In கல்யாணம் காதல் சிறுகதை

நிற்க அதற்குத் தக

வரவர சன்டிவியைப்பார்த்தாலே எரிச்சலாய் வருகிறது. அப்படியொன்றும் தொலைக்காட்சி பார்ப்பவனல்ல என்றபொழுதுதிலும். சில காலமாய் அது என் வாழ்க்கையில் உருவாக்கிய மாற்றங்களால் வந்த எரிச்சல் அது. சில சமயம் நம்முடைய தேர்வுகள் தவறாகிப்போகின்றன, என்னதான் நம்மை நாமே பெருமையாய் எண்ணிக்கொண்டாலும் நம்முடைய செயல்கள் அதை வழிமொழிவதில்லை. இப்படித்தான் போய்விட்டது கல்யாணம் செய்து கொள்ள நான் தீர்மானித்த பெண்ணைப்பற்றிய தெரிவும்.

அமேரிக்காவிலிருந்து சென்ற முறை தமிழ்நாட்டிற்கு வந்திருந்த பொழுது இந்த விடுமுறையில் திருமணம் முடித்துவிட்டுத்தான் திரும்பிச்செல்வது என ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருந்த எனக்கு முதலில் கிடைத்த பதிலே எரிச்சலடையச் செய்தது. ஏர்போர்ட்டிற்கு வந்திருந்த அக்காவிடம் ரொம்ப நேரம் ஒற்றைக்காலில் நிற்கமுடியாமல் விஷயத்தைச் சொல்ல.

“இப்ப உனக்கென்ன வயசாகுது. கொஞ்சம் பொறுத்து பண்ணிக்கிட்டா என்ன குறைஞ்சாபோயிரும். நான் இந்த சின்னவயசுல இந்தாளைக் கட்டிக்கிட்டு என்னத்தைக் கண்டேன். கொஞ்சம் விட்டிருந்தா ஐஏஎஸ் ஐபிஎஸ் படிச்சிட்டிருந்திருப்பேன். நீயும் உங்கம்மாவும் சேர்ந்து எப்புடியாவது என்னை வீட்டிலிருந்து தொரத்திட்டா போதும்னு பண்ணி வச்சிட்டீங்க. இப்பப்பாரு அதுக்குள்ளயே ஆறுமாசம் இந்த மனுஷனுக்கிட்ட சொன்னா கேட்டாத்தானே.” காரில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாவாவுக்கும் கன்னத்தில் குத்து விழுந்தது.

அவளின் பதிலில் திருப்தியாகாமல் நான் அந்தப்பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டேன். அதற்கு பிறகு வீட்டிற்கு வரும்வரையில் அவளிடம் பேசவேயில்லை. ஆனால் வீட்டிற்கு வந்ததும் நான் என்முடிவில் தீவிரமாக இருப்பதைத் தெரிந்து கொண்ட அக்காதான் முதல் வரனைப்பற்றி சொன்னாள்.

“இங்கப்பாருடா தம்பி, அவருக்கு நெருங்கின சொந்தத்தில ஒரு பொண்ணிருக்கு பேரு, அமலாவோ விமலாவோ என்னவோ சொன்னாங்க. இவரோட அத்தைப்பொண்ணு நிச்சயத்துக்கு வந்திருந்தா. நல்லா கலரா உனக்கேத்தமாதிரி இருப்பா, சரின்னு சொன்னா நான் உன் பாவாகிட்ட சொல்லி பேசச்சொல்றேன்.”

நான் அவளிடம் நேரடியாய் சரியென்று சொல்லாமல், புகைப்படம் எதுவுமிருந்தால் அனுப்பச்சொல்லு பாத்துட்டு சொல்றேன் சொன்னதும் கொஞ்சம் கோபப்பட்டவளாய். நான் அவளுக்காய் வாங்கிவந்திருந்த சென்ட் பாட்டில்களையும் அமேரிக்க சாக்லேட்டுக்களையும், போன்போட்டு வாங்கிவரச்சொல்லியிருந்த முத்துமாலையையும் வாங்கிக்கொண்டு கிளம்பினாள். அக்கா அந்தப்பக்கம் போயிருக்கமாட்டாள் அம்மா,

“என்னடா சொல்றா உங்கக்கா?”

“ஏதோ வாவாவோட சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்காம். கட்டிக்கிறியான்னு கேட்டா?”

