In மோகனீயம்

மோகனீயம் - சென்னை

சிந்து வாய்ச்சுகம் அளித்தது என்னை மயக்கிவிட்டது என்றே ஊகித்திருந்திருக்கவேண்டும், அவள் உடலைத்தொட்ட பின் எனக்கு அவள் மனதைத் தொட வேண்டிய நிலை. நான் முயற்சி கூட செய்யவேண்டிய அவசியமிருக்கவில்லை என்று தெரிந்து தான் இருந்தது. என்ன காரணமோ என்னை விரும்பும் பெண். நானாகப் போட்டுக்கொண்ட வேலியொன்று தான் இருந்தது இடையில், அதையும் அவள் வலிந்து விலக்கியபடியிருந்தாள். அன்றைக்கு நான் இளமை என்பதைப் பற்றி தொடர்ச்சியாய் யோசித்தப்படியிருந்தேன், எப்பொழுதில் இருந்து இளமையில் இருந்து விலகினேன் என்று நினைவில் இல்லை, எனக்கு இளம் பெண்கள் மீதான விரும்பம் கல்லூரியில் படிக்கும் பொழுதே இல்லாமல் போனது. பள்ளி இறுதி படிக்கும் பொழுதே வலிந்து அபார்ட்மென்ட்டில் இருந்து நடுத்தர வயது பெண்ணொருத்தியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். அவள் குழந்தைக்கு விளையாட்டு காட்டுகிறேன் பேர்வழி என்று தொடர்ச்சியாய் அவளை நெருக்கியபடியே இருந்தேன், அவள் கணவனுடன் சண்டை போட்ட பொழுதுகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன். எதேட்சையாய் ஒரு நாள் அவள் கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்ததைப் போட்டுக் கொடுத்து சண்டையைப் பெரிதாக்கி அவளுக்கே மட்டுமான ஒரு மோசமான தருணத்தை உபயோகப்படுத்திக் கொண்டேன். கணவனை பழி வாங்குவதாய் நினைத்து அவள் என்னுடன் உறவு கொண்டாள். அதுதான் முதல் பொழுதாய் இருக்க வேண்டும், இளம் பெண்களை விட மத்திம வயது பெண்கள் எனக்கு அணுகுவதற்கு சுலபமாக இருந்தது காரணமாகயிருந்திருக்க வேண்டும். பின்னர் மனம் சீ சீ என்றாகும் வரை நீண்ட அந்த உறவின் பின் இளம்பெண்கள் மீதான ஆசை கொஞ்சம் விட்டுப் போனது. கூடவே வசீகரித்த இளம்பெண்கள் சிலர் மற்ற எல்லாவற்றிற்கும் ஒத்துழைத்து உடலுறவிற்கு மறுத்தது கூட காரணமாயிருக்கலாம். அப்பொழுதுகளில் இருந்து தட்டிப் பறிப்பதில் ஆர்வம் இருந்ததில்லை, பெரும்பாலும் வசீகரமான இளம் பெண்களிடம் அதைத்தவிர சுவாரசியமாய் ஒன்றுமில்லாமல் இருந்தது. இப்படியே தொடர்ந்த நான்காண்டு கல்லூரி இறுதியில் நான் இளம் பெண்களுடன் உறவு வைத்திருந்தாலும் அவர்களை சற்றேறக்குறைய வெறுக்கத் தொடங்கியிருந்தேன். திருமணமான அல்லது ஆகாத என்னைவிட வயதில் மூத்த பெண்களிடம் இருந்த ஒரு சுதந்திரம் இளம் பெண்களிடம் எனக்குக் கிடைத்ததில்லை.

அறையில் பொங்கி வழிந்து கொண்டிருந்தார் நுஸ்ரத் ஃபத்தே அலிகான், கவ்வாலி இசை. நான் ராஹத்திலிருந்து நுஸ்ரத்தை அடைந்திருந்தேன். சிந்து என்னால் நேரடியாக நுஸ்ரத். போதையில் ராஜபோதை நுஸ்ரத்துடையது, அலி அலி அலி என்று மனதில் நினைத்தால் உள்ளில் பெருகி ஓடக்கூடிய இசை, ஹோம் தியேட்டரில் கசிந்து அறையெல்லாம் நிரம்பியிருந்ததால் நான் நெகிழ்ந்திருந்தேன். சிந்துவும் கூட. பாடல் முடிந்து பரவிய அமைதியில் மூழ்கியிருந்தோம், எவ்வளவு காலம் தெரியாது. காசினோக்கள் போல் என் அறையில் கடிகாரம் கிடையாது. முதல் முறை அவளை என்னருகில் அழைத்தேன், அந்த முகம் ஆச்சர்யத்தில் துளிர்த்தது.

“நான் சென்னை போறேன், என்கூட வர்றியா?”

என்ன எதற்கு என்றெல்லாம் அவள் கேட்கவில்லை, “நுஸ்ரத்து பெரிய ஆள் தான்.” என்றாள். நாங்கள் சென்னைக்கு விமானத்தில் வந்தோம். அவளிடம் கண்டிஷன் போடவில்லை, ஆனால் அவள் ஒழுங்காக உடையணிந்து வந்திருந்தாள். மிதமாய் மேக்கப் அணிந்திருந்தாள், ஸ்கர்ட்டும் ஷர்ட்டும் அதற்கு மேல் ஒரு கோட்டும் அணிந்திருந்தாள், அவளின் உடைகள் எனக்கு எப்பொழுதுமே பிடித்திருந்தது, உள்ளாடைகள் இல்லாமல் இருப்பது தான் அவளின் பிரச்சனை. அன்று அணிந்திருந்தாள். உற்சாகம் அவளில் துள்ளிக்குதித்தது. நான் செய்வது தவறென்று உணர்ந்தாலும் வேறுவழியில்லை.

“ஹேய் நீ ரொம்ப அழகாயிருக்க”  ப்ளைட்டில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளிடம் வழிந்தேன். அவள் பதிலெதுவும் சொல்லாமல் சிறிது நேரம் என்னையே பார்த்தபடியிருந்தாள். நான் அப்படி ஒரு பெண்ணிடம் சொல்லி பல காலம் ஆகியிருந்தது, ஆனால் எப்பொழுதும் அது செய்யும் வேலை இப்பொழுது அவளிடம் பலிக்கவில்லை. அதற்குக் காரணம் இருந்தது, அவளுக்கும் ஏதோ புரிந்திருக்க வேண்டும். பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபரிடம் பேச்சுக் கொடுத்தாள், நான் வெட்கப்படாமல் அவள் பக்கம் திரும்பி அவள் காது பக்கம் காற்றை ஊதினேன். அலட்சியப்படுத்தியவள் உரையாடலில் தொடர்ந்தாள். நான் தூங்கி அவள் தோள்களில் விழித்தேன், கண்கள் மட்டும் கொஞ்சம் மேக்கப் போட்டிருந்தது இன்னும் கருமையாய். அவள் அன்று காலையிலேயே கூட அப்படி வந்திருக்கமுடியும், ஆனால் அவள் ஃப்ளைட்டில் மாறியிருந்தாள். நான் கருப்பை விட கருநீலம் தான் நான் விரும்பும் ஐ ஷாடோ என்று சொல்லவில்லை. ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு நேராய் பீச்சிற்கு வந்தோம், டெல்லி வாழ்க்கையில் பீச் ஒரு குதிரைக்கொம்பு - இல்லாதது. குளிர்கால மெரினா அந்த மதிய வெய்யலில் நிறைந்திருந்தது. எங்களுள் இல்லாமல் போயிருந்த குழந்தைமையை கடற்கரை மீட்டுக் கொடுத்தது.

