுதி வரை அங்கே தான் படித்தேன் என்பதாலும் பெங்களூரில் இருந்து இரண்டு நாள் ஊர் சுற்ற சென்று வருவதற்கான இடங்களில் முக்கியமான ஒன்று என்பதாலும். புதிதாய் வாங்கியிருந்த ஹுண்டாய் கெட்ஸிலேயே சென்று வரலாம் என்ற என் திட்டதற்கு மறுப்பொன்றும் சொல்லவில்லை, அவள் முகத்தில் என் ஓட்டுநர் திறமையைப் பற்றிய சந்தேகம் இருந்தது மட்டும் பிரகாசமாய் தெரிந்தது. அவள் என்னுடன் வெளியில் இதுவரை வந்ததேயில்லை என்ற எண்ணம் என் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டது. திட்டமிட்டது போலவே ஆறுமணிக்கு அல்சூர் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தாள், பேருந்து நிலையத்தில் இருந்து அவள் வீடு கூப்பிடு தூரம் தான். ஷோல்டர் பேக் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள், நான் பயந்தது எங்கே சென்று பின் சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று தான், நான் எதிர்பார்த்தது போலவே காரை நெருங்கியவள் பின் சீட்டைத் திறந்ததும் நான் கொஞ்சம் போல் அதிர்ந்து தான் போனேன். ஆனால் அவள் தன் பையை மட்டும் அங்கே வைத்துவிட்டு முன் சீட்டில் வந்தமர்ந்தாள், அவள் உதட்டில் புன்னகை அரும்பியிருந்தது.

"ஒரு நிமிஷத்தில் உன் மூஞ்சி என்ன கோணத்துக்கெல்லாம் போகுது, இப்பல்லாம் நீ என்ன நினைக்கிறேன்னு என்னால் சுலபமா கண்டுபிடிக்க முடியுது! தெரியுமா?"

எனக்கு அவள் குஷி மூடில் இருந்ததே மகிழ்ச்சியளித்தது. என்ன தான் அவள் என் ஏற்பாட்டிற்கும் ஆசைக்கும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவள் சந்தோஷமாய் இல்லாமல் என்னவோ போல் இருந்தால் மற்ற ப்ளானைத் தள்ளிப் போட்டு விட்டு சும்மா ஊர் மட்டும் சுற்றிவிட்டு வரலாம் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை அதற்கான அவசியம் இருக்காது போலிருந்தது.

"இப்ப என்ன தெரிஞ்சிக்கிட்ட?"

பெரும்பாலும் இது போன்ற கேள்விகளுக்கு அகிலா பதில் சொல்ல மாட்டாள். நான் அவள் பின்சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று பயந்தது அவளுக்குத் தெரிந்திருக்கும்.

"ம்ம்ம் உன் மொகரைக்கட்டை!"

என் மனம் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது, அவளுக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். சட்டென்று தலையில் தட்டி,

"ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டு! என்னா?" என்றாள்.

அவள் என்னைத் தொட்டுப் பேச மாட்டாள், மூன்றாண்டுகளில் நான் சில முறை தொட்டுப் பேசியிருப்பேன், வெகுசில சமயம் கைகளை பிடித்துக் கொண்டு விளையாடியிருப்பேன். ஆனால் சுவரிலிருந்து நீண்ட இன்னொரு குட்டிச் சுவர் போல் உணர்ச்சியற்றதாய் அவள் கைகள் இருக்கும் அப்பொழுதுகளில். அவள் தலையில் தட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்ததும் என் கண்கள் தானாய் அவள் மார்பு பக்கம் திரும்பியது. நான் பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை, அதுவும் அகிலாவிடத்தில் கொஞ்சம் இதைப்பற்றிய ஜாக்கிரதை உணர்வுடனேயே இருப்பேன். பெரும்பாலும் அட்டிட்டியூட் காண்பிக்கும் பெண்களிடம் கொஞ்சம் சீரியஸாய் வம்பிழுக்க அவர்களுக்குத் தெரியும்படி மார்புகளை வெறிப்பேன் சிறிது நேரம். ஆனால் அகிலாவிடம் அதுவரை செய்ததில்லை, அதாவது அவளுக்கு தெரியும் வகையிலோ அல்லது அவள் உணர்ந்து கொள்ளும் வகையிலோ அவள் மார் பகுதியை நோட்டம் விட்டதில்லை, ஆனால் அவளுக்குத் தெரியாமல் செய்திருக்கிறேன். இப்பொழுது அவளாய்ச் சீண்ட செய்திருந்தேன்.

