In சிறுகதை

தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி

“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா? கேட்டுக்கிட்டு உக்காந்திருக்கானுங்க பாரு போக்கத்தவனுங்களா, வாங்கடா தட்டைத் தூக்கிக்கிட்டு...”

வெற்றிலை எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு அவ்வா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதன் கண்களில் தெரிந்த வெறி, ஆயிரம் ஆண்டுகளாகத் தன் கண்முன்னால் சிறிது சிறிதாக வளர்ந்து வந்த ஒரு விஷயத்தை ஒரு நிமிடத்தில் அணுகுண்டு போட்டு இல்லாமல் செய்துவிடும் நிகழ்விற்கு எதிராக குரல் கொடுப்பது போலிருந்தது. அதுவரை என் வாழ்நாளில் நான் அவ்வாவை அத்தனைக் கோபமாகப் பார்த்ததேயில்லை, நைனா மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து சொந்தக்காரர்களையும் கூட்டிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் நிச்சயத்தார்தத்தை நிறுத்திவிட்டு வந்துவிட்டார். பாளயக்கார நாயுடுங்கிற வகையறா கெஜட்டில் இல்லை, என்று சொந்தக்கார மாமா ஒருத்தருக்கு பொண்ணு பார்க்கப்போன இடத்தில் சமாதானம் செய்ய வந்தவர்.

மாயூரம் என்று சொல்லப்பட்ட மயிலாடுதுறையில் இருந்து இரண்டு மூன்று மணிநேர பயணத்தில் கண்ணங்குடி என்று சொல்லப்பட்ட எங்கள் கிராமத்திற்கு வந்துவிடலாம். அந்த கிராமத்தில் மொத்தம் பெரிய பண்ணை, சின்ன பண்ணைன்னு இரண்டு பங்காளிக் குடும்பங்கள், பிறகு அவர்களது சொந்தக்காரர்கள் அவ்வளவுதான். அந்தக் காலத்து மச்சுவீடு எங்களுடையது, இரண்டு பக்கம் திண்ணை வைச்சு, வாசலைத் தாண்டினா நாலுபக்கம் தாழ்வாரம் அதற்கடுத்து இடது பக்கம் கூடம் வலது பக்கம் பத்து ஆளு புலங்குகிற அளவிற்கு பெரிய சமையற்கட்டென்று நல்ல பெரிய வீடு பெரிய பண்ணையென்று சொல்லப்பட்ட எங்கவீடு.

முன்பக்கம் திண்ணையிலும் தாத்தாவின் விருப்பத்தின் பேரில் கொண்டுவரப்பட்ட மணிப்புறாக்கள் நிறைந்திருக்கும். பக், பக், பக் என்று ஒரு பக்க மீசையை நீவி விட்டுக்கொண்டு இன்னொரு கையால் அவர் அந்தப் புறாக்களுக்கு பொரி தூவும் அழகே அழகு. வீட்டு பாதுகாவலர்களாக ராஜபாளயத்து வஸ்தாதுகள் இரண்டு தாத்தாவின் முறுக்கிவிட்ட மீசையைப்போல வேறெதற்கும் உபயோகமில்லாமல் வெறும் பெருமைக்காக. அவ்வாவின் செல்லங்களாக மணப்பாறை வகையறாக்கள், ஆடு, கோழி இன்னபிற வீட்டின் பின்புறத்தில், பெரிய காடாய் மூங்கில் மரங்களும், பனை மரங்களும், புளிய மரங்களும் ஒன்றுடன் ஒன்று எங்கள் குடும்பத்தைப் பற்றிய கிசுகிசுக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனவோ என்ற சந்தேகத்தை எழுப்புவது போல் எப்பொழுதும் சப்தமாக இருக்கும், கொஞ்சம் உற்றுக்கேட்டால் ஒரு கிலோமீட்டருக்கப்பால் கடல் ஆர்ப்பரிக்கும் சப்தம் கூட கேட்கும்.

இவர்களெல்லாம் ஆந்திரத்திலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கே வந்து அங்கிருந்த கரிசல் நிலங்களை விளைநிலங்களாக மாற்றி தங்கள் வாழ்க்கையை அங்கிருந்த மண்ணுடனும் மனிதர்களுடனும் உருவாக்கிக் கொண்டவர்கள், கொஞ்சமேக் கொஞ்சமாக இன்னும் தெலுங்கு வாடை அடிக்கும் அந்தக் குடும்பங்கள் முழுவதும் விவசாயத்தை நம்பியிருந்தக் காலம் உண்டு. பின்னர் வானம் பார்த்த பூமி பொய்த்துப்போய், சவூத் ஆப்பிரிக்காவிற்கும், சிங்கப்பூருக்கும் பிழைக்கப்போன மக்கள் பெரும் செல்வத்துடன் வந்து இங்கிருந்த மற்ற விவசாய மக்களையும் கெடுத்து விட்டதாக புலம்பிக் கொண்டிருந்த அவ்வா,

“டேய் குஞ்சான் அந்தக் காலத்தில தெலுங்கானாவிலிருந்து இந்த ஊருக்கு வந்தப்ப உங்க தாத்தாமாருங்கல்லாம் பெரிய பணக்காரங்க அவங்க கொண்டு வரும் சொத்தைப் பறிக்கிறதுக்காகக் கொள்ளைக்காரங்க வழிமறிப்பாங்களாம். அவங்கக்கிட்டேர்ந்து தப்பிக்கிறதுக்காக வழியில் பணம் நகையெல்லாம் மண்ணில் புதைச்சு வைத்து அடையாளத்திற்கு மரக்கன்றுகளை நட்டுவைத்துவிட்டு வந்திருவாங்களாம். அந்த பணமெல்லாம் இருந்தா இந்த மெட்ராஸ் மெட்ராஸ்னு சொல்றாங்களே அதையே விலைக்கு வாங்கலாம் தெரியுமா?”

சொன்ன அன்றிரவு நான் மரங்களின் கீழிருந்த செல்வங்களையெல்லாம் எடுத்து மெட்ராஸை விலைக்கு வாங்குவதாக கனவுகண்டு கொண்டிருந்தேன். பாட்டிக்கு தன் மாமனாரோட பேரைச் சொல்வதில் என் குஷியிருக்குமோத் தெரியாது, எப்பப்பாரு குஞ்சான், குஞ்சாநாக்யருன்னு தான் கூப்பிடும். நான் அது என்னோட பேரில்லைன்னு சொன்னாலும் கேட்பதில்லைன்னு வைத்திருந்தது, தாத்தா இருந்த காலத்தில் அவ்வா தாத்தாவிடம் பேசி நான் கேட்டது கிடையாது.

“டேய் பொடியா நான் சொன்னேன்னு அவ்வாக்கிட்டப் போய் காபித்தண்ணி வாங்கியாடா.” அந்த மீசைக் கிழம் சொன்னது என் காதில் விழுந்திருக்குமோ என்னமோத் தெரியாது அவ்வாவின் காதில் விழுந்திருக்கும். ஐந்து நிமிடத்தில் குவளையில் காபித்தண்ணி என் கரங்களினால் தாத்தாவிற்கு அனுப்பப்படும். தாத்தா சாவுறவரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு அவ்வா, தாத்தா செத்ததுக்கப்புறம் நாட்டாமையை எங்கம்மா பேருக்கும் மாத்தி எழுதிவைச்சிட்டு நான் வாழ்ந்தது அந்த மீசைக்காரனகுக்காகத்தான் உங்களுக்காகயில்லைன்னு சொல்றமாதிரி கொஞ்ச காலத்தில் அதுவும் செத்துப் போச்சு, அன்னைலேரந்து அம்மாவோட அதிகாரம் தான் பண்ணையில் கொடிகட்டி பறந்தது தெய்வநாயகி என்ற ஆட்டக்காரியை நைனா வீட்டிற்கு கூட்டி வந்த நாள்வரை.

அப்ப எனக்கு ஒன்பது வயசிருக்கும். நைனா அரசியல்ல சேர்ந்த நேரம் அது எப்பப்பார்த்தாலும் வீட்டில் தங்காம புல்லட்டில் கட்சிக் கொடிகட்டிக்கிட்டு, இளையாங்குடி, முப்பேத்தங்குடி, செல்லலூர்னு பக்கத்துக் கிராமத்து ஆட்களை கட்சியில் சேர்த்துக் கொண்டிருந்த காலம் அது. அட நம்ப பண்ணையே சொல்லுதுன்னு சொல்லி ஊர் ஊரா அந்தக் கட்சியில சேர்ந்துக்கிட்டிருந்தாங்க, நைனாவும் இந்த தடவை கொஞ்சம் முயற்சி பண்ணினா சீட்டு வாங்கிரலாம்னு நினைத்தார். நைனாவுக்கு ஐம்பது வயசிருக்கும்னு நினைக்கிறேன், அம்மாவிற்கு நாற்பத்தைந்து வயசான காலம். மூத்தவன் மாயூரம் ஏவிசியில் படிக்கப் போயிருந்தான், இரண்டாவது நானு, மூணாவது என் தங்கச்சி பேபி. பேரென்னமோ அகிலாண்டேஸ்வரிதான் ஆனால் எல்லாரும் பேபின்னு கூப்பிடுவதே பழக்கமாயிடுச்சு.

அந்த சின்ன வயதில் புரியவில்லை ஏன் நைனா வீட்டின் எதிர்ப்பக்கம் இருந்த தானியக்கிடங்கை சுத்தப்படுத்தி யாரோ ஒருவரை தங்க வைக்கிறார் என்று, ஐம்பதுகளிலும் அவர் தன் பண்ணைத்தனத்தை நிரூபிக்கும் ஆசையிலும், நாற்பத்தைந்துகளில் அம்மாவினால் அவர் இழுப்பிற்கு ஆடமுடியாததும் கூட காரணமாயிருந்திருக்கலாம் என்று இன்று நான் நினைக்கிறேன். அம்மாவின் நாட்டாமைத்தனத்தில் தெய்வநாயகியின் தலையீடு சுத்தமாக இல்லாத பொழுதும் தன் கட்டிலை பங்கு போட வந்துவிட்டதாலேயே அம்மாவின் கோபம் தலைக்கேறியிருந்த நாட்கள் அவை. எந்நேரமும் வீட்டில் சண்டை தான், எங்கள் வீட்டில் படுக்கையில்லாவிட்டாலும் சாப்பாடு இந்த வீட்டில் தான் என்பதால் நைனா சாப்பிட வரும் நேரத்தில் அம்மா தன் அத்தனை சாமர்த்தியத்தையும் காட்டி அப்பாவை கோபப்படவைப்பார். பெண்டாட்டியின் மீது கைநீட்டும் பழக்கம் இல்லாததால் பல இரவுகள் தட்டு விசிறியடிக்கப்படும் அதிகபட்சமாக.

இந்தக் காலகட்டத்தில் அப்பாவும் அண்ணாவும் ஏன் சந்தித்துக் கொள்ளவேயில்லை என்பது சிறுவயதில் நான் எப்போதும் யோசித்துக் கொண்டேயிருக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. என்னைப் போலில்லாமல் அண்ணன் கல்லலூரியில் படித்துவந்ததால் அவன் நேராய் சில கேள்விகளைக் கேட்டுவிட முடியும் என்பதால் நைனாவும், நைனாக்களை கேள்வி கேட்கும் பழக்கம் பரம்பரையிலேயே இல்லாததால் அண்ணாவும் ஒருவரிடம் ஒருவர் மறைந்து வாழ்ந்து வந்தார்கள். ஆனால் எனக்குத்தான் கொண்டாட்டம், இரண்டு வீடுகளில் சாப்பாடு, கேட்ட பொழுதெல்லாம் தீனி என சந்தோஷமாயிருந்தேன் அதற்கு ஒரு காரணமிருக்கிறது.

நான், அண்ணா பேபி ஓடிவிளையாடிய வீட்டில் தான் அப்பா அந்த நாட்டியக்காரியை குடிவைத்திருந்தார் என்றாலும் என்னைத்தவிர யாரும் அந்த வீட்டிற்கு வருவது போவது கிடையாது. அண்ணா வயசுதான் இருக்கும் அந்த தெய்வநாயகிக்கு, அதனால் அவன் தலைவைத்துப் பார்க்கவில்லை, தங்கையைப் பற்றி சொல்லவே வேண்டாம். அம்மாவிற்கு எது சரியோ அதுதான் அவளுக்கு சரி அப்படித்தான் சரியில்லாததும். ஆனால் நானோ இரண்டும் கெட்டான் வயதில் இருந்ததால் விஷயத்தை என்னிடம் சொல்லவும் முடியாமல் அதே சமயத்தில் என்னை ஒரேயடியாக இழக்கவும் விரும்பமில்லாமல் இருந்ததால் அந்தக் காலத்தில் அம்மாவின் செல்லப்பிள்ளை நான்தான். அதன் காரணம் பின்னால் தெரிந்தது, தெய்வநாயகி வந்த ஒன்றிரண்டு வருடங்கள் இருந்த சண்டை ஒரேயடியாக குறைந்திருந்த ஒரு வாரம் மட்டும் அம்மா தெய்வாவிற்கு சமைத்து என்மூலம் கொடுத்தனுப்பினாள். பின்னர் நேரடியான சண்டை தெய்வாவிற்கும் அம்மாவிற்கும் இடையில் நடந்ததேயில்லை.

பிற்காலங்களில் நான் தெரிந்து கொண்டேன், அம்மா தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி தெய்வநாயகியின் கர்பப்பையை நீக்கிவிட்டதாகவும் அதனால் இனிமேல் அவளுக்கு தன் பண்ணையை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படாது என்ற விஷயம் உண்மையானதும். அம்மா கொஞ்சம் அடங்கிவிட்டாள் இரவு நேரங்களில் தெய்வாவிற்கு செய்த துரோகத்தினால் குலதெய்வம் அகிலாண்டேஸ்வரி சூலாயுதத்துடன் துரத்துவதாக ஒன்றிரண்டு பூசாரிகளைப் பார்த்து பரிகாரம் செய்து கொண்டதுடன். அந்தக் காலம் இனிமையானது, நான் அந்த வீட்டிற்குப் போவதை அம்மா தடுக்காதக் காலம் இன்னும் சொல்லப்போனால், திருவிழா, தேர் போன்ற காலங்களில் வீட்டில் கரியஞ்சோறு சமைத்தால் தெய்வாவிற்கு நான் தான் கொண்டுபோய்க் கொடுப்பேன்.

அம்மாவிற்கும் தெய்வாவிற்கும் தூதன் நான்தான், பெரும்பாலும் தெய்வாவின் வீட்டில்தான் இருப்பேன். அம்மாவைப் போல எப்பொழுது எண்ணை வழியும் முகமாக இல்லாமல் தெய்வா பவுடர் பூசி சிங்கப்பூர் சென்ட் அடித்து, அந்தச் சமயத்தில் நான் இருந்தாள் என்மீதும் அடித்துவிடுவாள், வாசனயாக இருப்பாள். பெரிய நடராஜர் போட்டோ இருக்கும் அந்த வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள் எனக்கு அந்த கிராமத்தை விட்டு ஏதோ வேறுறொரு உலகிற்கு வந்துவிட்டதாகத் தோன்றும். அம்மாவைப் போலில்லாமல் தெய்வா அவளுடைய பாடல்களுடன் தான் எனக்கு அறிமுகமாகியிருந்தாள் மிகவும் சன்னமாகத்தான் பாடுவாள், ஒடிசலான தேகம், கண்ணுக்கு மையெழுதி, ஓரிடத்தில் நிற்காமல் எப்பொழுதும் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டேயிருப்பவளாயிருந்தாள்.

வீட்டிற்குப் போனால் பிடித்திழுத்து மடியில் உட்கார வைத்து எப்பொழுதும் தயாராகவேயிருக்கும் ஏதாவதொறு பலகாரத்தை ஆசையுடன் ஊட்டிவிடுவாள். எங்கள் வீட்டில் நாங்கள் அம்மாவையோ இல்லை அவ்வாவையோக் கூட தொட்டுப் பேசி பழக்கமில்லாத காரணத்தால் கொஞ்சம் கூச்சமாகயிருக்கும்.

கொஞ்சக் காலத்தில் அந்தக் கூச்சசுபாவம் என்னிலிருந்து அடியோடு போயிருந்தது, நைனாவைப் போலவே நானும் அவளை தெய்வா தெய்வா என்றுதான் கூப்பிடுவேன், அவளுக்கு நான் எப்பொழுதும் ராசய்யாதான், பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய் வாங்க ராசய்யா என்று சொல்லி பலகாரம் கொடுத்து, கன்னத்தில் முத்தா வாங்கிக்கொள்வாள். பிற்காலங்களில் எனக்குப் புரிந்தது, அவள் தனக்கே தனக்காய் ஒரு பிள்ளை இனிமேல் பிறக்காது என்பதால் என்னை அவள் பிள்ளையாய் வரித்துக்கொண்டு நான் அம்மாவிடம் மீண்டும் சென்றுவிடாமல் இருப்பதற்காக தன் சாமர்த்தியங்களை பயன்படுத்தி வந்தது. ஏனென்றால் அவளுக்கு இருந்தது மிகச்சில ஆண்டுகாலமே, எனக்கு வைப்பாட்டி, நாட்டியக்காரி, பெண்டாட்டி போன்ற வார்த்தைகளுக்கான வித்தியாசம் தெரிய வருவதற்குள் தன் மீதான ஒரு பாசத்தை கொண்டு வரும் முயற்சிகள்.

அதை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிடும் வலிமை அம்மாவிற்கு இல்லை, ஏனென்றால் அவள் தெய்வாவிற்கு ஒரு தவறைச் செய்திருந்தாள் அதனால் அவளும் என்னை ஓரளவிற்கு தெய்வாவிற்கு விட்டுக் கொடுத்துவிட்டாள். ஆனால் ஊர்க்காரர்கள் அப்படியில்லையில்லையா.

“என்னடா அய்யாப்பிள்ளை எப்பப்பாரு உங்க சித்தி வீட்டிலேயேத்தான் இருக்கிறியாமே. ம்ஹும்.”

தனியாக அழைத்துக் காதில் “என்னடா உங்க சித்தி ராத்திரியில் உங்க நைனாவிற்காக டிரெஸ்ஸே போடாம டான்ஸ் ஆடுவாங்களாமே நீ பார்த்திருக்கிறியா” என்பார்கள்.

“ஆனாலும் உங்கம்மா பாவம்டா இப்பல்லாம் ராத்திரி உங்கப்பா வீடு தங்கறதேயில்லையாம்ல.”

“ஒருநாள் ராத்திரி உங்கப்பா உங்க சித்திக்கு முடியாத நாளில் உங்க வீட்டுக் கதவைத்தட்ட கதவைத் திறக்கவேயில்லையாம்ல.”

இதுபோல் அவரவர்களின் எங்கள் வீட்டின் மீதான கற்பனையை என்மீது திணித்தவாறு இருந்தனர். இதிலிருந்தெல்லாம் நான் தப்பியதற்கு ஒரே காரணம் தெய்வாதான். இரண்டும் கெட்டான் வயதின் இறுதி நாட்கள் அவை, தன் நாட்டியத்திறமை காரணமாக பல ஊர்களுக்கு சென்று வந்ததால் தனக்கு ஏற்பட்ட அனுவங்களை மாலை நேரக் கதைகளாக அவள் எனக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தாள், அவைகள் பெரும்பாலும் சுற்றிச் சுற்றி என் இரண்டும் கெட்டான் வயது சந்தேகங்களைத் தீர்ப்பதாகவேயிருக்கும். அவள் என்னுடன் பேசுவதற்கு எந்த நேரத்திலும் தயாராயிருந்தாள் கேள்வி எப்படிப்பட்டதாயிருந்தாலும் அதற்கான பதில் அவளிடம் இருந்தது. பெரும்பாலும் அவள் கோபப்பட்டு நான் பார்த்ததேகிடையாது, சிரித்துக்கொண்டே எல்லாக் கேள்விக்களுக்குமான பதிலை எனக்குப் புரியும் வகையில் சொல்ல அவளுக்குத் தெரிந்திருந்தது.

“தெய்வா உன்னைய பின்னின்னு வெளியில் சொன்னா ஏன் எல்லோரும் சிரிக்கிறாங்க...” போன்ற என் கேள்விகளுக்கான பதில் கூட அவளிடம் இருந்தது, எங்கள் பக்கத்தில் சித்தி என்று அழைக்கும் வழமைகிடையாது. அம்மாவின் தங்கை உறவில் வருபவர்களை பின்னி என்றுதான் இன்றும் அழைப்போம்.

நைனா என்ன தான் பண்ணையாராக இருந்தாலும், அரசியல் செய்யத் தெரியாததால் அரசியலில் நன்றாக அடிவாங்கினார். ஆனால் பரம்பரைச் சொத்தை அழித்துவிடும் அளவிற்கு அது போகாமல் இருந்ததற்கு தெய்வா ஒரு காரணம். பொறுமையாகப் பேசி அவருக்கு இந்த அரசியல் நமக்குத் தேவையில்லைன்னு சொல்லத் தெரிஞ்சிருந்தது. நைனாவும் அரசியலை விடுத்து மீண்டும் தான் நன்கறிந்த விவசாயத்தைப் பார்க்கத் தொடங்கினார். இதனால் தங்களுக்கு செலவு செய்யும் வழமையை நைனா நிறுத்திவிட்டதால் கோபமான அம்மாவின் அண்ணன் முறை உறவினர்கள் இதற்கெல்லாம் காரணம் தெய்வாதான் என இல்லாததும் பொல்லாததையும் அம்மாவிடம் வத்தி வைத்தனர்.

அப்பொழுது மீண்டும் தொடங்கியது என் உரிமையைப் பற்றிய போராட்டம் அம்மாவிற்கும் தெய்வாவிற்கும் இடையில், தெய்வா வீட்டில் அப்பாவிற்கு கூட அம்மாவைப் பற்றி தவறாகப் பேசும் உரிமை கிடையாது. அதும் என் எதிரில் நைனா ஏதாவது சொல்லிவிட கண்களாலேயே நான் இருப்பதையும் தொடர்ந்து பேசாதீர்கள் என்று தடுப்பதையும் பார்த்திருக்கிறேன். அம்மாவிற்கும் தான் தெய்வாவிற்கு செய்த தீங்கு நினைவில் வந்தாலும் தன் சொத்தில் தன் நாட்டாமையில் தெய்வாவின் பங்கு வந்தவிடவேக்கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

வைப்பாட்டி கூட சொத்தில் பங்கு வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போடமுடியுமென்றும் அல்லது அவள் இறந்தபிறகு தெய்வாவின் உறவினர்கள் அவளுக்கு நானோ இல்லை நைனாவோ கொள்ளி போட்ட சாட்சியத்தை வைத்து சொத்திற்கு உரிமை கொண்டாட முடியுமென்று புரளியைக் கிளப்பிவிட்டனர். அம்மாவிற்கோ எங்கள் குடும்பச்சொத்து யாருக்கும் போய்ச் சேருவதில் விருப்பம் கிடையாது. அதனால் ஒரு வார்த்தை தெய்வாவிடம் நேரில் கேட்டாள், அது நானோ இல்லை எனது நைனாவோ அவளுக்கு கொள்ளி போடமாட்டார்கள் என்பதைப் பற்றிய ஒன்று.

முதன் முதலில் தெய்வா கோபப்பட்டு பேசி நான் அன்றுதான் பார்த்தேன், கேட்ட அம்மாவை நோக்கி முதலில் கோபமாக ஆரம்பித்தவள் தன் இயலாமையால் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தேம்பத் தொடங்கி பின்னர் அழுகையாக அம்மாவின் கால்களைப் பிடித்து உங்கள் சொத்தே வேண்டாம் நான் இவருக்கு வைப்பாட்டியா வந்து என்னத்தக் கண்டேன் கடைசியா கொள்ளி போடறதக்கூட தடுத்துறாதீங்கன்னு சொல்லி அழ. அம்மா ஒன்றும் பதில் பேசாமல் போய்விட்டாள். ஆனால் அன்றிரவு நைனா தண்ணியடித்துவிட்டு என்னை அழைத்துப் பேசினார். அதுதான் முதன் முறை அம்மா இல்லாத ஒருவரிடம் நைனா தெய்வாவைப் பற்றி பேசியது.

“தம்பி நான் இன்னும் எவ்வளவு நாளைக்கு உயிரோட இருப்பேன்னு தெரியாது. தெய்வா ரொம்ப நல்லவ, அது உனக்குத் தெரியும் உங்கம்மா கடைசி சமயத்தில் ஏதாவது ஒன்னுக்கெடக்க ஒன்னைச் சொல்லி அவளுக்கு கொள்ளி போடுவதைக் கூட இல்லாமல் செய்துவிடுவாள் எனக்காக நீ அதைச் செய்ய வேண்டும்” என்று அவர் சொன்ன பொழுது தெய்வாவும் நைனாவும் இந்த விஷயத்தில் அம்மாவை தவறாக புரிந்து கொண்டதாகவே நினைத்தேன். ஆனால்,

நைனா ஒருநாள் அறுபது வயதில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறந்துவிட, அடுத்துவந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் தெய்வாவும் கர்பப்பை எடுத்துவிட்டதால் வந்த ஏதோ ஒரு வியாதியில் இறந்துவிட்ட அன்று அம்மா என்னிடம் ‘நீ அவளுக்கு கொள்ளி போட்டா எனக்கு போடமுடியாது பார்த்துக்கோ’ என்று சொல்லிவிட, நைனா அத்தனை வருடங்கள் அம்மாவுடன் குப்பைக் கொட்டியதில் அவளை மிகச்சரியாக புரிந்து கொண்டதை நினைத்து நான் சிரிக்க, பைத்தியத்தைப் பார்ப்பதைப் போல அவள் என்னைப் பார்த்தாலும் நைனாவிற்காகவும் தெய்வாவிற்காகவும் நான் அவளுக்கு கொள்ளி போட்டு அம்மாவிற்கு கொள்ளி போடும் உரிமையை விட்டுக்கொடுத்தேன்.

ஆனால் கடைசி வரை தெய்வாவை அம்மா என்று அழைத்ததில்லை, வெளியில் சித்தி, பின்னி என்று அழைத்திருந்தாலும் அவள் முன்னிலையில் எப்பொழுதும் தெய்வா என்றே அழைத்து வந்ததை நினைக்கும் பொழுது அவள் உடலுக்கு எரியூட்டும் கணத்தில் மூச்சு முட்டியது. ஆனால் அவளுக்கு அது விருப்பமானதாகத்தான் இருந்ததாகப்பட்டது. கடைசி காலங்களில் அவளுடைய ஆரம்பக்கால வாழ்க்கையைப் பற்றி கேட்டிருக்கிறேன். தயங்காமல் சொல்லியிருக்கிறாள், நோய்வந்து கொள்ளிபோட ஆளில்லாம அநாதைப் பிணமாப் போயிருவேனோன்னு கவலைப்பட்டதாய், கவலைப்படாமல் என்னிடம் சொல்வாள். அம்மாவைப் பற்றி அவளிடம் எப்பொழுதும் ஒரு உயர்ந்த எண்ணம் இருந்தது எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. தெய்வா ராசா உங்கப்பா உங்கம்மாவை உபயோகிக்கிற வரைக்கும் உபயோகிச்சிட்டு, அவரோட அன்பும் ஆதரவும் உங்கம்மாவிற்கு தேவையான நாட்களில் கழட்டிவிட்டுட்டார். ம்ம்ம் அதெல்லாம் ஆம்பளைப் புள்ளைங்களுக்குப் புரியாது, சொல்லியது நினைவில் வந்தது. ஆனாலும் கடைசிவரை அம்மா தன் கருத்தில் மாறாமலேயிருந்ததால் அண்ணா சுடுகாட்டிற்குக்கூட வரவில்லை. அம்மா வீட்டில் அழுததாக பேபி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். தெய்வா இல்லாத அந்த வீட்டை, அந்த கிராமத்தை ரசிக்கமுடியாமல் நான் கால்போன போக்கில் நடந்து இனிமேல் அந்தக் கிராமத்திற்கே வருவதில்லை என்ற எண்ணத்துடன் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தேன்.

PS: படமும் நான் வரைந்ததுதான்.

Read More

Share Tweet Pin It +1

29 Comments

In Hiatus சினிமா நாட்குறிப்பு புகைப்படங்கள் புகைப்படம் மரணம்

ஸ்ரீதேவி

#myheartopener என்ற பெயரில் இளவஞ்சி எழுதச் சொன்ன பொழுது கடந்த போன புகைப்படங்களில் ரோஜாவும் மீனாவும் உண்டு. ஸ்ரீதேவி கிடையாது. வயது தான் காரணம். ஜெனரேஷன் கேப்.

ஐஸ்வர்யா ராயைப் போல் ஸ்ரீதேவி மீதும் ஒரு ஏதோ ஒரு காரணமாய் நெருங்க இயலாத தன்மை இருந்திருக்கிறது. காந்தியைப் போல் ஐஸ்வர்யா ராயும், பிடித்து பிடிக்காமல் போய், திரும்பவும் பிடித்து என்று ஒரு சுழற்சி ஸ்ரீதேவிக்கும் உண்டு. ரஜினி ரசிகனா கமல் ரசிகனா என்கிற பிரச்சனை இருந்ததுண்டு. ஆனால் விஜய் - அஜித் விஷயத்தில் அப்படியில்லை. தீர்மானமாய் பிடித்தது அஜித் என்கிற வரை அறிவேன். ஆனால் இதில் விஜய் எதிர்ப்பு என்பது இல்லை. இங்கிருந்து கவுண்டமணி ரசிகன் என்கிற நிலையை அடைந்தது ஜென் நிலையே ஒழிய வேறில்லை.

முதலில் ஸ்ரீதேவி மீதான ஈடுபாடு உண்டானது என்றால் அதற்கு ஒரு படம் காரணம், தெலுங்கு படம், நான் தமிழில் பார்த்தேன். சிரஞ்சீவி - ஸ்ரீதேவி நடித்தது ஸ்ரீதேவி தேவதையாக வருவார் என்று ஊகிக்கிறேன். மனதில் பச்சென்று பதிந்த நிகழ்வு, பின்னர் சீண்டிப் பார்த்தது ஜானி. ஜானியின் ஸ்ரீதேவியைப் பிடிக்காத ஆணாதிக்க எண்ணங்கொண்டவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்க முடியும். திரையில் நடக்கும் கதையை எமோஷனல் அட்டாச்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாத - இன்னமும் கூட - ஒருவன் என்கிற முறையில், மூன்றாம் பிறை படத்தை இன்னமும் முழுமையாக பார்த்திராவதவன் நான். அந்த முடிவு தெரிந்ததால் அதைப் பார்க்கும் மனமற்றவனாய் இன்னமும் நீடிக்கிறேன். அப்படி தள்ளிவைத்த இன்னொரு படம் பருத்திவீரன் - இன்னமும் - க்ளைமாக்ஸ் பார்த்ததில்லை.

Jennifer Ehleயுடன் காதல் கொள்ள முடிந்த என்னால் ஸ்ரீதேவியுடன் காதல் கொள்ள முடிந்திருக்கவில்லை, என்னவோ என்னை விட வயதில் மூத்தவர் என்கிற உணர்வு. ஆனால் இது பொதுவாய் எல்லோருக்குமானது இல்லை. காஞ்சனாவின் மீது கூட காதல் கொள்ள முடிந்திருக்கிறது, காதலிக்க நேரமில்லை காஞ்சனா இல்லை சாந்தி நிலையம் காஞ்சனா. இது ஒரு வியப்பான மனநிலை இன்னமும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் மனநிலை.

ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஆறாண்டு கால அமெரிக்க வாழ்க்கையால் கைவந்திருக்கும் மனநிலை ஆச்சர்யமளிக்கிறது. மது அருந்தி பாத்-டப்பில் மயங்கி விழுந்து இறந்தார் என்பது ஒரு இம்மியளவு கூட ஸ்ரீதேவி மீதான மதிப்பில் குறை வரவில்லை.  இங்கே பெண்களின் உடம்பின் மீதான உரிமையை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்பதில் நம்பிக்கை அதிகம். அவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார், பொடாக்ஸ் இஞ்சக்‌ஷன் போட்டுக்கொண்டார் என்பதில் எல்லாம் நம் கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆதித்த கரிகாலனின் பாற்பட்டு, சின்ன வயதிலேயே இறந்துவிட வேண்டும் என்கிற ஒரு ஈர்ப்பு இருந்தது உண்டு. இப்பொழுதும் அறுபது வயது போதும் என்பதைப் போன்ற ஒரு மனநிலை அவ்வப்பொழுது வருவது உண்டு, ஆனால் மனைவி குழந்தைகள் என்று அமைந்த பிறகு நாம் நம்முடைய வாழ்வை நமக்கானதாய் மட்டும் நினைத்துக் கொள்ள முடியாததாய் நீள்கிறது வாழ்க்கை. யாருக்கும் தொந்தரவும் கொடுக்காமல் ஒரு நீண்ட துயிலில் மரணித்துவிட வேண்டும் என்கிற ஆசை மட்டும் இப்பொழுது இருக்கிறது. நானே நினைத்தாலும் முழு அமெரிக்கன்களாய் என் மகளையும் மகனையும் வளர்த்துவிட முடியாது என்று தெரிந்தே இருக்கிறேன். அன்பும் பாசமும் மட்டுமே தெரிந்த மனைவியிடம் வளரும் குழந்தைகளிடம் அன்பையும் பாசத்தையும் கூட ரேஷனலாக நினைக்க முடியும் என்பதை எப்படி உணரவைப்பது. இந்த மனம் என்பது சூழ்நிலையையும் கூட்டிக் கொண்டே சுழலும் உருவாகும் ஒன்று, பூமி அட்மாஸ்பியரையும் சேர்த்துக் கொண்டே சுற்றுவதைப் போல். மகனும் மகளும் என் வழிக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அது என் மனைவிக்கு தரப்போகும் மனவலியைப் புரிந்தே நோகிறேன். மனதிற்கு நெருக்கமானவர்கள் மறையும் தருணம் மனம் தனக்குத் தானே செய்து கொள்ளும் பரிசோதனை தீர்க்கமானதாய் இருக்கிறது.

நான் தீர்க்கமாய் மனதில் ஓடும் சிந்தனைகளை எழுத்தில் கொண்டு வர முடிகிறது என்றே ஊகிக்கிறேன், அல்லது எழுதுவதன் மூலமாய் மனதை சிந்திக்க வைக்க முடிகிறது என்பதை அல்லது எழுதுவதைக் கொண்டு மனதை ஆராய முடிகிறது என்பதை. பிரபாகரன் மரணத்தை ஒட்டி இப்படி யோசிக்க முடிந்திருக்கவில்லை, மனம் யோசனையை மறந்திருந்த காலம் அது. இப்படித்தான் முடியும் என்று தெரிந்திருந்தாலும் அப்படி முடிந்திருக்கூடாது என்று ஏங்கிய மனநிலை. இன்னமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராய் பிரபாகரனை நிறுத்தவில்லை ஆனால் விமர்சனம் வைப்பவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அல்லது நான் நடுநிலையாளர்கள் என்று ஒப்புக்கொண்டவர்கள் ஒப்புக்கொள்ளும் விஷயத்தை ஒப்புக்கொள்ள முடிந்திருக்கிறது. அவ்வளவே.

என்னை மானசீகமாக கமலஹாசனாக உணர்ந்த விந்தை பொழுதுகளில் கதாநாயகியாக ஸ்ரீதேவியை உணர்ந்திருக்கிறேன், பதின்மங்களில். ஸ்ரீதேவி என் அம்மாக்களின் சித்திகளின் கதாநாயகி என்கிற பிம்பம் அகலவில்லை. ஸ்ரீதேவியை கமலஹாசன் மணம் புரிந்திருக்கவேண்டும் என்று வேடிக்கையாய் மனம் வாடியிருக்கிறேன். வறுமையின் நிறம் சிகப்பு ஸ்ரீதேவி, மென்சோகம் வழியும் பேரழகு தான் அவருடைய பிம்பமாக மனதில் பதிந்திருக்கிறது. கோஹினூர் வைரத்தை கொள்ளை கொண்டு போன பிரிட்டிஷாரின் மீதான கோபம், போனி கபூரின் மீதும் இருந்திருக்கிறது. பதின்மத்தில் மனது பட்ட பாடு வேடிக்கையாகத்தான் இருக்கிறது, இன்று உட்கார்ந்து யோசிக்கும் பொழுது. இப்படி பல பதின்ம நாட்களை இரவுகளை கனவுகளை வண்ணமயமாக்கியவர் ஸ்ரீதேவி.

------------------------------------------------------------------------

Google+ல் முன்பு எழுதியது

இவைகளில் ஏதோ ஒன்று தான். தற்சமயம் இல்லாததால் குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஆனால் tiara அணிந்த இதை ஒத்த அல்லது 95% இந்தப் படம் தான்.

+இளவஞ்சி iLaVAnJi

மலையை மயிரைக்கட்டி இழுக்கும் சாகஸம் தான். இந்தப் படத்தை ஓவியமாக வரைந்தும் இருக்கிறேன். தேடினா வீட்டில் கிடைக்குமாயிருக்கும்.

அவர் இறந்த பொழுது மன உயரங்களில் இருந்து கீழிறங்கியிருந்தார் தான் - பதின்மம் செய்யும் வேலை. விவாகரத்து, அல் பயிது போன்ற காரணங்களால். இன்று அப்படியில்லை. தேவதையும் இல்லை வெறுப்பும் இல்லை.

இறந்த பொழுது அத்தனையையும் தாண்டி கண்கள் கலங்கியது, கமல் ஆர்சி சக்தி பற்றி சொல்வதைப்போலில்லா விட்டாலும் உணர்ச்சிவசப்பட்டவன் தான். அய்யோ நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று. வெட்கமில்லாமல் கூட சொல்வேன், டயானாவையும் ஒரு காலத்தில் மனதார காதலித்தேன் என்று.

