In BHEL கதை சிறுகதை திருச்சி

காக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை



"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?"

இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன்னு நினைப்பு, படிக்கிறது பன்னிரெண்டாவது. அப்பா BHEL எம்ப்ளாய், அம்மா ஹவுஸ் வொய்ஃப், ஒரே ஒரு தங்கச்சி பேரு ரமா பத்தாவது படிக்கிறாள்.

"இங்கப் பாருடா உனக்கு இவ்ளோதான் மரியாதை! இனிமேட்டும் கண்டத பேசிக்கிட்டு என் பின்னாடி வந்த போலீஸ்கிட்ட பிடிச்சிக் கொடுத்துறுவேன்."

இது நம்ம ஹீரொயின், பேர் ரேஷ்மா. ரெண்டு வருஷத்துக்கு முன்னால் பார்க்கச் சகிக்காது, இப்ப என்னடான்னா 'B' செக்டர் பசங்கள்ள பாதி பேரு இவ பின்னாடி தான் சுத்தராங்ய, மீதி பாதி நம்ம ஹீரோவின் தங்கச்சி ரமா பின்னாடி. படிப்பில பூஜ்யம், வருஷாவருஷம் அவங்கப்பா சிபாரிசில மேலத்தூக்கிப் போட்டே பத்தாவது வந்துட்டா. சரி இப்ப மேற்சொன்ன சிச்சுவேஷனுக்கு.

பேக்ரவுண்ட் என்னான்னா, இப்படிப்பட்ட நம்ம ஹீரோயினி ரேஷ்மா பத்தாவது வந்துட்டாலும், பாஸாக அப்பா சிபாரிசு உதவாதுன்னு டியூஷன் படிக்கப்போக. 'B' செக்டரின் ரவுடி வேறயாரு நம்ம ஹீரோ, ஒரு கிரிக்கெட் மேட்சில் கிடைத்த கேப்பில், ஸ்டம்ப்பை உருவி, ரேஷ்மாவை ரூட்டுக் கட்டிக் கொண்டிருந்த சங்கரையும், பிரசன்னாவையும் அடித்து ரத்தம் பார்த்துவிட்டு, ரேஷ்மாவை பின் தொடரும் முழு உரிமையையும் நிலைநாட்டிய பிறகுவந்த ஒரு வெள்ளிக்கிழமை தான் மேற்சொன்ன சம்பவம் நடந்தது.

அதாவது 'B' செக்டர் ஹீரோயினி 'C' செக்டர் டியூஷன் மாஸ்டரிடம் பாடம் படிக்க, நம்ம ஹீரோவுக்கு காவல்காரன் பொறுப்பு தானா வந்திருச்சு, 'C' செக்டர் மன்மதன்களிடமிருந்து ரதி தேவதையை காப்பாற்ற வேண்டிய கட்டாயம். சிகப்பு கலர் BSA SLR லேடீஸ் ஸ்பெஷல், பச்சை கலர் யூனிபாரம், வெள்ளை ரிப்பன் தேவதை 'B'யையும் 'C'யையும் ரெட்டைச் சடை பட்டாம்பூச்சியாய்க் கடக்க பாவம் நம்ம ஹீரோ; அவனிடம் இருந்ததோ இன்னொரு BSA SLR, வெய்ட் அ மினிட் அது பொண்ணுங்க வண்டியாச்சே. ஆமாம் உண்மைதான் பொண்ணுங்க வண்டிதான் அது, நம்ம ஹீரோவோட அப்பா சார், பரிட்சையில் பாஸானாத்தான் 'அட்லஸ்' வண்டின்னு சொல்லிட்டார். பொம்பளை புள்ள வண்டியேதுன்னு கேக்குறீங்களா? நான் ரமா பரிட்சையில் பெயிலாகும்னு சொல்லையே?

இதனால் தனக்கு ஆமாம் சாமி போடும் இரண்டு பச்சை பிள்ளைகளில் ஒருநாள் மாற்றி ஒரு அட்லஸ் இரவல். பரிகாரமாய் ஒருத்தனுக்கு கிரிக்கெட் மேட்சில் ஓப்பனிங்கும் இன்னொருத்தனுக்கு பத்து ஓவர் மேட்சில் கிடைக்கிற ஒரே ஒரு மூணு ஓவர் போடும் வாய்ப்பும் கொடுங்க வேண்டும். காதலுக்குத்தான் கண்ணில்லையே கிரிக்கெட்டும் மறைக்கலை. இதனால் நம்ம ஹீரோவோட கேப்டன்ஷிப்பை மாத்தணும்னு ஏற்கனவே ரத்த அடிப்பட்ட, பிரசன்னாவும் சங்கரும் எட்டப்பனாகியிருந்தார்கள் 'B' செக்டர் கிரிக்கெட் டீமிற்கு.


ஒருவாரமாய் நன்றாக சிச்சுவேஷனை அனலைஸ் பண்ணி வந்த நம்ம ஹீரோ வெள்ளிக்கிழமை, முன்னாடியே ப்ளான் செய்திருந்தது போல டியூஷன் மாஸ்டர் வீட்டின் முன் நிறுத்தியிருக்கும் நாற்பத்தம்பது ஐம்பது சைக்கிள்களில் சரியாய் நம்ம ஹீரோயின் சைக்கிள் முன்னால் நிறுத்தி யாரும் பார்க்காத ஒரு நிமிஷத்தில் அவளுடைய சைக்கிளின் வால்டியூபை பிடிங்கிவிட்டான். பிறகென்ன தன்னோட ப்ளான் படி காக்கா'பீ' ரோட்டிற்கு கொஞ்ச தூரம் முன்னாடி வண்டியை நிறுத்திவிட்டு தேவதைக்காகக் காத்திருந்தான். அவன் நினைத்தது போல், ரேஷ்மா வண்டியைத் தள்ளிக்கொண்டே காக்கா'பீ' ரோட்டில் நுழைந்ததும், வேறெங்கிருந்தோ வருவதைப் போல் வந்தவன் அவளருகில் வண்டியை நிறுத்தினான்.
இப்ப இன்னொரு பேக்ரவுண்ட், இந்த காக்கா'பீ' ரோடு என்பது இந்த மாதிரி காதல் வயப்பட்டவர்களின் சொர்க்கபுரி. ஒரு பக்கம் அவள் படிக்கும் RSK ஸ்கூல், இன்னொரு பக்கம் அவன் YWCA ஸ்கூல். இரண்டு ஸ்கூலுக்குமான பொதுவான ரோடு. ரோட்டோரத்தில் அடர்த்தியான மரங்களுடன் சாதாரணமாக பத்தடிக்கு ஒரு ஸ்ட்ரீட் லைட் இருக்கும் BHELல் இந்த ரோட்டில் மட்டும் இருபத்தைந்தடிக்கு ஒரு லைட் போஸ்ட் வீதத்தில் நான்கு. இயற்கை வெளிச்சம் சுத்தமாயிருக்காத ஒரு ரோடு.

அந்த மாதிரியான மரங்களில் காக்காய்களின் கூடுகள், எவ்வளவு வேகமாக வண்டியில் போனாலும் மாலை வேளைகளில் அவைகள் போடும் எச்சத்திலிருந்து தப்பவேமுடியாது. காதலர்களின் சொர்க்கபுரியாக காக்கா'பீ' ரோடு பேமஸானதற்கு இதுவும் ஒரு காரணம். நைட் நேரத்தில் குளிக்க விரும்பாதவர்கள் அந்தப் பக்கம் வருவதில்லை. அதுமட்டுமில்லாமல் மரங்களில் இருந்து காக்கைகள் போடும் எச்சம் 10% மக்கள் மீது விழுந்தாலும் 90% ரோட்டில் விழுவதால் வரும் ஒருவித நாற்றம் காரணமாயும் அந்த ரோட்டை உபயோகிப்பது குறைவு. ஆனால் காக்கா'பீ' ரோட்டை உபயோக்கிக்காமல் போக வேண்டுமானால், ரொம்பவும் சுற்றிக் கொண்டு போகவேண்டும். பஞ்சரான சைக்கிளை தள்ளிக்கொண்டு போக மற்ற ரோட்டை உபயோகிக்க மாட்டாள் என்றும்; அந்த ரோட்டில் தான் தள்ளிக் கொண்டு வருவாள் என ஹீரோ நினைத்தது அப்படியே நடந்தது.

"என்ன ரேஷ்மா பஞ்சராயிடுச்சா?"

ஹீரோவின் தங்கச்சியும் ஹீரோயினும் ஒரே கிளாசில் படித்ததால் கொஞ்சம் பழக்கம் உண்டு, அதுமட்டுமில்லாமல் ரேஷ்மாவிற்கு கோக்குமாக்காக அவன் அவள் பின்னால் சுற்றுவது தெரியும்.

"ஆமாம். நீ எங்க இங்க?"

"இல்லை சும்மா கிரிக்கெட் விளையாட வந்தேன்..." சற்று நிறுத்தியவன், "...நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ஆனா எப்படி சொல்லறதுன்னே தெரியலை!"

மனசென்னமோ ரேஷ்மாவிடமும் அவன் சொல்லப்போகும் விஷயத்திலும் இருந்தாலும் காக்கா அசிங்கம் செய்திடுமோ என்ற பயம் இருந்தது. 'ஏன் அந்த ரோட்டில் போனே?' என்ற கேள்வி மிகச் சுலபமாய் வீட்டில் கேட்கப்படலாம்.

"அப்பச் சொல்லாத!" சொல்லிவிட்டு வேகமாய் நடையைக் கட்டினாள் நம்ம ஹீரோயின்.

சுதாரித்தவனாய், தானும் வேகமாய் வண்டியைத் தள்ளிக்கொண்டு அவளுடைய வேகத்திற்கு ஈடுகொடுத்தவனாய் முன்னேறியவன். அவள் வண்டிக்கெதிராய் இவன் வண்டியை நிறுத்தி, சைக்கிள் ஹேண்டில்பாரில் இருந்த அவள் கையைத் தொட்டு,

"I Love You!!!" சொல்ல,

அந்தக் இருட்டு ரோட்டிலும் கூட ரேஷ்மாவின் கன்னமெல்லாம் சிவந்து அழத் தயாரானது தெரிந்தது.

"செருப்பால அடிவாங்கப்போற. வழிய விடுடா" அவனுடைய வண்டியைத் தள்ளிவிட்டு வேகமாக நடந்தாள்.

பின்னாலிருந்து,

"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?"

அவன் கத்த, அவளும் கத்தினாள்.

"இங்கப் பாருடா உனக்கு இவ்ளோதான் மரியாதை! இனிமேட்டும் கண்டத பேசிக்கிட்டு என் பின்னாடி வந்த போலீஸ்கிட்ட பிடிச்சிக் கொடுத்துறுவேன்."

மேகத்திலிருந்து ததாஸ்து தேவதைகள் "ததாஸ்து" சொல்லியிருக்க வேண்டும். தொப்பையை தள்ளிக்கொண்டு பத்தடி தூரத்தில் போலீஸ் மாமா இருவருக்கும் எதிர் திசையில் வந்துகொண்டிருந்தார்.


ஆனால் அந்த இருட்டில் வந்த போலீஸ்காரருக்கு ஹீரோவின் முகத்தில் படர்ந்த பயரேகைகள் தெரிந்திருக்க நியாயமில்லை தான். ஆனால் காக்கா'பீ' ரோட்டில் ஒரு பெண்ணுடன் ஒரு ஆணைப் பார்த்தால் BHELல் எல்லா போலீஸ்காரர்களுக்கும் வரும் டவுட் அவருக்கும் வந்தது.

"என்னாம்மா வண்டியைத் தள்ளிக்கிட்டு வர்ற இந்தப் பய ஏதாவது பிரச்சனை பண்றானா?"

நம்ம ஹீரோ அதான் சுந்தரப் பாண்டியன் இதயத்திலிருந்து வந்த இதயத்துடிப்பொலியை 'பீட்'டா வைத்து எமினெம் ராப் பாடலொன்றே கூட பாடிவிடலாம், அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று இரண்டு காதுகளையும் தீட்டிக் கொண்டிருப்பது அவனுடைய சிவக்கும் காதுகளைப் பார்த்தாலே நன்றாகத் தெரிந்தது.

"இல்லை மாமா! இது எனக்கு தெரிந்த பையன் தான், இப்படி கிராஸ் பண்ணிப் போய்க்கிட்டிருந்தான். நான் தான் இந்த ரோட்டை கிராஸ் பண்ண பயந்துக்கிட்டு என்கூட கூட்டிக்கிட்டு போறேன்."

ஹீரோவுக்கு முதலில் ஹீரோயின் இவ்வளவு பேசுவாள் என்றே தெரியாது. அவள் அப்படிப் பேசியதும், அவன் வயிற்றுக்குள் பட்டாப்பூச்சி பறக்கத்தொடங்கியது அவன் கண்களின் கிறக்கத்திலேயே தெரிந்தது. ஜொள்ளு வழிய அவன் ஹீரோயினை கண்களாலேயே சாப்பிட்டு விடுபவனைப்போல் பார்த்துகொண்டிருந்தான், பெருமிதம் வழிந்தோடியது அவன் கண்களில். அவள் தன்னைப் போட்டுக்கொடுக்கவில்லை அந்தப் போலீஸ்காரரிடம் என்னதான் தன்னிடம் அதட்டி, திட்டிப் பேசினாலும் அவள் தன்னைக் காதலிக்கிறாள் அதனால் தான் அப்படி நடந்துகொள்கிறாள் என்று தனக்குத்தானே கற்பனைக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தான்.

இத்தனையிலும் போலீஸ்காரர் அவனைக் கவனிப்பதைக் கூட இவன் உணரவில்லை, அவருக்கு நம்ம ஹீரோவிடம் ஏதோ தப்பிருப்பதைப் போல் பட்டிருக்க வேண்டும்,

"வேணும்னா நான் உன் வீடுவரைக்கும் வரட்டுமா பாப்பா?" கேட்க நம்ம ஹீரோயினி, "இல்ல மாமா ஒன்னும் பிரச்சனையில்லை நீங்க போய்ட்டுவாங்க."

அவருக்கும் நம்ம ஹீரோ மேல சுத்தமா நம்பிக்கையில்லாவிட்டாலு, நம்ம ஹீரோயின் ரொம்பவும் தெளிவா பேசினதால மனது எதோ தப்பு நடக்குதுன்னு சொன்னாலும் தேத்திக்கிட்டு நடையைக் கட்டியதும்தான் தாமதம். ஹீரோயினி,

"இங்கப்பாருடா, நான் மட்டும் அந்தப் போலீஸ்கிட்ட சொல்லியிருந்தேன்னா, உங்க குடும்பத்துக்கே ரொம்ப அவமானமாப் போயிருக்கும். இத நான் உனக்காக செஞ்சேன்னு நினைக்காத, அங்கிள் ஆண்ட்டிக்காகத் தான் அப்படி சொன்னேன்.

மரியாதையா சைக்கிளை ஓட்டிக்கிட்டுப் போயிரு அவ்வளவுதான் சொல்வேன்." கத்தியது.

போய்க் கொண்டிருக்கும் போலீஸ் காதில் விழுந்திடுமோ என்று பயந்தவனைப் போல் வேகமாக சைக்கிளில் ஏறிப் பறந்தேவிட்டான் நம்ம ஹீரோ. கதை இதோட முடிஞ்சிருந்தா தான் பரவாயில்லையே, கதையை நேரில் பார்த்தவன்ங்கிற முறையில் இந்தக் கதையை இங்கயே நிறுத்திறலாம்னு தோன்றினாலும். உண்மையை மறைப்பதில்லை என வாக்குறுதி கொடுத்துள்ளதால் தொடர்கிறேன்.

அடுத்த நாள் நம்ம ஹீரோவோட அப்பா எழுப்ப எழுந்தவனுக்கு தன்னைச் சுற்றிலும் நின்று எதோ எக்ஸிபிஷனைப் பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவையும் தங்கையையும் பார்த்து ஒன்றும் புரியாதது நியாயம் தான் இல்லையா? அவன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது ரேஷ்மாவின் அப்பா வந்து நேற்று காக்கா'பீ' ரோட்டில் நடந்ததையெல்லாம் சொல்லி கண்டித்து வைக்குமாறு சொல்லியதும். அவங்கப்பா தர்மசங்கடமா கையைக் பிசைந்து கொண்டு நின்றதையும்.

