In தொடர்கதை பெங்களூர்

ஆவியை யாகுலஞ் செய்யும்

ராமின் அறிமுகம் நன்மொழித்தேவனுக்கு ஒரு பெண் விபச்சாரியின் மூலம் கிடைத்தது, ராம் ஒரு ஜிக்லோ.

நன்மொழித்தேவன் பிரபல எழுத்தாளன் ஒருவனுடன் இலக்கியம் பேசிக் கொண்டிருந்த பொழுது அதாவது மது அருந்திக் கொண்டிருந்த பொழுது, ஒரு விபச்சாரியைக்கூட நேரில் பார்க்காம நீ எப்படி எழுத்தாளனாக முடியும் என்று அந்த எழுத்தாளன் சொன்ன அடுத்தநாள் நன்மொழித்தேவன் பெங்களூர் வீதிகளில் விபச்சாரிகளைத் தேடி அலையத் தொடங்கினான், உடன் அவனுடன் வேலை பார்த்த இருவர். பின்னர் தான் அவர்களுக்குத் தெரிந்தது MG Roadல் இரவு ஒன்பது மணிக்கு மேல் நிற்கும் விபச்சாரிகள் அவர்கள் கண்ணிற்குப் படாததும் கூட நன்மைக்குத் தான் என்று. அந்த இருவரில் கொஞ்சம் தேர்ச்சி பெற்ற ஒருவன் சொல்லப்போய் தான், ஃப்ரீ ஆட்களில் மசாஜ் என்ற பெயரில் வந்திருக்கும் விளம்பரம் எல்லாம் - குற்றம் கண்டுபிடிப்பவர்களிடம் இருந்து தப்பிக்க, பெரும்பாலும் போட்டுத் தொலையணும் - இதற்குத்தான் என்று தெரியவந்து அவனும் ஆட்ஸ் வாங்கி ஃபோன் செய்த முதல் முறை அவனுக்கு விபச்சாரிகள் என்பவர்கள் தேவதைகளாகவே மனதில்பட்டனர். எப்பப்பாரு பான்பராக் போட்டுக்கொண்டு, வந்தது முதலே தன்னுடைய அல்லது கிடைக்கும் மொபைல் போனில் யாரோ ஒருவனிடம் பேசிக் கொண்டு, சிகரெட் இருக்கா, சாராயாம் இருக்கா, பசிக்குது போய் சாப்பாடு வாங்கிட்டு வா, சீக்கிரம் செய் வந்துத் தொலை, வாய்லல்லாம் செய்ய முடியாது, ட்ரெஸ்ஸையெல்லாம் கழட்ட முடியாது எனத் தொடர்ந்த பொழுதுகளில் இலக்கியத்திற்கும் இவர்களுக்கும் சம்மந்தமே இருக்க முடியாது என்ற நம்பிக்கைக்கு நன்மொழித்தேவன் வந்திருந்தான்.

முந்தைய நாள் வேறொரு நண்பன் கூட உட்கார வைத்துச் சொன்ன அவன் கேர்ள் ப்ரண்டை போட்டக் கதையில் சிக்கி, அடுத்த நாள் தற்செயலாய் பார்த்த எதிர்வீட்டு ஓனர் பெண்ணின் பிரா போடாத முலைகளில் மயங்கி ஹைதரபாத் பிரியாணி ஹவுஸில் உட்கார்ந்து மட்டன் பிரியாணி வந்துவிடாத பொழுதின் அவன் முடிவெடுத்து ஏற்கனவே சேவ் பண்ணியிருந்த மசாஜ் செய்துவிட ஆள் அனுப்புவனிடம் கால்செய்த பொழுதுகளில் வரப்போவது என்ன என்று அவன் அறிந்திருக்கவில்லை. கால் செய்பவன் ஏற்கனவே காசு கொடுத்து மேட்டர் செய்தவன் என்கிற நம்பிக்கை மாமாப் பயலுக்கு வந்ததும், “தொர இங்கிலீஸ் பேசுற குட்டி ஒன்னு இருக்கு வேணுமா? பஜ்ஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸில் வேலை பார்க்கிற குட்டியாம்” இவர்களின் தொடர்ச்சியான பொய்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று மட்டும் நினைத்துக் கொண்டு, “எவளாயிருந்தாலும் 3500 தான். எல்லா மாதிரியும் செய்யணும்” என்று சொல்லி உறுதிமொழிவாங்கிக் கொண்ட நன்மொழித்தேவனுக்கு அவன் அவளை ஃபோரமில் காஃபி டேயில் இருப்பா அரைமணி நேரத்தில் போய் பிக்கப் செய்துகொள் என்று சொன்ன பொழுது கூட நம்பிக்கை வரலை.

காஃபி டேவில் பார்த்த பொழுது அவலட்சணமாக அந்த காஃபிடேவின் சூழலுக்கு ஒவ்வாவதது போல் உட்கார்ந்திருந்தது அவளாய்த் தான் இருக்கும் என்று நினைத்தான். ஆனால் எல்லா சமயங்களிலும் அப்படி ஒரு பெண் காஃபிடேவில் உட்கார்ந்திருந்து போல் பட்டதால், ஃபோன் செய்து உறுதி செய்து கொண்டு அவளாய் இருந்தால் போய்விடலாம் என்றே கொஞ்சம் தொலைவில் இருந்து கால் செய்தான். ஆனால் அவள் குரலில் இருந்த ஆங்கிலம் நிச்சயம் பொய்யானது இல்லை என்று உறுதியானது, கால்கள் வெளியில் போக நினைத்தாலும் மனம் வராமல் தடுத்த ஒன்றிற்கும் அவன் மனிதநேயத்திற்கும் சம்மந்தம் இருக்கமுடியாது என்றே அவனும் நினைத்தான். தன்னுடன் மற்றொரு சமயம் பேசிக்கொண்டிருந்த மற்றொரு சூழலில் “ஏன்தான் எல்லாரும் இந்த நடிகைங்க பின்னாடிப் போறானுங்களோ அவளுக்கும் இருக்கிறது இத்துனோண்டு...” கைகளில் காட்டியபடி “... தான” என்று அவன் சொன்னது நினைவில் வந்திருக்கவேண்டும். அவளிடமும் தன்னைப் பார்த்ததும் பிடிக்காமல் விட்டிவிட்டு சென்றுவிடுவானோ என்று பயம் தெரிந்தது.

அழைத்துவந்தான். அதுவரை நண்பர்களது வீட்டிலேயே இதுபோன்ற வேலைபார்த்து வந்த அவன் அந்த முறை தனியாளாய் செய்ய நினைத்தததால் வேறு வழியில்லாமல் அவன் வீட்டிற்கு அழைத்துவரவேண்டியதாயிற்று. வீட்டில் நுழைந்ததும் அவள் கழற்றிவீசிய ஓவர் கோட்டுக்குள் அவளுடைய உடை ரசனை தெரிந்தது, குளித்துவிட்டு வந்திருந்தாள் அவள் ஹேர் ஸ்ப்ரே போட்டிருப்பது தெரிந்தது. ஷாம்பு போட்டு கண்டிஷ்னர் போட்டு சீரம் அப்ளை செய்திருந்த தலை முடி. அவளை விடவும் அழகான பெண்களை அவன் பார்த்திருக்கிறான், பஞ்சாபி, பெங்காலி முஸ்லீம் பெண்கள் ஆனால் அவளுடைய மதர்ப்பான உடலுக்கும் அவளுடைய ஆங்கிலத்திற்கும் அவளுடைய நடவடிக்கைகளுக்கும் சம்மந்தமில்லாத அவலட்சணமான முகம். நன்மொழித்தேவன் அவளது மார்புகளில் கைகளை ஓட்டியதும், “இப்பவே செய்யணுமா! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேனே!” அவள் சொன்னது அவன் இதுவரை செய்த அத்தனை பெண்களும் சொன்னது தான். ஆனால் அவள் மற்றப் பெண்களைப் போல மொபைல் போன்களில் அவளுடைய பாய் பிரண்டுகளுடன் கடலை போடாமல் வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள். உள்ளறைக்குச் சென்று அங்கே நான் வரைந்து வைத்திருந்த, ஆரம்பித்து முடிக்காமல் வைத்திருந்த ஓவியங்களைப் பார்த்து மயங்கி ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். நேரம் கடத்த இவளது வழிமுறை இது போல என்று நினைத்தான்.

