In சினிமா சினிமா விமர்சனம்

மாலை நேரத்து மயக்கம்

செல்வராகவனின் சொந்த ஜானர். எழுத்து மட்டும் தான் செல்வராகவனாம், கீதாஞ்சலி இயக்குநர் என்றாலும் செல்வராகனின் இயக்க பாதிப்பு அதிகம் உண்டு, அல்லது முழுவதுமே அப்படித்தான். 3 படம் போல் இதுவும், எனக்குப் பிடித்திருந்தது. அதன்(3 படத்தின்) கிளைக்கதை அத்தனை வலியதில்லை. இந்தப் படம் அவர் பெயரில் வராமல் இருந்தது கூட நல்லதற்குத்தான்.  தமிழில் பெண் இயக்குநர்கள் பற்றி எனக்கிருந்த மூடநம்பிக்கையை நகர்த்தியது 3 படம், இது கீதாஞ்சலி இயக்கியிருந்தால் நான் இன்னும் நகர்ந்துவிட்டேன் என்றே அர்த்தம்.


கொஞ்சம் காமடி கலந்து செய்யாமல் விட்டதற்கே நன்றி சொல்லவேண்டும், மூன்று மணிநேர படமில்லை என்று நினைக்கிறேன், இப்பொழுதைய முதல் ஹாஃப் நீளம் பிந்தைய ஹாஃப் சின்னது டெக்னிக் என்று நினைக்கிறேன், படம் சட்டென்று முடிந்தது போலிருந்தது.

ஹீரோயின் பேசும் வழமை எங்கள் குடும்பத்தில் உள்ளது போல் இருந்ததால் இன்னும் என்னை நெருக்கியிருக்கக்கூடும். வலிந்து திணித்தது போலிருந்தது அந்த ஹோட்டல் சீன், இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். கதையின் திரியே அங்கே தானே பிரிகிறது! ஹீரோ ஹீரோயின் தேவையான நடிப்பை அளித்திருக்கிறார்கள். பெண்களை வசப்படுத்தும் ஹீரோவின் நண்பர்கள் என்பதற்காய் ஆரம்பித்த தொடக்கம், அவர்கள் போக்கிரி பாடல் பாடும் பொழுது ஒட்டவில்லை. கீதாஞ்சலி இப்பொழுதுகளில் கருத்த - தென்தமிழக நிற - ஆண்கள் பிகர் மடிக்கிறார்கள். நீங்கள் கதையை ஹீரோவின் நிறத்திலிருந்து நகர்த்தியிருக்கலாம். பரவாயில்லை.

ஹீரோயின் முன்னமே செல்வராகவன் படத்தில் பார்த்தது போலிருந்தாலும், அடித்துச் சொல்வேன், 7Gயில் நடிக்கவைத்திருக்கலாம். சோனியாவை விட இந்த வகை கதாப்பாத்திரத்துக்கு பொருந்துகிறார். சீன் யோசிக்க முடியாத காரணத்தால் சட்டென்று கதாநாயகி கோபப்பட ஒரு காட்சி போதும் என்று நினைத்திருக்கலாம். பாத்ரூம் கிளின்னஸ் காட்சியின் இயல்பிற்காய்ப் பிடித்திருந்தாலும், ஒட்டவில்லை. இன்னும் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் கதாநாயகி கதாநாயகனை வெறுத்த பின் வரும் காட்சிகள் இயல்பாய் இருப்பதாய்ப் பட்டது.

அட இப்படியெல்லாமா விட்டுவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது வந்த ரேப் சீன் இதற்காகத்தான் விட்டார்கள் என்று உணர வைத்திருந்தது. ரொம்ப காலம் கழித்து தமிழ்ச்சினிமாவில் ஒரு ரேப் சீன், கதையை நகர்த்தியிருக்கிறது. துணிந்து இறங்கிய செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் பாராட்டுக்கள். ரேப் சீனுக்காக இல்லை, துணிச்சலுக்காக மட்டும், ரேப்கள் இல்லாமல் போகும் ஒரு காலத்தில் ரேப் சீன் வைக்காமல் இருக்கலாம். ”பெண்டாட்டியை ரேப்” என்கிற புள்ளியும் அதைத்தொடர்ந்த கோபமும் பயங்கர இயல்பு. ரேப் பண்ணினதும் அடுத்த நாள் குளித்து தலை துவட்டி வெட்கத்துடன் காப்பி கொடுக்கும் வழமை தான் தமிழ் சினிமா.

விவாகரத்துக்குச் செல்வதல்ல. Bravado.

மெச்சூரிட்டி காட்ட கண்ணாடி அணிவதை காண்பிப்பதை நிறுத்துங்கள், கதாநாயகி அந்தக் கண்ணாடியில் அழகாய் தெரிவது வேறு விஷயம். பொதுவாய் இவர்கள் மறந்துவிடும், கதாநாயகியின் அம்மா உருவ வேற்றுமை, பாராட்ட வேண்டியது. டிவிட்டரில் படித்தேன் கதாநாயகியின் அம்மா கதாநாயகியை விட அழகு என்பதை நான் மறுக்கிறேன், அவங்க அழகு தான் ஆனா கதாநாயகியை விட எல்லாம் இல்லை. இங்க வழிகிற ஸ்மைலி.

இதே ஜானரில் நிற்கச்சொல்லவில்லை, ஆனால் செல்வராகவன் அவ்வப்பொழுது இந்த ஜானரில் கதை செய்யணும். வேணும்னா கீதாஞ்சலிக்கோ இல்லை ஐஸ்வர்யாவுக்கோ தரலாம்.

அடல்ஸ் ஒன்லி படம் என்பதால் சொல்லவேண்டிய தேவையில்லை, குழந்தை குட்டியோட எல்லாம் பாக்கமுடியாது. :)

கல்யாணமாய்டுச்சு சொல்லக்கூடாது, ஆனாலும், ஹீரோயின் கொள்ளை அழகு.

Related Articles

0 comments:

Post a Comment

Popular Posts