In சுய சொறிதல் பெங்களூர்

என்ன நடக்கும் இன்று பெங்களூரில்

நாளைக்கு(நேற்றே எழுதியது) காவிரி பற்றிய தீர்ப்பு வெளிவரயிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் நாள் குறித்தவுடனேயே எங்கள் வீட்டிலிருந்து போன் மேல் போன் வந்துகொண்டிருக்கிறது பத்திரமாகயிருங்கள் என்று. ஏனென்றால் நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. பஸ்கர் எரிக்கப்படலாம், ஆட்டோக்கள் கொழுத்தப்படலாம். கூடவே சில மனிதர்களும், அம்மா எப்பொழுது சொல்வார்கள் ரொம்பவும் ஆப்டிமிஸ்டிக்கா இருக்காதே என்று எனக்குத் தெரியவில்லை நான் பெங்களூரைப் பார்த்து பயப்படுவதை பார்த்தால் நானெல்லாம் ஆப்டிமிஸ்டிக்கா என்ற டவுட்டே வருகிறது. நான் பெஸிமிஸ்டிக்கோ என்ற சந்தேகமும் சேர்ந்தே.

பெங்களூர் மைசூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் உதவாது சும்மா பேருக்குத் தான். பலரும் ராஜ்குமார் மரணத்திற்குப் பிறகு நாளை பெரிய பிரச்சனை வரலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டொரு நாளைக்குத் தமிழில் பேசமாட்டேன்(அப்படியே ரொம்பத் தமிழில் பேசிருவனோன்னு கேட்டீங்கன்னா, ஒரு பதிவரிடம் சமீபத்திய பிரச்சனைப் பற்றி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பொழுது. பதிவர் பயந்துவிட்டார் ஆஹா இவன் இப்படியே போர் அடித்து இன்னைக்கு முழுக்கவே பேசியே தீர்த்துடுவானோன்னு. அரைமணிநேரம் பேசியிருப்போம். பாவம் அந்தப்பக்கத்து நபரின் முகபாவங்களை கற்பனை செய்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.) ஆனால் பெங்களூரில் போலீஸ்காரர்களிடமோ, கடைக்காரர்களிடமோ பெரும்பாலும் தமிழில் பேசுவது கிடையாது. முடிந்தவரை இந்தி, இல்லாவிட்டால் ஆங்கிலம்.

அப்படியும் முடியலைன்னா, "மாடி" "சொல்ப" இப்படி கன்னட வார்த்தைகள் இணைக்கப்பட்ட தமிழ். தெரியலை நாளைக்கு என்ன நடக்கும் என்று.

JUDGEMENT: KAVERI WATER DISPUTE TRIBUNAL

Dear ,

After nearly 17 years of protracted proceedings, a final award of the Cauvery Water Disputes Tribunal will be pronounced on 5 Feb 07. Reactions to the judgment are likely by both parties and protests/agitations in Karnataka and TN cannot be ruled out. Police authorities across both states are seized of the threat and have planned adequate deployment to monitor and handle the law and order situation. Find below a set of suggestions to ensure your personal safety:

· Avoid use of KA & TN registered vehicles (personal and public) in Tamil Nadu & Karnataka respectively, during the week 5th to 10th Feb.

· Avoid inter-state road/rail travel for the same duration.

· Keep abreast with local situation while commuting and avoid trouble spots.

· Avoid communal gatherings & crowded places including cinema theatres.

· Avoid disclosing your ethnic identity.

· Employees who are residing in sensitive areas like Ulsoor, Indiranagar, Magadi Road, Rajaji Nagar, Srirampuram, Basaveshwar Nagar, Kamakshipalya, Kurubarahalli, Mysore Road, J. J. Nagar, Kalasipalyam, Azad Nagar, Byatarayanapura, Madiwala, Tilak Nagar, Attibele, Sarjapur and Hosur Road.

The possibility of disruption on 6 Feb 2007 cannot be ruled out.

Please pass on any related information to your Facilities In charge.

இப்படி ஏகப்பட்ட பார்வேர்ட் மெஸேஜ் வேறு. ;)

Related Articles

1 comments:

  1. உண்மைதான் காலைல இருந்து இந்த வாரம் 5-10 வரை மிக ஜாக்கிரதையாக இருக்கும் பட பல கால் வந்து கொண்டே தான் இருக்கிறது.

    நாளை 6ம் தேதி தீர்ப்புக்கு அடுத்த நாள் தான் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

    1991ல் நடந்தது போல இல்லா விட்டாலும் கொஞ்சமாவது கலவரம் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

    சிலர் இந்த தடவை நல்ல மழை பெய்திருப்பதால், பிரச்சனை அந்த அளவு பெரிதாக இருக்காது என்றும் சொல்கிறார்கள்.

    ஆனால் இரண்டு நாள் வெளியே செல்லும் சமயம் தமிழ் பேசாமல், இந்தி, கன்னடம் பேசுவது நலம்.

    ReplyDelete

Popular Posts