அவ்வளவுதான் அம்மா ஆரம்பித்துவிட்டார்கள், அக்காவைப்பற்றி ஒரே குறையாய்ச்சொல்லிவிட்டு அவர்கள் பங்கிற்கு மூன்று பெண்களின் புகைப்படங்களையும் கொடுத்துவிட்டு சென்றார்கள். இதில்லாம எங்க நைனா வேற அவரு பங்குக்கு இரண்டு பொண்ணு புகைப்படம். எனக்கோ ஒன்றுமே புரியவில்லை எனக்கு இந்தவிஷயத்தில் உதவுவாள் நான் நினைத்திருந்த அக்காவும் ஒரு பெண்ணைப்பற்றிய சிபாரிசுடன் வந்திருந்தது கவலையளித்தது. அடுத்த நாள் அக்கா சொன்ன அந்தப்பெண்ணின் புகைப்படமும் வர என்னிடம் ஆறு பெண்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள்.

நான் என் மனதிற்கு சரியென்றுபட்டதாய் புகைப்படத்தின் படியும் விவரங்களின் படியும் தேர்ந்தெடுத்த பெண்ணைப்பற்றி வீட்டில் சொல்ல களேபரம் ஒன்றும் நடக்கவில்லை. இதற்கு எங்கள் வீட்டில் யாருக்கிடையிலும் ஈகோ இல்லாத காரணமே. அந்தப்பெண்ணின் பெயர் தீபிகா, அதன் பிறகு அந்தப்பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதைப்பற்றி சாதகபாதகங்ளை விவாதிக்கத் தொடங்கினார்கள்.

“தம்பி பெண்ணெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ரொம்ப சின்ன பெண்ணாயிருக்காளேடா சரிபட்டுவருமா. தர்ட் இயர் படிக்கிற பொண்ணுக்கு வயசு ரொம்ப கம்மியா இல்லடாயிருக்கும்.”

நான் பதில் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“இங்கப்பாரு இப்பயே நல்லா முடிவு பண்ணிக்க, இன்னிக்கு கலராயிருக்கா, நல்லா மதமதன்னு இருக்கான்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் பிரச்சனைன்னு வந்து நிக்கக்கூடாது. அதேமாதிரி அவசரப்படாத இன்னும் நிறைய பொண்ணுங்க பார்க்கிறதுன்னாலும் பார்க்கலாம். இந்ததடவையே கல்யாணம் பண்ணிக்கிட்டு போகணும்னு நினைக்காத.

இருபது வயசு பொண்ணுக்கு என்ன தெரிஞ்சிருக்கும்னு தெரியலை. சமைக்கத்தெரியுமா, அம்மா அப்பாவை விட்டுட்டு தனியா உன்கூட அமேரிக்காவுக்கு வருவாளான்னு தெரியலை. இவனென்னான்னா அவளைத்தான் கல்யாணம் பண்ணின்பேன்னு அடம்பிடிக்கிறான்.”

பிறகு ஒருவழியாய் எல்லோரும் சம்மதித்து ஒரு நாள் பொண்ணு பார்க்கப்போயிருந்தோம். அங்கே பாவாவுடன் வந்திருந்த மோகனா அந்தப் பெண்ணிடம் தனியாய் அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தாள். பின்னர் முடிவைச் சொல்வதாய் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்திருந்தோம். ஒருவழியாய் அந்தப்பெண்ணை அக்காவிற்கும் பிடித்திருந்தது. என்னைத் தனியாய் அழைத்துப்போய் மொட்டைமாடியில் வைத்து அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தாள்.

“இங்கப்பாரு உனக்கென்ன இப்ப அவசரம்னு தெரியலை, கேட்டாலும் சொல்லமாட்டேங்குற, நானோ அம்மாவோ உன்கிட்ட நிறைய காசுவாங்குறோம்னு நினைக்கிறியா அதுதான் பிரச்சனைன்னா சொல்லிடு நான் அம்மாகிட்ட பேசுறேன். ஏன்னா இவ்ளோ சீக்கிரமா பொண்ணுபார்த்து ஒரு கல்யாணம் நீ நிச்சயம் செய்துக்கத்தான் வேணுமா? நான் சொன்ன பொண்ணை விட்டுறு, அது உங்க வாவாவுக்காக சொன்னது. மனுஷன் உயிரைவாங்கி என்னை அந்தப்பொண்ணைப்பத்தி உன்கிட்ட சொல்லச் சொன்னார். வேற என்னத்தான் பிரச்சனை?”

நான் இந்தக்கேள்விக்கு எப்படி பதில் சொல்வதுன்னு தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். அக்கா தம்பி என்ற வரையறைகளை மீறி நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம், என் அம்மாவைவிட என்னைப்பற்றி நிறையத்தெரிந்தவள் என் அக்காதான். ஆனாலும் அவளுடைய இந்தக்கேள்விக்கு பதிலளிக்கு முடியவில்லை.

