Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

In ஈழம்

No Marina; I love it

ஆட்சியில் இல்லாத பொழுது மரணம் நிகழணும்னு நினைத்த பொழுது மெரினா பிரச்சனை கிடையாது. இப்ப இதுவும் சேர்ந்து.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

RP ராஜநாயஹத்தின் இந்தப் பதிவுக்கு போட நினைத்த கமென்ட் ஒன்று.

“When a big tree falls, the ground shakes” இல்லையா?
கத்திரிக்கா வெண்டைக்கா பிரச்சனையா, எத்தனை க்ரவுண்ட் ஷேக் ஆகப்போகுதோ???

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Taboo Subject ஈழம் தமிழ்

ஈழத் தமிழர்கள் - Taboo Subject; 7-ம் அறிவு

ஏன் 7-ம் அறிவைப் பற்றி இத்தனை எதிர்ப்பு தெரியவில்லை. ஈழத் தமிழர்களைப் பற்றியும் தமிழர்களைப் பற்றியும் பேசியதாலா தெரியவில்லை. ஈழத்தமிழர்களை Taboo சப்ஜெக்டாக வைத்திருப்பதில் எனக்கு சம்மதம் இல்லை.

முக்கியமான படம், பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இணையத்தில் எழுதப்படும் மொக்கை விமர்சனங்களை வைத்து இந்தப் படத்தை நிராகரிக்காதீர்கள். நிச்சயமாகப் பார்க்க வேண்டிய ஒன்று. தமிழர்கள், ஈழத்தமிழர்கள், இலங்கைப் பிரச்சனை எல்லாவற்றையும் காசாக்கப் பார்க்கிறார்கள் அது இதென்று புலம்புகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் விமர்சனம் எதையும் படிக்காமல் படம் பார்க்க நினைத்ததால் இதுவரைப் படிக்கவில்லை.


படம் ஆரம்பித்த ஐந்துநிமிடங்களுக்குத் தான் சென்றிருப்போம். போதி தர்மர் சீன குழந்தை ஒன்றிற்கு மருத்துவம் தருவதில் ஆரம்பித்தது 7-ம் அறிவு எங்களுக்கு, ஒன்றும் விட்டுவிட்டதாக நினைக்கவில்லை. ஹாலிவுட் படம் ஒன்றை பார்பது போன்றே இருந்தது ஆரம்பக் காட்சிகள். போதி தர்மனைப் பற்றிய பேச்சு தொடங்கிய பொழுதுகளிலேயே அவரைப் பற்றிப் படிக்கத் தொடங்கியிருந்தேன். ரமேஷ் - பிரேம் படித்துவிட்டு புத்தரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள நினைத்துப் புத்தமதம் பற்றிப் படித்திருக்கிறேன். கட்டுரையும் - கட்டுக்கரையும் புத்தகத்தில் போதி தர்மனைப் பற்றி இருப்பதை இங்கே குறிப்பிடத்தான் வேண்டும். முடிந்தால் இன்னொரு தருணத்தில் எழுதிப் போடுகிறேன்.

மருத்துவத்தை வைத்துத்தான் மதங்கள் பரவின என்றே நினைக்கிறேன். மன்னனின் நோயைத் தீர்த்ததால் மன்னன் மதம் மாறி அப்படியே மக்களும் மதம் மாறும் காட்சிகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன - பழைய காலங்களில். சமண மதமும் பௌத்த மதமும் தமிழகத்தில் வேறூன்றி இருந்ததற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில், போதி தர்மன் பற்றி வந்திருக்கும் இந்தப் படம் முக்கியமானதாக இருக்கிறது.

பௌத்தர், சமணர் படுகொலை செய்யப்படுதல், பௌத்த, சமணப் பள்ளிகள் விஹாரைகள் இடிக்கப்பட்டு கோயில்கள் எழுப்பப்படுதல், பௌத்த சமணம் மற்றும் பிற சமய நூல்கள் எரித்தழிக்கப்படுதல், பௌத்த சமண சமயங்களைப் பின்பற்றிய மக்கள் வாளின் முனையில் சமய மாற்றம் செய்யப்படுதல், சமயம் மாற மறுத்தோர் தீண்டாமைக்குட்படுத்தல், சமண, பௌத்த சான்றோர் தமிழக எல்லைக்கு வெளியே ஓடித் தப்பிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தல், மீண்டும் பேரரசுகளை உருவாக்குதல் போன்றவை இக்காலக்கட்டத்தின் செயல்கள். இவற்றிற்கு ஆதாரம் ஆயிரம் இருந்தும் இன்றுவரை தமிழறிவின் மறைக்கப்பட்ட பகுதியாக இவை இருந்து வருகின்றன. சைவமும், வைணவமும் மக்கள் மேல் முதலில் திணிக்கப்பட்ட, பிறகு ஏற்கப்பட்ட சமயங்கள் என்பதை இன்று கூறுவது ஏதோ பயங்கரவாதச் செயல் என்பது போல மனித வெறுப்பும் ஆதிக்க வெறியும் கொண்ட சாதி ஒடுக்குதலை ஏற்ற அறிவு மரபு ஒன்று இங்கே கூச்சல் இடலாம். ஆனால் உண்மை கூச்சல்கள் மறைக்கப்படுவதில்லை.