அகிலா கைகள் நீட்டி நான் லாவகமாக இருக்கட்டும் என்று அணிந்து வந்திருந்த பெர்முடாஸால் மறைக்கப்படாத என் தொடைப் பகுதியில் கிள்ளினாள். அவளுடைய வலது கை விரல்களில் பராமரிக்கப்பட்ட நகங்கள் இருந்ததால், உண்மையிலேயே வலித்தது. நான் "அம்மா" என்று கத்தினேன் தொடர்ச்சியாய்.

"நீ செஞ்சது தப்பு, அப்படிப் பார்ப்பது அநாகரீகமாயிருக்கு! எந்தப் பொண்ணு கிட்டையும் அப்படி நடந்துக்கக்கூடாது" கொஞ்சம் சீரியஸாகவே சொன்னாள்.

"நான் சரிங்க மேடம்" என்று சொன்னதும் சகஜ நிலைக்கு வந்தவள். நான் அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்களிலிருந்து என் பார்வை மார்பகத்திற்கு நீளத் தொடங்குவதும் பின்னர் நான் பெரு முயற்சி செய்து கட்டுப் படுத்துவதையும் பார்த்து, சப்தமாய் சிரித்தாள்.

"எத்தனை நாளுக்கு இதைச் செய்யப்போற நீ, இன்னும் இரண்டு நாளைக்கு? அப்புறம் 'சீ'ன்னு சொல்லி விடப்போற! எனக்கென்ன?" என்றவாறு மறுபக்கம் பார்க்கத் தொடங்கினாள். எனக்கென்னமோ பார்த்துத் தொலை என்று சொல்லிவிட்டது போலிருந்தது. அவள் எப்பொழுதும் அணியும் கொஞ்சம் தொல தொலா சுகிதார் அல்ல அன்று அவள் அணிந்திருந்தது, ப்ரேசியர் அதன் மேல் டாப்ஸ் ஒன்று அணிந்து மேல் அவள் சுகிதார் அணிவது தான் வழக்கம் இன்றும் அப்படித்தான் என்றாலும் இறுக்கமான சுகிதார் அவள் மார்பகங்களை இன்னும் எடுப்பாய்க் காட்டியது. கல்லூரிக் காலத்தில் இருந்தே பெண்களின் மார்புகளை நோட்டம் விடுவது தான் வேலை என்றாகியிருந்ததால், அகிலாவினுடையவை சராசரிக்கும் குறைவானவை என்று என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். சுகிதார் அவள் அளவில் இல்லையென்பதால் தோள்பட்டையில் அவள் பிராவினுடையதும் டாப்ஸினுடையதுமாய் இரண்டு வெவ்வேறு வகையான உப்பல்களுடன் கண்களைத் துருத்துக் கொண்டிருந்தது.

"இந்த சுடி நீ போட்டு நான் பார்த்ததில்லையே! புதுசா?'

சட்டென்று கேட்ட கேள்வியால் திரும்பியவள்,

"என்னைய நீ அவ்வளவு நோட் பண்ணுவியா? ஆமாம் இது என் தங்கச்சியோடது! அவள் தான் கொடுத்தாள் போட்டுக்கோன்னு. ஏன் நல்லாயில்லையா?"

இன்பத்தேன் வந்து காதில் பாய்ந்தது போலிருந்து, அவள் உடுத்தும் உடையைப் பற்றிக் கேட்டால் சொல்ல ஆயிரமாயிரம் உரையாடல்களைத் தயார் செய்து வைத்திருந்தேன், ஒன்றும் உதவவில்லை.

"ச்ச, சூப்பராயிருக்கு. நீதான் என் டைரி படிச்சியே! எனக்கு நீ பண்ணுற ட்ரெஸ்ஸிங்க் சுத்தமா பிடிக்காது. இந்த ட்ரெஸ்ஸில் நீ ரொம்ப அழகாயிருக்க!" என் கண்கள் தானாய் அவள் கண்களில் இருந்து டைவ் அடித்தது. இந்த முறை அவள் ஒன்றும் சொல்லவில்லை, முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை. ரசித்தாள். அவள் அழகை நான் ரசிப்பதை ரசித்தாள்.

