Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

In R.P. ராஜநாயஹம் சுஜாதா தமிழ் நாஞ்சில் நாடன் போர்னோ போர்னோகிராஃபி ஜெயமோகன்

தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன?


டிவிட்டரில் ஸ்ரீதர் நாராயணன் என்னிடம்,

 “@mohandoss சில எல்லைகளை அநாயசமா கடந்து எழுதறீங்க. ஆனா, எதுக்கு எழுதனும்கிற நோக்கமும் ஸ்திரமா வச்சிருப்பீங்கன்னு நம்பறேன். வாழ்த்துகள்! :-)” சொன்ன பொழுது விளையாட்டிற்காய்,

நானும் “@orupakkam அட அதையெல்லாம் வரலாறு பாத்துக்கும் தல. நம்ம வேலை எழுதுறது எழுதுவோம்.” என்றே சொல்லியிருந்தேன்.

அவர் என் மோகனீயம் தொடர்கதை பற்றித்தான் அப்படிக் கேட்டார். என்னிடம் நோக்கம் இருந்தது இருக்குது தான் ஆனால் ஸ்திரமானதான்னு தெரியாது! சுஜாதாவின் கீழ்க்கண்ட பத்தி படித்ததிலிருந்து நல்ல தமிழில் ஃபோர்னோகிராபி எழுதிவிடணும் என்று. நான் முயற்சி தான் செய்யறேன், தவறாவும் இருக்கலாம்.

சுஜாதாவின் மேற்கண்ட கேள்வியை - பதிவின் தலைப்பு - முன்வைத்து கணையாழி கடைசி பக்கங்களில் எழுதியதை முன்னமே கூட ஒரு முறை பட்டியலிட்டிருக்கிறேன், புத்தக விமர்சனம் வைக்கிறேன் பேர்வழியென்று.

"தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன" மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.

"தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.

அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழத்தும் அங்குள...
மேலே 'திருப்புகழில்' தேடிக்கொள்ளவும்."

என்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும். பாட்டைக் கண்டுபிடிச்சிட்டேன் இப்ப இதுக்கு பொருள் கண்டுபிடிக்கணும்.(09/16/2016)

அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபி னரைதனி லுடைதனை
அவிழ்த்து மங்குள அரசிலை தடவியு மிருதோளுற்
றணைத்து மங்கையி னடிதொறு நகமெழ
வுதட்டை மென்றுப விடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென மிகவாய்விட்
டுருக்கு மங்கியின் மெழுகென வுருகிய
சிரத்தை மிஞ்சிடு மநுபவ முறுபல
முறக்கை யின்கனி நிகரென இலகிய முலைமேல்வீழ்ந்
துருக்க லங்கிமெ யுருகிட வமுதுகு
பெருத்த வுந்தியின் முழுகிமெ யுணர்வற
வுழைத்தி டுங்கன கலவியைமகிழ்வது தவிர்வேனோ
இருக்கு மந்திர மெழுவகை முநிபெற
வுரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் அலகிய அறுமுக எழில்வேளென்
றிலக்க ணங்களு மியலிசை களுமிக
விரிக்கு மம்பல மதுரித கவிதனை
யியற்று செந்தமிழ் விதமொடு புயமிசை புனைவோனே
செருக்கும் அம்பல மிசைதனி லசைவுற
நடித்த சங்கரர் வழிவழி யடியவர்
திருக்கு ருந்தடி யருள்பெற அருளிய குருநாதர்
திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.

சரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.

"தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.

'மையார் கண் மடலாச்சியார் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்'

என்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno."

ஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.

"இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள்? ஏன் மறைய வேண்டும்?"


கணையாழி கடைசி பக்கங்கள் பதிவில் இங்கே எழுதியிருந்தேன்.

-----------------------------



முன்னமே கூட தமிழ் சிஃபியில் 'முலைகள்' பற்றிய ஒரு கட்டுரை இருந்தது. கட்டுரை எழுதியவரைப் பற்றி மறந்து போய்விட்டது ஆனால் முலைகளின் வித்தியாசமான தோற்றங்களைப் பற்றி பேசியது அந்தக் கட்டுரை. தமிழ் சிஃபி அப்பொழுது யுனிக்கோடில் இல்லை, இப்பொழுது மாற்றிக் கொண்டிருந்தார்கள் மாற்றிவிட்டார்களா தெரியாது, மாற்றினால் ஒரு முறை தேடிப் பார்க்கலாம்.

தேடிப்பார்த்து கிடைத்தது. இங்கே

எப்பொழுதோ யாரோ எழுதிப் படித்தது, பழங்கால தமிழர்களுக்கு ஆண்குறியே இல்லை என்று*(இல்லை அதை ஒத்த ஒன்று - நினைவில் இருந்து எழுதுகிறேன்.) ஏனென்றால் அதைப் பற்றிய குறிப்பே இலக்கியத்தில் இல்லை என்று சொல்லியோ என்னவோ, தமிழ் இலக்கியத்தில் அத்தனை தூரம் பரீட்சையம் இல்லாதவன் நான். முலைகள் பற்றிய குறிப்புகள் இருக்கும் அளவிற்கு ஆண்குறிகள் பற்றிய குறிப்புகள் இருக்காது என்றே நினைக்கிறேன்.

------------------------------

நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய பொழுது ஒரு வழக்கத்திற்காகவே கொஞ்சம் 'செக்ஸியாக' எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் நண்பர் ஒருவர் 'ரமணி சந்திரன்' கதை போல இருக்கிறது என்று சொல்ல, அதை விட உத்வேகம் ஒன்று வேண்டுமா அப்படி எழுதுவதை நிறுத்திவிட்டேன். :)

பின்னர் என் மோகனீயம் கதைகளிலும், மலரினும் மெல்லிய காமம், முக்கூடல் கதைகளிலும் தொட முயன்றிருக்கிறேன்.

எழுதிய இரண்டொரு  மொழிபெயர்ப்பு கதைகளும் இந்த வகையே!

பார்வையற்று
தேஜஸ்வினி

-------------------------------
‘அருப்பு ஏந்திய கலசத்துணை
அமுது ஏந்திய மதமா
மருப்பு ஏந்திய’ எனல் ஆம் முலை,
மழை ஏந்திய குழலாள்
கருப்பு ஏந்திரம் முதலாயின
கண்டாள் இடர்காணாள்
பொருப்பு ஏந்திய தோளனோடு
பொருந்தினள் போனாள். [ அயோத்தியா காண்டம். 1931]

[அரும்பு ஏந்திய அமுது நிறைந்த இணைக் கலசங்கள் போலவும் மதயானை தந்தங்கள் போலவும் முலைகளும் மேகம்போன்ற கூந்தலும் கொண்டவள் கரும்பு இயந்திரம் முதலியவற்றைக் கண்டபடி துயரங்களை அறியாமல் மலைகள் பொருந்திய தோள்கொண்டவனுடன் இணைந்து சென்றாள்]

இப்ப ஜெயமோகன் புகுந்து விளையாடுறாரு, அவருடைய காடு மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஏற்கனவே படித்திருக்கிறேன் என்பதால் புதிதாகத் தெரியவில்லை என்றாலும். ரொம்ப நாட்களாய் மனதிற்குள் ஊறிக்கொண்டிருந்த கம்ப ராமாயணம் படிக்கணும் என்ற ஆசையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜெமோவின் கம்பனும் காமமும்...

ஒன்றுஇரண்டு,  மூன்று

-------------------------------

இதே போல R.P. ராஜநாயஹம் எழுதியிருக்கிறார், அதில் சௌந்தர்யலஹரி பற்றி சொல்கிறார் இப்படி,

‘சக்கரமையப்புள்ளி சக்தி உன் முகமாம்
கீழே தக்கதோர் இரு முலைகள்
தாவினால் அழகு யோனி '

இவருடைய Carnal Thoughts தமிழில் ஒரு நல்ல ஃபோர்னோ முயற்சி என்றே நினைக்கிறேன்.

------------------------------

இன்றைக்கு தமிழில் போர்னோவை வைத்து விளையாடுவதில் பெரிய ஆள், வாமுகோமு. ஆனால் ஏனோ அவர் தன் நாவல்களை அந்தவகைப் படுத்துவதில்லை.

பார்ப்போம்.

* - நன்றி அருட்பெருங்கோ


Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Only ஜல்லிஸ் அயோனி சீதா சுஜாதா புத்தர் பைத்தியக்காரன் மையம் வளர்மதி

அயோனி

திடீரென்று ஒருநாள் நண்பன் ஒருத்தன் சீதையை அயோனின்னு சொல்வாங்களாமே அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டு என்னிடம் வந்து நின்றான். எனக்கு முதலில் ஆச்சர்யம் எப்படி இவனுக்கு இந்தக் கதை தெரிந்தது என்று, அடுத்து அவன் ஏன் இதைப்பற்றி கேட்கிறான் என்ற சந்தேகம். ஏற்கனவே நண்பன் ஒரு மாதிரியானவன் என்பதால் சும்மா வாயைக் கிண்டினேன், ஏன் இதைப் பத்தி கேட்கிறாய் என்று.



யோனின்னா என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியும், உன் ப்ளாக்கையெல்லாம் படிச்சிட்டு தமிழ்ல ஒரு வார்த்தைக்கு முன்னாடி அ- போட்டா அது அந்த வார்த்தையோட எதிர்ப்பதம்னும் தெரியும்.(புனைவு - அபுனைவு உதாரணம் சொன்னான்). அப்படின்னா சீதை யோனியில்லாதவள்னு அர்த்தமான்னு கேட்க, எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

நான் சொன்னேன், ஒரு விஷயத்தை எக்ஸாக்ட்டா எப்படி தப்பா சொல்றதுன்னு உன்கிட்டத்தான் கேட்கணும் போலிருக்கு. அயோனின்னு சீதையைச் சொல்வாங்கங்கிறது சரிதான். ஆனால் அதற்கு அர்த்தம் சீதை யோனியில்லாதவள் என்பதல்ல, சீதை யோனியின் வழியாய் பிறக்காதவள் என்பதுதான். ஏன் என்றால் சீதை அம்மா - அப்பா மூலமாய் கருவுற்று பிறந்தவள் இல்லை என்று சொன்னேன். என்னத்தையோ நினைத்து வந்து என்னமோ கிடைத்த விரக்தியில் நகர்ந்தான்.

நான் சிறு வயதில் இருந்தே ஏகப்பட்ட கேள்விகள் கேட்பவனாகவே இருந்து வந்திருக்கிறேன், பள்ளிக்கூடங்களிலும் சரி கல்லூரிகளிலும் சரி எனக்கு பாடம் நடத்துவது அத்தனை சுலபமானது கிடையாது. தற்சமயங்களில் வேலை செய்யும் நிறுவனத்தில் கூட ‘செஷன்’ என்று கூட்டிச்சென்றாலோ ‘டிரைய்னிங்’ கொடுத்தாலோ அதிகம் கேள்விகள் கேட்பவனாகயிருந்திருக்கிறேன். கேள்விகள் ஒரு வியாதி போல் என்னைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்திருக்கிறது. சில சமயங்களில் வெறுமனே கேட்கவேண்டுமென்பதற்காகவே கேட்கப்பட்ட கேள்விகளை கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு மோசமான அனுபவங்கள் நான் கேள்விகள் கேட்டதால் நடந்திருக்கிறது.

புத்தர் நான்கு வகைகளாகக் கேள்விகளைப் பிரிக்கலாம் என்கிறார், நேரடியாக பதில் சொல்வது போல் கேட்கப்படும் கேள்விகள், விளக்கத்துடன் பதில் சொல்வது போல் கேட்கப்படும் கேள்விகள், எதிர்கேள்வி கேட்பதன் மூலம் பதில் சொல்ல கேள்விகள், பதில் சொல்லக் கூடாத கேள்விகள் என்று. உண்மைதான் கேள்விகளுக்கும் நான்கு என்ற எண்ணுக்கும் தொடர்பு உண்டு போலிருக்கிறது, எது சரி எது தவறு என்பதைப் பற்றிய உணர்வின் மேல் நியீட்ஷே எழுப்பும் கேள்விகள் கூட நான்கு தான்.

You run ahead? Are you doing it as a shepherd? Or as an exception? A third case would be the fugitive.

Are you genuine? Or merely an actor? A representative? Or that which is represented? In the end, perhaps, you are merely a copy of an actor.

Are you one who looks on? Or one who lends a hand? Or one who looks away and walks off.

Do you want to walk along? Or walk ahead? Or walk by yourself? One must know what one wants and that one wants.


Questions of Conscienceவில் நியீட்ஷே கொடுக்கும் நான்கு கேள்விகளுக்குமான பதில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு விடையளிக்க வேண்டிய அளவிற்கு முக்கியமானவை. நியீட்ஷேவைப் பற்றி நினைத்தால் சட்டென்று நினைவுக்கு வருவது ’வளர்மதி’ தான்.

 ஒருமுறை பைத்தியக்காரன், வளர்மதி ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்ததையும் அதற்கு காரணம் நியீட்ஷே தான் என்று சொன்னதையும் நான் நிச்சயம் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளவில்லை தான். ‘ஒரு கேள்வி’ என்னை ஆட்டிப் படைத்திருக்கிறது, அது எந்தக் கேள்வி என்பது அல்ல இங்கே பிரச்சனை கேள்வியால் மனிதனை ஆட்டிப் படைக்க முடியாமா என்பது, அப்படியென்றால் முடியுமென்பது தான் பதிலாய் இருக்க முடியும்.

வளர்மதி, நியீட்ஷேவைப் படித்துவிட்டு நியீட்ஷே கேட்ட ஒரு கேள்வியால் அப்படி பாதிக்கப்பட்டதால் சாப்பிடாமல் கொள்ளாமல் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததாக சொன்ன நினைவு உண்டு. எந்தக் கேள்வியென்று அத்தனை சுலபத்தில் நினைவிற்கு வரவில்லை என்றாலும் ‘மையமாக’ இப்படி இருந்தது. இதே உடல், இதே அறிவு, இதே நண்பர்கள், இதே பகைவர்கள், இதே வாழ்க்கை உங்களுக்கு இன்னொரு முறை வாய்க்கும் என்றால் வாழத் தயாரா என்பது தான் அந்தக் கேள்வி. வெண்ணைவெட்டியாய் இதற்கான பதிலை எதையும் யோசிக்காமல் ஆம் என்று சொல்ல வேண்டாம். இந்தக் கேள்வி எழுப்பும் அதிர்வு நிச்சயம் இல்லை என்று சொல்லவைக்கும். யாருக்கும் பதில் சொல்லவேண்டும் என்று இல்லாமல் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள முயலுங்கள். என் பதில் இல்லை என்பதை நான் அப்பொழுதே வளர்மதியிடம் சொன்னேன்.

அப்படியென்றால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது என்ன?

‘மையம்’ என்றதும் சுஜாதா மையமாக வந்து என் கியூப்பிக்கில் மேல் கால் மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு வளைந்த முதுகுடன் சிரிக்கிறார். நான் விரும்பிப் படித்த கேள்வி பதில்கள் சுஜாதாவினுடையவை, அந்துமணியில் இருந்து தான் இது தொடங்கியது. பின்னர் மதன், அரசு என்று பலவாறு தொடர்ந்து இன்றும் இணையப்பக்கங்களில் எழுதும் லக்கிலுக் வரை தொடர்ச்சியாய் கேள்வி பதில் படிக்கிறேன். ஜெயகாந்தன் பதில்கள் மட்டும் சட்டென்று ஒரு எரிச்சலை உண்டாக்கும் இவரிடம் போய் கேள்வி கேட்கிறாங்க பாருங்க என்று, ஒரு வேளை அவர் எதிர்பார்ப்பது கூட அதுவாகத்தான் இருக்கும்.

கேள்வி என்றதும் நினைவிற்கு வரும் இன்னொரு நபர் ’தெரிதா’. அவர் எழுப்பும் ‘must not structure have a genesis, and must not the origin, the point of genesis, be already structured, in order to be the genesis of something?’ இந்தக் கேள்வி உள்ளிட்டு அவருடைய எழுத்து கேள்விகளால் நிரம்பியதாக இருக்கிறது.

Interviewக்களால் நிரப்பப்பட்ட சாஃப்ட்வேர் வாழ்க்கையில் நான் கேள்விக்கான பதில் சொல்வதை ஒரு விளையாட்டாக விளையாடத் தொடங்கியிருந்தேன் ஒரு சமயத்தில், interviewer உடன் சதுரங்கம் விளையாடும் தந்திரத்துடனும் லாவகத்துடனும் கேள்வி பதில்கள் தங்கள் அடுத்த நகர்வை முந்தைய நகர்வை வைத்தே ஆடும் விளையாட்டு போல், என் பதிலின் மூலம் எனக்கான கேள்விகளை அவர்கள் வாயில் புகுத்தி ஆடும் இந்த விளையாட்டு எனக்கு தொடர்ச்சியாக வெற்றியையே பெற்றுத்தந்தது.

கேள்விகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கின்றன, எதைப் பற்றியாவதும். தொடர்ச்சியாக கேள்வியாகவே இருந்த கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் தருணம் விளக்கிவிடமுடியாததாய் இருக்கிறது. பதிவுலகில் முகமூடியில் உலாவரும் இன்னொரு ‘க்ரூப்’ இட்லிவடை தன் முகமூடியை கழட்டி எறிய திட்டமிட்டிருப்பதாகத் தெரிந்ததும் அந்த உணர்வுதான் வந்தது. முகமூடிகளை அலட்சியப்படுத்திவிட்டு நகர்ந்துவிடுவதுதான் இணையத்தில் மனநிம்மதியுடன் வாழ வழி என்று தெரிந்தாலும், எலி எப்பொழுதும் புலியாவதில்லை என்று தீர்ப்பு வைத்த திருமுகத்தைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. என்னவென்றாலும் இட்லிவடை கேள்வி பதில் இல்லாமல் தான் ‘சுழற்றிக்’ கொண்டு நிற்கும் என்று தெரிவதால், Ignorance is a bliss.

Read More

Share Tweet Pin It +1

15 Comments

In ஆண்டாள் சுஜாதா போர்னோ

கணையாழி கடைசிபக்கங்கள்

ஒரு வாரத்திற்கு முன்பு சமீபத்தில் ஆர்டர் செய்திருந்த பதின்மூன்று புத்தகங்கள் வந்து சேர்ந்திருந்தன. பெரும்பாலும் பொதுபுத்தி புத்தகங்கள் வீட்டு மக்களுக்காக, மனுஷங்க படிக்கிற புக்கெல்லாம் நீ வாங்கவே மாட்டியா என்ற கேள்விக்காகவே வாங்க வேண்டாமென்று நினைத்தேன். அதில் கணையாழி கடைசிபக்கங்களும் ஒன்று. புத்தகக்கண்காட்சியிலேயே வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். நான் சென்றிருந்த அன்று வரவில்லை.



என்ன சொல்வது இந்தப் புத்தகத்தைப் பற்றி, கற்றதும் பெற்றதுமின் ஓல்ட் வெர்ஷன். பொதுமக்களுக்காக இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம்(சில ஆயிரங்கள்) கணையாழி வாசகர்களுக்காக எழுதியதால் கற்றதும் பெற்றதுமைவிட நன்றாகவே வந்திருக்கிறது. மற்றபடிக்கு, சுயபுலம்பல்கள், நேம் டிராப்பிங்கள், ரோடே போடும் அளவிற்கு திறமையிருந்தாலும் ஜல்லியடித்திருப்பது என கற்றதும் பெற்றதுமின் பல விஷயங்களை முன்நாட்களிலேயே செய்திருக்கிறார் சுஜாதா கணையாழி கடைசி பக்கங்களில்.

"சொந்த தங்கையை ஒப்படைக்கலாம் போன்ற என் மூஞ்சியைப் பார்த்துவிட்டு...", "ஜப்பானிய பத்திரிகைகள் எல்லாமே கணையாழி போல. கடைசிப் பக்கத்திலிருந்து படிக்கிறார்கள்...", "'எழுதினால் பிரசுரிக்க ஆள் இருக்கிறது என்று எதையும் எழுதும்' சலுகை, கடிதம் எழுதினவருக்கும் கிடைத்திருப்பதால் புன்னகையுடன் மன்னிப்போம்"

போன்ற உதாரணங்கள் எல்லாம் போதும் என்று நினைக்கிறேன்.

மனிதர் கருணாநிதியில் ஆரம்பித்து, கமலஹாசன், ராஜிவ்காந்தி என்று பெயர்களை நீளமாக அடுக்குகிறார். கூடவே,

"...இந்தத் தரமான வாசகர் கூட்டத்தைக் கொச்சைப்படுத்தாதே என்று ஆதவன் கோபப்பட...", "...இந்திரா பார்த்தசாரதி கிரிக்கெட் ஸ்கோர் என்ன என்று கேட்டார்...", "...என்.எஸ்.ஜே. எனக்கு விஷன் இருக்கிறதா என்று கேட்டார்...", "...வாசந்தி கணேஷ் வசந்த் கதை கணையாழிக்கு எழுதுவீர்களா? என்றார்..."

பெயர்கள், பெயர்கள் மீண்டும் பெயர்கள். மற்றும் நக்கலாக கடைசி நிறுத்தற்குறி வேறு, "...நண்பர் ஜெயராமன் தன் ஒரு வயது பையனுக்கு 'தோபார்ளு இன்டலக்சுவல்' என்று வேடிக்கை காட்ட(ம்) கூட்டம் தொடர்ந்தது..."


மற்றபடிக்கு, அதே பக்கத்தில் இருக்கும்

"...ஒரு இரண்டாயிரம் இன்டலெக்சுவல் வாசகர்களுக்கா, லட்சக்கணக்கான சாதாரண வாசகர்களுக்கா எழுதுகிறான்..."