“சரி நீ சொல்ல வேணாம், ஏதோ ஒரு பிரச்சனையா இருந்துட்டு போகுது. நீ செலக்ட் பண்ணியிருக்கிற பொண்ணு ரொம்ப சின்னதுடா. அவளுக்கு ஒன்னுமேத்தெரியலை அதுவுமில்லாம ஒரே பொண்ணுங்கிறதால குழந்தை மாதிரி வளர்த்துவைச்சிருக்காங்க அவங்க வீட்டில். நீ ஏன் இவ்வளவு சின்ன பொண்ணைத்தான் கட்டிப்பேன்னு சொல்றன்னு தெரியலை. யாருக்கிட்டையாவது மனசுவிட்டு பேசு. அப்புறம் தப்பாயிருச்சுன்னா நல்லாயிருக்காதுடா தம்பி, நான் சொல்றது புரியுமுன்னு நினைக்கிறேன்.”

“இங்கப்பாரு மோனா, நீ நெனைக்கிற மாதிரி பணம் உங்களுக்கு அனுப்புறதெல்லாம் ஒரு பிரச்சனையில்லை. அந்த மாதிரியான ஆளும் நான் கிடையாதுன்னு உனக்கு நல்லாத்தெரியும். அமேரிக்கா போனதிலேர்ந்தே என்னவோ தப்பு பண்ணிடுவனோன்னு ஒரு பயம் எனக்கு அதிகமாய்ட்டே வருது. தண்ணி, தம்மைப்போலவே இந்த விஷயத்திலும் நானேதான் என்னைக்காப்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. நான் தம்மடிச்சிருந்தாலோ, தண்ணியடிச்சிருந்தாலோ நீங்க தடுத்திருப்பீங்களான்னு தெரியாது. ஆனா நான் பண்ணமாட்டேன்னு நினைச்சிறுப்பீங்க. அதேமாதிரிதான் இதுவும்.

அது சின்னப்பொண்ணுன்னு நீ சொல்றது தெரியது. வாழ்க்கையில இந்தமாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் நம்ம சைடுக்கு கொண்டு வந்திரலாம். இதுவே கொஞ்சம் வயசான பொண்ணுன்னா அவளுக்குன்னு ஒரு சூழ்நிலையை ஏற்கனவே அவமனதில் உருவாகியிருக்கும். நாம அதுக்கு போறதும் கஷ்டம் அவளை நம்ம பக்க இழுக்குறதும் கஷ்டம். அதான் அந்த முடிவை எடுத்தேன்.”

நான் சொன்னதும் சிறிதுநேரம் யோசித்துக்கொண்டிருந்தவள்.

“நான் அப்பவே நினைச்சேன் இப்படித்தானிருக்குமுன்னு, நீ தண்ணியடிச்சிருந்தாளோ, தம்மடிச்சிருந்தாளோ நாங்க தடுத்துறுக்க மாட்டோம்தான் ஆனா நம்ம வீட்டு பிள்ளைங்களுக்கு அதெல்லாம் வராதுங்ற நம்பிக்கை கொஞ்சம் மாறியிருக்கும்.

நீ நினைக்கிற மாதிரி 20 வயசு பொண்ணுங்களுக்குன்னு ஒரு உலகம் இருக்காதுன்னு நீயே கற்பனைத்தான் பண்ணிக்கணும், அதுவும் இந்தக்காலத்தில. ஆனா அந்தப்பொண்ணைப்பார்த்தா அப்படித்தெரியலை பார்ப்போம். நம்மவீட்டில் எல்லோருக்கும் சொல்றதுதான் அந்தப்பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எந்தப்பிரச்சனை வந்தாலும் பேசி தீர்த்துக்கத்தான் வேணும். அதில்லாம கண்ட கண்ட அமேரிக்க கலாச்சாரம் மாதிரி இன்னிக்கு கல்யாணம் பண்ணிக்குறேன் நாளைக்கு ரத்து பண்ணிக்கிறேன்னு வந்து நிக்கக்கூடாது.

நீ பண்ண மாட்டேன்னு தெரியும் ஆனாலும் பார்த்க்கோ. அந்தப்பொண்ணை உன்வழிக்கு கொண்டுவர்றதும் பெரிய பிரச்சனையாத்தான் இருக்கும். ஓக்கே ஆல் த பெஸ்ட் பார் யுவர் மேரிட் லைப்.” சொல்லிவிட்டு கையைக்குலுக்கியவளாய் கிளம்பிவிட்டாள்.

விடுமுறை குறைவாகவே இருந்ததால் ஆடம்பரமாய் இல்லாமல் சாதாரணமாய் கல்யாணம் செய்துகொள்வதாய் முடிவாகி நடந்து முடிந்து அமேரிக்காவிற்கு வந்தாகிவிட்டது. இங்கே வந்ததும்தான் ஆரம்பித்தது பிரச்சனை.

