Girlfriend experience பற்றி...
GFE is pseudo girl friend experience, you mother fucker. However improbable it may be, stop fucking around.
When bae corrects your Bukowski quote and if you paid for her services, you are living in a bliss.
When I asked - Did you genuinely liked anyone? Like blonde, blue eyed boy/gent.
Bae said - Yes I did fancy one guy, he was pretty good. Mostly fun and like you said blond and blue eyes. Haha.
Then I asked - if you dont mind me asking, what's pretty good here.
Bae said - I don't know how to explain this really, :D good size penis.. just the chemistry is there simply.
Hmm. Good size penis does matter! I exclaimed.
Bae then said - It's not about the penis, also chemistry very important. You will be willing trying new stuff with someone who you feel comfortable and attracted to.
But to Bae's misfortune, he didnt like her back genuinely. She said 'I don't meet my future husband like this. Really not. It's not gonna work :D unless you both are crazy. Like a drug dealer escort couple. Haha'
சித்ரா செத்ததும் கிறுக்கியது...
சைக்கோ புண்டைகள் நிறை உலகம். கவனப் புண்டை இல்லைன்னா ஓத்துவிட்டுறுவாளுகள். பீ ஃபக்கிங் கேர்புல் காய்ஸ்.
எஸ்ரா எழுதிய ஒரு எழுத்தாளனின் தற்கொலை பற்றிய பதிவுக்கு பிறகு தற்கொலை பற்றிய என் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன். செய்து கொள்வேனா தெரியாது, but its a purest form, ஆனால் தற்கொலை பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். I might be wrong, I think this guy...இன்றைக்கு தற்கொலைன்னு சொன்னதும் நினைவுக்கு வரும் யுகியோ மிஷிமா பற்றி எஸ்ரா எழுதிய பத்தி நினைவுக்கு வருவது போல் நினைவு கூறப்படும் ஒரு பத்தி எழுதினால் கூடப்போதும். மனதிற்கு நெருக்கமான எழுத்து எஸ்ராவினுடையது.
Suicide is an art form.
― நான் தான்.The thought of suicide is a great consolation: by means of it one gets through many a dark night. ― ஃபெடரிக் நியீட்ஷே
I went to the worst of bars hoping to get killed but all I could do was to get drunk again. ― புக்கோவ்ஸ்கி
If I had no sense of humor, I would long ago have committed suicide. ― மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
When you're young and healthy you can plan on Monday to commit suicide, and by Wednesday you're laughing again. ― மர்லின் மன்றோ
The trouble about jumping was that if you didn't pick the right number of storeys, you might still be alive when you hit bottom. ― சில்வியா ப்ளாத்
Killing myself was a matter of such indifference to me that I felt like waiting for a moment when it would make some difference. ― தாஸ்தாவெய்ஸ்கி
The literal meaning of life is whatever you're doing that prevents you from killing yourself. ― ஆல்பர்த் காமு
But in the end one needs more courage to live than to kill himself. ― ஆல்பர்ட் காமு
Suicide. It's something I've been thinking about. Not too seriously, but I have been thinking about it. ― ஜே ஆஷர்.
ரவி ஒரு மென்பொருளியல் வல்லுநன், அமேரிக்காவில் கடந்த நான்காண்டுகாலமாக, ஒரு தலைசிறந்த பன்நாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். மிகவும் அமைதியானவன், அவ்வளவு சீக்கிரத்தில் யாருடனும் பழகிவிடமாட்டான், எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து முடிவு எடுப்பவன் எனவும் நட்புவட்டாரங்களில் பெயரெடுத்திருந்தான். அவன் தாய் தந்தை முடிவுசெய்து வைத்திருந்த, மீனாவை திருமணம் செய்துக்கொள்ள தமிழ்நாட்டிற்கு விடுமுறையில் வந்திருந்தான்.
மீனா மேலாண்மையியல் படித்துவிட்டு ஒரு அயல்நாட்டு நிறுவனத்தின் உள்நாட்டுக்கிளையில் வேலைசெய்து வந்தாள். அழகும் அறிவும் சேர்ந்த கொஞ்சம் சூட்டிகையான பெண், அவள் உடை உடுத்தும் விதமே, அவளை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டிவிடும். ஒரு சுபயோக சுபதினத்தில் அவர்கள் திருமணம் நல்லவிதமாக முடிந்திருந்தது. மீனாவை அமேரிக்காவிற்கு உடனழைத்து செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்திருந்ததால், அவனுடைய எஞ்சியிருந்த விடுமுறையை கழிப்பதற்காகவும் தேனிலவிற்காகவும் குல்லு, மணாலி செல்ல முடிவெடுத்திருந்தான் ரவி.
இதைப்பற்றி அவன் வீட்டில் சொன்னபொழுது அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள், சிலநாட்களில் தான் அமேரிக்கா போகப்போகிறார்களே பின் எதற்கு தனியாக ஒரு தேனிலவென்று. ஆனால் ரவி கொஞ்சம் பிடிவாதமாக வற்புறுத்த ஒப்புக்கொண்டனர். மீனாவிடம் தாங்கள் போகப்போகும் பயணத்தைப் பற்றி சொல்ல நினைத்தவன், அடுத்த நாள் காலையில் எழுந்ததுமே ஆரம்பித்தான்.
"மீனா, மணாலி ஒரு அற்புதமான இடம், நான் வேலை சம்மந்தமாக உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் பறந்திருக்கிறேன். ஆனால் மணாலி போன்ற ஒரு இடத்தை பார்த்ததேயில்லை. முதன் முதலில் டெல்லியில் வேலை பார்த்தபொழுதே நான் தீர்மானித்துவிட்டேன், தேனிலவு மணாலியில்தான் என்று, அதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதை அப்புறம் சொல்கிறேன்." என்று கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்தான்.
தன்னுடைய திட்டமிடும் உத்தியை ரவி, மணாலி பயணத்தில் அழகாகக் காட்டியிருந்தான். வீட்டில் உட்கார்ந்தபடியே, சென்னையிலிருந்து டெல்லிக்கும், பின்னர் திரும்பி வருவதற்கும் விமானத்தில் முன்பதிவு செய்தவன். அப்படியே டெல்லியிலிருந்து தனக்கு மிகவும் நெருக்கமான ரஹுமான் என்ற ஓட்டுநரையும் குவாலிஸ் வண்டியையும் பதினைந்து நாட்களுக்கு ஒப்பந்தம் செய்திருந்தான். டெல்லியிலிருந்து சண்டிகர் வழியாக, முதலில் சிம்லா செல்லவதாகவும்; பின்னர் சிம்லாவில் ஐந்து நாட்கள் தங்கிய பிறகு, அங்கிருந்து நேராய் குல்லுவிற்கு சென்று குல்லுவில் மூன்று நாட்களும், பின்னர் மணாலியில் மீத நாட்களையும் செலவழிப்பதாக திட்டம். இதில் டெல்லி, சண்டிகர், சிம்லா, குல்லு, மணாலி ஆகிய இடங்களில் தங்குவதற்கான ஹோட்டல்களையும் சென்னையிலிருந்தே முன்பதிவு செய்திருந்தான்.
அவன் தன்னுடைய திட்டத்தை மீனாவிடம் விவரிக்க அவளுக்கு வியப்பாய் இருந்தது. பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும், தாங்கள் தங்கப்போகும், சாப்பிடப்போகும் இடங்களைக் கூட திட்டமிட்ட தன் கணவனின் சாமர்த்தியத்தை பார்த்து பிரமித்துப்போனாள்.
"ஏங்க முன்னாடி நீங்க எதுவும் டிராவல் ஏஜென்ஸியில் வேலை செய்தீங்களா?" என்று கேட்ட அவளின் நகைச்சுவை உணர்வை ரசித்தவனாய்,
"இல்லை முன்பே இதேபோல் ஒரு டிரிப் போயிருக்கேன், அதுவுமில்லாம இருக்கவே இருக்கு லோன்லி பிளானட் புத்தகம். அதன் மூலம் தேவைப்படும் மற்ற விவரங்களும் கிடைத்தது. அப்புறம் இன்னொன்னு நான் ஏற்பாடு பண்ணியிருக்கேன்ல, ரஹுமான் அற்புதமான டிரைவர், வாழ்க்கையில என்னை ஆச்சர்யப்படுத்தின பல விஷயங்களில், அவனும் அவனுடைய குவாலிஸம் ஒன்று. ரஹுமான் சொன்னா குவாலிஸ் கேட்கும்னு நினைக்கிறமாதிரி வண்டி ஓட்டுவான். ஒரு விஷயம் மணாலிலேர்ந்து கொஞ்ச தூரம் போனால் ரோதங் பாஸ் அப்பிடின்னு ஒரு இடம்இருக்கு. ரொம்ப பிரம்மாண்டமா இருக்கும் அதன் அழகு. நம்ப பயணத்தில பார்க்கப்போற ரொம்ப முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்னு. அப்புறம் அந்தப் பனியும் குளிரும் நமக்கு ஒத்துக்கிச்சின்னா லே வரைக்கும் கூட்டிட்டி போறேன்னு சொல்லியிருக்கான் அவன். சொர்கத்தை நேரில் பார்க்கிறமாதிரி இருக்கும் லே. கொஞ்சம் தீவிரவாத பிரச்சனை இருக்குதுதான்னாலும் நாம போகாட்டி வேறயாரு போவாங்க. உனக்கொன்னும் பயமில்லையே?"
அவன் பேசுவதையே ஆர்வமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள் மீனா, இவனுக்குத்தான் எவ்வளவு ஆர்வம் இந்தப் பயணத்தில். அவன் கண்கள் இந்த பயணத்திட்டத்தை சொல்றப்போ எவ்வளவு பிரகாசமா மாறுது என்றவாறு நினைத்துக் கொண்டிருந்தவளை அவன் கேட்ட கேள்வி திசை திருப்ப,
"என்ன கேட்டீங்க?"
நோடிக்கொறு முறை மாறும் அவளின் முகத்தின் உணர்ச்சிகளை ரசித்தவனாய்,
"என்ன அதுக்குள்ள கற்பனையா? இல்லை, லேவில் கொஞ்சம் தீவிரவாதிகளைப்பத்தி பயமிருக்கு அதான் உனக்கு பயமாயிருக்கான்னு கேட்டேன்."
சிறிது யோசித்த மீனா, "உண்மையை சொல்லணும்னா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஆனா நீங்க தான் என்ன சொன்னாலும் விடமாட்டீங்க போலிருக்கே?" சொல்லிவிட்டு சிரித்தாள்.
"ஏய் அப்படியெல்லாம் கிடையாது, உனக்கு பயமாயிருந்தா போகவேணாம். இது ஒரு அடிஷினல் பிளான் தான் நம்மளோட முக்கியமான பிளான் மணாலிதான். நேரமிருந்து, உனக்கும் மனமுமிருந்தால் போலாம்."
அவன் இப்படி சொன்னாலும் மீனாவிற்கு அவன் மிகவும் ஆர்வமாய் இருந்ததாய்ப்பட்டது. போகாவிட்டால் கொஞ்சம் வருத்தப்படுபவனாயும்.
"இங்கப்பாருங்க நான் சும்மா உங்களை சீண்டினேன். உங்களை மாதிரியே எனக்கும் இந்தியா மேல நிறைய பற்றிருக்கு. நாமெல்லாம் போகாமயிருக்குறதாலத்தான் தீவிரவாதிகள் பிரச்சனை பண்றாங்க. நாம நிச்சயமாப் போலாம்."
ஒருவழியாக இப்படி அவர்கள் மணாலி பயணம் தொடங்கியது. விமானத்தின் மூலம் டெல்லி வந்திறங்கியவர்களை, விமான நிலையத்திலேயே வந்து வரவேற்றான் ரஹுமான். உத்திரபிரதேசத்தை சேர்ந்த அவன் நெடுநெடுவென ஆறடி உயரமாய் கொஞ்சம் ஒல்லியாய் இருந்தான். ரவியும் ரஹுமானும் இந்தியில் உரையாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை, இடையிடையில் லடுக்கி, லடுக்கின்னு அவர்கள் பேசுவது மட்டும்தான் விளங்கியது அவளுக்கு. பார்த்தவுடனேயே அவளுக்கு வணக்கம் சொன்னான். விமானநிலையத்திலிருந்து நேராய் கனாட்பிளேஸ் வந்தவர்கள், அவர்கள் முன்பதிவு செய்திருந்த ஹோட்டலுக்கு சென்று குளித்து உடைமாற்றிவிட்டு, சாப்பிடுவதற்கு நேராய் சரவணபவனிற்கு சென்றார்கள்.
"என்னங்க நீங்க சொல்லவேயில்லை, நம்ம சரவணபவன் இங்கிருக்குன்னு." மீனா குழந்தைத்தனமாய் கேட்க, சரவணபவனைப் பார்த்தும் அவளிடம் தெரிந்த மகிழ்ச்சி, ரவியையும் சந்தோஷப்படுத்தியது.
"மீனா, இங்க ரெண்டு சரவணபவன் இருக்கு. நானிருந்தப்பயெல்லாம் கம்பெனி பார்ட்டி கொண்டாட இங்கத்தான் வருவோம். நார்த் இண்டியன்ஸ்க்கு இந்தச் சாப்பாடு ரொம்பப் பிடிக்கும்."
பிறகு, இரண்டு சௌத்இண்டியன் தாழி ஆர்டர்செய்து சாப்பிட்டுவிட்டு வெளியில் வர, அங்கே மல்லிகைப்பூ விற்றுக்கொண்டிருந்த நபர். மீனா புடவை கட்டியிருந்ததால் அவளிடமும் நீட்டினார். ஆசையாய் ரவியிடம் கேட்டு வாங்கி வைத்துக்கொண்டாள் மீனா. அப்பொழுதான் அவனுக்கு மெதுவாய் அலமேலுவின் ஞாபகம் வந்தது. அவளுக்கு மல்லிகைப்பூவென்றாலே பிடிக்காது என்று நினைத்தவன். தன்னைத் தானே கடிந்து கொண்டான் அலமேலுவைப்பற்றி மீனாவிடம் சொல்லாததை நினைத்து, பின்னர் சொல்லிக்கொள்ளலாம் என நினைத்து மறந்தும் போனான்.
அங்கிருந்து நேராய் ஹோட்டலுக்கு திரும்பியவர்கள், இரவுப்பொழுதை அங்கேயே கழித்துவிட்டு விடியற்காலையிலேயே சண்டிகருக்கு கிளம்பினர். வழியில் தான் அவளுக்கு புதிதாய் சந்தேகம் வந்தது.
"ஆமாம் இவன் நைட்டெல்லாம் எங்கத் தங்கயிருந்தான். எங்க சாப்பிட்டான்?"
மீனா ரஹுமானைத்தான் கேட்டாள்,
"அவனுக்கு நாம தங்கின ஹோட்டல்லயே ரூம் கொடுப்பாங்க, அந்த மாதிரி ரூம் எல்லா ஹோட்டல்லயுமேயிருக்கும். அதுபோல சாப்பாடும் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன்." சொன்னவனிடம் மீனா,
"நேத்திக்கு லடுக்கி லடுக்கின்னு அவன் உங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தானே. என்னப்பத்தியா பேசினான்?"
"இல்லம்மா உன்னப்பத்தியில்லை, அது வேற ஒரு பொண்ணைப்பத்தி. உன்கிட்ட அதப்பத்தி ஏற்கனவே பேசணும்னு நினைத்தேன். இன்னிக்கு சிம்லா போனதும் சொல்றேன்." சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான் ரவி.
சிகரெட் பிடிப்பதைப்பற்றி மீனாவிடம் முதலிரவிலேயே சொல்லியிருந்தான். அதுமட்டுமில்லாமல் சில மாதங்கள் அவகாசமும் கேட்டிருந்தான் அதை நிறுத்துவதற்கு. ஆனால் மீனா அப்பொழுது அதைப்பற்றி கவலைப்படவில்லை அவன் எந்தப் பொண்ணைப்பற்றி சொல்லப்போகிறான் என்றே யோசித்துக் கொண்டிருந்தாள்.
அன்று மாலை சிம்லா வந்ததிலிருந்தே மீனா கொஞ்சம் சோபையிழந்ததைப் போலிருந்தாள். முதலில் ரவியும் குளிர் மீனாவிற்கு ஒத்துவரவில்லையென்றே நினைத்தான். பின்னர்தான் அவள் தான் சொல்வதாய்ச் சொன்ன பெண்ணைப்பற்றி நினைத்தே இப்படியிருக்கிறாள் எனத்தெரிந்து கொண்டான். அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலிருந்த மாலுக்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு, இரவு அங்கேயே உணவருந்திவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினர். அவளுடைய நிறத்திற்கு அவள் அணிந்திருந்த கருஞ்சிவப்பு நிற ஸ்வெட்டர் வெகு பொருத்தமாய் இருப்பதாய்ப்பட்டது ரவிக்கு.
