In கவிதைகள் வைரமுத்து

நான் காதலுக்காக வழக்காடுகின்றேன்

வானவில்லை
நீங்கள்
தண்ணீர்த் தூறலில்
தரிசித்திருப்பீர்கள்

நீங்கள்
கலையாத வானவில்லை
கண்டதுண்டா?

கண்ணீர்த் தூறலில்
முளைப்பதால் தானோ
அது கலையாமல் இருக்கிறது

அது தான்
காதல்

காதல்
மனிதனைத் தேவனாக்கும்
இரண்டாம் பரிணாமம் இது

இந்த
காதல் மேகம் தான்
மனமென்னும் எரிமலையில்
மழைசிந்தி, மழைசிந்தி
அதில்
உல்லாச வனங்களை
உற்பத்தி செய்யும்

இதய ரோஜாச் செடியில்
இந்த
ஒற்றைப்பூப் பூத்துவிட்டால்
அத்துனை முட்களும்
உதிர்ந்து போகின்றன

வாலிபம் ஏந்திப்பார்க்கும்?
திருவோடும் இதுதான்

வாலிபம் சூடிப்பார்க்கும்
கீரிடமும் இதுதான்

முதலில் சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை

இப்போதோ
மௌனத்திற்கும் கூட
உரையெழுத முடிகிறது

காதல்
காதுகுடைந்து போட்ட
கோழி இறகுங்கூட
மயிலிறகுக்கான
மரியாதைக்குரியது
காதல் கடிதங்கள்
பருவம் எழுதும் பரீட்சைகளில்
எழுத்துப்பிழைகள் மன்னிக்கப்படுவது
இந்தப் பரீட்சையில்தான்

அக இலக்கணம்
அதைக்
காதல் வழுவமைதி என்று
கணக்கில் வைத்துக் கொள்கிறது.

காதல் கடிதங்களுக்கு
அஞ்சல் நிலையங்கள்
இடும் முத்திரை
இரண்டாம் முத்திரைதான்
அதற்கு முன்பே
உதடுகள் இடும்
முத்த முத்திரைதானே முதல் முத்திரை?

இலக்கிய வாசல்களில்
கனவுகளாலும்
கண்ணீராலும் இடப்படும்
காதல் கோலம்

சமூக வாசல்களவீல்
எச்சிலால் அல்லாவா
அர்ச்சிக்கப்படுகிறது.

அமராவதிகளும்
அனார்கலிகளும்
லைலாக்களும்
தேவதாஸ்களும்

காதல் பிச்சை
கேட்டுக்கேட்டு

மரணத்தின் பாத்திரத்தில்
பிச்சையாய் விழுந்தார்கள்

அனார்கலியின் ஞாபகம்
ஆறுமா
சலீமின்
ராஜ மாடங்களில்
கூடுகட்ட வேண்டிய குயிலுக்கு
கல்லறைக் கூடல்லவா
கட்டிக் கொடுத்தார்கள்.

தேவதாஸ் என்னானான்
காதல் நினைவுகளைக்
கழுவ
தண்ணீரில் மிதந்து தண்ணீரில் மிதந்து
சாவுத் தீவில்
கரை ஒதுங்கினான்

அவராவதி என்னும்
ராஜகவிதை
ஓர் ஏழைப்புலவனின்
மனப்பாடத்திற்கு ஏன்
மறுக்கப்பட்டது

நிஜத்தில்
எழுதுகோலுக்கும்
செங்கோலுக்கும்
வரலாற்றில் நிகழ்ந்த
வர்க்கப் போட்டியிது

இதுவரை
எழுத்தாணிகளும்
பேனாக்களும்
காதலின் கண்ணீணீரத்
தொட்டு எழுதத் தோன்றினவன்றி
துடைக்கும் விரலாய் நீளவில்லையே

விதியாம்
விதியை எழுதும் பேனாவில்
ஆயிரங் காதலரின்
ரத்தந்தான் மையாகுமென்றால்

அந்தப் போனாவை
ஒரு
குஷ்டரோகியிடம் கொடுத்துவிடுங்கள்

சமூகம்
தனது
பரிசோதனக் குழாயில்
இறந்தகாலத்தின் கண்ணீரை
எடுத்துக் கொண்டு
நிகழ்காலக் கண்ணீரை ஏன்
நிராகரிக்கிறது?

போதும்
காதலின்
சௌகர்ய உலாவுக்கு
நாம்
இன்னொரு வீதிசெய்வோம்

அது
கண்ணீர்ச்சேறு படாத
காதல் வீதி

அந்த வீதி
அமையும் வரைக்கும்
காதலுக்கு
இரங்கற்பா எழுதுவோரே
உங்கள் பேனாவைப்
பால்கணக்கு எழதமட்டுமே
பயன் படுத்துங்கள்

நான் இண்டெர்நெட் உலகத்தில் காலடி எடுத்துவைத்து தமிழில் எழுத ஆரம்பித்ததும் தொடங்கியது. இந்த தமிழில் டைப் அடிக்கும் பழக்கம் வேகமாக வருவதற்காக, அப்பொழுதெல்லாம் எதையாவது டைப் அடித்துப்பார்க்கும் பழக்கம் உண்டு. அப்படியே நான் பங்கேற்ற சில Forumகளில் போடுவதுண்டு.

அப்படி பலகாலங்களுக்கு முன்னர் நான் டைப்பி போட்ட வைரமுத்துவின் இந்தக் காதல் கவிதை இப்ப சும்மா பொழுது போகணும்கிறதுக்காக.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts