Showing posts with label வகைப்படுத்தப்படாதவை. Show all posts
Showing posts with label வகைப்படுத்தப்படாதவை. Show all posts

In வகைப்படுத்தப்படாதவை

சில கேள்விகளுக்கான என் பதில்கள்

காசியண்ணன் என்னிடம் அனுப்பியிருந்த கேள்விகளுக்கான பதில்கள்.

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

நிச்சயமாக இல்லை, நிறைய செய்யலாம். நிறைய விஷயங்களை தமிழில் எழுதலாம். தற்சமயங்களில் எல்லாம் எப்பொழுது ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையைத் தேடினாலும் தமிழிலும் தேட்ப்பார்ப்பதுண்டு, 1% வரை கூட என் தேடல்களுக்கு தமிழில் கட்டுரைகள் இல்லை. கண்டெண்ட் இன்னும் நிறைய செய்யணும், தமிழில், விக்கிபீடியாவிற்கோ இல்லை அதைப் போன்ற ஒன்றிற்கோ என்றில்லாமல் பொதுவாக தமிழில் தரமுள்ள கட்டுரைகளை எழுதினால் கூட போதும்; அது வலைத்தளமாகக் கூட இருக்கலாம். கூகுளாண்டவருக்கு அந்த வேறுபாடு கிடையாது. விக்கியின் பேஜ் ராங்கிற்கு நீங்கள் விக்கியில் எழுதினால் மக்களுக்கு சுலபமாக போய்ச்சேரும் உங்களுக்கான கிரடிட் இல்லாமல். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கிரடிடி பற்றி யோசிக்காமல் தமிழில் கண்டெண்ட் கொண்டுவருவதைப் பற்றி மட்டும் நினைக்க வேண்டும் என்று கருதுகிறேன். என்னிடம் ஐஎஸ்ஐ எதுவும் இல்லை தரத்திற்கு, நான் சொல்லவரும் தரமென்பது கருத்துப் பிழைகள் குறைந்த ஒன்றைப் பற்றி மட்டுமே. இது பொதுவிற்கு எனக்கு நானே வைத்துக் கொண்ட இன்னொரு தர மதிப்பீடு எக்காரணம் கொண்டும் மூடநம்பிக்கைக்கு ஆதரவாய் எழுதாமல் இருப்பதென்று.

இதுதான் என்றில்லாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம், தமிழில் எழுதப்படும் அனைத்துமே முக்கியம் என்று தான் நான் நினைக்கிறேன்.


2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

மின்னஞ்சல், மின்னரட்டை தமிழில் பொதுவாக அதிகம் தற்சமயம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. குறுஞ்செய்தி பற்றி எனக்குத் தெரியாது. மின் வணிகம், அரசாளுமை பற்றியும் எனக்கு அத்தனை அறிவு கிடையாது. கிழக்குப் பதிப்பகத்தில் இணையப்பக்கத்தில் தமிழில் பார்த்த நினைவுண்டு, இன்னும் வரலாம். இதழ்கள் தற்சமயம் பொதுவாக நிறைய மக்களைச் சென்றடைந்திருக்கிறது என்றாலும், தமிழ் பேசும் தமிழறிந்த இணையத்தமிழ் மக்களில் 30% மக்கள் தான் தமிழை இணையத்தில் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த நிலை இன்னும் வளரவேண்டும்.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

இணையத் தன்னார்வலர்களின் பங்களிப்பு இணையத் தமிழுக்கு பெரும் பங்காற்றியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். தமிழ்மணத்தை தனிநபரின் தன்னார்வலத்தால் தொடங்கப்பட்டது என்று கொண்டால், நான் இன்று தமிழில் எழுதிக் கொண்டிருப்பதற்கு மிக முக்கியமான காரணமாக தமிழ்மணம் இருந்திருக்கிறது என்றே சொல்வேன். நான் மட்டுமல்ல இன்னும் பலர் இப்படிச் சொல்வார்களாயிருக்கும். அதுமட்டுமில்லாமல் தமிழ் விக்கி, நூலகம், மதுரைத் திட்டம் போன்ற பல விஷயங்களை தனி நபர்களாலும் குழுக்களாலும் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்
சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

எனக்கு அந்த அளவிற்கெல்லாம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிருந்ததில்லை, இது ஒரு கற்பனை சார்ந்ததாய் இருப்பதால் சாய்ஸில் விட்டுடுறேன்.


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றிய என் பொதுவான கருத்து அத்தனை ஏற்புடையதாக இருக்காது. இன்னும் தமிழ் பதிவுலகம் நிறைய செய்யலாம் செய்ய வேண்டும். இதையே தான் யோசனையாகவும் கூறுவேன். நல்ல கட்டுரைகள் பல இன்னும் தமிழில் எழுதப்பட வேண்டும்.


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணம் பதிவுகளுக்கு நிறைய செய்திருக்கிறது, செய்து கொண்டும் வருகிறது. பதிவுகளை பலருக்கும் சுலபமாக சென்று சேர்க்கிறது என்பதே பெரிய விஷயம் தான். உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் தமிழ்மணத்தில் இப்பொழுது கொஞ்சம் இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்மணம் தொடர்ந்து செய்கிறது. இப்படியே தொடர வேண்டும்.

தமிழில் நல்ல கட்டுரைகள் எழுதப்படும் பொழுது அதை ஊக்குவித்து இணையப்பக்கத்தில் தகுந்த இடத்தில் இருத்தலாம். ஆனால் நல்ல கட்டுரைகள் என்பது சப்ஜெக்டிவ்வான விஷயம் என்பதால் இப்பொழுது இருந்து கொண்டிருக்கும் முறை கூட பரவாயில்லை தான். இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In வகைப்படுத்தப்படாதவை