நாங்கள் பெங்களூரை விட்டு வெளியில் வந்திருந்தோம், இனி மைசூர் போய் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டால் போதும் என்று நினைத்தேன். என்றைக்கும் இல்லா அதிசயமாய் ரோடு கொஞ்சம் ட்ராஃபிக்கா இருந்தது அதிகாலையிலேயே. நான் அகிலாவிடம்,

"அகிம்மா உனக்கு தூக்கம் வந்தா தூங்கு என்ன!" என்றேன்

"சரி" என்றவள் தூங்கப்போவதில்லை போலத்தான் இருந்தது, ரொம்ப தீவிரமாய் இரண்டு பக்கங்களையும் வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள். நான் எனக்குத் தெரிந்த கடக்கும் ஊரைப்பற்றிய விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவளும் எதுவும் தெரியவேண்டுமென்றால் கேட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் மைசூர் வந்து காலை உணவு முடித்த பிறகு குண்டல்பேட் வழியாக ஊட்டி செல்லும் பாதையை எடுத்தேன். கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய சாலையாகையால் விளையாட்டுத்தனங்களை விடுத்து பக்கத்தில் அமர்ந்திருக்கும் தேவதையை மறந்து கவனமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன் அகிலா தூங்கவேயில்லை, அவள் கண் அசந்து கூட நான் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு கொஞ்சம் டயர்டாக தோன்றத் தொடங்கியது, பெரும்பாலும் நண்பர்களுடன் செல்லும் பொழுது சிறிது நேரம் கழித்து யாரிடமாவது ஸ்டேரிங்கைக் கொடுத்துவிட்டு தூங்கப் போய்விடுவதுண்டு. பெங்களூரில் இருந்து ஊட்டி வரை இதுதான் முதல் முறை தனி ஆளாய் ஓட்டிக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அகிலா என்னைத் தொந்தரவு செய்யவில்லை, நான் சீரியஸாய் ஓட்டிக் கொண்டிருப்பது தெரிந்து அமைதியாகிவிட்டிருந்தாள். நான் கொஞ்சம் போல் டயர்டாகியது தெரியத் தொடங்கியது டீ குடிக்கலாம் என்றாள், அவள் அத்தனை டீ குடிப்பவள் இல்லை என்பதால் எனக்காகத் தான் கேட்கிறாளென்று புரிந்தது. நாங்கள் ஒரு வழியாய் கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி ஊட்டி வந்த பொழுது மதியம் இரண்டாகியிருந்தது, பெங்களூரில் இருந்து கொண்டை ஊசி வளைவு வரை என் டிரைவிங் பற்றி எதுவும் சொல்லாதவள், வளைவொன்றில் ஓரங்கட்டி நிறுத்தி வியூ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கேட்டாள், "நல்லா வண்டி ஓட்டுறீங்க! இங்க நிறைய தடவ வந்திருக்கீங்களோ?!"

அவள் கண்களில் சில்மிஷம் இல்லை, ஆனால் நான்,

"வந்திருக்கேன் இதான் முத தடவையா ஒரு பெண்ணோட!" இதற்கு நான் அகிலாவிடம் இருந்து லேசான கோபப்பார்வையை எதிர்பார்க்க அவளோ,

"ம்ம்ம் நம்பிட்டேன்" என்று சிரித்தபடி சொல்லி கலவரப்படுத்தினாள்.

நான் பரிதாபமாய் "அகிலம் நான் பொய் சொல்லலை, உண்மையிலேயே இதான் மொத தடவை ஒரு பொண்ணு கூட ஊட்டி வர்றேன். ஊட்டி மட்டுமில்லை எங்கையுமே என்னை நம்பு".

அவள் கொஞ்சம் இறங்கிவந்து, "ச்ச சும்மா சொன்னேன் தாஸ், உன்னைத் தெரியாதா?" என்று சொல்லி குடலுக்கு பியர் வார்த்தாள்.

"ஹாங் வண்டி ஓட்டுறதைப் பத்தி கேட்டள்ல, நான் இங்கத்தான் வண்டி ஓட்டவே கத்துக்கிட்டேன் அதனால எனக்கு ஹில் ஸ்டேஷன் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது!" கொஞ்சம் படம் காட்டியிருந்தேன்.

ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த ஹோட்டல் பிருந்தாவனில் ஒரு டபுள் ரூம் கன்ப்ஃர்ம் செய்துவிட்டு ஹோட்டல் அறைக்குள் நுழையும் முன் ஒரு பரீட்சை அறைக்குள் நுழையப் போகும் மாணவனைப் போன்ற பயம் வந்தது, வயிற்றுத் தசைப் பகுதி இறுக்கிப் பிடிக்கப்பட்டது போல் இருந்தது. அதுவரை இருந்த டயர்ட்னஸ் காணாமல் போயிருந்தது, திரும்பி அகிலாவைப் பார்த்தேன் வேறெதையோ பார்ப்பதைப் போல் அவள் முகத்தில் அந்தப் பதற்றம் இல்லை.

