Showing posts with label நட்சத்திரம். Show all posts
Showing posts with label நட்சத்திரம். Show all posts
இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்து நான்கு-ஐந்து வருடங்கள் இருக்குமாயிருக்கும். அத்தனை எழுதுவதில்லை தற்சமயங்களில் என்பதைப் போல் அத்தனை வாசிப்பதுமில்லை, எப்பொழுதாவது தீவிரம் வந்தது போல் இரண்டு மூன்று வாரங்கள் எழுதமுடிவதுண்டு, தொடர முடிவதுண்டு அவ்வளவே. டிவிட்டரில் கொஞ்சக் காலமாய் எழுதுவதாலோ என்னவோ இப்பொழுதெல்லாம் வளவள என்று எழுதமுடிவதில்லை. சரி இந்த வாரம் கொஞ்சம் தொடர்ச்சியாக எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம். நட்சத்திரமாய் இருக்கச் சம்மதமா என்று கேட்டு வந்த மெயிலைப் பார்த்ததும் கொஞ்சம் சந்தேகமாய் இருந்தது தான் என்றாலும், சரி நம்மையும் இன்னமும் மதிக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது கண்களில் நீர் கட்டிக் கொண்டது.
எதெல்லாம் எழுதலாம் என்பதைப் பற்றி பெரிதாய் முடிவு செய்ய முடியவில்லை. இன்னமுமே கூட யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எத்தனை வித்தியாசமாய் எழுத முடியும் என்று தெரியைல்லை, வித்தியாசமாய் எழுதவேண்டும் என்பதில் கூட பெரிய விருப்பம் இல்லை இப்பொழுது. காலையில் புதிதாய் எழுதிய பதிவொன்றும் மாலையில் முன்பெழுதிய பதிவொன்றை மறுபதிவாகவும் தள்ளிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன். கீழிருப்பது முந்தைய முறை தமிழ்மண நட்சத்திரமாய் இருந்த பொழுது எழுதிய இடுகைகள்.
வாழ்க்கையில் நமக்கு சிலரை பிடித்துவிடும் ஏன்னெல்லாம் தெரியாது. அவரைப்பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளச் சொல்லும். அதுபோல் சில ஆட்கள் எனக்கும் உண்டு. அதில் மிகக்குறிப்பிட்ட ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சந்தோஷப்படுகிறேன். இவரை உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். சிலருக்கு என்னை விட மேலாய், எனக்கு இந்தாளால மட்டும் இந்த வயசிலேயும் இவ்வளவு எதிர்ப்புக்களைத்தாண்டி இருக்க முடியுதுன்னு ஆச்சரியமா இருக்கும்.
அவர், அக்குனியோண்டு குட்டி நாடான கியூபாவில் உட்கார்ந்துக்கிட்டு உலக போலீஸ்காரனுக்கு அல்வா கொடுத்துக்கொண்டிருக்கும் பிடல் காஸ்ட்ரோ. தலைவர் கருணாநிதி கூட தான் மிகவும் ஆசைப்பட்டு பார்க்கமுடியாமல் இருக்கும் நபர் என்று சொல்லியிருந்தார். எனக்கு கம்யூனிசம் தெரியாது. கொஞ்சமே கொஞ்சம் படித்தது கூட கதைகளின் வழியாகத்தான்.(இவரும் கம்யூனிஸ்ட் கிடையாது அது வேற விஷயம் பின்னாடி சொல்றேன்.)ரெவல்யூஷன், சுதந்திரப்போராட்டம் இதிலெல்லாம் பூந்து பொறப்படுற ஆளும் கிடையாது நான் ஆனாலும் இவரை பிடித்திருந்தது, இருக்கிறது, இருக்குமென்று நினைக்கிறேன்.
ஆனாளப்பட்ட அமேரிக்காவால வியட்நாமில் சாதிக்க முடியாததை. 1990 களுக்கும் முன்னர் இருந்த பலமான சோவியத் யூனியனால் ஆப்கானிஸ்தானில் சாதிக்க முடியாதை சாதித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவரைக் கொல்வதற்கு நடந்த முயற்சிகளின் எண்ணிக்கையை சொன்னால் யாராலும் நம்பவேமுடியாதது. இதைப்பற்றியே சில கதைகளைத்தனியாக கொண்டவர். அதாவது இவரைக் கொல்வதற்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் இவரையே காதலிக்கும் அளவிற்கு கொண்டுவரப்பட்டார் என்பது போன்ற அதிசயமான கட்டுக்கதைகள் இவரைப்பற்றி அதிகம்.

காஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் பிடல் அலக்ஸாண்ட்ரோ காஸ்ட்ரோ ருஸ், பிறந்தது, ஆகஸ்ட் 13, 1926. அதுவரை க்யூபாவை ஆண்டுவந்த பட்டீஸ்டா வின் ஆட்சியை தூக்கியெறிய, 1959ல் இவர் நடத்திய புகழ்பெற்ற 26th of July Movement, உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றாலும்.
1947களில் இவர் பார்ட்டி ஆப் கியூபன் பீப்பிளில் சேர்ந்ததில் இருந்து பல இடங்களில் பொதுவாக அறியப்பட்ட மனிதராகத்தான் இருந்து வந்தார். ஜூலை 26, 1953ல் ஒரு சந்தர்ப்பத்தில், பாட்டிஸ்டாவின் ஆர்மியிடம் சிக்கிக்கொண்ட காஸ்ட்ரோ, அந்த ஆர்மியில் இருந்த இவருடைய கல்லூரி நண்பரால் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டார். இது நடந்த அதே ஆண்டு தான் காஸ்ட்ரோ தன்னுடைய மிகப்பிரபலமான சொற்பொழிவான La historia me absolveráவை நிகழ்த்தியிருந்தார். இதில் தன்னுடைய செயல்களை நியாயப்படுத்தி தொடரப்போகும் தன்னுடைய அரசியல் வியூகத்தை தெரிவிக்க, பாட்டிஸ்டா அரசால் 15 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டார். ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டாண்டுகளில் அதாவது 1953ல் சிறையில் இருந்து வெளிவந்தவர் மெக்ஸிகோவில் அடைக்கலம் புகுந்தார்.
இந்த இரண்டாண்டு சிறை வாழ்க்கையில் தான் நான் மேலே "நம்பமுடியாதது" என்று சொல்லியிருந்த இவரைக் கொல்வதற்கான 600 முயற்சிகள் நடத்தப்பட்டன(அப்படியாக நம்பப்படுகிறது.) இது கொஞ்சம் புகழ்ச்சிக்காக மிகப்படுத்தப்பட்ட நம்பராக இருந்தாலும் முயற்சிகளின் எண்ணிக்கை நிச்சயம் குறைவானது கிடையாது. அத்துனையிலும் இருந்து தப்பித்து தான் காஸ்ட்ரோ சிறையில் இருந்து வெளியானது.

மெக்ஸிகோவில் தான் சொல்லப்போனால் கியூபாவின் சுதந்திரப்போராட்டத்தின் முக்கியப்பகுதி நிகழ்ந்தது. அதில் மிகவும் முக்கியமானது எர்நெஸ்டோ 'செ' குவாரா என்னும் மருத்துவம் படித்த போராளியை காஸ்ட்ரோ சந்திக்கும் நிகழ்வு. அது மட்டுமல்லாமல், காஸ்ட்ரோவின் ஆட்களுக்கு போர்ப்பயிற்ச்சியும் இங்கே தான் தரப்பட்டது. ஸ்பானிய சிவில் போரின் போராளிகளில் முக்கியமானவரான அல்பெர்ட்டோ பாயோ, தான் அந்த பயிற்சியை முன்னிருந்து அளித்தவர் இவர் பிறப்பால் ஒரு கியூபன் என்பது முக்கியமானது.
இதன் பிறகு நடந்த உள்நாட்டுப்போரின் பொழுது, தன்னுடைய தளபதியே காஸ்ட்ரோவின் பக்கம் சென்றுவிட்ட காரணத்தினால் பாட்டிஸ்டா கியூபாவில் இருந்து வெளியேறினார். அப்பொழுத்து தொடங்கப்பட்டது கியூபாவில் காஸ்ட்ரோவின் ஆட்சி இன்று வரை நீடித்து வருகிறது. இது அவரைப்பற்றிய சிறிய அறிமுகம்.
நான் சொல்ல வந்து இரண்டு விஷயங்கள், உலக வரலாற்றில் மிகப்பிரபலமான, Cuban Missile Crisis, Bay of Pigs பற்றி கொஞ்சம்.
முதலாவது ஆண்டுக்கணக்கின் படி, பே ஆப் பிக்ஸ் இன்வேஷன். ஒன்றுமில்லை அத்தாம் பெரிய அமேரிக்கா, கியூபாவை ஆக்கிரமிக்க நடந்திய ஒரு முயற்சிதான் இது. ஒன்றுமில்லை, காஸ்ட்ரோ உண்மையில் சொல்லவேண்டுமானல் ஒரு கம்யூனிஸ்ட் கிடையாது. ஆனால் அவர் சோவியத் யூனியனின் தயவை பெற வேண்டி அப்படியொரு உருவகத்தை எடுக்கவேண்டிய நிலை வந்தது. இதன் காரணத்தினால் ஏற்பட்ட சிந்தாந்தப்பிரச்சனையில் செகுவாரா காஸ்ட்ரோவை விட்டு பிரியும் நிலை வந்தது. பிரிந்த பொழுது அவர் காஸ்ட்ரோவிற்கு எழுதிய ஒரு கடிதம் மிகவும் பிரபலமானது. 'செ' வைப்பற்றி ஒரு தனி பதிவு போடவிருப்பம் அப்பொழுது அதுபற்றி எழுதுகிறேன்.
இப்படியாக அமேரிக்கா உலகமெங்கிலும் எந்த நாடும் கம்யூனிச நாடாக இருக்கக்கூடாது என்று ஒற்றை காலில் நின்ற பொழுது அமைப்பின் படி அமேரிக்காவின் காலின் கீழ் இருக்கும் ஒரு நாடு கம்யூனிச முகம் கொண்டது பெரும் பிரச்சனையை கிளப்பியது. அதனால் காஸ்ட்ரோவை நிர்மூலமாக்கும் எண்ணத்தில் ஏப்ரல் 15, 1961ல் ஒரு பக்கம் A-26 குண்டுமழை பொழிய அமேரிக்க சிஐஏவால் பணமும் பயிற்சியும் கொடுக்கப்பட்ட, கியூபாவின் ஏறக்குறைய 1500 மக்கள் பே ஆப் பிக்ஸ்ஸில் இறங்கினர். அதாவது காஸ்ட்ரோவிற்கு எதிரான இந்த மக்களைக்கொண்டு ஒரு உள்நாட்டுக்குழப்பத்தை விழைவித்து அதற்கு ஆதரவு தரும்(என்று அமேரிக்கா நினைத்த) கியூபாவின் மக்களைக்கொண்டு காஸ்ட்ரோவை நீக்கிவிடலாம் என அமேரிக்கா கனவு கண்டது. ஆனால் கடைசி நிமிடம் கென்னடி இந்த இன்வேஷனுக்கான தன்னுடைய ஆதரவை ஏதோ ஒரு காரணத்துக்காக நீக்கிக்கொள்ள இந்த உள்நாட்டுக்குழப்பம் பிசுபிசுத்துப்போனது.
இந்த சமயத்தில் கியூபாவின் இராணுவத்தால் பிடிக்கப்பட்ட அமேரிக்க இராணுவவீரர்களை, கியூபா மருத்து உதவி வாங்கிக்கொண்டு விடுவித்ததாக எங்கேயோ படித்த நினைவு இதை படிக்கும் யாராவது சரிசெய்தால் சந்தோஷம். இப்படியாக தோல்வியில் முடிந்துபோன இந்த குழப்பத்தால், காஸ்ட்ரோ தான் ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்றும் அன்று முதல் கியூபா ஒரு கம்யூனிச நாடென்றும் வெளிப்படையாக அறிவித்தார்.