"ஏய் இன்னிக்கு காலையிலேர்ந்தே நீ சரியாயில்லை. உடம்புக்கு எதுவும் பண்ணுதா?" என்று கேட்ட ரவிக்கு, இல்லையென்ற தலையசைத்தல் மட்டுமே பதிலாய்க் கிடைத்தது. பின்னர் சிறிது நேரத்தில்,
"நீங்க ஒரு பொண்ணைப்பற்றி சொல்றதா சொல்லியிருந்தீங்க?" மீனா கேட்க ரவிக்கு கொஞ்சம் ஆச்சர்யமாய் இருந்தது. அவன் மீனாவை கொஞ்சம் வித்தியாசமாய் நினைத்திருந்தான். ஆனால் இந்தப் பெண்களுக்குத்தான் எவ்வளவு பொறாமை இந்த விஷயத்தில் என நினைத்துக்கொண்டவனாய்
"ஆமாம் மறந்துட்டேன் மீனா, நான் டெல்லியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அலமேலு அப்பிடின்னு ஒரு பொண்ணை காதலிச்சேன், அவளும் தான். நாங்க ரெண்டுபேரும் ஒரே கம்பெனியில் தான் வேலைப் பார்த்துவந்தோம். அப்படி ஒரு சமயத்தில் தான் நானும் அவளும் இங்கே இதே மாதிரி ஒரு டிரிப் வந்தோம். இப்ப நாம தங்கியிருக்கிற இதே ஹோட்டலில் தான் தங்கினோம்.
அவள் ஒன்னும் அவ்வளவு அழகாயிருப்பான்னு சொல்லமுடியாதுன்னாலும் பரவாயில்லாம இருப்பா. எப்பவும் எங்களுக்குள்ள ஒரு டிஸ்டென்ஸ் இருக்கும். ஆனா அந்த குறிப்பிட்ட பயணத்தில் அந்த இடைவெளி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு ஒரு நாள் நாங்க தப்பு பண்ணிட்டோம்." ரவி சொல்லிவிட்டு நிறுத்த,
மீனா அங்கே நடப்பதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"ஆனால் எங்களுக்குள்ள கருத்துவேறுபாடு வந்து கொஞ்ச நாள்லயே பிரிஞ்சிட்டோம். அவளுக்கும் வேற ஒரு இடத்தில கல்யாணம் ஆய்டுச்சு. இன்னமும் எப்பவாவது மெய்ல் அனுப்புவா எப்படியிருக்கேன்னு கேட்டு அவ்வளவுதான். மற்றபடிக்கு நேர்ல பார்த்து ஆறேழு வருஷம் ஆயிருச்சு."
கேட்டுக்கொண்டிருந்த மீனா ரொம்பநேரம் எதுவும் சொல்லவில்லை, ரவியும் அதைப்பற்றி மேலும் எதுவும் பேசாமல் கண்மூடிப்படுத்திருந்தான். சிறிது நேரம் கழித்து, பின்னர் மீனா அவனை எழுப்ப எழுந்தவன்,
"நீங்க உண்மையை சொன்னதுக்கு நன்றி, நானும் உங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும். நான் சொல்லவேண்டாம்னுதான் நினைச்சேன். நீங்க என்கிட்ட உண்மையாயிருக்கிறதப்போல நானும் உண்மையாய் இருக்கணும்னுபடுது அதான்..."
சிறிது நிறுத்தியவள்,
"அப்ப எனக்கு பதினெட்டு வயசிருக்கும். நான் காலேஜில் படிச்சிக்கிட்டிருந்தேன் எனக்கு ஒரு ப்ரெண்ட் ராஜேஷ்னு, நல்லா படிக்கிற பையன். எனக்கு படிப்பு விஷயங்களில் இருக்கும் சந்தேகங்களை அவன்தான் தீர்த்துவைப்பான். நாங்க காதலிக்கல்லாம் இல்லை, ஆனா ஒரு நாள், நான் அவன் வீட்டில் சந்தேகம் கேட்கப்போனப்ப தப்பு நடந்திருச்சு. இரண்டுபேரும் தெரிஞ்சுத்தான் பண்ணினோம். அதற்குபிறகு அப்படி நடந்ததேயில்லை.
அவன் இப்ப பெங்களூரில் வேலை பார்க்கிறான். இன்னமும் ஒரு நல்ல நண்பன், நான் முதலிரவன்னிக்கே இதைப்பத்தி சொல்லணும்னு நினைச்சேன். ஆனா உங்களைப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டு சொல்லலாம்னுதான் அன்னிக்கு சொல்லலை. அது நடந்து எட்டு வருஷம் ஆச்சு. இன்னிக்கு வரைக்கும் வேறெந்த தப்பும் பண்ணியதில்லை, இதையெல்லாம் நான் ஏன் உங்கக்கிட்ட சொல்றேன்னா, உங்களுக்கும் அந்த சூழ்நிலை புரியும்ணுதான். அந்த விஷயத்தை நான் மறந்து ரொம்ப நாள் ஆச்சு, நீங்க என்னை நிச்சயம் பண்ணின அன்னிக்குத்தான் திரும்பவும் நினைவிற்கு வந்து உறுத்தத்தொடங்கியது.
இப்ப நான் சொல்லிட்டேன், இனிமேல் தீர்மானிக்க வேண்டியது நீங்கத்தான்."
உண்மையில் ரவியால் அவள் சொல்வதை நம்பமுடியவில்லை, ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தான். அவள் தான் சொன்ன பெண்ணைப்பற்றி சந்தேகப்பட்டதால் தான் ஒரு அழகான ஊடலுக்காக வேண்டி அவன் அப்படியொரு அலமேலு கதையை அவளிடம் சொல்லியிருந்தான். ரவிக்கு எப்பொழுதுமே அவனிடம் இருக்கும் கதைசொல்லியைப் பற்றிய ஒரு கர்வம் இருக்கும். எப்பொழுதுமே சீரியஸாய் இருப்பதால் அவன் சிலசமயம் அவனுடைய கற்பனைகளை கதையாய் சொல்லும் பொழுது எல்லோருமே நம்பிவிடுவார்கள்.
ஆனால் அவன் இன்று அலமேலுவைப்பற்றி சொன்னது அத்தனையும் கற்பனைகிடையாது. அலமேலு உண்மை, அந்த பயணம் உண்மை, அந்த நிகழ்ச்சியும் உண்மை, ஆனால் உண்மையான அலமேலுவின் காதலன், அவன் கிடையாது அவர்களுடன் வேலைசெய்யும் இன்னொருவன் பிரபாகரன். அந்த சம்பவம் அத்தனையும் உண்மை ஆனால் நடந்தது அலமேலுவுக்கும் பிரபாகரனுக்கும் இடையில். அதற்கு பிறகு கொஞ்சம் சோர்ந்திருந்த அவர்களை சமாதானப்படுத்தியது ரவிதான். இன்னமும் அவன் சொன்ன அந்த வார்த்தைகள் ஞாபகம் இருக்கிறது. ரவி அலமேலுவை தங்கச்சின்னு தான் கூப்பிடுவான். அதைப்போலவே அலமேலுவும் அண்ணா அண்ணான்னு உயிரையே விடுவாள்.
அவர்களுக்குள் இருந்த இனக்கவர்ச்சியில் அன்று தவறு நடந்துவிட்டதால், அவர்களை சமாதானப்படுத்தி அந்தப் பயணத்தை தொடர்ந்து நடத்த உதவியவன் ரவிதான். அதன் பிறகு அந்தப் பயணத்தில் அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தைப் பார்த்ததாலேயே அவனுடைய தேனிலவை இங்கே நடத்த தீர்மானித்திருந்தான். பின்னர் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருவரும் தனித்தனியே கல்யாணம் செய்துகொண்டார்கள். அலமேலுவின் திருமணத்தை அண்ணனாக முன்னின்று நடத்தித் தந்தவனே அவன்தான். அவனால் அலமேலுவை தவறாக நினைக்கவே முடியவில்லை. இன்றைக்கு அவளுக்கு இரண்டு குழந்தைகள் அற்புதமான குடும்பம் என்று அழகாய் வாழ்ந்து வருகிறாள். இன்னமும் அவனிடம் அந்த நிகழ்ச்சிகளைச் சொல்லி அவள் சிரிப்பதுண்டு; அவனும்தான்.
அதனால் மீனா சொன்னதைப் பற்றி யோசிக்க எதுவும் இருப்பதாக படவில்லை ரவிக்கு. அதற்கு அவன் சில ஆண்டுகளாய் பழகிவந்த அமேரிக்க சூழ்நிலையும் காரணமாயிருந்தது. உண்மையில் அவள் செய்தது ஒரு பெரிய தவறாக அவனுக்கு படவில்லை, ஏதோ சின்னவயசு தவறு நடந்துவிட்டது என்றே நினைத்தான். ஆனால் தான் அலமேலுவைப்பற்றி மீனாவிடம் சொன்னது பொய் என் சொல்லலாமா வேண்டாமா என்பதைத்தான் வெகுநேரம் யோசித்துக்கொண்டிருந்தான். அவன் அப்படி சொல்லிவிட்டால், மீனா அவளைப்பற்றி கில்டியாக நினைக்கலாம். தன் கணவனும் தவறுசெய்துவிட்டான் தானும் செய்திருக்கிறோம் சரியாய்ப்போய்விட்டது என்று நினைத்துக் கொண்டிருப்பவளிடம் தான் போய் உண்மையைச் சொன்னால் தவறாய்ப்போய்விடும் எனப் பயந்தான்.
பின்னர் அவள் தன்னைப்பற்றி இன்னும் நன்றாக புரிந்துகொண்ட பின்னர் மெதுவாகச் சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தவனுக்கு, அப்பொழுதுதான் தான் பால்கனிக்கு வந்து இரண்டுமணிநேரத்திற்கு மேல் ஆகியிருந்த விஷயமே உணர்வில் வந்தது. பாவம் மீனா பயந்துவிடப்போகிறாளென நினைத்தவனாக காலணி அணிய கீழே பார்த்தவனின் கண்களில், இரண்டு மூன்று பாக்கெட் சிகரெட் பட்ஸ் பட்டது, முதலில் இந்த சனியனை ஒழிச்சுக்கட்டணும்னு நினைத்தவனாய் மீனாவை சமாதானம் செய்ய உள்ளே சென்றான்.
சூரியன் தன்னுடைய ஆளுமையை வெம்மையாக வெளிப்படுத்தி, மனிதர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையில் என்றுமே உணர்ந்திராததும் மாற்றமுடியாதுமாகிய ஒரு முகமூடியை மாட்டிவிடுவதாயும் பின்னர் அவர்கள் தாங்கள் உண்மையென நம்பும் புனைவுகளை மட்டுமே பேசுபவர்களாகி விடுபவதாகவும், தன்னுடைய வல்லமையை பூமியின் இன்னொருபக்கத்தில் செலுத்த தன் பரிவாரங்களுடன் நகர்ந்துவிட்ட நேரத்திலும் கூட தன்னுடைய பகல் நேர மாயாஜால மகிமையால் மக்கள் சோர்வடைந்து உறக்கத்தில் மூழ்கிவிடுவதாயும் ஆயிரம் பக்கங்களில் விவரித்திருந்த ஆராய்ச்சிக்கட்டுரையை மீண்டும் ஒருமுறை தேடிப்படித்த நாள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. சனிக்கிழமையின் பின்னிரவு நேரம், பெரும்பாலும் காற்றும் நானும் உறவாடும் அலுவலக முக்கோணக்கூம்புகளின் கூட்டில் சற்றும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் பார்த்துவிட்ட இருவரின் வெற்றுடம்புகளின் களியாட்டம் என்னை அந்த ஆராய்ச்சிக்கட்டுரையை நோக்கி இன்னொரு முறை நகர்த்தியது.
ஒளிப்படமாய் அந்தக் கணம் மனதில் பதிந்து விட்டிருந்தது, புதிதாய் பூசிய சுவரில் வேண்டுமென்றே கீறியதைப் போல் அழிக்கமுடியாததாய் அப்படியே தேவையில்லாத ஒன்றாய். வாழ்க்கையின் எத்தனையோ கணங்களை கடற்கரை காற்சுவடுகளில் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டேயிருக்க, இப்படியும் சில விஷயங்கள் இமைகளின் இன்னொரு பக்கத்தில் இருக்கின்றனவோ என்ற சந்தேகிக்கும் வண்ணம் கண்களை மூடியதும் வந்து கண் சிமிட்டுகின்றன தொடர்ச்சியாய். ஒன்றிரண்டு நிமிடங்களின் சேகரிப்பில் கற்பனையின் கள்ளத்தனம் நீச்சல்குளத்தில் தவறவிட்ட நிறக்குடுவையின் லாவகத்துடன் வாய்ப்புக்கள் அனைத்தையும் அபகரித்து விரிவாக்கி எல்லைகளின் இயலாமையை புன்னைகையால் புறக்கணித்து எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கிய ஒலி ஒளிப்படமாகத் உருவாகி எப்பொழுதும் மனதின் திரையில் நகர்ந்து கொண்டிருந்ததை இல்லாமல் போகச்செய்ய வேண்டிய அவசியம் புரிந்தவனுக்கு அந்த ரகசியம் புலப்படவேயில்லை.
மனம் தன் நிலையைக் குவிக்கயியலாமல் போன அச்சந்தர்ப்பத்தில் அங்கிருந்து நகர்வதே உசிதம் என்று, கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வெளியேறி ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு அவர்கள் இருவரைப் பற்றிய நினைவுகளைப் புறந்தள்ள போராடிக் கொண்டிருந்தேன். நெருப்பு கேட்டுக் கொண்டு வந்த அலுவலக காவலாளியைப் பார்த்ததும் முகமூடிகளைப் பற்றிய ஆராய்ச்சி மீண்டும் நினைவில் வந்தது. பகற்பொழுதுகளில் இல்லாத எங்களிடையேயான நெருக்கம் இரவில் வருவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மனிதர்கள் மட்டுமல்ல, மரங்கள், சாலைகள், சுவர்கள், உணவகங்கள் என எல்லாவற்றுடனுமே இரவில் சுலபமாகப் பழகமுடிவதையும் பகலில் அவைகள் நம்மிடமிருந்து விலகி நிற்பதைப் போலவும் நான் அந்தக் கட்டுரையைப் படிக்கும் முன்னரே உணர்ந்திருந்ததால் என்னால் அந்தக் கட்டுரையில் இயல்பாய் மூழ்கமுடிந்தது.
மார்கழி மாத முன்பனிக்காலம், ஸ்வெட்டரின் நெருக்கமான பின்னல்கள் உண்டாக்கும் கதகதப்பைத் தாண்டியும் மீறியும் குளிர் உடலைத் தீண்டி, தன் ஆளுமையை நிரூபித்துக் கொண்டிருந்தது. சிகரெட் கொடுத்துக் கொண்டிருந்த கதகதப்பு விரல்களின் இடையில் முடிவடைய அதைத் தொடர்வதைப் பற்றிய கேள்விகளுக்கான பதில் தீர்மானிக்க இயலாததாய் சோம்பேறித்தனத்தின் கதவுகளின் பின்னால் ஒழிந்துகொண்டிருந்தது. கடும் பனியும், ஊதல் காற்றும், இன்னும் தன் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்த காவலாளியும் எல்லாவற்றையும் கடந்து நிர்வாணத்தில் மூழ்கி தட்டுப்படாத தரையை நோக்கி விழுந்துகொண்டிருந்தவனுக்கு வேறொன்றை சிந்திப்பதில் இருந்த மூளைப்பற்றாக்குறையும் சேர்த்து முடிவெடுக்கயியலாமல் பாக்கெட்டைத் திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்தேன். எங்கள் இருவரின் உரையாடலை ஸ்வைப்பிங் டோரின் ஒலி துண்டிக்க, அந்த இணையில் ஆண் மட்டும் வெளியில் வர, காவலாளி அவரை வணங்கி தன் விசுவாசத்தை நிரூபித்தவாரு நகர்ந்துவிட. எங்கள் இருவரிடையேயும் மௌனம் புகுந்து கொண்டது.
மௌனத்தின் வலிமையான கரங்களில் இருந்து விடுபட நினைத்த எங்களின் முயற்சி சிறுகுழந்தையின் நிலவைப் கையில் பிடிக்கும் பிரயாசையாய் நிறைவேறாமலே போனது. எனக்கு அந்த நபரைத் தெரியும், அப்படியே அந்த இணையின் மற்ற பெண்ணையும் இருவரும் ஏற்கனவே வேறுவேறு நபர்களுடன் மணமானவர்கள். மணத்திற்கு வெளியிலான உறவைப் பற்றிய பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லாததால் எனக்கு நான் பார்க்க நேர்ந்த விஷயத்தைப் பற்றி இயல்பாய் சில கேள்விகள் இல்லை, ஆனால் உறவு நடந்த இடத்தைப் பற்றிய கேள்விகள் உண்டு. ஆனால் என் மன உளைச்சலைவிடவும் அவர்களுடையது அதிகம் இருக்கும் என்பதால் மன்னிப்பிற்கான சாத்தியக்கூறுகள் என்பக்கத்தில் இருந்து திறந்து வைத்தேன்.