அறைக்குள் வந்து தாழிட்ட பொழுது ஏனோ மனசுக்குள் தவறு செய்வது போன்ற ஒரு உணர்வு, கதவுக்குப் பின்னிருந்த குப்பைத் தொட்டியில் அந்த எண்ணத்தைப் போட்டுவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தேன். அகிலா பாத்ரூம் சென்றுவிட்டு அப்பொழுது தான் வந்தாள், வந்ததும் வராததுமாய் மொத்த அறையையும் நோட்டம் விட ஆரம்பித்தாள். நான் அவளாய் செட்டில் ஆகட்டும் என்று பெட்டில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை துவக்கினேன். சேனல்கள் மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது இடைப்பட்ட ஈஎஸ்பிஎன் டிவியில் ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் மாட்ச் போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு நான் அகிலாவை மறந்து மேட்சில் ஆழ்ந்துவிட்டேன்.

"உங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யார் தாஸ்?" கவனம் கலைந்து பார்க்க அகிலா கட்டிலில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள், என்னால் அந்தப் பொழுதை நம்பமுடியவில்லை.

"அகிம்மா, எனக்கு மார்க் வாஹ் தான் பிடிக்கும், நான் ஒரு தீவிர ஆஸ்திரேலிய சப்போர்ட்டர்!"

அவள் அப்படியா என்பதைப் போல் பார்த்தாள், பின்னர் மேட்சில் ஆழ்ந்துவிட்டாள், ஆனால் என்னால் தான் மீண்டும் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்ப முடியவில்லை. எனக்கும் அவளுக்கும் இடையில் ஒன்றரை அடிதான் வித்தியாசம் இருந்தது. மூன்றாண்டுகளில் இந்த நொடியைப் பற்றி நிறைய கற்பனையை வளர்த்திருந்தேன், திருமணத்திற்கு முன் / பின் என்ற எல்லைகளில் வைத்து விரிந்திருந்த கற்பனை ஒரு முடிவை நோக்கி நகர்த்தவே முடியாததாய் இருந்தது. இந்தப் பொழுதில் அவள் நிராகரித்தாள், அடுத்தக் கணத்தில் அவள் நிராகரித்தாள் என்று மனம் பல்வேறு கணக்குகளை போட்டபடிதான் முடிந்திருக்கிறது. அவளுடைய நிராகரிப்பு என்பது எங்கள் கம்ப்யூட்டர் சைன்ஸ் ப்ளோ சாட்டில் வரும் Endஐப் போல. அவளை வற்புறுத்தும் எண்ணம் துளியும் கிடையாது, இப்பொழுதைக்கு மட்டுமல்ல திருமணத்திற்குப் பிறகும் கூட அப்படியே தொடர வேண்டுமென்றே நினைத்திருந்தேன்.

நான் மெல்ல அவளருகில் நகர்ந்து உட்கார்ந்தேன். அவள் ஒரு நொடி திரும்பி என்னைப் பார்த்தாள், அப்பொழுது அவள் கண்களை என்னால் படிக்க முடியவில்லை. ஒரு வெறுமை மட்டுமே இருந்தது அதிலிருந்து என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் டிவி பக்கம் திரும்பிவிட்டாள். நான் அவள் கைகளை அவளிடமிருந்து விடுவித்து என்னிடம் வைத்துக் கொண்டேன். இதற்கு முன் இப்படிச் செய்தது வெகு சில முறைதான் என்றாலும் என்னால் வித்தியாசத்தை உணர முடிந்தது. அவள் கைகள் காய்ச்சல் வந்தவளின் கரங்கள் போல் சூடேறியிருந்தன, என் கைகளின் தொடுதலால் அவள் கையில் இருந்த மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டு நின்றன. அவளுக்கு பின்புறம் முதுகை நோக்கி அமர்ந்தவாறு இருந்தாலும் அவள் கண்களை மூடிக் கொண்டதை உணர முடிந்தது. மெதுவாய் அவள் முதுகில் விரல்களை ஓட்டினேன். அவள் கைகள் மரக்கத் தொடங்கியது, அது நான் எதிர்பாராதது அவள் தன்னை கூட்டுக்குள் கொண்டு செல்கிறாள் என்று உணரமுடிந்தது. நானாய் கைகளை எடுத்துவிடவே நினைத்தேன் ஆனால் மறுப்பு அவள் பக்கத்தில் இருந்து வரட்டும் என்று விட்டது என் தவறு தான்.