"யேய் இங்கப் பாரு, இன்னிக்கு சாயந்திரம் உன்னை தபோவனத்தில் சேர்த்துவிடப் போறேன். உன் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாய்டே போகுது. இனிமேல் பொறுக்க முடியாது. ஒரு வருஷமாவது நீ அங்கப் படிச்சாத்தான் திருந்துவ." சொல்லிவிட்டு ஹீரோவின் அப்பா நகர, அம்மா தங்கை கண்களில் கண்ணீர். ஆனால் யாருடைய கண்ணீரும் அவருடைய முடிவை மாற்றமுடியாது என்று தெரிந்துதான் இருந்திருக்க வேண்டும் ஹீரோவிற்கு.

உண்மையில் நம்ம ஹீரோவிற்கு அந்தச் சமயத்தில் தபோவனம் போய் படிப்பது என்பது பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை, அவனால் ரேஷ்மா அவன் விரும்பாமல் போனதைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால் திருப்பராய்த்துரை தபோவனத்தில் போய்ப் படிப்பதைப் பற்றி எந்த அபிப்பிராயபேதமும் ஏற்படவில்லை. ஆனால் அங்கே சேர்ந்த முதல் வாரத்திலேயே தான் அனுபவித்துவந்த சவுகரியங்கள், தான் செய்துவந்த மூடத்தனங்கள் எல்லாம் பிரகாசமாப் புரிந்துவிட்டது என்றாலும்...

நான் பார்த்தவன் என்பதால் நிச்சயமாய்ச் சொல்லலாம்,

அப்பா, அம்மா, தங்கச்சியைப் பார்க்காமல், படு ஸ்டிரிக்ட்டான ஒரு இடத்தில் இருப்பது அவனுக்கு ஆறுமாதங்கள் வரை பெரும் பிரச்சனையாகத்தான் இருந்தது. ஒரு மாதத்திற்கு ஒரு முறை அம்மா அப்பா வரலாம் என்றாலும் அவனை பார்க்காமல் இருந்தால் தான் திருந்துவான் என்று ஹீரோவின் அப்பா அவனைப் பார்க்கவே வராமல் இருக்க. ஐந்துமணிக்கு எழுந்து குளித்துவிட்டு, பஜனைகள் முடித்துவிட்டு, வீட்டுப்பாடம் படித்து, மணிக்கு சாப்பிடப்போய், மாதத்திற்கு ஒரு முறை சாப்பாடு பரிமாறி என ஒழுக்கமே வாழ்க்கையாய் இருக்கும் ஒரு இடம் அவனுக்கு முதலில் பிரச்சனையாய் இருந்தது ஆச்சர்யமே கிடையாது. ஆனால் தன்னையெல்லாம் விடவும் மோசமானவர்களும், பணக்காரர்களும் அந்த இடத்தில் அப்படி படித்துவந்ததையும் பார்த்தவனுக்கு, கிடைத்த நல்ல சாமியார் ஆசிரியர்கள் நிறைய நல்ல விஷயங்கள் நல்ல விதமாய்ச் சொல்லித் தந்ததையும் வைத்து அவன் அடுத்த ஆறுமாதத்தில் நல்லவனாய் மாறியதைத்தான் நம்பவேமுடியவில்லை.

சொல்லப்போனால் ஹீரோவின் அப்பாவாலும் தான், எப்படியிருந்தாலும் அந்த வருஷம் +2 வில் கோட்டடிச்சிருவான் என பயந்துகொண்டிந்தவர். அவன் மீது ரேஷ்மாவின் அப்பா கம்ப்ளெய்ன்ட் செய்ததும் இதுதான் சாக்கு, ஒருவருஷம் தபோவனத்தில் போட்டால் ஒழுக்கம்னா என்னான்னாவது கற்றுக்கொண்டுவருவான் என மனதைத் தேற்றிக் கொண்டு போட்டவருக்கு. பிள்ளை பன்னிரெண்டாவதில் அந்த பள்ளியில் முதலிடமும், மாவட்ட அளவில் இரண்டாவது இடமும், அவங்கப்பா நினைக்கவே நினைக்காத மார்க்கும் வாங்கிவிட இன்னொரு பிரச்சனை தோன்றியது.

சாமியார் கால்களிலெல்லாம் விழுந்து பவ்யமாய் தன்னுடன் வீட்டிற்குக் கிளம்பிய பையனை பார்த்தால் பாதிச் சாமியார் போலத்தான் இருந்தது. நெற்றி முழுக்க வைக்கப் பட்டிருந்த திருநீரும் புருவங்களுக்கிடையில் சாந்தமாய் இடப்பட்டிருந்த சந்தன குங்குமமும். அழுக்கிலாமல் துவைக்கப்பட்டு அயர்ன் செய்யப்பட்டிருந்த காக்கி பேண்ட் வெள்ளைச் சட்டையில் அவன் முகம் தேஜஸ் கிளம்பும் ஒன்றாய் ஹீரோவின் தந்தைக்குப் பட்டது சரிதான் என்பதைப் போலிருந்தது அவனுடைய சைகைகள். வீட்டிற்கு வந்த பிறகும் ஐந்து மணிக்கு எழுவது யாரையும் தொந்தரவு செய்யாமல் குளித்துமுடித்து பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு நேரங்கழித்து வருவது. அவசியம் இருந்தால் மட்டும் பேசுவது என ஹீரோ வீட்டில் அவர்கள் எதிர்பார்த்ததற்கெல்லாம் நல்லவனாய் இருந்தது ஒரு வித பீதியையே ஏற்படுத்தியது. அதைவிட அவன் அடுத்துச் சொன்னது,

அதே சாமியார் மேனேஜ்மெண்ட் நடத்தும் கல்லூரியில் படிக்கப்போவதாய்ச் சொன்னதும் ஹீரோவினுடைய அப்பாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது வாஸ்தவம்தானே.

"ஒன்னு முழுக்க ஒழுங்கீனமாயிரு இல்லைன்னா இப்படியிரு. சாதாரணமா ஏண்டா இருக்க மாட்டேங்கிற, நீ மாறிட்ட உன்னைய அன்னைக்கு தபோவனத்துக்கு அனுப்பியிருக்க கூடாது தான். தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சுக்கோ. அதை விட்டுட்டு இனிமேலும் அங்கத்தான் படிப்பேன்னா என்ன. சரியில்லை, நீ பேசாமயிரு உனக்கு நீ வாங்கியிருக்கிற மார்க்குக்கு பீஇ கம்ப்யூட்டர் சைன்ஸ் ஸீட் நான் வாங்கித்தர்றேன்.

அதை விட்டுட்டு பிஎஸ்ஸி படிப்பேன், அதுவும் சாமியார்க் காலேஜில் தான் படிப்பேன்னு நிக்காத அவ்வளவுதான் சொல்லிட்டேன்."

நம்ம ஹீரோ அம்மா, அப்பா வெளியில் போயிருந்த ஒரு நேரத்தில் தன்னுடைய பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு நகர்ந்ததை மட்டுமல்ல, அதன் பிறகு அவன் அப்பா ஊரே தேடியதையும் பின்னர் என்னமோ நினைத்துக் கொண்டவராய் தபோவனத்திற்கு வர அங்கே இருந்துகொண்டு அவர் என்ன சொல்லியும் வரமாட்டேன் என்று திடமாய்ச் சொன்னதையும் பார்த்தவன் என்ற முறையில் அன்று அவன் மீது எனக்கு கொஞ்சம் கோபம் கூட வந்தது.

ஹீரோவின் அப்பாவிற்கு தெரிந்திருக்க வேண்டும், அப்படியே பிடிவாதத்தில் தன்னை உரித்துக்கொண்டு பிறந்தான் என்பது மனைவியையும் பிள்ளையையும் இழுத்துக் கொண்டு போனவர் சரியாய் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என அடுத்த மூன்றாண்டுகள் 18 முறை அவனை பார்க்க வந்திருப்பார். ஒவ்வொரு முறையும் அவன் அவர்களை விட்டு வெளியே போய்க் கொண்டிருப்பதாகவே உணர்ந்தார் என அவருடனே பயணித்த அந்த பஸ் பயணங்கள் உணர்ந்திருக்கிறேன். 36 மாதங்கள் மெழுகுவர்த்தியாய்க் கரைய ஹீரோ வாழ்க்கையென்ற பயணத்திற்கு பிரம்மாதமாய்த் தயாராகியிருந்தான்.

இங்கேயும் முடித்துவிட வேண்டும் எனதான் நினைக்கிறேன், மீண்டும் உண்மையை மறைப்பதில்லை என்பதால் தொடர்கிறேன்.

அவனுடைய வாத்தியார்கள் சாமியார்களாகயிருந்த போதிலும், அவனை இன்னொரு சாமியாராக ஆக்கிவிடாமல் இருந்ததற்காக ஹீரோவின் அப்பா உடைத்த தேங்காய்கள் சிதறியதை பார்த்து சிரித்த எனக்குக்கூட ஹீரோவின் மனநிலை புரியவில்லை, என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று. ஆனால் அவன் ஆசிரியர்கள் அவனை ஒரு நல்ல மனிதனாக மாற்றிவிட்டதாகவும், நல்ல மனிதர்கள் ஒரு நல்ல சமூகத்தை ஏற்படுத்தவேண்டுமே ஒழிய சமூகத்தைப் புறக்கணித்து சாமியாராவது சமுதாயத்தைப் பலவீனப்படுத்தும் என்று சொல்லி அனுப்பிவைத்த நாள் மழை பெய்யவில்லை.

அவனாய் திரும்பவும் வீட்டிற்கு வந்தவனைப் பார்த்து BHEL முழுக்கவே வியந்தது என்றால் அது மிகையல்ல, வேலை வாங்கித் தருவதாய்ச் சொன்ன தந்தையை தடுத்து நிறுத்தி தானாய் சுயமாய் வாங்கிக் கொள்ள முயற்சிக்கிறேன் முதலில் கிடைக்காவிட்டால் உங்களிடம் சொல்கிறேன் என்றவனை இன்று நீங்கள் சொன்னால் கூட நம்ப மாட்டார்கள் நான்கு வருடத்திற்கு முன்பு இவன் தான் ஒரு பெண்ணிடம் அவள் சைக்கிளை நிறுத்து தன்னுடைய காதலைச் சொன்னவன் என்றால். திரும்ப ஹீரோ ஹீரோயினைப் பார்க்கவேயில்லையா என்றால் பார்த்தார்கள் ஏறக்குறைய அதே காக்கா'பீ' ரோட்டில்.

காலாற நடந்துவரக் கிளம்பியவனின் கால்கள் தானாக காக்கா'பீ' ரோட்டில் தடம்பதிக்க, நான்காண்டு நினைவுகள் கரையும் பனிமலையால் உருகி ஓடத்தொடங்கியது. அதன் பின் நடந்ததை என்னவென்று சொல்வது, அவனருகில் சைக்கிள் வந்து 'சலீரென்று' பிரேக் போட்டு நிற்க நினைவு திரும்பியவனாய் நிமிர்ந்து பார்த்தவனுக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை தான். வேறயார் நம்ம ஹீரோயினி ரேஷ்மா தான்.

"ஹேய் நீங்க சுந்தர் தானே. என்னைய ஞாபகம் இருக்கா? இதே ரோட்டில் வச்சு என்கிட்ட I Love You சொன்னீங்களே! ஏதும் ஞாபகம் இருக்கா?"

அவள் பேச அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனி உதடுகளில் அசைவில்லை.

"அன்னைக்கு எங்கப்பாக் கிட்ட சொன்னப்ப, உங்கப்பா இவ்வளவு சீரியஸாய் எல்லாம் எடுத்துப்பார்னு நினைக்கலை. ஏதோ உங்களை திட்டுவிடுவார், நீங்க என் பின்னாடி சுத்த மாட்டீங்கன்னு தான் நினைச்சேன். பச், என்னென்னமோ நடந்திருச்சு. உங்கம்மாவையும், உங்கத் தங்கச்சியையும் பார்த்தாத்தான் பாவமாயிருக்கும். என்னாலத்தானே இவங்க பையனையும், அண்ணனையும் விட்டுட்டு இருக்காங்கன்னு.

ம்ம்ம் என்ன நினைச்சு என்ன ப்ரயோஜனம். நடந்தத மாத்த முடியுமா என்ன?

சரி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டேயிருக்கேன். நீங்க ஒன்னுமே சொல்லலை. என்ன நான் பேசுறது காதில் கேக்குதா?"

நான்காண்டுகளுக்கு முன் இந்தக் குரல் கேட்டால் பாலாறும் தேனாறும் பாய்ந்த காதுகளில் அந்தச் சமயத்தில் பெரிய வித்தியாசம் ஏற்படவில்லையென்று அவன் கண்கள் சொன்னது, கண்கள் சொல்வதை மட்டும் நம்பும் நான் முழுதாய் நம்பினேன்.

"ம்ம்ம் என்ன கேட்டீங்க..."

"என்னது கேட்டீங்களா? சரியாப் போச்சு. ஹலோ நான் உங்களை விட சின்னப் பொண்ணு. சரிதான் ரமா சொல்லிக்கிட்டிருந்தா எங்க அண்ணன் பாதி சாமியாரா ஆய்ட்டான்னு. அவ சொன்னப்ப நான் நம்பலை இப்ப நம்பித்தான் ஆகணும் போலிருக்கு. " நிறுத்தியவள்

"வாங்களேன் நடந்துக்கிட்டே பேசுவோம்..."

இப்படி மீண்டும் ஆரம்பித்த இன்னொரு பக்க காதல், கொஞ்சம் கொஞ்சமாய் சாமியாராய்ப் போய்க்கொண்டிருந்தவனை சாதாரணமானவனாய் மாற்றத் தொடங்கியது. ரேஷ்மாவின் வீட்டிலும் தங்களால் தான் ஹீரோவின் குடும்பம் ஹீரோவை பிரிந்திருந்ததாக ஒரு மனநிலை நிலவியதால், ரேஷ்மாவிற்கு பிடித்திருந்தால் சரியென்று விட்டுவிட்டார்கள்.

இது இப்படியே போய் இரண்டாவது வருடத்தில் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டவரை நான் அவர்களுடனேயே இருந்தேன் ஆனால் அவர்களுக்கு கலியாணம் ஆன பின்னால் இருவரின் வாழ்க்கையில் எட்டிப் பார்ப்பது அநாகரீகம் என்று அவர்களின் காதலுடன், காதலித்த நாட்களின் நினைவுகளுடன், காக்கா'பீ' ரோட்டுடன் மட்டும் இப்பொழுது நிற்கிறேன். இன்னொரு முறை வேறொரு ஹீரோ, ஹீரோயினியிடம்.

"ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?"

என்று சொல்லமாட்டானா என்ற ஏக்கத்துடன்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In ஆடை உதிர்ப்பவள் சிறுகதை ஸ்ட்ரிப் க்ளப்

ஆடைகளற்றவளின் அறம்




பாடலுடன் தனிநபரை அடையாளப்படுத்தும், அவரை நினைக்கும் பொழுதெல்லாம் மனதில் அந்தப் பாடல் ஒலிரும் நிகழ்வு எனக்கு எப்பொழுதும் அமைவதில்லை. மியாவின் ‘லிவ் ஃபாஸ்ட் டைய் யங்’ பாடல், சௌத் கரோலினாவின் கிரீன்வில் நகரத்தில் அத்தனை புகழ்பெறாத லஸ்ட் ஸ்ட்ரிப் க்ளப்பில் ஆடை உதிர்க்கும் ஹாலன்டிற்கானது. இந்த வகைப் பெண்களுக்கு இப்படி ஒரு பாடல் இருக்குமென்றாலும் ஹாலன்ட்-டின் முதல் பாடல் எப்பொழுதும் லிவ் ஃபாஸ்ட் டைய் யங் தான். ஒரு முறை டிஜே ஹாலன்ட் மீதான கோபத்தினால் வேறொரு பாடலை போட்டுவிட, இவள் உதிர்த்து முடித்துவிட்டு கோபத்தில் கண் கலங்கியது நினைவில் இருக்கிறது. இளமை கொஞ்சிய 60 கிலோ மெல்லிடை தேகத்திலிருந்து கனக்கும் 90 கிலோவிற்கு அவள் ஊதிய பொழுது அவள் தனங்களின் கனமும் கூடியிருந்தது தான் இப்பொழுது எழுதும் பொழுது சட்டென்று நினைவில் வருகிறது. எடைபார்க்கும் கருவிகளாலில்லை அவளுடனான நடனப் பொழுதுகளில் அவள் உட்கார்ந்த கனம் விழுந்த தொடைகளின் வலியால் தெரியும். புகழ்பெறாத என்றால் புகழ்பெற்றதும் இருக்கவேண்டுமே, அப்படி ஒன்று கிரீன்வில்லில் இருந்தது ப்ளாட்டினம் ப்ளஸ். ஐ-85 சவுத்தில் கிரீன்வில் சிட்டிக்குப் போகும் வழியில் இந்த பிரம்மாண்டமான ஸ்ட்ரிப் க்ளப்பில் கவனம் சிதறாமல் வண்டி ஓட்டிவிட முடியாது. அட்லாண்டா - ஜார்ஜியா, ராலே - நார்த் கரோலினா போன்ற நெருக்கமான நகரத்து மக்கள் மட்டுமல்ல ஒரு முறை மயாமி - ப்ளோரிடாவிலும், லாஸ் வேகஸ் நெவேடாவிலும், நியூயார்க் சிட்டி - நியூயார்க்கிலும் கூட நான் கிரீன்வில் நகரத்தவன் என்று சொன்னதும் மக்கள் குறிப்பிட்டு ப்ளாட்டினம் ப்ளஸ்ஸைக் கேட்ட அனுபவம் உண்டு. அமெரிக்கா போன்ற மாபெரும் நாட்டில் இப்படிப் பொதுவாய் நிகழ்வதில்லை, இன்று தென் அமெரிக்க நாடுகள் ஐரொப்பிய நாடுகள் என்று சுற்றித்திரிந்துவிட்டு இதை எழுத உட்காரும் பொழுது இன்னமும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது, கிரீன்வில்லின் ப்ளாட்டினம் ப்ளஸ் அடைந்திருந்த பிரபள்யம். 