நான் கொஞ்சம் நான் - லீனியராகப் படம் போகத் தொடங்கியதுமே நினைத்தேன் தமிழ்நாட்டில் படம் விளங்கிறும் என்று. அது போலவே விமர்சனங்கள் வந்திருப்பது என் நம்பிக்கை பொய்க்கவில்லை என்கிற எண்ணத்தை வளர்க்கிறது. எல்லோருக்கும் A.R. Murugadossயிடன் என்ன எதிர்பார்த்துச் சென்றார்கள் என்று தெரியாது நான் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே வந்திருக்கிறது.

சூர்யாவின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது, ரொம்பவும் அறிவுஜீவி போலக் காட்டியிருப்பதை தவறென்று கூறவில்லை, எதற்கு சர்க்கஸ் என்று புரியவில்லை, ஒருவேளை போதிதர்மர் இன்றிருந்தால் சர்க்கஸ் வேலைக்குத் தான் சரியென்று சொல்லவருவதாக விமர்சனம் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை.

சுருதி நன்றாக நடனம் ஆடுகிறார், இவர்கள் செய்யும் ஜெனிடிக் ஆராய்ச்சியை வைத்து இவரது தகப்பனாரிலிருந்து கொஞ்சம் நடிப்புக் கலையை இவருக்குக் கொண்டுவரலாம், ஆனால் பெரிய வசனம் இருக்கும் காட்சிகளில் கம்ஃபொர்ட்டபிளாக இவர் நடித்திருப்பது தெரிகிறது. சண்டைக் காட்சிகள் தான் பிரம்மாதம், நிறைய உழைத்திருக்கிறார்கள் தெரிகிறது. இன்னமும் இரண்டு அல்லது மூன்று பாடல்களை செதுக்கியிருந்தால் இன்னமும் கிரிப்பாக வந்திருக்கக்கூடும்.

தமிழர்களைப் பற்றியும், ஈழத்தமிழர்கள் பற்றியும், ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியும் வரும் வரிகளில் எனக்குத் தவறொன்றும் தெரியவில்லை. சொல்லப்போனால் இன்னமும் யாழ் நூலகம் எரிந்தது கூட தெரியாத எத்தனையோ தமிழர்களுக்கு அந்த விஷயம் சென்று சேரலாம். இதைச் சொல்லிப் பணம் பறிக்கிறார்கள் என்று புலம்புவதைக் கேள்விப் படுகிறேன். இவர்கள் அனைவருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது, ஈழத்தமிழர்கள் பற்றிய பிரச்சனைகளை, ஈழப்போராட்டத்தை ஒரு Tabooவாக வைத்திருப்பதற்கு ஆனால் அதைப் பற்றிப் பேசப்பட்டே ஆகவேண்டும். இந்த அளவில் அதற்கான ஒரு ஓப்பனிங் கிடைத்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. இப்பொழுது எடுத்ததற்கு நன்றிகள். படம் பார்த்து வந்ததும் இதை எழுதுகிறேன் உடனடியாக எழுத நினைத்து. பின்னால் தேவையான படம் பற்றிய என் கருத்துக்களையும் எழுதுகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Layoff ஈழம்

ஐயோ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை

சசி ஒரு பதிவெழுதியிருந்தார், அவரளவிற்கு தைரியம் கிடையாதென்பதால் அது போன்றதொரு பதிவை நான் போடவில்லை. அவ்வளவே. 'தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்' என்பதில் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது, அப்படியே ஸ்டாலினின் 'You cannot make a revolution with silk gloves.' என்பதும். ஆனாலும் மக்கள் இப்படிக் கொத்துக்கொத்தாய் உயிரிழக்கும் பொழுது, நாம் இது வரை மனதில் வைத்திருந்த நியாயங்கள் எல்லாம் அநியாயங்களாய் நீள்கின்றன. அடிப்படைகளையே மாற்றிக்கொள்ளக்கூட மனம் தடுமாறுவதில்லை, மரணம் அத்தனை வலிமையான ஆயுதம். ஆனால் இதைக் கொண்டு தான் இராஜபக்ஷே போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்து பயமுறுத்துகிறார்கள் எல்லாவற்றையும் துறந்து விட்டு இழந்து விட்டு ஓடிவிடு இல்லையென்றால் அழிக்கப்படுவாய் எனும் பொழுது எந்தப் பக்கம் பேசுவது என்ற குழப்பமே நீள்கிறது. இந்திய சுதந்திரம் அஹிம்சையால் பெறப்பட்டது என்பதில் எனக்கு இன்னமுமே கூட நம்பிக்கையில்லை, அதேபோல் ஆயுதம் தாங்கிய போராட்டாம் விடுதலை பெற்றுத்தராது என்பதிலும் கூட.