"தாஸ் இப்பவே இதைச் செய்தாகணுமா?" முடிந்தது, இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட என்னால் இதைப்பற்றி பேச முடியாது. என் கைகள் தானாய் அவள் முதுகிலலிருந்து அகன்றன, அவள் கைகளை விடுவித்தேன், அந்த மாற்றம் அவளுக்குத் தெரிந்திருக்கவேண்டும், இயலாமையால் என்னைத் திரும்பிப் பார்த்தாள். என்னால் அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது, அவள் மேல் கொஞ்சம் கோபம் வந்தாலும் அது நான் வண்டி ஓட்டிக் கொண்டு வந்த களைப்பால் வந்ததாகத்தான் இருக்க முடியும், என்னால் அகிலாவை கோபிக்க முடிந்தது கூட ஆச்சர்யமாக இருந்தது. அவள் கண்கள் என்னைக் கெஞ்சின, 'ப்ளீஸ் கல்யாணத்துக்குப் பிறகு இதைச் செய்து கொள்ளேன்' என்று. உண்மையில் எனக்கு அதில் பிரச்சனை இல்லை, நானே கூட என்னைக் காதலிக்கிறாய் என்றால் நாம் வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்ல நினைத்த பொழுது தான் அவள் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். ஆண் மனம் கலவிக்கு அலைந்தது. என்னால் அகிலாவை அப்படிப் பார்க்க முடியவில்லை, நான் மெதுவாய் படுக்கையில் சாய்ந்த படி கண்களை மூடினேன் அவ்வளவுதான் தெரியும்.

கண்களைத் திறந்த பொழுது நினைத்துக் கொண்டேன், மன்மதன் தான் எழுப்பியிருக்க வேண்டுமென்று. அகிலா ஒரு டர்க்கி டவல் மட்டும் உடுத்தி என் முன்னால் நின்று கொண்டிருந்தாள், ஹமாம் சோப்பின் மணம் நாசிகளைத் துழைத்தது. அவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று தலை கோதிக் கொண்டிருந்தாள். நான் எழுந்ததைப் பார்த்ததும் என் பக்கம் திரும்பிச் சிரித்தவள் அசப்பில் பாலு மகேந்திரா படத்து ஹீரோயின்களைப் போலிருந்தாள் அவள் மாநிறம் இல்லை என்றாலும் கூட, அவளுக்குப் பின்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பமும் அவள் அசலும் சேர்ந்து என்னை நிலை கொள்ள முடியாதபடி ஆக்கின. எனக்கு இவை நிஜத்தில் தான் நடக்கிறது என்று தெரிந்தாலும் வேடிக்கைக்காக கைகளைக் கிள்ளிக் கொண்டேன், அவள் கைகளில் வைத்திருந்த சீப்பை என் மேல் வீசினாள்.



"மணி என்னாகுது தெரியுமா?" எனக்கு அப்பொழுது தான் நான் அதிக நேரம் தூங்கிவிட்டிருந்தது தெரிந்தது, என்னால் இது சனிக்கிழமை இரவா இல்லை ஞாயிற்றுக் கிழமை விடியலா என்ற குழப்பம் இருந்தது. கைகளில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்க்க ஒன்பதரை காட்டியது. ஜன்னல்களுக்கு வெளியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் சனி இரவுதான் என்பது உறுதியாக. கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் தூங்கியிருக்கிறேன் என்பது தெரிந்தது, தேவதை போல் ஒரு பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு. அவள் முகத்திலும் அது தெரிந்தது.

"சாரி! நல்லா தூங்கிட்டேன்."

"இப்புடியா தூங்குவாங்க! நான் எப்படா 'இப்ப வாண்டாம்'னு சொல்லுவேன்னு காத்திக்கிட்டிருந்த மாதிரி தூங்கிட்ட நீ! ஏற்கனவே மூணு வருஷம் செய்தது போதாதுன்னு இங்க ஹோட்டலில் வந்து வேற ஏண்டி உயிரை வாங்குறன்னு சொல்ற என் மனசாட்சி கூட தனியா சண்டை போட்டிக்கிட்டிருக்கேன் ஏழு மணி நேரமா! தெரியுமா?"

