In புகைப்படம்

Ladakh Landscape - Just Glance

IMG_9221

Pangong Lake - Ladakh

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Sci-fic சிறுகதை

பிரதிகளின் அரசியல்

நான் பிரதிகளைக் கொளுத்திக் கொண்டிருந்த பொழுது பிடிபட்டேன். எல்லாம் தொடங்கிய நாளில் நான் தான் "இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன்" என்று கூறி 'சோழர்கள்' பிரதிக்குள் இருந்து குதித்தவன் நல்லவேளை வாள் எதுவும் அணிந்திருக்கவில்லை. பிரதிக்குள் இருந்து வெளிவந்த கதையை ஆதித்தன் சொல்லத்தொடங்கினான் காலம் தன் கைகளை பறவையொன்றின் இறகுகளாய் மாற்றி பறக்கத் தொடங்கியது. காலயந்திரத்தின் பற்சக்கரக் காலத்தையொட்டியது, பிரதிகளில் உலர்ந்து போன மனிதர்களை மீண்டும் உருவாக்கும் ஆராய்ச்சி என்றான் ஆதித்தன். உலக மொழிகள் அத்தனையில் எழுதப்பட்ட பிரதிகளில் இருக்கும் மனிதர்கள் எல்லோரையும் தீண்டிச் செல்லும் அளவிற்கு இந்த ஆராய்ச்சி விரிவாக உலக நாடுகள் அனைத்தாலும் செய்யப்பட்டது என்றும் ஆனால் ஓரளவு வெற்றி பெற்ற நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாமல் கரை காணும் ஆவலில் தொடர்ச்சியாய் மூழ்கியதாகவும், கரை கண்ட தமிழகத்து விஞ்ஞானி தன்னை பிரதியில் இருந்து வெளியேற்றியதைச் சொன்னான்*. இப்படி வெளியேற்றப்பட்ட விஷயமறிந்த விஞ்ஞானியின் தாயாதி ஒருவன் இந்த விஷயத்தை அமேரிக்க உளவுப் பிரிவினருக்கு விற்றுவிட அவர்களால் ஆதித்தன் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு அமேரிக்காவில் வைத்து தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டிருக்கிறான். அப்படித்தான் வரலாற்றின் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் தன்னைப் பற்றிய கதைகளை அறிந்து கொண்டதாக என்னிடம் கூறினான். தொடர்ச்சியான அவர்களுடைய பயிற்றுவித்தல்களின் காரணமாயும் அவர்கள் அவன் எப்படி பிரதியில் இருந்து வெளியில் வந்தான் என்பதை அறியும் பொருட்டு நடத்திய, அவனுக்கும் தெரிந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளாலும் பிரதிகளில் உலாவும் வித்தையை அறிந்ததாகவும் ஒருமுறை அவர்களிடம் இருந்து தப்பித்து பிரதிகளில் உலாவிக் கொண்டிருந்ததையும் பின்னர் தானாய் பிரதியில் இருந்து வெளியேறும் வித்தையை அறிந்து கொண்டு என் முன் நிற்பதாயும் சொன்னான்.

நான் கைகளைக் கிள்ளிக் கொண்டு நான் கண்டு கொண்டிருப்பது கனவில்லையென்றும், ஆறடி உயரம் ஆஜானுபாகமாய் என் முன் தோள் வரை நீண்ட அளகபாகத்தைக் காட்டியபடி நிற்பது உயிரும் உடம்புமாய் உண்மையான ஒரு மனிதன் தான் என்றும் புரிந்து கொண்டேன். ஆதித்தன் என்னிடம் தான் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும் என்றும் பிரதிகளில் அதிகம் உலவினால் கண்டுகொள்ளப்படும் சாத்தியம் உண்டென்றும் வார்த்தைகளைக் கொண்டு பிரதிகளில் விரித்திருக்கும் வலையில் விழுந்து மீண்டும் அமேரிக்கர்கள் கையில் சிக்கிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்றான். நான் அவனை அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன், சோழ தேசத்தின் அரசர்களில் ஒருவன் என்முன்னால் சம்மணங்கால் போட்டு உட்கார்ந்திருந்தான். இடுப்பில் மட்டும் ஆடையணிந்திருந்த அவன் தேகம் எங்கும் தழும்புகள், கருத்த உடம்பில் பளீரென்று தெரிந்தன. நான் அவனை என் வீட்டில் தங்க அனுமதித்திருந்த காலங்களில் போதை ஏற்றியவன் போல் தொடர்ச்சியாய் புலம்பிக் கொண்டேயிருந்தான். தன்னைக் கொன்றது அருண்மொழித்தேவன் தான் என்றும் குந்தவையும் வந்தியத்தேவனும் அதற்கு உடந்தை என்றும் சொன்னான். பின்னர் இன்னொரு பொழுதில் அருண்மொழி பற்றிக் கூறியவைகள் அமேரிக்கர்களால் தன் மனதில் ஏற்றிவிடப்பட்டவை என்றும் தன்னைக் கொன்றது மதுராந்தகன் தான் என்றும் கூறினான்.