"'நீ பிரபலமாயிருக்கிறாய், அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.' இப்படிச் சிந்தாந்தத்தை நான் அடிக்கடி சந்தித்துவிட்டேன்."

"...இந்தத் தருணத்தில் சாகாத இலக்கியம் படைக்கப்போகிறேன் என்று கெடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுத முடியாது..."

போன்றவைகள் யோசிக்க வைக்கின்றன.

இடையில் Erica Jong ன் The Teacher.

The Teacher stands before the class.
She's talking of Chaucer.
But the students arent hungry for Chaucer.
They want to devour her.
They are eating her knees, her toes, her breasts, her eyes and spitting out her words
What do they want with words?
They want a real lesson.

She is naked before them.
Psalms are written on her thighs.
When she walks sonnets divde
Into octaves & sestets.
Couplets fall into place
When her fingers nervously toy
With the chalks…

Eat this poem.

சுஜாதா எழுதிய ஒரு சைனீஸ் கவிதை

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்
மணி பார்த்தான், உட்கார்ந்தான், படுத்துக் கொண்டான்
சென்னை விட்டுத் திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.

டைம் பத்திரிகையில் வந்த ஒரு வாசகம் தன்னைக் கவர்ந்ததாகச் சொல்கிறார் படித்துப் பார்த்தால் கொஞ்ச நாள் கழித்து தான் உல்டா செய்த அதே வாக்கியம்,

In the future everybody will be famous for at least fifteen minutes.

"தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன" மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.

"தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.

அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழத்தும் அங்குள...
மேலே 'திருப்புகழில்' தேடிக்கொள்ளவும்."

என்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும்.

சரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.

"தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.

'மையார் கண் மடலாச்சியார் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்'



என்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno."

ஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.

"இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள்? ஏன் மறைய வேண்டும்?"

என்னமோ இப்படி ஆரம்பித்து இப்படியே போய்க்கொண்டிருக்கிறது. சரி போதும் கடைசியாக இதைப்பற்றி,

"கற்றதனாலாய பயனென்கொல் கற்றவனைக்
கட்டி அணைக்கா விடின்" இது என் ஜல்லி கிடையாது, தக்ஷினாமூர்த்தி 'திவ்ய தரிசனம்' இல் எழுதியதாக சுஜாதா சொன்னது.

மற்றபடிக்கு, நிறைய திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறார், அதற்கு மொழி பாகுபாடு கிடையாது. கன்னடா, மலையாளம், தெலுகு, ஒரியா, குஜராத்தி என நீள்கிறது அந்த வரிசை. ஜப்பானுக்கு சென்று வந்ததைப் பற்றி, பாரதியின் சுயசரிதைக் கவிதை பற்றி, Aஹுக்கூவை ஸ்கேலால் அளப்பது பற்றி, மணிப்பிரவாளப் பேச்சைப்பற்றி இப்படி நிறைய விஷயங்கள்.

நிச்சயமாய் முப்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை சுஜாதாவின் கண்கொண்டு நிச்சயமாய்ப் பார்க்கலாம் இந்த கணையாழி கடைசிபக்கங்களில். சுவாரஸியமாய் இருந்தது. எனக்கு. சுஜாதாவின் பேமஸான நக்கல் மொழியுடனும், ஒரு ஹைக்கூ மற்றும் ஒரு பசுவய்யா(சுரா) கவிதையுடனும் முடிக்கிறேன்.

"ஜப்பானில் பத்து நாட்கள் தங்கிவிட்டு சென்னை வந்த போது கஸ்டம்ஸ் அதிகாரிகளையும், எண்ணெய் போடாமல் முனகும் ஏர்போர்ட் கன்வேயரையும் பார்த்த பொழுது 'திரும்ப ஜப்பான் போகலாமா?' என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் ஜப்பானில் ஜப்பானியர்களால் தான் இருக்க முடியும். இந்திய தேசத்தில் சுபிட்சம், சந்தோஷம் இவற்றுக்கெல்லாம் அர்த்தம் வேறு.

எந்த நாட்டில் மாதம் முப்பது ரூபாய்க்கு வேலைக்காரச் சிறுவன் கிடைப்பான்?

எந்த நாட்டில் நினைத்த மாத்திரத்தில் சுவர்களில் சுதந்திரமாக எழுத முடியும் நம்பர் ஒன் போகமுடியும்?

எந்த நாட்டில் லஞ்சத்தால் பெருமாளையே வாங்க முடியும்?

மேரா பாரத் மஹான்."

சில ஹைக்கூகள்.

மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை

மரியாதை செலுத்த விரும்பும்பொழுது
பெற்றோர்
இறந்து விட்டனர்

கூந்தல் போர்த்த உடல்
நெய்யும் தறியில்
காஞ்சிப் பட்டு

-----------------

பசுவய்யா கவிதை

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிந்தது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல
ஆயுளின் கடைசித் தேசல் போல
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என்
முதுமை...
பின்னும் உயிர்வாழும் கானல்...

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In குறுந்தொகை சுஜாதா

பெயர்த்தனென் முயங்க, ‘யான் வியர்த்தனென்’ என்றெனள்




பெயர்த்தனென் முயங்க, ‘யான் வியர்த்தனென்’ என்றெனள்;
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே -
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது - மோசிகீரன் - குறுந்தொகை 84 பாலை

பொருள்:

கழலுமாறு அணிந்துள்ள தோள் வலையினை உடையவன், ஆய் என்ற வள்ளலாவான். அவனுடைய மலை மேகங்கள் தவழும் பொதியில் மலையாகும். ஆண்டு வளர்ந்துள்ள வேங்கையின் மலர் காந்தளின் மலர் ஆகியவற்றின் மணத்தை உடையவளாய், ஆம்பல் மலரைவிட குளிர்ச்சியுடையவளாய் விளங்குபவள் தலைவி, அவளை யான் ஒருமுறை தழுவியதோடு அமையாமல், மீட்டும் தழுவும் போது, அதற்கு உடன்படாது, அவள் ‘யான் வியர்த்தேன்’ என்றாள். யான் அங்ஙனம் தழுவியது அவளுக்கு வெறுப்பு உண்டாவதற்கு காரணமாயிற்று என்பதை, அவள் உரைத்த பொழுது உணர்ந்திலேன் ஆனால், அவள் உடன் போக்கில் சென்ற இப்பொழுது அறிந்தேன்.

விளக்கம்:
தலைவி, உடன்போக்கில் சென்றவழி, செவிலித்தாய், தலைவி தன்னிடம் வெறுப்பைப் புலப்படுத்தியது தலைவன் மேல் உள்ள விருப்பினால் தான் என்பதை முன்னரே, தான் அறியாமை எண்ணி வருந்துவாளாயினாள். செவிலியர், தலைவியை தன் அருகில் துயிலச் செய்தல் வழக்கம். ‘வியர்த்தனென்’ என்ற தலைவியின் உரை ‘நீ முயங்கற்க’ என்ற குறிப்பை உணர்த்திற்று. அப்பொழுதே அறிந்திருந்தால் தலைவி விரும்பியதைச் செய்திருக்கலாம் என்ற செவிலியின் இரக்கம் இப்பாடலில் புலப்படுகின்றது. தலைவனைத் தழுவிய மார்பிற்கு தாயின் அணைப்பு வெறுப்பைத் தருவதாயிற்று. தலைவியின் இவ்வுணர்வு, ‘பயில்வு’ எனப்படும். “தலைவி, செவிலி முலையிடத்து துயில் வேண்டாது, வேறோர் இடத்தில் பயிறல்”, என இதனை நச்சினார்க்கினயர் விளக்குவர். (தொல்காப்பியம், கலவியல், 23) வேங்கை, காந்தள் ஆகிய மலர்கள், பகற்குறியில் தலைவன் சுட்டிய மலர்கள் என்றும், தலைவி இயல்பாகவே அம்மலர்களின் மணம் உடையவள் என்றும் இருவகையாகவும் பொருள் கொள்ளப்படும். தலைவி, ஆம்பள் மலரை விட தண்ணியளாய் இருந்த போதிலும், இரவு பொழுதில், அவன் நினைவினாள் ஏற்பட்ட உடல் வெப்பம் காரணத்தால் ‘வியர்த்தனென்’ எனக்கூறியதாகவும் கொள்ளலாம். தன்னைப் பிரிவதற்காகவே, தலைவி விலகிச்சென்றனள் என்பதை அப்பொழுது உணரவில்லையே எனச் செவிலி ஆற்றாலாயினாள்.

ஆஅய் வேல் என்பவன், கடையேழு வள்ளல்களில் ஒருவன் பொதியில் மலைத்தலைவன். இரவலற்கு வரையாது ஈபவன், அவன் நல்லாட்சியால் அவன் நாட்டில் பருவமழை பொய்யாது பெய்யும் என்பது ‘மழை தவழ் பொதியில்’ என்ற தொடரால் குறிக்கப்பட்டது.

ஆம்பல் மலரினும் தண்ணியள், கொடிய பாலையில் செல்ல நேர்ந்ததே எனச் செவிலி வருந்தினள் தன்னுடைய முதுகுப்புறம் படுத்துறங்கிக்கிடந்த தலைவியைப் பெயர்த்து, மார்புப் பகுதியால் முன்புறம் தழுவி உறங்கச் செய்த பொழுது, தலைவி அவ்வணப்பைப் பொறாது ‘வியர்த்தனன்’ எனக்கூறியதாகவும் பொருள் கொள்ளப்படும்.

சொற்பொருள்

முயங்குதல் - தழுவுதல்
பெயர்த்தனன் - மீண்டும்; அவளை தன் முகத்தை நோக்கி திரும்பி
துனி - வெறுப்பு
மழை - மேகம்
நாறி - மணம் வீசி

மேற்கோள்

“பிற்றை ஞான்று, தலைமகளது போக்கு உணர்ந்து
செவிலி மயங்கிப் பெரியதோர் கவலையளாய்
நெருநலை இவை செய்தது இது கருதிப் போலும்”
என்ரு கூறியது - இறையனார் களவியல் உரை, 23

“உடன் போக்கிய செவிலி கவன்று உரைத்தத” தொல்காப்பியம், அகத்திணையியல், 39 இளம்பூரணர்.

”குறுக வ்ந்து, குவவு நுதல் நீவி
மெல் எனத் தழீஇயினேன் ஆக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்பப்
பல்கால் முயங்கினள் மன்னே” அகநானூறு 49

”பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியளே” ஐங்குறுநூறு, 97

”நறுந் தண்ணீரல்” குறுந்தொகை, 70

”ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி” குறுந்தொகை, 62

“பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்கத் துயில் இன்னாதே” குறுந்தொகை 353

பொருள் முடிவு:

தண்ணியள், யான் முயங்க வியர்த்தனென் என்றனள், அது, துனி ஆகுதல், இனி அறிந்தேன்.

முனைவர் வி. நாகராசன் உரை

அவனுடன் போய்விட்டாள்

தழுவியபோது
வியர்த்தாள்.
ஏன் என்று அப்போது தெரியவில்லை!
இனி அறிந்தேன்,
ஆய் அரசனின்
மழை தவழும் பொதிய மலையின்
வேங்கை, காந்தள் மலர்களின்
மணம் கொண்டவள்
ஆம்பல் மலரின் குளிர்ச்சியுள்ளவள்.

சுஜாதா

பின்குறிப்பு - என் மச்சான் வாங்கிவந்த சங்கப்பாடல்களை படித்தமாதிரியும் இருக்கும் என்று நினைத்து எடுத்த குறுந்தொகைப் பாடல்களை முடிந்தவரை உரையுடன் தொகுக்க நினைத்தேன் பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சுஜாதா நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

No country for old man படம் பார்த்தேன், சில வரிகள் எழுதணும் என்ற எண்ணம் இருக்கிறது. Best Director, Best Picture, Best Supporting Actor, Best Screenplay என இந்த முறை அகாதமி விருதுகளில் ஒரு கலக்கு கலக்கியது. Bourne Ultimatum படத்திற்கு மூன்று விருதுகள் Sound editing, editing, sound என்ற வகையில். தொகுத்து வழங்கிய Jon Stewart, Once என்ற படத்தில் இடம் பெற்ற பாடலுக்காக best original song வகையில் விருது வாங்கிய பொழுது விருது வழங்கப்பட்ட இருவரில் Glen Hansard மட்டும் பேசிவிட்டு, Markéta Irglová பேச வரும் பொழுது கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து அவரிடம் இருந்த மைக் அணைக்கப்பட்டு background score தொடங்கியிருந்தது, அவர் சொன்ன thanks you கூட வரவில்லை; இந்தச் சம்பவத்தை மனதில் நிறுத்தி Glen Hansardஐ சட்டென்று arrogant என்று சொல்லி அடுத்த இடைவேளை முடிந்து வந்ததும் Markéta Irglová வை பேச வைத்தார். சரிதான் என்று நினைத்தேன்.

இரண்டு வாரத்திற்கு முன் ஹம்பி சென்று வந்திருந்தேன் இப்பொழுது தான் அந்த ஃபீலிங்க் குறையத் தொடங்குகிறது அத்தனை வெயில். ஹம்பியைப் பற்றி இரண்டே வரிகளில் சொல்லவேண்டுமென்றால், ஹம்பியைச் சுற்றிப் பார்க்க இரண்டு நாட்கள் நிச்சயம் போதாது! புகைப்படம் எடுக்க வாரக்கணக்கில் தேவைப்படுமாயிருக்கும். காஷ்மீர் போல இல்லாமல் ஹம்பிக்கு தனியாச் சென்றது தவறென்று நினைக்கிறேன் பொட்டல் காட்டில் நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் காமெரா தூக்கிக் கொண்டு அலைந்தது, சாதாரணத்தை விடவும் அதிக அலுப்பைத் தந்தது.

Lion in Hampi

Temple in Hampi

Small temple in hampi

Thungapadra river

Sunset in thungapadra

Nutrition ஒருவரை எங்கள் கம்பெனி அழைத்து வந்து விருப்பப்பட்டவர்கள் சென்று பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே அதில் விருப்பம் இல்லாமலே இருந்தேன், காலை உணவு உட்கொள்ளாமல், மத்யானம் கொஞ்சம் போல் எடுத்துக் கொண்டு, ஆறு ஏழு காப்பிகள் குடித்து பின்னர் ஹெவியான டின்னர் சாப்பிடுவது சரியில்லை என்பது தெரியாத ஒன்றில்லை. கட்டுப்பாடே இல்லாமல் சிக்கன் சாப்பிடுவது, உடல் உழைப்பே இல்லாமல் போன இந்தக் காலத்தில் பிரச்சனை என்று தெரிகிறது தான். கிரிக்கெட், வாலிபால், பூப்பந்து என்று ஒன்றும் விளையாடாமல் வெட்டியாய் கழியும் நேரம் நியூட்ரீஷியனை சந்திக்க விடாமல் செய்திருந்தது. ஆனால் ஒளிந்து கொள்வது எதற்கும் நன்மையல்ல என்று முடிவு செய்து சந்தித்திருந்தேன் கடைசியில்.

சுஜாதாவின் மரணம், புதன்கிழமை மதியம் ஹெவியான மதிய உணவிற்குப் பின்னும், கொண்டாட்டதிற்காக பப் சென்றுவிட்டு, தண்ணியடித்திருந்த நண்பர்களின் போதை தெளிவதற்காக Micheal Clayton படம் பார்த்துவிட்டு மனம் முழுவதும் மகிழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது அறிந்து கொண்டது. எப்பொழுதும் கூட்டமாகயிருக்கும் ஒரு இடத்தை பெரும்பாலும் விரும்பாமல் தனிமையை விரும்பும் எனக்கும் கூட, ஏகலைவன்களின் சில ஆயிரங்களில் ஒருவன் என்ற சட்டத்திற்குள் அடைத்துக் கொள்வதில் வருத்தம் இருந்ததில்லை. ஆனால் இப்படிச் சொல்ல ஆரம்பித்தால் கைகளில் மட்டுமல்ல கால்களில் கூட விரல்கள் இருக்க முடியாது இப்பொழுது எனக்கு. வருத்தமாகயிருந்தாலும், அவர் உடலளவில் ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டார் இன்னமும் கஷ்டப்படாமல் போய்ச் சேர்ந்துட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அய்யனாருடன் தேசிகனின் பதிவில் சுரேஷ் கண்ணன் போட்டிருந்த ஒரு பின்னூட்டம் பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது சொன்னதுதான் நினைவில் வருகிறது. "அய்யனார் அவர் இதுக்கு மேல் மாற்றி எழுத மாட்டார், தேவையில்லை, ஆனால் எழுதினால் எல்லோருக்கும் நல்லது" இதுதான் அது. சுஜாதாவிடம் ஆண்டாள் பற்றி இன்னமும் கொஞ்சம் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன், "அம்பலம் அரட்டை" மூலமாய் அவரிடம் நான் கேட்க நினைத்த அத்தனையையும் கேட்டிருக்கிறேன். இதன் தொடர்ச்சியில் ஒரு வெறுமை பரவத்தொடங்கியது அது சுஜாதாவின் மரணத்தின் மூலம் முற்றுப் பெற்றது. போய் வாருங்கள் சுஜாதா, அவ்வுலகத்து மக்களுக்கு பிங் பேங் தியரியைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் அங்கே இல்லை என்று உணர்த்துங்கள்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In Only ஜல்லிஸ் சுய சொறிதல் சுஜாதா

கடல் குதிரையும் சபிக்கப்பட்ட ஆண் ஜனமும்

வீட்டில் அக்கா உறங்கியதும் அனிமல் ப்ளானட் பார்ப்பது உண்டு. சமீபத்தில் நான் பார்த்த Most Extreme Mom's & Dad's(விலங்குகளில்) ஆச்சர்யப்பட வைத்த ஒன்று. விலங்கினங்களிலேயே குட்டியை வயிற்றில் சுமக்கும் ஆண் விலங்கு(மனிதனையும் சேர்த்துத்தான் - மனிதன் social animalலாமாம்) ஒன்றே ஒன்று தானாம். அதுதான் கடல் குதிரை, அதனால் Most extreme dad என்கிற பெருமை கடல் குதிரைக்குக் கிடைத்தது.

எங்கோ படித்த ஞாபகம் மனித இனத்தின் தொடக்கத்தில் இருந்தே பெண்களைக் கண்டு ஆண்கள் பயந்து வந்ததாக, எதனாலென்றால் பெண்ணால் மட்டும் தான் ஒரு உயிரினத்தை பிறப்பிக்க வைக்க முடிந்ததாகவும் அதனால் தான் அவன் பெண்களை தெய்வமாக வைக்க ஆரம்பித்தான் என்றும் எங்கே என்று நினைவில் இல்லை. கடவுள் மீது நம்பிக்கை இல்லாததால் இயற்கையின் மீது இந்த பழியை சுமத்துவதைத் தவிர வேறுவழியில்லை, ஆண்களிடம் இருந்து பிறப்பிக்கும் பாக்கியத்தை மறைத்துவிட்டதற்காக.

அறிவியல் உலகத்தின் அதிவளர்ச்சின் காரணத்தில் பிற்காலத்தில் ஆண்கள் குழந்தை பெற வைக்கும் சாத்தியம் நிறைவேறும் என்று நம்புவோம். கற்காலத்தில் இருந்த மனிதனால் இன்றைய சாட்டிலைட் உலகத்தை கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது அதைப்போலவே இன்று நாமும் இருக்கிறோம் அறிவியல் உலகம் படைக்கப்போகும் ஆச்சர்யங்களில் இந்த ஆண் பிரசவிக்கும் அதிசயமும் ஒன்றாக இருக்கவேண்டும்.

Men's breasts do have milk ducts

Men's breasts do have milk ducts, and their bodies produce oxytocin and prolactin, the hormones required for milk production. As of yet, there are no proven scientific examples of male breastfeeding, but there are reports of men who were able to produce milk through extensive stimulation of the breast and nipple. Yet this isn't a viable option for feeding babies, especially as no one is certain if male breast milk would be of the same quality and composition as female milk.



கடல் குதிரையில் இருந்து டாபிக் எங்கேயோ ஹைஜாக் செய்யப்பட்டுவிட்டது. ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம் கடல்குதிரைகள் தான்(இந்த ஃபேமிலியும் இன்னும் சிலரையும் சொல்லலாம் - கடல் டிராகன் ஒரு உதாரணம்). நிறைய பேர் அனிமல் ப்ளானட்டின் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். Most extreme mom's ம் கூட ஒரு நல்ல நிகழ்ச்சி தான் நான் மறுக்கவில்லை; ஆனால் எனக்கு இயல்பாகவே மற்றையது பிடித்திருந்தது.

ஆண்களாலும் பிள்ளை பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டால் உலகம் எப்படியிருக்கும் நிச்சயமாய் ஒரு சைன்ஸ் பிக்ஷன் கதை எழுத முடியும். சைன்ஸ் பிக்ஷன் என்றதும் நினைவிற்கு வரும் சுஜாதா ஐயாவை என்னால் ஒரு தீவிரமான ஆணாதிக்கவாதி என்று சொல்லமுடிந்தாலும் அந்த வம்பை இங்கே இழுக்கவில்லை. அதேபோல் சமீபத்தில் ஒரு நபர் நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு குங்குமத்தில் 'பெண்களை சுலபமாக ஏமாற்ற முடியும்' என்பதை திரும்பவும் நிரூபித்திருக்கிறார் என்ற அவருடைய பதிலை தூக்கியெறிந்துவிட்டு மற்றொரு கேள்வியான பெண்கள் இல்லாத உலகம் பற்றிய கேள்விக்கான பதிலை எடுத்துக் கொள்ளலாம்.

அவர் சொல்லியிருந்த பதில் எவ்வளவு காலம் அப்படியிருக்க முடியும் ஒரு நூற்றாண்டுக்குள் உலகம் மடிந்துபோய்விடும்(Exact ஆன வரிகள் கிடையாது நினைவில் இருந்து சொல்கிறேன்) என்று சொன்னார். ஆனால் அறிவியல் இந்த அதிசயத்தைச் சாதித்தால் ஒருவேளை அந்த நபர் கேட்டிருந்த கேள்விக்கான பதிலாக சுஜாதா மற்றொன்றை சொல்லியிருப்பார் என்று நம்பலாம்.

ஆனால் உயிரினங்களில் சில அரியவகை உயிரினங்கள் அழியும் பொழுதே அவற்றைக் காப்பாற்ற பெரிய இயக்கங்கள் வரும்பொழுது இத்தனை நூற்றாண்டுகளாய் உலக இயக்கத்திற்கு வழி செய்த பெண்களை ஒழித்துவிடுவதும் கூட சைன்ஸ் பிக்ஷனிலேயே சாத்தியமாகலாம்.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In Only ஜல்லிஸ் அகநானூறு சினிமா சுஜாதா பெங்களூர்

ஆண்கள் எல்லோரும் ஏமாளிகளா?

ஆஸ்திரேலிய அணியின் அண்மைய வெற்றியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை; இன்னும் ஐந்துபோட்டிகள் மீதமிருக்கிறது என்பதைத் தவிர. வழமை போல் இல்லாமல் மிடில் ஆர்டர் பாட்ஸ்மான்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது; அதனை சரிவர உபயோகித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அடுத்த ஆட்டத்தில் ரிக்கி பான்டிங் விளையாட வாய்ப்புக்கள் உண்டு. நானூறுக்கான வாய்ப்புக்களை எதிர்பார்த்தபடி நான் காத்திருக்கிறேன்.

=

கர்நாடகாவில் நடக்கும் குழப்பங்களால் பெங்களூருவின் அன்றாட வாழ்வில் பெரிய பாதிப்புக்கள் இல்லை. அலெக்ஸ் பாண்டியன் சொல்லியிருந்ததைப் போல் நான் அவ்வளவு ஓசூர் - பெங்களூர் ரோட்டை உபயோகிக்க மாட்டேன் என்பதால் அது தெரியாது. ஆனால் 'நம்ம மெட்ரோ'விற்காக மகாத்மா காந்தி ரோட்டை கந்தர கோலம் செய்திருக்கிறார்கள். பெங்களூரு டிராஃபிக் ஏற்கனவே ரொம்பவும் பிரசித்தம் இதில் இது வேறு.

=

காந்தியைப் பற்றிய கவியரங்கம் பார்த்தேன்(indeed கேட்டேன்) கலைஞர் டீவியில். பா.விஜய் மக்களைக் கவரும் படி கவிதைப் படிக்கிறார். 'காந்தி கடைசியா சொன்னது ஹே ராம், கலைஞர் முடிவாய்ச் சொன்னது No ராம்' என்று சொல்ல கரகோஷம் வானைப் பிழந்தது(கிளிஷே)' வாலி வராதது எனக்கு வருத்தமே வந்திருந்தால் நான் ரொம்பவும் ரசித்திருப்பேன். காந்தியைப் பற்றியாவது பாடியிருக்கலாம் என்றாலும் அழைத்திருக்கவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

=

கன்னட ஹீரோ, கன்னட(?) ஹீரோயின், கன்னட வில்லன், கன்னட தயாரிப்பாளர் சேர்ந்து ஒரு தமிழ்ப்படமாம். தேவுடா தேவுடா ரொம்ப நாட்களாக தியேட்டர் சென்று தமிழ்ப்படம் பார்க்காததால் வேறு வழியில்லாமல் 'மலைக்கோட்டை'க்குச் சென்றிருந்தேன். விஷாலின் ஆக்ஷன் காட்சிகள் பார்க்கும் படியிருந்தன; அதே போல் ஆஷிஷ் வித்யார்த்தி/ஊர்வசியின் காதல் காட்சிகள்(ஊர்வசி வித்யார்த்தியின் உறவு முறை எனக்குப் புரியலை) மற்றபடிக்கு நிறைய காட்சிகளின் landscape களில் மலைக்கோட்டை தெரிகிறது. பொன்னம்பலத்தை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். மற்றபடிக்கு படம் பக்வாஸ் தான். ப்ரியாமணி ஆம்பளை மாதிரி இருக்கிறார்(இது சன்மியூஸிக்கில் அவருடைய உரையாடலுக்கு பிறகான முடிவு அல்ல) அவருடைய மேக் அப்பும், ட்ரெஸ்ஸிக்கும் கேவலமாயிருக்கு.

=

பொல்லாதவன் படத்தில் 'எங்கேயும் எப்போதும்' ரீமிக்ஸ் பாடல் கேட்கக்கூடியதாய் இருக்கிறது.

=

ராயல் ஆர்சிட்டின் 'டைகர் ட்ரையல்' உணவகத்தின் பஃபே நன்றாகயிருக்கிறது. புதன் கிழமைகளில் மதிய உணவிற்கு பெரிய ஹோட்டலுக்குச் செல்லும் வழக்கம் போல் இந்த முறை இந்த ஓட்டலுக்குச் சென்றோம். முந்தைய வாரம் சென்ற 'இந்திரா நகர்' ன் 'ரொமாலி வித் அ வியூ' வை விட வெரைட்டிகளிலும் சரி, ருசியிலும் சரி நன்றாக இருந்தது. அதைப்போல் விலையும் குறைவே.

ரொமாலி வித் அ வியூ - 245 ரூபாய்
ராயல் ஆர்சிட் 'டைகர் ட்ரையல்' - 170 ரூபாய்.

இனி ஒவ்வொரு புதன்கிழமை மட்டும் பதிவெழுத உத்தேசித்திருக்கிறேன். வேறென்ன தூக்கத்தை கட்டுப்படுத்தத்தான் - பஃபே சாப்பிட்டுவிட்டு வந்து வேலை வேறு செய்யமுடியுமா என்ன?(பஃபே பற்றி செல்லா எழுதிய கவிதை(தானே?) இணைப்பாக!, பஃபே பத்தி எழுதியிருக்காருப்பா தேடிப்பாருங்க...)

=

இது நான் சமீபத்தில் வரைந்த இன்னொரு படம் - பெரிதாகப் பார்க்க படத்தில் கிளிக்கவும்.



=

ஒரு அகநானூற்றுப் பாடலும் அதற்கான விளக்கமும்.

அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்,
விளிநிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்,
குறுக வந்துதன் கூர்எயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல்,
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்-

முளிந்த ஓமை முதையலம் காட்டுப்,
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி,
மோட்டிரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப,
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்,
மாய்த்த போல மழுகுநுனை தோற்றி,
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்,
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர,
பரல்முரம்பு ஆகிய பயம்இல் கானம்
இறப்ப எண்ணுதிர் ஆயின்- 'அறத்தாறு
அன்று' என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல,

முன்னம் காட்டி, முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,

ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மாமலர்
மணிஉரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம், செலவே-ஒண்டொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே!

- எழுதியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஆனால் ஆச்சர்யமாக இருக்கிறது அகநானூற்றுப் புலவர்கள் எவ்வளவு ரசித்து ரசித்து இந்தக் கவிதைகளை எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது ;). அந்தப் பாடலுக்கு சுஜாதா ஐயா கொடுத்த விளக்கம்.(போன பதிவில் கொடுத்த டிஸ்க்ளெம்பர் இந்தப் பதிவுக்கும் ஒத்து வரும்.)

ஆறுதல் கூறுவதையும் பொறுக்காது, மாறுபட்ட முகமுடையவள்
கூப்பிட்டாலும் கேளாதது போல் இருப்பாள். தன்னந்தனிபோல் ஆனாள். மெல்லமெல்ல
அழகுமிகுந்த சிவந்த பாதங்கள் நிலத்தில் பதிய
அருகில் வந்து கூர்மையான பற்கள் தெரிய
வெறிதே போலிப் புன்முறுவல் பூக்கிறாள்.

பிரிந்து செல்வதை நான் உணர்வதற்குள்ளாகவே,
ஒளிவீசும் நெற்றியுடையவள் தான்உணர்ந்து
பிரியும் செயலைப் பற்றிய நினைவில் துயரடைகிறாள்.

பட்டுப்போன 'ஓமை' மரங்கள் உள்ள பழைய கானகத்தில்
பளிங்கு போன்ற நெல்லிக் காய்கள்
வட்டாடும் சிறுவர்கள் சேர்த்துவைத்ததுபோல் உதிர்ந்துகிடக்கும்!
கதிரவன் எரிக்கும் மலைச்சாரல் அது.

தீட்டியது போன்ற கூர்மையான முனையை உடைய
கற்கள் விரல் நுனிகளைச் சிதைக்கும் பாதை அது.
பரல்கள் தவிர வேறு தாவரமேதும் இல்லாத கானகம்.
அதைக் கடந்து செல்ல எண்ணுவீரானால்' - அது
அறமல்ல' என்று சொல்லப்படும் பழமொழி
வெறும் பேச்சுத்தான் என்பவள் போல
குறிப்புக் காட்டி முகத்தாலும் தெரிவித்தாள்.
அதை மட்டுமே எண்ணிய ஓவியம் போல் இருந்தாள்.
கண்விழிகளைத் திரையிட்ட கண்ணீரால் பார்த்தாள்.

உடலோடு அணைத்த புதல்வனது தலையில்
பனிநீர் சொட்டச் சூடிய பூச்சரத்தை
முகர்ந்து பெருமூச்சு விட்டாள், அப்போது பெரிய பூக்கள்
அழகிய உருவை இழந்து பொலிவற்று வாடின

அதுகண்டு, பிரிந்து செல்லும் எண்ணத்தைக் கைவிட்டேன்.
இப்போதே இப்படி இருப்பவள்
பிரிந்து சென்றால் பிழைக்க மாட்டாள்.

=

கடைசியாய் தலைப்பிற்கு; சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது அதில் ஒரு காதலனின் காரில் ஏறிக்கொண்டு காதலியை வீட்டை விட்டு வெளியேறுகிறார். வழியில் மறிக்கும் காதலியின் தந்தை காரைச் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு கடைசியில் உள்ளே உட்கார்ந்திருக்கும் தன் மகளைக் கூட கவனிக்காமல் 'குட் செலக்ஷன்' என்று சொல்வது போல் அமைத்திருந்தார்கள். ஜெஸிலாவைப் போல் எனக்கும் இந்தத் தலைப்பில் ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டும் என்று ஆசை தான். ஆனால் இல்லையா அப்படியெல்லாம் எழுதக்கூடாது.