பல பெண்களை இதுபோலவே பார்த்து வெறுத்துப்போயிருந்த நன்மொழித்தேவன் அவளை வற்புறுத்தி மற்றொரு படுக்கையறைக்கு அழைத்து வந்து நிர்வாணப்படுத்தி மேயத் தொடங்கினான். ஆனால் அவளுடைய ஒத்துழைப்பும் அவள் கண்களில் பார்த்த காதலும் அவன் இதுவரை அனுபவித்திராதது. பிரியாணி சாப்பிடப்போகும் முன்பு இருமுறை செய்த சுய இன்பம் அவனை அவள் என்ன செய்தாலும் இன்னும் ஒருமணிநேரத்திற்கு வரவிடாது. விபச்சாரிகளுடனான பழக்கம் அவனை அப்படிச் செய்யப் பழக்கியிருந்தது, அவளுக்கு ஆச்சர்யம். அரை மணி நேரத்தில் மூன்று முறை வந்துவிட்டதாகச் சொல்லி, உனக்கு இன்னமும் வரலையே எதுவும் மாத்திரை போட்டிருக்கிறாயா என்று அவள் கேட்டது நன்மொழித்தேவனுக்கு அவன் செய்த கோட்டித்தனத்தை அவள் உணராததை வெளிப்படுத்தியது. ஆனால் சட்டென்று அவன் எதிர்பாராத கணத்தில் அவள் நிரோத் விலக்கி அவள் வாய்க்குள் விட்டது, அதுவரை அப்படிச் செய்து பழக்கமில்லாததால் உடனே உச்சமடைந்து அவள் வாயிலேயே வந்தது. அவள் சிரித்தாள், இதுக்கே இப்படின்னா அப்ப டீப் த்ரோட் செய்தாள் என்ன ஆவாய் என்றாள். பின்னர் அரைமணிநேரத்தில் அவள் வாயால் மீண்டும் எழுப்பி மற்றதால் அடக்கி அவள் நன்மொழித்தேவனுடன் விளையாண்ட விளையாட்டு அவனை மூன்று நாள் ஜூரத்தில் தூக்கிப் போட்டது.

இடைப்பட்ட நேரத்தில் அவள் சென்று மீண்டும் அந்த ஓவியங்களைப் பார்த்தது ரசித்தது புரிந்து கொள்ள முயற்சித்தது எல்லாம், அவள் மழுப்புவதற்காகவே நேரத்தைக் கடத்துவதற்காகவோ செய்ததல்ல என்பதை உணர்த்தியது. அவளிடம் பணத்தை எடுத்துக் கொடுத்தது, “Forgive me for doing this” என்று சொல்லி அவள் பணத்தை எண்ணியது என அவள் மற்றவர்களைப் போலில்லை என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தியது. அதை மீறியும் அவளிடம் மற்றவர்களைப் போன்ற செய்கைகள் இல்லாமல் இல்லை, அவள் பைகளில் இருந்த சிகரெட்டை என் வருதல்களுக்குப் பிறகு ஊதித்தள்ளினாள் ஒரே வித்தியாசத்துடன் “Hope you dont mind”. “You want a surprise" என்று சொல்லி அவளுடைய ஐடி கார்டைக் காட்டினாள். “I know you were not believing me" அழகாய்ச் சிரித்தாள். உடனே எல்லா விபச்சாரிகளிடமும் போடும் பிட்டை நன்மொழித்தேவன் அவளிடம் போட்டான் “நான் ஒரு எழுத்தாளன், எனக்கு இது போன்ற விஷயங்களில் ஈடுபடும் ஆட்களைப் பற்றி எழுதணும். நீ உதவ முடியுமா” என்று. அவள் அவனை கொஞ்ச நேரம் தீர்க்கமாய்ப் பார்த்தாள், பின்னர், “I believe that you are not bluffing.” என்று சொல்லிச் சிரித்தவள் “I will introduce you to one of my friend. That will suite your requirement”. சொன்னவள் ஜீரோ-ஜி பப்-ல் தொடர்ச்சியான ஒரு நாளில் ராமை அறிமுகப்படுத்தினாள், ராம் ஒரு ஜிக்லோ - ஆண் விபச்சாரன்.