இதன் பிறகு நடந்தது இன்னும் ஆச்சர்யமான நிகழ்வு, அது மூன்றாம் உலகப்போரில் முடியாமல் போனதில் பலருக்கும் ஆச்சர்யமே. அக்டோபர் 22, 1962ல் அமேரிக்க பிரஸிடெண்ட் கென்னடி வெளிப்படையாக, ரஷ்யா கியூபாவில் தன்னுடைய குறைந்த தொலைவு செல்லும் நியூக்ளியர் மிஸைல்களை குவித்திருக்கிறது என்று சொன்னார். அமேரிக்காவின் ப்ளோரிடாவிற்கு கிட்டத்தட்ட 145 கிமீ, நிறுத்தப்பட்டிருந்த இந்த ரஷ்யாவின் நியூக்ளியர் ஏவுகணைகள் அன்று உலகத்தின் மிகப்பெரிய பேச்சாக இருந்தது. அமேரிக்காவிற்கும், ரஷ்யாவிற்குமான கோல்ட் வார் உச்சத்தில் இருந்த சமயம் அது.
கென்னடி, அமேரிக்காவின் மீதோ இல்லை இலத்தீன் அமேரிக்கா நாடுகளின் மீதோ ஏவுகணை வீசப்பட்டால் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சொன்னதிலிருந்து இன்னும் சூடுபிடித்தது. அமேரிக்கா கியூபாவை சோதனை செய்வதற்காக அனுப்பப்பட்ட ஸ்பை விமானம், கியூபாவில் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானியும் கொல்லப்பட, அதன் உச்சத்தை அடைந்தது.
கியூபாவை ஒழித்துக்கட்டிவிடும் ஆத்திரத்துடன் வந்த அமேரிக்க அமேரிக்க கப்பல்களை எதிர்கொள்ள ரஷ்யா தன்னுடைய நீர்மூழ்கி கப்பல்களை அங்கே அனுப்பியது. சொல்லப்போனால் இதுதான் இந்த சூழ்நிலையின் உச்சக்கட்டம். உலகமே அடுத்த உலகப்போர் தொடங்கப்படுமோ என்ற பயத்தில் இருந்த சமயம்.
ஆனால் என்ன காரணத்தினாலோ ரஷ்யா அந்த சமயத்தில் பின்வாங்கியது, கியூபாவின் மீது படையெடுக்காமல் இருக்கும்பட்சத்தில் நியூக்ளியர் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து நீக்கிக்கொள்வதாக ரஷ்யா அறிவிக்க இந்த பிரச்சனை உலகப்போராக மாறாமல் காப்பாற்றப்பட்டது. இதில் காஸ்ட்ரோவிற்கு ரஷ்யாவின் மீது கோபம் இருந்தாலும் மறுக்கமுடியவில்லை. இப்படியாக உலகப்போலீஸ்காரனுக்கு ஒரு காலத்தில் பெரும் தலைவலியாக இருந்த கியூபா இன்று வரை அப்படித்தான் இருக்கிறது.
ரஷ்யாவின் பண உதவி கிடைத்துக்கொண்டிருந்ததால் ஒருவாறு சமாளித்துவந்த, கியூபா கடைசியில் 1990களில் ரஷ்யாவும் பிளவுபட்டுப்போக, கஷ்டம்தான் படுகிறது தற்பொழுது. இந்த நிலையில் காஸ்ட்ரோவின் அரசியலை விமர்சிக்கும் நிறைய பேர் இன்றளவும் அதிகமாகவே இருக்கிறார்கள். அதே போல அவருடைய ஆளுமையை விரும்புகின்ற என்னைப்போன்றவர்களும் நிறைய பேர்.
அதேபோல் அங்கோலா, எத்தியோப்பியா, நிக்காராகுவே போன்ற நாடுகளுக்கு கியூபாவின் படைகளை அனுப்பி அங்கே விடுதலைபோரில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உதவி செய்து, அமேரிக்காவால் வியட்நாமில் செய்ய முடியாததை, 1990களுக்கு முன்பிருந்த ரஷ்யாவால் ஆப்கானிஸ்தானில் செய்ய முடியாததை காஸ்ட்ரோ செய்தார்.
இதன் காரணமாகத்தான் நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் சுதந்திரம், விடுதலைப்போருக்கு கியூபாவின் பங்கு மிக அதிகமானது என்று குறிப்பிட்டிருந்தார். என்ன இருந்தாலும் தனியொரு மனித ஆளுமையாக இன்று வரை அமேரிக்காவின் அருகிலேயே இருந்து கொண்டும் அமெரிக்காவிற்கு அல்வா கொடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர் பிடல் அலெக்ஸாண்ட்ரோ காஸ்ட்ரோ.
ஒரிஜினல் தலைப்பு - நட்சத்திரம் - இந்த ஆளைப்பற்றி கொஞ்சம் ஜல்லி
மீள்பதிவிற்காக மாற்றியிருக்கிறேன்.
அவர், அக்குனியோண்டு குட்டி நாடான கியூபாவில் உட்கார்ந்துக்கிட்டு உலக போலீஸ்காரனுக்கு அல்வா கொடுத்துக்கொண்டிருக்கும் பிடல் காஸ்ட்ரோ. தலைவர் கருணாநிதி கூட தான் மிகவும் ஆசைப்பட்டு பார்க்கமுடியாமல் இருக்கும் நபர் என்று சொல்லியிருந்தார். எனக்கு கம்யூனிசம் தெரியாது. கொஞ்சமே கொஞ்சம் படித்தது கூட கதைகளின் வழியாகத்தான்.(இவரும் கம்யூனிஸ்ட் கிடையாது அது வேற விஷயம் பின்னாடி சொல்றேன்.)ரெவல்யூஷன், சுதந்திரப்போராட்டம் இதிலெல்லாம் பூந்து பொறப்படுற ஆளும் கிடையாது நான் ஆனாலும் இவரை பிடித்திருந்தது, இருக்கிறது, இருக்குமென்று நினைக்கிறேன்.
ஆனாளப்பட்ட அமேரிக்காவால வியட்நாமில் சாதிக்க முடியாததை. 1990 களுக்கும் முன்னர் இருந்த பலமான சோவியத் யூனியனால் ஆப்கானிஸ்தானில் சாதிக்க முடியாதை சாதித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவரைக் கொல்வதற்கு நடந்த முயற்சிகளின் எண்ணிக்கையை சொன்னால் யாராலும் நம்பவேமுடியாதது. இதைப்பற்றியே சில கதைகளைத்தனியாக கொண்டவர். அதாவது இவரைக் கொல்வதற்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் இவரையே காதலிக்கும் அளவிற்கு கொண்டுவரப்பட்டார் என்பது போன்ற அதிசயமான கட்டுக்கதைகள் இவரைப்பற்றி அதிகம்.

காஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் பிடல் அலக்ஸாண்ட்ரோ காஸ்ட்ரோ ருஸ், பிறந்தது, ஆகஸ்ட் 13, 1926. அதுவரை க்யூபாவை ஆண்டுவந்த பட்டீஸ்டா வின் ஆட்சியை தூக்கியெறிய, 1959ல் இவர் நடத்திய புகழ்பெற்ற 26th of July Movement, உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றாலும்.
1947களில் இவர் பார்ட்டி ஆப் கியூபன் பீப்பிளில் சேர்ந்ததில் இருந்து பல இடங்களில் பொதுவாக அறியப்பட்ட மனிதராகத்தான் இருந்து வந்தார். ஜூலை 26, 1953ல் ஒரு சந்தர்ப்பத்தில், பாட்டிஸ்டாவின் ஆர்மியிடம் சிக்கிக்கொண்ட காஸ்ட்ரோ, அந்த ஆர்மியில் இருந்த இவருடைய கல்லூரி நண்பரால் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டார். இது நடந்த அதே ஆண்டு தான் காஸ்ட்ரோ தன்னுடைய மிகப்பிரபலமான சொற்பொழிவான La historia me absolveráவை நிகழ்த்தியிருந்தார். இதில் தன்னுடைய செயல்களை நியாயப்படுத்தி தொடரப்போகும் தன்னுடைய அரசியல் வியூகத்தை தெரிவிக்க, பாட்டிஸ்டா அரசால் 15 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டார். ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டாண்டுகளில் அதாவது 1953ல் சிறையில் இருந்து வெளிவந்தவர் மெக்ஸிகோவில் அடைக்கலம் புகுந்தார்.
இந்த இரண்டாண்டு சிறை வாழ்க்கையில் தான் நான் மேலே "நம்பமுடியாதது" என்று சொல்லியிருந்த இவரைக் கொல்வதற்கான 600 முயற்சிகள் நடத்தப்பட்டன(அப்படியாக நம்பப்படுகிறது.) இது கொஞ்சம் புகழ்ச்சிக்காக மிகப்படுத்தப்பட்ட நம்பராக இருந்தாலும் முயற்சிகளின் எண்ணிக்கை நிச்சயம் குறைவானது கிடையாது. அத்துனையிலும் இருந்து தப்பித்து தான் காஸ்ட்ரோ சிறையில் இருந்து வெளியானது.
மெக்ஸிகோவில் தான் சொல்லப்போனால் கியூபாவின் சுதந்திரப்போராட்டத்தின் முக்கியப்பகுதி நிகழ்ந்தது. அதில் மிகவும் முக்கியமானது எர்நெஸ்டோ 'செ' குவாரா என்னும் மருத்துவம் படித்த போராளியை காஸ்ட்ரோ சந்திக்கும் நிகழ்வு. அது மட்டுமல்லாமல், காஸ்ட்ரோவின் ஆட்களுக்கு போர்ப்பயிற்ச்சியும் இங்கே தான் தரப்பட்டது. ஸ்பானிய சிவில் போரின் போராளிகளில் முக்கியமானவரான அல்பெர்ட்டோ பாயோ, தான் அந்த பயிற்சியை முன்னிருந்து அளித்தவர் இவர் பிறப்பால் ஒரு கியூபன் என்பது முக்கியமானது.
இதன் பிறகு நடந்த உள்நாட்டுப்போரின் பொழுது, தன்னுடைய தளபதியே காஸ்ட்ரோவின் பக்கம் சென்றுவிட்ட காரணத்தினால் பாட்டிஸ்டா கியூபாவில் இருந்து வெளியேறினார். அப்பொழுத்து தொடங்கப்பட்டது கியூபாவில் காஸ்ட்ரோவின் ஆட்சி இன்று வரை நீடித்து வருகிறது. இது அவரைப்பற்றிய சிறிய அறிமுகம்.
நான் சொல்ல வந்து இரண்டு விஷயங்கள், உலக வரலாற்றில் மிகப்பிரபலமான, Cuban Missile Crisis, Bay of Pigs பற்றி கொஞ்சம்.
முதலாவது ஆண்டுக்கணக்கின் படி, பே ஆப் பிக்ஸ் இன்வேஷன். ஒன்றுமில்லை அத்தாம் பெரிய அமேரிக்கா, கியூபாவை ஆக்கிரமிக்க நடந்திய ஒரு முயற்சிதான் இது. ஒன்றுமில்லை, காஸ்ட்ரோ உண்மையில் சொல்லவேண்டுமானல் ஒரு கம்யூனிஸ்ட் கிடையாது. ஆனால் அவர் சோவியத் யூனியனின் தயவை பெற வேண்டி அப்படியொரு உருவகத்தை எடுக்கவேண்டிய நிலை வந்தது. இதன் காரணத்தினால் ஏற்பட்ட சிந்தாந்தப்பிரச்சனையில் செகுவாரா காஸ்ட்ரோவை விட்டு பிரியும் நிலை வந்தது. பிரிந்த பொழுது அவர் காஸ்ட்ரோவிற்கு எழுதிய ஒரு கடிதம் மிகவும் பிரபலமானது. 'செ' வைப்பற்றி ஒரு தனி பதிவு போடவிருப்பம் அப்பொழுது அதுபற்றி எழுதுகிறேன்.
இப்படியாக அமேரிக்கா உலகமெங்கிலும் எந்த நாடும் கம்யூனிச நாடாக இருக்கக்கூடாது என்று ஒற்றை காலில் நின்ற பொழுது அமைப்பின் படி அமேரிக்காவின் காலின் கீழ் இருக்கும் ஒரு நாடு கம்யூனிச முகம் கொண்டது பெரும் பிரச்சனையை கிளப்பியது. அதனால் காஸ்ட்ரோவை நிர்மூலமாக்கும் எண்ணத்தில் ஏப்ரல் 15, 1961ல் ஒரு பக்கம் A-26 குண்டுமழை பொழிய அமேரிக்க சிஐஏவால் பணமும் பயிற்சியும் கொடுக்கப்பட்ட, கியூபாவின் ஏறக்குறைய 1500 மக்கள் பே ஆப் பிக்ஸ்ஸில் இறங்கினர். அதாவது காஸ்ட்ரோவிற்கு எதிரான இந்த மக்களைக்கொண்டு ஒரு உள்நாட்டுக்குழப்பத்தை விழைவித்து அதற்கு ஆதரவு தரும்(என்று அமேரிக்கா நினைத்த) கியூபாவின் மக்களைக்கொண்டு காஸ்ட்ரோவை நீக்கிவிடலாம் என அமேரிக்கா கனவு கண்டது. ஆனால் கடைசி நிமிடம் கென்னடி இந்த இன்வேஷனுக்கான தன்னுடைய ஆதரவை ஏதோ ஒரு காரணத்துக்காக நீக்கிக்கொள்ள இந்த உள்நாட்டுக்குழப்பம் பிசுபிசுத்துப்போனது.
இந்த சமயத்தில் கியூபாவின் இராணுவத்தால் பிடிக்கப்பட்ட அமேரிக்க இராணுவவீரர்களை, கியூபா மருத்து உதவி வாங்கிக்கொண்டு விடுவித்ததாக எங்கேயோ படித்த நினைவு இதை படிக்கும் யாராவது சரிசெய்தால் சந்தோஷம். இப்படியாக தோல்வியில் முடிந்துபோன இந்த குழப்பத்தால், காஸ்ட்ரோ தான் ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்றும் அன்று முதல் கியூபா ஒரு கம்யூனிச நாடென்றும் வெளிப்படையாக அறிவித்தார்.
இதன் பிறகு நடந்தது இன்னும் ஆச்சர்யமான நிகழ்வு, அது மூன்றாம் உலகப்போரில் முடியாமல் போனதில் பலருக்கும் ஆச்சர்யமே. அக்டோபர் 22, 1962ல் அமேரிக்க பிரஸிடெண்ட் கென்னடி வெளிப்படையாக, ரஷ்யா கியூபாவில் தன்னுடைய குறைந்த தொலைவு செல்லும் நியூக்ளியர் மிஸைல்களை குவித்திருக்கிறது என்று சொன்னார். அமேரிக்காவின் ப்ளோரிடாவிற்கு கிட்டத்தட்ட 145 கிமீ, நிறுத்தப்பட்டிருந்த இந்த ரஷ்யாவின் நியூக்ளியர் ஏவுகணைகள் அன்று உலகத்தின் மிகப்பெரிய பேச்சாக இருந்தது. அமேரிக்காவிற்கும், ரஷ்யாவிற்குமான கோல்ட் வார் உச்சத்தில் இருந்த சமயம் அது.
கென்னடி, அமேரிக்காவின் மீதோ இல்லை இலத்தீன் அமேரிக்கா நாடுகளின் மீதோ ஏவுகணை வீசப்பட்டால் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சொன்னதிலிருந்து இன்னும் சூடுபிடித்தது. அமேரிக்கா கியூபாவை சோதனை செய்வதற்காக அனுப்பப்பட்ட ஸ்பை விமானம், கியூபாவில் சுட்டு வீழ்த்தப்பட்டு விமானியும் கொல்லப்பட, அதன் உச்சத்தை அடைந்தது.
கியூபாவை ஒழித்துக்கட்டிவிடும் ஆத்திரத்துடன் வந்த அமேரிக்க அமேரிக்க கப்பல்களை எதிர்கொள்ள ரஷ்யா தன்னுடைய நீர்மூழ்கி கப்பல்களை அங்கே அனுப்பியது. சொல்லப்போனால் இதுதான் இந்த சூழ்நிலையின் உச்சக்கட்டம். உலகமே அடுத்த உலகப்போர் தொடங்கப்படுமோ என்ற பயத்தில் இருந்த சமயம்.
ஆனால் என்ன காரணத்தினாலோ ரஷ்யா அந்த சமயத்தில் பின்வாங்கியது, கியூபாவின் மீது படையெடுக்காமல் இருக்கும்பட்சத்தில் நியூக்ளியர் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து நீக்கிக்கொள்வதாக ரஷ்யா அறிவிக்க இந்த பிரச்சனை உலகப்போராக மாறாமல் காப்பாற்றப்பட்டது. இதில் காஸ்ட்ரோவிற்கு ரஷ்யாவின் மீது கோபம் இருந்தாலும் மறுக்கமுடியவில்லை. இப்படியாக உலகப்போலீஸ்காரனுக்கு ஒரு காலத்தில் பெரும் தலைவலியாக இருந்த கியூபா இன்று வரை அப்படித்தான் இருக்கிறது.
ரஷ்யாவின் பண உதவி கிடைத்துக்கொண்டிருந்ததால் ஒருவாறு சமாளித்துவந்த, கியூபா கடைசியில் 1990களில் ரஷ்யாவும் பிளவுபட்டுப்போக, கஷ்டம்தான் படுகிறது தற்பொழுது. இந்த நிலையில் காஸ்ட்ரோவின் அரசியலை விமர்சிக்கும் நிறைய பேர் இன்றளவும் அதிகமாகவே இருக்கிறார்கள். அதே போல அவருடைய ஆளுமையை விரும்புகின்ற என்னைப்போன்றவர்களும் நிறைய பேர்.
அதேபோல் அங்கோலா, எத்தியோப்பியா, நிக்காராகுவே போன்ற நாடுகளுக்கு கியூபாவின் படைகளை அனுப்பி அங்கே விடுதலைபோரில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உதவி செய்து, அமேரிக்காவால் வியட்நாமில் செய்ய முடியாததை, 1990களுக்கு முன்பிருந்த ரஷ்யாவால் ஆப்கானிஸ்தானில் செய்ய முடியாததை காஸ்ட்ரோ செய்தார்.
இதன் காரணமாகத்தான் நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் சுதந்திரம், விடுதலைப்போருக்கு கியூபாவின் பங்கு மிக அதிகமானது என்று குறிப்பிட்டிருந்தார். என்ன இருந்தாலும் தனியொரு மனித ஆளுமையாக இன்று வரை அமேரிக்காவின் அருகிலேயே இருந்து கொண்டும் அமெரிக்காவிற்கு அல்வா கொடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர் பிடல் அலெக்ஸாண்ட்ரோ காஸ்ட்ரோ.
ஒரிஜினல் தலைப்பு - நட்சத்திரம் - இந்த ஆளைப்பற்றி கொஞ்சம் ஜல்லி
மீள்பதிவிற்காக மாற்றியிருக்கிறேன்.
In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்
நட்சத்திரம் - நன்றிகள் பல
Posted on Sunday, February 19, 2006
இது போன்று தமிழ்மணத்தின் நட்சத்திரமாய் இருக்க ஒரு அருமையான வாய்ப்பை நல்கிய தமிழ்மண நிர்வாகிகளுக்கு முதற்கண் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் இத்தனை நேர சிக்கல்களுக்கும் இடையில் 14 பதிவுகளைக் போட்டிருக்கிறேன் என நினைக்கும் பொழுது முன்பிருந்ததைப்போல் கொஞ்சம் வேலை குறைவாக இருந்திருக்குமேயானால், என்னால் தமிழ்மண வாசகர்களின் நிலையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. :-)
இந்த வாரம் மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக என் பதிவுகளை படித்துவரும் மக்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பாக இதை எடுத்துக்கொண்டு, இதுவரை ஆதரவளித்து வந்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்களிடம் கூகுளின் அனலைடிக்ஸ்ஸைப்(google.com/analytics) பற்றி முன்பே சொன்னவன் ஆதலால் அதனால் கிடைக்கும் ஒரு பயனாக கீழ்வரும் ஒரு ஸ்ட்டாட்டிஸ்டிக்ஸ் விவரத்தை அளிக்கிறேன். எத்துனை பேர் இதை பயன்படுத்திவருகிறீர்கள் என்பது தெரியாது ஆனால் முன்பே சொன்னது போல் ஒரு அற்புதமான் டூல் இது. அதன் ஒரு எடுத்துக்காட்டாக இந்த ஒருவாரமாக என் பதிவைப்பற்றி விவரங்களை தருகிறேன்.
அதற்கு முன் உங்களில் பலருக்கு கூகுளின் வீடியோவைப்(video.google.com) பற்றி தெரிந்திருக்கும். அதை அமெரிக்காவைத் தவிர்த்த வெளிநாடுகளில் இருந்து உபயோகிப்பதில் உள்ள சிக்கலைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். அதை மீறியும் கூகுளின் இந்த வீடியோ சேவையை பயன்படுத்த ஒரு வழிமுறையைத் தருகிறேன். இதுவும் சொல்லப்போனால் கூகுளில் இருக்கும் ஒரு பக்(BUG) கே.
1. இதற்கு முதலில் உங்களுக்கு தேவையான கூகுளின் வீடியோ உரல் தெரிந்திருக்க வேண்டும், உதாரணமாக கீழே உள்ள உரலை எடுத்துக் கொள்ளுங்கள்:
http://video.google.com/videoplay?docid=-4319256606292930218
2. உங்களால் இந்த உரலை நேரடியாக உபயோகிக்க முடியவில்லை என்றால் கீழே குறிப்பிட்டுள்ளது போல் கூகுளின் டிரான்ஸ்லேட்டர் சர்வீசை உபயோகித்து: http://www.google.com/translate?langpair=en|en&u=(url of the video)
3. அதாவது:
http://www.google.com/translate?langpair=en|en&u=http://video.google.com/videoplay?docid=-4319256606292930218
4. சந்தோஷமா இருங்க.
பாரதியின் தீவிரதாசனாய் கீழேயுள்ள கவிதை வரிகளுடன் இந்த நட்சத்திர வாரத்தை இனிதே நிறைவு செய்கிறேன்.
தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
-----------------------
என் இத்தனை நேர சிக்கல்களுக்கும் இடையில் 14 பதிவுகளைக் போட்டிருக்கிறேன் என நினைக்கும் பொழுது முன்பிருந்ததைப்போல் கொஞ்சம் வேலை குறைவாக இருந்திருக்குமேயானால், என்னால் தமிழ்மண வாசகர்களின் நிலையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. :-)
இந்த வாரம் மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக என் பதிவுகளை படித்துவரும் மக்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பாக இதை எடுத்துக்கொண்டு, இதுவரை ஆதரவளித்து வந்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்களிடம் கூகுளின் அனலைடிக்ஸ்ஸைப்(google.com/analytics) பற்றி முன்பே சொன்னவன் ஆதலால் அதனால் கிடைக்கும் ஒரு பயனாக கீழ்வரும் ஒரு ஸ்ட்டாட்டிஸ்டிக்ஸ் விவரத்தை அளிக்கிறேன். எத்துனை பேர் இதை பயன்படுத்திவருகிறீர்கள் என்பது தெரியாது ஆனால் முன்பே சொன்னது போல் ஒரு அற்புதமான் டூல் இது. அதன் ஒரு எடுத்துக்காட்டாக இந்த ஒருவாரமாக என் பதிவைப்பற்றி விவரங்களை தருகிறேன்.