நான் படுத்திருந்த கட்டில் நிச்சயம் தரையில் இல்லை.

"லஞ்ச் வாங்கிக் கொடுத்தியா நீ, என்ன ஆளுய்யா. இப்படித் தூங்குறவங்களை நான் எழுப்பவே மாட்டேன். நீயாதான் எழுந்துட்ட. எனக்கு பசி தாங்காதுப்பா நான் நல்லா லஞ்ச் ஆர்டர் செய்து சாப்டேன்." கைகளை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள், காதுக்குள் அவள் சொல்வது எல்லாம் மாற்றம் செய்யப்பட்டு இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்று சுசீலாவின் குரலில் சென்று கொண்டிருந்தது. கட்டிலில் குனிந்து அவள் தூக்கி வீசிய சீப்பை எடுக்க முயல, அவள் தலை முடி இரு பக்கங்களில் இருந்தும் முன்பக்கம் சரிந்தது. சரியாய் டவலில் முடிப்பை வலது கைகளில் பிடித்தபடி, இடது கையால் சீப்பை எடுத்து விட்டு அவள் நகர ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருந்த நான் தொப்பென்று மல்லாக்க மறுபுறம் விழுந்தேன்.

மீண்டும் கண்ணாடி பக்கம் திரும்பியவள் வெள்ளை நிற டவலில் அன்றலர்ந்த மலர் போல் இருந்தாள், மார்பிலிருந்து முழங்கால் வரை வந்திருந்த அந்த டவல், அவளுடைய நிர்வாணத்தை விடவும் அதிக கிளர்ச்சியைத் தந்தது, அவளுடைய பரிமாணங்களை அந்தத் டவல் வேற எதாலும் வெளிப்படுத்தியிருக்க முடியாது என்று நான் நினைத்தேன். அவள் பக்கமிருந்து மெதுவாய் ஒரு வசனம். சாதாரண நாட்களாகயிருந்திருந்தால் நான் அதைக் கேட்டிருப்பதற்கான வாய்ப்பு கூட குறைவு தான்.

"இப்படியேவா! குளிச்சிட்டு வர்றியா?"

அவள் லேசாய் தலையைத் திருப்பி என்னை மோகக் கண்களுடன் பார்த்தாள், நான் நினைத்தேன், இங்கே முடிந்தது என்று. அவளிடம் இருந்து தப்பிக்க நினைத்து எழுந்தவன் அவளைப் பார்த்து புன்னகையொன்றை செய்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தேன். இதற்கு மேல் அவளால் மறுக்க முடியாது என்று தெரிந்ததும் மனம் குதியாட்டம் போட்டது, பந்தையத்திற்காக காத்திருக்கும் குதிரையைப் போலிருந்தது மனம். இதயத் துடிப்பு முறுக்கேற்றப்பட்ட ஒரு வலுவான எந்திரத்தின் வேகத்தில் இருந்தது, என் வசத்தில் இல்லை. அவள் உபயோகப்படுத்திவிட்டு வைத்திருந்த சோப்பில் அவள் மனம் வந்தது. எனக்கு இன்னொரு விஷயம் சட்டென்று மனதிற்குள் வந்தது, இந்தத் துடிப்பில் போனால் அவளுடைய நிர்வாணம் என்னை கீழே அழுத்தித் தள்ளிவிடும் என்று நான் எப்பொழுதும் செய்யும், 'அபிராமி அந்தாதி' பாடல்களை மனதிற்குள் வேகமாக நினைக்கத் தொடங்கினேன். சிறுவயதில் மனனம் செய்திருந்ததால், பாடல்கள் நினைவுக்கு வருவதற்கு மனதை அதன் பக்கம் திருப்ப வேண்டும், அந்தாதி என்பதால் ஒரு பாட்டின் முடிவில் இருந்து தொடங்கும் மற்ற பாடல் சாதாரணமாய் நினைவில் இல்லாமல் முடிவில் தான் நினைவில் வரும் என்பதால் மனம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும். வந்தது.

நான் பாத்ரூமை விட்டு துவட்டிக் கொண்டு வெளியில் வந்த பொழுது அறையில் நைட் லேம்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்ததால் அறையில் அத்தனை வெளிச்சமில்லை, என்னை நோக்கி வரவேற்பது போல் காத்திருந்தவள் உடம்பில் துணி எதுவும் இல்லை. என் எதிர்பார்ப்பை அவள் மார்பகங்கள் ஏமாற்றவில்லை.