கடல் நீரில் ஆடுவது, பின்னர் வெய்யிலில் உட்கார்ந்து பேசுவது என்று நாங்கள் தொடர்ந்து ஒருவரை நோக்கி ஒருவர் முன்னேறிக் கொண்டிருந்தோம். அவள் எப்பொழுதும் செய்வது தான் இந்தமுறை என்னிடம் பதில் இருந்தது, நான் மூளையின் நரம்புகளில் ஒளித்து வைத்திருந்த மீதமிருந்த என் இளமையின் புள்ளிகளை தூண்டில் போட்டு இழுத்துவந்தேன். ப்ளைட்டிலேயே அவள் ஆச்சர்யப்படுவதை தொலைத்து விட்டிருந்தாள். நான் நாடகமாகத்தான் தொடங்கினேன், ஆனால் அந்தப்புள்ளியில் தொடர்ந்து நிலைக்க முடியவில்லை. இருந்த கொஞ்ச நஞ்ச கூச்சமும் மறைந்த பின்னால். அவள் காதில் ‘I love you' என்று கிசுகிசுத்துவிட்டு கடலுக்குள் மறைந்தாள். அவள் ஆயிரம் வழிகளில் இதை முன்னமே சொல்லியிருக்கிறாள், ஆனால் அன்றைப்போல் அல்ல. என் பதிலுக்கான காத்திருப்பும் இல்லை.

நான் அவளை அங்கே தான் நகர்த்த விரும்பினேன், விரும்பினேன் என்றால் விரும்பாமல் விரும்பினேன். நாங்கள் கடற்கரையை விட்ட நகர விரும்பவேயில்லை, அவளின் ‘I love you'ற்கு அப்பால் கொஞ்சம் பேச்சு குறைந்துதான் போயிருந்தது மௌனம் இடையில் இருந்தாலும் உடல்களில் இல்லை, அவள் என்னை நெருங்கி உட்கார்ந்திருந்தாள்.

நாங்கள் கடலை பிரிய முடியாமல், மனமில்லாமல், தயங்கி, அந்த பிரம்மாண்டத்தை மனதில் நிறையும் மட்டும் பிடித்துகொண்டு ஹோட்டல் திரும்பினோம், அவள் ரெஸ்டாரெண்டில் ஆர்டர் செய்துவிட்டு அறைக்குச் சென்று திரும்பினாள். பெண்ணல்லவா கடலில் தொலைத்திருந்த மேக்கப் உடன் அவள். த்ரீ கோர்ஸ் டின்னர் சாப்பிட்டு விட்டு அறைக்கு மீண்ட நான், ரேடியோவில் தேடி ஒரு சேனலைப் பிடித்தேன். ஒரு கிங் தான் வாங்கியிருந்தோம். எங்களுக்குள் நான் உருவாக்கியிருந்த அவள் விழுந்திருந்த சூழ்நிலைக்கு ஏற்றப் பாடல்கள். இளையராஜாவின் ‘இது ஒரு நிலாக் காலம்’ போய்க் கொண்டிருந்தது. “கண்ணாடி முகம் கண்டு கண்கள் கூசும், வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்” அவளுக்கு நான் விவரித்தேன் பாடல் வரிகளை. “பருவ பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது”. குளித்து வரக் கிளம்பினேன், அந்த இரவு என் வரையில் அங்கே நிகழ்ந்தது அன்று, ஏற்கனவே நான் நிகழ்த்திப் பார்த்தது தான், அவள் பக்கம் ஊகிக்கத்தான் முடியும் ஆனால் நான் ஊகித்ததை விடவும் சுலபமாகத்தான் இருந்தது. குளித்து முடித்து வந்ததும் அவள் கருப்பு விக்டோரியா சீக்ரெட் இரவு ஆடையில் இருந்தாள். இன்னமும் இளையராஜா ரேடியோவில் ‘நினைவோ ஒரு பறவை’ ஒலித்துக் கொண்டிருந்தது.

“ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதே அது என்ன தேன்”
“அதுவல்லவோ பருகாத தேன், அதை இன்னும் நீ பருகாததேன்”
“அதற்காகத்தான் அலைபாய்கிறேன்”
“தந்தேன் தரவந்தேன்”

ஒரு சிறுகதை ஓடிக்கொண்டிருந்தது பாடலில், அவள் தமிழறிவால் என்றாலும் இது எவ்வளவு புரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அவள் கண்களில் காதல் வழிந்தது.

“பனிக்காலத்தில் நான் வாடினால், உன் பார்வை தான் என் போர்வையோ”
“அணைக்காமல் தான் குளிர்காய்கிறேன், அதற்காகத்தான் மடி சாய்கிறேன்”

பேச்சுவார்த்தை என்ற மடத்தனத்தை விலக்கி நான் சிந்துவை நெருங்கினேன். வெட்கத்தில் சிலிர்த்தாள், அவள் வெட்கத்தை அதற்குமுன் வெளிக்காட்டியிருந்திருக்க வேண்டும் ஆனால் நான் அறிந்ததில்லை. அவளிடம் நான் கம்பீரமான பெண்மையையே அறிந்திருந்தேன். அந்த இரவு அவளுக்கு அளிக்கப்போகும் அதிர்ச்சி அறிந்ததால் என் வரையில் அதற்கு முன் ஒரு அசாதாரணமான இரவை அவளுக்கு அறிமுகப்படுத்த நினைத்திருந்தேன். மனதளவில் தயாராகியிருந்ததை உடலளவில் முடிக்க வேண்டியது மட்டும்.

“இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை”

“மௌனமே சம்மதம் என்று ஏங்குதே மன்மத வண்டு.
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு”

எழுந்து வந்து என்னைக் கட்டிப்படி நாக்குகள் சுழன்ற சுகமான ஒரு முத்தத்திற்குப் பிறகு என்னை கீழே தள்ளி இடுப்பு நோக்கி நகர உத்தேசித்தவளை நிறுத்தி, சாய்த்து அவளை படுக்க வைத்து நெற்றியில் தொடங்கினேன். அவள் கண்களை மூடிக்கொண்டாள், எத்தனை வருடங்களாய் அவளை அலைக்கழித்தேன் என்று நினைவில் வரவில்லை. எல்லாவற்றையும் மறந்து அவளை சந்தோஷப்படுத்தவேண்டும் என்பதே மேலோங்கியது. அவளுக்கு எனக்கு ஒரு அற்புதமான இரவைத் தரவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்க வேண்டும், ஆனால் அதே எண்ணம் மனதில் இருந்த என்னால் அவளை கட்டுப்படுத்தி நான் செய்ய நினைத்ததை முடிக்க முடிந்திருந்தது, என்ன இருந்தாலும் என்னிடம் சூழ்ச்சியிருந்தது அவளிடம் காதல் மட்டுமே, பொங்கி வழிந்த காமமும்.

