In கவிதைகள்

திருத்தி எழுதப்படுமா தீர்ப்புகள்?

கேள்விகளுக்கான
என் ஜன்னல்கள் திறந்தேயிருக்கின்றன
தெரிவிக்கப்பட்ட கல்லறை முகவரியாய்
பிரபஞ்சத்தை அதன் நீள அகல உயரங்களுக்கு
விரும்பும் என்னை, என் நீள அகல உயரங்களுக்கு
அர்பணித்தப் பின்னும் ஜன்னல்களுக்கான பயமில்லை என்பதாய்

ஜன்னல்கள் இல்லாமல் போன வீடுகளை
பெரும்பாலும் புறக்கணித்தப்படியே என் பயணம் தொடர்கிறது
வீதிக்கு வந்துவிட்ட வீடுகள் ஜன்னல்கள் இல்லாமல்
போராட வந்துவிட்டு வலிகளுக்காக புலம்புவதைப் போல்
முகத்தில் படறும் குறுநகை மறைக்கப்படுவதில்லை
மறைக்கப்படாததாலேயே குறுநகை
இகழ்ச்சிக்குரியதாய் நீள்கிறது

நீண்டு கொண்டேயிருக்கும் இரவு
பொழிந்து கொண்டேயிருக்கும் பனி
நகர்ந்து கொண்டேயிருக்கும் நான்
கேள்விகளுக்கான
என் ஜன்னல்கள் திறந்தேயிருக்கின்றன
தெரிவிக்கப்பட்ட கல்லறை முகவரியாய்

Related Articles

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ஏன் கடைசியில் இப்படி ஆய்ட்டீங்க.

    ReplyDelete

Popular Posts