In Only ஜல்லிஸ்

நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

சமீபத்தில் ஜூனியர் விகடனின் ஒரு கட்டுரையைப் படித்ததும் எனக்கென்னமோ இந்தத் தலைப்பு நினைவில் வந்தது. அதனால் வைத்திருக்கிறேன் அப்படியே. விஷயம் என்னான்னா நடிகை பத்மபிரியா இயக்குநர் சாமி நடிகைகள் விபச்சாரிகள் முகத்தில் முடி முகமூடி இது எதற்கும் இந்தப் பதிவிற்கும் சம்மந்தம் கிடையாது என்பது தான்.

சரி மேட்டருக்கு - நன்றி ஜூனியர் விகடன்

கர்ப்பமாக இருக்கும் மனைவியை அழைத்துக் கொண்டு பரிசோதனைக்கு சென்ற இடத்தில், ‘உனக்கு எய்ட்ஸ்’ என்று கணவனை பார்த்துச் சொல்கிறார்கள். அந்த அதிர்ச்சியில் கணவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவி, கருவையும் கலைத்துவிட்ட நிலையில், ‘லேப் ரிசல்ட்டில் சொல்லப்பட்டது தவறான தகவல்’ என தெரிய வந்தால் எப்படி இருக்கும்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன் புவனேஸ்வரி தம்பதியின் வாழ்க்கையில்தான் விதி இப்படி விளையாடி இருக்கிறது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மாவட்ட கலெக்டர் உதயசந்திரன் முயற்சியால் அந்தத் தம்பதி மீண்டும் இணைந்துள்ளனர்.

புங்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும், மாரம்பாளையத்தைச் சேர்ந்த வாசுதேவனுக்கும் ஒரு வருடத்துக்கு முன்னால் திருமணம் இனிதே நடந்தேறி யுள்ளது. மண வாழ்க்கையின் விளைவாக புவனேஸ்வரி கர்ப்பம் தரிக்க... அருகாமையில் இருக்கும் விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பரிசோதனைக்கு சென்றுள்ளார்கள்.

மேற்கொண்டு நடந்த சம்பவங்களை வாசுதேவனே விவரிக்கிறார்.

‘‘என் பொண்டாட்டியை டெஸ்ட் பண்ணினப்ப, கூடவே எனக்கும் ரத்த பரிசோதனை செஞ்சாங்க. அப்பதான் இடிபோல அந்தத் தகவலை என்கிட்ட சொன் னாங்க. ‘உங்களுக்கு ஹெச்.ஐ.வி. பாஸிடிவ்’னு அவங்க சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்து போயிட்டேன். எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத எனக்கு எப்படி இந்த நோய் வந்துச்சுனு குழம்பிப் போய் இருந்தேன். இருந்தாலும், என் பொண்டாட்டிகிட்ட எந்த விவரத்தையும் சொல்லலை.

கொஞ்சநாள் கழிச்சு அவளும், என் மாமியார் சரஸ்வதியும் டெஸ்ட்டுக்குப் போயிருக்காங்க. அப்ப, ‘உன் புருஷனுக்கு எய்ட்ஸ் இருக்கு. அன்னிக்கு ரத்தத்தை டெஸ்ட் பண்ணும்போது கண்டுபிடிச்சுட்டோம்’னு அங்க இருந்த ஊழியர்கள் சொல்லி இருக்காங்க. அதைக் கேட்டதும் மயக்கமாகி விழுந்துட்டா.

உடனே அவங்க அம்மா, ‘நோய் இருக்கற புருஷனோட நீ வாழக்கூடாது’னு அவங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. அதோட, ஒரு தனியார் டாக்டர்கிட்ட போய் கர்ப்பத்தையும் கலைச்சுட்டாங்க. அதோட விட்டாங் களா... எய்ட்ஸ் இருக்கறதை மறைச்சுப் பொண் ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதா என்மேல சத்தியமங்கலம் மகளிர் காவல்நிலையத்துல புகாரும் கொடுத்துட்டாங்க.

புகாரை விசாரிச்ச எஸ்.ஐ., ‘‘என்கிட்ட ‘உன் மேல எஃப்.ஐ.ஆர். எதுவும் போடாம விட்டுடறேன். கல்யாணத்தப்ப போட்ட நகை, சீர்வரிசை எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்துடு’னு சொன்னாரு. அதை வாங்க எங்க வீட்டுக்கு வந்த மாமியார் நடுவீதியில நின்னு கூப்பாடு போட்டு எல்லாரையும் அசிங்கப்படுத்திட்டாங்க.

