In சிறுகதை

தமிழீழக்காதல்

"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?"

"கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்."

சில காலமாகவே எனக்கு இது வழக்கமாகயிருக்கிறது, இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் எங்கள் வீட்டிற்கு புதிதாய் குடிவந்திருந்த அந்த தமிழீழ பையனை வம்பிழுத்துக் கொண்டிருப்பேன். அவனுடைய பேச்சும் செயல்களும் பெரும்பாலும் எனக்கு சிரிப்பையே வரவழைக்கும். முன்பே பலசமயங்களில் நான் ஈழத்தமிழை உரைநடையில் படித்திருந்தாலும் பேசிக் கேட்டதில்லை, சொரூபனை முதலில் பார்த்தபொழுது அவன் பேசிய தமிழ் விநோதமாயிருந்தது. வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க, முரளீதரனையோ, கருணாவையோ பற்றி பேச நான் ஆரம்பித்தால் நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருப்பான் நான் கேட்டுக்கொண்டேயிருப்பேன்.

அவன் தங்கை வந்து அவனை ஏதாவது சொல்லி அழைத்து சென்றுவிடுவாள். அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது நான் அவள் அண்ணனை பேசவிட்டு வம்பிழுத்துக்கொண்டிருப்பது. இல்லாவிட்டால் எங்கக்கா வந்து தலையில் கொட்டி இழுத்துச்சென்றுவிடுவாள்.

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்த என்னுடைய பெரிய மாமாவைப் பார்த்துவிட்டு சொரூபன்,

"அண்ணா நீங்கள் அப்படியே பொட்டு அம்மானைப் போலவே இருக்கிறியள்." என்று சொல்லிவைக்க ஏற்கனவே ஈழ ஆட்களுக்கு மாடிவீட்டை வாடகைக்குவிட்ட கோபத்தில் இருந்த மாமா அதன்பிறகு வீட்டிற்கு வருவதே நின்றுவிட்டது.

சொரூபனிடம் ஒருசில கெட்டபழக்கங்கள் இருந்தது, யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ஏகவசனத்தில் பேசுவது, ஒருமுறை என்னிடம் என் அக்காவை குறிக்க 'பெட்டை'ன்னு சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆகயிருந்தது. பெண்களைப்பற்றி அவன் கொண்டிருந்த சில எண்ணங்கள் இப்படி, அதேபோல் மாதக்கடைசியில் வந்து என்னிடம் காசு கேட்பதும்.

"அண்ணா உண்டியல் பணம் வரவேண்டியுள்ளது, வந்ததும் தருகிறேன்."

முதலில் புரியவில்லையென்றாலும் பின்னர் அவனே சொல்லத்தான் தெரிந்தது அது ஹவாலாப் பணம் என்று. அந்த அளவிற்கு விவரம் தெரியாவிட்டாலும் பையன் ஏதோ தப்பு செய்றான்னு மட்டும் தெரியும். அவன் சொந்தக்காரர்கள் ஜெர்மனியில் இருந்தார்கள் அவர்கள் அங்கிருக்கும் ஒரு ஏஜண்ட் இடம் காசு கொடுத்துவிட இவன் அந்தப் பணத்தை இங்கே ஒரு இடத்தில் வாங்கிக்கொள்வானாம். பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் கற்று வைத்திருந்தான். ஒருநாள் என்கிட்டயே உங்கள் பேங்க் டீடெய்லை கொடுங்கள் உங்கள் அக்கௌன்டிற்கு மாற்றிவிடச் சொல்கிறேன்னு சொன்னானே பார்க்கணும். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.

இப்பொழுதெல்லாம் நேரம் போகலைன்னா அவனை கூப்பிட்டு பேச ஆரம்பித்துவிடுவேன். அதுவும் பிரபாகரனைப்பற்றியோ, புலிகளைப்பற்றியோ பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான் நிறுத்தாமல் பேசுவான். இடையில் நிறைய கெட்டவார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவான் என்றாலும் பெரும்பாலும் கள்ளப்பயதான், கருணாவைப்பற்றி கேட்டால் கள்ளன், முரளீதரனைப்பற்றி கேட்டால் கள்ளன் அப்பிடின்னு பெரிய கதையே ஆரம்பிச்சிடுவான். அந்தச் சமயங்களில் எல்லாம் அவன் கண்கள் பிரகாசமாவதைப் பார்த்திருக்கிறேன்.

"அண்ணே, பாருங்கண்ணே இன்னொரு வார் வந்தா ஆமியை அடிச்சு நொறுக்கிடுவாங்க, இப்போ நம்மக்கிட்ட கெலியெல்லாம் இருக்கு." அவன் ஒவ்வொரு விவரமாய்ச் சொல்ல எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். வேலைவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் நான் சொரூபனிடம் பேச்சுக்கொடுக்க மாடிக்கு போய்விடுவேன் அதற்கு சொரூபன் மட்டும் காரணம் கிடையாது. அவன் தங்கிச்சியை வந்ததிலிருந்து நான் சைட் அடித்துக் கொண்டிருந்தேன் அதுவும் ஒரு காரணம். அவள் பெயர் சந்திரா, நம்ம பக்கத்து பெண்களைவிட கொஞ்சம் அடிக்கிற நிறத்தில் தான் இருப்பாள் என்றாலும் இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்பது போன்ற நல்ல களையான முகம்.

சொரூபனிடம் மட்டும் தான் விளையாட்டாய் பேசுவது, சந்திராவிடம் சீரியஸான மேட்டர் மட்டுமே பேசுவேன். பெரும்பாலும் விளையாட்டாய் பேச ஆரம்பித்தால் விலகிச்சென்றுவிடுவாள் என்பதால்தான் சீரியஸான மேட்டர். அவர்கள் இருவரும் சில லட்சங்கள் செலவழித்து பெங்களூரில், நான் சில ஆயிரங்கள் மட்டும் செலவழித்து படித்த டிகிரியை படித்துக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி, படித்துமுடித்ததும் அவர்கள் நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்புக்களைப்பற்றி, வெளிநாட்டில் பல சங்கடங்களுடன் வாழும் அவர்களுடைய உறவினர்களைப்பற்றி இப்படி நிறைய. கொஞ்சமும் விகல்பமில்லாமல் பேசிக்கொண்டிருப்பாள். அண்ணனைப்போல் வாயைத்திறந்தால் மூடாமல் பேசிக்கொண்டிருக்கமாட்டாள், ரொம்பவே அளவாய்த்தான் பேசுவாள். ஆனால் சொரூபனாகட்டும், சந்திராவாகட்டும் ராஜீவ்காந்தியைப்பற்றியோ, ஐபிகேஎப் பற்றியோ என்னிடம் பேசவேமாட்டார்கள். நானும் அவ்வளவாக சென்ஸிடிவ் விஷயங்களில் தலையிடமாட்டேன்.

என் அக்கா பெரும்பாலும் வீட்டில் இருக்கமாட்டாள் என்பதால் பெரும்பாலும் சந்திரா தான் அம்மாவிற்கு உதவி செய்து வந்தாள், அம்மா மற்றவர்களை சமையல் அறைக்குள் விடமாட்டார்கள். என் அத்தையை கூட விடமறுத்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால் சந்திரா சமையல் கட்டிற்குள் போய் வேலைசெய்வாள். அம்மாவிற்கும் ஒருவாறு என் விஷயம் தெரிந்துதான் இருந்தது நேரில் காண்பிக்கவில்லை, ஆனால் அக்கா நேரிலேயே சொல்லிவிட்டாள்,

"மகனே சயனைட் குப்பிதான் உனக்கு ஜாக்கிரதை. வேணும்னா சொல்லு நைனாக்கிட்ட பேசி எனக்கு முன்னாடி உனக்கு வேறவொரு பொண்ணுகூட கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்றேன். இந்த விளையாட்டையெல்லாம் விட்டுறு. சொல்லிட்டேன்"

விளையாட்டாய் பேசுவதைப்போல் இருந்தாலும் ரொம்ப தீவிரமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சொரூபனுக்கும் சந்திராவிற்கும் மற்ற பாடங்களில் பிரச்சனைகள் கிடையாது, ஆனால் ஆங்கிலம் உதைக்கும். அதுவும் சொரூபன் பிரச்சனை, பெரிய பிரச்சனை. ஆங்கில பாடலாசிரியர்களையெல்லாம் ஏகவசனத்தில் பேசுவான், இவனெல்லாம் என்ன புஸ்தகம் எழுதுறான்னு. அதாவது அவனுக்கு கணிணியின் 'C' மொழியைத் தமிழில் சொல்லித்தரணும், யாராவது இதுபோன்ற தமிழ் புத்தகங்கள் இந்தக் கடையில் கிடைக்குது என்று சொன்னால் அவ்வளவுதான் போய் வாங்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இதனால் பலசமயங்களில் சந்திராவை தனியாய் விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வண்டியேறிவிடுவான்.

சொரூபனோ இல்லை சந்திராவோக்கூட தனியேயிருக்க பயப்படமாட்டாள், ஆனால் அம்மாவும் அக்காவும் நான் சந்திராவை என்னவோ செய்துவிடுவேன்னு அவளை அழைத்து எங்கள் வீட்டில் அவர்களுடன் படுக்கவைத்துக் கொள்வார்கள். சந்திராவிற்கு புரியுமோ புரியாதோ தெரியாது, சிரித்துக்கொண்டேயிருந்து விடுவாள். சொரூபன் புத்தகம் வாங்கிவந்தவுடன் பிரச்சனை இன்னும் அதிகமாகும். தமிழ் விளக்கத்தையும் ஆங்கில விளக்கத்தையும் வைத்து என்னை பாடம் சொல்லித்தரச்சொல்லி உயிரை வாங்குவான். இந்த விஷயத்தில் எனக்கு சந்திராவின் மீதுகூட கோபம் உண்டு. அவளும் இப்படித்தான் ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரை முதற்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து படிப்பாள்.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையில் தான் டிவியில் நந்தா படம் போட்டான், ஈழ மக்களைப்பற்றிய படமென்பதால் சந்திராவும் பார்க்க வந்திருந்தாள். அதில் வந்திருந்த லைலா கதாப்பாத்திரத்தை சந்திராவாகவும் சூர்யா கதாப்பாத்திரத்தை நானாகவும் கற்பனை செய்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன், சந்திரா லைலா போல் லூஸாக நிஜத்தில் இல்லாவிட்டாலும் கூட. இடையில் அவளை வேறு திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்க்கும் சமயத்தில் எல்லாம் அவளும் என்னையே பார்ப்பதைப் போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது.

படம் முடிந்த அன்றிரவு மெதுவாக அவளிடம் என் காதலைச் சொன்னேன். அதற்கு அவள் நேரடியாக பதிளலிக்காமல்,

"இங்கப்பாருங்க, நாங்களெல்லாம் படிக்க வந்திருக்கிறம். அதுவுமில்லாம என்னை கல்யாணம் கட்டிக்க உங்கட அரசு சம்மதிக்காது. உங்கட வீட்டிலும் கூட நான் வளையவர சம்மதிச்சாலும் கல்யாணம் கட்டிக்க சம்மதிக்க மாட்டாங்க. எனக்கு ஸ்டுடண்ட் விசாதான் இருக்கு அதுவும் முடியப்போகுது. அதனால கற்பனையெல்லாம காணாம போய் வேலையைப் பாருங்க." சொல்லிவிட்டு நகர்ந்தவளின் கையைப்பிடித்து நிறுத்தினேன்.

"அப்ப உனக்கு என்னை பிடிக்கலையா?"

"இங்கப்பாருங்கள் பிடிக்கிறதும் பிடிக்காததும் பிரச்சனை கிடையாது. இது நடக்காதது நடக்கமுடியாதது அதைத்தான் சொல்லுவினம். போய் உங்கட வேலையைப் பாருங்க. உங்கட ஊரில் என்னைவிட வடிவான பெண்களெல்லாம் கிடைக்கலாம் அவையைக் கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க" இதைச் சொல்லும் பொழுது அவள் சிரித்துவிட்டாள், எனக்கும் சிரிப்புத்தான் வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கும் எனக்கும் இருந்த இடைவெளி குறைந்தது. எங்கள் வீட்டிற்கும் இந்த விஷயம் ஒருமாதிரியாக தெரிந்துபோனாலும் அவர்களாக பிரச்சனையை வளர்க்க வேண்டாமென்று கேள்வியெதுவும் கேட்கவில்லை. ஈழ விடுதலைப்பாடல்களை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு பாடிக்காட்டுவாள் எல்லாவற்றையும் விளையாட்டாகவே பார்க்கும் எனக்கு இது மிகவும் வித்தியாசமாகயிருக்கும். அவளிடம் ஒரு முறை வைரமுத்து எழுதி தேசியவிருது வாங்கிய 'விடைகொடு எங்கள் நாடே' பாட்டைப்பற்றி பெருமையாக சொல்ல அவள் அதைப்பற்றி பெருமைப்பட எதுவுமில்லையென்றும்,

"எங்கட வலிகளை உங்களிண்ட கவிஞரின் வரிகளால் நிரப்பிவிட முயல்வது முட்டாள்தனம், அது அத்துனை இயல்பாய் வராது."

என்றும் கூறியது ஆச்சர்யமளித்தது. அதுமட்டுமில்லாமல் அவளுக்கு ஈழப்பிரச்சனையை வைத்து தமிழர்கள் படமெடுத்தும் பாட்டெழுதியும் சம்பாதிப்பதைப்பற்றிய அபிப்ராயமும் வேறு விதமாய் இருந்தது. அவர்களுடைய பிரச்சனையைப் பற்றிய தமிழர்களின் அறிவு குறைவாய் இருப்பதாகவும் அதன் பாதிப்பே இவையெல்லாம் என்றும் கூறினாள். பின்நாட்களில் அவள் ராஜீவைப்பற்றியும் ஐபிகேஎப் பற்றிய அவளுடைய மனப்பக்கங்களையும் எனக்குக்காட்டினாள், அது இதுவரை நான் படித்து கேட்டு தெரிந்துகொண்ட விஷயங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டதாய் இருந்ததென்னவோ உண்மை.

அதன் பிறகு அவள் எங்கள் வீட்டில் இருந்த ஒருவருடம் சொர்க்கமாய்க் கழிந்தது, இடைவெளிகள் முற்றிலுமாய் இல்லாமல் போயிருந்தாலும் கடைசிவரை அவள் காதலை சொல்லவில்லை, என் காதலை ஏற்றுக்கொள்ளவுமில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம், இருக்கிறோம். இன்னமும் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தப்படும் ஒரு நாளில் அவள் பெயரை நிச்சயமாய்ப் பரிந்துரைப்பேன். இப்பொழுது படிப்பு முடிந்து அவள் இலங்கையில் இருக்கிறாள், இப்பொழுதும் தொலைபேசுவதுண்டு. பார்க்கலாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும் என் காதலுக்கான பதிலை.

-------------------

சினேகிதி அவர்களுக்கு நன்றி, தமிழீழ உரையாடல்களை சரிபார்த்து தந்தமைக்கு. :-)

Read More

Share Tweet Pin It +1

37 Comments

In சுய சொறிதல் சோழர்கள்

பாலகுமாரனும் பஞ்சவன்மாதேவியும்

பாலகுமாரன் அவர்கள் சில காலமாக ஆராய்ச்சியெல்லாம் செய்து உடையார் என்றொரு கதையெழுதி வருகிறார். அதைப்பற்றிய சில கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லை.