"சாரி..." நான் முடித்திருக்கவில்லை, அவர் என்னைப் பார்த்து "இது இப்படி நடந்திருக்கக்கூடாது! சாரி!" அவ்வளவுதான் சொன்னார். நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன், இது இப்படி நடந்திருக்கவேகூடாது. அது அவர்களுடைய உறவாக மட்டுமல்லாமல் அதை நான் பார்த்ததையும் சேர்த்துத்தான். அதன் பிறகு தொடர்ந்த உரையாடல் பொதுவானதாக அலுவலகம் வேலை தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருந்தது. அந்த விஷயத்தை அவரால் ஒதுக்கிவிட்டு தன் உரையாடலைத் தொடர முடிந்திருந்தது, அவருடைய மனித மனங்களைக் கணக்கிடும் வலிமை ஆச்சர்யப்படத்தக்க வகையில் இருந்தது. அவர் அளவிற்கு முடியாமலிருந்தாலும் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது.
வழமை போல் இரவின் தொடர்ச்சியாக இல்லாமல் பகல் தனக்கான முகமூடியுடன் வெளிப்பட, ஆராய்ச்சியின் முடிவாகக் கட்டுரை சொல்லியிருந்த "தங்களுக்கான முகமூடிகளைப் பற்றியெழும் கேலிகளைப் பொருட்படுத்தாமல், அதே சமயம் நிராகரிக்கவும் முடியாமல் இருத்தலுக்கான சமரசமாக நகர்தலையும், நகர்தலின் சாத்தியமின்மை புன்னகையையும் தோற்றுவிக்கிறது" என்பது என்வரையில் உண்மையானது. இணையில் ஆண் தன் நகர்தலில் வெற்றிபெற, பெண் புன்னகையில் தன்னைப் புதைத்துக் கொண்டாள். வாழ்க்கை எங்கள் சந்திப்பின் சாத்தியக்கூறுகளை மறுத்தலித்தபடி சுழன்று கொண்டிருந்தது. ஆனால் அசந்தர்ப்பங்களை சந்தர்ப்பங்களாக்கும் வேடிக்கையான விளையாட்டை காலம் தொடங்க, விளையாட்டிற்கான விதிமுறைகள் வகுக்கப்படாமலேயே களத்தில் எங்களை இறங்கிவிட்டு காலம் நகர்ந்து கொண்டது.
கொண்டாட்டத்திற்கான நாளொன்றில் உள் அறையின் சுவரெங்கும் எதிரொலித்து இசை தன் பரிமாணத்தை மீறி நடனத்திற்கான வெளியை உருவாக்கிக் கொண்டிருந்தது. இசையை அதன் பரிமாணத்திலேயே ரசிக்கத்துடிக்கும் என்னை அது இயல்பாய் அறையில் இருந்து வெளியில் தள்ளியது. கோப்பையில் மார்ட்டினி தத்தளிக்க இடது கையில் இருந்த சிகரெட்டை வலது கைக்கு மாற்றியபடி கதவைத் திறந்து வெளியில் வர இன்னொரு கோப்பையுடன் அவள் நின்று கொண்டிருந்தாள். வழமையான புன்னகையுடன் என் பொருட்டு திறந்த கதவின் வழி வழிந்த இசையின் இரைச்சல் காதை அடைக்க கதவு தானாக உள்ளும் புறமும் அசைந்து அதற்கேற்ப இசையை கொடுத்து மறுத்து அடங்கும் வரை ஒரு கையால் காதை அடைத்துக் கொண்டிருந்தவள், கைகளை நீட்டினாள் குலுக்களுக்காக.
"கொடுமையா இருக்கு இல்லையா!" அவளுடைய கேள்வியை ஆமோதித்தவனாய் நிசப்தம் கொடுத்த நிறைவு மனமெங்கும் வழிய, "ஆனால் வெளியில் ஏகமாய் குளிர்கிறது" என்னுடையதை ஆமோதித்தவளுக்கும் கூட தொடர்ச்சியாய் என்ன பேச என்று தெரியாததால் சாத்தப்பட்ட கதவுகளினூடாக நுழைந்துவரும் இசையை ரசித்த வண்ணம் எங்களிடையே மௌனம் இடம்பெயற, மௌனத்தின் வலியை உணர்ந்தவளைப் போல் எக்காரணம் கொண்டு அதை அனுமதிக்க மறுத்தவளாய், "எமினெம் இல்லையா?" கேட்க, "ம்ம்ம் ஆமாம், எமினெமும் ஸ்னூப்பி டாகும்..." சிரித்து வைத்தேன்.
தனிமைக்கான பொழுதில்லை அது நிச்சயமாய் கொண்டாட்டத்தின் உச்சமாய் தங்களை மறந்து ஒரு கூட்டம் உள்ளே ஆடிக்கொண்டிருந்தது. மனமொருமித்த நடனம் அல்ல மனம் அலைபாயும் பறக்கும் ஆட்டம், மற்றதைப் போலில்லாமல் என்னை இயல்பாகவே கவரும் வகைதான் என்றாலும் அன்றைய பொழுதை மார்ட்டினியுடன் தனியே கழிக்க விரும்பி வெளியில் வந்தவனுக்கு அமைந்துவிட்ட அவளுடைய அருகாமை ஆச்சர்யமே! இதுநாள் வரை என்னை நானும் அவளை அவளும் ஒருவரிடம் ஒருவர் மற்றவரை மறைத்துக் கொண்டிருந்தோம். இன்றுமே கூட எங்களின் சுயம் தன்னாதிகத்தில் இருந்திருந்தால் இந்தச் சந்திப்பு புன்னகையுடனோ முகமன்களுடனோ முடிந்திருக்கவேண்டிய ஒன்றுதான். ஆனால் உற்சாகபானம் எங்களிடையே கட்டமைக்கப்பட்ட இயல்புகளைத் தகர்த்தெறிந்து உற்சாகத்தை அள்ளித் தெறித்தப்படியிருந்தது. இரவின் இயல்புகளில் ஒன்றாய் ஆராய்ச்சிக் கட்டுரை குறித்திருந்த விஷயம் தான் இது. கட்டுரையின் 136ம் பக்கத்தில் இரண்டாவது பத்தியில் இதைப்பற்றிய வரிகள் நினைவில் வந்தது, "சுயம் கட்டமைக்கும் கோட்பாடுகள் தகர்க்கக்கூடியதாய் இருப்பதில்லை, பகலின் பிரம்மாண்டம் சுயத்தை மறைத்து கோட்பாடுகளை இறுக்கங்களுடன் வெளிப்படுத்துகிறது. இரவின் தனித்த நெருக்கமான பொழுதுகள் கோட்பாடுகளைக் கடந்தும் சுயத்தின் இருப்பை உணர்த்தினாலும் சுயத்தை இழப்பது, இழக்க வைப்பது இரவின் தன்மைகளில் ஒன்றாகயில்லை. ஆனால் சுயம் தானாய் அல்லாமல் வேறுபல காரணிகளால் இழந்து போய்விடூம் இரவில் அது இன்னமும் இயல்பாய் அமையும்."
அந்தப் புத்தகம் மனிதர்களைப் பற்றி வீசியெறிந்த அத்தனை ரகசியங்களும் முகத்தில் பட்டு அதன் துள்ளியமான அவதானிப்பை ஆச்சர்யத்துடன் அணுக வைத்தது. பக்கங்களும் பத்திகளும் வரிகளும் சொற்களும் எழுத்துக்களும் தொடர்ச்சியான வாசிப்பினால் மனனமாகி சுற்றத்தின் செயல்களை வரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த ஒவ்வொரு கணமும் புன்னகையாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. அந்தப் பிரதியின் மூல ஆசிரியர் பற்றிய குறிப்புகளில் முக்கியமானது இந்தப் பிரதி எழுதி முடித்ததும் அவர் செய்து கொண்ட தற்கொலை பற்றிய இரண்டு வரிகள், காரணங்கள் என்று எதையும் குறித்திருக்காவிட்டாலும் மனப்பிறழ்வு என்ற ஒரு வார்த்தை அவரைப் பற்றிய தேடலைத் தூண்டியது. ஆனால் அந்தப் பிரதியைத் தவிர்த்து அவரைப் பற்றிப் பேச எதுவுமே இல்லை, பிரதியுமே கூட எதையும் சுய அனுபவமாக முன்வைக்கவில்லை.
சிலீரென்று உரசிய குளிர்காற்று நினைவுகளைப் புரட்டிப்போட கோப்பையில் தளும்பிக் கொண்டிருந்த உற்சாகப்பானத்தை ரசித்து அருந்தியபடி இருந்த அவளைப்பற்றிய எண்ணம் படரத்தொடங்கியது. சேலைத்தலைப்பை அவள் உடலைச் சுற்றி மூடியிருந்ததாலோ என்னவோ அவளுடைய ஆடையில்லாத உடல் மனதெங்கும் பரவி கொஞ்சம் சூழ்நிலையை அந்நியப்படுத்தியது. கற்பனை தன் கரங்களில் பகடைகளை உருட்டி விளையாடத்தொடங்கிய பொழுதில்,
"அவர் இப்ப இந்தியா ஆபிஸில் இல்லை! தெரியுமா?"
அவள் எப்படி அத்தனை விரைவில் உடுத்திக்கொண்டாள் என்ற ஆச்சர்யத்துடன் அவளுடைய கேள்வியை அணுகினேன்.
"தெரியும்!" அன்றைக்கென்னமோ மார்ட்டினி என்றையும் விட போதையை அதிகம் தருவதைப்போல் உணர்ந்தேன்.
சிரிக்கத் தொடங்கினாள், மழை மேகத்தைப் போல் சிறிதாய்த் தொடங்கியவள், குபீரென்று புயல்மழையைப் போல் தன் சிரிப்பைத் தீவிரமாக்கினாள். அவளுடன் இணைந்து கொள்வதற்கான இடைவெளி தேடியவன் கிடைக்காததால் சட்டென்று இடித்து மின்னும் இடி மின்னலாய் புன்னகையொன்றை மட்டும் அவிழ்த்து விட்டு மீண்டும் உதடுகளை மார்ட்டினியில் முக்கினேன்.
"அவருக்கு உங்களைப் பார்த்து பயம்." இடையில் நிறுத்தி சொல்லிவிட்டு தொடங்கியவள். அன்றைக்குப் பின்னான நிகழ்ச்சிகளை கோர்க்கத் தொடங்கினாள் பூக்களாக, அழகுக்காகவும் வேறுபாட்டுக்காகவும் இடையில் சேர்க்கும் வேறு நிறப்பூவாய் என் சொற்கள் அங்கங்கே இணைக்கப்பட்டு, அரைமணிநேரத்தில் பூமாலை தொடுத்திருந்தாள். காதலுடன் போதையாய் என் கழுத்தில் அனுமதியை புறந்தள்ளி அணிவித்தவளின் வேகம் என்னை பிச்சைக்காரனின் தட்டில் தூரத்தில் இருந்து வீசியெறிப்பட்ட காசாய் தடுமாற வைத்தது. ஆனால் தடுமாற்றம் கிளப்பிய உற்சாகம் அவள் அழைப்பைத் தொடர்ந்து ரிசார்ட்டில் அவளுக்காய் ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி எங்களை நகரவைக்கும் வல்லமை கொண்டதாயிருந்தது.
அந்த நிலையிலும் கூட எனக்கான வரிகளை மனம் அந்தக் கட்டுரையில் தேடிக்கொண்டிருந்தது, தேடுதலின் வேகம் கொண்டுவந்த சொற்கள் மனதில் கூட்டப்படும் முன்னர், அந்த அறையில் உறங்கிக்கொண்டிருந்த அவள் குழந்தையின் கன்னத்தில் உளறியபடி வைத்த அவள் முத்தத்தின் சத்தம் ஸ்தம்பிக்க வைத்தது. இரக்கமற்ற முறையில் என் கழுத்து அறுக்கப்பட்டு நிலை தடுமாறி நான் விழுந்துகொண்டிருந்தேன். எங்கிருந்தோ சட்டென்று விழித்துக்கொண்ட சுயம், பொய்களின் மீது கழைக்கூத்தாடியின் லாவகத்துடன் நகர்ந்து விளையாடி பிரம்மிக்க வைத்து என் அறைக்கு கொண்டு வந்து தள்ளி தன்னை நிரூபித்துக் கொண்டது.
பலூன் ஒன்றின் மீதான குழந்தையின் ஆவலுடன் ஆராய்ச்சிக்கட்டுரையின் பிரதியைப் புரட்டிப் பார்க்க நினைத்து துலாவியவனின் கையில் சிக்கியது மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் மூல மொழி பதிப்பு. எதோ நினைவாய் புரட்டிய ஒரு எண்ணின் பக்கத்தில் இருந்த பத்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதறிப்போய் மொழிபெயர்ப்பு புத்தகத்தின் அதே பக்கங்களைப் சரிபார்க்க, அந்தப் பத்தி மொழிபெயர்க்கப்படாமல் விடப்பட்டிருந்தது புரிந்தது. பத்திகளில் சொல்லப்பட்டிருந்த, பகலில் மாட்டப்பட்டு இரவில் சற்றே இளகும் முகமூடிகளைப் போலில்லாமல் இரவிலும் இளக முடியாத முகமூடிகளுடன் அலையும் மனிதர்களைப் பற்றிய வரிகள் என்னை சுயபச்சாதாபத்திற்கு உள்ளாக்கி தொட்டியில் சிதறும் தண்ணீர்த்துளிகளைக் கவனித்தபடியே உள்ளங்கைகளின் மத்தியில் அடங்கமறுக்கும் தேவையாய், பிசுபிசுப்புடன் கைமாற அதிர்ச்சியின் ஆச்சர்யக் கலவையில் அவள் முகம் அந்த அறையின் வெளிச்சத்தில் பிரகாசித்தது. மனித உணர்வுகளை அப்பட்டமாய் எழுதப்பட்ட அச்சிடப்பட்ட காகிதத்தின் வரிகளாய் அல்லாமல் அப்படியே உணர்வுகளாய் உள்வாங்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு பிரதி எழுப்பும் அகங்காரச்சிரிப்பு தாங்கமுடியாததாய் நீள, உறிஞ்சித் துப்பிய சக்கையாய் அங்கே மௌனம் கவிழ, பிரதியை எரித்து குளிர்காய்ந்தவாறு முகமூடிகளற்ற நிர்வாணம் எகிறிக்குதித்தது.
In Sci-fic சிறுகதை சினிமா சினிமா விமர்சனம்
தனித்தீவு - Science Fiction
Posted on Sunday, April 12, 2020
இருபத்திரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த அணுஆயுதப்போரால் அழிந்த போன மனித சமுதாயத்தின் கடைசி சிலரில் ரவிவர்மனும் ஒருவன். பூமியின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோயும், சில பகுதிகள் உயிர்வாழமுடியாத அளவிற்கு கதிர்வீச்சு கொண்டதாகவும் இருந்ததால், அவன் தற்பொழுது சோதனைக்கூடத்தில் சக மனிதஜீவராசிகளின் மீதிகளுடன் வாழ்ந்துவருகிறான். சோதனைக்கூடம் அறிவியல் விஞ்ஞானிகளால் போர் நடந்தபொழுது உருவாக்கப்பட்டது, கதிர்வீச்சு தாக்கமுடியாதபடி கட்டப்பட்டது. இந்த சோதனைக்கூடத்தைப் போல் கதிர்வீச்சால் பாதிக்கப்படாத இடம் பூமியில் இருக்கும் ஒரே ஒரு தீவுமட்டுமே.
சோதனைக்கூடத்திலிருந்து அந்த தீவிற்கு செல்வதற்கு ஒரேயொரு சிறியவானூர்தி தான் அந்த சோதனைக்கூடத்தின் விஞ்ஞானிகளிடம் இருந்தது. அவர்களும் என்ன தான் செய்வார்கள். இந்த மிச்ச மீதிகளை வைத்து ஒரு சந்நதியை உருவாக்கும் முயற்சியை ஒரு ஆராய்ச்சியாக அந்த தீவில் செய்துகொண்டிருந்தார்கள். அந்த வானவூர்தியும் மிகச்சிறியது. ஊர்தியின் விமானிதவிர ஒரேயொரு நபர்மட்டுமே செல்லக்கூடியது. ஒவ்வொரு முறை சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு சென்று ஒரு மனிதனை விட்டுவிட்டு திரும்பவும் சோதனைக்கூடத்திற்கு வருவதற்குள் ஊர்தி பலத்த சேதத்திற்கு உள்ளாகிவிடும். அதைச்சரிசெய்து அடுத்த பயணத்திற்கு தயார் செய்ய பல மாதங்கள் பிடிக்கிறது சிலசமயம் வருடங்கள் கூட.