அதற்கு முன் உங்களில் பலருக்கு கூகுளின் வீடியோவைப்(video.google.com) பற்றி தெரிந்திருக்கும். அதை அமெரிக்காவைத் தவிர்த்த வெளிநாடுகளில் இருந்து உபயோகிப்பதில் உள்ள சிக்கலைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். அதை மீறியும் கூகுளின் இந்த வீடியோ சேவையை பயன்படுத்த ஒரு வழிமுறையைத் தருகிறேன். இதுவும் சொல்லப்போனால் கூகுளில் இருக்கும் ஒரு பக்(BUG) கே.
1. இதற்கு முதலில் உங்களுக்கு தேவையான கூகுளின் வீடியோ உரல் தெரிந்திருக்க வேண்டும், உதாரணமாக கீழே உள்ள உரலை எடுத்துக் கொள்ளுங்கள்:
http://video.google.com/videoplay?docid=-4319256606292930218
2. உங்களால் இந்த உரலை நேரடியாக உபயோகிக்க முடியவில்லை என்றால் கீழே குறிப்பிட்டுள்ளது போல் கூகுளின் டிரான்ஸ்லேட்டர் சர்வீசை உபயோகித்து: http://www.google.com/translate?langpair=en|en&u=(url of the video)
3. அதாவது:
http://www.google.com/translate?langpair=en|en&u=http://video.google.com/videoplay?docid=-4319256606292930218
4. சந்தோஷமா இருங்க.
பாரதியின் தீவிரதாசனாய் கீழேயுள்ள கவிதை வரிகளுடன் இந்த நட்சத்திர வாரத்தை இனிதே நிறைவு செய்கிறேன்.
தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
-----------------------
In சோழர் வரலாறு சோழர்_வரலாறு நட்சத்திரம்
சோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்
Posted on Saturday, February 18, 2006
கொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்டியன் தன்னுரிமையுடன் ஆண்டுவந்தான். சேவூர்ப் போரில் பராந்தகன் தன் பகைவர்களின் யானைகளை வெட்டிவீழ்த்தி, இரத்த ஆறு ஒடச்செய்தான் என்றும் அவனது மகன் ஆதித்தன் சிறுவனாய் இருந்தும் சிங்கம், யானையுடன் போரிடுவதுபோல், வீரபாண்டியனை எதிர்த்துப் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன.
புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்தனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.
இரண்டாம் ஆதித்தன்
இரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கூறுகின்றனர். இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன்.
வட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.
இரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார்.
"இவ்விரு மன்னருமே, 'பாண்டியன் தலைகொண்ட' அல்லது 'வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன.
பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது. "
பாண்டிய தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன.
இவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது.
எனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசர் என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன.
சோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்த்ர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத்தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிறது இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதிய ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசரி உத்தமசோழன் இளவரசன் ஆனான்.
இந்தக் காலத்தின் வரலாற்றைச் சொல்லுமுன் இதுவரை நாம் தெரிவித்ததின் முடிவுகளைச் சுருங்கச்சொல்லுவோம்.
இராஜகேசரி கண்டராதித்தன் கிபி 949/50 - 957
பரகேசரி அரிஞ்சயன் கிபி 956 - 957
இராஜகேசரி சுந்தரசோழன் கிபி 956 - 73
இரண்டாம் ஆதித்த பரகேசர் பார்த்திவேந்திர கரிகாலன் கிபி 956 - 969.
பரந்தூர்க் கல்வெட்டு
பார்த்திவேந்திர வர்மனின் 15ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு அழிந்திருப்பதாலும், இதைக் கூர்ந்து ஆராயும் பொழுது இரு விவரங்கள் உறுதிப்படுகின்றன. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள் ஆண்டு பதினைந்து, இதில் காணப்படும் எழுத்துக்கள் நன்கு செதுக்கப்பட்டிருந்தாலும், இவை எழுதப்பட்டுள்ள கல் பாழ்பட்டுள்ளது.
அக்கால எழுத்து வடிவங்களுடனான இக்கல்வெட்டின் உண்மையை சந்தேகிப்பதற்கான காரணம் ஒன்றும் இல்லை. 15-ம் ஆண்டு என்று ஒப்புக்கொள்வோமேயானால் இரண்டாம் ஆதித்தனே பார்த்திவேந்திர வர்மன் என்ற அடிப்படையில் நாம் மேலே கொடுத்திருக்கும் அட்டவணை பெரும் மாற்றத்திற்குள்ளாகும். உத்தமசோழன் வருவதற்கு முன்னும் 15ஆண்டுகளைக் கணக்கிட இயலாது 13 ஆண்டுகளைக் கணக்கிட்டாலே கால வரையறையை மீறுவதால், சுந்தர சோழன் தன் ஆட்சி தொடக்கத்திலேயே ஆதித்தனையும் உடன் வைத்துக் கொண்டு அவனுடன் ஆட்சிப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டான் என்ற கருத்தை ஏற்கச் செய்துள்ளது. அதே சமயம் பரந்தூர்க் கல்வெட்டு மட்டுமே, பார்த்திவேந்திரனுக்கு 13க்கு மேற்பட்ட ஆட்சி ஆண்டைத் தருகிறது. 13ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல இருந்தாலும் 14ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றேனும் இல்லை. 15-ம் ஆண்டுக் கல்வெட்டு இது ஒன்றே.
எனவே மேலே குறிப்பிட்ட முடிவுக்குத்தான் வர இயலும் பார்த்திவேந்திரந்தான் ஆதித்தன் என்று ஏற்காவிடில், இவ்விருவரிடையே கண்ட பல ஒற்றுமைகளை நாம் அறவே ஒதுக்கிவிட முடியாது. இவ்வொற்றுமைகள் அனைத்துமே எதிர்பாரா வகையில் காணப்படுபவை அல்ல.
ஆகையால் பரந்தூர்க் கல்வெட்டில் காணப்படும் ஆட்சி ஆண்டில் "இ" என்று இரண்டாவது எண் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்கலாம். 13-ம் ஆட்சி ஆண்டிற்கு மேற்பட்ட வேறு கல்வெட்டுகள் இனிக் கிடைக்கும் வரை, இக்கல்வெட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.
நாம் இதுவரை ஏற்ற வாதங்களுடன் மற்றொரு முடிவான வளத்தையும் காண வேண்டியுள்ளது. ஆதித்தனும் பார்த்திவேந்திரனும் ஒருவரே என்று ஏற்காவிடில், ஆதித்தனின் வீரபாண்டிய பரகேசரி கல்வெட்டுகளில் மிக அதிகமானது கிபி 969/0 உத்தம சோழ அரியணையில் அமருவதற்கு முன்பாக இந்த ஐந்தாண்டுகள் என்று நாம் கருத வேண்டும். இந்த அடிப்படையில் ஆதித்தனுடைய ஆட்சி ஏறக்குறைய கிபி 694 - 5ல் தொடங்கியிருக்க வேண்டும்.
இதுவே மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி சுந்தர சோழனின் 8 அல்லது 9 வது ஆண்டாகும். தன் ஆட்சியின் 7-ம் ஆண்டிற்கு முன்பே பாண்டியனுடனான போரில் பெரும் வெற்றி பெற்றான் என்ற விவரமும் இப்போரில் செவ்வூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிறுவனான ஆதித்த கரிகாலன் பங்கேற்றான் என்று லெய்டன் கூறுவதிலிருந்து. சுந்தரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும்.
இரண்டாம் ஆதித்தன் கொலை
குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கச் சபை மேற்கொண்டதாக, இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.
உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.
சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தரசோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூட்ம் என்பது புலனாகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்)" கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.
நாம் முன்பே இராஜகேசரி, பரகேசரி பிரச்சனைகளைப்பற்றி பார்த்துள்ளோம். அதைப்போலவே, சுந்தர சோழனால் இரளவரசுப்பட்டம் அளிக்கப்ப்ட்ட இரண்டாம் ஆதித்தன் தன் தந்தையின் வாழ்நாளிலேயே மரணம் அடையவே, இராஜகேசர் சுந்தரசோழன் இறந்தபிறகு, அரியணையேறிய மன்னன் நியதிப்படி ஒரு பரகேசரியாகவே ஆட்சி செய்தான்.
புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்தனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.
இரண்டாம் ஆதித்தன்
இரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கூறுகின்றனர். இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன்.
வட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.
இரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார்.
"இவ்விரு மன்னருமே, 'பாண்டியன் தலைகொண்ட' அல்லது 'வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன.
பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது. "
பாண்டிய தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன.
இவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது.
எனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசர் என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன.
சோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்த்ர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத்தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிறது இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதிய ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசரி உத்தமசோழன் இளவரசன் ஆனான்.
இந்தக் காலத்தின் வரலாற்றைச் சொல்லுமுன் இதுவரை நாம் தெரிவித்ததின் முடிவுகளைச் சுருங்கச்சொல்லுவோம்.
இராஜகேசரி கண்டராதித்தன் கிபி 949/50 - 957
பரகேசரி அரிஞ்சயன் கிபி 956 - 957
இராஜகேசரி சுந்தரசோழன் கிபி 956 - 73
இரண்டாம் ஆதித்த பரகேசர் பார்த்திவேந்திர கரிகாலன் கிபி 956 - 969.
பரந்தூர்க் கல்வெட்டு
பார்த்திவேந்திர வர்மனின் 15ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு அழிந்திருப்பதாலும், இதைக் கூர்ந்து ஆராயும் பொழுது இரு விவரங்கள் உறுதிப்படுகின்றன. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள் ஆண்டு பதினைந்து, இதில் காணப்படும் எழுத்துக்கள் நன்கு செதுக்கப்பட்டிருந்தாலும், இவை எழுதப்பட்டுள்ள கல் பாழ்பட்டுள்ளது.
அக்கால எழுத்து வடிவங்களுடனான இக்கல்வெட்டின் உண்மையை சந்தேகிப்பதற்கான காரணம் ஒன்றும் இல்லை. 15-ம் ஆண்டு என்று ஒப்புக்கொள்வோமேயானால் இரண்டாம் ஆதித்தனே பார்த்திவேந்திர வர்மன் என்ற அடிப்படையில் நாம் மேலே கொடுத்திருக்கும் அட்டவணை பெரும் மாற்றத்திற்குள்ளாகும். உத்தமசோழன் வருவதற்கு முன்னும் 15ஆண்டுகளைக் கணக்கிட இயலாது 13 ஆண்டுகளைக் கணக்கிட்டாலே கால வரையறையை மீறுவதால், சுந்தர சோழன் தன் ஆட்சி தொடக்கத்திலேயே ஆதித்தனையும் உடன் வைத்துக் கொண்டு அவனுடன் ஆட்சிப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டான் என்ற கருத்தை ஏற்கச் செய்துள்ளது. அதே சமயம் பரந்தூர்க் கல்வெட்டு மட்டுமே, பார்த்திவேந்திரனுக்கு 13க்கு மேற்பட்ட ஆட்சி ஆண்டைத் தருகிறது. 13ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல இருந்தாலும் 14ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றேனும் இல்லை. 15-ம் ஆண்டுக் கல்வெட்டு இது ஒன்றே.
எனவே மேலே குறிப்பிட்ட முடிவுக்குத்தான் வர இயலும் பார்த்திவேந்திரந்தான் ஆதித்தன் என்று ஏற்காவிடில், இவ்விருவரிடையே கண்ட பல ஒற்றுமைகளை நாம் அறவே ஒதுக்கிவிட முடியாது. இவ்வொற்றுமைகள் அனைத்துமே எதிர்பாரா வகையில் காணப்படுபவை அல்ல.
