In பயணம்

காஷ்மீர் பயணம் - ஜம்முவிலிருந்து

ஜம்மு வந்தாகிவிட்டது. பழைய தில்லியிலிருந்து நேற்றிரவு 9.30க்கு கிளம்பி இன்று காலை 11.30க்கு ஜம்மு மெயில் கொண்டு வந்து தள்ளிவிட்டு சென்றுவிட்டது. உடன் வந்த மூன்று வாலிபர்கள் என்ன நினைத்து வந்தார்களோ, ஒரேயொரு ஸ்வெட்டரை மட்டும் போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டிருந்தனர். ஆனால் இரவின் பின்நேரங்களில் கம்பளி இல்லாமல் ரயிலின் உள் சமாளிக்க முடியாது என்பது மிகவும் லேட்டாக அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

காலையில் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டு வந்தார்கள். கல்லூரி மாணவர்களாம், வைஷ்ணவ் தேவி பார்க்க வந்திருக்கிறார்கள், நான் ஜம்மு வரை வந்து வைஷ்ணவ் தேவி பார்க்கவில்லை என்றதும் கிறிஸ்தியனா என்று கேட்டார்கள், என் பெயரும் ஒரு மாதிரி சுத்தி கிறிஸ்துவப்பெயர் போல் இருப்பதால் இந்த சந்தேகம் வந்திருக்கலாம் என்று நினைத்தேன்.

நானென்னமோ ரொம்பவும் குளிரும் என்று ஸ்வெட்டர் போட்டு மேலே ஜெர்கின் போட்டுக்கொண்டு ஜம்முவில் இறங்கினால் அத்தனை குளிரில்லை, இப்பொழுது ஜெர்கினின் உள் வேகிறது. இங்கிருந்து ஸ்ரிநகர் 12 மணிநேர பயணம் என்று சொல்கிறார்கள். ஜம்முவிலிருந்து ஸ்ரி நகர் போகும் வழி பிரம்மாதமாகயிருக்கும் என்று சொல்லி ஆர்வத்தைக் கிளறிவிட்டிருக்கிறார்கள். பார்ப்போம். இன்று வரை வைஷ்ணவ் தேவி போகும் ஆவலில்லை, தெரியாது. ஸ்ரிநகரில் இருந்து வந்த பிறகு நேரம் இருந்தால் ஒரு தடவை போய்வரலாம் என்றிருக்கிறேன்.

முந்தையது

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts