Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

In கவிதைகள்

கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதில்லை வானம்


நின்றவாக்கில் வானைத்தொடும்
என்னுடைய முயற்சிகள்
தோல்வியைத் தழுவுகின்றன
எகிறிக் குதிக்காததால் மட்டுமல்ல
வானமே இல்லையென்றான பிறகு
தொட்டுவிட முடியுமென்றோ
அது ஒரு நம்பிக்கையென்றோ
கற்பனைக்கதைகளை மனம் விரும்பாததால்

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கவிதைகள்

Dishonest



என் தோல்விக்கான படுகுழியைத்
தோண்டி நானே படுத்துக் கொள்கிறேன்
சிரிக்கும் காலத்தை புறக்கணிக்கும் யத்தனிப்பு
கழட்டியெறியும் ஒன்று
முகமூடியாகத்தான் இருக்கவேண்டுமென்று நகர்கிறேன்
முகமாக இருந்துவிடக்கூடாதென்ற பயத்துடன்
அவிழ்வதெது என்றறிவுடன்
எல்லாம் போலியாகிவிட்ட பொழுதொன்றில்
இல்லாமல் போனது முகமாகிவிடவே விரும்புகிறேன்
முகமூடிகளும் இல்லாமல் போய்விடும்
வியாபாரத் தந்திரத்துடன்
பொருந்தாமல் தடுமாறிய முகமூடியொன்று
முகமில்லாத பொருத்தத்தில் பொருந்தியதை
மொத்தமாய்ப் புறக்கணிக்கிறேன்
நேர்மையற்றவனாய்

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In கவிதைகள் சிறுகதை

காதலாய் யாசிக்கிறேன்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

புணர்ச்சிமகிழ்தல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்

சட்டென்று விழுந்துவிடும் வார்த்தை வெளிப்பட்டுவிடக்கூடாதென்பதற்காக கட்டப்பட்டிருக்கும் அதற்கான கயிற்றிலிருந்து எப்படி அறுபட்டுக்கொண்டு வந்துவிடுகிறது என்று ஆச்சர்யமாகயிருந்தது. வார்த்தைகளுக்கு உயிர் இருந்துவிட்டால் சாதாரணமாய் நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும் தவறி விழுந்துவிட்டதாய் பிரயாசைப்பட்டு நிரூபிக்கத்துடிக்கும் மனதிற்கு வார்த்தையின் கட்டை லேசாய் அவிழ்த்துவிட்டிருந்தது தெரிந்தே இருக்கிறது. ஆனால் அது ஒரு அபூர்வமான காரியம், எல்லா சமயங்களிலும் மனதிற்கு சுயத்தை இழக்கும் சக்தி வந்துவிடுவதில்லை அதிலும் விழப்போகும் வார்த்தை தோல்வியை மட்டுமே கொடுக்கும் என்று நிச்சயமாய்த் தெரிந்த பின்னரும் கட்டவிழுத்துவிட மனதிற்கு முடிவதில்லை. எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வெளிப்படுவதால் தான் விழுந்துவிட்ட அந்த வார்த்தை எதிராளியை சீண்டி துன்புறுத்துகிறது என்று நினைத்தேன். விழுவதற்குத்தான் நேரம் காலம் அமைய வேண்டியிருக்கிறதே தவிர உருவாவதற்கு இல்லை, சட்டென்று உருவாகும் எண்ணம் வெகு சுலபமாய் தனக்கான வார்த்தைகளை சேகரித்துக் கொண்டு மனதில் கருக்கொள்கிறது பின்னர் காலம் வார்த்தைகளின் வெவ்வேறான சேர்க்கைகளில் கூடி உச்சமடைந்து தனக்கான சொற்றொடரை உருவாக்கிவிட்டு அமைதியாகிவிடுகிறது, மனம் வார்த்தைகளைக் கட்டியிருக்கும் கயிற்றை மெல்லியதாய் அவிழ்க்க ஒற்றை வார்த்தையிலோ, வார்த்தைச் சேர்க்கையிலோ உருவான எண்ணத்தை கொட்டிக் கவிழ்த்துவிட்டு அடங்கிப் போய்விடுகிறது.

"உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?"

உரையாடல்கள், காதலின் உன்னதமான போதை. காதலிக்கத் தொடங்கிய பின் மனம் உரையாடல்களாகத் தான் சிந்திக்கத் தொடங்குகிறது. நடந்து முடிந்ததாய், கொண்டிருப்பதாய், போவதாய் உரையாடல்களின் நிஜம், நிகழ், கனவிலேயே காதல் தன்னை வளர்த்துக் கொள்கிறது. நேற்றைய உரையாடல்களின் மீது படுத்துக் கொண்டு நாளைய உரையாடல்களைக் கற்பனை செய்கிறது மனம், தொடர்ச்சியாய் கற்பனையில் உருப்போட்டுக் கொண்டேயிருப்பதால் உரையாடல்களில் புதிதான விஷயம் உண்மையில் நடப்பதில்லை. நேரடியான கருத்தாய் இல்லாமல் தான் உருவாக்க நினைக்கும், விவாதிக்க நினைக்கும் விஷயத்தை உரையாடலில் செம்புலப்பெயல்நீராய் கலக்கிறது மனம். அகிலாவுடனான உரையாடலில் அந்தக் கேள்வி வரவேண்டும் வரும் என்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளுடனும் சென்றாலும், கேள்வி, உண்மையின் வீரியத்தில் நடிப்பின் சாகத்தை நகர்த்திப் பார்க்கிறது.

"ஆமாம்"

------------------------------------------------------------------------------

March 1, 2008

2:34 PM me: இன்னிக்கு பீச்சிற்குப் போலாமா?
aeswari: ம்ஹூம் வேண்டாம்
me: ஏன்?
2:36 PM ஏன்னு கேட்டேன்?
2:45 PM உனக்கு என்னையெல்லாம் காதலிக்கிறதே பெரிசின்னு நினைப்பு
இல்லையா?
aeswari: உன்னைக் காதலிக்கிறேன்னு எப்ப சொன்னேன்!
நீதான் அப்படி சொல்லிக்கிட்டிருக்கிற
2:50 PM r u thr?
2:52 PM ???
2:56 PM Okay I am leaving bye

காதல் உயிரை அலைக்கழிக்கும் ரகசியம் தெரிந்தும் திரும்பவும் விழுவதும் எழுவதுமாய் எத்தனையோ முறை பெண்களின் மீதான மையலில் நிலை தடுமாறியிருந்தால் பித்தம் கொள்ள வைத்தது நீ மட்டும் தான். ஒற்றை ரோஜாப்பூவை கைகளில் ஏந்திக் கொள்வதில் வரும் பெருமையாய் நினைத்து காதல் விளையாடிருக்கிறேன், பெருமைக்கான தகுதியை பெற்றுத்தருவது காதலின் வேலையில்லை என்று உணரவைத்தவள் நீ. கைகோர்த்து கடற்கரையில் நடப்பதோ, முதுகோடு மார் உரசும் பயணங்களோ காதல் இல்லை என்ற உன் தத்துவங்கள் கேட்கும் பொழுதும், நீ அருகில் இல்லாமல் இருக்கும் பொழுதும் நன்றாகத்தான் இருக்கின்றன. உள்ளத்தின் மேல் மட்டும் காதல் என்பது கட்டமைக்கப்பட்ட பொய்யாகத்தான் இருக்கமுடியும் என்று ஒப்புக்கொள்ளும் உன்னால், உன் உடல் மேல் எனக்கிருப்பது காமம் அல்ல அதுவும் காதலே என்று ஏன் புரியவில்லை.

March 3, 2008

4.11 PM raja: hi
me: hi dude :)
raja: நான் அகிலம்
4:13 PM me: சொல்லு
raja: call me
me: சரி

“சொல்லு என்ன விஷயம்”
எங்களுக்கிடையில் அப்படியொரு உரையாடல் நடக்கவேயில்லாதது போல் அவளால் பேசமுடிந்திருந்தது, “என் தங்கச்சிக்கு புனேல ஒரு இன்டர்வியூ இருக்கு! யாராவது கூட்டிக்கிட்டுப்போகணும்”
“ஏன் சுத்தி வளைக்குற நேரா என்னைக் கூட்டிக்கிட்டு போகச்சொல்லேன்”
கனத்த மௌனம் ஒற்றை வார்த்தையில் முடிந்தது “சரி” தொலைபேசியை அணைத்தேன்.

March 12, 2008

10:15 AM aeswari: thanks
me: சரி
11:36 AM aeswari: un status message kEvalamaa irukku!
me: அப்படியா?
aeswari: illaiyaa
me: மாத்தணுங்கிறியா?
aeswari: athu un ishtam
11.40 AM me: //நெஞ்சமெல்லாம் காதல் - தேகம் எல்லாம் காமம்
- உண்மை சொன்னால் என்னை - நேசிப்பாயா//
இது எப்படியிருக்கு?
11.45 AM me: இருக்கியா?
aeswari: hmm
innikku freeya irukkiyaa?
me: இருக்கேன் என்ன விஷயம்
aeswari: oru vishayam pesanum
me: வரவா?
aeswari: hmm
4.30 PM me: கிளம்பிக்கிட்டிருக்கேன்
4.32 PM aeswari: hmm

உன்னைவிட்டு இரண்டடி விலகியிருக்கும் சமயங்களில் ‘ஏன் நடிக்கிற இயல்பாய் இரேன்!’ என்றாய் இயல்பை இயல்பாய் இருக்கமுடியாமல் தான் விலகியிருந்தேன் என்பது உனக்குத் தெரியாததா! வேண்டுமென்றே சாலையோர சுடிதாரை கவனிக்கும் உச்சுக்கொட்டும் ஜொள்ளுவடிக்கும் என் சீண்டல்களைப் பொருட்படுத்தாமல் விலகியிருக்க முடிந்திருக்கிறது உன்னால், கவனிக்காதது போலவே கண்டுகொள்ளாதது போலவோ இருந்துவிடும் உனக்கு நான் முந்தைய இரவு ஒத்திகை பார்த்த உரையாடல்கள் கனவோடு கரைந்து போவது தெரிந்திருக்கப் போவதில்லை.