அமெரிக்காவிலே கிரீன்வில் - சௌத் கரோலினா அத்தனைப் பிரபலமான பெரிய நகரமல்ல, இன்னும் சொல்லப்போனால் பைபிள் பெல்ட் என்று சொல்லப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆல்கஹால் விநியோகம் மறுக்கப்படும் பிற்போக்குத்தனங்கள் நிறைந்த பழமைவாத கன்சர்வேட்டிவ் களம் தான். உள்நாட்டுப் போர் என்று வட அமெரிக்காவின்  வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் சண்டை போட்டார்கள் என்று நீங்கள் பாடங்களில் படித்திருக்கக் கூடும் ஆனால் இந்த தென் அமெரிக்க மாநிலங்களில் அதிக சண்டை அல்லது மொத்தமாகவே சண்டை நடந்தது சௌத் கரோலினாவில் தான். ஏன் உள்நாட்டுப் போர் என்று கேட்கலாம் அடிமைகளாக கறுப்பினத்தவரை தேயிலை தோட்டங்களில் வைத்துக் கொள்வதை நிறுத்தச் சொன்னதை எதிர்த்து தென் அமெரிக்க மாநிலங்கள் போட்ட சண்டை தான் உள்நாட்டுப் போர். இரண்டு லட்சம் பேர் இறந்த போரில் தென் அமெரிக்க மாநிலங்கள் தோற்றுப்போனது என்றாலும், இன்றளவும் நொடிப்பொழுதில் பெரும்பிரச்சனையை கிளப்பிவிடும் தலைப்பு இந்த விஷயம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மது விற்பனை கிடையாது என்று கேட்கலாம், காரணம் ஞாயிற்றுக்கிழமை சர்ச் போகவேண்டும் என்பதற்காக. வெளித்தோற்றத்தில் அத்தனை இறுக்கம் கொண்ட நிலம். 

இந்த ஆடை உதிர்க்கும் ஆட்டையில் வேடிக்கை என்னவென்றால் - வேடிக்கை மட்டுமில்லை சிறிது விநோதமும், ஆனால் உள்நோக்கிப் பார்த்தால் முக்கியமான விஷயமொன்றும் உண்டு - அது இந்த வகைப் பெண்கள் சொந்த ஊரில் மட்டுமல்ல சொந்த ஊருக்கும் அருகில் இருக்கும் ஊர்களில் கூட வேலை செய்வதில்லை. அதனால் கிரீன்வில் அவர்களுக்கு பாதுகாப்பானது, தூரத்து ஊர்களில் இருந்து பெண்கள் கிரீன்வில்லில் கவர்ச்சி நடனம் ஆடிவந்தனர். பதினெட்டு வயதில் பொதுவாய் வீட்டை விட்டு வெளியேறி விடும் அமெரிக்க பதின்ம வயது பெண்களை வாழவைப்பது சர்வீஸ் இன்டஸ்ரி என்று சொல்லப்படும் ரெஸ்டாரன்ட் மற்றும் ஹோட்டல் சம்மந்தப்பட்ட தொழில் தான். பின்னர் வால்மார்ட் கே-மார்ட் போன்ற டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், இதில் கிடைக்கும் நாள் வருமானம் போதாத பெண்கள் பெரும்பாலும் இப்படி ஆடை அவிழ்ப்பதில் இறங்கிவிடுவார்கள். உங்களுடைய அறம் எத்தனை தூரம் வளையும் என்பதில் இருக்கும் உளவியல் சார்ந்த கூறுகள் இவர்கள் அங்கே நின்றுவிடுவதிலும் அதிலிருந்து நகர்ந்து இன்னமும் சுலபமாய் பணம் பார்க்கும் வேலைகளில் இறங்கிவிடுவதிலும் சென்று முடியும். வெகுசிலரே ஆடை அவிழ்க்கும் துறையில் இருக்கும் சாதகங்களுக்காக வந்து சேர்கிறார்கள், அப்படிச் சிலரை பின்னைய காலங்களில் நான் பார்த்திருந்தேன். அமெரிக்காவின் மிகப்பிரபலமான கல்லூரிகளில் படித்து நல்லவேளையில் சேர்ந்து பின்னர் அதே அளவிற்கான பணத்தை மிகக் குறைந்த வேலை நாட்களில் குறைந்த வேலை நேரத்தில் சம்பாதிக்க முடிந்தது, என்னுடைய மிச்ச நேரத்தை இன்னும் தரமாக செலவழித்துக் கொள்ள முடிகிறது என்று சொன்ன பெண்ணை எனக்குத் தெரியும். 9 - 5 வரை வாரத்திற்கு ஐந்து நாள் வேலை செய்து வரும் பணத்தை மூன்று நாள் ஆறு மணிநேர ஆடை அவிழ்ப்பில் சம்பாதித்து விடுவதாகச் சொன்னவள் படித்தது நான் நினைத்துப் பார்த்தாலும் படிக்க முடியாத கல்லூரியில். சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட்ட ஆடை அவிழ்க்கும் பெண்களின் கருத்தமைவைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை படிக்குமாறு வலியுறுத்தி, முப்பது டாலர்களில் எப்படி வீரியமாக உச்சமடைவது என்று ஆராய்ந்து கொண்டிருந்த என் தலைக்கு மேல் செல்லும் பந்துகளை அவள் வீசினாள். ‘Women who use their bodies for profit contributing to their own opperssion.’ என்கிற கருத்துவாக்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்று அவள் சொல்லி நான் ஒரு ‘Feminist Stripper’ என்றாள். பொதுவாய் ஆடை அவிழ்க்கும் பெண்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை, மிகவும் சராசரியான குடும்பத்தில் பிறந்து, வற்புறுத்தி படிக்க வைக்க யாருமில்லாமல் பள்ளி இறுதி கூட முடிக்காமல் இதைச் செய்கிறவர்களே அதிகம். எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் பயிற்சியும் பெறாமல் ஆடை அவிழ்ப்பதை தொடங்கிவிட முடியும் என்பதால் பொதுவாக இந்த உலகத்தில் வேலை செய்ய இரண்டு மூன்று முக்கியவிஷயங்களை கற்றுக் கொண்டாலே போதும் என்று ஒரு முறை லாஸ்வேகஸில் என்னுடம் பேசிக் கொண்டிருந்த பெண் சொல்லித் தெரியும். கிடைக்கும் காசை பத்திரப்படுத்திக் கொள்ளவது, கஸ்டமருடன் க்ளப்பை விட்டு வெளியேறாமல் இருப்பது டேபுள் டேன்ஸுக்கு யார் அழைத்தாலும் மறுக்காமல் செல்வது. அவ்வளவுதான். 

ஹாலன்ட் ப்ளாட்டினம் ப்ளஸில் இல்லாமல் லஸ்டில் ஆடை அவிழ்க்க பெரிய காரணம் ஒன்றும் இல்லை அவள் தோழி ஒருத்தி இங்கே அவளுக்கு முன்பே அவிழ்ந்து போய் நிர்வாணத்தில் இருந்தாள் அவ்வளவுதான். பொறாமைகளுடனான தொழில் தான் என்றாலும் தோழிகளுடன் இருப்பது பாதுகாப்பு, குறைந்த பட்சம் ஆரம்ப காலங்களில். ப்ளாட்டினம் ப்ளஸின் நடன அறை பிரம்மாண்டமானது, லஸ்டின் பரப்பளவை விடவும் ஐந்து ஆறு மடங்கு பெரிதானது. இளம் பெண்கள், நிறைய பெண்கள் என்று பொதுவாய் நீங்கள் ஸ்ட்ரிப் க்ளப் செல்லும் காரணங்களுக்கு எல்லா விதத்திலும் உகந்தது, ஆனால் இந்த இரண்டு க்ளப்பிற்கும் இடையில் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்தது. அது ஸ்ட்ரிப் க்ளப்கள் பொதுவாக எப்படி செயல்படும் என்பதில் பொதிந்திருந்தது. நுழைவுக் கட்டணம் ஒன்றை - கிரின்வில் போன்ற நகரங்களில் 10 அல்லது 20 டாலர்கள் - செலுத்திவிட்டு க்ளப்புக்குள் வந்தால், குறைவாக ஒளியூட்டப்பட்ட ப்ரம்மாண்ட அறையில் அங்கங்கே கொஞ்சம் இடைவெளிவிட்டு, இரண்டு பேர் உட்கார்வதற்கான வசதியுடன் இருக்கை மற்றும் இரண்டு மூன்று பியர் பொத்தல்கள் மட்டுமே வைக்க முடியும் வட்ட வடிவ குட்டி மேஜை, இதில் எந்த காலி இடத்திலும் அமரலாம். ப்ளாட்டினம் ப்ளஸில் இது போல் 100 பேர் உட்கார்வதற்கான வசதி இருக்குமென்றால், லஸ்டில் 30 நபர்களுக்கு மட்டுமே இருக்கும். பொதுவாக இப்படி நீங்கள் உட்கார்ந்ததும் காக்டெய்ல் வெய்ட்ரஸ் நீங்கள் ஒரு தீர்த்தமாவது வாங்குவீர்கள் என்று எதிர்ப்பார்ப்பார்கள். பெப்ஸியோ பியரோ இல்லை ஆன் த ராக்ஸ் லிக்கரோ பிரச்சனையில்லை. ஏனென்றால் அதற்கான பணம் க்ளப்பிற்கு, ஆனால் நீங்கள் கொடுக்கப்போகும் டிப்ஸ் ஒரு டாலரோ இல்லை இரண்டு டாலரோ அவர்களுக்கு. அதனால் ஏதாவது ஒன்று வாங்கியே ஆகவேண்டும். இந்தப் பணிப்பெண்களுக்கான சம்பளம் என்பது ஒரு மணிநேரத்துக்கு 10$ இருந்தாளே பெரிய விஷயம். பெரும்பாலான சமயங்களில் இந்தப் பெண்கள் ஆடை உதிர்க்கும் பெண்களை விடவும் நலினமாக அழகாக கண்கவரும் வகையில் இருப்பார்கள். இவர்கள் ஆடை அவிழ்ப்பைச் செய்யாமல் வெறும் பணிப்பெண்களாக இருப்பதற்கு நிறைய காரணம் இருக்க முடியும், அதில் முக்கியமானது கொள்கை அளவினானது. ஆடை அவிழ்ப்பு மேடையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் இந்த இருக்கைகள் அவர்களின் கண்காணிப்பில் இருக்கும்.

ப்ளாட்டினம் ப்ளஸ்ஸில் இந்த ஆடை அவிழ்ப்பு மேடை பிரம்மாண்டமானது, ஒரே சமயத்தில் இருபது பேர் நடனம் ஆடக்கூடிய அளவு, ஆனால் மேடையின் நடுவில் இருக்கும் பளபளப்பான கம்பத்தில் ஒருவர் அல்லது சில குறிப்பிட்ட தருணங்களில் இருவர் மட்டுமே நடனம் செய்வர். ஸ்சேட்டிலைட் எனப்படும் துணை மேடைகளும் - அளவில் சிறியவை - பொதுவாய் இதே போன்று கம்பங்களுடன் பிரம்மாண்ட மேடையில் இடது வலது ஓரத்தில் இருக்கும். இந்தப் பெண்கள் முதலில் பிரம்மாண்ட மேடையில் இரண்டு பாட்டிற்கு உதிர்த்துவிட்டு பின்னர் தொடர்ச்சியாய் ஸ்சேட்டிலைட்களில் உதிர்க்கவேண்டும். எந்த வரிசையில் நடனம் ஆடவேண்டுமென்பது  அன்று அவர்கள் க்ளப்பிற்கு வந்த அடிப்படையில் பொதுவாக இருக்கும். அவர்களுக்கான அழைப்பு பாடலின் முடிவில் பொதுவாய் சொல்லப்படும். அன்றைய அவிழ்ப்பாளர்களின் கணக்குப் படி மணிக்கொரு முறையோ மணிக்கு இரண்டு முறையோ அவர்களுக்கான அழைப்பு வரும். ப்ளாட்டினம் ப்ளஸ் போன்ற பெரிய க்ளப்களில் வெள்ளி சனி ஞாயிறுகளில் இரண்டு மணிக்கொரு முறை அழைப்பு வருவதே பெரிய விஷயம். 


பெரும்பாலான க்ளப்களில் ஆடை அவிழ்த்து நடனம் ஆடுவதற்கு பெண்கள் க்ளப்பிற்கு பணம் கொடுக்க வேண்டும், அதிலிருந்து தொடங்கும் இரவில் அவர்களுக்கு மூன்று விதத்தில் பணம் கிடைக்கும். இப்படி மேடையில் ஆடை அவிழ்ப்பு செய்யும் பொழுது மேடை அருகில் அன்பர்கள் இறைக்கும் பணம். பின்னர் இந்த ஆடை உதிர்ப்பை ரசித்த சீமான்களை நடன மங்கையர்களின் இன்னபிற விஷேஷங்களில் மயக்கி உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே அவர்கள் மீது ஏறி ஆடி உற்சாகமூட்டும் டேபுள் டான்ஸ், அல்லது தனிப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று - லேப் டேன்ஸ் - இடை நடனம் - என்கிற பெயரில் வசூலிக்கும் பணம். இடை நடனம் என்று சொன்னதும் ஒருவேளை பெண்கள் இடுப்பை வளைத்து ஆட்டி நடனம் செய்வதைத் போன்ற ஒன்றைத்தான் சொல்வதாக நீங்கள் ஊகிக்க முடியும், காரணப் பெயரும் அப்படித்தான் வந்திருக்கும் என்றாலும். பொதுவாய் அவர்கள் ரசிகக் கண்மணிகளின் இடுப்பில் ஆடுவது தான் நடக்கும். மாநிலங்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு க்ளப்புக்களின் ஆடை அவிழ்ப்பு அளவும் இருக்கும். சில மாநிலங்களில் நீங்கள் மேலாடை இல்லாமல் இடை நடனம் செய்யக்கூடாது. சில மாநிலங்களில் மேலாடை இல்லாமல் போகலாம் ஆனால் கீழாடை அவசியம். சில மாநிலங்களில் இரண்டுமே அவசியம் இல்லை. அத்தனை நேரடியான சட்டம் கூட இல்லை. கொஞ்சம் விலக்கு உண்டு. சில மாநிலங்களில் கீழாடை இல்லாமல் நடனம் ஆட வேண்டும் என்றால் க்ளப்பில் மது விற்பனை செய்யக்கூடாது. முழுநிர்வாணம் என்பது கேட்க கிளர்ச்சியாய் இருந்தாலும் ஆடை உதிர்க்கும் கலையில் நிர்வாணம் கலைப்பொருளை இழந்துவிடும். இதனால் பொதுவாய் பெயர்பெற்ற க்ளப்கள் மேலாடை இல்லாத நடனத்தை ஊக்குவிப்பார்கள். கீழாடை வேண்டுமென்றால் பாவாடையோ ஜீன்ஸோ இல்லை ஒரு குட்டி ஜட்டி அவ்வளவே. குறியை மட்டும் மறைக்கும் அளவுக்கு. இந்த இடுப்பில் சிறிய ஆடை மட்டும் அணிந்த பெண்கள் உங்கள் மேல் உட்கார்ந்து உரசி மகிழ்விக்கும் நடனத்தை தான் இடை நடனம் என்ற பெயரிலில் அழைப்பது. பொதுவாய் பாடல் கணக்கில் பணம் வசூலிக்கப்படும், குறைந்த பட்சம் ஒரு பாடல் அதிக பட்சம் பணம் இருக்கும் வரை. இந்த ஆட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதற்கு ப்ளாட்டினம் ப்ளஸ் போன்ற க்ளப்புகளில் பொதுவாய் உரையாடல் என்ற ஒன்று இருக்காது, நேரடியாய் உங்களிடம் வந்து ‘லெட்ஸ் கோ’ வரும். ஆனால் லஸ்ட் க்ளப்பில் பெண்கள் உங்களிடம் உட்கார்ந்து கதை பேசி கதை சொல்லி டான்ஸுக்கு அழைப்பதில் ஒரு உரையாடல் உருவாகும். நீங்கள் முதல் முறை இது போன்ற க்ளப்புக்கு போகும் பொழுது உங்களுக்கு ‘லெட்ஸ் கோ’ அணுகுமுறை பிடிக்கலாம். ஆனால் தொடர்ச்சியாய் இந்த வேலையைச் செய்யும் பொழுது உரையாடல் முக்கியத்துவம் பெரும். இதன் காரணமாய் லஸ்ட் போன்ற க்ளப்புகளில் தொடர்ச்சியாய் இதே வேலையாய் இருக்கும் ஆட்களைப் பார்க்க முடியும். பொதுவாய் இவர்களுக்கு பிடித்ததாய் உதிர்ப்பவர்கள் என்று ஒரு தொடர்பு வளையம் இருக்கும்.

அமெரிக்காவிற்கு வந்த ஆறாவது மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அமச்சூர் நைட்டில் தான் நான் முதன் முதலாய் ஹாலன்டை சந்தித்தேன். இந்த வகை அமச்சூர் நைட்கள் பொதுவாய் ஏமாற்றமாய் முடியுமென்றாலும் ஹாலன்ட் நிகழ்ந்தது ஒரு ஆச்சர்யம் தான். அமெரிக்க வந்த இரண்டாவது வாரமே, அமெரிக்க இன்டக்‌ஷன் என்கிற பெயரில் நண்பர்கள் ஸ்ட்ரிப் க்ளப்பிற்கு அழைத்து வந்திருந்தார்கள். தமிழகத்தின் நடுத்தர வர்க்க குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி வாலிபனின் அத்தனை கூச்சங்களும் எனக்கிருந்தது. நடுநிலை வரை இருபாலினரும் படிக்கும் பள்ளி தான் என்றாலும் அந்தப் பெண்களுடன் பேசிய வழக்கமில்லை, உயர்நிலை பள்ளி ஆண்களுக்கானது. பின்னர் கல்லூரியில் ஆங்கில் வழியில் இருபாலினருக்குமான பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இருந்த மனதிடமானது இல்லாததால் மூன்று வருட கல்லூரி வாழ்க்கையிலும் பெண்கள் இல்லாத வறட்சி. தட்டுத்தடுமாறி கல்லூரி முடித்து தாழ்வு மனப்பான்மை பொங்கி வழிய சேர்ந்த வட இந்திய அலுவலகத்திலும் பெண்களுடன் பழகுவதற்கான பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. மனதை திடப்படுத்திக் கொண்டு இவர்களுடன் பேச தயாரான பொழுது அறிமுகமான ‘செக்ஸுவல் ஹாரஸ்மென்ட்’ வார்த்தையும் அதைப் பற்றிய உண்மை பொய்யான சில கதைகளும், ஓணானை வேலியுடனே போகவைத்தது. எந்தக் காரணத்துக்காகவும் வேலையை இழக்க முடியாதவனாய் சமூகம் நிர்பந்தப்படுத்தியிருந்தது. பெண்களும் செக்‌ஷுவல் ப்ளஷரும் அதில் ஒரு முக்கியப்பிரச்சனையே இல்லை. அமெரிக்க L1 விசா பாஸ்போர்ட்டில் குத்தப்பட்டு நார்த் கரோலினாவில் இறங்கிய முதல் வாரமே இந்த இன்டக்‌ஷன் செரிமனி தொடங்கியது. அதன் கடைசி பகுதி தான் ஸ்ட்ரிப் க்ளப். புதிதாய் வருபவர்களை அழைத்துச் செல்வதாய் ஒரு சாக்கு சொல்லி பழையவர்களும் செல்வது. இரண்டு வாரமும் இதற்கான தகவல்கள் கொஞ்சம் கொஞ்சம் சொல்லப்பட்டு வந்தது என்றாலும் முதல் முறை சென்று அமர்ந்ததும் அதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்துவந்த அழகிகள் பக்கத்து இருக்கையில் அல்ல, தொடையில் உட்கார்ந்த பொழுது வியர்த்தது இன்னமும் பிசுபிசுப்பாய் நினைவில் இருக்கிறது. கொஞ்சம் கஷ்டப்பட்டு யோசித்தால் முதல் முறை என் மடியில் உட்கார்ந்த பெண் பெயரைக் கூட சொல்லிவிட முடியும், அவள் பெயர் ராக்ஸி ஆறடி உயரம் வெண்சங்கைப் போன்ற நிறம் மயில்கழுத்தின்  நீலம் தழுவிய கண்கள் பொன்னிற தோள் வரை நீண்ட தலைமுடி. முதல் முறை நண்பர்களுடன் சென்ற பொழுது உட்கார்ந்த அவளிடமே தொடர்ச்சியாய் அந்த ஸ்ட்ரிப் க்ளப் சென்ற பொழுதெல்லாம் இன்புற்றிருக்கிறேன், கற்புக்கரசனாய் அந்தக் க்ளப்பில் அவளுக்காய் காத்திருப்பவனாய் நீண்டிருக்கிறது பொழுதுகள், நிச்சயம் அவளுடன் மட்டுமே போவேன் என்று தெரிந்தபின் பார்த்தவுடன் வந்து முத்தமொன்றை கன்னத்தில் கொடுத்துவிட்டு பின் மற்றவர்கள் கூடச் சென்றுவிட்டு யாரும் இல்லாமல் போகும் வேளையில் என்னிடம் வருவாள். இரண்டு டான்ஸ் - டூ ஃபார் ஒன் - முறையில், உசுப்பேற்றி அந்த பத்து நிமிடங்களுக்குள் பேன்ட்டிற்குள் உச்சமடையாத பொழுதில் மூன்றாவது பாடல். அப்பொழுது தான் அமெரிக்கா வந்திருந்த காரணத்தால் மனதிற்குள் ஓடும் கன்வர்ஷன் ரேட் காரணமாய் இதுவே அதிகம் என்கிற மனநிலை தவிர்க்கமுடியாததாயும் வீட்டிற்குப் போனால் ஏதோவொரு போர்ன் வெப்சைட் பத்துநிமிடம் அமைதியாகிவிடலாம் என்று மூளை சொல்லும் கணக்குகளுடன் கடந்தது நாட்கள். 


அமெரிக்க போலீஸ் மீதான பயம் காரணமாய் இவ்விடத்தில் எப்பொழுதும் கனவானாய் மட்டும் திகழ்ந்திருந்த என்னை அங்கிருந்து ஸ்ட்ரிப் க்ளப்பின் இருண்மையை நோக்கி நகர்த்தியது சிதம்பரம். ஒருமுறை க்ளயண்டிற்காக வேலை செய்த, எப்பொழுதும் எதைப் பற்றியாவது புலம்பிக் கொண்டேயிருக்கும், முன்தலையில் சற்றும் முடியேயில்லாத பாதி வழுக்கை சிதம்பரத்திடம் டென்னிஸ் ஆடிக்களைத்த பொழுதில் என்னுடைய ஹாபி ஸ்ட்ரிப் க்ளப் செல்வது என்று  வீண் பெருமைக்காக உளறிவைத்த கணத்தில் நான் முதன்முதலாய் அந்த க்ளப்பை வேறுவிதத்தில் பார்க்கத் தொடங்கினேன். ஆடிய இரண்டு செட்களையும் நான் ஜெயித்திருக்க வேண்டும் என்று இப்பொழுது அந்த நாளைப் பற்றி யோசித்துப் பார்த்தால் தோன்றுகிறது, வெற்றி தரும் கர்வத்தில் தான், அவருக்கு என்னுடைய ரகசியத்தை சொல்லியிருக்க வேண்டும்.  நானும் வருவேன் என்று அடம்பிடித்து என்னுடன் வந்த அந்த 43 வயது இளைஞர் அடித்த லூட்டி ஆச்சர்யமானது. வாரம்தோறும் திங்கள் முதல் வியாழன் வரை ப்ராஜக்டில் வேலை செய்வதற்காக வேறொரு நகரத்திலிருந்து வரும் அவர் அமெரிக்க பிரஜை என்பது வேறு, பறந்து வர விமானம், தங்க ஹோட்டல், வந்து போக கார், சாப்பிட பர் டைய்ம் கிடைக்கும் மனிதருக்கு கல்யாணம் ஆகி 14 - 15 வயதில் பையனொருவன் உண்டு. ப்ராஜக்டில் இப்படி சிலரை க்ளெயன்டிடம் காசு அடிப்பதற்காக வைத்திருப்பார்கள். அதில் ஒரு முக்கியமான வெண்ணை வெட்டி இந்த சிதம்பரம். 

பொதுவாய் ஸ்ட்ரிப் க்ளப்பில் ஆடை அவிழ்ப்பவர்களிடம்  - ஹோட்டலுக்கு - வர்றியா கேள்வி பெரும்பாலும் கேட்கப்படுவது உண்டு தான், ஆனால் நான் சிதம்பரத்தை அழைத்துக் கொண்டு ஸ்ட்ரிப் க்ளப் வந்த பொழுது அது அத்தனை எளிதாய் அவர்களிடம் கேட்க முடியும் என்று தெரியாது நான் கேட்டதுமில்லை.  சிதம்பரம் ஆடை அவிழ்ப்பவர்களிடம் மட்டுமல்ல மதுபானம் கொண்டுவந்து கொடுக்கும் பெண்களிடம் கேட்க ஆரம்பித்தார். அதுவும் உரையாடல் வழி நீண்டு அல்ல, பியரை வைத்துவிட்டு காசு கேட்கும் பொழுது உனக்கு எவ்வளவு என்கிற வகையில். பின்னர் ஸ்ட்ரிப் க்ளபுக்கு எங்களைப் போல் டான்ஸ் பார்க்க வந்த வெள்ளைக்கார பெண்களிடம் தொடங்கினார், நான் அடிவிழும் முன் உங்களுக்கு ஓவராய்டுச்சு என்று திரும்ப அழைத்து வந்திருந்தேன. அவருக்கு அங்கேயிருந்து பெண்களை அழைத்துச் செல்லும் விருப்பம் இல்லை. உலக மகா கஞ்சனான அவருக்கு உள்நுழைவதற்கான கட்டணமான என்ட்ரி பீஸ் கூட நான் தான் கொடுத்திருந்தேன். மனித மனங்கள் எத்தனை விகாரமானது என்பதற்கு அது ஒரு உதாரணம், ஆடை அவிழ்க்கும் பெண்கள் தவிர்த்து மற்ற பெண்கள் வரமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரிந்து தான் இருந்தது, சில ஆடை அவிழ்க்கும் பெண்களுமே கூட வரமாட்டார்கள், ஆனால் அந்தக் கேள்விக்காக அவருடன் சண்டைக்கு வரமாட்டார்கள் என்பதுவும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர்களைத் தாழ்த்தி அதில் கிளர்ச்சியடையும் ஒரு மகத்தான சல்லித்தனம், இப்படியான இழிசெயல்களை பெரும்பாலான இந்தியர்கள் தொடர்ச்சியாக செய்வதை கவனித்தபடியே இருந்தேன். இதன் காரணமாய் சில வாரங்கள் ஸ்ட்ரிப் க்ளப் போகாமல் தவிர்த்தேன், சிதம்பரத்துடன் சேர்ந்து பதிந்து போயிருந்த என் பிம்பம என் முகம் அவர்களுக்கு மறக்கவேண்டும் என்பதற்காய். ஆனால் காலம் கலைத்துப் போட்டு விளையாடும் விளையாட்டில் ஒன்றாய் நான் முதலில் சென்றிருந்த ப்ராஜக்டில் இருந்து விலகி மற்றொரு ஸ்டேட்டுக்கு மற்றொரு ப்ராஜக்டுக்கு ஏறக்குறைய சிதம்பரம் போல் ப்ளைட், ஹோட்டல், காரி, பர் டைய்ம் என்று தான் முதலில் சௌத் கரோலினாவிற்கு வந்திருந்தேன். 

அங்கே தான் அமைச்சூர் நைட்டில் ஹாலன்டை சந்தித்தேன். அந்தக் க்ளப்பில் அவளுக்கும் எனக்கும் ஒரே நாள் முதல் நாள். என் கற்பை அப்பொழுது ஹாலன்ட் கணக்கிற்கு மாற்றியிருந்தேன். ராக்ஸியைப் போலில்லை ஹாலன்ட் என்று சொல்லத் தொடங்குவதில் பல சிக்கல் இருந்தது, அதே ஆறடி வெள்ளை நிறம் தோள் வரை நீளும் பொன்னிற கூந்தல் மட்டுமில்லாமல் மிளிரும் நீல வண்ணம் கண்கள் என்று கைதேர்ந்த தொடர் கொலைகாரன் போல் அவளுக்கான என் தேர்ச்சியில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஆனால் முதல் முறை லஸ்ட் கிளப்பில் ஹாலன்ட் நிகழ்ந்த்தது ஆச்சர்யம், அவள் அன்று வராமல் போயிருந்தாள், ஆயிரம் பொய் சொல்லி எப்பொழுதும் மறுக்கும் எத்தனையோ பெண்களில் இன்னொருத்தியாய் அவளும் உதிர்ந்து போயிருப்பாள். அந்த க்ளப்பிற்கு அவள் வந்தது முதல் முறையாய் இருந்தாலும் ஆடை உதிர்ப்பதில் அவளுக்கு அனுபவம் இருந்தது, ஆடை அவிழ்க்க பாடலுடன் ஒத்திசைந்து ஆட, அங்கிருந்த கம்பத்தில் மேலும் கீழுமாய் நாகமாய் அநாயாசமாய் நகர்ந்து மயக்கிவைக்கவும். ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை மட்டும் வரும் ஸ்பெஷல் பொழுதில் பெண்கள் வரிசையாய் மேடையேறி இறங்கி அதற்கு முன்பே பேசி வைத்திருந்த அன்பர்களை அழைத்துக் கொண்டு நகர்ந்து போக, எப்பொழுதையும் போல் நான் இன்னமும் கண்டுபிடிக்காத என்னவளுக்காகக் காத்திருந்த பொழுதுதான் அவள் மேடையில் நிகழ்ந்தாள். மியாவின் பாடல் ஏறக்குறைய என்னையும் ஹாலன்டையும் டிஜேவையும் தவிர்த்து இன்னும் ஒரேவொருவர் மட்டும் தான். ஏறக்குறைய எங்கள் இருவருக்கும் மட்டுமான பிரத்யேக நடனம், அந்த மற்றவர் அங்கே ஆடை அவிழ்க்கும் இன்னொருத்தியின் உரிமைக்கானவர், இவள் நடனத்தில் கவனம் செலுத்தவில்லை. நாகரீகம் கருதி மியாவின் பாடலின் இடையிலேயே சென்று ஐந்து டாலர்களை தூவிவிட்டு நின்றதை கவனித்தவளாய் வந்து நன்றிக்காய் கன்னம் உரசியவளிடம் ‘See you around.’ சொல்லிவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தேன். எப்பொழுதைக்குமான ஒன்றுதான், அதில் என்னிடம் வந்து பேசு என்றோ, லேப்டான்ஸ் உன்னுடன் செல்லத் தயார் என்றோ எந்த மறைமுக செய்தியும் கிடையாது. சமூகநீதி. அசாதாரணமான பொழுதில் தனித்துவிடப்பட்ட நானும், எனக்காக மட்டும் ஆடிய அவளுக்கு பணம் கொடுப்பது, அந்தச் சமூகம் கட்டமைத்திருந்த ஒரு நியதி. எல்லோரும் செய்யவேண்டும் என்பதில்லை, அந்த மற்ற நபர் இவற்றை கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் நான் அப்பொழுதுவரை இழந்திராத கண்ணியமான ஆண்களுக்கான கடமை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த ஒன்றுதான் அப்படிச் செய்யவைத்தது. நிறைந்த சபைக்கு அவள் ஆடும் நடனத்தின் எதிலும் ஒரு சிறு குறையையும் எனக்காக மட்டும் அவள் ஆடிய பொழுது செய்யவில்லை. அவளுக்கான ஒரு நாளில் அவளுடைய அந்த ஆட்டம் சில நூறு டாலர்களை அவளுக்கு அள்ளித் தந்திருக்கும், தந்ததை நான் பார்த்தும் இருக்கிறேன். இரண்டு பாடல்கள் நிறைவடைந்தது. மறைவான லேப்டான்ஸிற்கான கேபின்களில் இருந்து ஜோடி ஜோடியாய் மக்கள் வெளிப்பட்ட தருணம், ஹாலன்ட் மேடையில் இருந்து நான் தூவிய பணத்தை பொறுக்கிக் கொண்டு வந்து என்னிடம் நெருங்கி உட்கார்ந்து, ‘If you want special, we could do it now.’ என்றாள். அப்படியான ஒன்று க்ளப்களில் வழமை தான், எப்பொழுதும் ஏதாவது ஒரு பெண் மைய கம்பத்தில் ஆடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதி கொண்ட க்ளப்கள், இது போன்ற ஸ்பெஷல் நேரங்களில் ஆடிக் கொண்டிருக்கும் நங்கைகளுக்கு கொடுத்த விதிவிலக்கு தான் அது. பொதுவாக ஒரு நான்கிலிருந்து ஐந்து நிமிடம் பிடிக்கும் ஒரு பாடலுக்கு 30 டாலர் என்று வைத்துக் கொண்டால், அந்தச் சிறப்புக் காலத்தில், இரண்டு பாடல்களுக்கு 20 டாலர் என்று கணக்கு, இன்னொரு பத்து டாலர் நடன மாதருக்கு டிப்ஸ். அதற்கு முன்பு அரை மணிநேரமாவது என்னுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள் மட்டுமே கேபினுக்கு கூட்டிச் செல்லும் என் வழக்கத்தை அவளின் ‘Blue eyed blonde’ற்காக தவிர்த்திருப்பேன் தான் என்றாலும், அப்பொழுது அவள் முகத்தில் தெரிந்த ஏக்கப்பார்வை யோசிக்கவே விடாமல் செய்திருந்தது. மேலாடை கழற்றி என் இடுப்பில் ஏறி அவள் செய்து காட்டிய மந்திர தந்திரங்களால்  நிலைதடுமாறி உச்சமடைய எனக்கு ஒரு பாடல் கூட பிடித்திருக்கவில்லை. ஆச்சர்யமாய் அவளுக்கும் அது புரிந்திருந்தது, வேறொன்றும் செய்யாமல் அடுத்த முழு பாடலுக்கும் வெறுமனே கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். வெறும் உடம்பில் சில்க் ஷர்ட் மட்டும் அணிந்திருந்த என் மார்பில் அவள் இளமுலைக்காம்புகள் குத்தியது. என் தோள்களில் முகம் புதைத்திருந்தாள், அவள் முதுகை வருடிக் கொண்டிருந்தேன். இரண்டாம் பாடலும் முடிந்ததும் எடுத்துக் கொடுத்த முப்பது டாலருக்கு நறுவிசாய் கட்டியணைத்து நன்றி சொன்னவள், காதில் ‘You smell nice.’ என்றாள். ‘I try.’ என்று பதிலளித்துவிட்டு உட்கார்ந்த என்னருகில் அவளும் உட்கார்ந்தாள், நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுடைய தேவை முடிந்து விட்டிருந்தது, இன்னொரு நடனத்துக்கு அன்றைக்கு நான் வருவேன் என்று அவள் உத்தேசித்திருக்கமுடியாது. அடுத்த அரைமணிநேரம் அவளிடம் என்ன பேசினேன் என்பது நினைவில் இல்லை, அது அவசியமும் இல்லை. ஆனால் அவள் அதன் காரணமாய் என்னை அவள் வாழ்வில் கட்டிப் போட்டுக் கொண்டாள்.  