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

ஈழப்பிரச்சனை பற்றி எழுதாமல் இருப்பது உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆனால் என்ன எழுதி புண்ணியம் என்று எதையும் எழுதாமல் போய்க்கொண்டிருக்கிறேன். "தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" பாடலில் நம்பிக்கை இருந்தாலும், எதையும் மாற்றுவதற்கு சக்தியில்லாதவனாய் ஆகிவிட்டதாய் ஒரு எண்ணம் ஒவ்வொரு முறையும் ஈழம் பற்றி நினைக்கும் பொழுது வந்துவிடுகிறது. தானாய் எதுவும் மாறப்போவதில்லை, அந்த மாற்றத்திற்கான ஒரு சிறிய பங்களிப்பைக் கூட செய்யமுடியவில்லை என்பது வருத்தமே. முத்துக்குமார் தீக்குளிப்பு பற்றிய இருவேறு மனநிலையில் தான் நான் எப்பொழுதும் இருக்கிறேன். என்னால் எக்காரணம் கொண்டும் 'தற்கொலை' என்பதை கொள்கை அளவில் கூட ஒப்புக்கொள்ள முடியவில்லை. If you live long enough, you'll see that every victory turns into a defeat. Simone de Beauvoir சொன்னதைப் போல் நினைத்துக் கொண்டு காலம் வழங்கப்போகும் தோல்வியை நினைத்து மனதைத் தேற்றிக் கொள்கிறேன். என் ஈழ ஆதரவைப் போல முத்துக்குமார் தீக்குளிப்பைப் பற்றி நான் சொல்லிக் கொள்ளும் காரணங்கள் விவாதத்திற்கு உட்படுத்த முடியாததாய் நான் நம்பும் விஷயத்தையே மறுக்கவேண்டிய கட்டாயத்திற்கு என்னை உள்ளாக்குகிறது. எல்லாவற்றையும் சார்பு நிலை இல்லாமல் அணுக முடிந்திருக்கவில்லை, என்னுடைய ஈழ ஆதரவும் ஒரு பக்க சார்பு நிலை உடையதே. என்னுடைய ஆதரவிற்கான காரணங்களை நான் தேடிக் கொண்டேயிருப்பவனாகயிருக்கிறேன். என் சொந்த வாழ்க்கையிலே கூட பல கடுமையான சந்தர்ப்பங்களைத் தாண்டி வந்தவன் என்கிற முறையில் தற்கொலை என்பது தீர்வாகாது என்று மட்டும் என்னால் உணர்முடிகிறது. நாளொரு விதமாய் எம் தமிழர் செல்லடிப்பட்டு இறந்து கொண்டிருக்கும் பொழுதும் வாழ்க்கையை நகர்த்தத்தான் வேண்டியிருக்கிறது. எந்த விஷயமும் காலத்தின் கால்களை கட்டிப்போடும் வலிமை இல்லாதவையாகவே இருக்கிறன.

----------------------

அக்கா கல்யாணம் நல்லபடியாய் நடந்து முடிந்தது . இதைப்பற்றி விரிவாய் பின்பொறு முறை எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.

----------------------

//தன் தலைமையிடத்தை இங்கே புதிதாக உருவாக்கிய நகரான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினார். ஆனால் பின்னர் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டமையால் மீண்டும் தஞ்சைக்கே தலைநகர் மாற்றப்பட்டது//

என்று ராஜேந்திரன் பற்றியும் கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் ஜெயமோகன் எழுதியிருந்தார். இதைப்பற்றி எனக்கிருந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டிருந்தேன். பதிலில்லை, சரி நம்மவர்கள் தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்வார்கள் என்று ஒரு இங்கே வைக்கிறேன்.

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

//தன் தலைமையிடத்தை இங்கே புதிதாக உருவாக்கிய நகரான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினார். ஆனால் பின்னர் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டமையால் மீண்டும் தஞ்சைக்கே தலைநகர் மாற்றப்பட்டது.//

இப்படி எழுதியிருந்தீர்கள்.

நான் அறிந்த வரையில் சோழர்களின் கடைசி மன்னன் மூன்றாம் இராஜேந்திர சோழன் வரை தலைநகரமாக வைத்து அரசாண்டது - கங்கை கொண்ட சோழபுரத்தை தான்.

என்னிடம் இருக்கும் விவரங்களை மட்டும் வைத்து இந்த முடிவிற்கு வரக்கூடாது என்பதால் இந்தக் கேள்வி. நீங்கள் நேரடியாக எந்த மன்னன் என்று கூறாததால் நேரடி சோழ மன்னர்களுக்கு(குலோத்துங்க சோழன் அவனைத் தொடர்ந்தவர்களைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்) பிறகுவந்த மராட்டிய மன்னர்கள் வழியைக் குறிப்பிடுகிறீர்கள் என்றே கருதுகிறேன். சரிதானா?

இதை உங்கள் இணையத்தில் ஏற்றாமல் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மோகன்தாஸ்



விவரம் அறிந்தவர்கள் பதில் சொன்னால் தேவலை.

-------------------------

எங்கள் கம்பெனி 2009ற்கான Salary Freeze அறிவித்திருக்கும் வேளையில் கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கிறது. சரி கம்பெனி சரியாய்ச் செய்யவில்லை என்றால் பரவாயில்லை, நல்லவிதமாய்ப் போய்க்கொண்டிருக்கும் பொழுதும் சிச்சுவேஷனை உபயோகித்துக் கொள்வதற்காய் இப்படி இறங்குவது வேடிக்கையாக இருந்தாலும். பொறுமை பொட்டுக்கடலையைவிட பெரியது என்பதால் பொறுத்துப் போகவேண்டியிருக்கிறது.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In வகைப்படுத்தப்படாதவை

[no title]

கொஞ்ச நாளுக்கு விடுமுறையில் போகிறேன். இந்த முறை கொஞ்சம் போல் பெரிய அளவிலேயே(இடைவெளி) இருக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறேன். இந்த வருஷக் கடைசி வரைக்குமாவது அது நீள் வேண்டுமென்று ஏகவல்லோன் எல்லோர்க்கும் பொதுவான இறைவனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

பூனைக்குட்டிக்கும் அலைதலுக்கும்(பயணங்கள் எழுதுவதற்கு) விடுமுறையே.

இந்தத் தொடர்புகளையும் கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்பதால். mohandoss.i@gmail.com ம் பதிவுலகச் சொந்தக்களுக்கு பூட்டி வைக்கப்படுகிறது ;).\\

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்ற கான்செப்டில் முழு நம்பிக்கை உள்ளவன் என்பதால் தொடரப்போகும் தமிழிணைய வலைத்தளங்களுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லி எஸ்கேப் ஆகிறேன்.

PS: வழமை போல் பின்னூட்டங்கள் வெளியிடப்படாது இந்தப் பதிவிற்கு.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In வகைப்படுத்தப்படாதவை

ஒரு உதவி வேண்டுமே

பொற்கொடி என்னைப் பற்றி ஒரு பதிவெழுதியிருந்தார், மிக முக்கியமான அலுவலில் இருந்ததால் சனி, ஞாயிறு இணையத்தளங்களுக்குள் நுழையவில்லை. அந்தப் பதிவு காணாமல் போயிருப்பதால், யாரிடமாவது அந்தப் பதிவின் காப்பி இருக்குமானல் அனுப்பி வைக்கவும்.

Danke இது முன்பாகவே சொல்லிவிடும் நன்றிகள்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In வகைப்படுத்தப்படாதவை

பெங்களூரில் எர்த்-க்வேக்கா ?????

உண்மையிலேயே இன்னிக்கு கம்பெனியில் உட்கார்ந்திருக்கும் பொழுது சுமார் 5.45 PM போன்ற சமயத்தில் பில்டிங்க் ஆடுவதைப் போலிருந்தது. முதலில் புரியவில்லை பின்னர் இரண்டாவது முறையும் அப்படியே ஒரு பீலிங். சரி முட்டாள்னு சொல்லிடுவாங்கன்னு சொல்லலை. சிறிது நேரத்தில் மனம் ஒப்புக்கொள்ளாமல் அப்படி வேறயாராவது பீல் பண்ணிங்களாய்யா? என்று கேட்டேன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மக்களிடம்.

எல்லோரும் ஒன்றைப்போல இல்லையென்று சொல்ல, என்னுடைய டீம் லீடர் மட்டும் தான் உணர்ந்ததாகச் சொன்னான்.

ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் உணர்ந்தது தவறோ இல்லை என்ன நடந்ததுன்னு எந்த நியூஸ் சேனலும் இதைப் பற்றிய நியூஸ் போட்ட மாதிரி தெரியலை. நியூஸிற்காக வெய்ட்டிங்க். பெங்களூரில் நில அதிர்ச்சி வர வாய்ப்பேயில்லை என்று சகோதரி சொன்னாலும் கிர்ர்ர்ர்ர் என்று இருக்கிறது.

இதற்கும் நாளை ஆசிப் பெங்களூர் வருவதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In வகைப்படுத்தப்படாதவை

நான் வரலை இந்த விளையாட்டுக்கு

லக்ஷ்மி உடனான என்னுடைய சிவாஜி படம் பற்றிய கருத்து பரிமாற்றத்தை போன பதிவுடனேயே நிறுத்திவிட்டேன். அதற்கு அவர் எழுதிய பதிவுக்கும் பதில் எழுத வேண்டிய அவசியம் இல்லையென்றே நினைக்கிறேன். இந்த விவாதம் போகும் இடம் நன்றாகத் தெரிவதால் பிரகாசமாக எஸ்கேப் ஆகிறேன்.

வர்ட்டா

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In வகைப்படுத்தப்படாதவை

லக்ஷ்மிக்கு சில விளக்கங்கள்

முதலில் ஒரு விஷயம் சிவாஜி படத்தின் ஹீரோயினியை - அதாவது உங்கள் டெர்மில் - அண்ணியை நான் முட்டாளாக பார்க்கவில்லை. திருப்பதி பத்மாவதி தாயார் கழுத்தில் இருந்து தாலி கழன்று விழுந்ததாக வந்த செய்திக்காக(புரளியாகவும் இருக்கலாம்) இரவோடிரவாக ஒரு புதுத் தாலியை தயார் செய்து கட்டிக்கொண்டவர்களை நீங்கள் முட்டாள்களாகப் பார்க்கிறீர்களா? நான் அதைப்போன்ற விஷயத்தை சாதாரணமான ஒன்றாகத்தான் பார்க்கிறேன்; அதைப்போலவே இதையும் ஒரு சாதாரணமான ஒரு விஷயமாகத்தான் பார்க்கிறேன் 'அண்ணி' ரஜினியின் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்ததும் சிபிஐயிடம் லாப்டாப்பை கொடுப்பத்தையும். படத்தில் வரும் ஹீரோயினியைப் போன்ற ஜோசிய ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை நீங்கள் பார்த்ததில்லை என்று தெரிகிறது. நான் நிறைய பார்த்திருக்கிறேன் எங்கள் வீட்டிலும் எங்கள் சுற்று வட்டாரத்திலும்(கிணற்றுத் தவளைன்னு சொன்னாலும் கவலையில்லை எனக்கு - நான் பார்த்திருக்கிறேன், எனக்குப் புரிகிறது உண்மையில் நடக்கும் ஒரு இயல்பைச் சொல்லியிருக்கிறார்கள் என்று) பார்த்திருக்கிறேன். அவர்களை நான் முட்டாளாகப் பார்க்கவில்லை நிச்சயமாய்.

விமர்சனம் எழுதலாம் தவறில்லை என்று சொல்லிவிட்டு சுஜாதாவை இழுத்திருந்தீர்கள் நல்லாதாய்ப் போயிற்று, தலைவரே ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார் எப்பொழுது என்றால் "டெல்லியில் ஒரு விழா நடந்த பொழுது 'கணேஷ் - வசந்த்' கதைகளை கணையாழிக்காக எழுதுவீர்களா என்று கேள்வி எழுந்த பொழுது. எழுதுவது ஆயிரக்கணக்கான இன்டலக்சுவல்களுக்காகவா இல்லை கோடிக்கணக்கான சாதாரண வாசகர்களுக்காகவா என்று" அதனால் நீங்கள் விமர்சனம் எழுதியதைக் குறை சொல்லவில்லை, ஆனால் நீங்கள் கேட்டிருந்தது மாதிரியான படங்கள் ஏன் எடுப்பதில்லை என்பதற்கான காரணங்களாக(யாருக்காக படம் எடுக்கிறார்கள் - etc) நான் சொல்லியதை உங்களை விமர்சனமே எழுதக்கூடாதென்று சொல்லியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

எழுதுவதற்காக எழுதுவது ஒரு விஷயம் ப்ராக்டிகலாக யோசிப்பது ஒரு விஷயம்.(ஏனென்றால் நான் என் கல்யாணம் பற்றி பேசியது ப்ராக்டிகலான ஒன்று - இன்டலக்சுவல்களான பெண்களை அக்காவாகவோ தங்கையாகவோ நிறைய பேர் ஏற்றுக்கொள்வார்கள் மனைவியாக யார் ஏற்றுக்கொள்வார்கள் - யாரோ சொன்னது) நீங்கள் கூலாகப் பதிவு போட்டதும் எல்லோரும் சிரிச்சிட்டு போய்ட்டாங்கன்னும் நான் கலகக்காரனாய் என் பதிவில் அதைப்பற்றி கேள்வி கேட்டிருந்தேன் என்று சொல்லியிருந்தீர்கள். நீங்கள் ஒட்டுமொத்தமாய் காமெடிக்காக அந்தப் பதிவெழுதியிருந்தீர்கள் என்றால் நான் ஜஸ்ட் எஸ்கேப் - இல்லை சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் அதை நமது நக்கல் தொணித்த பதிவில் இருந்து தொடங்கலாம் என்றும் நினைத்து எழுதியிருந்தீர்கள் என்றால் தொடரலாம்.

//உங்களுக்கு முட்டாள் பெண் மனைவியாக வர வேண்டுமென்று ஆசையிருப்பின் நீங்களும் அப்படியே இருப்பதாகத்தான் அர்த்தம்.//

நீங்கள் என்னை முட்டாள் என்று நினைப்பதைப் பற்றி கவலைப்படவில்லை என்றாலும் நான் இது போன்ற ஒரு விஷயத்தை என் பதிவில் எங்கே சொல்ல்யிருந்தேன் என்று காட்டலாம். இன்டலக்சுவல் பெண்களை விரும்புவதில்லை என்ற வரிகளுக்கு நான் முட்டாள் பெண்களைத் திருமணம் செய்து கொள்வேன் என்று அர்த்தம் ஆகாது.

//டிகிரி முடிச்சதும் 2 வருஷம் சும்மா இருந்து, தையல், சமையல்னு கத்துகிட்டு கல்யாணத்துக்காகவே காத்துக்கொண்டிருக்கும் டிபிகல் தமிழ்ப்பெண்களைத் தான் பிடிக்கும்.//

அப்படியிருக்கும் பெண்களை நான் நிச்சயம் முட்டாளாக நினைக்க மாட்டேன், அப்படி நினைத்திருந்தால் அதை உங்களிடம்(;-)) சொல்லியிருக்க மாட்டேன் தானே. பெண்களை முட்டாள்த்தனமான, சாதாரணமான, இன்டலக்சுவல்தனமான என்று கேட்டகிரி பிரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் நான் சொல்ல வந்தது, சார்த்தரையோ, பதிவுலகையோ, நீட்ஷேவையோ தெரிந்திராத பெண்களைத்தானோ ஒழிய முட்டாள் பெண்களைக் கிடையாது. நீங்கள் சார்த்தரையும் நீட்ஷேவையும் தெரியாத பெண்களை முட்டாள்கள் என்று எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பில்லை. திரும்பவும் ஒருமுறை சொல்கிறேன் நீங்கள் வேண்டுமானால் சிவாஜியில் காண்பிக்கப்பட்ட 'அண்ணி' கதாப்பாத்திரம் முட்டாள்த்தனமாகயிருப்பதாகச் சொல்லலாம், நான் அதைச் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் மறுக்கிறேன்; ஜோசிய ஜாகத்தின் மீது இருக்கும் நம்பிக்கைகளையும் அதன் காரணமாக தன் கணவனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதென்றும் நினைப்பதை சாதாரணமான விஷயமாக பார்க்கிறேன்.(இங்கே எங்கேயும் நான் நம்புகிறேனா இல்லையா என்பதல்ல மேட்டர், அப்படி நம்புகிறவர்களை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதுதான்.)

இதன் காரணமாக நீங்கள் முட்டாள் என்று என்னைச் சொல்லி அதற்காகக் கொடுத்திருந்த அத்தனை விளக்கங்களையும், உதாரணங்களையும் ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுகிறேன்.(ஆனால் நீங்கள் சொல்லியிருந்த கீரிக் லவ் பற்றி முன்பே தமிழ்மண விவாதக்களத்தில் எழுதியிருக்கிறேன். அங்கே எனது அதுபற்றிய எண்ணத்தைப் பார்க்கலாம்)

அதேபோல் நாத்தீகவாதியாக இருக்கும் கணவன் தன் மனைவியின் விருப்பத்திற்காக அவளை திருநள்ளாரு அனுப்பியதை வைத்து ரஜினிகாந்தை மிகச்சிறந்த பெண்ணியவாதி என்று ஏன் சொல்லக்கூடாது. அவர் ஆணாதிக்கவாதியாகயிருந்தால் தன் பெண்டாட்டியிடம் இதென்ன "முட்டாள்த்தனமா" இருக்கு என்று சொல்லி அடக்கியிருக்கலாம். ஆனால் அதையா இந்த சமூகம் விரும்புகிறது ;-) இப்படிச் சொல்வது எப்படி ஜல்லியாகயிருக்குமோ அப்படித்தான் இருந்தது நீங்கள் அந்தப் பதிவில் 'அண்ணனை' MCP ஆகச் சொன்ன பொழுது.

//சமூக சீர்திருத்தத்துக்கு உங்களுக்கான வழி அது. என் வரையில் இரவு 10 மணிக்கு தியேட்டர் நிர்வாகியிடம் போய் கத்தினால் என்ன பலனிருக்கும் என்று தெரியும். கஸ்டமர் சர்வீஸ் என்கிற பதத்திற்கான சரியான பொருளே தெரியாத நம் சமூகத்தில் இதை கையாளும் முறை வேறு - காசு அதிகம் கொடுத்தாலும் இப்படி ஒரு போதும் நடக்காது என்கிற உத்ரவாதமுள்ள தியேட்டர்களுக்கு மட்டுமே(உதா: சத்யம்) போவது என்று முடிவெடுப்பது அதில் ஒன்று.//

இதுவும் நீங்கள் சொன்னது தான்.

//நள்ளிரவில் ஒரு பெண் தனியா நடமாடற அன்னிக்குத்தான் உண்மையான சுதந்திரம்ன்னு அது கூட அந்த லட்சிய சமுதாயத்தை பத்தித்தாங்க. இப்போதைக்கு தவிர்க்கறதுதான் தற்காலிகத்தீர்வுன்றதை வேணும்னா நான் ஒத்துக்கறேன். ஆனா அதுவே நிரந்தரமாயிடக்கூடாது. சமூகப்பிரச்சனைகளைப்பத்தி பேசும்போது கொஞ்சமாவது தொலைநோக்கு வேணும். புரியுதா?//

இதையும் சொன்னது நீங்க தான் - ஞாபகமிருக்கா பலருக்கு இந்த விஷயம் புரியாமயிருக்கலாம் உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். வேணும்னா கீழிருக்கும் பத்தி உதவும் உங்கள் நினைவுக்கு

//நடமாட்டத்தக் குறைச்சுக்கணும்னா குறைச்சுக்கத்தான் வேணும்(ஆணாயிருந்தாலும் சரி, அடிச்சுப்போட்டுட்டு பர்ஸ் அடிச்சிட்டுப் போய்டுவான்னாலும் சரி) அதுயில்லாம, என்னை அடிச்சிப்போட்டுட்டு பர்ஸ் எடுத்துட்டுத்தானே போவான் பரவாயில்லைன்னு அங்கப் போய் நிக்கிறது என்னைப் பொறுத்தவரையில் தப்புதான்.

ஆட் ஆயிருக்கோ இந்த பதில்.// -----

------------------------------------------------------------------------------

கடைசியா ஒன்னு என்னைப் பற்றிய தனிநபர்த் தாக்குதல்களுக்கு(;)) நான் பதில் சொல்லப்போவதில்லை. அதேபோல் என்னைக் கிள்ளீட்டாங்கன்னு அழப்போறதும் இல்லை. என்னைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது ஆழ்ந்த எண்ணம். இந்தப் பதிவெங்கேயும் கோபமான மனநிலையில் எழுதக்கூடாதென்று நினைத்து அப்படி ஒரு வார்த்தைக் கூட வந்துவிடக்கூடாதென்று எழுதியிருக்கிறேன். அப்படியும் வந்திருக்குமென்று நினைத்தால் மாப்பு.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In வகைப்படுத்தப்படாதவை

தமிழ்மணம் வாசிப்பில்

தமிழ்மணம் வாசிப்பில் என்ற தலைப்பில் எழுத எனக்கு முதலில் அருகதை உள்ளதா என்ற கேள்வி தான் முதன்முதலில் தமிழ்மண நிர்வாகம் எழுதச் சொன்ன பொழுது முதலில் தோன்றியது. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பதிவுகளில் இயங்கி வருவதால் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் என்னுடைய தீவிரமான வாசிப்பு என்பது இரண்டாண்டுகளுக்கு முன் தமிழ்மணம் என்னிடம் அறிமுகம் ஆன பொழுதோ இல்லை அதற்கு முன் தமிழ் இணையம் பழக்கத்தில் வந்த பொழுது இருந்தது போன்றோ இல்லாமல் மட்டப்படுத்தப் பட்டதாய் இருக்கிறது. அதாவது என்னுடைய வாசிப்பின் பரப்பளவை நானே சுருக்கிக் கொண்டு, இருந்து வருகிறேன். பல நல்ல பதிவுகளை இதனால் இழந்திருப்பேன், நிச்சயமாய். சரி இந்த வார தமிழ்மணத்தில் வாசித்த மிகவும் பிடித்த சில ஆக்கங்களை வழிமொழிய இருக்கிறேன். சொல்லப்போனால் இத்தனை ஃபார்மலாக இல்லாத விதத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்க வேண்டிய ஒருவிஷயம். சரி இப்பொழுதாவது எழுதுகிறேன்.

இன்னுது என்று வகைப்படுத்த முடியாதபடி, ஏகப்பட்ட சிவாஜி The Boss பற்றிய விமர்சனங்கள் இந்த வாரத்தில் வந்திருந்தன. அவைகள் ஒட்டுமொத்தமாக வாசிப்பவர்களின் கவனத்தைக் கவர்ந்திருந்தன என்ற உண்மை, சூடான பகுதிகளில் பெரும்பாலும் சிவாஜி பற்றிய தலைப்புக்களே இடம்பெற்றிருந்ததன் ஆதாரம். அடுத்தது அசுரன் தொடங்கிவைத்திருந்த வீரமணி பற்றிய விவாதம், பின்னர் வரவனையான் ம.க.இ.கவின் சந்தேகத்திற்குரிய தலைமை பற்றிய பதில் இடுகையால் சூடுபிடித்தது. சுகுணா திவாகரின் சுந்தரராமசாமி : உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும் பதிவு நிறைய கேள்விகளையும் அதற்கான மிகச்சில பதில்களை பின்னூட்டங்களில் கொண்டிருந்தது. வைரமுத்துவின் கவிதை வரிகளில், எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போய்விடுங்கள் ஆனால் நாளை உங்கள் கல்லறையைத் தோண்டி கேள்வி கேட்கப்படும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் போன்ற வரிகள் சொல்லும் உண்மை கல்லறையத் தோண்டி எழுப்பப்படுவீர்கள் என்பதில்லை உங்களின் பிரதிகளின் மீதான கேள்விகள் நீங்கள் கல்லரைக்குச் சென்ற பிறகும் இருக்கும் என்பதுதானே!. இங்கே கேள்விகள் கேட்கப்படுவது கூட பிரச்சனையின் ஒரு முகமாகப் பார்க்கப்படுகிறது, கேள்விகளும் இவர்களுக்கு பிடித்தமானதாய்; பதில் உள்ள கேள்விகள் மட்டுமே கேட்கப்படவேண்டும் என்பதைப் போன்ற ஒரு மனநிலை இங்கே தற்சமயம் அதிகம் காணப்படுவதை மேற்சொன்ன பதிவில் உணரமுடிகிறது.

அடுத்து இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளராக விளங்கிய ஜீவாவின் மரணம்; உன்னாலே உன்னாலே பாடல்கள் என்னுடைய ப்ளேலிஸ்டில் இப்பொழுதெல்லாம் இடம்பெற்றிருப்பவை. தற்சமயம் அந்தப் பாடல்களைக் கேட்கும் பொழுது ஏனோ ஒரு மாதிரியாக இருக்கிறது. ஆசீப் மீரானின், அப்துல் ஜப்பார் பற்றிய இடுகைகள் வாசிப்பனுபவம் தாண்டியும் மனதில் தங்கியவை. வாழ்க்கையில் முன்னேற முந்நூறு வழி போன்ற எத்தனை தரமான புத்தகங்கள் வந்தாலும் அதைவிடவும் நிகழ்காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் பதிவுகளாக வரும் பத்திகள் அதிகம் நமக்கும் நம்பிக்கையளிப்பதாகவேயிருக்கின்றன. அதைப் போலவே மா.சிவக்குமாரின் மென்பொருள் தொழில் துடங்கிய அனுபவங்கள் நான் தொடர்ச்சியாக படித்துவரும் ஒரு பகுதி. அலங்காரங்கள் இல்லாமல் எழுதப்படும் இது போன்ற பதிவுகளில் இருக்கும் உண்மை முகத்தில் அறைவதாய் இருக்கிறது; ஏனென்றால் நான் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு இன்னும் இரண்டாண்டுகளுக்குத் தான் ப்ரொக்கிராமிங் அப்புறம் கம்பெனி தொடங்கிவிடுவேன் என்பது. அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை மேக்கப் போடாமல் சொல்லும் பொழுது நம்முடைய அனுபவ அறிவு இன்னும் வளமடைகிறது. கீதா சாம்பசிவத்தின் பாரதி கேட்ட மன்னிப்பு பதிவு எனக்கு ஹரியண்ணாவின் பதிவொன்றை ஞாபகப்படுத்தியது.

ஆவியைப் பற்றி பதவியேற்க இருக்கும் ஜனாதிபதி அவர்கள் வார்த்தை விட அதைப் பற்றிய விமர்சனங்கள் பதிவுகளாக இருந்தன. நா. முத்துக்குமார் போன்ற கவிஞர்கள் தீண்டத்தகாதவர்களா என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு லக்ஷ்மியின் படித்ததில் பிடித்தது; பிடித்தது. நா.முத்துக்குமாரின் அ'னா ஆவன்னா கவிதைத் தொகுப்பைப் பற்றிய விமர்சனமாக இந்தப் பதிவை எடுத்துக்கொள்ளாமல் அறிமுகமாகக் கொடுத்திருந்தார். மைக்கேல் மூரின் SiCKO பற்றிய அறிமுகத்தை மயூரன் கொடுத்திருந்தார், அதனுடன் "இந்தப்படத்தை இலங்கை இந்திய நிலை அரசியல் சூழலின் அடிப்படையில் பார்த்தல் ஆரோக்கியமானது." வரிகள் படத்தின் மீதான பார்வையை ஒழுங்கமைப்பதாகயிருக்கிறது. மங்கையின் நட்சத்திரப்பதிவுகளில் நான் நொறுங்கிய பொழுதுகள் பதிவு ஒரு ஆரோக்கியமான அனுபவப் பகிர்வு, ஏனென்றால் தான் வெற்றி பெற்ற சமயங்களை எழுத விரும்பும் நாம் தோற்ற அனுபவங்களை எழுத முயல்வதில்லை பெரும்பாலும். இதுபோன்ற எல்லைகளை உடைத்து எழுதப்பட்ட ஒரு பதிவு மங்கையினுடையது. வெற்றியை விட தோல்வி நமக்கு தரும் அனுபவங்கள் அதிகமாயிருக்கும்.

கண்ணபிரானின் பெரியாழ்வார் பற்றிய பதிவு அழகாக வந்திருக்கிறது. "தாய் போல் பொங்கும் பரிவு! தாய்ப்பால் பொங்கும் பரிவு!" அதனால் தான் பெரியாழ்வாருக்கு மட்டும் 'பெரிய' ஆழ்வார் பட்டம் என்று விளக்குகிறார். ஆசீப்பின் எனக்குப் பிடித்த சிறுகதைகளில் இந்தத் தடவை அறிவுமதியின் வெள்ளைத் தீ பற்றிய அறிமுகம்; "தமிங்கலத்தில் எழுதினால்தான் யதார்த்தமாகச் சொல்லமுடியுமென்ற அரைவேக்காட்டு எழுத்தாளர்களூக்குச் சாட்டையடி போல கொஞ்சமும் உறுத்தாத தமிழிலேயே அழகாக எழுத முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் முழுக்கத் தமிழிலேயே இருக்கிறது கதை." வரிகள் அவருடைய தமிழார்வத்தையும் அதேசமயம் அறிவுமதியின் பிடிப்பையும் சொல்கிறது. நல்ல ஒரு கதைத் தொகுப்பின் அறிமுகம். iPhone பற்றிய ஸ்ருசலின் விமர்சனமும் பின்னூட்டங்களில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதிலும் நன்றாகயிருந்தன. கானா பிரபாவின் யாழ்ப்பாணத்துச் சமையல் இடுகையும், இளவஞ்சியின் எடின்பரோ கோழி வறுவல் இடுகையும் பிரம்மாதம். நான் இன்னும் சமையல் செய்யத் துவங்கவில்லையென்றாலும் இது போன்ற இடுகைகளை வாசிக்கவும் பிடித்தவற்றை டெலிஷியஸில் சேர்த்துவைக்க மறந்துவிடுவதும் இல்லை. அருள்குமாரின் கூர்க் - இயற்கையின் கொண்டாட்டம் படிக்க கூர்க்கை நோக்கிய என்னுடைய(எங்களுடைய) பயணத்தின் அடுத்த படிக்கட்டை நோக்கி நகர்ந்துவிட்டோம். நல்ல பதிவு.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In வகைப்படுத்தப்படாதவை

இந்துவாக மதம் மாற முடியுமா?

சமீபத்தில் படித்த பதிவொன்றின் காரணமாக எனக்கு எழுந்த கேள்வி, முன்பே எப்பொழுதோ இதைப் பற்றிய பின்னூட்டம் எழுதிய நினைவு. கொஞ்ச நாள் பாலோ பண்ணிக்கொண்டிருந்தேன் பதில் வரவில்லை.

எங்க வீட்டிலெல்லாம் ரொம்பவும் தீவிரமான இந்து மக்கள், ஒவ்வொரு முறையும் மதமாற்றத்தைப் பற்றிய விஷயத்தைக் கேள்விப்பட்ட பொழுதும் இந்து மதம் மதமாற்றத்தை அனுமதிக்காததைப் பற்றி பேசப்படும்.

மற்ற மதங்களை விடவும் இந்து மதத்தை அவர்கள் சரியானதென்று சொன்னதற்கு இதுவும் ஒரு காரணம், நான் படித்த சாமியார்ப்(இந்து) பள்ளிகளில் கூட இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை, இந்த ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா மக்களை கூட இந்துக்கள் இல்லையென்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனக்கு உண்மையிலேயே புரியவில்லை, இந்துவாக மதம் மாறுவதென்றால் என்ன என்று. எங்கள் வீட்டில் சொல்வது, இந்துவாக பிறந்தால் மட்டுமே இந்துவாக ஆகமுடியும் என்றும். மதம் மாறி இந்துவாக மாறமுடியாதென்றும் சொல்வார்கள். தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்க முடியுமா?

ராமகிருஷ்னர் கூட கொஞ்ச நாள் முஸ்லீமா இருந்துவிட்டு(அந்த மார்க்கத்தை தெரிந்துகொள்ள என்று நினைக்கிறேன்) திரும்பவும் இந்துவாக மாறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் சேர்ந்து குழப்புகிறது.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In வகைப்படுத்தப்படாதவை

கட்டபொம்முவும் உண்மையும்

சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு விஷயம், சிந்தனையில் இருந்து விலக மறுத்தது. கட்டபொம்மன் என்று சொல்லும் பொழுதே நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் நடித்த அந்த படமும் அதன் வசனங்களும், ஆனால் சினிமாவில் வருவதெல்லாம் நிஜம் என்று நம்பும் பழக்கம் விட்டு பல ஆண்டுகள் ஆகிறது.

ஒரு சினிமாவால் வரலாற்றை எப்படியெல்லாம் திசைதிருப்ப முடியும் என்பது வியப்பளிக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் போல், சோழகுலத்தின் வரலாற்றை தப்பும் தவறுமாக, திரித்ததைப்போல். சினிமாக்காரர்களால் திரிக்கப்பட்ட கதைகளே அதிகம், பாரதி படம் பார்த்து வருத்தப்பட்ட உண்மையான் பாரதி விசுவாசிகளை பார்த்துள்ளேன். அது போல்தான் இதுவும்.

ஆனால் பாரதியையும், கட்டபொம்மனையும், தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்களேத்தவிர வேறு எதையும் செய்துவிடவில்லை இவர்கள். கல்கி சோழர்களை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்து வைத்ததைப் போல். நான் படித்த அந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு,

நன்றி, ஜே ராஜா முகம்மது, அவருடைய புதுக்கோட்டை மாவட்ட வரலாறு.

-------------------------

கப்பத்தொகை 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் மதுரை கலெக்டராக இருந்த ஜாக்ஸன், கட்டபொம்மனுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்தார்.

ஆனால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்ஸன். அப்போது, ஆங்கிலேயே படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக கட்டப்பொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது.

இதன்படி தன்னை ராமநாதபுரத்தில் ஆக.18,1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்தக் கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன்.

கட்டபொம்மன் தனது பரிவாரங்களுடன், ஜாக்ஸனை சந்திக்கச் சென்றார். ஆக.27, 1798ல் குற்றாலத்தை ஜாக்சன் அடைந்தபோது, கட்டப் பொம்மனும் அவரது பரிவாரங்களும் ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்துவிட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்துõர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி 23 நாள் கழித்து, 400 மைல் அலைந்து, செப்.19, 1798ல் ராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்தார் கட்டபொம்மன்.

கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, ரூ.5,000 (1080 பசோடா)மட்டுமே பாக்கி இருப்பதை கண்டுகொண்டார் ஜாக்ஸன். ஆகவே, மே 31,1798க்கும் செப். 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டபொம்மன் ரூ.11 ஆயிரம் கிஸ்தி பண பாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.

அகந்தை கொண்ட ஜாக்ஸன், மேற்படி சந்திப்பின் போது கட்டபொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணிநேரம் நிற்கவைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில் ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் கட்டபொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்படார். கட்டபொம்மன் தப்பித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் கட்டபொம்மன் சென்னை கவர்னருக்கு மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்.

கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கை கலப்பிற்கு ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?)

கடிதத்தைக் கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்ஸனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்தும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரணை நடத்த வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.

இக்குழுவின் விசாரணையில் (டிச.15, 1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம் ஏளனத்திற்குரியது என்று தெரியவந்தது.

விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கப்பட்டு, பதவியில் இருந்து ஜாக்ஸன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் லுசிங்டன் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

Read More

Share Tweet Pin It +1

23 Comments

In வகைப்படுத்தப்படாதவை

பார்த்தலில்... கேட்டலில்... படித்ததில்...

பார்த்தலில் கேட்டலில் படித்ததில் என்று சுரேஷ் கண்ணன் எழுதியிருந்து பின்னர் விருப்பப்படுபவர்கள் தொடருமாறு சொல்லியிருந்தார். சோம்பேறித்தனத்தில் ஒன்றாம் நம்பரான எனக்கு இதைப்பற்றி எழுதும் ஆசை இருந்ததாலும் எதையாவது எழுதவேண்டும் போல் இருப்பதாலும் தொடர்கிறேன்.

எனக்கான பிடித்த விஷயங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன, எப்படி பொன்னியின் செல்வனில் தொடங்கி சாண்டில்யன் வழியாக, சுஜாதா பாலகுமாரன் என படித்து இப்பொழுது, ரமேஷ் பிரேம், ஜேபி சாணக்யா, சாரு நிவேதிதா, சுரா, ஜெயமோகன், எஸ்ரா என்று மாறிக்கொண்டேயிருக்கிறது. இது மொத்தமும் தமிழில் நான் உணர்ந்தவை ஆங்கிலம் முடிந்தால் இன்னுமொறு பதிவில்.

படித்ததில் பிடித்தது,
ஒரு புளியமரத்தின் கதை,
உபபாண்டவம்
ஜெயமோகன் குறுநாவல்கள் (குறிப்பாக லங்காதகனம்)
ஜூனோ இருபாகங்கள் (சுஜாதா என்று சொல்லவும் வேண்டுமா)
பயணிகள் கவனிக்கவும் (பாலகுமாரன், ஏறக்குறைய அத்தனையையும் படித்திருப்பேன் உடையார் 5 வரை. இது மிகவும் பிடித்திருந்தது. காரணமெல்லாம் கேட்டால் சொல்லத்தெரியாது.)
ஸீரோடிகிரி (சாரு நிவேதிதா - உவ்வே என்று வந்தாலும் பிடித்திருந்தது)
சொல் என்ற ஒர் சொல்(பின்நவீனத்துவத்தை உண்டு இல்லைன்னு பார்த்திர்றதுன்னு ஒத்தக் காலில் நின்று படித்த புத்தகம் அப்படியே வாங்கிய அவர்களின் நாவல்களின் தொகுப்பு.)
மரப்பசு தி.ஜானகிராமன் (மீண்டும் ஒரு முறை வாங்க வேண்டும். யாரோ எடுத்து சென்று விட்டார்கள்.)
சரி சரி பொன்னியின் செல்வன்(இதனுடன் நான்கைந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்)
மற்றது, கடல்புறா மொத்தமாக இதுவும் நான் சின்ன வயதில் படித்திருந்ததால் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்று.

கேட்டதில் (எனக்கும் பாடல்களுக்குமான விருப்பம் ரொம்பவே வித்தியாசமானது. இதில் வேறெதையும் எதிர்பார்க்காதீர்கள்.)

நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே..)
தங்கத்தாமரை மகளே(மின்சாரக் கனவு)
இது ஒரு பொன்மாலைப் பொழுது..
வெண்மதியே வெண்மதியே நில்லு
முன்பனியா முதல் மழையா
தொம் தொம் (சிந்து பைரவி)
ரோஜா ரோஜா (காதலர் தினம்)
எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்.)
என் வானிலே (ஜானி ஜானி ஜானி)
லஜ்ஜாவதியே (4 த பிரண்ட்ஸ்)

பார்த்ததில் பிடித்தது நான் கமல் ரசிகன் அல்ல இது ஒரு முக்கியமான குறிப்பு

நாயகன்
குருதிப்புனல்
தளபதி
மைக்கேல் மதன காமராஜன்
திருவிளையாடல் (சிவாஜி)
அதே கண்கள்(ரவிகுமார் நடித்தது)
எதிர் நீச்சல்(நாகேஷ் படிக்கட்டு கீழிருந்து படிப்பதாக வருமே அது இந்தப் படம் தானே.)
வீடு
அவள் அப்படித்தான்(இது முழுக்க முழுக்க ரஜினிக்காக பின்னியிருப்பார் அப்படியே ஸ்ரீப்ரியாவும்)
அப்புறம் கட்டக் கடேசியா புதுப்பேட்டை.

சுரேஷ் சொன்ன பல படங்களை நானும் சொல்லியிருக்கிறேன், என்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் அவை அத்தனையும் நல்ல படங்கள். அதேபோல் தான் இதுவும் விரும்புபவர்கள் தொடரலாம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In வகைப்படுத்தப்படாதவை

இவங்கல்லாம் பேசுறதக் கேளுங்க








Spiro Agnew - Hippies

Anwar al-Sadat - Peace

Apollo 11 - The Eagle Has Landed

Apollo 11 - One Small Step For Man

Apollo 13 - Houston We Have a Problem

P.T. Barnum - 1890 Commercial

Battle of Midway - Eyewitness Account

Marlon Brando - Offer He Can't Refuse

William Jennings Bryan - The Republic

George Bush - Death of Communism

Johnny Carter - Nomination

Fidel Castro - Ambition

Fidel Castro - Cuban Revolution

Fidel Castro - We Have The Power

Neville Chamberlain - Meeting With Hitler

Winston Churchill - Finest Hour

Bill Clinton - Renewal

Calvin Coolidge - America and the War

Calvin Coolidge - Duty of Government

James Dean - Tearing Me Apart

John Dulles - Free People Will Never Remain Free

Amelia Earhart - Aviation

Amelia Earhart - Women

Thomas Edison - Electricity and Progress

Albert Einstein - E=mc^2

Albert Einstein - Non-Violence

Albert Einstein - Nuclear Weapons

Albert Einstein - World Peace

Robert Frost - Fire and Ice

Mahatma Gandhi - Soldier of Peace

Bill Gates - Vision

Lou Gehrig - Luckiest Man

Hermann Goering - Dimitrov

Hermann Goering - Prussian State Council

Hermann Goering - Stalingrad

Samuel Gompers - Labor's Service to Freedom

Che Guevara - Speech 1

Che Guevara - Speech 2

Che Guevara - Speech 3

Al Gore - Internet

Adolf Hitler - Announcement of his death

Adolf Hitler - War Declaration

Lyndon Johnson - All Men Are Equal

Edward Kennedy - Eulogy for Robert

John F. Kennedy - Cuban Missile Crisis

John F. Kennedy - Announcement that he had been shot

John F. Kennedy - Announcement of his death

Robert Kennedy - What We Need

Dr. Martin Luther King Jr. - I Have a Dream

Vladimir Lenin - 1918 Speech

The Life Alert Commercial "Help I've fallen and I can't get up!"

Charles Lindbergh - No Intervention (1941)

Charles Lindbergh - Seeing Europe

Douglas MacArthur - Fade Away

Malcolm X - Conditions in the Ghetto

Malcolm X - By Any Means

Malcolm X - Open Revolt

Malcolm X - No Unity

Malcolm X - White Man is the Enemy

Nelson Mandela - Freedom For All

Joseph McCarthy - Jackals

Joseph McCarthy - One and the Same

Joseph McCarthy - Traitors are not Gentlemen

Margaret Mead - Women's Work

Richard Nixon - 1971 State of the Union Address

Al Pacino - Scarface

Pearl Harbor Attack - BBC Announcement

Pearl Harbor Attack - CBS Announcement

Pearl Harbor Attack - NBC Announcement

Robert Edwin Peary - North Pole

John Pershing - Fighting For You

Dan Quayle - Representative

Ronald Reagan - Government is the Problem

Paul Reubens - Take a Picture

John D. Rockefeller Jr. - Address

Eleanor Roosevelt - Freedom and Justice

Franklin Delano Roosevelt - Declaration of War Against Japan

Franklin Delano Roosevelt - Inaugural Address

Franklin Delano Roosevelt - 1940 Democratic National Convention Speech

Franklin Delano Roosevelt - Announcing Beginning of World War 2

Franklin Delano Roosevelt - Requesting War on Japan

Theodore Roosevelt - Social and Industrial Justice

Theodore Roosevelt - The Right of the People to Rule

Ernest Shackleton - My South Polar Expedition

Josef Stalin - Address

Josef Stalin - Fight Fascists

Josef Stalin - Germany

Gloria Steinem - Humanism

William Howard Taft - The Rights of Labor

Margaret Thatcher - Falkland Islands

President Truman - Atomic Bombing of Japan

President Truman - Threatening Japan

Woodrow Wilson - 1915 Speech to Indians

Read More

Share Tweet Pin It +1

1 Comments

Popular Posts