ஒரு படம்னா இதைத்தான் சொல்லணும். #myheartopener

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In

பிக் பாஸின் பாப்பார புத்தி

காயத்ரியின் புத்தியா, கமலஹாசனின் புத்தியா இல்லை ஒட்டுமொத்த பிக்பாஸின் புத்தியா என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது.

காயத்ரிதான் சேரிபுத்தி என்று சொன்னது, ஓவியாவைச் சொன்னதாக ப்ரோமோ மட்டும் காட்டியவர்கள், நிகழ்ச்சியின் பொழுது அந்த சம்பவத்தைக் காட்டவில்லை. ப்ரோமோவுக்கும் நிகழ்ச்சிக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். சொல்ல முடியாது, நிறைய நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் ப்ரோமோவில் காட்டியதில் பிக்பாஸின் புத்தி தெரிகிறது, அதற்காக தார்மீக மன்னிப்பு கேட்காத கமலஹாசனிடம் புத்தி தெரிகிறது. காயத்ரியைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை பாப்பார புத்தியின் மூட்டை இவதான். ஜூலியை இவள் ட்ரீட் செய்யும் விதத்தில் இவளின் சினிமா சீனியர் என்கிற அகம்பாவம் மட்டுமில்லாமல் ஜாதித்திமிரு தொடர்ந்து தெரிகிறது. வாழ்க்கை முழுதும் இப்படிப்பட்ட புத்தியுடனே இருந்து இறந்தும் போய்விடும் நபர்கள் போலத்தான் காயத்ரியும். ஒரே வித்தியாசம் இவள் பிக்பாஸில் பங்குபெறுவது. உங்களில் எத்தனை பேர் இப்படிப்பட்டவர்களை தனிப்பட்ட முறையில் அறிவீர்கள்.

நான் இன்னமும் காயத்ரியை சாக்லேட் மில்க்கிற்காக பொய் சொன்னாள் என்ற கேட்டகிரியில் வைக்கலை, அவள் வெளியில் வந்து எனக்கு கால்சியம் குறைவாக இருக்கிறது என்று சொன்ன பொழுது அதிர்ச்சியடைந்தேன் தான். ஆனால் கமல் சொன்னதும் செய்து காட்டியதும் உண்மையாகத்தான் இருப்பதாய் நினைக்கிறேன். அவள் வெளியில் வந்து சினேகனிடம் சொன்ன பொழுதும் அவள் பொய் சொல்கிறாள் என்று நினைக்கவில்லை, அவள் உடல்மொழி அதை வழிமொழியவில்லை. பாப்பான்னு டிவிப்பொட்டி நிகழ்ச்சியில் சொல்லிட்டாங்கன்னு பிஜேபி கர்ராபுர்ரான்னு கத்திக் கொண்டிருந்த சூழ்நிலையில் இவ சேரி புத்தின்னு சொன்னதுக்கான எதிர்வினை சரியா இருந்ததாத்தான் ஊகிக்கிறேன். ஆனால் விஜய்டிவியோ கமலஹாசனோ இதைச் சரியாகக் கையாளவில்லை.

ப்ரோமோவில் காட்டிவிட்டு ஏன் நிகழ்ச்சியில் காட்டவில்லை என்பதில் தான் பதில் இருக்கிறது. அவர்கள் அதைச் சொல்லப்போவதில்லை, நெவர்த்லெஸ் விஜய் டிவி ஒழுக்கமானவனுங்க இல்லை என்கிற எண்ணம் இப்பொழுது ஏற்பட்ட ஒன்றில்லை. அதனால் தான் இதை காயத்ரியை விடவும், கமலஹாசனைவிடவும் விஜய் டிவியைக் குற்றம் சொல்லவேண்டியிருக்கிறது. பிக்பாஸில் ஆயிரம் விஷயங்களை மறைக்கிறார்கள். கஞ்சா கருப்பு, பரணி பற்றி சொல்லிய விஷயம் எதையும் காட்டவில்லை. இது போல் நிறைய சொல்லலாம். இந்த சேரி புத்திக் கதையையும் ஏறக்கட்டியிருக்கலாம். தெரிந்தே தான் அவர்கள் அதை ப்ரோமோவில் ஒளிபரப்பியிருக்க வேண்டும், கன்டென்ட் கட் செய்யும் ஆள் இத்தனை ஏமாளி அவருக்கு சேரி புத்தியின் பின் இருக்கும் அரசியல் தெரியாது என்பதில்லை. நன்றாகத் தெரியும், இதன் காரணமாய் இணையம் அட் லீஸ்ட் பற்றி எரியும் என்று தெரியும். ஆனாலும் செய்ததன் பின்னால் இருக்கும் புத்தி, அரசியல் சார்ந்தது, பாப்பாரத்தனமானது.

காயத்ரியின் முகமுடி இதில் கிளிந்தது என்பதில் எந்த சந்தோஷமும் இல்லை. அவள் முகம் ஏற்கனவே கிழிந்து தான் தொங்கிக் கொண்டிருக்கிறது, இதில் சந்தோஷப்படும் நபர் காயத்ரியின் டிவர்ஸ்ட் கணவனாகயிருக்க முடியும். நமக்கில்லை ஆனால் இந்த நிகழ்ச்சி அவள் தற்பொழுது பயப்படுவதைப் போல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கக் கூடும். ஆனால் ஆணாதிக்க தமிழ் சினிமாவில் காயத்ரி ரகுராமிற்கான எதிர்காலமென்று என்ன இருக்கிறது. பெரிதாய். சின்னத்திரையில் நடனத்தை மதிப்பிட்டுக் கொண்டு இருக்கலாம். அதற்கும் அவள் விஜய்டிவிக்குத்தான் வந்தாக வேண்டும். சன்டிவிக்கு என்று ஒரு மரியாதை இன்னமும் இருப்பதாய் நினைக்கிறேன், இந்த பாப்பாரபுத்தி காயத்ரியை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதைத் தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம். பாப்பாரபுத்தி கொண்டு நிறைய பேர் இன்னமும் சன்டிவியில் இருக்கக்கூடும் ஆனால் இப்படி பிக்பாஸில் முகம் கிழிந்து நிற்கும் காயத்ரியை ஏற்கும் நிலைக்கு வரமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இன்று சோசியல் மீடியா இருக்கும் உச்சத்தில், காயத்ரி இன்னும் சிறிதுநாள் தலைமறைவாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.

சுஜாதா மேல் எத்தனை மதிப்பு வைத்திருந்தேன் என்று என்னைப் படித்துவரும் ஆட்களுக்குத் தெரியும், ஆனால் இன்று சுஜாதா என்று சொன்னால் மனதில் தோன்றும் படிமம், டாம்ப்ராஸுக்காக குரல் கொடுத்த பாப்பார சுஜாதா தான். அவர் எப்பொழுது அப்படிச் சொல்லவில்லை என்ற கேள்வி எழலாம், ஆனால் நான் அவரைப் படிக்க ஆரம்பித்தப் பிறகு அந்த பொதுவில் பாப்பார புத்தியை அவர் காட்டியதில்லை, எத்தனையோ பேர் என்னிடம் நான் சுஜாதாவைப் பற்றி பாராட்டிப் பேசும் பொழுது சொல்லியிருக்கிறார்கள். பாப்பாரபுத்தி கொண்டவர் என்று, ஆனால் டாம்ப்ராஸ் தான் அவரிடம் இருந்து என்னைக் காப்பாற்றியது. ஜெமோ, பாலகுமாரன், சுஜாதா என்று எல்லோரிடமும் அவர்களைப் படிக்கும் காலத்தில் ஒரு மயக்கநிலை, மாயக்கயிறைக் கழற்றிவிடும் ஒன்று எப்பொழுதும் கிடைத்தது. அது பதின்மத்தின் பிரச்சனை இருபதுகளின் பிரச்சனை இப்பொழுது அந்த மயக்கநிலை பெரும்பாலும் உருவாவதில்லை. எப்படியும் ஏதோ ஒரு குறை இருக்கும் என்று தோன்றத்தொடங்கி விடுகிறது. தராசுத்தட்டு ஒன்றுடன் தான் எவரையும் அணுக முடிகிறது. காலாம் விந்தையானது. கொடூரமானது. எவரையும் நம்பாத மனம் அல்ல பிரச்சனை ஓவியா போன்று உற்சாகம் இல்லாதது தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். அந்தப் பெண் இந்த நிலைக்கு வரை என்ன நடந்திருக்கும் என்றே யோசிக்கிறேன். அவள் அம்மாவைப் பற்றி கேன்சர் பற்றி கேள்விப்படுகிறேன், மரணம் தான் எத்தனை எத்தனை தத்துவ விசாரத்தைக் கொடுக்கக் கூடும்.

நான் ஜூலிக்கு இந்த விசாலமான மனம் இருக்கக்கூடும் என்று ஊகித்தேன், ஆனால் இப்பொழுது நடந்து கொள்ளும் விதம்,  அவள் வயது சம்மந்தப்பட்ட ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்று இப்பொழுது நினைக்கிறேன்,  இல்லாவிட்டாலும் கூட இத்தனை புகழுக்காக தன் மீது மண்ணை வாறித்தூற்றிக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கலாம். அதில் உண்மையும் இருக்கிறது. யாருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும், அவள் இன்று பிக்பாஸில் இருந்து வெளியேறினால் அவளை யாருக்குத் தெரியும்.

ஆரவ் நமீதாவை ஐட்டம் கேர்ள் என்று சொன்னால் என்ன நினைப்பாள் என்று கேட்டது ஒரு சரியான கேள்வி, ஆனால் மகனே நீ நடந்து கொள்வதைப் பார்த்து தான் அவள் அப்படி அழைக்கிறாள். நமீதா, ஆரவ் தனக்கு கேர்ள் ப்ரண்டு இருப்பதை காயத்ரியிடன் சொல்லும் பொழுது கேட்டுவிட்டு பின்னர் அவன் ஜூலியுடனும் ஓவியாவுடனும் பழகியதை வைத்துச் சொல்கிறாள். ஆனால் நமீதா இப்பொழுது இறங்கியிருக்கும் இந்த ஆன்மீகப் பயணம் ஏற்கனவே பலர் முயன்றது தான். ரஜினிகாந்த், பாலகுமாரன் பின்னர் தற்காலங்களில் சிம்பு என்று ஐட்டம் பாய் இமேஜில் இருந்து யோக்கியன் இமேஜிற்கு மாறி உத்தி எல்லோரும் பார்த்தது தான். ஆனால் அவள் நினைத்த அந்த இமேஜை கமலஹாசன் அவள் பிக் பாஸ் வீட்டுக்குச் செல்லும் முன்பே உடைத்தது தான் கொடூரம்.

சிநேகன் அவன் அளவிற்கு நியாயமாக நடந்து கொள்கிறானா என்றால் அதுவும் இல்லை, அயோக்கியன். ஓவியாவை, ஜூலியைக் கட்டிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று அவன் நடந்து கொள்வது பிரச்சனையில்லை. அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு ஹக் செய்கிறான் அயோக்கியப்பயல் என்று சொல்வது நியாயமாகாது, ஆனால் அவன் ஒரு ஆண் ஜூலி போல் நடந்து கொள்கிறான் என்பதுதான் பிரச்சனை. பரணியை இவன் நடத்திய விதம் அநாகரீகமானது, ஏன் ஓவியாவைத் தவிர எல்லோரும் பரணியை நடத்திய விதம் அசிங்கமானது. கமலஹாசனின் பரணி பேட்டி இதை எந்த விதத்திலும் குறைத்ததாய் நான் நினைக்கவில்லை. ஆனால் கஞ்சா கருப்பின் முகம் இன்னும் பலருக்கு தெரிந்திருக்கும். சமுத்திரகனியாவது பாலாவது எதுவும் சொல்வார்கள் என்று இன்னமும் மண்டுகம் போல் நினைத்திருக்கிறேன்.

கணேஷை இந்த முறை ஒழித்துக்கட்ட முடியாது, நமீதா தான் அவுட்டு எப்படியும். சாப்பாட்டுப் பிரச்சனையில் கணேஷ் எப்படி நடந்துக்குறார்னு விஜய் டிவி காட்டாமல் நமக்குப் புரியாது. அவர்கள் காட்டப்போவதில்லை. சாப்பாட்டுப் பிரச்சனைக்கு மக்கள் வெளியில் அனுப்ப மாட்டார்கள் என்றே ஊகிக்கிறேன். ரைசா முன்னமே சொன்னது போல் மூளையைக் கழட்டிவிட்டு வந்திருக்கும் மாடல், அவள் வாய்விட்டு எதுவும் சொல்லப்போவதில்லை. வையாபுரி நாமினேட் செய்யப்படும் அடுத்த முறை தப்ப முடியாது. ஆர்த்தியின் சுபாவம் அவர்கள் நாமினேட் செய்ததும் அப்படியே மாறியது, ஆனால் கடைசிவரை அவள் எதையுமே உணரலை, கத்துக்கலைங்கிறது இவளுக்கு மட்டும் இல்லை ஒட்டுமொத்த பிக்பாஸுக்கும் தான்.

சக்தி அவன் பெண்டாட்டியை ஆஸ்பத்திரியில் விட்டுட்டு பிரசவ காலத்தில் வீட்டுக்கு வந்தானாம். ச்சை. வாழ்க்கை அளிக்கும் மிகப்பெரிய பேறில் ஒன்று தன் குழந்தை இந்த உலகத்தைப் பார்ப்பதை நேரில் பார்த்து உணர்வது. என் மகன் பிறந்த பொழுது - இந்தியாவில் - நான் கேட்டும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அவனுக்கு இருக்கும் பணத்துக்கு ஒத்துக் கொண்டிருப்பார்கள் தானே. அதைக்கூட செய்யாத முழுமூடன்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In அயர்ன்பாக்ஸ் சிறுகதை பிறந்தநாள்

மக்கு பொண்டாட்டி


"They tell me" 'OK, this is where we're going to push up your cleavage,' and I'm like 'What cleavage?'" - Natalie Portman

கோபம் பலசமயங்களில் கட்டுப்படுத்தக்கூடியதாய் இருப்பதில்லை, அன்று அகிலாவிற்கும் அப்படித்தான் ஆனது. அகிலா நேற்றுவரை அடக்கிக்கொண்டிருந்த கோபம் இன்று வெளிப்பட்டுவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகியிருந்தது. தாஸ் இப்படிச்செய்கிறவன் இல்லை தான், அது அவளுக்கும் நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது. ஆனாலும் மனம் சொல்பேச்சு கேட்க மறுக்கிறது. அகிலாவின் மனம் கண்டதையும் நினைத்து குழம்பியது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் என்றாலும் எல்லோரையும் போல அவர்களுடைய காதலும் மோதலில் தான் தொடங்கியது. அவர்களின் முதல் சந்திப்பே கூட அத்தனை இனிமையானது கிடையாது, கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் எதேச்சையாக கேன்டீன் பக்கம் போக தாஸ் தன் நண்பர்களிடம் அவளைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.

அவனுடைய நண்பன் ஒருவன் அகிலாவைப்பற்றிக் என்னவோ கேட்க, தாஸ் சொன்ன பதில் அகிலாவை நிலைகுலையச் செய்தது. அவன் அகிலாவை அயர்ன் பாக்ஸ் என்று கூறியதை கேட்டவளுக்கு அவனை கன்னம் கன்னமாய் அறையவேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியது. ஆனால் எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து விலகிவிட்டாள் வேறு என்னதான் செய்யமுடியும் இந்த விஷயத்தைப் போய் எப்படி வெளியில் சொல்வது என்று நினைத்தாள். ஆனாலும் தினமும் அவனை வகுப்பில் பார்ப்பதே வெறுப்பிற்குரியதாய் இருந்தது. எப்படி ஒரு பெண்ணைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் அவள் மாரைப்பற்றிய விமரினத்தை இவர்களால் வெட்கமில்லாமல் வைக்கமுடிகிறது என்பதை யோசிக்க தாஸின் மீது இருந்த வெறுப்பு அதிகமாகியிருந்தது.

அகிலாவின் தாஸ் பற்றிய நிலைப்பாட்டை உறுதிசெய்வதைப் போன்றே பலவிஷயங்காள் தொடர்ந்து நடந்தன. தாஸ் தன்னுடைய நண்பர்கள் ராகிங்கிற்கு உள்ளாக்கப்பட்டதை எதிர்க்கும் நோக்கில், ஒரு புதன்கிழமை, அவனுடைய சீனியர் மாணவர்கள் டை அணிந்துவரும் அதேநாளில் பத்து பதினைந்து நாய்களுக்கு டைஅணிவித்து கல்லூரிக்குள் விட்டுவிட. கல்லூரி முழுவதும் பிரச்சனை ஆகியிருந்தது. கல்லூரி நிர்வாகம் தலையிட்டு அவனையும் அவன் நண்பர்களையும் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்ததில், சீனியர் மாணவர்கள் மகிழ்ந்தார்களோ இல்லையோ அகிலாவிற்கு சந்தோஷம் தாளவில்லை. குறைந்த பட்சம் ஒரு வாரமாவது அவன் முகத்தில் விழிக்காமல் இருக்கலாமே என்றுதான்.

ஆனால் அகிலா எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக தாஸ் நன்றாய் படிக்கக்கூடியவனாயும், அதையும் விட நாடகம், விளையாட்டு போன்ற மற்ற துறைகளிலும் விற்பன்னனாக இருந்தான். இதன் பொருட்டாக அவன் மீது அகிலா கொண்டிருந்த அவமதிப்பு சிறிதளவு குறைந்திருந்தாலும் கோபம் சிறிதளவும் குறையவில்லை. சில மாதங்களிலேயே கல்லூரியின் தமிழ்மன்றத்தால் நடத்தப்பெற்ற பட்டிமன்றத்தில் எதிர்எதிர் தரப்பில் தாஸும் அகிலாவும் பங்குபெற, அகிலா தன் தரப்பிற்கு வைத்த ஏறக்குறைய அத்துனை வாதங்களையும் பொறுமையாய், அதே சமயம் ஆழமாய் நிராகரித்துப்பேச மலைத்துப்போயிருந்தாள். ஆனாலும் சில குறிப்பிட்ட காரணங்களால் அவனின் தரப்பு நன்றாய் பேசியிருந்தபொழுதும் தீர்ப்பு அகிலாவின் பக்கமாய் தரப்பட்டது.

என்னவோ அகிலாவிற்கு தாஸை பாராட்ட வேண்டுமென்று தோன்றியதால், பேசிவிட்டு கீழிறங்கியதும்,

"ம்ம்ம், நல்லா பேசினீங்க. ஆனா உங்கள் பேச்சில் இருக்கும் ஒழுக்கம் செயலில் இருப்பதாய் தெரியவில்லையே?"

அகிலா எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

"நன்றி, நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியலை."