அங்கிருந்து அவளுடைய வழமையான வாடிக்கையாளர் ஆனதும், பின்னர் அவளுக்காக மட்டும் தான் நான் அந்த க்ளப்பிற்கு வருகிறேன் என்று உறுதியான பின் அன்றைக்கு வேலை செய்யப்போகிறாள் இல்லை என்பதை குறுஞ்செய்தி அனுப்பும் வரை வந்திருந்தது, பெரும்பாலும் அதற்கு பதில் செய்தி கூட அனுப்பியதில்லை என்றாலும் அவளைச் சென்று பார்த்து லேப் டான்ஸ் கொண்டு, வழமையான அவளுக்கான ஸ்ட்ராபரி டாக்கரி வாங்கிக் கொடுத்து அலறும் இசையின் மத்தியில் எதைப் பற்றியும் பேசும் அளவிற்கு முன்னேறியிருந்தோம். எங்களுக்குள் விலகல் இருந்தது, அதற்கு அவளுக்கு காதலன் இருந்தது மட்டும் காரணம் இல்லை. வெள்ளி சனி மட்டும் க்ளப்பிற்கு வருபவர்களில் வயதானார்களாய் வசதியானவர்களாய் தேர்ந்து அவர்களுடன் உடலுறவு கொள்வாள் என்று எனக்குத் தெரிந்துதானிருந்தது, அதற்குப் பின் அவளை வீட்டிற்கு அழைத்துவரும் அளவிற்கு அவள் காதலனுக்கு இந்த விஷயங்கள் தெரியும். அவளுக்கும் அவள் காதலனுக்குமான உறவு பற்றி நிறைய யோசித்திருக்கிறேன் கொஞ்சம் பேசியும் இருக்கிறேன், அவளுடன் வாழும் ஒட்டுண்ணியாயிருந்தாலும் சண்டையில் சிலசமயம் அவள் முகம் அறைந்து சிதைத்திருக்கிறான் என்று தெரியும்.  என்னுடன் வீடுவர அவள் ஒப்புக் கொள்ளவேயில்லை, எவ்வளவு காசு கேட்டாலும் கொடுப்பேன் என்று தெரியுமாயிருக்கும் என்னமோ அவளுக்கு ஒரு காரணம். தொடர்ச்சியான அதைப் பற்றிய பேச்சு எங்கள் மற்றைய பொழுதுகளை பாதிக்கத் தொடங்க முழுவதுமாய் விட்டொழித்திருந்தேன். அங்கிருந்து அவளை என் படுக்கைக்கு அழைத்து வந்தது ஒரு திட்டம், எப்படியோ மாறி மாறி கேட்டுப் பார்த்திருந்தேன் என்றாலும் கடைசியில் தந்திரம் தான் வேலை செய்தது. காத்திருந்து அவள் உண்மையிலேயே மகிழ்வாய் இருந்த ஒரு சந்தர்ப்பத்தில், கனகாலம் கழித்து ஒருவேளை நான் ஒரு இந்தியன் அதனால உன் பாய்ப்ரண்ட் ஒத்துக்க மாட்டேங்கிறான்னு தான் நீ என்னுடன் படுக்க மாட்டேங்கிற, என்று கிசுகிசுத்தேன் ஒரு பொழுதில். மறைமுகமாக அவளை ரேஸிஸ்ட் என்றும் அவளுக்கான முடிவுகளை எடுப்பவன் அவள் காதலன் என்று நான் உணர்த்தியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது அவளுக்கு. பதிமூன்று வயதில் இருந்து அவள் அம்மாவுடன் பிரச்சனை, பலமுறை வீட்டைவிட்டு ஓடிப் போய் சில நாட்களில் போலீஸில் பிடிபட்டு வீட்டில் திரும்பவிடப்பட்டு, 18 வயதாவதற்காய் காத்திருந்து வீட்டைவிட்டு வெளியேறியவள் அவள். என்னிடம் அவள் அம்மாவைப் பற்றி பேசிய பொழுதெல்லாம் ‘Bitch’ என்பதைத் தவிர்த்து வேறெந்த வார்த்தையையும் உபயோகித்ததில்லை. ஐந்து வயதில் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய அவள் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவனைப் பற்றி வயதுக்கு வந்ததும் சொல்லியும் கண்டுகொள்ளாத தாய்க்கு உகந்த வார்த்தை தான். பொருளாதார சுதந்திரத்திற்காக இந்த வேலையைச் செய்துவந்தவள் வழமை போல் தாயிடம் இருந்து தப்பி ஒரு கொடுமைக்கார காதலனிடம் மாட்டிக் கொண்டிருந்தாள், பாதுகாப்பிற்காக இப்படிப் போய் சுழலில் சிக்கிக் கொள்வதும் இந்தத் தொழிலின் ஒரு மிக முக்கியமான பிரச்சனை. பின்பொருநாள் இவள் சுயமாக கார் வாங்குவதற்காக சேர்த்துக் கொண்டிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிப்போன பின்தான் அவனிடமிருந்து விடுதலை கிடைத்தது, பணத்தை இழந்து புலம்பியவள் அதுவும் நல்லதிற்குத்தான் எனகிற எண்ணத்துக்கு இரண்டு ஸ்ட்ராபரி டாக்கரிகளுக்குப் பிறகு வந்திருந்தாள்.

அவள் வீடு உள்நாட்டுப் போரில் பங்கேற்றிருந்தது, அதுவும் அடிமைத்தனத்திற்கு ஆதரவாய், இன்னமும் அதைப்பற்றி பெருமை பேசும் குடும்பம். மற்றவர்களைப் போலில்லாமல் அவள் அம்மாவை பழி வாங்குவதற்காகவே கிரீன்வில்-இல் ஆடை அவிழ்த்து வந்தாள் என்று தெரியும், அதைப் போலவே எவ்வளவு தேடினாலும் ஒரு மயிர் அளவுக்குக் கூட பிற்போக்குத்தனங்கள் இல்லாதவள், லிபரல் என்று கூட தகுதி பிரிக்கமுடியாது அவளை, இடதின் இடது ஓரத்தில் இருப்பவள். அவளை வெறுமனே சீண்டும் எண்ணம் மட்டும் தான் எனக்கிருந்தது, இரண்டு புள்ளிகள் தான் அவள் முன் இருந்திருக்க வேண்டும். என்னை அறவே ஒதுக்குவது, இல்லை என்னிடம் தன்னை நிரூபிப்பது என்று நானாய் மனக்கணக்குப் போட்டேன். நான் அவளை ரேசிஸ்ட் என்று சொன்னதை அவளால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. அதைவிட முக்கியம் அவளுக்கான முடிவுகளை எடுப்பது அவள் காதலன் அல்ல என்று என்னிடம் நிரூபிப்பது. நான் அவளிடன் 2000 டாலர் வரை கொடுக்கிறேன் என்று முன்னமே பேசியிருக்கிறேன், ஆனால் அவள் என்னிடம் 600 டாலர் கேட்டாள், ஒரு மணிநேரம் மட்டும் என்றாள், ஒரு தடவை தான் என்றாள். அன்றிரவு அவள் உழைத்தாள், நான் வாய்வைத்த சில நிமிடங்களில் உச்சமடைய, டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்துவிட்டு பத்துநிமிடம் மசாஜ் செய்து இரண்டாம் தடவை உச்சமடைய வைத்துவிட்டு, நாளை க்ளப் வரும்போது காசு எடுத்துவா என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போனாள். அவளை திருமணம் செய்துகொள்ளும் எந்த உத்தேசமும் என்னிடம் இருந்ததில்லை, அதற்கான தேவையில்லை, நான் அவளைக் காதலிக்கவில்லை என்ற தெளிவு இருந்தது. ஆனால் அவளுடனான உடலுறவு கொள்ளாமல் முடியாது என்று என் விநோதமான மனம் முடிவெடுத்திருந்தது. அவளுக்கு எதுவோ உறுத்தியிருக்க வேண்டும், முதல் லேப்டான்ஸிலிருந்து அன்றைய பொழுதிற்கு எட்டு மாதம் இருந்திருக்கவேண்டும். சிலருடன் முதல் நாளே கூட உடலுறவு கொண்டவள் தான் என்பதால், தானொரு ரேஸிஸ்ட் இல்லை, அப்படி ஒரு இழை கூட தன்னில் இருக்கமுடியாதென்று, எனக்கில்லை, தனக்குத்தானே நிரூபித்துக் கொள்ளத்தான் நினைத்திருக்க வேண்டும். அன்றைக்கு சியர்ஸை ராபர்ட் ஈ லீக்குச் சொன்னேன். பின்னர் வந்த மாதங்களில் மற்றவர்களைப் போல் என்னிடமும் 200 டாலர் வாங்கிக் கொண்டு வரத் தொடங்கியிருந்தாள், எப்பொழுதையும் போல ஒட்டுண்ணி அவள் இரத்தம் குடித்து வளர்ந்து கொண்டிருந்தது. என்னிடம் பிரியம் கொண்டிருந்தாள் என்று ஊகித்திருக்கிறேன்.

இந்தக் காலத்தில் எங்கள் ப்ராஜட்டில் புதிதாய் சேர்ந்த ஷ்யாமிற்கு, இந்தியாவில் என்னிடம் இருந்த எதற்கும் அடங்காத ‘quintesstial jackass’ என்கிற பிம்பத்தின் மீது காதல் இருந்தது. அமெரிக்காவில் நான் விருப்பப்பட்டு விலக்கிய பிம்பம் அது. இந்தியாவில் இருந்தவரை வேலை சம்மந்தப்பட்டு சொல்லப்படும் எல்லாவற்றுக்கும் மறுப்பு மட்டுமே சொல்லும் வழக்கமாயிருந்த எனக்கு அமெரிக்கா கொடுத்த விலையின் காரணமாய் காசு கொடு செய்கிறேன் என்பதில் நின்றிருந்தேன். அதை அசைத்துப் பார்த்தவன் ஷ்யாம் எங்களுக்குத் தெரிந்த எல்லோரிடமும் அவன் என் பற்றிய இந்திய பிம்பத்தை மீண்டும் அள்ளித்தெளித்த வண்ணம் இருந்தான்.  என்னைப் பற்றிச் சொல்வதற்கு எப்பொழுதும் பல கதைகள் இருந்தது அவனிடம், எதுவும் நான் செய்யாத ஒன்றில்லை, கொஞ்சம் மிகைபடுத்தப்பட்ட வடிவம். நான் அந்த பிம்பம் தான், ஆனால் அமெரிக்காவுக்காக நான் வேறொரு முகமூடியை பொறுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தேன். அந்த முகமூடியை கழட்டியபடியிருந்தான் ஷ்யாம். அமெரிக்க இன்டக்‌ஷன் செய்கிறேன் என்று நான் தான் அவனை லஸ்டிற்கு அறிமுகப்படுத்தியிருந்தேன். விடுமுறைக்காக இந்தியா சென்று பல நாட்கள் கழித்து திரும்பிய பொழுது ஷ்யாம், ஹாலன்டின் காதலனாகியிருந்தான், என்னைவிட எல்லாவிதத்திலும் மேலானவன் எனக்கு கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது பொதுவாய் இப்படி ஆண்கள் காதலில் விழுவதுண்டு, ஹாலன்ட் விழுந்தது ஆச்சர்யம் அதைவிடவும் ஆச்சர்யம் அவள் இன்னமும் ஆடை அவிழ்த்துக் கொண்டிருந்தது. ஒரு இந்திய மனத்திடம் அத்தனை விசாலத்தை நான் எதிர்பார்க்கவில்லை, என்னால் அவளைக் காதலிக்க முடியாது என்பதும் எனக்குத் தெரிந்துதானிருந்தது. லஸ்ட் செல்வதைத் தவிர்க்கத் தொடங்கினேன், பிடிக்காவிட்டாலும் ப்ளாட்டினம் ப்ளஸ் செல்வதுதான் ஒரே வழியாகப் பட்டது எனக்கு. நாங்கள் முதலில் அவளைப் பற்றிப் பேசுவதை தவிர்த்தோம் பின்னர் செய்திகளாக அவளைப் பற்றி எனக்குத் தெரியத் தொடங்கியது. ஹாலன்ட் ஷ்யாமின் வீட்டிற்கு குடியேறினாள். சிலமாதங்களில் அவள் கர்ப்பமானாள், சர்ச்சில் சிறிய அளவில் திருமணம் செய்து கொண்டாள், அதற்கடுத்த சில மாதங்களில், பொன்னிற தலைமுடியும், நீல நிறக்கண்களுடன் அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள், குழந்தைக்கு ஒன்றரை வயதிருக்கும் பொழுது கொக்கெய்ன் ஓவர்டோஸில் தன் வாந்தியை தானே விழுங்கி ஷ்யாம் இறந்து போனான். ஷ்யாம் ஒரு இந்தியன் என்பதைத்தவிர இந்தக் கதையில் வேறொன்றும் வித்தியாசம் கிடையாது. இப்படி ஒரு மருமகள் பேத்தி இருப்பது தெரியாமலே ஷ்யாமின் குடும்பம் அவன் உடலை இந்தியாவில் பெற்று இறுதிச்சடங்கு நடத்தியது. நான் க்ரீவில்லில் இருந்து செய்ன்ட் பால், மினசோட்டா செல்லும் முன் ஒரு முறை ப்ளாட்டினம் ப்ளஸில் பார்த்தேன், மெலிந்திருந்தாள், அவள் உடை அவிழ்க்கும் முன் வெளியேறினேன் பின்னணியில் Cardi B’யின் Stripper Hoe ஒலிரத்தொடங்கியது. 