Capgemini ல் இருந்து 1600 நபர்களை வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள் என்ற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது, சென்னை, புனே, ஹைதராபாத் என்று Kanbay இருந்த இடங்களில் இருந்து வெளியேற்றம் நடந்திருக்கிறது. Kanbayவின் முக்கியமான க்ளையண்டான HSBC அதனுடைய ப்ராஜக்ட்களை திரும்ப வாங்கிக் கொண்டதால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம். என்னுடைய நண்பர்கள் சிலருக்கும் இப்படி நடந்திருப்பதாக செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது, உச்சிக் கொண்டையாகிய சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியின் ஈறும் பேனும் இது போன்ற லே ஆஃப்கள் ஆனால் தாழம்பூக்களை மனம் இயற்கையாகவே விரும்புகிறது என்ன செய்ய, தனக்கு வந்தால் தெரியும் ஈறும் பேனும் என்று இளக்காரம் பேசும் மக்களுக்கு புன்சிரிப்பை மட்டும் காட்டிவிட்டு நகரவேண்டியிருக்கிறது.



ஜெயமோகனின் அனல் காற்று படித்தேன், ஒரே காரணம் அய்யனார் அதைப்பற்றி எழுதியிருந்த சில வரிகள், முன்னர் யாரோ ஒருவர் பெயர் மறந்துவிட்டது கேட்ட 'படிச்சிட்டீங்களா'விற்கு இல்லை என்றும் படிக்கும் ஆவல் இல்லையென்றும் சொல்லியிருந்தது நினைவிற்கு வருகிறது. அய்யனார் சொல்லியிருந்த ஒன்றிரண்டு வார்த்தைகளுக்காக படிக்க நேர்ந்தது, ம்ஹூம் தூக்கம் வராதா ஒரு இரவில் இன்னும் கொஞ்சம் நேரம் தூக்கத்தை தள்ளிப் போட உதவியது. ஜெயமோகனின் வகையான எழுத்தில்லை இது, என்பதைத் தவிர்த்து, வேறு யாராவது எழுதியிருந்தால் இரண்டாம் பாக முடிவில் தூக்கியெறிந்திருப்பேன். எனக்கு ஆதவன் வாசனை அதிகம் தெரிந்தது, நான் ஆதவனை அதிகம் படித்தது காரணமாய் இருந்திருக்கலாம். ஆதவன் பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தைப் பற்றிய் எழுதியதும் காரணமாய் இருந்திருக்கலாம், கொஞ்சம் போல் சாரு வாசனை வந்தது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. எப்பொழுது ஜெமோ எழுத்து படித்தாலும் நான் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பேன் என்பதைப் போலவோ என்னுடைய கற்பனைகளைப் போலவே இருப்பதைப் போலவோ இருக்கும். அனல் காற்று இதற்கு விதிவிலக்கல்ல. இரண்டு மூன்று முறை Mother Fucker என்று வந்துவிட்ட காரணத்தாலேயே இதை இன்செஸ்ட் வகைக் கதை என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன், என் பெயர் ராமசேஷனில் Mother Fucker வார்த்தைகள் இல்லாமலே அதைப் பற்றிச் சொல்லியிருப்பார். ஒரு எல்லையைத் தாண்டாமல் ஜெமோ எழுதியிருப்பதைப் போலவே தோன்றியது அவராய் வகுத்துக் கொண்ட அந்த எல்லையெல்லாம் தாண்டி மக்கள் எழுதத் தொடங்கி எழுதி காலமாகுது என்று சொல்ல நினைத்தேன். சொல்லிட்டேன்.

இந்தப் பதிவை வைத்து ஒரு டெஸ்டிங் செய்யலாம் என்ற ஒரு ஆசை, செய்யப் போகிறேன். ரிசல்ட் நான் எதிர்பார்ப்பதைப் போல் வந்தால் சொல்கிறேன்.

பசங்க படம் இன்னும் பெங்களூரில் வெளியாகலை நல்லாயிருக்கு என்று மக்கள் சொல்லும் பொழுது பார்க்க ஆசையாகயிருக்கிறது. வெளியாகாமல் போகக்கூட வாய்ப்பிருக்கிறது, இப்படி மிஸ் ஆன படம் தான் சுப்பிரமணியபுரம்.

தலைப்பை பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. புரிஞ்சவங்க புரிஞ்சிக்கோங்க புரியாதவங்க புரிஞ்சவங்களைக் கேளுங்க

Read More

Share Tweet Pin It +1

7 Comments

Popular Posts