இந்த சம்பவத்தால எனக்கு ரொம்ப அவமானமா போச்சு. நேரா சத்தியமங்கலம் ஜி.ஹெச்சுக்குப் போய் ‘ஹெச்.ஐ.வி.’ டெஸ்ட் செஞ்சேன். டெஸ்ட்ல எனக்கு ஹெச்.ஐ.வி. இல்லேனு சொல்லிட்டாங்க. அப்பதான் எனக்குப் போன உசுரே திரும்ப வந்துச்சு. கோயம்புத்தூர் ஜி.ஹெச்&சுக்கும் போயி டெஸ்ட் செஞ்சேன். அங்கேயும் இல்லைனுதான் முடிவு வந்துச்சு. அப்படியும் விடாம, ஹெச்.ஐ.வி. இருக்கறதை உறுதிப்படுத்தற டெஸ்ட் டான ‘வெஸ்டர்ன் பிளாட்’ டெஸ்ட்டையும் அஞ்சாயிரம் செலவு பண்ணி செஞ்சேன். அதிலேயும் இல்லைனுதான் ரிசல்ட் வந்துச்சு’’ என்றார் வாசுதேவன்.

இவ்வளவு டெஸ்ட்களையும் கடந்த இரண்டரை மாதங் களாக செய்த வாசுதேவன், அனைத்து ரெக்கார்டுகளையும் எடுத்துக்கொண்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் உதய சந்திரனிடம் போயிருக்கிறார். நடந்த விவரங்களை கலெக்டரிடம் எடுத்து சொன்னவர்,

‘எனது மனைவியை நீங்கள்தான் என்னோடு சேர்த்து வைக்கவேண்டும். தவறான தகவல் தந்த விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று முறையிட்டிருக்கிறார். கலெக்டரும் ஈரோடு ஜி.ஹெச்&சின் கண்காணிப்பாளர் டாக்டர் உசேன் அலியிடம், ‘விசாரணை செய்து உடனே அறிக்கை தாக்கல் செய்யும்படி’ உத்தரவிட்டிருக்கிறார்.

மேற்கொண்டு நடந்த சம்பவங்களை டாக்டர் உசேன் அலி சொன்னார். ‘‘கலெக்டர் உத்தரவு போட்டதும் நான் விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போய் விசாரணை நடத்தினேன். அந்த விசாரணையில, வாசுதேவனுக்கு ஹெச்.ஐ.வி. இருக்கறதா தவறான ரிப்போர்ட் கொடுத்ததைத் தெரிஞ்சுகிட்டேன். பிரிஞ்சு போன தம்பதியை எப்படியாவது சேர்த்து வைக்கணும்னு கலெக்டர் சொல்லி இருந்ததால, அவங்க ரெண்டு பேரையும் ஒரே இடத்துக்கு வரச் சொல்லிப் பேசினேன். நடந்த சம்பவங்களை எல்லாம் புவனேஸ்வரிக்கு எடுத்து சொன்னதும், புரிஞ்சுகிட்டாங்க. அவங்க அம்மா சரஸ்வதிதான் கொஞ்சம் சமாதானம் ஆகலை. மூணு பேரையும் கலெக்டரோட கேம்ப் ஆபீஸ§க்குக் கூட்டிட்டுப் போனேன். தம்பதிக்கு ஆறுதல் வார்த்தை சொன்ன கலெக்டர் ‘ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்’னு அட்வைஸ் செஞ்சு அனுப்பி வைச்சார்’’ என்றார்.

புங்கம்பள்ளியில் இருந்த புவனேஸ்வரியை சந்தித்தபோது, ‘‘என் புருஷன்கூட திரும்ப சேர்றதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மாசத்துல நல்லநாள் பாத்து அவரோட வீட்டுல கொண்டுபோய் விடறதா சொல்லி இருக்காங்க. ஆனா, அவசரப்பட்டுக் கருவை கலைச்சதை நினைச்சுதான் கலங்கிப் போயிருக்கேன்’’ என்றார் ஈர விழிகளுடன்.

கலெக்டர் உதயசந்திரனை சந்தித்தபோது, ‘‘ஹெச்.ஐ.வி. இருப்பதாக ஒரு தவறான ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறார் லேப் டெக்னீஷியன். அதனால ஒரு குடும்பத்துல என்னென்னமோ நடந்து போச்சு. தவறாக டெஸ்ட் செய்த லேப் டெக்னீஷியன் தாமஸ் தற்போது திருவள்ளூர் மாவட்டத்துக்கு மாற்றலாகி சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளேன். விரைவில் அந்தத் தம்பதிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தொகுப்பு ஊதிய அடிப் படையில் ஏதேனும் வேலை போட்டுத்தர ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.

இதற்கிடையே, ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் நாகராஜன், திருவள்ளூர் சென்றுவிட்ட தாமஸிடம் இப்பிரச்னை பற்றி விசாரணை நடத்தியிருக் கிறார். நம்மிடம் பேசிய நாகராஜன்,

‘‘தாமஸிடம் நான் விசாரித்ததில், ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. வாசுதேவன் ரத்தத்தை பரிசோதித்தபோது என்ன முடிவு வந்ததோ அதைத்தான் ரிப்போர்ட்டாக கொடுத்தேன்’ என்கிறார். ஆகவே எங்கு தவறு நடந்தது... இதில் வேறு ஏதாவது குழப்பங்கள் நடந்திருக்குமா என இலாக்காபூர்வ விசாரணை நடந்து வருகிறது. அது முடிந்த பிறகுதான் அடுத்து என்ன செய்வது என முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

சரி இதில் இருந்து நான் என்ன சொல்லவருகிறேன் என்பது போன்ற கேள்விகளில் இறங்கிவிடாதீர்கள். நான் சொல்ல வருவது ஒன்றுதான் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது ரொம்பவும் பழைய கான்செப்ட்; இப்பல்லாம் ஒரு பானை சோற்றை பதம் பார்க்க வேண்டுமென்றால் எல்லா பருக்கைகளையும் தான் பார்க்க வேண்டும்.

அந்தப் பெண்ணின் மீது தவறில்லை தான்; கணவனுக்கு எய்ட்ஸ் என்று தெரிந்ததும் விலகிச் செல்வது தவறாகச் சொல்லவில்லை அப்படியே மாமியாரின் தூண்டுதல்களையும்.

அப்ப என்னதாண்டா சொல்லவர்ற "இயக்குநரால் அடிவாங்கிய, அசிங்கப்படுத்தப்பட்ட பெண்ணைப் பற்றிய பதிவுகள் வரும் அதே வேளையில் இப்படி தான் தவறே செய்திராத பொழுதும் பழிவாங்கப்பட்ட ஆணைப்பற்றிய பதிவு வரணும் அதுக்காகவா" என்று கேட்டால் எனக்குப் பதில் தெரியவில்லை.

இன்னிக்கு புதன் கிழமை வழமை போல் பெங்களூரின் புகழ் கூறும் ஹோட்டல் Samarkhandற்குச் சென்று உண்டுகொழுத்து உறக்கம் கண்களைத் தழுவ வேலை தலைக்கு மேல் இருக்க தூங்கிவிடாமல்(எப்படி அர்த்தப்படுத்தினாலும்) இருக்க எழுதுறேன்னும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் எனக்கு உண்மையிலேயே எதற்காக இந்தப் பதிவு என்று விளங்கவில்லை.

Related Articles

30 comments:

  1. //ஆனால் எனக்கு உண்மையிலேயே எதற்காக இந்தப் பதிவு என்று விளங்கவில்லை.//

    தலைவரே, எனக்குத் தெரியும் நீங்கள் எதற்குப் பதிவு போட்டீர்கள் என்று. என்ன உங்க கிட்ட இருந்து இவ்வளவு லேட் ரியாக்ஷனை எதிர்பார்க்கலை. நேத்தே எதிர்பார்த்தேன்.

    ஆமா இந்த நியூஸ் எல்லாம் உங்களுக்கு எபபடி கிடைக்குது?

    ReplyDelete
  2. நந்தா இல்லை என்னுடைய அந்தப் பிரச்சனை சம்மந்தமான முடிவை குசும்பனின் பதிவில் எழுதியிருந்தேன்.

    அதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை அந்த விஷயத்தில் எனக்கு.

    ReplyDelete
  3. மோகன்,

    பதிவ போட்டது தான் போட்டீர் வேற தலைப்புக்கூடவா பஞ்சம், என்னமோ போங்க , சொ.செ சூன்யம் வச்சுக்க ரொம்ப ஆசைப்படுறா போல இருக்கு.