இங்கே நான் குறிப்பிடுவதற்கு முக்கியமான காரணம், பாலா தன் முதல் பாகத்தில் கல்கியை பற்றியும், அவருடைய நாவலில் வரும் நந்தினியை பற்றியும் கூறியதை வைத்தே, புத்தகம் கையில் இல்லாத காரணத்தால், சில வருடங்களுக்கு முன் படித்ததை நினைவு கூர்ந்து சொல்கிறேன். அதாவது நந்தினியை போன்ற ஒரு கற்பனை கதாப்பாத்திரம் கதையின் போக்கை தீர்மானிப்பதை பற்றி கருத்து கூறிய பாலா தன் கதையில் அதுபோன்று நிகழாது என்று கூறினார். இந்த விஷயத்துக்கு பின்னால் வருகிறேன்.

பாலாவின் இந்த கதையில் கரூவூர்த்தேவர் போன்ற சில மந்திர தந்திரங்கள் செய்யும், பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார். கோவில் கட்டியதன் பங்கில் பெரும்பாலானவற்றை அவர்களிடமே கொடுக்கிறார். அவ்வளவு பெரிய கோவில் கட்டிய மன்னன்(கடவுளுக்கு) கடவுள் நம்பிக்கையில்லாதவனாக இருப்பான் என்று சொல்லவில்லை. ஆனால் பாலகுமாரன் கொஞ்சம் அதிகம் சொல்கிறாரோ என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட மன்னர்கள்(ராசராசன், ராசேந்திரன்) கொஞ்சம் முரடர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம். இல்லாவிட்டால் போர்க்களத்தில் சண்டை செய்ய இயலாது. இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர்கள் என்பதால் கட்டாயம் முரடர்களாக இல்லாதிருக்க முடியாது.

அவ்வளவு பெரிய மகத்தான கோவில் கட்டிய பெருமையை மன்னனுக்கு கொடுங்கள், இல்லை உதவிய மக்களுக்கு கொடுங்கள். அவர்களை பாராட்டுங்கள். இவையெல்லாம் இல்லாமல் கடவுளையும், மந்திரம் தந்திரம் செய்பவர்களையும் சிறிது உயர்வாக பாராட்டுவதாக எனக்குப்படுகிறது.

கல்கி குந்தவையையும் வந்தியத்தேவனையும் எழுதிவிட்டதால் இவர் குறிப்பிட வேண்டிய அவசியம் கூட கதையில் இல்லை, பாவம் அவரும் தான் என்ன செய்வார். பஞ்சவன்மாதேவியின் வரலாற்றை எழுதாமல், கோவிலின் உட்புற சுவற்றில் மன்னன் பதித்தவற்றை கொடுத்தவர்கள் பற்றியும், வடக்குபாடியை சாமந்தர்களின் தலைவனாக இருந்து சோழகுலத்தின் வெற்றிக்காக போராடியவர்களையும் எழுத முடியுமா என்ன?

அதுமட்டுமில்லாமல் பாலகுமாரன் சில தனிப்பட்ட காரணங்களுக்காக, தேவரடியார்களுக்கு கொஞ்சம் அதிகம் இடம் கொடுப்பதாக தெரிகிறது. பெண்கள் அந்தக் காலத்தில் இத்தனை மதிப்பு பெற்றிருந்தார்கள் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ராசராசனைப் போன்ற ஒரு மன்னன் ஒரு தேவரடியாரை இவ்வளவு நம்பியிருந்தான் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. சிறிதுவிட்டால் கோவில் கட்டியதே பஞ்சவன்மாதேவிதான் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இருந்திருக்கலாம் ராசராசனின் அன்னியோன்மையாகவே இருந்திருக்கலாம். ராசேந்திரனுக்கும் அவர்களை பிடித்திருக்கலாம் பள்ளிப்படை அமைத்திருக்கலாம். அதை ஒன்றை வைத்துக் கொண்டு அந்த தேவரடியார் அவர்களை உடையாரில் கதாநாயகி போல் அமைத்திருப்பதை படிக்க மனம் வரவில்லை.

கல்கி எழுதியதை எழுதமாட்டேன் என்று சொன்னால் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கு அதையெல்லாம் விட்டுவிட்டு, நாடி ஜோதிடம் பார்த்தார், அதனால் தான் கோவில்கட்டினார்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

கருவூர்த்தேவரை பற்றி எழுதும் போது, அவரையும் எழுத ஒரு பைத்தியக்காரன் வருவான்னு, தன்னைப்பற்றி, வஞ்சகப்புகழ்ச்சி செய்துக்குறார். அறிந்தவரையில் கருவூர்த்தேவர் கவிதை எழுதுபவர். அவர் அந்தக் காலத்தில் கவிதையில்லாம் எழுதியதாக தெரிகிறது.

ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொல்ல சென்ற பொழுது, அவனுக்கு வழிகாட்டியவனின், நினைவை மறக்கடித்த கருவூர்த்தேவரை பற்றி எங்கு படித்தார்னு சொன்னால் நாங்களும் படிப்போமில்ல.

-----------------------------------------

முன்னம் எழுதிய பதிவு தான் இப்பொழுது மீண்டும் பதிவுலகில், பொன்னியின் செல்வன், பாலகுமாரன், உடையார் பற்றியெல்லாம் பேச்சு எழுவதால் ஒரு மீள்பதிவு.

தொடர்புடையதாய் நான் கருதும் பிற இடுகைகள்.

இரண்டாம் குலோத்துங்க சோழன் - சாளுக்கிய சோழர்கள் - கிருமி கண்ட சோழன் - தசாவதாரம் - கல்கி - பொன்னியின் செல்வன் - ரங்கராஜ நம்பி - சைவம் - வைணவம் - ஜல்லி
பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In Only ஜல்லிஸ் புறநானூறு

அழகான பெண்கள் ஆபத்தானவர்கள்

வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே-விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.

336. பண்பில் தாயே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி

இதுதான் நான் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் - இதற்கு சுஜாதா கொடுத்த நவீன கவிதை கீழே(சுஜாதா யாரு புறநானூற்றுக்கு உரை எழுத - அவர் எழுதியதில் அங்கே தப்பு இங்கே தப்பு - என்கிற புலவர்களுக்கு பதில் சொல்ல நான் கிடையாது ஆள் நான் வரலை அந்த விளையாட்டுக்கு.)

பெண் கேட்ட அரசன் கோபக்காரன்
பெண்ணின் தந்தையோ பொறுப்பற்றவன்
யானைகள் கடிமரத்தில் அமையாமல் சீறுகின்றன
வீரர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்
ஊரே கலக்கத்தில் இருக்கிறது
வேங்கைமலைக் கோங்கின் அரும்பு போன்ற
சிறிய முலைகளைக் கொண்ட
இந்தப் பெண்ணால்
பகை வளர்கிறது
தாய்க்குத் தெரியவில்லையே!

அகநானூறுக்கான அறிமுகம் போல் இல்லாமல் புறநானூற்றுக்கான அறிமுகம் இப்படி செய்யப்படுவதில் எனக்கும் மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எந்த விஷயத்திலும் நம்ம டச் இருக்கணும் இல்லையா? இளையராஜா தேவாரத்துக்கு இசையமைச்சப்ப, மெட்டுக்கு தகுந்த பாட்டை தேர்ந்தெடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நான் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாளைக்கு ஒரு நாள் - "அக்கா! அக்கா! என்றாய் அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம்" என்று சொன்ன ஆணாதிக்கவாதி பாரதிதாசன் புகழளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் கொஞ்சம் ஈயம் அடித்தேன் என்று தமிழ்கூறும் நல்லுலகம் சொல்லவேண்டுமல்லவா?

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In 18+ மொழிபெயர்ப்பு

தேஜஸ்வினி


அவளுக்கு இன்னமுமே கூட தெரியாது.

தேஜஸ்வினி என் அறையில் உட்கார்ந்திருந்தாள், அணைந்தது போக மீதமிருந்து ஒளிர்ந்து கொண்டிருந்த ஒற்றை பல்பு, அவள் கால் மேல் காலைப் போட்டு என் நீல நிற சோபாவில் சாய்ந்தது போல் உட்கார்ந்து கைகளால் இறுக்கி அணைத்துக் கொண்டிருந்த சிங்க பொம்மையின் தங்க நிற பிடறியும் அவள் தேன் வண்ண நிறமும் ஒன்றுடன் ஒன்று கலப்பதைக் காட்டியது. அந்த நிறம் அவளுடைய தோற்றுப்போன மாடல் அம்மாவிடம் இருந்து பெற்றது. அவள் ஒன்றும் அத்தனை தூரம் அவள் அம்மாவைப் போல் ஆச்சர்யமூட்டும் அழகில்லை தான், அதுவும் தற்சமயம் அவள் தொல தொலா என்று இரண்டு நாட்களாய் கழட்டாமல் அணிந்திருந்த ஆடையும் கன்னத்தில் தொடர்ச்சியாய் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீருமாய் அவள் கொஞ்சம் மோசமாகவே இருந்தாள். வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை அத்தனைக்கு அப்பாலும் அவள் அழகுதான்.

அவள் ராமை எவ்வளவு காதலித்தாள் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்த புலம்பல்களைக் கேட்க நான் முயற்சி செய்துகொண்டிருந்தேன், ஆனால் இடையில் நாங்கள் சாப்பிட்டு அழித்துக் கொண்டிருந்த சாக்லேட் ஐஸ்கிரீம்களின் மீதான விருப்பம் கூட குறையத் தொடங்கியது அவள் நூறாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்த அதே காதல் கதைகளால், என்ன கொஞ்சம் மாற்றத்தோடு கூடிய இன்னொரு வடிவம். அது ராமைப் பற்றியதே கூட இல்லை, அவளுக்கு இதே வழக்கம் தான். காதலில் விழுவது, அதுதரும் களவி அனுபவத்தில் திளைப்பது பின்னர் காதல் செய்தது ஒரு பொறுக்கியுடன் என்று தெளிந்து பிரிவது, இருவரில் யாராவது ஒருவர் கழட்டிவிட என்று அத்தனை முறையும் தவறான தேர்வு. ஒருவேளை அவள் லெஸ்பியனாக இருப்பாளோ என்று சமீப காலமாய் யோசித்தேன்.

நான் அவளிடம் அதைப்பற்றியும் கூட பேசியிருக்கிறேன், ஆனால் உடனே அதை மறுத்து பேச்சையும் சட்டென்று மாற்றிவிடுவாள். தொடர்ச்சியான பொழுதுகளில் அவள் என் தொடுதல்களை மறுத்தலிக்கத் தொடங்கியிருந்தாள், பொதுவாய்ச் சந்திக்கும் பொழுதான அணைத்தல்களும் உணர்வுப்பூர்வமாய் நெருக்கமானதாக இல்லாமல் வெறும் சம்பிரதாயமான ஒன்றாக சுருங்கியது. என்னுடன் இருக்கும் பொழுதுகளில் அவள் பிரிந்து விலகி உட்கார்வதையும் கூட என்னால் உணர முடிந்தது. இன்று அவள் அருகில் உட்கார முடியாமல் போனதால், என் அறையின் சோபா ஒரு ஆள் கச்சிதமாய்ப் படுக்கும் அளவிற்கு இருந்ததை நினைத்து வருந்தினேன். நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து நன்றாய் குனிந்து உட்கார்ந்தால் தான் அவளுடைய நம்ப முடியாத அளவிற்கு நீளமான தேன் வண்ண கால்களை என் விரல்களால் வருட முடியும். நான் வளைந்து அவள் கால்களை வருடினேன் அவள் விசும்பத் தொடங்கினாள் நான் இன்னொரு டிஷ்யூ பேப்பரை அவள் கைகளில் கொடுத்து சமாதனப்படுத்தினேன்.

என் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது, அவளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை, ஆனால் என் பொறாமையுடன் கூடிய அவளுக்கான ஏக்கப்பார்வையை அவள் உணரமாட்டாள் என்பதை நினைத்து தொடர்ந்தது. காலம் தன் கால்களை மெதுவாக நகர்த்தியபடியிருந்தது, நான் கடிகாரம் பார்ப்பதைத் தவிர்த்தேன். எங்கே நான் அவள் எப்பொழுது கிளம்புவாள் என்று நினைத்துவிடுவேனோ என்பதற்காக அல்ல, நிச்சயமாய். அவள் முடிவு என் கையில் இருந்திருக்குமானால், அவள் என் வீட்டில் என் படுக்கையில் என் அணைப்பிலேயே வைத்துக் கொண்டிருப்பேன் காலம் முழுதும்.

காலிங்பெல் அடித்தது, அவள் என்னை என்ன செய்யப்போகிறாய் என்பது போல் சோர்வாய்ப் பார்த்தாள்.

“கவலைப்படாத தேஜஸ், யாராயிருந்தாலும் நிமிஷத்தில் அனுப்பிடுறேன். சரியா?”

எனக்கான அனுமதியை தலையசைத்துத்தந்தாள், அதுவும் கொஞ்சமாய் மௌனமாய், நான் பால்கனியை நோக்கி நகர்ந்தேன். மேலிருந்து,

“யாரது?”

“டொமினோஸ் பிஸ்ஸா மேம்!”

“நாங்க பிஸ்ஸா ஆர்டர் செய்யலையே!?”

நான் அவளிடம் “கீழே போய் அவனிடம் சொல்லிவிட்டு வருகிறேன்” என்றேன். அவள் குழரலாய், “சரி” என்றாள். அவளுடைய அந்த குழரல் ஒலி செய்யும் மாயம் என்னை அந்த அறையை விட்டு போகவிடாமல் செய்தது. பச்சை நிறத்தில் அவள் தொல தொலவென அணிந்திருந்த மென்மையான சட்டையுடன் அவள் அந்த சோபாவில் சரணாகதி அடைந்திருந்தாள் ஒரு ஒரு குழந்தையைப் போல். தலைமுடி முகம் முழுதும் ஒழுங்கில்லாமல் பரவியிருந்தது. நான் அந்த மாய உலகில் இருந்து விடுபட்டு கீழே வந்தேன். அங்கே அவன் உடம்பிற்கு பத்தாமல் குட்டையான வெள்ளை சட்டை அணிந்த ஒருவன் பிஸ்ஸா பாக்ஸுடன் நின்று கொண்டிருந்தான், வெளிப்பக்கத்து கதவை திறந்து அவனாய் உள்ளே வந்திருக்க வேண்டும். நான் வரவும் என்னை நோக்கி பிஸ்ஸா பாக்ஸை நீட்டினான், அவனருகில் நான் வர பிஸ்ஸா பாக்ஸை கீழே போட்டுவிட்டு என்னை சுவற்றை நோக்கித் தள்ளினான் அந்தத் தள்ளலில் தடுமாறி நான் அவன் மீது விழ இருந்தேன். பின்னர் நான் அவனை தள்ளிவிட முயன்றேன் அப்பொழுது அவன் என் முதுகில் ஒரு கத்தியை வைத்திருப்பதை என் மெல்லிய கருப்பு டாப்ஸின் வழியே உணர முடிந்தது.

