எனக்கு கண்ணதாசனுடைய, வைரமுத்துவினுடைய பாடல் வரிகளை விடவும் அவர்களுடைய கவிதை வரிகள் பிடிக்கும்.
கண்ணதாசனுடைய ஸ்பெஷாலிட்டியே என்னான்னா, நேரடியாய் அவரை பாதித்த ஒரு நிகழ்வை அவர் எழுதுவது தான். அப்படி எழுதியது தான் 'அவனை எழுப்பாதீர்கள்' கவிதையும். நண்பருடைய குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இறந்துவிட எழுதியது இந்தக் கவிதை.
"...கோடிக்கு அதிபதி என குறையாது வந்தாலும்
நாட்டுத் தலைவனென நலவாழ்வு பெற்றாலும்
கேட்டப் பொருளெல்லாம் கிடைத்தாலும்
அவன் வீட்டு மாட்டுக்குக் கூட மரியாதை கிடைத்தாலும்
பஞ்சனைகள் இருந்தாலும்
பால் பழங்கள் உண்டாலும்
சொத்துள்ள காரணத்தால் தூக்கம் பிடிக்காது..."
கண்ணதாசனால் தான் இப்படி ரசித்து எழுத முடியும்.
அடுத்து பாரதிதாசனின், "நீலவான ஆடைக்குள்..." என்று தொடங்கும் ஒரு பாடல். நிலாவைப் பற்றி பாடப்படும் கவிதையில் ஒருவேளை சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாத மக்களைப் பற்றிய வர்ணனைகள் சொல்ல முடியுமா. முடியும் என்று நிரூபித்திருக்கிறார் பாரதிதாசன்.
இதை விடவும் அவருடைய மேலும் பல பாடல்கள் எனக்குப் பிடிக்குமென்றாலும், உருத்தாத வர்ணனைகள் எனக்கு இந்தப் பாடலில் பிடிக்கும்.
அடுத்து, பாரதியின் "யாமறிந்த மொழிகளிலே..." அப்படியொரு வார்த்தையை போடுவதற்கான உரிமை பாரதிக்கு நிச்சயமாய் உண்டு. "உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை" போன்ற வரிகள் எழுதியிருக்கிறான் என்றால் அவனால் நிச்சயமாய் மக்கள் எப்படி இந்தப் பாடலை புரிந்துகொள்வார்கள் என்ற கவலைபட்டிருக்காமல் இருக்க முடியாது.
அடுத்தது வைரமுத்து - அவருடைய தீக்குச்சிக்கு தின்னக்கொடுப்போம் எவ்வளவு பிடிக்குமோ அப்படி எனக்கு இந்தப் பாடலும் பிடிக்கும். சொற்சிலம்பம் ஆடுவதில் வல்லவரான வைரமுத்து இதிலும் ஆடியிருப்பார் அப்படியே, "என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள் ஆனால் உங்கள் கல்லறையைத் தோண்டியெடுத்து. நீங்கள் எழுதியதைப் பற்றி கேள்வி கேட்கப்படும். பதில் சொல்லக் காத்திருங்கள்." என்பது போல அவருடைய திருத்தி எழுதப்பட்ட தீர்ப்புகள் கவிதையில் இருக்கும்.
அதே வேகத்தில் எழுதியது போலிருக்கும் இந்தப்பாடலும். "கம்பனிடம் ஒரு கேள்வி..."
---------------------------
இந்தக் கவிதைகள் எல்லாவற்றையுமே தங்குதடையின்றி, தலைப்பின் சாதக பாதகம் பற்றி யோசிக்காமல் பேச்சுப்போட்டிகளில், பட்டிமன்றங்களில் உபயோகித்திருக்கிறேன். அதனால் எப்பொழுதும் என் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும் பாடல்கள் இவைகள்.
இன்னுமொறு குரல் பதிவு
பூனைக்குட்டி
Monday, April 09, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
0 comments:
Post a Comment