In R.P. ராஜநாயஹம் சுஜாதா தமிழ் நாஞ்சில் நாடன் போர்னோ போர்னோகிராஃபி ஜெயமோகன்

தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன?


டிவிட்டரில் ஸ்ரீதர் நாராயணன் என்னிடம்,

 “@mohandoss சில எல்லைகளை அநாயசமா கடந்து எழுதறீங்க. ஆனா, எதுக்கு எழுதனும்கிற நோக்கமும் ஸ்திரமா வச்சிருப்பீங்கன்னு நம்பறேன். வாழ்த்துகள்! :-)” சொன்ன பொழுது விளையாட்டிற்காய்,

நானும் “@orupakkam அட அதையெல்லாம் வரலாறு பாத்துக்கும் தல. நம்ம வேலை எழுதுறது எழுதுவோம்.” என்றே சொல்லியிருந்தேன்.

அவர் என் மோகனீயம் தொடர்கதை பற்றித்தான் அப்படிக் கேட்டார். என்னிடம் நோக்கம் இருந்தது இருக்குது தான் ஆனால் ஸ்திரமானதான்னு தெரியாது! சுஜாதாவின் கீழ்க்கண்ட பத்தி படித்ததிலிருந்து நல்ல தமிழில் ஃபோர்னோகிராபி எழுதிவிடணும் என்று. நான் முயற்சி தான் செய்யறேன், தவறாவும் இருக்கலாம்.

சுஜாதாவின் மேற்கண்ட கேள்வியை - பதிவின் தலைப்பு - முன்வைத்து கணையாழி கடைசி பக்கங்களில் எழுதியதை முன்னமே கூட ஒரு முறை பட்டியலிட்டிருக்கிறேன், புத்தக விமர்சனம் வைக்கிறேன் பேர்வழியென்று.

"தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன" மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.

"தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.

அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழத்தும் அங்குள...
மேலே 'திருப்புகழில்' தேடிக்கொள்ளவும்."

என்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும். பாட்டைக் கண்டுபிடிச்சிட்டேன் இப்ப இதுக்கு பொருள் கண்டுபிடிக்கணும்.(09/16/2016)

அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபி னரைதனி லுடைதனை
அவிழ்த்து மங்குள அரசிலை தடவியு மிருதோளுற்
றணைத்து மங்கையி னடிதொறு நகமெழ
வுதட்டை மென்றுப விடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென மிகவாய்விட்
டுருக்கு மங்கியின் மெழுகென வுருகிய
சிரத்தை மிஞ்சிடு மநுபவ முறுபல
முறக்கை யின்கனி நிகரென இலகிய முலைமேல்வீழ்ந்
துருக்க லங்கிமெ யுருகிட வமுதுகு
பெருத்த வுந்தியின் முழுகிமெ யுணர்வற
வுழைத்தி டுங்கன கலவியைமகிழ்வது தவிர்வேனோ
இருக்கு மந்திர மெழுவகை முநிபெற
வுரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் அலகிய அறுமுக எழில்வேளென்
றிலக்க ணங்களு மியலிசை களுமிக
விரிக்கு மம்பல மதுரித கவிதனை
யியற்று செந்தமிழ் விதமொடு புயமிசை புனைவோனே
செருக்கும் அம்பல மிசைதனி லசைவுற
நடித்த சங்கரர் வழிவழி யடியவர்
திருக்கு ருந்தடி யருள்பெற அருளிய குருநாதர்
திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.

சரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.

"தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.

'மையார் கண் மடலாச்சியார் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்'

என்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno."

ஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.

"இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள்? ஏன் மறைய வேண்டும்?"


கணையாழி கடைசி பக்கங்கள் பதிவில் இங்கே எழுதியிருந்தேன்.

-----------------------------



முன்னமே கூட தமிழ் சிஃபியில் 'முலைகள்' பற்றிய ஒரு கட்டுரை இருந்தது. கட்டுரை எழுதியவரைப் பற்றி மறந்து போய்விட்டது ஆனால் முலைகளின் வித்தியாசமான தோற்றங்களைப் பற்றி பேசியது அந்தக் கட்டுரை. தமிழ் சிஃபி அப்பொழுது யுனிக்கோடில் இல்லை, இப்பொழுது மாற்றிக் கொண்டிருந்தார்கள் மாற்றிவிட்டார்களா தெரியாது, மாற்றினால் ஒரு முறை தேடிப் பார்க்கலாம்.

தேடிப்பார்த்து கிடைத்தது. இங்கே

எப்பொழுதோ யாரோ எழுதிப் படித்தது, பழங்கால தமிழர்களுக்கு ஆண்குறியே இல்லை என்று*(இல்லை அதை ஒத்த ஒன்று - நினைவில் இருந்து எழுதுகிறேன்.) ஏனென்றால் அதைப் பற்றிய குறிப்பே இலக்கியத்தில் இல்லை என்று சொல்லியோ என்னவோ, தமிழ் இலக்கியத்தில் அத்தனை தூரம் பரீட்சையம் இல்லாதவன் நான். முலைகள் பற்றிய குறிப்புகள் இருக்கும் அளவிற்கு ஆண்குறிகள் பற்றிய குறிப்புகள் இருக்காது என்றே நினைக்கிறேன்.

------------------------------

நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய பொழுது ஒரு வழக்கத்திற்காகவே கொஞ்சம் 'செக்ஸியாக' எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் நண்பர் ஒருவர் 'ரமணி சந்திரன்' கதை போல இருக்கிறது என்று சொல்ல, அதை விட உத்வேகம் ஒன்று வேண்டுமா அப்படி எழுதுவதை நிறுத்திவிட்டேன். :)

பின்னர் என் மோகனீயம் கதைகளிலும், மலரினும் மெல்லிய காமம், முக்கூடல் கதைகளிலும் தொட முயன்றிருக்கிறேன்.

எழுதிய இரண்டொரு  மொழிபெயர்ப்பு கதைகளும் இந்த வகையே!

பார்வையற்று
தேஜஸ்வினி

-------------------------------
‘அருப்பு ஏந்திய கலசத்துணை
அமுது ஏந்திய மதமா
மருப்பு ஏந்திய’ எனல் ஆம் முலை,
மழை ஏந்திய குழலாள்
கருப்பு ஏந்திரம் முதலாயின
கண்டாள் இடர்காணாள்
பொருப்பு ஏந்திய தோளனோடு
பொருந்தினள் போனாள். [ அயோத்தியா காண்டம். 1931]

[அரும்பு ஏந்திய அமுது நிறைந்த இணைக் கலசங்கள் போலவும் மதயானை தந்தங்கள் போலவும் முலைகளும் மேகம்போன்ற கூந்தலும் கொண்டவள் கரும்பு இயந்திரம் முதலியவற்றைக் கண்டபடி துயரங்களை அறியாமல் மலைகள் பொருந்திய தோள்கொண்டவனுடன் இணைந்து சென்றாள்]

இப்ப ஜெயமோகன் புகுந்து விளையாடுறாரு, அவருடைய காடு மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஏற்கனவே படித்திருக்கிறேன் என்பதால் புதிதாகத் தெரியவில்லை என்றாலும். ரொம்ப நாட்களாய் மனதிற்குள் ஊறிக்கொண்டிருந்த கம்ப ராமாயணம் படிக்கணும் என்ற ஆசையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜெமோவின் கம்பனும் காமமும்...

ஒன்றுஇரண்டு,  மூன்று

-------------------------------

இதே போல R.P. ராஜநாயஹம் எழுதியிருக்கிறார், அதில் சௌந்தர்யலஹரி பற்றி சொல்கிறார் இப்படி,

‘சக்கரமையப்புள்ளி சக்தி உன் முகமாம்
கீழே தக்கதோர் இரு முலைகள்
தாவினால் அழகு யோனி '

இவருடைய Carnal Thoughts தமிழில் ஒரு நல்ல ஃபோர்னோ முயற்சி என்றே நினைக்கிறேன்.

------------------------------

இன்றைக்கு தமிழில் போர்னோவை வைத்து விளையாடுவதில் பெரிய ஆள், வாமுகோமு. ஆனால் ஏனோ அவர் தன் நாவல்களை அந்தவகைப் படுத்துவதில்லை.

பார்ப்போம்.

* - நன்றி அருட்பெருங்கோ


Related Articles

5 comments:

  1. மோஹன் தாசரெ,

    சரோஜா தேவியெல்லாம் இதில சேர்த்தியா இல்லியா?

    அந்த புத்தகம் பெங்களூரில் இருந்து தான் வருதாம் :-))

    அப்புறம் சாருநிவேதாவின் படைப்புகள் எல்லாம் சோக்கு படைப்புகளே, அதெல்லாம் படிக்காம தமிழில் போர்னோ இல்லைனு புலம்பினா எப்பூடி :-))

    அதெல்லாம் செல்லாதுன்னா நீரே ஒரு படைப்பை படையும் ...நம்ம மக்கள் எல்லாம் முக்காடுப்போட்டுக்கிட்டு ஷகிலா படம் பார்த்த கோஷ்டிகள் தான், எல்லாருமே படிப்பாங்க ஆனால் படிச்சேன்னு சொல்ல மாட்டாங்க :-))

    ReplyDelete
  2. ithellaam oru pozhappu ..

    ReplyDelete
  3. தமிழ் சினிமாப் பாடல்கள் இதில் வருமா ?

    கண்ணதாசன் எழுதிய வரிகள் :
    தோட்டத்து பூவினில் இல்லாதது
    ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
    ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
    ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
    அது எது ?

    ReplyDelete
  4. I dont understand what the fuck is your point, Mohandas? You want to discuss about pornography, go on and find "appropriate place"!

    Why are you asking some STUPID questions in your title in general discussion blogspots?

    Are you going to ask next, Do Tamil have sex too? Is that not taboo? Right?

    Tamils love sex just like anybody. Some tamils like porn too. Some tamils like you may be obsessed with discussing porn?

    BUT,

    We all have sex but WE DONT DISCUSS that in general discussion forum.

    WHY??!!

    We cant talk about everything we do, we everything think. Because some of them are too personal and inappropriate for general audience. Get that in your dead brain!

    If you are obsessed with porn, there are sites for you. Get the fuck out of here! and Tamilmanam as well!

    Why the fuck you want comment-fucking moderation?!

    ReplyDelete
  5. சுரேஷ்Tuesday, July 17, 2018

    யோவ் வருண் லூசா நீ.

    தமிழில் போர்னோகிராபி இருக்கிறதா என்ன? கேள்வி மோகனுடையது இல்லை. சுஜாதாவோடையது. ஸ்டுபிட் கேள்வியா?

    மோகன் இதுபோல் பைத்தியக்கார ஆட்கள் பேச்சை கேட்காதீர்கள், உங்களைப் படித்து தெரிந்து கொண்ட வகையில் அது போன்ற ஆள் இல்லை என்று தெரியும்.

    உங்கள் மோகனீயம் சீரியஸுக்கு பெரிய ரசிகன் நான். ப்லீஸ் கண்டின்யூ.

    ReplyDelete

Popular Posts