    ஏற்கனவே "லஷ்மிகரமானவங்க" ஒரு பதிவ போட்டது படிச்சுட்டு ஏதொப் சொல்லனும்னு சொல்றனா இல்லை ஹேங்க் ஓவர்ல இந்த பின்னூட்டம் போட்டனா , ஏன் போட்டேன் எதுக்கு போட்டேனு தெரியலை, இல்லை அடுத்த ஹேங்க் ஓவர் வர வரைக்கும் தெளிவா இருக்க ஏதோ போடனும்னு தோனிச்சு போட்டேன்னும் வைத்துக்கொள்ளலாம்! :-))(எனக்கு கூட இப்படிலாம் எழுத வருதே!)

    ReplyDelete
  4. ஹாஹா நல்லா எழுதுறீங்க, தலைப்பையும் காப்பிரைட் எடுத்தீங்கன்னா என்ன பண்ணுறதுன்னு தெரியலை, நீயிட்ஷேவைத்தான் கூட்டிக்கிட்டு வரணும் ;)

    ReplyDelete
  5. கெட்டதுலயும், நல்லது நடக்குது பாருங்க. அந்த தம்பதிக்கு வேலை போட்டு தந்ததை சொன்னேன். விதி, விதின்னு சொல்றது இதைத்தானோ?

    இதே தலைப்பில அடுத்து இன்னொரு பதிவு போடுங்க, அதில கிரிக்கெட் பற்றியோ, ஏதாவது மொக்கை சினிமா விமர்சனமோ அல்லது தொழில்நுட்பம் பற்றியோ எழுதுங்க. :))))))))

    ReplyDelete
  6. அடப்பாவிகளா. ஒரு குடும்பத்தோட எப்படி விளையாடிட்டாங்க.

    இங்க நம்மளைப் பத்திய ரிஸல்டை மனைவி கிட்ட கூட சொல்ல முடியாது. அப்படிச் சொன்னதுக்கு ஒரு கேஸ், தப்பாச் சொன்னத்துக்கு ஒரு கேஸ் எனப் போட்டு தாளிச்சு இருப்பாங்க.

    ஹூம். என்னமோ போங்க! (இது தலைப்புக்கு!) :))

    ReplyDelete
  7. அருமையான பதிவு, கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற நம் பண்பாட்டை மீறி கணவனையும்
    ஒத்துக்கி தள்ளி, வயிற்றில் இருந்த சிசுவையும் அழித்த அந்த பாதகியை நினைத்தால் நெஞ்சு பதபதைக்கிறது.

    ReplyDelete
  8. உஷாக்கா

    //நெஞ்சு பதபதைக்கிறது//

    நான் வேணும்னா கொஞ்சம் போல் பெட்ரோல் வாங்கி அனுப்பி வைக்கவா?

    For your kind information பதிவுக்கு சம்மந்தமில்லாதது சொல்லிட்டேன். அந்த நபருக்கு எய்ட்ஸ் இருந்திருக்குமென்றாலும் குழந்தையை எய்ட்ஸ் தாக்காமல் பிறப்பித்திருக்க முடியும் என்பது அறிவியல் படி சாத்தியமே!

    ReplyDelete
  9. //கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற நம் பண்பாட்டை மீறி கணவனையும்
    ஒத்துக்கி தள்ளி, வயிற்றில் இருந்த சிசுவையும் அழித்த அந்த பாதகியை நினைத்தால் நெஞ்சு பதபதைக்கிறது.// அதானே உஷா, புருஷனுக்குத் தொழுநோயாவே இருந்தாலும் கூடைல வச்சு தூக்கிட்டுப் போய் அதும் அவன் இன்னொருத்தி வீட்டுக்குப் போகணும்னாலும் கூட தூக்கிட்டுப் போன நளாயினிய பத்தினி தெய்வமாக் கொண்டாடற இந்த மண்ணுலயா இப்படி ஒரு அக்கிரமம்? என்னத்தைச் சொல்ல? கலி முத்திப் போச்சு உஷா, கலி முத்திப் போச்சு....