“கடவுளே!” நான் சட்டென்று கதறலாய் என் குரலை உயர்த்தினேன், “நீ என்ன நினைச்சிக்கிட்டிருக்க...”

“மூடுறீ முண்ட” அவன் சொன்னான், தவறான மென்மையுடன், குரல் அவன் செய்கையை மறுத்தது. அவனும் பதற்றத்தில் இருப்பதாய் நான் நினைத்தேன். அவன் என்னை மாடி ஏறச் சொன்னான் அந்தக் கத்தி என்னில் நடுங்கியது. சட்டென்று அங்கே என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தேன், நாங்கள் என் அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்ததும் கால்களால் சாத்தி கதவை மூடினான் தாழ்ப்பாள் போடுவதைப் பற்றி யோசிக்கவில்லை.

தேஜஸ்வினி உட்கார்ந்திருந்த சோபாவில் எழுந்து அசையாமல் நின்ற சமயம், எரிந்து கொண்டிருந்த ஒற்றை பல்பும் சிணுங்கத் தொடங்கியிருந்தது. அந்த பல்பை எப்பொழுதும் நம்ப முடியாது, இன்றும் இந்த அசாதாரண நிலையில் அப்படியே நாங்கள் அந்த அறைக்குள் வரத்தொடங்க ஒளிருந்தும் மறைந்தும் படுத்தியது.

“உனக்குந்தான்டீ முண்ட, சத்தம் போட்ட...” அவன் தேஜஸ்வினியை மிரட்டத் தொடங்கினான், குரல் மூலமாய் மட்டும் அவளிடமிருந்து வெளிப்படப்போகும் எதிர்ப்பையும் தவிர்த்தவனாய், “உன் கேர்ள் ப்ரண்டைப் போட்டுடுவேன். ஜாக்ரதை!”

தேஜஸ்வினி அப்படியே கீழே நீல நிற தரைவிரிப்பில் விழுந்தாள், அவளிடமிருந்து வந்த மிருதுவான வண்ணத்துப்பூச்சியின் கதறலுடன் கூடிய வெறித்த பார்வை என் கரிய சில்க சட்டைக்கெதிராய் ஒளிர்ந்து கொண்டிந்த கத்தியை நோக்கியபடி இருந்தது. கத்தி என் முதுகை உறுத்தியபடி இருந்தது ஆனால் ரத்தக்காயமா பட்டிருக்குமா என்று உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.

“அவுறுடி” அவன் தேஜஸ்வினிக்கு கட்டளையிட்டான் அதுவரை பரீட்சயம் இல்லாத அந்தச் செயலால் விழைந்த உற்சாகத்தின் இழை அவனுடைய நடுங்கும் குரலில் தெளிவாய்த் தெரிந்தது.

அவள் மறுக்கும் முகமாய் தலையை மட்டும் மௌனமாய் ஆட்டினாள், கைகள் அதுவாய் அவளுடைய தங்க நிற உடலை நெருக்கமாய் இறுக்கியது, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள நினைத்தவளாய். அந்தச் செயலால் அவள் அணிந்திருந்த உடை இன்னும் இறுக்கப்பட்டு அவளுடைய மார்புகளை டாப்ஸுக்கு அடியில் முழுமையாக வெளிப்படுத்தியதை அவள் உணர்ந்திருக்க முடியாது, அவள் தொடை வரை நீண்டிருந்த ஆடையும் சற்று மேலேறி மேலும் கொஞ்சம் தொடையைக் காட்டியது. அந்தச் செயல் அளித்த மகிழ்ச்சி வெட்கமில்லாமல் என் மூச்சுக் காற்றில் வெளிப்பட்டது. முதுகுப்புறத்தில் இருந்து உயர்ந்த கத்தி என்னை கனவுலகில் இருந்து நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

நான் அவனிடமிருந்து விடுபட முயல, வலுவான அவனது கையை என் கழுத்தைச் சுற்றி வைத்து என்னை அவன் முன்னால் இழுத்துவந்தான். அவன் கத்தியை உயர்த்தியது என் கழுத்தில் வைக்கத்தான். நான் உறைந்து போனேன். அவன் மெதுவாய், மிகவும் மெதுவாய் என் சில்க் டாப்ஸைக் மேலிருந்து ஆச்சர்யப்படுத்தும் கூர்மையுடன் இருந்த கத்தியால் வெட்டத் தொடங்கி பாதியில் விட்டான், கிழிந்த டாப்ஸின் பாகம் இப்படியும் அப்படியுமாய் ஃபேன் காற்றில் ஆடியது. நான் ப்ரா எதுவும் அணிந்திருக்கவில்லை மதியம் மூன்று மணிக்கு. சிறிய வெளிறிய மார்புகள் இறுக்கத்திலிருந்து விலகி சுதந்திரமாய்த் தொங்கியது, பிங்க் நிற காம்புகள் பயத்தில் தடித்துப் போயிருந்தன, குளிர்ந்த காற்று வீசியது அப்படியே உற்சாகமும். இப்பொழுது நான் வெறும் சில்க் ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருந்தேன், என்னால் நானும் அவனும் இப்பொழுது ஜோடியாய் எப்படியிருப்போம் என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. கறுப்பு சில்கிற்கு எதிராய் அவனுடைய வெள்ளை சட்டை பேண்ட். அவன் என் அண்ணனைப் போலிருந்தான், நான் அதிரடியாய் சிரித்துத் தொலைக்காமல் இருக்க ரொம்பவும் கஷ்டப்படவேண்டியிருந்தது, நான் என்னை மறந்து கொண்டிருப்பதாய் பட்டதெனக்கு.

அவன் கத்தியை என் மார்புக்கு அருகில் கொண்டு வந்தான், அவன் கத்தி முனையை என் இளமுலைகளுக்கு அருகில் கொண்டு வந்ததால் இப்பொழுது சுத்தமாய் உறைந்து போயிருந்தேன். அவன் தேஜஸ்வினியைப் பார்த்தான்,

“அவறுடி” முன்னர் அவன் குரலில் இருந்த உற்சாகம் இப்பொழுது தென்படவில்லை, அவன் குரல் வன்மையுடன் வெளிப்பட்டது. அந்தக் குரலுக்குக் கட்டுப்படாமல் இருக்க மென்மையான தேஜஸ்வினியால் முடியும் என்று நான் நம்பவில்லை. அவள் மெதுவாய் அவளுடைய பொருந்தாத சட்டையின் பட்டன்களை நீக்கத் தொடங்கினாள். அவனுக்கு அவள் சட்டை அத்தனை மெதுவாய் கழன்று தோள் வழியாகப் போவதில் விருப்பமில்லைதான்.

“எழுந்திருச்சி நின்னு கழட்டுடீ!” அவன் சொன்னான், அவள் அவன் சொன்னதற்கு கீழ்ப்படிந்தாள் மௌனமாய் தொண்டைக்குள் மட்டும் அழுதபடி. முடிவில்லாமல் நீண்ட காலம் கழித்து அவளது கடைசி பட்டனும் அவிழ்க்கப்பட்டு அவளது சட்டை உபயோகப்படுத்திக்கொள்ள ஆளில்லாமல் தரையில் விழுந்தது. என் பார்வை அவளில் விழுந்து நகர்ந்து கொண்டிருந்தது தொடர்ச்சியாய், இத்தனை அழகாய் அவள் இருந்ததில்லை எப்பொழுதும் என்பதைப் போல். நேர்மையில்லாத பொறாமையுடன் அவன் தேஜஸ்வினியைப் பார்ப்பது தெரிந்தது. “இங்க வா” அவன் அவளை அழைத்தான். அது என்னை வன்மையாக்கியது, அந்தப் பார்வையை நோக்கி அறைய வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

அவள் கைகளை மேலும் கீழுமாய் அசைத்தபடியே எங்களை நோக்கி நடந்துவந்தாள் அதன் மூலமாய் தொலைந்துவிட்டதாய் அவள் நினைக்கும் மானத்தை காப்பாற்ற அர்த்தமின்று முயன்றாள். அவளுடைய மிருதுவான மலர்ப்போன்றத் தன்மை அவளை அவனிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே முடியாதது. அவள் கண்கள் கரைந்தபடியே இருந்தது என்னுள் ஆக்ரோஷத்தை உண்டு பண்ணியது, அவள் எனக்கு மிக அருகில் வந்து நின்றாள், ஃபேன் காற்றில் அவள் உடல் நடுங்குவது தெரிந்தது.

அவனுடைய கத்தியைப் பிடித்துக்கொண்டிருந்த கை என் மார்பிலிருந்து நகர்ந்தது, ஆனாலும் அவனது இடது கை இன்னமும் என்னை கழுத்தைச் சுற்றி வளைத்தபடியே இருந்தது. தடுமாறியபடி அவன் தன் ஜிப்பை அவிழ்த்து பேண்டைக் கழற்றிவிட்டான், அது அவனது காலடியில் விழுந்தது. அவனது கால்கள் முற்றிலும் வெளிறிக் காணப்பட்டது, அவனுடைய வெள்ளை நிற பேண்டை ஒத்தே அவனது கால்களும் இருந்தது. அவனும் உள்ளாடை எதுவும் அணிந்திருக்கவில்லை, அவனுடைய விரைத்த குறி தொடலி வரை நீண்டிருந்த அவன் ஷர்டிலிருந்து வெளிப்பட்டு பசியுடன் காணப்பட்டது.

“முட்டிப் போடுறி முண்டை” அவன் தேஜஸ்வினியிடம் சொன்னான், அவன் பசி அந்தக் குரலில் தெரிந்தது, “ஊம்புடி”

நான் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்ற முடிவிற்கு வந்திருந்தேன், அந்த நிலையை அப்பொழுதைய சூழ்நிலை தாண்டிவிட்டாதாக நினைத்தேன். அவன் கைகளிலிருந்து என்னை விடுவித்து நகரப் பார்த்தேன், அவன் கத்தியைப் பிடித்திருந்த கை வேகமாக மீண்டும் என்னருகில் வந்தது. அவன் இன்னொரு கையால் தேஜஸ்வினியைப் பிடிக்க முயல நான் அதைத் தடுத்து அவளுக்கும் அவனுக்கும் இடையில் நின்றேன்.

“வேண்டாம்” நான் சொன்னேன், வார்த்தைகள் என் தொண்டையில் ஒட்டிக்கொண்டிருந்தது அதை மென்மையாகவும் அவனை மயக்குவது போலவும் சொல்ல நினைத்து தடுமாறினேன். “ப்ளீஸ்” மெதுவாய் “நான் செய்யறனே” என்றேன். அவன் கண்களில் என் கண்களை நிறுத்தியிருந்தேன். தேஜஸ்வினி என்னருகில் விடும் மூச்சு சப்தம் கேட்டது, அப்பொழுது அவள் வெளிவிட முடிந்த ஒரே சப்தம் அதுவாகத்தான் இருந்திருக்கும். அவள் தோல் எனக்கு மிக அருகில் இருப்பதை உணர முடிந்தது. நான் அவனுடைய ஒப்புதலுக்காக காத்திருந்தேன், அவன் கண்களின் வழி அவன் என்ன நினைக்கிறான் என்பதை உணர முடியவில்லை.

அவன் ஒரு நிமிடம் ஆழ்ந்து யோசனை செய்தான், வலது கையில் கத்தியைப் பிடித்தபடி. என்னை அழுத்தமாய்ப் பார்த்தான், அவன் பார்வை கொஞ்சம் கொடூரமாய் இருந்தது, அந்தப் பார்வை என்னை சங்கடப்படுத்தாமல் மனதை வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கடைசியில் அவன் ஒப்புக்கொண்டான். நான் குனிந்து என் நாக்கை அவன் துடிப்பான விரைப்பில் ஓட்டினேன், அவனுடைய குறியில் சின்ன சின்னதாய் நாக்கால் வட்டமிட்டேன். குறி நுனியை நாக்கால் செல்லமாய் அடித்து அவனை மென்மையாய் துன்புறுத்தத் தொடங்கினேன், ஆனால் அவன் கண்களிலிருந்து என் கண்களை எடுக்கவில்லை. செல்லமாய்ச் செய்தாலும் துன்புறுத்தல் நீண்டு அதனால் பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்கிற எண்ணம் இருந்தது. அந்த ஏதோ ஒரு நிமிடத்தில் நான் அவனை அழகனாய் உணர்ந்தேன், அவனிடம் கத்தியிருந்திராவிட்டாலும் இப்பொழுது செய்து கொண்டிருப்பதை செய்திருப்பேன் என்று நினைத்தேன். அந்த எண்ணம் என்னை தடுமாறச் செய்தது.

அது சட்டென்று முடிந்துவிட்டது, அவன் உச்சமடைந்து வெளியேற்றினான் நான் கவனமாக மொத்தமாய் விழுங்கினேன். அவனுடைய கோபம் அதனால் பெரிதாகிவிடக்கூடாது என்றே நினைத்தேன். அவன் முன்னால் முட்டிப்போட்டபடி காத்திருந்தேன். அவன் கண்களில் இருந்து என் கண்களை எடுக்காமல் இருந்தேன், எங்கே என் கண்களில் இருந்து அவன் கண்களை எடுத்து தேஜஸ்வினியின் பக்கம் திருப்பிவிடுவானே என்கிற பயம் எனக்கிருந்தது. அவனுக்கும் என் பயம் புரிந்திருந்தது, அடுத்தக் கட்டளை நேரடியாகவே எனக்கு வந்தது “கழட்டிப் போட்டு வந்து படுடீ!” அவன் தேஜஸ்வினியை கண்டுகொள்ளாமல் தவிர்த்தான். அவன் உடம்பு இன்னமும் தயாராய் இருந்தது, இன்னமும் கவனமாக இருந்தான். என்னால் அவனிடமிருந்து கத்தியை பிடிங்கிவிடமுடியும் என்று நினைக்கமுடியவில்லை. நான் அவனுக்கு கீழ்ப்படியும் ஒருத்தியாய் என் சில்க் ஷார்ஸைக் கழட்டினேன், அதுவும் கிழிந்துபோகாமல் இருக்கணுமே. என் மனதில் எங்கோ ஒரு மூலையில் இதிலிருந்து நாங்கள் சீக்கிரமே மீண்டுவிடுவோம் என்கிற நம்பிக்கை இருந்தது.

நான் சோபாவின் மீது படுத்தேன், அங்கிருந்த நீல நிற பெட்ஷீட்களை நகர்த்தி நடுவில் கொஞ்சம் இடம் இருக்குமாறு செய்தேன். மெதுவாய் என்னை விரித்தேன், என் உடலை அவனுக்குக் கொடுக்கும் விதமாய். என் கண்கள் அவன் முகத்தில் நிலைத்திருந்தது, சொல்லமுடியாத எண்ணத்திற்கு எதிராய் போராடும் நோக்கத்துடன். எனக்குத் தெரியவில்லை நான் நினைத்தாலும் என்னால அவன் முகத்திலிருந்து கண்களை விலக்கிவிடமுடியுமா என்று. என்னிலிருந்து விலகிய ஒரு சிறிய எண்ணத்துளி அவனை புகைப்படம் எடுத்துவைக்க நினைத்தது, என்னை ரேப் செய்யப்போகிறவனின் புகைப்படம். நான் உடைந்து போய்விட்ட ஆயிரம் துண்டுகள் ஒட்ட வைக்கப்பட்டதைப் போலவும் அப்படி உடையாமல் இருப்பதற்கான காரணம் எதையோ பாதுக்காக்கத்தான் என்பதைப் போலவும் இருந்தது.