"Doss I don't want to get pregnant" சொல்லத் தேவையில்லாத விஷயம் என்றாலும் தவறாகி விடக்கூடாதென்ற கவனம் அதைச் சொல்ல வைத்தது. அவள் சட்டென்று ஆங்கிலத்திற்கு மாறியிருந்தாள் நான் நினைத்தேன் அவள் சொல்ல வருவதை அவள் காதுகள் கேட்கபதைக் கூட அவள் விரும்பவில்லை என்று. அந்நிய மொழி அவளுக்கு அந்த விஷயத்தில் உதவுவதாக இருந்தது.

"Don't worry I have condoms" சிரித்தபடியே சொன்னேன். அவளுக்குத் தெரிந்து தான் இருக்க வேண்டும், இந்த அளவிற்காவது நான் தயாராய் இருப்பேன் என்று. படுத்த படியே இரு கைகளையும் நீட்டி என்னை அழைத்தாள், கனவு போல் இருந்தது.



அரை மணிநேரத்தில் இன்னொரு முறை அவளும் குளித்து என்னையும் வற்புறுத்தி குளிக்க வைத்து குளியலறையில் நான் இன்னொரு முறை தொடங்க பொய்க்கோபம் காட்டி தடுத்தவள், 'பசிக்குது தாஸ்' என்று சொல்ல பாவமாய் இருந்தது. சட்டென்று காலையில் இருந்து சாப்பிடாதது எனக்கும் பசியெடுத்தது. சின்னச் சின்ன சிணுங்கல்கள், சீண்டல்களுடன் அவள் உடைமாற்ற அகங்காரமாய் நேரெதிரில் அவளை மட்டும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அதான் எல்லாம் முடிந்துவிட்டதே என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள் என்று நினைத்தாளாயிருக்கும், நான் இருப்பதை அவள் பொருட்படுத்தவேயில்லை.

அவளிடம் ஆரம்ப விளையாட்டுகளின் பின், உணர்ந்து "you already came is it?" கேட்ட கேள்வி அதன் மொக்கைத்தனத்தைத் தாண்டியும் என் அனுபவமின்மையைக் காட்டியதாக நினைத்தேன். அவள் சட்டென்று அதைக் கேட்க விரும்பாதவளைப் போல இரண்டு கைகாளாலும் அவள் காதுகளை மூடிக்கொள்ள முயற்சித்தது நினைவில் வந்தது. அவளை வெட்கம் தின்று கொண்டிருந்த நேரத்தில் கேட்பதற்கு இதைவிடவும் மோசமான கேள்வியொன்று இருந்திருக்காது என்று நினைத்தேன். சட்டென்று தாவி எழுந்து என்னை இழுத்து அவளோட அணைத்து அதைச் சமாளித்திருந்தாள்.

"என்ன அதுக்குள்ளையே கனவா?" என் தலையைக் கோதியபடி கேட்டவளிடம்,

"இன்னும் ஒரு வாரத்திற்கு உன்னை நேரில் பார்க்கலைன்னா கூட பரவாயில்லை, இந்த நினைவுகளோடு சமாளிச்சிறுவேன்."

ஒரு அடி பின்னகர்ந்தவள், கைகளை இடுப்பில் வைத்தபடி, "அப்ப நான் வேணாமா?" கேட்க, இதற்கு என்ன பதில் சொன்னாலும் ஆபத்து என்று பதில் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு,

"என்ன விட்டுடு தாயி!" என்றேன்.

நாங்கள் மூடப்பட்டுக் கொண்டிருந்த ரெஸ்டாரெண்டிற்கு வந்து உட்கார்ந்ததும் தான் தாமதம், அகிலாவின் மொபைல் சிணிங்கியது. நம்பரைப் பார்த்தவள், வெட்கப்பட்டு சிரித்து,

"தாஸ் அவதான் போன் பண்ணுறா, அவளுக்கு எல்லாம் தெரியும் நான் இப்ப அவகிட்ட பேசினா அவ்வளவுதான். நீங்க வெளியில் போயிருக்கான்னு சொல்லி வைச்சிடுங்க." சொல்லி என்னிடம் திணித்தாள்.

நான் "ஹலோ!" என்று சொல்ல,

மறுபுறம் ஜெயஸ்ரீ, "நான் நினைச்சேன் நீங்கதான் போனை எடுப்பீங்கன்னு குடுங்க அந்த கழுதைகிட்ட."

நான் தீவிரமாய், "அவள் இங்க இல்லை ஜெயா" என்று மழுப்ப ஏண்டா அப்படிச் செய்தோம் என்று ஆகியது.

