வீடுதோறும் வாசல்களில்
அகல் விளக்குகள் பொருத்தும்
அழகான நாட்களுள் ஒன்றில்
உன்னை முதல்முறை பார்த்தேன்
காற்றில் தள்ளாடும் சுடர்களை
இரு கைகளைக் குவித்துப் பொத்தி
காத்துக் கொண்டிருந்தாய்
உனது மஞ்சள் நிற பட்டுப் பாவாடையும்
காதுகளில் தொங்கிய லோலாக்குகளும்
சுடர் பட்டுப் பிரகாசித்தன
என் மகள் மஞ்சள் ப்ட்டில் லோலாக்கோடு
சுடர்களைக் காத்துக் கொண்டிருந்தாள்
எனது ஒளி பொருந்திய வாசல்களில்
அழகான நாட்களில்
----------------------------------------------------
ஒவ்வொரு அறையாகத்
திறந்து செல்வது எனக்குப்
பிடித்தமான விளையாட்டு
அறைகள் தோறும் வெவ்வேறு பக்கங்களில்
கதவுகள்
ஒன்றைத் திறந்து பிறிதொன்றில் நுழைந்து
வெவ்வேறு திசைகள் வழியாக
ஒருமுறை நுழைந்தால் திரும்ப வெளியேற
சில வாரங்களோ மாதங்களோ ஆகும்
களைப்படைந்தால் ஓய்வெடுக்கும்
சில அறைகளில்
உணவும் உடையும் பெண்ணும் உண்டு
அதிர்ஷ்டமிருந்தால் அவ்வறைகளுள் ஒன்ரை
இரண்டொரு நாட்களுக்கொருமுறையேனும்
அடைந்துவிடலாம்
எனது கோட்டைக்குக் கீழ்ப் பகுதியில்
இச்சுரங்க விளையாட்டு அரங்கை
என் முன்னோர்கள் நிர்மானித்தார்கள்
கிழவிகளாகிவிட்ட பெண்களையும்
காய்ந்து கருவாடாகிவிட்ட உடல்களையும்
சில அறைகளிலிருந்து அப்புறப்படுத்துவதுதான்
இன்றைக்கு என் ஆட்சியின்
ஒரே பிரச்சனை.
இந்த இரண்டு கவிதைகளும் ரமேஷ்-பிரேமின் "உப்பு" கவிதைத் தொகுப்பில் வெளியாகியிருந்த கவிதைகள்.
நன்றி ரமேஷ் பிரேம்
சுரங்க விளையாட்டு
பூனைக்குட்டி
Monday, July 09, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...
-
நண்பர் ஒருவர் தமிழிஷ் ஓட்டு காரணமாய் பெரிய சண்டை போகுதே பார்த்தீங்களா என்று கேட்டார், நான் அத்தனை தூரம் பதிவுகளில் தற்சமயம் இயங்காவிட்டாலும்...
-
தமிழ்மணத்தில் அவ்வப்பொழுது ஒரு ட்ரென்ட் பிடித்து கொண்டு ஆட்டும் தமிழ் சினிமா போல், இப்ப விருது கொடுக்கும் ட்ரென்ட் போலிருக்கு. வர்றவன் போறவன...
ஆள புடிங்கப்பா கொலவெறிக் கவுஜ எழுத ஒரு கை கொறயிது
ReplyDelete