கத்தியில்லாமல் இருந்த அவனுடைய மற்ற கை, இப்பொழுது தேஜஸ்வினியின் தோள்களைப் பற்றி, வெறிகொண்டு திருப்பியது. அவன் கத்தியை அவள் முதுகில் வைத்து என் எதிரில் தள்ளினான், நான் சப்தமில்லாமல் அந்தச் செயலை எதிர்க்கப் பார்த்தேன், அவள் மௌனமாய் என் மீது சாய்ந்தாள். அவள் கொஞ்சம் வளைந்து கொடுத்து என் மேல் பலமாய்ச் சாயாமல் சமாளித்தாள், அவள் இப்பொழுது விழும்பொழுதும் அழகாகவே இருந்தாள். அவன் சொன்னான்,

“போ போய் அவளை மேட்டர் பண்ணு, நான் நீங்க ரெண்டு தேவிடியாளுங்களும் சுத்தமான இந்த சோபாவில் செய்யறதை இப்ப பார்க்கணும். அவளை சாப்புடுறி முண்ட!” அவன் குரல் கொஞ்சம் கொஞ்சம் அதிகரித்தது. தேஜஸ்வினி அதை மறுத்து அந்த தீவிரத்தன்மை தாங்கமுடியாமல் தலையாட்டினாள். நான் சட்டென்று அவள் முகத்தை என் கைகளில் பிடித்தேன், கண்களால் இதெல்லாம் சரியாகிவிடுமென்று அவளிடம் சொல்லிவிடத் துடித்தேன். மிகப்பெரிய பொய் தான், இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவளுடைய கைகளில் ஒன்று என் கைகளைப் பற்றிக் கொண்டது அவள் தன் முகத்தை என் தோள்களில் புதைத்தாள். அந்தக் கணம் அவன் என் கனவுகளில் கற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பொழுதை எனக்களித்தான் நிஜத்தில். அவனிடம் அதை மறுக்க நான் நினைக்கவில்லை.

நான் அவளை என் அருகில் பச்சை நிற தரைவிரிப்பில் கிடத்தினேன், அவளிடம் மென்மையாய் நடந்துகொள்வேன் என்கிற சத்தியத்தை என் மனதில் எடுத்தேன், அதன் மூலம் அவளுக்கும் கொஞ்சம் இதில் சந்தோஷம் கிடைக்கட்டுமே என்று நினைத்தபடி. அவள் மரத்துப்போயிருந்ததாய்ப் பட்டதெனக்கு, கண்கள் மூடியிருந்தது, அவள் யாராலும் தற்சமயம் காப்பாற்றப்பட முடியாதவளாய் தோன்றினாள். நான் குனிந்து பட்டாம்பூச்சி மலர்களைத் தொட்டு நகர்வதைப் போன்ற முத்தங்களை அவள் கழுத்தில் தோள்களில் கொடுத்தேன், அவளுடைய உதடுகளை மட்டும் தவிர்த்தபடி, ஆனால் அவள் உதட்டில் முத்தவிட வேண்டும் என்கிற ஆசை இல்லாமலில்லை. ஏனோ அது கொஞ்சம் அதிகமாகிவிடும் என்று தோன்றியது எனக்கு. அவளுக்கும் எனக்கும். அவளுடைய காம்புகள் மென்மையான கருத்த குளங்களை ஒத்திருந்தது அவளுடைய தங்க நிற மார்புகளில். மேலிருந்து அவற்றை நக்கத் தொடங்கினேன், அவைகள் விரைப்படவதை என் நாக்கில் உணரமுடியும் வரை. அவள் கொஞ்சமாய் அசையத் தொடங்கினாள், ஆனால் அவளுடைய அசைவு என்னை மேலும் அந்த புதிரான இரவில் குழப்பத்திலேயே ஆழ்த்தியது. அவள் என் செயல்களுக்கு எதிராய் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. என்னுடைய அவள் மீதான மென்மையான காதலுக்கு அந்த இரவு புரிபடவேயில்லை, அவள் அந்த இரவில் என்னை மட்டும் நம்பி அவளை நான் காப்பாற்றுவேன் என்று நினைத்திருக்க வேண்டும்.

அவன் விடும் மூச்சுக்காற்று அந்த அறையில் பலமாய்க் கேட்டது, நான் அவளுடைய இனிப்பான உடலில் கொஞ்சம் கொஞ்சமாய் கீழிறங்கி முத்தம் கொடுக்கும் பொழுது முதல் முனகல் அவனிடமிருந்து வந்தது. அது விரக்தியின் காரணமாய் வந்த குரல், எனக்கு ஒரு நிமிடம் ஆச்சர்யமாக இருந்தது அவனால் அவனைக் கட்டுப் படுத்தி விடமுடியுமா என்று. ஆனால் எனக்குக் கீழிருந்து வரும் அவளுடைய வாசனையில் நான் மயங்கிப் போயிருந்தேன், என் மார்புகள் அவளுடைய நீண்ட கால்களில் உரசியது பொழுதில். அவளுடைய சுருளான முடி என் கன்னத்தில் உரசியது. இதில் மிகப்பெரிய சந்தோஷமே அவள் உடல் எனக்கு பதிலளித்துக் கொண்டிருந்தது, என் தொடதல்களுக்கு, என் நாக்கிற்கு, என் முத்தத்திற்கு. அவள் எனக்குக்கீழே நெளிந்து கொண்டிருந்தாள், அவளது விரல்களை காற்றில் பின்னிக்கொண்டிருந்தாள், அவளது நகம் என் கழுத்தில் கீறிக்கொண்டிருந்தது. விளக்கு அப்பொழுது காட்டுத்தனமாய் ஒளிர்ந்து மறைந்து கொண்டிருந்தது, அவள் உச்சமடைந்து என் வாயில் வந்தாள், நாங்கள் இருவரும் ஒன்றாய் சிணுங்கி அடங்கினோம்.

தேஜஸ்வினி ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தாள் என் உடலடியில், அவள் பெருமூச்சு சப்தம் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. என்னால் அவனைக் காணமுடியவில்லை, பாதி எழுந்து தலையைத் திருப்பிப் பார்த்தேன். அங்கே இருந்த வெளிச்சத்தில் அவன் அங்கே இல்லை என்பது தெளிவானது, அவன் விட்டுச் சென்ற கத்தி மட்டும் அங்கே அநாதையாக இருந்தது. அவன் கதவை சாத்திவிட்டுச் சென்றிருந்தான். சட்டென்று அந்தக் கத்தியை எடுத்து அவள் உடலில் வைத்து, அந்த இரவை முழுமையாக எனதாக்கிக் கொள்ள நினைத்தேன், அவளை நான் நினைக்கும் அத்தனையையும் செய்ய வற்புறுத்தி.

அப்படிச் செய்தால் காலம் முழுக்க அவள் என்னை வெறுப்பாள் என்ற நினைப்பு வந்ததும், என் தலையை ஆட்டி எனக்கே மறுப்பைச் சொல்லி, அந்த முட்டாள்த்தனமான சிந்தனையை வெளியேற்றினேன். அதுவரை நடந்ததே போதும் என்கிற எண்ணம் வந்தது, அவளுடைய நம்பிக்கை தான் முக்கியம். அவள் உடல் என்னுடன் ஒன்றானதை, அவள் என்னுடன் பின்னிப் பிணைந்தது, மற்றும் அந்த நாள் அவளுக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றிய கருத்தில் மாற்றம் ஏற்படுத்தியிருக்கும் என்று நினைத்தேன். இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் தான் அவளுக்கு அதில் நம்பிக்கை வர என்றாலுமே கூட. நான் திரும்பி மீண்டும் அவளுடன் படுத்துக் கொண்டேன், அவள் எப்படியோ அதிசயமாய் தூங்கிக் கொண்டிருந்தாள், நானும் அவளுடன் சேர்ந்து கொள்ள நினைத்தேன்.

போன் அலறியது, நான் எடுத்தேன் பேசப்போவது யாருடன் என்று தெரிந்து.

“என்னை மன்னித்துவிடு” அவன் சொன்னான் “நான் அந்த அளவிற்குப் போகும்னு நினைக்கலை. கத்தியுமே கூட தேவையில்லை தான், நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருந்தீங்க அதனால் தான் என்னால கட்டுப்படுத்த முடியலை” பின்னர் வருந்தியபடி “நான் உனக்கு ஒரு ஷர்ட் வாங்கித் தந்துடுறேன்” என்றான்.

“மன்னிச்சிட்டேன்” என்றேன்.

எப்படி அவனை நான் தப்பு சொல்ல முடியும், அவனை அழைத்ததே நான் தானே. நான் மீண்டும் படுக்கைக்குச் சென்று அவளை என் அணைப்பில் வைத்துக் கொண்டேன். அவள் கனவில் முணுமுணுத்தபடியே என்னைக் கட்டிப் பிடித்தாள். நான் அவளை பாதுகாக்கும் எண்ணத்துடன் கட்டிப்பிடித்தேன், வேறு யாரும் அவளை வருத்தப்படும் படி செய்ய முடியாதவாறு.

------------------------------------------------------------

சும்மா ஒரு அடல்ஸ் ஒன்லி கதை, அப்படியே ஆங்கிலத்தில் பார்த்து தமிழில் மொழி பெயர்த்தது. ட்ரான்ஸ்லேஷன் வாசனை வரலாம். ஆனால் ஆங்கிலத்தில் இந்தக் கதை படித்ததிலிருந்து இதை மாத்தணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கங்கை கொண்ட சோழபுரம் சோழர்கள்

இராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு

சில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I will turn entire Korean Peninsula into ashes போன்ற வார்த்தைகள் மகிழ்ச்சியளித்துக் கொண்டுதான் இருந்தன. அதே போல் தான் இந்தியாவின் மீது பாகிஸ்தான் அணுஆயுதப் பிரயோகம் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் என்ற வார்த்தைகளும். ஆனால் இன்று சாம்பலாக்குவதில் அத்தனை விருப்பம் இல்லை. ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை என்று அடிக்கப்படும் ஜல்லிகளால் இந்தப் பதிவு எழுதப்படவேண்டிய ஆர்வம் எழுந்தது.

இந்திய மன்னர்கள் அன்னிய நாடுகளை ஆக்கிரமித்ததில்லை என்று பெருமை பொங்க பேச்சுப்போட்டிகளில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய கடற்படை தற்போதைய சிங்கை, மலேசியா நாடுகளைத் தாக்கி போரில் வென்று ஏகப்பட்ட வளங்களை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். நேரடியாக சோழர் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் சோழப் பேரரசுக்கு கீழ் வைத்திருந்தார்கள் இந்த நாடுகளை. ஏன் இலங்கை கூட ரொம்ப காலம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது இலங்கை அரசனை குடும்பத்துடன் கைதுசெய்து கொண்டுவந்து வைத்திருந்திருக்கிறார்கள்.

முதன் முதலில் இந்திய அரசன் ஒருவன், இந்தியாவிற்கு வெளியே பெரும்படையுடன் படையெடுத்தான் என்றால் அது இராஜேந்திரன் தான். இராஜேந்திரனுடைய காலம் தான் விஜயாலய சோழன் உருவாக்கிய சோழப்பேரரசின் பொற்காலம். இராஜேந்திரனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் யாரும் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியவில்லை. ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரத்தை(தற்போதைய ஜெயங்கொண்டம் பகுதி) தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள். இதனுடன் ஒப்பிட்டால் விஜயாலன் தொடங்கி இராஜராஜ சோழன் வரையான மன்னர்கள் 150 ஆண்டுகள் தான் தஞ்சையில் ஆட்சி செய்திருக்கிறார்கள்(தஞ்சை முன்னர் இருந்து வந்தது என்றாலும் விஜயாலனுக்குப் பிறகே பெரும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.) ஆனால் இன்று இராஜேந்திர சோழன் தொடங்கி இராஜாதிராஜ சோழன், இராஜேந்திர சோழன் II, வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் II, இராஜராஜ சோழன் II, இராஜாதிராஜ சோழன் II, குலோத்துங்க சோழன் III, இராஜராஜ சோழன் III என பதினோரு மன்னர்கள் ஆண்ட அரண்மனை மண்மேடாக இருக்கிறது. :(


மாளிகைமேடு தற்போது




சுற்றுப்பட்டு கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள்


கிடைத்த கல்வெட்டு ஒன்று - காலம் கிபி 1100


மாளிகைமேட்டைப் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் குறிப்பு

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 1980 களில் ஜெயங்கொண்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு இப்பொழுது மாளிகைபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் இராஜேந்திரன் வழிவந்த சோழர்களின் அரண்மனை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அகழ்வாராய்ச்சியை தொடரலாம் நிறுத்திவிட்டார்கள். தற்பொழுது ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான(ஆய்வெல்லாம் முன்னமே செய்துவிட்டார்களாம்! இப்ப ரோடு ரொம்ப சீரியஸா போடுறாங்க)முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னம் அரண்மனையும் ஏரியும் இருந்த இடத்தில் ஏதும் ஆராய்ச்சி செய்வார்களா இல்லை அப்படியே விட்டுவிட்டு பழப்பு நிலக்கரி எடுக்கத்தொடங்குவார்களா தெரியவில்லை.

மாளிகைமேடு(மாளிகைபுரம்) என்றழைக்கப்படும் இராஜேந்திரனின் அரண்மனையில் இருந்து கோவிலுக்கு சென்று வர சுரங்கவழியொன்று இருந்ததாகவும் சொல்கிறார்கள். அரண்மனை அகழ்வாராய்ச்சியின் பொழுது கரும்குழவிகள் வந்ததால் பாதையை மண்போட்டு மூடிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இவை கட்டுக்கதைகளாக இருக்கவும் வாய்ப்புண்டு, திருச்சி மலைக்கோட்டையில் இருந்து மலைக்கோவிலுக்கு(திருவெறும்பூர்) கூட சுரங்கவழியுண்டு என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பகுதியின் எங்கு தோண்டினாலும் சிலைகளும் கல்வெட்டுக்களும்(!!!) கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் செலவிட்டு அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் என்பது எல்லோருடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.

இனி இராஜேந்திர சோழன் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் என்று நான் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவற்றை கீழே தொகுக்கிறேன். இராஜேந்திர சோழன் பற்றி எழுத உதவியது ஆங்கில விக்கிபீடியா; கங்கைகொண்ட சோழபுரம் சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி துணை கொண்டு எழுதியது. இறுதியில் நான் சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்த பொழுது எடுத்த புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.

இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

இணை அரசனாக நிர்வகித்தல்

இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.

முடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும்

இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

படையெடுப்பு - தொடக்க காலம்
சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.

ஈழத்தின் மீதான படையெடுப்பு
முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக] கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மிது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன் '''மஹிந்தா V''' பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.

பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு

ஈழப்படையெடுப்பைத தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.

இராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.

சாளுக்கிய படையெடுப்பு

இராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும், பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.

இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.

