பெங்களூர் டு ஸ்ரீரங்கம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வடமாநிலங்களiல் வேலை செய்து வந்ததால் செய்ய முடியாத ஒரு காரியத்தை இந்த வருடம் பெங்களூரில் இருப்பதால் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அது வைகுண்ட ஏகாதெசி அன்று சொர்க்கவாசல் மிதிப்பது. முடிஞ்சிருச்சான்னு கேட்டா இல்லை இன்னைக்கு நைட்டு தான்.
ஆனால் வழக்கம் போல் சில கேள்விகள் எல்லோர் மனதிலும். கடவுள் நம்பிக்கையில்லை என்று சொல்லிக்கொள்ளும் நான், கொஞ்சம் கஷ்டப்பட்டு இந்த சொர்க்கவாசலுக்கு வரும் காரணம் என்ன என்பது அது. அவரவர்கள் அவரவர்களுக்கு பிடித்த முகமுடியுடன் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டார்கள் என்றே சொல்லுவேன்.
அம்மாவிற்கு இன்னும் தன் பையன் முழுசா கெட்டுப்போய்விடவில்லை, இன்னும் தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான் அதனால் எப்படியாவது சொர்க்கவாசல் மிதிக்க வருகின்றான் என்பதில் ஒரு திருப்தி.
அப்பாவிற்கு, நான் பத்திரமாக வந்து எல்லாம் முடிந்து எந்தவித பிரச்சனையும் இல்லாமல் திரும்பப்போய்விடவேண்டும். இதற்கு நான் வராமலேயிருக்கலாம் என்ற எண்ணம்.
அக்காவிற்கு, நான் கதையெழுதுவதற்கான ஒரு தீம் இந்த கூட்டத்தில் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்த முறை வந்திருக்கிறேன் என்ற நினைப்பு.
நம்ம ஜிகிடி தோஸ்துக்கு, ஸ்ரீரங்கத்துச் சின்ன மாமிகளை பை போடுவதற்காகத்தான் நான் போவதாகவும்.
நம்ம மனசாட்சி(கலைஞருக்கு முரசொலி மாறன் மாதிரியெல்லாம் கற்பனை செய்துக்காதீங்க, உண்மையை மறைக்கத் தெரியாத என் பாகம்னு வேண்ணா வைச்சிக்கோங்க) சொன்னது தான் கொஞ்சம் பக்கத்தில் வருவது மாதிரி இருந்தது. மாமு உனக்கு அந்தச் சம்பவத்துக்குப் பிராமணாஸ் கண்டா ஆகாது, முதலிலே பார்த்த உடனே நம்புறது கிடையாது. ஆனால் இப்ப ப்ளாக் உலகத்திற்கு வந்த பிறகு அது கொஞ்ச கொஞ்சமா குறையிற மாதிரி ஒரு பீலிங்.
இப்ப ஏகாதெசிக்கு ஸ்ரீரங்கத்துப் போனா அங்க நடக்கிற விஷயங்களைப் பார்த்து ஆட்டோமேட்டிக்கா திரும்பவும் மனசில ஊடு கட்ட ஆரம்பிச்சிருவ. அதாவது தூங்கிற சிங்கத்த எழுப்பிடாம அதே சமயத்தில ஒரேயடியா தூங்கிடா பார்த்துக்கிற நீ இல்லையா?
எனக்கென்னமோ இந்த விஷயம் கொஞ்சம் சரி மாதிரி தெரிஞ்சாலும், எனக்கு சாதாரணமாவே கூட்டத்தைக் கண்டால் ரொம்பப் பிடிக்கும். ஆனா அந்தக் கூட்டத்தோட பழகிறதுக்குக் கிடையாது, வேடிக்கைப் பார்க்க. எப்படி கிருஸ்துமஸ் இரவுகளில் சர்சிற்கு செல்கிறேனோ அப்படி. (செக்யூலரிஸ்டு முகமூடி வெளியில் வந்திடுச்சு.)
திரும்பவும் அந்த மனசாட்சி மேட்டருக்கு, எனக்கு கொஞ்ச காலத்துக்கு முந்தியெல்லாம் பாலகுமாரனை ரொம்பப் பிடிக்கும்(இப்ப பிடிக்குமா பிடிக்காதாங்கிறது வேற விஷயம்) அதுக்கெல்லாம் முக்கிய காரணம் எங்க மாமா, அவன் தான் பல நாவல்களைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருந்தான். வாங்கியும் கொடுப்பான். ஆனால் நன்றாக நினைவில் இருக்கிறது ஒரு ஏகாதெசி முடிந்த அடுத்த நாள் பாலகுமாரன் நல்லவர் இல்லைன்னு ஒரே ஆர்க்யூமெண்ட், ஏன்னு கேட்டா பாலகுமாரன் எப்பப்பார்த்தாலும், கடவுளை பார்ப்பதற்கு காசுகொடுத்தோ இல்லை இன்னபிற விஷயங்களை உபயோகித்தோ ஸ்கிப் பண்ணி போகக்கூடாதுன்னு எழுதியிருப்பாரு.
