In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 9

"அசந்து தூங்கிட்டிருந்த, அதான் எழுப்ப மனமே வரலை..." சொல்லிவிட்டு மோகன் முறுவளித்தான்.

மெதுவாய் சோம்பல் கலைத்தபின் அவனைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்தபடியே “நான் தூங்கிக் கொண்டிருந்தது தான் காரணமா இல்லை வேறதெவும் இருக்கா?” அவளும் சிரித்தாள். அவள் கண்களில் அன்றைக்கு ஹாஸ்டலுக்குப் போக முடியாது, மீண்டும் கனிமொழி வீட்டிற்கும் போக முடியாது என்கிற பயம் தெரியவில்லை விளையாட்டுத்தனம் தான் தெரிந்தது. அவள் அறைக்குள் வந்த நேரத்தை வைத்து அவள் அங்கே இரவு தங்கிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் தான் வந்திருக்க வேண்டும் என்று நினைத்தான். இரவு அவனுடன் தங்குவதாய் இருந்தால் அதற்கான சாதக பாதகங்களையும் அவள் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும், அந்த நினைப்பே அவனுக்கு அன்றைய இரவுப்பொழுது ஏற்படுத்தப்போகும் சந்தர்ப்பங்களை விளக்கியது.

அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு, “வேறென்ன காரணம் இருக்க முடியும் அகிலா.” என்றான்.

அவள் முகத்திலிருந்த சிரிப்பு விலகவேயில்லை, கொஞ்சமாய் சிவக்கத்தொடங்கியிருந்தது அவள் முகம் “அப்படின்னா எனக்கொன்னும் பிரச்சனையில்லை. ஆனால் பூனை இந்தக் கட்டில் பக்கம் மட்டும் வரக்கூடாது.” என்றாள். கீழே உட்கார்ந்து லாப்டாப்பில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவன் எழுந்து போய் அவள் கால்மாட்டில் அமர்ந்தான். இடது கை ரொம்பவும் பழக்கப்பட்டது போல் அவள் பாதங்களை அமுக்கிவிடத் தொடங்கியது அம்மாவிற்கு அமுக்கிவிட்ட பழக்கம். பாதத்தில் இருந்து தொடங்கினான். முதலில் தடுப்பதற்காய் எழுத்தொடங்கியவளை வலது கையால் தள்ளிப் படுக்கவைத்தேன். பஸ்ஸில் வந்த களைப்பு அவள் கால்கள், அவன் கைபேச்சுக் கேட்கத் தொடங்கியது. அவள் வைத்தக்கண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கால்கள் மிகவும் மிருதுவாய் இருந்தது அவன் கைகளுக்கும் அவள் கால்களுக்கும் இடையில் அவள் சுடிதார் பாண்ட் இருந்த பொழுதும் அவனால் உணர முடிந்தது. முட்டிக்கு மேல் செல்லாமல் இரண்டு கால்களையும் மடியில் போட்டு அமுக்கிவிடத் தொடங்கினான்.

“உங்க அப்பா எப்படியிருக்காரு?” அதுவரை அவளாய்ச் சொல்லாமல் அவளுடைய அப்பாவைப் பற்றி அவன் கேட்டதில்லை. அந்த ஆச்சர்யம் அவள் முகத்தில் தெரிந்தது.

“நல்லாயிருக்காரு உங்களைப்பத்தி லேசா சொல்லி வைச்சிருக்கேன். அப்படியா அப்படியான்னு கேட்டுகிட்டாரு.” சொன்னாள்.

“ஊரெல்லாம் எப்படியிருக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பியே ஊரில்?” கேட்டான் அப்படியிருக்கக் கூடாது என்று வேண்டியபடியே.

“ஏன்டா போனோம்னு ஆயிடுச்சி, அப்பாவுக்காகத்தானேன்னு மனதை அடக்கிக்கிட்டேன்” ஏன் என்பது போல் பார்த்தான். “இங்கையாவது உங்களை பார்க்க முடியாட்டாலும் பக்கத்தில் தான இருக்கிறோம் வேணும்னா பார்த்துக்கலாம்னு நினைப்பேன். அங்க அப்படியில்லை உங்களைப் பார்க்காமல் ரொம்பக் கஷ்டமாயிருந்துச்சு. பல்லக் கடிச்சிக்கிட்டு பதினைஞ்சு நாள் பொறுத்துக்கிட்டேன். எதைப்பார்த்தாலும் உங்க ஞாபகம் தான் வரும். உங்களுக்கு இந்தப் பதினைஞ்சு நாளில் என் ஞாபகம் வந்ததா?” அபாயமான ஒரு கேள்வியைக் கேட்டாள்.

உண்மையில் அவளைப் பற்றிய நினைப்பு அவனுக்கு அவ்வப்பொழுது வந்து கொண்டுதான் இருந்தது.

“வந்தது அகிலா, ப்ராஜக்டில் பிஸியா இருந்ததால அவ்வளவு மிஸ் பண்ணினேன்னு சொல்ல முடியாட்டாலும் மிஸ் செய்தேன் தான்.” உண்மையை உளறிக்கொட்டினான்.

அவள் சொன்னாள், “நான் நினைச்சேன் இப்படித்தான் இருக்கும்னு. இந்த இரவுக்காக நீங்க மாறலைங்கிறது சந்தோஷமா இருக்கு. ஆனா உங்க நினைப்பு என்னைப் பாடாப்படுத்திருச்சு. கண்ணை மூடி தூங்கினா கனவு முழுக்க நீங்க தான். எங்க ஊரு எங்க அப்பால்லாம் இருக்காரு ஆனால் நீங்களும் எங்கிருந்தோ வர்றீங்க முத்தம் கேட்கிறீங்க. இது மாதிரியே தான் கனவு, இழவு முத்தம் கொடுத்தே தொலைஞ்சிருக்கலாம்னு இருந்தது.” கொஞ்சம் நிறுத்தினாள் பின்னர், “இப்ப பஸ்ஸுல வர்றப்ப கூட அப்படித்தான் ஆனால் அதில் முத்தத்தில் நிக்கலை. சட்டுன்னு முத்தத்தில் ஆரம்பிச்சு என் உடம்பெல்லாம் உங்க கை நகறுது நான் தட்டிவிடுறேன்னு நினைச்சு பக்கத்தில் இருக்கிற அம்மா கையைப் பிடிச்சு உதற்றேன் பஸ்ஸில். ஒரே காமடியாப் போச்சு.” அவள் கனவு அவனுக்கு ஊக்கத்தை அளித்தாலும் தானாய்த் தொடங்காமல் இருந்தான் அவளை வற்புறுத்தக்கூடாது என்று நினைத்து அதுவும் அவள் அவன் கேட்டால் எதையும் கொடுப்பாள் என்று சொன்ன பிறகு இது சாதாரணமாய் இயல்பாய் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

“அப்ப அந்த முத்தத்த கொடுத்துத்தான் தொலையேன்.” வேண்டினான். இந்த முறை அவள் மறுப்பொன்றும் சொல்லவில்லை கால்களை அவன் மடியில் இருந்து விடுவித்துக்கொண்டு, அருகில் வந்து அவன் கன்னங்களை கைகளால் பிடித்து உதட்டில் முத்தமொன்று கொடுத்தாள், முடித்த பொழுது “இன்னொன்னு கொடேன்” என்றான். இன்னொன்று கொடுத்தவளிடம் “நல்லாயிருக்கு, இன்னொன்னு கொடு” என்றான். இந்த முறை அவள் உதடுகளைப் பிரிக்காமல் சிறிது நேரம் நீண்டிருந்தாள். அவன் வலது கை அதுவாய் அவள் மார்புகளை நோக்கி நகர்ந்தது, அது வரை அவள் துப்பட்டாவிற்குள் மறைத்து வைத்திருந்த இரட்டையர்களின் அளவு கைகளில் தெரிந்தது. உதடுகளைப் பிரிக்கும் வரை அவள் கைகளைத் தவிர்க்கவில்லை உதடும் மார்பும் ஒரே சமயத்தில் பிரிந்தது.  அவனுடையது ஏதோ ஒன்றை இருந்து பிரித்து எடுத்துச்செல்வதைப் போலிருந்தது அவனுக்கு அந்தச் செயல். கட்டிலில் சற்று தூரத்தில் சென்று உட்கார்ந்து “போதுமா?” என்றாள். அவன் இன்னமும் அவளுடைய மென்மையான உதடுகளை உதட்டிலும் அவளுடைய சாந்தமான மார்பை கைகளிலும் உணர்ந்து கொண்டிருந்தான், அடைந்த பரவசம் கண்களில் தெரிந்திருக்க வேண்டும்.

அவன் குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு “அவ்வளவு தானா?” என்றான் கண்கள் நிறைந்த ஆசைகளுடன். “வேறென்ன வேணும் பாப்பாவுக்கு, எனக்கு அவ்வளவு தானே தெரியும். வேறெதுவும் வேணும்னா சி சொல்லிக்கொடுத்த மாதிரி சொல்லிக் கொடுத்தாத்தான் உண்டு.” அவள் குரலும் அந்தச் சூழ்நிலையும் சேர்த்து அவள் சொன்ன வார்த்தைகள் அவனுக்கு பெரும் மயக்கத்தை ஏற்படுத்தியது. அவளிடம் கம்பீரமான வெட்கம் இருந்தது, அவள் வேண்டாம் என்று சொன்னாள் விலகிவிடுவான் என்கிற தெளிவு அவளுக்கு அந்த துணிச்சலை அளித்திருக்கவேண்டும். ப்ராஜக்ட் அவளைப் பற்றிய சிந்தனையிலிருந்து இயல்பாக விடுவித்திருந்தது, ஆனால் பிரிவும் அவன் மீது கொண்டிருந்த ஆழமான காதலும், இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த பேருந்து பயணமும் அவளை மனதளவில் தயார்ப்படுத்தியிருந்தது. அவளை இழுத்து மடியில் போட்டான். ஆட்டுக்குட்டியைப் போல் மடியில் படுத்திருந்தாள். முதலில் கண்களை மூடியபடியே இருந்தாள், பின்னர் திறந்த கண்களில் மோகம் தெரிந்தது, கொஞ்சம் சிரமப்பட்டு அவள் முதுகுவழி கைவிட்டு ஹூக்கைக் கழட்டினான் அவள் முதுகை ஒருமுறை விரித்துப்பார்த்து, “பாப்பாவிற்கு இதெல்லாம் தெரியுதே...” அவள் கண்கள் இன்னும் விரிந்தது. தொடர்ந்து, “சொல்ல மறந்துட்டேன், எங்க ஊர் தையக்காரம்மா சொன்னாங்க. என் சைஸ் 30B யாம். அவ்வளவுதான்பா அதுக்கு மேல வேணும்னா வேற யாரையாவது தான். தேடணும்”. வேறொரு சமயமாயிருந்தால் அவள் சொன்னது இன்னொரு அடல்ஸ் ஒன்லி உரையாடலுக்கு வழிவகுத்திருக்கும். ஆனால் சீறும் மூச்சுடன் அவன் மடியில் படுத்திருந்த அவள் மேல் விரல் ஓடிக்கொண்டிருந்த பொழுதில் பதில் சொல்ல வாய்வரவில்லை. அந்த அறையில் மெல்லியதாய் ஒளி சமையலறையில் இருந்து வந்து கொண்டிருந்தது. அவன் ஏற்கனவே அவிழ்ந்து கிடந்த பூமியில் ஆராய்ச்சியாளனின் தேர்ச்சியுடன் தேடுதலைத் தொடங்கியிருந்தான். தேடுதலுடனேயே அவர்கள் உரையாடல் நீண்டது. தேடுதல் முடிவடைந்த பொழுது அவள் முகத்தில் தெரிந்த வெட்கம் கலந்த மகிழ்ச்சி அவன் தியரியை அதுவரை ஒழுங்காக படித்திருந்தான் என்று நிறுவியது.

காலையில், "யேய், காலேஜ் வரலை?" அவளிடம் கேட்டான்.

"நீங்க போங்க, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு, போறப்ப ஒரு சாவியை இங்க வைச்சுட்டு வெளியில பூட்டிட்டு போயிருங்க"

திரும்பவும் பதினைந்து நாள் கழித்து பார்த்ததால், அன்றைக்கு எல்லாருடனும் பேசிக்கொண்டிருந்து விட்டு, இந்த செமஸ்டர் எல்லாரும் என்ன புரோஜக்ட் செய்யப் போகிறார்கள் என்று கேட்டுக் கொண்டிருந்ததில் மூணு மணிநேரம் ஓடியதே தெரியவில்லை. சாப்பிட கான்டீன் வந்தால், மாம்பழ கலர் பாவாடையும் கருப்பு கலர் தாவணியும் போட்டுக்கிட்டு, ஷாம்பூ போட்ட குளிச்ச தலைமுடி பறக்க, நெத்தியல அழகா, சிறியதாய் ஒரு குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு அகிலா தேவதை போல் நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய வெளிர் மாம்பழ நிற உடம்புக்கு அந்தக் கருப்பு தாவணி மிக அழகாக இருந்தது. இதுதான் அவன் முதல் முறை அவள் தாவணி கட்டிப்பார்ப்பது.

"தாஸ் வாயை மூடுங்க, ஈ எதுவும் உள்ளே போயிரப்போகுது. இப்பிடியா ஜொள்ளு உடறது." அகிலா முகத்திலும் வெட்கம் படர்ந்திருந்தது.

"ஏய் என்னன்னு கூப்பிட்ட?"

"தாஸ்னு... ஏன்?"

"ரொம்ப கொழுப்பு ஏறியிருக்கு நேத்தியிலேர்ந்து..."

"இனிமே அப்பிடித்தான், யாரும் பக்கதில் இல்லைன்னா செல்லமா தாஸ்தான்..."

"ஏய் இன்னிக்கு நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? அப்பிடியே தூக்கிட்டுபோய்..."

"பாருங்க, இனிமேல் தொட்டீங்கன்னா கடிச்சுடுவேன்..., இன்னிக்கு நாலே காலுக்கு உங்க கிளாசுக்கு வருவேன். என்னைக் கூட்டிக்கிட்டு கோயிலுக்கு போகணும், உங்க புரோஜக்டை தூக்கி குப்பையில் போடுங்க."

"நீங்க சொல்லீட்டீங்கன்னா சரிதான் மேடம்."

நாலே காலுக்கு அவள் அவனைப் பார்க்க வரும் பொழுது, புதிதாய் சேர்ந்திருந்த அவள் கிளாஸ் மாணவி ஒருத்தி - கேரளா - அவனிடம் வந்து நோட்ஸ் கேட்டுக் கொண்டிருந்தாள். கொடுமையென்னவென்றால் அவளே ஜோக் சொல்லி அவளே சிரித்துக் கொண்டிருந்தாள். அவனும் அவள் தப்பா நினைக்கக்கூடாதேன்னு சிரித்து வைத்தான். அவள் சென்ற பிறகு அருகில் வந்தாள் அகிலா.

"அவகிட்ட சிரிச்சு, சிரிச்சு அப்படியென்ன பேச்சு, ஒரு நாள், எனக்கும் அவளுக்கும் சண்டையாயிருச்சு தெரியுமா. சரி அவ என்ன கேட்டா?"

"வேறென்ன நோட்ஸ்தான்..., சரி என்ன சண்டை?"

"அதெல்லாம் பொம்பளங்க சமாச்சாரம், நான் பாத்துக்கிறேன். அவளுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?"

"வேறென்ன, இங்க கேட்டா கிடைக்காது. என் வீட்டுக்கு வந்து கேளு. அதுவும் இப்பெல்லாம் ஒரு பொண்ணு வீட்டிலேயே இருக்கு. அதனால அவகிட்ட நான் எப்ப ஃபிரின்னு கேட்டு சொல்றேன். அப்ப வந்து கேளுன்னு சொன்னேன்." சொன்னதும்தான் தாமதம் விருட்டென்று கிளம்பி வெளியே ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.

மெதுவாக சார்லசின் வண்டியை எடுத்துக் கொண்டு அவள் பின்னால் வந்து நிறுத்தி. "ஏய் இந்தாடி, ஏறிக்கோ" சொன்னதும் ஏறிக்கொண்டாள். ஆனால் வண்டியில் இருவருக்கும் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது. அவர்கள், கோயிலுக்குப் போனார்கள். அவன் கடவுளை நம்புகிறவன் இல்லையென்றாலும் அவளுடன் கோயிலுக்கு உள்ளே வந்திருந்தான். குருக்கள் விபூதி தந்ததும் வாங்கிவிட்டு கையிலே வைத்திருந்தேன். அவனைப் பற்றி தெரியுமாதலால் அவள் கையில் இருந்த விபூதியை கொஞ்சம் அவன் நெற்றியிலும் பெரிதாக வைத்துவிட்டாள். பிறகு நாங்கள் ஹோட்டலுக்கு வந்தோம். ஆனால் அதுவரை அவள் அவனிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை.

ஹோட்டலில் அவன் பக்கத்தில் அவள் உட்கார்ந்ததும், அவளிடமிருந்து ஒரு வாசனை வீசியது. அவள் வைத்திருந்த மல்லிகைப்பூவும், அவள் வேர்வையும் சேர்ந்த அந்த வாசனையால் தடுமாறியவன் அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டேன். அவன் கையை எடுத்து கீழே வைத்துவிட்டு, "இதுக்கு மட்டும் நான் வேண்டுமாக்கும், அந்தக் கேரளாக்காரி மேல போய் போடவேண்டியது தானே?"

நான் அதற்குப் பிறகு அவளிடம் எதுவும் பேசிவில்லை. அவளைத் திரும்ப கொண்டுவந்து ஹாஸ்டலுக்கு பக்கத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

அதற்கு பிறகு இரண்டு நாள் மோகன் அவளிடம் பேசவில்லை, அவள் பார்க்க வந்தாலும் அவனாய் முகத்தை திருப்பிக்கொண்டு வந்துவிட்டேன். இரண்டு மூணு முறை என்னிடம் பேசமுயன்றாள். அவன் பேசாமல் நகர்ந்து விட்டேன். அடுத்தநாள் சனிக்கிழமை வீட்டுக்கே வந்துவிட்டாள். நேராக அவன் எதிரில் வந்து நின்று, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, "இப்ப நான் என்ன பண்ணனுங்கிறீங்க?" கேட்டாள்.

(தொடரும்...)

Related Articles

4 comments:

  1. ம்.கவர்ச்சிக்கும்,ஆபாசத்திற்கும் இருக்கும் நூலிழையைத் தாண்டாமல் இருக்கிறது உங்கள் எழுத்து!வழக்கம்போல் அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் வெயிட்டிங்!

    ReplyDelete
  2. நன்றி மோகன்.

    ReplyDelete
  3. waiting for your next episode asap....

    ReplyDelete

Popular Posts