=

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In சுய சொறிதல் சுஜாதா

பெயரில் என்ன இருக்குதுங்க சுஜாதா படங்காட்டல்

எப்பவுமே விகடன்.காம் ஓப்பன் பண்ணினா கற்றதும் பெற்றதும் முதலில் படிக்கிறது வழக்கம். இன்னைக்கு சுஜாதா சொல்லியிருந்த ஒரு விஷயம் சிறிது உறுத்தியது.

ராமானுஜன் என்றால், ராமனின் உடன்பிறப்பு. எனக்குப் பிடித்த பெயர்களில் அது ஒன்று. நான் மிகவும் வியப்பது மூன்று ராமானுஜர்களை! 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த, விசிஷ்டாத் வைதக் கருத்துக்களை நிறுவி, ஸ்ரீபாஷ் யம் தந்த ராமானுஜர் அதில் முதல்வர். கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் இரண்டாமவர். கவிஞரும், தேர்ந்த மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே. ராமானுஜன் மூன்றாமவர்....

சொல்லிவிட்டு அவரவர்களைப்பற்றி இரண்டிரண்டு வரிகள் சொன்னவர் கடேசியில் சொன்ன, "ராமானுஜன் என்ற பெயரில் ஏதோ இருக்கிறது!" சொன்னது தான் பெருங்கொடுமை. எனக்குக் கூடத்தான் ராமானுஜன் என்ற பெயரில் கணக்கில் முட்டை மார்க் வாங்கிய சிலரைத் தெரியும். அப்பக்கூட சொல்லுவீங்களோ ராமானுஜன் பெயரில் சில விஷயம் இருக்குன்னு.

என்னவோப் போங்க நல்லாயிருந்தா சரிதான்.

இது பெயரில் என்ன இருக்குதுங்க சுஜாதா, அடுத்தது படங்காட்டல்

ஒரே ரப்சர் பண்ணி இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு சென்று கிளப்பிக்கொண்டுவந்த புத்தகங்கள் ஒரு புகைப்படம்.( நன்றி இளவஞ்சி, டிசே - கான்செப்டிற்கு)



அடுத்து வருவது எங்கள் கம்பெனியின் வெளிப்புற அழகு இரவு வேளையில்.


Read More

Share Tweet Pin It +1

7 Comments

In Only ஜல்லிஸ் சுஜாதா பாப்லோ நெருதா

நெருடாபுருடா

சுஜாதா மீண்டும் தன்னுடைய வழமையைத் தொடங்கியிருக்கிறார்.(சரிதானா வாக்கியம்.)

"அலைகள்
பூக்கள்
குழந்தை
நண்பர்கள்
கவிதையும்கூட
அவ்வப்போது
அலுத்துப்போகிறது’

என்று சொல்லும் கனிமொழி, சென்ற தேர்தல் பிர-சாரத்தின்போது தமிழகமெங்கும் தன் தந்தையுடன் சுற்றுப்பயணம் செய்தபோது, மக்கள் முகங்களில் கண்ட ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பார்த்துப் பிரமிப்பாக, ஏன் பயமாகக்கூட இருந்தது என்கிறார். கொதிக்கும் மத்தியான வெயிலில், தலைவரின் ஒரு செகண்ட் தரிசனத்துக்காகக் காலையிலிருந்து காத் திருக்கும் இளைஞர்களையும், புதுசணிந்து வாசலில் வந்து நிற்கும் பெண்களையும் கவனித்து, ஒரு நீண்ட கவிதையாக எழுதியிருக்கிறார். படித்துப் பார்த்தேன். அலுக்கவில்லை.

அரவிந்தன் வழக்கம் போல் அட்டை போட்டு, ‘Bill Bryson-ன் ‘A Short History of Nearly Everything’ என்ற புத்தகத்தை அன்பளித்தார். ஸபானிஷ் மொழியில் இளங்கலை படிக்கிறார்.

‘தமிழ்க் கவிதைகளை ஸ்பானி-ஷில் மொழிபெயர்ப்பது எளிது. அங்கிருந்து இறக்குவதுதான் கஷ்டம். அதில் reflexive verbs ஏராளம்’ என்றார்.

இப்படி யாராவது உண்மை-யாகவே ஸ்பானிஷ் படித்து, தமிழில் உலவும் நெருடாபுருடாக்களைத் தெளிவாக்கலாம்."

எல்லாருக்கும் புரிதா இந்த நெரிதா மேட்டர். - இது நான்.

மொத்தம் பதினேழு ஓட்டுக்கள் ஆச்சர்யமாகயிருக்கிறது, ஒரு நபர் தனக்கு அந்தக் கதை சுத்தமாகப் புரியவில்லையென்று சொன்னதும் நினைவில் வருகிறது. ஓட்டுப்போட்ட அத்தனை நபர்களுக்கும் நன்றி.

முன்பு தமிழோவியத்திற்காக எழுதிய செகுவாரா பற்றிய குறிப்புகளையும் சேர்த்து.

என்ன ஒரு தொடர்பு, செகுவாராவிற்கு பாப்லோ நெருதாவை பிடிக்குமாம். அதிகம் படிக்கவும் செய்வாராம். ஆனால் பாப்லோ நெருதா ஒரு பாடிஸ்டாவின் ஆதரவாளராம். வேடிக்கை....

-----------------------செகுவாரா---------------------------


எனக்கு எப்பொழுதுமே ஒரு விஷயம் எப்படி எனக்கு தெரியக்கிடைத்தது என்பதனை யோசித்து ஒருவாறு உறுதிசெய்து கொள்வேன். அதாவது முதன் முதலில் எனக்கு செகுவாராவை தெரிந்ததெப்படி என்பதைப் போன்ற கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள சில மாலை நேரங்களை இழப்பதைக் கூட அனுமதிப்பேன் இப்படித்தான் ஒருமுறை செகுவாராவை எனக்கு எப்படி தெரியவந்தது என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆரம்பக்காலத்தில் இருந்தே கொஞ்சம் அமேரிக்கா என்றால் அலர்ஜி அதன் ஒரு பக்கமாய் தெரிந்து கொண்ட கியூபா நாட்டு சரித்திரமும் அதன் பின்ணணியில் இருந்த பிடல் காஸ்ட்ரோவும், செகுவாராவும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

த பைசைக்கிள் டைரிஸ் படம் பார்ப்பதற்கு முன்பே கொஞ்சம் அறிமுகம் இருந்தது. என்றாலும் எப்படி த ப்யூட்டிபுல் மைண்ட் பார்த்தபின் ஜான் நேஷ்ஷைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்ததோ அதைப்போல் இந்தப் படம் பார்த்தபின்னர் செகுவாராவைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன். சன்டிவியின் டாப்டென் மூவிஸில் சொல்வதைப் போல் இந்தப் படத்தை ஏற்கனவே ஏகத்திற்கு அலசிவிட்டதால் நேராய் விஷயத்திற்கு வருகிறேன்.

உலகம் முழுவதும் இப்பொழுதெல்லாம் புரட்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பிக்க முயலும் எல்லோரும் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை அல்லது ஆள் செகுவாரா(சேகுவாரா - ஆரம்பத்தில் இருந்து அப்படியே பழகிவிட்டேன் தவறிருந்தால் மன்னிக்க.) ஆனால் இதற்கெல்லாம் அவர் தகுதியானவர் தானா? உலகத்தின் எல்லா மூலைகளிலும் விடுதலைக்கான போர் என்பது நடந்து கொண்டேயிருக்கிறது. ஒருவருக்கு விடுதலைப்போராகப்படும் விஷயம் மற்றவருக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது. அப்படியிருக்க எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கியூபாவின் வெற்றிகரமான விடுதலையில் பங்கு கொண்டதற்காக இவருக்கு உலக அரங்கில் இருக்கும் மரியாதை இவருக்கு உரித்தானதுதானா? அப்படியென்ன சாதனையை செய்துவிட்டார் செகுவாரா? கியூபாவைத் தவிர்த்து அவர் போராட்டத்தில் இறங்கிய பொலிவியா மற்றும் காங்கோவில் அவருடைய போராட்டம் தகர்க்கபட்டது மட்டுமல்லாமல், அவர் உறுதியாக நம்பிக்கொண்டிருந்த அவர் வகையான கொரில்லாப் போரும் தோற்றுப்போனதுதானே. பின்னர் எந்தவகையில் அவரை உலகம் மிகப்பெரும் போராளியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கேள்விக்களுக்கான விளக்கங்களைத் தேடி அலைந்த சமயங்களில் எனக்கு கிடைத்த அல்லது நான் தெரிந்து கொண்டதாய் நினைக்கும் சில குறிப்புக்களை உங்களுக்கு கொடுக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல உலக அரங்கிலும் கியூப நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவைப் போன்றே கம்யூனிஸவாதியாக தவறாக கருத்தில் கொள்ளப்பட்டவர் செ, உண்மையில் செகுவாரா கம்யூனிஸ்டா என்றால் நிச்சயம் கிடையாது இதை அவரது மனைவியின் வார்த்தைகளிலும் இன்னும் ஏன் பிடல் காஸ்ட்ரோவின் வார்த்தைகளில் இருந்துமே அறிந்து கொள்ளலாம். ஆனால் இங்குதான் நாம் செகுவாராவின் வாழ்க்கையை நன்றாகக் கவனிக்க வேண்டும்.

கியூபா செகுவாராவின் சொந்தநாடு கிடையாது, அவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். அந்த நாட்டில் போராடிக் கொண்டிருந்தவர்கள், அவருக்கு வேறு எந்தவிதத்திலும் உறவும் கிடையாது. ஆனால் தனது மிகப்பிரபலமான லத்தீன் அமேரிக்க பைக் பயணத்தில் அவர் கண்டுகொள்ளும் மக்களின் இன்னல்கள் செவின் மனதை பாதிக்கின்றது. மக்களுக்காக போராடுவதற்காக செகுவாரா களத்தில் இறங்குகிறார். இன்னுமொறு விஷயம், செகுவாரா இளம் பிராயத்திலிருந்தே ஒரு ஆஸ்துமா நோயாளி.

இப்படி செகுவாரா தன்னுடைய போராட்டத்தை மக்களுக்காகத் தொடங்கியதால் தான், கியூபாவில் கிடைத்த வெற்றிப் பின்னர் கிடைத்த அரச உத்தியோகத்தை விடவும் மீண்டும் மக்கள் போராட்டத்தை உற்சாகமாய்த் தேர்ந்தெடுக்க உதவியது. கியூபாவின் விடுதலைப் போருக்குப் பின்னர், அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் தலைவராக இருந்து வந்த செகுவாராவிற்கும் முதலாவதான பிடல் காஸ்ட்ரோவுக்கும் சித்தாந்தந்தகளின் அடிப்படையில் சில கருத்துவேறுபாடுகள் இருந்துவந்தது. என்னதான் கம்யூனிஸ ரஷ்யாவின் உதவியால் மட்டுமே இயங்கக்கூடிய நிலையில் கியூபா இருந்தாலும். விடுதலைக்குப் பின் நேரடியாய் கியூபாவை கம்யூனிஸ நாடாக மாற்றுவதில் இருந்த பிரச்சனைகளை செகுவாரா உணர்ந்திருந்தார், மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முதலில் செய்து விட்டுத்தான் அவர்களை கம்யூனிஸ்ட்களாக மாற்றவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்துவந்தார்.