கங்கையை நோக்கிய படையெடுப்பு
மேலை கீளைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.

கடல்கடந்த படையெடுப்புக்கள்

இராஜேந்திரனின் 14-ம் ஆண்டு ஆட்சிக்காலத்திற்கு முன் கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது என்றால், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் பெண்மையின் மென்மையும் அழகும் உள்ளத்தைக் கவருகிறது. தஞ்சைக் கோயில் வீரத்தன்மைகளும், ஆண்களுக்குரிய கம்பீரமும் கங்கை கொண்டை சோழபுரத்தில் இல்லை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு என்று தனித்த சில கவர்ச்சிகள் உள்ளன.

ஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுவரம். விளைவுகளில் காணப்படும் இந்த வேறுபாட்டுக்கு ஒரு காரணம், விமானத்தின் அமைப்பில் நேர் கோடுகளுக்குப் பதிலாக நெளிவுகள் கையாளப்பட்டிருப்பது தான். பொதுவாக தஞ்சாவூரைவிட இங்கு பொலிவுபடுத்துவதில் அக்கறை காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இது கோயில்களாகவும் விளங்கியது. அதே நேரத்தில் வல்லமை பொருந்திய பெரிய கோட்டையாகவும் சிறந்திருந்தது. கோயிலில் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரண் இருக்கிறது. மேற்கே ஒரு சிறு அரண் இருக்கிறது; 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. தஞ்சாவூரில் போல, இங்கேயும் இந்த இடைவெளியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணையும் கருத்தையும் கவரும் துவார பாலகர்களுடன், படிக்கட்டுகளுடன் மிளிர்கின்றன.

மெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்து, கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல், மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது, தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்லுகிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.

மற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதி, மண்டபத்தின் மேலே கூரை எழுப்பி, அதற்கும் விமனத்திற்கும் இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.

விமானத்தின் உயரம் 160 அடி. எனவே, இது தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும், விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம், கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள், இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போல, இங்கும், இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரில் போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.

இது கட்டடக் கலையின் புதிய சாதனை எனலாம். கோபுரத்தின் கோணங்களில் உட்குழிவான வரைவுகளிலும் அதன் பக்கங்களிலும் உள்ளே வைத்து மூடப்பட்ட வடிவு விளிம்புகளிலும் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவைதான், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலுக்குப் பெண்ணியல்பு ஊட்டுவன. உச்சிப் பகுதியில் இப்படி அழகுபடுத்தப் பட்டிருப்பது, பெண்கள் சீவிச் சிங்காரிப்பது போன்றது. கூடுகளின் நான்கு "சைத்தியங்கள்" பறவைகளின் இறகுகள் போல உள்ளன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, முற்றிலும் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் இந்த அரிய படைப்பில் நுகருகிறோம்.(பெர்சின் பிரவுன்). தஞ்சாவூரைப் போல, இங்கும் மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும், சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது.

தேவிக்கு தனிக்கோயில்

இது தவிர, அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டப்பட்டிருப்பது கவனத்திற்கு உரியது. இறைவனுடைய கோயிலைவிட அம்மன் கோயில் தான் தஞ்சாவூரைப் பின்பற்றிக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லலாம். மேலும், கங்கை கொண்ட சோழ புரத்தில் இறைவன் கோயில், அம்மன் கோயில் இரண்டுமே ஒரே காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று.

சோழர் கலையின் இறுதிக் காலத்திற்கு முன்னான, சில பொதுவான வளர்ச்சிகளுள் முக்கியமாக அம்மனுக்கு தனிக் கோயில் கட்டப்பட்டதை காணலாம். தேவியை, தமிழில் அம்மன் என்று சொல்வார்கள். மூலத்தானத்து தெய்வத்தின் மனைவியாக, தேவியை(அம்மனை) அந்தக் கோயிலிலேயே வழிபடுவது மரபு. ஆனால் அவளுக்கென்று தனிக் கோயில் கட்டுவது என்ற பழக்கம் முதல் தடவையாக முதலாம் இராஜராஜன் காலத்தில் ஏற்பட்டது. அப்போது 'திருகாமக் கோட்டம்' என்ற பெயர் அம்மன் சன்னதிக்கு வழங்குவதாயிற்று.

கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று. ஆனால் தஞ்சாவூரில் பெரியநாயகிக்கு உருய கோயில் 13-ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. தஞ்ச மாவட்டம், கண்டியூர் சிவன் கோயிலில் மங்களாம்பிகை சந்நிதியின் கிழக்குச் சுவரில் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், அவன் காலத்திய மற்றொரு அம்மன் கோயில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அக்கல்வெட்டில் சில குறைபாடுகள் இருப்பதால் அதை முக்கியமானதாகக் கொள்வதற்கில்லை.

முதலாம் இராஜராஜன் காலத்தில் 16-ம் ஆட்சி ஆண்டில் எண்ணாயிரத்தில்(தென் ஆற்காடு மாவட்டம்)ஏற்பட்ட கல்வெட்டு, உட்கோயில்களின் பட்டியலில் துர்க்கை கோயில் தவிர, ஸ்ரீபட்டாரகியர்(பிடாரியார்) என்று அதைக் குறிப்பிட்டிருப்பது தனித்த அம்மன் கோயிலைப் பற்றியே இருக்கக்கூடும்.

பிற்கால ஆட்சிகளில் சோழப்பேரரசின் பகுதிகளிலும் அம்மனுக்குத் தனி கோயில்கள் இருந்ததற்கும் புதுப்பித்து கட்டப்பட்டதற்கும் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டு அவருடைய ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே இருந்த கோயில்களுக்குத் திருக்காமக் கோட்டங்கள் சேர்க்கப்பட்டன அல்லது புதிய கோயில்களில் திருக்காமக் கோட்டங்கள் பெரும் பணச் செலவில் அழகுபட நிர்மாணிக்கப்பட்டன.

அது அந்தக் காலத்திய நடமுறை வழக்கமாக இருந்தது என்றும் உறுதியாகத் தெரிகிறது. திருபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு இருக்கிறது சிதம்பரம் நடராஜர் கோயில் தொகுதியிலுள்ள சிவகாம சுந்தரி கோயிலை அவன் அழகுபடச் செய்து புதிதாக தங்கத்தில் 'சுற்றாலை வளைவும்' செய்து வைத்ததாகவும் அவனே அக்கல்வெட்டில் தெரிவித்துள்ளான்.

























Read More

Share Tweet Pin It +1

37 Comments

In

தாரை தப்பட்டை

குப்பை கூளமே இல்லாமலாடா வைச்சிருக்கீங்க எவனாவது ஸ்லம்டாம் மில்லினியர் படம் எடுத்தா ஆரம்பிச்சிடுவானுங்க சேரியைப் படமெடுக்கிறான்னு. சேரியே இல்லாமலா வைச்சிருக்கீங்க, படமெடுத்தா என்னடா குறையும். இந்தியாமேல குத்தம் சொல்றாங்கன்னு இப்ப தமிழ்நாட்டு மேல குத்தமா? இதெல்லாம் இல்லாமலேயே இருக்கு ஊரில. ஏன் எடுக்கக்கூடாது படம், எல்லாத்தையும் பத்தி எடுக்கலாம். நான் கடவுள் எடுத்தா பிரச்சனை, தார தப்பட்டைப் பத்தி எடுத்தா பிரச்சனை. உண்மையை படமா எடுத்தா பிரச்சனையா? இந்தப்படத்தில் நான் பிரச்சனையில்லை என்று சொல்லவில்லை ஆனால் அது கலை சார்ந்த பிரச்சனை. இதைத்தாண்டியும் எடுத்திருக்கவேண்டும் என்பதைப் பற்றிய பிரச்சனை. ஆனா இதுக்கே டங்குவார அவுக்குறானுங்க. பாலா இதுக்கு மேல எடுத்துட்டாலும்.

அதான் ரஜினி முருகன், வவாசங்கம்னெல்லாம் படம் எடுக்குறானுங்களே. அதைக் கொண்டாடிட்டுப் போங்க. பாலாவைக் குத்தம் சொல்லாதீங்க. இதில மனநோயாளியாம், டிவிட்டரில் பலது பார்த்தேன். இதைப்பத்தி பேச விருப்பமில்லை.

இது டிவிட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே எழுதியது

”அம்மணமா கூட ஆடுவேன்னு” வரு சொன்னது இளையராஜா ஒரு பிட்டுப் போட்டிருக்காரு பாரு. அதுக்காகத்தான் அந்தாள் மியூஸிக் போடக்கூடாது இந்தப்படத்துக்கு.

 ஒக்காளி சந்தோஷ் நாராயண்னுக்கு பாலா கொடுத்திருந்தா, தூக்கி நிறுத்தியிருந்துருப்பான் மனுஷன். பாலாய்ப்போன நீஎபொவ படம் போல் கொலையா கொல்றார். :(

 ஏன் பாலா குத்தவைச்சு அத்தன காலம் ஆனபின்னாடியும், ஆச மாமன் இருந்தும், கன்னியா இருக்கணும். பாலாவோட பிரச்சனைகளில் முக்கியமான ஒன்னு இது.

 Anurag Kashyap இந்தப்புள்ளியை அநாயாசமாய்க் கடக்கிறார். தமிழில் குலால் எல்லாம் செய்யவே முடியாது. அங்க தான் நிக்கிறார் அனுராக்.

 ஹீரோயினைக் குடிக்க வைத்திருக்கிறார், இன்னும் சில படத்தில் கன்னிக் கழிய வைச்சிருவார்னு நினைக்கிறேன். இளையராஜாவை ஒழிச்சா சரியாய்டும்.

 ஆனா பாலா தொடுற புள்ளியை தொடறதுக்கு கூட தமிழில் ஆள் கிடையாது. இருந்த ஒரு செல்வராகவனையும் காயடிச்சிட்டானுங்க.

 கரகாட்டக்காரன் படத்தில் ஒரிஜினல் கரகாட்ட சீன், கோவை சரளா ஒரு அறிமுகத்தில் பாவாடையைத் தூக்கிக்காட்டுற சீன் தான்.

 பாலாவுக்கு எடுக்கத்தெரியாதுன்னு இல்லை, சேது படமே மூணு ரீலு தான்னு சொன்ன உத்தமன்டா பாலா. பாவம் பார்க்கிறார். இல்லாட்டி காயடிச்சிட மாட்டீங்க??

 வரு கல்யாணத்துக்கு வரும் பேக்ரவுண்ட் சாங்க், படத்தை drag பண்ணுது. மனதில் சந்தோஷ் நாராயணன் இசை ஓடுது. யாராவது ரீமிக்ஸ் பண்ணி ரிலீஸ் பண்ணனும்.

இந்தப்படத்துக்கு எவனாவது இளையராஜாவுக்கு அவார்ட் கொடுக்கட்டும். டேய் மியூஸிக்காடா இது.

என்னுடைய பெரும் பிரச்சனை இந்தப் படத்தின் இசை. படம் ஒரு ஜானரில் போய்க்கொண்டிருக்கும் பொழுது இசை  வழுவாய் தரம் இறக்குகிறது. இந்தப்படத்தை இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்தியிருக்க வேண்டிய இசை, தேம்பி நிற்கிறது. அது என்னுடைய ஒரு பிரச்சனை, ஆனால் பாலா கூட ஒப்புக்கொள்ளமாட்டார். ஆனால் அதுதான் வாஸ்தவம். வரலட்சுமி எல்லாம் வேற லெவல். இதுவரை இந்தமாதிரியான ஒரு சசிகுமாரை நான் சினிமாவில் பார்த்ததில்லை. புதுசா ஆட்களை உருவாக்குகிறார், அவர்களிடமிருந்தே. இந்த மாதிரி படமெடுப்பதற்கான “பால்ஸ்” பாலாவுக்கு மட்டும் தான் உண்டு.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In புத்தகங்கள்

பயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்

பொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் பாலகுமாரன் மேல் அந்தச் சமயத்தில் நான் வைத்திருந்த அபிரிமிதமான பற்று, என் பதின்ம வயது, பாலகுமாரனின் எழுத்து இப்படி நிறைய சொல்லலாம். சொல்லப்போனால் இந்தக் கதை படித்துவிட்டு கல்யாணம் பண்ணினால் விதவைப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துப்பேன் என்று உறுதிமொழி எடுத்ததெல்லாம் உண்டு. ஆனால் பாலகுமாரனின் வெற்றி என்று அதைத்தான் சொல்வேன் வாழைப்பழத்துக்குள் ஊசி ஏற்றுவதைப் போல் அதை அவர் செய்வார். சொல்லப்போனால் சின்ன வயதில் இருந்த பெண்கள் பற்றிய பொறாமை உணர்ச்சியைப் போட்டு பூட்டிவைத்தவர் பாலா. அவர் பெண்களைப் பற்றி எழுதுவது அவ்வளவு இயல்பாய் வருவதாய் எனக்குத் தோன்றியிருக்கிறது.

சொல்லப்போனால் நான் இன்று வரை சிகரெட், குடி பழக்கத்தை தொடாததற்கு நிச்சயம் பாலாவை ஒரு காரணமாகச் சொல்லலாம். அந்தக் காலத்தில் எல்லாம் அப்படி ஒரு பிரமை அவர் எழுத்தின் மேல்; அழுக்கான என்னை கால்களைச் சுத்தப்படுத்துவது என்று சொல்லி தொடங்கிவைத்தது கூட அவர்தான். எங்க சிவராமன் சார் சொல்வார் இங்கிலாந்தில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள் அவளுக்கு முன் ஆண்கள் உட்கார்ந்திருக்க மாட்டார்கள் என்று இதை மேனர்ஸாக அவர்கள் கருதுவார்கள் என்று. ஆனால் இதைப் போல் பெண்களைப் பற்றி புரியவைத்தது பாலாதான். மாற்றுக்கருத்து இல்லை.

எங்கள் வீடுகளில் பாலா பிராமணர்களை எதிர்த்து அவர்கள் செய்யும் கெட்டதையெல்லாம் எழுதுகிறார் என்பதில் தான் அவர்களுக்கு பிரியமே ஆரம்பித்தது என்று சொல்லலாம். இன்றும் உடையாரைப் பிடித்து தொங்கிக் கொண்டு அவர் அங்கேயும் பிராமணர்களின் தவறுகளை எழுதுறார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னமோ அவர் ஆரம்பக்காலக்கட்டங்கள் ஏதோ தேவை காரணமாக தன்னை இகழந்துகொண்டதாகவும் ஆனால் பின்காலங்களின் தேவையால் தன் மீது அப்படிப்பட்ட பிம்பம் விழுவதை தடுக்கவே இப்படி பொய்யாய் சாமியார் வேஷம் கட்டுகிறாரோ என்ற சந்தேகம். அவர் ரொம்பவும் கீழ் வரைக்கும் போனதை எழுதியதால் மீண்டும் அதைச் சரிசெய்யும் சமயத்தில் சாதாரணமாக இருப்பதைக் காட்டமுடியாமல்; அதற்கும் மேல்நிலை என்ற ஒன்றை அவர் வலிந்து அவர் மேல் திணித்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.

