Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

In கொடசாத்ரி நாட்குறிப்பு புகைப்படங்கள் லொள்ளு

ங்கொய்யால

கேள்வி கேட்பவர் - சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே! ஏன்?

பதில் சொல்பவர் - காந்தி செத்துப் போனதப் பத்தி எனக்கு ஒரு ஒப்பீனியன் இருக்கில்லையா அதை என்ன செய்யறது. அதான் வைச்சேன்!

கே.கே - காந்தி செத்துப் போய் 60 வருஷம் ஆய்டுச்சே அதை இப்பத்தான் வைக்கணுமா?

ப.சொ - இங்கப் பாருங்க காந்தி செத்துப் போனதிலிருந்து நான் பிஸியா இருக்கேன் - ப்ளாக்கில் 'குசு' விட்டதையெல்லாம் எழுதும் அளவிற்கு எனக்கு நேரம் கிடையாது. பாருங்க. காந்தி செத்துப் போனது தெரியும். காந்தி செத்துப் போனதில் இருந்து வரும் விமர்சனங்கள் எல்லாம் படிச்சிட்டு வர்றேன். ஆனால் பிசியா இருக்கேனே, உங்கள மாதிரி வெட்டியாவா இருக்கேன் சொல்லுங்க.

கே.கே - அதுக்காக காந்தி சாவுக்கு வருத்தம் தெரிவிக்கிறது ஓவரா தெரியலையா உங்களுக்கு?

ப.சொ - யோவ்! தமிழ்ல தான சொல்றேன்! காந்தி செத்தது மனசை உறுத்துற விஷயம். அவர் மரணத்தோடு சம்மந்தப்பட்டு எனக்கான கொள்கைகள் இருக்கு. என்ன காரணமானாலும் அதை ஒதுக்க முடியாது. ஆயிரம் தான் காந்தியோட சில விசயங்களில் உடன்பாடு இல்லாட்டாலும் காந்தி சாவு வருத்ததிற்குரியது! அதுமட்டுமில்லாமல் நான் என்ன நினைக்கிறேன்னு பதிவு செய்து வைக்கணும் இல்லையா?

கே.கே - அதுக்காக அறுபது வருஷம் கழிச்சா?

ப.சொ - ங்கொய்யால, காந்தி செத்ததைப் பத்தி நான் என்ன நினைக்கிறேன் தெரிஞ்சிக்கிறதுக்கு என்னையறிந்த நண்பர்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க அவங்களுக்காகத்தான் வைக்கிறேன். வந்துட்டாங்க்ய கேள்வி கேட்டுக்கிட்டு.

PS: இப்பல்லாம் வாரத்துக்கு ஒரு பதிவு போடுறதுக்குள்ளையே நுரை தள்ளுது. இரண்டு மூணு மாசத்துக்கெல்லாம் பதிவே எழுதாம இருந்தா எப்படியிருக்கும் என்று யோசித்ததால் வந்த விளைவு. மேற்சொன்ன கற்பனை உரையாடல், யாரையும் குறிப்பிடுவதல்ல.

------------------------------


இடையில் வந்து மூன்று நாட்கள் இடைவெளியில் கொடசாத்ரி சென்று வந்தோம். கொடசாத்ரி பெங்களூரில் இருந்து 500 கிமீ இருவழி 1000 கி.மீ. ஊர் சுற்றுவது தான் எனக்கொன்றும் புதிதில்லையே, ஆனால் இந்த முறை  கொஞ்சம் மாற்றம் தோழர் Comet வாங்கியிருந்ததால் வெட்டியாக நின்று கொண்டிருந்தTB(Royal Enfield - Thunderbird (350 cc))யில் நீர் வாறீரா என்று கேட்டார். அதற்கு முன் ஒரு 1000 கி.மீ அவருடன் அந்த வண்டியில் சென்றிருந்தாலும் ஓட்டியதில்லை. அதுமட்டுமல்லாமல் 400D வாங்கியதில் இருந்து ரிஸ்க் எடுக்க பயந்து கொண்டு அவருடன் TBயில் போகக்கூட இல்லை. ஏனென்றால் இதுபோல் 1000 கிமீ காட்டு வழி பயணங்களில் கீழே விழுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமானது. துடைத்துவிட்டுக் கொண்டு திரும்பவும் பில்லியனில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