"இல்லை 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'னு பாரதி சொன்னான் ஆனால் இன்னும் மாதர்களையே கொளுத்தும் நிலைமைதான் நீடிக்குதுன்னு ரொம்ப அழகா பேசினீங்க. ஆனா உங்கள் செயல்களில் இதைக்காணோமேன்னு கேட்டேன். ஒரு பெண்ணோட மாரை கண்களால் அளவிட்டு நக்கல் செய்யும் நீங்கள் இது போன்ற தங்க வரிகளை பேசுவது மட்டும் ஏன்னு கேட்டேன். இதற்கான பதிலை நான் உங்கக்கிட்டேர்ந்து எதிர்பார்க்கலை. ரொம்பநாளா மனசுக்குள்ளேயே உறுத்திக்கிட்டிருந்த ஒரு நிகழ்வு அதான் கேட்டேன்." சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்காய் காத்திராமல் வேகமாய் சென்றுவிட்டாள்.

பின்னர் வந்த ஓரிரு மாதங்களில் அவனாக அவளைச் சந்திக்க முயன்றதையும் அகிலா நிராகரித்தாள். இடையில் பல்கலைக்கழகத்தில் அவர்களுடைய கல்லூரியின் சார்பாக பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள தாஸை, கல்லூரி நிர்வாகம் தேர்ந்தெடுத்திருந்தது. அதற்காக நடந்த போட்டியில் அகிலா கலந்து கொண்டிருந்தாலும் அவன்தான் தேர்ந்தெடுக்கப்படுவான் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. அதைப்போலவே அவன்தான் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் போட்டிக்கு ஒருவாரத்திற்கு முன்னர் வண்டியில் இருந்து அவன் கீழே விழுந்ததால் போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில், நிர்வாகம் இவளைத் தேர்ந்தெடுத்தது.

அவனைப்போய் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் அவனுக்கு பதிலாய்த்தான் தான் பங்கேற்க இருப்பதால் அகிலா அவனை சந்தித்து அந்த விஷயத்தை தன்வாயால் சொல்லிவிட நினைத்தாள். இரண்டு நாட்களில் உடம்பில் ஏகப்பட்ட கட்டுக்களுடன் அவன் வகுப்பிற்கு வந்த உடன் போய்ப்பார்த்தவள், அவன் காயங்களைப் பற்றி பெரிதாய் விசாரிக்காதவளாய்,

"உங்களுக்கு பதிலா நிர்வாகம் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கு. அதை உங்கக்கிட்ட சொல்லணும்னு நினைத்தேன்." என்று சொன்னவளிடம்.

"அகிலா அன்னிக்கு நடந்த நிகழ்ச்சிக்கு நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதைத்தவிர வேறெதுவும் சொல்லக்கூடிய தகுதி எனக்கில்லை. மற்றபடிக்கு உங்களுக்கு அந்தப்போட்டிக்கான உதவிகள் எதாவது தேவைப்பட்டால் கேளுங்கள் செய்கிறேன்." சொன்னவன் எதையோ யோசித்தவனாய்.

"இல்லை ஒருநிமிஷம் இருங்க." சொல்லிவிட்டு அவன் பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்தவனாய்.

"தப்பா நினைக்காதீங்க, இதில இதுவரைக்கும் நான் பேசின அத்தனை பேச்சுப்போட்டிகளின் கன்டென்ட்டும் இருக்கு. ஒருவேளை இது உங்களுக்கு உபயோகமா இருக்கலாம்."

அகிலாவிற்கு முதலில் அதை வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும், பின்னர் கல்லு\ரி நிர்வாகம் தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தருவாயில் அவனுடைய குறிப்புக்கள் நிச்சயமாய் உதவும் என்று நினைத்தவளாய் வாங்கிக்கொண்டாள். ஆனால்,

"இத நான் வாங்கிக்கிட்டதால உங்கமேல இருக்குற கோபம் குறைஞ்சிறுச்சுன்னு நினைக்காதீங்க." என்று சொல்லிவிட்டுத்தான் சென்றாள்.

ஆனால் அவன் மேலான கோபம் சிறிது சிறிதாக குறையத்தான் செய்தது, அதுமட்டுமில்லாமல் தாஸ் மீதான ஒருவித ஈர்ப்பு உண்டாவதைப்பற்றிய விஷயத்தையும் அவளால் அதிக நாட்கள், அவள் மனதிற்கு கூடத்தெரியாமல் மறைத்து வைக்க முடியவில்லை. ஆனால், ஒரேநாளில் இந்த மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. அவன் நோட்டைப் படித்ததிலிருந்து அவன் வாசிப்பின் பரப்பை அறிய முடிந்தது. பிறகு முடியாத நேரத்திலும் பல்கலைக்கழகத்திற்கே வந்து அந்தப்போட்டியில் வெற்றிபெற அவளுக்கு உதவியது, பின்னர் அவனுடன் சிறிது சிறிதாக பழகத்தொடங்கியதும் அவன் பல பிரச்சனைகள் பற்றிய அவனுடைய கருத்துக்களை சாயங்கலக்காமல் வெளிப்படுத்தியது இப்படி. அவன் சொல்லிச்சொல்லி அகிலா அவன் மேல் கொண்டிருந்த அவநம்பிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாய் தகர்த்தெறிந்தான்.

இப்படித்தொடங்கிய அவர்களின் நட்பு பின்னர் காதலாக மாறி, கல்லூரி வாழ்க்கையின் நான்காண்டுகளுக்கு பிறகும் தொடர்ந்து பின்னர் அவர்கள் இரண்டுவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு வந்து அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர். ஆயிற்று எட்டுமாதங்கள், நாளை அகிலாவிற்கு பிறந்தநாள், இப்பொழுது அகிலா கடுங்கோபமாய் இருப்பதற்கு காரணம் அவனாக தன் பிறந்தநாளை நினைவில் வைத்திருப்பான் என்று நினைத்திருந்தவளுக்கு முந்தையநாள் மாலைவரை அவனிடமிருந்து அதுபற்றிய குறிப்பெதுவும் கிடைக்கவில்லை. இன்னும் ஆறுமணிநேரம் தான் இருந்தது அவளுடைய பிறந்தநாளுக்கு,

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவனின் கைகளில் பிறந்தநாள் பரிசுப்பொருட்களைத் தேடியவளுக்கு அவன் ஒன்றுமே வாங்கிவராதவனாய் வெறுங்கையை வீசிக்கொண்டுவர கோபம் கோபமாய் வந்தது. அதுவும் வந்தவுடனேயே,

"அகிலா இன்னிக்கு என்ன சாப்பாடு, எனக்கு ரொம்ப பசிக்குது. நாளைக்கு சீக்கிரமா வேலைக்கு போகணும்." சொன்னவனாய் பேண்ட், சட்டையைக்கூட கலட்டாமல் படுக்கையில் சாய்ந்தான்.

அதிலிருந்துதான் அகிலா பித்துபிடித்ததைப் போல் மாறியிருந்தால், அவள் நினைத்திருந்தாள் தாஸ் தன் பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து எதுவும் சர்ப்ரைஸாக பரிசளிப்பான் என்று, தன் பிறந்தநாளிற்காக விடுமுறை எடுத்துக்கொண்டுவந்து வெளியில் அழைத்துச் செல்வான் என்று. ஏனென்றால் அவர்கள் காதலித்த காலங்களில் இதெல்லாம் வழக்கம்தான், அசட்டுத்தனமாக எதுவும் செய்யாமல் ஜேஜே சில குறிப்புகள், உபபாண்டவம் போன்று அவளுக்கு முன்பே அறிமுகம் ஆகாத ஒன்றை அந்தநாளில் கொடுத்து அசத்துவான். பெரும்பாலும் அவர்களின் கருத்துப்பரிமாற்றம் பிரச்சனையில் தான் முடியும் ஆனால் அன்றுமட்டும் தான் என்ன சொன்னாலும் மறுக்கமாட்டான். இது போன்ற காரணங்களால் தான் திருமணம் ஆனபிறகு பழசையெல்லாம் மறந்துவிட்டான் என்று நினைத்து அகிலாவிற்கு கோபம் வந்தது.

முதலில் அவனிடம் ஒன்றுமே பேசாமல் சாப்பாடு போட்டவள், பின்னர் மெதுவாக நாளை தினத்தைப் பற்றி லேசுபாசாய் குறிப்பிட்டாள். ஆனால் அவனோ இதையெல்லாம் குறித்துக்கொள்பவனாக இல்லாமல், கருமமே கண்ணாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பின்னர் கைகழுவிவிட்டு படுக்கைக்கு வந்தவன் விளக்கணைத்துவிட்டு தூங்கத்தொடங்க, மொத்தமாய் குடிமுழுகிப்போனதாக நினைத்தவளாய்.

"தாஸ் நாளைக்கு எனக்கு பிறந்தநாள்." சொல்லியேவிட்டாள்.

இதைக்கேட்டும் கொஞ்சமும் சுவாரஸ்யம் காட்டாதவனாய்,

"அப்படியா வாழ்த்துக்கள்." சொல்லிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான்.

அவளுக்கு இது பெருத்த ஏமாற்றத்தையளித்தது, எல்லோரும் சொல்வது போல் காதலிக்கும் வரைதான் அத்தனையும் போல என்று நினைத்தவளாய்.

"நாளைக்கு நாம ரெண்டுபேரும் கொஞ்சம் வெளிய போலாமா, எனக்கு கொஞ்சம் பர்சேஸ் பண்ணனும்." இதையும் நேரடியாகக் கேட்டாள்.

ஆனால் திரும்பிக்கூட பார்க்காமல்,

"என் டெபிட், கிரெடிட் கார்ட் இரண்டும் உன்கிட்டத்தான இருக்கு, போய் என்ன வாங்கணுமோ வாங்கிக்க, வேணும்னா காரை விட்டுட்டு போறேன். நாளைக்கு முக்கியமான வேலையிருக்கு."

இந்த பதிலால் விரக்தியானவளாக அவளும் படுத்துக்கொண்டாள், அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது அவன் நடந்துகொள்ளும் விதம். இப்படி நடந்துகொள்பவன் கிடையாது, இன்று அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையிருந்திருக்குமா என்று யோசித்தாள். அவள் நாளை விடுமுறை போட்டிருந்தது வீணாய்ப்போய்விட்டதை நினைத்துப்பார்த்தால். இதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப்போல் அவள் அவனுக்கு சர்ப்ரைஸாய் சொல்ல ஒரு விஷயம் வைத்திருந்தாள். அதை நினைத்தபொழுது தான் அழுகை அழுகையாய் வந்தது. அவள் மறுபக்கம் திரும்பிப்பத்த சிறிது நேரத்தில் அவள் அவள் இடுப்பில் கையைப்போட, கோபம் வந்துவிட்டது அகிலாவிற்கு.

"போங்க போய் ஆபிஸையே கட்டிப்பிடிச்சிக்கிட்டு தூங்குங்க அதுக்கு மட்டும் நான் வேண்டுமா?" சப்தம் போட்டாள்.

"இப்ப எதுக்கு நீ இப்படி கத்துற. நான் இதுவரைக்கும் உன் பிறந்தநாளுக்கு கூடவே இல்லாதமாதிரியில்ல கத்துற. ஏதோ கொஞ்சம் வேலையிருக்குன்னு சொன்னா புரிஞ்சிக்கமாட்ட. ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிற. அதான் என்ன வேணும்னா வாங்கிக்கன்னு சொல்லிட்டன்ல அப்புறமேன் தொட்டதுக்கெல்லாம் சிணுங்குற." சொல்லியவனாய் அவளை அருகில் இழுத்தான்.

அவளுக்கும் சம்மதம்தான் ஆனால் தன் பிறந்தநாளை மறந்துவிட்டு, என்னவோ காசுதான் கொடுக்குறனேன்னு சொல்லும் புருஷனை நினைத்தால் எரிச்சலாய் வந்தது. இதே அவன் மட்டும் ஒன்றுமே வாங்கிக்கொடுக்காமல் புன்னகைத்தபடி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு, நாளைக்கு வேலையிருப்பதாய் சொல்லியிருந்தால். அவனுக்காக எத்தனை மணியானாலும் காத்திருந்திருப்பாள். ஆனால் அன்று அவன் நடந்துகொண்ட முறை சுத்தமாய் அவளுக்கு பிடிக்கவில்லை.

அவன் அவள் அனுமதியில்லாமலே உடைகளை நீக்கிக்கொண்டிருந்தான். அவனையே வெறித்துப்பார்த்தவளாய் தடுக்காமல் கல்லைப்போல் படுத்திருந்தாள். தன்னிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லாவிட்டால் விட்டுவிடுவான்னு நினைத்த அவளின் எண்ணத்தை தகர்த்தபடி அவன் அவள் கண்களையே பார்க்காமல் முன்னேறிக்கொண்டிருந்தான். அவளால் இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை தன் விருப்பமில்லாமலேயே தன்னைப்பெற நினைக்கும் அவனை தடுக்க நினைத்தும் முடியாதவளாய், அவன் விருப்பத்திற்கு ஒத்துழைக்கவும் முடியாதவளாய், தான் இழந்துவிட்ட ஆடையின் இயலாமை பீடித்தவளாய், அவன் முதல் தொடுதலில் அழுதுவிட்டாள்.

அதுவரை முன்னேறிக்கொண்டிருந்தவன் அவள் அழுகை சப்தம் கேட்டதும் நிறுத்திவிட்டு சிறிதுநேரம் அவளையே பார்த்தான்.

"எந்திரிடீ." அவன் அதட்ட,

படுக்கையிலிருந்து எழுந்தவளை அங்கிருந்து நேராய் உள்ளறைக்கு அழைத்துச் சென்றான். முதலில் அவனுடைய பீரோவைத் திறந்தவன் அங்கே மறைத்து வைத்திருந்த பட்டுப்புடவையை எடுத்துக்கொடுத்தான். அழுத கண்களுடன் இதையெல்லாம் அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கையில், பின்னர் ஒரு சிறிய பிறந்தநாள் கேக்கை கொடுத்து சிறிய கத்தியால் வெட்டச்சொன்னான். வெட்டிய கையின் மோதிரவிரலில் அப்படியே ஒரு தங்க மோதிரத்தை அணிவித்தவனிடம்.

"ஏன் இப்புடி பண்ணீங்க?" இன்னும் அவளால் அழுகையை நிறுத்தமுடியவில்லை.

"சும்மா விளையாட்டுக்குத்தான், இதுதானே நாம கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கப்புறம் வர்ற உன்னோட முதல் பிறந்தநாள் அதான். நீ பிறந்தப்ப எப்படி இருந்திருப்பேன்னு பாக்கலாம்னு..."

சொல்லிவிட்டு சிரித்தவனை அகிலா முறைக்க,

"இங்கப்பாரு ஆரம்பத்திலேர்ந்தே உனக்கு ஒரு விஷயமும் தெரியாது. காலேஜில் நான் உன்னைப்பத்தி கமென்ட் அடிக்க எம்மேல ரொம்பக் கோபமாயிருந்த ஞாபகமிருக்கா. அப்ப ஒருநாள் நீ என்கிட்ட நேருக்குநேராய் எப்படி உங்களால வெளியில பேசுறது ஒன்னாவும் செய்யறது ஒன்னாவும் இருக்க முடியதுன்னு கேட்டப்பவே நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சுட்டேன். பின்னாடி உன்கிட்ட பேசணும் பழகணும்னு தான். நான் வேணும்னே அடிப்பட்டுடதாய் பொய் சொல்லி உன்னை பேச்சுப்போட்டிக்கு போக வைச்சேன். அன்னைலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் நான் என்ன நினைச்சேனோ அதேமாதிரிதான் நீ செய்திருக்க.

என் மக்கு பொண்டாட்டி எப்பவுமே நான் நினைக்கிற மாதிரிதான் நினைப்பான்னு எனக்குத்தெரியும். அது இன்னிக்கும் ப்ரூப் ஆயிருக்கு. இந்தப்பொருளையெல்லாம் நான் ஒருவாரத்திற்கு முன்பே வாங்கிவிட்டேன் கேக்மட்டும்தான் புதுசு. அப்புறம் நாளைக்கு நான் லீவு போட்டாச்சு, உன்னைய அழுவவிட்டதுக்கு பரிகாரமா நாளைக்கு நீ என்ன கேட்டாலும் ஸாங்ஷன். எல்லாமே உன் உத்திரவுதான்."

அவன் அவளை ஏமாற்றியதை பெருமையாக சொல்லிக்கொண்டிருக்க முதலில் சிரித்தவள் பிறகு,

"உண்மையிலேயே நான் ஏமாந்திட்டேன் தான். உங்க மக்கு பொண்டாட்டி உங்களுக்காக இன்னிக்கு ஒரு சர்ப்ரைஸ் வைச்சிருந்தேன். ஆனா நீங்க காலேஜிலேர்ந்து என்னை ஏமாத்திட்டு வர்றதால உங்கக்கிட்ட சொல்லமுடியாது." என்று சொன்னவளிடம் என்னவென்று கேட்டு, தாஸ் கெஞ்சத்தொடங்க. முதலில் கொஞ்ச நேரம் சொல்லாமல் அலட்டியவள்.

சிறிது நேரம் கழித்து, "உங்க மக்கு பொண்டாட்டி வயித்தில உங்க குட்டிப்புள்ள வளருது." சொன்னவளாக வெட்கம் தாளாமல் அவனைக்கட்டிக்கொண்டாள். முதலில் நம்பமுடியாதவனாய் அப்படியா அப்படியா என்று கேட்டவன், பின்னர் மெதுவாய் அவள் வயிற்றைத்தடவ உள்ளேயிருந்த இரண்டுமாத சிசு, 'அய்யோ இப்படி ஒரு மக்குக் குடும்பத்தில் போய் பிறக்கப்போறமே' என்று நினைத்துக்கொண்டு சிரித்தது.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In American Diary

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்




அமெரிக்காவிலிருந்து பயந்துபோய் இந்தியாவிற்கு வெளியேறிய இந்திய க்ரூப் ஒன்று எப்பொழுதும் உண்டு, நான் வேலை பார்த்த, டெல்லி புனே பெங்களூர் என்று அத்தனை இடங்களிலும் இப்படிப்பட்டவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குள் அடிபட்ட புலி ஒன்றுண்டு பசியுடன், பொதுவாக கொஞ்சம் விலகியே இருப்பது அவர்களிடம்.

என்ன சொன்னாலும் இங்கிருக்கும் இந்தியர்கள்/கொஞ்சம் அமெரிக்கர்களும் அவர்களை தோற்றுப்போனவர்களாகவே கருதுகிறார்கள், இதைப்பற்றி நிறைய பேசியதுண்டு. இவர்களிடம் சமயங்களில் வெளிப்படும் துவேஷம் கடும் விஷத்துடன் இருக்கும். இவர்களை நீங்கள் சுலபமாக அடையாளம் காண முடியும்.