“முத தடவை நான் உன்கிட்ட காதல் சொன்னப்ப எப்படியிருந்தது”

எங்களுக்கிடையில் அமர்ந்திருந்த மௌனத்தை விரட்டும் ஆயுதமாய் கேள்வியொன்றைப் பொறுத்தி எய்த அம்பு அவளை அவ்வளவு சீண்டியதாகத் தெரியவில்லை. என் கேள்விக்கான அவள் பதிலைப் பற்றிய கற்பனைகளைச் சிதைத்து இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கவே கூடாது என்று நினைக்க வைக்கும் அளவிற்கு பதில் இருந்தது.

“கோபமா வந்ததுச்சு, கால்ல போட்டிருக்கிறதைக் கழட்டி ஒன்னு வைக்கணும்னு நினைச்சேன்”
இதைச் சொல்லத்தான் அத்தனை யோசித்தாயா? இல்லை இப்படி நீ போடும் நாடகங்களை நான் நம்பிவிடுவதாய் நினைக்கிறாயா?

“அப்ப நீ என்னைக் காதலிக்கவே இல்லேங்கிறியா?”

எனக்காக இல்லாவிட்டாலும் அவள் தங்கையை பத்திரமாய் புனே அழைத்துச் சென்று வந்ததால் நன்றிக்கடனாய் கடற்கரையில் என் அருகில் அமர்ந்திருந்தாள். அருகில் என்றால் நானாய் உருவாக்கிய இரண்டடி தாண்டி சுண்டல்காரன் இடைபுகுந்து கூவிச் செல்லும் தொலைவில்.

“இல்லை”

“அப்ப நமக்குள்ள இப்ப நடக்கிறது”

இதற்கு அவளுடன் சாட்டிங்கில் உரையாடிவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு மௌனம் அவள் மேல் பரவியிருந்தது. வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கலாம், கொட்டுவதற்கான அமிலத்தை அவளது உதடுகள் உருவாக்கிக் கொண்டிருக்கலாம், அங்கிருந்து விலகினால் வீட்டிற்குச் செல்ல எந்த பேருந்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்...

“நீ கன்ஸிடரேஷனில் இருக்கேங்கிறது தான் அதுக்கு அர்த்தம்.” அவள் அன்று வேதாளத்தை மட்டுமல்ல தன்னுடைய தேவதையையும் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். நான் வேதாளத்தை கழட்டிவிடவில்லையே?

“இன்னும் எத்தனை பேர் இருக்காங்க உன் கன்ஸிடரேஷனில்...?” தேவையில்லாததுதான், தவிர்த்திருக்கக் கூடியது தான், ஆனால் எங்கள் உறவில் முகமூடி ஒன்று என் முகத்தில் மாட்டப்பட்டு விடக்கூடாதென்பதில் நான் மிகவும் தெளிவாகயிருந்தேன். அவளை அத்தனை பாதிக்கவில்லை என் கேள்வி,

“நீ டைரி எழுதுவதானே?”

பேச்சை மாற்ற விரும்பினாளா தெரியாது, என் கேள்வி அவளுக்கு அயர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.

“சாரி!”

“அது பரவாயில்லை சொல்லு...?”

“ஏன் கேக்குற?” என் பதில் கேள்விக்கு அவள் பதில் சொல்லப்போவதில்லை என்பதாய் அவள், நான் அவளிடம் கேள்வியொன்றையே கேட்காதது போல் உட்கார்ந்திருந்தாள். “எழுதுவேன்”

“எனக்கு உன் டைரி வேணும். எல்லா வருஷ டைரியும் இருந்தா கொடு இல்லாட்டி கடைசி மூணு வருஷ டைரி வேணும்.”

என்ன தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாய், என்னிடம் நேரடியாய் கிடைக்காமல் அப்படியென்ன உனக்கு என் டைரியில் கிடைத்துவிடப் போகிறது.

“எதுக்கு?”

“உன்னைக் காதலிக்க” அத்தனை இனிப்பான ஒன்றை இத்தனை கசப்புணர்ச்சியுடன் சொல்ல எங்கே படித்தாய், I love you இந்த மூன்று வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று எத்தனையோ நாள் நினைத்திருக்கிறேன் ஆனால் இன்று உன்னைவிடவும் உன் வாய் உச்சரிக்கப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்கும் உன் கை தட்டப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகமாய் இருக்கிறது என்பது எனக்கே கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்.

10.10.2007
அகிலாவை வழியில் வைத்துப் பார்த்தேன், நல்லவேளை திருப்பிக்கொண்டு போகாமல் நின்று பேசினாள் ஹாஹா.

அவளும் அவளோட ட்ரெஸ்ஸிங் சென்ஸும் லூஸா ஒரு சுடிதார் போட்டுக்கொண்டால் அவள் உடலைப்பற்றிய உணர்வில்லாமல் போய்விடுமா?

சுடிதாரைத்தாண்டியும் அவள் உடலை உணர்ந்து கொண்டிருந்தேன், டைட் ஜீன்ஸும் டீஷர்ட்டும் அவளுக்கு எவ்வளவு பொறுத்தமாக இருக்கும் என்ற கற்பனையுடன். ஹாஹா.

March 15, 2008 மாலை என் அலுவலக கஃப்டேரியாவில்

“என்ன இது” முகத்தில் வீசியெறிந்த டைரி பக்கத்தை இன்னொருமுறை படித்துப் பார்த்துவிட்டு.

“ஒட்டுமொத்த டைரியில் உனக்கு இதுதான் தெரிஞ்சிதா?” மெல்லக் கேட்டேன்.
மௌனம், பேரர் கொண்டு வந்து வைத்த ஜூஸ் முழுவதையும் நான் குடித்து முடிக்கும் வரை மௌனம். அவளுடைய வார்த்தைகளை விட மௌனம் என்னை அலைக்கழிக்கக்கூடியது அவளுக்கும் அது தெரிந்து தானிருக்கும்.

“எனக்கு பயமாய் இருக்கு, என் உடம்பு மேல இருக்கிற க்ரேஸ் போனதுக்கு அப்புறம் நீ என்ன செய்வேன்னு நினைச்சா... இன்னிக்கு என் மேல் இருக்கிற க்ரேஸ் எல்லாம் நான் மறைச்சு வைச்சிருக்கிறதால - அப்படி நீ நினைக்கிறதால - நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஹாய் பாய்னு பழகியிருந்தா என்கிட்டயும் ‘மையல்’ தான் இருந்துச்சு ‘பித்தம்’ இல்லன்னு நீ போய்டுவ வேற ஒருத்திய பார்த்துக்கிட்டு இல்லையா?”

ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இத்தனை பாடுபடுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை அவளுடைய மௌனத்தை நான் எடுத்துக் கொண்டேன்,

“என் உடம்பு மேல உனக்கு இப்ப இருக்கிற க்ரேஸை என்னால் வாழ்நாள் முழுக்க காப்பாத்திக்க முடியாது. அது யாராலையும் முடியும்னு நினைக்கலை.” எத்தனை நாட்களாய் இந்த விஷயத்தை மனதில் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை.

“என் தங்கச்சி கூடயிருந்தப்பையும் நீ இப்படித்தானே நினைச்சிருப்ப?”

“அகிலா இது ஓவர், நீ பேசுறது அநாகரிகமாயிருக்கு.”

“ஆமாவா இல்லையா சொல்லு?”

“இல்லை, இப்ப என்ன தான்டி உன் பிரச்சனை, டைரியிலேர்ந்து ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு வந்து ஏன் என்னை டார்ச்சர் பண்ணுற. மீதி பக்கமெல்லாம் உன் மனசைப் பத்தி கவலைப்பட்டிருக்கேங்கிறதாலையா? இல்லை இந்த ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு என்னால் டைரியை உன்கிட்ட கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” நாங்கள் இருப்பது காஃபிடேரியா என்ற உணர்வில் மெதுவாய்க் கத்தினேன்.

“உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?” வைரமுத்துவின் வரிகளை உணரும் பொழுது இருந்த துள்ளல் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது இல்லை.

“ஆமாம்” நான் சொல்லி முடித்திருக்கவில்லை அதுவரை குடிக்கப்படாமல் இருந்த அவள் பக்கத்து ஜூஸ் முழுவதும் என்மேல் ஊற்றிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.

------------------------------------------------------------------------------

இந்தப் பதிலை நான் சொல்லியிருப்பதற்கான காரணங்கள் உண்மையில் கண்டுபிடிக்கப்பட முடியாததாய் இருந்தது. ஆயிரம் முறை அரங்கேற்றிப் பார்த்த வார்த்தைகள் காணாமல் போயிருந்த சமயம் எங்கிருந்தோ இந்த வார்த்தை அதன் உண்மைக்கான உறுதியில் கட்டவிழ்க்கப்பட்ட குதிரையாய் தடைகளைத்தாண்டி கடைசியில் வென்று நின்ற பொழுது விழுந்த அந்தச் சொல் தரும் அர்த்தம் விளங்கிக் கொள்ள முடிந்தது. வெறும் உண்மை ஒப்பனையில்லாத நடிகையைப் போல நம்பமுடியாததாயும் ஒப்புக்கொள்ள முடியாததாயும் இருக்கும். மேலே இரண்டு வார்த்தைகள் கீழே இரண்டு வார்த்தைகள் நடுவில் கொஞ்சம் பொய் கலந்து வந்திருந்தால் அந்த 'ஆமாம்' எனக்கு நல்லதொரு பொழுதை பரிசளித்திருக்களாம். ஆனால் மொட்டையாக வந்து குதித்த உண்மை, அதற்கான வீர்யத்துடன் வெளிப்பட்டு அகிலாவை சட்டென்று சீண்டியிருந்தது. வார்த்தையின் அர்த்தத்தை விடவும் அது சொல்லப்பட்டுவிட்டது தான் அகிலாவிற்கு கோபத்தை வரவழைத்திருக்கவேண்டும் என்று நினைத்தேன். மூன்று வருட பழக்கத்தில் முகமூடிகளுக்கான தேவை அருகியிருந்தாலும் வார்த்தைகளுக்கான முகமூடி நிராகரிக்க முடியாததாய் இருந்தது.அவளுக்கும் அது ஆச்சர்யமானதாகத்தான் இருந்திருக்க முடியும் எல்லைகளுக்குள்ளான வார்த்தைச் சீண்டல்களை நான் புறக்கணித்தது, கணித் திரையில் காண்பதற்கும் நேரில் கேட்பதற்குமான வித்தியாசம் தான் என் மீது ஜூஸாகக் கவிழ்ந்திருந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவள் கரம் பிடித்து காற்றாடியதில்லை
போட்டியொன்றின் பூரணமாய் முத்தம் பரிமாறியதில்லை
உருவாக்கிக் கலைக்கும் பிம்பம் கடந்து வேறு பேசியதில்லை
ஆனாலும் நாங்கள் காதலித்தோம்
முகமூடிகள் இளகின நாளொன்றில்
காமம் சொல்லியதால் மீண்டும் காதல் யாசிக்கிறேன்
காமம் மறந்த / மறைத்த காதல்
தரமுடியாத சோகம் அவள்
கொட்டிக்கவிழ்த்து வைத்த 'ஜூஸ் டம்ளரில்'
பிரதிபலிக்கிறது
யாசித்தலின் குரூரம் இல்லாமையை
உரத்துச் சொல்ல மூக்கின் வழி
ஒழுகும் 'ஜூஸின்' துளியை
இருத்தலியத்தை ருசித்தபடி
சுவைத்துப் பார்க்கிறேன்.