Got 'em sending gifts, it's not even my birthday
You niggas soft and I meant that in the worst way
Oh you bitches suckin' dick just to get a bag
You hustlin'-backwards ass bitch, you're doin' bad
It's pretty sad, you should be getting more than that
Suck a dick so you can pay your rent, couple months with that
I mention flow, keep it on the low, I tell you facts
When a nigga 'bout to cum, just throw it back
It's over, you won, that nigga trapped
And that bank account, girl? Empty that

- இது புனைவு, அமெரிக்க தேவதைகள் சீரிஸில் முதல் கதை ஹாலன்டுடயது

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Edinburgh New year 2021 Snow

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

 புத்தாண்டில் எடின்பரா... பனி போர்த்திய எடின்பராவின் புகழ்பெற்ற கோட்டை.







Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Chithra GFE Suicide

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்


Girlfriend experience பற்றி... 

GFE is pseudo girl friend experience, you mother fucker. However improbable it may be, stop fucking around.


When bae corrects your Bukowski quote and if you paid for her services, you are living in a bliss.


When I asked - Did you genuinely liked anyone? Like blonde, blue eyed boy/gent. 


Bae said - Yes I did fancy one guy, he was pretty good. Mostly fun and like you said blond and blue eyes. Haha.


Then I asked - if you dont mind me asking, what's pretty good here. 


Bae said - I don't know how to explain this really, :D good size penis.. just the chemistry is there simply.


Hmm. Good size penis does matter! I exclaimed. 


Bae then said - It's not about the penis, also chemistry very important. You will be willing trying new stuff with someone who you feel comfortable and attracted to.


But to Bae's misfortune, he didnt like her back genuinely. She said 'I don't meet my future husband like this. Really not. It's not gonna work :D unless you both are crazy. Like a drug dealer escort couple. Haha'


சித்ரா செத்ததும் கிறுக்கியது...


சைக்கோ புண்டைகள் நிறை உலகம். கவனப் புண்டை இல்லைன்னா ஓத்துவிட்டுறுவாளுகள். பீ ஃபக்கிங் கேர்புல் காய்ஸ்.

எஸ்ரா எழுதிய ஒரு எழுத்தாளனின் தற்கொலை பற்றிய பதிவுக்கு பிறகு தற்கொலை பற்றிய என் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன். செய்து கொள்வேனா தெரியாது, but its a purest form, ஆனால் தற்கொலை பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். I might be wrong, I think this guy...  

இன்றைக்கு தற்கொலைன்னு சொன்னதும் நினைவுக்கு வரும் யுகியோ மிஷிமா பற்றி எஸ்ரா எழுதிய பத்தி நினைவுக்கு வருவது போல் நினைவு கூறப்படும் ஒரு பத்தி எழுதினால் கூடப்போதும். மனதிற்கு நெருக்கமான எழுத்து எஸ்ராவினுடையது.

Suicide is an art form.

― நான் தான்.

The thought of suicide is a great consolation: by means of it one gets through many a dark night. ― ஃபெடரிக் நியீட்ஷே

I went to the worst of bars hoping to get killed but all I could do was to get drunk again. ― புக்கோவ்ஸ்கி

If I had no sense of humor, I would long ago have committed suicide. ― மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

When you're young and healthy you can plan on Monday to commit suicide, and by Wednesday you're laughing again. ― மர்லின் மன்றோ

The trouble about jumping was that if you didn't pick the right number of storeys, you might still be alive when you hit bottom. ― சில்வியா ப்ளாத்

Killing myself was a matter of such indifference to me that I felt like waiting for a moment when it would make some difference. ― தாஸ்தாவெய்ஸ்கி

The literal meaning of life is whatever you're doing that prevents you from killing yourself. ― ஆல்பர்த் காமு

But in the end one needs more courage to live than to kill himself. ― ஆல்பர்ட் காமு

Suicide. It's something I've been thinking about. Not too seriously, but I have been thinking about it. ― ஜே ஆஷர்.


Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சிறுகதை

கதைசொல்லி



"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான் பாத்திருக்கேன். நார்த் இண்டியா பக்கமெல்லாம் போனதில்லை." என்று பதிலளித்தாள்.

ரவி ஒரு மென்பொருளியல் வல்லுநன், அமேரிக்காவில் கடந்த நான்காண்டுகாலமாக, ஒரு தலைசிறந்த பன்நாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். மிகவும் அமைதியானவன், அவ்வளவு சீக்கிரத்தில் யாருடனும் பழகிவிடமாட்டான், எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து முடிவு எடுப்பவன் எனவும் நட்புவட்டாரங்களில் பெயரெடுத்திருந்தான். அவன் தாய் தந்தை முடிவுசெய்து வைத்திருந்த, மீனாவை திருமணம் செய்துக்கொள்ள தமிழ்நாட்டிற்கு விடுமுறையில் வந்திருந்தான்.

மீனா மேலாண்மையியல் படித்துவிட்டு ஒரு அயல்நாட்டு நிறுவனத்தின் உள்நாட்டுக்கிளையில் வேலைசெய்து வந்தாள். அழகும் அறிவும் சேர்ந்த கொஞ்சம் சூட்டிகையான பெண், அவள் உடை உடுத்தும் விதமே, அவளை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டிவிடும். ஒரு சுபயோக சுபதினத்தில் அவர்கள் திருமணம் நல்லவிதமாக முடிந்திருந்தது. மீனாவை அமேரிக்காவிற்கு உடனழைத்து செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்திருந்ததால், அவனுடைய எஞ்சியிருந்த விடுமுறையை கழிப்பதற்காகவும் தேனிலவிற்காகவும் குல்லு, மணாலி செல்ல முடிவெடுத்திருந்தான் ரவி.

இதைப்பற்றி அவன் வீட்டில் சொன்னபொழுது அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள், சிலநாட்களில் தான் அமேரிக்கா போகப்போகிறார்களே பின் எதற்கு தனியாக ஒரு தேனிலவென்று. ஆனால் ரவி கொஞ்சம் பிடிவாதமாக வற்புறுத்த ஒப்புக்கொண்டனர். மீனாவிடம் தாங்கள் போகப்போகும் பயணத்தைப் பற்றி சொல்ல நினைத்தவன், அடுத்த நாள் காலையில் எழுந்ததுமே ஆரம்பித்தான்.

"மீனா, மணாலி ஒரு அற்புதமான இடம், நான் வேலை சம்மந்தமாக உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் பறந்திருக்கிறேன். ஆனால் மணாலி போன்ற ஒரு இடத்தை பார்த்ததேயில்லை. முதன் முதலில் டெல்லியில் வேலை பார்த்தபொழுதே நான் தீர்மானித்துவிட்டேன், தேனிலவு மணாலியில்தான் என்று, அதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதை அப்புறம் சொல்கிறேன்." என்று கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்தான்.

தன்னுடைய திட்டமிடும் உத்தியை ரவி, மணாலி பயணத்தில் அழகாகக் காட்டியிருந்தான். வீட்டில் உட்கார்ந்தபடியே, சென்னையிலிருந்து டெல்லிக்கும், பின்னர் திரும்பி வருவதற்கும் விமானத்தில் முன்பதிவு செய்தவன். அப்படியே டெல்லியிலிருந்து தனக்கு மிகவும் நெருக்கமான ரஹுமான் என்ற ஓட்டுநரையும் குவாலிஸ் வண்டியையும் பதினைந்து நாட்களுக்கு ஒப்பந்தம் செய்திருந்தான். டெல்லியிலிருந்து சண்டிகர் வழியாக, முதலில் சிம்லா செல்லவதாகவும்; பின்னர் சிம்லாவில் ஐந்து நாட்கள் தங்கிய பிறகு, அங்கிருந்து நேராய் குல்லுவிற்கு சென்று குல்லுவில் மூன்று நாட்களும், பின்னர் மணாலியில் மீத நாட்களையும் செலவழிப்பதாக திட்டம். இதில் டெல்லி, சண்டிகர், சிம்லா, குல்லு, மணாலி ஆகிய இடங்களில் தங்குவதற்கான ஹோட்டல்களையும் சென்னையிலிருந்தே முன்பதிவு செய்திருந்தான்.

அவன் தன்னுடைய திட்டத்தை மீனாவிடம் விவரிக்க அவளுக்கு வியப்பாய் இருந்தது. பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும், தாங்கள் தங்கப்போகும், சாப்பிடப்போகும் இடங்களைக் கூட திட்டமிட்ட தன் கணவனின் சாமர்த்தியத்தை பார்த்து பிரமித்துப்போனாள்.

"ஏங்க முன்னாடி நீங்க எதுவும் டிராவல் ஏஜென்ஸியில் வேலை செய்தீங்களா?" என்று கேட்ட அவளின் நகைச்சுவை உணர்வை ரசித்தவனாய்,

"இல்லை முன்பே இதேபோல் ஒரு டிரிப் போயிருக்கேன், அதுவுமில்லாம இருக்கவே இருக்கு லோன்லி பிளானட் புத்தகம். அதன் மூலம் தேவைப்படும் மற்ற விவரங்களும் கிடைத்தது. அப்புறம் இன்னொன்னு நான் ஏற்பாடு பண்ணியிருக்கேன்ல, ரஹுமான் அற்புதமான டிரைவர், வாழ்க்கையில என்னை ஆச்சர்யப்படுத்தின பல விஷயங்களில், அவனும் அவனுடைய குவாலிஸம் ஒன்று. ரஹுமான் சொன்னா குவாலிஸ் கேட்கும்னு நினைக்கிறமாதிரி வண்டி ஓட்டுவான். ஒரு விஷயம் மணாலிலேர்ந்து கொஞ்ச தூரம் போனால் ரோதங் பாஸ் அப்பிடின்னு ஒரு இடம்இருக்கு. ரொம்ப பிரம்மாண்டமா இருக்கும் அதன் அழகு. நம்ப பயணத்தில பார்க்கப்போற ரொம்ப முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்னு. அப்புறம் அந்தப் பனியும் குளிரும் நமக்கு ஒத்துக்கிச்சின்னா லே வரைக்கும் கூட்டிட்டி போறேன்னு சொல்லியிருக்கான் அவன். சொர்கத்தை நேரில் பார்க்கிறமாதிரி இருக்கும் லே. கொஞ்சம் தீவிரவாத பிரச்சனை இருக்குதுதான்னாலும் நாம போகாட்டி வேறயாரு போவாங்க. உனக்கொன்னும் பயமில்லையே?"

அவன் பேசுவதையே ஆர்வமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள் மீனா, இவனுக்குத்தான் எவ்வளவு ஆர்வம் இந்தப் பயணத்தில். அவன் கண்கள் இந்த பயணத்திட்டத்தை சொல்றப்போ எவ்வளவு பிரகாசமா மாறுது என்றவாறு நினைத்துக் கொண்டிருந்தவளை அவன் கேட்ட கேள்வி திசை திருப்ப,

"என்ன கேட்டீங்க?"

நோடிக்கொறு முறை மாறும் அவளின் முகத்தின் உணர்ச்சிகளை ரசித்தவனாய்,

"என்ன அதுக்குள்ள கற்பனையா? இல்லை, லேவில் கொஞ்சம் தீவிரவாதிகளைப்பத்தி பயமிருக்கு அதான் உனக்கு பயமாயிருக்கான்னு கேட்டேன்."

சிறிது யோசித்த மீனா, "உண்மையை சொல்லணும்னா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஆனா நீங்க தான் என்ன சொன்னாலும் விடமாட்டீங்க போலிருக்கே?" சொல்லிவிட்டு சிரித்தாள்.

"ஏய் அப்படியெல்லாம் கிடையாது, உனக்கு பயமாயிருந்தா போகவேணாம். இது ஒரு அடிஷினல் பிளான் தான் நம்மளோட முக்கியமான பிளான் மணாலிதான். நேரமிருந்து, உனக்கும் மனமுமிருந்தால் போலாம்."

அவன் இப்படி சொன்னாலும் மீனாவிற்கு அவன் மிகவும் ஆர்வமாய் இருந்ததாய்ப்பட்டது. போகாவிட்டால் கொஞ்சம் வருத்தப்படுபவனாயும்.

"இங்கப்பாருங்க நான் சும்மா உங்களை சீண்டினேன். உங்களை மாதிரியே எனக்கும் இந்தியா மேல நிறைய பற்றிருக்கு. நாமெல்லாம் போகாமயிருக்குறதாலத்தான் தீவிரவாதிகள் பிரச்சனை பண்றாங்க. நாம நிச்சயமாப் போலாம்."

ஒருவழியாக இப்படி அவர்கள் மணாலி பயணம் தொடங்கியது. விமானத்தின் மூலம் டெல்லி வந்திறங்கியவர்களை, விமான நிலையத்திலேயே வந்து வரவேற்றான் ரஹுமான். உத்திரபிரதேசத்தை சேர்ந்த அவன் நெடுநெடுவென ஆறடி உயரமாய் கொஞ்சம் ஒல்லியாய் இருந்தான். ரவியும் ரஹுமானும் இந்தியில் உரையாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை, இடையிடையில் லடுக்கி, லடுக்கின்னு அவர்கள் பேசுவது மட்டும்தான் விளங்கியது அவளுக்கு. பார்த்தவுடனேயே அவளுக்கு வணக்கம் சொன்னான். விமானநிலையத்திலிருந்து நேராய் கனாட்பிளேஸ் வந்தவர்கள், அவர்கள் முன்பதிவு செய்திருந்த ஹோட்டலுக்கு சென்று குளித்து உடைமாற்றிவிட்டு, சாப்பிடுவதற்கு நேராய் சரவணபவனிற்கு சென்றார்கள்.

"என்னங்க நீங்க சொல்லவேயில்லை, நம்ம சரவணபவன் இங்கிருக்குன்னு." மீனா குழந்தைத்தனமாய் கேட்க, சரவணபவனைப் பார்த்தும் அவளிடம் தெரிந்த மகிழ்ச்சி, ரவியையும் சந்தோஷப்படுத்தியது.

"மீனா, இங்க ரெண்டு சரவணபவன் இருக்கு. நானிருந்தப்பயெல்லாம் கம்பெனி பார்ட்டி கொண்டாட இங்கத்தான் வருவோம். நார்த் இண்டியன்ஸ்க்கு இந்தச் சாப்பாடு ரொம்பப் பிடிக்கும்."

பிறகு, இரண்டு சௌத்இண்டியன் தாழி ஆர்டர்செய்து சாப்பிட்டுவிட்டு வெளியில் வர, அங்கே மல்லிகைப்பூ விற்றுக்கொண்டிருந்த நபர். மீனா புடவை கட்டியிருந்ததால் அவளிடமும் நீட்டினார். ஆசையாய் ரவியிடம் கேட்டு வாங்கி வைத்துக்கொண்டாள் மீனா. அப்பொழுதான் அவனுக்கு மெதுவாய் அலமேலுவின் ஞாபகம் வந்தது. அவளுக்கு மல்லிகைப்பூவென்றாலே பிடிக்காது என்று நினைத்தவன். தன்னைத் தானே கடிந்து கொண்டான் அலமேலுவைப்பற்றி மீனாவிடம் சொல்லாததை நினைத்து, பின்னர் சொல்லிக்கொள்ளலாம் என நினைத்து மறந்தும் போனான்.

அங்கிருந்து நேராய் ஹோட்டலுக்கு திரும்பியவர்கள், இரவுப்பொழுதை அங்கேயே கழித்துவிட்டு விடியற்காலையிலேயே சண்டிகருக்கு கிளம்பினர். வழியில் தான் அவளுக்கு புதிதாய் சந்தேகம் வந்தது.

"ஆமாம் இவன் நைட்டெல்லாம் எங்கத் தங்கயிருந்தான். எங்க சாப்பிட்டான்?"

மீனா ரஹுமானைத்தான் கேட்டாள்,

"அவனுக்கு நாம தங்கின ஹோட்டல்லயே ரூம் கொடுப்பாங்க, அந்த மாதிரி ரூம் எல்லா ஹோட்டல்லயுமேயிருக்கும். அதுபோல சாப்பாடும் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன்." சொன்னவனிடம் மீனா,

"நேத்திக்கு லடுக்கி லடுக்கின்னு அவன் உங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தானே. என்னப்பத்தியா பேசினான்?"