இவர்களில் ஒருவனாக நான் மாறிவிடக்கூடும் என்பதால் இவர்களைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். நாள்தோறும் மாற்றத்துடன் சுழலும் எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்று நானறியேன். ஆனால் வெஞ்சினம் இல்லாமல் தோல்வியை ஒப்புக்கொண்டவனாய் வெளியேறிவிடவே ஆசைப்படுகிறேன். காத்திருந்து கீறுவதில் இல்லை உடன்பாடு. எத்தனை நேரம் ஆகிவிடும் மற்றவர்களுக்கு திரும்ப கீறிவிட.

ஜாக்கிரதை பிள்ளாய்!

---------------------------------------

அமெரிக்கா வந்து அஞ்சி வருஷமாச்சி, இன்னும் யாராவது NRIன்னு சொன்னா, யாரு யாருன்னு தான் மனசு தேடுது.

நானும் NRI என்று மனம் ஒத்துக்க மாட்டேங்குது. :) May be because I had a very high opinion about them. :) யாரோ ஒருத்தர் டிவிட்டரில் என்னை NRIன்னு திட்டம்பொழுது யாரையோ திட்டறார்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். :)

அய்யோ அய்யோ!


---------------------------------------


நாங்கள் முதல் நாள் இரவு பத்து மணி போல் One World Centerற்குச் சென்றிருந்தோம், ஒரு திட்டமிடப்படாத பயணம். இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருப்பது இந்த One World Center. 9:00மணி இரவிற்கு மூடிவிட்டதால், அன்னாந்து பார்த்துவிட்டு வந்துவிட்டோம். இதைச் சொல்வதற்குக் காரணம் அன்றிலிருந்தே ஒரு வகையான உணர்ச்சிகரமான மனநிலை இருந்தது.

அடுத்தநாள் Intrepid museum சென்று மீண்டதும் நாங்கள் அல்பேனி மீள்வது தான் திட்டமாக இருந்தது. ஆனால் என்னவோ 911 museum சென்று வரவேண்டும் என்று தோன்றியது. Intrepid museumத்தில் நடந்து ஏற்கனவே முழுமையாக சோர்ந்து போயிருந்தோம். சரி கடைசியாய் இதைப் பார்த்துவிட்டு மூட்டையைக் கட்டுவோம் என்று முடிவெடுத்தோம்.

911 Museum waterfall அருகில் வந்து சில நிமிடங்கள் நின்றிருந்தோம். அங்கே இறந்தவர்களின் பெயர்களை கிரானைட் கல்லில் செதுக்கி வைத்திருந்தார்கள். அதில் ஒரு பெயர் சட்டென்று மனதைக் கவ்வியது. ‘X with her Unborn Child' என்று. உடன் வந்தவர் அந்தப் பெயரையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு அந்தப் பெயரைத் தடவியபடி இருந்தார். நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.

Unborn Child என்பது எனக்கு புதிய விஷயம் கிடையாது, கிட்டத்தட்ட 10 வருடங்களாக நான் அறிந்த Use Case தான். நாங்கள் வேலை செய்யும் டொமைனில், Pregnant Women, Unborn Child எல்லாம் Use Caseகள். அமெரிக்கர்களுக்கு உதவி செய்ய பெரும்பாலும் கேட்கும் கேள்விகள் தான். அதன் பின்னே அவர்களுடைய benefit களுக்குக்கான ரூல் என்று unborn child பற்றி டெக்னிக்கலாக நிறைய பேசியிருக்கிறோம், எழுதியிருக்கிறோம் - ப்ரொக்கிராம்கள். ஆனால் அவை எல்லாமே உயிருடன் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றியது. ஆனால் அங்கே குறிப்பிட்டிருந்தது, ஒரு கர்ப்பிணி பெண்ணைப் பற்றி, அவளுடைய இன்னமும் பிறக்காத குழந்தையைப் பற்றி.

பின்னர் 911 Museumத்தில் விமானத்திலிருந்து வாய்ஸ் மெயில் விட்டவர்களில் குரலைக் கேட்ட தருணத்தில் நான் வெளியேறிவிட்டேன். என் மொபைல் ஸ்விட்ச்ட் ஆஃப் என்று தெரியும் நண்பர் தேடுவார் என்று தெரியும். ஆனால் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. நண்பர் பின் என்னைத் தேடிக் கண்டுபிடித்து பின்னர் நாங்கள் சரவணபவன் வந்து உட்கார்ந்ததும். அந்தக் கேள்வி வந்தது, எங்கப் போனாய் என்று. நான் அவரிடம் ‘I couldnt take it' என்று சொன்னேன். அப்பொழுது அவர் 10 நிமிடம் அந்த ‘Unborn Child' என்ன பாடு படுத்தியது என்று சொன்னார். நாங்கள் இருவருமே எமோஷனலாக இருந்தோம். அதைப் பற்றி நான் அவரிடம் முன்பு பேசியிருக்கவில்லை, ஆனால் அவரும் கவனித்திருக்கிறார், அந்த வார்த்தை தன்னை எப்படி உலுக்கியது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

நாங்கள் இருவருமே முன் பின் பார்த்திருக்காத அந்த இன்னமும் பிறக்காத குழந்தை எங்களை ஆட்டிப் படைக்கும் திறமையுள்ளதாக இருந்தது. இனி Unborn Child Used Caseஐப் செயல்படுத்திப் பார்க்கும் பொழுதெல்லாம் நினைவில் வரக்கூடும் அந்தக் குழந்தை. இனி அந்தக் குழந்தையை எப்படி மறப்பது?!

PS: இந்த டிரிப் சென்றிருந்த பொழுது, நியூயார்க் சிட்டியில் எடுத்த புகைப்படம் இரண்டு. ப்ரூக்ளின் ப்ரிட்ஜ்.




------------------------------------

இப்பொழுதுகளில் ஒருவரை தூக்கியெறியவும் கட்டிக்கொள்ளவும் ஒரு நிகழ்வே போதுமானதாய் இருக்கிறது.

கேரள சிஎம் நெருக்கமானது இப்படித்தான்.

ஞானி நெருக்கமானதும் இப்படித்தான். புலிக்குகை பற்றி அவர் எழுதிய வரி ஒன்று போதுமெனக்கு.

மனதுக்குள் பிரியாரிட்டி கொண்ட லிஸ்ட் எப்பொழுதும் உள்ளது. இத்தனைக்கும் பின்னர் PAKஅய் தூக்கியெறிய முடியாததை இன்னமும் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டும். அவர் விஷயத்தில் எனக்கு உள்மனதுக்கு புரிந்ததொன்று உண்டு. புலிகள் விஷயம் எனக்கு எமோஷனலாக ரொம்பவும் முக்கியமான ஒன்று. ஆனால் அதைத்தாண்டியும் என் எல்லை விரியுமென்பது. அதில் முதலாவது ராஜன் இரண்டாவது PAK.

இன்னமும் யோசித்துப்பார்க்கணும்.

மனைவி மக்கள் இல்லாத இந்தப் பொழுதை மீண்டும் புக்கோவிஸ்கியிடம் இழக்காமல் இருக்கணும். 

-----------------------------------






இந்தப் பதிவில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் நான் எடுத்தது தான். ப்ரிஸ்மா அவுட்புட்டில்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Miranda Kerr Only ஜல்லிஸ் Super Models Victoria Secret மிராண்டா கெர்

Miranda Kerr - Victoria Secret Angel

இது ஒரு பச்சை ஆணாதிக்கப் பதிவு - பெண்ணியவாதிகள் படித்து சர்ச்சை செய்ய வேண்டாம் படிக்காமல் விட்டுவிடலாம்.



நான் முதன் முதலில் விக்டோரியா சீக்ரெட் என்ற பெயரைக் கேட்ட பொழுது என்னமோ ஏதோ என்று நினைத்தேன் அப்பொழுது எனக்கு விடலை வயது. பின்னர் “ஸ்ட்ராப்லெஸ் ப்ரா”க்களும் “பிங்க் தாங்”களும் அறிமுகமான பொழுதில் விக்டோரியா சீக்ரெட் என்பது அமேரிக்காவின் நாயுடு ஹால் என்பது தெரிந்தது ஆனால் விசியை நாயுடு ஹாலோடு ஒப்பிடும் புத்தி எத்தனை மொக்கையானது என்பது அவர்களின் கலை ஞானத்திலும் அவர்களின் உபயோகிக்கும் மாடல்களின் கலை அம்சத்திலும் தெரிந்து போனது.

Adriana Lima, Alessandra Ambrosio, Doutzen Kroes என்று எத்தனையோ தேவதைகள் அன்ன நடை பயன்று ஆச்சர்யப்படுத்தினாலும் Miranda Kerr, மீது ஒரு தனிக்காதல் வந்தது. அழகான பூக்கூட்டத்தில் ஒரு பூ பிடித்திருக்க அந்தப் பூ பிடித்திருக்கிறது என்பது மற்ற பூக்கள் பிடிக்காது என்பதால் அல்ல, மற்ற பூக்களை விட இது பிடித்திருக்கிறது காரணம் சொல்ல முடியாமல். பெரும்பாலும் Miranda Kerr போன்ற சூப்பர் மாடல் பிகர்ஸ் அதிகபட்சம் பிகினியிலும் இல்லாவிட்டாலும் அதுவும் இல்லாமலும் தான் என்பதால் எனக்கு இந்த தேவதைகளை, இங்கே பதிவுலகத்தில் சரியாக அறிமுகம் செய்ய இயலவில்லை(lol). இப்படி அறிமுகம் செய்ய நினைத்ததற்கு இன்னொரு முக்கியமான காரணம் இணைய வெளியில் Miranda Kerrஐத் தேடிக்கொண்டு என் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை தான். சரி ஒழிஞ்சி போங்க ‘நீங்கள் கேட்டவை’ அப்படின்னு எழுதுறேன்.

இந்தப்பிகரை நான் முன்னமே இந்தப் பக்கங்களில் பார்த்திக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் சரிதான், இரவின் தொடர்ச்சியாய் எப்பொழுதும் அறியப்படாத பகல் போன்ற என் கதைகளின் தேவைக்கு ஏற்ப தேவதையை நான் உபயோகித்திருக்கிறேன். இப்பொழுது சூப்பர் மாடகளில் சூப்பர் பொழுதுபோக்கு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அவர்களைக் கவனித்து வருபவர்களுக்கு நன்றாய்த் தெரியும். Miranda Kerrவும் அதற்கு விதிவிலக்கல்ல, அம்மணி தற்சமயம் Orlando Bloomன் காதலி அவரின் குழந்தையை தற்சமயம் சுமந்து வருகிறார். அதே போன்ற இந்த சூப்பர் மாடல்களின் இன்னொரு பொழுது போக்கான குழந்தை சுமக்கும் காலங்களில் எடுத்துக்கொள்ளும் அற்புதமான புகைப்படங்களிலும் Miranda Kerr கவனத்தைச் செலுத்தி ஒரு வாரத்திற்கு முன் வெளியான அவர் படம் அவருடைய இயல்பான அழகை இந்தக் காலம் எப்படி மெருகேற்றியிருக்கிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக்குகிறது.

தேவதையை நான் வரையவும் செய்திருக்கிறேன்.(தற்சமயம் படங்கள் இல்லாததால் பின்னர் இந்தப் பதிவு அந்தப் படங்களுடன் அப்புடேட்டப்படும்).

எனக்கு Mirandaவைப் பிடித்துப் போய்த் தேடத்தொடங்கியிருந்த நாட்களில் இணையவெளியில் அத்தனை புகைப்படங்கள் இல்லை தான் ஆனால் இன்றிருக்கும் அளவு ம்ம்ம் அருமை. இணையத்தில் இப்படி ஒரு சூப்பர் மாடலை அறிமுகப்படுத்தி வைக்க மட்டுமே நான் செய்கிறேன் மீதி தேடிப்பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. இணையத்தில் Miranda Kerrற்காக நான் அதிகம் பார்க்கும் இணையதளம் இது NSFW என்றால் புரியுமா தெரியவில்லை பொதுவாவே சொல்லிடுறேன் Not Safe For Work. தேவதைகளுக்கு ஆடைகள் தேவையில்லை என்று உணர்பவர்கள் மட்டும் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 9

"அசந்து தூங்கிட்டிருந்த, அதான் எழுப்ப மனமே வரலை..." சொல்லிவிட்டு மோகன் முறுவளித்தான்.

மெதுவாய் சோம்பல் கலைத்தபின் அவனைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்தபடியே “நான் தூங்கிக் கொண்டிருந்தது தான் காரணமா இல்லை வேறதெவும் இருக்கா?” அவளும் சிரித்தாள். அவள் கண்களில் அன்றைக்கு ஹாஸ்டலுக்குப் போக முடியாது, மீண்டும் கனிமொழி வீட்டிற்கும் போக முடியாது என்கிற பயம் தெரியவில்லை விளையாட்டுத்தனம் தான் தெரிந்தது. அவள் அறைக்குள் வந்த நேரத்தை வைத்து அவள் அங்கே இரவு தங்கிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் தான் வந்திருக்க வேண்டும் என்று நினைத்தான். இரவு அவனுடன் தங்குவதாய் இருந்தால் அதற்கான சாதக பாதகங்களையும் அவள் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும், அந்த நினைப்பே அவனுக்கு அன்றைய இரவுப்பொழுது ஏற்படுத்தப்போகும் சந்தர்ப்பங்களை விளக்கியது.

அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு, “வேறென்ன காரணம் இருக்க முடியும் அகிலா.” என்றான்.

அவள் முகத்திலிருந்த சிரிப்பு விலகவேயில்லை, கொஞ்சமாய் சிவக்கத்தொடங்கியிருந்தது அவள் முகம் “அப்படின்னா எனக்கொன்னும் பிரச்சனையில்லை. ஆனால் பூனை இந்தக் கட்டில் பக்கம் மட்டும் வரக்கூடாது.” என்றாள். கீழே உட்கார்ந்து லாப்டாப்பில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவன் எழுந்து போய் அவள் கால்மாட்டில் அமர்ந்தான். இடது கை ரொம்பவும் பழக்கப்பட்டது போல் அவள் பாதங்களை அமுக்கிவிடத் தொடங்கியது அம்மாவிற்கு அமுக்கிவிட்ட பழக்கம். பாதத்தில் இருந்து தொடங்கினான். முதலில் தடுப்பதற்காய் எழுத்தொடங்கியவளை வலது கையால் தள்ளிப் படுக்கவைத்தேன். பஸ்ஸில் வந்த களைப்பு அவள் கால்கள், அவன் கைபேச்சுக் கேட்கத் தொடங்கியது. அவள் வைத்தக்கண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கால்கள் மிகவும் மிருதுவாய் இருந்தது அவன் கைகளுக்கும் அவள் கால்களுக்கும் இடையில் அவள் சுடிதார் பாண்ட் இருந்த பொழுதும் அவனால் உணர முடிந்தது. முட்டிக்கு மேல் செல்லாமல் இரண்டு கால்களையும் மடியில் போட்டு அமுக்கிவிடத் தொடங்கினான்.

“உங்க அப்பா எப்படியிருக்காரு?” அதுவரை அவளாய்ச் சொல்லாமல் அவளுடைய அப்பாவைப் பற்றி அவன் கேட்டதில்லை. அந்த ஆச்சர்யம் அவள் முகத்தில் தெரிந்தது.

“நல்லாயிருக்காரு உங்களைப்பத்தி லேசா சொல்லி வைச்சிருக்கேன். அப்படியா அப்படியான்னு கேட்டுகிட்டாரு.” சொன்னாள்.

“ஊரெல்லாம் எப்படியிருக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பியே ஊரில்?” கேட்டான் அப்படியிருக்கக் கூடாது என்று வேண்டியபடியே.

“ஏன்டா போனோம்னு ஆயிடுச்சி, அப்பாவுக்காகத்தானேன்னு மனதை அடக்கிக்கிட்டேன்” ஏன் என்பது போல் பார்த்தான். “இங்கையாவது உங்களை பார்க்க முடியாட்டாலும் பக்கத்தில் தான இருக்கிறோம் வேணும்னா பார்த்துக்கலாம்னு நினைப்பேன். அங்க அப்படியில்லை உங்களைப் பார்க்காமல் ரொம்பக் கஷ்டமாயிருந்துச்சு. பல்லக் கடிச்சிக்கிட்டு பதினைஞ்சு நாள் பொறுத்துக்கிட்டேன். எதைப்பார்த்தாலும் உங்க ஞாபகம் தான் வரும். உங்களுக்கு இந்தப் பதினைஞ்சு நாளில் என் ஞாபகம் வந்ததா?” அபாயமான ஒரு கேள்வியைக் கேட்டாள்.

உண்மையில் அவளைப் பற்றிய நினைப்பு அவனுக்கு அவ்வப்பொழுது வந்து கொண்டுதான் இருந்தது.

“வந்தது அகிலா, ப்ராஜக்டில் பிஸியா இருந்ததால அவ்வளவு மிஸ் பண்ணினேன்னு சொல்ல முடியாட்டாலும் மிஸ் செய்தேன் தான்.” உண்மையை உளறிக்கொட்டினான்.

அவள் சொன்னாள், “நான் நினைச்சேன் இப்படித்தான் இருக்கும்னு. இந்த இரவுக்காக நீங்க மாறலைங்கிறது சந்தோஷமா இருக்கு. ஆனா உங்க நினைப்பு என்னைப் பாடாப்படுத்திருச்சு. கண்ணை மூடி தூங்கினா கனவு முழுக்க நீங்க தான். எங்க ஊரு எங்க அப்பால்லாம் இருக்காரு ஆனால் நீங்களும் எங்கிருந்தோ வர்றீங்க முத்தம் கேட்கிறீங்க. இது மாதிரியே தான் கனவு, இழவு முத்தம் கொடுத்தே தொலைஞ்சிருக்கலாம்னு இருந்தது.” கொஞ்சம் நிறுத்தினாள் பின்னர், “இப்ப பஸ்ஸுல வர்றப்ப கூட அப்படித்தான் ஆனால் அதில் முத்தத்தில் நிக்கலை. சட்டுன்னு முத்தத்தில் ஆரம்பிச்சு என் உடம்பெல்லாம் உங்க கை நகறுது நான் தட்டிவிடுறேன்னு நினைச்சு பக்கத்தில் இருக்கிற அம்மா கையைப் பிடிச்சு உதற்றேன் பஸ்ஸில். ஒரே காமடியாப் போச்சு.” அவள் கனவு அவனுக்கு ஊக்கத்தை அளித்தாலும் தானாய்த் தொடங்காமல் இருந்தான் அவளை வற்புறுத்தக்கூடாது என்று நினைத்து அதுவும் அவள் அவன் கேட்டால் எதையும் கொடுப்பாள் என்று சொன்ன பிறகு இது சாதாரணமாய் இயல்பாய் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

“அப்ப அந்த முத்தத்த கொடுத்துத்தான் தொலையேன்.” வேண்டினான். இந்த முறை அவள் மறுப்பொன்றும் சொல்லவில்லை கால்களை அவன் மடியில் இருந்து விடுவித்துக்கொண்டு, அருகில் வந்து அவன் கன்னங்களை கைகளால் பிடித்து உதட்டில் முத்தமொன்று கொடுத்தாள், முடித்த பொழுது “இன்னொன்னு கொடேன்” என்றான். இன்னொன்று கொடுத்தவளிடம் “நல்லாயிருக்கு, இன்னொன்னு கொடு” என்றான். இந்த முறை அவள் உதடுகளைப் பிரிக்காமல் சிறிது நேரம் நீண்டிருந்தாள். அவன் வலது கை அதுவாய் அவள் மார்புகளை நோக்கி நகர்ந்தது, அது வரை அவள் துப்பட்டாவிற்குள் மறைத்து வைத்திருந்த இரட்டையர்களின் அளவு கைகளில் தெரிந்தது. உதடுகளைப் பிரிக்கும் வரை அவள் கைகளைத் தவிர்க்கவில்லை உதடும் மார்பும் ஒரே சமயத்தில் பிரிந்தது.  அவனுடையது ஏதோ ஒன்றை இருந்து பிரித்து எடுத்துச்செல்வதைப் போலிருந்தது அவனுக்கு அந்தச் செயல். கட்டிலில் சற்று தூரத்தில் சென்று உட்கார்ந்து “போதுமா?” என்றாள். அவன் இன்னமும் அவளுடைய மென்மையான உதடுகளை உதட்டிலும் அவளுடைய சாந்தமான மார்பை கைகளிலும் உணர்ந்து கொண்டிருந்தான், அடைந்த பரவசம் கண்களில் தெரிந்திருக்க வேண்டும்.