முத்தமல்ல அந்த சூழ்நிலையே அவளை மலர்த்தியது. கண்கள் மூக்கு கன்னம் என்று நகர்ந்த முத்தவழியை உதட்டுக்கு நீட்டாமல் அவள் காதுக்குள் நகர்த்தினேன். நான் ஊகித்திருக்கவில்லை உமையாளுக்கான அதே சிலிர்ப்பு அவளிடம், ஒரு நிமிடம் கூட நீடிக்கவிடவில்லை சிந்து, தலைமுடியைப் பற்றி மேலிழுத்தாள். நான் இன்னும் ஆரம்பித்திருக்கவேயில்லை. அவள் கைகளை அடக்க வேண்டியிருந்தது, துள்ளிய உடம்பை கட்டுப்படுத்த அவளால் முடிந்திருக்கவில்லை, என் காதைக் கவ்வினாள், பல் பட்டது. ‘சாரி’ சொல்ல ஆரம்பித்தவள் இதழ்களைப் பற்றினேன். ஒத்துழைத்தாள். என் கை ஒன்று அவள் மார் ஒன்றிற்கு அதுவாய் நீண்டது.  இதுவரை பார்த்து ரசித்ததை உணரும் தருணம், நான் கான்ஸைன்ஸை கழற்றி வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவளிடம் அவசரம் இருந்தது, நான் முலைகளில் முகம் பொதித்து ஆராய்ந்து கொண்டிருந்தேன், அவள் தவிப்பதை தடுமாறுவதை உணர முடிந்தது. பழக்கதோஷம் கடித்துவைத்தேன், தலையில் தட்டினாள். அவள் கைகள் என் இடுப்புக்கு நகர்ந்தது, தள்ளிவிட்டேன். நான் அவள் இரவு உடையை மொத்தமாய் விலக்கி நேராய் அவள் இடுப்பில் முகம் புதைத்தேன். அவள் அந்த இரவை ஊகித்திருக்க வேண்டும் என்று அவளின் சவரம் செய்யப்பட்ட அந்தரங்கம் உணர்த்தியது. நான் தலையைத் தூக்கி அவளைப் பார்க்க நினைத்தேன், இரண்டு கைகளால் அவள் என் தலையை தன் இடுப்பில் பொருத்தினாள். வழமை போல் நீண்ட நாக்கு பரிட்சையம் ஆவதற்குள் அவள் என்னை வெளியில் இழுத்துவிட்டாள். உக்கிரமான உடலுறவுக்கு அவள் என்னை தயார்ப்படுத்தினாள், நான் மிஷனரிக்கு அவளை நகர்த்த மறுத்து ஏறி அமர்ந்து, ஆரம்பத்தில் வேகத்தில் ஒத்திசைவில்லாமல் தொடங்கிய உறவை, அவள் போக்கிற்கே இசைந்து கொடுத்து சீராக்க பெரும்பாடு பட்டேன். அவள் உச்சத்தை நோக்கி நகரத்தொடங்கியதை உணர்ந்து அதனோடு ஒன்றுபட ப்ரயத்தனம் செய்தேன். அவள் உச்சமடைந்து சாய்ந்தாள். இளமை, பழக்கமின்மை - ஊகித்தேன். சிரித்தேன். இப்படித் தொடர்ந்த அந்த இரவு முடிவதில் விருப்பமில்லாதவள் போல் தொடர்ந்து சீண்டியபடியிருந்தாள். பின்னர் நான் உச்சமடைந்து, அவளைத் தயார்ப்படுத்த மீண்டும் கிளிட்டோரஸை வாயிலெடுத்தேன், மேலிழுத்தவளை வம்பிடியாய் அடக்கிய சிறிது நேரத்தில் உச்சமடைந்தவள் மழை போல் பொழிந்தாள், கடைசி நேரத்தில் முகத்தை எடுத்தவள் நெஞ்சு முழுவதையும் நனைத்துவிட்டாள். என்னை மேலிழுத்த காரணம் பின்னர் விளங்கியது. “I squirt”  என்று சொல்லி துடைத்துவிடத் தொடங்கினாள். கடமை உணர்ச்சியில் மீண்டும் இடுப்பை நோக்கி நகர்ந்தவளை இழுத்தணைத்து கொண்டேன். இளையராஜா இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தார். அவளிடம் சொல்வதற்கு என்னிடம் ஒன்றிருந்தது. பிரச்சனைக்குரியதாய்.

-

டெல்லியில் பனிக்காலம் பின்னிரவுகளில் எலும்புகளைத் தொடும் குளிர் நாள் ஒன்றில், ஸ்வெட்டரும் குல்லாயுமாய் மொட்டைமாடியில் நுரையீரலை உணர்வதற்காக சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த பொழுதில் உமையாள் மேலேறி வந்தாள். அப்படியான பொழுதுகளை அவள் உருவாக்குவதில்லை, கணவனுக்கும் மகளுக்கும் தெரியும் என்கிற பொழுதிலும் கூட.

“நீ சென்னைக்குப் போகணுமே! சிந்துவையும் கூட்டிக்கிட்டு.” நான் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் கண்களில் வெறுமையை மீறி ஒரு தீற்றலாய் துக்கம்.

“சிந்துவோட அப்பா இறந்துட்டாரு!” என்றாள். மனம் சட்டென்று ஆர்மி மேஜரை நினைத்துப் பின்னர் சிந்துவின் உண்மையான அப்பாவில் நிலை கொண்டது. அவள் சிந்துவோட அப்பான்னு ‘இவரை’ எத்தனை பேரிடம் சொல்லியிருப்பாள். நான் இரண்டாவது மூன்றாவதாயிருக்கலாம். சிந்துவிற்குத் தெரியுமா என்றே தெரியவில்லை எனக்கு. நான் அவளிடம் சிகரெட் பாக்கெட் ஒன்றை நீட்டினேன், எடுத்து வைத்து புகையை உள்நிறுத்தி பெருமூச்சு விட்டு வெளியேற்றினாள். அவள் கணவனிடம் அனுமதிவாங்கி அவர் வீட்டிலேயே நடந்த நிகழ்வுதான் என்றாலும் அவள் தேர்ந்தெடுத்த நபருடன் அந்த உறவிற்குப் பிறகு தொடர்பில்லை என்றே நினைத்துவந்தேன். அந்த நபர் விரும்பியது கூட அதுதான். ஒருவேளை மரணம் சிந்துவை நகர்த்தியிருக்கலாம்.

”சிந்துவிற்கு விஷயம் தெரியுமா?” இரண்டையுமே மையப்படுத்திக் கேட்டேன், அவள் தந்தையென்று தெரியுமாவும் இறந்து போனது தெரியுமாவும் சேர்த்து. அவள் பொதுவாய் இல்லையென்று தலையாட்டினாள். நெருங்கி வந்து கைகளைப் பிடித்தபடி, “என்னால முடியாது நீதான் செய்யணும்.” நான் தர்க்க நியாயங்கள் பேசி அது தவறு என்று சொன்னேன். “என் சூழ்நிலையைப் புரிஞ்சிக்கோ விசு” அன்றைய இரவு பனிவெளியில் நீண்டது. சிறிது நேரத்தில் அவள் என் அணைப்பிற்குள் வந்தாள். ஒன்றுமே பேசாமல் கழிந்தது காலம். நான் சிந்துவைக் காதலிக்காமலிருக்கலாம், ஆனால் அவள் என்னை காதலித்துவந்தாள், நான் இந்த விஷயத்தை அவளிடம் சொன்னாள் அது அவளுக்கு நான் செய்யும் பெரும் துரோகம் என்று உணர்ந்தே இருந்தேன்.

------------------------------------------------------------------------------------------------------

“அதெல்லாம் ஒரு காலம், புருஷனை விட்டுட்டு வீட்டுக்குப் போறதுங்கிறது முடியாத காலம், அடிச்சி மண்டையை உடைச்சி கொடுமை பண்ற புருஷன்களை விட்டுட்டு கூட பொண்டாட்டிங்க போக மாட்டாங்க. நான் அவரு செக்ஸ் வைச்சிக்க என்னால் முடியாதுன்னு சொன்னதுக்காக போக முடியாது. இன்னிக்கு செக்ஸுங்கிறது பெரிய விஷயமா இருக்கு, ஆனா முந்தில்லாம் அப்படி கிடையாது. அவரு அப்பவே நீ என்ன வேணும்னாலும் செய்துக்க ஆனா எனக்கு மரியாத குறைவு வராம செஞ்சிக்கன்னாரு. நான் முதல்ல அதெல்லாம் பரவாயில்லை மீரா மாதிரி இருந்துட்டு போறேன்னு சொல்லியிருக்கேன். என்ன செய்ய நானும் பாவம் தானே, எனக்கு அப்ப 16 வயசுதான் இருக்கும். பின்னாடி அவரோட பார்ட்னரோட பொண்டாட்டி கூட்டிக்கிட்டு வந்து விட்டார், நான் கூட உன்கிட்ட சொன்னேனே, முதல்ல ஒன்னுமே புரியலை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நாங்க பழகிக்கிட்டோம். அப்பவே எங்கிருந்தோ டில்டோ மாதிரி ஒன்னை வாங்கிவந்திருந்தார். என்ன உறவோ அவர் பார்ட்னர் என்னை அண்ணின்னு தான் கூப்பிடுவார், இவர், பார்ட்னர் பொண்டாட்டியை தங்கச்சின்னு கூப்பிடுவார். காம்ப்ளிகேட்டடான ரிலேஷன்ஷிப்.