பல சமயங்களில் அவருடைய கதைகளை மீளப்படிக்கும் பொழுது அவர் தான் மணந்த இருதாரத்தை Defend செய்வதற்காகத்தான் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுகிறாரோ என்று கூட படும் எனக்கு. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். எனக்குத் தெரிந்து நான் பாலகுமாரன் சிபாரிசு செய்து படித்த பல பெண்களுக்கு அவர் எழுத்துக்களின் மீது விருப்பம் வரவில்லை. எனக்கு காரணம் தெரியாது; ஒருவேளை ஆண்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் இருதார மணம் என்பது கொள்கை அளவில் கூட பெண்களுக்கு பிடித்தமானதாக இல்லாததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ பறந்துவிட்டது பதிவு. பயணிகள் கவனிக்கவும் அவருடைய இந்த எந்தவிதமான சமரசத்திற்கும் உள்ளாகாத எழுத்து என்று நினைக்கிறேன். ஆனாலும் அந்தக் காலத்தில் ஆண் ஒருவன் வாசக்டமி செய்துகொள்வதாகச் சொல்லி முடித்தது பெண்கள் மத்தியில் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்றோ இல்லை அதை ஒத்ததற்கான ஸ்டன்ட்டோ என்று படுகிறது எனக்கு.

நாவல்கள் எழுதுவதில் இருக்கும் டெம்ப்ளேட் முதலில் எனக்கு பிடிபடவில்லை; ஆனால் இப்பொழுது அவருடைய எந்த நாவலை எடுத்தாலும் முதலில் தென்படுவது அவருடைய டெம்ப்ளேட் தான். ஆனந்தவிகடனில் இந்தக் கதை தொடர்கதையாக வந்தது என்று நினைக்கிறேன் ஆரம்பத்தில் ஸ்டீபன் என்றொரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அதை ஹீரோ போல் கொண்டுசென்றிருப்பார். ஆனால் சட்டென்று சத்தியநாராயணன் அறிமுகம் ஆனதும் ஸ்டீபன் கதையில் இருந்து மறைந்துவிடுவார். இது எதனால் அப்படி நிகழ்ந்தது என்று தெரியாது. ஒருவேளை ஒருவரை மையமாக வைத்து கதை சொல்லும் வழக்கத்தை பாலகுமாரன் கழற்றி எறிய முயன்றிருக்கவேண்டும். எனக்கென்னமோ அந்த நாவல் சத்தியநாரயணா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதும் தான் சூடுபிடிப்பதாகப்படுகிறது.

அதே போல் நாவலின் background எப்பொழுதும் பாலகுமாரன் கதைகளில் மாறிக்கொண்டேயிருக்கும். அதற்கு அவர் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு விவரம் சேகரிப்பார் என்று நினைக்கிறேன். இது Sidney Sheltonன் அணுகுமுறை எனக்கு பாலகுமாரன் நாவல்களைத் தொடர்ந்து படித்துவிட்டு சட்டென்று சிட்னியின் நாவல் படிக்க முதலில் பட்டது இதுதான். Sidneyன் த மாஸ்டர் ஆப் த கேமை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், அதில் சிட்னி ஷெல்டன் மொத்தம் ஐந்து தலைமுறையை அலேக்காக வைரத்தில் வைத்து கொடுத்திருப்பார். அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தோன்றும் இதில் பாலகுமாரன் விமானநிலையத்தை மையமாக வைத்து நாவல் அமைத்திருப்பார்.

அந்த விமானநிலையத்தைப் பற்றிய விவரிப்புக்கள் கொஞ்சம் போல் ஒட்டாமல் இருப்பதாக எனக்கு இப்பொழுது படுகிறது. ஆனால் சட்டென்று விரியும் கதையில் எங்கேயும் பாலகுமாரன் சட்னியில் அரைபடாமல் தெரியும் பொட்டுக்கடலை போல் தெரியமாட்டார் என்பது தான் விசேஷம். கவனிக்கவும் இது அவருடைய மற்ற கதைகளுடனான ஒப்பீடே, எனக்கு என்னவோ இரும்புக் குதிரைகளைவிடவும் மெர்குரிப் பூக்களை விடவும் பயணிகள் கவனிக்கவும் பிடித்திருந்தது.

எனக்கென்னமோ பாலகுமாரன் தமிழ் சினிமாக்கள் சாதிக்காததை அந்த நாவலில் சாதித்திருப்பதாக தோன்றும்; எப்படியென்றால் ஒரு கன்னிகழியாத ஆண்(சொல்லகூடாதோ!) திருமணம் நடந்து பிள்ளை பிறந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாகக் காட்டியிருப்பார். பெரும்பாலான சமயங்களில் அந்தப் பையன் ஏற்கனவே கழிந்தவனாகவேயிருப்பான். இல்லை ஏதாவது கதை சொல்லி அந்தப் பெண் கன்னிகழியாதாவள் என்றொன்றைக் கொண்டு வருவார்கள். நான் மோகமுள் எல்லாம் படித்தது பிறகுதான்.

சரி கதைக்கு வருவோம், ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் விமானநிலையத்தில் பணி செய்பவர்கள். ஜார்ஜினா ஒரு குழந்தையுடன் வசிக்கும் இளம் விதவை. ஜார்ஜினாவின் கணவன் வின்சென்ட் விமானநிலையத்தில் வேலைசெய்து பணியில் இருக்கும் பொழுது நடைபெறும் குண்டுவெடிப்பால் இறந்துவிட ஜார்ஜினாவிற்கு அந்த உத்யோகம் கிடைக்கிறது. சத்தியநாராயணாவும் வின்சென்ட்டும் நண்பர்கள் சத்தியநாராயணன் வின்சென் ட்டின் மரணத்திற்கே தான் தான் காரணம் என்று நினைக்கிறான் - (ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளக்கூடிய விளக்கமாக எனக்குப்பட்ட இடம் இது) - அதனால் அவனால் ஜார்ஜினாவை வின்சென்ட் இறந்த பிறகு பார்க்கும் பொழுதெல்லாம் மனக்குழப்பம் உருவாகிறது. பின்னர் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எதிர்பாராதவிதமாக காதலில் விழுவதும் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்யும் பொழுது வரும் பிரச்சனையும் அதை எப்படித் தீர்த்து கல்யாணம் செய்துகொள்கிறார்கள் என்பதும் தான் கதை. சொல்லப்போனால் கதையை அப்படியே ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கலாம் தான். ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் சூப்பராயிருக்கும். இதில் எனக்கு மிகவும் பிடித்தது ஜார்ஜினாவும் சத்திநாராயணாவும் காதலில் விழும் பொழுது நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள். உரைநடை ரொம்பவும் நகைச்சுவையாக இருக்கும் சிரித்துக்கொண்டே படிக்கலாம். இந்த உரையாடல் என்னைப் பித்துபிடித்து அலையச் செய்தது என்றால் அது மிகையல்ல. எத்தனை தடவைகள் அந்த உரையாடல்களைப் படித்திருப்பேன் என்று நினைவில் இல்லை. என்னுடைய ஆரம்பகால கதைகளில்(குறிப்பாக - ஒரு காதல் கதை) பாலாவின் உரையாடல் தாக்கம் இருப்பதாக நான் நினைத்திருக்கிறேன் அதுவும் பயணிகள் கவனிக்கவுமின் தாக்கம். நான் டெல்லியில் இருந்த சமயங்களில் உருப்போட்டுக்கொண்டிருந்த உரையாடல்கள் எழுத்தில் பார்க்க ஒன்றரை ஆண்டு ஆயிற்று. அப்படி எனக்கு மிகவும் பிடித்த உரையாடல் பயணிகள் கவனிக்கவுமில் பாலா எழுதியவை.

அதேபோல் ஜார்ஜினாவும் சத்தியநாராயணாவும் எழுதிக்கொள்ளும் கவிதை இரண்டு. பாலா சொல்லியிருப்பார் வார்த்தையைக் கோர்த்து கோர்த்து கவிதை எழுதணும் தனக்கு ஃப்ரீ ஃபோலோவா எழுதினாத்தான் பிடிக்கும் அதனால் தான் கவிதையை விட்டுட்டு நாவல் எழுத வந்ததா! ஆனால் சிறுகதையும் நாவலுமே கூட இப்ப வார்த்தை வார்த்தையா கோர்த்துத்தான் எழுதணும்னு வந்ததால பெட்டர் வார்த்தைகளை கவிதைக்காகவே கோர்த்துப்போம்னு தான் இப்பல்லாம் கொஞ்சம் தீவிரமா கவிதை எழுதுறது. இந்தக் கவிதை அந்தக்காலத்தில் எனக்குப் பிடித்திருந்த கவிதைகள் வரிசையில் நிச்சயம் இருந்த ஒன்று. ஆனால் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் உட்கார்ந்தால் இதைப்போன்ற ஒன்றை நானே எழுதிவிடுவேன்னு நினைப்பதால் அதற்கான பாலாவின் தேவையைப்பற்றிய கேள்விகள் எழுகிறது.

எதிர்பாராதவிதமாக சத்தியநாராயணா அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவனுக்காக ப்ரார்த்தனை செய்யவரும் ஜார்ஜினாவை - சத்தி இயலாமையால் திட்டிவிட்டு எழுதுவதாய் இருக்கும் இந்தக் கவிதை.

என் மனசுக்குள்ளே சில நாய்கள்
புரண்டு கிடக்கும் எனைத் தின்று
என்றோ மூடிய மனக்கதவை
எவரும் திறக்க வரவேண்டாம்
திறக்க நினைக்கும் ஒற்றைகை
ஓசை கேட்டு அவை நிமிரும்
நெருங்க காலடி சத்தத்தில்
நிமிர்ந்து ரத்தப் பல் காட்டும்
என்னைத் தின்ற வெறி நாய்கள்
உங்களைத் துரத்த ஓடிவரும்
நானே கதவைத் திறந்தாலும்
நாய்கள் மடக்கும் வருபவரை
விதியெனும் கிழவன் எனக்குள்ளே
தள்ளிய நாய்களில் நானில்லை
நாய்கள் எந்தன் தலைமேலே
நானோ நாய்களின் காலின் கீழ்
ஒன்றாய் பெருகுது மனத்தீவில்
என்னைத் தின்று கண்மூடி
புரண்டு கிடக்குது என்னுள்ளே
நான் யாரிடம் பேச முயன்றாலும்
இந்நாய்களின் ஊளைத் தடுக்கிறது
என்னுள் விழுந்த இந்நாய்கள்
நான் சாகும் நேரம் தூங்கிவிடும்
அந்தக் கணத்தில் கைகுவித்து
கண்வழி கேட்பேன் மன்னிப்பை
நீர் இருக்கும் இடத்தின் திசை நோக்கி
நானே நானாய் கிடந்தபடி

சத்தி எழுதிய கவிதைக்கு பதிலாய் இதை ஜார்ஜினா எழுதுவாள்.

வெள்ளை அங்கி சுருள் தாடி
ஒரு யூதன் வந்தான் இவ்வுலகில்
வெளிச்சம் முகுந்த வானத்தின்
ஒளியைத் தேக்கி தன் முகத்தில்
மெள்ள நுழைந்தான் பூவுலகில்
கன்னி மேரியின் சிசுவாக,
உலகம் முழுவதும் பல நாய்கள்
மறித்துக் கேட்டன அவனெதிரே,
எதற்கு வந்தீர் இவ்விடத்தில்
என்ன வேலை மானுடத்தில்
மெள்ள சிரித்து யூதமகன்
கரத்தை நீட்ட அவை விலகும்
மனிதன் எங்கள் முழுப்படைப்பு
மக்கள் எங்கள் குழந்தைகள்
உருவம் அற்ற ஒளிப்பிழம்பாய்
இருக்கும் எங்கள் தேவபிதா
உருக்கிச் செய்த மானுடத்தை
நீங்கள் ஆளவிடமாட்டேன்
உலகம் என்னும் ஆலயத்தில்
ஒவ்வொரு மனிதரும் தீபங்கள்
உருட்டிக் கவிழ்க்க நீர் முயன்றால்
உங்களைச் சும்மா விடமாட்டேன்
உரத்துக் கத்தின அந்நாய்கள்
பயந்து நடுங்கின தீபங்கள்
நாய்களை உறுத்து பார்த்தபடி
மெள்ளத் திறந்தான் ஆலயத்தை
இடுப்புக் கயிற்றை அவிழ்த்தெடுத்து
சொடுக்கிப் போட்டான் புவியதிர
ஓடிப்போச்சு நாயெல்லாம்
தீபங்கள் எல்லாம் மகிழ்ந்தாட
ஒற்றைத் தீபம் தலை வணங்கி
யூதனை நோக்கி வினவியது
என்னைப் படைத்த கடவுள்தான்
நாயைப் படைத்தான் இவ்வுலகில்
எதிரெதிர் விஷயம் படைத்துவிட்டு
எதற்கு வந்தீர் விளையாட
துக்கத்தோடு புலம்பியதை
குனிந்து பார்த்தான் கனிவாக
மெள்ளத் திரியைத் தூண்டிவிட்டு
யூதன் சொன்னான் பொதுவாக
நாய்கள் குரைக்கா திருந்திருப்பின்
எம்மை விரும்பி அழப்பீரோ
இருளே இங்கு இல்லையெனில்
உமக்கு ஏதும் மதிப்புண்டோ
விருப்பம் என்பது முதல்கேள்வி
புரியாதிருப்பின் கேளுங்கள்
கேட்டவர்தானே வரம் பெறுவர்
தீபங்கள் வணங்கின தலை குனிந்து
ஏசு ஏசு என்றபடி என்னுள் கேட்டதை நான்
சொன்னேன்
நீயும் கேளேன் என் தோழா

ஆனால் எனக்கு பாலாவின் சத்தி வாஸக்டமி கடைசியில் செய்துகொள்வதாகச் சொல்லும் முடிவு பிடிக்கவில்லை எத்தனையோ முறை இது ஆணாதிக்க சிந்தனையாக இருக்குமோ என்று யோசித்துப்பார்த்திருக்கிறேன் விடை தெரியவில்லை. ஆனால் இப்படி மறுமணம் செய்துகொள்பவர்களுக்கு வாஸக்டமி நிச்சயமான தீர்வாய் இருக்கமுடியாதுதான். ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த பாலகுமாரனின் நாவல்களில் இது முக்கியமானது.