உரையாடலின் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தை நேரில் பார்த்துக் கொண்டிருக்காத பொழுது கிடைக்கும் தருணம் அவகாசம் மற்றதில் இல்லையாகையால் அவளால் முடிந்த எதிர்ப்பு.

அவள் நகர்ந்து சென்ற நிமிடத்தில் என்னைச் சுற்றி நின்றவர்கள் பார்த்தப் பார்வையில் நான் மிதக்கத் தொடங்கினேன், காதல் எப்பொழுதும் தரையிறங்க அனுமதிப்பதில்லை என்றாலும் எங்களுடையது இன்னமும் காதலாக பரிணாமம் அடையாமல் குரங்கிலேயே நின்று கொண்டிருந்தது. பொது இடங்களில் தனக்காய் கட்டமைத்துக் கொண்ட எல்லைகளுடன் அவள், தனி இடங்களில் எங்கள் சந்திப்பு நடந்ததேயில்லை, அவளுக்காய் இல்லாவிட்டாலும் என் கொள்கைகளுக்காய் அவள் கட்டமைத்துக் கொண்டிருந்த எல்லைக்கு வெளியில் இருந்தே சண்டை செய்து வந்த நான். என் சீண்டல்கள் இணையத்தில் எல்லை மீறத் தொடங்கியிருந்ததும் அப்பொழுது தான், சுவருடன் பேசவும் உரையாடவும் கிண்டல் செய்யவும் எல்லை மீறவும் நான் இன்னமும் கற்றுக் கொள்ளாததால் ஒரு பக்கம் மட்டும் வேகமாக வீசி வீசி சோர்வடைந்த பொழுதுகளில் இது நிச்சயமாய் வேறானது. சுவரொன்று ஆப்பிள் ஜூஸை தலையில் கவிழ்ப்பது, உணர்ச்சிகளற்ற சுவரு என்பது கூட தவறான உவமை தான், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தத் தெரிந்த சுவர். தன் சுவற்றில் இருந்து வெளிப்பட்டு அவள் சுயம் எட்டிப்பார்த்த பொழுது அது, என் வெற்றியைக் கொண்டாட இன்னொரு ஆப்பிள் ஜூஸ் கேட்க தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தான் ஹோட்டல் சிப்பந்திக்கு என் சந்தோஷம் புரிந்திருக்க நியாயமில்லை தான்.

நாங்கள் ஒரே அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து ஏற்பட்ட பழக்கம் காதலாகி நான் காதல் சொல்ல ஏற்கவும் மறுக்கவும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த முதல் வருடத்திலேயே அவளைப் பற்றிய என் புரிதல்களுக்கு கை கால் முளைக்கத் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கான அவள் பதில் அறிவு சம்மந்தப்பட்டதாக இல்லாமல் மனது சம்மந்தப்பட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும் அவள் என்னை ஏமாற்றவில்லை. தான் செய்யப்போவது என்னவென்று அவள் அறிந்திருந்தாள் நிச்சயம் அதைச் செய்திருக்க மாட்டாள் தான், கோபத்தை வெளிப்படுத்துவது தோல்விக்குச் சமானம் தான் எப்பொழுதுமே! அவளுக்கும் அது தெரிந்துதானிருந்தது. அந்தச் சீண்டலை அவள் கண்டு கொள்ளாமல் போயிருந்தால் நான் தோற்றுத்தான் போயிருப்பேன், பெரும்பாலும் அது அப்படித்தான் நடக்கும். அன்று அவளை வென்று விட்டதாக நான் நினைத்ததற்கும் அதுதான் காரணம். இன்னமுமே கூட அவள் என் மீது ஆப்பிள் ஜூஸ் ஊற்றியது எனக்கு உதவும் என்றே நினைத்தேன்.

அன்றிரவு அவளிடம் இருந்து செல்லிடைபேசியில் அழைப்பு வந்தது, நான் காலையில் இருந்து அதை அணைத்து வைத்திருந்தது அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது.

"ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்."

நான் பதில் சொல்லவில்லை.

------------------------------------------------------------------------------

"சொல்லுங்க சார்! ஞாயித்துக் கிழமை எங்கப் போயிருந்தீங்க?"

அகிலா கம்பெனி நம்பருக்கே கால் செய்திருந்தாள்.

"ஆசிப் அண்ணாச்சி வீட்டுக் கல்யாணத்துக் போயிருந்தேன் என்னயிப்ப?"

"உங்க டப்பா மொபைல் போன் எங்க சார்?"

"இன்னும் காசு கட்டலை அதனால வொர்க் ஆகலை".

"ஏன் சார் ஒரு வார்த்தை அதைச் சொல்லிட்டுப் போறதுக்கென்ன? உங்கக்காகிட்ட என் ப்ரண்டொருத்தனை வைச்சி பேசி விஷயம் வாங்கினேன். தெரியுமா?"

நான் மௌனமாயிருந்தேன்.

"பதில் சொல்லுங்க சார்." கத்தினாள் மறுமுனையில்

"ஏண்டி உயிரை வாங்குற, உங்கிட்ட சொன்ன ஞாபகமாயிருந்துச்சு அதான்."

கேட்டவள் சிரித்தாள்.

"ஏண்டி சிரிக்கிற!"

அவள் அவசரப்படாமல் மெதுவாய்ச் சிரித்துமுடித்துவிட்டு "உங்கக்கிட்ட 'ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்'ன்னு சொல்லி போன் பேசி ஒரு ஆறு ஏழு மாசமிருக்குமான்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சி."

எனக்கும் கொஞ்சம் சிரிப்பாய்த் தான் இருந்தது, நாங்கள் அந்த உரையாடலுக்குப் பிறகு அடித்த லூட்டி. நான் சிரித்தால் அதையே காரணமாய்க் காட்டி இன்னமும் வம்பிழுப்பாள் என்பதால் வெறுமனே "ம்ம்ம்" என்றேன். ஆனால் மனதிற்குள் அவள் பேசியது அப்படியே ஓடியது.

"என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க மோகன், காலையில் அப்படி நடந்துக்கிட்டது என் தப்பு தான், Sorry. என்கிட்டேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியலை, மனசு விட்டுப் பேசணும்னா? மனசுக்குள்ளே இருக்கிறதை எல்லாம் வெளிய கொட்டிடணும்னா என்னால அது முடியும்னு தோணலை. உங்களை காதலிக்கலைன்னு சொல்லலை அதே மாதிரி காதலிக்கிறேன்னும் சொல்ல முடியலை சொல்லப்போனா காதல்னா என்னான்னே ஒரே குழப்பமாயிருக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளைப்பத்தி நினைக்கிறப்ப.

நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நான் பயப்படலைன்னு சொல்ல முடியாது, அந்த பயம் எனக்கு இருக்கத்தான் செய்யுது. போனா இத்தோட போகட்டுமேன்னு தான் நான் இப்படியிருக்கிறதா கூட சிலசமயம் நினைச்சிருக்கேன், போய்ட்டீங்கன்னா அப்படியே துடைச்செறிஞ்சிட்டு போய்ட முடியும்னு இப்ப தோணலைன்னாலும் இது தேவலைன்னு நினைக்கத்தோணுது. இந்த பயம் போகாம என்னால காதலிக்க முடியாதுன்னே நினைக்கிறேன், ஆனால் விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நினைக்கிறதுக்கு என்கிட்ட எந்த ரீஸனும் கிடையாது. நான் ரொம்ப குழப்பமாயிருக்கேன்.

சில சமயம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறதா நினைச்சி பேசாம எதையாவது சொல்லி உங்களை என்ன வெறுக்குற மாதிரி செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். மூணு வருஷம் கழிச்சி இதெல்லாம் ரொம்ப ட்ரமேட்டிக்கா இருக்கும்னும் நீங்க நம்பமாட்டீங்கன்னும் தெரியிறதால என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்க கேக்குற மாதிரி என் கேர்ள் ப்ரண்ட்ங்க கிட்ட பழகிற மாதிரி என்னால் உங்கக்கிட்ட பழக முடியலை, எங்கையோ ஒரு இடத்தில் என்னத்தையோ நான் மிஸ் பண்ணுறேன். என்னான்னு தான் தெரியலை.

சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம், என்ன உங்களுக்கு என் உடம்பப் பார்க்கணும் ஆசை தீர அனுபவிக்கணும் அவ்வளவுதானே போய்த் தொலையுதுன்னு அதைச் செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனால் கடைசியில் நீங்களும் இவ்வளவு தானான்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதே சமயத்தில் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் இதில் விருப்பம் இருக்கு எனக்கு இல்லவேயில்லை சாமியார் நானுன்னு ஃப்ரூப் பண்ண நினைக்கிறனான்னு சந்தேகமாவும் இருக்கு. எனக்கு செக்ஸ் ஃபீலிங் இல்லாம இல்ல, எனக்கும் அதைப் பற்றி கனவு கற்பனை கவிதை எல்லாம் இருக்கு சொல்லப்போனா பாட்டுக் கூட இருக்கு உங்கள மாதிரி..."

சிரித்தாள் நான் எதுவும் சொல்லவில்லை.