அவன் குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு “அவ்வளவு தானா?” என்றான் கண்கள் நிறைந்த ஆசைகளுடன். “வேறென்ன வேணும் பாப்பாவுக்கு, எனக்கு அவ்வளவு தானே தெரியும். வேறெதுவும் வேணும்னா சி சொல்லிக்கொடுத்த மாதிரி சொல்லிக் கொடுத்தாத்தான் உண்டு.” அவள் குரலும் அந்தச் சூழ்நிலையும் சேர்த்து அவள் சொன்ன வார்த்தைகள் அவனுக்கு பெரும் மயக்கத்தை ஏற்படுத்தியது. அவளிடம் கம்பீரமான வெட்கம் இருந்தது, அவள் வேண்டாம் என்று சொன்னாள் விலகிவிடுவான் என்கிற தெளிவு அவளுக்கு அந்த துணிச்சலை அளித்திருக்கவேண்டும். ப்ராஜக்ட் அவளைப் பற்றிய சிந்தனையிலிருந்து இயல்பாக விடுவித்திருந்தது, ஆனால் பிரிவும் அவன் மீது கொண்டிருந்த ஆழமான காதலும், இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த பேருந்து பயணமும் அவளை மனதளவில் தயார்ப்படுத்தியிருந்தது. அவளை இழுத்து மடியில் போட்டான். ஆட்டுக்குட்டியைப் போல் மடியில் படுத்திருந்தாள். முதலில் கண்களை மூடியபடியே இருந்தாள், பின்னர் திறந்த கண்களில் மோகம் தெரிந்தது, கொஞ்சம் சிரமப்பட்டு அவள் முதுகுவழி கைவிட்டு ஹூக்கைக் கழட்டினான் அவள் முதுகை ஒருமுறை விரித்துப்பார்த்து, “பாப்பாவிற்கு இதெல்லாம் தெரியுதே...” அவள் கண்கள் இன்னும் விரிந்தது. தொடர்ந்து, “சொல்ல மறந்துட்டேன், எங்க ஊர் தையக்காரம்மா சொன்னாங்க. என் சைஸ் 30B யாம். அவ்வளவுதான்பா அதுக்கு மேல வேணும்னா வேற யாரையாவது தான். தேடணும்”. வேறொரு சமயமாயிருந்தால் அவள் சொன்னது இன்னொரு அடல்ஸ் ஒன்லி உரையாடலுக்கு வழிவகுத்திருக்கும். ஆனால் சீறும் மூச்சுடன் அவன் மடியில் படுத்திருந்த அவள் மேல் விரல் ஓடிக்கொண்டிருந்த பொழுதில் பதில் சொல்ல வாய்வரவில்லை. அந்த அறையில் மெல்லியதாய் ஒளி சமையலறையில் இருந்து வந்து கொண்டிருந்தது. அவன் ஏற்கனவே அவிழ்ந்து கிடந்த பூமியில் ஆராய்ச்சியாளனின் தேர்ச்சியுடன் தேடுதலைத் தொடங்கியிருந்தான். தேடுதலுடனேயே அவர்கள் உரையாடல் நீண்டது. தேடுதல் முடிவடைந்த பொழுது அவள் முகத்தில் தெரிந்த வெட்கம் கலந்த மகிழ்ச்சி அவன் தியரியை அதுவரை ஒழுங்காக படித்திருந்தான் என்று நிறுவியது.

காலையில், "யேய், காலேஜ் வரலை?" அவளிடம் கேட்டான்.

"நீங்க போங்க, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு, போறப்ப ஒரு சாவியை இங்க வைச்சுட்டு வெளியில பூட்டிட்டு போயிருங்க"

திரும்பவும் பதினைந்து நாள் கழித்து பார்த்ததால், அன்றைக்கு எல்லாருடனும் பேசிக்கொண்டிருந்து விட்டு, இந்த செமஸ்டர் எல்லாரும் என்ன புரோஜக்ட் செய்யப் போகிறார்கள் என்று கேட்டுக் கொண்டிருந்ததில் மூணு மணிநேரம் ஓடியதே தெரியவில்லை. சாப்பிட கான்டீன் வந்தால், மாம்பழ கலர் பாவாடையும் கருப்பு கலர் தாவணியும் போட்டுக்கிட்டு, ஷாம்பூ போட்ட குளிச்ச தலைமுடி பறக்க, நெத்தியல அழகா, சிறியதாய் ஒரு குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு அகிலா தேவதை போல் நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய வெளிர் மாம்பழ நிற உடம்புக்கு அந்தக் கருப்பு தாவணி மிக அழகாக இருந்தது. இதுதான் அவன் முதல் முறை அவள் தாவணி கட்டிப்பார்ப்பது.

"தாஸ் வாயை மூடுங்க, ஈ எதுவும் உள்ளே போயிரப்போகுது. இப்பிடியா ஜொள்ளு உடறது." அகிலா முகத்திலும் வெட்கம் படர்ந்திருந்தது.

"ஏய் என்னன்னு கூப்பிட்ட?"

"தாஸ்னு... ஏன்?"

"ரொம்ப கொழுப்பு ஏறியிருக்கு நேத்தியிலேர்ந்து..."

"இனிமே அப்பிடித்தான், யாரும் பக்கதில் இல்லைன்னா செல்லமா தாஸ்தான்..."

"ஏய் இன்னிக்கு நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? அப்பிடியே தூக்கிட்டுபோய்..."

"பாருங்க, இனிமேல் தொட்டீங்கன்னா கடிச்சுடுவேன்..., இன்னிக்கு நாலே காலுக்கு உங்க கிளாசுக்கு வருவேன். என்னைக் கூட்டிக்கிட்டு கோயிலுக்கு போகணும், உங்க புரோஜக்டை தூக்கி குப்பையில் போடுங்க."

"நீங்க சொல்லீட்டீங்கன்னா சரிதான் மேடம்."

நாலே காலுக்கு அவள் அவனைப் பார்க்க வரும் பொழுது, புதிதாய் சேர்ந்திருந்த அவள் கிளாஸ் மாணவி ஒருத்தி - கேரளா - அவனிடம் வந்து நோட்ஸ் கேட்டுக் கொண்டிருந்தாள். கொடுமையென்னவென்றால் அவளே ஜோக் சொல்லி அவளே சிரித்துக் கொண்டிருந்தாள். அவனும் அவள் தப்பா நினைக்கக்கூடாதேன்னு சிரித்து வைத்தான். அவள் சென்ற பிறகு அருகில் வந்தாள் அகிலா.

"அவகிட்ட சிரிச்சு, சிரிச்சு அப்படியென்ன பேச்சு, ஒரு நாள், எனக்கும் அவளுக்கும் சண்டையாயிருச்சு தெரியுமா. சரி அவ என்ன கேட்டா?"

"வேறென்ன நோட்ஸ்தான்..., சரி என்ன சண்டை?"

"அதெல்லாம் பொம்பளங்க சமாச்சாரம், நான் பாத்துக்கிறேன். அவளுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?"

"வேறென்ன, இங்க கேட்டா கிடைக்காது. என் வீட்டுக்கு வந்து கேளு. அதுவும் இப்பெல்லாம் ஒரு பொண்ணு வீட்டிலேயே இருக்கு. அதனால அவகிட்ட நான் எப்ப ஃபிரின்னு கேட்டு சொல்றேன். அப்ப வந்து கேளுன்னு சொன்னேன்." சொன்னதும்தான் தாமதம் விருட்டென்று கிளம்பி வெளியே ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.

மெதுவாக சார்லசின் வண்டியை எடுத்துக் கொண்டு அவள் பின்னால் வந்து நிறுத்தி. "ஏய் இந்தாடி, ஏறிக்கோ" சொன்னதும் ஏறிக்கொண்டாள். ஆனால் வண்டியில் இருவருக்கும் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது. அவர்கள், கோயிலுக்குப் போனார்கள். அவன் கடவுளை நம்புகிறவன் இல்லையென்றாலும் அவளுடன் கோயிலுக்கு உள்ளே வந்திருந்தான். குருக்கள் விபூதி தந்ததும் வாங்கிவிட்டு கையிலே வைத்திருந்தேன். அவனைப் பற்றி தெரியுமாதலால் அவள் கையில் இருந்த விபூதியை கொஞ்சம் அவன் நெற்றியிலும் பெரிதாக வைத்துவிட்டாள். பிறகு நாங்கள் ஹோட்டலுக்கு வந்தோம். ஆனால் அதுவரை அவள் அவனிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை.

ஹோட்டலில் அவன் பக்கத்தில் அவள் உட்கார்ந்ததும், அவளிடமிருந்து ஒரு வாசனை வீசியது. அவள் வைத்திருந்த மல்லிகைப்பூவும், அவள் வேர்வையும் சேர்ந்த அந்த வாசனையால் தடுமாறியவன் அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டேன். அவன் கையை எடுத்து கீழே வைத்துவிட்டு, "இதுக்கு மட்டும் நான் வேண்டுமாக்கும், அந்தக் கேரளாக்காரி மேல போய் போடவேண்டியது தானே?"

நான் அதற்குப் பிறகு அவளிடம் எதுவும் பேசிவில்லை. அவளைத் திரும்ப கொண்டுவந்து ஹாஸ்டலுக்கு பக்கத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

அதற்கு பிறகு இரண்டு நாள் மோகன் அவளிடம் பேசவில்லை, அவள் பார்க்க வந்தாலும் அவனாய் முகத்தை திருப்பிக்கொண்டு வந்துவிட்டேன். இரண்டு மூணு முறை என்னிடம் பேசமுயன்றாள். அவன் பேசாமல் நகர்ந்து விட்டேன். அடுத்தநாள் சனிக்கிழமை வீட்டுக்கே வந்துவிட்டாள். நேராக அவன் எதிரில் வந்து நின்று, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, "இப்ப நான் என்ன பண்ணனுங்கிறீங்க?" கேட்டாள்.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சிறுகதை

நீங்களே சொல்லுங்க சார்!!!

வாங்க சார்! நீங்களே சொல்லுங்க சார், இவ பண்ணுறது சரியான்னு. யாரப்பத்தி பேசுறேன்னு கேக்குறீங்களா? இவதான் சார் கார்ல, என் பக்கத்தில் உட்கார்ந்து வர்றாலே என் பொண்டாட்டி இவளைப் பத்தித்தான் சார் சொல்றேன். கல்யாணம் ஆகி ஒரு ஆறுமாசம் ஆகியிருக்கும் சார். அப்பப்ப சண்டை போட்டுக்குவம்னாலும் இரண்டு நாளெல்லாம் பேசாமயிருந்ததில்லை. அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்னு கேட்டு சொல்லுங்க சார்.

ஒன்னுமில்ல சார், இரண்டுநாளைக்கு முன்னாடி நாங்க இரண்டுபேரும் வேலை பார்க்கிற அலுவலகத்தின் 10ம் ஆண்டுவிழா பார்ட்டி நடந்துது, எல்லாரும் தண்ணியடிச்சிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டிருந்தாங்க. நமக்கு தண்ணியடிக்கிற பழக்கமில்லாததால சும்மாத்தான் சார் உட்கார்ந்திருந்தேன், எம்மேல தப்பு கிடையாது, நான் இவக்கிட்ட அப்பவே கேட்டேன் நாம இரண்டுபேரும் சேர்ந்து டான்ஸ் ஆடலாமான்னு, முடியாதுன்னுட்டா சார் இவ. பரவாயில்லை தமிழ்நாட்டுல படிச்ச பொண்ணாச்சே வெக்கப்படுவாள்னு நானும் சும்மா விட்டுட்டேன்.

அப்ப அங்க ஏற்கனவே தண்ணியடிச்சிட்டு ஆடிக்கிட்டிருந்த ஒரு பொண்ணு, எனக்கு கீழ வேலைசெய்றவதான் சார், கொஞ்சம் அழகாயிருப்பா அது என்தப்பா. நேரா என்கிட்ட வந்து ஆடவரீங்களான்னு கேட்டா, நானும் இல்லை வொய்ப் இருக்காங்க முடியாதுன்னு தான் சார் சொன்னேன். இவத்தான் பெரிய இவமாதிரி போய்ட்டுவாங்கன்னு சொன்னா. சரி நானும் நம்ம பொண்டாட்டி ஆறுமாசத்திலேயே நம்மல நல்லா புரிஞ்சிக்கிட்டான்னு நினைச்சிக்கிட்டே ஆடப்போனேன் சார். அங்க புடிச்சதுசார் வேதாளம். அன்னிலேர்ந்து என்கிட்ட பேசுறதில்லை. நானா பேசினாலும் பதில் மட்டும் சொல்லிட்டு நகர்ந்துர்றா சார்.

ஆனா இன்னிக்கு காலைல பாருங்க சார், என்னோட பேவரைட் சட்டை சலவை பண்ணாம இருந்ததால் குளிச்சிட்டு சலவை பண்ணிக்கலாம்னு எடுத்துவச்சிட்டு குளிச்சிட்டு வந்துப்பார்த்தா, சட்டை கிட்ட இவ சுகிதாரும் உக்காந்திருக்கு. நான் அதையும் சலவை பண்ணித்தரணுமாம். தரதப்பத்தி ஒன்னுமில்லை சார், அவசர ஆத்திரத்துக்கு ஆறுமாசத்தில பலதடவை பண்ணிக் கொடுத்துருக்கேன். ஆனா எப்பவும் நான் சலவை பண்ணுரப்ப பின்னாடியே நிப்பா சார், அப்பப்ப ஒம்பிழுத்துக்கிட்டே, நிறைய ப்ளீஸ், நிறைய தாங்க்ஸ், சில சமயம் கிஸ்ஸெல்லாம் கூட கிடைக்கும் சார். ஆனா இன்னிக்கு பாருங்க ஆளையே பார்க்க முடியலை, நாம இதெல்லாம் கிடைக்கும்னா சார் சலவை பண்ணித்தர்றது. ஏதோ நம்ம பெண்டாட்டி உதவலாமேன்னு தானே. நானும் பண்ணி அங்கையே வைச்சிட்டேன் சார்.

இப்பக்கூட பாருங்க சார் நான் சலவை பண்ணின சுகியைத்தான் போட்டிருக்கா, என் பக்கத்திலேத்தான் உட்கார்ந்திருக்கா ஆனா அந்நியமா தெரியறா, சாதாரணமா எங்க வீட்டில் இருந்து ஒரு ஏழு கிலோமீட்டர் இருக்கும் சார் அலுவலகம். ஒழுங்கா காரை ஓட்டவிடமாட்டா சார் என்னை, ஈசிக்கிட்டே உக்காந்திருப்பா அப்பப்ப ஸ்டேரிங்கை திருப்புறேன்னு ஒரே வம்புவேற. இன்னிக்கு பாருங்க இன்னும் ஒரு இஞ்ச் தள்ளி உக்காந்தான்னா காரிலிருந்து கீழே விழுந்துடுவாங்க்ற மாதிரி உக்காந்திருக்கா, மனசு கஷ்டமாயிருக்கு சார். நான் இன்னிக்கு விட்டுக்கொடுத்திரலாம்னு இருக்கேன் சார். நைட்டு பேசாம நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுடலாம்னு இருக்கேன்.

ஆனா சார் எனக்கென்னமோ அந்தச் சம்பவத்துக்கு முன்னாடிலேர்ந்தே ஒரு வாரமாவே அவ கொஞ்சம் சரியாயில்லாதது மாதிரி தோணுச்சு, பின்னாடி அது பிரமைன்னு நானே முடிவு பண்ணிக்கிட்டேன். என்ன சார் பிரச்சனையிருக்க முடியும், சுத்தமா வரதட்சணையே வாங்கலை, நான் வேற இவளை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், இவ சொன்னாங்கறதுக்காக, அமேரிக்க வேலையெல்லாம் விட்டுட்டு இவளுக்காகவும் இவங்க குடும்பத்துக்காகவும் தான் சார் இந்தியாவுல இருக்குறதே; ஒரே பெண்ணா விட்டுட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டா. எங்கம்மா ஆரம்பத்திலேயே நீ பெண்டாட்டி தாசன் ஆய்ட்ட உன்கிட்ட இனிமேல் இருக்க முடியாதுன்னு அவங்க கட்டுன வீட்டுக்கு போய்ட்டாங்க சார். இவ பேர்ல தப்பில்லை, அம்மாத்தான் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க.

சார் நீங்க அவள தப்பா நினைக்கக்கூடாது, நாங்க தனியா இருக்கணும்தான் அம்மா விட்டுட்டு போனாங்கன்னு நினைக்கிறேன். இப்பையும் தினமும் இரண்டு மணிநேரம் அங்கப்போய் அம்மா அப்பாவை பார்த்துட்டுத்தான் சார் வருவா. போனாப்போறா யார் சார் அவ எப்பிடிப்பாத்தாலும் எம்பெண்டாட்டிதானே. இன்னிக்கு நைட்டு ஒருவழியா சரி பண்ணிறணும் சார்.

------------------------------

ஆச்சு சார் ஒருவழியா பிரச்சனையை பேசித்தீத்தாச்சு சார். நான் ஏற்கனவே அன்னிக்கி நைட்டு அவக்கிட்ட பேசுறதா தீர்மானம் பண்ணியிருந்தனா, அம்மாவை பார்க்க போன இடத்திலேயே சாப்டுட்டோம் சார், அம்மாக்கிட்ட ரொம்பநேரம் என்னாத்தையோ தனியா பேசிக்கிட்டிருந்தா சார். ஒன்னுமே புரியலை, வீட்டுக்கு வந்ததுமே என்கிட்ட என்னவோ பேசணும்ங்கிற மாதிரியே நடந்துக்கிட்டிருந்தா ஆனா பேசலை சார், நைட் டிரெஸ் போட்டுக்கிட்டு கட்டிலில் நான் வந்து உட்கார்ந்ததுமே,

"நான் உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்" அப்படின்னு ஆரம்பிச்சா சார். நானும் அப்படியே, "நானும் தான்." சொல்லிட்டு மனசிலயிருந்ததையெல்லாம் கொட்டிட்டேன் சார்.

"இங்கப்பாரு அகிலா, நாம இரண்டு பேரும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம, உனக்கும் என்னைப்பத்தி நல்லாவேத்தெரியும். அன்னிக்கு கூட நீ சொன்னதாலத் தான் நான் அவகூட ஆடுனேன். நீ என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டேன்னு நினைச்சுத்தான் அப்பப்ப அவளைப் பத்தி உன்கிட்ட விவரிச்சது, அழகாயிருக்கா, நல்லா டான்ஸ் ஆடுவா அப்பிடினெல்லாம், அதுமட்டுமா சொன்னேன், கோடிங்கே அவளுக்கு எழுதத்தெரியலைன்னு கூடத்தான் உன்கிட்ட சொல்லியிருக்கேன். முன்னாடியே சொல்லிட்டேன் அன்னிக்கு தனீரூமில் அவள் கோடை ரிவ்யூ பண்ணுறேன்னு கூட்டிக்கிட்டு போனதுக்கான காரணத்தை. பாவம் இப்பத்தான் சேர்ந்திருக்கா நாலுபேருக்கு முன்னாடி திட்டினா கஷ்டமாயிருக்கும்னு தான் தனியா கூட்டிட்டு போய்த்திட்டினேன். அந்தச் சமயத்தில நீ வந்துட்டதால நான் பண்ணினது தப்பாயிடாது.

ஒன்னு நல்லாத்தெரிஞ்சிக்க, அவ ரம்பையா இருந்தாலும் ஊர்வசியாயிருந்தாலும் என் அகிலா முன்னாடி தூசிதான். உன்னைத்தவிர இன்னொரு பொண்ணை மனசாலக்கூட நினைக்கமாட்டேன். இவ்வளவுதான் இதுக்குமேலையும் நீ என்னை நம்பமாட்ட, பேசமாத்தான் இருப்பேன்னா அது உன் விருப்பம். ஆனா என்னால நான் சோகமா இல்லாத மாதிரியெல்லாம் நடிக்கமுடியாது. எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு, சொல்லிட்டேன்."

முடிச்சதும் சிரிக்கிறா சார், எனக்கு ஒன்னுமே புரியலை சார், ஆனா கண்ணுல மட்டும் ஒரு சோகம் இருந்துச்சு சார், மெதுவா பக்கத்தில் வந்து உட்கார்ந்தவள் என்கையை அவள் கையில் எடுத்து வைச்சிக்கிட்டா சார்.

"என்னங்கயிது சின்னப்புள்ளத்தனமா, இதையெல்லாம் நினைச்சு குழம்பிக்கிட்டிருந்தீங்களா, உங்களைப்பத்திதான் எனக்கு நல்லாவே தெரியுமே, அவக்கூட டான்ஸ் ஆடினதாப் பிரச்சனை. உண்மையிலே அன்னிக்கு நீங்க டான்ஸா ஆடினீங்க ஏதோ ஆடணுமேன்னு ஆடிக்கிட்டிருந்தீங்க, அதைப்பார்த்து எனக்குக்கூட சிரிப்பு வந்துச்சு. இன்னுமொன்னு கோட் ரிவ்யூ மேட்டரைப்பத்தியும் நான் தப்பா நினைக்கலை. உங்களைப்பத்தி தெரியாதா காதலிச்ச என்னையே தொடமாட்டீங்க, என்ன கொஞ்சம் ஜொள்ளுவுடுவீங்க போட்டோஜெனிக், சிற்பம்னு ஏதாவது சொல்லிக்கிட்டு, அவளே எலிக்குஞ்சு மாதிரியிருக்குறா, அவ எனக்கு போட்டியா, சான்ஸே கிடையாது."

சொன்னா நம்புங்க சார் எனக்கு யாரோ நெஞ்சுமுழுக்க பால் ஊத்துறமாதிரியிருந்துச்சு, சாதாரண சமயமாயிருந்தா ஜொள்ளுவுடுவீங்கன்னு சொன்னதுக்கே பிரச்சனை பண்ணியிருப்பேன். ஆனா இன்னிக்கு முடியுமா அதான்,

"அப்ப ஏண்டி இரண்டு நாளா முறைச்சிக்கிட்டே இருந்த, என்ன தான் பிரச்சனை." நான் கேட்டதும் கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக்கிட்டிருந்தா சார். அப்புறம்,

"நான் இனிமேல் வேலைக்கு போகலை, ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன்." சொன்னதும் உண்மையிலேயே ஒன்னும் புரியலை சார், அவ வேலைக்கு போகணும்னு அவசியமே கிடையாது, எங்க அம்மா அப்பா கவர்மெண்ட் வேலையில இருந்தவங்க, நானும் ஒரே பையன், காசுக்கு பிரச்சனையே கிடையாது, ஏன் இவங்க வீட்டிலையுமே நிறைய பணம்தான். இவத்தான் பிடிவாதமா வேலைக்கு போவேன்னு ஒத்தக்காலில் நின்னா, அதனாலத்தான் குழந்தை பெத்துக்கிறதக்கூட தள்ளிப்போட்டோம். இப்ப வந்து போகலைன்னு சொல்றா சார். நானும் ஏதாவது கேட்கணுமேன்னு,

"ஏன் போகலைங்கிற?" கேட்டேன் சார். இன்னும் நல்லா பக்கத்திலே உட்கார்ந்துக்கிட்டு,

"நான் சொல்லப்போற விஷயத்தை கேட்டு நீங்க டென்ஷன் ஆகக்கூடாது, நான் சொல்றத அமைதியா கேட்கணும்" அப்படீன்னு பெரிய பீடிகையெல்லாம் போட்டா சார், உண்மையிலேயே ஒன்னும் புரியலை சார்.

"இங்கப்பாருங்க அன்னிக்கு பார்டியில என்னோட பி.எம் இருக்கானே கிரிஷ் கிமானி, நல்லா தண்ணியடிச்சிட்டு ஆடிக்கிட்டிருந்தானா. கொஞ்சம் நேரம் கழிச்சு நீங்க பக்கத்தில் இல்லாததப்பார்த்துட்டு வந்து பக்கத்தில் உட்காரந்தவன், மேலக்கையை வச்சான், எனக்கு வந்ததே கோபம் பளீருன்னு கன்னத்தில் அறைஞ்சிட்டேன். உடனேயே அங்கேர்ந்து போய்ட்டான்." சொல்லிவிட்டு என்னையே பார்க்கிறா சார், பொய்சொல்லமாட்டா சார் அவ, நிச்சயமா கிரிஷ் அப்படி நடந்திருந்தா அறைஞ்சிருப்பாத்தான் அவ, எனக்கு நம்பிக்கையிருந்தது. ஆனால் கோபமும் வந்தது,

"அதை ஏண்டி அன்னைக்கே சொல்லலை." நான் கோபமாய்க் கேட்க,

"இல்லை நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிக்க மாட்டீங்கன்னு தெரியும் ஆனா கிரிஷ் விஷயத்தில என்ன முடிவு எடுப்பீங்கன்னு சுத்தமா தெரியலை அதான் சொல்லலை. கிரிஷ் ரொம்ப நல்லவன் அன்னிக்கு தண்ணியடிச்சிருந்ததால அப்படி நடந்துக்கிட்டான். அடுத்தநாளே என்கிட்ட மன்னிப்பும் கேட்டான். ப்ளீஸ்ங்க புரிஞ்சிக்கோங்க அவனைப்பார்த்தால் ரொம்ப பாவமாயிருக்கு, தப்பை உணர்ந்துட்டான். தினமும் என் மூஞ்சில முழிக்கிறதுக்கு வெட்கப்படுறான். பாவம், எனக்கு இந்த விஷயத்தை உங்கக்கிட்ட சொல்றதப்பத்தி பயமே கிடையாது நீங்க என்ன நம்புவீங்கன்னு தெரியும். ஆனால் கிரிஷ் விஷயமாத்தான் ஒரு முடிவு எடுக்கமுடியாம இருந்துச்சு, உங்கக்கிட்ட ஒரு விஷயத்தை மறைக்கிறோம்னதுமே என்னால சாதாரணமா பேசமுடியலை. உங்களை ஏமாத்துறதா ஒரு கில்டி ஃபீலிங்வேற. ப்ளீஸ்ங்க நான் இனிமேல் வேலைக்கு போகலை. அவன்கிட்ட ஒன்னும் கேட்காதீங்க, ரொம்ப பயப்படுறான் அவன், நீங்க ஒரு மெய்ல் அனுப்புனா, ஹாரஸ்மண்ட் கேஸ்ல அவனை நிச்சயமா தூக்கிறுவாங்க. ஆனா வேணாங்க." சொல்லிவிட்டு பாவமாய்ப் பார்த்தாள் சார்.

எனக்கு அவகிட்ட உண்மையிலேயே என்ன சொல்றதுன்னு தெரியலை, பாத்தீங்களா சார் எம்பொண்டாட்டி எவ்வளவு நல்லவன்னு, தண்ணியடிச்சிட்டு தப்பு பண்ணிட்டான் அதுக்காக வேலையை விட்டு தூக்கவைக்ணும் நினைக்காம, அவனுக்காக என்கிட்டயே பரிஞ்சு பேசறா பாருங்க. எனக்கு கோபமாத்தான் வருது கிரிஷ்மேல, ஆனா அகிலா சொல்ற மாதிரி ரொம்ப நல்லவன்தான் கிரிஷ் எனக்கும் தனிப்பட்ட முறையிலேக்கூட தெரியும் சார். போனாப்போகுது விட்டுடலாம் சார், மன்னிப்பது மனுஷப்பண்பு மறக்குறது தெய்வ குணம் சொல்லுவாங்க சார், நாம் மனுஷனாவாவது இருப்போம் சார்.

"அகிலா இதை நீ என்கிட்ட அப்பயே சொல்லியிருக்கலாம் பரவாயில்லை இப்பவாவது சொன்னியே, பிரச்சனையில்லை. இதுக்காகயெல்லாம் நீ வேலையை விடவேண்டாம் வேணும்னா நான் சொல்லி வேற ப்ரோஜக்ட்ல போட சொல்றேன். என்ன?" அப்பிடின்னு கேட்டேன் சார் நான், பின்ன என்ன சார் எவனோ ஒரு தண்ணியடிக்கிறவன் பண்ணினதுக்காக எம்பெண்டாட்டி வேலைக்கு போகாம இருக்கணுமா சார்.

ஆனா அவள், "இல்லைங்க கிரிஷ்னாலத்தான் வேலைக்கு போகமாட்டேன்னு சொல்றேன்னாலும் அவன் மட்டுமே காரணம் கிடையாதுங்க, எனக்கே வரவர இந்த வேலை போரடிக்குதுங்க, என்கூட படிச்சவளெல்லாம் இடுப்புல ஒன்னு வயித்துல ஒன்னுன்னு நிக்கிறப்ப எனக்கு மட்டும் தலையெழுத்தா, கண்ட கண்ட தண்ணியடிக்கிறவன் கிட்டல்லாம் நிக்கணும்னு. காசுக்கும் ஒன்னும் பிரச்சனைகிடையாது, பின்னாடி திரும்பவும் ஆசைப்பட்டேன்னா நீங்க மறுக்கவா போறீங்க, அப்ப போய்க்கிறேன். என்ன சொல்றீங்க."

இப்படி கேட்டா நான் என்ன சார் சொல்றது நீங்களே சொல்லுங்க, இல்லை அவக்கேட்டு நான் மறுக்கத்தான் முடியுமா ஊன்னு சொல்லிட்டேன் சார். நீங்களும் அந்த முடிவுக்குத்தானே வந்திருப்பீங்க. சரி சார் கதைகேட்டதுக்கு நன்றிசார் போய்ட்டு அப்புறம் வாங்க சார்.

Read More

Share Tweet Pin It +1

25 Comments

In தொடர்கதை

உள்ளம் உடைக்கும் காதல் 8

அதற்குப் பிறகு மோகனுக்கு நேரம் கிடைப்பதே அரிதாக இருந்தது, கிளெயன்ட் இடம் போய், ரெக்வெய்ர்மெண்ட் வாங்கி வந்து, அவர்களுக்கு அந்தப் ப்ரொஜக்டை எப்படிச் செய்யப்போகிறோம்னு டிஸைன் அனுப்பி பின்னர் அவன் அதில் கேட்ட சந்தேகத்தை தீர்த்து இன்னொரு ட்ராஃப்ட் அனுப்பி என்று புரோஜக்ட் தலைக்கு மேல் போய்க்கொண்டிருந்ததால் மிகவும் சிரமமாக இருந்தது, அந்த நாட்களில் அவனும் சார்லசும் கல்லூரி சென்றுவந்த பிறகு இரவு ஐந்து, ஆறு மணிநேரம் தினமும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உணவை பற்றி அவர்கள் கவலைப்படாத நாட்கள் அவை. அகிலாவிற்கும் கனிமொழிக்கும் கல்லூரி வேலை அதிகம் இருந்ததால் பல நாட்கள் பார்க்கக்கூட முடியாது. சில நாட்கள் பார்த்தாலும் ஹாய், ஹலோ சொல்லத்தான் நேரம் இருக்கும், வெகுசில நாட்கள் தான் அவன் அகிலாவிடம் கூட தனிப்பட்ட முறையில் பேசியிருந்தான்.

சரியாக உணவு உட்கொள்ளாத காரணத்தால் மெலியத் தொடங்கியிருந்தான், கண்கள் உள்ளே சென்றுவிட்டதாக சனிக்கிழமை பார்க்க வந்திருந்த அவனுடைய அம்மாவும் அக்காவும் சொல்லியிருந்தார்கள். திங்கட்கிழமை மதிய உணவுவேளையில் மோகனும் சார்லசும் கிளாசில் உட்கார்ந்து புரோஜக்ட் டிசைன் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். சார்லஸ் அந்த வாரம் செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு அதற்கு உதாரணங்களை காட்டிக்கொண்டிருந்தான். கனிமொழியும், அகிலாவும் அங்கு வந்தார்கள்.

அகிலா வேகமா அவனருகில் வந்து லாப்டாப்பை மூடி கையில் எடுத்துக் கொண்டாள்.

"ஏய் என்னாடி பண்ணுற?" மெதுவாகக் கத்தினான்.

"ஒன்னும் பேசாதீங்கண்ணே, நேத்திக்கு அம்மாவும் அக்காவும் ஹாஸ்டலுக்கு வந்திருந்தாங்க. அம்மா ஒரே அழுகை, உங்களை அப்படிப் பார்க்கவே முடியலையாம். என்னைத்தான் திட்டினாங்க. நீங்கல்லாம் இருக்கீங்க தான. அவன் சாப்பிடுறதேயில்லை, கேட்கிறதில்லையான்னு?" இது கனிமொழி.

"உங்கக்கா என்கிட்ட வந்து, என்னாடி அவனை காதலிக்கிறேன்னு சொன்னே, அவனோ லூசு மாதிரி கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டிருக்கான். நீ அவனை தினமும் பார்க்கிறியான்னு கேட்கிறாங்க. நான் என்னத்த சொல்றது, நான் உங்களை பார்த்தே பத்து நாள் இருக்கும். சார்லஸ் கூட வண்டியில் வறீங்க, காலேஜ் முடிஞ்சதும் போயிர்றீங்க. இனிமே உங்க இரண்டு பேருக்கும் மதியம் சாப்பாடு எங்ககூடத்தான்." அவளிடம் கவலை தெரிந்தது.

"சொல்லியாச்சுல்ல, கொடு அதை. உங்ககூட சாப்பிட்டா தப்பா நினைக்காமாட்டாங்களா. லூசுங்களா"

"சரி எங்ககூட சாப்பிட வேண்டாம், நான் கேன்டீனில் சொல்லிடுறேன் சாப்பாட்டுக்கு நீங்க சாப்பிடலைன்னா வந்து லாப்டாப்பை தூக்கிட்டு போயிருவேன், சரி இப்ப போய் சாப்பிட்டு வந்து வாங்கிக்கங்க." லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டு போயேவிட்டாள்.

ஆனால் சிறிது நாள்களில் எங்களுக்கு எல்லா ரெக்வெய்ர்மண்டுகளும் வந்து சேர்ந்துவிட்டது, டிசைனும் முழுதாய் முடிந்திருந்தது. இனிமேல் வெறும் டெவலப்மெண்ட் மட்டும் தான் மீதமிருந்தது. அதனால் மூச்சு வாங்க முடிந்ததால் தினமும் அவனும் சார்லசும் சாப்பிடத்தொடங்கியிருந்தார்கள். செங்குட்டுவன் சார் கூப்பிடுறதா சொல்லி அட்டெண்டர் வந்து சொன்னார். போய்ப் பார்த்தேன்.

"மோகன், பார்ட் பெஸ்ட்க்கு அழைப்பு வந்தாச்சு, சேர்மன் உன்னைக் கூப்பிட்டு கொடுக்கச்சொன்னார். நான் அவரிடம் சொல்லிவிட்டேன் நீ கொஞ்சம் பிஸியா இருக்கன்னு இந்த வருஷம் வேறு யாரையாவது வைத்து செஞ்சுக்கலாம்ன்னு. ஆனால் அவருக்கு இதில கொஞ்சம் கோபம். அதனால நீ சின்னதா ஏதாச்சும் பண்ணிக் கொடுத்துறேன். ப்ரைஸ் கிடைக்கலன்னாலும் பரவாயில்லை. எப்பிடியிருந்தாலும் எலொக்கேஷன்ல நீதான் வருவ. என்ன?" அவரிடம் சுயபச்சாதாபம் மேலிட்டது.

"சார் பரவாயில்லை, நான் நாடகம் பண்ணித்தரேன், ஆனா நான் இந்த வருடம் பேசலை, வேறு யாரையாவது பேசவைக்கலாம்."

"யாராவது மனசில் இருக்காங்களா?" பெரும்பாலும் அவனை மறுக்கமாட்டார் என்பதால் கேட்டார்.

"அதெல்லாம் இல்லை சார், காம்படீஷன் நடத்துங்க, ஜெயிக்கிறவங்க கலந்துக்கிட்டும்." அகிலா மனதில் இருந்தாலும் இதுதான் சரிவரும் என்று சொல்லியிருந்தான்.

"அப்ப ஒரு ப்ரைஸ் போயிருச்சு, நாடகத்துக்கு கிடைக்குமா?" அவர் முகத்திலேயே அந்தக் கேள்வி இருந்தது.