Read More

Share Tweet Pin It +1

30 Comments

In சிறுகதை

Mohandoss's new status message - பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

March 1, 2008

2:34 PM me: இன்னிக்கு பீச்சிற்குப் போலாமா?
aeswari: ம்ஹூம் வேண்டாம்
me: ஏன்?
2:36 PM ஏன்னு கேட்டேன்?
2:45 PM உனக்கு என்னையெல்லாம் காதலிக்கிறதே பெரிசின்னு நினைப்பு
இல்லையா?
aeswari: உன்னைக் காதலிக்கிறேன்னு எப்ப சொன்னேன்!
நீதான் அப்படி சொல்லிக்கிட்டிருக்கிற
2:50 PM r u thr?
2:52 PM ???
2:56 PM Okay I am leaving bye

காதல் உயிரை அலைக்கழிக்கும் ரகசியம் தெரிந்தும் திரும்பவும் விழுவதும் எழுவதுமாய் எத்தனையோ முறை பெண்களின் மீதான மையலில் நிலை தடுமாறியிருந்தால் பித்தம் கொள்ள வைத்தது நீ மட்டும் தான். ஒற்றை ரோஜாப்பூவை கைகளில் ஏந்திக் கொள்வதில் வரும் பெருமையாய் நினைத்து காதல் விளையாடிருக்கிறேன், பெருமைக்கான தகுதியை பெற்றுத்தருவது காதலின் வேலையில்லை என்று உணரவைத்தவள் நீ. கைகோர்த்து கடற்கரையில் நடப்பதோ, முதுகோடு மார் உரசும் பயணங்களோ காதல் இல்லை என்ற உன் தத்துவங்கள் கேட்கும் பொழுதும், நீ அருகில் இல்லாமல் இருக்கும் பொழுதும் நன்றாகத்தான் இருக்கின்றன. உள்ளத்தின் மேல் மட்டும் காதல் என்பது கட்டமைக்கப்பட்ட பொய்யாகத்தான் இருக்கமுடியும் என்று ஒப்புக்கொள்ளும் உன்னால், உன் உடல் மேல் எனக்கிருப்பது காமம் அல்ல அதுவும் காதலே என்று ஏன் புரியவில்லை.

March 3, 2008

4.11 PM raja: hi
me: hi dude :)
raja: நான் அகிலம்
4:13 PM me: சொல்லு
raja: call me
me: சரி

“சொல்லு என்ன விஷயம்”
எங்களுக்கிடையில் அப்படியொரு உரையாடல் நடக்கவேயில்லாதது போல் அவளால் பேசமுடிந்திருந்தது, “என் தங்கச்சிக்கு புனேல ஒரு இன்டர்வியூ இருக்கு! யாராவது கூட்டிக்கிட்டுப்போகணும்”
“ஏன் சுத்தி வளைக்குற நேரா என்னைக் கூட்டிக்கிட்டு போகச்சொல்லேன்”
கனத்த மௌனம் ஒற்றை வார்த்தையில் முடிந்தது “சரி” தொலைபேசியை அணைத்தேன்.

March 12, 2008

10:15 AM aeswari: thanks
me: சரி
11:36 AM aeswari: un status message kEvalamaa irukku!
me: அப்படியா?
aeswari: illaiyaa
me: மாத்தணுங்கிறியா?
aeswari: athu un ishtam
11.40 AM me: //நெஞ்சமெல்லாம் காதல் - தேகம் எல்லாம் காமம்
- உண்மை சொன்னால் என்னை - நேசிப்பாயா//
இது எப்படியிருக்கு?
11.45 AM me: இருக்கியா?
aeswari: hmm
innikku freeya irukkiyaa?
me: இருக்கேன் என்ன விஷயம்
aeswari: oru vishayam pesanum
me: வரவா?
aeswari: hmm
4.30 PM me: கிளம்பிக்கிட்டிருக்கேன்
4.32 PM aeswari: hmm

உன்னைவிட்டு இரண்டடி விலகியிருக்கும் சமயங்களில் ‘ஏன் நடிக்கிற இயல்பாய் இரேன்!’ என்றாய் இயல்பை இயல்பாய் இருக்கமுடியாமல் தான் விலகியிருந்தேன் என்பது உனக்குத் தெரியாததா! வேண்டுமென்றே சாலையோர சுடிதாரை கவனிக்கும் உச்சுக்கொட்டும் ஜொள்ளுவடிக்கும் என் சீண்டல்களைப் பொருட்படுத்தாமல் விலகியிருக்க முடிந்திருக்கிறது உன்னால், கவனிக்காதது போலவே கண்டுகொள்ளாதது போலவோ இருந்துவிடும் உனக்கு நான் முந்தைய இரவு ஒத்திகை பார்த்த உரையாடல்கள் கனவோடு கரைந்து போவது தெரிந்திருக்கப் போவதில்லை.

“முத தடவை நான் உன்கிட்ட காதல் சொன்னப்ப எப்படியிருந்தது”

எங்களுக்கிடையில் அமர்ந்திருந்த மௌனத்தை விரட்டும் ஆயுதமாய் கேள்வியொன்றைப் பொறுத்தி எய்த அம்பு அவளை அவ்வளவு சீண்டியதாகத் தெரியவில்லை. என் கேள்விக்கான அவள் பதிலைப் பற்றிய கற்பனைகளைச் சிதைத்து இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கவே கூடாது என்று நினைக்க வைக்கும் அளவிற்கு பதில் இருந்தது.

“கோபமா வந்ததுச்சு, கால்ல போட்டிருக்கிறதைக் கழட்டி ஒன்னு வைக்கணும்னு நினைச்சேன்”
இதைச் சொல்லத்தான் அத்தனை யோசித்தாயா? இல்லை இப்படி நீ போடும் நாடகங்களை நான் நம்பிவிடுவதாய் நினைக்கிறாயா?

“அப்ப நீ என்னைக் காதலிக்கவே இல்லேங்கிறியா?”

எனக்காக இல்லாவிட்டாலும் அவள் தங்கையை பத்திரமாய் புனே அழைத்துச் சென்று வந்ததால் நன்றிக்கடனாய் கடற்கரையில் என் அருகில் அமர்ந்திருந்தாள். அருகில் என்றால் நானாய் உருவாக்கிய இரண்டடி தாண்டி சுண்டல்காரன் இடைபுகுந்து கூவிச் செல்லும் தொலைவில்.

“இல்லை”

“அப்ப நமக்குள்ள இப்ப நடக்கிறது”

இதற்கு அவளுடன் சாட்டிங்கில் உரையாடிவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு மௌனம் அவள் மேல் பரவியிருந்தது. வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கலாம், கொட்டுவதற்கான அமிலத்தை அவளது உதடுகள் உருவாக்கிக் கொண்டிருக்கலாம், அங்கிருந்து விலகினால் வீட்டிற்குச் செல்ல எந்த பேருந்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்...

“நீ கன்ஸிடரேஷனில் இருக்கேங்கிறது தான் அதுக்கு அர்த்தம்.” அவள் அன்று வேதாளத்தை மட்டுமல்ல தன்னுடைய தேவதையையும் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். நான் வேதாளத்தை கழட்டிவிடவில்லையே?

“இன்னும் எத்தனை பேர் இருக்காங்க உன் கன்ஸிடரேஷனில்...?” தேவையில்லாததுதான், தவிர்த்திருக்கக் கூடியது தான், ஆனால் எங்கள் உறவில் முகமூடி ஒன்று என் முகத்தில் மாட்டப்பட்டு விடக்கூடாதென்பதில் நான் மிகவும் தெளிவாகயிருந்தேன். அவளை அத்தனை பாதிக்கவில்லை என் கேள்வி,

“நீ டைரி எழுதுவதானே?”

பேச்சை மாற்ற விரும்பினாளா தெரியாது, என் கேள்வி அவளுக்கு அயர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.

“சாரி!”

“அது பரவாயில்லை சொல்லு...?”

“ஏன் கேக்குற?” என் பதில் கேள்விக்கு அவள் பதில் சொல்லப்போவதில்லை என்பதாய் அவள், நான் அவளிடம் கேள்வியொன்றையே கேட்காதது போல் உட்கார்ந்திருந்தாள். “எழுதுவேன்”

“எனக்கு உன் டைரி வேணும். எல்லா வருஷ டைரியும் இருந்தா கொடு இல்லாட்டி கடைசி மூணு வருஷ டைரி வேணும்.”

என்ன தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாய், என்னிடம் நேரடியாய் கிடைக்காமல் அப்படியென்ன உனக்கு என் டைரியில் கிடைத்துவிடப் போகிறது.

“எதுக்கு?”

“உன்னைக் காதலிக்க” அத்தனை இனிப்பான ஒன்றை இத்தனை கசப்புணர்ச்சியுடன் சொல்ல எங்கே படித்தாய், I love you இந்த மூன்று வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று எத்தனையோ நாள் நினைத்திருக்கிறேன் ஆனால் இன்று உன்னைவிடவும் உன் வாய் உச்சரிக்கப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்கும் உன் கை தட்டப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகமாய் இருக்கிறது என்பது எனக்கே கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்.

10.10.2007
அகிலாவை வழியில் வைத்துப் பார்த்தேன், நல்லவேளை திருப்பிக்கொண்டு போகாமல் நின்று பேசினாள் ஹாஹா.

அவளும் அவளோட ட்ரெஸ்ஸிங் சென்ஸும் லூஸா ஒரு சுடிதார் போட்டுக்கொண்டால் அவள் உடலைப்பற்றிய உணர்வில்லாமல் போய்விடுமா?

சுடிதாரைத்தாண்டியும் அவள் உடலை உணர்ந்து கொண்டிருந்தேன், டைட் ஜீன்ஸும் டீஷர்ட்டும் அவளுக்கு எவ்வளவு பொறுத்தமாக இருக்கும் என்ற கற்பனையுடன். ஹாஹா.

March 15, 2008 மாலை என் அலுவலக கஃப்டேரியாவில்

“என்ன இது” முகத்தில் வீசியெறிந்த டைரி பக்கத்தை இன்னொருமுறை படித்துப் பார்த்துவிட்டு.

“ஒட்டுமொத்த டைரியில் உனக்கு இதுதான் தெரிஞ்சிதா?” மெல்லக் கேட்டேன்.
மௌனம், பேரர் கொண்டு வந்து வைத்த ஜூஸ் முழுவதையும் நான் குடித்து முடிக்கும் வரை மௌனம். அவளுடைய வார்த்தைகளை விட மௌனம் என்னை அலைக்கழிக்கக்கூடியது அவளுக்கும் அது தெரிந்து தானிருக்கும்.

“எனக்கு பயமாய் இருக்கு, என் உடம்பு மேல இருக்கிற க்ரேஸ் போனதுக்கு அப்புறம் நீ என்ன செய்வேன்னு நினைச்சா... இன்னிக்கு என் மேல் இருக்கிற க்ரேஸ் எல்லாம் நான் மறைச்சு வைச்சிருக்கிறதால - அப்படி நீ நினைக்கிறதால - நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஹாய் பாய்னு பழகியிருந்தா என்கிட்டயும் ‘மையல்’ தான் இருந்துச்சு ‘பித்தம்’ இல்லன்னு நீ போய்டுவ வேற ஒருத்திய பார்த்துக்கிட்டு இல்லையா?”

ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இத்தனை பாடுபடுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை அவளுடைய மௌனத்தை நான் எடுத்துக் கொண்டேன்,

“என் உடம்பு மேல உனக்கு இப்ப இருக்கிற க்ரேஸை என்னால் வாழ்நாள் முழுக்க காப்பாத்திக்க முடியாது. அது யாராலையும் முடியும்னு நினைக்கலை.” எத்தனை நாட்களாய் இந்த விஷயத்தை மனதில் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை.

“என் தங்கச்சி கூடயிருந்தப்பையும் நீ இப்படித்தானே நினைச்சிருப்ப?”

“அகிலா இது ஓவர், நீ பேசுறது அநாகரிகமாயிருக்கு.”

“ஆமாவா இல்லையா சொல்லு?”

“இல்லை, இப்ப என்ன தான்டி உன் பிரச்சனை, டைரியிலேர்ந்து ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு வந்து ஏன் என்னை டார்ச்சர் பண்ணுற. மீதி பக்கமெல்லாம் உன் மனசைப் பத்தி கவலைப்பட்டிருக்கேங்கிறதாலையா? இல்லை இந்த ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு என்னால் டைரியை உன்கிட்ட கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” நாங்கள் இருப்பது காஃபிடேரியா என்ற உணர்வில் மெதுவாய்க் கத்தினேன்.

“உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?” வைரமுத்துவின் வரிகளை உணரும் பொழுது இருந்த துள்ளல் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது இல்லை.

“ஆமாம்” நான் சொல்லி முடித்திருக்கவில்லை அதுவரை குடிக்கப்படாமல் இருந்த அவள் பக்கத்து ஜூஸ் முழுவதும் என்மேல் ஊற்றிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.
நான் ஸ்டேட்டஸ் மெஸேஜை மாற்றிவிட்டு காத்திருக்கிறேன்.

I live my life the way –
To keep you coming back to me –
Everything I do is for you –
So what is it that you can’t see?

Read More

Share Tweet Pin It +1

18 Comments

In கட்ட பொம்மு கட்டபொம்மன் தொண்டைமான் புதுக்கோட்டை வரலாறு

தொண்டைமான் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்தாரா?

முன்னமே கூட ஒரு முறை கட்டபொம்முவும் உண்மையும்என்ற தலைப்பில் ஒரு விவாதம் ஓடியது. அதற்கும் இந்த பதிவிற்கும் சம்மந்தம் பெரிய அளவில் இல்லையென்றாலும் லிங்க் கொடுக்கிறென்.

  
நான் விவாதம் செய்யும் பொழுது பல தடவை சொல்லும் வார்த்தைகள் தான், இன்னிக்கு இருக்கிற விஷயங்களை வைத்து தான் எதையும் தீர்மானிக்க முடியும் நாளைக்கு நடக்கப்போகும் ஒரு விஷயத்தை கன்ஸிடரேஷனில் வைத்துக் கொண்டு எதையும் செய்யமுடியாதென்று. ஆனால் இந்த வார்த்தைகள் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாகயிருக்கலாம் ஆனால் இதற்கு ஒரு அற்புதமான உதாரணம் என்று இந்த விவாதத்தைக் கூறலாம்.
என் விவாதத்தில் இந்த விஷயம் வரும் இடம் எதுவாகயிருக்குமென்றால் கடவுள் மறுப்பைப் பற்றிய வரிகளின் பொழுது, சுஜாதா அடிக்கடி சொல்லும் உலகத்தின் தோற்றம் பற்றிய அத்தனை விஷயங்களையும் அறிவியல் விவரித்து விடும் எதிலிருந்த்து என்றால் பிக் பேங்கிலிருந்து ஆனால் பிக் பேங்கிற்கு முந்தயதையும் பிங் பேங் நிகழ்ந்ததையும் தான் இனி அறிவியல் கண்டுபிடிக்க வேண்டும் என்று. இதை விவாதத்தின் பொழுது சொன்னால் உடனேயே நாளைக்கு அறிவியல் இன்றைக்கு உள்ளது என்று சொல்வதை நாளை இல்லை என்று சொல்லும் என்பார்கள். அப்பொழுது சொல்வேன் இன்றைக்கு நிரூபிக்கப்பட்ட விஷயத்தை வைத்து தான் பேசமுடியும் நாளைக்கு நிரூபிக்கப்படக்கூடிய விஷயத்தை கணக்கில் கொண்டு பேசமுடியாதென்றும். சரி என் ஜல்லியை இத்துடன் முடித்துக் கொண்டு பதிவின் விஷயத்திற்கு வரலாம்.

கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பி புதுக்கோட்டைக்கு வந்து தங்கி இருந்ததாகவும், அவரை ராஜா விஜயரகுநாதத் தொண்டைமான் நயவஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

புதுக்கோட்டைக்கு "காட்டிக்கொடுத்த ஊர்" என்று பாமர மக்கள் பேசுவதைக் கேட்கிறோம். நாடங்களிலும் கதைகளிலும் பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் "காட்டிக்கொடுத்தான் தொண்டைமான்" என்று பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதைக் காண்கிறோம்.

