In DTH கமல் சினிமா விஸ்வரூபம்

விஸ்வரூபம் - கமல் பிரச்சனை

விஸ்வரூபம் படத்தை கமல் டிடிஎச்  முறையில் வெளிவிட முடிவெடுத்துவிட்ட நிலையில் எல்லோருக்கும் இதைப்பற்றிச் சொல்ல என்னவோ இருக்கத்தான் செய்கிறது. கேபிள் சங்கர் எழுதிய பதிவு நன்றாக வந்திருந்தது, உத அண்ணன் எப்பொழுதையும் போல குழப்பம் ஆதரிப்பதா இல்லையா என்பதில், பதிவு முடியும் பொழுது ஒரு முடிவு சொல்வது அவருக்கு எப்பவும் குழப்பம் தான். ஜாக்கியின் பதிவுகளும் கூட பிரச்சனையின் கோணத்தைப் பற்றிப் பேசியது, அப்படியே லக்கியுடையதும்.  இடையில் ப்ருனோ ப்ளஸில் சொன்ன விஷயமும் கூட முக்கியமானதாகப் படுகிறது.

“here are two groups of movie watchers

1. Those who see in Theater only
2. Those who see in Home only - pirated CD / Torrent
3. Those who see in both
-
Now, producer gets money only for the movies watched in Theater
Producer gets no money for those who watch through Torrents and Pirated CDs
DTH is aimed at monetizing this group”

ப்ருனோ சொல்வதைப் போல் நான் முதல் வகைக்காரன். பெரும்பாலும் நானறிந்து வெளியாகும் எனக்குப் பிடித்தப் படங்களையெல்லாம் திரையில் சென்று மட்டும் பார்ப்பேன், ஆனால் வழியில்லாமல் அமெரிக்காவில் உட்கார்ந்திருக்கும் பொழுது தியேட்டரில் வெளியாகாமல் போனால் இணையத்தில் பார்க்கும் கோஷ்டி.

சுயநலத்திற்காய் என்னால் தியேட்டரில் படங்கள் வெளியாகாமல் போகும் காலமொன்று பயமுறுத்துவதாய் இருந்தாலும், DTH ஒரு முக்கியமான மாற்றமாகவும் வரவேற்கவேண்டியதாகவும் எனக்குப் படுகிறது. ஆனால் ஏற்கனவே குறைந்தும் அழிந்தும் வரும் தியேட்டர்கள் இதன் காரணமாய் பாதிக்கப்படும் என்பது மட்டுமல்ல குறையவும் செய்யும் என்று தான் நான் ஊகிக்கிறேன். இங்கே அமெரிக்காவிலே மிகப்பிரபலமான படங்கள் தவிர்த்து மூன்றாம் நான்காம் நாளே தியேட்டர்களில் ஆட்கள் இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறேன். எத்தனை முதல் வார படம் பார்த்த பொழுதுகளில் தனியாக நான் மட்டும் தியேட்டரில் இருந்தேன் என்று நினைவில் இல்லை, ஆனால் பத்து படங்களாவது இருக்கும்.

ஆனால் இது சிறுபடங்களுக்கும், பரீட்சார்த்தமான படங்களுக்கும் மிகவும் உதவியாகயிருக்கும். பாலா போல் ப்ரிவ்யூவையே 100 நாள் ஓட்ட வேண்டிய நிலை வராமல் இருக்க உதவலாம். இதை நம்பி படமெடுப்பவர்கள் வரலாம், அதன் காரணமாய் நல்ல உலகத் தரமான படங்கள் மேலெழ வாய்ப்பிருக்கிறது. இந்தப் படமும் ஆளவந்தான் போலத்தான் இருக்குமென்று பட்டாலும் அப்படித்தான் நான் தசாவதாரம் வந்த பொழுதும் நினைத்தேன், ஆனாலும் கூட இந்தப் படம் இன்னமும் ஆளவந்தான் போல இருக்குமென்றே மனம் சொல்கிறது. இந்த ஆளவந்தான் போல என்று சொல்வதில் எங்கும் படம் நல்ல படமா அல்லாத படமா என்ற கேள்வியில்லை பொதுமக்கள் பிடிக்குமா காதா என்கிற கருத்தை வைத்து மட்டுமே சொல்கிறேன்.

சினிமாவில் எடுத்தப் பணத்தை திரும்பவும் சினிமாவிலேயே போடும் முட்டாள் கமல் தோற்றுவிடக்கூடாதென்று மனம் பரபரக்கிறது, அந்த குறைந்தபட்ச மனசாட்சிக்காக. நல்ல திரைப்படங்கள் கொடுக்க வேண்டும் என்கிற கமலுடைய மனம் புரிந்தாலும் மஜித் மஜீதி சொல்லியிருந்தது போல் நல்ல படமெடுக்க இத்தனை பணம் தேவையில்லை, கமல் இதில் ஹாலிவுட்டைப் பின்பற்றுகிறார். பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார், ஆனால் ஹாலிவுட்டில் கூட ஹீரோக்கள் இந்தப் பிரமாண்ட பட இடைவெளியில் நல்ல ஹாப் பீட் படங்களை கொடுத்துவிடுகிறார்கள். கமல் போன்ற கலைஞன் அது போன்ற இடைவெளில் மொக்கை நகைச்சுவைப் படம் தான் செய்ய முடிகிறது. இந்த விதத்தில் கமல் மோகன்லாலை பின்பற்றியிருக்கலாம், ஆனால் கமல் பிறந்த இடப் பிரச்சனை இது. கமல் கேரளாவிலோ இல்லை ஈரானிலோ பிறந்திருந்தால் வேறு மாதிரி முயன்றிருக்கலாம்; இன்னொன்று ஈகோ. எத்தனையோ நல்ல கலைஞனாக இருந்தால் ஒரு நல்ல இயக்குநர் அவருக்குக் கிடைக்காமல் போக அது காரணமாகயிருந்துவிடக் கூடாது.  ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து ஹாலிவுட்டைப் பின்பற்றும் கமலால் முடிந்தது இத்தனையே! அதை அவர் சுயநினைவோடு செய்கிறார், இங்கிருக்கும் கிணற்றில் இருந்து எப்பொழுதும் தப்பித்துவிடவேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருக்கிறது உழைப்பும் இருக்கிறது, காலம் இல்லை.

லைஃப் ஆஃப் பை பார்த்த பொழுது அந்தத் தமிழன் கேரக்டரை ஏன் ஒரு தமிழன் செய்திருக்க முடியாது என்று மனம் அரித்தது, ஏன் கமல் அந்தப் படத்தில் நடித்திருந்திருக்கக்கூடாது, இர்ஃபான் கான் நடிப்புப் பிடித்திருந்தாலுமே கூட. சொந்தமாக தியேட்டர் வாடகைக்கு எடுத்து வெளிவிடுகிறார் என்று கேள்விப்படுகிறேன். நடுநிலையிலிருந்து இதுபோன்ற சூழ்நிலையில் மனம் நகர்ந்துவிடுகிறது, இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்று மனம் வேண்டுகிறது. பணம் வெல்வது தோற்பது பற்றிய கவலையில்லாமல் கமல் படமெடுக்கும் காலம் வரவேண்டும். கமலின் உச்சம் இன்னும் நிகழ்ந்துவிடவில்லை என்றே நினைக்கிறேன், சீக்கிரம் அதை அவர் அடையவேண்டும் என்றும் நினைக்கிறேன்.

Related Articles

5 comments:

  1. //இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்று மனம் வேண்டுகிறது. //

    அதே ...!

    ReplyDelete

  2. ஆகட்டும் பார்க்கலாம்.ரசிகனாய் வேறு என்னதான் செய்து விடமுடியும்?

    ReplyDelete
  3. தருமி, சேக்காளி - நன்றிகள்.

    ReplyDelete
  4. Easy (EZ) Editorial Calendar,

    நம் நாட்டில் எவளவோ பிரச்சனை இருக்கிறது.....அதை விட்டுவிட்டு டு நல்லா தான் கவலை படுறிங்க.....

    நன்றி,
    மலர்

    ---------------

    நான் விளம்பர பின்னூட்டங்களை மட்டுறுத்தியே வெளிவிடுவது வழக்கம் மலர்.

    ReplyDelete
  5. we used to write 3 as three ..

    ReplyDelete

Popular Posts