    // அந்த நபருக்கு எய்ட்ஸ் இருந்திருக்குமென்றாலும் குழந்தையை எய்ட்ஸ் தாக்காமல் பிறப்பித்திருக்க முடியும் என்பது அறிவியல் படி சாத்தியமே!// அப்படியா மோகன்? பட்டணத்திலிருக்கும் படிச்ச மேதாவிகளுக்கெல்லாமே எய்ட்ஸ் பத்தின புரிந்துணர்வு அதிகமில்லாம இருந்தாலுமே கூட ஈரோடு மாவட்டத்துல இருக்கற புங்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும் அவங்க அம்மா சரஸ்வதிக்கும் இவ்வளவு சின்ன விஷயம் தெரியாம போகச் சான்ஸே இல்லை. இதெதுவும் தெரியாத மாதிரி வேணும்னே போய் கருவைக் கலைச்சுட்டு வந்தது அந்த இரு பெண்களின் கூட்டு சதிதானே? உஷாக்கு சொன்ன அதே ஆறுதலைத் தான் உங்களுக்கும் சொல்ல வேண்டியிருக்கு மோகன் - கலி முத்திப் போச்சு. என்ன செய்யறது?

    பி.கு: பதிவுக்கு சம்பந்தமில்லாம ஒரு டவுட் - நெஞ்சு பதைபதைப்பதற்கும் பெட்ரோலுக்கும் என்ன சம்பந்தம் மோகன்?

    ReplyDelete
  10. :)))

    பொம்பளை தான் என்று நினைக்குறேன் :)

    ReplyDelete
  11. லக்ஷ்மி ஆமாம் கலி முத்திப் போய்டுச்சு! கல்கி அவதாரத்திற்கான நேரம் வந்துடுச்சு வேறென்ன சொல்ல சொல்லுங்க.

    //பி.கு: பதிவுக்கு சம்பந்தமில்லாம ஒரு டவுட் - நெஞ்சு பதைபதைப்பதற்கும் பெட்ரோலுக்கும் என்ன சம்பந்தம் மோகன்?//

    இதற்கான பதில் உஷா கேட்டால் அவருக்கு தரப்படும் ;)

    ReplyDelete
  12. பட்டியன் - முயற்சி செய்றேங்க...

    இ.கொ. நம்ம மக்கள் கிட்ட இன்னும் இதைப் போல் நிறைய எதிர்பார்க்கலாம். என்ன செய்வது பாவம் உஷா, லக்ஷ்மி சொல்ற மாதிரி கலி முத்திடுச்சு - கல்கி பகவானுக்கு சொல்லி அனுப்பிட வேண்டியதுதான்.

    ReplyDelete
  13. என்னமோபா, ஜெலுசில் மாத்திரை அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தால், மனம் குளிர்ந்து இருக்கும். பெட்ரோல் அனுப்புகிறேன்
    என்றது பயமாய் இருக்கு.
    ஏன் லஷ்மி, இப்படி பட்ட பாதகியை உதறி தள்ளாமல், கலெக்டரிடம் எல்லாம் மனு கொடுத்து சேர்த்து வையுங்க என்று சொல்வது ஆண்மையா? பேசாமல் சொல் பேச்சி கேட்டு, கோடு தாண்டா பத்தினி பெண்ணை தேடி கல்யாணம் செய்துக் கொண்டு சுகமாய் வாழலாம் இல்லையா?
    கலி முத்திடுத்துபா முத்திடுத்து. காலைல செல்வன் ஒரு பாதிக்கப்பட்ட இளைஞன் கதையை எழுதினா, அத்தனையும் வந்து சிரிச்சிட்டு போறதுகள். கொஞ்சமாவது நம்மை போன்ற ஆண் பாதிக்கப்பட்டு இருக்கிறானே என்று கண் கலங்க வேண்டாம் :-(
    ஹூம்.. ஒண்ணும் சரியில்லை.

    ReplyDelete
  14. உஷா எனக்கு உண்மையிலேயே நீங்கள் நான் எழுதியதற்கான பொருள் கேட்கிறீர்களா என்று இன்னும் தெரியவில்லை. உண்மையிலேயே தெரிய வேண்டுமென்றால் கேளுங்கள் சொல்கிறேன்...

    //ஏன் லஷ்மி, இப்படி பட்ட பாதகியை உதறி தள்ளாமல், கலெக்டரிடம் எல்லாம் மனு கொடுத்து சேர்த்து வையுங்க என்று சொல்வது ஆண்மையா? //

    இங்க தாங்க அந்தாளு நிக்கிறாரு அவரு மட்டுமில்லை ஆண் இனமே நிக்குது - என்ன தான் பெண்டாட்டி கலி(பைத்தியம் இல்லை) முத்தி இவரை விட்டு விலகிப்போனாலும் அவளைத்தான் திரும்பவும் சேர்த்துப்பேன்னு நிக்கிறாரு பாருங்க. எனக்கு அப்படியே கையில் இருக்கிற முடியெல்லாம் நட்டுக்கிட்டு நிக்குது.