'காட்டிக்கொடுத்தான்' என்னும் சொல் வரலாற்று ஏடுகளில் சமீபகாலத்தில் திணிக்கப்பட்ட சொல்லாகும்! கட்டபொம்மன் பிடிபட்டது புதுகோட்டையில்தான் என்பதையும் அவரை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த விவரங்களையும் எள்ளளவும் மறுப்பதற்கில்லல. ஆனால் கட்டபொம்மனை தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொல்வது சரிதானா? காட்டிக் கொடுத்தல் என்னும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் 'Betrayal' என்பதாகும். இச்சொல்லுக்கு ஆங்கில அகராதி கீழ்க்கண்டவாறு பொருள் தருகிறது. 'To deliver into the hands of an enemy by treachery in violation of trust' அதாவது "அடைக்கலம் என்று அண்டிவந்தவரை" தனது லாப நோக்கங்களுக்காக நயவஞ்சகமாக அவரது எதிரியிடம் ஒப்படைக்கும் செயல் எனப் பொருள் கொள்ளலாம். 

கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் கேட்டு வரவில்லை. அப்படி நிகழ்ந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. அப்படி நடந்திருக்கவும் வாய்ப்பும் இல்லை. தொண்டைமான் ஆங்கிலேயரின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்ட அவர்களின் ஆதரவாளர் என்பது அப்போது நாடறிந்த செய்தி. இது கட்டபொம்மனுக்கு தெரிந்திருக்குமல்லவா? இந்நிலையில் அவர் எப்படித் தொண்டைமானிடம் பாதுகாப்பை நாடியிருக்க முடியும்? தொண்டைமானிடம் கட்டபொம்மன் அடைக்கலம் கேட்டுவந்தார் என்று சிலர் எழுதியிருப்பது அவர்களுடைய கற்பனைக் கதை!
கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு எதிரி. ஆங்கிலேயர் தொண்டைமானுக்கு நண்பர்கள். எதிரிக்கு எதிரி நண்பன். நண்பனுக்கு எதிரி எதிரி என்பது காலம் காலமாக நாம் கண்டுவரும் அரசியல் ராஜதந்திர சித்தாந்தம் அல்லவா? முடியுடைய மூவேந்தர் காலந்தொட்டு இன்றைய நாள் அரசியல் வரை, அரசியல்-பதவிப் போட்டிகள் காரணமாக தந்தையும் மகனும் சகோதரனும் சகோதரனும், உறவினரும் உறவினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரையொருவர் அழித்துக்கொண்ட நிகழ்ச்சிகள் ஏராளமாக உண்டல்லவா? இவற்றிற்கெல்லாம் அரசியல் ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொண்டைமான் ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர். கட்டபொம்மன் புதுக்கோட்டை எல்லையில் ஒளிந்திருப்பது, கலெக்டர் லூசிங்க்டன் கடிதம் எழுதிய பிறகே தொண்டைமானுக்குத் தெரியவருகிறது. (ஆங்கிலேயரின் கடிதங்கள் கூட கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்திருந்தான் என்று குறிப்பிடவில்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது) மேலாண்மை வகிப்பவருக்கு கட்டுப்பட்டு கட்டபொம்மனைக் கண்டுபிடித்து(ஆங்கிலேயரிடம்) ஒப்படைத்தது எப்படிக் காட்டிக் கொடுத்ததாகும் ஏனெனில் இது போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் அப்போதைய அரசியலில் சர்வ சாதாரணமானவை!
இதற்குப் பிறகும் ஒரு கேள்வி எழக்கூடும், கோரிக்கை விடுத்தவன் அந்நிய நாட்டான், நம்மவனை - கட்டபொம்மனைத் தொண்டைமான் பிடித்துக் கொடுக்கலாமா?

இதுபற்றி விருப்பு வெறுப்பு இன்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகும்! அக்கால அரசியல் சூழ்நிலை, வரலாற்றுப் பின்னணி தமிழகத்தை ஆண்டுவந்த சிற்றரசர்கள் மற்றும் பாளையக்காரர்களின் அரசியல் நடவடிக்கைகள், அவர்களுக்குள் இருந்த உறவு மக்களுக்கும் இதுபோன்ற ஆட்சியாளர்களுக்கும் இருந்த உறவு ஆகிய அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபின்பே இந்தச் செயலின் தன்மையை எடை போட முடியும்.
புதுக்கோட்டை ஒரு சுதந்திரமான அரசு அல்ல, ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஒரு சிற்றரசு. மேலாண்மைக்கு கட்டுண்டு கிடப்பதுதானே அரசியல் சித்தாந்தம்! ராஜா விஜயரகுநாதத் தொண்டைமானின் அப்போதைய நிலையும், அவர் வாழ்ந்த காலத்தின் அரசியல் சூழ்நிலையையும் பார்க்கிற போது கட்டபொம்மன் விஷயத்தில் அவர் செயல்பட்டவிதத்தில் எவ்விதத் தவறும் இருப்பதாக கூற முடியாது என்று ஒரு ஆய்வாளர்  கூறூகிறார்.(சிரஞ்சீவி - புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு 1980. பக்கம் 105)

தற்போதைய அரசியல் விழிப்புணர்ச்சிகளை வைத்து இன்றைக்க்கு 200 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்பிட்டு கூறுவது ஏற்புடையதாகாது. சுதந்திரம் தேசியம் நம்நாடு நம்மவர் போன்ற உணர்வுகளெல்லாம் அறியாத காலம் அது. கட்டபொம்மன் காலத்தில் ராஜா விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் தென்னாட்டில் இருந்த பெரும்பாலான சுதேச மன்னர்களும் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற எதுவும் செய்யத் தயாராக இருந்தனர். ஆங்கிலேயரைக் பிடிக்கவில்லை என்றால் டச்சுக்காரரையோ பிரெஞ்சுக் காரரையோ அண்டி உதவி வேண்டிய பரிதாபமான சூழ்நிலையுந்தான் அக்கால சுதேச மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடமும் காண்கிறோம். ஆகவே ஐரோப்பிய நாட்டினரின் தலைமையில் கீழேயே நமது நாட்டு மன்னர்களும் சிற்றரர்களும் அணி திரண்டு நிற்கவேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்தது. ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் பூலித்தேவருக்கும் கூட ஆங்கிலேயரை எதிர்க்க டச்சுக்காரர்களின் உதவியை நாடினர் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன(yusufhkhan letter to Madras Council 15.6.1760 MCC. Vol 8. P 194 - 195, 205 - 218) பேயை விரட்ட பிசாசை துணைக்கு அழைத்த கதையல்ல இது? இருப்பினும் இது போன்ற அரசியல் சூழல் அப்போது தவிர்க்க முடியாததாக இருந்தது என்பதையும் நாம் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.

சில உண்மை நிகழ்ச்சிகளையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதே காலகட்டத்தில் புதுக்கோட்டையை அடுத்துள்ள தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்களும் ஆங்கிலேயருக்கும் நிலவிய அரசியல் மேலாண்மைத் தொடர்பை சற்று காண்போம். கட்டபொம்மன் பிடிபட்டபிறகு, கட்டபொம்மனின் சகோதரர் சிவத்தையா தஞ்சாவூர் மன்னர் சரபோஜிக்கு கடிதம் எழுதி தமக்கு ஆதரவளிக்கும் படி கோருகிறார். சிவத்தையாவின் கடிதத்தைக் கொண்டுவந்த தூதுவன் அந்தக் கடிதத்தை சரபோஜியின் மந்திரியான தத்தாஜியிடம் கொடுக்க, தத்தாஜி கடிதம் கொண்டு வந்தவனை சிறையில் தள்ளிவிட்டு அக்கடிதத்தை ஆங்கிலேயருக்கு அனுப்பி வைக்கிறார். "ஆங்கிலேயருடன் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் பல ஒப்பந்தகளை செய்துகொண்டனர். ஒவ்வொரு ஒப்பந்தத்தாலும் மராட்டிய மன்னர்கள் சுய உரிமையை இழத்தல், படைக்குறைப்பு, ஆங்கிலேயப் படைகளை தஞ்சாவூரில் இருக்கச்செய்து அவற்றின் பராமரிப்பிற்குப் பெருந்தொகை அளித்தல், நவாபுடன் தொடர்புகொள்ளுங்கால் ஆங்கிலேயரின் வழியே தொடர்பு கொள்ளுதல், வெளிநாட்டுக் கொள்கையை ஆங்கிலேயரின் சொற்படியே அமைத்துக் கொள்ளுதல் ஆங்கிலேயரின் நண்பர்க்கும் பகைவர்கட்கும் இவர்களும் நண்பரும் பகைவருமாதல் ஆகிய கட்டுப்பாடுகளுக்கு இடையே அகப்படலாயினர். நேரிடையாகவொ மறைமுகமாகவோ இங்ஙனம் ஆங்கிலேயருக்கு அடங்கி அவர் வழி ஒழுகவேண்டி வந்தது(கே. எம் வெங்கடராமையா. தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும், சமுதாய வாழ்க்கையும் - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 1984 பக்கம் 59). இப்படி ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற சுதேச மன்னர்கள் தங்களுக்குள் போட்டியிடக் கொண்டு செயல்பட நிகழ்ச்சிகள் பலவாகும்.

மருது சகோதர்கள் ஆங்கிலேயரை முழு மூச்சாக எதிர்ப்பதாகக் கூறி திருச்சி பேரறிக்கையை (16.6.1801) வெளியிட்ட பின்னும்(Revenue Sundries Vol. 26/16.6.1801. pp 441 - 70) 24.7.1801ல் கவர்னர் கிளைவுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் (Revenue Consultation Vol. 110 p. 1861 - 1869) தாங்கள் ஆங்கிலேயருக்கு கட்டூப்பட்டு கிஸ்தி செலுத்திவந்த வரலாற்றையெல்லாம் நினைவுகூர்ந்து, ஆங்கிலேயரின் நட்பை நடும் பாணியில் எழுதி இருப்பதோடு பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களையும் குறைகூறி எழுதியுள்ளனர். அவர்களது ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கத்தில் ஏன் இந்த முரண்பாடு என்பதை ஆராய வேண்டாமா?

பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பிய கட்டபொம்மனைப் பிடிக்க எட்டயபுரம் பாளையக்காரரின் படைகள் பின் தொடர்ந்து சென்றதாகவும் முதலில் கட்டபொம்மன் சிவகங்கைக்குச் சென்றதாகவும் பின்பு அங்கிருந்து புதுக்கோட்டை காட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் தெரியவருகிறது(Radhakrishna Iyer S. - A General History of Pudukkottai State- P.304) இச்செய்தி ஆராயப்பட வேண்டியதாகும். புரட்சிப் பாளையக் காரர்களின் கூட்டணியில் கட்டபொம்மனும் இருந்தார். ஆகவே அவர் மருது சகோதரர்களின் ஆதரவைத் தேடி சிவகங்கை சென்றிருக்க வாய்ப்புண்டு ஆனால் முதலில் சிவகங்கை சென்று பின் அங்கிருந்து புதுக்கோட்டைக் காட்டு பகுதிக்கு வந்து ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும் அப்படியானால் அவருக்கு அங்கு (சிவகங்கையில்) ஆதரவு கிடைக்கவில்லையா?

அக்கால இந்திய அரசியலில் ஐரோப்பிய நாட்டினரின் ஆதிக்கப் போட்டிகளில் ஆங்கிலேயர் தங்களது சக்தியை நிலைநாட்டி, நாட்டையே தங்களது ஏகபோக சொத்தாக பிரகடனப் படுத்திக் கொண்ட நிலையில், நமது நாட்டு(சுதேச) மன்னர்களும் சிற்றரசர்களும் பாளைக்காரர்களும் தங்களது பாதுகாப்பிற்கும் தங்களது குடிகளின் நலன் பாதுகாக்கப்படவும் நிலையானதொரு நேச சக்தியை நாடுவது இயற்கையே இந்த வகையில் புதுக்கோட்டை ஆங்கிலேயரை தனது நட்புக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.
இங்கு ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். தொண்டைமான் மன்னர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மன் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்த காலத்தில்(1799) தொடர்பு ஏற்படவில்லை என்பதும், அதற்கு முன்பே அதாவது 1755லேயே இவர்களுக்கிடையே ஒரு அரசியல் உடன்படிக்கை அடிப்படையில் உறவு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் அது. 

கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுப்பதற்காக, புதிதாக ஆங்கிலேயர்களுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்ததினாலேயே தொண்டைமானுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன என்று கூறுவது வரலாற்றை சரியாக படிக்காதவர்களின் கூற்றாக அமைகிறது. இதற்கு முன்பே இந்தியாவில் வேறெந்த சமஸ்தானங்களும், சிற்றரசுகளும் இல்லாத பல சலுகைகள் தொண்டைமானுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. 1755ம் ஆண்டுக்கு முன்பே ஆற்காடு நவாபின் மேலாண்மையை ஏற்று ஆட்சி செலுத்திய தொண்டைமான் மன்னர்கள் ஆற்காடு நவாப் ஆங்கிலேயரின் பக்கம் சேர்ந்து கொண்டபோது, தொண்டைமானும் ஆங்கிலேயர் பக்கம் சேர்ந்தார் என்பது தெரியவருகிறது. இந்நிலையில்(அக்கால அரசியல் சூழ்நிலையில்) மேலாதிக்கம் வகித்த ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தது அரசியல் ரீதியாக ஏற்புடையதுதான் என்பது விளங்கும்.

ஆகவே புதுக்கோட்டை தொண்டைமான் - கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகளை அக்காலச் சூழலையும் அரசியல் ஆதிக்க போராட்டங்களையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால் 'காட்டிக்கொடுத்தான்' தொண்டைமான் என்பது வரலாற்ற்றுச் சான்றுகளுக்கு முரணானது என்பது அரசியல் சிந்தாந்தங்களுக்கு ஒவ்வாதது என்பதும் விளங்கும். கட்டபொம்மனை மிகைப்பட உயர்த்திக் காட்டுவதற்க்காக கதை, நாடகங்கள் எழுதப்போந்த சில புத்தக ஆசிரியர்கள் அரைகுறைச் செய்திகளின் அடிப்படையில் "தொண்டைமான் காட்டிக் கொடுத்தான்" என்றும் புதுக்கோட்டையைக் "காட்டிக் கொடுத்த ஊர்" என்றும் எழுதிவருவது நல்ல வரலாற்றுச் செய்தியாகுமா? இது போன்ற ஆதாரமற்ற வாசகங்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலை வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக இருக்க முடியும்.

PS: மேற்சொன்ன பத்தியை எழுதியவர் 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' புத்தகத்தை எழுதிய டாக்டர் ஜெ. ராஜாமுகமது. பதிவை முழுவதுமாகப் படித்துவிட்டு அவர் சொல்லும் விஷயத்தை எதிர்த்து பின்னூட்டம் போடலாம். அந்தப் புத்தகம் படித்திருக்கிறியா இதில் இப்படி எழுதியிருக்கிறது என்று சொல்லாதீர்கள். எடுத்துப் போட்டு எழுதி லிங்க் கொடுத்தால் நன்றாகயிருக்கும், சும்மா அங்க இங்க என்று சொல்லவேண்டாம்.

Read More

Share Tweet Pin It +1

37 Comments

Popular Posts