அவருக்கு ஆர்ட்ஸ் மேல ரொம்ப விருப்பம், சினிமா காரங்க, நாடகக்காரங்க, இசை கலைஞர்கள்னு வருஷம் முழுக்க டெல்லிக்கு வரும் தமிழர்கள் இவரைப் பார்க்காம டெல்லியைவிட்டு போக மாட்டாங்க. இவரு ராணுவத்தில பெரிய பதவிக்கு வர வர, இவரோட சோஷியல் அந்தஸ்து பெரிசாகிக்கிட்டே போச்சு. இதில பெரும்பாலும் தண்ணியடிப்பாங்க, இவரு மிலிட்டிரி சரக்கு சப்ளை பண்ணுவார், ஸ்வெட்டர் வாங்கிக் கொடுத்து, கார் வைச்சு கொடுத்து சபாக்கு அழைச்சிட்டு போறது அப்புறம் முடிஞ்சதும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து சரக்கு ஊத்திக் கொடுத்து அப்புறம் அள்ளிப்போட்டு ஹோட்டலில் விடுறவரைக்கும் பண்ணுவார். சாப்பாடு மத்த விஷயங்களை நான் பார்த்துப்பேன். என்னவோ அப்படி ஒரு பைத்தியம் கலை மேல. எல்லா நடிகைகளையும் நான் நேர்ல பாத்திருக்கேன், அப்புறம் கொஞ்சம் இந்தப் பக்கம் கேரளா அந்தப்பக்கம் கர்நாடகா, ஆந்திரான்னு நாங்க ஆர்கே நகர்ல இருந்த வீடு வருஷம் முழுக்க ஜெகஜ்ஜோதியா இருக்கும்.

ஆனா பிரச்சனை என்னான்னா கொஞ்ச நாள்லயே எல்லோரும் குழந்தை பத்தி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களோட நான்கு சுவரைத்தவுத்தி எங்க விஷயம் நாலு பேருக்கு கூட தெரிஞ்சிருக்காது. நான் அப்படி நடந்துக்கிட்டதில் அவருக்கு ரொம்ப சந்தோஷம், சமூகத்தில் அவரு பேர் கெடற மாதிரி நான் எதுவுமே செஞ்சது கிடையாது அப்பல்லாம். தயங்கித்தயங்கி தான் இதைப் பத்தி கேட்டாரு என்கிட்ட, ஒரு குழந்தை வேணும்னு. நான் கூட முதல்ல ட்ரை பண்ணப்போறாரோன்னு நினைச்சேன், அவரு இல்லை யார் மூலமாவது செஞ்சிக்கலாம்னாரு. எனக்கு துளிகூட விருப்பமில்லை, நான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு சொன்னேன். அவரால ஏத்துக்க முடியல, உனக்குத் தெரியுமா தத்து எடுக்குறதுக்கு ரொம்பப் பெரிய மனசு வேணும். சொல்லப்போனா எனக்கும் அது இல்லை. நான் அவர் எப்படியாவது ஒரு தடவை முயற்சி செஞ்சி பார்ப்பாருன்னு நினைச்சேன். ம்ஹூம் அவர் என்னமோ அது துரோகம்னு நினைச்சிட்டார். நான் கம்ப்பள் பண்ணலை, ஆனா இது ஒரு பெரிய பிரச்சனையாகி, அவரை தப்பா பேச ஆரம்பிச்சப்ப. என்னால பொறுத்துக்க முடியலை. அவரு சொன்னாரு நம்ம வீட்டுக்கு வர்றவங்க யாரையாவது செலக்ட் பண்ணு நான் பேசிப்பார்க்கிறேன்னு. எனக்கு பயங்கர காமடியாருந்துச்சு. அவரு ராணுவத்துல இன்ட்டலிஜன்ஸ் பிரிவுக்கு வந்துட்டாரு பெரிய லெவல் பொசிஷன். எனக்கு இருபதோ இருபத்தொன்னோ ஞாபகம் இல்லை. ஒரு கர்நாட்டிக் பாடகர் டெல்லிக்கு வந்து பாடுவார். மத்தவங்க மாதிரியில்லாம ரொம்ப ஆச்சாரம்னு எங்க வீட்டில் தான் தங்குவார் கூட.. அப்பவே வயசு நாப்பத்தஞ்சு அம்பது இருக்கும். சபால பாடி முடிச்சி வந்ததும் இவங்க பேசி பின்னாரி பாட்டுக்கச்சேரி வீட்டில் நடந்துன்னு ரொம்ப ஜோராயிருக்கும். நான் தான் பர்ஸனலா அவரை கவனிச்சிப்பேன், ஒரு தகப்பனார் மாதிரி. அவரு எதுக்க இல்லைன்னா பலருக்கும் கண்பார்வை மாறும், கொஞ்சம் ஃபிளர்ட் பண்ணுவாங்க, ஆனா இவருக்கு நான் ஒரு குழந்தை மாதிரி. வருஷாவருஷம் வருவாரு, கல்யாணமானதிலிருந்து எல்லா வருஷமும் நான் தான் அவரைப் பார்த்துக் கொண்டேன். ஒரு நாள் நல்ல போதையில் இவர் தனிப்பட அவர்கிட்ட கேட்டிருக்கார். விஷயத்த சொல்லி. எனக்குக் கூட தெரியாது. கொஞ்ச நேரம் மேலையும் கீழையுமா அவரைப் பார்த்தவர். பட்டுன்னு சரின்னுட்டாராம்.

இவருக்கு கால் கொள்ளலை, தமிழ்நாட்டில் பெரிய மகான் மேதைன்னு சொல்லுவாங்க அவர. தன்னால கொடுக்க முடியாத ஒன்றை தன் மனைவிக்கு அவர் கொடுப்பாருன்னா அதைவிட எதுவும் கிடைச்சிடாதுன்னு சந்தோஷம். என்னை தனியா குல்லு மணாலிக்கு கூட்டிக் கொண்டு வந்து விஷயத்தைச் சொன்னாரு. எனக்கு இது பெரிய அவமானமா இருந்துச்சு, ஆனாலும் இதை நான் செஞ்சே ஆகணும்னு வாய்விட்டு கதறினார். இரண்டு நாள் காரண காரியங்களைச் சொன்னார், தன்னால எதனால முடியலைன்னும் சின்ன வயதில் தனக்கு என்ன நடந்ததுன்னும் நிறைய சொன்னார். என் மனதை மாற்றும் ரகசியம் அவருக்கு அதற்குள் கை வந்திருந்தது. சரின்னு ஒத்துக்கிட்டேன், எனக்கு மனதில அவரு ஒரு கடவுள் மாதிரி பிம்பம், தமிழ்நாட்டுல பலருக்கும் அப்படித்தான், அவர் கூட செக்ஸா எப்படின்னு எனக்கு மனசு கிடந்து அலைபாய்ஞ்சிச்சு. அவர் வயசும் என் வயசும் கூட பதற்றத்தை ஏற்படுத்துச்சு. உடம்பு சரியில்லைன்னு சொல்லி எங்க வீட்டில் பதினைஞ்சி நாள் தங்கினார். நான் அவரோட சிஷ்யை மாதிரி தான், எனக்கு பாட்டெல்லாம் வராது, கேக்கக்கூட தெரியாது, சினிமா பாட்டு மட்டும்தான். என்ன நினைச்சாரோ தெரியாது தனியா எனக்காக பாட்டு பாடுவார், கர்நாடக சங்கீதம் பாடிட்டு, சினிமா பாட்டு பாடிக்காட்டுவார். சொல்லிச் சொல்லி சிரிப்பார், அவர் அந்த மாதிரி யாருக்கும் செஞ்சதே கிடையாதுன்னு. நாங்க சரியான காலத்துக்காக காத்திருந்தோம். நான் அவர்கிட்ட சில நிபந்தனைகள் போட்டேன், அவர் என்கிட்ட சில நிபந்தனைகள் போட்டாரு. நான் எதுக்காக ஒத்துக்கிட்டீங்கன்னு சொன்னாதான் நான் ஒத்துப்பேன்னு சொன்னேன். நான் கொஞ்சம் அழகு அதில எனக்கு கொஞ்சம் கர்வம் இருந்துச்சு, ஒருவேளை என் அழகில மயங்கிதான் ஒத்துக்கிட்டாரோன்னு எனக்கு ஒரு சின்ன சபலம் இருந்துச்சு. அவர் சிரிச்சார் உன்னைவிட பேரழகிகள் என்கிட்ட படிச்சாங்க, பழகினாங்க, ஆனா நான் இத யாருக்கும் செஞ்சதேயில்லை – விந்துதானம் – உன்கிட்ட செய்யறதுக்கு காரணம் இருக்கு. எனக்கு பெரியவா ஒருநாள் கனவில் சொன்னார் இந்தமாதிரி நடக்கும், ஒத்துக்கோன்னு. எனக்கு பெரியவா பேச்சு மீறமுடியாதுன்னார். ஆனா என் குழந்தைன்னு யார்கிட்டையும் சொல்லக்கூடாது சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன்னார். நாங்க ஒத்துக்கொண்டோம். அந்தக்காலத்தில சொல்லுவாங்கள்ல கர்ணன் பொறந்த கதைன்னு, அதுமாதிரி தான். அது ப்ராப்பர் செக்ஸ் கூட கிடையாது. என்னை ஈரமாக்கிக்க சொல்வார், விளக்கெல்லாம் அனைத்தபின்னாடி, ஒரு சின்ன அகல்விளைக்கை ஏற்றிக்கொண்டு வந்து உள்ள விட்டுடுவார். இயக்கமெல்லாம் கிடையாது, கொஞ்ச நேரத்தில் கொட்டிட்டு எடுத்துட்டு போய்டுவார். நான் என்னத்த கண்டேன் – சொல்லிச் சிரித்தாள் – எனக்கு குழந்தை உருவாகும்னு நம்பிக்கையே கிடையாது, அஞ்சு ஆறு நாள் இதே தான். நான் அவரை நேக்கடா பார்த்த மாதிரி கூட ஞாபகமில்லை. இதைப் பத்தி சொல்லி உத்தரவு வாங்கினது மட்டும் தான் இவரு, அதற்குப் பிறகு என்ன நடந்ததுன்னு கூட கேட்கலை.