"சின்னப் பொண்ணு ஒன்னை ஊட்டிக்கு தனியா கூட்டிக்கிட்டு போய்ட்டு இப்ப அங்க இல்லைன்னு வேற சொல்றீங்களா? அவளை ஏமாத்தி எல்லாம் முடிச்சாச்சா?" எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலுடன் இல்லை.

வேதனையுடன் அகிலாவிடம் போனைத் தந்தேன். அவள் நேரடியாய் "ஏண்டி பாவம் அவனை வம்பிழுக்கிற, பச்சை புள்ள மூஞ்சி எப்படிச் சுண்டிப் போச்சு பாரு" என்று ஆரம்பித்தாள்.

"ஆமாம்!" "ஒரு தடவை தான்" "ம்ம்ம்" "ம்ம்ம்னு சொல்றேன்ல" "தாஸ்கிட்டையே கேளேன்" என்று சொல்லி மீண்டும் என் கையில் திணித்தாள். நான் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தேன்.

"இங்கப் பாருங்க, அவளை சரி செஞ்சி இதெல்லாம் உலகமகா தப்பில்லைன்னு சொல்லி உங்கக்கூட ஊட்டிக்கு அனுப்பி வைச்சதே நான் தான். கழட்டி விடணும்னு நினைச்சீங்க அவ்வளவுதான். பார்த்துக்கோங்க. பூனை இனிமேல் சும்மாயிருக்காது பண்டத்தை கண்காணிக்க என்னால் முடியாது, மரியாதையா பெங்களூர் வந்ததும் உங்க வீட்டில் பேசுறீங்க. என்ன?"

நான் வெறுமனே "ம்ம்ம்." என்றேன்.

"இந்தக் குரங்கு மூஞ்சியைப் பார்க்க நான் அங்க இல்லாமப் போய்ட்டேனே!" அவள் சொன்னதும் தாமதம்.

"நான் தான் உங்க அக்காகிட்ட உன்னையும் கூட்டிக் கிட்டு வான்னு சொன்னேனே! அவதான் என்னமோ உங்க ரெண்டு பேத்தையும் வைச்சிக்கிட்டு நான் த்ரீஸம் பண்ணப்போறேன்னு பயந்து கூட்டிக்கிட்டு வரலை!" உளறிக்கொட்டியிருந்தேன்.

அகிலா நான் இந்த முனையில் சொன்னதைக் கேட்டு என்னை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள், நான் சொன்னது எனக்கு விளங்கியதும் எனக்கு நானே தலையில் அடித்துக் கொண்டேன்.

ஜெயஸ்ரீ, "அக்காகிட்ட போனைக் கொடுங்க..." நான் அகிலாவிடம் கொடுத்தேன்.

இவள் போனை வாங்கியதில் இருந்து கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்தாள், எனக்குப் புரியவேயில்லை. நான் மௌன மொழியில் தோப்புக் கரணம் போட்டுக் காட்டினேன். அகிலா கண்டுகொள்ளவில்லை, சிறிது நேரத்தில் போனை அணைத்தவள். நான் அப்படி ஒன்று சொன்னதாய்க் காட்டிக் கொள்ளவேயில்லை.

"சாரி ஏதோ உளறிட்டேன்!" மன்னிப்பு கேட்கும் தொணியில் சொன்னேன்.

அவள் சப்தமாய் சிரித்தபடி, "இதோட ஜெயஸ்ரீ மேல இருக்கிற ஆசையை விட்டுடுங்க" என்று சொல்ல நான் உண்மையிலேயே வேதனையில் நொந்து போயிருந்தேன்.

"அகிம்மா சாரி I didn't mean it. மன்னிச்சிக்கோம்மா" சொல்ல அவள்,

"ச்ச தாஸ், என்னைய விட ஜெயஸ்ரீக்குத்தான் உங்க மேல மதிப்பு அதிகம். நான் இன்னிக்கு உங்கக்கூட இருக்கேன்னா அதுக்கு 90% காரணம் அவதான். என்னை விட அவதான் உங்களை நம்புறா! இதைவிட நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைக்க மாட்டான்னு கூட சொன்னா. உங்களை அவ தப்பா நினைக்க மாட்டா! நானும் நினைக்கலை கவலைப்படாதீங்க."

போன உயிர் திரும்ப வந்தது.

இது காதலாய் யாசிக்கிறேன்னின் தொடர்ச்சி.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

Popular Posts