கியூபன் மிஸைல் கிரைஸில் எனப்படும், ரஷ்யாவின் அணுஆயத ஏவுகணைகள் கியூபாவில் கொண்டு வந்து வைத்திருந்து அமேரிக்காவை அலறடித்ததில் செகுவாராவின் பங்கு அபரிமிதமானது. ஒரு பேட்டியில் அந்த ஏவுகணைகளை இயக்கும் வாய்ப்பும் அனுமதியும் இருந்திருந்தால் (அவரிடம்) அந்த ஏவுகணைகள் அமேரிக்காவின் மீது நிச்சயமாய் வீசப்பட்டிருக்கும் என்று சொன்னவர் செ. அப்பொழுது மிகப்பிரபலமான ஒன்றாக பேசப்பட்டு வந்த மாவோயிஸத்தை (ரேபிட் இன்டஸ்டிரியலைஷேஷன்) கியூபாவில் நடைமுறைப்படுத்த நினைத்தார் செகுவாரா. ரஷ்யாவோ தங்களுடைய கம்யூனிஸ முறைகளை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் காஸ்ட்ரோவை வற்புறுத்தினர். உண்மையில் ரஷ்யா மற்றும் சீனாவிற்கிடையேயான பிரச்சனை கியூபாவிலும் செகுவாராவால் நீண்டது.

இந்தப் பிரச்சனையால் தான் செகுவாரா கியூபாவில் இருந்து வெளியேறி காங்கோவிற்கு சென்றாரர் என்றாலும், பிடல் காஸ்ட்ரோவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, கியூபாவிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் சுகமாய்க் கழித்திருக்க முடியும். அது மட்டுமில்லாமல் எந்த விதமான் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தவர் செகுவாரா. (பாடிஸ்டாவின் ஆர்மி தவிர்த்த ஆட்களையும் கொன்றார் என்பதற்கான காரணங்கள் வேறுஉண்டு.)

ஒரு மருத்துவராக வாழ்க்கையைத் துவங்கி, போராளியாகி அதில் வெற்றியும் பெற்று, அந்த நாட்டின் இரண்டாம் பெரும் தலைவராகவும் இருந்தவருக்கு மீண்டும் போராளியாக மாற வேண்டிய கட்டாயம் நிச்சயம் இல்லைதான். அதையும் மீறி மக்களுக்குக்காக போராளியாக முடிவெடுத்து அந்த போராட்டத்திலேயே உயிரையும் மாய்த்துக் கொண்டவர் செகுவாரா. அதற்குப் பின்னால் இருந்த அமேரிக்க தலையீட்டை மறைக்க முடியாது. தனியாளாக (சிறிய கும்பலுடன்) அமேரிக்க ஆதரவு பொலிவிய ராணுவத்தை எதிர்த்து போராடும் நம்பிக்கையை அவருக்கு அளித்தது கியூப விடுதலைச் சரித்திரம். அதைப் பொறுத்தவரையில் ஒரு இடத்தில் நடந்தது இரண்டு இடங்களில் நடக்கவில்லை அவ்வளவே. ஆனால் இன்று பொலிவியாவின் ஆட்சியில் நடந்த மாற்றம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செகுவாரா விட்டுச்சென்ற கொரில்லா யுத்தத்தின் காரணத்தாலே.

இன்றும் கியூபாவை அடக்கிவிடத் துடிக்கும் அமேரிக்காவிற்கும், அது பிடல் காஸ்ட்ரோ உயிரோடு இருக்கும் வரை நடக்காது என்பது தெரிந்துதான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் செகுவாராவின் பேருக்கும் புகழுக்கும் முழுமையான தகுதியுடையவர் அவர்.


Credits, Vikatan.com, Tamiloviam.com.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சுய சொறிதல் சுஜாதா தேன்கூடு

சுஜாதாவும் என் கதைக்கான சில விளக்கங்களும்

தொடர்கதை தொடரா வந்தா படிக்கிறதில்லைன்னு ஒரு முடிவில் இருந்தேன், ஆனால் வாத்தியார் முடிவை மாத்த வைச்சிறுவாரு போலிருக்கு. ஆனால் அந்தக் காலத்தில் இருந்த அளவிற்கு கணேஷ் வசந்த் கிரேஸ் இப்ப இல்லைங்கிறது உண்மை. பிரகாசமா மெக்ஸிகோ சலவைக்காரியுடன் ஆரம்பித்திருக்கிறார்.

தேர்தல் முடிஞ்சிருச்சு. என்னமோ நான் நினைச்சது நடக்கலை, கலைஞர் வருவார்னு தெரியும் ஆனால் தனியா வருவார்னு நினைத்தேன். ஒரு விதத்தில் ரோசாவசந்த் எழுதியிருந்ததில் எனக்கும் உடன்பாடு உண்டு. இதே ஜெயலலிதா பதவிக்கு வந்திருந்தால் இரண்டு நாளைக்கு சோறு தண்ணீர் இறங்காது. இதை நான் போனமுறை உணர்ந்திருக்கிறேன். ஆனால் காரணமெல்லாம் தெரியாது. மனசு ஏனோ அலைபாயும். இதை நான் ஆரம்பக்காலங்களில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் தோற்றாலும் உணர்ந்திருக்கிறேன்.

எனக்கு பெரும்பாலும் தேன்கூடு நடத்துவதைப்போன்ற போட்டிகளில் விருப்பமிருந்ததில்லை, மக்களை தேர்ந்தெடுக்க சொல்லும் இதுபோன்ற போட்டிகளில் இருக்கும் குழப்பம் எனக்கு பிடித்ததில்லை. ஆனால் கொஞ்ச நாளாகவே மனதிற்குள் சுற்றிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை எழுத கிடைத்த வாய்ப்பாக இதை நினைத்தேன். அதனால் தான் எழுதினேன். சிலர் அந்தக் கதையில் சில பாதிப்புகள் இருப்பதாக சொன்னார்கள். நான் பாதிப்புகள் இல்லாமல் இருப்பதற்காக பெரும்பாலும் உட்கார்ந்து திருத்துவதில்லை. என்னைப்பொறுத்தவரை, எந்த கதையின் தாக்கமும் இல்லாமல் தான் எழுதினேன்.

எங்கள் கம்பெனியின் இமெயில் முகவரியில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது, இதுபோல் உங்கள் ப்ளாக்கை படிப்பேன் தற்சமயம் தான் தெரிந்தது நீங்கள் இங்கே வேலை செய்கிறீர்கள் என்று சந்திக்கலாமா என்று கேட்டு. கேட்டு வந்த கடிதம் எழுதியவர், ஒரு ப்ளோர் மேலே தான் உட்கார்ந்திருந்தாலும் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே ஞானசேகர் என்ற ஆர்இசி யில் படித்த மாணவர் ஒருவர் என் கம்பெனியில் இருந்து தமிழில் வலைபதிகிறார். சிலசமயம் நாங்கள் சந்தித்து வலைபதிவு நிலவரங்களை பேசுவதுண்டு. (புனே வலைபதிவர் வட்டம்.)

இரண்டொறு நபர்களை உள்ளே இழுத்துவிட்டேன், ஆனால் அவர்கள் தமிழ்மணத்தைப் பற்றி கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டேன். அதே தேர்தல் 2060 தலைப்பிற்கு ஒரு நகைச்சுவை கதை எழுதலாமா என்று யோசித்து வருகிறேன். அவ்வளவு பிரகாசமாக வராதென்று தெரியும் ஆதலால் தற்போதைக்கு விட்டு வைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சிறுகதை சுஜாதா

சுஜாதாவை கடத்தப்போறேன்

பெர்லின் - ஜெர்மனி

"சுஜாதாவை கடத்தப்போறோம்**."

மோகன் சொன்னதும் வந்தியின் முகத்தில் வலது புருவம் உயர்ந்ததை தவிர வேறு எந்த உணர்ச்சி மாற்றமும் நிகழவில்லை.

"என்ன பிளான்? "

"அதே பழைய பிளான்தான்."

"ம்ம்ம்... சொல்லு."

"வழக்கம் போல நம்ம வேலையெல்லாம் முடிஞ்ச கடைசிநாள், கிளம்பறதுக்கு இரண்டு மணிநேரம் முன்னாடி, கடத்தப்போற இடம் கடற்கரை, அரைமணிநேர வேலை, வேலை முடிஞ்சதும் மூணு மணி நேரத்துக்கு ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்துட்டு கிளம்புறோம். அதுவும் தேவைப்பட்டாத்தான்."

"வெப்பன்ஸ்?"

"ஒரு பிஸ்டல், இம்போர்ட்டட் மாஸ்க், ஒரு கார்."

"மற்றபடி..."

"இந்த முறை ரொம்ப தூரம் போகமுடியாது, எந்த இடமும் வேண்டாம், அதனால நோ புக்கிங், எல்லாமே காருக்குள்ள தான்."

"காருக்குள்ளயா?"

"ஆமாம் காருக்குள்ளத்தான். ஓகே டன். இப்ப உன்நேரம். நெகட்டிவ் கொஸ்ஸின்ஸ். "

"முதல் கேள்வி எழுத்தாளர் சுஜாதாவைக் கடத்தி என்ன செய்யப்போற. பணம்ங்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நம்மக்கிட்ட இல்லாத பணமா. வேற என்னதான் ரீஸன். "

"கொஞ்சம் கேள்வி கேட்கணும்."

"எதைப்பத்தி?"

"கடவுளைப்பத்தி."

"இதை கடத்திட்டு வந்துதான் கேட்கணுமா? நேரிலே போய்க்கேட்டா ஆகாதா. அவரும் நம்ம
ஆளுதானடா. "

"என்ன ஐயங்கார்னு சொல்றியா."

"அதில்லைடா, அன்னிக்கு படிக்கலை 'யாருப்பா அது மைக்ரோசாப்ட் நாங்கல்லாம் லினக்ஸ்'னு ஒரு ஆனந்தவிகடன்ல. நாமளும் லினக்ஸ்னு சொல்லுவோம். நம்ம பேக்ரவுண்டையும் சொல்லுவோம். நிச்சயமா பேசுவாருடா. அப்ப கேளு உன் கேள்வியெல்லாம். "

"அப்பிடிப்போனா ஒருவேளை அவங்க சொந்தக்காரங்க இருக்கலாம். இல்ல உதவியாளர்ன்ற பேர்ல ஒருத்தராவது இருக்கலாம், அவங்களுக்காக அவர் தன்னோட நிலையை மாத்திச் சொல்லலாம் இல்லியா. அதுனால நம்ம இடத்துல தனியா வைச்சிக்கேட்டா சொல்லுவார்ல. நாமயென்ன மிரட்டப்போறமா இல்ல வேற எதாவது பண்ணப்போறமா. அழகா உட்காரவைச்சி கேட்கப்போறோம். "

"அந்தக் கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன்னுட்டார்னா?"

"அவர்க்கிட்ட கேட்க கேள்விக்கா பஞ்சம். லினக்ஸப்பத்தி, ழ இயக்கத்தைப்பத்தி,
மைக்ரோசாப்ட், பில்கேட்ஸ், கமல், சங்கர், மணிரத்னம், அவரோட பேரன், இன்கம்டாக்ஸ், மேஜை நாற்காலிகள், க்வாண்டம், ரிலேட்டிவிட்டி, ஐன்ஸ்டீன், வெண்பா, கட்டறை கலித்துரை, ராமானுஜர், அர்த்த சாஸ்திரம், சாண்டில்யன், நாலாயிர திவ்ய பிரபந்தம், கொஞ்சம் டயாபடீஸ், நிறைய பைபாஸ் சர்ஜரி இப்பிடி எவ்வளவோயிருக்கு முக்கியமா அந்த ஒரு எழவும் தெரியாத ஓட்டிங் மிஷினைப்பத்தி. ஆனா ரொம்ப முக்கியம் கடவுள் பத்தியது தான்."

"கடவுளைப்பத்தியென்ன கேட்கணும்."

"எல்லா விஷயத்திலும் முடிவா ஒரு கருத்தை சொல்பவர் கடவுள் விஷயத்தில் மட்டும் ஒரு முடிவுக்கே வரமாட்டேங்குறார். அவர மாதிரி ஜினியஸ்ஸெல்லாம் கடவுள் இல்லைன்னு ஒத்துக்கிட்டா. சொல்லி வாதாடுறதுக்கு ஒரு ஆள் கிடைப்பாருல்ல. தனக்கு புரிந்த, தெரிந்துகொண்ட விஷயத்தை சுஜாதா எல்லார்க்கும் சொல்வார்னு நான் உறுதியாக நம்புறேன். அதனால தான் கேட்கிறேன். எவ்ளோபேர் கேட்டிருக்காங்க தெரியுமா. எங்ககிட்ட உன் நாத்திகத்தையெல்லாம் பேசாதே. சுஜாதா, சுஜாதான்னு சொல்றியே அவரே கடவுளை நம்புறார் தெரியுமான்னு. "

"இங்க பாரு தாஸ், அவரால சில விஷயங்களைத்தான் சொல்ல முடியும். முதல்ல மக்களுக்கு புரியுமான்னு பார்க்கணும். பத்திரிக்கைல ஒத்துக்குவாங்களான்னு வேற யோசிக்கணும். விகடன்லயே சில விஷயங்களை ஒத்துக்கலைன்னு அன்னிக்கு ஆதங்கமா இளமை விகடன்ல எழுதல. அதுமாதிரிதான் இதுவும். அதுவும் இது கடவுள் பத்தியது. ஒரு ஒரு தனிமனிதனுக்கும் இதைப்பத்தி கருத்து வேறயாயிருக்கும். அதான் அப்ப அப்ப சூசகமா எதாவது எழுதவார்."

"என்ன எழுதுறார்?"

"காஸ்மாலஜியைப்பத்தி சொல்லும் போது அதன்மூலமாத்தான் பிரபஞ்சத்தின் ஆரம்ப கணங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. அது வரை சென்று கடவுள் எங்கேயாவது ஒளஇந்திருக்கிறாரானு தேட முடிந்ததுனு சொல்லிட்டு இன்றுவரை அகப்படவில்லை சொல்லியிருக்காருல்ல, அப்பிடின்னா என்ன அர்த்தம். இல்லைன்னுதானே சொல்லவர்றார்."

"அட நீ வேற ஒரு தடவை இப்பிடித்தான். அரியென்று சொல்வார்... அல்லாவென்று
சொல்வார்... அப்பிடின்னு ஆரம்பிக்கும் ஒரு கவிதை, முடிவுல கடவுள் என்று யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறேன்னு சொல்லி முடிப்பார் கவிஞர். இந்த கவிதையை குறிப்பிட்டுட்டு கீழே இவர் எழுதுறார் இதே நம்பிக்கையில் தான் நானும் வாழ்கிறேன்னு. இதுக்கு என்ன சொல்ற. அதனால நாம இரண்டுபேரும் பேசிக்கிறதால இதுக்கு தீர்வு கிடைக்கும்னு தோணலை. அது போகட்டும், போன தடவையைப்பத்தி என்ன விவரம் கிடைத்தது."

"இல்ல அந்த நடிகை நடந்ததைப்பத்தி யாருக்கிட்டையும் சொல்லவேயில்லை, சொல்லப்போனா நம்ம இரண்டு பேரையும் ரொம்ப பிடிச்சுபோயிருக்கும்னு நினைக்கிறேன் அதனாலதான் அன்னிக்கு கேட்ட எல்லா கேள்விக்கும் பட்டு பட்டுன்னு பதில் சொல்லிச்சு. நாம மறுபடியும் நேர்ல போய்ப்பார்த்தா, நல்லாவே பேசும்னு நினைக்கிறேன்" சொல்லிவிட்டு வந்தியத்தேவன் சிரித்தான்.

"நாமன்னு ஏண்டா என்னையும் சேத்துக்குற, நீ போய்ப் பார்த்தான்னு சொல்லு, நம்ம அப்பா எப்பிடித்தான் உனக்கு இப்பிடி சரியான பேர் வைத்தாரோ வந்தியத்தேவன்னு சரியான வழிசல்டா நீ. புடிச்சபாரு ஒருத்தியை கடத்துறதுக்கு அதுக்கு நான் எவ்வளவோ தேவலை. "

"சரி சரி, ஆளு ரொம்ப வயசானவரு, ஏதோ இளமையா எழுதுரதால தப்பா நினைச்சுராத. அவரோட பாதுகாப்புக்கு..."

"எல்லாம யோசிச்சாச்சு, அதனாலத்தான் வெளியெடத்துக்கு போகாம காருக்குள்ளயேன்னு சொன்னேன். காரும் ஏதாவது பெரிய ஆஸ்பிடலுக்கு 100 மீட்டருக்குள்ளயே சுத்துறமாதிரி பார்த்துக்கோ."

சென்னை - இந்தியா

"டேய் நல்லா பாத்தியா அதே இடம்தானே." மோகன் கேட்க.

வந்தி சொன்னான் "அதே பெஞ்சும் தான், பேசாம பெஞ்சோட தூக்கிட்டு போய்டுவோமா."

"நக்கலெல்லாம் போதும், நாளைக்கு கடத்தணும் ஞாபகம் இருக்கில்ல. சரி என்ன பண்ணப்போறோம் சொல்லு?"

"நான் கார்ல இருப்பேன், அவர் தனியா இருக்கிற எதாவது ஒரு சமயம், நீ பக்கத்தில போய்.
உன்கிட்ட இருக்கிற பிஸ்டலை எடுத்துக்காட்டி, இந்த மாதிரி உங்களை கடத்தப்போறோம்னு
சொல்லு. அப்புறம் காரைக்காட்டி அந்த வண்டியில இருக்கிற ஒரு நபர்கிட்ட லாங் ரேஞ்ச் ரைபிள் இருக்கு. சுத்தம் போடாம வந்திட்டீங்கன்னா. அரை மணிநேரத்தில விட்டிருவோம். இல்லைன்னா நடக்கிற எதுக்கும் நாங்க பொறுப்பு இல்லைன்னு சொல்லு. வந்துட்டார்னா நீ சொன்ன மாதிரி அரைமணிநேரம் அப்புறம் நேரா ஜெர்மனி. சுத்தம் போட்டுட்டார்னா ரெண்டு வழி. ஒன்னு ரெண்டு பேரும் தப்பிக்கணும். இல்லைன்னா ஒரு ஆள் தப்பிச்சு இன்னொரு ஆளை கேஸ்லேர்ந்து காப்பாத்தணும். சரியா?"

"சரிதான், சத்தம் போட்டுட்டார்னா நான் ஒரு கன் ஷாட் பண்ணுரேன். நீ வந்திடு. ஜன
நடமாட்டம் அதிகமா இருக்கிற இடத்தில என்னை இறக்கி விட்டுட்டு. நீ இன்னொரு இடத்துல இறங்கிட்டு வேஷத்தயெல்லாம் களைச்சிட்டு ஸே·ப்க்கு போய் உன்னுடயதெல்லாம் எடுத்துக்கிட்டு நேரா ஏர்போர்ட் வந்திரு. ஓகே வா?."

ஆறு மணி - சென்னை கடற்கரை

எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. சுஜாதா வந்து அந்த பெஞ்ச்சில் உட்கார்ந்து சிறிது
நேரம் ஆகிவிட்டது. அந்த இடத்தை நோக்கி மோகன் போய்க் கொண்டிருக்க, சிறிது நேரத்தி
ல் அந்த இடத்தில் கொஞ்சம் பரபரப்பு மோகன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி தூக்கி காட்டுகிறான். இது பிளான் கேன்சல் ஆகிவிட்டதிற்கான சிக்னல். இதையெல்லாம் சிறிது தூரத்தில் காரிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் காரை அந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்றான்.

எட்டு மணி - ஜெர்மன் விமானம்

என்ன வேண்டுமெனக் கேட்டக் கொண்டிருந்த ஜெர்மானிய பணிப்பெண்ணிடம் வழிந்துவிட்டு,

"என்னதாண்டா ஆச்சு?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.

"யாரோ அவரோட செல்போனை சுட்டுட்டாங்க, அந்த இடம் கொஞ்சம் பரபரப்பாகிவி
ட்டது. அதனால இப்ப கடத்தவேணாம்னுதான் கேன்ஸல் பண்ணிட்டேன். எங்க போய்வி
டப்போறார். அடுத்த முறை அந்த பெஞ்சோட தூக்கிருவோம்." சொல்லிவிட்டு சிரித்தான் மோகன்தாஸ்.

"சரி நாம கடத்தி, நீ அந்த கேள்வியை கேட்டிருந்தா அவர் என்ன பதில் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிற?".

"ரிட்டையர் ஆகி, உனக்கும் பைபாஸ் ஆபரேஷன் பண்ணினா தெரியும்னு சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்." சொல்லிவிட்டு கீழே தெரியும் கடலைப்பார்த்து மீண்டும் சிரித்தான் மோகன்தாஸ்.

வந்தியத்தேவன் ஜெர்மானிய விமானப்பணிப்பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தான்.

** திரு ரங்கராஜன் அவர்கள் ஆனந்தவிகடனில் அவருடைய செல்போன் தொலைந்ததைப் பற்றி சொல்ல, மனதில் தோன்றிய ஒரு சிறு புனைவு. இது ரொம்ப முன்னாடியே எழுதியதுதான்னாலும் திரும்பவும் ஒருமுறை.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

Popular Posts