இதை இங்கேயே சொல்லிவிடுகிறேன். இந்தக் கவிதையை எழுதியது ரமேஷ் பிரேம் தான் நானில்லை நானில்லை. இது பேரழகிகளின் தேசம் என்ற ரமேஷ் - பிரேமின் கவிதைத் தொகுப்பில் கடைசியாக உள்ள கவிதை. புத்தக வெளியீடு மருதா.
டைப்பி இங்கே போட்டது மட்டும் தான் நான்.
பேரழகிகளின் தேசம்
பாயிரம்
வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்
திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவரில்
எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிட
ஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்
பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்
பகலில் கறுப்பாகவும் இரவில் வெள்ளையாகவும்
நிறம்மாறித் தோன்றும் இவ்வழகிகளின்
வனப்பைப் பற்றி மட்டுமே பாடப்போகிறேன்
பச்சையமற்ற இத்தேசத்தின் வெட்டவெளியில் நின்று
வெளிச்சத்தைக் குடித்தும் இருட்டைத் தின்றும்
உயிர்வாழும் இறப்பறியாப் பேரழகிகளின்
உடல் வாசனயால் கவரப்பட்டு
எனது படகை உப்புக் கரையிலேயே விட்டுவிட்டு
வெட்டவெளியாலான இத்தேசத்தின் ஒரே உயிரியான
பேரழகிகளிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.
வேறு
என் தியானம் நிலைகொண்ட மையப்புள்ளியென சமைந்த
உனது தொடைகள் சந்திக்கும் மாடத்து அகலின்
திரிமுனையில் சுடர் பொருத்த எனது நாவின்
தணல்கொண்டு வருகிறேன்
இதுவுமது
சுருள் கேசக் கோதுகளை நீக்கிவிட்டு
முற்றிய பலாச்சுலை உதடுகளை மெல்லப் பிளந்து
வாய்கொண்டு தின்று எழும் போதையின் நீரோட்டத்தில்
மிதந்து செல்லும் ஆளற்றப் படகெனவே என் மனம்
பூமியிலோடும் எல்லா நதிகளும் சந்திக்கும்
ஒரு புள்ளியைப் போல உனது உடம்பிலோடும்
எல்லா நரம்புகளையும் சேர்த்திழுத்து
முனைகளை முடிச்சிட்டு அறைந்த ஆணி ஒன்று
உனது மதனபீடத்தில்
அந்த ஆணியை எனது முன்பற்களால் மெல்லக்
கவ்வி இழுக்கும்போது
உனது உயிரின் இறுதித் துளி உன்னைவிட்டுச் சிந்துகிறது
ஒரு துளி எல்லையற்ற வெளியில்
வளர்ந்து வளர்ந்து பெரும் நீர்க் கோளகையாய்த் திரண்டு
பூமியை மோத இறங்கிக்கொண்டிருக்கிறது
வேறு
கொங்கைகளனைத்தும் குழந்தைகளுக்கே என்று
வேதகாலத்தில் நான் ஒருமுறை சொன்னேன்
இதுவுமது
ஓங்கி வளர்ந்த இரண்டு முலைகளுக்கு நடுவே
ஓடும் வியர்வைப் பாட்டையில் மிதக்கிறது
ஆளற்ற படகு - அதிலே
சிட்டுக்குருவிகள் வந்தடையும் உனது
யோனியின் வாடையை ஞாபகம்கொண்டு துய்க்கும்
எனது மனம் படுத்துக்கிடக்கிறது
இந்தத் தேசம் கொங்கைகளல் ஆந்து
கொங்கைகளைத் தின்று உயிர்வாழச் சபிக்கப்பட்டவன் நான்
கொங்களைக் கடைந்து பொறியெழுப்பி
கூந்தலைக் கொளுத்தித் தீ வளர்த்து
எனது இரவு உள்ளங்கை அளவே வெளிச்சம்கொண்டு கழிகிறது
வேறு
யோனி புணர்வதற்கல்ல
பிறப்பதற்கு - என்று வேதநூலில் நான்
சொல்லியிருந்த வாக்கியத்தை
காலத்தில் என்றோ யாரோ உருவியெடுத்து
வேள்வித் தீயிலிட்டுவிட்டார்கள்
தீயணைந்த கரியிலிருந்துப் பிறந்த ஒரு பேரழகியின் வம்சத்தாலும்
வெண்சாம்பலிலிருந்த்ப் பிறந்த ஒரு பேரழகியின் வம்சத்தாலும்
நிறைந்த இந்தத் தேசம்
மனிதகாலத்திற்கு முன்பு நீருக்கடியிலிருந்து
அந்த நீர்நிலையைத் தாங்கும் மண் கிண்ணமாக
இந்த்ப் பூமி இருந்தது
அதை மெய்ப்பிக்கிறேன் கேள்.
இதுவுமது
யோனிச் சுரப்பை வாய்க்கொண்டுப் பருக
ஒரு மிடறு நீர்
எனது வாய்க்குள் அலையடிக்கும் கடல்
அதன் உப்புக் கரையோரத்தில் எனது படகு தனித்திருக்கிறது
நீரலைகளென அசையும் அவளது
தொடைகளுக்கிடையே திரளும் சுழலில்
எனது ஒற்றைத் துடுப்பு சிக்கிச்சுழன்று
அடிமண்ணில் புதைகிறது செங்குத்தாய்
கிளையோடு பொருத்தி அம்பு தைத்தப் பிறவையென
றெக்கைத் துடிக்கிறது யோனி
வெட்டவெளி தேசமெங்கிலும் இந்த
ஒற்றைப் பறவையின் ஓலத்தைக் கொண்டு வீசுகிறது காற்று
மனிதகாலத்துக்கு முந்தி நீருக்கடியில் இருந்த மணல்வெளி
கிளர்ந்து புகைகிறது
கூந்தலால் போர்த்திய கருணைக்குள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறேன்.
வேறு
நிலவைப் போன்ற பிருஷ்டங்களைக் கொண்ட அவர்கள்
சாயும்கால ஒளியில் கொஞ்சம் கொஞ்சமாக
தொடுவானத்திலிருந்து
மந்தையைப் போலப் புலப்படத் தொடங்கினர்
தண்டவடம் கீழிறங்கி முடியும் சறுக்கலின்
வெயில்படாத பால் நிறச் சருமத்தில்
என் பெயரைப் பச்சைக் குத்தியிருந்த ஒருத்தியைக் கண்டேன்
என்னையறியாமலேயே என் குலதெய்வத்தின்
பெயரால் அவனை விளித்தேன்
திரும்பிப் பார்த்த அவள் கூட்டத்திலிருந்து விலகி
குறுஞ்சிரிப்போடு என்னை நோக்கி வந்தாள்
ஒற்றை முலையோடு
வந்தவளை வாறி மடியிலிருத்தி
முலையிழந்து பொருக்காடும் காயத் தடத்தைத் தொட்டுத்தடவி
வரல் சுட்டுப் பதறி
உயிர்த்துடித்து உதறி எடுத்த விரலை
எனது வாய் எச்சிலில் நனத்தேன்
உறிந்த பொருக்கினூடே உள்ளே
கணன்ற நெருப்பைக் கண்டேன்.
கொங்கை நெருப்பி எனது மடிவிட்டு எழுந்து
குறுஞ்சிரிப்போடு நடந்காள்
இதுவுமது
வியர்வை கசியும் பேரழகியின் அக்குள்கள் நக்கினேன்
அங்கே மணங்கமழும் புற்கள் முளைத்திருக்க
ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் அவற்றை மேய்ந்தேன்
என் முகத்தை அவள் அள்ளியெடுப்பது
முத்தமிடத்தானே என நெகிழ்ந்துகொடுக்க
என் குரல்வளையை ஆடெனக் கருதி கவ்விக்
குருதி குடித்தபோதுதான் தெரிந்தது
இவள் எனது ஊரைச் சேர்ந்த துஷ்டதேவதை என்பது
உதிர்ந்த கூந்தல் இழைகளைக்கொண்டு திரிந்த கயிறால்
பிணைந்த எனது படகை
தொடுவானத்திற்கு அப்பாலிருந்து இழுத்தபடி
முலைகள் குலுங்கிச் சிரிக்க ஓடிவந்தார்கள்
படகில் ஒருத்தி மல்லாந்து படுத்துக்கொண்டு
உச்சிச் சூரியனைப் புணர்ந்துகொண்டிருந்தாள்
நான் அவர்கள் முன்நின்று எனது படகைத்
தரும்படி வேண்டினேன்
அவர்களில் ஒருத்தி பதிலுக்கு
தாங்கள் எனக்கு வழங்கிய போகத்தையெல்லாம்
திரும்பிக் கேட்டாள்
எல்லோரும் சிரித்தார்கள்
பாலைவெளி ஆதி ஞாபகம்கொண்டு அலை நடித்தது
படகில் சூரியனைப் புணர்ந்தபடி ஒருத்தி
நெருப்பாக்கிக் கொண்டிருந்தாள்
படகு பற்றிப் புகையத் தொடங்கியது
பேரழகிகள் எல்லோரும் குலவையிட்டார்கள்
வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்
திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவற்றில்
எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிட
ஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்
பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்
பகலில் சுறுசுறுப்பாகவும் இரவில் வெள்ளையாகவும்
நிறம்மாறித் தோன்றும் இவ்வழகிகளின்
வனப்பைப் பற்றி மட்டுமே பாடப்போகிறேன்
பச்சையமற்ற இத்தேசத்தின் வெட்டவெளியில் நின்று
வெளிச்சத்தைக் குடித்தும் இருட்டைத் தின்றும்
உயிர்வாழும் இறப்பறியாப் பேரழகிகளின்
உடல் வாசனையால் கவரப்பட்டு
எனது படகை உப்புக் கரையிலேயே விட்டுவிட்டு
வெட்டவெளியான இத்தேசத்தின் ஒரே உயிரியான
பேரழகிகளிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.
----------------------------
இதற்கு முன்னால் செய்த சில ரமேஷ் - பிரேம் காப்பிகள்.
தாமதமாக வந்துசேரும் அறிவு
கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும்
பேரழகிகளின் தேசம்
பூனைக்குட்டி
Thursday, June 19, 2008

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
It was Saturday morning, early 2010, head still thumping from last night’s tequila flood, but I couldn’t stay away—back at Visu’s room like ...
ஏன் கடைசியில் இப்படி ஆய்ட்ட?
ReplyDeleteஇதத்தான் நாங்க பெயிண்டு அடிக்கறதுன்னு சொல்லுவோம்..இதக்கூட நல்லா கவிதயா சொல்லி இருக்காரப்பா..
ReplyDeleteஎனக்கொரு சந்தேகம்க..ரமேஷ்-ப்ரேம் இத எப்புடி டிஸ்கஸ் பண்ணி எழுதிருப்பாங்க..??
ReplyDelete