புதன்கிழமைகளில் பெண்களுடன் வந்தால் மட்டும் அனுமதிக்கும் ஜீரோ-ஜியில் நன்மொழித்தேவன் அவளுடன் சென்றேன், ராமிற்கு அங்கே அப்படியொரு ரெஸ்ட்ரிக்‌ஷன் கிடையாதாம். பப் முழுவதும் இசை வழிந்தோடிக்கொண்டிருந்தது ஜோடிகளின் கண்களில் தெரியும் காமவெறி அங்கே வழிந்து கொண்டிருந்திருந்த மதுவுடன் சேர்ந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ராம் ஒரு அழகன். அப்படியிருந்துவிடக்கூடாதே என்று நினைத்தபடியே நன்மொழித்தேவன் உங்கள் முழுப்பெயர் என்று கேட்க, சிரித்தபடி ராமச்சந்திரமூர்த்தி என்றான். அவனிடம் தன் இலக்கிய வாழ்க்கை ஒரு தொடக்கம் இல்லாமல் இருப்பதையும் அவன் கதை மூலமாகவே இலக்கிய உலகில் அடியெடுத்து வைக்க நினைத்திருப்பதாயும் அதுவரை அடித்திருந்த இரண்டு மக் பியரில் உளரத் தொடங்கினான். “நன்மொழித்தேவ நான் என் கதையை மட்டுமே சொல்லமுடியும் அதுவும் உனக்காக இல்லை, உன்னிடம் எதையோ கண்டு மயங்கியிருக்கும் இவளுக்காக ஆனால் இலக்கியம் என்னிடம் இல்லை” என்றான். அவசரமாய் அவளுக்கு அவளுடைய மாமா ஃபோன் செய்து, மசாஜ் செய்ய அவளை ஜேசி ரோட் அனுப்ப, ராம் தன் கதை சொல்லத் தொடங்கினான். கதைகளில் வரும் மாய உலகமாய் ஜீரோ-ஜி அன்றிரவு நீள்வதாய்ப்பட்டது எனக்கு.

ராம் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்தவன், அவங்க அப்பா ஒரு இந்து அம்மா முஸ்லீம் காதல் திருமணம். பிறன்மலைக் கள்ளருங்க, அவங்க அப்பா டெல்லி பக்கம் ஒரு முறை திருடப்போனப் பொழுது அடிவாங்கியே செத்துப்போனவர். உடம்புக் கூட கிடைக்கலை அவங்க அம்மா ராம் அப்பாவின் தம்பியையே மணந்து கொண்டாள். ராம்ஜி நகரின் நினைவிருக்கக்கூடாதென அவர்கள் எழில் நகரில் குடியேறினார்கள். ராம் பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு கடத்துவதை அவன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் எதிர்வீட்டில் இருக்கும் ஒருவன் சொல்லியே தெரிந்துகொண்டான். தொடர்ந்த சனி ஞாயிறுகளில் அவனுக்கு இது ஒரு தொழிலானது, அவனுடைய வயது அவனது அம்மாவிடம் இருந்து பெற்ற நிறம் என அவன் மீது யாரும் சந்தேகப்படாமலேயே இருந்தனர். அவனுடைய ஸ்கூல் பேக்கில் வைத்து சாராயம் கடத்தி ஒரு முறை காரைக்காலில் வைத்து அவனைப் போலீஸ் பிடித்த பொழுது அவனுக்கு பிடிபட்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றிய எந்த அறிவும் அவனுக்கு இல்லை.

ராம், “ஒரு இரவு உன் வாழ்க்கையை மாற்றிவிடும்னு சொன்னா நம்புவியா, நன்மொழித்தேவ, அந்த இரவு என் வாழ்க்கையை மாற்றிப்போட்டது” என்று சொல்லிச் சிரித்தான்.

உடலுறவென்பது எத்தனை அசிங்கமானது என்று ராம் அப்பொழுதுதான் கற்றுக்கொண்டான், முதல் இரண்டு நாள் அவனை வைத்திருந்த பொம்பள சப்-இன்ஸ்பெக்டர், பின்னர் அவளுடைய ப்ரெண்ட் ஒருத்தி ஒரு இன்ஸ்பெக்டர் இரண்டு கான்ஸ்டபிள் என்று அத்தனையையும் ஒரு வாரத்திலேயே பார்த்திருந்தான். எல்லாம் முடிந்ததும் அந்த சப்-இன்ஸ்பெக்டரின் ப்ரண்ட் அவன் கையில் கொடுத்தனுப்பிய பத்தாயிரத்தில் இருந்து தான் எல்லாம் தொடங்கியது. அவன் மாதம் முழுவதும் பாண்டிச்சேரியில் இருந்து திருடி வந்து கொடுத்தாலும் அத்தனைப் பணம் கிடைக்காதென்பது அவனுக்கு அப்பொழுது முக்கியமாகக் கற்றுக் கொண்டது.

Related Articles

2 comments:

  1. அடுத்த போஸ்ட் எப்போ?

    ReplyDelete
  2. பின்னர் வரலாம், வராமலும் போகலாம் ;)

    ReplyDelete

Popular Posts