    நவீன நளாயனன் என்று சொல்லலாமா இவரை தெரியலை!

    ReplyDelete
  15. சிவா - நிறைய சிரிக்கிறீங்க உங்களுக்கு நான் எழுதினது சரியா புரிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன் ;)))) நானும் போட்டுக்குறேன்.

    ReplyDelete
  16. ஆம்பளை நல்லவனா இருந்தா மட்டும் போதாது சார். புத்திசாலியாகவும் இருக்கணும்.

    அவர், டெஸ்ட் ரிஸல்ட் தெரிஞ்சவுடனேயே மறு சோதனைகள் எல்லாம் செஞ்சிருந்து மனைவி கிட்ட மறைக்காம இருந்திருந்தா நல்லவர் என்பதையும் தாண்டி புத்திசாலி என்றும் பாராட்டி இருக்கலாம். மாமியாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட பிறகுதான் தன் நேர்மையை நிரூபிக்க மறு சோதனைக்குப் போயிருக்கணுமா?

    கணவன் மீது முழு நம்பிக்கை இருந்தாலுமே, இப்படி ஒரு ரிஸல்ட் கிடைச்ச மறுகணம் அந்தப் பெண் கருவைக் கலைத்துக் கொண்டது தான் புத்திசாலித்தனம். சந்தேகம் தீர்ந்தபிறகு இன்னொரு குழந்தை ஆரோக்கியமாகப் பெற்றுக் கொள்ள முடியும், ஆனால் ஏதோ விபத்தினால் மறு சோதனையில் அது ஊர்ஜிதமாகி இருந்தால், கரு கலைக்க முடிகிற நிலையைத் தாண்டி இருந்தால் எவ்வளவு குழப்பம்?

    ReplyDelete
  17. ரத்னேஷ் ரொம்பச் சரியா சொல்லியிருக்கீங்க.

    அந்தப் பொண்ணு செய்தது சரிதான் என்று நானும் நினைக்கிறேன் அதைப் பதிவில் குறித்தும் இருக்கிறேன்.

    ReplyDelete
  18. ஆம், சரித்திரத்தின் ஏடுகளை புரட்டி பார்த்தால் எத்தனை நளாயன்கள்? ஆனால் ஒற்றை நளாயினியை தலை மேல் தூக்கி வைத்து
    கொண்டாடுகிறது இந்த கேடு கெட்ட சமூகம். என் செய்வது, இங்கு ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி. ஏதோ நீயாவது ஆண் குல திலகங்கங்களின் தியாக வரலாற்றை அவ்வப்பொழுது எடுத்து இயம்பி இறுக மூடிக் கிடக்கும் இவ்
    மஞ்சகாமாலை கண்களுக்கும் உண்மையை விளக்கும் பணி செய்துக்கொண்டு இருப்பதால், உனக்கு தலை வணங்கிகிறேன்.

    ReplyDelete
  19. அக்கா வரலாறு தெரிந்தவர்களிடமும் அதைப்பற்றி பேசுபவர்களுடனும் உரையாடுவதென்பது எவ்வளவு சுவாரசியம் தரக்கூடியது என்பதுவும் எத்தனை உளமகிழ்வை அளிக்கக்கூடியது என்றும் அதைப் பற்றி தெரியாதவர்களுடனோ இல்லை அதைப்பற்றி பேசாதவர்களுடன் பேசும் பொழுதுதான் தெரியவருகிறது அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு அளித்ததற்கு எத்தனை கோடி செலவுசெய்தாலும்(பெட்ரோலுக்கல்ல) தகும். ;)

    ReplyDelete
  20. ஏன் இந்த கொலைவெறி

    ReplyDelete
  21. கொலையும் செய்வாள் பத்தினின்னு சொல்வாங்களே அது இதுதானா?

    அந்த நபரை நினைத்தால் வருத்தமாகயிருக்கிறது.

    ReplyDelete
  22. //உண்மையிலேயே எதற்காக இந்தப் பதிவு என்று விளங்கவில்ல//

    இந்தப் பதிவு மட்டும்தானா? :-)

    அது போகட்டும். என்னமோ கலி முத்திடுச்சாமே? அப்படினன என்னடே?!

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  23. //அது போகட்டும். என்னமோ கலி முத்திடுச்சாமே? அப்படினன என்னடே?!//

    அதுவா அண்ணாச்சி கடவுள் இருக்காரில்லே அவரோட லாப்டாப்பில் இருக்கும் எலியென்னு தான் நான் நினைச்சேன். அந்த எலியை வச்சுத்தாம்பா அவரு மனுஷங்க வாழ்க்கையோட விளையாடுறாரு. ஆனா பாருங்க கடவுளோட கைகளை விட கலி ச்ச எலி ச்ச மௌஸ் பெரிசாச்சுன்னா அவரால மெய்ன் டெய்ன் பண்ண முடியாதில்லை அப்ப அவரு கலியைக் காலி பண்ணாம மனுஷங்களைப் காலி பண்ணிடுவாரு.

    PS: அய்யா மாஜிக்கல் ரியலிஸம் எனக்கும் வருது போலிருக்கே !(ஆச்சர்யக்குறி)

    ReplyDelete
  24. // ‘உன் புருஷனுக்கு எய்ட்ஸ் இருக்கு. அன்னிக்கு ரத்தத்தை டெஸ்ட் பண்ணும்போது கண்டுபிடிச்சுட்டோம்’னு...//
    'முன்னாலியே டெஸ்டு ரிசல்டு தெரிஞ்ச கணவன் எங்கிட்ட சொல்லாம போனாலும், நல்ல எண்ணத்தோட தானே சொல்லாத இருப்பாரு'?ன்னு நினக்காத பொம்பள 'எல்லாம் ஒரு பொம்பளயா'? (ஐ, எனக்கும் பின்புத்தி).

    அதுக்கும் மேல,
    //சத்தியமங்கலம் மகளிர் காவல்நிலையத்துல ... புகாரை விசாரிச்ச எஸ்.ஐ., ‘‘என்கிட்ட ‘உன் மேல எஃப்.ஐ.ஆர். எதுவும் போடாம விட்டுடறேன். கல்யாணத்தப்ப போட்ட நகை, சீர்வரிசை எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்துடு’னு சொன்னாரு. //
    இந்த எஸ்.ஐ. க்கு என்னா? போட்டுக்கட்டுமே எஃப்.ஐ.ஆர்.!? என்னா பொம்பிளைங்கப்பா!
    நகை, சீர்வரிசை எல்லாம் கொடுத்து, பொண்ணயும் (இது எதுக்குன்னு புரியல?) கொடுத்த மாமியார், என்னவா இருந்தாலும் 'இல்லாமையிலும் சரி, எய்ட்ஸிலும் சரி தன்பெண் கைவிட மாட்டான் இந்த மாப்பிள்ளை" என்று எண்ணாத இந்த மாமியார் எல்லாம் ஒரு பொம்பளையா?!!

    ஹ்ம், என்னாத்தச் சொல்லுறது!

    ReplyDelete
  25. தனக்கு எய்ட்ஸ் எனத் தெரிந்த உடன் மனைவியிடம் சொல்ல எந்தக் கணவனும் முயல மாட்டான். அதே போல் அந்தப் பெண்ணும் அவள் தாயாரும் செய்ததும் சரி தான். இதெல்லாம் உலகில் இப்படித் தான் நடக்கும். நாம் சாதாரண மனிதர்கள் தான். உதாரண புருஷர்கள் இல்லை. அந்த எஸ்.ஐ சற்றே விசாரித்
    திருக்கலாம். அவர் செய்தது தவறு.
    ஆட்சித் தலைவர் செய்தது சரியான செயல்.

    ReplyDelete
  26. //'முன்னாலியே டெஸ்டு ரிசல்டு தெரிஞ்ச கணவன் எங்கிட்ட சொல்லாம போனாலும், நல்ல எண்ணத்தோட தானே சொல்லாத இருப்பாரு'?ன்னு நினக்காத பொம்பள 'எல்லாம் ஒரு பொம்பளயா'? (ஐ, எனக்கும் பின்புத்தி).//

    ச்ச அதுதான நான் கேக்குறது. ம்ம்ம் சரியாச் சொன்னீங்க கெக்கேபிக்குணி.

    //நகை, சீர்வரிசை எல்லாம் கொடுத்து, பொண்ணயும் (இது எதுக்குன்னு புரியல?) கொடுத்த மாமியார், என்னவா இருந்தாலும் 'இல்லாமையிலும் சரி, எய்ட்ஸிலும் சரி தன்பெண் கைவிட மாட்டான் இந்த மாப்பிள்ளை//

    இப்ப எய்ட்ஸ் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு இல்லை நகை பணம் வரதட்சணை எல்லாத்தையும் திரும்பத் தருவார்களா என்று கேள்வியும் நம்மனதில் எழுவதை தவிர்க்கமுடியலை இல்லைங்க?