தமிழ்நாட்டில் இருந்தவாளயிற்றே, சன்டிவியில்லாமல் இருக்கமுடியாதேன்னு டிஷ்வாங்கித்தந்திருந்தேன். அதுவரை டிவியின் பக்கமே நான் தலைவைத்துப்பார்த்ததில்லை. எங்க பக்கத்தில் அதை டைம் கில்லிங் மெஷின்னு சொல்வாங்க. ஆனால் எனக்கும் தீபிகாவிற்கும் இடையில் இது வேறுவொறு பிரச்சனையை கிளப்பிவிட்டது.

காலையில் வணக்கம் தமிழகத்தில் வரும் மகளிருக்கான தற்காப்புக்கலை நிகழ்ச்சியை விடாமல் பார்ப்பவள் ஒருநாள் இரவு கேட்டாளே பார்க்கணும்,

“மோகன் பக்கத்தில இருக்குற கராத்தே ஸ்கூல்ல நான் சேர்ந்துக்கவா? நானும் சும்மாத்தானேயிருக்கேன் எங்கவீட்டில் கேட்டதுக்கு மாட்டேன்னு சொல்லிட்டாங்க. சின்னவயசிலேர்ந்தே இதுஒரு ஆசை. ப்ளீஸ், ப்ளீஸ் ம்னு சொல்லுங்க.”

அக்கா சொன்னது உண்மைதான் சின்னக் குழந்தைதான் அவள். கண்ணில் படும் அனைத்தையும் நோக்கி கையைத்திருப்பும் குழந்தைபோல் இப்பொழுது கராத்தே.

“இங்கப்பாரு தீபி, சும்மாயிருக்க ஒருமாதிரியிருந்துச்சுன்னா மல்டிமீடியா கோர்ஸ் சேர்த்துவிடுறேன். ரொம்ப இன்ட்ரஸ்டிங்காயிருக்கும். அதைவிட்டுட்டு கராத்தே அது இதுன்னா எப்புடிம்மா? அதுவுமில்லாம ஆம்பளைங்க இருக்குற இடத்தில் நான் இல்லாம தனியா போய்ட்டு வரணும் முடியுமா இதெல்லாம்.”

“அய்ய, இதப்பத்தித்தான் பயந்தீங்களாக்கும் இது மகளீருக்கான கராத்தே, அங்க பொண்ணுங்க மட்டும்தான் வருவாங்க, பொம்பள மாஸ்டர்தான் சொல்லித்தர்றதும். நம்ம தமிழ்நாட்டு மாமிங்க நிறையபேர் வர்றாங்க தெரியுமா? நான் கராத்தேவுக்கும் போறேன் மல்டிமீடியா கோர்ஸ்க்கும் போறேன் என்ன?”

நான் அப்பவே நினைச்சேன் இதெல்லாம் அந்த மாமிங்க வேலையாத்தான் இருக்குமுன்னு. இதுக்கெல்லாம் ஒரு அஸோஷியேஷன் வேற. அன்னிக்கு இவளை பார்டிக்கு கூட்டிட்டு போறப்பவே நினைச்சேன் இதெல்லாம் நடக்குமுன்னு. கொலுவைக்கிறேன், விளக்கு பூஜை நடத்துறேன் பேர்வழின்னு ஒரே அலம்பல் தான் நான் இருக்கிற இடத்தில், ஆனா கராத்தே அளவிற்கு போகுமுன்னு நினைக்கலை. எப்பொழுதுதான் நினைத்தேன் சின்னப்பேண்ணை மணம் செய்து கொள்ளக்கூடாதோன்னு.

“என்னங்க நீங்க இன்னும் பதிலே சொல்லலை.” கட்டிலில், கட்டிப்பிடித்துக் கொண்டு கல்யாணம் ஆன இரண்டாவது மாதத்தில் கேட்டால் வேறென்ன பதில் சொல்லமுடியும்.

“தீபி, போறதுன்னா பத்திரமா போய்ட்டுவா. இதப்பத்தி காலைல பேசலாம் என்ன.”

காலையில் முழித்துப்பார்த்தால் கராத்தேக்குரிய வெள்ளை பேண்டும் சட்டையும் போட்டுக்கிட்டு நின்றுகொண்டிருந்தாள். ஒரு மாதம் காலையில் ஆ, ஊ என்ற சப்தத்துடன் தான் என் காலை பொழுது விடிந்தது. பிறகு என்ன நினைத்தாளோ தெரியாது நான் கராத்தேவிற்கெல்லாம் போகலைன்னு சொல்லி நின்றுவிட்டாள். நானும் விட்டுச்சு சனியன்னு நினைச்சா அதான் இல்லை. அப்புறம் வாரத்தில் இரண்டு தடவை வர்ற அந்த தற்காப்புக்கலை நிகழ்ச்சியை ரெக்கார்ட் பண்ணி வைச்சிக்கிட்டு என்னை வைத்துக்கொண்டு பயிற்சி வேற.

காலைத்தூக்கி உதைக்கிறேன்னு, கையால் குத்துறேன்னு ஒரே அலப்பற, அதிலிருந்தே சன்டிவியைப் பார்த்தேலே எரிச்சல் வரத்தொடங்கியது. அதுவும் அந்தாளு மூஞ்சியைப்பார்த்தாலே பத்திக்கிட்டு வரும், கராத்தே, அக்கிடோ, ஜடோ அப்பிடின்னு சொல்லிக்கிட்டு இதற்குத்தேவை முறையான பயிற்சி சரியான குரு அப்படின்னு சொல்ல நேரா டிக்கெட் எடுத்துட்டு போய் அந்தாளை உதைக்கணும் போலயிருக்கும். ஒறு வேலை அக்கா சொன்னது தான் சரியோ அப்பிடின்னெல்லாம் நினைப்பேன்.

அடுத்த மாதத்தில் இந்த வினையும் நின்றுபோயிருந்தது. தீபி முழுகாமல் இருந்தாள் அதனால் இந்த கராத்தேவை தூக்கி குப்பையில் போட்டாகிவிட்டது. எங்கேயோ கணக்கில் நடந்துவிட்ட தவறால் கர்ப்பமாகியிருந்தாள், அவள் உடலளவில் ரொம்பவும் தளர்ந்துபோயிருந்தாள், இரண்டாம் மாதத்திலேயே முடியலைன்னு சொன்னதால் எங்களுக்கிடையேயான தாம்பத்தயம் இல்லாமல் போயிருந்தது. தினமும் சாயங்காலம் எங்கம்மாவிற்கு, அவங்கம்மாவிற்கு, எங்கக்காவிற்கு என போன்போட்டு பேசி அமேரிக்க தொலைதொடர்புத்துறைக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அடுத்த இரண்டு மாதங்கள் இப்படியே சென்றது.

“காலங்காத்தாலேயே ஆரம்பிச்சிட்டீங்களா உங்க வேலையை.”

ஒரு சனிக்கிழமை தீபிகா விழித்துப்பார்க்கும் பொழுது நான் கையில் லாப்டாப் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததால் ரொம்பவும் அலுத்துக்கொண்டவளாய் பிரச்சனையைத் தொடங்கினாள்

“ஏய் நீ பேசாதடி, எழுந்திருக்கிறா பாரு எட்டுமணிக்கு. என்னமோ ஆடி ஓடி வேலைசெஞ்ச மாதிரி. ஊட்டுல உக்காந்துக்கிட்டு தின்னு தின்னுட்டு தூங்குற, இதுல காலங்காத்தாலயே ஆரம்பிச்சிட்டிங்களான்னு கேள்வி வேற. ஆளப்பாரு, போய் காபி போடுறீ.”

அதற்காக சென்றுகொண்ருந்தவள் நான் அதிகாரமாய்க் கத்தவும் என்னை நோக்கி திரும்பி வந்து,

“இங்கபாருங்க திங்கறேன் கிங்கறேன்னெல்லாம் பேசினீங்க, அவ்வளவுதான் நடக்குறதே வேற, இந்த மூஞ்சிக்கு வேலைக்கு போற பெண்டாட்டி கேக்குதாக்கும் எல்லாம் இது போதும். இன்னிக்கு காலையிலேயே எதுக்கு நீங்க அடிபோடுறீங்கன்னு எனக்கு நல்லாத்தெரியும். இந்த விளையாட்டல்லாம் வேற யார்க்கிட்டையாவது வச்சுக்கோங்க. இன்னிக்கு பூரா உங்கக்கிட்டேர்ந்து சத்தமே வரக்கூடாது ஆமாம் சொல்லிட்டேன்.” சொல்லியபடி சமையல்கட்டிற்கு சென்றாள்.

நான் வேண்டுமென்றே அவளை சீண்டிக்கொண்டிருந்தேன்.

“ஏய் இந்தாடீ, பாஸ்வேர்ட் மாத்தினியா இதுக்கு.” லேப்டாப் உள்ளே நுழைய அனுமதிக்காது குழப்பமாய் இருந்தது.

“ஆமாம் நான் தான் மாத்தினேன், நீங்க தப்பான படத்தையெல்லாம் எனக்கு முன்னாடியே பார்த்துக்கிட்டிருந்தா நல்லாயிருக்கா. அதான் மாத்தினேன்.” உள்ளேயிருந்தே சப்தம் கொடுத்தாள்.

இதுவும் என் சீண்டல்களில் ஒன்றுதான், அவளுக்கும் நன்றாய்த்தெரியும் அப்படிப்பட்ட படம் ஒன்று அந்த லேப்டாப்பில் இல்லாதது. ஆனால் வேண்டுமென்றே விளையாடிக்கொண்டிருக்கிறாள்.

“அதெல்லாம் சரி, என் பாஸ்வேர்ட் உனக்கெப்பிடி தெரியும்.” நான் கேட்க சமையல்கட்டிலிருந்து வெளியே வந்தவள்.

“பெரிய தங்கமலை ரகசியம், அவபேரு தானே வைச்சிருந்தீங்க. சக்காளத்தி சிறுக்கி. எனக்கு உங்க மேட்டர் எல்லாந்தெரியும். உங்கம்மாகிட்ட தான் இன்னும் சொல்லலை. நேத்திக்கு மாதிரி இன்னைக்கும் எதாவது பிரச்சனை பண்ணீங்க உங்கம்மாகிட்டையும் சொல்லிடுவேன்.” அவள் சிரித்துக்கொண்டே சொல்ல,

“இங்கப்பாரு அவளைப்பத்தி தப்பாப் பேசின அப்புறம் நடக்கிறதே வேற. நீதான் முடியாதுன்னு சொல்லிட்டல்ல, அதோட நிறுத்திக்க. என் பர்ஸனல் விஷயத்திலெல்லாம் தலையிடாத.” நான் கத்தினேன்.

“அதான் தெரியுமே உங்க குடும்பத்தைப்பத்தி, யாரு ஒரு பெண்டாட்டியோட நிறுத்தியிருக்கீங்க, அந்த ரத்தம்தானே உங்ககிட்டையும் ஓடுது.”

“ஏய் நீ ரொம்ப அதிகமாப்போற, இந்த விஷயத்தில் எங்க குடும்பத்தையெல்லாம் ஏன் இழுக்குற. அப்படியேப்பாத்தாலும் எங்கப்பாவுக்கு ஒரு பொண்டாட்டிதான்.”

இல்லாத ஒருத்தியைப் பற்றி நான் இருப்பதாய்ச் சொல்ல, நம்பாத அவளும் நம்புவதாய் நடிக்க நாடகமாடிக் கொண்டிருந்தோம். பலசமயம் எனக்குள் இந்தக்கேள்வி எழும் ஏன் இந்த நாடகமென்று ஆனால் எங்களுக்கிடையில் தாம்பத்யம் இல்லாத குறையை இதைப்போன்ற ஊடல்களால் நாங்கள் சரிசெய்து கொள்கிறோம் எனத்தோன்றியதால் நானும் அப்படியே தொடர்ந்தேன். அவள் சொல்வதும் உண்மைதான் எங்கள் பரம்பரையில் என் தந்தையைத்தவிர அனைவருக்குமே ஒன்றோ இல்லை அதற்கு மேற்ப்பட்ட சின்னவீடுகளோ செட்டப்புக்களோ இருந்தது. ஆனால் நான் என் தந்தைவழியைப் பின்பற்றி சுந்தரசோழரைப்போல் ஏகபத்தினிவிரதனாய் இருந்து வருகிறேன்.

சிறிது நேரம் என்னிடமிருந்து சத்தமே சமையல் அறையிலிருந்து வெளியில் வந்துப்பார்த்தவள். நான் விண்டோஸிற்குள் நுழைந்து விட்டது தெரிந்ததும்,

“எப்பிடி உள்ளே வந்தீங்க?”

“போடீ பாஸ்வேர்ட் மாத்துறாளாம், பாஸ்வேர்ட். கம்ப்யூட்டரைப்பத்தி ஒரு ஆறுமாசமாத்தெரியுமா உனக்கு இல்லை மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரு வருஷமா? எனக்கெல்லாம் சாப்பாடு போடுறதே இதுதான். போ போய் காப்பி போடுற வேலையைப்பார்.” சிரித்துக்கொண்டே நான் சொல்ல, செல்லமாய்க் கோபப்பட்டவளாய் நறுக்கென்று தலையில் கொட்டியவள்,

“என்ன எழவையோ பாத்துத்தொலைங்க, யாரு வேணாங்கிறா, என்னைத் தொடறதுன்னா குளிச்சிட்டு தொடுங்க அசிங்கம் அசிங்கம்.” சொல்லிவிட்டு நகரப்பார்த்தவளை பிடித்து நிறுத்தினேன்.

“இப்பச் சொல்லு ஓக்கேன்னு ஒரு தடவையென்ன பத்துதடவை குளிச்சிட்டு வர்றேன். ஓக்கேவா?”

திரும்பிப்பார்த்து முறைத்தவள் ஒன்றும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் காபி டபராவைக் கொண்டுவந்து கொடுத்தவள் சற்றுகூட நிற்காமல் சமையலறைக்குச் சென்றுவிட்டாள். நான் திரும்பத்திரும்ப அன்றைக்கு வம்பிழுத்துக்கொண்டேயிருந்ததால், சற்றே கோபமான அவள்,

“இங்கப்பாருங்க என்னால முடியலை அவ்வளவுதான் உங்களுக்கு வேணும்னா உங்க குடும்பத்தை மாதிரி இங்க ஒரு கூத்தியாலை வைச்சிக்கோங்க நானொன்னும் கேக்கலை.” சொல்லிவிட்டு அங்கிருந்த சேரில் அசதியாய் உட்கார்ந்துவிட்டாள். நானும் இதுதான் சமயமென்று, சட்டை பேண்டை போட்டுக்கொண்டு வெளியே கிளம்பிப் போய்விட்டேன்.

காலையில் பத்துமணிக்கு போனவன் இரவு எட்டுமணிக்குத்தான் திரும்பிவந்தேன். தீபிகாவை நேரில் பார்க்கும் துணிவு இல்லாததால் நேராய் படுக்கையறைக்கு போக,

“நில்லுங்க சாப்டீங்களா?”
“இல்லை சாப்பிடலை, நீ சாப்டியா இன்னிக்கு என்ன சமையல் மதியம் என்ன சாப்பிட்ட?” நான் கேட்க பதில் சொல்லாதவள் நேராய் போய் சாப்பாடு போட்டுக்கொண்டு வந்து தட்டை நீட்டியவளிடம்.

“நான் எங்கப்போயிருந்தேன்னு நீ கேட்கவேயில்லை?”

“அதான் தெரியுமே. நீங்க யாரோ ஒரு எழுத்தாளரோட கலந்துரையாடலுக்கு இன்னிக்கு போகப்போறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீங்களாக்கேட்டா குறைஞ்சு போயிருவீங்க பாருங்க அதான என்கிட்ட சொல்லாமக்கூட போய்ட்டீங்க.” லேசாய் கண்ணில் நீர்க்கட்டியது. அவளை சமாதானம் செய்ய பக்கத்தில் இழுத்தேன். அம்மான்னு அலறியபடி வயிற்றைப்பிடித்துக்கொண்டு அவள் கத்தத்தொடங்கினாள். நான் வெளிறிப்போனேன். அடுத்த பத்துநிமிடம் எனக்கு உலகமே மறந்து போயிருந்தது, அவள் கதறுவதை பார்க்க சகிக்காமல் எதுவும் செய்ய முடியா என் இயலாமையை நினைத்து அழத்தொடங்க, அவள் சிரிக்கத்தொடங்கினாள்.

“காலங்காத்தால என்னை தனியா விட்டுட்டு போனீங்கள்ல அதுக்கு பனீஷ்மெண்ட் இது.”

அவள் சொல்லிவிட்டு சிரிக்க, எனக்கு நன்றாய் இழுத்து கன்னத்தில் ஒன்றுவிடவேண்டுமென்று நினைத்தேன். இருப்பது அமேரிக்கா பொண்ணு ஏதோ கோபத்தில் 911 அழுத்திட்டான்னா ஒருநாள் உள்ள உக்காந்திருக்கணும். அதனால் பக்கத்தில் இழுத்து இறுக்க அணைத்துக்கொண்டேன்.

“தம்பி உனக்கு எல்லா விஷயத்திலேயுமே அவசரம் தான், ரொம்ப தப்புடா நீ பண்றது. குழந்தை பெத்துக்குற வயசாடா அவளுக்கு எவ்வளவோ சொல்லியும் கேட்காம இவளத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இந்த சின்னவயசில் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு பிரி பிளான்கூட இல்லாம இப்ப குழந்தைவேற. பேசாம வேலையை மாத்திக்கிட்டு தமிழ்நாடு பக்கம் வந்துசேறு. இவளையும் சொல்லணும் இவனுக்குத்தான் தெரியலைன்னா உனக்குமா. ஏதோ என் புருஷன் அப்பிராணியா இருக்குறதால என்னால உன் பிரசவத்துக்கு அமேரிக்கா வரமுடிஞ்சுது இல்லைன்னா? இதோட நிறுத்திக்கோடா ஏற்கனவே இந்தியாவோட ஜனத்தொகை ஜாஸ்தியாயிருக்கு.” அக்கா இங்கேவந்தும் அட்வைஸ் மழை கொட்ட. நான்,

“குழந்தை அமேரிக்காவில் பிறந்ததால அமேரிக்க சிட்டிஸன். அதனால இன்னொன்னு இந்தியா போய் இந்தியாவுக்காக பெத்துக்கலாம்.” சொல்ல மோனாவும் தீபிகாவும் என்னைத் துரத்தினார்கள்.

Related Articles

17 comments:

  1. Nalla irunthathu!
    Ore romanctic stories-ah irukku..
    Innum bachelor-ah?

    ReplyDelete
  2. என்னாது இன்னும் பாச்சுலராவா??? எனக்கு ரொம்ப கம்மியாத்தான் வயசாகுது. hehe :-)

    ReplyDelete
  3. //நான் அப்பவே நினைச்சேன் இதெல்லாம் அந்த மாமிங்க வேலையாத்தான் இருக்குமுன்னு. இதுக்கெல்லாம் ஒரு அஸோஷியேஷன் வேற. அன்னிக்கு இவளை பார்டிக்கு கூட்டிட்டு போறப்பவே நினைச்சேன் இதெல்லாம் நடக்குமுன்னு. கொலுவைக்கிறேன், விளக்கு பூஜை நடத்துறேன் பேர்வழின்னு ஒரே அலம்பல் தான்// என்ன ஜாக்கேட் பிட்டை உட்டுட்டீங்க! அதென்ன நுனிப்புல்லு மேயறவங்களேடயே டக்கரு.

    மேலே தங்கம் சொன்னமாதிரி, ரொமாண்டிக்கா எழுத, ஒன்னு சொந்த அனுபவம் வேணும், இல்ல யாரையோ பக்கத்திலருந்து ரொம்ப கவனமா நோட்டம் விடணும்,எப்படி அங்கே?

    ReplyDelete
  4. யதார்த்தம்... சில்லென்ற அனுபவம்... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. உதயகுமார் இதை ஒரு வேலையாகவே செய்றீங்கன்னு நினைக்கிறேன். ஏற்கனவே ஒருமுறை இதனால் பிரச்சனையானது அதனால் இந்தவிளையாட்டுக்கு நான் வரலை.

    கதையோட நதி ரிஷி மூலம் இனி சொல்றதாயில்லை. ஹிஹி.

    டிஜே நன்றி.

    ReplyDelete
  6. //இதை ஒரு வேலையாகவே செய்றீங்கன்னு நினைக்கிறேன்// :))))))))))

    ஆனால், உதயகுமார் கேட்ட கேள்வி தான் எனக்கும் ;)

    ReplyDelete
  7. //கதையோட நதி ரிஷி மூலம் இனி சொல்றதாயில்லை. ஹிஹி.//

    ஏற்கனவே ஒருமுறை சொன்னதா ஞாபகம்:-)..

    மிக இயல்பாக அன்னோயமான எழுத்து நடை. வாழ்த்துகள் மோகன்.


    கீழே இருப்பது நதிமூலத்தை அறிய வசதியாக இருக்கும். தன்னைத்தானே கதை எழுதி கொள்ளும் போது இது போல ஏற்பட்டுவிட வாய்ப்ப்ய் இருக்கிறது. :-)

    // அங்கே பாவாவுடன் வந்திருந்த ''மோகனா'' அந்தப் பெண்ணிடம் தனியாய் அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தாள். //
    //குழந்தை அமேரிக்காவில் பிறந்ததால அமேரிக்க சிட்டிஸன். அதனால இன்னொன்னு இந்தியா போய் இந்தியாவுக்காக பெத்துக்கலாம்.” சொல்ல ''மோனாவும்'' தீபிகாவும் என்னைத் துரத்தினார்கள்//

    ReplyDelete
  8. நல்லா இருக்குது ..கதை!!

    ReplyDelete
  9. kalakala irunthathuu mohandass..

    ReplyDelete
  10. sema flow... suvarasiyama vivarichu irukeenga.. didnt feel like stopping in between :-)

    ReplyDelete
  11. நல்ல கதை....அருமையாக இருக்கிறது...

    ஆனால் ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்குது.... அப்படியா....

    ReplyDelete
  12. /// ஏன்னா இவ்ளோ சீக்கிரமா பொண்ணுபார்த்து ஒரு கல்யாணம் நீ நிச்சயம் செய்துக்கத்தான் வேணுமா? நான் சொன்ன பொண்ணை விட்டுறு, அது உங்க வாவாவுக்காக சொன்னது. மனுஷன் உயிரைவாங்கி என்னை அந்தப்பொண்ணைப்பத்தி உன்கிட்ட சொல்லச் சொன்னார். வேற என்னத்தான் பிரச்சனை?”///

    நான் கூட இதாத்தான் இருக்குமென்று ஒன்றை யூகித்திருந்தேன். மாற்றி விட்டீர்கள்.

    இயல்பான நடையில், நல்ல கதை.

    ReplyDelete
  13. வெட்டிப்பயல், யாத்ரீகன், சின்னப்பையன் வெயிலான் - நன்றிகள்.

    சின்னைப்பையன் - ஆமான் இது 2007ல் வெளியில் விட்டது தான். இது மீள்பதிவு.

    ReplyDelete
  14. நிற்க. அதற்குத்தக கற்க.

    ReplyDelete
  15. "கற்க கசடற" வாழ்நாள் முழுமைக்கும் தான் என்று நினைக்கிறேன் சுந்தர். அதேபோல் எல்லோருக்கும்.

    ReplyDelete

Popular Posts