இப்படி சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு செல்லும் மனிதனை தேர்ந்தெடுக்க ஒருவகையான குலுக்கல் முறை அந்த விஞ்ஞானிகளால் கடைபிடிக்கப்படுகிறது. அந்த குலுக்கலில் வென்ற ஒருவர்மட்டும் தீவிற்கு செல்லலாம். ஆனால் அந்த குலுக்கலும் ஊர்தி சரிசெய்யப்பட்டதும் தான் நடத்தப்படும். இந்த முறை நடந்த குலுக்கலில் கூட அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலிருந்தே ரவிவர்மனுக்கு வாழ்க்கையில் ஈடுபாடு குறைவதாகப்பட்டது. தீவிற்கு போவதற்கும் அங்கு வாழ்வதற்கும் அதிக மனதிடமும் உடல்திடமும் வேண்டுமாதலால், அவர்களுக்கான உணவும் உடற்பயிற்சியும் கட்டாயமானது அதே சமயம் ஆசைக்காக சாப்பிட முடியாமல் கட்டளைக்காக சாப்பிடவேண்டிய கட்டாயம் வேறு.
ஆனால் அவன் மனம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தற்போதைய அவனுடைய மனத்தளர்விற்கு ஒரு பெண்ணும் காரணம் அவள் பெயர் உஷா. அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் செல்லிற்கு அருகில் உள்ள செல்லைச் சேர்ந்தவள். அணுஆயுதப் போரின் விளைவால் அவர்களுடைய பழங்கால வாழ்க்கை நினைவில் இல்லை. அவனுக்கு இதற்கு முன்பு திருமணம் ஆகியிருந்ததா குழந்தைகள் இருந்தார்களா என்பதைப்பற்றிய ஒருவிவரமும் அவன் அறியவில்லை. ஆனால் சில மாதங்களாகவே உஷாவைப்பார்த்தால் அவள் அவனுடைய மனைவியைப் போல் இருக்கிறாள் என்பதைப் போன்ற ஒரு எண்ணம் அவன் மனதில் ஏற்படத்தொடங்கியிருந்தது.
உஷாவும் ரவிவர்மனிடம் நன்றாய்ப் பழகுவாள், விஞ்ஞானிகளின் கட்டளைப்படி அங்கு சோதனைக்கூடத்தில் வாழும் வரை எந்தவிதமான விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் தீவிற்கு செல்வதும் அங்கு சென்ற பிறகு மனித சமுதாயத்தை பெருக்குவதுமே அவனுக்கும் கொள்கையாயிருந்தது. சில வருடங்களாக இப்படி உணர்ந்ததில்லை, உஷாவிடம் அவன் பல மாற்றங்களை சில மாதங்களாக கவனிக்கத்தொடங்கியிருந்தான் அது தந்த பாதிப்பில் தான் கொள்கை காற்றில் பறக்கத்தொடங்கியிருந்தது. அது தந்த பயம்தான் அவன் வாழ்க்கையை சோர்வாக்கிக் கொண்டிருந்தது. அதாவது தான் குலுக்கலில் வென்று தீவற்கு சென்றுவிட்டாலோ இல்லை உஷா தீவிற்கு முதலில் சென்றுவிட்டாலோ என்ன செய்வது என்பதைப்பற்றி சிந்தித்தவனாய் மனதைக் குழப்பிக்கொண்டிருந்தான். உஷாவிற்கும் ஒருவாறு ரவிவர்மனின் நோக்கம் தெரிந்துதானிருந்தது, அவளுக்கும் இது விருப்பமே ஆனால் விஞ்ஞானிகளை மீறி இதில் இறங்குவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. சில நாட்களாக இதைப்பற்றி உஷாவிடமும் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தான்.
“உஷா, நேத்திக்கு செல்க்ட் ஆன ஆண்ட்ரூவைப் பார்த்து பேசினியா?”
“ம்ம்ம் பேசினேன், அதிர்ஷ்டக்காரன் அவனுக்கு என்னைவிட ஐந்து வயது குறைவு தெரியுமா?” அவளுடைய பேச்சில் வருத்தம் தெரிந்தது.
“உஷா நீ தீவிற்கு போய்ட்டா என்ன மறந்துடமாட்டீயே” ரவிவர்மனுக்கே தான் கேட்ட இந்தக்கேள்வி ஆச்சர்யத்தையளித்தது. அதைவிட உஷாவிற்கு,
“என்னங்க இப்புடி கேட்டுட்டீங்க, நாம ரெண்டு பேரும் எவ்வளவு நாளா பழகிக்கிட்டிருக்கோம் உங்களைப்போய் மறப்பேனா?”
அவள் சொன்னாலும் நிஜம் அவனை யோசிக்கத்தான் வைத்தது. அவள் தீவிற்கு முதலில் சென்றால் சில மாதங்களிலிலோ, வருடங்களிலோ தானும் அங்கு செல்ல நேரலாம், இல்லை அங்கே தீவற்கே போகாமல் பல ஆண்டுகள் இங்கேயே கழிந்துபோகம்படியும் நேரலாம். அவனுக்கு ராமசாமித்தாத்தாவைப் பற்றித்தான் தெரியுமே அந்தப் பெரியவருக்கு 65 வயதாகிறது. இன்னும் குலுக்கலில் தேர்வு செய்யப்படாமலே இருக்கிறார். அதைப்போலவே நானும் இங்கேயே இருக்கவேண்டிய சூழ்நிலை நேர்ந்தால்? அவனுக்கு நிச்சயமாய் ஒன்று தெரியும் விஞ்ஞானிகள் எக்காரணம் கொண்டும் குலுக்கலில் தேர்வுசெய்யப்படாமல் தீவிற்கு அனுப்பமாட்டார்கள். பின்னர் வந்த இரண்டொறு நாட்களஇல் அவன் உஷாவிடமிருந்து விலகியிருக்க விரும்பினாலும் உஷாவாக வந்து பேச்சுக்கொடுத்தாள்.
சோதனைக்கூடத்திலே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது இந்த தடவை நிகழ்ந்த தீவிற்கான பயணம். அதிகமாக கதிர்வீச்சிற்கு பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இரண்டே நாட்களில் அடுத்த குலுக்கல் நடைபெற்றது, எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்ததடவை ராமசாமித்தாத்தா தேர்வு செய்யப்பட்டார், அங்கிருந்த அத்துனை நபருக்கும் சந்தோஷமே தாத்தா தேர்வுசெய்யப்பட்டதில் அதைவிட சந்தோஷம் ஊர்தி கதிர்வீச்சில் பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இது தொடர்ந்தால் இங்கிருக்கும் அனைவருமே சில வருடங்களில் தீவிற்கு சென்றுவிடமுடியும்.
ஆனால் ரவிவர்மனின் மனதில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களை தெரிந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் அவனை அழைத்துப்பேசினார்கள். பின்னர் அவனை சில மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று கூறி சோதனைக்கூடத்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். இத்தனை வருடம் இங்கிருந்தாலும் அவன் அந்தப்பகுதிக்கு வந்ததேயில்லை. இரண்டொரு நாட்கள் அவன் அந்த உள்பகுதியில் தங்கியிருக்க நேர்ந்தது. அந்தச்சமயத்தில் அவன் தெரிந்துகொண்ட அவனைப்பற்றிய, அந்த சோதனைக்கூடத்தைப்பற்றிய, விஞ்ஞானிகளைப்பற்றிய, பூமியைப்பற்றிய ரகசியம் அவனுக்கு பைத்தியம் பிடிக்கச்செய்வதாயிருந்தது.
அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த தூக்கமாத்திரைகள் ஒழுங்காக வேலைசெய்யாததால் விழித்துக்கொண்ட ரவிவர்மன், பக்கத்து அறைகளுக்கு சென்று பார்த்த பொழுதுதான் இதுவரை தீவிற்குச்செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ராமசாமித்தாத்தா மயக்கமான நிலையில் ஒரு அறையில் இருப்பதைப் பார்த்தான். அருகில் சென்று பார்த்தபொழுதுதான் அவருக்கு ஆப்ரரேஷன் செய்யப்பட்டிருப்பதும் அதன் காரணமாய் அவர் இறந்துவிட்டிருந்ததும். இப்படியாக அடுத்தடுத்த அறைகளில் தீவிற்குச்செல்ல தேரந்தெடுக்கப்பட்டதாய் சொல்லப்பட்ட அனைவரும் இறந்துபோன நிலையில் அறைகளில் இருப்பது தெரிந்தது. அவனுக்கு விவரம் புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயமாகத்தெரிந்தது, அது அங்கிருந்து யாரும் தீவிற்குச்செல்லவில்லை. ஏதோஒரு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று மட்டுமே புரிந்தது. ஒன்றையும் காணாதவனாக வந்து படுக்கையில் படுத்துக்கொண்டான். அடுத்தநாள் அவனை மீண்டும் முன்பிருந்த இடத்திற்கே மாற்றினார்கள். அங்கே சென்றதும் முதல் காரியமாய் ரவிவர்மன் உஷாவிடம் தான் பார்த்ததைச் சொன்னான்.
“ரவி உண்மையைத்தான் சொல்றீங்களா? நம்பவேமுடியலை. நம்மை கொலை செய்யவேண்டிய அவசியம்தான் என்ன இந்த விஞ்ஞானிகளுக்கு. அதுதான் புரியவில்லை.” அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் அதிகமாய் பயந்துபோனாள்.
“அதுதான் எனக்கும் புரியவில்லை உஷா, இந்த விஷயமாக என்னால் சிந்திக்கவே முடியவில்லை.” சிறிது யோசித்தவன் “உஷா இப்படி செய்தால் என்ன? நிச்சயமாய் அந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்து கேட்டால் என்ன.”
உஷாவிற்கும் ரவிவர்மன் சொன்ன திட்டம் சரியாகத்தோன்றியது. இருவரும் திட்டமிட்டு, கேமிராக்கண்கள் படாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டார்கள். பின்னர் விஞ்ஞானிகளிலே கொஞ்சம் வயதான விஞ்ஞானியாய்ப் பார்த்து அந்த இடத்திற்கு சாமர்த்தியமாய் அழைத்துவந்தனர். அவர்கள் முன்பே பார்த்துவைத்த அந்த இடத்திற்கு வந்ததும் ரவி தன் வசம் இருந்த கத்தியை எடுத்து அந்த விஞ்ஞானியின் கழுத்தில் வைத்தான் பிறகு,
“இங்கப்பாருங்க இன்ன என்ன நடக்குதுன்னு மரியாதையா சொல்லீறுங்க இல்லைன்னா உங்களை நான் கொலை பண்ணீறுவேன்.” ரவிவர்மன் மிரட்ட முதலில் ஒன்றுமே தெரியாதவர் போல் நடித்த அந்த விஞ்ஞானி பின்னர் ரவிவர்மன் அவர் கழுத்தில் அந்தக் கத்தியால் மெலிதாய்க் கீறவும்.
“சொல்லீற்றேன், உங்கக்கிட்ட சொன்னமாதிரி பூமி அணுஆயுதப்போரால் அழியவில்லை, இருபத்திரண்டாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சியாக, குளோனிங் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த உலகின் பெரும் பணக்காரர்கள் தங்களைப் போன்றே ஒரு குளோனிங் மனிதனை இந்த தொழிற்கூடத்தில் உருவாக்க எங்கள் உதவியை நாடினர். பிற்காலத்தில் அவர்களுக்கு ஏதாவது உடல் உறுப்புக்களில் பிரச்சனை வந்தால் உதாரணத்திற்கு, கிட்னியிலோ, இருதயத்திலோ, நுரையீரலிலோ, இல்லை கல்லீரலிலோ வந்தால் உங்களிடமிருந்து அதை எடுத்து அவர்ளுக்கு பொருத்தி சரிசெய்து கொள்வார்கள்.”
கொஞ்சம் இடைவெளிவிட்டு,
“இது போன்ற பணக்காரர்களின் ஜீன்களின் மாதிரி எங்களிடம் முன்பே உள்ளதால் அவர்களுக்கு இந்த வயதில் இந்த நோய் வரும் என்றுகூட முன்பே கணித்திருப்போம் பின்னர் உங்களை தீவிற்கு அனுப்புவதாய்ச் சொல்லி உங்களிடமிருந்து அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். இதுதான் இங்கே நடந்துவருகிறது ஒரு வகையான ஆரம்பக்கட்ட முயற்சிதான் இது. பின்காலங்களில் உங்களை உருவாக்கி வளர்த்துவரும் செலவைக் குறைத்து இந்த திட்டத்தை அனைத்து மனிதர்களுக்கும் பயன்படச்செய்யும் முயற்சியின் முதல் கட்டம்தான் இது.”
“நாங்கலெல்லாம் மனிதர்கள் கிடையாதா? எங்களைக் கொல்வது குற்றமாகாதா?” ரவியின் கேள்வியில் வேகம் இருந்தது.
“இல்லை, நீங்கள் குளோனிங் மனிதர்கள், இன்னும் சொல்லப்போனால் பொருட்கள். அவ்வளவே உங்களை உருவாக்கி நாங்கள் விலைக்கு விற்கிறோம். இதில் தவறொன்றுமில்லை.” அந்த விஞ்ஞானி சொல்ல ரவிக்கு ஆத்திரமாய் வந்தது.
“உங்களுக்கெல்லாம் வீடு எங்கிருக்கிறது. இங்கிருந்து எப்படி வெளியே செல்வது.” ரவி கேட்க,
ஆரம்பத்தில் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்ல மறுக்க, ரவி அந்தக்கத்தியை சற்று ஆழமாக அவர் கழுத்தில் செலுத்துவதைப்போல் பாவனை செய்ய,
“இருக்கு, இது ஒரு ஆஸ்பிடல் மாதிரிதான், எங்களுக்கெல்லாம் வீடு தனியா இருக்கு. இங்கேர்ந்து எங்களுக்குரிய வேலை முடிந்ததும் வீட்டிற்கு போய்விடுவோம்.”
பின்னர் அந்த விஞ்ஞானியைப் பயன்படுத்தி ரவி, அந்த ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியேற முயன்றான். அவரை அடித்து மயக்கமாக்கிவிட்டு அவருடைய பயனாளர் அட்டையை பயன்படுத்தி, அவர் குறிப்பிட்டிருந்த வழியில் வெளியேறினான். கொஞ்சம் தவறு நேர்ந்தாலும் அவன் கண்டுபிடிக்கப்படும் நிலையிருந்தும் சாமர்த்தியமாக வெளியேறினான். வெளியில் அவனுக்கான புது உலகம் ஆச்சர்யங்களுடன் காத்திருந்தது. அந்த மருத்துவமனையில் கட்டுப்பாட்டிலிருந்து வெளியில் வந்த ரவிவர்மனுக்கு பிறகுதான் தெரியவந்தது அவன் அந்த நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவனுடைய குளோனிங் என்பது அதனால் அவனை பேட்டியெடுக்க வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் இந்த உண்மையைச் சொல்ல, இந்த குளோனிங் பிரச்சனை அந்த நாடாளுமன்றம் வரை சென்றது. பின்னர் ஒரு அவசர சட்டம் இயற்றி இனிமேல் இதுபோன்ற குளோனிங் முறையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது அந்த நாட்டு நீதிமன்றம். அதே தயாரித்து வைக்கப்பட்டிருந்த குளோனிங்க மனிதர்களையும் உடனே அவர்களுக்கான ஒரு சிறிய மாற்றத்தை கொண்டுவரச் செய்து வெளியில் விடச்சொல்லி உத்தரவிட்டது.
-------------------------------------
படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவிடாமல் இருக்கவேண்டியவை, ஒரு படிமம் உங்களை காதலில் முழுதாய்க் குப்புறத்தள்ளிவிடும் என்று எப்பொழுதோ படித்தது நினைவில் வந்தது. உமையாளின் குலுங்கிய முலைகளுக்கான படிமமாக என்னுள் படிந்துபோனது ஆண்டாள். 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில்' தான் அதன் முதல் புள்ளியாகயிருக்க வேண்டும், 'கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தேன்' என்பதையும் பற்றி பல நாள் யோசித்தது தான் காரணமாயும் இருந்திருக்க வேண்டும். கற்பனையின் எல்லை அறிவியல் சொல்லும் t-10^-43 வரைமட்டும் நீளவேண்டிய அவசியம் கொண்டதல்ல, இயற்பியலின் எல்லைகளைத் தாண்டியதுதான் ஆண்டாளின் கற்பனை என்பதால், என் கற்பனையும் இயற்பியலைத் தாண்டியிருக்கலாம். இந்தத் தொல்லை கொஞ்சம் இல்லாமலிருந்தது இப்பொழுது சிந்துவால் மீண்டும் மனம் பேதலிக்கிறது, பித்து பிடிக்கிறது, உயிரொடு புலன்கள் தள்ளுறும் பித்து. இன்னமும் சென்னையில் தான் இருந்தேன், மனம் டெல்லி என்றது, குளிர்காலம் ஒரு அடியில் நடக்கும் ஆள் தெரியாத முன்காலைப் பொழுது போர்வைக்குள் தங்க ஒட்டியானம் மட்டும் அணிந்த உமையாள். அவள் ஒப்புக்கொள்ளவே முடியாத எதையோவொன்றை அவளிடம் கேட்க நினைத்து வந்து படுத்த பொழுது மட்டும் நினைவில் இருக்கிறது, அங்கிருந்து டெல்லிவந்தது புலன்களை அலைக்கழிக்கும் பித்து. நான்கு சுவர்களுக்குள் எதைக்கேட்டாலும் செய்வாள் என்று உறுதியான பிறகு சுவற்களுக்கு வெளியே மனம் யோசிக்கத் தொடங்கியது முதலில், பின்னர் அங்கிருந்து நீண்ட புள்ளி நான்கு சுவற்றுக்குள் அவள் மறுக்க என்ன விஷயமிருக்கும் என்று யோசனை செய்யத் தலைப்பட்டதும், தொடர்ந்து
மூன்றாவது நபர் என்கிற புள்ளியில் நின்றது.


