In Only ஜல்லிஸ்

என் பதிவுகளுக்கான தேவை

கடந்த ஒரு வருடத்தில் வெறும் பதிமூன்று பதிவுகளே எழுதியிருக்கிறேன் என்பது கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் பொழுது கொஞ்சம் ஆச்சர்யமாகவும் நிரம்ப சந்தோஷமாகவும் இருக்கிறது. எதற்கும் நான் அடிமையில்லை என்பதை கொஞ்சம் தீவிரமாகவே என்னிடம் பரிசோதனை செய்து வந்திருக்கிறேன். நம்புங்கள் ஒரு வருடத்தில் நான் தமிழ்மணத்திற்கு வந்ததை எண்ணி விட முடியும், ஆரம்பத்தில் பரிசோதனையாக ஆரம்பிக்காவிட்டாலும். பின்னர் அப்படி ஆக்கிக் கொண்டேன், விலகியிருக்க முடிந்திருக்கிறது. நானாய் பின் தொடரும் வெகுகுறைவான மக்களை ரீடரில் படித்ததுடன். ட்விட்டரில் இருப்பதால்/இருந்ததால் கொஞ்சம் விஷயம் தெரிந்திருந்தது.

ஆனால் இப்பொழுது என் ’பதிவு’களுக்கான தேவை முன்பை விடவும்/எப்பொழுதை விடவும் இப்பொழுது அதிகமாக இருப்பதாய் எனக்குப் படுகிறது. காரணம் தெரியவில்லை. தொடர்ச்சியாக எழுதலாம் என்றிருக்கிறேன். 2007ல் எழுதிய அளவிற்கு எழுத ஆசை தான். பார்க்கலாம்.

...no matter how many fish in the sea it'd be so empty without me...

Related Articles

9 comments:

  1. வாய்யா வா! நீ வருவேன்னு தெரியும்.

    ReplyDelete
  2. ஒரிஜினல் 100% அக்குமார்க்கு சுத்தமான வடிகட்டிய கலப்படமில்லாத (டாஷ்மாக் சரக்கோ நெய்யோ இல்லை) ஆணாதிக்கவாதியை வரவேற்கிறோம்

    இளவட்ட சிங்கம் இளவஞ்சி இளைஞர் மன்றம்
    பெண்கள் கொலைவெறிப் படை
    ஆண்கள் முடியல மன்றம்
    மகளிர் மனமகிழ் மன்றம்
    ஜய்யோ கொல்றானுக்களே மன்றம்
    கண்ணகி காலாட் படை

    ReplyDelete
  3. திரும்பி வருவேண்டுமென்றால் போய் செட்டியார் ஆணாதிக்கவாதி இல்லையென்று மண்டபத்தில சட்டிபிக்கேட்டோட தான் வரனும் otherwise செல்லாது

    செல்லாக்காசு செந்ததமிழ் மன்றம்
    செல்லாக்கா இளவல்கள்
    வருவியா மாட்டியா பேரவை

    ReplyDelete
  4. யாரு சிதம்பரம் செட்டியாரா?

    ReplyDelete
  5. சிதம்பரம் செட்டியாரா///
    சொல்லிட்டால் இல்லையென்று ஆகிடுமா செல்லாது செல்லாது. தங்கச்சிகளை காப்பாத்துற அண்ணங்கள் வந்து அடிச்சு கேட்பாங்க அப்பெயும் சொல்லீறாதீக

    ReplyDelete
  6. கோவை அரன்Friday, June 04, 2010

    உங்கள் பதிவை தேடிப் படிக்கும் நண்பனாக உங்களை ஆவலுடன் வரவேற்கிறேன்.

    ReplyDelete
  7. வாழ்த்துகள்
    :)

    ReplyDelete
  8. நீங்க வலையுலகில் தீவிரமாய் எழுதிய காலத்தில் நான் பார்த்ததில்லை. பிறகு நான் வலைப்பதிவுலகிற்கு வந்த போது உங்கள் பக்கங்ளை நடுநடுவே வந்து பார்த்து இருக்கேன். தொடர்ந்து எழுதுங்கள். என்னுடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாருங்கள் மோகன்தாஸ்,

    உங்களுக்காக ஆவலோடு காத்திருக்கிருப்பவர்களில் நானும் ஒருவன்.

    கதைகள் எழுதுவீர்கள்தானே?

    ReplyDelete

Popular Posts