    ReplyDelete
  27. //இதெல்லாம் உலகில் இப்படித் தான் நடக்கும். நாம் சாதாரண மனிதர்கள் தான். உதாரண புருஷர்கள் இல்லை. அந்த எஸ்.ஐ சற்றே விசாரித்
    திருக்கலாம். அவர் செய்தது தவறு.
    ஆட்சித் தலைவர் செய்தது சரியான செயல்.//

    ஆனால் பாவம் வேலை நேரத்தில் கோபப்படும் ஆட்கள் மட்டும் சாதாரண மனிஷர்களாய் பார்க்கப்படுவதில்லை. இங்கே எல்லாவற்றிற்கும் தான் இருக்கிறதே ஒன்று ஆண்களைப் போட்டுத்தள்ள Sexual Harassment!

    உஷாக்கா முன்ன எழுதினாங்க ஒரு தடவை ஆண்களுக்கும் உண்டு sexual harassment என்று ஆனால் ஒத்துக்கொள்பவர்கள் எத்தனை பேர். இந்த மாதிரி தவறா sexual harassment குற்றம் சொன்னா சொன்னவர் மேல் sexual harassment குற்றம் சுமத்தப்படுணும்கிறேன் நான்.

    ReplyDelete
  28. மொக்கைப் பதிவுல மொக்கைப் பின்னூட்டம் தான் போடுவது என் வழக்கம். இதுவரை ஜாலியாகத் தான் போட்டுக் கொண்டிருந்தேன்....

    //இப்ப எய்ட்ஸ் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு இல்லை நகை பணம் வரதட்சணை எல்லாத்தையும் திரும்பத் தருவார்களா என்று கேள்வியும் நம்மனதில் எழுவதை தவிர்க்கமுடியலை இல்லைங்க?//

    :-((( என் குழந்தைகளுக்கு நான் பயிற்றுவிப்பதை இங்கே நானும் பயில விரும்புகிறேன், உங்களுக்கும் அதுவே சொல்ல விருப்பம்: "சொல்ல வருவது இன்னாதது எனில் அப்படிச் சொல்லாதே!" இது இன்னாதது range-இல் கூட இல்லை. எனக்கு ஏதோ பதில் சொல்லணும்னு சொல்றீங்க:-(((((
    ஸாரி.

    ReplyDelete
  29. //மொக்கைப் பதிவுல மொக்கைப் பின்னூட்டம் தான் போடுவது என் வழக்கம். இதுவரை ஜாலியாகத் தான் போட்டுக் கொண்டிருந்தேன்....//

    மொக்கைப் பின்னூட்டம் போட்டாலும் சீரியஸா காஜி அடிக்கிறது என் வழக்கம்னு நீங்க நிச்சயமா வைச்சுக்கலாம்.

    //:-((( என் குழந்தைகளுக்கு நான் பயிற்றுவிப்பதை இங்கே நானும் பயில விரும்புகிறேன், உங்களுக்கும் அதுவே சொல்ல விருப்பம்: "சொல்ல வருவது இன்னாதது எனில் அப்படிச் சொல்லாதே!" இது இன்னாதது range-இல் கூட இல்லை. எனக்கு ஏதோ பதில் சொல்லணும்னு சொல்றீங்க:-(((((//

    இப்பத்தான் இன்னொரு பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுட்டு வந்தேன் - இருங்க உங்களுக்கும் காப்பி-பேஸ்ட் செய்றேன்.

    ---எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவுன்னு சாலமன் பாப்பய்யா சொல்லியிருக்காருங்க! அதனால் யாரும் யாருக்கு வேண்டுமானாலும் சொல்லித்தரலாம். தவறில்லை!!! ---
    இதுதான் அது.

    நீங்க உங்களுக்கு சரின்னு பட்டதை சொல்லியிருக்கீங்க. நான் எனக்கு சரின்னு பட்டதை செய்திருக்கிறேன். அவ்வளவுதானே. கூல்.

    //ஸாரி.//

    இப்படியெல்லாம் சொல்லி தர்மசங்கடப்படுத்தாதீங்க கெக்கேபிக்குணி.

    ReplyDelete
  30. ஒவ்வொருவரின் பார்வையில் அவர்கள் செய்தது சரியே.

    ஆனா பாவம் அந்த ஆள்.

    ReplyDelete

Popular Posts