தொடர்ச்சியான பொழுதுகளில் அவன் பேசுவதில் எது உண்மையானது எது அவன் கற்பனை செய்து சொல்வது எது அமேரிக்கர்களால் அவன் மனதில் திணிக்கப்பட்டது என்று பொருள் உணர்வது பெரும் சங்கடமாய் இருந்தது. நான் அகிலா கதைகள் அறுபத்தைந்தை எழுதிக் கொண்டிருந்தேன், அவன் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதற்கான ப்ராயச்சித்தமாக என் கதைகளின் நாயகி அகிலாவை உருவாக்கித் தருவதாக வாக்களித்திருந்தான். நான் எழுதியிருந்த அதுவரையிலான அகிலா கதைகளை அவனிடம் கொடுக்க, முதிர்ச்சியில்லை என்றும் இன்னும் எழுதிக் கொடு என்றும் சொன்னான். நீ எழுதும் வாக்கியங்கள் உபயோக்கிக்கும் சொற்கள் அளிக்கும் அர்த்தங்கள் தான் அகிலாவை உருவாக்கும் என்றும் அவள் எப்படி வரவேண்டும் என்பது உன் கதைகளின் வரிகளில் இருக்கிறது என்றான். நான் க்ளோனிங்கின் மூலம் க்ரோமோசோம்களை எடுத்து உயிர்களை உருவாக்குவது போல் பிரதிகளில் இருந்து உயிர்க்காரணியை எடுத்து அதன் மூலம் மனிதர்களை உருவாக்கும் முறையை அவன் சொல்லி புரிந்து கொண்டேன். ஆதித்தன் க்ளோனிங்கை விடவும் இது மேலானது என்றும் குழந்தையாக இல்லாமல் இதில் மனிதர்களையே உருவாக்க முடியும் என்றும் ஆனால் அவர்கள் பிரதிகளில் இருந்து பிறந்தவர்கள் என்பதால் மனிதர்களைவிடவும் வேகமாக பிரதிகளில் ஊடாட முடியும் என்றும் அதனால் அவர்கள் வெகு எளிதில் நிறைய கற்றுக் கொள்வார்கள் என்றும் சொல்லியிருந்தான்.

அவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டு மீண்டும் வரும் வேளைகளில் பெரும்பாலும் நாட்டில் கொலைகள் நடந்து கொண்டிருந்தது அதுவும் சோழர்களைப் பற்றி எழுதியவர்கள் ஒவ்வொருவராய் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். ஆரம்பத்தில் என்னால் ஊகிக்க முடியாத அளவிற்கு நடந்த இக்கொலைகளை நான் கண்டறிந்தது சோழர்களைப் பற்றி பெரும் புனைவுகளை எழுதியவர் ஒருவரை ஆதித்தன் கொன்ற பொழுதுதான். ஆதித்தன் என்னிடம் எதையும் மறைக்கவில்லை வரலாற்றில் சாணி பூசுபவர்களால் ஏற்படும் பாதிப்பு பிற்காலங்களில் சாணி தான் வரலாறு என்பது போல் மாற்றமடைகிறது என்றவன் இதனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது என்று கூறி, அகிலா கதைகள் எப்படி வருகிறது என்று கேட்டான். நான் எழுதியதைக் காட்ட அகம் பற்றி இன்னமும் விவரம் வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான், பெரும்பாலும் பிரதிகளுடனே வாழ்ந்து வந்த அவன் இன்னொரு பிரதியில் மூழ்கிப்போனான். நான் அகிலாவை அகத்தில்** நகர்த்திக் கொண்டிருந்தேன்.

அகிலாவை உருவாக்கித் தரும் நாளுக்காக நான் காத்திருந்தேன், அகிலா கதைகள் எழுதி முடித்த நாளிலிருந்து ஆதித்தனை நச்சரிக்கவும் தொடங்கியிருந்தேன். தொடர்ச்சியாய் ஒரு நாள் ஆதித்தன் என் கண் முன்பே பிரதிகளில் இருந்து வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் எடுத்து மாற்றிப் போட்டு அகிலாவை உருவாக்கத் தொடங்கினான். கடைசியில் மொத்தக் கதைகளில் இருந்தும் அகிலாவை உருவாக்கி அவன் பிரதியில் இருந்து வெளியேற்றிய பொழுது எனக்கு என் கதை நாயகி ஆச்சர்யத்தைத் தந்தாள். நான் எழுதிய கதைகளின் மொத்த உருவாக்கமாய் உருவமாய் அகிலா என் முன்னே நின்று கொண்டிருந்தாள். நாங்கள் காதலில் காமத்தில் மிதந்தோம் ஆதித்தன் கொலை செய்து கொண்டிருந்தான். காதல் மீறிய காமம் பதிப்பாய் அகிலா கதைகள் அறுபத்தைந்தில் வந்த பொழுது தான் நான் எழுதியதிலிருந்து மாறுபட்டிருந்த பிரதியைப் பற்றிய விவரம் தெரிந்தது. ஆதித்தனைப் பற்றிய வரிகளும் அகிலா சொல்லும் இரண்டாம் தடவையைப் பற்றிய விவரங்களும் நான் எழுதியதில் கிடையாது. ஒட்டு மொத்தமாய் அகிலா கதைகள் அனைத்திலும் ஆதித்தனைப் பற்றிய நேரடியான விவரங்களோ அல்லது மறைமுக விவரங்களோ தொகுக்கப்பட்டிருந்தது.

அகிலா தொடர் உரையாடல்களாலும் படிப்பாலும் கேள்வியாலும் வளர்ந்து கொண்டிருந்தாள், அவளுக்கு பிரதிகளின் மூலமாக ஏற்கனவே அறிமுகமாகியிருந்ததால் என்னிடம் உரையாடுவதில் பிரச்சனையிருந்ததில்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே ஆதித்தனை வெறுத்து வந்த அவள் ஒருநாள் ஆதித்தனைக் கொல்லும் திட்டத்தைச் சொன்ன பொழுது தான் எனக்கு அவள் எவ்வளவு வெறுத்துவந்தாள் என்று தெரிந்தது. பிரதிகளின் மூலமாய் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள ஆதித்தன் முயற்சிக்கிறான் என்பதை அவள் அகிலா கதைகள் அறுபத்தைந்தில் - காதல் மீறிய காமத்தின் மூலமாக நிரூபித்தாள், ஆனால் ஆதித்தன் அகிலா உருவாக்கத்திற்காகத்தான் பிரதியில் மாற்றம் செய்ய வந்தது என்று ஒற்றைக் காலில் நின்றான். பின்னர் நேரடியாய் அகிலாவும் ஆதித்தனும் சண்டையில் இறங்க ஆரம்பிக்க ஆதித்தன் சோழர்களைப் பற்றிய பொல்லாத பிரதிகளை ஒழித்த பிறகு தான் பிரதிக்குள் மறைந்து போய்விடுவதாகவும் அதற்கு கொஞ்ச கால அவகாசம் வேண்டும் என்று சொன்னதில் இருந்து பத்தாவது நாள் அகிலா ஆதித்தனைக் கொலை செய்திருந்தாள். சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தூங்கிப் போனதும் இதயப்பகுதியில் கத்தியொன்றைச் சொருகி அவனைக் கொன்றிருந்தாள்.

ஆதித்தன் இறந்து போன சில நாட்களின் நான் என்னில் ஆதித்தனை உணரத் தொடங்கினேன், கடைசியில் அகிலா கொன்றது என்னைத்தான் ஆதித்தனை அல்ல என்று புரிய வந்த பொழுது நான் இல்லாமல் போயிருந்தேன். ஆனால் என் கொலையைப் பற்றி வேறு வேறு கருத்துக்கள் இருப்பதை நானொரு முறை பிரதியில் இருந்து வெளியேறிய பொழுது தெரிந்து கொண்டேன், அந்தப் பிரதிகள் அனைத்தையும் கொளுத்திக் கொண்டிருந்த பொழுது பிடிபட்டேன்.

1. அமேரிக்க சதி
2. அகிலாவின் அண்ணன் சதி
3. சுயவதை அல்லது தற்கொலை முயற்சி

* ரகசிய உலகங்கள் சொற்களால் பின்னப்பட்டு எழுத்துக்களால் உருவாகி பிரதிகளில் மறைக்கப்பட்டிருந்ததை வெளிக்கொண்டு வரும் ஆராய்ச்சியில் தலைமுறை தலைமுறையாக இயங்கி வந்த தஞ்சாவூர் ஜில்லா பெரியசாமி நாயக்கர் பரம்பரையின் எட்டாவது தலைமுறையில் காலங்காலமாக அவர்கள் மறைத்துவைத்து பத்திரப்படுத்தி வந்த பிரதியொன்றின் சொற்றொடர்கள் கட்டப்பட்டிருக்கும் சூத்திரங்களைக் கணித்து - அந்த கணக்குப் படி ரகசியப் பிரதியின் ஒரு பக்கத்தில் இருந்து எட்டு வார்த்தைகள் என்ற முறையில் எடுத்து திருப்பி எழுதி அந்த திருத்தி எழுதிய பிரதியில் கட்டப்பட்டிருக்கும் சூத்திரத்தை உடைத்து மண்ணில் புதைத்து வைத்திருக்கும் மற்றொரு பிரதியை எடுத்து என்று தொடர்ச்சியாக நீண்டு கொண்டேயிருந்த இந்த பிரதி கட்டுடைத்தல் விளையாட்டு மொத்தமாக முடிவுற்ற பொழுது, பரம்பரையின் முதல் நாயக்கர் ஆசைப்பட்ட படி ஆதித்த கரிகாலன் என்று பிற்காலத்தில் பிரதிகள் அழைத்து வந்த - 'இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன்' கட்டுக்களில் இருந்து வெளிப்பட்டான்.