"...ஆனா சீக்கிரமே ஒரு முடிவு எடுக்கணும்னு இன்னிக்கு காலைல தான் நினைச்சேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்க, ஒன்னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி தொறந்து காண்பிச்சிட்டு போய்ட்றதுன்னு இருக்கேன். ஆறுமாசம் ஒரு வருஷம் காதலிக்கிறவங்க எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன், மூணு வருஷமா உங்களைக் காதலிச்சும் காயப்போட்டேங்கிறப்ப எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. மூணு வருஷம் பொறுத்தியே இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ பொறுத்திட்டா நான் முழுசா உனக்குத்தானேன்னு தான் சொல்லத் தோணுது. ஆனா அது என்ன ஃபார்மாலிட்டி தாலி கட்டுறது கூட படுத்துக்கிறதுக்கு லைசன்ஸான்னும் தோணுது. மூணு வருஷம் காதலிச்ச உங்களை விட தாலி பெரிய விஷயமா படலை எனக்கு.

என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியலை, இப்படி என்னைத் தடுமாற வைச்சு என்னை உபயோகிச்சிக்கப் பார்க்கிறீங்களான்னும் சில சமயம் தோணுது. என்ன எழவோ நான் எதுக்கும் தயாராய்ட்டேன், உங்களுக்கு விருப்பம்னா நாளைக்கே கூட நீங்க என்னை எடுத்துக்கலாம். இப்ப எதுவும் பேசாதீங்க எதார்ந்திருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க. நான் எதுக்கும் தயார். நான் போனை வைக்கிறேன்."

சிரிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் முயன்றாலும் முடியாமல் சிரித்துவிட, எதிர்ப்பக்கத்தில் அவள் போனைத் துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.

எல்லாம் ஒரு கடிதத்தில் முடிந்து போயிருந்தது அவள் தொலைபேசிய மறுநாள் இந்தக் கடிதத்தை அவளுக்கு அனுப்பியிருந்தேன். எங்கள் ஊடல் பின்னர் உணரப்பட்டு புணர்தலால் காமமான அந்நிகழ்ச்சிக்கு அடையாளமாய் இந்தக் கடிதம் மீந்து நின்றது.

------------------------------------------------------------------------------

அன்புள்ள அகிலாவிற்கு,

நேற்றைக்கு நீ பேசிய பொழுது என்னன்னமோ பேசிய பொழுது பதில் சொல்ல என்னிடம் எதுவுமில்லை, நீ பதில் பேசாதே என்பதால் மட்டும் நான் பேசாமலிருக்கவில்லை.

காமக் கொடூரனாய் நான் உன்னிடம் நடந்து கொண்டேனா தெரியாது, காதலாயும் யாசித்தலாயும் வந்திருந்தாலும் கேட்டதென்னமோ காமம் என்ற வகையில் உன்னைக் காயப்படுத்தி விட்டதாயே நினைக்கிறேன். அதற்காகவே அதற்காக வருத்தமும் படுகிறேன். உன்னிடம் இந்த மூன்று வருடங்களில் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற எண்ணத்தைக் கூட வரவழைக்கவில்லை என்பதிலும் வருத்தமே!

அந்த அளவிற்கு கூட நம்பிக்கை வராத பொழுது நீ என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு முற்றிலும் சம்மதமே. இந்த அளவிற்கு கூட நான் நம்பிக்கை வைக்காத ஆட்களிடம் பழகுவதில்லை என்பதும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கடைசியாய் என்னன்னமோ சொன்னாய் 'வேணும்னா நாளைக்கே எடுத்துக்கோ' அப்படின்னெல்லாம். கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.

வருகிறேன்

காதலுடன்
அன்புடன்
மோகன்தாஸ்

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In ஓவியம் கவிதைகள்

கடந்தகாலத்தின் செருப்புக்கள்

நிகழ்காலமென்னும் உலகில் நுழைய
கடந்தகாலத்தின் செருப்புக்களின்
தேவையில்லை
அப்படியே கேள்விகளும்
எளிமையானதாய் மென்மையாய்
வன்மமானதாய் சுழலின்தன்மையானதாய்
விடைகளில்லாததாய்
புரிந்துகொள்ளமுடியாததாய்
புறக்கணிப்பின் பொல்லாத பொறுக்கித்தனத்தில்
பொசுங்கிப் போகின்றன அத்தனையும்
சுமந்தபடி செல்கிறேன்
புதுச்செருப்புடனான பயணத்தில்
கழட்டிப்போட்ட செருப்புக்களின்
எண்ணிக்கையைப் பற்றிய கேள்விகள்
எழுப்பும் புன்முறுவலை சுமந்தபடி







Read More

Share Tweet Pin It +1

1 Comments

In கவிதைகள் ரமேஷ் - பிரேம்

பேரழகிகளின் தேசம்

இதை இங்கேயே சொல்லிவிடுகிறேன். இந்தக் கவிதையை எழுதியது ரமேஷ் பிரேம் தான் நானில்லை நானில்லை. இது பேரழகிகளின் தேசம் என்ற ரமேஷ் - பிரேமின் கவிதைத் தொகுப்பில் கடைசியாக உள்ள கவிதை. புத்தக வெளியீடு மருதா.

டைப்பி இங்கே போட்டது மட்டும் தான் நான்.

பேரழகிகளின் தேசம்

பாயிரம்

வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்
திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவரில்
எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிட
ஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்
பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்
பகலில் கறுப்பாகவும் இரவில் வெள்ளையாகவும்
நிறம்மாறித் தோன்றும் இவ்வழகிகளின்
வனப்பைப் பற்றி மட்டுமே பாடப்போகிறேன்
பச்சையமற்ற இத்தேசத்தின் வெட்டவெளியில் நின்று
வெளிச்சத்தைக் குடித்தும் இருட்டைத் தின்றும்
உயிர்வாழும் இறப்பறியாப் பேரழகிகளின்
உடல் வாசனயால் கவரப்பட்டு
எனது படகை உப்புக் கரையிலேயே விட்டுவிட்டு
வெட்டவெளியாலான இத்தேசத்தின் ஒரே உயிரியான
பேரழகிகளிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.

வேறு

என் தியானம் நிலைகொண்ட மையப்புள்ளியென சமைந்த
உனது தொடைகள் சந்திக்கும் மாடத்து அகலின்
திரிமுனையில் சுடர் பொருத்த எனது நாவின்
தணல்கொண்டு வருகிறேன்

இதுவுமது

சுருள் கேசக் கோதுகளை நீக்கிவிட்டு
முற்றிய பலாச்சுலை உதடுகளை மெல்லப் பிளந்து
வாய்கொண்டு தின்று எழும் போதையின் நீரோட்டத்தில்
மிதந்து செல்லும் ஆளற்றப் படகெனவே என் மனம்

பூமியிலோடும் எல்லா நதிகளும் சந்திக்கும்
ஒரு புள்ளியைப் போல உனது உடம்பிலோடும்
எல்லா நரம்புகளையும் சேர்த்திழுத்து
முனைகளை முடிச்சிட்டு அறைந்த ஆணி ஒன்று
உனது மதனபீடத்தில்
அந்த ஆணியை எனது முன்பற்களால் மெல்லக்
கவ்வி இழுக்கும்போது
உனது உயிரின் இறுதித் துளி உன்னைவிட்டுச் சிந்துகிறது
ஒரு துளி எல்லையற்ற வெளியில்
வளர்ந்து வளர்ந்து பெரும் நீர்க் கோளகையாய்த் திரண்டு
பூமியை மோத இறங்கிக்கொண்டிருக்கிறது

வேறு

கொங்கைகளனைத்தும் குழந்தைகளுக்கே என்று
வேதகாலத்தில் நான் ஒருமுறை சொன்னேன்

இதுவுமது

ஓங்கி வளர்ந்த இரண்டு முலைகளுக்கு நடுவே
ஓடும் வியர்வைப் பாட்டையில் மிதக்கிறது
ஆளற்ற படகு - அதிலே
சிட்டுக்குருவிகள் வந்தடையும் உனது
யோனியின் வாடையை ஞாபகம்கொண்டு துய்க்கும்
எனது மனம் படுத்துக்கிடக்கிறது

இந்தத் தேசம் கொங்கைகளல் ஆந்து
கொங்கைகளைத் தின்று உயிர்வாழச் சபிக்கப்பட்டவன் நான்
கொங்களைக் கடைந்து பொறியெழுப்பி
கூந்தலைக் கொளுத்தித் தீ வளர்த்து
எனது இரவு உள்ளங்கை அளவே வெளிச்சம்கொண்டு கழிகிறது

வேறு

யோனி புணர்வதற்கல்ல
பிறப்பதற்கு - என்று வேதநூலில் நான்
சொல்லியிருந்த வாக்கியத்தை
காலத்தில் என்றோ யாரோ உருவியெடுத்து
வேள்வித் தீயிலிட்டுவிட்டார்கள்

தீயணைந்த கரியிலிருந்துப் பிறந்த ஒரு பேரழகியின் வம்சத்தாலும்
வெண்சாம்பலிலிருந்த்ப் பிறந்த ஒரு பேரழகியின் வம்சத்தாலும்
நிறைந்த இந்தத் தேசம்
மனிதகாலத்திற்கு முன்பு நீருக்கடியிலிருந்து
அந்த நீர்நிலையைத் தாங்கும் மண் கிண்ணமாக
இந்த்ப் பூமி இருந்தது
அதை மெய்ப்பிக்கிறேன் கேள்.

இதுவுமது

யோனிச் சுரப்பை வாய்க்கொண்டுப் பருக
ஒரு மிடறு நீர்
எனது வாய்க்குள் அலையடிக்கும் கடல்
அதன் உப்புக் கரையோரத்தில் எனது படகு தனித்திருக்கிறது
நீரலைகளென அசையும் அவளது
தொடைகளுக்கிடையே திரளும் சுழலில்
எனது ஒற்றைத் துடுப்பு சிக்கிச்சுழன்று
அடிமண்ணில் புதைகிறது செங்குத்தாய்

கிளையோடு பொருத்தி அம்பு தைத்தப் பிறவையென
றெக்கைத் துடிக்கிறது யோனி
வெட்டவெளி தேசமெங்கிலும் இந்த
ஒற்றைப் பறவையின் ஓலத்தைக் கொண்டு வீசுகிறது காற்று
மனிதகாலத்துக்கு முந்தி நீருக்கடியில் இருந்த மணல்வெளி
கிளர்ந்து புகைகிறது
கூந்தலால் போர்த்திய கருணைக்குள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறேன்.