"அப்படியெல்லாம் இல்லை சார், பேச்சுலயும் நான் வாங்க வைக்கிறேன். இந்த வருஷம் நாடகம் நமக்குத்தான், சார் அப்ப நான் ஆரம்பிக்கிறேன். ரிகர்ஸல் எப்ப பார்க்கிறீங்க."

"ரிகர்ஸல் எல்லாம் வேண்டாம், உனக்கு நம்பிக்கையிருந்தா போதும், பேச்சுப்போட்டிக்கு நீயே ஆளை செலக்ட் பண்ணிரு" தட்டிக்கழிக்கப் பார்த்தார்.

"இல்லை சார், அது நல்லாயிருக்காது. இந்த வாரம் சனிக்கிழமை நடத்தி நீங்களே செலக்ட் பண்ணிடுங்க" சொல்லிவிட்டு நேராக முதலாம் ஆண்டு வகுப்பிற்கு வந்தான். பேசுவேன்னு சொன்ன பையனை செங்குட்டுவனை பார்க்கச் சொல்லிவிட்டு கனிமொழியையும் அகிலாவையும் கேன்டீனுக்கு கூப்பிட்டான்.

"அகிலா, இந்த வருஷம் பேச்சுப்போட்டியில் நான் கலந்துக்கலைன்னு சொல்லிட்டேன். அதனால இந்த சனிக்கிழமை காலேஜில் ஒரு போட்டியிருக்கும். ஜெயிச்சா நீ கலந்துக்கலாம்"

"நான் கலந்துக்கலை..." தலையைக் குனிந்தபடியே சொன்னாள்.

"ஏன்?"

"கலந்துக்கலைன்னா கலந்துக்கலை, இதுக்கு என்ன காரணம் சொல்ல?" காரணம் அவள் முகத்தில் தெரிந்தது.

"உதை வாங்குவ, உனக்காகத்தான் நான் பேசலைன்னு சொன்னேன், இப்ப நீ இப்பிடி சொன்னாயெப்படி?" கேட்டேன்.

"தெரியும் எனக்கு, அதனாலத்தான் சொல்றேன் நீங்களே கலந்துக்கோங்க, நான் கலந்துக்கிட்டாலும் தோத்திடுவேன்." அவளிடம் பயம் தெரிந்தது.

"அப்பிடியெல்லாம் உன்ன தோக்க விடுவேனா, நான் எழுதி தரேன நீ போய் பேசு. அப்புறம் ஒரு நாடகம் நானும் கனிமொழியும் இன்னும் கொஞ்சம் பேர், தேவையிருந்தா நீயும். என்ன கனிமொழி?"

"அண்ணே, இதுக்கு முன்னாடி யாரும் வரமாட்டாங்க அதனால நான் நடிச்சேன். இப்பத்தான் இவ நடிப்பாளே இருந்தும் நான் நடிக்கணுமா?" கனிமொழி அகிலாவிற்காகப் பேசினாள்.

"இங்கபாரு இதுல கொஞ்சம் மெச்சூர்டான பெண்ணு வேணும், அதுக்கு நீதான் சரியாயிருப்ப. அதுவும் இல்லாம இந்த நாடகத்தில் பெண்களுக்கு காலம் காலமா நடக்கும் கொடுமைகளைக் காட்ட வேண்டியிருக்கும், சில இடத்தில் பெண் கேரக்டரை அடிக்கிற மாதிரி கதையிருக்கும்..." முடிக்காமல் நழுவினான்.

"அதானே பார்த்தேன். சோழியன் குடுமி சும்மா ஆடுமா. இவளை அடிக்க மாட்டீங்க, என்னை அடிப்பீங்க அப்பிடித்தானே?" கனிமொழி சீண்டினாள்.

"ஏம்மா ஏறுக்குமாறா பேசுனா எப்படி, பதில்தான் வேணும்னா, ஆமாம்னு வைச்சுக்கோயேன்." சொல்லி விட்டு அகிலாவைப் பார்த்தான், அவளுக்கு இதில் விருப்பம் இல்லையென்று தெரிந்தது. ஆனாலும் அவன் முடிவை மாற்றுவதாக இல்லை. கடைசியில் நாடகத்திலும் அவள்தான் நடித்தாள்.

அடுத்த நாள், கனிமொழி என் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

"என்னம்மா?"

"நான் நடிக்கலை அந்த நாடகத்தில்?"

"ஏன் என்னாச்சு?"

"நேத்திக்கு பூரா அகிலா மூஞ்சிய தூக்கிவச்சுகிட்டு இருந்தா, நான் அவளை டிஃபண்ட் பண்ணலையாம். நான் சொன்னா நீங்க கேப்பீங்களாம். ஆனா நான் சொல்லலைன்னு சொல்லிட்டு அதுக்கு பிறகு என்கூட பேசவேயில்லை. எங்க இரண்டுபேருக்கு இடையில் சண்டை மூட்டி விடாதீங்கண்ணே. அவளே நடிக்கட்டும்." புலம்பினாள்.

"அப்பிடியா, சரி அவளே நடிக்கட்டும். ஆனால் நான் கதையை மாத்திருறேன். சீதை, திரௌபதி, இவங்களை மாதிரி பொண்ணுங்களையெல்லாம் வித்தியாசமா காட்டி, பெண்ணுங்களை தெய்வமா பாக்காதீங்க, பெண்ணா பாருங்க அதுபோறும்னு சொல்லலாம்னு நினைச்சேன். இப்ப அதை மாத்திவிட்டு சுதந்திர போராட்டத்த வித்தியாசமா காட்டப்போறேன். நீ அவக்கிட்டையும் இதைச் சொல்லிறு."

கல்லூரியில் நடந்த பேச்சுப்போட்டியில் அவள் தான் ஜெயித்தாள். அவர்கள், குமரனையும், கப்பலோட்டிய தமிழனையும் வித்தியாசமாகக் காட்டி நாடகம் போட்டோம் - பக்கத்தில் கொடி பிடிக்கிற கதாப்பாத்திரம் அகிலாவுக்கு. அவளுக்கு முதலில் கோபம்தான். பின்னர் நடித்துக் கொடுத்தாள். அவளுக்கு பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசும், நாடகத்திற்கு அவர்களுக்கு முதல் பரிசும் கிடைத்தது. அந்தச் சமயத்தில் கொஞ்சம் அவளுடம் பழக வாய்ப்புக் கிடைத்தாலும் எப்பொழுதும் சுற்றி மூன்று நான்கு பேர் நின்று கொண்டே இருந்ததால் அவ்வளவு பர்ஸனலாய் பேசி முடிந்திருக்கவில்லை அவனுக்கு.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொள்வது சிரமமானது. மோகன் புரோஜக்டிலும் அவர்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான நேரம் அது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இருவரும் வருவார்கள். கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போய்விடுவார்கள். செமஸ்டர் பரிட்சை வந்தது, மிகவும் கஷ்டமான காலங்கள். ப்ராஜக்ட் முடியும் தருவாயில் இருந்தது. எக்ஸாமுக்குப் படிக்கவும் வேண்டும் ப்ராஜக்ட் வேலையும் செய்ய வேண்டும். எக்ஸாம் ஒருவழியாக முடிந்தது. ஒருநாள் கனிமொழியும், அகிலாவும் வந்தார்கள்.

"நாங்கள் ஊருக்குப் போகிறோம், நீங்க வரீங்களா?" என்று கேட்டாள் கனிமொழி. அகிலா முகத்தில் நான் வரமாட்டேன் என்று தெரிந்தாலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

"உங்களை மாதிரி வேலை வெட்டியில்லாதவனா நான், ஊர் சுத்துவதற்கு? எனக்கு ஆயிரம் வேலையிருக்கு. நீங்க போய்ட்டுவாங்க" சொன்னேன்.

"நீங்க வேலையைக் கட்டிக்கிட்டு அழுங்க, நாங்க போய்ட்டு வர்றோம்" - இருவரும் பழிப்பு வேறு காட்டிவிட்டுப் போனார்கள்.

பதினைந்து நாள் விடுமுறை, அவனுக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு. செதுக்கிச் செதுக்கி அவனும் சார்லசும் அந்த புரோஜக்டை முடித்தார்கள். நாள்களும் முடிந்திருந்தது. நாளை கல்லூரி தொடங்கும் நாள். சார்லஸ் வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். அவன் மேனுவல் டெஸ்டிங் மற்றும் சில டெஸ்டிங்க டூல் எல்லாம் வைத்து எல்லாம் ஒழுங்காப் போகுதான்னு பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது மணி காலை பதினொன்று இருக்கும். பசித்தது. எதாவது சாப்பிட்டுவிட்டு வரலாமேன்னு நினைத்து வெளியே கிளம்பினான். அகிலா வந்து கொண்டிருந்தாள், சுடிதார் அணிந்திருந்தாள் இப்பொழுதுகளில் முளைத்திருக்கும் மஞ்சள் ரோஜாவும் இருந்தது கண்களில் களைப்பு தெரிந்தது.

"என்னாடி ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாச்சா?"

"ம்ம்ம், முடிஞ்சிருச்சு, நீங்க சாப்பிட்டீங்களா?"

"அதுக்குத்தான் கிளம்பிட்டுருக்கேன்!"

"நான் நினைச்சேன், அதனாலத்தான் உங்களுக்கு சாப்பாடு வாங்கி வந்தேன், சாப்பிடுங்க. எனக்கு ரொம்பக் களைப்பா இருக்கு. சரி உங்களை பார்த்துட்டு ஹாஸ்டல் போகலாம்னு வந்தேன். ம்ஹூம் முடியலை. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். சாயந்திரமா எழுப்பிவிடுங்க. என்ன?"

"சரி தூங்கு, கனிமொழி எங்க?"

"நான் வீட்டில் இருந்து நேரா இங்க வந்திட்டேன். அக்கா வீட்டுக்கு போயிருக்கு; நாளைக்கு வரும். புரோஜக்ட் முடிஞ்சிருச்சா?"

"சூப்பரா முடிஞ்சிருச்சு, பார்க்கிறியா?"

"ஆமாம் அதைவிட்டா வேற வேலையில்லை பாருங்க, உங்களைமாதிரி," சொல்லிவிட்டுப் போய் கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினாள்.

அவன் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள டெஸ்டிங் பண்ணிக் கொண்டிருந்தான்.

"என்னங்க மணியென்ன, ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலிருக்கு?"

"மணி பத்தரை" சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்தான்.

"என்னங்க இது, பத்தரையா நான் எப்படி ஹாஸ்டல் போறது? நான் உங்களை எழுப்பிவிடச் சொன்னேன்ல?"

"அசந்து தூங்கிட்டிருந்த, அதான் எழுப்ப மனமே வரலை..."

அகிலா அன்று இரவு ஹாஸ்டல் போகவில்லை.

(தொடரும்...)

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In நாட்குறிப்பு

Big Boss




அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு போரடிக்கும் காலத்தில் ஏதாவது தமிழ்ப்படம் பார்ப்பது தான் வழமை. பெரும்பாலும் வியாழக்கிழமை வெளியாகும் படங்கள், வெள்ளிக்கிழமை டிவிப்பெட்டியில் பார்த்துவிட்டு. அடுத்து வெள்ளிக்காக காத்திருப்பது வழமை. அதாவது ஒரு நாளை ஒரு மணிநேரமாவது குடும்பமாக உட்கார்ந்து பார்ப்பதற்கு ஏதாவது வேண்டும். மனைவிக்குப் பாடல்கள் எனக்கு நகைச்சுவை என தனி ரசனைக்காக தமிழில் ஏதாவது ஓடிக்கொண்டிருக்கும்.

வாராது வந்த மாமணியாய் பிக் பாஸ். கமலுக்காகத்தான் பார்க்கத் தொடங்கியது. பின்னர் ஜூலிப் புள்ளையை கொடுமை பண்ணுகிறார்களே என்று நீண்டு, ஓவியாவின் மீது காதல் கொண்டு, பின்னர் பரணிக்காய் அழுது என்று இப்பொழுது கஞ்சா கருப்பை வெளியேற்றியது கொஞ்சம் மன நிம்மதியுடன் இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் பரணியை ரவுண்டு கட்டுவது பிடிக்கவில்லை. ஆனால் நாங்கள் கஞ்சா கருப்பைத்தான் தூக்குவானுங்கன்னு ஊகிச்சோம்.

பரணி: பயபுள்ள என்ன பண்ணான்னு தெரியலை நாடோடிகள் ஷூட்டிங்கில். ஆனா கஞ்சா கருப்பு மாதிரி ஊர் நாட்டானுங்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் இப்படி பைத்தியம் பிடிக்க வாய்ப்பு உண்டு.
கஞ்சா கருப்பு: பரணிப்பய இல்லாட்டி இந்தாள ரொம்ப நாள் வைச்சிருந்துருப்பானுங்க. ஆனா மொத்தக் கூட்டத்திலும் லூசு இந்தாளு தான். பாலா ஒரு திரைப்பட விழாவில் திட்டின பொழுது. சட்டென்று மனசுக்கு வலித்தது. ஆனா பாலா சொன்னது தான் சரி. ச்சை முட்டாப் பய.
ஆர்த்தி: இவ ஐஏஎஸ் படிக்கப்போறேன்னு விகடன்ல சொல்லியிருந்தா. ஞாபகமிருக்கு. குண்டாயிருந்து கஷ்டப்படுறாளேனு மனசுல எப்பவும் ஓடும். பொறாமைன்னா இந்த பதினைஞ்சி பேத்தில பொறாமை இவளுக்குத் தான் அதிகம். காரியக்காரி. ஆனா சக்தி கூடயெல்லாம் சண்டை போடுவதில் தெரிகிறது இவளுக்கு ஸ்ட்ராடஜி இல்லைன்னு.
ஜூலி: வாயி வாயி வாயி. என்னா வாயி. பச்சோந்தி. ஜல்லிக்கட்டு சமயத்தில் அத்தனை பெரிய இமேஜ் எல்லாம் என் மனதில் உருவாகாததால், குறையறதுக்குன்னு பெரிசா இல்லை. ஆனா ஆரம்பத்தில இவளை ஆர்த்தியும், காயத்ரியும் வம்பிழுக்க கடுப்பானது உண்மை. இவளோட பச்சோந்தித்தனம் கடுப்பையே வரவழைக்கிறது.
நமீதா: இவளைப் பத்தி மக்கள் பொதுவா என்ன நினைக்கிறாங்கன்னு கூடவா தெரியாது இவளுக்கு. ஜூலிக்கு மேக்கப்போட்டது இவ சிரிச்ச மாதிரி தான் பிக்பாஸு ஆரம்பத்தில் இவ போட்ட ஆட்டத்துக்கு மக்கள் சிரிச்சதும். வேஸ்ட். கமல்ஹாசன் அங்கிள் சரியா அசிங்கப்படுத்துனாரு, கடவுள் உங்கக் கூட பேசினா அது உங்களுக்கு பைத்தியம்னு. ஆளும் இவளும்.
சக்தி: இந்தப் பயலுக்கு என்னவோ பிரச்சனையிருக்கு, ஏன் இப்புடி மூச்சிறைக்குது இவனுக்கு? ஹை பிபி போல. இவனை ப்ரொமோட் பண்ணுவோம்னு ப்ராமிஸ் பண்ணியிருப்பானுங்க போலிருக்கு. விஜய் டிவி, தேவையில்லாம இவனை ப்ரொமோட் செய்யறானுங்க பிக் பாஸுக்குள்ளயே.
ரைஸா: இந்த மாதிரி மூளைக்கே வேலையில்லாத ஆள் கொஞ்ச காலம் பிக் பாஸில் தாக்குப் பிடிப்பாள். கஞ்சா கருப்பு வெளியே போனதுக்கெல்லாம் அழுவுற ஆள் கஷ்டம் தான்.
வையாபுரி: எனக்கென்னாமோ இந்த பிக் பாஸில் கொஞ்சம் நியாயமா நடுத்துக்குற ஆள் இந்தாளு தான்னு தோணுது. நல்ல மனுஷன். பரணி விஷயத்துல கொஞ்சம் தவறு இருக்குதுன்னாலும் அது கஞ்சா கருப்பால.
சினேகன்: இவன் சக்க மொக்க. ஃபேக். இந்த மொத்த கூட்டத்துலயும் ஃபேக் இந்தப் பய தான்.
கணேஷ்: தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கான். ஆளுகிட்ட தெரியும் பெண் தன்மை, அவன் லேங்க்வேஜ் இஷ்யூ இல்லையென்றே நினைக்கிறேன். நியாயமாவும் நடந்துக்குறான்.
ஆரவ்: காதல் படத்து பரத் மாதிரி, ஞெய் ஞெய்ன்னு மண்டையில அடிச்சிக்கிட்டு அலையப்போறான்னு தோணுது. நியாயமா பேசுறான், ஆர்த்திக்கு ஆப்பு வைச்சிருவான்னு தோணுது.
காயத்ரி: பொய் புழுவி. நல்லா ஆர்த்தி திருப்பிவிடுற பக்கமெல்லாம் ஆடுறா. ஆட்டக்காரி. சொல்புத்திக்காரி. டைவோர்ஸி, குழந்தை குட்டியில்லையாட்டிருக்கு. வீட்டில் என்ன வேலை, பிக் பாஸில் பெஞ்ச் தேச்சிக்கிட்டிருக்கா. இப்போதைக்கு போகமாட்டா. யாரையும் மிஸ் செய்ய மாட்டான்னு ஊகிக்கிறேன்.
அனுயா: எவனாவது அந்த சுசிலீக்ஸ் வீடியோ உன்னுதான்னு கேப்பானுங்கன்னு நினைச்சேன். ச்சை முதல்லயே வீட்டுக்கு அனுப்பிட்டானுங்க.
ஸ்ரீ: இவனுக்கு சைக்கலாஜிக்கல் பிரச்சனை என்னமோ இருக்கு. பாவமாயிருந்தது என்னமோ உண்மை.
ஓவியா: இது டார்லிங். இவளை பிக்பாஸுக்கு முன்னமே பிடிக்கும் இப்ப ரொம்பவும் பிடிக்குது. பயபுள்ள சிகரெட் அடிக்கும் போலிருக்கு. சிகரெட் எல்லாம் லக்சுரி பட்ஜெட்டில் வராதா. ஸ்ட்ராடஜியான்னு தெரியலை, ஆனா இவ நடந்து கொள்ளும் விதத்தில் ஸ்ட்ராடஜி இருக்கு என்று ஊகிக்கிறேன்.



இந்த வாரம், ஆர்த்தி ரைசா மற்றும் வையாபுரி எலிமினேஷனுக்கு நாமினே செய்யப்படுவாங்கன்னு ஊகிக்கிறேன். வையாபுரிக்குத் தான் எலிமினேஷன்.

- வாரத்திற்கு ஒன்று இப்படி எழுதப்படும்.

PS: நான் சின்னக் குழந்தையா இருக்கச்ச எனக்கு ரொம்பப் பிடிச்ச டிவி ஷோ. WWE.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

Popular Posts