என்ன வரமோ தெரியாது சிந்து வயிற்றில் தங்கிவிட்டாள், அவரை நான் அதற்குப் பிறகு பார்க்கலை, ஆனா அவருக்கு சிந்து பிறந்தது தெரியும். வளந்து ஆளாகியிருக்கிறதும் தெரியும். ஆனா எதுவுமே கேட்டுக்க மாட்டார். அப்புறம் இப்பத்தான் மூணுவருஷம் முன்னாடி இந்திய அரசோட மிகப் பிரபலமான உயரிய விருது வாங்க வந்தப்ப சிந்துவைக் கூட்டிக் கொண்டு போய் நிறுத்தினோம், எங்கள் மகளாய், கண் இமை கூட மாறாம, ஆசிர்வாதம்னு சொல்லிட்டுப் போய்ட்டார். நான் பின்னாடி ஏண்டா ஒரு பெரிய தமிழ்சினிமா ஆக்டரா சொல்லியிருக்கலாம்னு நினைச்சிருக்கேன் விளையாட்டுக்கு, ஆனா சிந்துவோட அப்பா மாதிரி வராது. ஒரு வார்த்தை ஒரு ஆள் தெரியாது, இவருக்கு எனக்கு இப்ப உனக்கு அவ்வளவுதான். மேபி எங்க இவரோட பார்ட்னருக்குத் தெரிஞ்சிருக்கும், அதுவும் சிந்துவுக்கு அப்பா இவரில்லைங்கிற அளவில்தான்னு நினைக்கிறேன். நீ கவனிச்சிருக்கியா சிந்துவுக்கு பாட்டுன்னு உசுரு, எங்க நான் இதை அவக்கிட்ட சொல்லப்போய் அவளுக்கு பாட்டுன்னா பிடிக்காமப் போய்டுமோன்னு எனக்கொரு பயம். அப்படிப்பட்ட வயசு அவளுக்கு. அவரு உயிரோட இருக்கிற வரைக்கும் சிந்துகிட்ட சொல்லமாட்டோம்னு சத்தியம் பண்ணியிருக்கோம், ஆனால் நான் இப்ப எங்க இவர்கிட்ட சொல்லணும்னு வற்புறுத்திக்கிட்டிருக்கேன். தன்னைப்பத்தி கேவலமா நினைச்சிடுவாளோன்னு அவரு பயப்படலை, ஆனா சிந்துவோட உண்மையான அப்பாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீற அவருக்கு விருப்பமில்லை.” சொல்லி நிறுத்தினாள்.

நான் என் காதுகளில் கேட்ட கதை நிஜமாக இருக்குமோ இல்லை பொய்யோ என்று இரண்டும் பக்கமும் நின்று கத்தி வீசிப் பார்த்தேன். நிஜமென்று தான் தோன்றியது. பிறப்பில் வருவது எதுவுமில்லை என்று நான் நம்பினாலும் சிந்துவுக்கு பாடல்கள் மேல் இருந்த ஆர்வம் தற்செயலானது என்றே நினைத்துவந்தேன். உமையாள் சொல்லும் சிந்துவின் தந்தையை நன்றாகவே தெரியுமெனக்கு, இப்படியும் இருக்கமுடியுமா என்று நினைத்து ஆச்சர்யமடைந்தது நினைவில் இருந்தது. மக்களின் மூடநம்பிக்கை தான் எத்தனை விசித்திரமானது, இப்பொழுது சிந்து இப்படியாக உருவானதின் காரணகர்த்தா யார்? கனவா? பரந்துபட்டிருந்த என் வாழ்வில் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று நெருங்கியவர்கள் செய்த நிறைய காரியங்கள் தெரியும். கனவில் வந்ததையெல்லாமா நம்புவார்கள்.

இந்த விஷயத்தை சொல்ல நான் அந்தப் பொழுதை உபயோகித்தேன். அவளுக்கு என் சாமர்த்தியம் பிடித்திருக்கவில்லை. கோபம் தலைக்கேறி கன்னத்தில் அறைந்தவள் “Please get out” என்று கத்த அங்கிருந்து வெளியேறினேன்.

------------------------------------------------------------------------------------------------

நான் செய்வதறியாது அவள் வெளியே போ என்று சொன்னதும் நேராய் பாருக்கு வந்திருந்தேன். அந்த நடுஇரவில் பாரில் என்னைத் தவிர மொத்தமே இரண்டு பேர் தான் இருந்தனர். கொஞ்சம் உற்றுப் பார்த்ததில் எதிரில் சில இருக்கைகள் தள்ளி உட்கார்ந்திருந்தது அப்பொழுது தமிழ்நாட்டின் பிரபலாமாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு ஸ்டார். நான் கண்டுகொள்ளாமல் உட்கார்ந்து வோட்கா வாங்கி ஆரம்பித்தேன், கடைசிவரையிலும் உமையாள் என்னை சிந்துவிடம் இதைப்பற்றி பேசவைத்திருக்கவேண்டாம் என்றே நினைத்தேன். எனக்கு வேறு வழியே தெரியவில்லை, வேண்டுமானால் அவளை நான் நன்றாகத் தண்ணியடிக்க வைத்து, நானும் ஏத்திக் கொண்டு அவளிடம் பேசியிருக்கலாம், சொல்லமுடியாது காலையில் அவள் நான் சொன்னதை மறந்திருக்கவும் வாய்ப்பிருந்தது. அவள் இரண்டு மூன்று மணிநேரத்தில் நான் உட்கார்ந்திருந்த பாருக்கு வந்தாள். முகம் வீங்கியிருந்தது. அழுதிருக்க வேண்டும். நான் அப்பொழுதே நல்ல போதையில் இருந்தேன், மனம் வேறு மொத்தமாய்க் குழம்பியிருந்தது. வாகாக கன்னம் கிடைத்தும் பளீரென்று அறைந்தாள். நான் மறுகன்னத்தைக் காட்டுவதைத் தவிரவேறு வழியில்லாமல் இருந்தேன்.

சர்வரிடம் ஆர்டர் செய்து வோட்கா அருந்தியவள், வெகுநேரம் என்னிடம் பேசவில்லை. அந்த நடிகர் எங்களைக் கடந்து போனார், நாங்கள் கண்டுகொள்ளவில்லை. தொல்லைசெய்யாததால் எங்களைப் பிடித்துக்கூடயிருக்கும் அவருக்கு.

”You bloody cheated me!” அரற்றினாள் முதலில். நான் பதில் சொல்ல நினைக்கவில்லை.

“Bitch I should slap her. She is playing with me, I became that predictable. Isnt it?” போதை ஏற்கனவே தலைக்கேறத் தொடங்கியிருந்தது. “You don’t deserve me. Even that bitch don’t deserve me.” அவள் ஆங்கிலத்திலிருந்து இறங்கிவருவாளா என்று யோசித்தபடியிருந்தேன். பழக்க தோஷம் திட்டும் பொழுது ஆங்கிலத்திற்கு மாறியிருந்தாள். ம்ஹூம் அப்படித் தெரியவில்லை. “Do you know how much I love you? why are you doing this to me, this is not fair at all from both of you”. நானும் உமையாள் இந்த விஷயத்தில் சிந்துவிடம் நேர்மையாக நடக்கவில்லை என்று நினைத்திருந்தேன். ”you both fuckers should be ashamed of yourselves.” நான் உமையாள் இதைப்பற்றி ஆரம்பித்த பொழுதே அப்படித்தான் ஆகிப்போனேன். அப்பொழுது சொன்னால் புரியவா போகிறது சிந்துவிற்கு. “you played to my emotions, you know I never felt this much pleasure in a single day or month or year even. But this all drama, isn’t it?” அவள் காதல் ஆண்டாளின் காதலை ஒத்தது, அதை நான் அறிந்தேயிருந்தேன். நான் அவளை எவ்விதத்திலும் உற்சாகப்படுத்தியதில்லை, இந்த விஷயத்தில் ஆனால் நான் கடற்கரையில் அவள் காதலை இன்னும் மானசீகமாக உணர்ந்தேன், ஆனால் சிந்து சொல்வது தான் உண்மை எல்லாம் நடிப்பு. மனம் கேட்கவில்லை இன்னும் கொஞ்சம் வோட்கா அருந்தினேன். அவள் நிலை தடூமாறத்தொடங்கியிருந்தாள். “நாம இதை நாளைக்கி பேசலாமா?” கேட்டேன். ஒரு நிமிடம் பார்த்தவள், “Go fuck yourself” என்றாள். நான் மீண்டும் வோட்காவில் கவனம் செலுத்தினேன். அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தவள் வாயிலிருந்து “Cunt” என்று கோபம் வெளிப்பட்டது. “She is not my mom, fucking cunt” என்றவள் ஓவென்று அழத்தொடங்கினாள். நான் இது சரிவராது என்று அவளை இழுத்துக் கொண்டு நாங்கள் இருந்த அறைக்கு வந்தேன். இரண்டு மூன்று முறை என் கைகளில் இருந்து விலகி நடக்க முயன்றவள், தடுமாறியதால் இறுக்கிப்பிடித்து அழைத்து வந்தேன். அவள் தொடர்ச்சியாக அழுதபடியிருந்தாள். நான் கௌச்சில் உறங்கினேன். எப்படியோ தூங்கிப்போன என்னை நடுஇரவில் எழுப்பினாள் நிர்வாணமாய்.


”Fuck me” அது புதிதல்ல, முன்னமே அவள் செய்ததுதான் என்றாலும் இப்பொழுது அது வேறு பரிமாணத்தில். நான் அவளிடம் லாஜிக் பேசினேன். “நீ ரொம்ப குடிச்சிருக்க, காலையில் கேளு. செய்யலாம்” என்றேன். “Bastard…” என்று ஆரம்பித்து வாய் நிறைய திட்டிவிட்டு இரண்டு அறைவிட்டுப் போய் படுத்துக் கொண்டாள், என் தூக்கம் கெட்டது. மதியம் எழும் பொழுது தலைவலி உயிரை எடுத்தது.அவள் விழித்திருந்தாள். நான் எழுந்ததைப் பார்த்ததும், “Okay lets fuck” என்றாள், நான் ஆச்சர்யத்தில் நொடித்துப்போனேன். அந்த ஒன்றரை விநாடியில் மனம் ஓட்டிப்பார்த்த முந்தைய இரவின் தொடர்ச்சியாய், என்னிடம், “Fuck me” மட்டும் தான் இருக்கவில்லை. ஆனால் அவளிடம் அது தான் இருந்தது. “I know the way to punish you now, torture you. The way how you tortured me all along, knowing I love you and you fucked my mom.” இடைவெளிவிட்டவள். “Now do this, all the love for mommy and fuck for me” அவள் கண்களில் வெறியேறியிருந்தது. நான் அமைதியாகயிருந்தேன். “You will see the consequence of this, I will make sure you could never touch that bitch.” என்றாள். நான் முதலில் கோபத்தில் உளறுகிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவளுடையம் மனம் கன்றிப்போவதற்கு நானும் உமையாளும் காரணமாயிருந்தோம். என்னை வம்பிழுத்து மேலேறி கலவி கொண்டவளிடம் கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி இல்லை. ஈரமடையாமல் வறவறவென, என் வழி அதுவல்ல, அவளுக்கும் தெரியுமாயிருக்கும். ஆனால் அவளுடைய தேவை அது இல்லை. என் மனம் நிலையில் இருந்த பொழுதுகளிலேயே உச்சமைடைய முடியாமல் தவிப்பவன், அன்று அவள் ஏற்படுத்திய நிலை இன்னமும் மோசம். அவள் என்னை சித்ரவதை செய்வதற்கு இதுதான் ஒரேவழி என்று நினைத்திருந்தாள் போலும், காலம் தோறும் கடற்கரையில் கிடக்கும் கல்லாய் நான் மாறிப்போனேன். அவள் உயிருடன் கிடைத்த டில்டோவாய் என்னை உபயோகப்படுத்தத் தொடங்கினாள். அவள் உச்சமடையப்போகிறாள் என்று நான் உணர்ந்தேன், நிறுத்தி எனக்கு முதுகு காட்டித் திரும்பியவள் கொட்டித்தீர்த்து படுக்கையில் வீழ்ந்தாள். எவ்வளவு காதல் இருந்தது அவளிடம் எல்லாவற்றையும் சுரண்டி எடுத்தது நாங்கள் தான். எனக்கு நம்பிக்கையிருந்தது. ஆனால் அவள், வளர வளர இல்லாமல் போகும் குழந்தைமையைப் போல் ஆனாள். “Oh you didn’t cum, fuck yourself” அவளால் சிரிக்கவும் முடிந்திருந்தது.

------------------------------------------------------------------------------------------------------

இருள் மொத்தமாய் கும்மிருட்டு ஒளியில்லை மனமும் அப்படியேயானது. வெளிச்சக்கீற்றுக்காய்க் காத்திருந்தது எத்தனை யுகம், பெருவெடிப்பிற்கு முன் காலம் என்ற ஒன்று இல்லாததைப் போல. காலமே இல்லாமல் போனதைப் போலவேயிருந்தது. ஒன்றுமேயில்லை மனதிலும் எதிலும், உணர்வொன்று இருந்தது எப்படி இத்தனை இருட்டு, கருமை என்பதைப் பற்றி எப்படி மீள்வது என்பதைப் பற்றிய யோசனையில்லை, ஆச்சர்யம். எதைப்பற்றிய நினைவும் இல்லாமல் வெறும் இருட்டைப் பற்றி மட்டும் யோசித்தபடி. கண்முழித்தேன். இத்தனை குப்பையாய் இருந்தது முன்னம் உமையாள் தற்கொலைக்கு முயன்ற சமயம் தான். சிந்துவை அவள் தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வேலையிருந்தது. நான் உமையாளிடம் என் எதிர்ப்புக்களை எல்லாம் சொன்ன பிறகு கடைசியாய் உறுதியளித்திருந்தேன், நிச்சயமாய் ஒருமுறை சிந்துவை அழைத்துச் செல்வதாய். இப்பொழுது என் முன் தலையப் பிடித்தபடியிருக்கும் சிந்துவிடம் எப்படி சொல்லிப் புரியவைப்பது என்பதில் பிரச்சனை இருந்தது.

எவ்வளவு பெரிய பாரம், இதுவரை தன் தந்தையென்றறிந்த ஒருவர் தன் தந்தையில்லை என்பதில் எவ்வளவு சங்கடம் இருக்க வேண்டும், எவ்வளவு கேள்விகள், அவள் என்னை சீண்டியதில் திட்டியதில் உபயோகப்படுத்திக் கொண்டதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவைகளை நான் உமையாளுக்காக ஏற்றுக்கொண்டேன். அந்தப் பொறுப்பை உமையாள் என்னிடம் தந்திருக்க வேண்டாமென்றே தான் முதலில் நினைத்தேன், பின்னர் தற்சமயம் என் சுயநலம் சார்ந்து அது நல்லதென்று உணர்ந்தேன். இன்று மதியம் அவளிடம் தெரிந்த என் மீதான கோபம் நான் அதுவரை அவளிடம் உணர்ந்திராதது, ஒரு கசப்பு, வேப்பங்காயைப் ருசித்தது போல நாக்கின் நுனியின் பட்டு உடம்பெல்லாம் உணர்ந்தது போல. மனதின் சூழ்ச்சிப் பின்னல்களில் இருந்தது அந்த நினைவுகளை துரத்த முயன்றபடியிருந்தேன். கடற்கரைப் பொழுதுகளை நினைத்துப் பார்த்தேன், சிந்து கடற்கரை அலைகள் சீண்டல்கள் முத்தம் உரசல்கள் கிள்ளல்கள் என்று எத்தனையோ நிகழ்ந்தது. ஆனால் கடற்கரை மணல் காலில் ஒட்டிக்கொண்டு ஷூவை விட்டு நீங்காமல் உறுத்துவது போல் கசப்பு நீங்குவதாயில்லை.