வேறு

நிலவைப் போன்ற பிருஷ்டங்களைக் கொண்ட அவர்கள்
சாயும்கால ஒளியில் கொஞ்சம் கொஞ்சமாக
தொடுவானத்திலிருந்து
மந்தையைப் போலப் புலப்படத் தொடங்கினர்
தண்டவடம் கீழிறங்கி முடியும் சறுக்கலின்
வெயில்படாத பால் நிறச் சருமத்தில்
என் பெயரைப் பச்சைக் குத்தியிருந்த ஒருத்தியைக் கண்டேன்
என்னையறியாமலேயே என் குலதெய்வத்தின்
பெயரால் அவனை விளித்தேன்
திரும்பிப் பார்த்த அவள் கூட்டத்திலிருந்து விலகி
குறுஞ்சிரிப்போடு என்னை நோக்கி வந்தாள்
ஒற்றை முலையோடு
வந்தவளை வாறி மடியிலிருத்தி
முலையிழந்து பொருக்காடும் காயத் தடத்தைத் தொட்டுத்தடவி
வரல் சுட்டுப் பதறி
உயிர்த்துடித்து உதறி எடுத்த விரலை
எனது வாய் எச்சிலில் நனத்தேன்
உறிந்த பொருக்கினூடே உள்ளே
கணன்ற நெருப்பைக் கண்டேன்.

கொங்கை நெருப்பி எனது மடிவிட்டு எழுந்து
குறுஞ்சிரிப்போடு நடந்காள்

இதுவுமது
வியர்வை கசியும் பேரழகியின் அக்குள்கள் நக்கினேன்
அங்கே மணங்கமழும் புற்கள் முளைத்திருக்க
ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் அவற்றை மேய்ந்தேன்
என் முகத்தை அவள் அள்ளியெடுப்பது
முத்தமிடத்தானே என நெகிழ்ந்துகொடுக்க
என் குரல்வளையை ஆடெனக் கருதி கவ்விக்
குருதி குடித்தபோதுதான் தெரிந்தது
இவள் எனது ஊரைச் சேர்ந்த துஷ்டதேவதை என்பது

உதிர்ந்த கூந்தல் இழைகளைக்கொண்டு திரிந்த கயிறால்
பிணைந்த எனது படகை
தொடுவானத்திற்கு அப்பாலிருந்து இழுத்தபடி
முலைகள் குலுங்கிச் சிரிக்க ஓடிவந்தார்கள்
படகில் ஒருத்தி மல்லாந்து படுத்துக்கொண்டு
உச்சிச் சூரியனைப் புணர்ந்துகொண்டிருந்தாள்

நான் அவர்கள் முன்நின்று எனது படகைத்
தரும்படி வேண்டினேன்
அவர்களில் ஒருத்தி பதிலுக்கு
தாங்கள் எனக்கு வழங்கிய போகத்தையெல்லாம்
திரும்பிக் கேட்டாள்
எல்லோரும் சிரித்தார்கள்
பாலைவெளி ஆதி ஞாபகம்கொண்டு அலை நடித்தது

படகில் சூரியனைப் புணர்ந்தபடி ஒருத்தி
நெருப்பாக்கிக் கொண்டிருந்தாள்
படகு பற்றிப் புகையத் தொடங்கியது
பேரழகிகள் எல்லோரும் குலவையிட்டார்கள்

வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்
திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவற்றில்
எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிட
ஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்
பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்
பகலில் சுறுசுறுப்பாகவும் இரவில் வெள்ளையாகவும்
நிறம்மாறித் தோன்றும் இவ்வழகிகளின்
வனப்பைப் பற்றி மட்டுமே பாடப்போகிறேன்
பச்சையமற்ற இத்தேசத்தின் வெட்டவெளியில் நின்று
வெளிச்சத்தைக் குடித்தும் இருட்டைத் தின்றும்
உயிர்வாழும் இறப்பறியாப் பேரழகிகளின்
உடல் வாசனையால் கவரப்பட்டு
எனது படகை உப்புக் கரையிலேயே விட்டுவிட்டு
வெட்டவெளியான இத்தேசத்தின் ஒரே உயிரியான
பேரழகிகளிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.


----------------------------

இதற்கு முன்னால் செய்த சில ரமேஷ் - பிரேம் காப்பிகள்.

தாமதமாக வந்துசேரும் அறிவு
கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும்

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In கவிதைகள் புகைப்படம்

ஆத்மார்த்தியின் பூனை



அமராவதியின் பூனைக்கான தேடல்
ஆத்மார்த்தியின் பூனையோடு
புனைவொன்றின் மாயயதார்த்தவாத
பக்கத்தில் முடிவுற்றது
முடிவுற்ற இடத்தில் இருந்து துவங்கிய
பெருங்கனவொன்று பெங்களூர் வீதிகளில்
கருப்பு வெள்ளை சினிமாவில் நடித்தது
என்றவாறு நகர்ந்து
தேடிவந்த ஆத்மார்த்தியின் பூனையை
மறந்து கையில் கிடைத்த
பெயரில்லாத பூனையில் சமாதானமாகிறது

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In கவிதைகள் புகைப்படம்

யாசித்தலின் குரூரம்

அவள் கரம் பிடித்து காற்றாடியதில்லை
போட்டியொன்றின் பூரணமாய் முத்தம் பரிமாறியதில்லை
உருவாக்கிக் கலைக்கும் பிம்பம் கடந்து வேறு பேசியதில்லை
ஆனாலும் நாங்கள் காதலித்தோம்
முகமூடிகள் இளகின நாளொன்றில்
காமம் சொல்லியதால் மீண்டும் காதல் யாசிக்கிறேன்
காமம் மறந்த / மறைத்த காதல்
தரமுடியாத சோகம் அவள்
கொட்டிக்கவிழ்த்து வைத்த 'ஜூஸ் டம்ளரில்'
பிரதிபலிக்கிறது
யாசித்தலின் குரூரம் இல்லாமையை
உரத்துச் சொல்ல மூக்கின் வழி
ஒழுகும் 'ஜூஸின்' துளியை
இருத்தலியத்தை ருசித்தபடி
சுவைத்துப் பார்க்கிறேன்.

------------------------------------------------

இதனுடன் தொடர்புடைய ஒரு பதிவு:

Mohandoss's new status message - பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Only ஜல்லிஸ் கவிதைகள் புகைப்படம்

கிணற்றுத் தவளைகளின் கதறலைப் புறக்கணியுங்கள்

ரம்யமான முன்பனிக்கால மாலைப்பொழுதின்
கலைந்து செல்லும் மேகங்கள்
இழைத்துக் கோர்த்த வண்ணங்களுக்காகவாவது
நீ அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம்
உன் புறக்கணிப்பை விடவும்
வண்ணக் குழப்பங்களுக்கான என் வருத்தம்
உன் வேதனையை புரியவைக்கிறது

மொஸார்ட் இசைத்துக் களைத்த
பியானோவின் காதலைப் போல்
உனக்கான என் காத்திருத்தல்
புறக்கணித்தல்களுக்கு அப்பாற்பட்டது
உன் கோபம்
கிழித்தெறிந்த கவிதை, நாட்குறிப்புக்களோடு
எனக்கும் சம்மதமே
நாவலொன்றின் குறிப்புக்களோடு
உன் காதல்
சிறுகதைகளை நானும் புறக்கணிக்கின்றேன்

-------------------------------

இருத்தலியத்தின் பெயரைச் சொல்லி அடிக்கும் ஜல்லியாகட்டும், பொழுது போகாமல் எழுதும் சினிமா விமர்சனமாகட்டும் என் பதிவின் தொடர்ச்சி எனக்குப் பிடித்தேயிருக்கிறது. பக்கத்தில் சந்தித்த நண்பரொவர் சொன்ன 'உங்கள் பதிவின் தொடர்ச்சி உங்களை அடுத்த தளத்திற்கு நகர்த்தும்' என்பதில் எனக்கு அத்தனை நம்பிக்கையில்லை. என்னைப் பொறுத்தவரை அடுத்த தளம் என்பது தொடர்ச்சியான ஒன்று, மாற்றம் என்கிற வார்த்தையைப் போல, ஒரே தளத்தில் யாராலும் நிற்க முடியாது. நின்றாலும் கூடவே நிற்பதனாலேயே அது அடுத்த தளமாகிவிடுகிறது. பதிவின் தொடர்ச்சியை அடுத்த தளத்திற்கான முயற்சியாக இல்லாமல் இயல்பாகவே செய்து வர நினைக்கிறேன் அது அடுத்த தளத்திற்கான முயற்சியாகவே இருந்தாலும். விகடன் குமுதம் கல்கி மீதிருந்த காதலைப் போல் காலச்சுவடு மீதும் உயிர்மை மீதும் காதல் இருந்திருக்கிறது இருக்கிறது. அடுத்த தளமாக தேர்ந்தெடுத்த அத்தனையும் ஒரு சமயம் நகர்ந்துவிட/அவிழ்ந்து விட தளத்திற்கான தேடல் மட்டும் இருக்கிறது. என்றாலும் ambition என்கிற வார்த்தை கிளிஷே மட்டுமல்லாமல் ரொம்பவும் பக்வாஸானது என்று மட்டும் இப்போது நினைக்கிறேன்.

-----------------------------------

காவிரிக் கரையிலிருந்து ஸ்ரீரங்கக் கோபுரத்தையும், மலைக்கோட்டையையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சமீபத்தில் திருச்சி சென்றிருந்த பொழுது இதற்காகவே ட்ரைபாட் வேறு எடுத்துக் கொண்டு போயிருந்தேன். KPN Travels காரைக்குடி ஸ்லீப்பர் 4.00 மணிக்கெல்லாம் கெத்தா மத்தியப் பேருந்து நிலையத்தில் நிறுத்தினது, டீ மட்டும் ஒன்றைக் குடித்துவிட்டு மனசு முழுவதும் பறக்க, பஸ்ஸில் காவிரி பாலம் வந்து சேர்ந்தேன். அன்று சமயபுரம் தேர் என்பதால் சாரி சாரியாக மக்கள் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள் வெளியூரில் இருந்து வந்த சிலர் பாலத்தில் பாய் விரித்துப் படுத்தும் கொண்டிருந்தார்கள்.