அந்த ஏகாதெசியில, மேல் சட்டைப்போடாமல்(;))வரிசையை ஸ்கிப் பண்ணி, சாமிப்பக்கத்தில் போய்ட்டார். அதை மாமன் பார்த்துட்டான் அதான் இந்த வெறுப்பு. ஏனென்றால் சாருநிவேதிதா போலில்லாமல், அவருடைய வாழ்க்கையையும் எழுத்தையும் ஒன்றாய்ப் பார்க்கும் நிறைய பேரில் மாமனும் ஒருத்தன். பாவம் மாமாவிற்கு ப்ராக்டிகாலிட்டி ரொம்பச் சுட்டிருக்கணும் அன்னிக்கி. அதே விஷயம் மறுபடியும் மறுபடியும் என்னை சுடணும் அப்படிங்கிறதுக்காகத்தான் நான் ஏகாதெசிக்கு வர்றேன்னு மனசாட்சியே சொன்னாலும்.
இரண்டு கைகளையும் எக்ஸர்சைஸ் செய்வதைப்போல் முன்னால் நீட்டி அந்த கேப்பில் தான் பெற்ற பெண்ணை(ஐயர் பொண்ணுன்னு வைச்சுக்கோங்களேன் – திராவிடப் பிகரை சைட் அடிச்சேன்னா முத்து உதைப்பார், இதே பிராமணப் பொண்ணை சைட் அடிச்சேன்னு தெரிஞ்சா, பிகேஎஸ் இரண்டு வரிக்கதை எழுதுவார். இருந்தாலும் ஒரு உதாரணத்திற்கு)யாரும் கிள்ளிவிடாமல்(புரியும்னு நினைக்கிறேன்) காப்பாற்றி சொர்க்வாசலை கடக்கவைத்து இதற்கிடையே அந்த பல்லியையும் இன்னொரு ஐட்டத்தையும் வேறு காண்பித்து. அப்பப்பா. இதைப் போன்ற விஷயங்கள், பிறகு ஆந்திராவிலிருந்து கோவிந்தனையே மனதில் நினைத்தபடி வரும் தெலுங்கர்கள், சபரிமலைக்கு போகும் அவசரத்தில் கோவிலுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும் சாமிகள். பிகர்களை, மாமிகளை இடிப்பதற்கென்றே வரும் கும்பல் என ஒவ்வொரு தடவையும் எனக்கு வித்தியாசமான பிக்சர் கிடைத்து வருகிறது. ஆனால் ஊஞ்சலாடும் உற்சவர் ஒருவர்தான்(இதைச் சொல்லி தேசிகனின் பதிவில் போன வருடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.)
எனக்கு இப்படின்னா நிறையப்பேருக்கு வேறமாதிரியெல்லாம், சீவலி(?) பிடிக்கிறவா, பல்லக்கு தூக்கறவா இப்படி அவரவர்களுக்கு வித்தியாசமாய் ஆனால் நல்ல பொழுது போக்காய்.(எங்க அப்பாவுக்கு தெரிஞ்சது எனக்குன்னு தனியா ஒரு கேபிஎன் புக் பண்ணி பெங்களூர் பார்சல் பண்ணிடுவார். ஏதோ புள்ளை சாமியெல்லாம் கும்பிடுதுன்னு தான் இப்ப வர்றதுக்கு அப்ரூவல் கிடைத்தது. பொழுதுபோக்குன்னு சொன்னேன்னா அவ்வளவுதான்.)
சரிசரி ஏற்கனவே லேட் ஆகிக்கிட்டிருக்கு, நான் கிளம்புறேன். போய் மூலவருக்கு முத்தங்கிசேவையில் ஒரு ஹாய் சொல்லிவிட்டு. பின்னூட்டம் போடுறவர்கள் கேட்டுக்கொண்டால் அவர்கள் சார்பாகவும் ஒரு ஹாய் சொல்வதாக உத்தேசம். வருகிறேன். நாளை இந்த வருட ஏகாதெசி அனுவங்களுடன்.
In Only ஜல்லிஸ் சொந்தக் கதை சொர்க்கவாசல்
பெங்களூர் to ஸ்ரீரங்கம்
Posted on Friday, December 29, 2006
பெங்களூர் to ஸ்ரீரங்கம்
பூனைக்குட்டி
Friday, December 29, 2006

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
It was late 2010, Chennai drowning in 2G rumors and the sticky heat of a city faking it wasn’t falling apart. I’d been plotting this night f...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
அடுத்த நாள் வீட்டில் நான் பெயிண்டிங் பண்ணிக் கொண்டிருந்த பொழுது வீட்டு ஓனர் வந்து உங்களுக்கு ஒரு ஃபோன் வந்தது. மதுமிதா என்ற பொண்ணுக்கு ஆக்...
0 comments:
Post a Comment