என்மீது சிந்துவுக்கு எவ்வளவு ஆசை என்று வியந்திருக்கிறேன், காரணங்களைத் தவிர்த்துவிடுவேன் பெரும்பாலும். என்ன காரணமாய் இருக்க முடியும், சிந்துவிற்கு எதனாலோ உமையாள் மீது அளவிடமுடியாத பிரியம். மகள் தன் அம்மாவின் மீது வைக்கும் பாசத்தை விடவும்.  என் மீதான ஆசை அங்கிருந்து தொடங்கியிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவள் என்னிடம் ஒரு அடிமையைப் போல் நடந்து கொண்டதை ஒரு முறை சிந்து மறைந்திருந்து பார்த்திருந்தாள். அங்கிருந்து தொடங்கி நீள அகலாமாய் விரிந்திருக்க வேண்டும் என்றே நான் ஊகித்தேன்.  உமையாள் ஒரு சமூக கட்டமைப்பிற்குள்ளானவள், அவளுக்கு என்னைப் பிடித்திருக்கலாம், ஆனால் காலம் ஒருக்காலும் எங்களை சமூக கட்டமைப்பிற்குள் இணைத்துக்கொள்ள அனுமதி தராது. சிந்துவால் தான் என் எதிர்காலம் பற்றியே யோசித்தேன். தேவையான பணமும் தேவைக்கதிகமான கூடலும் என்று சலனமில்லாத நடுக்கடலில் செல்லும் படகைப்போல் நீண்டிருந்த என் வாழ்க்கைப் பயணத்தில் புதுவெள்ளமாய் சிந்துவந்தாள். மனம் புது வெள்ளைத்தை நினைத்ததும் புன்னகைத்தது, ஆம் புதுவெள்ளம் தான். படகை கவிழ்த்துப் போடச் செய்யும் புதுவெள்ளம். முதல் முறை அவளுடனான கூடல் மனதில் நிழலாடியது. அவசரம். ஒத்திசைவைக் கொண்டுவர முயற்சித்த என் அத்தனை முயற்சிகளையும் முறியடித்தாள். பார்வையாளனாய் பங்குபெற்றேன். நான் உமையாளிடம் எப்படி இந்த விஷயத்தை அவிழ்க்கப்போகிறேன் என்று சொல்லியிருக்கவில்லை என்றாலும் அவள் என்னிடம் சொன்ன பொழுதே இப்படித்தான் யோசித்திருந்தேன். சிந்துவை சென்னை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இப்படித்தான் முடியும் என்று மனது ஒரு ஆழமான முடிவிற்கு வந்திருந்தது.

அலைபாயும் மனதை நிலைநிறுத்தி எப்படி சிந்துவை அவள் தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வது என்பது பற்றி யோசித்தேன். ஹோட்டல் அறையை சுத்தம் செய்வதற்காக வந்த சிப்பந்தி நகர்ந்ததும். மனதிற்கு சுத்தம் தேவைப்பட்டது, அழகாக ஆரம்பித்த பொழுதொன்றை நான் தான் குப்பைப் படுத்தியிருந்தேன். சிந்து அந்தச் சூழலை எப்படி வேண்டுமானாலும் நகர்த்தியிருக்கலாம் ஆனால் அவள் அதை இன்னும் அசிங்கப்படுத்துவதாய், என்னைச் சீண்டி என்னுடன் உறவுகொண்டாள். அப்படியாரும் என்னிடம் உறவு கொண்டதில்லை ஆதலால், மனம் குப்பைத் தொட்டியை கற்பனை செய்தது. அவள் சொன்னது உண்மை தான், நான் அன்று உச்சமடையவில்லை, அவள் உச்சமடைந்ததை உணர்ந்தேன். அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை, எழுந்து சென்று சோபாவில் உட்கார்ந்தவள் என்னையே பார்த்தபடியிருந்தாள். நான் அதற்கும் ஒத்துழைக்காதவனாய் தலையைக் குனிந்தபடி மனதில் குவியும் அழுக்கை அகற்றியபடியிருந்தேன்.

என்னால் ஒரு உரையாடலை மனதிற்குள் உருவாக்கவே முடியவில்லை. கற்பனை அள்ளித்தரும் உரையாடல்களை இல்லாமல் ஆக்கியிருந்தாள் சிந்து. குளியல் கொஞ்சம் மனமாற்றத்தை தரும் என்று நினைத்து குளிக்கச் சென்றேன். உடல்தான் சுத்தமானது மனதல்ல. காலம் தான் எத்தனை சுவாரசியமானது அது அள்ளித்தரும் கற்பனைசெய்ய முடியாத பக்கங்கள். ஆச்சர்யமானவை.

டவல் ஒன்றுடன் வெளியில் வந்த என்னிடம் சிந்து, “I am sorry, for what I did." பின்னர் மௌனம் நான் ஒன்றும் சொல்லவில்லை அவளே “I want to go there, and meet them” என்றாள். யாருக்கு நன்றி சொல்ல மனம் புத்துணர்ச்சியை உணர்ந்தது, குளியலும் அதற்கு ஒரு காரணமாய் இருக்கும். “Please help me, I will blow the shit out of you!”. அவளை மன்னித்துவிட்டிருந்தேன் அவள் இறங்கி வருவாள் என்று நான் நினைத்திருக்கவில்லை. அவளிடம் “I will take you, but if you promise me no more sex between us!". அவள் சிரித்தாள் “I think I have had better sex with others. And you are done here, believe me" என்றாள். இருக்கலாம் மறுப்பதற்கில்லை நான் சுகவாசி, “I am very happy in that case”. என்னை வருத்த அவள் சொல்லியிருக்கலாம் உன்னைவிட பெட்டரான செக்ஸ் நான் அடைந்திருக்கிறேன் என்று ஆனால் நான் அவளை வெல்ல நினைத்தவனல்ல என்பதால் கவலைப்படவில்லை. அவள் இறந்து போன தன் தந்தையின் குடும்பத்தைப் பார்ப்பதில் பிரச்சனையிருக்கும் என்று நினைத்திருக்கலாம், ஆனால் உயிருடன் இருக்கும் அவள் தந்தையின் செல்வாக்கு தெரிந்திருக்காது. சொல்லப்போனால் சிந்து அவர்களைப் பார்க்க வருவாள் என்பது வரை அவர்களுக்குத் தெரியும், உமையாளும் மேஜரும் அந்த மனிதருக்கு நிறைய செய்திருக்கிறார்கள்.

குளிக்கச் சென்றாள். மனம் ஒரு அமைதிக்குத் திரும்பத் தொடங்கியிருந்தது. குளித்துவிட்டு அப்படியே வெளியில் வந்தாள், நான் உபயோகித்தது தவிர்த்து இன்னும் இரு துண்டுகள் நிச்சயம் இருந்தது அங்கே, ஹேங் ஓவர் போயிருக்க வேண்டும். ஷவரில் குளிக்கும் பொழுது அடேல் உடைய பாடலொன்றை பாடிக்கொண்டிருந்தாள். துண்டொன்றை வைத்து தலையைத் துவைத்தபடி என்னைப் பார்த்தாள். இன்னமும் ஆடையொன்றை அணிய உத்தேசிக்கவில்லை. என்னைப் பார்த்து ஷாடோ பாக்ஸிங் செய்தாள், அவளுடைய குலுங்கிய முலைகளில் இருந்து கண்களை தவிர்க்க பாடுபடவேண்டியிருந்தது. எவ்வளவோ நடந்து விட்டிருந்தது அன்றைய ஒரு நாளில், கடற்கரையில் அலைந்து காதலில் விழுந்து களவி கொண்டு கோபப்பட்டு சண்டை போட்டு முகத்தில் அறைந்து இப்படி. முலைகளைக் குலுக்கியது போதாது கிக் பாக்ஸிங் வேறு செய்து காட்டினாள். அவள் தலை துவட்டி, ஹேர் ட்ரையர் உபயோகித்து ஹேர் சீரம் போட்டு தலைமுடியை சீவி, மேக்கப் செய்து கொண்டு கடைசியாய் உடை உடுத்துவதற்கு ஒன்றரை மணிநேரம் செய்தாள். உடை கடைசியாய் உடுத்தியது தான். கண்களுக்கு ஹெவியான அலங்காரம், எனக்குப் பிடித்த வகையில், மிகவும் பிடித்த வகையில்.