ஆகையால் பரந்தூர்க் கல்வெட்டில் காணப்படும் ஆட்சி ஆண்டில் "இ" என்று இரண்டாவது எண் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்கலாம். 13-ம் ஆட்சி ஆண்டிற்கு மேற்பட்ட வேறு கல்வெட்டுகள் இனிக் கிடைக்கும் வரை, இக்கல்வெட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.
நாம் இதுவரை ஏற்ற வாதங்களுடன் மற்றொரு முடிவான வளத்தையும் காண வேண்டியுள்ளது. ஆதித்தனும் பார்த்திவேந்திரனும் ஒருவரே என்று ஏற்காவிடில், ஆதித்தனின் வீரபாண்டிய பரகேசரி கல்வெட்டுகளில் மிக அதிகமானது கிபி 969/0 உத்தம சோழ அரியணையில் அமருவதற்கு முன்பாக இந்த ஐந்தாண்டுகள் என்று நாம் கருத வேண்டும். இந்த அடிப்படையில் ஆதித்தனுடைய ஆட்சி ஏறக்குறைய கிபி 694 - 5ல் தொடங்கியிருக்க வேண்டும்.
இதுவே மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி சுந்தர சோழனின் 8 அல்லது 9 வது ஆண்டாகும். தன் ஆட்சியின் 7-ம் ஆண்டிற்கு முன்பே பாண்டியனுடனான போரில் பெரும் வெற்றி பெற்றான் என்ற விவரமும் இப்போரில் செவ்வூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிறுவனான ஆதித்த கரிகாலன் பங்கேற்றான் என்று லெய்டன் கூறுவதிலிருந்து. சுந்தரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும்.
இரண்டாம் ஆதித்தன் கொலை
குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கச் சபை மேற்கொண்டதாக, இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.
உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.
சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தரசோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூட்ம் என்பது புலனாகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்)" கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.
நாம் முன்பே இராஜகேசரி, பரகேசரி பிரச்சனைகளைப்பற்றி பார்த்துள்ளோம். அதைப்போலவே, சுந்தர சோழனால் இரளவரசுப்பட்டம் அளிக்கப்ப்ட்ட இரண்டாம் ஆதித்தன் தன் தந்தையின் வாழ்நாளிலேயே மரணம் அடையவே, இராஜகேசர் சுந்தரசோழன் இறந்தபிறகு, அரியணையேறிய மன்னன் நியதிப்படி ஒரு பரகேசரியாகவே ஆட்சி செய்தான்.
சிறிது நேரத்தில் இராஜேந்திரனை அழைத்துக் கொண்டு குந்தவை சென்றுவிட. இராஜராஜரும் வந்தியத்தேவரும் மட்டும் அங்கிருந்தனர். அந்த இடத்தில் நிலவிய மௌனம் இருவருக்குமே விசித்திரமாய் இருந்தாலும், இருவருமே அதை முடிவுக்கு கொண்டுவரும் மனநிலையில் அப்பொழுது இல்லை.
பிறகு சிறிது நேரத்தில் இராஜராஜரே அந்த மௌனத்தைக் கலைத்தார்.
"தேவரே நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழியளிக்க வேண்டும். எனக்குப் பிறகு இராஜேந்திரனே பட்டத்திற்கு வருவான் என்ற உறுதிமொழி வேண்டும்."
"அருண்மொழி என்னயிது???"
சாதாரண சந்தர்ப்பங்களில், வந்தியத்தேவர் 'மன்னரே' என்று தான் விளிக்கும் வழக்கம் இருந்தாலும் இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவும், குந்தவை தேவியை மணந்ததால் வந்த உறவும் வந்தியத்தேவருக்கு அருண்மொழி என்று அழைக்கும் உரிமையை அளித்திருந்ததது இருந்தும் அதுநாள் வரை அப்படி விளித்திருக்காத அவர் அருண்மொழி என்று அன்று விளித்ததற்கு காரணம் அவரிடம் கேட்கப்பட்ட வாக்குறுதி.
இன்னும் சொல்லப்போனால் இராஜராஜர் அப்படிக் கேட்பதற்கான காரணமும் வந்தியத்தேவருக்கு நன்றாகவே விளங்கியது. இருந்தாலும் அப்படியொரு கேள்வி தன்னிடம் கேட்கப்படாது என்றே நினைத்துக்கொண்டிருந்தவரை அந்தக் கேள்வி அதிகமாய்த் தான் அசைத்தது.
"தேவரே இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் இந்த ஒன்று மனதில் அடியில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் பொழுது என்னால் மற்ற அரசியல் விவகாரங்களில் முழுமனதாக ஈடுபடமுடியாமல் செய்துவருகிறது. உங்களுக்குத் தெரியாததென்ன,
இன்னும் பாண்டியர்கள் கூட முழுமையாக நம் கட்டுப்பாட்டில் வரவில்லை, ஈழதேசத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாண்டியன் உதவி கிடைத்ததும் நிச்சயம் பிரச்சனையளிப்பான்.
கீழைசாளுக்கியத்தின் தாயாதிப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும், மேலைச்சாளுக்கியம் தொடர்ந்து பலம்பெற்றுவரும் நிலையில் என்றைக்கிருந்தாலும் அவர்களால் பிரச்சனையிருக்கிறது. இவை மட்டுமல்லாமல் என்னுடைய கனவான ஒரு கடற்படையை உருவாக்கி பலநாட்களை நோக்கி செல்லவேண்டும்.
இப்படி நாளாப்பக்கமும் பிரச்சனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் ஒருவரிடம் குறிப்பாக உங்களிடமாவது நம்பிக்கை வைக்கவேண்டுமில்லையா? பல சமயங்களில் அந்த நம்பிக்கை விட்டுப்போய் என்னை பாடாய்ப்படுத்துகிறது. உங்களுக்குத் தெரியாததல்ல, பதினாறு வருடம் நான் பட்டபாடு.
சிறுவயதில் சேவூர்ப்போர்க்களத்தில் பகைவரை சொல்லிச்சொல்லி அடித்த தமையனாரையே, சில ஆட்கள் பின்னணியில் இருந்த பலத்தால் மட்டுமே கொன்று, நியாயமாயும் தர்மப்படியும் எனக்குவரவேண்டிய பட்டத்தை உத்தமசோழனால் பறிக்கமுடியுமென்றால்..." முடிக்க முடியாமல் இராஜராஜர் இழுத்துக்கொண்டிருக்க, வந்தியத்தேவருக்கு மன்னருடைய நிலை நன்றாகத் தெரிந்துதான் இருந்தது.
வந்தியத்தேவர் எதையோ சொல்ல வாயெடுத்தார், ஆனால் அவரைத்தடுத்த இராஜராஜர்,
"தேவரே நான் முடித்துவிடுகிறேன், அரியணைக்கு எல்லா உரிமையும் உள்ள, தமையனாரின் மகன், கரிகாலக்கண்ணன், இராஜேந்திரனுக்கு எதிரியாய் கொண்டுவரப்படுவானோ என்ற அச்சம் என்னை அலைக்கழிக்கிறது. கரிகாலக்கண்ணன் அப்படியொரு ஆசைவசப்படுவானாயின் என்னால் கூட அவனை மறுத்து பேசயியலாதே, தந்தையில்லாமல் வளர்ந்தவனுடைய ஆசையை நிறைவேற்றமுடியாத சிற்றப்பனாய் இராஜேந்திரனை அரியணையில் அமர்த்தும் அளவிற்கு கல்நெஞ்சக்காரனா நான்.
நீங்கள் தான் இராஜேந்திரனை வளர்த்து வருகிறீர்கள், உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாதுதான் என்றாலும் அப்படியொரு சமயம் வரும்பொழுது நீங்கள் என் மகனுக்கு சாதகமாக இருப்பீர்களா?"
முதன் முதலில் வந்தியத்தேவருக்கு, இராஜராஜர் இந்தக் கேள்வியை கேட்க ஆரம்பிக்கும் பொழுது சிறிது வருத்தம் இருந்தாலும். தற்பொழுது சிறிது சந்தோஷமாகக்கூட இருந்தார். உண்மைதான் இரண்டாம் ஆதித்தனின் மகனான, கரிகாலக்கண்ணனுக்கு இராஜேந்திரனுக்கு இருப்பதைப் போன்று அரியணையின் மீது அத்துனை உரிமையும் இருந்தது.
சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தின் பொழுதே ஆதித்த கரிகாலனும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது, முதலில் துணை அரசனாகயிருந்து பின்னர் அரசனாகவும் பதின்மூன்று ஆண்டுகள் தொண்டைமண்டலத்தை ஆட்சிசெய்தவர். இதனால் முறைப்படியோ இல்லை தருமப்படியோ கரிகாலக்கண்ணன் ஆட்சிப்பொறுப்பைக் கேட்டால் மறுக்க முடியாதுதான்.
இராஜராஜரின் அருகில் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டவர். சிறிது நேரத்தில் விலகிவிட்டு,
"மன்னரே உங்களின் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு நீங்கள் இன்று கேட்ட வாக்குறுதியை நினைத்து கொஞ்சம் நகைப்பாய்க் கூட இருக்கிறது. இதே போன்றதொறு வாக்குறுதியை நான் உங்களிடம் கேட்பதற்காக எத்தனை முறை முயற்சிசெய்து பின்னர் அமைதியாகியிருக்கிறேன் தெரியுமா.
எங்கே உங்கள் தமையனாரின் மேல் பாசமில்லாதவனாக, பக்தியில்லாதவனாக சித்தரிக்கப்படுவேனோ என நினைத்து எழுந்த கேள்விகளை அப்படியே உள்ளுக்குள் கட்டிவைத்திருக்கிறேன். புரியவில்லையா?
நான் உங்களிடம் எக்காரணம் கொண்டும் இராஜேந்திரனைத் தவிர்த்த ஒருவரை அடுத்த மன்னராக அரியணையில் ஏற்ற நீங்கள் நினைக்கக்கூடாது என்று உறுதிமொழி வாங்க நினைத்திருந்தேன். நீங்களே இன்று கேட்டுவிட என்னைப்போல் மகிழ்ச்சியாய் இருப்பவன் இந்த உலகத்தின் யாருமே இருக்கமுடியாது. இதனாலெல்லாம் கரிகாலக்கண்ணனின் மேல் எனக்கு பாசம் கிடையாது என்பதில்லை. இராஜேந்திரன் ஒரு கண் என்றால் கரிகாலக்கண்ணன் மற்றொரு கண்ணைப்போன்றவன்.
வீரத்திலும் விவேகத்திலும் இராஜேந்திரனை அடித்துக்கொள்ளும் ஒருவனை இந்தப் பிறவியில் நான் இன்னும் பார்க்கவில்லை. நம்மையெல்லாம், நம் சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிடப்போகிறான் இராஜேந்திரன். என் மனதை உறுத்திக் கொண்டிருந்ததெல்லாம். நியாய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் என்று எதையோ ஒன்றை சொல்லி உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தின் எங்களில் கைகளை கட்டி வைத்திருந்ததைப்போல் இப்பொழுது நடந்துவிடக்கூடாதென்று தான். அப்படியொரு சூழ்நிலை வந்திருந்தால் உங்களைக் கைது செய்துவிட்டு என் மருமகனை அரியணையில் அமரச் செய்திருப்பேன்."
வந்தியத்தேவர் சொல்லிமுடித்ததும் இராஜராஜர் வந்தியத்தேவரின் முதுகெலும்புகள் உடையும் படி கட்டிப்பிடித்துக்கொள்ள,
"என்னது என் தம்பியைக் கைது செய்வதா? அதற்கு இப்படியொரு உபசரிப்பா? என்ன நடக்கிறது சோழ தேசத்தில் என்று கேட்டவாறு குந்தவை உள்ளே நுழைய, வந்தியத்தேவர் மகிழ்ச்சி சாகரத்தில் நீந்திக்கொண்டிருந்தவர், விளையாட்டாக,
"தேவி நீ ஆள்வதற்கு நாடு கேட்டாயல்லவா? போரிட்டு வேறு நாடுகளைப் பிடித்து நிறைய ஆண்டுகள் ஆகும் வேலையது. பேசாமல் இராஜராஜரை சிறைபிடித்து விட்டு, நாமிருவரும் ஆட்சிசெய்தால் என்ன என்று நினைத்தேன், அதைப்பற்றி மன்னரிடம் ஆலோசனைக் கேட்கத்தான் சந்தோஷமாய் ஆளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அதற்குள் நீயும் வந்துவிட்டாய்."