அப்பாவிடம் சிந்துவிற்காய் அவர் அறம் வளையுமா என்பதில் தொடங்கிய கேள்வி, உமையாளின் அறம் சிந்துவிற்காய் வளையுமா என்று நீண்டு. மூன்றாவது நபர் என்ற புள்ளிக்கு அவளின் அறம் தாழ்த்தி வருவாளா என்ற கேள்வி வந்தது. அறம் வளையும் என்பதை ஐன்ஸ்டைன் புவியீர்ப்புவிசையைப் பற்றி கண்டறிந்தது போல் அறிந்திருக்கிறேன், ஆனால் எவ்வள்வு வளையும் என்பது தான் கேள்வி. மகள் வயதுடைய ஒருவனுடன் தொடர்பு வைக்க வளையும் அறம், அவள் மகளை ஒரு பார்வையாளனாக இருக்கு ஒப்புமா என்று தெரியவில்லை, அதுவரையிலும் சிந்து என்னிடம் கேட்டது இதைத்தான், தன் தாயுடன் கலவிகொள்ள அவள் ஆசைப்பட்டாளா தெரியாது ஆனால் நெருக்கமாக மிக நெருக்கமாக கட்டில் வரை, இல்லையில் படுக்கையில் இருக்கணும் என்று தான் சிந்து சொல்லியபடியிருந்தாள். அறம் அத்தனை வளையுமா? தெரியாது. சிந்துவாகயில்லாமல் மூன்றாவது நபர் அவளுக்குத் தெரியாதவராக இருந்தால் வளையுமாக இருக்கும். ஜனனி ஒரு புள்ளியென்று நினைத்தேன், அவளும் ஒப்புக்கொள்வாளாயிருக்கும். அவளாய் சொல்லவில்லை என்றாலும் ஜனனி ஒரு பை செக்சுவலாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த மூன்றாவது நபர் ஒரு ஆணாக என்னை விட வலிமையானவராக இருக்க என் அறம் ஒப்புமா என்று யோசிக்கமுடியவில்லை, உமையாள் சுந்தர் பற்றித் தெரியுமென்றாலும். ஒரே கட்டிலில் மூவராக இருக்க மனம் நெகிழ்ந்திருக்க வேண்டும், மூவருக்கும். நெகிழுமா தெரியாது. ஆனால் நான் உமையாளிடம் அதைத்தான் கேட்க விரும்பினேன் சிந்துவை அழைத்துவந்து அவள் தகப்பன் வீட்டில் அறிமுகப்படித்தி திருப்பி அழைத்து வருவதற்கான பரிசாய்.
ஆச்சர்யமாய் உமையாள் வாட்சப்பில் அழைத்தாள்.
Hey, are you alright?
இந்த வாரத்து கோட்டா வேறு ஏற்கனவே முடிந்திருந்ததால் மீண்டும் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு சுயத்தை சாந்தப்படுத்திக் கொண்டிருந்தேன், அப்படியெல்லாம் சாந்தமாகிற விஷயமா சுயம் ஆனால் வேறு வழியில்லை. அதற்கான காரணம் கொஞ்சம் வழமையானது தான், அவள் கேட்காமலேயே அவளுக்கு உதவுகிறேன் பேர்வழியென்று நான் கல்யாணம் ஆனபிறகு மோகக் கிறுக்கெடுத்த அணையொன்றில் அத்தனை நாள் கட்டி வைத்திருந்த தண்ணீர் மடை திறந்ததும் பொழியும் வேகத்துடன் முப்பது நாட்களுக்குள் செய்த அட்டகாசங்கள் தான் காரணம். காபி போட்டுத் தருகிறேன், காய் கறி நறுக்கித் தருகிறேன், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நானே சமைக்கிறேன், வீடு கூட்டுகிறேன் என்று நான் செய்த அலும்புகளில் கொஞ்சம் அவள் ஆடிப் போயிருந்தாள், இன்னும் கொஞ்சம் கொடுமை சேர்க்க பிறந்தநாளுக்கு அவளை ஆச்சர்யப்படுத்த, அவளுக்கு தெரியாமல் பல ஆயிரம் கொடுத்து பட்டுபுடவை வாங்கறேன் என்று, இப்படிப் பல.
ஆனாலும் அடங்க மறுத்த சுயம் கூடாரத்திற்குள் புகுந்த ஒட்டகமென விஸ்வரூபமெடுக்க அவள் மண்டியிட்டு கட்டிலில் தேடிக்கொண்டிருந்த வாக்கில், இடுப்பில் கைவைத்து இழுத்தேன், தவறி என்மேல் விழுந்தவள் ஒன்றுமே சொல்லாமல் தன்னை விலக்கிக்கொண்டாள். என்னால் நம்பவேமுடியவில்லை, வேறொரு சமயம் நான் இப்படி செய்திருந்தால் தலையில் நறுக்கென்று கொட்டியோ, இல்லை வெகு அழகாய் பராமரித்து வைத்திருக்கும் விரல்நகத்தால் கிள்ளியோ, எதிர்ப்பை காட்டியிருப்பாள். அதுவும் இல்லையென்றால் நிச்சயமாகத் திட்டித்தீர்த்திருப்பாள் ஆனால் இன்று எதுவும் நடக்கவில்லை.
ஒருவேளை மௌன விரதம் இருக்கிறாளோ? இருக்காதே! அவளது வீட்டில் இருக்கும் பொழுது வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒருமுறையோ மௌன விரதம் இருப்பது பழக்கமேகவேயிருந்தாலும். திருமணம் முடிந்தபிறகு என்னைத் தயார்ப்படுத்தி(!) அலுவலகம் அனுப்பவேண்டுமானால் இதெல்லாம் உதவாது என வந்த சில வாரங்களிலே புரிந்து கொண்டதால், மௌன விரதமே இருப்பதில்லை என ஒரு அழகான சாயங்கால வேளையில் என்னிடம் சொல்லியிருந்தாள்.
விலகிப்போனவள், நேராய் சமையலறைக்குப் போய் காப்பி கலக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள், நான் உண்மையிலேயே பயந்துவிட்டேன் அவளுக்கு என்னவோ ஆகிவிட்டது என நினைத்து. எக்காரணம் கொண்டும் பல் விளக்காமல் காப்பி தரவேமாட்டாள் ஷைலு. முதலிரவு முடிந்த அடுத்தநாளே இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவள் அவள். அன்று காப்பி எடுத்துவந்த அம்மாவிடம் செல்லமாக கோபித்து, அன்றிலிருந்து நான் பல்விளக்கியதும் தான் காப்பி சாப்பிடும்படி வைத்தவள் அவள். இதற்கு சில விதிவிலக்குகள் உண்டென்றாலும், இன்றெய்க்கெப்படி என்பது தான் புரியவில்லை. பெரும்பாலும் இரவு அதிகம் வேலையிருந்து பின்னிரவில் வீட்டிற்கு வந்தால், அடுத்த நாள் காலையில் பெட்காபி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அதுவும் நான் அருகில் இருக்கும் சமயத்தில், எனக்கு கொடுத்துவிட்டு தான் சாப்பிடுவது என்று ஏதோ கொள்கை வைத்திருந்தாள். அது போன்ற நாட்களில் நான் பல்விளக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வேன் என்பது தான் முக்கியகாரணம். காப்பி கொடுத்துவிட்டு நகர்ந்தவள் நேராய் உள்ளறைக்கு போய் பீரோவை உருட்டிக்கொண்டிருந்தாள். நானே நினைத்தாலும் இன்று அவளுக்கு உதவ முடியாது, அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது அன்று. அதனால் ஒரே இழுப்பில் காப்பியை விழுங்கிவிட்டு, குளிக்கக்கிளம்பினேன்.
குளியலறைக்கு அருகில் சென்றிருப்பேன், உள்ளறையில் இருந்து யாரோ அழுவது போல் சத்தம் கேட்டது. என்னடா இது நம்ம வீட்டில யார் அழுவது? ஒரு வேளை ஷைலுவோ? இருக்காதே கல்யாணம் ஆனதிலிருந்து இன்று வரை அவள் அழுததேகிடையாதே? பிரம்மையாயிருக்கும்னு நினைத்தேன். ஆனால் சப்தம் விடாமல் கேட்க, எனக்குள் ஒரு பரபரப்பு வந்து என் அழகு மனைவி அழும் அழகை பார்க்க உள்ளே சென்றேன். ஷைலஜா தான் பீரோவிற்குள் தலையை விட்டுக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். நான் அருகில் சென்று நிற்க, திரும்பியவள்.
என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு என் தோளை நனைக்கத் தொடங்கினாள். உடனே நான்,
"என்ன ஷைலு இது சின்னப்பிள்ளையாட்டம். என்ன ஆச்சு எதுக்கு அழுவுற?" கேட்டதும்.
"பாவா தாலியைக் காணோம்?" மெதுவாக வார்த்தை வார்த்தையாக சொல்லி முடித்தாள்.
எனக்கு புரிந்தது, ஆனாலும் அவள் பாவான்னு கூப்பிட்டதும் வந்த சிரிப்பையும் அடக்கிக்கொண்டு, கோபம் வந்தவனைப்போல், அவள் தோளைப்பிடித்து என்னெதிரில் நிறுத்தி,
"என்னது தாலியைக் காணோமா? விளையாடுறியாடி நீ, இல்லை விளையாட்டுப் பொருளா அது? தொலைச்சுட்டேன்னு அழுதுக்கிட்டு நிற்க? புதுப்பொண்டாட்டியாச்சேன்னு கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்னு பார்த்தால். இதெல்லாம் ரொம்ப ஓவர். நானெல்லாம் இந்த பெங்களூர் ரோட்ல வண்டி ஓட்டுறேன்னா, ஏதோ பெண்டாட்டி கழுத்தில கட்டியிருக்கிற தாலி மேல பாரத்தைப் போட்டுட்டுதான். இப்படி நீ தாலியை வைச்சிக்கிட்டெல்லாம் விளையாடிக்கிட்டிருந்தால் எப்படி வண்டி ஓட்டுறது? உயிரோட வீட்டிற்கு வர்றது?" நான் கேட்டு முடிக்க, அதுவரை மெதுவாக அழுது கொண்டிருந்தவள் தேம்பித்தேம்பி அழத்தொடங்கினாள்.
எனக்கு ஷைலஜாவைப்பற்றி நன்றாகத் தெரியும், இடையில் ஒருமுறை ஒரு செய்தி வாசிக்கும் பெண், தான் தூங்கும் பொழுது தாலியை கழட்டி வைத்துவிட்டுத்தான் தூங்குவேன்னு சொல்ல, நான் ஷைலஜாவிடம் "ஏண்டி நீயும் கலட்டி வைச்சிட்டு தூங்கலாம்ல ஒரே தொந்தரவா இருக்கு"ன்னு சொல்லப்போக அடுத்த நாள் முழுவதும் அவள் என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை, எனக்கு இதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கையில்லா விட்டாலும் அவள் வீட்டில் வளர்த்தது அப்படி. இரண்டு
நாள் அதற்கு பிறகு நல்லா டோஸ் கொடுத்துட்டுத்தான் சரியாவே பேசத்தொடங்கினாள்.
நான் விளையாட்டிற்காக அவளிடம் இப்படி பேசப்போய் அவளுடைய அழுகை அதிகமானது. ஆரம்பத்தில் முதல் முறை அவள் அழுவதைப் பார்த்த பொழுது வேடிக்கையாய் இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. பாலகுமாரன் நாவல்கள் படித்துவிட்டு கட்டிய மனைவி அழுதால் அது எனக்கு அவமானம் என்ற கொள்கையெல்லாம் இருந்தது என்னிடம், அதெல்லாம் எங்கே போனது என நினைத்துக்கொண்டே, நகர்ந்து பக்கத்தில் இருந்த ஹேங்கரில் கிடந்த என் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு தாலியை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
அதைப் பார்த்ததும் மெதுவாய் அழுகை நின்றது,
"நீ நேத்தி நைட் நைட்டியை கழட்டும் பொழுது கீழே விழுந்திருக்கும்னு நினைக்கிறேன். நைட்டி கூடவே கிடந்துச்சு, பாத்ரூம் போக எழுந்திருச்சப்ப பார்த்தேன், சரி கால்ல படவேண்டாம்னு ஹேங்கரில் இருந்த பேண்டில் போட்டேன். காலையில எழுந்ததும் கொடுக்கலாம்னு நினைச்சேன், ஆனா எழுந்ததுமே சூழ்நிலை வேற மாதிரியா இருந்ததால மறந்திட்டேன்"னு சொல்லி அவளை பாவமேன்னு
பார்த்தேன். அதைப்பத்தி ஒன்னுமே சொல்லாம,
"சரி மாட்டி விடுங்க." சொல்லிவிட்டு திரும்பவும் என்கையில் தாலியை கொடுத்தாள். தாலியை தங்கத்தில் மாற்றி, பிறகு காசு, குண்டு இப்படி ஏகப்பட்ட விஷயங்களை சேர்த்திருந்ததால் தான் மாட்டி விடச்சொல்லி லேசாய் தலையை முன்பக்கமாய் சாய்த்திருந்தாள். நானும் கருமமே கண்ணாக மாட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் ஏறியதும் நிமிர்ந்து பார்த்தவள் ஒன்றுமே பேசாமல் சமையல் கட்டிற்குள் புகுந்து கொண்டாள். நானும் அவசர வேலையிருந்ததால் மேலும் ஒம்பிழுக்காமல் குளிக்கச் சென்றேன்.
குளித்துவிட்டு ஆடையெல்லாம் அணிந்துகொண்டு வந்து பார்த்தால், எப்பொழுதும் டைனிங் டேபிளில் சாப்பாடு ரெடியாக இருக்கும். இன்று ஒன்றையும் காணோம். கட்டிலில் உட்கார்ந்திருந்த அவளை பார்க்க பாவமாய் இருந்ததால் போனால் போகட்டுமென்று விட்டுவிட்டு, காலணிகளை அணிந்து புறப்பட தயாரானேன், அப்பொழுது தான் வெடித்தது அணுகுண்டு,
"இன்னிக்கு லீவு போட்டுறுங்க." எனக்குத்தான் உத்தரவு வந்தது.
"ஏன் இன்னிக்கு லீவு, அதெல்லாம் முடியாது. இன்னிக்கு ரொம்ப முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு, லீவெல்லாம் போடமுடியாது. நான் போய்த்தான் ஆகணும்." சொல்லிக்கொண்டே சாக்ஸைப் போட்டேன்.
"அதெல்லாம் முடியாது, நாம இப்ப கோயிலுக்கு போகணும். அதனால லீவு போடுங்க."
"என்னம்மா இது ஒரு தடவை சொன்னா புரியாதா? முக்கியமான வேலையிருக்கு, கோயிலுக்கு போகணும்னா போய்ட்டு வா? எதுக்கு என்னைக் கூப்பிடுற. நீதான் கார் வோட்டுவல்ல, நம்ம காரை எடுத்துட்டு போய்ட்டு வா, நான் வேணும்னா ஆட்டோவில் போய்க்கிறேன்." சொல்லிவிட்டு இரண்டாம் காலில் சாக்ஸை மாட்டினேன். இதுவரை உட்கார்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்.
"இங்கப்பாருங்க நீங்கத்தான் சொன்னீங்க, தாலி என் கழுத்திலேர்ந்து கழண்டுட்டதால உங்களுக்கு ஆபத்து வரும்னு. எனக்கு பயமாயிருக்கு இன்னிக்கு வேலைக்கு போகவேண்டாம், சொன்னா கேளுங்க."
"அதான் திரும்ப மாட்டி விட்டாச்சுல்ல, எல்லாம் சரியா போயிரும்." இந்த நேரத்தில் இரண்டு கால்களிலும் சாக்ஸ் மாட்டிவிட்டதால் மெதுவாய் அவளை நெருங்கிவந்து, "அதுமில்லாம உனக்கே நல்லாத்தெரியும் எனக்கு இதிலெல்லாம் சுத்தமா நம்பிக்கை கிடையாது. உன்கிட்ட சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்."
"இங்கப்பாருங்க நீங்க விளையாட்டுக்காக சொன்னீங்களே இல்லை சீரியஸாய் சொன்னீங்களோ எனக்குத் தெரியாது, உங்களுக்கும் நல்லா தெரியும் எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை நிறைய உண்டு. அதுவுமில்லாம கோயிலுக்குப் போய் என் கழுத்தில் இன்னொரு தாலி கட்டுற வரைக்கும் உங்கள தனியா எங்கையும் போக நான் அனுமதிக்க முடியாது. உங்க வாய்லேர்ந்து வந்ததை நல்ல சகுனமா நினைக்கிறேன் நான். அதையும் மீறி நீங்க போய் உங்களுக்கு ஏதாச்சும் ஆய்சுன்னா. ம்†¤ம் என்னால முடியாது."
இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும், கண்கள் மீண்டும் காவிரியாய் திறந்துவிடும் அபாயம் தெரிந்ததால் வேறு வழி, அலுவலகத்திற்கு விடுமுறை சொல்ல செல்லிடைப்பேசியை நாடினேன். நான் இந்த முடிவுக்கு வந்ததுமே அங்கிருந்து நகர்ந்தவள். அடுத்த நிமிடத்தில் டைனிங்டேபிளை நிரப்பினாள். பசி வயிற்றைக் கிள்ளியதால் உடனே சாப்பிட உட்கார்ந்தேன். பரிமாறத் தொடங்கியவளிடம்,
"நீ சாப்பிடலை."
"இல்லை."
"ஏன்?"
"விரதம்." அதற்கு மேல் பதில் வரவில்லை அவளிடமிருந்து. சூழ்நிலையை கொஞ்சம் சரியாக்க நினைத்து, பரிமாறிக் கொண்டிருந்தவளின் இடுப்பில் கைவைத்தேன். கையைத் தட்டியும் விடாமல் வேறு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் ஹட்பேகையே பார்த்துக் கொண்டிருந்ததால், நானாக கையை எடுத்தேன். பிறகு சாப்பிட்டு முடித்ததும் தான் தாமதம்,
"போலாமா?" யாரையோ கேட்பது போல் கேட்டாள்.
"எங்க?"
"கோயிலுக்கு."
சரி இந்தப் பிரச்சனையை சீக்கிரமே முடித்தால் தேவலையென நினைத்து,
"சரி கிளம்பு." என சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
இடையில் மறித்தவள், "நாம கார்ல போகல, நடந்துதான் போறோம்." சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள். கஷ்டகாலம் எல்லாம் என் வாயால வந்தது, அவளிடம் விளையாட்டுக்காய் சொல்லப்போக வினையாய் முடிந்தது, இனி எவ்வளவு சொன்னாலும் மாறமாட்டாள். தொலைஞ்சு போகுது ஒருநாள்னு நினைச்சிக்கிட்டே பக்கத்தில் இருந்த மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிளம்பினேன்.
வீட்டை பூட்டிவிட்டு என்னுடன் நடந்து வரும் அவளைப்பார்க்க எனக்கு வருத்தமாய் இருந்தது. விளையாட்டுக்காய் செய்யப்போய் இவ்வளவு வருத்தப்படுகிறாளேன்னு நினைத்தால் கஷ்டமாகவும் இருந்தது. இனி எப்ப சாப்பிடுவான்னு வேற தெரியலை. உடனே சின்னதா ஒரு ஐடியா வந்தது. பக்கத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நடந்தேன். முதலில் முறைத்துப் பார்த்தவள். பின்னர் பின்தொடர்ந்து வந்தால், போன வாரம் ஏதோ நெக்லஸ் கேட்டிருந்தால் என்னிடம் அதை வாங்கிக் கொடுத்து சிறிது சமாதானம் செய்யலாம் என்றுதான் அங்கு அழைத்து வந்தேன்.
கடைக்குள் வந்தவள் வாயை திறக்காமலே இருந்தாள், ஆனால் அந்த கடையில் காரியதரசியிடம் அவள் பார்த்துவைத்திருந்த அந்த நெக்லஸைப் பற்றிக் கேட்டேன். எடுத்துக் காண்பித்தவர்.
"சார் இப்பவே வாங்கிக்கப்போறீங்களா?" கேட்க,
"ஆமாம்." என்று சொல்லி டெபிட் கார்டை கொடுத்தேன். அம்மணி வாய் பேசாமல் என்னை அதட்டி மிரட்டாமல் இருந்தது அவருக்கு ஆச்சர்யம் அளித்திருக்கவேண்டும், ஆனால் இதுபோல எத்தனை தம்பதியைப் பார்த்திருப்பார். சிரித்துக்கொண்டே நகையை அவளை அழைத்து அவள் கையில் கொடுத்தார்.
வாங்கிக்கொண்டு நேராய் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தோம், வெளியி
லேயே அர்ச்சனைத்தட்டும் மஞ்சள் கயிரும் வாங்கியவள், அதற்கும் என்னை பணம் தரச்சொல்லிவற்புறுத்தினாள். நேராய் அம்மன் சந்நதிக்குப் போய் அய்யரிடம் கன்னடத்தில் பேசியவள் அர்ச்சனைத்தட்டைக் கொடுத்தாள். அர்சனையை முடிந்து அம்மன் காலில் வைத்த தாலியை என் கையில் கொடுத்த அய்யர் அவள் கழுத்தில் கட்டச்சொல்லி சைகை காட்டினார், நான் மெதுவாக மீண்டும் ஒருமுறை மூன்று முடிச்சு போட அவர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நெக்லஸையும் மாட்டிவிட எல்லாம் சுபமாய் முடிந்தது.
பின்னர் பிரகாரத்தில் உட்கார்ந்து நான் தேங்காயை உடைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க; பக்கத்தில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவள், சிறிது நேரத்தில் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"இனிமே விளையாட்டுக்குக் கூட அப்படி சொல்லாதீங்க பாவா." அவள் சோகமே வடிவாய்ச் சொல்லமீண்டும் அந்த பாவா என்ற சொல் எனக்கு சிரிப்பை உண்டாக்கியது.
எங்கம்மா எங்க நைனாவை பாவான்னு தான் கூப்பிடுவாங்க, ஆனா இவளும் அந்த
வகையறாதான்னாலும் அவங்க வீட்டில் அப்படி கூப்பிடுற பழக்கம் கிடையாது. அதனால் முதலிரவு முடிந்த அடுத்தநாள் இவள் என்னை பாவா, பாவான்னு கூப்பிட, எங்கம்மா என்னிடம் இதை நக்கலாய் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதாவது சொல்வது பாவான்னாலும் கூப்பிடற போது வாவான்னு வரும், ஆனால் இவளுக்கு பழக்கமில்லாததால் பாவான்னே கூப்பிட எங்கம்மா என்னிடம் நக்கலடித்துக்கொண்டிருந்தார்கள்.
அதை நினைத்து தான் நான் காலையில் சிரித்தேன், ஆனால் இப்பொழுது தான் ஒரு பிரச்சனை முடிந்திருந்ததால், அடுத்த பிரச்சனையை ஆரம்பிக்க விரும்பாமல் அமைதியாக இருந்தேன். ஆமாம் சாமியாய் தலையாட்டிக்கொண்டு. கொஞ்ச நேரத்தில் சரியானவள் அவள் குடும்பத்தில் நடந்த இதைப் போன்ற சம்பவங்களை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து கிளம்பும் வேளையில், காலணிகளை எடுக்க வந்த கடையில் அர்சனைக்காக வைத்திருந்த உதிரிப்பூவை ஒரு கூடையாக நான் கேட்டு வாங்க ஏனென்று கேட்டவளின் காதுகளில் மெதுவாய்,
"அதான் கல்யாணம் ஆய்டுச்சு, இன்னிக்கு முதல் ராத்திரிதானே அதான் வாங்கினேன்னு சொல்ல."
முகம் சிவக்க வெட்கப்பட்டவளாய் என்னை அடிக்க துரத்தினாள். காலையில் இருந்து பட்டினி என்பதால் அவளை அழைத்துக் கொண்டு அப்பொழுதுதான் புதிதாய்த் திறந்திருந்த தமிழ்நாட்டு உணவகம் ஒன்றிற்கு வந்திருந்தோம், என்னை ஈசிக்கொண்டே உட்கார்ந்திருந்தாள் கனவு போலிருந்தது காலையில் இருந்து அவள் பட்டுக்கொண்டிருந்த மனவழுத்தத்திற்கு நான் தான் காரணம் என்று எனக்குத் தெரிந்துதானிருந்தது ஆனால் நானாய் கீழிறங்கி வராமல் இன்னமும் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டிருந்தேன்.
ஏக்கமாய் என்னைப் பார்த்தவள், "சாரி பாவா இனிமேல் இப்புடி நடந்துக்கமாட்டேன், இன்னிக்கு ஆபிஸ் போகாம செஞ்சதுக்கும் சேர்த்து சாரி." என்றாள். என்னிடம் இதையெல்லாம் சொல்ல அவசியம் இல்லை தான் நானும் இன்னமும் கூட பெருந்தன்மையாய் நடந்துகொண்டிருக்கலாம் தான் ஆனால் என் மனம் காரில் இருக்கும் பூக்கூடையிலும் எப்படி அந்த இரவை இன்னமும் ரம்யமாக்கலாம் என்பதிலும் இருந்தது. இப்பொழுது விட்டுக்கொடுத்தால் இரவு அவள் சொல்படிதான் என்பதில் இருந்தது சூட்சமம். கோட்டாதாண்டி இன்று ஒப்புக்கொள்வாள் என்றும் தெரிந்துதானிருந்தது எனக்கு, ஆனால் அன்றைய பொழுதை மறக்க முடியாத நாளாக எப்படி மாற்றுவது என்பதில் என் மனம் புனைவெழுதிக் கொண்டிருந்தது. மற்றொரு நாளாய் இருந்தால் இந்நேரம் "போங்க நீங்க ரொம்ப பண்றீங்க" என்று நழுவியிருப்பாள் அன்று கொஞ்சம் எசகுபிசகாய்ச் சிக்கியிருந்தாள் என்னிடம், நான் அந்த சந்தர்ப்பத்தை விட்டுக்கொடுக்காமல் நீட்டியபடியிருந்தேன். எதையோ பேசியபடியிருந்தாள் என் காதுக்குள் அவளின் எந்த வார்த்தையும் நுழையவில்லை, ஆனால் அவள் மகிழ்ச்சியாய் இருந்தது டெஸர்ட்டுக்காய் ஐஸ்கிரீம் வாங்கியதில் தெரிந்தது. உடல் எடை மேல் கொஞ்சம் கவனம் கொண்டிருந்தாள் அப்பொழுதுகளில், எனக்கும் ரெண்டு வாய் ஐஸ்கிரீம் ஊட்டப்பட்டது, பிகு செய்த என்னை கண்களை உருட்டி மிரட்டி ஊட்டினாள். வீடு மீளும் பொழுது காரில் முத்தமழை பொழிந்தாள், இன்னமும் இறங்கிவராமல் நான் கோபித்துக்கொள்ள பெரிதும் முயற்சிசெய்ய வேண்டியதாயிருந்தது.
வீட்டிற்கு முன் கார் நிறுத்தி இறங்கும் முன், "என்ன வேணும் பாவா. இன்னொரு பர்ஸ்ட் நைட் தான. சரி. இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்." என்று சொல்லி காரின் பின்சீட்டில் இருந்த பூக்கூடையை எடுத்துக் கொண்டே இறங்கினாள். நான் தரையிலிருந்து இரண்டடிக்கு மேல் பறக்கும் கால்களை இறக்கி தரையில் நடக்க ப்ரயத்தனப்பட்டேன். பூட்டைத் திறந்தவள் வீட்டிற்குள் செல்லாமல் எனக்காய் காத்திருந்து உதட்டில் முத்தமிட்டு வரவேற்றாள். நான்கு சுவருகளுக்கு வெளியில் முதன் முதலாய், அவள் முலைகளுக்கு நீண்ட என் கைகளைத் தட்டிவிட்டு வேகமாய் வீட்டிற்குள் நுழைந்தாள், விட்டால் நான் உடலுறவையே கதவுக்கு வெளியில் நடத்த திட்டமிடுவேன் என்று ஊகித்திருக்கலாம்.
தளர்ந்து சோபாவில் உட்கார்ந்திருந்தாள், நான் ஷூ சாக்ஸுகளைக் கழற்றி சோபாவரும் வரை, நான் சோபாவில் உட்கார்ந்ததும் ஐபோன் தட்டி ஹோம் தியேட்டர் சிஸ்டத்தில் தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடலை ஒலிரச் செய்தவள் பின் எழுந்து நின்றாள். என் ப்ளேலிஸ்டில் கனகாலம் முதல் இடத்தைப் பிடித்திருந்த பாடல் அது, அவளுக்கும் தெரியும். பின்தலையில் வைத்திருந்த பூவை நீக்கி டீப்பாயில் வைத்தாள், ஜாக்கெட்டுடன் புடவையை சேர்த்துப் பிணைத்திருந்த சேஃப்டி பின்னை நீக்கியவள் முந்தானையை விலக்கி ஜாக்கெட்டுடன் முலை காட்டினாள். பின்னர் முந்தானையைத் தூக்கி என்னிடம் வீசியவள் நான் அதைப் பற்றி இழுக்க இழுக்க க்ருஷ்ணையைப் போல் முந்தானை நீள கண்ணனிடம் வேண்டாமல், இழுப்பது துச்சாதனாய் இல்லாமல் அர்ஜுனனாய் கற்பனை செய்து கொண்டு சுழன்று புடவையை முழுவதுமாய் இழந்தாள். மெல்லிய வெளிச்சம் மட்டுமே அனுமதிக்கும் அவள் அன்று வீடுமுழுவதும் ப்ளொரசன்ட் விளக்குகள் மிளிர ஜாக்கெட்டும் பாவாடையுமாய் நின்றாள், நான் சோபாவின் நடுவில் உட்கார்ந்து இந்த உடை அவிழும் விருந்தை யுவன் சங்கர் ராஜாவின் பாடலுடன் ருசித்துக் கொண்டிருந்தேன். மெல்லியதாய் அவள் இடை அசைத்து பாடலின் ஸ்ருதிக்கு நடனம் பயின்றாள்.
...என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய்
அலறுது அலறுது இருதயம்
அதிருது அதிருது அடிமனம்
கதறுது கதறுது இளமையும்
உன் மோகம் கூப்பிடுதே...
பாடலில் மட்டுமல்ல எனக்கும் கூப்பிட்டது ஆனால் எழ நினைத்தவனை பாவாடையை முழங்கால் வரை தூக்கிவிட்டு பின் வலதுகாலை லாவகமாய்த் தூக்கி என் நெஞ்சில் வைத்து தள்ளி உட்காரவைத்து கால் எடுத்தாள். நான் அதிர்ச்சியில் இருந்து மீண்ட பொழுது நன்றி யுவன் என்று மனம் நெகிழ்ந்தேன். துள்ளலிசையால் தான் ஷைலுவில் மோகம் பொங்கியிருக்க வேண்டும். ஜாக்கெட் ஹூக்குகளை ஒவ்வொன்றாய் மெதுமெதுவாய் கழற்றினாள், பாடலிலும் இங்கேயும் உடை உதிர்ந்து கொண்டிருந்தது. அவள் உடை கழற்றி பார்த்திருக்கிறேன் ஆனால் இசையும் இடுப்பசைவும் வெட்கம் விட்டதும் புதுமை, இப்பொழுது பிராவும் பாவாடையும் மட்டும். நான் இதில் அடுத்து எது கழலும் என்று மட்டும் யோசிக்க யுவன் இசையில் இருந்து மனதை விலக்கியபடியிருந்தேன். பாவாடை தான் வென்றது நான் கோபத்தை அல்ல காமத்தை உள்ளம் நிரம்பவித்துக் கொண்டிருந்தேன். பாவாடை முடிச்சவிழ்த்தவள் கீழே விழுந்த பாவாடையை கால்களால் எடுத்து கைகளில் மாற்றி என் முகத்தில் எறிந்தாள். 'வன்ன மேகலையை நீக்கி மலர்த் தொடை அல்குல் சூழ்ந்த்தாள்' என்று சொன்ன கம்பனிடம் பாவாடையை மேகலையோடு ஒப்பிடலாமா என்று கேட்கலாம். ஆனால் ஷைலஜா மலர்த் தொடை எதுவும் அணியவில்லை என்று கம்பன் கோபிக்கலாம். பிரா மற்றும் பேன்ட்டி மட்டும் அணிந்த ஷைலு. இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி ஒரு கையால் இன்னொரு கையை தொட்டபடி அவள் ஆடிய அந்த நடனத்தின் அடுத்த நொடி என்ன என்பதில் என் மனம் குவியத் தொடங்கியது. இரண்டு கைகளையும் என்னை நோக்கி நீட்டியவள் அருகில் வா வா என்பதைப் போல் அழைத்தாள், அது ஆட்ட வகை என்பதுணர்ந்து நான் அவளருகில் செல்லவில்லை எல்லாவற்றையும் சோபாவில் உட்கார்ந்தே பார்க்க முடிவெடுத்தேன். ஸ்ட்ராப்களை கைகளின் வழி விலக்கியவள் பிரா இறக்கி பின்பக்க ஹூக்குகளை முன்பக்கம் கொண்டுவந்தவள் ஹூக் கழற்றி மொத்தமாய் பிராவிடமிருந்து முலை விலக்கியிருந்தாள். அதுவரை எங்கோ மறைந்திருந்த வெட்கம் அவளில் புகுந்து அவள் சிவந்தது கன்னங்களில் தெரிந்தது. ஆனால் அந்தப் பொழுதை அத்துடன் நிறைவு செய்ய விரும்பாதவளாய், உடலை ஒரு சுற்று சுற்றினாள், முலை அலைந்து அதிர்ந்து நின்ற பொழுது கவனித்தேன் அவள் கண்கள் என்னில் காமம் வழிய நின்று கொண்டிருந்தது, இரண்டு குதி குதித்து முலை ஆட்டி பின்னர் குனிந்து முலை தொங்கவிட்டு தோள் ஆட்டி சில நொடிகள் கழித்து என் அருகில் வந்து உட்கார்ந்தாள். அவள் பேன்ட்டி கழட்டுவாள் என்று நானும் எதிர்பார்த்திருக்கவில்லை. என்னை சோபாவில் தள்ளியவள் முலையோடு மேல் விழுந்து முகமெல்லாம் முத்தமிட்டு உதட்டில் நாக்கை நுழைத்து வாய் விரித்து என் நாக்குடன் ப்ரெஞ்ச் நடனம் புரிந்தாள், நானாய் எதுவும் செய்யாமல் கை கால்களை அடக்கி என்னுடன் வைத்துக்கொண்டு அவள் முத்தத்தில் ஆவளுடன் பங்கேற்றேன்.
மைமல் வேளையில் மையலியாய் முத்தம் முடித்து எழுந்து நின்றவள் "குளிக்கப்போறேன் பாவா." கொஞ்சியபடி மொஞ்சிகள் அதிர குளியளறைக்கு நகர்ந்தாள்.
அவள் பிங்க் பேன்ட்டி இப்பொழுது காணாமல் போயிருந்தது, குளியளறை கதவு திறந்திருந்ததன் ஆச்சர்யத்தை நான் உணரக்கூடயில்லை, என் குளியளறை என் ப்ரைவஸி வழக்கமுடையவள் ஷைலு. ஷவரில் நனைந்து கொண்டிருந்தாள் முழு நிர்வாணமாய், நான் கதவில் சாய்ந்து அவள் குளிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கச்சிதமான கட்டுக்குலையாத உடல்வாகு கொண்டவளின் முலையழகில் மயங்கி நின்றேன், இப்பொழுது தான் அவள் பின்பகுதியில் சதை பிடிக்கத் தொடங்கியிருந்தது இப்பொழுதுகளில் இருட்டில் அவள் பின்பகுதியை வன்மையாகப் பிடித்துவிட அனுமதியளித்திருந்தாள் ஆனால் கும்மிருட்டில் மட்டும். நான் ரசித்தது போதும் என்று உடைகளைந்து ஷவரில் இறங்கினேன், இணைத்துக் கொண்டவள் எனக்கும் சோப்பு போட்டுவிடத் தொடங்கினாள். மலை கடந்த புயங்கள் என்று என் தோள்களைச் சொல்ல முடியாது அப்படியே அவள் முலைகளை குடத்தொட்டும் ஒப்பிட முடியாதுதான். ஆனால் 'தம்தமின் முந்தி நெருங்கலால் நிலை கடந்து பரந்தது' என்று அந்த சூழ்நிலையைச் சொல்ல முடியுந்தான். அவள் முலைகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு என் தோளில் முட்டியது. நான் அவள் முலைகளை வருடிவிடத் தொடங்கினேன், மேற்தோள் நீக்கி அழுக்கு நீக்கி கழுவிவிட்டவள். அவளாய் மண்டியிட்டி வாயில் எடுத்துக் கொண்டாள், சில நொடிகளில் உச்சமடைந்தேன், அந்தப் பொழுதில் நானாய் வாயிலிருந்து விலக்கியிருந்தேன் புரிந்து கொண்டவளாய் குறிபிடித்து அவள் மார்பில் விட்டுக்கொண்டாள், கொட்டி முடிந்ததும் முலைக்காம்பில் இடித்து விளையாட்டு காட்டினாள் அது சிறுத்து இயல்பு நிலைக்கு வரும் வரை. பின் இன்னொரு முறை சோப்பு போட்டு தன்னையும் கழுவி என்னையும் கழுவிவிட்டு உதட்டோடு உதடு வைத்து முத்தியவள். "நல்லா குளிச்சிட்டு வாங்க." என்று சொல்லி வெளியேறினாள் முலையும் பிருஷ்டமும் அதிர.
நான் படுக்கையறைக்கு அம்மணமாய் வர படுக்கையை அலங்கரித்திருந்தாள் பூக்கூடை கொண்டு, நடுவில் ரோஜாவால் இருதய வடிவம் ஒரு அம்புடன். மனம் குளிர்ந்திருந்தது. அவளும் அம்மணமாய் படுத்திருந்தாள் எதையோ எதிர்பார்த்து, எனக்கு என்னவென்று தெரிந்துதானிருந்தது, அவளுக்கு உச்சமடைய கன்னிலிங்கஸின் தேவையிருந்தது. எனக்கு அதைச் செய்வதில் பிரச்சனையில்லை, ஆனால் அவள் எப்பொழுதும் உருவாக்கும் கீழே அவள் அவள் கால்களுக்கிடையில் நான் என்பதில் விருப்பமில்லாமல் அன்று அதை மாற்ற உத்தேசித்திருந்தேன். எப்பொழுதையும் போல் அவள் பாதத்தில் ஆரம்பித்து அவள் உடல் முழுவதும் நாக்கை ஓட்டினேன், அவள் குறியில் மட்டும் நில்லாமல், அவள் உதட்டில் முடித்து படுக்கையில் அயர்ந்து படுத்தேன். அவள் ஏமாந்திருக்க வேண்டும், பெருமூச்சு விடுவதை பெரும்பாடுபட்டு தவிர்த்தாள். சில நொடிகள் அப்படியே விட்டேன்.
"இன்னிக்கு நீ மேல வா" அவளை உடலுறவுக்கு மேலே அழைத்திருக்கிறேன், ஏன் பாவா என்னால முடியாது நீங்களே வாங்க என்று பெரும்பாலும் தவிர்த்துவிடுவாள். ஆனால் அவள் நான் என்ன சொல்கிறேன் என்று புரியாமல் திறுதிறுவென்று விழித்தாள். அவளை எழுப்பி என் முகத்தில் அவளை உட்காரவைத்தேன், "நான் மாட்டேன் இப்படியெல்லாம் செஞ்சா எனக்கு வராது" என்று புலம்பியவளை. "சரி ட்ரை பண்ணலாம் வரலைன்னா நான் மேல வர்றேன்" என்றேன். அவள் உச்சமடைவதைத்தான் 'வருவது' என்று சொன்னாள் cumming என்பதன் தமிழாக்கமாக அவள் முதலில் தொடங்கி அந்த வார்த்தையை நானும் உபயோகித்து வந்தேன். ஆனால் இதழ் விலக்கி கிளிட்டோரஸில் வாய் வைத்ததும் என் நாக்கிற்கு கட்டுப்பட்டாள், முதல் முறையாக கையில் சிக்கிய பிருஷ்டத்தையும் கசக்க, இப்பொழுது அவளாய் என் முகத்தில் க்ளிட்டைத் தேய்த்து நிமிடங்களில் உச்சமடைந்து மல்லாந்து படுத்தாள்.
'அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் உழைத்தனள்' - கம்பன் கவிராயன்- மறுப்பதற்கில்லை, மன்மதன் பெயர் சொல்லி நான் விட்ட அம்புகளில் தூளாகித்தான் போயிருந்தாள் ஷைலு. அவள் விட்ட காமப்பெருமூச்சும் 'உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே' என்பதாய் நீண்டது.
"என்னா படுத்துட்ட வாடீ மேலன்னா" என்று சொல்லி அவளைச் சீண்டினேன், அவ்வளவு சீக்கிரம் உச்சமடைவாள் என்று நான் ஊகித்திருக்கவில்லை, நான் இன்னும் சில பத்து நிமிடங்கள் ஆகும் என்றே நினைத்தேன் ஆனால் மாற்றமும் அவளிடம் மாற்றிக்கொடுத்த கன்ட்ரோலுமாய் அடர்த்தியாய் உச்சமடைந்திருந்தாள். அதில் அவள் அடைந்திருந்த மகிழ்ச்சி, என் குறியை சப்பி கனமாக்கி "பாவா வேணாம் நீங்க வாங்க" என்று எந்த தொல்லையும் செய்யாமல் மேலேறியதில் தெரிந்தது. வனமுலைகள் குலுங்க குலுங்க முதலில் உட்கார்ந்தபடி ஆடியவள் "பாவா இன்னும் ரெண்டு நிமிஷம், please dont cum" என்றாள். நான் ஆச்சர்யப்பட்டேன். கிளிட் உரசியிருக்கவேண்டும். அவள் இடுப்பை என்னில் தேய்த்தாள், அவள் குறிகொண்டு என் குறியை கவ்விப் பிடித்தாள். "I am cumming, cumming" நான் அவள் அப்படி சொல்ல வாய்ப்பிருக்குமா என்று ஒரு நொடி யோசித்தேன், பின்னர் அவள் சொல்வதற்காகவே காத்திருந்தவனைப்போல் நானும் வீரியமாய் உச்சமடைந்தேன். அவள் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது என் மேல்.
"எப்புடிடீ" என்றேன் அன்று நடந்தது என்ன என்று இன்னமும் புரியாமல் "என்னால எப்பையும் அப்படி முடியாது, ஆனா இன்னிக்கு எல்லாம் உங்களுக்காகத்தான்." மீண்டு வந்திருந்த வெட்கத்துடன், குளியறைக்குச் சென்று டவல் கொண்டுவந்து குறிகழுவியவள் தூங்கத்தான் போகிறாள் என்று நினைத்தேன். அவள் சந்தோஷத்திற்கு குறி சுத்தமடைந்ததும் மீண்டும் வாயில் எடுத்து சலம்பத் தொடங்கியவள், வாய் நீக்கி, "அய் என்னைய மட்டும் மேல ஏத்தி சக்கையா புழிய விட்டீங்கள்ல. இப்ப அனுபவிங்க." என்று சொல்லி குறியை பெரிதாக்க முயற்சித்தாள். இரண்டு முறை உச்சமடைந்திருந்த குறிக்கு இன்னமும் கூட கொஞ்சம் நேரம் தேவைதான், ஆனால் நான் குற்றம் சொல்லவில்லை. "டீ அவனை எழுப்பிவிட்டாலும் I cant cum" என்றேன்.
"அதை நான் பார்த்துக்கிறேன் பாவா." சொல்லி குறிக்குத் திரும்பினாள்.
பாளையங்கோட்டை சிறை அதிகாரியின் மனைவி ஊமைத்துரையின் மேல் அனுதாபம் கொண்டிருந்தாள். அதைப் பயன்படுத்தி நீத்தார் கடன் செய்வதற்குப் பழங்களும் பண்டங்களும் வாங்க வேண்டுமென்று சொல்லவும் அதற்கு அனுமதி கிடைத்தது. சிறைக்கு விறகு கொண்டு வரும் பொட்டிப் பகடை என்ற சக்கிலியர்தான் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் ரகசிய ஓலைப் பரிமாற்றத்திற்கு உதவியாக இருந்தார். சிறைக்குள் வந்த வாழையிலைக் கட்டு, விறகு, பழக்கூடைகளுக்குள் ஆயுதங்கள் இருந்தன.
2.2.1801 அன்று இரவானதும் திருச்செந்தூருக்குக் காவடி எடுத்துப் போகும் பக்தர் கூட்டம் ஒன்று கோட்டையின் அருகே பாடிக்கொண்டு சென்றது. தெற்கு வாசலுக்கு அப்பால் இருளில் குதிரைகளோடு வீரர்கள் கூட்டம் ஒன்று காத்து நின்றது.
பாட்டுச்சத்தம் நெருங்கியதும் ஊமைத்துரையின் உறவினர்கள் ஆயுதங்களோடு காவல் வீரர்களோடு மோதி, கோட்டைக் கதவை திறந்து ஓடினர். மூன்று பேர் சண்டையில் இறந்துவிட, பதினான்கு பேர் தப்பி காத்திருந்த கூட்டத்தோடு வல்லநாட்டு மலைக்கு ஓடினர். பின் தொடர்ந்த சிறைக்காவலர்கள் அடிபட்டுத் திரும்பினர்.
பாஞ்சாலங்குறிச்சியில் காவலில் இருந்த கும்பினிச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். ஒரே வாரத்தில் மீண்டும் அங்கே ஒரு மண் கோட்டை எழும்பிக் கொண்டிருந்தது. பிப்ரவரி இறுதிக்குள் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து ஆழ்வார்த்திருநகரி வரை உள்ள கும்பினி ராணுவ நிலைகளை அழித்துவிட்டனர். கோட்டைகள் இடிக்கப்பட்ட ஐந்து பாளையங்களிலும் மீண்டும் அவை கட்டப்பட்டன.
பாஞ்சாலங்குறிச்சியைப் பிடிப்பதற்காகக் காலின் மெக்காலே சங்கரன்கோவில் கயத்தாறு வழியாக வந்து கடையநல்லூரில் முகாமிட்டிருந்தார். நள்ளிரவில் நாற்புறமிருந்தும் அவர் படை தாக்கப்பட்டது. சண்டையில் பாஞ்சாலங்குறிசி வீரர்கள் 40 பேர் மடிந்தனர். மறுநாள் ஒட்டபிடாரத்தைப் பிடிக்கும் மெக்காலேயின் முயற்சி முறியடிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ராணுவத்தின் பின்புறமாகவும் பக்கவாட்டிலும் துப்பாக்கிகளுக்குப் பயப்படாமல் வந்து தாக்கினர். மெக்காலே பின்வாங்கினார். ஊமைத்துரை அந்தச் சண்டையில் 110 பேரை இழந்தான். இரவெல்லாம் நடந்து பிப்ரவரி 10ல் மெக்காலே பாளையங்கோட்டை போய்ச் சேர்ந்தார்.
மார்ச்சில் ஊமைத்துரை தூத்துகுடியைத் தாக்கினான். கோட்டையின் தளகர்த்தர் உட்வர்ட் ஓர்ம்ஸ்லே சரணடைந்தார். மற்றொரு அதிகாரியான பாக்காட் சிறையில் அடைபட்டார். அவர் மனைவி ஊமைத்துரையைச் சந்தித்து அவருக்கு உயிர்ப் பாதுகாப்பு வேண்டியபோது இரு அதிகாரிகளும் குடும்பம் உடைமகளோடு வெளியேற ஊமைத்துரை அனுமதித்தான்.
வல்லநாட்டு மலையிலிருந்து பாளையங்கோட்டையைத் தாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். கும்பினுக்கு எதிரான இந்த எழுச்சி ராமநாதபுரத்திற்கும் பரவியது. மார்ச்19ல் ஸ்ரீவைகுண்டத்தைத் தாக்கி மேஜர் செப்பர்டின் படையை அங்கிருந்து விரட்டிவிட்டனர்.
மெக்காலே மேலதிகத் துருப்புகளைச் சேர்த்துக்கொண்டு மார்ச் 30ல் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கிப் போனார். ஊமைத்துரையின் ஆட்கள் பசுவந்தனையில் மறித்துத் தாக்கினர்; 96 பேரை இழந்து பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பிவிட்டனர். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மார்ச் 31ல் வளைத்த பிரிட்டிஷ் படை காலையிலிருந்தே பீரங்கிக்ளால் சுடத் தொடங்கியது. கோட்டையில் இரட்டை மண்சுவர்களுக்கு நடுவே பருத்திமாருகள் அடுக்கப் பட்டிருந்ததால் குண்டுகள் அதில் செருகி நின்றுவிட்டன. உட்புறச்சுவர் பாதிக்கப்படவில்லை.
மாலை 3 மணிக்கு ஒருபகுதிச்சுவர் இடிக்கப்பட்டது. அதன் வழியே நுழைய முயன்ற பிரிட்டிஷ் சிப்பாய்கள் சுடப்பட்டும் ஈட்டி, வல்லயங்களால் குத்தப்பட்டும் விழுந்தனர். எதிர்ப்பு கடுமையாக்க இருந்தது. குலவையிட்டுக் கொண்டே பாஞ்சாலங்குற்ச்சி வீரர்கள் தாக்கினர். சுவர்களில் ஏற முயன்ற பிரிட்டிஷாரை வல்லயங்கள் குத்தித் தள்ளின. சுவர்மீது பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் தென்படும் போதெல்லாம் பிரிட்டிஷ் துப்பாக்கிகள் சுட்டு வீழ்த்தின. என்றாலும் அதே இடத்தில் மீண்டும் ஒருவன் ஏறி நின்றான். மதில்மேல் பிரிட்டிஷாரால் ஏற முடியவேயில்லை. கோட்டையின் கிழக்குப் பக்கமிருந்து எட்டையபுரம் வீரர்கள் தாக்கினாலும் அவர்கள் சுலபமாக விரட்டப்பட்டனர்.
கோட்டையின் காவல் அரண்களிலிருந்து பிரிட்டிஷ் வீரர்களை நோக்கித் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்தபடியிருந்தது. கோட்டையைக் கைப்பற்றும் மெக்காலேயின் முயற்சி தோற்றுப்போனது. வலிமையையான பிரிட்டிஷ் படை தோற்றுவிட்டது என்பதை விட மெக்கால்லேக்கு ஆச்சரியமாக இருந்தது அந்தச் சிறிய மண்கோட்டையை எப்படி ஊமைத்துரையால் தற்காத்துக்கொள்ள முடிந்தது என்பதுதான்.
வீரத்திற்கும் நேர்மைக்கும் பேர் போனவராகக் கருதப்பட்ட, இந்தியச் சூழலை நன்கறிந்த லெ. கேணல் அக்னியு வசம் மதராஸ் ராணுவப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மதராஸ் ஜார்ஜ் கோட்டை, பரங்கிமலை, ஆர்க்காடு, மலபாரிலிருந்தும் வீரர்கள் வந்து அவரோடு மே 23ல் கோவில்பட்டியில் இணைந்து கொண்டனர். 24ந் தேதி பாஞ்சாலங்குறிச்சியை பீரங்கிகள் துளைத்துக் கொண்டிருந்தன. உடைபட்ட மதில்களினூடே நுழையப் பெருவாரியான ஆட் பலத்தோடு பிரிட்டிஷார் முயன்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பாக சின்ன பீரங்கிகளும் துப்பாக்கிகளும் சுட்டவாறு இருந்தன. நுழைய முயன்றவர்கள் மீது உள்ளிருந்து கடும் தாக்குதலும் துப்பாக்கிப் பிரயோகமும் நிகழ்ந்தது. இரு பக்கமும் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் பலியாயினர்.
சிதந்த மதிலின் ஒரு 'வழி'க்குப் பின்புறம் எதிர்த்து நின்ற வீரர்கள் அனைவரும் சுட்டு வீழ்த்தப்பட்டவுடன் பிரிட்டிஷ் வீரர்கள் அந்த வழியே மொத்தமாக உள் நுழைய முயன்றனர். அந்தத் தருணத்தில் கோட்டையில் இருந்த பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் 3000 பேர் கிழக்கு வாசல் வழியாக வெளியேறி, இரு பிரிவுகளாகக் கிழக்கிலும் வடக்கிலும் விரைந்து ஓடித் தப்பித்தனர். கோட்டைக்குள் 1050 பேர் இறந்து கிடந்தனர்.
பிடிபட்ட வீரர்களைக் கோட்டையில் வெளிப்புறத்தில் நிற்க வைத்து சுட்டுத் தள்ளுமாறு உத்தரவிட்டார் அக்னியு.
கேணல் ஜேம்ஸ் வெல்ஸ் வந்து அவரைச் சந்தித்தார். 'சார் உங்களுக்குச் சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறேன். தூத்துக்குடியைக் கைப்பற்றியபோது பிரிட்டிஷ் அதிகாரிகளை குடும்பத்தோடு வெளியேற ஊமைத்துரை அனுமதித்தார். அதை விடவும் மெக்காலே தோற்று பாளையங்கோட்டைக்குத் திரும்ப முயன்றபோது அவரது படையை ஊமைத்துரை நிர்மூலகாக்கியிருக்கமுடியும் ஆனால் திரும்பிச் செல்ல அனுமதித்தார்!'
அக்னியு சுருட்டைப் புகைத்தவாறு மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
'காது கேளாத, வாய் பேச முடியாத ஒரு இளைஞனின் சாகசங்கள் பிரமிப்பூட்டுகின்றன. அவர் சைகைகளை தேவ கட்டளைகளாக ஏற்று எல்லோரும் கீழ்ப்படிகின்றனர். எல்லாத் தாக்குதல்களிலும் அவர் முன்னால் நின்றிருக்கிறார். தன்னைவிட நூறுமடங்கு வலிமை வாய்ந்த எதிரியைக் கண்டு அவர் அஞவில்லை. அவரது படையின் சக்தியைவிட சாதனைகள் பல மடங்கு பெரியவை.'
சுருட்டை வாயிலிருந்து எடுத்த அக்னியு சொன்னார் 'தெரியும். அவனைப் பற்றி அனைத்தையும் அறிந்த பிறகே இங்கே வந்தேன். நான் அறிந்த அபாரமான போர்வீரர்கள் வெகுசிலரில் இவன் ஒருவன். அவனை மிகவும் மதிக்கிறேன். என்ன செய்வது? அவனை எதிர்த்துப் போரிட அல்லவா வந்திருக்கிறோம்.'
அக்னியுவின் ஆணைப்படி பிடிபட்ட வீரர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடக்கே தப்பியோடிய ஊமைத்துரையின் கூட்டத்தை பிரிட்டிஷ் வீரர்கள் துரத்திச் சென்றனர். கடும் சண்டை நடந்தது. மீண்டும் அவர்கள் சிதறி ஓட, பிரிட்டிஷ் வீரர்கள் கோட்டைக்கே திரும்பிவிட்டனர். அருகிலுள்ள கிராமத்திலிருந்த பெண்கள் காயம்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக அந்தக் களத்திற்கு வந்தனர். அதிலொருவன் உயிர் பிரியும் தருணத்திலும் அருகில் விழுந்து கிடந்த ஊமைத்துரையைக் காட்டி 'சாமிய எப்படியாவது காப்பாத்துங்க' என்று சொன்னான்.
குமாரசாமி நாயக்கன் கட்டபொம்முவிற்கும் செவத்தய்யாவிற்கும் தம்பி; கும்பினியார்க்கு ஊமீ, டம்ப்பி; முகமதியர்களுக்கு மூங்கா; மக்களுக்கு ஊமைத்துரை, துரைசிங்கம்; வீரர்களுக்கு சாமி!
-------------------------------------------------------------------------------------
வெள்ளை மருதுவும் அவர் தம்பி சின்னமருதுவும் சிவகங்கைப் பகுதிகளில் கும்பினிக்கு எதிராக வீரர்களைத் திரட்டினர். காளையர் கோவில் தான் மையத்தளமாக இருந்தது அந்தக் கோவில்தான் நிலைக்களன். அது மேலதிக உத்வேகத்தை அளித்தது. தெற்கிலிருந்து விரட்டப்பட்டுப் போனார்களுக்கு அதும், விருபாஷி பாளையமும் தான் புகலிடங்களாக இருந்தன. கமுதியிலிருந்து ஊமைத்துரையை சின்னமருது சிறுவயலுக்கு அழைத்துப் போனார். அவர் வீட்டுப் பெண்கள் அவன் உடல் தேறுவதற்காகப் பொங்கல் வைத்துப் படயலிட்டு சாமிகளை வேண்டினர். அங்குள்ள மறவர்கள் முத்துக் கருப்பத் தேவரையே தங்கள் அரசராக ஏற்றுக்கொண்டிருந்தனர். முதலில் திருப்பத்தூர், நத்தத்திலிருந்து கும்பினி துருப்புகளை விரட்டிவிட்டனர். மேளூர், திருவெள்ளூர் கோட்டைகளை ஆயுத தளவாடங்களோடு கைப்பற்றினர். ஏற்கனவே மழை இல்லாததால் தானியங்களுக்கு பெரும் தட்டுப்பாடாய் இருந்தது. மக்கள் புரட்சியாளர்களுக்கு ஆதரவாய் செயல்பட்டனர். ஆண்கள் பெருவாரியாய் வந்து சேர்ந்தனர். கிழக்குக் கடற்கரைத் துறைகளைக் கைப்பற்றினர். பிறகு இலங்கையிலிருந்து தோணிகளில் தானியங்கள் வந்திறங்கின.
உடல் தேறியதும் ஊமைத்துரை தனது வீரர்களோடு போய் பாளையநாட்டைக் கைப்பற்றினான். மேலூர்க் கள்ளர்கள் நத்தத்திலிருந்து மதுரை வரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓரிரவில் விருபாஷி குப்பள நாயக்கர் தலைமையில் திண்டுக்கல் பாளையக்காரர்கள் அனைவரும் ஊமைத்துரையோடு சேர்ந்து படையோடு மதுரைக் கோட்டையைச் சுற்றி வளைத்தனர். மூன்று நாட்களாக அலங்ககளிலிருந்த பீரங்கிகள் நாலு திசையிலும் சுட்டுக் கொண்டேயிருந்தன. நெருங்கமுடியவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.
சின்னமருதுவின் மகன் செவத்தத் தம்பி கடலோரமாக வீரர்களுடன் தஞ்சைப் பகுதியில் நுழைந்தான். பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆதியார்குடியைக் கைப்பற்றினர். மாங்குடிக்கான சண்டையில் கேப்டன் வில்லியமும் மருது வீரர்களும் வெற்றி தோல்விகளுடன் போராடிக் கொண்டிருந்தனர். கடைசியில் அதுவும் மறவர்களிடம் பிடிபட்டது. தஞ்சைப் பகுதியிலிருந்து கிடைத்த உணவு தானியங்கள் பேருதவியாய் இருந்தன.
----------------------------------------------------------------------
காளையர்கோவிலை நோக்கி பிரிட்டிஷ் படை காட்டுக்குள் நிதானமாக முன்னேறிக் கொண்டிருந்தது. மருதுவின் வீரர்கள் தொடர்ந்து வந்து மோதிக் கொண்டேயிருந்தனர். காட்டுக்குள் எங்கும் ரத்தத் திட்டுகள் கிடந்தன. மேலும் அவர்கள் முன்னேற முடியாமல் ஆகி, பின்பக்கத் தொடர்புகளும் அற்ந்து போயின. அக்னியு சிறுவயலுக்கே திரும்பிவிட்டார். தஞ்சை, புதுக்கோட்டை ராஜாக்களின் உதவியுடன் அறந்தாங்கி, பட்டுக்கோட்டைப் பகுதியிலிருந்த கலகக்காரர்களை கும்பினிப் படை முற்றாக விரட்டிவிட்டது. காரைக்குடி சென்று கொண்டிருந்த மக் லீனின் அணியை மூவாயிரம் பேருடன் ஊமைத்துரை தாக்கினான். அதை முறியடித்து, சிங்கம்புணரி காடுகளிலிருந்த வீரர்களையும் மக்லீன் விரட்டிவிட்டான். மார்ட்டிஸ் ராமநாதபுரத்திலும், எட்டையபுரம் வீரர்கள் உதவியுடன் மெக்காலே அபிராமத்திலும் நடந்த சண்டையில் வென்றனர்.
பல இடங்களிலும் தோற்றுத் திரும்பிய வீரர்கள் காளையர்கோவில் காட்டில் வந்து சேர்ந்தனர். காளையர்கோவிலைத் தாக்கும்முன் அக்னியு ஒரு தந்திரம் செய்தார். ஒய்யத் தேவருக்கு சிவகங்கை அரசராகப் பட்டம் கட்டினார். மருதுவின் மறவர்கள் இரு எதிரணிகளாகப் பிரிய நேர்ந்தது.
காளையர்கோவில் மீது இரண்டாம் முறை தாக்குதல் தொடங்கியது. ஒய்யத் தேவர் உதவியுடன் பிறமலை, மேலூர், நந்திக் கோட்டை தாண்டி ஒக்கூர் வந்தார் அக்னியு. காளையர்கோவிலுக்கு மேற்கிலுள்ள வாணியங்குடி, மூதூர் பிடிபட்டன. செப்டம்பர் 30ல் லெ. கேணல் ஸ்பிரே காளையர்கோவிலை நோக்கிப் போனார். கவனத்தை திசை திருப்ப அக்னியு சிவகங்கைச் சிறிய படையை அனுப்பிவிட்டு, ஸ்பிரேக்கு உதவ வேறு வழியில் ஷெப்பர்டின் அணியை அனுப்பினார்.
அக்டோபர் 1ல் அக்னியுவும் இன்னிஸும் மேற்கிலிருந்து தாக்கினர். மூன்று புறமிருந்தும் காளையர்கோவில் நெருக்கப்பட்டது காட்டுக்குள்ளிருந்த வீரர்கள் கிடைத்த வழிகளில் தப்பியோடினர். மூன்றாள் உயர மதில்களுடன் கூடிய கம்பீரமான கண்ணத்தாள் கோவிலினுள் கும்பினிப் படை புகுந்தது.
மருது சகோதரர்கள் சிங்கம்புணரி காடுகளுக்குப் போய்விட்டனர்.
----------------------------------------------------------------------------------
ஊமைத்துரையும், செவத்தய்யாவும் திண்டுகல்லுக்கு தப்பிச் சென்றனர். விருபாஷிக்கு ஊமைத்துரை சென்று சேர்ந்த நாலே நாளில் பொதுமக்களில் 5000 பேர் திரண்டு அவனோடு சேர்ந்தனர். விருபாஷி செல்லும் வழியெல்லாம் தடுப்பரண்களை ஏற்படுத்தினர். விருபாஷியை நோக்கிப்போன மேஜர் ஜோன்ஸ் தோற்றுத் திரும்பினர்.
உடனடியாக இந்த எழுச்சியைத் தடுக்க நினைத்தார் அக்னியு. அக்டோபர் 12ல் இன்னிஸ் தலைமையில் பெரும்படை சென்றது. அவர் அந்நிலப்பரப்பையும் சூழலையும் ஏற்கனவே நன்கறிந்தவர் தடையரண்களை மீறி பிரிட்டிஷார் விருபாஷி பாளையத்தில் நுழைந்தனர்.
முதலில் சந்திரப்பட்டியில் ஊமைத்துரை எதிர்கொண்டு தாக்கினான். தோற்று விருபாஷிக்குப் பின்வாங்கினான். பிரிட்டிஷ் சிறு பீரங்கிகளுக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் முன்னே தாக்குப் பிடிக்க முடியாமல் விருபாஷி விழுந்தது. ஊமைத்துரையின் வீரர்கள் திண்டுக்கல் சமவெளிக்குத் தப்பியோடினர்.
கூளப்ப நாயக்கன் முதலான பாளையக்காரர்கள் அங்கிருந்து தமது ஊர்களுக்குத் திரும்பினர். ஊமைத்துரை அய்யம்பாளையம் மலைமேல் ஏறி ஒளிந்து கொள்ளும் நோக்குடன் தனது நண்பர்களோடு தெற்கே ஓடிக் கொண்டிருந்தான். மேஜர் பர்ரோஸ் ஓடுகிறவர்களைத் தம் குதிரைப் படையுடன் துரத்தினார். சோறுதண்ணி இல்லாமல் வீரர்கள் மூன்று நாட்களாக 51மைல் தூரம் ஓடியிருந்தனர். இன்னும் சற்று தூரத்தில்தான் அந்த மலை இருந்தது. வத்தலகுண்டை எட்டும் முன்னே பலர் களைத்துச் சுருண்டு விழுந்தனர்.
இவ்வளவு சண்டைகளிலும் பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிய ஊமைத்துரை இப்போது 65 வீரர்களுடன் சிக்கிவிட்டான்.
சிங்கம்புணரி காடுகளில் பிடிபட்ட மருது சகோதரர்கள் 24.10.1801ல் திருப்பத்தூர் கோட்டையில் கொல்லப்பட்டனர்.
ஊமைத்துரையும் செவத்தையாவும் மற்ற 65 பேரும் 16.11.1801ல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் தலை துண்டிக்கப்பட்டனர். இடிக்கப்பட்ட கோட்டை மேட்டில் ஆமணக்கு விதைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆமணக்கு விளைச்சல் எவ்வளவு என்ற கணக்கு கும்பனிக்கு வந்து சேர்ந்தது. கணக்கு எழுதி அனுப்பியது எட்டையபுரம். ஆனால் பிரிட்டிஷ் கௌரவத்திற்குப் பங்கம் விளைவித்த பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரே கும்பினி ஆவணங்களிலிருந்து அகற்றப்பட்டது.
---------------------------------------------------------------------------------------
காவல் கோட்டம்.
Popular Posts
-
இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்து நான்கு-ஐந்து வருடங்கள் இருக்குமாயிருக்கும். அத்தனை எழுதுவதில்லை தற்சமயங்களில் என்பதைப் போல் அத்தனை வாசிப்...
-
பொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...
-
இது பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வேலை பார்த்த அனைத்து தமிழ் நாட்டு மக்களுமே தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யாராவது அவர்களிடம் கே...