In கவிதைகள் புகைப்படம்

ஆத்மார்த்தியின் பூனை



அமராவதியின் பூனைக்கான தேடல்
ஆத்மார்த்தியின் பூனையோடு
புனைவொன்றின் மாயயதார்த்தவாத
பக்கத்தில் முடிவுற்றது
முடிவுற்ற இடத்தில் இருந்து துவங்கிய
பெருங்கனவொன்று பெங்களூர் வீதிகளில்
கருப்பு வெள்ளை சினிமாவில் நடித்தது
என்றவாறு நகர்ந்து
தேடிவந்த ஆத்மார்த்தியின் பூனையை
மறந்து கையில் கிடைத்த
பெயரில்லாத பூனையில் சமாதானமாகிறது

Related Articles

6 comments:

  1. 'அம‌ராவ‌தியின் பூனை' சாண‌க்யாவுக்கும், 'ஆத்மார்த்தியின் பூனை' ர‌மேஷ்‍-பிரேமுக்கும் உரிய‌து என்று வைத்துப் பார்த்தால் இதில் வ‌ரும் பெய‌ரில்லாப் பூனைக்கும் ஒரு பெய‌ர் வைக்க‌வேண்டுமென‌த்தான் சொல்ல‌வேண்டியிருக்கிற‌து, அது ஒரு அடையாள‌ அர‌சிய‌லாய் நீட்சிய‌டைய‌க்கூடுமென்றாலும் :-).

    ReplyDelete
  2. Perfecto DJ.

    வைச்சிட்டாப்போச்சு.

    அகிலாவின் பூனை, நல்லாயிருக்கா?!

    ஹாஹா

    ReplyDelete
  3. ஒரு இழவும் புரியலை

    ReplyDelete
  4. டிஜே சொன்னது போல அடையாளம் தராமல் போகும் எந்த பூனையையும் நாம் பூனையாக மதிப்பதில்லை.. :((

    இந்த நிகழ்வுகளை இருப்பினை சாத்தியப்படுத்திக்கொள்ள ஏற்படும் சமரசம் எனவே தான் நான் கருதி வருகிறேன்.

    அகிலாவின் பூனை.. :))) சிரிப்பு தாங்க முடியல

    ReplyDelete
  5. சென்ஷி,

    அகிலாவின் பூனை என்பது கவிதையைப் பொறுத்தவரை மிகத் தவறான உதாரணம் தான். :( நான் எழுதிய அர்த்தத்தில் அது சரியில்லை.

    ஆனால் எனக்கு கிடைக்கும் பூனை அகிலாவினுடையாதாக இருந்தால் சந்தோஷமே! :)

    ReplyDelete
  6. //ஆனால் எனக்கு கிடைக்கும் பூனை அகிலாவினுடையாதாக இருந்தால் சந்தோஷமே! :)//

    அக்மார்க் மோகந்தாஸ் தனம் :))

    ReplyDelete

Popular Posts