**அகஅ - காதல் மீறிய காமம்

"கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்." என்று நான் அகிலாவிற்கு அவள் காதலின் நீட்சியாய் பார்க்காத காமத்தையும் வலிந்து மறுப்பது போன்றிருக்கும் செயற்கைத்தன்மையையும் விவரித்து கடிதம் எழுதி அனுப்பிய நான்காவது நாள் அவள் அதைப்பற்றி நிறைய யோசித்ததாகவும் தனக்கும் சம்மதம் என்று சொல்லி எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தாள். விடுதியில் அறை ஒன்றை பதிவு செய்யச் சொல்லி அனுப்பியிருந்தாள், நான் நண்பனின் வீடு ஒன்று காலியாக இருப்பதைச் சொல்லி அங்கே அவளை வரச் சொல்லியிருந்தேன். எங்களிருவரிடமும் முன்பு யார் முதலில் இதைப் பற்றி பேசுவது என்ற தயக்கம் இருந்தது போல், இத்தனை தூரம் வந்த பிறகு யார் முதலில் பின்வாங்குகிறார்கள் என்ற போட்டி உருவானது.

நண்பன் ஒருவன் வேலை விஷயமாக அமேரிக்கா சென்றிருந்தான், தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்ட வீடு. வாரத்திற்கு ஒரு முறை வரும் வேலைக்காரன் அவற்றை சுத்தம் செய்துவிடும் காரணத்தால் புதிதாய் இருந்தது. பெங்களூரில் அந்த இடத்தில் சொந்த வீடு என்பது கோடிகளில் இருக்கும் என்று தெரிந்து தான் இருந்தது, அந்த வீட்டை என்னை நம்பி உபயோகிப்பதற்காகக் கொடுத்த நண்பனுக்கு நான் இப்படி உபயோகிக்கப்போகிறேன் என்கிற விஷயமும் தெரியும். நான் ஒரு பாதுகாப்பிற்காக அவனிடம் சொல்லி வைத்திருந்தேன். நாகரீகமறிந்த அவன் மேல் கேள்விகள் கேட்காமல் 'என்ஜாய் மாடி' என்று முடித்துக் கொண்டான். நான் ஆதித்தனிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன், அவன் ஜாக்கிரதை என்று மட்டும் சொன்னான். ஆதித்தன் பிரதியில் இருந்து உருவாகி வெளிவந்து உலாவிக் கொண்டிருந்ததை நான் அகிலாவிடம் மட்டும் சொல்லியிருந்தேன். அவளும் ஆதித்தனிடம் ஜாக்கிரதை என்று சொல்லியிருந்தாள்.

கருப்பு நிற சேலையணிந்து வந்திருந்தாள் அன்று, மதியம் போலவே வந்தவள் எதாயிருந்தாலும் ஆதவன் மேற்கே போனதற்கு அப்புறம் தான் என்று சொல்லி வைத்திருந்தாள். மதிய உணவும் சமைத்துத் தந்தாள், நாங்கள் இரவில் தொடங்கப்போகும் மாயவிளையாட்டிற்கான ஒத்திகைகளில் மிக மென்மையாக இறங்கத் தொடங்கினோம். நான் அவளிடம் அதைப் பற்றி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அவள் வீட்டிலிருந்த ஹோம் தியேட்டரில் "கபி அல்விதா நா கெஹ்னா" படம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கி உட்கார்ந்தேன் அவள் சீரியஸாய் படம் பார்க்கத் தொடங்கினாள்.

"உனக்கு இதைப் பற்றி முன் அனுபவம் எதுவும் இருக்கா?'

திரும்பி முறைத்தாள்.

"முன் அனுபவம் 'மான்னெ' படிப்பு, கேள்விப்படுதல் இப்படிக் கேட்டேன் தப்பா நினைக்காத!" சட்டென்று பேச்சு வழக்கில் வரும் ஹிந்தியும் சேர்ந்து கொண்டு வந்து குதித்தது.

"சாருக்கு இதில் அனுபவம் ஜாஸ்தியோ?!"

நான் பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு "இதுதான் முத தடவ!" என்றேன்.

அவள் சிரித்தபடியே "நான் நம்பலை" என்றவள் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள்.

பேசியவாறே நான் தொடுதலைத் தொடங்க, விளக்கணைக்கச் சொல்லி வற்புறுத்தியவளிடம் மறு வார்த்தை பேசவில்லை. அவளுக்காய்ச் சொல்லாமல் உண்மையிலேயே முன் அனுபவம் இல்லாதது சிக்கலாய்த்தான் இருந்தது, ஒன்றிற்கு இரண்டாய் நிரோத் அணியச் சொன்ன காரணம் புரியவேயில்லை கடைசி வரையில். இடையில் விஷயம் புரியாமல் தெரியாமல் வேதனையில் வலியில் நிறுத்திவிட எத்தனித்து பின்னர் ஒரு வழியாய் 'சீ' என்று முடிந்ததும் நான் தூங்கிப் போனேன். காலையில் அகிலா இரண்டாவது தடவையே தேறிட்டீங்களே என்று சொன்னது சத்தியமாய் விளங்கலை, அவள் உங்க உடம்பெல்லாம் தழும்பாய் இருப்பது போல் இருந்தது. காலையில் பார்த்தேன் அப்படி ஒன்னும் இல்லை என்னமோ மாயை என்றாள் எனக்கு அதுவும் புரியலை.


1. அமேரிக்க சதி

அமேரிக்க உளவாளியான 5152256 தான் ஆதித்தனாக வந்தது என்றும், அமேரிக்கா அப்பொழுது கண்டறிந்திருந்த புதுவகை க்ளோனிங் முறையை டெஸ்டிங் செய்வதற்காகத்தான் அத்தனையும் நடந்தது என்றும் இறுதியில் நான் இந்த விஷயத்தைக் கண்டறிந்து விட்டதாலேயே கொல்லப்பட்டதாய் நீண்டது ஒரு பிரதி.

2. அகிலா அண்ணன் சதி

ஒன்றும் தெரியாத அகிலாவை பொய்கள் பல சொல்லி ஏமாற்றி கெடுத்தவிட்டதாயும் அதற்கு காரணமான என்னைக் கொல்வதற்காக ஆதித்தன் என்ற பெயரில் ஒருவனை அகிலாவின் அண்ணன் அனுப்பியதாகவும் அவனால் தான் நான் கொல்லப்பட்டேன் என்றும் நீண்டது ஒரு பிரதி.

3. சுயவதை அல்லது தற்கொலை முயற்சி

ஆதித்த கரிகாலன் பற்றிய தேடல்கள் என்னை பைத்தியமாய் ஆக்கிக் கொண்டிருந்த நாளொன்றில் அகிலாவிடம் காமம் யாசிக்க அவள் பலர் முன்னிலையில் என் தலையில் ஆப்பிள் ஜூஸைக் கொட்டிவிட்டுச் சென்றதால் விரக்தியடைந்து நான் தற்கொலை செய்து கொண்டதாகவும். அதற்கு முன்னர் ஒரு அறிவியல் புனைகதைப் போட்டிக்காக இந்தப் பிரதியை எழுதியதாகவும் நீண்டது இன்னொரு பிரதி.

Read More

Share Tweet Pin It +1

22 Comments

In Only ஜல்லிஸ்

பப்பு நாச் நஹி சக்தா!!!

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ்

காமத்துப்பால் - காமம் ஒரு testing பதிவு

காமத்துப்பால்

களவியல்

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

நோக்கினான் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையான் பேரமர்க் கட்டு.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ எதில தந்து.

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

PS: வள்ளுவருக்கும் *** தானான்னு ஒரு டெஸ்டிங் பதிவு. :)

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In அகிலா கதைகள் அறுபத்தைந்து

அகஅ - அன்புள்ள அகிலாவிற்கு




எல்லாம் ஒரு கடிதத்தில் முடிந்து போயிருந்தது அவள் தொலைபேசிய மறுநாள் இந்தக் கடிதத்தை அவளுக்கு அனுப்பியிருந்தேன். எங்கள் ஊடல் பின்னர் உணரப்பட்டு புணர்தலால் காமமான அந்நிகழ்ச்சிக்கு அடையாளமாய் இந்தக் கடிதம் மீந்து நின்றது.

Mohandoss's new status message - பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
யாசித்தலின் குரூரம்
காதலாய் யாசிக்கிறேன்
அகிலா கதைகள் அறுபத்தைந்து

என் எழுத்தைப் படிக்க முடியாதவர்களுக்கு...

அன்புள்ள அகிலாவிற்கு,

நேற்றைக்கு நீ பேசிய பொழுது என்னன்னமோ பேசிய பொழுது பதில் சொல்ல என்னிடம் எதுவுமில்லை, நீ பதில் பேசாதே என்பதால் மட்டும் நான் பேசாமலிருக்கவில்லை.

காமக் கொடூரனாய் நான் உன்னிடம் நடந்து கொண்டேனா தெரியாது, காதலாயும் யாசித்தலாயும் வந்திருந்தாலும் கேட்டதென்னமோ காமம் என்ற வகையில் உன்னைக் காயப்படுத்தி விட்டதாயே நினைக்கிறேன். அதற்காகவே அதற்காக வருத்தமும் படுகிறேன். உன்னிடம் இந்த மூன்று வருடங்களில் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற எண்ணத்தைக் கூட வரவழைக்கவில்லை என்பதிலும் வருத்தமே!

அந்த அளவிற்கு கூட நம்பிக்கை வராத பொழுது நீ என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு முற்றிலும் சம்மதமே. இந்த அளவிற்கு கூட நான் நம்பிக்கை வைக்காத ஆட்களிடம் பழகுவதில்லை என்பதும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கடைசியாய் என்னன்னமோ சொன்னாய் 'வேணும்னா நாளைக்கே எடுத்துக்கோ' அப்படின்னெல்லாம். கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.

வருகிறேன்

காதலுடன்
அன்புடன்
மோகன்தாஸ்

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In அகிலா கதைகள் அறுபத்தைந்து சிறுகதை

அகிலா கதைகள் அறுபத்தைந்து

"சொல்லுங்க சார்! ஞாயித்துக் கிழமை எங்கப் போயிருந்தீங்க?"

அகிலா கம்பெனி நம்பருக்கே கால் செய்திருந்தாள்.

"ஆசிப் அண்ணாச்சி வீட்டுக் கல்யாணத்துக் போயிருந்தேன் என்னயிப்ப?"

"உங்க டப்பா மொபைல் போன் எங்க சார்?"

"இன்னும் காசு கட்டலை அதனால வொர்க் ஆகலை".

"ஏன் சார் ஒரு வார்த்தை அதைச் சொல்லிட்டுப் போறதுக்கென்ன? உங்கக்காகிட்ட என் ப்ரண்டொருத்தனை வைச்சி பேசி விஷயம் வாங்கினேன். தெரியுமா?"

நான் மௌனமாயிருந்தேன்.

"பதில் சொல்லுங்க சார்." கத்தினாள் மறுமுனையில்

"ஏண்டி உயிரை வாங்குற, உங்கிட்ட சொன்ன ஞாபகமாயிருந்துச்சு அதான்."

கேட்டவள் சிரித்தாள்.

"ஏண்டி சிரிக்கிற!"

அவள் அவசரப்படாமல் மெதுவாய்ச் சிரித்துமுடித்துவிட்டு "உங்கக்கிட்ட 'ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்'ன்னு சொல்லி போன் பேசி ஒரு ஆறு ஏழு மாசமிருக்குமான்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சி."

எனக்கும் கொஞ்சம் சிரிப்பாய்த் தான் இருந்தது, நாங்கள் அந்த உரையாடலுக்குப் பிறகு அடித்த லூட்டி. நான் சிரித்தால் அதையே காரணமாய்க் காட்டி இன்னமும் வம்பிழுப்பாள் என்பதால் வெறுமனே "ம்ம்ம்" என்றேன். ஆனால் மனதிற்குள் அவள் பேசியது அப்படியே ஓடியது.

"என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க மோகன், காலையில் அப்படி நடந்துக்கிட்டது என் தப்பு தான், Sorry. என்கிட்டேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியலை, மனசு விட்டுப் பேசணும்னா? மனசுக்குள்ளே இருக்கிறதை எல்லாம் வெளிய கொட்டிடணும்னா என்னால அது முடியும்னு தோணலை. உங்களை காதலிக்கலைன்னு சொல்லலை அதே மாதிரி காதலிக்கிறேன்னும் சொல்ல முடியலை சொல்லப்போனா காதல்னா என்னான்னே ஒரே குழப்பமாயிருக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளைப்பத்தி நினைக்கிறப்ப.

நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நான் பயப்படலைன்னு சொல்ல முடியாது, அந்த பயம் எனக்கு இருக்கத்தான் செய்யுது. போனா இத்தோட போகட்டுமேன்னு தான் நான் இப்படியிருக்கிறதா கூட சிலசமயம் நினைச்சிருக்கேன், போய்ட்டீங்கன்னா அப்படியே துடைச்செறிஞ்சிட்டு போய்ட முடியும்னு இப்ப தோணலைன்னாலும் இது தேவலைன்னு நினைக்கத்தோணுது. இந்த பயம் போகாம என்னால காதலிக்க முடியாதுன்னே நினைக்கிறேன், ஆனால் விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நினைக்கிறதுக்கு என்கிட்ட எந்த ரீஸனும் கிடையாது. நான் ரொம்ப குழப்பமாயிருக்கேன்.

சில சமயம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறதா நினைச்சி பேசாம எதையாவது சொல்லி உங்களை என்ன வெறுக்குற மாதிரி செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். மூணு வருஷம் கழிச்சி இதெல்லாம் ரொம்ப ட்ரமேட்டிக்கா இருக்கும்னும் நீங்க நம்பமாட்டீங்கன்னும் தெரியிறதால என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்க கேக்குற மாதிரி என் கேர்ள் ப்ரண்ட்ங்க கிட்ட பழகிற மாதிரி என்னால் உங்கக்கிட்ட பழக முடியலை, எங்கையோ ஒரு இடத்தில் என்னத்தையோ நான் மிஸ் பண்ணுறேன். என்னான்னு தான் தெரியலை.

சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம், என்ன உங்களுக்கு என் உடம்பப் பார்க்கணும் ஆசை தீர அனுபவிக்கணும் அவ்வளவுதானே போய்த் தொலையுதுன்னு அதைச் செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனால் கடைசியில் நீங்களும் இவ்வளவு தானான்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதே சமயத்தில் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் இதில் விருப்பம் இருக்கு எனக்கு இல்லவேயில்லை சாமியார் நானுன்னு ஃப்ரூப் பண்ண நினைக்கிறனான்னு சந்தேகமாவும் இருக்கு. எனக்கு செக்ஸ் ஃபீலிங் இல்லாம இல்ல, எனக்கும் அதைப் பற்றி கனவு கற்பனை கவிதை எல்லாம் இருக்கு சொல்லப்போனா பாட்டுக் கூட இருக்கு உங்கள மாதிரி..."

சிரித்தாள் நான் எதுவும் சொல்லவில்லை.

"...ஆனா சீக்கிரமே ஒரு முடிவு எடுக்கணும்னு இன்னிக்கு காலைல தான் நினைச்சேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்க, ஒன்னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி தொறந்து காண்பிச்சிட்டு போய்ட்றதுன்னு இருக்கேன். ஆறுமாசம் ஒரு வருஷம் காதலிக்கிறவங்க எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன், மூணு வருஷமா உங்களைக் காதலிச்சும் காயப்போட்டேங்கிறப்ப எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. மூணு வருஷம் பொறுத்தியே இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ பொறுத்திட்டா நான் முழுசா உனக்குத்தானேன்னு தான் சொல்லத் தோணுது. ஆனா அது என்ன ஃபார்மாலிட்டி தாலி கட்டுறது கூட படுத்துக்கிறதுக்கு லைசன்ஸான்னும் தோணுது. மூணு வருஷம் காதலிச்ச உங்களை விட தாலி பெரிய விஷயமா படலை எனக்கு.

என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியலை, இப்படி என்னைத் தடுமாற வைச்சு என்னை உபயோகிச்சிக்கப் பார்க்கிறீங்களான்னும் சில சமயம் தோணுது. என்ன எழவோ நான் எதுக்கும் தயாராய்ட்டேன், உங்களுக்கு விருப்பம்னா நாளைக்கே கூட நீங்க என்னை எடுத்துக்கலாம். இப்ப எதுவும் பேசாதீங்க எதார்ந்திருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க. நான் எதுக்கும் தயார். நான் போனை வைக்கிறேன்."

சிரிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் முயன்றாலும் முடியாமல் சிரித்துவிட, எதிர்ப்பக்கத்தில் அவள் போனைத் துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.

---------------------

Mohandoss's new status message - பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
யாசித்தலின் குரூரம்
காதலாய் யாசிக்கிறேன்

* தொடர்கதையாக ஆக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி ஆகாது போலிருக்கு.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In சுய சொறிதல்

சிக்கன் பிரியாணியும் பின்நவீனத்துவமும்

அன்பு அண்ணன் ஆசிப் மீரான் வீட்டுத் திருமணத்திற்கு வரச்சொல்லி இரண்டு மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தார் :( நான் டிக்கெட் எதுவும் எடுக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்ததாலும் கடைசி சமயத்தில் திருச்சி சென்றுவர வேண்டிய ஒரு அவஸ்தையான நிலையில் சிக்கிக் கொண்டாலும் கல்யாணத்திற்கு வரணும் என்று மிரட்டி வைத்திருந்ததை நினைவில் வைத்திருந்தேன்.

வெள்ளிக் கிழமை ப்ராஜக்ட் நல்ல முறையில் First Phase முடித்திருந்ததால், Wonder Laவில் கொட்டமடித்துவிட்டு, பின் இரவு ஓல்ட் மதராஸ் ரோட்டில் உள்ள 'ஹக்கா' என்கிற சீன உணவகத்தில் dinner முடித்து விட்டு திருச்சி கிளம்பிய பொழுது மணி பதினொன்று.

டிக்கெட் எதுவும் ரிசர்வ் செய்து வைத்திருக்கவில்லையாதலால், மடிவாலா வந்து கிடைத்த பஸ்ஸில் ஏறி ஓசூர் வந்து பின்னர் ஓசூரில் அதிர்ஷ்டவசமாக கிடைத்த வொல்வோவில் சேலம் வரை வந்து பின்னர் சேலத்தில் இருந்து திருச்சி தமிழ்நாடு அரசுப் பேருந்து, காலை 8 மணிக்கு வீடு வந்து சேர்ந்த பொழுது பத்து பேர் தோளில்(சும்மா தாங்க :)) உட்கார்திருப்பதைப் போன்றிருந்தது. ஆனால் அரசாங்கத்தின் அரை நாள் விடுமுறையை அனுசரித்து அதற்கு முன்னமே செய்ய வேண்டிய வேலையை எல்லாம் செய்துவிட்டு கேபிஎன்னில் உட்கார்ந்தால் காலை சென்னை.

திருமண மண்டபத்திற்கு நான் வந்த பொழுது, லக்கிலுக்கும், பாலபாரதியும் மட்டும் இருந்தார்கள். பின்னர் சிறிது நேரத்தில் ஆசிப் வந்துவிட, மண்டபத்திற்கு கீழிருந்த சரவணபவனில் கொஞ்சம் உரையாடல் நடந்தது. அடல்ஸ் ஒன்லி வகை உரையாடல்கள் என்பதுவும் கொஞ்சம் சப்தம் அதிகமாகிவிட்டது என்பதும் சப்ளையர் வந்து அமைதியாக உரையாடும்படி சொன்னதும் தான் புரியவந்தது :).

அங்கே சொல்லப்பட்ட கதைகள் இரண்டும்(யார்னு நான் சொல்ல்லைப்பா :)) 'ச்சீ' வகை கதை என்பதால் சென்ஸார் செய்யப்பட்டு பதிவிடப்படலை. தனிப்பட்ட முறையில் என்னைச் சந்திக்கும் நபர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் :). இந்த இடைவெளியில் வால்பையனும், டோண்டு ராகவனும் வந்தார்கள் நமக்கு இருவருமே அத்தனை பழக்கம் இல்லை என்பதால் கப்சிப்.

பின்னர் அண்ணாச்சி மேலே திருமண மண்டபத்திற்கு சென்றுவிட நந்தா, பைத்தியக்காரன் இருவரும் வந்தார்கள். அவர்களுடன் அரட்டை அடித்தபடியே மண்டபத்திற்குச் சென்ற பொழுது அங்கே மேலும் நிறைய நண்பர்கள் இருந்தார்கள். எனக்கும் நினைவில் இருக்கும் வரையில் சொல்கிறேன், விட்டுப்போனவர்கள் கிட்ட மாப்பு. மரத்தடி தோழர்கள் ஹரன் பிரசன்னா, நடராஜன் ஸ்ரீநிவாசன் மற்றும் கென், அருட்பெருங்கோ, உண்மைத்தமிழன், இளவஞ்சி, லக்ஷ்மி, வளர்மதி, க்ருபா சங்கர் போன்றோர் வந்திருந்தனர். ஆசிப் மீரான் வீட்டு திருமணத்திற்கு நிறைய நபர்கள் வந்திருந்தார்கள். எனக்கு அவர்களின் பெயர்களும் அவர்கள் யார் என்றும் அதிகம் தெரியாததால் அந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கவில்லை.

ஸ்ரீநிவாசன் அவர்களுடன் கேஆர்எஸ், தமிழச்சி, தசாவதாரம், ஸ்ரீரங்கம், நாமம், சிதம்பரம், மானக்ஷா பின்னர் மாற்றம், கல்யாணம், கவிதை என்று நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தேன். இடையிடையில் ஹரன் பிரசன்னாவும் நுழைந்து கொண்டிருந்தார். அவர் பையன் பயங்கர சுட்டி இரண்டு பலூன்களை உடைத்துவிட்டிருந்தான் அதற்குள்.

இளவஞ்சி வந்தார், அவரிடம் சிகை மாற்றம் பற்றி கொஞ்சம் ஜல்லி அடித்துவிட்டு முந்தைய பதிவு ஒன்றில் என்னைக் காலை வாறிவிட்டதைக் கவனித்ததையும் அதை பின்பொருநாள் கவனித்துக் கொள்வதாகச் சூழுறைத்துவிட்டு அவருடைய குட்டிப் பெண்ணிடம் அறிமுகம் செய்து கொண்டேன் :). முடி இறக்கிய பிறகும் 'பயங்கரமா' இருந்ததாலோ என்னவோ பயந்து போனதால் வெட்கப்பட்டுக் கொண்டு ஒளிந்து கொண்டாள். சிறு குழந்தைகள் பத்து பதினைந்து பேர்களுடன் பழக்கம் உண்டு என்பதால், இந்த மாதிரி அறிமுகமே கொஞ்சம் வெட்கப்பட வைப்பது தான் என்று தெரிந்ததால் சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டேன். இளவஞ்சியுடன் கொஞ்சம் பேசிவிட்டு பின்னர் நண்பர் வளர்மதி, பைத்தியக்காரன், நந்தா, கென் உடன் இலக்கியம்(ஆமாய்யா ஆமாம்! நானும் ரௌடி என்று சொல்லிக் கொண்டு 'வடிவேல்' போலீஸ் ஜீப் ஏறும் காட்சியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.) பேச புறப்பட்டேன். பயங்கரமான செட்டிங்கில் இலக்கியம் 'பின்'நவீனம், வாழ்க்கை, இலக்கியம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நந்தாவிற்கு மட்டும் "'பிரியாணி' காலியாகிறது உடனடியாக வரவும்" என்று நாலைந்து தொலைபேசி அழைப்புகள் :). இலக்கியம் பேசி செவிக்கு உணவு அதிகமானதால் நான் வயிற்றுக்கான உணவு பற்றி கவலைப்படவில்லை.

நானும் என் முகமூடியை விட்டு வந்து பசிக்குது வாங்கய்யா போகலாம்னு எப்படி சொல்றது. இடையில் ஹெல்மெட் எடுக்கிறேன் பேர்வழி என்று சென்ற கென் 'பிரியாணி காலி' என்ற செய்தியுடன் வந்ததால் பிரியாணி சாப்பிடும் ஆசையில் வந்த நந்தாவிற்கு காதில் புகை. ஆனால் அப்படியொன்றும் நடக்காமல் நாங்கள் இலக்கியம் பேசி முடித்துவிட்டு மேலே மண்டபத்திற்குச் சென்ற பொழுது, எங்கள் அனைவருக்குமான பிரியாணி இருந்தது. ஆசிப் அண்ணாச்சியே அப்பொழுதுதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், தன் பெண்ணிற்கு உணவு ஊட்டியபடியே. புது ஜெனரேஷன் மக்கள் எப்பொழுதுமே அதற்கு முந்தைய ஜெனரேஷன் ஆட்களுக்குப் பிரச்சனைதான். சாப்பிட்டு முடித்துவிட்டு ஆசிப்புடனும், அவரது குட்டி மகளுடனும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு ஆசிப்பிற்கு விடை கொடுத்துவிட்டு கீழிறங்கியதும் வளர்மதி வீட்டிற்குச் சென்று அங்கு பத்து நிமிடம் போல் இலக்கியம் மீண்டும் பேசிவிட்டு பெங்களூருக்கான டிக்கெட் புக் செய்துவிட்டு, 11 மணி வரை என்ன செய்யலாம் என்று நினைத்து சின்மையா நகர் வந்து டைப் அடித்துக் கொண்டிருக்கிறேன்.

பதிவை சுயசொறிதல் என்று வகைப்படுத்தப் போகிறேன் என்பதால் அதிலிருந்து சில விஷயங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

Popular Posts