நாம விழுந்தாலும் பரவாயில்லை காமெரா விழுந்தால் சரிவராது என்று தான் அவருடன் பயணம் மேற்கொள்ளவில்லை, ஆனால் இந்த ஆஃபர் நன்றாகயிருந்தது. என் சொந்த ரிஸ்கில் நான் TB ஓட்ட காமராவுடன் செல்ல வேண்டும் என்பது. சரி வண்டியக் கொடுங்க ஓட்டிப் பார்க்கிறேன் என்று சொல்லி வாங்கிவிட்டு இரண்டு கிமீ ஓட்டிப் பார்த்துவிட்டு 'வர்றேன் தல' என்று சொல்லி 1000 கிமீ ஓட்ட தயாரானேன். :) மூன்று நாட்களுக்கான உடைகள், வண்டிக்கான விஷயங்கள் எல்லாம் பையில், காட்டில் எங்கும் தங்க வேண்டி வந்தால் தங்குவதற்காக டெண்ட் ஒன்று. என்னுடைய ட்ரைபாட் எல்லாவற்றையும் கட்டியதும் ஒரு மஸ்த் லுக் வந்தது வண்டிக்கு.

பெங்களூரில் இருந்து குனிஹல், ஹசன், பெலூர், சிக்மகலூர், ஸ்ரீரிங்கேரி, ஆகும்பே, சோமேஷ்வர், கொல்லூர், கொடசாத்ரி, ஷிமோகா, பெங்களூர் என்று 1000 கிமீ தூர பயணம். ஆகும்பேயிலும், கொடசாத்ரியிலும் Travelers Bungalowவில் இரவு தங்கியிருந்தோம்.

இதில் குறிப்பிட வேண்டியது கொடசாத்ரி மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குப் போகும் 20 கி.மீ தொலைவு நான் TBக்கு புதியது என்பதால் என்னை கொல்லூரிலேயே வண்டியை விட்டுவிட்டு ஜீப்பில் வரச்சொல்லிவிட்டனர், இதில் தோழர் வேறு Cometஐக் கொண்டுபோய் மலைப்பாதையின் கொமட்டில் குத்தியதால், அவரும் வர இந்த அதிர்ச்சி நிகழ்வால் பாதிக்கப்பட்ட இன்னும் இரண்டு நபர்களும் ஜீப்பில் வர மொத்தம் கிளம்பிய ஏழு வண்டிகளில் கொடசாத்ரிக்கு ஏறியது மூன்று பைக்கள் தான். இன்னொரு Cometம், இரண்டு கரீஸ்மாக்களும். எனக்கு அந்த மலைப்பாதையில் வண்டியில் ஏறவேண்டும் என்பதெல்லாம் பெரிய ஆசை கிடையாது, ஆனால் மற்ற இரண்டு பல்ஸர் காரர்களுக்கும் அந்த ஆசை உண்டு ஆனால் வழிப்பாதையைப் பார்த்துவிட்டு இதிலெல்லாம் வண்டியை ஓட்ட முடியாது என்ற முடிவிற்கே வந்துவிட்டனர்.

சொல்லப்போனால் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு அந்த மலை மேல் ஏறி கீழிறங்கியதே பெரிய விஷயமாய் பட்டது செய்து முடித்ததும். அசாத்திய திறமை இல்லாமல் அந்த மலையில் நடந்தே ஏறமுடியாது எனும் பொழுது டூவீலர் ஓட்டுவதோ ஜீப் ஓட்டுவதோ அசாதாரணம். ஏன் சொல்கிறேன் என்றால் நாங்கள் கொடசாத்ரி மலைமேல் ஏறி சன்செட் பாய்ண்டிற்கு போக அழுப்புப் பட்டுக் கொண்டு அங்கிருந்தே சன்செட் பார்த்துமுடித்த பிறகு வந்த ஒரு கும்பல் இரண்டு ஜீப்களிலும் ஒரு ஜிப்ஸியிலும் வந்தது. அதில் ஒரு ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தது ஒரு பெண்! மூன்று வருடங்களுக்கு எல்லாம் முன்பென்றால் உடனே கீழேயிறங்கி TBயை எடுத்துக் கொண்டு மேலே வந்திருப்பேன், ஆனால் இப்ப அதையெல்லாம் செய்யறதில்லை. ஹாஹா.