வந்தியத்தேவர் வேடிக்கையாய் சொல்ல, சோழ வரலாற்றில் பெரும் பெயர் எடுக்கப்போகும் அந்தச் சிறுவன் வந்தியத்தேவருக்கும், இராஜராஜருக்கும் இடையில் நடந்தவற்றை அறியாதவனாய், குந்தவைதேவி வந்தியத்தேவரின் மீது காட்டிய பொய்க்கோபத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.
பிறகு சிறிது நேரத்தில் இராஜராஜரே அந்த மௌனத்தைக் கலைத்தார்.
"தேவரே நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழியளிக்க வேண்டும். எனக்குப் பிறகு இராஜேந்திரனே பட்டத்திற்கு வருவான் என்ற உறுதிமொழி வேண்டும்."
"அருண்மொழி என்னயிது???"
சாதாரண சந்தர்ப்பங்களில், வந்தியத்தேவர் 'மன்னரே' என்று தான் விளிக்கும் வழக்கம் இருந்தாலும் இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவும், குந்தவை தேவியை மணந்ததால் வந்த உறவும் வந்தியத்தேவருக்கு அருண்மொழி என்று அழைக்கும் உரிமையை அளித்திருந்ததது இருந்தும் அதுநாள் வரை அப்படி விளித்திருக்காத அவர் அருண்மொழி என்று அன்று விளித்ததற்கு காரணம் அவரிடம் கேட்கப்பட்ட வாக்குறுதி.
இன்னும் சொல்லப்போனால் இராஜராஜர் அப்படிக் கேட்பதற்கான காரணமும் வந்தியத்தேவருக்கு நன்றாகவே விளங்கியது. இருந்தாலும் அப்படியொரு கேள்வி தன்னிடம் கேட்கப்படாது என்றே நினைத்துக்கொண்டிருந்தவரை அந்தக் கேள்வி அதிகமாய்த் தான் அசைத்தது.
"தேவரே இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் இந்த ஒன்று மனதில் அடியில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் பொழுது என்னால் மற்ற அரசியல் விவகாரங்களில் முழுமனதாக ஈடுபடமுடியாமல் செய்துவருகிறது. உங்களுக்குத் தெரியாததென்ன,
இன்னும் பாண்டியர்கள் கூட முழுமையாக நம் கட்டுப்பாட்டில் வரவில்லை, ஈழதேசத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாண்டியன் உதவி கிடைத்ததும் நிச்சயம் பிரச்சனையளிப்பான்.
கீழைசாளுக்கியத்தின் தாயாதிப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும், மேலைச்சாளுக்கியம் தொடர்ந்து பலம்பெற்றுவரும் நிலையில் என்றைக்கிருந்தாலும் அவர்களால் பிரச்சனையிருக்கிறது. இவை மட்டுமல்லாமல் என்னுடைய கனவான ஒரு கடற்படையை உருவாக்கி பலநாட்களை நோக்கி செல்லவேண்டும்.
இப்படி நாளாப்பக்கமும் பிரச்சனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் ஒருவரிடம் குறிப்பாக உங்களிடமாவது நம்பிக்கை வைக்கவேண்டுமில்லையா? பல சமயங்களில் அந்த நம்பிக்கை விட்டுப்போய் என்னை பாடாய்ப்படுத்துகிறது. உங்களுக்குத் தெரியாததல்ல, பதினாறு வருடம் நான் பட்டபாடு.
சிறுவயதில் சேவூர்ப்போர்க்களத்தில் பகைவரை சொல்லிச்சொல்லி அடித்த தமையனாரையே, சில ஆட்கள் பின்னணியில் இருந்த பலத்தால் மட்டுமே கொன்று, நியாயமாயும் தர்மப்படியும் எனக்குவரவேண்டிய பட்டத்தை உத்தமசோழனால் பறிக்கமுடியுமென்றால்..." முடிக்க முடியாமல் இராஜராஜர் இழுத்துக்கொண்டிருக்க, வந்தியத்தேவருக்கு மன்னருடைய நிலை நன்றாகத் தெரிந்துதான் இருந்தது.
வந்தியத்தேவர் எதையோ சொல்ல வாயெடுத்தார், ஆனால் அவரைத்தடுத்த இராஜராஜர்,
"தேவரே நான் முடித்துவிடுகிறேன், அரியணைக்கு எல்லா உரிமையும் உள்ள, தமையனாரின் மகன், கரிகாலக்கண்ணன், இராஜேந்திரனுக்கு எதிரியாய் கொண்டுவரப்படுவானோ என்ற அச்சம் என்னை அலைக்கழிக்கிறது. கரிகாலக்கண்ணன் அப்படியொரு ஆசைவசப்படுவானாயின் என்னால் கூட அவனை மறுத்து பேசயியலாதே, தந்தையில்லாமல் வளர்ந்தவனுடைய ஆசையை நிறைவேற்றமுடியாத சிற்றப்பனாய் இராஜேந்திரனை அரியணையில் அமர்த்தும் அளவிற்கு கல்நெஞ்சக்காரனா நான்.
நீங்கள் தான் இராஜேந்திரனை வளர்த்து வருகிறீர்கள், உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாதுதான் என்றாலும் அப்படியொரு சமயம் வரும்பொழுது நீங்கள் என் மகனுக்கு சாதகமாக இருப்பீர்களா?"
முதன் முதலில் வந்தியத்தேவருக்கு, இராஜராஜர் இந்தக் கேள்வியை கேட்க ஆரம்பிக்கும் பொழுது சிறிது வருத்தம் இருந்தாலும். தற்பொழுது சிறிது சந்தோஷமாகக்கூட இருந்தார். உண்மைதான் இரண்டாம் ஆதித்தனின் மகனான, கரிகாலக்கண்ணனுக்கு இராஜேந்திரனுக்கு இருப்பதைப் போன்று அரியணையின் மீது அத்துனை உரிமையும் இருந்தது.
சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தின் பொழுதே ஆதித்த கரிகாலனும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது, முதலில் துணை அரசனாகயிருந்து பின்னர் அரசனாகவும் பதின்மூன்று ஆண்டுகள் தொண்டைமண்டலத்தை ஆட்சிசெய்தவர். இதனால் முறைப்படியோ இல்லை தருமப்படியோ கரிகாலக்கண்ணன் ஆட்சிப்பொறுப்பைக் கேட்டால் மறுக்க முடியாதுதான்.
இராஜராஜரின் அருகில் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டவர். சிறிது நேரத்தில் விலகிவிட்டு,
"மன்னரே உங்களின் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு நீங்கள் இன்று கேட்ட வாக்குறுதியை நினைத்து கொஞ்சம் நகைப்பாய்க் கூட இருக்கிறது. இதே போன்றதொறு வாக்குறுதியை நான் உங்களிடம் கேட்பதற்காக எத்தனை முறை முயற்சிசெய்து பின்னர் அமைதியாகியிருக்கிறேன் தெரியுமா.
எங்கே உங்கள் தமையனாரின் மேல் பாசமில்லாதவனாக, பக்தியில்லாதவனாக சித்தரிக்கப்படுவேனோ என நினைத்து எழுந்த கேள்விகளை அப்படியே உள்ளுக்குள் கட்டிவைத்திருக்கிறேன். புரியவில்லையா?
நான் உங்களிடம் எக்காரணம் கொண்டும் இராஜேந்திரனைத் தவிர்த்த ஒருவரை அடுத்த மன்னராக அரியணையில் ஏற்ற நீங்கள் நினைக்கக்கூடாது என்று உறுதிமொழி வாங்க நினைத்திருந்தேன். நீங்களே இன்று கேட்டுவிட என்னைப்போல் மகிழ்ச்சியாய் இருப்பவன் இந்த உலகத்தின் யாருமே இருக்கமுடியாது. இதனாலெல்லாம் கரிகாலக்கண்ணனின் மேல் எனக்கு பாசம் கிடையாது என்பதில்லை. இராஜேந்திரன் ஒரு கண் என்றால் கரிகாலக்கண்ணன் மற்றொரு கண்ணைப்போன்றவன்.
வீரத்திலும் விவேகத்திலும் இராஜேந்திரனை அடித்துக்கொள்ளும் ஒருவனை இந்தப் பிறவியில் நான் இன்னும் பார்க்கவில்லை. நம்மையெல்லாம், நம் சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிடப்போகிறான் இராஜேந்திரன். என் மனதை உறுத்திக் கொண்டிருந்ததெல்லாம். நியாய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் என்று எதையோ ஒன்றை சொல்லி உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தின் எங்களில் கைகளை கட்டி வைத்திருந்ததைப்போல் இப்பொழுது நடந்துவிடக்கூடாதென்று தான். அப்படியொரு சூழ்நிலை வந்திருந்தால் உங்களைக் கைது செய்துவிட்டு என் மருமகனை அரியணையில் அமரச் செய்திருப்பேன்."
வந்தியத்தேவர் சொல்லிமுடித்ததும் இராஜராஜர் வந்தியத்தேவரின் முதுகெலும்புகள் உடையும் படி கட்டிப்பிடித்துக்கொள்ள,
"என்னது என் தம்பியைக் கைது செய்வதா? அதற்கு இப்படியொரு உபசரிப்பா? என்ன நடக்கிறது சோழ தேசத்தில் என்று கேட்டவாறு குந்தவை உள்ளே நுழைய, வந்தியத்தேவர் மகிழ்ச்சி சாகரத்தில் நீந்திக்கொண்டிருந்தவர், விளையாட்டாக,
"தேவி நீ ஆள்வதற்கு நாடு கேட்டாயல்லவா? போரிட்டு வேறு நாடுகளைப் பிடித்து நிறைய ஆண்டுகள் ஆகும் வேலையது. பேசாமல் இராஜராஜரை சிறைபிடித்து விட்டு, நாமிருவரும் ஆட்சிசெய்தால் என்ன என்று நினைத்தேன், அதைப்பற்றி மன்னரிடம் ஆலோசனைக் கேட்கத்தான் சந்தோஷமாய் ஆளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அதற்குள் நீயும் வந்துவிட்டாய்."
வந்தியத்தேவர் வேடிக்கையாய் சொல்ல, சோழ வரலாற்றில் பெரும் பெயர் எடுக்கப்போகும் அந்தச் சிறுவன் வந்தியத்தேவருக்கும், இராஜராஜருக்கும் இடையில் நடந்தவற்றை அறியாதவனாய், குந்தவைதேவி வந்தியத்தேவரின் மீது காட்டிய பொய்க்கோபத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.
In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்
நட்சத்திரம் - மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்
Posted on Friday, February 17, 2006
இளங்கோவனுக்கும் கார்த்திகாயனிக்கும் பிறந்ததால் நான் இந்துவானேன், டேவிட்டிற்கும் எலிசபெத்திற்கும் பிறந்ததால் நான் கிறிஸ்துவனானேன், அன்சாரிக்கும் பேகத்திற்கும் பிறந்ததால் நான் முஸ்லீமானேன், யாருக்கும் யாருக்கும் பிறந்தால் நான் மனிதனாவேன்.
எங்கேயோ ஒருமுறை கேள்விப்பட்டு, அதன் பிறகு என்னுடைய எல்லா பேச்சுப்போட்டிகளிலும், இந்த வரிகளை நான் உணர்ச்சிப்பூர்வமாக சொல்வேன். ஆனால் பேசி ஓய்ந்து போன ஒரு நாளில் உணர்ச்சிகளை ஓரங்கட்டிவிட்டு சாதாரணமாக யோசித்த பொழுது இந்த வரிகளின் பின்னால் இருக்கும் வருத்தமும் வேதனையும் என்னை என்னவோ செய்தது.
நம்மில் பலருக்கு, ஒரு நபரை அவருடைய, ஜாதியையோ இல்லை மதத்தையோ இல்லை அவர்களுடைய செழிப்பையோ வைத்துதான் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. இதையெல்லாம் மீறி அந்த நபரை நம்மில் ஒருவனாக, ஒரு தனிப்பட்ட மனிதனாக அறிய முடிந்திருக்கிறதா? என்னால் முடிந்ததில்லை இன்றுவரை. இந்து, முஸ்லீம், கிறிஸ்டீன், என்பதைப்போல மனிதனுக்கான உருவகத்தையா இல்லை மனிதனையே தேடிக்கொண்டிருக்கிறோமா இன்று வரை.
நண்பனே!
ஆகாயத்தில் அளவற்ற சாதனைகளை
நிகழ்த்திக்காட்டினாய்
மகிழ்ச்சி!
நொடிப்பொழுதில் உலகத்தின் இரண்டு முனைகளை
இணைக்கும் வலிமையைப் பெற்றாய்
சந்தோஷம்!!
நாளை ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலும் ஒரு
செயற்கைக்கோளை பறக்கவிடுவாய்
பாராட்டுக்கள்!!!
ஆனால்
இந்த மண்மண்டலம் இருக்கட்டும்
மனிதநேயம் இருக்கட்டும்.
நமக்கு முன்னே வாழ்ந்து மறைந்தவர்கள்
விட்டுச்சென்ற சுவாசங்களெல்லாம்
இந்த மண்மண்டலத்தில் இருக்கின்றன
இருக்கட்டும்.
உன்னுடைய இந்த ஆக்கங்கள்
இந்த உலகை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்.
(இந்த கவிதை வரிகள் யாருடையது என்று நினைவில் இல்லை, அதுமட்டுமல்லாமல் கவிதை வரிகளுமே, எனது நினைவில் இருந்ததை வைத்து எழுதியிருக்கிறேன். இன்னும் அருமையாக இருக்கும் உண்மை வரிகள்.)
எனக்கும் ஒவ்வொரு புதுப்புது விஷயமாக கண்டுபிடிக்கப்படும் பொழுதும் இது மனித சமூகத்தை அழித்துவிடும் வல்லமைபெற்றதா? என்று என்னை நானே இன்றும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். மனிதகுலம் இல்லாமல் போய்விட்ட ஒரு உலகத்தில் நானோ டெக்னாலஜி வந்தென்ன, குவாண்டம் கம்ப்யூட்டர் தான் வந்தென்ன பயன் உபயோகிக்க மனிதன் வேண்டாமா???
நான் இன்னமும் அமேரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் தகர்க்கப்பட்டதை ஒரு தனிமனிதனின் உயிருக்கு இந்த உலகத்தில் மதிப்பில்லாமல் போய்விட்டதாகத்தான் கருதுகிறேன். அந்த விமானத்தை ஓட்டிச்சென்ற மனிதனுக்கு அவன் உயிரின் மீது மரியாதையில்லாமல் போனதெப்படி.
இப்படி மரியாதையில்லாமல் போனதற்கு மதங்களும் அவற்றின் நம்பிக்கைகளுமா காரணம். இன்று நீ உன் உயிரைத்துறந்தால் நாளை உனக்கான சொர்க்கம் அல்லது இப்பொழுது வாழ்ந்து வருவதை விட உயரிய வாழ்க்கை உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்று மதங்களா வழிமொழிகின்றன என்றால் நிச்சயமாக இல்லை,
பாபர் மசூதியை இடித்துத்தான்
இராமர் கோயிலைக் கட்டவேண்டுமென்று
எந்த பகவத்கீதையும் சொல்லவில்லை
தீவிரவாதம் தான் ஒரே வழி, அதன் மூலம் தான்
நம்மத்தை வாழ்விக்க முடியும் என்று
எந்த திருக்குரான் சொல்கிறது?
இல்லை வருமையில் வாடிக்கொண்டிருக்கும்
மக்களுக்கு உதவிசெய்து
உங்கள் மதத்திற்கு மாற்றுங்கள்
என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறதா?
நிச்சயமாகக் கிடையாது, இவைகளெல்லாம் மதம் பிடித்த சில மதவாதிகள் செய்வது தான். இவற்றிற்கும் எந்த மதத்திற்குமே சம்மந்தம் கிடையாது. இது என்னுடைய மறுக்கமுடியாத ஒரு நம்பிக்கை.
நான் சொல்லவந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். மனித நேயத்தைப்பற்றி உண்மையில் நான் இங்கே சொல்லவரவில்லைதான். அதைவிட முக்கியமான ஆனால் நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒன்றைப் பற்றியும். அதிலும் அரசியல் புகுந்து விளையாடுவதைப் பார்த்து வருத்தப்படுவதால் தான் இந்தப்பதிவே.
என்னைப் பொறுத்தவரை நீங்கள், சுனாமியால் வாழ்விழந்தவர்களுக்கு உதவியதையோ இல்லை இதைப்போன்ற இன்னும் நிறைய விஷயங்களி எடுத்துக்காட்டினாலும், மனிதநேயம் குறைந்துவிட்டது, உலகம் சிறியதாக சுருங்கிவிட்டாலும் மனிதனுக்குள் வந்துவிட்ட தனிமையென்பது உலகத்தை விட பெரியதாகிவிட்டது. மனிதநேயத்தை காப்பாற்ற நிறைய பேர் வரலாம், வருவார்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு மனிதநேயம் இல்லாமல் போய்விட்டதால் பாதிக்கப்பட்டது மனித இனம் மட்டுமல்ல. அவனுக்கு முன்பிருந்தே இருந்துவரும், அவனுக்கு பிறகும் இருக்கப்போவதாக நான் கருதும் விலங்கினம் கூடத்தான். இதில் நடந்து வரும் ஒரு அரசியலைத்தான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உங்களுக்கெல்லாம் மேலே உள்ள ஆளைத் தெரிந்திருக்கும். இவரைப்பற்றி மேலும் ஒரு சிறு அறிமுகம். ஆப்பிரிக்காவிற்கு பிறகு இவர் இருக்கும் ஒரே நாடு, இந்தியா தான், இந்தியாவிலும் குஜராத்தில் உள்ள, கிர் வனப்பிரதேசத்தில் மட்டும் காணக்கிடைக்கும்; இன்னும் சில ஆண்டுகள் தொடர்ச்சியாக தற்பொழுது நிகழ்வதைப் போன்றதொரு சூழ்நிலையில் இருந்தால், இல்லாமல் போய், வெறும் புத்தகத்தில் மட்டும் நீங்கள் பார்க்கக் கிடைக்கப்போகும் ஒருவர் தான் மேற்காணும் காட்டுராஜா, பூனை வம்சத்தின் மிகப்பெரியவர், வெறும் முன்னூறு தன்னைப்போன்றவர்களேயே இன்னும் தக்கவைத்துக்கொண்டுள்ள துரதிஷ்ட்டசாலி. சிங்கராஜா.
உண்மை தான், வெறும் முன்னூறு சிங்கங்கள் மட்டுமே மீதமிருக்கின்றன், அவையும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நிலையிலும் குஜராத் அரசு செய்துவரும் ஒரு விஷயத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். 1907ல் வெறும் 13 சிங்கங்களே மீதமிருந்த சூழ்நிலையில் ஜுனாகத்தின் நவாப்பால் முழுப்பாதுகாப்பு அளித்து காப்பாற்றப்பட்ட சிங்கங்கள் இன்று அப்படுயொருவர் கிடைப்பாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றன. 1412 கிமீ2 மற்றும் 558ல் ஸ்கொயர் மைல்ஸ் இடத்தில் இப்பொழுது இருக்கும் இந்த முன்னூறு சிங்கங்களும் வாழ்ந்து வருகின்றன.
தொற்றுநோய் ஒன்று பரவுவினால் ஒட்டுமொத்த சிங்க இனமே அழிந்துவிடும் நிலையில் இருப்பதை உணர்ந்த விலங்கின ஆராய்ச்சியாளர்கள், அதுமட்டுமில்லாமல் இவ்வளவு குறைந்த இடத்தில் இருப்பதால் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டே சிங்கங்கள் அழிந்துவிடும் சூழ்நிலையில் இருப்பதால் அவற்றில் சிலவற்றையோ இல்லை ஒரு பகுதியையோ மத்தியப்பிரதேசத்திலுள்ள, குனோ பாரஸ்ட் ரிசர்விற்கு மாற்றிவிடச் சொல்கிறார்கள்.
இதற்காக பல கோடி மதிப்பில் சிங்கங்களை வரவேற்பதற்காக தயார்செய்யப்பட்டு குனோ பாரஸ்ட் காத்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் இந்தியாவின் ஒரேயொரு மாநிலமாம் குஜராத்தில் மட்டுமிருக்கும் சிங்கராஜாக்களை மற்ற மாநிலத்துக்குத் தர குஜராத் அரசாங்கம் மறுத்து வருகிறது. சமீபகாலத்தில் அதன் பல்லிற்காக சுமார் 12 சிங்கங்கள் கொல்லப்பட, இந்தப் பிரச்சனை பெரிதானது. ஆனாலும் இன்னும் குஜராத் அரசு வெட்டிப்பிடிவாதம் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறது.
இன்றைக்கல்ல, நேற்றைக்கல்ல ஒரு புதிய வம்சாவழியை உருவாக்க வேண்டி சில சிங்கங்களை குஜராத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்கு மாற்றச் சொல்லி, ஒரு திட்டத்தை இந்திய வனவிலங்குகள் அமைச்சகம் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்று வரை இது செயல்படுத்தப்படவில்லை. இந்தியாவில் இது சகஜம்தானே, மனிதனின் அத்தியாவசியத்தேவையான தண்ணீரையே கொடுக்க மறுக்கும் மாநிலங்கள் இருக்கும் நிலையில் தங்களின் ஏகபோக உரிமையான சிங்கங்களை குஜராத் அரசு தரமறுப்பதில் வியப்பெதுவும் இல்லைதான். இவர்களின் தலைகளில் இயற்கையிலேயே பிறக்கும் பொழுதே மூளைக்கு பதில் மண் நிரப்பப்பட்டுவிட்டதோ என்று கேள்வி எழுகிறது.
ஆனாலும் சில தொலைக்காட்சிகளின் தொடர்ச்சியான் வற்புறுத்தலினால் தேசிய வனவிலங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் எச் ராஜா, மத்தியபிரதேச மாநிலத்து வனத்துறை அமைச்சரையும், குஜராத் மாநிலத்து வனத்துறை அமைச்சரையும் அழைத்து பேசுவதாக சொல்லியிருக்கிறார். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குடியரசுத்தலைவரிடம் தான் முறையிட முடியும் என்று வனத்துறை ஆர்வாலர்கள் சொல்கின்றனர். எனக்கென்னமோ இன்னும் கொஞ்சம் காலத்தில் சிங்கத்தை பார்பதென்பது இயலாதஒன்றாகிவிடும் என்ற பயம் இப்பொழுதே வந்துவிட்டது. அதனால் தான் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டி இப்படியொரு பதிவு.
இன்று சல்மான்கான் 1998ல் மான்வேட்டையாடியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஒரு ஆண்டுகால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கூட விலங்குகளை பாதுகாக்க விரும்பும் இந்திய அரசின் வேட்கை தெரிகிறது.
எங்கேயோ ஒருமுறை கேள்விப்பட்டு, அதன் பிறகு என்னுடைய எல்லா பேச்சுப்போட்டிகளிலும், இந்த வரிகளை நான் உணர்ச்சிப்பூர்வமாக சொல்வேன். ஆனால் பேசி ஓய்ந்து போன ஒரு நாளில் உணர்ச்சிகளை ஓரங்கட்டிவிட்டு சாதாரணமாக யோசித்த பொழுது இந்த வரிகளின் பின்னால் இருக்கும் வருத்தமும் வேதனையும் என்னை என்னவோ செய்தது.
நம்மில் பலருக்கு, ஒரு நபரை அவருடைய, ஜாதியையோ இல்லை மதத்தையோ இல்லை அவர்களுடைய செழிப்பையோ வைத்துதான் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. இதையெல்லாம் மீறி அந்த நபரை நம்மில் ஒருவனாக, ஒரு தனிப்பட்ட மனிதனாக அறிய முடிந்திருக்கிறதா? என்னால் முடிந்ததில்லை இன்றுவரை. இந்து, முஸ்லீம், கிறிஸ்டீன், என்பதைப்போல மனிதனுக்கான உருவகத்தையா இல்லை மனிதனையே தேடிக்கொண்டிருக்கிறோமா இன்று வரை.
நண்பனே!
ஆகாயத்தில் அளவற்ற சாதனைகளை
நிகழ்த்திக்காட்டினாய்
மகிழ்ச்சி!
நொடிப்பொழுதில் உலகத்தின் இரண்டு முனைகளை
இணைக்கும் வலிமையைப் பெற்றாய்
சந்தோஷம்!!
நாளை ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலும் ஒரு
செயற்கைக்கோளை பறக்கவிடுவாய்
பாராட்டுக்கள்!!!
ஆனால்
இந்த மண்மண்டலம் இருக்கட்டும்
மனிதநேயம் இருக்கட்டும்.
நமக்கு முன்னே வாழ்ந்து மறைந்தவர்கள்
விட்டுச்சென்ற சுவாசங்களெல்லாம்
இந்த மண்மண்டலத்தில் இருக்கின்றன
இருக்கட்டும்.
உன்னுடைய இந்த ஆக்கங்கள்
இந்த உலகை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்.
(இந்த கவிதை வரிகள் யாருடையது என்று நினைவில் இல்லை, அதுமட்டுமல்லாமல் கவிதை வரிகளுமே, எனது நினைவில் இருந்ததை வைத்து எழுதியிருக்கிறேன். இன்னும் அருமையாக இருக்கும் உண்மை வரிகள்.)
எனக்கும் ஒவ்வொரு புதுப்புது விஷயமாக கண்டுபிடிக்கப்படும் பொழுதும் இது மனித சமூகத்தை அழித்துவிடும் வல்லமைபெற்றதா? என்று என்னை நானே இன்றும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். மனிதகுலம் இல்லாமல் போய்விட்ட ஒரு உலகத்தில் நானோ டெக்னாலஜி வந்தென்ன, குவாண்டம் கம்ப்யூட்டர் தான் வந்தென்ன பயன் உபயோகிக்க மனிதன் வேண்டாமா???
நான் இன்னமும் அமேரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் தகர்க்கப்பட்டதை ஒரு தனிமனிதனின் உயிருக்கு இந்த உலகத்தில் மதிப்பில்லாமல் போய்விட்டதாகத்தான் கருதுகிறேன். அந்த விமானத்தை ஓட்டிச்சென்ற மனிதனுக்கு அவன் உயிரின் மீது மரியாதையில்லாமல் போனதெப்படி.
இப்படி மரியாதையில்லாமல் போனதற்கு மதங்களும் அவற்றின் நம்பிக்கைகளுமா காரணம். இன்று நீ உன் உயிரைத்துறந்தால் நாளை உனக்கான சொர்க்கம் அல்லது இப்பொழுது வாழ்ந்து வருவதை விட உயரிய வாழ்க்கை உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்று மதங்களா வழிமொழிகின்றன என்றால் நிச்சயமாக இல்லை,
பாபர் மசூதியை இடித்துத்தான்
இராமர் கோயிலைக் கட்டவேண்டுமென்று
எந்த பகவத்கீதையும் சொல்லவில்லை
தீவிரவாதம் தான் ஒரே வழி, அதன் மூலம் தான்
நம்மத்தை வாழ்விக்க முடியும் என்று
எந்த திருக்குரான் சொல்கிறது?
இல்லை வருமையில் வாடிக்கொண்டிருக்கும்
மக்களுக்கு உதவிசெய்து
உங்கள் மதத்திற்கு மாற்றுங்கள்
என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறதா?
நிச்சயமாகக் கிடையாது, இவைகளெல்லாம் மதம் பிடித்த சில மதவாதிகள் செய்வது தான். இவற்றிற்கும் எந்த மதத்திற்குமே சம்மந்தம் கிடையாது. இது என்னுடைய மறுக்கமுடியாத ஒரு நம்பிக்கை.
நான் சொல்லவந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். மனித நேயத்தைப்பற்றி உண்மையில் நான் இங்கே சொல்லவரவில்லைதான். அதைவிட முக்கியமான ஆனால் நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒன்றைப் பற்றியும். அதிலும் அரசியல் புகுந்து விளையாடுவதைப் பார்த்து வருத்தப்படுவதால் தான் இந்தப்பதிவே.
என்னைப் பொறுத்தவரை நீங்கள், சுனாமியால் வாழ்விழந்தவர்களுக்கு உதவியதையோ இல்லை இதைப்போன்ற இன்னும் நிறைய விஷயங்களி எடுத்துக்காட்டினாலும், மனிதநேயம் குறைந்துவிட்டது, உலகம் சிறியதாக சுருங்கிவிட்டாலும் மனிதனுக்குள் வந்துவிட்ட தனிமையென்பது உலகத்தை விட பெரியதாகிவிட்டது. மனிதநேயத்தை காப்பாற்ற நிறைய பேர் வரலாம், வருவார்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு மனிதநேயம் இல்லாமல் போய்விட்டதால் பாதிக்கப்பட்டது மனித இனம் மட்டுமல்ல. அவனுக்கு முன்பிருந்தே இருந்துவரும், அவனுக்கு பிறகும் இருக்கப்போவதாக நான் கருதும் விலங்கினம் கூடத்தான். இதில் நடந்து வரும் ஒரு அரசியலைத்தான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
உங்களுக்கெல்லாம் மேலே உள்ள ஆளைத் தெரிந்திருக்கும். இவரைப்பற்றி மேலும் ஒரு சிறு அறிமுகம். ஆப்பிரிக்காவிற்கு பிறகு இவர் இருக்கும் ஒரே நாடு, இந்தியா தான், இந்தியாவிலும் குஜராத்தில் உள்ள, கிர் வனப்பிரதேசத்தில் மட்டும் காணக்கிடைக்கும்; இன்னும் சில ஆண்டுகள் தொடர்ச்சியாக தற்பொழுது நிகழ்வதைப் போன்றதொரு சூழ்நிலையில் இருந்தால், இல்லாமல் போய், வெறும் புத்தகத்தில் மட்டும் நீங்கள் பார்க்கக் கிடைக்கப்போகும் ஒருவர் தான் மேற்காணும் காட்டுராஜா, பூனை வம்சத்தின் மிகப்பெரியவர், வெறும் முன்னூறு தன்னைப்போன்றவர்களேயே இன்னும் தக்கவைத்துக்கொண்டுள்ள துரதிஷ்ட்டசாலி. சிங்கராஜா.
உண்மை தான், வெறும் முன்னூறு சிங்கங்கள் மட்டுமே மீதமிருக்கின்றன், அவையும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நிலையிலும் குஜராத் அரசு செய்துவரும் ஒரு விஷயத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். 1907ல் வெறும் 13 சிங்கங்களே மீதமிருந்த சூழ்நிலையில் ஜுனாகத்தின் நவாப்பால் முழுப்பாதுகாப்பு அளித்து காப்பாற்றப்பட்ட சிங்கங்கள் இன்று அப்படுயொருவர் கிடைப்பாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றன. 1412 கிமீ2 மற்றும் 558ல் ஸ்கொயர் மைல்ஸ் இடத்தில் இப்பொழுது இருக்கும் இந்த முன்னூறு சிங்கங்களும் வாழ்ந்து வருகின்றன.
தொற்றுநோய் ஒன்று பரவுவினால் ஒட்டுமொத்த சிங்க இனமே அழிந்துவிடும் நிலையில் இருப்பதை உணர்ந்த விலங்கின ஆராய்ச்சியாளர்கள், அதுமட்டுமில்லாமல் இவ்வளவு குறைந்த இடத்தில் இருப்பதால் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டே சிங்கங்கள் அழிந்துவிடும் சூழ்நிலையில் இருப்பதால் அவற்றில் சிலவற்றையோ இல்லை ஒரு பகுதியையோ மத்தியப்பிரதேசத்திலுள்ள, குனோ பாரஸ்ட் ரிசர்விற்கு மாற்றிவிடச் சொல்கிறார்கள்.
இதற்காக பல கோடி மதிப்பில் சிங்கங்களை வரவேற்பதற்காக தயார்செய்யப்பட்டு குனோ பாரஸ்ட் காத்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் இந்தியாவின் ஒரேயொரு மாநிலமாம் குஜராத்தில் மட்டுமிருக்கும் சிங்கராஜாக்களை மற்ற மாநிலத்துக்குத் தர குஜராத் அரசாங்கம் மறுத்து வருகிறது. சமீபகாலத்தில் அதன் பல்லிற்காக சுமார் 12 சிங்கங்கள் கொல்லப்பட, இந்தப் பிரச்சனை பெரிதானது. ஆனாலும் இன்னும் குஜராத் அரசு வெட்டிப்பிடிவாதம் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறது.
இன்றைக்கல்ல, நேற்றைக்கல்ல ஒரு புதிய வம்சாவழியை உருவாக்க வேண்டி சில சிங்கங்களை குஜராத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்கு மாற்றச் சொல்லி, ஒரு திட்டத்தை இந்திய வனவிலங்குகள் அமைச்சகம் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்று வரை இது செயல்படுத்தப்படவில்லை. இந்தியாவில் இது சகஜம்தானே, மனிதனின் அத்தியாவசியத்தேவையான தண்ணீரையே கொடுக்க மறுக்கும் மாநிலங்கள் இருக்கும் நிலையில் தங்களின் ஏகபோக உரிமையான சிங்கங்களை குஜராத் அரசு தரமறுப்பதில் வியப்பெதுவும் இல்லைதான். இவர்களின் தலைகளில் இயற்கையிலேயே பிறக்கும் பொழுதே மூளைக்கு பதில் மண் நிரப்பப்பட்டுவிட்டதோ என்று கேள்வி எழுகிறது.
ஆனாலும் சில தொலைக்காட்சிகளின் தொடர்ச்சியான் வற்புறுத்தலினால் தேசிய வனவிலங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் எச் ராஜா, மத்தியபிரதேச மாநிலத்து வனத்துறை அமைச்சரையும், குஜராத் மாநிலத்து வனத்துறை அமைச்சரையும் அழைத்து பேசுவதாக சொல்லியிருக்கிறார். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குடியரசுத்தலைவரிடம் தான் முறையிட முடியும் என்று வனத்துறை ஆர்வாலர்கள் சொல்கின்றனர். எனக்கென்னமோ இன்னும் கொஞ்சம் காலத்தில் சிங்கத்தை பார்பதென்பது இயலாதஒன்றாகிவிடும் என்ற பயம் இப்பொழுதே வந்துவிட்டது. அதனால் தான் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டி இப்படியொரு பதிவு.
இன்று சல்மான்கான் 1998ல் மான்வேட்டையாடியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஒரு ஆண்டுகால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கூட விலங்குகளை பாதுகாக்க விரும்பும் இந்திய அரசின் வேட்கை தெரிகிறது.
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
வெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் மீ...
-
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!" எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்ற...
-
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...