"இல்லம்மா உன்னப்பத்தியில்லை, அது வேற ஒரு பொண்ணைப்பத்தி. உன்கிட்ட அதப்பத்தி ஏற்கனவே பேசணும்னு நினைத்தேன். இன்னிக்கு சிம்லா போனதும் சொல்றேன்." சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான் ரவி.

சிகரெட் பிடிப்பதைப்பற்றி மீனாவிடம் முதலிரவிலேயே சொல்லியிருந்தான். அதுமட்டுமில்லாமல் சில மாதங்கள் அவகாசமும் கேட்டிருந்தான் அதை நிறுத்துவதற்கு. ஆனால் மீனா அப்பொழுது அதைப்பற்றி கவலைப்படவில்லை அவன் எந்தப் பொண்ணைப்பற்றி சொல்லப்போகிறான் என்றே யோசித்துக் கொண்டிருந்தாள்.

அன்று மாலை சிம்லா வந்ததிலிருந்தே மீனா கொஞ்சம் சோபையிழந்ததைப் போலிருந்தாள். முதலில் ரவியும் குளிர் மீனாவிற்கு ஒத்துவரவில்லையென்றே நினைத்தான். பின்னர்தான் அவள் தான் சொல்வதாய்ச் சொன்ன பெண்ணைப்பற்றி நினைத்தே இப்படியிருக்கிறாள் எனத்தெரிந்து கொண்டான். அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலிருந்த மாலுக்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு, இரவு அங்கேயே உணவருந்திவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினர். அவளுடைய நிறத்திற்கு அவள் அணிந்திருந்த கருஞ்சிவப்பு நிற ஸ்வெட்டர் வெகு பொருத்தமாய் இருப்பதாய்ப்பட்டது ரவிக்கு.

"ஏய் இன்னிக்கு காலையிலேர்ந்தே நீ சரியாயில்லை. உடம்புக்கு எதுவும் பண்ணுதா?" என்று கேட்ட ரவிக்கு, இல்லையென்ற தலையசைத்தல் மட்டுமே பதிலாய்க் கிடைத்தது. பின்னர் சிறிது நேரத்தில்,

"நீங்க ஒரு பொண்ணைப்பற்றி சொல்றதா சொல்லியிருந்தீங்க?" மீனா கேட்க ரவிக்கு கொஞ்சம் ஆச்சர்யமாய் இருந்தது. அவன் மீனாவை கொஞ்சம் வித்தியாசமாய் நினைத்திருந்தான். ஆனால் இந்தப் பெண்களுக்குத்தான் எவ்வளவு பொறாமை இந்த விஷயத்தில் என நினைத்துக்கொண்டவனாய்

"ஆமாம் மறந்துட்டேன் மீனா, நான் டெல்லியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அலமேலு அப்பிடின்னு ஒரு பொண்ணை காதலிச்சேன், அவளும் தான். நாங்க ரெண்டுபேரும் ஒரே கம்பெனியில் தான் வேலைப் பார்த்துவந்தோம். அப்படி ஒரு சமயத்தில் தான் நானும் அவளும் இங்கே இதே மாதிரி ஒரு டிரிப் வந்தோம். இப்ப நாம தங்கியிருக்கிற இதே ஹோட்டலில் தான் தங்கினோம்.

அவள் ஒன்னும் அவ்வளவு அழகாயிருப்பான்னு சொல்லமுடியாதுன்னாலும் பரவாயில்லாம இருப்பா. எப்பவும் எங்களுக்குள்ள ஒரு டிஸ்டென்ஸ் இருக்கும். ஆனா அந்த குறிப்பிட்ட பயணத்தில் அந்த இடைவெளி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு ஒரு நாள் நாங்க தப்பு பண்ணிட்டோம்." ரவி சொல்லிவிட்டு நிறுத்த,
மீனா அங்கே நடப்பதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஆனால் எங்களுக்குள்ள கருத்துவேறுபாடு வந்து கொஞ்ச நாள்லயே பிரிஞ்சிட்டோம். அவளுக்கும் வேற ஒரு இடத்தில கல்யாணம் ஆய்டுச்சு. இன்னமும் எப்பவாவது மெய்ல் அனுப்புவா எப்படியிருக்கேன்னு கேட்டு அவ்வளவுதான். மற்றபடிக்கு நேர்ல பார்த்து ஆறேழு வருஷம் ஆயிருச்சு."

கேட்டுக்கொண்டிருந்த மீனா ரொம்பநேரம் எதுவும் சொல்லவில்லை, ரவியும் அதைப்பற்றி மேலும் எதுவும் பேசாமல் கண்மூடிப்படுத்திருந்தான். சிறிது நேரம் கழித்து, பின்னர் மீனா அவனை எழுப்ப எழுந்தவன்,

"நீங்க உண்மையை சொன்னதுக்கு நன்றி, நானும் உங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும். நான் சொல்லவேண்டாம்னுதான் நினைச்சேன். நீங்க என்கிட்ட உண்மையாயிருக்கிறதப்போல நானும் உண்மையாய் இருக்கணும்னுபடுது அதான்..."

சிறிது நிறுத்தியவள்,

"அப்ப எனக்கு பதினெட்டு வயசிருக்கும். நான் காலேஜில் படிச்சிக்கிட்டிருந்தேன் எனக்கு ஒரு ப்ரெண்ட் ராஜேஷ்னு, நல்லா படிக்கிற பையன். எனக்கு படிப்பு விஷயங்களில் இருக்கும் சந்தேகங்களை அவன்தான் தீர்த்துவைப்பான். நாங்க காதலிக்கல்லாம் இல்லை, ஆனா ஒரு நாள், நான் அவன் வீட்டில் சந்தேகம் கேட்கப்போனப்ப தப்பு நடந்திருச்சு. இரண்டுபேரும் தெரிஞ்சுத்தான் பண்ணினோம். அதற்குபிறகு அப்படி நடந்ததேயில்லை.

அவன் இப்ப பெங்களூரில் வேலை பார்க்கிறான். இன்னமும் ஒரு நல்ல நண்பன், நான் முதலிரவன்னிக்கே இதைப்பத்தி சொல்லணும்னு நினைச்சேன். ஆனா உங்களைப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டு சொல்லலாம்னுதான் அன்னிக்கு சொல்லலை. அது நடந்து எட்டு வருஷம் ஆச்சு. இன்னிக்கு வரைக்கும் வேறெந்த தப்பும் பண்ணியதில்லை, இதையெல்லாம் நான் ஏன் உங்கக்கிட்ட சொல்றேன்னா, உங்களுக்கும் அந்த சூழ்நிலை புரியும்ணுதான். அந்த விஷயத்தை நான் மறந்து ரொம்ப நாள் ஆச்சு, நீங்க என்னை நிச்சயம் பண்ணின அன்னிக்குத்தான் திரும்பவும் நினைவிற்கு வந்து உறுத்தத்தொடங்கியது.

இப்ப நான் சொல்லிட்டேன், இனிமேல் தீர்மானிக்க வேண்டியது நீங்கத்தான்."

உண்மையில் ரவியால் அவள் சொல்வதை நம்பமுடியவில்லை, ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தான். அவள் தான் சொன்ன பெண்ணைப்பற்றி சந்தேகப்பட்டதால் தான் ஒரு அழகான ஊடலுக்காக வேண்டி அவன் அப்படியொரு அலமேலு கதையை அவளிடம் சொல்லியிருந்தான். ரவிக்கு எப்பொழுதுமே அவனிடம் இருக்கும் கதைசொல்லியைப் பற்றிய ஒரு கர்வம் இருக்கும். எப்பொழுதுமே சீரியஸாய் இருப்பதால் அவன் சிலசமயம் அவனுடைய கற்பனைகளை கதையாய் சொல்லும் பொழுது எல்லோருமே நம்பிவிடுவார்கள்.

ஆனால் அவன் இன்று அலமேலுவைப்பற்றி சொன்னது அத்தனையும் கற்பனைகிடையாது. அலமேலு உண்மை, அந்த பயணம் உண்மை, அந்த நிகழ்ச்சியும் உண்மை, ஆனால் உண்மையான அலமேலுவின் காதலன், அவன் கிடையாது அவர்களுடன் வேலைசெய்யும் இன்னொருவன் பிரபாகரன். அந்த சம்பவம் அத்தனையும் உண்மை ஆனால் நடந்தது அலமேலுவுக்கும் பிரபாகரனுக்கும் இடையில். அதற்கு பிறகு கொஞ்சம் சோர்ந்திருந்த அவர்களை சமாதானப்படுத்தியது ரவிதான். இன்னமும் அவன் சொன்ன அந்த வார்த்தைகள் ஞாபகம் இருக்கிறது. ரவி அலமேலுவை தங்கச்சின்னு தான் கூப்பிடுவான். அதைப்போலவே அலமேலுவும் அண்ணா அண்ணான்னு உயிரையே விடுவாள்.

அவர்களுக்குள் இருந்த இனக்கவர்ச்சியில் அன்று தவறு நடந்துவிட்டதால், அவர்களை சமாதானப்படுத்தி அந்தப் பயணத்தை தொடர்ந்து நடத்த உதவியவன் ரவிதான். அதன் பிறகு அந்தப் பயணத்தில் அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தைப் பார்த்ததாலேயே அவனுடைய தேனிலவை இங்கே நடத்த தீர்மானித்திருந்தான். பின்னர் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருவரும் தனித்தனியே கல்யாணம் செய்துகொண்டார்கள். அலமேலுவின் திருமணத்தை அண்ணனாக முன்னின்று நடத்தித் தந்தவனே அவன்தான். அவனால் அலமேலுவை தவறாக நினைக்கவே முடியவில்லை. இன்றைக்கு அவளுக்கு இரண்டு குழந்தைகள் அற்புதமான குடும்பம் என்று அழகாய் வாழ்ந்து வருகிறாள். இன்னமும் அவனிடம் அந்த நிகழ்ச்சிகளைச் சொல்லி அவள் சிரிப்பதுண்டு; அவனும்தான்.

அதனால் மீனா சொன்னதைப் பற்றி யோசிக்க எதுவும் இருப்பதாக படவில்லை ரவிக்கு. அதற்கு அவன் சில ஆண்டுகளாய் பழகிவந்த அமேரிக்க சூழ்நிலையும் காரணமாயிருந்தது. உண்மையில் அவள் செய்தது ஒரு பெரிய தவறாக அவனுக்கு படவில்லை, ஏதோ சின்னவயசு தவறு நடந்துவிட்டது என்றே நினைத்தான். ஆனால் தான் அலமேலுவைப்பற்றி மீனாவிடம் சொன்னது பொய் என் சொல்லலாமா வேண்டாமா என்பதைத்தான் வெகுநேரம் யோசித்துக்கொண்டிருந்தான். அவன் அப்படி சொல்லிவிட்டால், மீனா அவளைப்பற்றி கில்டியாக நினைக்கலாம். தன் கணவனும் தவறுசெய்துவிட்டான் தானும் செய்திருக்கிறோம் சரியாய்ப்போய்விட்டது என்று நினைத்துக் கொண்டிருப்பவளிடம் தான் போய் உண்மையைச் சொன்னால் தவறாய்ப்போய்விடும் எனப் பயந்தான்.

பின்னர் அவள் தன்னைப்பற்றி இன்னும் நன்றாக புரிந்துகொண்ட பின்னர் மெதுவாகச் சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தவனுக்கு, அப்பொழுதுதான் தான் பால்கனிக்கு வந்து இரண்டுமணிநேரத்திற்கு மேல் ஆகியிருந்த விஷயமே உணர்வில் வந்தது. பாவம் மீனா பயந்துவிடப்போகிறாளென நினைத்தவனாக காலணி அணிய கீழே பார்த்தவனின் கண்களில், இரண்டு மூன்று பாக்கெட் சிகரெட் பட்ஸ் பட்டது, முதலில் இந்த சனியனை ஒழிச்சுக்கட்டணும்னு நினைத்தவனாய் மீனாவை சமாதானம் செய்ய உள்ளே சென்றான்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In இருத்தலியநவீனம்

இரவின் தொடர்ச்சியாக எப்பொழுதும் அறியப்படாத பகல்


சூரியன் தன்னுடைய ஆளுமையை வெம்மையாக வெளிப்படுத்தி, மனிதர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையில் என்றுமே உணர்ந்திராததும் மாற்றமுடியாதுமாகிய ஒரு முகமூடியை மாட்டிவிடுவதாயும் பின்னர் அவர்கள் தாங்கள் உண்மையென நம்பும் புனைவுகளை மட்டுமே பேசுபவர்களாகி விடுபவதாகவும், தன்னுடைய வல்லமையை பூமியின் இன்னொருபக்கத்தில் செலுத்த தன் பரிவாரங்களுடன் நகர்ந்துவிட்ட நேரத்திலும் கூட தன்னுடைய பகல் நேர மாயாஜால மகிமையால் மக்கள் சோர்வடைந்து உறக்கத்தில் மூழ்கிவிடுவதாயும் ஆயிரம் பக்கங்களில் விவரித்திருந்த ஆராய்ச்சிக்கட்டுரையை மீண்டும் ஒருமுறை தேடிப்படித்த நாள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. சனிக்கிழமையின் பின்னிரவு நேரம், பெரும்பாலும் காற்றும் நானும் உறவாடும் அலுவலக முக்கோணக்கூம்புகளின் கூட்டில் சற்றும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் பார்த்துவிட்ட இருவரின் வெற்றுடம்புகளின் களியாட்டம் என்னை அந்த ஆராய்ச்சிக்கட்டுரையை நோக்கி இன்னொரு முறை நகர்த்தியது.

ஒளிப்படமாய் அந்தக் கணம் மனதில் பதிந்து விட்டிருந்தது, புதிதாய் பூசிய சுவரில் வேண்டுமென்றே கீறியதைப் போல் அழிக்கமுடியாததாய் அப்படியே தேவையில்லாத ஒன்றாய். வாழ்க்கையின் எத்தனையோ கணங்களை கடற்கரை காற்சுவடுகளில் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டேயிருக்க, இப்படியும் சில விஷயங்கள் இமைகளின் இன்னொரு பக்கத்தில் இருக்கின்றனவோ என்ற சந்தேகிக்கும் வண்ணம் கண்களை மூடியதும் வந்து கண் சிமிட்டுகின்றன தொடர்ச்சியாய். ஒன்றிரண்டு நிமிடங்களின் சேகரிப்பில் கற்பனையின் கள்ளத்தனம் நீச்சல்குளத்தில் தவறவிட்ட நிறக்குடுவையின் லாவகத்துடன் வாய்ப்புக்கள் அனைத்தையும் அபகரித்து விரிவாக்கி எல்லைகளின் இயலாமையை புன்னைகையால் புறக்கணித்து எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கிய ஒலி ஒளிப்படமாகத் உருவாகி எப்பொழுதும் மனதின் திரையில் நகர்ந்து கொண்டிருந்ததை இல்லாமல் போகச்செய்ய வேண்டிய அவசியம் புரிந்தவனுக்கு அந்த ரகசியம் புலப்படவேயில்லை.

மனம் தன் நிலையைக் குவிக்கயியலாமல் போன அச்சந்தர்ப்பத்தில் அங்கிருந்து நகர்வதே உசிதம் என்று, கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வெளியேறி ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு அவர்கள் இருவரைப் பற்றிய நினைவுகளைப் புறந்தள்ள போராடிக் கொண்டிருந்தேன். நெருப்பு கேட்டுக் கொண்டு வந்த அலுவலக காவலாளியைப் பார்த்ததும் முகமூடிகளைப் பற்றிய ஆராய்ச்சி மீண்டும் நினைவில் வந்தது. பகற்பொழுதுகளில் இல்லாத எங்களிடையேயான நெருக்கம் இரவில் வருவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மனிதர்கள் மட்டுமல்ல, மரங்கள், சாலைகள், சுவர்கள், உணவகங்கள் என எல்லாவற்றுடனுமே இரவில் சுலபமாகப் பழகமுடிவதையும் பகலில் அவைகள் நம்மிடமிருந்து விலகி நிற்பதைப் போலவும் நான் அந்தக் கட்டுரையைப் படிக்கும் முன்னரே உணர்ந்திருந்ததால் என்னால் அந்தக் கட்டுரையில் இயல்பாய் மூழ்கமுடிந்தது.

மார்கழி மாத முன்பனிக்காலம், ஸ்வெட்டரின் நெருக்கமான பின்னல்கள் உண்டாக்கும் கதகதப்பைத் தாண்டியும் மீறியும் குளிர் உடலைத் தீண்டி, தன் ஆளுமையை நிரூபித்துக் கொண்டிருந்தது. சிகரெட் கொடுத்துக் கொண்டிருந்த கதகதப்பு விரல்களின் இடையில் முடிவடைய அதைத் தொடர்வதைப் பற்றிய கேள்விகளுக்கான பதில் தீர்மானிக்க இயலாததாய் சோம்பேறித்தனத்தின் கதவுகளின் பின்னால் ஒழிந்துகொண்டிருந்தது. கடும் பனியும், ஊதல் காற்றும், இன்னும் தன் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்த காவலாளியும் எல்லாவற்றையும் கடந்து நிர்வாணத்தில் மூழ்கி தட்டுப்படாத தரையை நோக்கி விழுந்துகொண்டிருந்தவனுக்கு வேறொன்றை சிந்திப்பதில் இருந்த மூளைப்பற்றாக்குறையும் சேர்த்து முடிவெடுக்கயியலாமல் பாக்கெட்டைத் திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்தேன். எங்கள் இருவரின் உரையாடலை ஸ்வைப்பிங் டோரின் ஒலி துண்டிக்க, அந்த இணையில் ஆண் மட்டும் வெளியில் வர, காவலாளி அவரை வணங்கி தன் விசுவாசத்தை நிரூபித்தவாரு நகர்ந்துவிட. எங்கள் இருவரிடையேயும் மௌனம் புகுந்து கொண்டது.

மௌனத்தின் வலிமையான கரங்களில் இருந்து விடுபட நினைத்த எங்களின் முயற்சி சிறுகுழந்தையின் நிலவைப் கையில் பிடிக்கும் பிரயாசையாய் நிறைவேறாமலே போனது. எனக்கு அந்த நபரைத் தெரியும், அப்படியே அந்த இணையின் மற்ற பெண்ணையும் இருவரும் ஏற்கனவே வேறுவேறு நபர்களுடன் மணமானவர்கள். மணத்திற்கு வெளியிலான உறவைப் பற்றிய பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லாததால் எனக்கு நான் பார்க்க நேர்ந்த விஷயத்தைப் பற்றி இயல்பாய் சில கேள்விகள் இல்லை, ஆனால் உறவு நடந்த இடத்தைப் பற்றிய கேள்விகள் உண்டு. ஆனால் என் மன உளைச்சலைவிடவும் அவர்களுடையது அதிகம் இருக்கும் என்பதால் மன்னிப்பிற்கான சாத்தியக்கூறுகள் என்பக்கத்தில் இருந்து திறந்து வைத்தேன்.

"சாரி..." நான் முடித்திருக்கவில்லை, அவர் என்னைப் பார்த்து "இது இப்படி நடந்திருக்கக்கூடாது! சாரி!" அவ்வளவுதான் சொன்னார். நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன், இது இப்படி நடந்திருக்கவேகூடாது. அது அவர்களுடைய உறவாக மட்டுமல்லாமல் அதை நான் பார்த்ததையும் சேர்த்துத்தான். அதன் பிறகு தொடர்ந்த உரையாடல் பொதுவானதாக அலுவலகம் வேலை தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருந்தது. அந்த விஷயத்தை அவரால் ஒதுக்கிவிட்டு தன் உரையாடலைத் தொடர முடிந்திருந்தது, அவருடைய மனித மனங்களைக் கணக்கிடும் வலிமை ஆச்சர்யப்படத்தக்க வகையில் இருந்தது. அவர் அளவிற்கு முடியாமலிருந்தாலும் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது.

வழமை போல் இரவின் தொடர்ச்சியாக இல்லாமல் பகல் தனக்கான முகமூடியுடன் வெளிப்பட, ஆராய்ச்சியின் முடிவாகக் கட்டுரை சொல்லியிருந்த "தங்களுக்கான முகமூடிகளைப் பற்றியெழும் கேலிகளைப் பொருட்படுத்தாமல், அதே சமயம் நிராகரிக்கவும் முடியாமல் இருத்தலுக்கான சமரசமாக நகர்தலையும், நகர்தலின் சாத்தியமின்மை புன்னகையையும் தோற்றுவிக்கிறது" என்பது என்வரையில் உண்மையானது. இணையில் ஆண் தன் நகர்தலில் வெற்றிபெற, பெண் புன்னகையில் தன்னைப் புதைத்துக் கொண்டாள். வாழ்க்கை எங்கள் சந்திப்பின் சாத்தியக்கூறுகளை மறுத்தலித்தபடி சுழன்று கொண்டிருந்தது. ஆனால் அசந்தர்ப்பங்களை சந்தர்ப்பங்களாக்கும் வேடிக்கையான விளையாட்டை காலம் தொடங்க, விளையாட்டிற்கான விதிமுறைகள் வகுக்கப்படாமலேயே களத்தில் எங்களை இறங்கிவிட்டு காலம் நகர்ந்து கொண்டது.

கொண்டாட்டத்திற்கான நாளொன்றில் உள் அறையின் சுவரெங்கும் எதிரொலித்து இசை தன் பரிமாணத்தை மீறி நடனத்திற்கான வெளியை உருவாக்கிக் கொண்டிருந்தது. இசையை அதன் பரிமாணத்திலேயே ரசிக்கத்துடிக்கும் என்னை அது இயல்பாய் அறையில் இருந்து வெளியில் தள்ளியது. கோப்பையில் மார்ட்டினி தத்தளிக்க இடது கையில் இருந்த சிகரெட்டை வலது கைக்கு மாற்றியபடி கதவைத் திறந்து வெளியில் வர இன்னொரு கோப்பையுடன் அவள் நின்று கொண்டிருந்தாள். வழமையான புன்னகையுடன் என் பொருட்டு திறந்த கதவின் வழி வழிந்த இசையின் இரைச்சல் காதை அடைக்க கதவு தானாக உள்ளும் புறமும் அசைந்து அதற்கேற்ப இசையை கொடுத்து மறுத்து அடங்கும் வரை ஒரு கையால் காதை அடைத்துக் கொண்டிருந்தவள், கைகளை நீட்டினாள் குலுக்களுக்காக.

"கொடுமையா இருக்கு இல்லையா!" அவளுடைய கேள்வியை ஆமோதித்தவனாய் நிசப்தம் கொடுத்த நிறைவு மனமெங்கும் வழிய, "ஆனால் வெளியில் ஏகமாய் குளிர்கிறது" என்னுடையதை ஆமோதித்தவளுக்கும் கூட தொடர்ச்சியாய் என்ன பேச என்று தெரியாததால் சாத்தப்பட்ட கதவுகளினூடாக நுழைந்துவரும் இசையை ரசித்த வண்ணம் எங்களிடையே மௌனம் இடம்பெயற, மௌனத்தின் வலியை உணர்ந்தவளைப் போல் எக்காரணம் கொண்டு அதை அனுமதிக்க மறுத்தவளாய், "எமினெம் இல்லையா?" கேட்க, "ம்ம்ம் ஆமாம், எமினெமும் ஸ்னூப்பி டாகும்..." சிரித்து வைத்தேன்.

தனிமைக்கான பொழுதில்லை அது நிச்சயமாய் கொண்டாட்டத்தின் உச்சமாய் தங்களை மறந்து ஒரு கூட்டம் உள்ளே ஆடிக்கொண்டிருந்தது. மனமொருமித்த நடனம் அல்ல மனம் அலைபாயும் பறக்கும் ஆட்டம், மற்றதைப் போலில்லாமல் என்னை இயல்பாகவே கவரும் வகைதான் என்றாலும் அன்றைய பொழுதை மார்ட்டினியுடன் தனியே கழிக்க விரும்பி வெளியில் வந்தவனுக்கு அமைந்துவிட்ட அவளுடைய அருகாமை ஆச்சர்யமே! இதுநாள் வரை என்னை நானும் அவளை அவளும் ஒருவரிடம் ஒருவர் மற்றவரை மறைத்துக் கொண்டிருந்தோம். இன்றுமே கூட எங்களின் சுயம் தன்னாதிகத்தில் இருந்திருந்தால் இந்தச் சந்திப்பு புன்னகையுடனோ முகமன்களுடனோ முடிந்திருக்கவேண்டிய ஒன்றுதான். ஆனால் உற்சாகபானம் எங்களிடையே கட்டமைக்கப்பட்ட இயல்புகளைத் தகர்த்தெறிந்து உற்சாகத்தை அள்ளித் தெறித்தப்படியிருந்தது. இரவின் இயல்புகளில் ஒன்றாய் ஆராய்ச்சிக் கட்டுரை குறித்திருந்த விஷயம் தான் இது. கட்டுரையின் 136ம் பக்கத்தில் இரண்டாவது பத்தியில் இதைப்பற்றிய வரிகள் நினைவில் வந்தது, "சுயம் கட்டமைக்கும் கோட்பாடுகள் தகர்க்கக்கூடியதாய் இருப்பதில்லை, பகலின் பிரம்மாண்டம் சுயத்தை மறைத்து கோட்பாடுகளை இறுக்கங்களுடன் வெளிப்படுத்துகிறது. இரவின் தனித்த நெருக்கமான பொழுதுகள் கோட்பாடுகளைக் கடந்தும் சுயத்தின் இருப்பை உணர்த்தினாலும் சுயத்தை இழப்பது, இழக்க வைப்பது இரவின் தன்மைகளில் ஒன்றாகயில்லை. ஆனால் சுயம் தானாய் அல்லாமல் வேறுபல காரணிகளால் இழந்து போய்விடூம் இரவில் அது இன்னமும் இயல்பாய் அமையும்."

அந்தப் புத்தகம் மனிதர்களைப் பற்றி வீசியெறிந்த அத்தனை ரகசியங்களும் முகத்தில் பட்டு அதன் துள்ளியமான அவதானிப்பை ஆச்சர்யத்துடன் அணுக வைத்தது. பக்கங்களும் பத்திகளும் வரிகளும் சொற்களும் எழுத்துக்களும் தொடர்ச்சியான வாசிப்பினால் மனனமாகி சுற்றத்தின் செயல்களை வரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த ஒவ்வொரு கணமும் புன்னகையாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. அந்தப் பிரதியின் மூல ஆசிரியர் பற்றிய குறிப்புகளில் முக்கியமானது இந்தப் பிரதி எழுதி முடித்ததும் அவர் செய்து கொண்ட தற்கொலை பற்றிய இரண்டு வரிகள், காரணங்கள் என்று எதையும் குறித்திருக்காவிட்டாலும் மனப்பிறழ்வு என்ற ஒரு வார்த்தை அவரைப் பற்றிய தேடலைத் தூண்டியது. ஆனால் அந்தப் பிரதியைத் தவிர்த்து அவரைப் பற்றிப் பேச எதுவுமே இல்லை, பிரதியுமே கூட எதையும் சுய அனுபவமாக முன்வைக்கவில்லை.

சிலீரென்று உரசிய குளிர்காற்று நினைவுகளைப் புரட்டிப்போட கோப்பையில் தளும்பிக் கொண்டிருந்த உற்சாகப்பானத்தை ரசித்து அருந்தியபடி இருந்த அவளைப்பற்றிய எண்ணம் படரத்தொடங்கியது. சேலைத்தலைப்பை அவள் உடலைச் சுற்றி மூடியிருந்ததாலோ என்னவோ அவளுடைய ஆடையில்லாத உடல் மனதெங்கும் பரவி கொஞ்சம் சூழ்நிலையை அந்நியப்படுத்தியது. கற்பனை தன் கரங்களில் பகடைகளை உருட்டி விளையாடத்தொடங்கிய பொழுதில்,

"அவர் இப்ப இந்தியா ஆபிஸில் இல்லை! தெரியுமா?"

அவள் எப்படி அத்தனை விரைவில் உடுத்திக்கொண்டாள் என்ற ஆச்சர்யத்துடன் அவளுடைய கேள்வியை அணுகினேன்.

"தெரியும்!" அன்றைக்கென்னமோ மார்ட்டினி என்றையும் விட போதையை அதிகம் தருவதைப்போல் உணர்ந்தேன்.

சிரிக்கத் தொடங்கினாள், மழை மேகத்தைப் போல் சிறிதாய்த் தொடங்கியவள், குபீரென்று புயல்மழையைப் போல் தன் சிரிப்பைத் தீவிரமாக்கினாள். அவளுடன் இணைந்து கொள்வதற்கான இடைவெளி தேடியவன் கிடைக்காததால் சட்டென்று இடித்து மின்னும் இடி மின்னலாய் புன்னகையொன்றை மட்டும் அவிழ்த்து விட்டு மீண்டும் உதடுகளை மார்ட்டினியில் முக்கினேன்.

"அவருக்கு உங்களைப் பார்த்து பயம்." இடையில் நிறுத்தி சொல்லிவிட்டு தொடங்கியவள். அன்றைக்குப் பின்னான நிகழ்ச்சிகளை கோர்க்கத் தொடங்கினாள் பூக்களாக, அழகுக்காகவும் வேறுபாட்டுக்காகவும் இடையில் சேர்க்கும் வேறு நிறப்பூவாய் என் சொற்கள் அங்கங்கே இணைக்கப்பட்டு, அரைமணிநேரத்தில் பூமாலை தொடுத்திருந்தாள். காதலுடன் போதையாய் என் கழுத்தில் அனுமதியை புறந்தள்ளி அணிவித்தவளின் வேகம் என்னை பிச்சைக்காரனின் தட்டில் தூரத்தில் இருந்து வீசியெறிப்பட்ட காசாய் தடுமாற வைத்தது. ஆனால் தடுமாற்றம் கிளப்பிய உற்சாகம் அவள் அழைப்பைத் தொடர்ந்து ரிசார்ட்டில் அவளுக்காய் ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி எங்களை நகரவைக்கும் வல்லமை கொண்டதாயிருந்தது.

அந்த நிலையிலும் கூட எனக்கான வரிகளை மனம் அந்தக் கட்டுரையில் தேடிக்கொண்டிருந்தது, தேடுதலின் வேகம் கொண்டுவந்த சொற்கள் மனதில் கூட்டப்படும் முன்னர், அந்த அறையில் உறங்கிக்கொண்டிருந்த அவள் குழந்தையின் கன்னத்தில் உளறியபடி வைத்த அவள் முத்தத்தின் சத்தம் ஸ்தம்பிக்க வைத்தது. இரக்கமற்ற முறையில் என் கழுத்து அறுக்கப்பட்டு நிலை தடுமாறி நான் விழுந்துகொண்டிருந்தேன். எங்கிருந்தோ சட்டென்று விழித்துக்கொண்ட சுயம், பொய்களின் மீது கழைக்கூத்தாடியின் லாவகத்துடன் நகர்ந்து விளையாடி பிரம்மிக்க வைத்து என் அறைக்கு கொண்டு வந்து தள்ளி தன்னை நிரூபித்துக் கொண்டது.

பலூன் ஒன்றின் மீதான குழந்தையின் ஆவலுடன் ஆராய்ச்சிக்கட்டுரையின் பிரதியைப் புரட்டிப் பார்க்க நினைத்து துலாவியவனின் கையில் சிக்கியது மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் மூல மொழி பதிப்பு. எதோ நினைவாய் புரட்டிய ஒரு எண்ணின் பக்கத்தில் இருந்த பத்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதறிப்போய் மொழிபெயர்ப்பு புத்தகத்தின் அதே பக்கங்களைப் சரிபார்க்க, அந்தப் பத்தி மொழிபெயர்க்கப்படாமல் விடப்பட்டிருந்தது புரிந்தது. பத்திகளில் சொல்லப்பட்டிருந்த, பகலில் மாட்டப்பட்டு இரவில் சற்றே இளகும் முகமூடிகளைப் போலில்லாமல் இரவிலும் இளக முடியாத முகமூடிகளுடன் அலையும் மனிதர்களைப் பற்றிய வரிகள் என்னை சுயபச்சாதாபத்திற்கு உள்ளாக்கி தொட்டியில் சிதறும் தண்ணீர்த்துளிகளைக் கவனித்தபடியே உள்ளங்கைகளின் மத்தியில் அடங்கமறுக்கும் தேவையாய், பிசுபிசுப்புடன் கைமாற அதிர்ச்சியின் ஆச்சர்யக் கலவையில் அவள் முகம் அந்த அறையின் வெளிச்சத்தில் பிரகாசித்தது. மனித உணர்வுகளை அப்பட்டமாய் எழுதப்பட்ட அச்சிடப்பட்ட காகிதத்தின் வரிகளாய் அல்லாமல் அப்படியே உணர்வுகளாய் உள்வாங்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு பிரதி எழுப்பும் அகங்காரச்சிரிப்பு தாங்கமுடியாததாய் நீள, உறிஞ்சித் துப்பிய சக்கையாய் அங்கே மௌனம் கவிழ, பிரதியை எரித்து குளிர்காய்ந்தவாறு முகமூடிகளற்ற நிர்வாணம் எகிறிக்குதித்தது.

Read More

Share Tweet Pin It +1

15 Comments

Popular Posts