பின்னர் அவர்களும் எங்களைப் போலவே திங்கட்கிழமை காலை கொடசாத்ரியில் இருந்து கிளம்பி, கீழே வந்து பெங்களூர் வந்தார்கள். காலை 11லிருந்து இரவு 2 மணி வரையான அந்த பயணத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்டேயிருந்தோம். அவர்கள் சாயா சாப்பிடும் சமயத்தில் நாங்கள் ஓவர்டேக் செய்வது நாங்கள் சாயா சாப்பிடும் நேரத்தில் அவர்கள் ஓவர்டேக் செய்வது என வெறும் சாயாவும் ஓவர்டேக்குமாக சென்றது. அன்றைக்கு இருந்த களைப்பில் ஒன்பது மணிக்கெல்லாம் தூக்கக் கலக்கம் வேறு. சத்தமாய்(TBயின் சத்தத்தையும் தாண்டி) பாட்டு பாடிக் கொண்டே வண்டி ஓட்டினேன், ஏறக்குறைய எல்லாரும் இது போல் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தனர் என்று கேள்விப்பட்டேன். ஒருவர் தனக்குத்தானே ரன்னிங் கமெண்ட்டரி மற்றும் பாட்டு என. எப்படா ஐம்பது கிமீ தாண்டும் சாயா குடிக்கலாம் என காத்திருந்தோம். அருமையான பயணம் அது. யாருமில்லாத ரோட்டில் மணிக்கு 80/90 கிமீ வேகத்தில் ஏழு பேரும் குறிப்பிட்ட இடைவெளியில் வந்த பயணம் மனதை ரம்மியப்படுத்தியது.

தும்குரில் Coffee dayயிலும் அந்த ஜீப் மக்களை சந்தித்தோம், அங்கிருந்து பெங்களூர் வரை எல்லோரும் ஒன்றாகத்தான் வந்தோம் ஏனென்றால் அத்தனை கண்டெய்னர்கள். ஒரு அற்புதமான பயணம்.

சில கொடசாத்ரி புகைப்படங்கள்



Sunset

IMG_6232

IMG_6249

Pepper Garden

'Smart' Boy

'Smart' boy

Landscape

பாரதி கண்ட 'ஜீப் ஓட்டும்' பெண்

Johny



மேலும் கொடசாத்ரியில் பயணத்தில் எடுத்த படங்கள், எந்தவிதமான Post productionம் இல்லாமல் இங்கே அதனால் Only for personal use.

Life of others என்றொரு ஜெர்மன் படம் பார்த்தேன், கிழக்கு/மேற்கு என்று ஜெர்மனி பிளவுபட்டு இருந்த காலக்கட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். என்னைக்கேட்டால், "Sonata for good man" என்பதையே தலைப்பாக வைத்திருக்கலாம் என்று சொல்வேன். அருமையான படம், ஈரானிய படங்களைப் போல "பிரச்சனைகளை நேரடியாகச் சொல்லிச் செல்லாமல் மறைமுகமாக மெல்லிய புன்னகையை பரவவிட்டு" சொல்லிச் செல்கிறது படம்.

லெனின் ஒரு முறை பீத்தோவானின் சிம்பொனியைக் கேட்டுவிட்டு சொன்னதாக மாக்ஸிம் கார்க்கி நினைவு கூர்ந்த, "இந்த இசையைக் கேட்பதைத் தொடர்ந்தால் நான் என் தொடங்கியிருக்கும் புரட்சியை முடிக்க முடியாது போலிருக்கிறது" என்றாராம்.