நான் சரி எடுத்து பார்ப்போமே என்று சொல்லிவிட்டு, Avயில் படம் எடுத்தால் ஷேக் ஆகியிருந்தது, தெரிந்தது தானே என்று Tvயில் போட்டு Tripodல் வைத்து படம் எடுத்தால் கைகளில் வைத்து எடுத்ததை விடவும் அதிகம் ஷேக் ஆகியிருந்தது பின்னர் தான் புரிந்தது - பேருந்து ஒன்று கடந்தாலோ இரண்டு ஆட்டோக்கள் அல்லது ஒரு ஆட்டோ நான்கு மனிதர்கள் கடந்தாலோ பாலமே ஆடுவதை. பின்னர் புகைப்படம் எடுக்கும் ஆசையை விட்டுவிட்டு, வீட்டிற்கு வரும் வழியில் ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் நிரப்புவதற்காக வண்டியை நிறுத்திய இடத்தில் இருந்து எடுத்தப் படம் தான் கீழிருக்கும் மலைக்கோட்டை படம்.

Malaikottai

---------------------------------

அய்யனார் திருமணத்திற்காக திருவண்ணாமலை சென்றிருந்தது தான் முதல் முறை திருவண்ணாமலைக்குச் செல்வது. அதற்கு போட்டத் திட்டத்தில் நடந்த ஒரு சின்ன குளறுபடியால், பெரும்புரட்சியாளர்கள் நான்கு பேருடன் தீவிர பின்நவீனத்துவம் பேச/உரையாட/கேட்க முடியாமல் போனது.

திருமணம் நல்லபடியாக நடந்து முடிய கல்யாண சாப்பாடு சாப்பிட்டு விட்டு நான் போட்ட ஐந்து/பத்து நிமிட பிட்டில் பயந்து போய், பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர், வளர்மதி தெரித்துவிட(சும்மா விளையாட்டுக்கு கண்டுக்காதீங்க...) இந்தப் பிரச்சனையை முன்னமே எப்படியோ உணர்ந்த நந்தா அதற்கு முன்னமே தெரித்துவிட, அவசர பிரச்சனை ஒன்றை சமாளிக்க வேண்டி நானும் உடனே பேருந்து பிடித்தேன் பெங்களுக்கு.

Ayyanar Marriage

வளர்மதி மிகவும் அமைதியாக இருந்தார், ஆச்சர்யமான ஒருவிஷயம் என்று நினைக்கிறேன். நான் நிச்சயமாய் அவரிடம் நிறைய எதிர்பார்த்தேன்.

VaLarmathi

---------------------------------

குமுதம் வலைபதிவர்களைப் பற்றி எழுதியதும், வெ.சா திண்ணையில் புலம்பியதும் புதிய விஷயம் இல்லை, தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்த ஒன்றுதான். வலைபதிவுகள் பலருக்கு இனிப்பான விஷயம் கிடையாது, குழுமங்களில் இயங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அதனுடைய மாடரேஷன் உடன் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, மாடரேஷன் இல்லாத எந்த விஷயமும் உகந்ததல்ல என்பது பெரிய ஆச்சர்யத்திற்குரிய விஷயம் இல்லை தான். என்னைப் போல் மாடரேஷன் பிடிக்காமலேயே பதிவெழுதத் தொடங்கியவர்களுக்கு பதிவுகள் விரித்துக் கொடுத்த எல்லை விசாலமானது. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் கத்தும் தவளைகள் கிணற்றுக்குள்ளேயே ராஜாங்கம் நடத்த வேண்டியது தான்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In இருத்தலியநவீனம் கவிதைகள்

கனசதுரங்களை உடைத்தெறியும் பயணம்

என் எல்லைகளைப் பற்றிய கேள்வி
ஒரு நாளைப் போலில்லாவிட்டாலும்
எல்லா நாட்களிலும் இருக்கிறது
நீள அகலமாய் குட்டை நெட்டையாய்
அவரவர்களுக்கென்று எனக்கான
எல்லை கனசதுரமாய்

சுருங்கத்தான் போகிறதென்றாலும்
நீண்டு கொண்டேயிருக்கும் வெளியின்
சாத்தியக்கூறுகளுடன் எனக்கான
எல்லை ஒளி ஆண்டுகளாய் நீள்கிறது

கனசதுரத்திற்கு வெளியில்
என் நிழலின் நடமாட்டம்
தடுமாற்றங்களுடன் முகத்தில் அறைந்து
கணங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது
 
தவிர்க்கமுடியாததாயும்
ஒப்புக்கொள்ள முடியாததாயும்
நகரும் நாளின் ஒவ்வொரு பக்கத்திலும்
உடைத்தெரியப்பட்ட கனசதுரத்தின்
தெறிக்கும் ஒலியுடனும் சிரிக்கும் ஒளியுடனும்
வெளிகளைக் கடந்து நீளூம் என் பயணத்தின் குறிப்பு
நிரப்பப்படுகிறது
நிரப்பப்படாத பக்கங்களைப்
பற்றிய பயமில்லாமல்

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In ஓவியம் கவிதைகள்

ஆறுதல்படுத்த முடியாதபடி அலையும் சோகம்

அடித்துச் சாத்திய கதவின் ஒலியலைகள்
மிதந்தபடி சொல்லிச் செல்கிறது
முன்னம் சாத்தப்பட்ட தருணங்களை
வார்த்தைகளின் தேவையில்லை உனக்கு
எனக்கும் கூடத்தான்
உன் நிராகரிப்பின் என் வெறுமை
வார்த்தைகளைத் தொக்கி நிற்பதில்லை

காலம் இன்னிசையோடு அள்ளித் தெறித்து
வரைந்து செல்லும் ஓவியத்தினுள்
தூக்கத்தை தொலைத்தபடி
நம் பிம்பங்களுக்குள் கரைந்து போகிறேன்
உன் இருப்பு ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தையும்
மன்னிப்பின் சாத்தியக்கூறுகளையும்
ஒன்றாய்ப் புறக்கணித்தபடி

இன்னொரு நாளுக்கான தேவையில்லை
உள்ளிருந்து உருக்கும் நினைவுகளை
உன்னிடம் கொட்டிக் கவிழ்க்க
ப்ரார்த்தனைகளுடனே தொடர்கிறேன்
ஆறுதல்படுத்த முடியாதபடி அலையும்
உன் பிரிவின் சோகம்
வார்த்தைகளாய் மொழிபெயர்க்கப்படவேண்டி

புனைவின் நீளமாய் நம்மிடையே சுவர்
விளிம்பளவு ஏறியபின்னும்
தோல்வியின் சுவடறிந்து தவிர்த்துவிடுகிறேன்
நாம் பிரியும் சாத்தியக்கூறுகளை
முன்பொருமுறை மறுத்தளித்ததைப் போல்
உபயோகமில்லாத உன் முகவரியைப் போல்

----------------------------------------------------

இதை Backstreet Boysன் லேட்டஸ்ட் வெளியீடான Inconsolable ன் தாக்கத்தில் எழுதியது. தாக்கம் தெரிகிறதா? இன்னும் பிரகாசமாக இதில் தெரியும் என்று நினைக்கிறேன். இது தான் முதல் முறை மனதில் தோன்றியதை அப்படியே எழுதியது. மேலேயிருப்பது மாற்றங்களுக்கு உள்ளானது.

எத்தனையோமுறை சாத்திய நினைவுகளை
மீண்டும் எழுப்பியது இன்று இன்னுமொறுமுறை சாத்தப்பட்ட கதவு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நீ என்னைப் பிரிந்த பிறகான வெறுமையால்
வெட்டி எறியப்பட்ட காட்சியொன்றின் நிராகரிப்பின் வலியை நான் உணர்கிறேன்

உறங்க நினைக்கும் என்னை மீட்டெழுப்புகிறது காலம்
உன்னுடனான என் நினைவுகளை இசைத்தபடி
ஆயிரக்கணக்கான என் தவறுகளுக்கான மன்னிப்பை
உணர்ந்திருக்கும் இன்று, கேட்டிருப்பேன்
நிச்சயம் நீ இருந்திருந்தால்

உள்ளிருந்து உருக்கும் நினைவுகளை
உன்னிடம் கொட்ட
இன்னொரு நாளுக்கான பொறுமையில்லை என்னிடம்
உன்னைப் பிரிந்ததும் ஆறுதலடையவே முடியாதவனாகிற சோகம்
உன்னிடம் வார்த்தைகளாகி சரணடையவேண்டும்
என்ற ப்ரார்த்தனையுடன் நான்

நமக்கிடையேயான சுவரின் விளிம்பளவு ஏறிவிட்டாலும்
தோல்வியினால் விழப்போகும் உயரமறிந்து
இயலாமல் போய்விடுகிறது என் முயற்சிகள்
தெரிந்தேயிருக்கும் உன் முகவரியின் தேவையைப்போல
எல்லா சமயங்களிலும் நீ என்னுடன் இருந்துவிடுவாய் என்ற நம்பிக்கையைப் போல

---------- உண்மையான வரிகள் ------------

I close the door
Like so many times, so many times before
Felt like a scene on the cutting room floor
When I let you walk away tonight
Without a word

I try to sleep, yeah
But the clock is stuck on thoughts of you and me
A thousand more regrets unraveling, ohh
If you were here right now, I swear,
I'd tell you this

CHORUS:
Baby I don't want to waste another day
Keeping it inside it's killing me
Cause all i ever want, it comes right down to you (to you)
I wish that I could find the words to say
Baby I would tell you every time you leave
I'm inconsolable

I climb the walls
I can see the edge but I can't take the fall, no.
I've memorized the number
So why can't I make the call?
Maybe 'cause I know you'll always be with me
In the possibility

CHORUS:
Baby I don't want to waste another day
Keeping it inside it's killing me
Cause all I ever want, it comes right down to you
I wish that I could find the words to say
Baby I would tell you every time you leave
I'm inconsolable

I don't want to be like this,
I just want to let you know,
Everything that I'm holding,
Is everything I can't let go, can't let go.

CHORUS:
Baby I don't want to waste another day
Keeping it inside it's killing me
Cause all I ever want, it comes right down to you
I wish that I could find the words to say
Baby I would tell you every time you leave
I'm inconsolable

Don't you know it baby
I don't want to waste another day

I wish that I could find the words to say
Baby I would tell you every time you leave
I'm inconsolable

------------------------------------------------------------------

இன்னொரு ஓவியம்...(பெரிதாய்ப் பார்க்க படத்தின் மேல் கிளிக்கவும்...)

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In கவிதைகள்

புலிக்குட்டியாய் ஒரு வாழ்க்கை

வெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின்
முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை
தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய்
வீரியம் பெறுகிறது என் இருப்பின் மீதான
மற்றவர்களின் கோபம்

அடர்கானகத்தின் வழியேயான
முடிவென்னும் பெருவெளியை நோக்கிய பயணத்தின்
இடையில் இயக்கத்தை நிறுத்த முயலும்
அத்தனைப் பொறிகளையும் சுட்டு வீழ்த்தியவனாய்
நகர்ந்து கொண்டேயிருக்கிறேன்
கடக்கவேண்டிய தொலைவை மட்டுமே கருத்தில் நிறுத்தி

சிறிதும் பெரிதுமாய்
வண்ணக்குழப்பங்களுடன் கூடியதாய்
பல சமயங்களில்
பொருந்தாததாயுமான முகமூடிகள்
பயணத்தின் நடுவே கழன்று விழுகின்றன
பெருஞ்சிரிப்புகளைப் புறக்கணித்தவனாய்
நான்

நண்பர்கள் பகைவர்களாய்
நீலமேகம் நொடியில் நெருப்பு மழை பொழியும்
இருண்மையாய் மாறி பயமுறுத்தும் மாற்றங்கள்
காலைவாறிவிடவே காத்திருப்பவை போல்
எகிறிக்குத்தோ அடியில் குனிந்தோ எப்படியோ
இருப்பை மட்டும் நிச்சயப்படுத்து
நீளும் என்னுடைய பயணத்தின் முடிவான
பெருவெளியைப் பற்றிய பயமெப்போதும் இருந்ததில்லை
செய்துகொண்டிருக்கும் பயணமே
பெருங்கனவாய் அகலும் சாத்தியக்கூறுகள்
புரிவதால்.

Read More

Share Tweet Pin It +1

5007 Comments

In கவிதைகள்

சுரங்க விளையாட்டு

வீடுதோறும் வாசல்களில்
அகல் விளக்குகள் பொருத்தும்
அழகான நாட்களுள் ஒன்றில்
உன்னை முதல்முறை பார்த்தேன்
காற்றில் தள்ளாடும் சுடர்களை
இரு கைகளைக் குவித்துப் பொத்தி
காத்துக் கொண்டிருந்தாய்
உனது மஞ்சள் நிற பட்டுப் பாவாடையும்
காதுகளில் தொங்கிய லோலாக்குகளும்
சுடர் பட்டுப் பிரகாசித்தன
என் மகள் மஞ்சள் ப்ட்டில் லோலாக்கோடு
சுடர்களைக் காத்துக் கொண்டிருந்தாள்
எனது ஒளி பொருந்திய வாசல்களில்
அழகான நாட்களில்

----------------------------------------------------

ஒவ்வொரு அறையாகத்
திறந்து செல்வது எனக்குப்
பிடித்தமான விளையாட்டு
அறைகள் தோறும் வெவ்வேறு பக்கங்களில்
கதவுகள்
ஒன்றைத் திறந்து பிறிதொன்றில் நுழைந்து
வெவ்வேறு திசைகள் வழியாக
ஒருமுறை நுழைந்தால் திரும்ப வெளியேற
சில வாரங்களோ மாதங்களோ ஆகும்
களைப்படைந்தால் ஓய்வெடுக்கும்
சில அறைகளில்
உணவும் உடையும் பெண்ணும் உண்டு
அதிர்ஷ்டமிருந்தால் அவ்வறைகளுள் ஒன்ரை
இரண்டொரு நாட்களுக்கொருமுறையேனும்
அடைந்துவிடலாம்
எனது கோட்டைக்குக் கீழ்ப் பகுதியில்
இச்சுரங்க விளையாட்டு அரங்கை
என் முன்னோர்கள் நிர்மானித்தார்கள்
கிழவிகளாகிவிட்ட பெண்களையும்
காய்ந்து கருவாடாகிவிட்ட உடல்களையும்
சில அறைகளிலிருந்து அப்புறப்படுத்துவதுதான்
இன்றைக்கு என் ஆட்சியின்
ஒரே பிரச்சனை.

இந்த இரண்டு கவிதைகளும் ரமேஷ்-பிரேமின் "உப்பு" கவிதைத் தொகுப்பில் வெளியாகியிருந்த கவிதைகள்.

நன்றி ரமேஷ் பிரேம்

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In கவிதைகள்

முடிச்சவிழ்க்க தெரியாத மூடன்



என் வேதனையின்
நரம்புகளை மீட்டி இசையாக்கும்
வலிமை பெற்றவளாய்
ராகக் கோர்வைகள் இசைத்தபடி நீ
உன் உற்சாகத்தின்
நீள அகலங்களுக்குள் அடங்கிப் போய்
வேதனையிலேயே சுகம் காண்பவனாய் நான்

தோல்விக்கான பேச்சுவார்த்தைகளில்
விருப்பமில்லாமல் ஒதுங்கியேயிருக்கிறேன்
என் வெற்றி நம்மை பிரித்துவிடும் சாகசம் புரிந்தவனாய்
ஒவ்வொருமுறையும்
தானாய் விழுந்து கொள்ளும் முடிச்சை
கவனமாய் பார்த்தபடி

வேதனையும் வலியும் நிரம்பியதாய் முடிச்சுகள்
இறுகிக்கொள்ளும் உறுதியில்
தெரித்து விழ ஏதுவாய் வார்த்தைகள்
கட்டுப்படுத்தி அடக்கியாளும் ஒவ்வொருமுறையும்
வார்த்தைகள் மேலும் மேலும் முடிச்சுகளாய்
இறுகி வெடிக்கப்போகும் நாளை எதிர்நோக்கியபடி நான்
முடிச்சவிழ்க்க தெரியாத மூடனாய்

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In கவிதைகள்

திருத்தி எழுதப்படுமா தீர்ப்புகள்?

கேள்விகளுக்கான
என் ஜன்னல்கள் திறந்தேயிருக்கின்றன
தெரிவிக்கப்பட்ட கல்லறை முகவரியாய்
பிரபஞ்சத்தை அதன் நீள அகல உயரங்களுக்கு
விரும்பும் என்னை, என் நீள அகல உயரங்களுக்கு
அர்பணித்தப் பின்னும் ஜன்னல்களுக்கான பயமில்லை என்பதாய்

ஜன்னல்கள் இல்லாமல் போன வீடுகளை
பெரும்பாலும் புறக்கணித்தப்படியே என் பயணம் தொடர்கிறது
வீதிக்கு வந்துவிட்ட வீடுகள் ஜன்னல்கள் இல்லாமல்
போராட வந்துவிட்டு வலிகளுக்காக புலம்புவதைப் போல்
முகத்தில் படறும் குறுநகை மறைக்கப்படுவதில்லை
மறைக்கப்படாததாலேயே குறுநகை
இகழ்ச்சிக்குரியதாய் நீள்கிறது

நீண்டு கொண்டேயிருக்கும் இரவு
பொழிந்து கொண்டேயிருக்கும் பனி
நகர்ந்து கொண்டேயிருக்கும் நான்
கேள்விகளுக்கான
என் ஜன்னல்கள் திறந்தேயிருக்கின்றன
தெரிவிக்கப்பட்ட கல்லறை முகவரியாய்

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In கவிதைகள் சொந்தக் கதை

எழுதப்படாத என் கவிதைகள்



பாப்லோ நெருதாவைப் பற்றி எழுத அரிப்பெடுக்கும் என் நினைப்பை மட்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன், உள்ளிருந்து வெளிப்பட்டதும் மறைந்துபோய்விடுவதாய் நினைக்கும், மீண்டும் இன்பக்கிளர்ச்சி வருவதேயில்லை.

--------------------------

நழுவிச் செல்லும்
சொற்களைப் படிமமாக்கி
அழகுபடுத்தப்படும்
அக்கவிதை
ஒருமுறை படிக்கப்பட்டதும்
இறந்துபோனதாய் உணரப்படுவதால்
அழிக்கப்படுகிறது
இரைச்சலுடன் பறந்துபோகும்
சொற்களைப் பார்த்தவாறே
நிரப்பப்படாத பக்கங்களாய்
எழுதப்படாத என் கவிதைகள்.

- நான் தான் எழுதினேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கவிதைகள் சுய சொறிதல் வைரமுத்து

கம்பனுக்கு ஒரு கேள்வி

டிசேவின் பதிவில் இருந்து ஆரம்பமானது தான் இந்தத் தேடல். முன்பு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய வரிகளை இன் டர்நெட்டில் தேடப்போக ஆச்சர்யமாக இருந்தது நான் வழமையாக எழுதிய பல போரம்களை காணவேயில்லை. இருந்த போரங்களும் முழுமையாக மாற்றப்பட்டு ஆச்சர்யமாகயிருந்தது.

நான் அந்தப் பின்னூட்டத்தில் சொன்னது போல் இந்தக் கவிதையை, வைரமுத்துவின் கவிதைத்தொகுப்பு புத்தகம் வாங்கிய மறுநாள் மனனம் செய்தது. இன்னமும் நினைவில் உள்ளது சில மாற்றப்பட்ட வரிகளுடன். (என்னை நேரில் பார்க்கும் வாய்ப்புள்ள பதிவர்கள் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள். மூடிருந்தால் சொல்கிறேன் அன்று.)

மற்றபடிக்கு இன்றைக்கு கடேசி பதிவு இதுதான் என்று வாக்களிக்கிறேன். இதுவரை ஒருவழியாக நாளொன்றைக்கு ஒரு பதிவு போடாவிட்டாலும் கொஞ்சம் மீள்பதிவு கொஞ்சம் சுயபதிவு என்று ப்ளாக் உலகத்தில் மீண்டும் எழுதத்தொடங்கியிருக்கிறேன். பார்க்கலாம் எவ்வளவு நாட்கள் நீடிக்கிறது என்று. இனி கவிதை.

ராப்பகலாய் பாட்டெழுதி
ராசகவி ஆனவனே
தமிழென்னும் கடலுக்குள்
தரைவரைக்கும் போனவனே

சூத்திரம்போல பாட்டெழுதும்
சுகக்கவியே நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

இந்திர லோகத்து
இளசுளை தேவரெல்லாம்
மோகக் கிறுக்கெடுத்து
முந்நூறு முத்தமிட
முத்தமிடுங் கூத்துகளை
மூத்தநிலா பார்த்துவிட

இட்ட முத்தத்து
எச்சில் கரையழிக்க
வட்டில் அமுதெடுத்து
வாய்கழுவ வாய்கழுவ

வாய்கழுவும் அமுதமெல்லாம்
வாய்கால் வழியோடி
கற்பக மரங்களுக்கு
கால்கழுவக் கால் கழுவ

கால்கழுவும் சுகவெறியில்
கற்பக மரமபூக்க
அந்த பூவையெல்லாம்
அரும்போடு கிள்ளிவந்து
வானவில்லில் நார்கிழித்து
வகையாக மாலைகட்டி
சொல்லரசே நான் உனக்குச்
சூட்டிவிட வேணுமல்லோ

நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

சொல்லுக்குள் வாக்கியத்தை
சுருக்கிவச்ச கவிப்புலவா

உன்னை இதுவரைக்கும்
ஒருகேள்வி கேட்கலையா

தினம்வடிச்ச கண்ணீரால்
தீவுக்குள் கடல்வளர்த்து

அசோகவனத்திருந்து சீதை
அழுதாளே அவளை நீ
கண்ணால் பார்க்கலையே
கவிமட்டும் சொன்னாயே
அம்பிகா பதியிழந்து
அமரா வதியுனது
காதுக்குள் அழுதாளே

ஊமை வெயிலுக்கே
உருகிவிட்ட வெண்ணெய் நீ
அக்கினி மழையிலே
அடடாவோ உருகலையே

கடவுள் காதலைநீ
கதைகதையாய் பாடினையே
மனுஷக் காதலைநீ
மரியாதை செய்யலையே

இந்தக்கேள்வியை, ஓ
எங்குபோய் நான்கேட்க
பாடிவச்ச கவிஇல்லே
படிச்சவுக சொல்லுங்க.

- எழுதினது வைரமுத்து, வைரமுத்து இன்னுமொறு முறை வைரமுத்து.(வேணும்னா இப்படியும் எழுதினது நானில்லை...)

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In கவிதைகள் வைரமுத்து

நான் காதலுக்காக வழக்காடுகின்றேன்

வானவில்லை
நீங்கள்
தண்ணீர்த் தூறலில்
தரிசித்திருப்பீர்கள்

நீங்கள்
கலையாத வானவில்லை
கண்டதுண்டா?

கண்ணீர்த் தூறலில்
முளைப்பதால் தானோ
அது கலையாமல் இருக்கிறது

அது தான்
காதல்

காதல்
மனிதனைத் தேவனாக்கும்
இரண்டாம் பரிணாமம் இது

இந்த
காதல் மேகம் தான்
மனமென்னும் எரிமலையில்
மழைசிந்தி, மழைசிந்தி
அதில்
உல்லாச வனங்களை
உற்பத்தி செய்யும்

இதய ரோஜாச் செடியில்
இந்த
ஒற்றைப்பூப் பூத்துவிட்டால்
அத்துனை முட்களும்
உதிர்ந்து போகின்றன

வாலிபம் ஏந்திப்பார்க்கும்?
திருவோடும் இதுதான்

வாலிபம் சூடிப்பார்க்கும்
கீரிடமும் இதுதான்

முதலில் சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை

இப்போதோ
மௌனத்திற்கும் கூட
உரையெழுத முடிகிறது

காதல்
காதுகுடைந்து போட்ட
கோழி இறகுங்கூட
மயிலிறகுக்கான
மரியாதைக்குரியது
காதல் கடிதங்கள்
பருவம் எழுதும் பரீட்சைகளில்
எழுத்துப்பிழைகள் மன்னிக்கப்படுவது
இந்தப் பரீட்சையில்தான்

அக இலக்கணம்
அதைக்
காதல் வழுவமைதி என்று
கணக்கில் வைத்துக் கொள்கிறது.

காதல் கடிதங்களுக்கு
அஞ்சல் நிலையங்கள்
இடும் முத்திரை
இரண்டாம் முத்திரைதான்
அதற்கு முன்பே
உதடுகள் இடும்
முத்த முத்திரைதானே முதல் முத்திரை?

இலக்கிய வாசல்களில்
கனவுகளாலும்
கண்ணீராலும் இடப்படும்
காதல் கோலம்

சமூக வாசல்களவீல்
எச்சிலால் அல்லாவா
அர்ச்சிக்கப்படுகிறது.

அமராவதிகளும்
அனார்கலிகளும்
லைலாக்களும்
தேவதாஸ்களும்

காதல் பிச்சை
கேட்டுக்கேட்டு

மரணத்தின் பாத்திரத்தில்
பிச்சையாய் விழுந்தார்கள்

அனார்கலியின் ஞாபகம்
ஆறுமா
சலீமின்
ராஜ மாடங்களில்
கூடுகட்ட வேண்டிய குயிலுக்கு
கல்லறைக் கூடல்லவா
கட்டிக் கொடுத்தார்கள்.

தேவதாஸ் என்னானான்
காதல் நினைவுகளைக்
கழுவ
தண்ணீரில் மிதந்து தண்ணீரில் மிதந்து
சாவுத் தீவில்
கரை ஒதுங்கினான்

அவராவதி என்னும்
ராஜகவிதை
ஓர் ஏழைப்புலவனின்
மனப்பாடத்திற்கு ஏன்
மறுக்கப்பட்டது

நிஜத்தில்
எழுதுகோலுக்கும்
செங்கோலுக்கும்
வரலாற்றில் நிகழ்ந்த
வர்க்கப் போட்டியிது

இதுவரை
எழுத்தாணிகளும்
பேனாக்களும்
காதலின் கண்ணீணீரத்
தொட்டு எழுதத் தோன்றினவன்றி
துடைக்கும் விரலாய் நீளவில்லையே

விதியாம்
விதியை எழுதும் பேனாவில்
ஆயிரங் காதலரின்
ரத்தந்தான் மையாகுமென்றால்

அந்தப் போனாவை
ஒரு
குஷ்டரோகியிடம் கொடுத்துவிடுங்கள்

சமூகம்
தனது
பரிசோதனக் குழாயில்
இறந்தகாலத்தின் கண்ணீரை
எடுத்துக் கொண்டு
நிகழ்காலக் கண்ணீரை ஏன்
நிராகரிக்கிறது?

போதும்
காதலின்
சௌகர்ய உலாவுக்கு
நாம்
இன்னொரு வீதிசெய்வோம்

அது
கண்ணீர்ச்சேறு படாத
காதல் வீதி

அந்த வீதி
அமையும் வரைக்கும்
காதலுக்கு
இரங்கற்பா எழுதுவோரே
உங்கள் பேனாவைப்
பால்கணக்கு எழதமட்டுமே
பயன் படுத்துங்கள்

நான் இண்டெர்நெட் உலகத்தில் காலடி எடுத்துவைத்து தமிழில் எழுத ஆரம்பித்ததும் தொடங்கியது. இந்த தமிழில் டைப் அடிக்கும் பழக்கம் வேகமாக வருவதற்காக, அப்பொழுதெல்லாம் எதையாவது டைப் அடித்துப்பார்க்கும் பழக்கம் உண்டு. அப்படியே நான் பங்கேற்ற சில Forumகளில் போடுவதுண்டு.

அப்படி பலகாலங்களுக்கு முன்னர் நான் டைப்பி போட்ட வைரமுத்துவின் இந்தக் காதல் கவிதை இப்ப சும்மா பொழுது போகணும்கிறதுக்காக.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கவிதைகள்

நகுலன்

நான் நகுலன் பற்றி எழுதிய(காப்பியடித்த) ஒரு விஷயம் ப்ளாக்கர் பிரச்சனையால் வரவில்லை. அதை மீட்க ஒரு நடவடிக்கை.
அந்த பதிவு.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கவிதைகள்

நகுலன்

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நகுலன் பற்றி சாருநிவேதிதா எழுதி சாருவினுடைய வெப்சைட்டில் பார்த்த நியாபகம் தான் முதலில் வந்தது ஆனந்தவிகடனுடைய நகுலன் கவிதைகளைப் படித்தபொழுது...


நகுலன்



‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’

தன்னைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும் போது, அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டு கோள் இதுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது திருவனந்தபுரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கும் நகுலனுக்கு இப்போது வயது 87.

நகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்களுடன், நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!


இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!



என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!



மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!



வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!





யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!



நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!



உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?





ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!



முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!



வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’
என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்’’
என்றேன்!
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!

credits vikatan.com, charu nivedita.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கவிதைகள் சுய சொறிதல் சொந்தக் கதை

எதையோ மிதித்ததைப்போல்...

ஆச்சர்யத்திற்கு
உட்படுத்துவதாகவேயிருக்கின்றன
என்னைப்பற்றிய
அக்காவின் புரிதல்கள்
வெகுதூரத்தில் கேட்கும்
வண்டிச்சத்தத்தில்
என் பிம்பத்தை
உணரும் நாய்க்குட்டியைப் போல்

தகர்த்தெறியப்பட்ட
மனநாற்றம் தூக்கியெறிகிறது
இரவில் காலுறையை கழற்ற
மறுப்பதைப்போன்ற
முயற்ச்சிகளை அவளின்
ஒற்றைப்பார்வை

சிரித்தபடியே
ஒவ்வொருமுறையும்
முகத்திலறைவதற்காய்
காத்திருக்கும் அவள்
பின்னியிருக்கும் புதைகுழியில்
தெரிந்தே ஆழத்திற்குள் விழுந்தவனாய்
கூசித்தான் போகிறேன்
என்னை மறுத்தவளின்
நிலையறிந்ததும்
மகிழும் மனவுணர்வுகள் புரிய
எதையோ மிதித்ததைப்போல்...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts