நான் இந்தப் பெண்ணியம் பத்தி பேச ஆரம்பிச்சாலே பிரச்சனையாயிடுதுன்னு நினைக்கிறேன். அப்படிக்கும் ஒன்றும் கேவலமான, அசிங்கமான, தனிநபர் விரோதமான பின்னூட்டங்கள் போடவில்லையென்றாலும் என்னுடைய பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன இல்லை முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன.
அப்படித்தான் தற்சமயம் தமிழ்மணம் விவாதக்களத்திலும் நடந்தது. என் பின்னூட்டன் வெளியிடப்பட்டு, ஒன்றிரண்டு நாட்களுக்கு பிறகு முற்றிலுமாக தூக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது. அவையிரண்டும் நான் எழுதியபடியே இங்கே. (இதையெல்லாம் ஆளைவைச்சா எழுதுறோம், எழுதின நேரத்திற்காவது மதிப்புக் கொடுங்கப்பா.)
--------------------------
இது முதல் பின்னூட்டம்.
உங்களுடைய கேள்விகளுக்கு என்னளவில் தோன்றும் பதில்களைத் தருகிறேன். இந்த பதில்கள் எந்த சந்தர்ப்பத்திலும் என் மனதில் தோன்றும் ஒன்றை மறைத்து வந்தவையாக இருக்ககூடாதென்றே நினைக்கிறேன்.
//பெண்ணடிமை/ஆணாதிக்கம் என்பதன் நிகழ்வு வீதம் என்ன?//
1. நிச்சயமாகக் கிடையாது. இது என் கண்ணால் நான் பார்த்த உண்மை.
2. ஆமாம் எதிர்நிலைகள் உண்டு.(பர்சண்டேஜ் பற்றி பேசுபவர்களுக்காக, எல்லா சமயங்களிலும் பர்சண்டேஜ்கள் உண்மையைச் சொல்லுவதில்லை.)
3. நிச்சயமாக.
4. எனக்குத் தெரிந்த வரலாற்றின் படி கிரேக்கர்கள் பெண்களை வெறும் பிள்ளை பெறும் எந்திரங்களாகப் பயன்படுத்தினார்கள் - உண்மை. உடலுறவுக்குக் கூட ஆண்கள் தான் ஒன்லி புள்ளப் பெத்துக்கிறதுக்கு மட்டும் தான் பெண்(உடலுறவு இல்லாமலா என்றெல்லாம் கேட்கக்கூடாது) - ஏனென்றால் அந்தக் காலத்தில் உடல்வலு மட்டுமே உரிமையைத் தீர்மானித்தது.
இந்த மாற்றம் வரவர இந்த நிலையில் மாற்றம் இருந்திருக்கும்.
//எந்த ஒரு குழந்தையின் முதன்மை வழிகாட்டி, ஆசிரியர், கருத்து உருவாக்கி யார்?//
1. நிச்சயமாக, (அம்மா பிரசவத்தில் இறந்துபோயோ இல்லை வேறு சில காரணங்களால் அம்மா இல்லாமல் போகும் போதோ மட்டுமே இதில் மாற்றம் இருக்கும்.
2. ஆனால் இதில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு, ஒரு பிள்ளைக்கு தன் தகப்பன் வாழும் எடுத்துக்காட்டாக இருக்கிறான் பெரும்பாலான சமயங்களில், அப்படி தன் தந்தையை அவன் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத சமயங்களில் வெளி உலகத்தில்(Note this point.) உலவும் ஆண்களைத் தேடுகிறான். ஒரு ஆணால் தன்னுடைய தாயை வாழும் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த அம்மா பாதிப்பு தனக்கு உற்றாளைத் தேடும் போது வருகிறது. தன் மனைவி தன் அம்மாவைப் போலவே இருக்கவேண்டும் என்று நினைக்கிறான்(அம்மா அவனுக்கு நல்லவளாகத் தோற்றமளிக்கும் பட்சத்தில் இல்லாவிட்டால், உலக அளவில் தேடாமல் தன்னுடைய உறவினர்களில் தேடுகிறான். அக்கா, தங்கை அத்தை சித்தி என்று.)
நடத்தையில் தாயின் பங்கு அதிகம் தான், மறுக்கவில்லை, ஏனென்றால் தான் வேலை(இல்லை அது சம்மந்தமான விஷயங்களில்) தந்தையையோ இல்லை அவனுக்குப் பட்ட இன்னொரு ஆணையோ வழிகாட்டியாக கருதும் அதே வேளையில் தாயிடம் இருந்து குடும்பத்தை எடுத்து நடத்தும் விஷயங்களைக் கற்றுக் கொள்கிறான்.
//எப்படி பெண்ணடிமை/ஆணாதிக்கம் தோன்றியது?//
1. முன்பே சொன்னது போல் பெண்ணடிமை தோன்றியது அவர்களுடைய உடலில் பளுஇல்லாத காலங்களிலேயே, அவனுக்கு நாடு பிடிக்கும் ஆசைதான் அதிகமாயிருந்தது. அப்படிப் பிடித்த நாட்டை தன்னிலிருந்து தன் அடுத்த சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் கருவியாக அவளைப் பயன்படுத்தினான்.
அப்படி தன்னிலிருந்து அடுத்த சமுதாயத்திற்கு அவனுடைய வெற்றிகளை, பணத்தை, வீரத்தை கொண்டு செல்லும் பொழுது அதில் தவறு(சார்லஸ் அவருடைய இரண்டு பிள்ளைகள் தனக்குப் பிறந்தது தானா என்று வெரிபிகேஷன் செய்தது தான் நினைவில் வருகிறது - உண்மையில்லையா?) நடந்துவிடக்கூடாது என நினைத்ததன் விளைவுதான் பெண்ணடிமை. எப்பொழுது பெண்ணடிமை தோன்றியதோ அப்பொழுதே ஆணாதிக்கமும் தோன்றிவிட்டது.
2. ஆரம்பக்காலத்தில் அவன் தன்னுடைய சகோதரியையும், பெண் பிள்ளைகளையும், மனைவியையும் ஒன்றாக பார்த்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் பிற்காலத்தில் அவன் அந்த வலிமை குறைந்த பெண்ணிடம் இருந்து வெளிப்பட்ட(?) அறிவுசார்ந்த விஷயங்களினால் ஆட்பட்டு வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஒன்று அந்த வித்தியாசம் தெரிந்த பிறகு அவன் தன் மகளையும் தன் மனைவியையும் ஒன்றாகத் தான் பார்த்திருப்பான் என்று என் மனம் சொல்கிறது.சும்மா ஜல்லியடிப்பதற்காக மகளை வேறு ஜன்மமாகவும் மனைவியை வேறு ஜென்மமாகவும் பார்த்தான் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
வேண்டுமானால் அவனுக்கு இப்படித் தோன்றியிருந்தால் அந்தப் பெண்ணை பெற்றவர்களுக்காக அவள்(மனைவி) இதை(ஏதாவது ஒரு முடிவை எடுக்க) தன்னைச் செய்யச் சொல்கிறாளோ என்ற பயம் கடேசி காலம் வரை வந்திருக்கலாம், ஏனென்றால் தான் பெற்ற பெண் தன்னை அப்படி மோசம் செய்ய மாட்டாள் என்று நினைத்திருக்கலாம்.
//குழந்தை வளர்ப்பு://
1. இதில் ஆணாதிக்கம் கொண்ட பெண்களை திணிப்பது சுத்த ஜல்லி, அப்படி அவன் மீது திணிக்கப்பட்டிருந்தாலும் அது நிச்சயமாக ஒரு பெண்ணால் இருந்திருக்க சாத்தியக்கூறு குறைவுதான். தன் மகன் தன்னிடம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கும் எந்தப் பெண்ணும் இது போன்ற விஷயங்களைச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பெண்டாட்டியை குறைவுள்ளவள் என்று சொல்வது தன்னையே சொல்வது தான் என்பதை அவள் உணர்ந்திருக்க வேண்டும். அவன் வாழ்ந்து வந்த ஒட்டுமொத்த சமூகமும் இதற்கு பொறுப்பு, அவன் கற்ற கல்வி, அவனுடைய அனுபவங்கள் இப்படி நிறைய விஷயங்களால் அவன் அப்படிப்பட்ட ஒரு கருத்திற்கு வந்திருக்கலாம்.
2. எங்கள் வீட்டில் உண்டு, எங்க வீட்டுப் பெண்பிள்ளைகளுக்கு அதிக அதிகாரம் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது ஆண்களைவிட. சும்மா ஜல்லியடிக்கச் சொல்லவில்லை, அக்காவை மாஸ்டர்ஸ் படிக்க வைத்தார்கள் என்னை படிக்கவைக்கவில்லை. இதற்கு நான் பேச்சுலர்ஸில் வாங்கிய மார்க் காரணம் இல்லை. பொருளாதாரம் என்று வருவோமென்றால் அப்பாவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும் தன் பெண்ணை படிக்க வைத்தால் என்னை மாஸ்டர்ஸ் படிக்க வைப்பதற்கான வாய்ப்புக்கள் குறையும் என்று. இருந்தாலும் அப்படி நிறைவேற்றப்பட்டது. இது ஒரு சிறு உதாரணம். இது போன்ற ஆயிரம் உதாரணங்களை அடுக்கலாம் நான் வாழ்ந்த பகுதியில் கூட. என்னைப் பொறுத்தவரை அம்மாக்களுக்கு ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளைத்தான் பிடித்திருக்கிறது. தன் ஆண்பிள்ளையிடம் பேசமுடியாத பல விஷயங்களை அவளால் தன் பெண் பிள்ளையிடம் தான் பேச முடிந்திருக்கிறது.
3. சொல்லமுடியாது சரியாய். இது சமூகத்தால் போற்றப்பட்ட ஒன்று, பெண்குழந்தை வளுஇல்லாதது. அதனால் சம்பாதிக்க முடியாது இந்த ஆண்களின் சமுதாயத்தில் பெண்களால் வெளியில் நடமாட முடியாது என்பது கட்டமைக்கப்பட்டது தான்.
ஆனால் வேலை என்ற விஷயம் மாறி வரும் நிலையில். இது நிச்சயமாக மாறிவிட்டது. கத்தியெடுத்து சண்டை போட்டுத்தான் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற ஒரு நிலை போய்விட்ட நாளைக் கணக்கெடுத்தால் அந்த நாட்களில் இருந்தே இந்த விஷயம் மாறியிருக்க வேண்டும். வேண்டுமானால் பர்சண்டேஜ்கள் குறைவாக இருக்கலாம்.
//சொத்து/ஆதிக்கம்://
இது பெண்களுக்கு மட்டுமே உரியது என்று சொல்ல முடியாது. ஆனால் பர்சண்டேஜ்கள் அவர்களைத்தான் அதிகமாகக் காட்டும். பெண்ணை வாயைப் பொத்தி வீட்டில் வைத்திருக்க ஆண்கள் கண்டுபிடித்த ஒரு ஆயுதம் தான் இந்த விஷயம். வீடுகட்டிக்கொடுத்து, வேண்டுமென்ற நகைகள் செய்துகொடுத்து பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்து. அவர்களை அப்படிப்பட்ட உயர்ந்த(?) விஷயங்கள் இல்லாமல் வாழும் பெண்ணை பார்க்கவைத்து பயமுறுத்தும் ஒரு விஷயம் தான் இது.
சமுதாயத்தில் தங்கள் பெயர் கெட்டுவிடும் என்று பயந்துதான் பல பெண்கள் தங்கள் கணவனுடன் வாழ்கிறார்கள் என்பது நிச்சயமாக மறுக்கமுடியாத உண்மை. இதுவும் நிச்சயமாக மாறும். ஆனால் கொஞ்சம் டைம் எடுக்கும். அதற்குள் ஒரு உலக்ப்போர் வந்துவிட்டால் ஒன்றும் சொல்லமுடியாது. உலகம் அழிவை நோக்கி நகர்த்தப்படும்.
2. ஒரு ஆளும் கிடையாது. எல்லோருக்கும் இது வேண்டும். அவன் அணிகிற சட்டைத் துணியிலிருந்து வாங்கும் கார் கலர் வரைக்கும். ;)
3. பெண்ணியவாதிகள் இதைத் தான் மறுக்கிறார்கள். நிலைத்து வாழவேண்டும் என்ற ஒரு விஷயம் மனதில் வந்துவிட்டால் நாம் சில விஷயங்களுக்கு ட்பண்ட் ஆகிவிடுகிறோம். அது தேவையில்லை, உனக்கும் எனக்கும் எல்லாம் சரியா ஒத்துவருதா வாழலாம் இல்லையா மூட்டைக்கட்டிவிடலாம் என்ற ஒரு நிலைக்கு வருவது தான் என்னைப் பொறுத்தவரை. குடும்பங்களில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது. அதற்கு அந்தப் பெண் ஆண் அவன் குடும்பம் மட்டும் போதாது சமுதாயமும் திருந்த(?) வேண்டும்.
இவைகள் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டவை. உங்களுடைய கடவுள்களின் பெயர்களால், நீங்கள் படிக்கும் புத்தகங்களில் பெயர்களா, மற்றும் உங்களை எந்தெந்த விதங்களில் எல்லாம் கட்டிப்போட முடியுமோ அந்தந்த விதங்களால். இதில் ஒன்று மாறாமல் இன்னொன்று மாறமுடியாது.
ஆனால் அப்படிப்பட்ட சமுதாயம் அமைக்கப்படும் பொழுது இந்தியா அமேரிக்காவாகத்தான் இருக்கும். இந்த விஷயத்தில்.
----------------------------------
இது நம்ம நண்பர் ஒருத்தர் அடிச்ச ஜல்லிக்கு பதில் சொன்னது.
//நாங்களும் காதல், பரிவு, இரக்கம், நேசம், பாசம் எல்லாம்கொண்ட சகமனுஷிகளே. ஒரு ஆணின் நேசத்தில் பூ விரிவதுமாதிரி இதயம்
மலரவும், அன்னியோன்யமான, ஒருவருக்கொருவர் ஆழமாக நேசிக்கிற, அந்த நேசத்தைக்கொட்டி வாழ்கிற தம்பதிகள் காண்கிறபோது
வெயிலுக்குப் பனி கரைவது மாதிரி மனம் கரையவும் முடிந்தவர்களே நாங்கள். //
ஒவ்வொரு முறையும் நண்பர் இந்தக் கருத்தை வைப்பதை தன் வாடிக்கையாக வைத்துள்ளார். நான் அவருடைய இந்தக் கருத்தைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை.
அப்படியில்லாமல் போய்விட்டவர்களை, இவர் பெண்கள் இல்லையென்று கருதுகிறாரா? அதுதான் எனக்குப் புரியவில்லை.
காந்தியின் கடேசிக் காலங்களில் அவருடைய தோள்களைத் தாங்கிப்பிடித்து நடந்துவந்த சகோதரிகளைப் பற்றித் தெரிந்திருக்கும் பலருக்கு. இதனை மட்டுமே காரணமாகக் காட்டி, காந்தியை ஆணியவாதி என்றும் Male Chavanist என்றும் சொன்ன அம்மையார்(பெண்ணியவாதி) ஒருவரை நண்பருக்கு நன்றாகத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
என்னைப் பொறுத்தவரை, அவரும் பெண்தான், பெண்ணியவாதிதான். அவருக்கு காதல், பரிவு, பாசம் இதெல்லாம் கிடையாது என்று சொல்லவில்லை தேவையில்லை என்று நினைக்கிறார். தவறில்லை; நண்பர் சொல்வதை ஒருவகையான சமரசம் என்று தான் நான் எடுத்துக்கொள்வேன். இன்னும் சொல்லப்போனால் தேவையில்லாத சமரசம், நாத்தீகம் எப்படி திராவிடக் கழகங்களில் இருந்து மறைந்து போனது என்ற கேள்விக்கு, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தைக் தூக்கிப்பிடித்த பொழுதுதான் என்று எங்கேயோ படித்த நிகழ்வு.
நீங்கள்(அவருக்கு கிடையாது) உங்களுக்கு உண்மையாகயிருங்கள் அதுபோதும், மற்றபடிக்கு சொல்றதையெல்லாம் சொல்லிட்டு வார்த்தைக்கு "முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" அப்படியென்றெல்லாம் ஜல்லியடிக்க வேண்டாம். நாங்கள் முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்களையும் விரும்பவில்லை, 725 ரெசிப்பிக்களையும் விரும்பவில்லை.
நீங்கள் இப்படி சொல்லிச்சொல்லி தான், வரும் மனைவி முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரலாளாக வரவேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கத் தொடங்குகிறார்கள், அப்படியே 725 ரெசிப்பிக்கள் தெரிந்து வைத்திருப்பதையும். ஆரம்பத்திலேயே அதெல்லாம் முடியாது நான் நானாகத்தான் வருவேன், காந்தள் மெல்விரலாளாகல்லாம் வரமுடியாதுன்னு சொல்லீட்டிங்கன்னா, அப்படி மெல்விரலாளாக இருக்கும் பட்சத்திலும் பிரச்சனையில்லை இல்லாதபட்சத்திலும் பிரச்சனையில்லை.
//விமானம் ஓட்டுவதில் ஆண்களை விட பெண்கள் ஒழுங்குதன்மையோடு//
பர்சண்டேஜே உதைக்குமேம்மா, என்ன சொல்றீங்க நீங்க, வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லக்கூடாது.
--------------------------------------
தமிழ்மண விவாதக்களமும், பெண்ணியமும்
பூனைக்குட்டி
Wednesday, January 31, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
It was Saturday morning, early 2010, head still thumping from last night’s tequila flood, but I couldn’t stay away—back at Visu’s room like ...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
அய்யா.. உங்க பாஸ் ஈமெய்ல் ஐடியைக் கொஞ்சம் குடுங்க :-)
ReplyDelete//அய்யா.. உங்க பாஸ் ஈமெய்ல் ஐடியைக் கொஞ்சம் குடுங்க :-)//
ReplyDeleteஉங்களை பார்த்தா..பாவமா இருக்கு. .
ஆனாலும் ஈமெயில் ஐடி குடுங்க... அவர்க்கிட்ட ஒரே ஒரு கேள்விதான் -
"எப்படிங்க இப்படியெல்லாம் மோகன் தாஸ் க்கு நேரம் கிடைக்குது.. ?? "
எனக்குத் தெரிஞ்சதெல்லாம் பேரீச்சம்பழம் தாங்க.
ReplyDeleteபெண் ஈயம் /ஆண் பித்தளை எதுன்னாலும் எடைக்கு எடை பேரீச்சம்பழம்ன்றது தாங்க சரி! :-))
என்னைக் கண் வைக்கும் பிரகாஷரையும், கவிதாவையும் கண்டிக்கிறேன்.
ReplyDeleteயோவ் சந்தோஷமாயிருக்க விடுங்கப்பா.
ஹரிஹரன், என்ன சொல்றதுன்னே தெரியலை. அவ்வளவுதான்.
//ஹரிஹரன், என்ன சொல்றதுன்னே தெரியலை. அவ்வளவுதான். //
ReplyDeleteபோட்டு வரும் பேரீச்சம் பழத்தில் பாதிக்குப் பாதி பங்கு சொல்லுங்க... அதான் நான் கேட்டிருக்கேன் ஹரிஹரனிடம் ;)
பொன்ஸ் உங்கள் பாலிடிக்ஸில் என்னை இழுக்க வேண்டாம் ;).
ReplyDelete