அவள் சராசரிக்கும் மேல் அழகானவள், அவளுடைய வயதும் அழகும் பெரும்பாலானோரைக் கவரும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை, அவள் தொடர்ச்சியாய் உடற்பயிற்சிக் கூட செல்பவள், வாரத்திற்கு இரண்டு முறை அவளுக்கு நாட்டியப் பயிற்சியும் இருந்தது. பரதநாட்டியம் ஆடுவாள் என்று தெரியும் ஆனால் மேற்கத்திய நடனம் ஒன்றையும் கூட கற்றுவந்தாள். அவள் உடம்பில் தேவையில்லாத சதை என்ற ஒன்றைக் கண்டுபிடிக்க முடியாது. அழகாகக் காட்டிக் கொள்ளும் படி மேக்கப் அணியும் திறமையும் உண்டு. நான் அவளிடம் அவள் உண்மைத் தந்தை பற்றிய விஷயத்தை சொல்ல நேர்ந்திராவிட்டால் எங்களுக்குள் நடந்த அந்த வருந்தத்தக்க சம்பவத்தை விடுத்தால், அப்பொழுதே அவளை கட்டிலில் சாத்தி உடலுறவு கொள்வதற்கு முயன்றிருப்பேனாயிருக்கும். நான் பார்க்கவேண்டுமென்று அவள் செய்தாலும் பார்க்காதது போலவே இருந்தேன். அழகான வெள்ளை நிற சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள், போட்டியொன்றிற்காய் நடை பயிலும் குதிரை ஒன்றைப் போல் ஹைஹீல்ஸ் போட்டபடி நடந்து வந்தாள். அவளுடைய உடை தேர்வுகள் எனக்குப் பிரியமானவை. உள்ளே வெள்ளை கோர்செட் ஒன்று. என் கண்ணெதிரில் தான் அவள் நிர்வாணத்தில் இருந்து அழகுப் பதுமையாக உருவெடுத்தாள், கவனம் செலுத்தாது போல் நான் அவளை உணர்ந்து வந்தேன்.

கதவைச் சாத்திவிட்டு அறைக்கு வெளியில் இரண்டு அடி வைத்திருப்போம்.

“Hey if you wish, I can have sex with you, for one last time” என்றாள். அவள் என் மனதைப் படித்திருக்க வேண்டும். நான் கல்லாக்கிக் கொண்டு “thanks but no thanks, you better have it with that somebody who does it better than me” என்றேன். “Hey no offense. You can’t treat your women badly don’t you. I want rough sex” என்றாள் கண்ணடித்தபடி. நான் அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவளை அழைத்துக் கொண்டு பெரியவர் வீட்டுக்கு வந்தேன். ஆனால் மனது அவள் சொன்ன விஷயத்தை பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருந்தது.

அந்த வீட்டில் நாங்கள் நினைத்தபடியில்லாமல் ஒரு சிலருக்கு சிந்து பெரியவரின் மகள் என்று தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாக சொல்லவில்லை, புரிந்துகொள்ளும் விதமாக இருந்தது. அவளுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். யாருக்கும் தெரியாமல் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று அவள் ஊகித்திருந்ததை உணரமுடிந்தது. சிந்துவிடம் அதுவரை நான் பார்த்திராத உணர்ந்திராத ஒரு முதிர்ச்சி வெளிப்பட்டது அந்த வீட்டில். பெரியவரின் மனைவி அக்கறையாய் உமையாளையும் மேஜரையும் பற்றி விசாரித்தாள். உமையாளுக்கே அவளுடைய மகள் வயதுதான் இருக்கவேண்டும். சிந்து பெரியவரின் பெயர்த்தி வயதுதான். என்னைப் பற்றிய விசாரிப்புக்களை நாங்கள் பெரிதும் விளக்காமல் தவிர்த்தோம் மேஜருடைய ப்ரண்ட் உடைய பையன் என்பது போல். பெரியவருக்கு பெண் பிள்ளை கிடையாதாம், மூன்று ஆண் பிள்ளைகள். பெரியவரின் மனைவிக்கு சிந்துவை மிகவும் பிடித்துவிட்டது தொட்டுத் தொட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் என்ன செய்கிறாள் என்பதை பற்றிய விசாரணை ஓடிக் கொண்டிருந்தது. சிந்து பெரிய மனுஷித் தன்மையில் பதிலளித்துக் கொண்டிருந்தாள். என் மனதில் சற்று நேரத்துக்கு முன் நிர்வாணமாய் ஷாடோ பாக்ஸிங் செய்த பெண்ணை ஓரங்கட்டுவது முடியாததாய் இருந்தது.

வற்புறுத்தி அவளுக்கு பட்டுப் புடவை கட்டிவிட்டனர், அவர் வீட்டு மக்கள். முதல் முறை அவளைப் புடவையில் பார்த்தேன். தொலதொலா ஜாக்கெட் உடன். கொஞ்சம் நகையும் ஏறியிருந்தது. பொட்டொன்றும் கூட. அவள் வெளியில் வந்து என்னை கண்களை அகலமாக விரித்து ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். சமயம் கிடைத்த பொழுது நான் “I want to have sex with you now” அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன். அவள் எப்பொழுதிலுமிருந்து மாறுபட்ட இன்னொரு பெண்ணாய் இருந்தாள், கேட்டதும் அவள் முறைத்தது எனக்கு இன்னமும் உற்சாகத்தை அளித்தது. “I will learn, and will buy restraints too, lets do BDSM, I will give you what you want - rough sex” என்றேன். கோபப்பட்டு விழித்தவள். தள்ளிப்போய் உட்கார்ந்தாள்.  பெரியவரின் மனைவி, சிந்து பெரியவரின் அம்மா போலவே இருப்பதாய்ச் சொன்னாள். பழங்காலத்து கருப்பு வெள்ளை படத்தைக் கொண்டு வந்து காட்டினாள்.

அன்றிரவு அவள் அங்கு தங்குவதாக முடிவானது. நான் ஒன்றும் சொல்லவில்லை. நானும் என் வீட்டிற்குச் சென்று அப்பா அம்மாவை பார்த்துவர நினைத்தேன். அது எங்கள் திட்டத்தில் இல்லை, ஆனால் சிந்து பெரியவர் வீட்டில் தங்குவதும் கூட திட்டத்தில் இல்லை தான். அவளிடம் இதைச் சொல்வதற்காக அழைத்தேன், பால்கனி வந்தவளிடம்.

“You look fucking sexy in the saree, lets do it now. I will fuck you so hard you will beg me to stop. How is that for rough.” விளையாடினேன்.

”whats the matter, why did you call me” நேரடியாய் விஷயத்திற்கு வந்தாள்.

“Please don’t stay. Let go to the hotel and have sex” என்றேன். அதில் ஆர்வம் காட்டாதவளாக நின்றவளிடன் “Okay you stay here, I will go meet my mom and dad” சொல்லி யாரும் அறியாவண்ணம் அவள் வலது முலையைப் பற்றி இழுத்தேன். விரல்களில் சிக்கிய காம்பு வலியை இன்னும் அதிகரித்திருக்கவேண்டும். அவள் கத்த முடியாமல் பதறியதை ரசித்துச் சிரித்தேன். அதுவரை வெறும் வார்த்தைகளில் விளையாடி வந்த நான் செய்தது அவளுக்கு ஆச்சரியமளித்திருக்க வேண்டும்.

Related Articles

1 comments:

Popular Posts