Maxim Gorky's anecdote about Lenin listening to Beethoven's Appassionata Gorky wrote:
I know of nothing better than the Appassionata and could listen to it every day. What astonishing, superhuman music! It always makes me proud, perhaps naively so, to think that people can work such miracles!" Wrinkling up his eyes, Lenin smiled rather sadly, adding: "But I can't listen to music very often. It affects my nerves. I want to say sweet, silly things and pat the heads of people who, living in a filthy hell, can create such beauty. One can't pat anyone on the head nowadays, they might bite your hand off. They ought to be beaten on the head, beaten mercilessly, although ideally we are against doing any violence to people. Hm—– what a hellishly difficult job!

கதை இதன் பின்னாலேயே சுழல்கிறது, மிக முக்கியமான ஒரு முடிச்சி இதன் பின்னணியில் நிகழ்கிறது. க்ளைமாக்ஸில் "Sonata for good man" புத்தகத்தை வாங்கும் படத்தின் ஹீரோவிடம் கடையின் உரிமையாளர், கிஃப்ட் ராப்பர் சுற்றித் தரவா என்று கேட்கும் பொழுது, ஹீரோ சொல்லும் இல்லை இந்தப் புத்தகம் எனக்காக என்று சொல்கிறார். உண்மையில் யாருக்கும் தெரியாமல் அந்தப் புத்தகம் அவருக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டது தான். மெல்லிய நகைச்சுவை ஒன்று எப்பொழுதுமே படம் முழுவதும் நம்முடன் தொடர்கிறது. அருமையான படம் பார்க்கத் தவறாதீர்கள். Adults only தான் என்றாலும் மோசமில்லை மனைவியையோ காதலியையோ அழைத்துச் செல்லலாம். :)

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In Hiatus சினிமா நாட்குறிப்பு புகைப்படங்கள் புகைப்படம் மரணம்

ஸ்ரீதேவி

#myheartopener என்ற பெயரில் இளவஞ்சி எழுதச் சொன்ன பொழுது கடந்த போன புகைப்படங்களில் ரோஜாவும் மீனாவும் உண்டு. ஸ்ரீதேவி கிடையாது. வயது தான் காரணம். ஜெனரேஷன் கேப்.

ஐஸ்வர்யா ராயைப் போல் ஸ்ரீதேவி மீதும் ஒரு ஏதோ ஒரு காரணமாய் நெருங்க இயலாத தன்மை இருந்திருக்கிறது. காந்தியைப் போல் ஐஸ்வர்யா ராயும், பிடித்து பிடிக்காமல் போய், திரும்பவும் பிடித்து என்று ஒரு சுழற்சி ஸ்ரீதேவிக்கும் உண்டு. ரஜினி ரசிகனா கமல் ரசிகனா என்கிற பிரச்சனை இருந்ததுண்டு. ஆனால் விஜய் - அஜித் விஷயத்தில் அப்படியில்லை. தீர்மானமாய் பிடித்தது அஜித் என்கிற வரை அறிவேன். ஆனால் இதில் விஜய் எதிர்ப்பு என்பது இல்லை. இங்கிருந்து கவுண்டமணி ரசிகன் என்கிற நிலையை அடைந்தது ஜென் நிலையே ஒழிய வேறில்லை.

முதலில் ஸ்ரீதேவி மீதான ஈடுபாடு உண்டானது என்றால் அதற்கு ஒரு படம் காரணம், தெலுங்கு படம், நான் தமிழில் பார்த்தேன். சிரஞ்சீவி - ஸ்ரீதேவி நடித்தது ஸ்ரீதேவி தேவதையாக வருவார் என்று ஊகிக்கிறேன். மனதில் பச்சென்று பதிந்த நிகழ்வு, பின்னர் சீண்டிப் பார்த்தது ஜானி. ஜானியின் ஸ்ரீதேவியைப் பிடிக்காத ஆணாதிக்க எண்ணங்கொண்டவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்க முடியும். திரையில் நடக்கும் கதையை எமோஷனல் அட்டாச்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாத - இன்னமும் கூட - ஒருவன் என்கிற முறையில், மூன்றாம் பிறை படத்தை இன்னமும் முழுமையாக பார்த்திராவதவன் நான். அந்த முடிவு தெரிந்ததால் அதைப் பார்க்கும் மனமற்றவனாய் இன்னமும் நீடிக்கிறேன். அப்படி தள்ளிவைத்த இன்னொரு படம் பருத்திவீரன் - இன்னமும் - க்ளைமாக்ஸ் பார்த்ததில்லை.

Jennifer Ehleயுடன் காதல் கொள்ள முடிந்த என்னால் ஸ்ரீதேவியுடன் காதல் கொள்ள முடிந்திருக்கவில்லை, என்னவோ என்னை விட வயதில் மூத்தவர் என்கிற உணர்வு. ஆனால் இது பொதுவாய் எல்லோருக்குமானது இல்லை. காஞ்சனாவின் மீது கூட காதல் கொள்ள முடிந்திருக்கிறது, காதலிக்க நேரமில்லை காஞ்சனா இல்லை சாந்தி நிலையம் காஞ்சனா. இது ஒரு வியப்பான மனநிலை இன்னமும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் மனநிலை.

ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஆறாண்டு கால அமெரிக்க வாழ்க்கையால் கைவந்திருக்கும் மனநிலை ஆச்சர்யமளிக்கிறது. மது அருந்தி பாத்-டப்பில் மயங்கி விழுந்து இறந்தார் என்பது ஒரு இம்மியளவு கூட ஸ்ரீதேவி மீதான மதிப்பில் குறை வரவில்லை.  இங்கே பெண்களின் உடம்பின் மீதான உரிமையை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதில் நம்பிக்கை அதிகம். அவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார், பொடாக்ஸ் இஞ்சக்‌ஷன் போட்டுக்கொண்டார் என்பதில் எல்லாம் நம் கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆதித்த கரிகாலனின் பாற்பட்டு, சின்ன வயதிலேயே இறந்துவிட வேண்டும் என்கிற ஒரு ஈர்ப்பு இருந்தது உண்டு. இப்பொழுதும் அறுபது வயது போதும் என்பதைப் போன்ற ஒரு மனநிலை அவ்வப்பொழுது வருவது உண்டு, ஆனால் மனைவி குழந்தைகள் என்று அமைந்த பிறகு நாம் நம்முடைய வாழ்வை நமக்கானதாய் மட்டும் நினைத்துக் கொள்ள முடியாததாய் நீள்கிறது வாழ்க்கை. யாருக்கும் தொந்தரவும் கொடுக்காமல் ஒரு நீண்ட துயிலில் மரணித்துவிட வேண்டும் என்கிற ஆசை மட்டும் இப்பொழுது இருக்கிறது. நானே நினைத்தாலும் முழு அமெரிக்கன்களாய் என் மகளையும் மகனையும் வளர்த்துவிட முடியாது என்று தெரிந்தே இருக்கிறேன். அன்பும் பாசமும் மட்டுமே தெரிந்த மனைவியிடம் வளரும் குழந்தைகளிடம் அன்பையும் பாசத்தையும் கூட ரேஷனலாக நினைக்க முடியும் என்பதை எப்படி உணரவைப்பது. இந்த மனம் என்பது சூழ்நிலையையும் கூட்டிக் கொண்டே சுழலும் உருவாகும் ஒன்று, பூமி அட்மாஸ்பியரையும் சேர்த்துக் கொண்டே சுற்றுவதைப் போல். மகனும் மகளும் என் வழிக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அது என் மனைவிக்கு தரப்போகும் மனவலியைப் புரிந்தே நோகிறேன். மனதிற்கு நெருக்கமானவர்கள் மறையும் தருணம் மனம் தனக்குத் தானே செய்து கொள்ளும் பரிசோதனை தீர்க்கமானதாய் இருக்கிறது.

நான் தீர்க்கமாய் மனதில் ஓடும் சிந்தனைகளை எழுத்தில் கொண்டு வர முடிகிறது என்றே ஊகிக்கிறேன், அல்லது எழுதுவதன் மூலமாய் மனதை சிந்திக்க வைக்க முடிகிறது என்பதை அல்லது எழுதுவதைக் கொண்டு மனதை ஆராய முடிகிறது என்பதை. பிரபாகரன் மரணத்தை ஒட்டி இப்படி யோசிக்க முடிந்திருக்கவில்லை, மனம் யோசனையை மறந்திருந்த காலம் அது. இப்படித்தான் முடியும் என்று தெரிந்திருந்தாலும் அப்படி முடிந்திருக்கூடாது என்று ஏங்கிய மனநிலை. இன்னமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராய் பிரபாகரனை நிறுத்தவில்லை ஆனால் விமர்சனம் வைப்பவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அல்லது நான் நடுநிலையாளர்கள் என்று ஒப்புக்கொண்டவர்கள் ஒப்புக்கொள்ளும் விஷயத்தை ஒப்புக்கொள்ள முடிந்திருக்கிறது. அவ்வளவே.

என்னை மானசீகமாக கமலஹாசனாக உணர்ந்த விந்தை பொழுதுகளில் கதாநாயகியாக ஸ்ரீதேவியை உணர்ந்திருக்கிறேன், பதின்மங்களில். ஸ்ரீதேவி என் அம்மாக்களின் சித்திகளின் கதாநாயகி என்கிற பிம்பம் அகலவில்லை. ஸ்ரீதேவியை கமலஹாசன் மணம் புரிந்திருக்கவேண்டும் என்று வேடிக்கையாய் மனம் வாடியிருக்கிறேன். வறுமையின் நிறம் சிகப்பு ஸ்ரீதேவி, மென்சோகம் வழியும் பேரழகு தான் அவருடைய பிம்பமாக மனதில் பதிந்திருக்கிறது. கோஹினூர் வைரத்தை கொள்ளை கொண்டு போன பிரிட்டிஷாரின் மீதான கோபம், போனி கபூரின் மீதும் இருந்திருக்கிறது. பதின்மத்தில் மனது பட்ட பாடு வேடிக்கையாகத்தான் இருக்கிறது, இன்று உட்கார்ந்து யோசிக்கும் பொழுது. இப்படி பல பதின்ம நாட்களை இரவுகளை கனவுகளை வண்ணமயமாக்கியவர் ஸ்ரீதேவி.

------------------------------------------------------------------------

Google+ல் முன்பு எழுதியது

இவைகளில் ஏதோ ஒன்று தான். தற்சமயம் இல்லாததால் குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஆனால் tiara அணிந்த இதை ஒத்த அல்லது 95% இந்தப் படம் தான்.

+இளவஞ்சி iLaVAnJi

மலையை மயிரைக்கட்டி இழுக்கும் சாகஸம் தான். இந்தப் படத்தை ஓவியமாக வரைந்தும் இருக்கிறேன். தேடினா வீட்டில் கிடைக்குமாயிருக்கும்.

அவர் இறந்த பொழுது மன உயரங்களில் இருந்து கீழிறங்கியிருந்தார் தான் - பதின்மம் செய்யும் வேலை. விவாகரத்து, அல் பயிது போன்ற காரணங்களால். இன்று அப்படியில்லை. தேவதையும் இல்லை வெறுப்பும் இல்லை.

இறந்த பொழுது அத்தனையையும் தாண்டி கண்கள் கலங்கியது, கமல் ஆர்சி சக்தி பற்றி சொல்வதைப்போலில்லா விட்டாலும் உணர்ச்சிவசப்பட்டவன் தான். அய்யோ நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று. வெட்கமில்லாமல் கூட சொல்வேன், டயானாவையும் ஒரு காலத்தில் மனதார காதலித்தேன் என்று.

ஒரு படம்னா இதைத்தான் சொல்லணும். #myheartopener

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In தஞ்சை தஞ்சை பெரிய கோவில் புகைப்படங்கள் புகைப்படம்

தஞ்சை பெரிய கோவில்






Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts