சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும் தால் ஏரியில் கடந்து செல்லும் ஷிக்காரா படகிற்காக காத்திருந்து சூட்டிங் போட்ட படம்.
தால் ஏரி பிரம்மாண்டம் என்ற வர்ணித்தால் சொன்னால் கிளிஷே ஆகிவிடும், ஆனால் சூரியனின் அசைவுகளுக்கு(indeed பூமியின்) ஏற்ப தால் ஏரி காட்டும் வண்ணக்குழப்பம் பிரம்மாண்டம். காஷ்மீருக்கு சென்று இந்த வித்தையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கலாம், அப்படி ஒரு தருணம் தான் மேலே படத்தில்.
அன்பு நண்பர் இராமநாதன் ஏதோ விளையாட்டென்று கூப்பிட்டிருந்தார். நான் ஊரில் இல்லாத காரணத்தால் போன வாரம் போல் போடுறேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு போடாமல் விடப்பட்டது. இராம்ஸ் போட்டாச்சு!
ஆட்டத்துக்கு கூப்பிட்டே ஆகணுமா தெரியலை. கூப்பிட்டு வைக்கிறேன் நான் கூப்பிட்டா படம் போடுவாங்களா தெரியாது இருந்தாலும் ஏதோ என்னால் ஆனது.
1) பெயரிலி அண்ணாச்சி(ஏற்கனவே ஒரு தடவை மறுத்துட்டீங்க, இது உங்க கிரவுண்டு வந்து விளையாடுங்க).
2) ஹரன்பிரசன்னா(வாங்கய்யா வாங்க சீக்கிரமா ஒரு நல்ல படம் போடுங்க.)
3) உஷா அக்கா(பாத்துக்கோங்கப்பா நாங்க மூன்றில் ஒன்று சதவீதம் தந்துட்டேன்.)
புகைப்பட தொடருக்காக காஷ்மீரத்து ஷிக்காரா
Mohandoss
Wednesday, January 16, 2008
Mohandoss
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
சிறிது நேரத்தில் சிந்து மீண்டும் என் அறைக்கு வந்திருந்தாள். அன்று சனிக்கிழமை நான் பொதுவாய் வாரக்கடைசிகளில் எந்த வேலையும் வைத்துக் கொள்ள...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
-
ஆச்சர்யமாகவே இருக்கிறது வாழ்க்கை எனக்கு பெரும்பான்மையான சமயங்களில். சொல்லப்போனால் அந்த ஆச்சர்யம் இல்லாமல் போகும் நாளில் வாழ்க்கை போரடித்துவி...
தம்பீஇ...
ReplyDeleteகடந்த ஒரு கிழமையாகவும் வரும் ஒரு கிழமையாகவும் The Terminal Tom Hanks கணக்கிலே வாழ்க்கை ஓட்டம்.
விட்டுடுங்க ராசா.
தனியா அஞ்சேலிட்டுடுறேன்.
மோஹன்,
ReplyDeleteகத்தையாக படம் போடுவிங்கனு வந்தேன்,
ஒத்தையாக படம் போட்டாலும்
சொத்தையாக போடாமல்
வித்தையக்காட்டி இருக்கிங்க!
காமிராவில!
மிச்ச சொச்ச கஷ்மீர் படங்களையும் சீக்கிரம் வெளியிடுங்கள்!
படம் அருமை. சிவ சிவா :)
ReplyDeleteநான் கூட ஏதோ காஷ்மிரத்து 'ஷக்கிரா' அப்பிடின்னு நெனச்சு அடிச்சு பிடிச்சு ஓடி வந்தேன்.
ReplyDeleteஅழைப்பை ஏற்று இட்டதுக்கு நன்றி மோகன்.
ReplyDeleteஇப்படி கலக்கலான படம் போடுவீங்கன்னு தெரிஞ்சுதானே கூப்பிட்டது...
ரெண்டு பேரு அசத்திட்டீங்க.. புலியத்தான் காணோம்..
//Blogger Boston Bala said...
ReplyDeleteபடம் அருமை. சிவ சிவா :)//
பாலா,
அருமைனு சொல்லிட்டு கூடவே சிவ சிவானு சொல்வதைப்பார்த்தால் ஒரு பொய் சொல்லிட்டேன் எம்பெருமானே மன்னித்துவிடுங்கள் என்னைனு நீங்க வேண்டிக்கொள்வது போல இருக்கே :-))(சிரிப்பான் எல்லாம் போட்டு இருக்கேன் சிரிக்கவும்)
(எனக்கு தெரிந்து ஒருவர் இருக்கார் அவர் பொய் சொல்லிட்டு சிவ சிவானு சொல்லிப்பார் அப்போத்தான் அந்த பொய் சொன்னப்பாவம் வராதாம்)
வவ்வால்,
ReplyDeleteஅந்த சிவ சிவா கொஞ்சம் உள்குத்து விஷயம்.
நான் புரிஞ்சிக்கிட்டது சரியான்னு பாபா கிட்ட தனிமெயில் எழுதித்தான் கேட்கணும்.
மோஹன்,
ReplyDeleteஅதே அதே, நானும் அதில் ஏதோ உள்குத்து இருப்பதாக யூகித்தேன் :-))
ஒரு வரியில் உள்குத்து வைக்கும் பாலா பலே கில்லாடி தான்!
புகைப்படம் அருமை. ( சிவ சிவா இல்ல)
ReplyDelete